Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ஞான மொழிகள் – 69
Kattukutty
ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர்.
இரவு நேரம்…, பெருத்த மழை வேறு…, அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.
வந்தவர் “நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்.
சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.
இருவரில் முன்னவர் சொன்னார், என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார்.
இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர், ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள்,
இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்.
மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன், என்றார். ( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)
நீங்கள் உங்கள் ரொட்டிகளை, ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார்.
இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்…
ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்…
பொழுது விடிந்தது, மழையும் நின்றது.
மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது, உங்கள் உதவிக்கு மிக்க நன்றி, என்று சொல்லி *எட்டு தங்க நாணயங்களை கொடுத்து, நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள், என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.
மூன்று ரொட்டிகளை கொடுத்தவர், அந்த காசுகளை சமமாகப் பிரித்து, ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார்.
மற்றவர் இதற்கு சம்மதிக்கவில்லை.
மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள். ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.
மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை,
என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும், நான் பங்கிட சம்மதித்தேன்… நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது, என்றாலும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம் என்றார்.
சுமுகமான முடிவு எட்டாததால், விஷயம் அரச சபைக்கு சென்றது.
அரசனுக்கு யார் சொல்வது சரி, என்று புரியவில்லை.
நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து, அரண்மனைக்குச் சென்றான்.
மன்னருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை.
வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது.
மன்னருக்கு, கனவில் கடவுள் காட்சி அளித்து, தீர்ப்பும், விளக்கமும் தந்தார்.
கடவுள் சொன்ன தீர்ப்பும், விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அடுத்த நாள் சபை கூடியது.
மன்னர் இருவரையும் அழைத்தார்.
மூன்று ரொட்டிகளை கொடுத்தவருக்கு ஒரு காசும், ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.
ஒரு காசு வழங்கப்பட்டவர், “மன்னா…! இது அநியாயம், அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக் கொண்டார்” என்றார்.
அரசர் சொன்னார். நீ உன்னிடம் இருந்த மூன்று ரொட்டிகளை ஒன்பது ரொட்டித் துண்டுகளாக்கி கொடுத்தாய். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் கையில் இருந்த ஐந்து ரொட்டிகளை பதினைந்து ரொட்டித் துண்டுகளாக்கி கொடுத்தான். அவனுக்கும் எட்டுத் துண்டுகள்தான் கிடைத்தது*. ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள். ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்(1:7) என்றார்.
ஆம்! கடவுளின் கணக்கு இப்படி துல்லியமாகதான் இருக்கும்!
நீங்கள் இழந்ததை எல்லாம் தருவது அல்ல, அவன் கணக்கு.
எது உங்களுக்கு தகுதியானதோ அதுதான் உங்களுக்கு.
இது கடவுளின் ஏட்டு கணக்கு இல்லை.
நாம் செய்யும் செயலில் இறைவன் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள்!
முழுமையாக தன்னை சேவைக்கு அர்பணித்துக் கொண்டவர்களை இறைவன் அறிவான்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
17-5-2022 மாலைமலர் இதழில் மீண்டும் அமெரிக்கா செல்வோம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரை!
லேக் டாஹோ, டைம் ஸ்குயர், க்ராண்ட் கான்யான் – அமெரிக்க டூர்!
ச.நாகராஜன்
பண பலம், பயணம் செய்து சுற்றிப் பார்க்க ஓய்வு நாட்கள், உடல் வலு, திட்டம் தீட்டவும் உதவவும் நண்பர்கள், உறவினர்கள் – இவை எந்த ஒரு பயணத்திற்கும் தேவை.
அதிர்ஷ்டவசமாக அமெரிக்காவில் சொந்தக் குடும்பமும், நண்பர்களும், உறவினர்களும் இருக்கவே அந்த சொர்க்கபுரியின் முக்கியமான இடங்களைப் பார்க்க முடிந்தது.
லேக் டாஹோ
அற்புதமான லேக் டாஹோ ஏரி வர்ணனைக்கு அப்பாற்பட்ட அழகிய ஏரி. சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து 200 மைல் தூரத்தில் உள்ள இந்த அழகிய இடத்தை, காரில் சென்றால் சுமார் மூன்றரை மணி நேரத்தில் அடைந்து விடலாம். வளைந்து நெளிந்து செல்லும் அழகிய பாதை. எங்கு பார்த்தாலும் பனி. சாலைகளில் பனி படர்ந்து வெள்ளையாக இருப்பதைப் பார்ப்பதே ஒரு தனி அனுபவம். இந்தப் பனிபடர்ந்த சாலையில் கார் வழுக்கி விடாதா? ஆங்காங்கே உள்ள பனிப்படலத்தை விசேஷ வாகனங்கள் அகற்றிக் கொண்டே இருக்கின்றன. இது தவிர கார்களில் இந்தச் சாலையில் செல்வதற்கெனவே விசேஷ டயர்கள் உள்ளன. அவற்றைக் காரில் பொருத்திக் கொள்ள வேண்டும். அப்போது பயப்படத் தேவை இல்லை.
இருமருங்கும் பனி. மலை, செடி, பாதை அனைத்தும் வெள்ளைவெளேரென இருப்பதைப் பார்த்தாலேயே மனதில் ஒரு உற்சாகம் ஏற்படும்.
டாஹோ ஏரி 22 மைல் நீளமும் 12 மைல் அகலமும் 72 மைல் நீளமுள்ள ஏரிக்கரையையும் 1640 அடி ஆழமும் கொண்ட பிரம்மாண்டமான அழகிய ஏரி. பைன் காடுகள் சுற்றி இருக்க அழகுக்கு அழகு செய்யும் இந்த இடத்திற்கு ஆண்டு முழுவதும் பயணிகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். என்றாலும் அங்கு செல்ல மார்ச் முதல் மே மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் மிகவும் உகந்த காலம்.
அங்குள்ள கேபிள் கார் விண்ணில் பயணிக்கும் ஒன்று. கண்ணாடியுடன் கூடிய ஒரு க்ளாஸ் கேபினில் 8 பேர் அமரலாம். 2.4 மைல் விண்ணில் செல்லும் இந்த கேபிள் கார் பயணம் மூச்சை நிறுத்திச் சிலிர்க்க வைக்கும் ஒரு பயணமாகும். இடையில் உள்ள ஸ்டேஷன் ஒன்றில் கேபிள் கார் நிற்கும். அங்கு இறங்கி, காட்சி காண்பதற்காக உள்ள இடத்தில் நின்று சுற்றுப்புறத்தைப் பார்த்தால் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சியைப் பார்க்கலாம்; வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. ஒரு கோடி டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விண் பயண வழி நம்மை 874 அடி உயரத்தில் பயணப்பட வைக்கிறது.
இந்தப் பகுதி மூன்றில் இரு பங்கு கலிபோர்னியா மாநிலத்திலும் ஒரு பங்கு நெவேடா மாநிலத்திலும் அமைந்துள்ளது. மாநிலங்களைப் பிரிக்கும் எல்லைக் கோடு அருகே நின்று கொண்டு ஒரு நிமிடத்தில் அங்குமிங்குமாகச் சென்று நான் இரு மாநிலங்களில் இருக்கிறேன் என்று வேடிக்கையாகக் கூவலாம்.
க்ராண்ட் கான்யான்
அரிஜோனா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள மகன் விடுத்த அழைப்பால் அந்தப் பகுதிக்குச் சென்ற போது க்ராண்ட் கான்யான் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
அரிஜோனா அருகில் உள்ள 277 மைல் பரந்து விரிந்துள்ள க்ராண்ட் கான்யான் பள்ளத்தாக்கு வியப்பூட்டும் இயற்கைக் காட்சிகளை அளிக்கும் ஒரு பகுதி. 6000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கையும் மலைப்பகுதியையும் பார்க்க வசதியாக பார்வை இடங்கள் உள்ளன.
அங்கிருந்து பார்க்கும் போது ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாராய்-ப்ரசாந்த் நடனமாடும் எனக்கே எனக்கா பாடலில் ஷூட் செய்யப்பட்ட க்ராண்ட் கான்யானைப் பார்த்து பிரமிக்கலாம். தள்ளி இருக்கும் வட்டமான பகுதியைச் சுற்றி கிடு கிடு பள்ளம்; அங்கு எப்படி அவர்கள் சென்று தைரியமாக ஆடினார்கள்; ஹெலிகாப்டரின் உதவி இல்லாமல் அங்கு இதை சாதிக்க முடியாதே; இயக்குநர் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும்; ஒளிப்பதிவாளர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்றெல்லாம் பேசிக் கொண்டே மேலும் கீழுமாக படிக்கட்டுகளில் சென்றவாறு பரவசம் அடைந்தோம்; ஏராளமான வீடியோ காட்சிகள் பயணிகளால் எடுக்கப்படுகின்றன. நாங்களும் எடுத்தோம்.
சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் காரில் ஏறிப் புறப்பட்டு அரை மணி நேரம் பயணப்பட்ட பின்னர் வீடியோ கேமரா எங்கே என்று கேட்ட போது தான் விவரம் தெரிந்தது; அது க்ராண்ட் கான்யான் மேடையிலேயே விடப்பட்டிருக்கிறது என்று. மிகவும் விலை உயர்ந்த வீடியோ கேமரா! உடனடியாக காரைத் திருப்பி மீண்டும் அதே இடத்திற்கு வந்து அந்த மேடைக்குச் சென்று பார்த்தால் ….. அந்த கேமரா அப்படியே இருந்தது. அது தான் அமெரிக்கா! எவரும் அதை எடுத்துச் செல்லவில்லை. மிக்க மகிழ்ச்சியுடன் கான்யானை வாழ்த்தி விட்டுப் புறப்பட்டோம்.
9/11 தாக்குதல்
அடுத்து உள்ளத்தை நெகிழ வைத்த ஒரு இடத்தில் மன வருத்தத்துடன் நிற்க வேண்டியதாயிற்று.
2001 செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க்கில் அல்கொய்தாவினால் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமும் அதில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டு ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டதையும் உலகம் என்றும் மறக்காது. இதைப் பற்றிய 9/11 மெமொரியல் ம்யூஸியம் இங்கு உள்ளது. உயிரிழந்தோரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட வெங்கலத்தகடுகள் இருக்க அங்கு நின்று எங்கள் அஞ்சலியைச் செலுத்தினோம்.
ஒஸாமா பின் லேடனை அமெரிக்கா எப்படி பிடித்து தண்டித்தது என்பதைச் சித்தரிக்கும் 2012இல் வெளியான படமான ‘ஜீரோ டார்க் தர்ட்டி’யை யாரும் மறக்க முடியாது. இதில் வரும் பெண்மணியான மாயாவைப் பாராட்டாதவரே இல்லை. ஐந்து அகாடமி அவார்டுகளுக்காக நாமினேஷன் செய்யப்பட்ட படம் இது. இந்த நினைவிடத்திற்கு வருவோர் தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்ற மன உறுதியுடன் அதை வெறுத்து ஒதுக்கப் பாடுபடுவர் என்பது உறுதி!
டைம் ஸ்குயர்
நியூயார்க்கின் இதயத் துடிப்பை டைம்ஸ்குயரில் காணலாம். நியான் ஒளி விளக்குகள் மின்ன திரைப்பட விளம்பரங்கள் என்ன, இதர மனதை ஈர்க்கும் வணிக விளம்பரங்கள் என்ன என்று அமர்க்களப்படும் இப்பகுதியில் அங்குமிங்குமாக சிறிது நேரம் உலவினாலே போதும் நியூயார்க்கின் இதயத்தை அறிந்தவர்களாவோம். பிராட்வே- செவந்த் அவென்யூ சந்திப்பு குறிப்பிடத்தகுந்த ஒரு பகுதி. தினமும் 3,30,000 பேர்கள் இங்கு வருகின்றனர் என்பது இதன் முக்கியத்துவத்தையும் கவர்ச்சியையும் காண்பிக்கிறது!
எம்பயர் ஸ்டேட் பில்டிங்
அமெரிக்காவின் அதி முக்கிய இடமான எம்பயர் ஸ்டேட் பில்டிங்கைப் பார்க்காமல் நியூயார்க்கிலிருந்து திரும்ப முடியாது. 1054 அடி உயரமுள்ள இதில் பார்க்க வேண்டிய அம்சங்கள் ஏராளம் உண்டு. 86வது மாடியில் ஏறி 360 டிகிரி சுழல் பார்வையில் நாம் பார்க்கும் பார்வை அமெரிக்காவையே பார்த்து விட்ட ஒரு பிரமையை ஏற்படுத்தும்.
லிபர்டி தேவதையின் சிலை
305 அடி உயரமுள்ள சுதந்திர தேவதையின் சிலை அமெரிக்காவின் சுதந்திர சிந்தனையைப் பெருமிதத்துடன் சுட்டிக் காட்டும் அற்புதமாகும்.
இங்கு 60 நிமிட படகு சவாரியை மேற்கொள்ளலாம். லிபர்டி தேவதையின் கையில் ஒரு டார்ச் உள்ளது. இது சுதந்திரத்தைக் குறிக்கும் ஒளி விளக்கு. லிபர்டி ஐலேண்டில் உள்ள இதைச் சென்று பார்க்க அனுமதி உண்டு.
இங்குள்ள எல்லிஸ் ஐலேண்ட் அமெரிக்க சரித்திரத்தின் ஒரு முக்கியமான இடமாகும்.
இங்கு உள்ள மியூஸியத்தில் சென்று மெதுவாக சுற்றிப் பார்த்தால் அமெரிக்க சரித்திரத்தை முற்றிலுமாக அறிந்து கொள்ளலாம்.
சீறிப் பாயும் காளை
நியூயார்க்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய அடையாளமான வால் ஸ்ட்ரீட் பற்றி அறியாதோர் இருக்க முடியாது. உலகின் பிரபலமான ஸ்டாக் எக்ஸ்சேஞ்ஜ் இங்கு தான் உள்ளது. இங்குள்ள சீறிப்பாயும் காளையைப் பார்த்து மகிழ்வதோடு போட்டோவும் எடுத்துக் கொள்ளலாம்.
லிங்கன் மெமோரியல் செண்டர்
அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக இருந்தவரும் உலக மக்கள் அனைவரின் உள்ளத்திலும் இடம் பிடித்தவருமான ஆப்ரஹாம் லிங்கனுக்கான நினைவிட மையம் அமெரிக்க தலை நகரான வாஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ளது. அற்புதமான மையத்தில் 19 அடி உயரமுள்ள சலவைக் கல்லினாலான மாமனிதர் லிங்கனின் கம்பீரமான அழகு சிலையைப் பார்த்து மகிழலாம்.
நீண்ட நெடும் பாதையில் காலார நடந்து சென்று மகிழ்வதோடு அங்கு இருந்து அமெரிக்க ஜனாதிபதியின் ஒய்ட் ஹவுஸையும் தூரத்திலிருந்து பார்த்து மகிழலாம்.
பெரும் சரித்திரத்தையும் ஒரு மகத்தான மனிதரின் நினைவையும் ஊட்டும் லிங்கன் மெமோரியல் செண்டரைப் பார்க்காமல் அமெரிக்க பயணம் முடிவுறாது.
சிலிகான் வேலி
உலகின் கணினி தொழில்நுட்பத்திற்கான அறிவு மையமாக இருந்து தொழில்நுட்ப அற்புதங்களை வழங்கும் சிலிகான் வேலி சான்பிரான்ஸிஸ்கோவின் தென் பகுதியில் அமைந்துள்ளது.
இங்குள்ள (பே ஏரியா என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ள) ஆப்பிள், சிஸ்கோ, கூகிள், ஆரக்கிள், ஹெச்பி, இண்டெல் உள்ளிட்ட கம்பெனிகளில் ஏராளமான இந்தியர்களைப் பார்க்கலாம். இவர்களின் அறிவுத்திறனை அமெரிக்கா பாராட்ட, இவர்கள் இந்தியாவிற்குப் பெருமை தேடித் தருவதற்காக இவர்களை நாம் பாராட்டலாம்.
டிரைவர்லெஸ் கார்!
சான்பிரான்ஸிஸ்கோவில் ஏராளமான அதிசயங்களைக் கண்டும் அனுபவித்தும் மகிழ முடியும்.
திடீரென்று சாலையில் ஓடும் ஒரு காரை அனைவரும் அதிசயமாகப் பார்க்கவே நானும் பார்த்தேன். ஆம், அது டிரைவர் இல்லாமல் தானாகவே ஒடும் கார்!
சோதனை ஓட்டத்தில், சாலை சந்திப்பில் சிவப்பு விளக்கு எரிய அது நின்று கொண்டிருந்ததைப் பார்த்தோம். பச்சை விளக்கு எரிந்தவுடன் அது கிளம்பியது.
நாளைய உலகின் மாற்றத்தை அந்த நாற்சந்தியில் பார்த்து பிரமிக்க முடிந்தது.
சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால்!
அங்குள்ள தியேட்டர்கள் நம்மவர்களை ஈர்க்கும் ஒன்று.
சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் என்றவுடன் ஒரே மகிழ்ச்சி அலை பொங்கும். படம் திரையிடப்பட ஒரு மணி நேரம் முன்னதாகவே தியேட்டருக்கு குடும்ப சகிதம் அனைவரும் வந்து கார் பார்க்கிங்கில் இடம் கண்டு பிடித்து நிறுத்தி விட்டு கை நிறைய கொரிப்பதற்கான ஸ்நாக்குகளையும் ஐஸ்கிரீமையும் வாங்கி கூடி இருக்கும் நண்பர்களுடன் அளவளாவி மகிழ்வர். தியேட்டருக்குள் விளம்பரங்கள் முடிந்து படம் கணீரென்று ஆரம்பிக்க சூப்பர் ஸ்டார் தோன்றும் காட்சியில் தியேட்டரே சற்று உயரக் குதிக்கும். ஒரே ஆரவாரம், விசிலும் உண்டு. சூப்பர்ஸ்டாரே மாறு வேடத்தில் அங்கு வந்து அமர்ந்தாலும் அவர் தோன்றும் காட்சியில் அவராலும் கை தட்டாமல் இருக்க முடியாது. அப்படி ஒரு உற்சாகம், அப்படி ஒரு மகிழ்ச்..ச்..சி! (அட, இது கூட சூப்பர் ஸ்டார் வார்த்தையாக வந்து விட்டதே!) 3D படங்களை இங்கு பார்ப்பதே ஒரு தனி அனுபவம் தான்!
லிவர்மூர் கோவில்
என்ன கோவிலைச் சொல்லவில்லையே என்று நினைக்க வேண்டாம்.
அற்புதமான பல கோவில்கள் பல ஊர்களிலும் நெடுக உள்ளன.
பல இடங்களில் நாமே சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாம். வரிசையாக நின்று பயபக்தியுடன் நடக்கும் இந்த வழிபாடு அனைவருக்கும் ஆன்ம பலத்தைத் தரும் ஒன்று. சான்பிரான்ஸிஸ்கோவில் சாயிபாபா கோவில் உண்டு. லிவர்மூரில் உள்ள பிரம்மாண்டமான கோவிலுக்கு அனைவரும் அடிக்கடி, குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில், வந்து வழிபடுவது வழக்கம்.
நமது ஊர் பிரஸாதம் போலவே இறைவனின் பிரஸாதமும் உண்டு; அருளாசியும் உண்டு.
யாதும் ஊரே, யாவரும் கேளிர் – தமிழ் முழக்கம்!
சுமார் ஆயிரம் மைல் கார் பயணத்தை மேற்கொண்டு, எனது மகன் காரை ஓட்ட குடும்பம் முழுவதும் அமெரிக்காவில் போக முடிந்தது என்றால் அது அங்குள்ள கட்டமைப்புகளையும் வசதிகளையும் பயமின்மையையும் குறிக்கிறது.
தூரம் அதிகமுள்ள இடத்திற்கு விமானப் பயணம் மேற்கொண்டு விமான நிலையத்திலிருந்தே வாடகைக்கு காரை நாம் அமர்த்திக் கொள்ளலாம். காரில் பெட்ரோல் முழுவதுமாக நிரப்பப்படும். எல்லா இடங்களுக்கும் சென்று முடித்த பின்னர் காரை எத்தனை நாள் பயன்படுத்தினோமோ அதற்கான கட்டணத்தைச் செலுத்துவதோடு டாங்கில் பெட்ரோலை முழுவதுமாக நிரப்பித் தந்து விட வேண்டும்.
சான்பிரான்ஸிஸ்கோ, நியூ ஜெர்ஸி உள்ளிட்ட பல நகரங்களில் நம்மூர் போல சரவணா, கோமள விலாஸ் ஹோட்டல்களும் உண்டு. சுவையும் மணமும் தனி தான்!
என்ன, அமெரிக்கா கிளம்ப ஆசையா! வாருங்கள் உலகை வலம் வருவோம்.
வெளி நாட்டுப் பயணம் மேற்கொள்வதால் என்ன பயன்? நம்மைச் சுற்றிச் சுழலும் மத, இன, மொழி, அந்தஸ்து, பூகோள, அடிப்படையிலான குறுகிய் வேறுபாடுகள் அகலும்; மனம் செம்மையுற்று, நாம் அனைவரும் மனிதர் என்ற ஒரே உன்னத நோக்கில் நம் பார்வை மாறும்! அதனால் நாமும் செழிப்போம், உலகமும் செழிக்கும்!
அது மட்டுமல்ல, சங்கத் தமிழில் கணியன் பூங்குன்றனார் தந்த, “யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா” (புறநானூறு, பாடல் 192) என்ற தமிழ் முழக்கத்தை உலகெங்கும் பரப்ப முனைந்தவர்களாவோம்!
***
tags- லேக் டாஹோ, டைம் ஸ்குயர், க்ராண்ட் கான்யான், அமெரிக்க டூர்,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
I have been giving a lot of examples to show that the words, at least the basic words, in ancient languages can be traced back to Sanskrit or its junior Tamil. These are the two ancient languages of India with copious literature. All other modern Indian languages are derived from these two languages and mixed with local dialects. Even the oldest Tamil book talk about different types of crude Tamil along with chaste Tamil in Tamil Nadu itself. Panini also mentioned Northern and Eastern usages of Sanskrit 2700 years ago. And before Panini existed 64 grammarians which shows how the Sanskrit language changed before his time. We have proof in the Vedic language.
In Tamil there is an animal called Verukam, Veruku, Viruku also knowns as Sennaay/Red Dog. This Veruku is called wolf in other languages.
I will show how wolf changes in different languages:
WOLF in
Latin – Lupus
Greek – Lykos
Persian – Vehra in Zend Avesta
Slav – VLUKU
Teutonic – Vulf
German and English – Wolf
Celtic – Fael (f=v; l=r)
Tamil – Onaay
Zoological name- Canis lupus; there are 30 sub species.
We know the universal linguistic changes:-
R=L
V=P/B/F
Animal name in Tamil விருகு/Viruku, வெருகம்/Verukam (செந்நாய்–Dhole) changed to VLUKU in Slav group of languages .if L changed to R, we can read it as Vruku. Ancient Persian in Zend Avesta also has similar sound (Vehra). Letters change position Vehra= Verha.
In Tamil there is a proverb, ‘Don’t stare like Viruku’. Villagers believe that it looks at a prey and the animal victim will be paralysed or mesmerized making it an easy target.
Same type of plants and animals are always used with different names in indifferent locations because of its similar appearances or sounds that they make. It confuses a lot of people. Viruku, Veruku, Verukkam in Tamil is used for wild cat (looking or behaving like wolf of Europe).
Xxx
I will give you one example:-
Birds starting with K or C in any language mean different species in different parts of the world.
COCK,Cocku/Kokku=heron in Tamil, Cuckoo/Koel/Kuyil, Kookaburrah in Australia etc
So many different species with same sound!
In herbal dictionaries of Indian Languages we can see more such confusions.
So no wonder Viruku in Tamil changes to Vluku in Slav and Lupus in Latin, Lykos in Greek and Wolf in English
This confirms my hypothesis that the culture and languages were spread by ancient Indians. One group went for North India and another group went from South India to spread culture and languages. Whole of South East Asia has script derived from Brahmi script and we see South Indian influence as well. At the same time, we see Kamboja (Cambodia), Champa (Vietnam), Lava desa (Laos), Malayadesa (Malaysia) Simhapuri (Singapore)Brahma desa (Burma) Shyama Desa (Siam/Thailand) etc. All Sanskrit terms
Xxxx
Veruku or verukku has been used for 2000 years. It occurs in Sangam literature and post Sangam literature.
Tolkappiam -3-550, 613-4
Kuruntokai 107-4, 220-4, 139-2
Akananuru – 73, 297, 367, 391
Purananuru – 117-8, 326- 1
xxx
வெருக்கு மற்றும் வெருகு என்ற சொல் 2000 ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளது:-
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
வரி மென் முகைய நுண் கொடி அதிரல் – அகம். 391
பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய
பாசிலை முல்லை முகைக்கும் – புறம். 117
பூத்த முல்லை வெருகு சிரித்து அன்ன
பசு வீ மென் பிணி குறு முகை அவிழ்ந்த – குறு. 220
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை
……… வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர்
…… பருத்தி வேலி கருப்பை பார்க்கும் – புறம். 324
எழுதி அன்ன கொடி படு வெருகின் – அகம். 297
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை – அகம். 297
மனை உறை கோழி குறும் கால் பேடை
வேலி வெருகு இனம் மாலை உற்று என – குறு. 139
ஊர் முது வேலிப் பார்நடை வெருகின்
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை – புறம். 326
ஓநாய் , பழமொழி என்னும் நூலில் ஒரே ஒரு இடம் (130); சங்க நூலில் இல்லை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
பிரஹேலிகா–பிரகேளிகை
Written By B.Kannan,Delhi
அன்புடைய தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்
பிரபலக் கவிஞர்கள் தாங்கள் எடுத்துரைக்க விரும்பும் பொருளை, படிப்பவர்கள் நேரடியாகப் புரிந்துகொள்ள வைக்காமல் மறைத்து வைத்து, அதே சமயம் வெளிப்படையாக வேறு பொருள் படக் கூறுவது ஓர் இலக்கியப் பாணியாகும். இவ்வுத்தியைச் சம்ஸ்கிருதத்தில் “பிரஹேலிகா” “பிரேளிகை”(புதிர்) என்பர். (புரை (=சிக்கல்) + எளி (=சுளுவாகு) + கை = புரேளிகை > பிரேளிகை = சுளுவாக்கப்படும் சிக்கல் எனப்படும். “பிரகேளிகை”( புதிர் விளையாட்டு) என்றும், தமிழில் “விடுகவி” எனவும் அழைப்பர். வாசகரின் உய்த்துணர் திறனுக்கும், சிந்தனையாற்றலுக்கும் தூண்டுகோலாகவும் சவாலாகவும. இருக்கவல்லது. மேலும்,
இவ்வகை இலக்கியம் கவியின் கற்பனாசக்திக்கும்,சொற்களைச் சரியாகக் கையாளும் அவர்களது திறமைக்கும் எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இயல்பான எழுத்து அல்லது இயல்பு நவிற்சிக்கு மாறாக வார்த்தை அலங்கார அணியில் எழுதும் முறையான வக்ரோக்தியும் மற்றொன்று. வக்ர + உக்தி எனப் பிரிவுபட்டுக் கோணற்கூற்றுமுறை, மறைமுகக்கூற்று, எனப் பொருள்படும். அதாவது எதையும் நேராகப் பேச்சு வழக்கிலுள்ளது அல்லது அறிவுநூல்களில் உள்ளது போன்ற முறையில் அல்லாமல் சுற்றி வளைத்து அழகுபடுத்திக் கூறுதல் என்பதாகும்.இதுவும் ஏறக்குறைய இவ்வகையைச் சேர்ந்ததே.
இவை சொற்பிரேளிகை, பொருட்பிரேளிகை என இருவகையில் அறியப்படுகிறது. சித்திரக் கவியின் ஓர் அங்கமாகும் இவ்வணி அலங்காரம்.
சொற்பிரேளிகை. கிட்டத்தட்ட விடுகதை போல்தான். ஒரு சொல் மறைந்திருக்கும், கண்டு பிடிக்க வேண்டும். வீட்டில் பாட்டிமார்கள் இருந்தால் “மரக்கால்” கணக்கில் இப்படிக் கேட்டி ருக்கக் கூடும்!
முதலில் தமிழில் பார்ப்போம்……. (இணையத்தில் கண்டெடுத்தது)
விதையிருக்கும் ஆனாலோ கனியு மன்று
வீச்சிருக்கும் அரிவாளோ இல்லை, உள்ளே
பதமுடைய பண்கொஞ்சும் குயிலோ இல்லை
பாவாணர்க் குறவாகும், ஆனால் அஃதோ
இதமுடைய எழுத்தாணி தானு மன்று
இடைவிட்டுக் கதைசொல்லும் , பாட்டி யன்று
எதுவெனவே நீர்கணித்துச் சொல்க, இன்றேல்
இதிலிரண்டால் உமைக்கடித்துக் குதற வைப்பேன்.
விடை –கவிதை
இடையெழுத்து வி போனால் கதை என்றாகும்
இதிலிரண்டு- கவி கவி அதாவது குரங்கு . குரங்கை ஏவிக் கடிக்க வைப்பேன் என்பது பொருள்.
ஆண்குழந்தை, பாலன் என்றும் சொல்லலாம், பாலகன் என்னலாம்.
ஆனால் பொருள் ஒன்றுதான். எனவே இது பொருட்பிரேளிகை.
दन्तैर्हीनः शिलाभक्षी निर्जीवो बहुभाषकः ।
गुणस्यूतिसमृद्धोऽपि परपादेन गच्छति ॥
பற்கள் கிடையாது ஆனால் கடிப்பேன், கற்களைச் சாப்பிடுவேன், உயிர் இல்லை ஆனால் உரக்கச் சத்தம் போட்டுப் ‘பேசுவேன்’ பல குணாதிசயங்கள் என்னிடமுண்டு, பிறர் உதவியால் நடப்பேன், நான் யார்?
விடை: பாதேயம், செருப்பு, ஜோடு (புதுச் செருப்பு கடிக்கும், சரக், புரக் என்று தேய்த்துச் சத்தமிடும், சடக் சடக் என்று குதிகாலில் அடித்துக் கொள்ளும்)
சரி விளையாடியது போதும், தீவிரமாகத் தலைப்புப் பொருளுக்குள் போவோமா?
முத்துக்குமாரசேகரர் என்ற இயற்பெயரைக் கொண்ட முத்துக்குமார கவிராயர் அம்பல வாணப்பிள்ளைக்கும் சிங்க விதானையார் மகளுக்கும் மகனாக யாழ்ப்பாணம், உடுவிலில் பிறந்தார். சிறு வயது முதல் தந்தையரிடம் தமிழ் கற்று புலமை பெற்றார் என்பர். இவர் கவிபாடும் வன்மையில் மிகச் சிறந்தவர். இவர் கவிகளைக் கேட்டுணர்த்த கற்றோர் இவரைக் கவிராசர் என்று அழைத்தனர். சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் இவருக்கு பேரர்.ஆவார். சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் இவரும் ஆறுமுக நாவலரும் மற்றும் சங்கரபண்டி தரும் யாழ்ப்பாணத்தில் கிறித்து மதத்தினரின் போலிப் பிரசாரத்துக்கு, மக்களை மயங்கி வருந்தாது தடுத்தனர் என்றும் இவர்களின் கண்டனங்களால் கிறித்துவ மதக் கொள்கைகள் வலியிழந்து தடுமாறியது என்று பின்வருஞ் செய்யுளில் மதுரை வித்துவான் சபாபதி முதலியார் கூறியுள்ளார்…
முத்துக் குமார கவிராசா சேகரன் மொய்யமரிற்
றத்தித் தட்க்குண்டு நாவலர் தாவச் சவிமடித்து
சித்தங் கெடவுட றாமொத ரேந்தரன் சிதைந்தபைபிள்
செத்துக் கிடக்குது பார்சிவ சங்கரன் றெம்முனைக்கே,
இவர் தனிப்பாடல்கள் பல இயற்றியிருந்த போதிலும் அவை அச்சு வடிவில் வெளிவரவில்லை என்பது மனவருத்தத்தையே அளிக்கிறது. எல்லாமே செவிவழி வந்ததாகவே உள்ளன. இவரது பேரர் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் “முத்தக பஞ்ச விஞ்சதி” என்னும் பெயரில் 25 செய்யுட் கள் அடங்கிய நூலாக வெளியிட்டார். இவை தில்லை நடராசர், நல்லூர் முருகன் மற்றும் மாவை எனும் மாவிட்டபுரம் முருகன் மீது பாடப்பட்டவை ஆகும். அவையெல்லாம் பிரேளி கையின் உப்பிரிவாகக் கருதப்படும் “நாமாந்தரிதை” அலங்கார அணியைச் சேர்ந்ததாகும்.
நாமாந்தரிதை என்பது கருதியபொருளை வேறு பெயர்களில் மறைத்து வைப்பதாகும். தமிழி லக்கியச் சோலையில் இவ்வகையில் அமைந்த மனங்கவரும் மலரையொத்தப் பாக்கள் பல உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த கொட்டம்பட்டி கருப்பையா நாவலர், ஈழம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கவிஞர்கள் முத்துக்குமார கவிராயர், சேனாதிராயர் முதலியார், க. மயில்வாகனப் புல வர் ஆகியோர் இயற்றியுள்ளச் சில நாமாந்தரிதைப் பாடல்களைப் பார்க்கப் போகிறோம்….
பாத்திரப் பெயர்கள்:
பன்னி ரண்டு கரகந் தனையெட்டு
பானை யைத்துண் டதரக் குயவனை
முன்னி ரண்டு குடங்கையி லேந்தியை
முட்டி முட்டிமல் லார்மாவச் சாடியைப்
பொன்இ ரண்டு பெறும்பெருஞ் செட்டியைப்
போற்று வீர்புல வீர்சக ரந்தனை
முன்னர் வைத்த கலசம்பத் தும்பெறீஇ
முதன்மை சால்பெரு வாழ்வுறன் மெய்ம்மையே
(சுன்னாகம் முத்துக்குமார கவிராயர், தனிப்பாடல்)
உரை: பன்னிரண்டு கர கந்தனை– 12 கைகளையுடைய கந்தசாமியை,
எள், துப்பு, ஆனைஐ துண்டம், அதரம் குயம் அனை முன் இரண்டு குடங்கையில் ஏந்தியை–எள் பூ, பவளம், யானையையும் முறையே நிகர்த்த மூக்கு, அதரம், முலை முதலியவற்றை உடைய உமையம்மையால்
முன்பே உள்ளங்கை இரண்டினாலும் ஏந்தி வளர்ந்தருளப் பட்டவரை,
முட்டி முட்டி மல்லார் மாவைச் சாடியை– பலமுறை எதிர்த்துப் போராடி வலி நிறைந்த மாமர வடிவாய் நின்ற சூரபத்மனைச் சம்ஹாரம் செய்தருளியவரை,
பொன் இரண்டு பெறும் பெரும் செட்டியை– தெய்வானை, வள்ளி ஆகிய இருவரையும் தேவியராகப் பெற்றுக்கொண்ட பெரியச் செட்டியை,
புலவீர் போற்றூவீர்– புலவர்களே போற்றுங்கள்,
சகரந்தனை முன்னர் வைத்த கலசம் பத்தும் பெறீ இ– சகல சம்பத்துக்களையும் பெற்று,
முதன்மை சால் பெருவாழ்வுறன் மெய்ம்மையே– முதன்மை நிறைந்த பெருவாழ்வினை அடைவது நிச்சயம்.
இதில் குறிக்கப்பட்டுள்ள நாமங்களான கரகம்,பானை, குடம், முட்டி, சாடி, கலசம், சால் என்பவை பாத்திரப் பெயர்கள்
குலவு எழின் குலைநகர்க் கோயிலானே- எழில் நிறைந்த நகுலை நகரில் கோயில் கொண்டுள்ள நகுலேச்சுரரே!
ஈழத்துத் தமிழ்க் கவிஞர்களின் கைவண்ணம் இப்படியென்றால், நம் தமிழகப் புலவர்களின் ”நாமாந்தரிதை” திறமை அவர்களுக்குச் சிறிதும் குறைந்ததில்லை என்பதை அடுத்துக் காண இருக்கிறோம்….. (தொடரும்)
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
மனம் என்னும் மாயம்! – 2
ச.நாகராஜன்
மூளை தான் மனமா?
இல்லை!
மனித தேகமானது தோல், சதை, ரத்தம், மாமிசம், எலும்பு, மலம், சிறுநீர், கேசம், நகம் உள்ளிட்ட பலவற்றின் சேர்க்கையே.
நன்கு சோதித்தால் இவை தவிர மற்ற எதுவும் உடலில் காணப்படவில்லை என்பதால் இவை மட்டுமே ஸ்தூல தேகம் எனப்படுகிறது.
மூளையும் இந்த ஸ்தூல தேகத்தில் அடக்கம் என்பதும் பெறப்படுகிறது.
மூளை தான் மனம் என்று ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொண்டால் மூளை உள்ள போதெல்லாம் மனத்தின் தொழில் ஏற்பட வேண்டும்.
உறங்கும் போதோ, மயங்கி இருக்கும் போதோ (அதாவது ஸுஷூப்தி மற்றும் மூர்ச்சை காலங்கள்) மூளை இருந்தாலும் அது வேலை செய்யவில்லையே.
அதே போல ஒருவர் இறந்து விட்ட போதும் மனம் செயல்படக் காணோம்.
ஆகவே ஸ்தூல சரீரம், -மனித தேகம் – தான் மனம் என்பது சரியல்ல.
உண்மையில் மனம் என்பது தேகத்திலிருந்து வேறானது என்றும், அது ஸ்தூல சரீரத்தில் ஒரு ஆற்றல் போல உள்ளது என்றும், சங்கல்பம், காமம், நிச்சயம், ஊஹம் முதலியவற்றைச் செய்யும் ஒரு சூக்ஷ்ம வஸ்து என்றும் அறிய முடிகிறது.
மனதின் தோற்றமானது மூன்று விதமாக உள்ளது.
உணர்ச்சி, எண்ணம், தீர்மானம் (Feelings, Thought, Will) ஆகியவையே மனதின் தோற்றங்கள்.
இந்த மூன்றில் எது ஏற்பட்டாலும் மனித மூளை கொஞ்சம் சலிக்கிறது.
மனம் தொழில்படுகின்ற போது மூளையில் சலனம் ஏற்படுவது உண்மை.
மூளை என்பது தலையில் உள்ள ஒரு பாகம். இதில் சலனம் ஏற்படும் போது எண்ணம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. மனம் வேலை செய்யும் போது மூளை சலனப் படுகிறது என்பதும் உண்மையே.
மனம் காணப்படாத ஒரு சூக்ஷ்ம வஸ்து என்பதால் அதன் தொழிலும் சூக்ஷ்மமாகவே இருக்கிறது.
ஒரு சைக்கிளில் செல்கிறோம். காலால் மிதித்து அதை உந்துகிறோம். சைக்கிளும் காலும் ஒன்று என்று சொல்ல முடியுமா?
கடிகாரம் செயல்படும் போது மணிகாட்டி முள்ளும் விநாடி முள்ளும் நிமிஷம் காட்டும் முள்ளும் சலிக்கின்றன. அதனால் கடிகாரத்தில் உள்ள சக்கரங்களும் மணி, நிமிஷம், வினாடி காட்டும் முள்ளும் ஒன்று என்று சொல்ல முடியுமா?
சக்கர இயக்கம் வேறு; முள்களின் இயக்கம் வேறு.
முள்களின் இயக்கம் நம்மால் காணப்படுகிறது. சக்கர இயக்கங்கள் காணப்படவில்லை.
இவை இரண்டும் வேறு என்பது போலவே மூளை இயக்கமும் மனதின் இயக்கமும் வேறு வேறு தான்!
ஒரு நீதிபதியும் அவர் உட்கார்ந்து விசாரிக்கும் ஆசனமும் போலத் தான் மனமும் மூளையும் உள்ளது.
கோர்ட்டில் நீதிபதியின் ஆசனம் எப்போதும் உள்ளது. ஆனால் நீதிபதி அதில் அமர்ந்தால் தான் விசாரணை நடக்கும்.
அதே போல மூளை எப்போதும் இருக்கிறது என்றாலும் அந்த மூளையில் மனம் நின்று இயக்கம் ஏற்படவில்லை எனில் எண்ணம் உள்ளிட்டவை உண்டாவதில்லை. மனம் வந்து இயக்கம் ஏற்படும் போது உணர்ச்சி முதலியன ஏற்படுகின்றன.
ஆதலால் மூளையும் மனமும் வேறு வேறு என்பது உறுதிப்படுகிறதில்லையா!