மௌனம், மானம், கர்வம் பற்றிய சம்ஸ்கிருத, தமிழ் பழமொழிகள்

bharati drawing

செப்டம்பர், 2015 காலண்டர்

(மன்மத வருடம் ஆவணி/புரட்டாசி மாதம்)

Compiled by London swaminathan

Date : 31 ஆகஸ்ட்  2015

Post No. 2110

Time uploaded in London : 11-49 am

Swami_48@yahoo.com

Important days:-

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்; ஜன்மாஷ்டமி (கிருஷ்ண ஜயந்தி); செப்டம்பர் 11-பாரதியார் நினைவு தினம்; 17-விநாயக சதுர்த்தி;24-பக்ரீத்; 29-மகாளயபட்சம் ஆரம்பம்.

 

முஹூர்த்த தினங்கள்:– 9,16, 17,

பௌர்ணமி:– 27/28 அமாவாசை:–12; ஏகாதசி :– 8/9, 24

 

silence

இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் ஆங்கிலத்திலும், தமிழிலும் தனித்தனியே பொன்மொழிகளுடன் காலண்டர்கள் உள்ளன. இவைகளில் இந்திய இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான மேற்கோள்கள் உள்ளன. படித்துப் பயன்பெறுக.

செப்டம்பர் 1, செவ்வாய்க் கிழமை

பலம் மூர்கஸ்ய மௌனித்வம்

மௌனமாய் இருப்பதே முட்டளுக்கு பலம்.

செப்டம்பர் 2, புதன் கிழமை

தர்துரா யத்ர வக்தாரஸ் தத்ரம் மௌனம் ஹி சோபனம் – சுபாஷித ரத்னகண்ட மஞ்சுசா

தவளைகள் எங்கு பேச்சாளர்களோ, அங்கு பேசாமலிருப்பதே நலம்தரும்

செப்டம்பர் 3, வியாழக் கிழமை

மௌனம் கூஹதி மௌட்யம் சதஸி

சபையில் மவுனமாய் இருப்பது முட்டாள்களுக்குக் கேடயம் போலாகும்

செப்டம்பர் 4, வெள்ளிக் கிழமை

மௌனம் விதேயம் சததம் சுதீபி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

புத்திமான்களால் எப்போதும் மௌனம் காக்கப்படும் (புத்திசாலிகள் அதிகம் பேசாமலிருப்பர்)

செப்டம்பர் 5, சனிக்கிழமை

மௌனம் சம்மதி லக்ஷணம்

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி

silence image

செப்டம்பர் 6, ஞாயிற்றுக் கிழமை

மௌனம் சர்வார்த்த சாதகம் – பஞ்சதந்திரம் 4-45

பேசாமலிருந்தால் பல காரியங்களும் அனுகூலமாக முடியும்.

செப்டம்பர் 7, திங்கட் கிழமை

மௌனே ச கலஹோ நாஸ்தி – சாணக்ய நீதி 3-9

மௌனம் இருக்குமிடத்தில் கலகம் விளையாது.

செப்டம்பர் 8, செவ்வாய்க் கிழமை

வரம் மௌனம் கார்யம் ந ச வசனம் உக்தம் யதன்ருதம்– சு.ர.பா.

பொய் சொல்வதைவிட பேசாமலிருந்து சாதிப்பதே சிறந்தது.

செப்டம்பர் 9, புதன் கிழமை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல் – குறள் 291

ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம் – மனு 4-138

உண்மையேயானாலும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யுமானால் பேசாமலிரு.

செப்டம்பர் 10, வியாழக் கிழமை

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டுபவர் – குறள் 962

புகழை விரும்புவோர், பெரிய செல்வமே கிடைப்பதானாலும் தகாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

silence draw

செப்டம்பர் 11, வெள்ளிக் கிழமை

சத்யம் யத் பரதுக்காய தத்ர மௌனபரோ பவேத்- விஷ்ணு புராணம் 3-12-43

உண்மை சொல்வதால் கெடுதல் வருமானால் பேசாமலிருப்பதே உத்தமம்.

செப்டம்பர் 12, சனிக்கிழமை

வாக் ஜன்ம  வைபல்யம் அசக்யசல்யம் குணாதிகே வஸ்துனி மௌனிதா சேத்  – நைஷதீய காவ்யம்

நல்லோர் முன்னிலையில் ஒன்றும் பேசாமலிருப்பது பொறுத்துக் கொள்ளமுடியாதது. (பேஸ் புக்கில் நல்ல விஷயங்களுக்கும் ‘லைக்’ போடாமல் கல்லுளி மங்கனாக இருப்பது போல)

செப்டம்பர் 13, ஞாயிற்றுக் கிழமை

விபூஷணம் மௌனம் அபண்டிதானாம் – பர்த்ருஹரி

மௌனமாக இருப்பது பண்டிதரில்லாதோருக்கு அணிகலன்.

செப்டம்பர் 14, திங்கட் கிழமை

அனுத்தரம் ஏவ உத்தரம் – ரத்ன சமுச்சய

பதில் சொல்லாவிடில் அதுவே ஒரு பதில்தான்

செப்டம்பர் 15, செவ்வய்க் கிழமை

துர்ஜனஸ்ய ஔஷதம் நாஸ்திகிஞ்சித் அனுத்தராத் – சுபாஷிதாவளி

தீயோருக்கு எதிரான மருந்து என்னவென்றால், எதிர்வார்த்தை (பதில்) பேசாலிருப்பதுதான்.

day_of_silence_2012_by_eveefugo-d4x36x8

செப்டம்பர் 16, புதன் கிழமை

அகாத ஜலசஞ்சாரி ந கர்வம் யாதி ரோஹித:

அங்குஷ்டமாத்ர தோய அபி சபரி பரபராயதே –பஞ்சதந்திரம்

ஆழ்கடலில் செல்லும் பிராணிகள் கர்வம் அடைவதில்லை; விரல் அளவு தண்ணீரில் செல்லும் மீன்கள் பரபரக்கச் செல்லும் (குறைகுடம் கூத்தாடும்)

செப்டம்பர் 17, வியாழக் கிழமை

அபிபூதி பூயாத் அசூனத: சுகமுஞ்சந்தி ந தாம மானின: – கிராதார்ஜுனீயம்

மானமுள்ளவர்கள், அவமானம் உண்டாகும் என்பதற்காக உயிரையும் விடுவர்; மானத்தை என்றும் கைவிடார்.

செப்டம்பர் 18, வெள்ளிக் கிழமை

புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்,உலகுடன் பெறினும் கொள்ளலர் – புறம் 182

செப்டம்பர் 19, சனிக்கிழமை

அல்பவித்யா மஹாகர்வீ – சு.ர.பா.

கொஞ்சம் படித்தவர்கள் ‘படம்’ காட்டுவர் (குறைகுடம் கூத்தாடும்)

செப்டம்பர் 20, ஞாயிற்றுக் கிழமை

உத்தமா மானம் இச்சந்தி மானம் ஹி மஹதாம் தனம் – சாணக்யநீதி

நல்லோர் விரும்புவது மானம்; அவர்களுக்கு அதுவே பெரிய செல்வம்.

learn silence

செப்டம்பர் 21, திங்கட் கிழமை

நான்யஸ்ய கந்தமபி மானப்ருத: மஹந்தே- சிசுபாலவதம்

பிறருடைய கர்வத்தை மானமுள்ளவர்கள் பொறுக்கமட்டார்கள்.

செப்டம்பர் 22, செவ்வாய்க் கிழமை

ந அஹங்காராத் சத்ரு:

நான் என்னும் செருக்கைவிட பெரிய எதிரி இல்லை.

செப்டம்பர் 23, புதன் கிழமை

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு – குறள்- 963

செல்வமுள்ளபோது பணிவும், வறியநிலையில் உயர்ந்த கொள்கைப் பற்றும் வேண்டும்.

செப்டம்பர் 24, வியாழக் கிழமை

ப்ராணத்யாகே க்ஷணம் துக்கம், மானபங்கே தினே தினே – சாணக்யநீதி

உயிரைவிட்டால் ஒரு நாள்தான் துக்கம்; அவமானத்துடன் வாழ்வதோ நாள்தோறும் துக்கம்.

silence (1)

செப்டம்பர் 25, வெள்ளிக் கிழமை

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின் – குறள்- 969

ஒரு முடியை இழந்தாலும் கவரிமா உயிரிழக்கும். பெரியோர்கள், மானம் அழிந்தால் உயிர்துறப்பர்.

செப்டம்பர் 26, சனிக்கிழமை

வரம் ஹி மானினோ ம்ருத்யுர்ன தைன்யம் ஸ்வஜ்னாக்ரத: – கதாசரித்சாகரம்

தன் மக்களுக்கு முன்பு அவமானம் அடைவதைவிட, மானமுள்ளவர்களுக்கு மரணமே மேல்.

செப்டம்பர் 27, ஞாயிற்றுக் கிழமை

பராபவோ அப்யுத்சவ ஏவ மானினாம் – கிராதார்ஜுனீயம்

மானமுள்ளவர்களுக்கு தோல்விகூட உற்சாகமே தரும்.

செப்டம்பர் 28, திங்கட் கிழமை

சதாபிமான ஏகதனா ஹி மானின: – சிசுபாலவதம்

மானமுள்ளவர்களுக்கு அது ஒன்றே எப்போதுமுள்ள சொத்து (செல்வம்).

செப்டம்பர் 29, செவ்வாய்க் கிழமை

தலையின் இழிந்த மயிர் அனையர் மந்தர்

நிலையின் இழிந்த கடை – குறள்- 96964

மானம் போனால், கீழே விழுந்து கிடக்கும் மயிருக்குச் சமம்.

செப்டம்பர் 30, புதன் கிழமை

அதிதர்பே ஹதா லங்கா – மிகுந்த அஹங்காரத்தால் (ராவணனின்) இலங்கை அழிந்தது.

-subham-

கருணை, பொறுமை, அன்பு பற்றிய 31 பொன்மொழிகள்

குரங்கு, ரமணர்

ஆகஸ்ட்  2015 (மன்மத வருடம் ஆடி/ஆவணி மாதம்) காலண்டர்

Compiled by London swaminathan

Date : 30th July 2015

Post No. 2028

Time uploaded in London : 7-55 AM

Swami_48@yahoo.com

ஏகாதசி :– ஆகஸ்ட் 10 and 26;  முஹூர்த்த தினங்கள்:– 20, 21, 27

பௌர்ணமி:–29;  அமாவாசை:– 14 ஆடி அமாவாசை

Important days:- 3 ஆடிப்பெருக்கு; 14 ஆடி அமாவாசை

15 இந்திய சுதந்திர தினம்; 16 ஆடிப் பூரம்; 28 ஓணம், வரலெட்சுமி விரதம், ரிக் உபாகர்மா; 29  யஜூர் உபாகர்மா, ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன்,; 30 காயத்ரி ஜபம்

cow and calf face book

ஆகஸ்ட் 1 சனிக்கிழமை

ஆத்ம உபமந்யேன பூதேஷு தயாம் குர்வந்தி சாதவ: (ஹிதோபதேசம்)

நல்லோர்,எல்லா உயிர்களையும் தன் இன்னுயிர் போலக் கருதி இரக்கம் காட்டுவர்.

ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை

கோ தர்ம க்ருபயா விநா (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

தயை (கருணை) இல்லாத தர்மம் உண்டா?

ஆகஸ்ட் 3 திங்கட் கிழமை

தயா மாம்சாசின: குத:? (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

புலால் உண்ணுவோரிடத்தில் கருணை உண்டா?

ஆகஸ்ட் 4 செவ்வாய்க்கிழமை

தயார்த்ரா: சர்வ சத்வேஷு பவந்தி விமலாசயா: (ப்ருஹத் கதா மஞ்சரி)

தூய உள்ளம் கொண்டவர்கள் எல்லா பிராணிகளிடத்திலும் ஈர நெஞ்சம் உடையவர்களாவர்.

ஆகஸ்ட் 5 புதன்கிழமை

ந ச தர்மோ தயா பர: (சமயோசித பத்ய மாலிகா)

கருணைக்கு மிஞ்சிய தர்மம் இல்லை.

கஜேந்திர,சேனாபூர்,ஒரிஸ்ஸா

ஆகஸ்ட் 6 வியாழக்கிழமை

சர்வேஷு பூதேஷு தயா ஹி தர்ம: (புத்தசரிதம்)

எல்லா உயிர்களிடத்திலும் அன்புகாட்டுவதே தர்மம்

ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமை

தாக்ஷிண்யாம் விரூபாமபி ஸ்த்ரியம் பூஷயதி (தூர்த்தநர்த்த)

அழகற்ற பெண்களுக்கும் அழகு சேர்ப்பது இரக்க குணம்.

ஆகஸ்ட் 8 சனிக்கிழமை

ப்ராய: சர்வோ பவதி கருணா வ்ருத்திரார்த்ராந்தராத்மா (மேகதூதம் 2-31)

கனவான்கள் இயற்கையிலேயே இரக்க குணம் உடையோர்.

ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக்கிழமை

அருட் செல்வம் செல்வத்துள் செல்வம் – குறள் 241

செல்வத்தில் சிறந்த செல்வம் அருளுடைமை (இரக்கம், கருணை)

ஆகஸ்ட் 10 திங்கட் கிழமை

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை— குறள் 247

உயிர்களிடத்தில் கருணை காட்டாதோர்க்கு சொர்க்கத்தில் இடமில்லை.

amma ponnu

ஆகஸ்ட் 11 செவ்வாய்க்கிழமை

வலியார் முன் தன்னை நினைக்க – குறள் 250

நம்மைவிட வலிமை வாய்ந்தவ்ரிடம் நாம் எப்படி நடுங்குவோம் என்பதை நினைத்துப் பார்க்க.

ஆகஸ்ட் 12 புதன்கிழமை

அல்லல் அருள் ஆள்வாருக்கு இல்லை — குறள் 245

கருணை உடையோருக்கு துன்பம் என்பதே இல்லை.

ஆகஸ்ட் 13 வியாழக்கிழமை

பகைவனுக்கு அருள்வாய் – நன்னெஞ்சே

பகைவனுக்கருள்வாய் – பாரதி

ஆகஸ்ட் 14 வெள்ளிக்கிழமை

அலங்காரோ ஹி நாரீணாம் க்ஷமா து புருஷஸ்ய வா (ராமாயணம்)

பெண்களுக்கானாலும் ஆண்களுக்கானாலும் பொறுமையே அணிகலன்.

(ஒப்பிடுக: பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள் 154)

ஆகஸ்ட் 15 சனிக்கிழமை

க்ஷமயேதம் த்ருதம் ஜகத் (மஹாபாரதம்)

பொறுமைதான் உலகத்தையே தாங்கி நிற்கிறது.

cow and calf vellai pasu

ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக்கிழமை

க்ஷமா குணோ ஹ்யசக்தானாம் சக்தானாம் பூஷணம் க்ஷமா (மஹாபாரதம்)

வலிவற்றவர்களிடத்தில் பொறுமை இருப்பது இயற்கை; பலமுள்ளவர்களிடத்தில் பொறுமை இருப்பது அணிகலன் ஆகும்.

(ஒப்பிடுக: வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து-குறள் 155)

ஆகஸ்ட் 17 திங்கட் கிழமை

க்ஷமா ரூபம் தபஸ்வினாம் (சாணக்ய நீதி)

தவம் செய்தவர்களின் இலக்கணம் பொறுமை ஆகும்

(ஒப்பிடுக: வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-குறள் 153

ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை

க்ஷமா வசீக்ருதிர் லோகே க்ஷமயா கின்ன சாத்யதே (மஹாபாரதம்)

பொறுமை என்பது எல்லோரையும் கவர்ந்திழுக்கும். உலகில் பொறுமையினால் சாதிக்க முதியாதது எது?

(ஒப்பிடுக: பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் –குறள் 156)

ஆகஸ்ட் 19 புதன்கிழமை

க்ஷமா ஹி பரமா சக்தி:, க்ஷமா ஹி பரமம் தப: (புத்த சரிதம்)

பொறுமையே மிகப்பெரிய சக்தி, பொறுமையே மிகப்பெரிய தவம்.

(ஒப்பிடுக: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை –குறள் 151)

ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை

க்ஷமாம் ரக்ஷந்தி யே யத்னாத், க்ஷமாம் ரக்ஷந்தி யே சிரம் (பழமொழி)

பொறுமையைக் கடைப் பிடிபோர் நீண்ட காலம் வாழ்வர்.

(ஒப்பிடுக: பொறுத்தார் பூமி ஆள்வார்.)

ama ponnu

ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை

ஞானஸ்யாபரணம் க்ஷமா (சாணக்ய நீதி)

அறிவுடைமையின் இலக்கணம் (அணிகலன்) பொறையுடைமை.

ஆகஸ்ட் 22 சனிக்கிழமை

க்ஷமயா கிம் ந சித்யதி (சாணக்ய சதகம் 13-22)

பொறுமையினால் அடைய முடியாதது என்ன?

ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை

க்ஷமா ஹி மூலம் சர்வ தபஸாம் (ஹர்ஷ சரிதம்)

எல்லா தவத்திற்கும் அஸ்திவாரம் பொறுமைதான்

ஆகஸ்ட் 24 திங்கட் கிழமை

க்ஷமா ஹி சக்தஸ்ய பரம் விபூஷணம் (ஜாதக மாலா)

வலியோரின் பெரிய அணிகலன் – பொறுமை

ஆகஸ்ட் 25 செவ்வாய்க்கிழமை

ஒறுக்கும் மதுகை உரனுடையாளன்

பொறுக்கும் பொறையே பொறை (நாலடியார்)

எத்தகையோரையும் அடக்க வல்லவன் பொறுமையே சிறந்த பொறுமை

myna, fb

ஆகஸ்ட் 26 புதன்கிழமை

சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்

பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே (வெற்றி வேர்க்கை)

ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை

நிர்வைர: சர்வ பூதேஷு ய: ஸ மாமேதி (பகவத் கீதை 11-55)

எவ்வுயிரிடத்திலும் பகைமை இல்லாதவன் என்னை அடைகிறான்

ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை

ஸமோஹம் சர்வ பூதேஷு ((பகவத் கீதை 9-29)

எல்லா உயிர்களிடத்திலும் சமமாயுள்ளேன் (எவரிடத்திலும் வெறுப்பு இல்லை)

ஆகஸ்ட் 29 சனிக்கிழமை

லபந்தே பிரம்ம நிர்வாணம் …………சர்வபூதஹிதே ரதா:(ப.கீதை 5-25)

எவர்கள் எவ்வுயிரிடத்திலும் நன்மையே நாடுபவரோ அவரே பிரம்மனிடத்தில் முக்தியை அடைவர்.

ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை

உயிர்களிடத்தில் அன்பு வேணும்.—தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேண்டும் – பாரதியார்

IMG_4561

ஆகஸ்ட் 31 திங்கட் கிழமை

அன்பு சிவம், உலகத் துயர் யாவையும் அன்பினிற் போகும் —  பாரதியார்

ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில்

ஓங்கென்று கொட்டு முரசே  – பாரதியார்

–சுபம்-

Pictures are used from different sources including face book friends, souvenirs, books etc; thanks.This is a non-commercial  blog.

சான்றோரும் சந்திரனும்; சான்றோரும் பாம்புகளும்

moon

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1541; தேதி 4 January, 2015.

சான்றோரும் சந்திரனும் ஒன்றுதான்; ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்! சன்றோரும் சந்திரனும் பிரகாசமானவர்கள்; குளிர்ச்சி மிக்கவர்கள். இவை இரண்டுக்கும் பொது. ஆனால் சந்திரனில் மான் போலவும் முயல் போலவும் தோன்றும் களங்கம் உண்டு. சான்றோரிடத்தில் இப்படி ஒரு களங்கம் வந்தால் அவர்கள் மறு கணமே உயிர் துறப்பர். சந்திரனோவெனில் தேய்ந்தும் வளர்ந்தும் தொடர்ந்து இருக்கும்!

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்

திங்களுஞ் சான்றோரும் ஒப்பர் மன் – திங்கள்

மறுவாற்றுஞ் சான்றோர் அஃதாற்றார் தெருமந்து

தேய்வர் ஒரு மாசுறின் (நாலடியார்)

வள்ளுவனும் கூட இதையே சொல்லுவான்:-

மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின் (969)

குடிப் பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக் கண் மறுப்போல் உயர்ந்து 957

காளிதாசன் – குமார சம்பவம் 1-3

இவர்களுக்கு எல்லாம் முன்னரே உலகப் புகழ் கவிஞன் காளிதாசனும் இதைச் சொல்லிவிட்டான். இமய மலை அழகை வருணிக்கும் அவன், அதில் பனி மூடியிருப்பது ஒரு குறையாகாது என்பான். இதற்கு நிலவையே எடுத்துக் காட்டுகிறான. சந்திரனில் ஒரு களங்கம் இருந்தாலும் அது வீசும் வெள்ளி நிற ஒளியில் அந்தக் களங்கம் பொலிவிழந்து போகவில்லையா? என்று குமாரசம்பவம் என்னும் அற்புத காவியத்தில் சொல்லுகிறான்.

pictures-of-king-cobra-snakes

மேன் மக்களும் பாம்பும்

மேன் மக்கள் — தண்ணீர் பாம்பு போன்றவர்கள்; விஷமில்லாத பாம்பு என்பதால் தண்ணீர் பாம்பு எப்போதும் கரையில் கிடக்கும்.யாரும் அதைக் கண்டு அஞ்சுவதில்லை. அதுவும் அஞ்சி ஓடுவதில்லை! மேன் மக்கள் அதைப் போன்றவர்கள்.

கீழ் மக்கள் விஷப் பாம்பு போன்றவர்கள். நல்ல பாம்பு விஷம் உடையது ஆகையால் அது கரந்துறையும்; மறைந்து வாழும். கீழ் மக்களும் அத்தகையோரே.

நஞ்சுடைமை தான் அறிந்து நாகம் கரந்துறையும்

அஞ்சாப் புறங் கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்

கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவிலா நெஞ்சத்தவர் – அவ்வையாரின் வாக்குண்டாம்

பசுவுக்குத் தண்ணீர் கொடுத்தால் அது பாலாகப் பொழிந்து தள்ளுகிறது.

பாம்புக்குப் பாலையே கொடுத்தாலும் அது விஷமாகக் கக்குகிறது.

மேன் மக்களும் கீழ் மக்களும் பசுவும் பாம்பும் போன்றவர்களே. எந்த நூல்களைப் படித்தாலும் மேலோர்கள் அதில் நல்ல பொருளையே காண்பர். இவர்கள் பசு அனையர். தண்ணீரை உட்கொண்டு பால் தருவது போல நல்ல கருத்துக்களை வெளியிடுவர்.

northern-water-snake

அதே நூல்கள் கீழ் மக்களிடம் கிடைத்தாலோ கெட்ட பொருளைக் காண்பர். அர்த்தத்தை அனர்த்தமாக ஆக்கிவிடுவர். வெளிநாட்டு அறிஞர்கள் என்ற பெயரில் இந்துமத நூல்களை இழித்துரைக்கும் மக்கள் விஷப் பாம்பு போன்றவர்கள். இந்து மத நூல்களில் எவ்வளவு நல்ல கருத்து இருந்தாலும் அதைத் திரித்தும் கரித்தும் மறித்தும் சிரித்தும் பழித்தும் பேசுவர்.

பாம்புண்ட பால் எல்லாம் நஞ்சாம் பசுவுண்ட

தேம்படு தண்ணீர் அமுதமாம் – ஓம்பற்கு

ஒளியாம் உய்ர்ந்தார் கண் ஞானம் அதுபோற்

களியாங் கடையார் மாட்டு (அறநெறிச்சாரம்)

ஒரு குட்டிக் கதை

துரியோதனன், தர்மன் (யுதிஷ்டிரன்) ஆகிய இருவரும் கண்ணனிடம் சென்றனர். உலகிலேயே மிகக் கெட்டவனையும், மிக நல்லவனையும் கண்டுபிடித்து வாருங்கள் என்கிறான் கண்ணன் – இருவரும் சென்றனர். உலகில் ஒரு கெட்டவர் கூட கண்ணுக்குத் தெரியவில்லையே என்று திரும்பி வந்து விட்டான் தர்மன். கொஞ்ச நேரம் கழித்து துரியோதனனும் வந்தான். உலகில் நல்லோரே இல்லை. எல்லோரும் அயோக்கியர்கள் என்றான். வெளிநாட்டில் இருந்து இந்து மதத்தைக் குறை கூறி ஆங்கிலத்தில் புத்தகம் எழுதும் அறிஞர்கள் – துரியோதனனின் தம்பிகள்!!

Snake-5_1421019i

குன்றின் மேல் இட்ட விளக்கு

கன்றி முதிர்ந்த கழியப் பன்னாள் செயினும்

ஒன்றும் சிறியார் கண் என்றானும் தோன்றாதாம்;

ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்

குன்றின் மேல் இட்ட விளக்கு  (பழமொழி)

கீழோர்கள் எத்தனை முறை தவறு செய்தாலும் அவர்களுக்குப் புதிய கெட்ட பெயர் என்று ஒன்று வராது. ஆனால் மேன் மக்கள் ஒரு சிறு தவறு செய்தாலும் உலகமே அதைப் பற்றிப் பேசி இகழும். அது மலையின் மீது வைத்த விளக்கிற்குச் சமம். உலகமே அதைப் பார்க்கமுடியும்! ஆகையால் அவர்கள் மாசு மருவற்ற தூய வாழ்க்கை வாழ வேண்டும். எத்தனையோ சாமியார்கள் பற்றி பலவகையான செய்திகளைப் படிக்கிறோம். அவர்கள் ஆயிரம் நல்லது செய்திருந்தாலும் அந்த ஒரு கெட்ட செய்தி அவர்களை அதள பாதாளத்தில் வீழ்த்தி விடுகிறது.

light house

சங்க காலத்தில் வாழ்ந்த கபிலன் என்ற பார்ப்பனப் புலவனை ஐந்து சங்கப் புலவர்கள் பாராட்டுகின்றனர். ‘’புலன் அழுக்கற்ற அந்தணாளன்’’ என்று. மூவேந்தர்களுக்கு உலகமே பயந்து நின்றது — ஆனால் கபிலன் பயப்படவில்லை! அவர்களை எள்ளி நகை ஆடுகிறார். இதோ பார் பாரியிடம் இருந்த 300 ஊர்களையும் அவன் தானம் செய்துவிட்டான். நேரே வந்து அவனையே கேட்டாலும் கொடுத்து விடுவான் என்கிறார். ஆயினும் மூவேந்தர்களும் அவனை வஞ்சனையால் கொன்று விடுகின்றனர். புலன் அழுக்கற்று இருந்ததால் யாருக்கும் அஞ்சாத துணிவு சாணக்கியனுக்கும் கபிலனுக்கும் இருந்தது!

மண் குடமும் பொன் குடமும்

சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்று

அல்லாதார் கெட்டால் அங்கென்னாகும் – சீரிய

பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும் என்னாகும்

மண்ணின் குடம் உடைந்தக்கால் – அவ்வையின் வாக்குண்டாம்

மண் குடம் உடைந்தால் குப்பைத் தொட்டியில் போடுவர். பொன் குடம் உடைந்தாலோ தங்கத்தை உருக்கி அழகான புதிய பொன் குடம் செய்து விடுவர். பெரியோர்களுக்கு, அவர்களுடைய முன்வினைப் பயனால் வறுமையோ, நோயோ வந்தாலும் அது அவர்களைப் பாதிக்காது. மென்மேலும் புகழ் கூடும். அவர்கள் எப்போதும் மேலோர்களே என்கிறார் அவ்வையார். ரமண மகரிஷிக்கும், ராம கிருஷ்ண பரமஹம்சருக்கும் புற்று நோய் வந்தது. அவர்கள் மனம் கஷ்டப்படவும் இல்லை. அவர்கள் புஅழ் குன்றவும் இல்லை. பாரதியார் வறுமையில் வாடினார். ஆனால் சிறுமை என்னும் செயல்களில் இறங்கவில்லை. இன்று உலகப் புகழ்பெற்ற கவிஞர் என்ற பெயரே எஞ்சி நிற்கிறது.

தமிழ்ப் பாடல்களில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை எண்ணி எண்ணி இறும்பூது எய்துவோம். எளிய நடை! அரிய கருத்து! அழகான உவமை! தமிழ் ஒரு உலக மகா பொக்கிஷம்!!!

வாழ்க மேன்மக்கள்  வளர்க தமிழ்!!

contact swami_48@yahoo.com

வடமொழி, தமிழ் மொழி பற்றி இலக்கண வித்தகர்கள் கூற்று

tamil vowels

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

கட்டுரை எண்- 1519; தேதி 26 டிசம்பர், 2014.

மூதறிஞர் வ.சு.ப.மாணிக்கம் எழுதிய தொல்காப்பியக் கடல் என்ற நூலில் இருந்து தொகுக்கப்பட்டவை:–

சுவாமிநாத தேசிகர்

1.“சுவாமிநாத தேசிகரின் இலக்கணக்கொத்தோ பாயிர நூற்பாக்களிற் சில அடிகளையொதுக்கிடின் நல்ல இலக்கணப் புதுமைகொண்ட நூல் என்பதைப் பலரும் ஒப்புவர்

வடமொழி தமிழ்மொழி யெனுமிருமொழியினும்

இலக்கணம் ஒன்றே யென்றே யெண்ணுக  – இலக்கணக்கொத்து

பெருந்தேவனார்

2.தமிழ் சொல்லிற்கெல்லாம் வடநூலே தாயாகி நிகழ்கின்றமையின் அங்குள்ள வழக்கெல்லாம் தமிழுக்கும் பெறும் – வீரசோழிய உரை ஆசிரியர் பெருந்தேவனார்

சேனாவரையர்

3.ஒரு சொல்லாய வழித் தமிழ் சொல் வடபாடைக்கட் செல்லாமையானும், வட சொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாகலானும் – சேனாவரையர்

சிவஞான முனிவர்

4.தமிழ்நூல் ஒன்றே வல்ல உரையாசிரியர்கள் உரை உரையாகா எனவும் வடநூல் உணர்ந்தாற்கன்றித் தமிழியல்பு விளங்கா எனவும் ஊறும் வீறும்பட உரைத்தார் சிவஞான முனிவர்

சுப்ரமண்ய தீக்ஷிதர்

5.வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் இலக்கணம் ஒன்றே எனவும் தமிழும் திசைச் சொல்லேயாம் எனவும் பொதுமையும் திசைமையும் கண்டார் சுப்பிரமணிய தீக்கிதர்.

சுவாமிநாத தேசிகர்

6.இவர் எல்லோரும் விஞ்சுமுகத்தான்

அன்றியும் ஐந்தெழுத்தால் ஒருபாடை யென்று

அறையவும் நாணுவர் அறிவுடையோரே

ஆகையால் யானும் அதுவே அறிக  – இலக்கணக்கொத்து சுவாமிநாத தேசிகர்

skt_vowel1

சிவப்பிரகாசம்

தொன்மையவாம் எனுமெவையும் நன்றாகா இன்று

தோன்றிய நூல் எனுமெவையும் தீதாகா

–சிவப்பிரகாசம்

சுவாமிநாத தேசிகர்

7.நூலாசிரியரே உரையும் எழுதும் வழக்கம்

நூல்செய்தவனந் தவனந் நூற்குரை யெழுதல்

முறையோ எனிலே அறையக் கேள்நீ

முன்பின் பலரே என்கண் காணத்

திருவாரூரில் திருக்கூட்டத்தில்

தமிழ்க்கிலக்காகிய வயித்திய நாதன்

இலக்கண விளக்கம் வகுத்துரை எழுதினன்

அன்றியும் தென்றிசை ஆழ்வார்திருநகர்

அப்பதி வாழும் சுப்பிரமணிய

வேதியன் தமிழ் ப்ரயோக விவேகம்

உரைத்துரை எழுதினன் ஒன்றே பலவே

—சுவாமிநாத தேசிகரின் உரை நூற்பா

  1. முக்கிய தமிழ் இலக்கண நூல்கள்

தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம்

நன்னூல், இலக்கண விளக்கம், பிரயோக விவேகம்

இலக்கணக் கொத்து, தொன்னூல் விளக்கம்

முத்துவீரியம், சுவாமிநாதம்

contact swami_48@yahoo.com

கல்வி பற்றிய 30 தமிழ் பாடல் மேற்கோள்கள்

classroom1

சிந்தனைச் சிற்பிகள் (ஜய வருடம்) 2014 நவம்பர் மாத காலண்டர்

Post No. 1378; Date: 30 அக்டோபர் 2014
Prepared by London swaminathan (copyright)

முக்கிய நாட்கள்: நவம்பர் 4 முஹர்ரம்; அமாவாசை:22;
சுபமுஹூர்த்த நாள்:– 2, 9, 12, 13, 21; பௌர்ணமி – 6; ஏகாதசி- 3, 18;

நவம்பர் 1 சனிக் கிழமை
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் – கொன்றை வேந்தன்

நவம்பர் 2 ஞாயிற்றுக் கிழமை
கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி – கொன்றை வேந்தன்

நவம்பர் 3 திங்கட் கிழமை
ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் — உலக நீதி

நவம்பர் 4 செவ்வாய்க் கிழமை
இளமையிற் கல்; ஓதுவது ஒழியேல்; வித்தை விரும்பு – ஆத்திச்சூடி

நவம்பர் 5 புதன் கிழமை
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே – வெற்றிவேற்கை

Class_Room2

நவம்பர் 6 வியாழக் கிழமை
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு – திருக்குறள்

நவம்பர் 7 வெள்ளிக் கிழமை
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே – புறநானூறு

நவம்பர் 8 சனிக் கிழமை
தனக்குப் பாழ் கற்றறிவில்லா உடம்பு – நான்மணிக் கடிகை

நவம்பர் 9 ஞாயிற்றுக் கிழமை
கல்லா ஒருவனுக்கு அவன் சொல்லே கூற்றாக முடியும் – நான் மணிக்கடிகை

நவம்பர் 10 திங்கட் கிழமை
எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியிற் கற்றோரை வருக என்பர் – வெற்றி வேற்கை

vedapatasala
Picture of Rajaveda patasama

நவம்பர் 11 செவ்வாய்க் கிழமை

கல்லாத மூத்தானைக் கைவிட்டுக் கற்றவன் இளமை பாராட்டும் உலகு – நான் மணிக்கடிகை

நவம்பர் 12 புதன் கிழமை
நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் கல்வியழகே அழகு – நாலடியார்

நவம்பர் 13 வியாழக் கிழமை
பிச்சைப் புக்காயினும் கற்றல் மிகவினிதே – இனியவை நாற்பது

நவம்பர் 14 வெள்ளிக் கிழமை
கணக்காயர் இல்லாத ஊரால் நன்மை இல்லை – திரிகடுகம்

நவம்பர் 15 சனிக் கிழமை
ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமைக்கும் ஏமாப்புடைத்து — திருக்குறள்

balavedapatasala
Picture of Bala Veda Patasala

நவம்பர் 16 ஞாயிற்றுக் கிழமை
எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல்
மம்மர் அறுக்கும் மருந்து – நாலடியார்

நவம்பர் 17 திங்கட் கிழமை
எண் அவன் காண் எழுத்து அவன் காண்
இன்பக் கேள்வி இசை அவன் காண் – அப்பர் தேவாரம்

நவம்பர் 18 செவ்வாய்க் கிழமை
பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும் – பாரதி பாடல்

நவம்பர் 19 புதன் கிழமை
ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாதவருள்
அறிவுடையோனால் அரசுஞ் செல்லும் –புறநானூறு

நவம்பர் 20 வியாழக் கிழமை
தேடு கல்வியிலாதொரு ஊரைத் தீயினுக்கிரையாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதம் எம் அன்னை கேண்மைகொள்ள வழி இவை கண்டீர்–பாரதியார்

shantiniketan

நவம்பர் 21 வெள்ளிக் கிழமை
வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது (கல்வி) –

நவம்பர் 22 சனிக் கிழமை
கல்வி கரையில, கற்பவர் நாள் சில – நாலடியார்

நவம்பர் 23 ஞாயிற்றுக் கிழமை
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளூம்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பாலொருவனும் அவன்கட் படுமே – புறநானூறு

நவம்பர் 24 திங்கட் கிழமை
நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன்
குலவிச்சை கல்லாமற் பாகம் படும் — பழமொழி

நவம்பர் 25 செவ்வாய்க் கிழமை
கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக – திருக்குறள்

shantiniketan2
Picture of Shantiniketan, West Bengal

நவம்பர் 26 புதன் கிழமை
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு – வாக்குண்டாம்

நவம்பர் 27 வியாழக் கிழமை
கேள்வி முயல்; நூற் பல கல்; எண் எழுத்து இகழேல் – ஆத்திச்சூடி

நவம்பர் 28 வெள்ளிக் கிழமை
கடைநிலத்திற் பிறந்தவர் எனினும் கற்றறிந்தவரைத் தலைநிலத்து வைப்பர் – நாலடியார்

நவம்பர் 29 சனிக் கிழமை
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலின்காழ் இனியதில் — இனியவை நாற்பது

நவம்பர் 30 ஞாயிற்றுக் கிழமை
கற்றோர்க்கு கல்வி நலனே கலன் அல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் –– நீதிநெறிவிளக்கம்

-Study-Under-Bridge
Picture of school under Delhi bridge

In each month’s calendar you can read beautiful Tamil quotations!
Contact swami_48@yahoo.com

school_under_bridge_02

சிலப்பதிகாரப் பொன் மொழிகள் – Part 2

16DFR_KANNAKI3_1894936g

தொகுத்தவர் – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்—1197; தேதி ஜூலை 27, 2014

ஆகஸ்ட் மாத (சிந்தனைச் சிற்பிகள்) காலண்டரில் —முக்கிய “சிலப்பதிகாரப் பபாடல்கள் 31” — என்று முதல் பகுதி ஜூலை 26ம் தேதி வெளி வந்துள்ளது. இது இரண்டாவது பகுதி. சில பாடல்கள் இதில் மீண்டும் முழு வடிவத்தில் இருக்கும்.

32.சிலப்பதிகாரத்தின் 3 முக்கிய கருத்துக்கள்:–
அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதூஉம் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்’ என
–சிலப்பதிகாரப் பதிகம்

33.இளங்கோ அடிகளின் அறிவுரை:–
“பரிவும் இடுக்கணும், பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்
செய்நன்றி கொல்லன்மின், தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின், பொருள்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்தும் பெயர்மின்
பிறமனை அஞ்சுமின், பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின், அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்
மல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென்”
(வரந்தரு காதை)

34.கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்த மன்னர்கள்:–
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட்டு ஆங்கண் இமைய வரம்பனின்
நன்னாள் செய்த நாளனி வேள்வியில் –(வரந்தரு காதை)

35.நல்லது செய்தால் சுவர்க்கம்:–
நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்
அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்
புதுவதன்றே ————(வரந்தரு காதை)

36.தமிழர் போற்றும் இமயமும் கங்கையும்
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ
வடபேர் இமய மலையிற் பிறந்து
கடுவரல் கங்கைப் புனலாடிப் போந்த —- (வாழ்த்துக் காதை)

37.நல்லாட்சி இருந்தால் கற்பு நிலைக்கும்:–
அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது,
பெரும்பெயர்ப் பெண்டிற்குக் கற்புச் சிறவாது என
பண்டையோர் உரைத்த தண்தமிழ் நல்லுரை —- (நடுநற் காதை)

tm_hindu-indian-jain-sculpture

38.ஒன்றே செய்க, நன்றே செய்க, இன்றே செய்க:–
“நாளைச் செய்குவம் அறம் எனின், இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்” — (நடுநற் காதை)

39.யவனர் நாடு வரை சேரன் ஆட்சி
வன்சொல் யவனர் வளநாடு ஆண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோ ஆயினும் — (நடுநற் காதை)

40.மறுபிறப்பில் விலங்காகவும் வாய்ப்பு!!!
விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்;
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய்; விலங்கின் எய்தினும் எய்தும்— (நடுநற் காதை)

41.ஆயிரம் பொற்கொல்லர் பலி !! கண்ணகிக்கு காணிக்கை!!!
கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர் ஐஞ் ஞூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி
உரை செல வெறுத்த மதுரை மூதூர் – நீர்ப்படைக் காதை

42.சூரியனின் ஒரு சக்கரத்தேர்
ஒருதனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் – நீர்ப்படைக் காதை

silambu_for_dance

43.தமிழைத் திட்டிய கனக விசயன் கைது!!
வாய்வாள் ஆண்மையின், வண்தமிழ் இகழ்ந்த
காய்வேல் தடக்கைக் கனகனும் விசயனும்
ஐம்பத்திருவர் கடுந்தேராளரொடு
செங்குட்டுவன் தன் சினவலைப் படுதலும் – கால்கோட்காதை

44.தமிழர்களை எதிர்த்த சில்லறைப் பயல்கள்
உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன்
சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம்
தென் தமிழ் ஆற்றல் காண்குதும் யாமென– கால்கோட்காதை

45.தமிழ் வீரம் அறியாமல் உளறிய கனக விசயர்கள்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என – கால்கோட்காதை

46.ஜம்பூத்வீபத்தில் எங்கும் ஒற்றர் படை !!
நாவலம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா; — காட்சிக் காதை

47.சேரன் ஆட்சியில் நாடே அடக்கம்
கொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர்,
பங்களர், கங்கர், பல்வேற்கட்டியர்,
வட ஆரியரொடு வண்தமிழ் மயக்கத்து, உன்
கடமலை வேடம் என் கட்புலம் பிரியாது — காட்சிக் காதை

48.நீ நினைத்தால் உன்னை எதிர்ப்பவர் யார்?
இமிழ் கடல் வேலியைத் தமிழ் நாடாக்கிய
இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுதும் இல்லை;
இமயமால்வரைக்கு எம்கோன் செல்வது
கடவுள் எழுதவோர் கற்கே; — காட்சிக் காதை

49.சேரன் மனைவியுடன் இயற்கைச் சுற்றுலா (பிக்னிக்)
துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் மலை காண்குவம் என
பைந்தொடி ஆயமொடு பரந்தொருங்கு ஈண்டி
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன் — காட்சிக் காதை

anklets

50.மதுரைக்கு தீ வைத்த கண்னகியைப் பாடுவோம்:–
பாடுகம் வா, வாழி, தோழி! யாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடி மாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம் – குன்றக் குறவை
51.அறுபடை வீடு கொண்ட திரு முருகா!!
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே —- குன்றக் குறவை

52.கண்ணகிக்கும், கோவலனுக்கும் ஸ்பெஷல் பிளேன்
நின்ற எல்லையுள், வானவரும்
நெடுமாரி மலர் பொழிந்து,
குன்றவரும் கண்டு நிற்பக்
கொழுநனொடு கொண்டு போயினார் ——- குன்றக் குறவை

53.விதி பலமானால் பழைய புண்யமும் உதவாது
உம்மை வினை வந்து உருத்த காலைச்
செம்மையிலோர்க்குச் செய்தவம் உதவாது — கட்டுரைக் காதை

54.மதுரை தீக்கிரையாகும் என்பது முன்னரே கூறப்பட்ட ஆருடம்
ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி உண்ண
உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் — கட்டுரைக் காதை

55.சிபியும், மனு நீதிச் சோழனும் என் முன்னோர்
புறவு நிறை புக்கோன், கறவை முறை செய்தோன்
பூம்புனல் பழனப் புகார் நகர் வேந்தன் — கட்டுரைக் காதை

56.பாண்டிய நாட்டில் வேதம் மட்டுமே ஒலிக்கும்
மறை நா ஓசை அல்லது; யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே— கட்டுரைக் காதை

57.அலைமகள்,மலைமகள்,கலைமகள்= மதுராபதி தெய்வம்
மா மகளும் நா மகளும் மா மயிலுடன் செற்றுகந்த
கோ மகளும் தான் படைத்த கொற்றத்தாள் நாம
முதிரா முலை குறைத்தாள்; முன்னரே வந்தாள்
மதுரா பதி என்னும் மாது —– அழற்படு காதை

58) 64 கலை தெரிந்தோர் வீதியும் எரிந்தது!
எண் நான்கு இரட்டி இருங்கலை பயின்ற
பண் இயல் மடந்தையர் பயங் கெழு வீதி—– அழற்படு காதை

59.ஒரு முலையால் மதுரை எரிந்தது!
இடமுலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும்முறை வாரா, அலமந்து,
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்– வஞ்சின மாலை

29frSilappadikaram__736602g

60.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்குறூ உம் பெற்றிய – காண்– வஞ்சின மாலை

61.பெண்கள் பேதைகள்: கண்ணகி
விழுமிய
பெண்ணறிவு என்பது பேதைமைத்தே என்றுரைத்த
நுண்ணறிவினோர் நோக்கம்; நொக்காதே எண்ணிலேன்– வஞ்சின மாலை

62.நான் தப்பு செய்துவிட்டேன்
பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்— வழக்குரை காதை

63.பாண்டிமாதேவி வருத்தம்!
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று
இணையடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி— வழக்குரை காதை

64.மதுரையில் தெய்வம் இருக்கிறதா? கண்ணகி கேள்வி
தெய்வமும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்?
வைவாளின் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்? — ஊர் சூழ் வரி

65.இது என்ன? புது தெய்வம்?
செம்பொற் சிலம்பு ஒன்று கை ஏந்தி, நம் பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்தது! இதுவென் கொல்? – ஊர் சூழ் வரி

66.யாதவ மகளிர் பாடிய கண்னன் பாட்டு
கொல்லையெம் சாரல் குருந்தொசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
முல்லையன் தீங்குழல் கேளாமோ, தோழீ
தொழுநைத் துறைவனோடு ஆடிய பின்னை –
அணி நிரம் பாடுகேம் யாம் — ஆய்ச்சியர் குரவை

Puhar-ILango
Image of Ilango

67.திருடர்களுக்கு தெரிந்த எட்டு விஷயங்கள்
மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம்,
தந்திரம், இடனே, காலம், கருவி, என்று
எட்டுடன் அன்றே – இழுக்கு உடை மரபின்
கட்டுண் மாக்கள் துணை எனத் திரிவது? (கொலைக்களக் காதை)

68.கற்றறிந்தோர் வினைப்பயன் பற்றி கவலைப்படார்
ஒய்யா வினைப் பயன் உண்ணுங் காலை
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள் – ஊர்காண் காதை
69.மாதவியின் மன்னிப்புக் கடிதம்
அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனங் கொளல் வேண்டும்
குரவர் பணி அன்றியும், குலப் பிறப்பு ஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி — புறஞ்சேரி இறுத்த காதை

70.கோவலன் போன புகார் = ராமன் வெளியேரிய அயோத்தி
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல
பெரும்பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும் — புறஞ்சேரி இறுத்த காதை

71.மறவரின் துர்க்கை வழிபாடு
வம்பலர் பல்கி, வழியும் வளம்பட;
அம்புடை வல்வில் எயின் கடன் உண்குவாய் –
சங்கரி, அந்தரி, நீலி, சடைமுடிச்
எங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்! – வேட்டுவ வரி

72.சூரியனுடன் சுற்றும் குள்ள வாலகீய முனிவர்
சுடர்தரு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்’
அடல்வலி எயினர் நினடிதொடு
மிடறுகு குருதி; கொள்விறல்தரு விலையே — வேட்டுவ வரி

73.வேடர்களின் மஹிஷாசுரமர்த்தனி வழிபாடு
ஆனித்தோல் போர்த்துப் புலியின் உரிஉடுத்துத்
கானத்து எருமைக் கருந்தலை மேல் நின்றாயால் –
வானோர் வணங்க, மறைமேல் மறையாகி,
ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

74.சமணப் பெண்மணியுடன் துர்க்கை கோவிலில் அடைக்கலம்
கழிபோர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும்
விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி
ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – காடுகாண் காதை

75.கணிகையர் என்றால் எல்லோருக்கும் வெறுப்பா?
மேலோர் ஆயினும் நூலோர் ஆயினும்
பால்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும்
பிணி எனக் கொண்டு, பிறக்கிட்டு ஒழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போனும் என– காடுகாண் காதை

pumpukar

76.எட்டெழுத்து, ஐந்தெழுத்து மந்திரம்
அருமறை மருங்கின், ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
ஒருமுறையாக உளம் கொண்டு ஓதி — காடுகாண் காதை

77.தெய்வக் காவிரி
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்,
பொய்யா வானம்புதுப்புனல் பொழிதலும் — நாடுகாண் காதை

78.சமண நாமாவளி
தரும முதல்வன், தலைவன், தருமன்
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன்— நாடுகாண் காதை

79.சமணர் பிரார்த்தனை
மொழிப் பொருள் தெய்வம் வழித்துணை ஆக எனப்
பழிப்புஅரும் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் — நாடுகாண் காதை

80.மதுரைக்கு போக ஆசை: கோவலன்
தென் தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவால் யானும்;போதுமின்— நாடுகாண் காதை

81.திருவரங்கநாதன் வலம் வந்து
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம் செயக் கழிந்து –— நாடுகாண் காதை

82.தீய கனவு: கண்ணகிக்கு அருகம் புல் பரிகாரம்
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி;
அறுகு, சிறு பூளை, நெல்லொடு தூஉய்ச் சென்று;
பெறுக கணவனோடு என்றாள் – கனாத்திறம் உரைத்த காதை

Riverkaveri

83.கங்கைக்கும் மேலான காவிரி
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் — அது ஒச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி – கானல் வரி

84.நாரதன் வீணை, இந்திரன், ஊர்வசி சாபம்
நாரதன் வீணை நயம் தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை– கடல் ஆடு காதை

85.பாவம் செய்வோர் பட்டியல்; பூதம் நையப் புடைக்கும்
தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம் மறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர்
அறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர்
பொய்க்கரியாளர், புறங்கூற்றாளர், என்
கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக்– இந்திர விழவு ஊரெடுத்த காதை

86) 1008 பவுன் தங்க மாலை வாங்கினால் மாதவி பரிசு!!
நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த
வீறு உயர் பசும்பொன் பெறுவது இம்மாலை
மாலி வங்குநர் சாலும் நம் கொடிக்கு என – அரங்கேற்றுக் காதை

silambu tamil book

87.தமிழகம்
இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத்
தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்து இயல், பொது இயல் , என்று இரு திறத்தின்
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து–அரங்கேற்றுக் காதை

88.அகத்தியன் சாபம்
தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தனத்து, சாபம் நீங்கிய
மலைப்பு – அருஞ் சிறப்பின் வானவர் மகளிர் — அரங்கேற்றுக் காதை

89.கண்ணகிக்கு கோவலன் புகழ்மாலை
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே ! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையல்! நின்னை! – மனையறம்படுத்தகாதை

90.பூம்புகார் மக்கள்= உத்தரகுரு புண்யவாசிகள்
அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய
கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்
மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடிநிலத்து, இருந்துழி –மனையறம்படுத்தகாதை

91.திருமண வயது: கண்ணகி 12, கோவலன் 16 !!!
ஈறு ஆறு ஆண்டு அகைவையாள் (கண்ணகி)
ஈர் எட்டு ஆண்டு அகவையான் (கோவலன்) –மங்கல வாழ்த்துப் பாடல்

silambu book1

92.சந்திரன், சூரியன், வருணன் வாழ்க!!!
திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி வெண்குடை போன்று இவ்
அம் கண் உலகு அளித்தலான்

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலந்திரிதலான்

மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும் !
நாம நீர் வேலி உலகிற்கு, அவன் அளி போல்
மேல் நின்று தான் சுரத்தலான் –மங்கல வாழ்த்துப் பாடல்

93.கண்ணாடியில் மலையையே காட்டலாம், சிலம்பில் எல்லாம் தெரியும்
ஆடிநல் நிழலின் நீடு இருங்குன்றம்
காட்டுவாற் போல் கருத்து வெளிப்படுத்து (நூற் கட்டுரை)

வாழ்க இளங்கோ !! வளர்க சிலம்பின் புகழ் !!!

–சுபம்–

முக்கிய சிலப்பதிகாரப் பாடல்கள்-31

old-tamilnadu

சிந்தனைச் சிற்பிகள் (ஜய வருடம்) 2014 ஆகஸ்ட் மாத காலண்டர்
(( முக்கிய 31 சிலப்பதிகார மேற்கோள்கள் ))

Post No. 1195 Date: 26 July 2014
Prepared by London swaminathan (copyright)
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாரதி போற்றிய சிலப்பதிகாரக் காவியத்தில் இருந்து முக்கிய 31 பாடல்கள் இந்த ஆகஸ்ட் மாத காலண்டரை அலங்கரிக்கின்றன.

முக்கிய நாட்கள்: ஆகஸ்ட் 8 வெள்ளி-வரலெட்சுமி நோன்பு; 10 ஞாயிறு – ஆவணி அவிட்டம்/ ரக்ஷா பந்தன், பௌர்ணமி
ஆகஸ்ட் 11-காயத்ரி ஜபம்; 15 வெள்ளி- இந்திய சுதந்திர தினம்; 17 ஞாயிறு ஜன்மாஷ்டமி 19- கிருஷ்ண ஜயந்தி; 29 வெள்ளி- கணேஷ் சதுர்த்தி;
சுபமுஹூர்த்த நாட்கள்:– 20, 22, 29, 31; பௌர்ணமி – 10; அமாவாசை– ஆகஸ்ட் 24,; ஏகாதசி 7 & 21.

ஆகஸ்ட் 1 வெள்ளி
திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி வெண்குடை போன்று இவ்
அம் கண் உலகு அளித்தலான்
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலந்திரிதலான்–மங்கல வாழ்த்துப் பாடல்

ஆகஸ்ட் 2 சனி
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெருங் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ
–மங்கல வாழ்த்துப் பாடல்

ஆகஸ்ட் 3 ஞாயிறு
பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்
பதி எழு அறியாப் பழங்குடி கெழீ இய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை- –மங்கல வாழ்த்துப் பாடல்

ஆகஸ்ட் 4 திங்கள்
வான் ஊர் மதியம் சகடு அனைய, வானத்துச்
சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட
தீவலம் செய்வத் காண்பார் கண் நோன்பு என்னை!
-மங்கல வாழ்த்துப் பாடல்
kannaki andkovalan

ஆகஸ்ட் 5 செவ்வாய்
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே ! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வணிகன் பெரு மட மகளே!– மனையறம்படுத்தகாதை

ஆகஸ்ட் 6 புதன்
குழல் வழி நின்றது யாழே; யாழ் வழித்
தண்ணுமை நின்றது தகவே: தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே; முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை –அரங்கேற்றுக் காதை

ஆகஸ்ட் 7 வியாழன்
ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர் பரிப் புரவியர், களிற்றின் தொகுதியர்
இவர்பரித்தேரினர், இயைந்து ஒருங்கு ஈண்டி — இந்திர விழவு ஊரெடுத்த காதை

ஆகஸ்ட் 8 வெள்ளி
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் – இந்திர விழவு ஊரெடுத்த காதை

ஆகஸ்ட் 9 சனி
சிமையத்து இமையமும், செழுநீர்க் கங்கையும்
உஞ்சை அம் பதியும், விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும், தாங்க விளையுள்
காவிரி நாடும், காட்டிப் பின்னர் — கடல் ஆடு காதை

tolkappian katturai

ஆகஸ்ட் 10 ஞாயிறு
நெடியோன் குன்றமும் தொடிதோள் பௌவமும்
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு
மாட மதுரையும், பீடு ஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும், ஒலி புனல் புகாரும்
அரைசு வீற்றிருந்த உரைசால் சிறப்பின் – வேனிற் காதை

ஆகஸ்ட் 11 திங்கள்
கரியவன் புகையினும், புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப — நாடுகாண் காதை

ஆகஸ்ட் 12 செவ்வாய்
வடிவேல் எறிந்த வான் பகை பொறாது,
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி! — காடுகாண் காதை

ஆகஸ்ட் 13 புதன்
இவளோ கொங்கச் செல்வி; குடமலையாட்டி;
தென்றமிழ்ப் பாவை; செய்தவக் கொழுந்து;
ஒருமாமணி ஆய், உலகிற்கு ஓங்கிய
திருமாமணி எனத் தெய்வம் உற்று உரைப்ப — வேட்டுவ வரி

ஆகஸ்ட் 14 வியாழன்
கோள்வல் உளியமும் கொடும் புற்று அகழா
வால்வரி வேங்கையும் மான் கணம் மறலா;
அரவும், சூரும், இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா –
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு — புறஞ்சேரி இறுத்த காதை
tamil-penkal

ஆகஸ்ட் 15 வெள்ளி
அருந்தெறல் கடவுள் அகன் பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேர் இசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பின் பல் இயல் சிறந்த
காலை முரசக் கனைகுரல் ஓதையும்
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்— புறஞ்சேரி இறுத்த காதை

ஆகஸ்ட் 16 சனி
உலகு புரந்தூட்டும் உயர் பேர் ஒழுக்கத்து
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக் கொடி —
‘புனல்யாறு அன்று; இது பூம் புனல்யாறு’ – – புறஞ்சேரி இறுத்த காதை

ஆகஸ்ட் 17 ஞாயிறு
நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமும்
மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் — ஊர்காண் காதை

ஆகஸ்ட் 18 திங்கள்
பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில்
கொண்டோர் உறூவும் கொள்ளாத் துன்பம் — ஊர்காண் காதை

ஆகஸ்ட் 19 செவ்வாய்
நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலம் கொண்டு
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து —- அடைக்கலக் காதை

A_SCENE_FROM_SILAPADHIKARAM
ஆகஸ்ட் 20 புதன்
ஞான நன்னெறி நல்வரம்பு ஆகியோன்
தானம் கொள்ளும் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையின் தண்டுகால் ஊன்றி
வளைந்த யாக்கை மறையோன்— அடைக்கலக் காதை

ஆகஸ்ட் 21 வியாழன்
கற்புக் கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்;
வானம் பொய்யாது; வளம் பிழைப்பு அறியாது;
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது;
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு — அடைக்கலக் காதை

ஆகஸ்ட் 22 வெள்ளி
என்னொடு போந்த இளங்கொடி நங்கை – தன்
வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்; — அடைக்கலக் காதை

ஆகஸ்ட் 23 சனி
“அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும்,
தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (கொலைக்களக் காதை)

Riverkaveri
Picture of River Kaveri

ஆகஸ்ட் 24 ஞாயிறு
மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராயணா என்னா நாவென்ன நாவே?”
–சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, இளங்கோ அடிகள்.

ஆகஸ்ட் 25 திங்கள்
பெரியவனை மாயவனைப் பேர் உலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார் – தம் கண்ணென்ன கண்ணே? –ஆய்ச்சியர் குரவை

ஆகஸ்ட் 26 செவ்வாய்
மூ உலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடிசேப்பத் தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர்மடியத் தொல் இலங்கைக் கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே! — ஆய்ச்சியர் குரவை

ஆகஸ்ட் 27 புதன்
“வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன்! பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே;
கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண்கை!
மலர்க்கமல உந்தியாய்! மாயமோ மருட்கைத்தே! — ஆய்ச்சியர் குரவை
vaigai-river_6972
Picture of Vaigai River and Dam

ஆகஸ்ட் 28 வியாழன்
தேரா மன்னா ! செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்
வாயிற் கடைமணி நடு நா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடதான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர் புகார் என்பதியே— வழக்குரை காதை

ஆகஸ்ட் 29 வெள்ளி
அல்லவை செய்தார்க்கு அறங் கூற்றம் ஆம் என்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே — வழக்குரை காதை

ஆகஸ்ட் 30 சனி
பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க — வஞ்சின மாலை

ஆகஸ்ட் 31 ஞாயிறு
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்.
Silappathikaram-AG_12825
Pumpukar now.

Contact swami_48@yahoo.com