தமிழர்களின் தழை உடை-1

Picture shows the Reed Skirt worn by women of Hawaii (USA)

(English version of this article is also posted in my blogs: London swami)

தமிழர்களின் தழை உடை (Reed Skirt) பற்றி சங்க இலக்கிய நூல்களில் நிறைய குறிப்புகள் உள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப் பெண்கள் எப்படி உடை அணிந்தார்கள் என்று கண்டுபிடிக்க பல சிற்பங்களையும் ஓவியங்களையும் கூர்ந்து கவனித்தேன். ஆனால் தழை உடை பற்றி கிடைக்கவில்லை. இப்பொழுது பசிபிக் தீவுகளில் தழை உடை அணியும் படம் கிடைத்தவுடன் மீண்டும் இது பற்றி ஆய்வைத் துவங்கினேன்.

தழை உடையை எல்லாப் பெண்களும் அணியவில்லை. கானகப் பகுதிகளில் வாழ்ந்தவர்களும் விலை மாதர்களும் அணிந்தனர். உடனே இந்த உடை பற்றி தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள். யாகம் செய்யும் பிராமணர்களும் தர்ப்பைப் புல்லால் செய்யப்பட்ட தழை உடைகளையே அணிந்தார்கள்(*reference is given at the end). இப்போதும் ஹவாய் முதலிய பசிபிக் மஹா சமுத்திரத் தீவுகளில் தழை உடை அணிகிறார்கள். இது பாவாடை போல இருக்கும்.

தழை உடை பற்றிய குறிப்புகள்: குறுந்தொகைப் பாடல் 125,159,214,294; குறிஞ்சிப்பாட்டு வரி 102; ஐங்குறு நூறு 72. இது தவிர, அக நானூறு, கலித்தொகையிலும் பல பாடல்களில் தழை அணி வருகிறது.

36 வகை ஆடைகள் (36 Types of Clothes)

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தமிழர்களின் 36 வகை உடைகளின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். அவையாவன: கோசிகம், பீதகம், பச்சிலை,  அரத்தம், நுண் துகில், சுண்ணம்,  வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபடம், சித்திரக் கம்மி, குருதி, கரியல், பேடகம், புரியட்டம், காசு, வேதங்கம், புங்கர் காழகம், சில்லிகை, துரியம், பங்கம், நல்லியம், வண்டை, கவற்றுமடி, நூல் யாப்பு, தேவாங்கு, திருக்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், கிறைஞ்சி, செம்பொத்தி, பனிப்பொத்தி. இவைகளில் சில கடாரம், காழகம் (மலேசியா, பர்மா), கூர்ஜரம் (குஜராத்) ஆகிய இடங்களில் இருந்து இறக்குமதியானது பெயரில் இருந்தே தெரிகிறது. அதே போல நமது துணிகள் எகிப்திய நாட்டின் இறந்தோர் உடலைச் (மம்மி) சுற்றவும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

எகிப்திய நெய்தல் தெய்வத்தின் பெயர் நெய்த்(Neith). இதுவே தமிழ்ச் சொல்!

 

தமிழர்களின் நெசவுத்திறன்

Picture of Mohanjadaro Priest King

வேத காலத்தில் எழுந்த பிராமணங்கள் என்னும் நூல்களிலும் சங்க இலக்கியத்திலும் பூ வேலைப்பாடு (Embridered)  அமைந்த ஆடைகளைச் செய்ததாக எழுதிவைத்துள்ளனர். இந்த ஆடையை சிந்து சமவெளி புரோகிதரின் (Priest/ King) உடலிலும் காணமுடிகிறது. இதைப் புறநானூறு “ நீலக் கச்சை பூவார் ஆடை” (புறம். 274, உலோச்சனார்) என்று புகழ்கிறது.

ஆண்கள் மேல் துண்டும், கீழே வேஷ்டியும் மட்டும் அணிந்தனர். “உண்பது நாழி, உடுப்பவை இரண்டே” (புறம்.189) என்ற நக்கீரர் வாக்கியத்தால் இதை அறியலாம். மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சியும் இதை உறுதிப்படுத்துகிறது:

“ திண்டேர் பிரம்பிற் புரளும் தானை

கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்தடி” (மதுரை. வரிகள் 435-436)

மேல் சட்டையை சிலர் அணிந்தனர். வீரர்கள், பொற்கொல்லர் ஆகியோர் அணிந்ததை பாடல்கள் காட்டுகின்றன. மேல் சட்டைக்கு ‘கஞ்சுகம்’ என்று பெயர்.

மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்ட அந்நிய நாட்டவர்கள் (யவனர்கள்) சட்டை அணிந்ததையும் முல்லைப் பாட்டு கூறுகிறது:

“ உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம்புகு மிலேச்சர்” (வரி 66-67)

தமிழர்கள் நெய்த ஆடை மிகமிக மெல்லியதாக இருந்ததைப் புலவர்கள் பல இடங்களில் பாடி இருக்கின்றனர்: “இழையறிவாரா, வொண் பூங்கலிங்கம்” (புறம். 383) என்றும் பாம்பின் தோல் போல மெல்லிய ஆடைகளை மன்னன் நல்கினான்: “நோக்கு நுழைகல்லா நுண்மைய பூகனிந்து அரவு உரி அன்ன அறுவை துவர” (பொருநர். 82-83) என்றும் பாடுகின்றனர். மஸ்லின், நைலான் போன்ற சிறந்த ஆடைகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தன!!

( அறுவை, கலிங்கம்=துணி, அரவு உரி= பாம்புத் தோல் )

தொடரும்…………. (பகுதி இரண்டில் பெண்களின் ஆடைகள், தமிழர்களின் Brassiere பிரா—கண்டுபிடிப்பு, கூரைப்புடவை, கல்யாணப் புடவை முதலியவற்றைக் காண்போம்).

For more of the same, contact: swami_48@yahoo.com

*REED DRESS reference in the Vedic Literature is given below:

From “India of the age of the Brahmanas” by Jogiraj Basu:

“ When a cloth is woven it is embroidered at the border before the actual texture is woven; it is embroidered in the middle and again it is embroidered at the end” (Aitareya Brahmana 2-11-10)

Special garments were prescribed for the priests performing sacrifice. Skirts made up of Kusa grass were used in certain sacrifices. From the Satapata Brahmana we learn that the sacrificial garment consisted of a garment of pure wool not dyed, an under garment made of silk called “taarpya”, an outer garment like adhi vaasa and a head dress or turban (Usniisa). Kings and queens wore such head dress. Indra’s wife Indrani had a most variegated (multi coloured and embroidered) head band, says Satapata Brahmana14-2-1-8

Sages, mendicants and Brahmacharis used to put on garment made of hides of black(deer) antelope (krisnaajina).

Female ascetic Sabari in the Ramayana was called Krishnaajinaambharadharaa i.e. one who puts on the garment made of black deer skin.

******