தொல்காப்பியத்தில் வருணன்

Image

தமிழில் கிடைத்த பழைய நூல் தொல்காப்பியம். பெரும்பாலான அறிஞர்கள் இதை கி.மு அல்லது கி.பி. முதல் நூற்றாண்டில் வைக்கின்றனர். கார்த்திகேசு சிவதம்பி, வையாபுரிப் பிள்ளை போன்றோர் போல நானும் இதை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வைத்துள்ளேன். (தொல்காப்பியர் காலம் பற்றிய எனது (ஐந்து பகுதிகள்) கட்டுரையில் காண்க).

ரிக் வேதத்தில் வருணன் மிக முக்கியமான கடவுள். உலகம் ஒரு சட்ட நியதிக்குள் இயங்க உதவுபவர் வருணன். மேலும் கடல், நீர் நிலைகள், மழை ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர். இந்திரன் கிழக்கு திக்குக்கு அதிபதி, வருணன் மேற்கு திக்கிற்கு அதிபதி. மித்ரன் என்ற ஒளிக் கடவுளுடன் இவர் ஜோடியாக வைக்கப்படுகிறார். வேத மந்திரங்கள் இவரை மித்ரனுடன் சேர்த்துப் பாடுகின்றன. இது பழந் தமிழர் நம்பிக்கையுடன் மிகவும் பொருந்துகின்றன. வருணனின் வாஹனம் சுறா மீன், முதலை அல்லது கடல் மிருகம்.

 

மித்ரன் வருணன் ஜோடியை அறிஞர்கள் ஒளி/இருள் என்றும் சூரியன்/சந்திரன் என்றும் ஆக்க சக்தி/அழிவு சக்தி என்றும், உற்பத்தி/மறைவு=சூரிய உதயம்/அஸ்தமனம் என்றும், கிழக்கு/மேற்கு என்றும் வியாக்கியானம் செய்கின்றனர். அதாவது ஒரு மின்சார பேட்டரியில் உள்ள பாசிடிவ்/நெகடிவ் போன்றவர் மித்ர- வருணன் ஜோடி.

வருணனின் மகன் தமிழ் முனிவன் அகஸ்தியர். அந்த வகையில் வருணனும் தமிழுக்கு மிகவும் நெருங்கி வந்து விடுகிறார்

தற்காலத்தில் பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தன மந்திரத்தில் வருண வழிபாடு இருக்கிறது. மழை பெய்யாமல் வறட்சி நிலவும் காலங்களில் வருண ஜபம் என்னும் வேத மந்திரச் சடங்கு நடத்தப்படுகிறது.

 

தொல்காப்பிய பொருள் அதிகாரம் (1-5)

‘’ மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’’

 

தொல்காப்பியர் தனது பொருளதிகார சூத்திரத்தில் கடலும் கடலைச் சார்ந்த நிலமும் ஆன நெய்தல் நில மக்களின் கடவுள் வருணன் என்று சொல்லுவார். அவர்கள் பரதவர் என்று அழைக்கப்படுவர்.

((இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டு கோள்: எனது கட்டுரைகளைத் தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஆனால் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ , அல்லது பிளாக் பெயரையோ தயவு செய்து போட்டு தமிழுக்குத் தொண்டு செய்யுங்கள். தமிழ் எழுத்தாளர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்)).

பட்டினப்பாலை என்னும் நூலில் வருண வழிபாடு பற்றிய சுவையான செய்திகள் கிடைகின்றன; வள்ளுவனும் மறைமுகமாக வருணனைப் புகழ்கிறான்:

Image

‘’ வெண்கூதாளத்துத் தண்பூங்கோதையர்

சினைச் சுறவின் கோடு நட்டு

மனைச் சேர்த்திய வல்லணங்கினான்

மடற்றாழை மலர்மலிந்தும்

பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்

புன்றலை இரும் பரதவர்

பனிதழை மா மகளிரொடு

பாயிரும் பனிக்கடல் வேடஞ் செல்லா

துவவுமடிந்துண்டாடியும்’’ (பட்டினப்பாலை 85-93)

 

பொருள்: பரதவர்கள் சுறாமீனின் கோட்டினை மணலில் நட்டு மலர் மாலை சார்த்தி வணங்கினர். அதில் தெய்வம் ஏறியதாக நம்பினர் பவுர்ணமி நாட்களில் இதைச் செய்வர். பனங்கள்ளையும் நெற்கள்ளையும் அருந்துவர். மீனையும் இறைச்சியையும் கடவுளுக்குப் படைப்பர்.

வாரணம்= கடல் என்ற வடமொழிச் சொல்லும் வருணன்= கடல் தெய்வம் உடன் தொடர்புடையது.

 

மேற்கூறிய சங்க கால பட்டினப் பாலைப் பாடல் ரிக்வேத கருத்துடன் மிகவும் அணுசரணையாக இருக்கிறது: 1. பரதவர் என்போர் ரிக்வேத பரதர்களுடன் தொடர்புடையோராக இருக்கலாம் 2. வருணனின் வாகனமான மகரம் (மீன்/முதலை/சுறா), கடலோர பரதவர் வழிபாட்டில் இடம் பெற்றது 3. வருணன் ஒரு கடல் தெய்வம் என்பது ரிக்வேதத்தில் பல இடங்களில் வருகிறது; தமிழர்களும் கடல் தெய்வமாகவே வணங்கினர் 4. முழு நிலவுக்கும் இரவுக்கும் வருணனுக்கும் உள்ள தொடர்பு வேதத்திலும் உள்ளது. வருணன் என்பவன் சோமனுக்கும் அமிர்த்துக்கும் அதிபதி. சோமன், அமிர்த கிரணங்கள் என்பது சந்திரனுக்கும் சோம பானத்துக்கும் பொருந்தும் 5.தொல்காப்பியரும் வருணன் என்ற அதே வடமொழிப் பெயரைப் பயன்படுத்துகிறார்.. மழை என்பது கடலில் இருந்து மேகமாக உற்பத்தியாகி பூமியில் பெய்கிறது என்ற கருத்து வடமொழி, தமிழ் மொழி நூல்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது.

 

வள்ளுவன் போற்றிய வருணன்

இந்திரன் என்ற சொல்லைப் பயன்படுத்திய வள்ளுவன் , வருணன் என்ற வேத காலக் கடவுள் பெயரை நேரடியாகப் பயன்படுத்தவில்லை. ஆயினும் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வைத்து பூசனை, தானம் தவம் என்ற சம்ஸ்கிருத சொற்களால் வர்ண பகவானை வாழ்த்துகிறான் வள்ளுவன் :

‘’சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு’’ (குறள் 18)

‘’தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்

வானம் வழங்காது எனின்’’ (குறள் 19)

பொருள்: வானம் வறண்டு மழை இல்லாது போனால், இந்த உலகில் வானோர்க்கு எடுக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள்தோறும் செய்யும் பூஜையும் நடைபெறாது;

 

மழை இல்லாது போனால், இந்த பரந்த உலகத்தில் தானம் கொடுத்தலும், தவம் செய்தலும் இல்லாமல் போகும்.

மேற்கூறிய இரண்டு குறட்பாக்களில் வள்ளுவன் கூறும் பூஜை என்ன? விழா (க்கள்) என்ன? வருண வழிபாடு, இந்திர, வருண விழாக்கள் என்றால் பொருத்தமாகவே இருக்கும். கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான் சிறப்பை வைத்ததற்கு இதை விட வேறு விளக்கம் என்ன இருக்க முடியும். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இன்றும் இந்திர விழா பல பெயர்களில் ( நீர் விழா, மழை விழா) கொண்டாடப் படுகிறது. தமிழில் பரிபாடலில் மேலும் பல நீர் விழாச் செய்திகள் உள்ளன.

தமிழர் கலாசாரம் வேறு, ஆரியர்-திராவிடர் வேறு என்பவர்க்கு தொல்காப்பியரும் வள்ளுவரும் கொடுக்கும் பதிலைத் தவிர வேறு பதிலும் தேவையா?

Image

Slavs in Russia and Ukraine worship Varun as Perun

என்னுடைய முந்தைய கட்டுரைகளையும் காண்க:

1.தொல்காப்பியத்தில் இந்திரன்

2.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும்

3.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்

4.அதிசயத் தமிழ் முனிவர்/புலவர் வால்மீகி

5.சோம பானமும் சுரா பானமும்

6.வீரத்தாயும் வீர மாதாவும்

7.சிந்து சமவெளியில் பேய் முத்திரை + 570 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

 

Leave a comment

1 Comment

  1. Veeraswami Panjan

     /  June 24, 2020

    Dear Swaminathanji, the world languages 7,117 are emanated from Sanskrit, Sanskrit is the world first language, the first born in the whole world is Brahmin from head, the whole world is under the control of Brahmins.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: