Written by S.NAGARAJAN
Date:17 October 2017
Time uploaded in London- 7–47 am
Post No. 4308
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
ஞானபூமி பாரதம்
காலத்தை வென்ற நூறு கோடி கவிதைகள் – எங்கே?
ச.நாகராஜன்
1
நல்ல கவிதை சாகா வரம் பெற்றது.
காலத்தை வென்றது தான் கவிதை.
அனவஹித: கிமஷக்தோ
விபுதைரம்யர்தித: கிமதிரஸிக: I
சர்வகஷோபி காலம்
கிரயதி சூக்தானி ந கவீனாம் II
வல்லபதேவர் என்ற கவிஞரால் ஆர்யா சந்தத்தில் இயற்றப்பட்ட கவிதை இது.
பெரிய உண்மையைக் கூறும் இந்தக் கவிதையின் பொருள் இது தான்:
காலம் தன் கவனக்குறைவினால் வலிமை இழந்து விட்டதோ!
அல்லது நேர்த்தியானவற்றைப் மிகவும் போற்றுவதனால், அறிஞர்களால் அதற்கு வேண்டுகோள் விடப்பட்டதா?
அனைத்தையும் அழிப்பது தான் காலம் என்றாலும் கூட, அது கவிஞர்களின் நல்ல கவிதைகளைத் திரை போட்டு மறைப்பதில்லை (ஒளித்து விடுவதில்லை)
இதன் ஆங்கில் மொழியாக்கம்:
Is Time powerless by oversight? Is it, as a very good appreciator of excellencea, he has been requested by the wise? Time, though a destroyer of every thing, does not screen (conceal) the good sayings of poets.
Translation by A.A.Ramanathan
உண்மை தான்; நல்ல கவிதைகளை காலம் திரை போட்டு மறைப்பதில்லை.நல்ல கவிதைகளை காலம் சிரஞ்சீவித்வம் கொண்டதாக ஆக்கி விடுகிறது.
காலமே, உனக்கு நமஸ்காரம்!
2
இப்போது ஒரு கேள்வி எழுகிறது.
காலம் அழிக்கவில்லை என்றால் நமது நாட்டில் தோன்றிய கவிதைகள் எங்கே?
முதலில் எவ்வளவு கவிதைகள் தோன்றியிருக்கலாம் என்பதை ஒரு உத்தேச மதிப்பீடு செய்து பார்க்கலாம்.
எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முறபட்டது வேதகாலம்.
(ஸ்வாமி விவேகானந்தரின் கூற்று இது : ஞான தீபம் மூன்றாம் பாகம்)
எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வேதத்தில் மன்னரின் கதைகள் பல உண்டு.
ஆக மன்னர் காலம் அப்போதிலிருந்தே தொடங்கி விட்டது.
ஒரு தலைமுறை என்பது சுமாராக முப்பது வருடம் என்று வைத்துக் கொண்டு, ஒரு மன்னரின் அரசாட்சி காலம் உத்தேசமாக முப்பது வருடங்கள் என்று வைத்துக் கொண்டு கணக்கிட்டால் எட்டாயிரம் ஆண்டுகளில் சுமார் 266 மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்க வேண்டும்.
பாரதத்தில் 56 தேசங்கள் உண்டு.
ஆக 56 தேசங்களில் 56 X 266 = 12896 மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்க வெண்டும்.
ஒரு மன்னனின் அரசவையில் முப்பதாண்டு காலத்தில் பத்து கவிஞர்கள் இருந்தனர் என்று வைத்துக் கொண்டால் 1,28,960 கவிஞர்கள் இருந்திருக்க வேண்டும்.
இவர்கள் ஒவ்வொருவரும் முப்பதாண்டு காலத்தில் வெறும் பத்து கவிதைகளே புனைந்திருந்தனர் என்று வைத்துக் கொண்டால் வரும் எண்ணிக்கை 12, 89,600.
பத்து தானா, சே, மோசமான மதிப்பீடு, ஆயிரக்கணக்கில் கவிதைகள் இயற்றியுள்ள புலவர்களை நமக்குத் தெரியாதா என்று கேட்டு இதை நூறு கவிதைகள் என்று வைத்துக் கொண்டால் வருவது 1,28,96,000.
பத்தாயிரம் ஸ்லோகங்கள் கொண்ட வால்மீகி ராமாயணம், ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட் மஹா பாரதம், 18 புராணங்கள், 18 உப புராணங்கள், காளிதாஸன், பவபூதி, தண்டி, ஹர்ஷன் போன்றோர் இயற்றிய காவியங்கள் என்ற நீண்ட பட்டியலை கணக்கில் எடுத்துப் பார்த்தால் சுலபமாக ஒரு பில்லியன், அதாவது நூறு கோடி என்ற எண்ணிக்கையை நமது கவிதைகள் தாண்டி விடுகின்றன!
நூறு கோடி அற்புதமான கவிதைகள்!
ஒரு கவிதையிலேயே உயிரைக் கொடுத்து எழுத்துக்கு அக்ஷர லட்சம் பொன் கொடுத்த நாட்டில் ஒரு பில்லியன் – நூறு கோடிக் கவிதைகள் என்றால், அடடா உள்ளம் பூரிக்கிறது.
என்ன ஒரு அறிவு!
என்ன ஒரு அழகு!
என்ன ஒரு சொல்வளம்!
என்ன ஒரு கருத்து வளம்!
என்ன ஒரு கலை வளம்!
3
அந்த நூறு கோடிக் கவிதைகள் எங்கே?
காலம் அவற்றை ஒளிக்காது, மறைக்காது,அழிக்காது என்றால் இன்று அவை எங்கே?
முகமதியரின் முட்டாள்தனமான, கொடூரமான, அழிவுக் கலாசாரத்தினால் பல நூல்கள் அழிந்து பட்டன. ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அந்த நூல்கள் பல நாடுகளுக்கும் பரவி இருந்தன. ஆகவே அவற்றில் அழிந்தது போக பலவும் மீதம் இருக்க வேண்டுமல்லவா?
அவை எங்கே?
இருக்கின்றன! அவை இருக்கின்றன!
இதில் அந்தக் கால மொழியாகப் பரவி இருந்த சம்ஸ்கிருத நூல்களை மட்டும் பட்டியலிடப் புகுந்து தன் வாழ்நாளிம் பெரும் பகுதியை அர்ப்பணித்த டாக்டர் வி.ராகவன் நூல்களின் பட்டியல் அடங்கிய ஒரு கலைக்களஞ்சிய தொகுதியையே வெளியிட்டுள்ளார்.
அவருக்கு நமது உளங்கனிந்த நமஸ்காரம்.
நான்கு லட்சம் சுவடிகள் பிரிக்கப்படாமல் ஆங்காங்கு உள்ளன.
அச்சிடப்படாமல் கையெழுத்துப் பிரதிகளாக பல ஆயிர்ம் நூல்கள் உள்ளன.
சரஸ்வதி மஹால், புனே பண்டார்கர் நிலையம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான நிலையங்கள் பணமின்றித் தவித்து இவற்றை அரும்பாடு பட்டுப் பாதுகாத்து வருகின்றன.
நூறு கோடிக் கவிதைகள் என்றால் உலகின் மொத்த அறிவுக் களஞ்சியம் என்று பொருள்.
வளமார்ந்த ஒரு உலக சமுதாயத்தின் உன்னதமான எண்ணங்களைக் கொண்ட கவிதைத் தொகுப்புகளின்
எண்ணிக்கை என்று பொருள்.
எண்ணவும் (TO COUNT) இனிக்கிறது.
எண்ணவும் (TO THINK) இருக்கிறது.
பாரத அறிவுச் செல்வத்தில் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு திருக்கூட்டமாக மாறி ஏதேனும் செய்ய வேண்டாமா?
செய்ய வேண்டும்.
4
ஒரு சில கவிதைகளைப் படித்து மகிழ்ந்து சில கட்டுரைகளைப் படைத்த எனக்கே இப்படி ஒரு ஆதங்கம் என்றால் அறிஞர்களுக்கும் என்னைப் போன்ற இதர ஆர்வலர்களுக்கும் என்ன ஒரு உத்வேகம் எழ வேண்டும்.
இருக்கின்றவற்றைப் பாதுகாப்போம்.
இருப்பதைப் பரப்புவோம்.
இல்லாததைத் தேடுவோம்.
தேடிக் கண்டனவற்றைப் பதிப்பிப்போம்.
பதிக்க முன்வருவோருக்கு உதவி செய்வோம்.
எந்த மொழியில் இருந்தாலும் நமது கவிஞர்களின் கவிதைகளை – நூற்றொரு கோடியாக இருந்தாலும் அனைத்தையும் -மீட்டெடுப்போம்.
புவன ச்ரேஷ்டம் பாரதம்; நல்லறிவின் தலைமையகம் பாரதம்.
புனர் நிர்மாணம் செய்து பழைய தலைமையை அனைத்துத் துறைகளிலும் நிலை நாட்டுவோம்!
***