Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
ராமாயணத்தில் வரங்கள் (48) ஶ்ரீ ராமருக்கு இந்திரன் ரதம், ஆயுதம் தந்து உதவியது! வரம் அளித்தது!! – 2
ச. நாகராஜன்
யுத்தகாண்டத்தில் ‘இந்திரனது தேரிலேறிக்கொண்டு போர் புரிவது’ என்ற நூற்றுமூன்றாவது அத்தியாயத்தில் ஶ்ரீ ராமருக்கு இந்திரன் ரதம், ஆயுதம் உள்ளிட்டவற்றைத் தந்து உதவியது பற்றியது பற்றிப் பார்த்தோம்.
இந்த விஷயம் மேலும் பல அத்தியாயங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.
யதா – எப்படி விநிஹத: – கொல்லப்பட்டானோ, அதுவும் த்ரிதஷை: – தேவர்களோடு சமாகம: ச – கூடியதும் தே – உனக்கு யயா – எப்படியாய் வர: – வரமானது தத்த ச – கொடுக்கப்பட்டதோ அதுவும் ஆகிய ஏதத் – இது சர்வம் – யாவும் தவஸா – தவத்தால் மம – எனக்கு விதிதம் – அறியப் பெற்றது
அடுத்து 128 அத்தியாயமான பரதரிடம் ஹனுமாரை அனுப்புவது என்ற அத்தியாயத்திலும் இந்த வரம் பற்றிச் சொல்லப்படுகிறது.
ராமர் தான் சீதையுடன் அயோத்தி வருவதை பரதனுக்குச் சென்று சொல்லுமாறு அனுமனிடம் கூறுகிறார். அதில் சுக்ரீவனுடனான நட்பு, வாலியின் வதம், சமுத்திரத்தைத் தாண்டுதல், அணை கட்டல் உள்ளிட்ட செய்திகளோடு தேவேந்திரன் வரம் தந்த விஷயத்தையும் குறிப்பிட்டு இவை அனைத்தையும் பரதனிடம் கூறுமாறு அனுமனிடம் கூறுகிறார்.
தேவேந்திரனாலும் பிரம்மதேவராலும் வருணதேவராலும் வரதானத்தையும் சிவபெருமானது அனுக்ரஹத்தால் தந்தையோடு சமாகமத்தையும் சொல் என்று இப்படிக் கூறுகிறார்.
அதன்படியே ஹனுமார் பரதனிடம் அனைத்து விவரங்களையும் கூறுகிறார்.
129வது அத்தியாயம் 43 மற்றும் 44வது ஸ்லோகங்களில் இந்த விவரம் மீண்டும் குறிப்பிடப்படுகிறது.
அந்த சத்ரு சம்ஹாரகாராகிய ஶ்ரீமானாரும் ஶ்ரீ ராமர் இந்திரரோடும் யமதர்மதேவரோடும் வருணதேவரோசும் அவ்வண்ணமே சிவபெருமானோடும் பிரம்மதேவரோடும் அவ்வாறே தசரதரோடும் ஒன்று சேர்ந்து அவர்களால் எழுந்தருளிய மஹரிஷிகளாலும் தேவரிஷிகளாலும் வரங்களைக் கொடுக்கப்பெற்று மனோரதங்களைப் பெற்றிருக்கின்றார்.
அடுத்ததாக இதே விவரம் பால காண்டத்தில் முதல் அத்தியாயத்திலும் இப்படி குறிப்பிடப்படுவதைக் காணலாம்.
தேவர்களிடமிருந்து வரங்களைப் பெற்று யுத்தத்தில் உயிரிழந்த வானரவீரர்களை உயிர்ப்பித்து தனது அனைத்து சகாக்களுடனும் அவர் புஷ்பகவிமானத்தில் ஏறி அயோத்தியா வந்தடைந்தார்.
ஆக பல தேவர்களிடம் ஶ்ரீ ராமர் வரம் பெற்ற செய்தியை வால்மீகி முனிவர் ஆங்காங்கே குறிப்பிடுகிறார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
English version was posted yesterday; here is the Tamil version:
கனகாபிஷேகம்
கனகாபிஷேகம் என்பது 90 அல்லது 100 வயது நிறைவடைந்த தம்பதிகளுக்கு, தங்கக்காசுகளால் அபிஷேகம் செய்து, நடத்தப்படும் ஒரு விழா.
பொருள்: ‘கனகம்’ என்றால் தங்கம். தங்கக் காசுகளால் தம்பதியர் மீது அபிஷேகம் செய்வது.
காலம்: பொதுவாக 90-வது , சில சமயங்களில் 100-வது வயதிலும் இந்த விழா நடத்தப்படுகிறது.
ஞானிகள் அல்லது கலைஞர்களுக்குத் தங்கக் காசுகளால் செய்யப்படும் ஒரு சிறப்பு கௌரவ நிகழ்வாகும்.
சிவார்க்க மணி தீபிகை என்ற நூலை அப்பைய தீட்சிதர் இயற்றினார்; அதனால் மகிழ்ந்த சின்னபொம்ம நாயக்கர், தீக்ஷிதருக்கு கனகாபிஷேகம் செய்தார். அந்தப் பணத்தைக் கொண்டு அவர் பார்வதி சமேத ஸ்ரீ காலகண்டேஸ்வரர் ஆலயத்தை அடையபலத்தில் நிறுவினார்.
60 வயதில் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம் கொண்டாடப்படுகின்றன.
அப்போது அந்தப் பெரியவர்களிடம் அனைவரும் ஆசீர்வாதம் பெறுவார்கள் ; காஞ்சி பரமாசார்ய சுவாமிகளுக்கு நடந்த கனகாபிஷேகத்தை நமது காலத்தில் பலரும் நேரில் கண்டார்கள்; இப்போதும் வீடியோ மற்றும் யூ ட்யூபில் காணலாம்.
***
கேனோபநிஷத்
கேனோபநிஷத், சாமவேதத்தைச் சேர்ந்த உபநிஷத் ஆகும்., தலவாகர உபநிஷத் என்றும் இதற்குப் பெயர். ‘கேன’ (எவரால்) என்ற கேள்வியுடன் தொடங்கும் ஒரு முக்கியமான உபநிஷத் . ‘கேன’ என்றால் ‘எவனால்’ அல்லது ‘யாரால்’ என்று பொருள். மனம், வாக்கு மற்றும் புலன்கள் யாருடைய சக்தியால் இயங்குகின்றன என்ற கேள்வியுடன் இது துவங்குகிறது.
இது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பகுதிகள் பிரம்மத்தின் இயல்பை விளக்குகின்றன, அடுத்த இரண்டு பகுதிகள் தேவர்களின் வெற்றி மற்றும் ‘யக்ஷ தரிசனம்’ (தெய்வீக தரிசனம்) கதையின் மூலம் ஞானத்தை உணர்த்துகின்றன.
கண்களால் பார்க்க முடியாத, ஆனால் கண்களுக்குக் கண், காதுக்குக் காது, மனதிற்கு மனம் என எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கும் அந்த பரப்பிரம்மமே உண்மையான இறைவன் என இது போதிக்கிறது. ஆதிசங்கரர் மற்றும் மத்வர் ஆகியோர் இந்த உபநிஷத்திற்கு உரைகள் எழுதியுள்ளனர்.
***
கேது கிரஹம்
உண்மையில் கிரகம் அல்ல ; வானத்தில் காண முடியாது; சாயா / நிழல் கிரகம் ஆகும் .
Astronomically, Ketu and Rahu denote the points of intersection of the paths of the Sun and the Moon as they move on the celestial sphere.
சூரியனும் சந்திரனும் சுற்றும் பாதைகளில் (கோடுகள்) ஒன்றை ஒன்று வெட்டும் இடம் இது .
கேது, பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய சுவர்பானு என்ற அசுரனின் உடற் பகுதியாகும். மோகினி வடிவில் வந்த விஷ்ணு, அமுதம் அருந்திய அசுரனின் தலையை வெட்டியபோது, உடற்பகுதி கேதுவாகவும், தலைப்பகுதி ராகுவாகவும் மாறியது.
கேது சர்ப்பத்தின் தலையையும், மனித உடலையும் கொண்டதாக சித்தரிக்கப்படுகிறது. கேதுவின் அதிதேவதை கணேசர்
ஜோதிடத்தில் துறவு, மோட்சம், ஆன்மீகம் மற்றும் உலகியல் பற்றற்ற தன்மையுடன் கேது தொடர்புடையது. ஒருவரின் ஜாதகத்தில் கேது வலுவாக இருந்தால், அவர் சிறந்த அறிவாளியாகவும், தத்துவ ஞானியாகவும் அல்லது மருத்துவத் துறையில் வல்லுநராகவும் திகழ்வார் .
பொதுவான அர்த்தம்– கொடி, வால் நட்சத்திரம்.
***
கீசகன்
பீமனால் கொல்லப்பட்ட விராட தேச படைத்தலைவன்.
விராட தேச ராணி சுதேஷ்ணையின் சகோதரன். மல்யுத்தத்தில் வல்லவன், பாண்டவர்களின் ஓராண்டு மறைவு வாழ்க்கையின் போது (அஞ்ஞாதவாசம்), திரௌபதி மாறுவேடத்தில் சைரந்திரி என்ற பெயருடன் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தாள். அவளைத் தவறான முறையில் கீசகன் அணுகியவுடன் பீமனுடன் சேர்ந்து திட்டம் போட்டாள்; இரவு நேரத்தில் தனியிடத்துக்கு வருமாறு சொல்லவே அவன் ஆசையுடன் வந்தான் .அங்கே படுத்திருந்த பீமனை திரௌபதி என்று எண்ணி அணுகியபோது பீமன் அவன் மீது பாய்ந்து சண்டையிட்டுக் கொன்றான்
***
கோலாட்டம் / கும்மி
தென் இந்தியாவில் பெண்கள் ஆடும் நாட்டுப்புறக் கலை. பெண்கள் வட்டமாக நின்று ஒருவருடன் ஒருவர் கோல் எனும் குச்சிகளை அடித்து பாடிக்கொண்டே சுற்றுவார்கள் கும்மி என்பதில் குச்சிகளுக்குப் பதிலாக கைகளை ஒருவருடன் ஒருவர் தட்டுவார்கள் அப்போது பாட்டும் தாளமும் இருக்கும் ; பொதுவாக தெய்வீக இந்துசமய கிராமீயக் கலை இது ; கோவில் திரு விழாக்கள்லங்களிலும் சம்பிரதாய பஜனைகளிலும் இன்றும் இடம்பெறுகிறது ; பெரும்பாலும் மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது.
குஜராத்திலும் டாண்டியாயென்ற பெயரில் நவராத்ரி காலத்தில் கோலாட்டம் ஆடுகிறார்கள் ; ராஜஸ்தானிலும் கோலாட்டம் உண்டு; தண்ட , கோல் என்ற இரண்டு சொற்களுக்கும் கம்பு, குச்சி என்றே பொருள்.
***
கோவலன் / கண்ணகி
சிலப்பதிகாரம் என்னும் தமிழ் காப்பியம் கோவலன் / கண்ணகி கதையை எடுத்துரைக்கிறது; கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த இரு பெரும் வணிகர்களின் புதல்வனும் புதல்வியும் ஆவார்கள் ; இருவரும் தீ வலம் வந்து இந்து சம்பிரதாயப்படி கல்யாணம் செய்துகொண்ட பின்னர் கோவலன், மாதவி என்னும் ஆடலரசியின் வலையில் வீழ்கிறான் ; பின்னர் கண்ணகியிடம் வந்தபோது , அவளும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று ஏற்று புதிய வாழக்கை நடத்துவதற்காக மதுரைக்குச் செல்கிறார்கள் ; சாப்பாட்டுக்கு வழி தேடுவதற்காக கண்ணகி தன்னுடைய கால் சிலம்பினைக் கொடுக்கவே அவன் மதுரைக் கடைத்தெருவுக்குச் செல்கிறான்; அங்கே ராணியின் கால் சிலம்பினைத் திருடிய பொற்கொல்லன், கோவலனைத் திருடன் என்று பொய் சொல்லி பாண்டிய மன்னன் முன் நிறுத்தவே அவன் விசாரணை செய்யாமல் கோவலனுக்கு மரண தண்டனை கொடுத்துவிடுகிறான்; இதை அறிந்த கண்ணகி சீறி எழுந்து மன்னர் அரசவைக்குள் புகுந்து தன்னுடைய சிலம்பில் மாணிக்கம் இருக்கும் , ராணி சிலம்பில் முத்துக்கள் இருக்கும் என்று சொல்லி சிலம்பினை உடைக்கிறாள்; மன்னனும் ராணியும் தவறை உணர்ந்து மாரடைப்பில் செத்து விழுகிறார்கள்; கண்ணகி தன்னுடைய ஒரு முலையைத் திருகி எறிந்து மதுரையில் உள்ள தீயோரை மட்டும் அழிக்க அக்கினி தேவனுக்கு கட்டளை இடுகிறாள்; பின்னர் சேர நாட்டுக்குச் சென்று கோவலனுடன் விமானத்தில் தேவலோகம் செல்கிறாள் இந்தக் காட்சியைக் கண்ட கானவர்கள், இந்த அற்புத நிகழ்சசியை சேர மன்னனுக்குத் தெரிவிக்கவே இளங்கோ அடிகள் சிலப்பதிகார காவியத்தில் நமக்கு இதை பாடல் வடிவில் தந்தார் பிற்காலத்தில் கண்ணகியை ஒரு முலை இழந்த திருமா பத்தினி என்ற பெயரில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் மக்கள் வணங்கினார்கள் .
***
கிருஷ்ண / கேசவ
கிருஷ்ண என்றால் கருப்பன் ; பிறப்பில் கிருஷ்ணன் கருப்புத் தோலுடனும் அவனுடைய அண்ணன் பலராமன் வெள்ளைத் தோலுடனும் பிறந்தார்கள் .
கேசவ என்றால் கேசி என்னும் அசுரனைக் கொன்றவன் என்றும் அலக்கான கேசத்தை / தலை முடியை உடையவன் என்றும் பொருள் ; விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனின் முழு லீலைகளையும் மகாபாரதத்திலும் பாகவத புராணத்திலும் காணலாம் .சம்ஸ்க்ருதத்தில் கிருஷ்ண என்பது ஆணின் பெயர்; கிருஷ்ணா என்ற நெடிலுடன் வந்தால் பெண்ணின் பெயர். திரவுபதியும் ஒரு கருப்பி; அவளுக்கு கிருஷ்ணா என்று பெயர் .
***
க்ரியா யோகா
கிரியா யோகா என்பது மூச்சு மற்றும் உயிர்சக்தியை (பிராணன்) கட்டுப்படுத்துவதன் மூலம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி, ஆன்மீக வளர்ச்சியை விரைவுபடுத்தும் ஒரு தியானம். இது பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), மந்திரம் மற்றும் முத்திரைகளின் ஒருங்கிணைந்த கலவையாகும்.
பாபாஜியால் புத்துயிர் பெற்று, லாஹிரி மஹாசயரால் பரப்பப்பட்டது, பின்னர் பரமஹம்ஸ யோகானந்தர் இதை மேலை நாடுகளில் பரப்பினார் மன அமைதி , மன அழுத்தக் குறைவு, உடல் ஆரோக்கியம் ,ஆன்மீக ஞானம் போன்ற தெய்வீக குணங்களை வளர்த்தல் இதன் நோக்கம் ஆகும். யோகதா சத்சங்க சொஸைடி (YSS) கிரியா யோகாவைப்ப பரப்புவதில் முதலிடம் வகிக்கிறது.
***
க்ருபாச்சார்ய – க்ருபி
இவர்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள் ; கானகத்தில் விடப்பட்ட இவ்விருவரையும் சந்தனு மஹாராஜா வளர்த்தார் ; கிருபாச்சார்யார் கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சகல ராணுவக் கலைகளையும் கற்பித்தார் . கிருபை , துரோணாச்சார்யாவை மணந்து அஸ்வத்தாமாவைப் பெற்றாள் . மஹாபாரத யுத்தத்தில் 11 படைத்தலைவர்களில் ஒருவர் க்ருபாச்சார்ய . கடைசி வரை வாழ்ந்த இவரை சப்த/ ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர் என்று இந்துக்கள் போற்றுவர் ; ஆயினும், யுத்தம் முடிந்தவுடன் பாண்டவர் கூ டாரத்துக்கு தீ வைத்த மூவரில் இவரும் ஒருவர் ; பின்னர் பாண்டவ வம்சத்தில் வந்த பரீட்சித்துக்கும் ஆசிரியர் ஆனார் .
****
கிரௌஞ்ச த்வீபம்
இந்துக்களின் புராண பூகோள சாஸ்திரப்படி ஏழு கண்டங்களில் ஒன்று ; இது ஒரு மலைக்கும் பெயர் ; அதை முருகன் உடைத்ததால் அவருக்கு கிரௌஞ்ச பேதனார் என்ற பெயரும் உண்டு ; கிரௌஞ்ச என்பது கொக்கு/ நாரை வகைப் பறவைக்கும் ஒரு பெயர்; இதே போல வடிவத்தில் வியூகம் அமைத்த செய்தி மஹாபாரதத்தில் வருகிறது; வியூகம் என்றால் படை அணிவகுப்பு; தற்காலத்தில் கிரௌஞ்ச த்வீபம் என்பதைச் சிலர் அண்டார்ட்டிகா என்றும் கிழக்கு ஆப்ரிக்கா என்றும் ஐரோப்பாவை ஒட்டிய பகுதி என்றும் கற்பனையுடன் வருணிக்கின்றனர். கிரௌஞ்ச பறவை ஒன்றினை வேடன் வீழ்த்தியத்தைக் கண்ட வால்மீகி தனது சோகத்தால், ஸ்லோக மழை பொழிந்து ராமாயணத்தை நமக்கு அளித்தார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Words beginning with letter KA continues…………………………….
English version posted yesterday; Tamil version is posted here today.
***
கனிஷ்கர் ( 127–150 CE)
குஷான மன்னர்களில் சிறப்பு வாய்ந்தவர் ; மாத்திரை ஆசியாவின் சில பகுதிகளையும் மதுரா வரையுள்ள பெரும்பகுதியை ஆண்டவர் . தலைநகர் புருஷபுரம் ; இதன் தற்போதைய பெயர் பெஷாவர் (பாகிஸ்தான் நகரம் ).சீன எல்லைப் புறத்தில் வாழ்ந்து வந்த “யூச்சி” என்னும் நாடோடி இனத்தவர் ஆக்ஸஸ் நதி தீரத்தை அடைந்து பின்னர் பாக்டிரியாவில் குடியமர்ந்தனர். யூச்சி இனத்தில் ‘கியூசுவான்ங் ‘ என்ற இனமே குஷான ர் என்று அழைக்கப்பெறுகின்றனர். இவ்வம்சத்தில் குஜீலா காட்பீஸஸ், வீமா காட்பீஸஸ், கனிஷ்கர் போன்ற சிறந்த அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர்.
வீமா காட்பீஸஸ் காசுகளில் முன்புறம் சிவன், திரிசூலம், கோடரி போன்ற சின்னங்கள் இடம்பெறுகின்றன. பின்புறம் அரசரின் பெயர் கிரேக்க மற்றும் கரோஷ்டி எழுத்துக்களில் பொறிக்கப்பெற்றுள்ளது.
கனிஷ்கரது காசுகளின் முன்புறம் கனிஷ்கர் இந்திய பாணியில் உடை அணிந்து, தன் இடக்கையில் ஈட்டியை ஏந்தி நிற்கிறார் . பிற்காலத்தில் வெளியிட்ட காசுகளில்
சூரியன், சந்திரன், வாயு, நெருப்பு போன்ற தெய்வங்களின் பெயர்களை ஈரானிய மொழியில் பொறித்துள்ளார். ஓஷோ என்ற பெயரில் சிவனின் உருவத்தைப் பொறித்தார். சிவனோடு புத்தரின் உருவத்தையும் புத்த அபொறித்தார். பெரும்பாலும் இவர்கள் தங்கத்தாலான காசுகளை வெளியிட்டுள்ளனர்.
King Kanishka
***
கண்வர் /மகரிஷி
காளிதாசனின் உலகப்புகழ்பெற்ற சாகுந்தல நாடகத்தில் வரும் கண்வ மகரிஷியைத் தவிர யஜுர் வேதத்திலும் கண்வர் பெயர் வருகிறது .
கண்வ மகரிஷி பேருரை
உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன் எழுதிய நாடகங்களில் உலகமே போற்றி வியந்த நாடக நூல் சாகுந்தலம். அதில் சகுந்தலை என்னும் அழகி உலகம் அறியாத அப்பாவிப் பெண். பறவைகள் (சகுன) வளர்த்ததால் அவளுக்கு சகுந்தலை என்று பெயர். இதோ அவள் கணவன் வீட்டுக்குப் (அரசனின் அரண்மனை) போவதற்கு முன், வளர்ப்புத் தந்தை கண்வர் சொன்னது:
“என் அன்பு மகளே. உன் கணவன் வீட்டுக்குச் செல்லப் போகிறாய். அங்கே:-
உன்னை விட வயதில் மூத்த பெரியோருடன் கவனமாகப் பழகி, அவர்களுக்குச் சேவை செய். அரசனின் சக மனைவிகள் இடத்தில் நட்போடு வாழ். கணவன் உனக்கு ஏதேனும் கஷ்டம் கொடுத்தாலும் கோபத்தில் எதையும் சொல்லிவிடாதே. நீ யார் யாருக்குச் சேவை செய்கிறாயோ அவர்களுக்கு எல்லா மரியாதைகளும் கொடு. செல்வத்திலும் சுக போகங்களிலும் வாழப் போகும் நீ அகந்தையும் தலைக்கனமும் ஏறாமல் பார்த்துக்கொள். அப்படி வாழ்ந்தால்தான் பெண்கள் இல்லத்தரசி என்ற பெயர் எடுப்பர். இதற்கு மாறாக நடப்பவர்கள் குலத்தைக் கெடுக்கவந்த கோடாரி என்று பெயர் எடுப்பர்.” (சாகுந்தலம், காட்சி 4)
இதையெல்லாம் சொல்லி முடித்த பின், வயதில் மூத்த ஞானத்தில் முதிர்ந்த மகரிஷி கண்வர், தன் மனைவி இருக்கும் திசையைப் பார்த்து, “அன்பே நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்கிறார். அவள் உடனே, “ஒரு மணப் பெண்ணுக்கு இது அருமையான புத்திமதி. அன்பு மகளே, எப்போதும் இதை நினைவில் வைத்துக்கொள்” என்கிறார்.
காளிதாசன் உலக மகா கவிஞன் மட்டுமல்ல. பெரிய சைகாலஜிஸ்ட்= உளவியல் நிபுணன். ஒரு பெண்ணின் வாயால் இது எல்லாம் சரி என்று சொன்னால்தான் மற்றொரு பெண் நம்புவாள். இல்லை என்றால் இந்த ஆண்களுக்கு என்ன தெரியப் போகிறது என்று நினைத்து விடுவார்கள். அது மட்டுமல்ல. பெண்கள் என்றாலேயே அம்மாவின் கருத்தே முதலில் நிற்கும். அவளுக்கு அதிகாரம் அதிகம். அந்த முறையிலும் மனைவி கருத்தைக் கேட்கிறார் மகரிஷி கண்வர்..
அவர் மேதாதிதி ரிஷியின் மகன் சுக்ல யஜுர்வேதத்தில் கண்வ சம்ஹிதையில் நாற்பது அத்தியாயங்களும் 2,086 மந்திரங்களும் உள்ளன ; இருவரும் வேறு ரிஷிகள் என்றே யூகிக்க வேண்டியுள்ளது.
***
கார்த்திகேயன்
முருகனின் பெயர்களில் ஒன்று. சரவணப் பொய்கையில் தோன்றிய குழந்தையை ஆறு கிருத்திகா பெண்கள் வளர்த்ததால் இந்த நாமம். தாரகாசுரனை வதம் செய்ய எடுத்த அவதாரம் . சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாக நமது புராணங்கள் விளக்குகின்றன. ஆறு தலைகளும் பன்னிரு கைகளும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் தோற்றம் இது.
கார்த்திகை மாதர் அறுவர் முருகனை வளர்த்ததாகப் புராணம் கூறுகிறது. அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என்பவை ஆறு நட்சத்திரங்கள். இந்த ஆறு பேருமே முருகனை சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்தபோது எடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இவர்கள் கார்த்திகை நக்ஷத்திரங்களாக வானில் ஜொலிப்பதை இப்போதும் காணலாம். மேலும் கார்த்திகை பெளர்ணமியன்று வீடெங்கும், வீதியெங்கும் விளக்கேற்றி இவர்களையும் முருகனையும் நாம் இன்றும் நினைவு கூறுகிறோம்.
***
கார்த்தவீர்யன்
புகழ்பெற்ற புராண கால மன்னன் ; யாரேனும் தவறு செய்ய நினைத்தாலே அவர் முன் இவன் தோன்றுவான் என்பதால் ஆயிரம் கை படைத்தவன் என்று பெயர்; இவன் பெயரும் அர்ஜுனன் .
கார்த்தவீர்யார்ஜுனன், ஹேஹேய நாட்டின் மன்னன் கிருதவீரியனின் மகன்; , விஷ்ணுவின் அம்சம், தத்தாத்ரேயரின் சீடர் நர்மதை நதிக்கரையிலுள்ள மகிஷ் மதி நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவர், தத்தாத்ரேயரின் அருளால் ஆயிரம் கைகள் மற்றும் ஒப்பிட முடியாத வலிமையைப் பெற்றவர். ராவணனைத் தோற்கடித்த்து சிறைப்பிடித்த பின்னர் அவன் இந்தப் பக்கமே வர மாட்டேன் என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஓடிவிட்டான் .
இவனது ஆட்சியில் மக்கள் பாவம் செய்ய பயந்தனர்; தவறு நடந்தால் இவனது கைகள் அதைத் தடுத்து நிறுத்தின. ஒரு சமயம்
வேட்டையாடித் திரும்பும்போது, பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் காமதேனுவை அபகரிக்க முயன்று, இறுதியில் பரசுராமரால் கொ ல்லப்பட்டார்.
***
கபில முனிவர்
இந்து மதத்திலுள்ள ஆறு தத்துவப் பிரிவுகளில் ஒன்று ஸாங்க்யம்; கபில முனிவர் சாங்கிய தத்துவத்தை (Sankhya Philosophy) உருவாக்கிய வேதகால மகரிஷி ஆவார். இவர் கர்தம முனிவர் – தேவஹூதி தம்பதியரின் மகன்;பகவத் கீதையில் கிருஷ்ணர் முனிவர்களில் தான் கபில முனிவராக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
மகாவிஷ்ணு அவதாரம்: இவர் மகாவிஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
மன்னன் சகரனின் 60,000 புதல்வர்கள் கபில முனிவரின் ஆசிரமத்தில் இருந்த யாகக் குதிரையைத் திருடியதாக நினைத்து அவரை அவமதித்ததால், கபிலர் அவர்களைத் தன் தவ வலிமையால் எரித்துச் சாம்பலாக்கினார். அங்கே கங்கை பாய்ந்தது ;இதனால் கடலுக்கு சாகரம் என்று பெயர்
கங்கை பூமிக்கு வருதல்: கபிலரின் சாபத்தால் இறந்த சகர புதல்வர்களுக்கு முக்தி அளிக்கவே பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தார்.
***
சங்கப் புலவர் கபிலர்
சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களைப் பாடியவர் கபிலர் . அவர் ஒரு பிராமணப் புலவர். பெயரும் சம்ஸ்கிருதப் பெயர் ; பிள்ளையாரின் பெயர். சங்க இலக்கியத்தில் 30, 000 வரிகளில் பிள்ளையார் பெயர் எங்கும் இல்லையே , சிவன் என்ற சொல் எங்கும் இல்லையே என்று வருத்தப் படுவோர்க்கு ஓரளவு ஆறுதல் /ஆதரவு அளிப்பவர் இவர். திருமுருகாற்றுப் படையின் பதிகப்பகுதியில் வரும் பிள்ளையார் குறிப்பை அறிஞர்கள் பிற்காலச் சேர்க்கை என்பதால் பலரும் அதை ஏற்பதில்லை.
பிள்ளையார் மற்றும் புகழ் பெற்ற ரிஷியின் பெயர் உடையவர் கபிலர். அது மட்டுமல்ல பிள்ளையார் ஒருவருக்கு மட்டுமே நாம் எருக்கம் பூ போட்டு வணங்குவோம். வேறு கடவுளர்க்கு அது ஆகாது.
பகவத் கீதையில் 9-26 கிருஷ்ண பரமாத்மா எனக்கு பத்ரம், புஷ்பம், பலம், தோயம் (இலை,பூ , பழம் , தண்ணீர் ) எதை அன்புடன் கொடுத்தாலும் அதை ஏற்பேன் என்கிறார். அதை ஒரு பாடலில் எதிரொலித்த கபிலர், வேண்டு மென்றே எருக்கம்பூவைக் கொண்டு சேர்க்கிறார். இதனால் இவர் பெயரும் பிள்ளையார் பெயரே ; அவர் வழிபடுவதும் பிள்ளையாரே என்பது உறுதியாகிறது ; இதோ அந்தப் பாடல்:-
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும் , உடையவை
கடவுள் பேணேம் என்னா ………….
—-புறனானூறு பாடல் 106
பொருள்
“குவிந்த பூங்கொத்து உடைய எருக்கம் பூவையும் அருகம்புல்லையும் பூஜையில் போட்டு வாங்கினாலும் கடவுள் எனக்கு இது வேண்டாம் / பிடிக்காது என்று சொல்லமாட்டார்”
கபிலர் சம்ஸ்கிருத மன்னன்.
குறிஞ்சிப் பாட்டை படித்த டாக்டர் ஜி.யூ.போப் (Dr G U Pope) இது காளிதாசன் காவியத்தின் எதிரொலி என்கிறார். எனது ஆராய்ச்சியும் இதை நிரூபிக்கிறது .
தமிழ் மொழியை மட்டம் தட்டிப் பேசிய பிருஹத் தத்தனை அழைத்துவந்து அவனுக்கு காளிதாசனைப் போல குறிஞ்சிப்பாட்டுப் பாடிக்காட்டி, அதில் 99 மலர்களின் பெயர்களை அடுக்கிப் பாடி, (கின்னஸ்) சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெற்றவர் . அதுமட்டுமல்லாமல் அவனையும் பாடவைத்து அதை சங்க இலக்கியத்தில் ஒரு பாடலாகச் சேர்த்து வைத்தவர்.
ஐயருக்கு அமோகப் பாராட்டு
பொதுவாகப் புலவர்களிடையே போட்டி , பொறாமை உண்டு. சங்க காலப் புலவர்களினிடையே இது அதிகம் என்பதை திருவிளையாடல் புராணக் கதைகளும் பிற சம்பவங்களும் காட்டுகின்றன. ஆனால் உலக மஹா அதிசயம்!! ஒரு பிராமணப் புலவரை மட்டும் ஆறு பேர் பாராட்டியுள்ளனர். சங்க இலக்கியச் செய்யுள்களில் மட்டும்!
அவரோ மன்னர் அரண்மனைகளுக்குச் சென்று ‘நான் பிராமணன் வந்திருக்கிறேன்’ என்று தன்னை இண்ட்ரொட்யூஸ் INTRODUCE செய்து கொள்கிறார் . ‘அந்தணர்’ என்பவர் யார் என்று சந்தேகப்படும் அறிவிலிகளுக்கு அவர் சொல் பதில் தருகிறது.
தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொள்ளும் பாடல் —
“பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன் ; இவர் என் மகளிர்;
அந்தணன், புலவன் கொண்டுவந்தனனே
–புறம் 201
பாடியவர் கபிலர்; பாடப்பட்டோன் -இருங்கோவேள்
பொருள் –
பறம்பு மலைப் பிரதேசத்தை ஆண்ட பாரியின் மகள்கள் இருவரும் இதோ வந்துள்ளனர் நான் ஒரு பிராமணன்; இவர்கள் தந்தை என் தோழன் ; ஆகையால் என் மகள்கள் போன்றவர்கள்”.
2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதி வெறியை உடைத்து க்ஷத்ரிய வேந்தன் பாரியின் மகளிரை தன் மகள் என்று அறிவித்த புரட்சிக்கவிஞன் கபிலன் !!
***
1
“செறுத்த செய்யுள் செந்நாவின்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்
இன்றுள்ள ஆயின் நன்றுமன்” – புறம் 53
பாடியவர் பொருந்தில் இளங் கீரனார்
பாடப் பட்டோன் – மாந்தரஞ் சேரல் இரும்பொறை
பொருள் :–
“பல பொருள்களையும் அடக்கிய செய்யுட்களை விரைந்து பாடும் செம்மையான நாவும் , மிக்க அறிவும் பெரும் புகழும் உடைய கபிலன் இன்று இருந்தால் நல்லது என்று நீ சொன்னாய். அது நன்றாக இருக்கிறது.”
****
2
மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்
பொய்யா நாவிற் கபிலன் பாடிய
மையணி நெடுவரை ஆங்கண் “..
புறம் – 174 ; பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார்
பாடப்பட்டோன் – மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்
பொருள் –
“நின் தந்தை , கபிலர் பாடும் புகழுடையோனாக இருந்து அறம் காத்து , பெரும் வலிவுடையோனாக இருந்து இறந்தனன்”.
பொய்யா நாவிற் கபிலன் என்ற சொற்தொடரைக் கவனிக்க வேண்டும். மனம், மொழி, உடல் மூன்றிலும் தூய்மை பெற்றவர்களை எவரும் மதிப்பர். அவர்கள் புலன்களை வென்றதால் மாவீரர் எனப்படுவர்.. அப்பேற்பட்ட வீரன் கபிலன். மூவேந்தர்களும் பறம்பு மலையை முற்றுகையிட்டபோது கிளிகள் மூலம் உணவு கொண்டுவந்து பாரி நாட்டைக் காத்தவன். முடியுடைய மூவேந்தேர்களை முடி/மயிர் போல தாழ்த்திய மாவீரன். இந்துத் துறவிகளைப் போல யாகத் தீ மூட்டி அதற்குள் நுழைந்தவன் கபிலன்.
****
காசி/ வாரணாசி
இந்துக்களின் ஏழு புனித நகரங்களில் ஒன்று ; காசி விசுவநாதர் கோவிலைத் தரிசிப்பதையும் அங்குள்ள கங்கை நதியில் குளிப்பதையும் இந்துக்கள் வாழ்க்கை லட்சியங்களில் ஒன்றாக வைத்துள்ளனர் .காசியில் இறந்தால் மோ ட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் அழியாத நம்பிக்கை
காசி என்றும் வாரணாசி என்றும் அழைக்கப்படும் இந்துக்களின் புனித நகரமே உலகின் மிகப் பழைய நகரம் ஆகும்.
மஹாபாரத யுத்தம் முடிந்த பின்னர் கலியுகம் துவங்கியதாக (கி.மு.3102) இந்துக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நம்பிவருவதை பஞ்சாங்கங்களும் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன. அந்த மஹாபாரத காலத்தில் பீஷ்மர் என்னும் நித்திய பிரம்மச்சாரி, பாண்டவர் குலம் தழைக்க பெண்களைத் தேடிக்கொண்டிருந்தார். காசி மகாராஜன் அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று புதல்விகளுக்கும் ஸ்வயம்வரம் ஏற்பாடு செய்தான். அதில் பீஷ்மர் தோன்றி, மூன்று பெண்களையும் கடத்தி வந்தார் . அப்போதே காசி சாம்ராஜ்யம் மிகவும் புகழ் பெற்றிருந்தது. காசியின் பழைய வரலாறு உறுதியாகிறது.
பௌத்தர்களும் சமணர்களும்கூட காசியே பழைய நகரம் என்பதை எழுதி வைத்துள்ளனர்.
அந்தக் காலத்தில் யாரேனும் புதிய தத்துவம்/கொள்கை கண்டு பிடித்தால் அதை காசிக்குச் சென்று நிரூபிக்கவேண்டும். அங்கே தெரு மூலைகளில் அறிஞர்கள் நிற்பார்கள். அவர்கள் எல்லோரையும் வாதத்துக்கு அழைப்பார்கள். அதில் வென்றால் அவர்கள் சித்தாந்தம் அங்கீகாரம் பெறும். அதாவது அந்த நகரமே ஒரு பல்கலைக் கழகம்!
3.வேத இலக்கியங்களிலும் காசியின் பெயர் உள்ளது. காசி என்பது பன்மைப் பொருளில் அதர்வண வேதத்தில் பயிலப்படுகிறது. ஆதிகாலத்தில் அந்தந்த குழுக்களின் பெயரே அந்த தேசத்தின் பெயராகக் கொள்ளப்பட்டது.
வருண, அஸ்ஸி என்ற கங்கையின் இரண்டு உபநதிகளுக்கு இடைப் பட்ட நகரம் என்பதால் வாரணாசி என்று பெயர் பெற்றது. உலகம் முழுதும் உள்ள பெயர்களை உருக்குலைக்கும் ஐரோப்பிய இனத்தால் வாரணாசி என்னும் பெயர், பனாரஸ் என்று உருமாறிப்போனது.
காசி இனமக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவினர். பாபிலோனியாவில் கி.மு.1800 முதல் காசைட் இன மக்கள் காணப்படுகின்றனர். இவர்களை அடுத்து கி.மு.1400 முதல் மிடன்னிய இனம் துருக்கி-சிரியாவில், ஆட்சியைப் பிடித்தது. அவர்கள் தூய சம்ஸ்கிருதப் பெயர்களுடன் ரிக்வேத மந்திரத்தின் மேல் சத்தியம் செய்து உடன் படிக்கை செய்த கி.மு.1400 கல்வெட்டும் கிடைத்திருக்கிறது. காசைட் இன மக்களும் சம்ஸ்க்ருதம் தொடர்பான மொழியையே பேசினர்.
***
கடோபநிஷத்
கடோபநிஷத் என்பது யஜுர் வேதத்தின் காடக சாகையைச் சேர்ந்த முக்கிய உபநிடதமாகும். நசிகேதஸ் என்ற சிறுவனுக்கும் எமதர்மராஜனுக்கும் இடையிலான உரையாடல் மூலம் ஆத்மா, மரணம் மற்றும் அழியாமை பற்றிய ஆழ்ந்த ஞானத்தை இது போதிக்கிறது. நசிகேதஸ் என்ற சிறுவன், எமனிடம் மரணத்திற்குப் பிந்தைய ரகசியத்தைக் கேட்டுப் பெறுகிறான்.
பொருள்: இது ஆத்மா அழியாதது, உடல் மட்டுமே இறக்கும், ஆத்மா மீண்டும் பிறக்கும் அல்லது மோட்சம் அடையும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.சுவாமி விவேகானந்தருக்கு மிகவும் பிரியமான, உபநிடதம் இது. ஆதிசங்கரரின் உரை மூலம் இது பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.
****
கௌரவர்கள்
குரு KURU வம்சத்தில் தோன்றிய அனைவரும் கெளரவர்கள் என்ற போதிலும் பிற்காலத்தில் திருதராஷ்டிரனுக்கும் காந்தாரிக்கும் பிறந்த நூற்றுவர் மட்டும் கௌரவர்கள் என்ற பெயரைப் பெற்றனர் துரியோதனன் இவர்களில் மூத்தவன்; போட்டி, பொறாமையால் மஹாபாரத யுத்தம் ஏற்பட்டு அதில் கௌரவர்கள் நூற்றுவர் இறந்தனர் . இவர்களுக்குப் போட்டியாக இருந்த பாண்டவர்கள் ஐவரும் பாண்டு என்ற மகாராஜாவின் புதல்வர்கள்; அவர்களில் மூத்தவர் யுதிஷ்டிரர் என்னும் தர்மபுத்திரர் ஆவார் .
***
கெளசல்யா
ராமாயணத்தில்,கெளசல்யா என்ற ராணி அயோத்தி மன்னன் தசரதனின் மூத்த மனைவி ஆவார் ; ஸ்ரீ ராமரின் தாயார் ஆவார். அவர் தர்மம், பொறுமை மற்றும் தூய்மையான அன்பின் அடையாளமாகத் திகழ்ந்தார் .
கெளசல்யா கோசல நாட்டின் இளவரசி, கோசல மன்னன் பானுமந்தனின் மகள். தசரதனுக்கும் கெளசல்யாவிற்கும் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததால், அவர்கள் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, அதன் பலனாக ராமரை மகனாகப் பெற்றார் . ராமர் வனவாசம் செல்ல நேரிட்டபோது, அதைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தார்.ராமாயணத்தில் பொறுமை, தியாகம் மற்றும் சிறந்த தாய்க்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
‘கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே! உத்திஷ்ட நரசார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்!’ என்ற வால்மீகி ராமாயண ஸ்லோகம் வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகமாகத் திகழ்கிறது ; லட்சக் கணக்கான வீடுகளில் தினமும் காலையில் ஒலிக்கிறது.
விசுவாமித்திரர் அதிகாலைப் பொழுதில் எழுந்து கங்கையின் நீராடி, ஜப தபங்களை முடித்துவிட்டு ராம, லக்ஷ்மணர்களை எழுப்புகிறார். அவர் சொன்ன வாசகம் இது “கோசலையின் தவப்புதல்வா! ராமா! கிழக்கில் விடியல்ஒளி வந்துவிட்டது ! புலி போல் வீரம் படைத்த வீரர்களே எழுந்திருங்கள்! இன்றைய பணியைச் செய்வோம் வாரீர்” .
****
கௌசிக முனிவர்
இருவர் பெயரில் நாம் இவர் பற்றி அறியலாம் ; ஒருவர் உலகப் புகழ் பெற்ற விசுவாமித்திரர் ; இன்னொருவர் மஹாபாரதக் கதையில் வரும் ஒரு முனிவர் .கௌசிக என்ற சொல்லுக்கு ஆந்தை என்றும் பட்டுநூலில் உருவானவர் என்ற பொருளும் இருக்கிறது . குஷிகா வம்சத்தில் தோன்றிய விசுவாமித்திரர் ரிக் வேதத்தில் ஒரு மண்டலத்தின் ரிஷி; சங்க இலக்கியத்தில் கெளசிக கோத்திர புலவர்களின் பெயர்களையும் காண்கிறோம்.
வசிஷ்ட முனிவருடன் பல முறை மோதி, பின்னர் மன்னர் பதவியை விட்டு, தவம் பல செய்து, அவர் வாயால் பிரம்ம ரிஷி (பிராமணர்) என்ற பட்டத்தினைப் பெற்றார் .
கெளசிக முனிவர் கதை
மஹாபாரதத்தில் வரும் கெளசிக முனிவர் கதை, கோபம் மற்றும் அகந்தையைத் துறந்து, உண்மையான ஞானம் மற்றும் பொறுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு கதை.
கெளசிகர் என்ற முனிவர் கடுமையான தவம் செய்து, கண்களை மூடி தியானிக்கும்போது, அவர் மீது பறவை ஒன்று எச்சமிட்டது. இதனால் கோபமடைந்த கெளசிகர், தன் தபோ பலத்தால் அந்தப் பறவையை எரித்தார்.
தான் செய்த செயலை நினைத்து, “நான் எப்பேர்ப்பட்ட தவவலிமை கொண்டவன்” என்ற அகந்தையுடன், பிக்ஷை எடுக்க ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீட்டுப் பெண், கணவனுக்குப் பணிவிடை செய்வதில் தாமதமானதால், பிக்ஷை கொடுக்க தாமதமானது.
இதனால் கோபமடைந்த கெளசிகர் முன்னர் பறவையை எரித்த பார்வையுடன் அந்தப் பெண்மணியைப் பார்த்தார் , அந்தப் பெண், “நான் அந்தப் பறவை இல்லை, எரிப்பதற்கு” என்று கூறி, கோபத்தைத் துறந்து பொறுமையைக் கடைப்பிடிக்க அறிவுரை வழங்கினார்.
தன் தவறை உணர்ந்த கெளசிகர், உண்மையான தர்மத்தையும், ஞானத்தையும் அந்தப் பெண் மூலமாகவும், பின்னர் தர்மவியாதன் (கசாப்புக் கடைக்காரன்) மூலமாகவும் கற்று, கோபத்தை வென்றார்.
TO BE CONTINUED…………………
TAGS- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 45; இந்து மத கலைச்சொல் அகராதி-45 , கனிஷ்கர், கெளசிகர், கபிலர், கடோபநிஷத், கெளசல்யாகண்வர், மகரிஷி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Kamsa killing Male children; Yoga Maya disapperas.
Bhutaki lst her life
Krishna fighting wit wrestlers
Butter Thief
என்றும் நீல உடை அணிபவன் – பலராமன் ( நீலாம்பரன் )
என்றும் மஞ்சள் உடை அணிபவன் – கிருஷ்ணன் ( பீதாம்பரன் )
மதுப் ப்ரியன் – பலராமன் ( மது அருந்துபவர் )
மாதுப் ப்ரியன் – கிருஷ்ணன் ( கோபியர் பின்னால் சென்றவர் )
வெள்ளைக் காரன் – பலராமன்
கருப்பன் – கிருஷ்ணன்
பனைக் கொடி ஏந்தியவன் – பலராமன்
கருடக் கொடி ஏந்தியவன் – கிருஷ்ணன்
***
ஆழ்வார் பாசுரங்களில் கண்ணனின் லீலைகள் (Krishna Leelas) முக்கிய இடத்தைப் பெறுகின்றன. குறிப்பாகப் பெரியாழ்வார் கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகளையும், நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் கோபியர் பாவத்திலும் பாடியுள்ளனர். வெண்ணெய் திருடுதல், கோவர்த்தன கிரியைத் தூக்குதல், கம்ச வதம் போன்ற கிருஷ்ண லீலைகள் ஆழ்வார்களால் பாடப்பட்டுள்ளன.
ஆழ்வார் பாசுரங்களில் விவரிக்கப்பட்டுள்ள முக்கிய கிருஷ்ண லீலைகள்:
குழல் ஊதும் கண்ணன்: கண்ணனின் குழலிசையைக் கேட்டு ஆயர்பாடிப் பெண்கள் மயங்குவதைப் பல ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.
வெண்ணெய் திருடுதல்: தமிழ் வேதம் குறிப்பிடுவது போல, வீடுகளில் வெண்ணெய் உண்டது மற்றும் கோபியர்களின் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடிய லீலைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
ஆழ்வார்கள் கண்ணனின் லீலைகளை வெறும் கதைகளாகப் பார்க்காமல், அவனது கருணையின் வெளிப்பாடாகவும், பக்தியின் உச்சமாகவும் பாசுரங்களில் அனுபவித்துள்ளனர்.
***
கிருஷ்ணன் கொன்ற அசுரர்கள்
கிருஷ்ணர் அதர்மத்தை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் கம்சன் அனுப்பிய பல அசுரர்களைத் தனது சிறு வயதிலேயே வதம் செய்தார். பூதனை, சகடசுரன், திருணாவர்த்தன், பகாசுரன், அகாசுரன், தேனுகாசுரன், அரிஷ்டாசுரன், கேசி, வியோமாசுரன் மற்றும் நரகாசுரன் ஆகியோர் கிருஷ்ணரால் கொல்லப்பட்ட முக்கிய அசுரர்கள் ஆவர்.
கிருஷ்ணரால் கொல்லப்பட்ட முக்கிய அசுரர்கள்:
பூதனை: கிருஷ்ணனுக்கு விஷப்பால் கொடுக்க வந்த அரக்கி (இவர் அழிவின் அடையாளமாக கருதப்படுகிறார்) Wikipedia.
சகடசுரன்: கம்சனின் கட்டளைப்படி வண்டி வடிவில் வந்து கிருஷ்ணனை நசுக்க முயன்றவன்.
திருணாவர்த்தன்: சூறாவளி வடிவில் வந்து குழந்தையைத் தூக்கிச் சென்ற அசுரன்.
பகாசுரன்: கொக்கு வடிவில் வந்து கிருஷ்ணனை விழுங்க முயன்ற அசுரன் Wikipedia.
அகாசுரன்: மலைப்பாம்பு வடிவில் வந்து தோழர்களை விழுங்கியவன் Wikipedia.
தேனுகாசுரன்: கழுதை வடிவில் வந்து தாலவனத்தில் இருந்த அசுரன்.
அரிஷ்டாசுரன்: காளை வடிவில் வந்து கம்சனால் அனுப்பப்பட்டவன்.
கேசி: குதிரை வடிவில் வந்து வந்த அசுரன்.
வியோமாசுரன்: ஆகாயத்தில் மறைந்து அசுர சக்தி கொண்டவன்.
நரகாசுரன்: சத்யபாமாவின் உதவியுடன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டவன் (சுதர்சன சக்கரத்தால் இரு துண்டாக்கப்பட்டது)
கம்சன்: கிருஷ்ணனின் தாய்மாமன், இவன் மதுராவில் கொல்லப்பட்டான்.
இவர்கள் தவிர, கம்சன் அனுப்பிய பல அசுரர்களை கிருஷ்ணர் மற்றும் பலராமர் வதம் செய்தனர்
****
Krishna killing Bakasura- Crane Demon
Krishna killing Agasura- Python Demon
Krishna killing Dhenukasura a- Donkey
Demon
Krishna dancing on Kaliya Snake
பெரியாழ்வார் திருமொழி – முதற்பத்து
ஐந்தாம் திருமொழி – உய்யவுலகு
(செங்கீரைப்பருவம்)
பாடல் 4
வானவர் தாம்மகிழ வன் சகட முருள
வஞ்சமுலைப்பேயின் நஞ் சமுது உண்டவனே!*
கானக வல்விளவின் காயுதிரக் கருதிக்
கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே!*
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்
என்பவர் தாம்மடியச் செருவதிரச் செல்லும்*
ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
பொருள்:
விண்ணுலக தேவர்கள் மகிழும் வண்ணம், தீய எண்ணம் கொண்டு (1)சக்கரவடிவில் வந்த சகடாசுரனை தூள் தூளாக நொறுங்கிப் போகும் வண்ணம் உன் பிஞ்சுக் கால்களால் உதைத்தழித்தாய்; வஞ்சக எண்ணம் கொண்டு உனக்குத் தாயமுது கொடுப்பது போல் (2)நஞ்சமுது கொடுக்கத் துணிந்த பூதனை என்னும் அரக்கியின் உயிரைக் குடித்தவனே! காட்டிலிருந்த, வலிமையான விளா மரத்தின் காய்கள் உதிரக் கல்லெறிவது போல்,பசுங் கன்றின் உருவில் உருமாறி வந்த (3)வத்சாசுரன் என்னும் அசுரனை மரத்தில் எறிந்து கொன்ற மைவண்ண தேகங்கொண்ட என் இளங்கன்றே! (4)தேனுகாசுரன், நரகாசுரனின் அண்ணனான, ஐந்து தலைகளைக் கொண்ட (5)முராசுரன் மற்றும் வலிமையும் துணிவும் மிகுந்த சினமெனும் செந்தீயைத் தன்னிடத்தே கொண்ட (6)நரகாசுரன் மற்றும் பல அசுரர்களை எல்லாம் அவர்களுக்கு மரணபயத்தைத் தந்து நடுக்கங்கொள்ளச் செய்து, அழிக்கவல்ல வலிமை மிக்க ஆண் யானை போன்றவனே! ஆயர்கள் போரேறே எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுக ஆடுகவே.
அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக நாம் கொண்டாடுகிறோம் ;பிரக்யோதிஷ்பூர் என்னும் கிழக்கு இந்திய பகுதியின் மன்னனாக இருந்தவன் நரகாசுரன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். ஆண்கள் எவராலும் கொல்லப் படக்கூடாது என்ற வரத்தைப் பெறுகிறான் அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது. 16 ஆயிரம் பெண்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன். தேவர்கள் எல்லோரும் கிருஷ்ணனை சந்தித்தனர். விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.
கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான். பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.
***
கம்சனால் அனுபப்பட்ட வத்ஸாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தா ன். அவன் கன்றுக் குட்டியாக உருமாறி, கிருஷ் ணர் மேய்த்த கன்றுகளுடன் கலந்து நின்றான் கிருஷ்ணர் அதை அடையாளம் கண்டு கொண்டார். அதன்காலைப் பிடித்து தூக்கி விளா மரத்தில் அடித்தார். வத்ஸாசுரன் மடிந்தான்.
இன்னொரு முறை, ஒரு பெரிய கொக்கின் வடிவில் பகாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான். அதன் அலகுகளைப் பிளந்து, கிருஷ்ணர் கொன்றார். ஒருமுறை, (7)அகாசுரன் என்பவன் விருந்தாவனத்திற்கு வந்தான். ஒரு பாம்பின் வடிவெடுத்து வாயைப் பிளந்தபடி படுத்துக் கொண்டான். கிருஷ்ணரும் அவனது சகாக்களும் பாம்பின் வாயில் புகுந்தனர் ; அதுவும் வாயை மூடியது ;கிருஷ்ணர் தனது உருவத்தை பெரிதாக்கிக் கொண்டே இருந்தார். அகாசுரப் பாம்பு வயிறு கிழிந்து இறந்தது..
Krishna lifting Govardhana Hill.
Krishna killing Horse and Elephant
குன்றினால் குடை கவித்ததும் கோலக்
குரவை கோத்ததுவும் குடமாட்டும்
கன்றினால் விளவு எறிந்ததும் காலால்
காளியன் தலை மிதித்ததும் முதலா
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம்
அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள்குளிர
ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன்
காணுமாறு இனி உண்டெனில் அருளே.
இவ்வடிகள் குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழியில் (7-ஆம் திருமொழி) இடம்பெற்றுள்ளன. கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணர் செய்த லீலைகளைப் பாடும் இப்பாசுரம், கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்ததையும், ஆயர்களுடன் குரவைக் கூத்து ஆடியதையும், கன்றைக் கொண்டு விளாமரத்தை வீழ்த்தியதையும், காளியன் தலையில் நடனமாடியதையும் குறிப்பிடுகிறது
ஒரு சமயம் கிருஷ்ணர், யமுனை நதிக்கரைக்கு தனித்துச் சென்றார். அந்த ஆற்றில் (8) காளிங்கன் என்ற நாகம் வசித்தது அதற்கு நூறு தலைகள். அந்தக் கொடிய நச்சுப்பாம்பு, தன் விஷத்தை தண்ணீரில் பரப்பியது. கிருஷ்ணர் தண்ணீரில் குதித்து அவனது தலையில் ஏறி நர்த்த னமாடினார். வலி தாளாமல் மரண ஓலமிடத் துவங்கினான். அப்போது, காளிங்கனின் பத்தினியர் ஓடி வந்தனர். எங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தர வேண்டும், என்றனர். கிருஷ்ணர் அதை ஏற்றார். காளிங்கன் அவரை தன் தலையில் உயர்த்தி நீர்மட்டத்துக்கு மேலே கொண்டு வந்து விட்டது. காளிங்கனின் பத்தினியர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். காளிங்கன் அந்த நதியிலிருந்து வேறு இடத்துக்குச் சென்றான் .
(9)தேனுகாசுரன் கதை
தாளவனம் என்ற காட்டில் ஈச்ச மரங்கள் (பனை மரங்கள்) மிகுதியாக இருந்தன, ஆனால் தேனுகாசுரன் என்னும் கழுதை வடிவிலான அசுரன் தன் அசுர நண்பர்களுடன் அக்காட்டை ஆக்கிரமித்து, அதன் பழங்களை யாரும் உண்ணாதபடி தடுத்து வந்தான் கிருஷ்ண பலராமரின் வருகை: கிருஷ்ணரும் பலராமரும் நண்பர்களுடன் அந்தக் காட்டிற்குச் சென்று, தேனுகாசுரனின் கழுதை வடிவ அரக்கர்களைக் கொன்று, பனைப் பழங்களை உண்டு மகிழ்ந்தனர்.
***
Peethambara Krishna, Neelaambhara Balarama
‘கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.’
ஆண்டாள் திருப்பாவை பாசுரம்- 8
மல்லர்களைக் கொன்ற கிருஷ்ணன்
” மல்யுத்த வீரர்களை த்வம்சம் செய்த கண்ணன்”
கம்சன் தனூர் யாகம் ஒன்று உடனே நடத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து மல்யுத்தப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். இந்த விழாவிற்கு கண்ணனுக்கும், பலராமனுக்கும் அழைப்பு விடுத்தான்.(10)சாணூரன், (11)சலன் முதலிய மல்லர்களை அழைத்து கண்ணன், பலராமன் அவர்களை அழைத்துள்ளேன். நீங்கள் அவர்களுடன் மல்யுத்தம்செய்து அவர்களை அழித்துவிட வேண்டும்’ என்று ஆணையிட்டான். அவர்களை கண்ணனும் பலராமனும் கொன்றனர்.
ஆனைகாத்து ஒர் ஆனைகொன்று* அதுஅன்றி ஆயர் பிள்ளையாய்,*
ஆனைமேய்த்தி ஆனெய் உண்டி* அன்று குன்றம் ஒன்றினால்,*
ஆனைகாத்து மைஅரிக்கண்* மாதரார் திறத்து, முன்*
ஆனைஅன்று சென்றுஅடர்த்த* மாயம் என்ன மாயமே?
“ஆனை காத்து ஓர் ஆனை கொன்று” என்பது திருமழிசையாழ்வார் அருளிய திருச்சந்த விருத்தத்தின் 40-வது பாசுர அடி (பாடல் 791). இது கஜேந்திரனைக் (யானை) காப்பாற்ற முதலை வாயிலிருந்து காத்து, கம்சனின் குவலயாபீடம் எனும் யானையைக் கொன்ற கிருஷ்ணனின் மாயாஜால லீலைகளை வியந்து கூறும் பாடல் வரிகளாகும்.
Venugopalan, Flute Master
பாசுரத்தின் விளக்கம்:
ஆனை காத்து: கஜேந்திர ஆழ்வானைக் காத்தது.
ஓர் ஆனை கொன்று: கம்சனின் குவலயாபீடம் என்ற யானையை கொன்றது.
இந்தச் செயல்கள் அனைத்தும் கிருஷ்ணன் செய்த “மாயம்” (அதிசயங்கள்) என்று ஆழ்வார் போற்றுகிறார்.
(12)‘குவலயாபீடம்’ என்னும் போர் யானையின் பாகனை அழைத்து ‘மல்யுத்தம் காணவரும் கிருஷ்ணனையும், பலராமனையும், மல்யுத்த அரங்கு வாசலிலேயே குவலயாபீடத்தினால், மிதித்துக் கொல்ல ஏற்பாடு செய்’ என்றும் கம்சன் கட்டளையிட்டான். கண்ணன் அந்த யானையின் தந்தங்களை உடைத்து அதனைக் கொன்றான். அதன் பின் தயாராக இருந்த மல்யுத்த வீரர்களுடன் போரிட்டு அவர்களையும் த்வம்சம் செய்தான் கண்ணன்.
(13)கம்சன் கதை
கம்சன் கிருஷ்ணரின் தாய்மாமன். கிருஷ்ணரின் தாயான தேவகியின் அண்ணன் தான் இந்த கம்சன். கம்சனின் விதி கிருஷ்ணரால் முடியும் என்ற அசரீரி ஒலித்தது. இதனால் கிருஷ்ணரைக் கொல்ல பல வழிகளில் முயற்சித்தான் கம்சன். கம்சனின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இறுதியாக சானுரா மற்றும் முஷ்டிகா என்னும் மல்யுத்த வீரர்களைக் கொண்டு கிருஷ்ணரைக் கொல்லத் திட்டமிட்டான் கம்சன்.அவர்களையும் வீழ்த்தினான் கண்ணன் .இரண்டு மல்யுத்த வீர்களும் மடிந்தவுடன், யாதவர்களைத் தாக்க படைகளுக்கு உத்தரவிட்டான் கம்சன். கிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சன் கையில் ஒரு வாளோடு கிருஷ்ணரை நோக்கி வந்தான். கிருஷ்ணர் சற்று குனிந்து, கம்சன் மீது குதித்து அவர் முடியை பற்றி இழுத்து பின்புறம் இழுத்தார். இதனால் கம்சன் கையில் இருந்த வாள் கீழே விழுந்தது. கிருஷ்ணர் உடனே அந்த வாளைப் பற்றி, தாமதிக்காமல் கம்சனின் தலையைக் கொய்தார்.
(14)அரிஷ்டாஸுரன் ஒரு க்ரூரமான பெரிய எருதின் வடிவில் கண்ணனையும் பலராமனையும் கொல்லலாம் என்கிற வெறியுடன் வந்தான். அவன் கண்ணனை நோக்கி வேகமாக வர, அவன் கால்களை பிடித்து உயரத்தில் தூக்கி வீசி அவனைக் கொன்றான்.
^^^
வாட மருது இடை போகி* மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு*
ஆடல் நல் மா உடைத்து* ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*
கூடிய மா மழை காத்த* கூத்தன் என வருகின்றான்*
சேடு உயர் பூம் பொழில் தில்லைச்* சித்ரகூடத்துள்ளானே*3.3.1
உரலில் கட்டப்பட்ட குழந்தை கண்ணன் நெருக்கமான இரண்டு மருத மரங்களின் இடையே
போய் மரங்களை முறித்து இருவரின் சாபம் நீக்கியவனும், கம்சன் அனுப்பிய பயில்வான்களை
கொன்றவனும், நடை பழகுவது போல ஆடி கொண்டு நல்ல பிள்ளையை போல குதிரை
வடிவில் வந்த கேசி என்ற அரக்கனை கொன்றவனும்,
திரண்டு வந்த பலத்த மழையால் பசு மேய்ப்பவர்களுக்கும், பசுக்களுக்கும் ஏற்பட்ட
துன்பத்தை போக்குவதற்காக மலையை குடையாக எடுத்தவன் கூத்தன் என சொல்லும்படியாக
என் முன்னே நடனமாடி கொண்டே வருகின்றான். அப்பெருமான் ஓங்கிய பூஞ்சோலைகள்
சூழ்ந்த சிதம்பரம் எனப்படும் தில்லை சித்ரகூடத்துள்ளானே!.
(15)கேசி என்னும் அரக்கன் ஒரு பெரிய குதிரை வடிவிலே வந்தான். அவன் வாயைப் பிடித்து, இரண்டாகப் பிளந்து அவனைக் கொன்றான். இதை ஆழ்வார்கள் பலரும் அனுபவித்துள்ளார்கள். பொய்கை ஆழ்வார் தன் முதல் திருவந்தாதியில் “மா வாய் பிளந்து” என்றும் நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “துரங்கம் வாய் பிளந்தானுறை தொலைவில்லிமங்கலம்” என்றும் குலசேகர ஆழ்வார் தன் பெருமாள் திருமொழியில் “மாவினை வாய் பிளந்து உகந்த மாலை” என்றும் ஆண்டாள் தன் திருப்பாவையில் “மா வாய் பிளந்தானை” என்றும் , திருமங்கை ஆழ்வார் தன் திருநெடுந்தாண்டகத்தில் “மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா ” என்றும் பாடிப் போற்றினார்கள் துரங்கம் என்பதும் மா என்பதும் குதிரையைக் குறிக்கும் சொற்கள்.
Calf demon killed
(16) கம்ஸன் அனுப்பிய (16)வ்யோமாஸுரன் என்பவன் கண்ணன் இடைப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் தானும் ஒரு இடைப்பிள்ளை வேடத்தில் வந்து ஒவ்வொரு பிள்ளையாகக் கொண்டு போய் ஓரிடத்தில் மறைத்து வைத்துக் கடைசியைல் கண்ணனைக் கொல்லப் பார்த்தான். இதை உணர்ந்த கண்ணன் அந்த இடையன் வேடத்தில் இருந்த யோமாஸுரனையும் கொன்றான்.
***
தூசு போன்ற ரூபத்தில் செயல்படும் (17) திருணாவர்த்தன் என்ற அசுரனை கம்சன் அனுப்பினான். யசோதை கண்ணனை படுக்கையில் கிடத்திவிட்டு வேலை செய்தாள். அந்த நேரத்தில், பயங்கரமான புழுதியுடன் சூறாவளி காற்று ரூபத்தில் திருணாவர்த்தன் வந்து குழந்தையை எடுத்துச் சென்றான். திருணாவர்த்தன் ஆகாயத்தில் உயரே தூக்கிச் செல்லும்போது, கிருஷ்ணர் தனது எடையை அதிகமாக்கினார். எடையைத் தாங்க முடியாத அசுரன், இறுதியில் கீழே விழுந்து உயிர் துறந்தான். கிருஷ்ணர் பத்திரமாகக் கோகுலம் திரும்பினார்.
***
பாகவதத்தில் (18) ப்ராலாம்பாசுரன் கதை
கம்சன் அனுப்பிய ப்ராலாம்பாசுரன் இடையன் போல் வேடமிட்டு வந்தான்.கிருஷ்ணனும் பலராமனும் தோழர்களுடன் விளையாடும்போது, ப்ராலாம்பாசுரன் அவர்களுடன் சேர்ந்து, தானும் அவர்களோடு விளையாடினான்.
அவர்கள் ஒரு விளையாட்டை விளையாடினார்கள் – ஒருவரை ஒருவர் தூக்கிச் சுமக்க வேண்டும். தோற்றவர்கள் வென்றவர்களைத் தூக்கிச் சுமக்க வேண்டும்.இந்த விளையாட்டில், ப்ராலாம்பாசுரன் பலராமனைத் தூக்கிக் கொண்டு வெகுதூரம் ஓடினான்.
பலராமன், அவனுடைய உண்மையான அசுர வடிவத்தைக் கண்டு, தன் சக்தியால் அவனைக் கொன்றார். ப்ராலாம்பாசுரன் தலை பிளந்து, அந்த இடத்திலேயே மடிந்தான்.
***
சிசுபாலன் கதை –
(19).சிசுபாலன் சேதி நாட்டு மன்னன், கிருஷ்ணனின் அத்தை மகன் . பிறக்கும்போதே நான்கு கைகள், மூன்று கண்களுடன் பிறந்த இவன், இந்திரப்பிரஸ்தத்தில் யதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தின்போது கிருஷ்ணரை அவமதித்ததால், சக்ராயுதத்தால் வதம் செய்யப்பட்டான்.
சிசுபாலன் பிறந்தபோது விசித்திரமான தோற்றத்துடன் (4 கைகள், 3 கண்கள்) இருந்தான். எவனொருவன் இவன் மடியில் அமரும்போது இந்த கூடுதல் அம்சங்கள் மறைகின்றனவோ, அவனாலேயே இவன் இறப்பு நேரிடும் என்று அசரீரி கூறியது.
கிருஷ்ணர் சிசுபாலனை மடியில் எடுத்தவுடன், அவனது கூடுதல் கைகள் மற்றும் கண் மறைந்தன. சிசுபாலனின் தாய் (கிருஷ்ணனின் அத்தை) தன் மகனை கொல்லக்கூடாது என்று வேண்ட, கிருஷ்ணர் சிசுபாலனின் நூறு தவறுகளை மன்னிப்பதாக வாக்குறுதி அளித்தார்.
சிசுபாலன், கிருஷ்ணரை எப்போதும் வெறுத்து வந்தான். பாண்டவர்களின் ராஜசூய யாகத்தின்போது, கிருஷ்ணருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாத சிசுபாலன், கிருஷ்ணரை அவதூறாகப் பேசினான்.அவனது நூறாவது அவதூறு முடிந்தவுடன் அடுத்த முறை கேலி செய்தபோது , கிருஷ்ணர் தனது சக்ராயுதத்தால் சிசுபாலனின் தலையை வெட்டினார்.
***
(20)தந்தவக்ரன் கதை
தந்தவக்ரன், ஜராசந்தனின் கூட்டாளியும், சிசுபாலனின் உறவினரும் ஆவான். கிருஷ்ணனின் பகைவன் ஆவான். தருமனின், இந்திரப்பிரஸ்த ராஜசூய யாகத்தில் கலந்து கொள்ள பலராமனுடன் கிருஷ்ணர் சென்ற நேரத்தில், தந்தவக்ரன், துவாரகையை முற்றுகையிட்டுத் தாக்கினான். மீண்டும் துவாரகையை தந்தவக்ரன் தாக்கிய போது கிருஷ்ணனின் சக்கராயுதத்தால் மாண்டான்.
***
(21). கால யவனன் ( கறுப்பு நிற யவனர் )
ஒரு அசுரர் மன்னன் ; கிருஷ்ணனுக்கு மிகவும் தொல்லை கொடுத்து அவரைத் துவாரகைக்கு விரட்டியவன் ; உத்தரப்பிரதேசத்திலுள்ள மதுராவிலிருந்து குஜராத்தில் உள்ள துவாரகைக்குப் போகச் செய்தவன் ; ஆயினும் அவனைக் கிருஷ்ணன் தந்திரமாகத் தீர்த்துக் கட்டினார்
மாந்தாதாவின் மகனான முசுகுந்தன் என்னும் சோழன் இந்திரனின் தலைநகரான அமராவதியைக் அசுரரிடமிருந்து காத்தான் .
இந்த முசுகுந்தனுக்கு ஒரு வரம் கிடைத்தது; நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் இவரை யாரவது எழுப்பினால், யார் முகத்தில் விழிக்கிறாரோ அவர் எரிந்து போவார் ; கிருஷ்ணனை கால யவனன் விரட்டிக்கொண்டு வரவே , முசுகுந்தன் தூங்கிய குகையில் கிருஷ்ணன் நுழைந்து ஒளிந்துகொள்கிறார் உள்ளே நுழைந்த காலயவனன் முசுகுந்தனை கிருஷ்ணன் என்று தவறாக எண்ணி எழுந்திரு என்று உதைக்கிறார். தூக்கத்தில் இருந்து எழுந்த முசுகுந்தன் , காலயவனனனைப் பார்க்கவே அவன் எரிந்து அழிகிறான்.
***
ஸ்வாகதம் க்ருஷ்ணா –ஊத்துக்காடு வேங்கட சுப்ப ஐயர் பாடல்
பல்லவி
ஸ்வாகதம் க்ருஷ்ணா – வரவேண்டும் க்ருஷ்ணா.
சரணாகதம் க்ருஷ்ணா – பணிகிறேன் க்ருஷ்ணா
இஹ. – இங்கு
அனுபல்லவி
போகதாப்த சுலபா – அன்பு ஆர்வம் அல்லது பக்தியினால் அவனை அடைவது சுலபம் .
Date uploaded in Sydney, Australia – 22 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆங்கில எழுத்து J- ல் துவங்கும் சொற்கள்
Words beginning with “J”.
English version was posted yesterday. Here is the Tamil version:
ஜனார்த்தனன் (Sanskrit: जनार्दन) விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் வரும் பெயர். (126th name in the Vishnu Sahasranama) விஷ்ணுவுக்கும் கிருஷ்ணனுக்கும் வழங்கும் ஒரு நாமம்., பக்தர்களை பாதுகாத்து தீமைகளை அழிப்பவர் என்றும் எல்லோருக்கும் வரம் அளிப்பவர் என்றும் பொருள்.
***
ஜகத் குரு
ஜகத் என்றால் உலகம் மற்றும் அதிலுள்ள மக்கள்; குரு என்றால் ஆசிரியர்; உலகத்திற்கே குருவாக விளங்குபவர் என்று அர்த்தம்; சிவபுராணத்தில் பிரம்மாவுக்கும் சிவனுக்கும் இந்த அடைமொழி உள்ளது. ராமாயணத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் , ராமன் ஆகியோரை இந்தச் சொல்லால் வருணிக்கிறார் வால்மீகி. தமிழ்நாட்டில் காஞ்சி சங்கராசார்ய (1894-1994) சுவாமிகளை இந்தச் சொல்லால் பக்தர்கள் போற்றினார்கள் .
***
ஜைன
தமிழில் சமணர் என்றும் அமணர் என்றும் பொருள்; சமண மத த்தைப் பின்பற்றுவோரை இப்படி அழைக்கிறோம். அவர்கள் அஹிம்சையிலும் சைவ- காய்கறி உணவுகளிலும் – மிகவும் பற்றுடையோர். இந்த சமயம் புத்தருக்கு முந்திய மகாவீரர் என்ப வரால் மிகவும் பிரபலமானது . தமிழ் நாட்டில் அரசியலில் ஈடுபட்ட சமணர்கள், பல்லவ பாண்டிய மன்னர்களை மதம் மாற்றியதால் சைவ நாயன்மார்களால் பழிக்கப்பட்டார்கள் ; ஞான சம்பந்தர் இந்த மதத்தை தமிழ்நாட்டிலிருந்து அகற்றினார் .மத்திய கால தமிழில் நிறைய நூல்களை சமண முனிவர்கள் இயற்றினார்கள் தமிழ் காவியமான சிலப்பதிகாரம் சமணர்களைப் போற்றியது .
***
ஜைன அல்லது சமண சமயம்
இவர்கள் வேதத்தையும் கடவுளையும் ஏற்கவில்லை ஆனால் இந்துக்களைப் போலவே மறுபிறப்புக் கொள்கையையும் கர்மா வினைக் கொள்கையையும் ஏற்றார்கள். 24 தீர்த்தங்கரர் என்ற துறவிகள் இந்தக் கொள்கைகளைப் பரப்பினார்கள் அவர்களில் கடைசியாக வந்த வர்த்தமான மஹாவீரர் பீஹார் மாநிலத்தில் இந்த சமயத்தை வேரூன்றச் செய்தார் அவர் புத்தருக்கு முன்னால் தோன்றியவர்
இவர்களில் நேமிநாதர் (அரிஷ்டநேமி), பார்சுவநாதர், வர்த்தமான மகாவீரர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மட்டும் உறுதியாகியுள்ளது.
பிற்காலத்தில் சமணர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள் ; திகம்பரர் – ஆடை அணியாத பிரிவினர்; ஸ்வேதாம்பரர் – வெள்ளை ஆடை உடுத்துவோர் . தமிழ்நாட்டில் இவர்கள் எங்கே, எப்படி இருந்தார்கள் என்பதை அப்பர், சம்பந்தர் தேவாரப் பாடல்களிலிருந்து அறியலாம்.
***
ஜம்பு த்வீபம் – நாவலந் தீவு
மஹாபாரதத்திலும், அசோகன் கல்வெட்டிலும் இந்தப் பெயரைக் காணலாம். சங்கத் தமிழ் இலக்கியத்தில் நாவலந் தீவு என்று பெயர். தாவரங்களின் அடைப்படையில் நிலங்களுக்குப் பெயரிட்டவர்கள் இந்துக்கள்; நாவல் பழத்தைக் கொண்டு பாரத தேசத்துக்கு இந்தப் பெயரைச் சூட்டினார்கள். ஏழு அல்லது ஒன்பது தீவுகளில் இது ஒன்று என்று புராணங்கள் விளம்புகின்றன.
ஜம்பூ பழம் என்பது, நாவல் பழம். இது நாடு முழுதும் வளரும் மரம். பிள்ளாயாருக்கும் முருகனுக்கும் பிடித்த பழம். ஒரு தாவரம் எங்கே அதிகம் விளைகிறதோ அதன் பெயரில் அந்த நாட்டிற்குப் பெயரிட்டனர் இந்தியர்கள். ஜம்பூ, சால்மலி என்றும் அது இல்லாவிடில் கிரவுஞ்ச என்று பறவையின் பெயரில் அல்லது அதிகமாக வசிக்கும் மக்கள் இனத்தின் பெயரில் காம்போஜ என்றும் பெயரிட்டனர். தமிழரும் கூட குறிஞ்சி, நெய்தல், முல்லை, மருதம் என்று தாவரங்களின் பெயரையே பயன்படுத்தினர்.
நாவலொடு பெயரிய பொலம்புனை அவரிழைச்
சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி
கடுவன் இளவெயினனார் பாடிய ஐந்தாம் பரிபாடலில் (5-8/9) நேரடியாகவே குறிப்பிடுகிறார்:
‘’ நாவல் அம் தண்பொழில் வட பொழில் ஆயிடை’’—என்று. மேலும் நாட்டின் வடக்குப் பக்கத்தில் கிரவுஞ்ச மலை உள்ளது என்ற பூகோள உண்மையயும் வெளிப்படுத்துகிறார். இன்றும் இமய மலையில் ஒரு குறிப்பிட்ட கணவாய் வழியாக வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. தற்போது இது லடாக் பகுதியில் நீதி கணவாய் என்று அழைக்கபடுகிறது.
ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் மல்லிகிழான் காரியாதி மேல் பாடிய பாடலில் (புறம் 177) தேன் சிந்தும் நாவல் கனி பற்றிக் கூறுகிறார்.
சங்ககாலத்துக்குப் பிற்காலத்திய நூல்களான சிலப்பதிகாரம் (17-1), மணிமேகலை (25-2-12/16) ஆகிய நூல்களில் நாவலந்தீவு பற்றிய தெளிவான குறிப்புகள் வருகின்றன.
நாவல் ஓங்கிய மாபெருந் தீவு (மணி 2-1) நாவலந்தீவு, நாவலொடு பெயரிய பெருந்தீவம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தேவாரம் (அப்பரின் மறுமாற்றத் தாண்டகம்) முதலிய பல இடங்களிலும் நாவல் தீவைக் காணலாம்.
ஜம்பூத்வீபம் பற்றி காளிதாசனும் பாடியிருக்கிறான். மேகதூதம் 19-ஆம் பாடலில் நாவல் மரக் காடுகள் பற்றிப் பாடுகிறான்.
ரகுவம்சம் 18-44 இல் ஜாம்பூநதம் என்னும் தங்கவகை பற்றிப் பாடுகிறான். இதை புறப் பாடல் 397—லும், திருமுருகாற்றுப்படை வரி 18—லும் காணலாம்.
***
ஜமதக்னி
காதி மன்னரின் மகள் சத்யவதிக்கும் ருசிக ரிஷிக்கும் மகனாகப் பிறந்தவர் இவர் .
ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் ரிஷிகளில் ஒருவரின் வம்சத்தில் வந்தவர் ஜமதக்னி முனிவர், ரேணுகா தேவியின் கணவரும் பரசுராமரின் தந்தையும் ஆவார். உக்ர தபஸ்வி; தந்தை ஜமதக்னியின் கட்டளைக்கு இணங்கி தாயின் தலையை பரசுராமர் வெட்டினார் . பின்னர் அவரை உயிர்பெறவும் செய்தார். ரேணுகா தேவி கற்புக்கரசி; அவள் சுடப்படாத களிமண் பானையில் தண்ணீர் கொண்டுவந்த போதும் பானையில் தண்ணீர் அப்படியே நின்றது!
***
ஜனகர்
விதேக நாடு அல்லது மிதிலை நகரின் மன்னர் ; சீதா தேவியின் வளர்ப்புத் தந்தை ; பிருஹத் ஆரண்யக உபநிஷத், சதபத பிராமண நூல்களில் இவர் பெயர் உள்ளது; ராஜ ரிஷியான இவர் பற்று இல்லாமல் ஆட்சி செலுத்தினார் . பெரிய சபைகளைக் கூட்டி தத்துவ மகாநாடுகளை நடத்தினார் அதில் கார்க்கி வாசிக்கனவி போன்ற பெண்களும் பங்கேற்றுப் பேசினர். இவரது காலத்தில் வாழ்ந்த யாக்ஞவல்க்ய ரிஷி பெரும் புகழ்பெற்றவர் .
மிதிலை எரிந்திட வேதப் பொருளை
வினவும் சனகன் மதி—தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
வல்ல நம் அன்னை மதி –(சுப்ரமண்ய பாரதி)
‘’ஜனகன் முதலானோர் கர்மத்தாலேயே உயர்ந்த சித்தியை அடைந்தனர் அன்றோ! மேலும் உலகை நல்வழிப் படுத்தவும் கர்மத்தைச் செய்வதற்கே நீ உரியவன் ஆகிறாய்’’. (பகவத் கீதை ,அத்தியாயம் 3, ஸ்லோகம் 20).
கண்ணனும் பாரதியும் ஏன் இப்படி ஜனகனைப் புகழ்ந்தார்கள்?
மிதிலாபுரியை தலைநகராக கொண்டு ஜனகர் ஆண்டான். சீதா தேவியின் தந்தை பெயரும் ஜனகர் தான். ஆனால் பல ஜனக மன்னர்கள் இருந்தது ஆராய்ச்சியில் தெளிவாகத் தெரிகிறது. வேதகால ஜனகர் மாபெரும் தத்துவ ஞானி. ஜீவன் முக்தர். தாமரை இலைத் தண்ணீர் போல, பட்டும் படாமல், ஒட்டி உறவாடாமல் வாழ்க்கை நடத்திய அறிஞன். அவருடைய குரு யாக்ஞவக்யர் என்ற மஹரிஷி. ஜனகர் பால் பேரன்பு பூண்டவர்.
குருவின் அன்பில் சிலருக்கு சந்தேகம். ஜனகன் ஒரு மன்னன் என்பதால் அவருக்கு குரு அதிக சலுகை காட்டுவதாக அவர்களுக்கு ஒரு நினைப்பு. இதைப் பொய் என்று காட்ட ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் பாடம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு சேவகன் ஓடோடி வந்து மிதிலை நகரம் தீப்பிடித்து எரிவதாகப் பதறினான். எல்லா சிஷ்யர்களும் மூட்டை முடிச்சை எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ஜனகர் அசையவில்லை. என்னுடைய உடைமை எதுவும் அங்கு இல்லை, இங்கும் இல்லை என்றார். அவர் ஆத்ம ஞானி என்பதால் பற்றறவராக இருந்தார்.
***
ஜானகி
சீதா தேவியின் பெயர்களில் ஒன்று ; ஜனகர் மகள் என்று அர்த்தம்; மிதிலை நகரில் பிறந்ததால் மைதிலி என்ற பெயரும் உண்டு.
***
ஜரத்காரு
ஒரு ரிஷியின் பெயர்.
கிருஷ்ணரும் அர்ஜுனரும் பழங்குடி மக்கள் ( கோண்டுகள் – கோண்ட்வானா லாண்ட்= காண்டவ வனக் காட்டு மக்கள்) வாழும் காண்டவ வனக் காடுகளை அழித்தபோது, நாகர்களுக்கும், பாண்டவர்களுக்கும் மிகப்பெரிய பகைமை மூண்டது. அதற்கு சமாதனம் செய்ய ஜரத்காரு, ஆஸ்தீகர் ஆகியோர் வந்தனர். நர்மதை நதிக்கரையில் ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாகம் (நாகர் படுகொலை) நிறுத்தப்பட்டது. பரீக்ஷித் மஹாராஜன் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இது நடத்தப்பட்டது. அப்பொழுது மயன் தலைமையில் சென்ற ஒரு குழு தென் அமெரிக்காவில் மாயன் (MAYAN) நாகரீகத்தை நிறுவியது
பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதாயை நமஹ नर्मदायै नमः प्रातः नर्मदायै नमो निशि என்ற மந்திரத்தில் பாம்புகளையும் ரிஷிகளான ஜரத் காரு, ஆஸ்தீகர், மன்னரான ஜனமேஜயர் ஆகியோர் பெயரையும் சொல்லி சந்தியா வந்தனம் செய்கிறார்கள். ஆக ரிக் வேத காலத்தில் துவங்கிய பாம்பு வழிபாடு 5000 ஆண்டுகளாக நீடித்து வருவது கண்கூடு.
(யஜுர்வேத சந்தியாவந்தன மந்திரம்)
நர்மதாயை நமஹ பிராதர் நர்மதாயை நமோ நிசி
நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹிமாம் விஷ சர்பதஹ
அபசர்ப்ப சர்ப்ப பத்ரந்தே தூரம் கச்ச மஹாயசாஹா
ஜனமேஜஸ்ய யக்ஞாந்தே ஆஸ்தீக வசனம் ஸ்மரன்
ஜரத்காரோர் ஜரத்கார்வாம் சமுத்பன்னோ மஹாயசாஹா
ஆஸ்தீக சத்ய சந்தோமாம் பன்னகேப்யோ அபிரக்ஷது
பன்னகேப்யோ அபிரக்ஷது ஓம் நம இதி
***
ஜனமேஜயன்
மஹாபாரத போருக்குப் பின்னர், ஹஸ்தினாபுரத்தை ஆண்ட மன்னன் ; பரீக்ஷித் மன்னனின் மகன்; அர்ஜுனனின் பேரன் ; பரீக்ஷித்தை நாக வம்ச காட்டு வாசிகள் கொன்றதால் அவர்களைக் கொல்வதற்கு சர்ப்பயாகம் நடத்தியவன்; அதன் கதை பின்வருமாறு :
காண்டவ வனத்தை அர்ஜுனனும் கண்ணனும் அழிக்கப் போவதாக அறிவித்தனர். காடு திருத்தி நாடக்குவது மன்னர் கடமைதான். இருந்தாலும் காண்டவ வனத்தை விட்டுவிடுங்களேன் அந்த இடத்தில் வாழ்ந்த நாகர்கள் மன்றாடினார்கள் (காண்டவ இனத்தவரை கோண்ட் GONDS என்றும் அந்த நிலத்தை கோண்ட்+ வன GOND+ VANA/FOREST என்றும் எழுதுவார்கள்; பலருக்கு இது தெரியாததால் அர்த்தம் புரியாமலேயே கோண்ட்வானா லாண்ட் GONDWANA LAND என்று மேப் MAP புகளில் எழுதி வருகின்றனர்).
நாகர் இனத்ததுக்கும் பாண்டவ இனத்துக்கும் இடையே பகைமை வளர்ந்தது. இந்த நேரத்தில் அந்த வம்சத்தில் வந்த பரீட்சித் ஒரு நாக சந்நியாசியை அவமானப்படுத்தவே ஏழே நாட்களில் உன்னை ஒரு நாகன் கொல்லுவான் ; பிடி சாபம் என்கிறார். பரீட்சித் பிரம்மாண்ட பாதுகாப்பு அரணை ஏற்படுத்தி ஒளிந்து கொண்டார்; அரண்மனைக்குள் பழங்கள் கொண்டுவரும் கூடையில் ஒரு நாகர் ஒளிந்து வந்து பரீட்சீத்தைத் தீர்த்துக்கட்டினார் ; உடனே அவர் மகன் ஜனமேஜயன் , கிடைத்த நாகர்களை பிடித்து படுகொலை செய்யவே ஆஸ்தீகர் என்பவர் தலையிட்டு சமாதான உடன்படிக்கை செய்வித்தார் ( இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த உடன்படிக்கையை பிராமணர்கள் தினமும் நர்மதாயை நமஹ என்ற மந்திரத்தில் சொல்லி வருகின்றனர் ).
இப்படி நாகா இன மக்களை பரீட்சித்தின் மகன் ஜனமேஜயன் படுகொலை செய்ததால் அவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. அவனை குருவாயூருக்குப் போய் தவமிருந்தால் குஷ்ட நோய் நீங்கும் என்று தத்தாத்ரேயர் அறிவுரை வழங்கினார். அவரும் அவ்வாறே செய்து நோய் நீங்கியதால் குருவாயூரப்பன் மஹிமை எல்லோருக்கும் புரிந்தது .
***
ஜபம்
மனதிற்குள் உருப்போடுதல்; இறைவனின் நாமத்தை ஜபமாலையை வைத்துக் கொண்டோ அது இல்லாமலேயோ முனுமுனுத்தல்.
***
ஜாதகர்ம
பிறப்பு முதல் இறப்பு வரை இந்துக்கள் செய்யும் நாற்பது கருமங்களில்– செயல்களில்– ஒன்று; குழந்தை பிறந்தவுடன் அதன் நாக்கில் மந்திரங்களைச் சொல்லி நெய்யினைத் தடவும் கிரியை.; நாற்பது என்பதை ஷோடச/ பதினாறு கர்மங்கள் என்றும் சொல்லுவார்கள்; மனு ஸ்ம்ருதி முதலிய சட்டப் புஸ்தகங்களில் இதைக் காணலாம்.
***
ஜாதி
ஒருவருக்கு பிறப்பினால் ஏற்படும் பிரிவினை; வேத காலத்தில் பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்திர என்ற நான்கு ஜாதிகள் மட்டும் இருந்தன; இப்போது ஆயிரக்கணக்கில் ஜாதிகள் உள்ளன . தொழில் முறையில் ஏற்பட்ட பிரிவுகள் குலத் தொழில் காரணமாக பிறப்பினால் சொல்லப்பட்டது .
உயர்ந்த வகைப் பொருளுக்கும் இதைப் பயன்படுத்துவர் உ-ம். ஜாதி மல்லி.
இன்ன வகை என்ற பொருளிலும் வரும். …… இந்த ஜாதி மாம் பழம் ; இந்த ஜாதி ….. குதிரை etc
To be continued………………………….
–Subham—
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 36; இந்துமத கலைச்சொல் அகராதி-37, ஜாதி , நாவலந் தீவு, ஜகத் குரு
இவைகளை ஏந்தியவனும், மகா காளி வெட்கும்படியாக முன்னர்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும்
வருவோனே … சபைதனிலே நடனம் ஆடியவனான சிவபிரானை,
சிறந்த தந்தையே என்றழைக்கவும் வந்தவனே,
****
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை … பல கலைகளைப்
படித்து ஓதும் கவிஞர்களின் நாவிலே வாசம் செய்கின்ற
இருசரண வித்தார வேலாயுதா … இரு திருவடிகளை உடைய
வித்தகனே, வேலாயுதனே,
உயர்செய் பரண்மிசை குறப்பாவை … உயரத்தில் கட்டப்பட்ட
பரணின் மீது இருந்த குறப்பெண் வள்ளியின்
தோள்மேவ மோகமுறு மணவாளா … தோள்களைத் தழுவ மிக்க
ஆசை கொண்ட மணவாளனே,
பதுமவயலிற் பூகமீதே வரால்கள் துயில் வருபுனல்
பெருக்காறு … தாமரை மலர்கின்ற வயலிலும், பாக்கு மரங்களின் மீதும், வரால் மீன்கள் உறங்கும்படி வரும் நீர்ப்பெருக்கை உடைய ஆறாகிய
திருப்புகழில் பூகோள பாடம்
காவேரி சூழவளர் பழநிவரு … காவேரி சூழ விளங்கும் பழநியில் எழுந்தருளிய,
****
பழனி மலையைச் சுற்றி ஓடும் நதி
பழனி மலையைச் சுற்றி ஓடும் முக்கிய நதி சண்முக நதி ஆகும். இது அமராவதி ஆற்றின் துணையாறாகும், மேலும் இந்த நதி பழனி மலைச் சரிவுகளில் உற்பத்தியாகி, பழனி நகரத்திற்கு அருகில் உள்ள சக்தி கிரி மற்றும் சிவகிரி மலைகளுக்கு அருகில் பாய்கிறது.
நதியின் பெயர்: சண்முக நதி (Shanmuganathi).
உற்பத்தி: பழனி மலைச் சரிவுகள் (Palani Hills).
இது அமராவதி ஆற்றின் ஒரு துணையாறு ; அது இறுதியில் காவிரியில் கலக்கிறது.
பாயும் இடம்: பழனி முருகர் கோயில் அமைந்துள்ள அடிவாரத்தில் இந்த நதி பாய்கிறது.
மேலும், பழனி மலைப்பகுதிகள் Vaigai மற்றும் Amaravathi ஆறுகளின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாகவும் விளங்குகிறது
****
கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே. … பச்சைக் கற்பூர மணம்
கமழும் அலங்கார ஆடம்பரனே, தேவர்களின் பெருமாளே.
***
பெரிய புராணக் கதை , சோழநாட்டின் பெருமை
நாத விந்து கலாதீ நமோநம … லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய
தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி,
வேத மந்த்ர சொரூபா நமோநம … வேதங்கள், மந்திரங்கள்,
இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி,
ஞான பண்டித ஸாமீ நமோநம … பேரறிவுக்குத் தலைவனான
தெய்வமே, போற்றி, போற்றி,வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம … பல கோடிக்கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி
போக அந்தரி பாலா நமோநம … (அனைத்து உயிர்களுக்கெல்லாம்)
இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி
நாக பந்த மயூரா நமோநம … தன் காலினால் பாம்பை அடக்கிக்
விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே)
ஆதி அந்தவுலாவாசு பாடிய … ஆதி உலா எனப்படும் அழகிய
(கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில் … சேரர் பெருமானாம்
சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து
வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. … திரு
ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு
கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.
* இது ‘திருக்கற்குடி‘ அல்லது ‘உய்யக்கொண்டான்‘ என்று வழங்கப்படும்.திருச்சிக்கு அருகில் வயலூருக்குப் போகும் வழியில் உள்ளது.
** கொங்கு நாட்டின் மன்னனாக 1,150 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான்பெருமான் ஆண்டார். அவர் சைவக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின்நண்பர். சிவபிரான் சுந்தரரை கயிலைக்கு அழைத்தபோது, சுந்தரர் தமதுநண்பரும் உடன்வர வேண்டுமென விரும்பினார். சேரமான் குதிரையில்ஏறி கயிலைக்கு விரைந்து சென்றார். சுந்தரர் இன்னும் வராததால்கயிலையின் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது சேரமான் ‘ஆதிஉலா‘ என்ற பாடலைப் பாட, கயிலையின் கதவுகள் திறந்தன.சுந்தரருடன் சேரமான் கயிலைப் பதம் சேர்ந்தார். – பெரிய புராணம்.
***
பல்லக்கில் பவனி வரும் போலிப் புலவர்களின் தோற்றம் !
நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு(ம்) நெருடு கவி
கொண்டு வித்தை பேசிய … வேதப் பொருள் என்றால் ஒரு சிறிதும்
தெரியாமல், தினமும் (அங்குமிங்கும் கற்ற) மொழிகளைத் திரித்து இயற்றிய
நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா … போலிக்
கவிகள் சில அற்பச் சொற்களைக் கற்று, ஆடம்பரமான பட்டப் பெயர்களைவைத்துக்கொண்டு,
நெளிய முது தண்டு சத்ர(ம்) சாமர(ம்) நிபிடம் இட வந்து …
முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து
இருக்குமோ எனில் … அவர்களது முகமானது, ஒரு செய்யுளும்
வசனமும் கலந்த நூல்களும், திருக்குறள் போன்ற பழைய நூல்களும்விளக்கக் கூடுமோ என்று கேட்டால்,
முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி முறியும்
அவர் தங்கள் வித்தை தான் இது … அவை ஒன்றும் தெரியாததால்
வெட்கத்தால் (முகம்) வெளுத்து, இறுதியில் மனம் குலைந்து
போனவர்களுடைய வித்தைதான் இக்கல்வி எல்லாம்.
முடியவு(ம்) உனை நின்று பத்தியால் மிக மொழியும் வளர்
செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே … (இத்தகைய கல்வி
போதும்,) இது முடிவதாக (இனியேனும்) உன்னை மனம் ஒரு வழியில்நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்றசெவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வரும்படி அருள்வாயாக.
To be continued……………………………
Tags- திருப்புகழில் ,அருணகிரி நாதர், சொல் அழகும், பொருள் வளமும்- Part 9, அரிய செய்திகள்-, டாக்டர்கள், நோய்கள், காவேரி, சோழநாடு, போலிப்புலவர்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 37
Item 222
Akanānūru 17 composed by poet Kayamanār has interesting information about Tamil girls’ games and a few similes.
The poet’s name itself is interesting. We don’t know his given name. It is only a name given by the compilers of Akananuru anthology. It means Tank or water source. Because he has used this Kayam/water source in one of his poems, they named him Mr Tank or Mr Lake.
***
223
We come across the games played by Tamil girls 2000 years ago. They played ball games and jugglery with bean seeds.
Ball game originated in India. They made balls with flowers or cloth. It is like our ball badminton. But they did not use a net; they simply played throw and catch and jugglery.
With the big seeds from the bean plants, they played jugglery. Depending upon the skill of the player they used more seeds; throwing them up and catching them before they fell on the ground and at the same time more seeds are picked up from the ground. This type of jugglery is seen in Covent Garden in London and other town centres around the world.
***
224
The similes used by the poet is also interesting. The flowers from the silk cotton tree (Ilavam in Tamil) falling on the ground in the gusty wind are compared to the flame in the mud lamp. And the bare tree left with a few flowers is compared to a few stars in the morning sky. It is true that we see bright planets like Venus and Jupiter and bright stars like Sirius, Betelgeuse or Canopus when the sun is rising in the horizon.
Other scenes with salt vendors carts, Ya trees with torn barks are not uncommon. But the poet talks about jewels as well. Anklets in girls’ feet, bangles in her friends’ wrists.
***
225.
Last but not the least poet appreciates the courage of the teenage girl saying that she is too intelligent for her age. The reason for this is earlier she complained pain in her limbs when she played ball game and bean seed game. Now she is ready to run away with a youth along the arid, desert like region what Tamils call Paalai land.
சிறுமுதுக்குறைவி too intelligent for her age :வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும் throwing ball game; இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்juggling with large bean seeds
***
226
Akanānūru 18, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Akanānūru 18 composed by the most celebrated Sangam poet Kapilar has not much interesting details. The message of the poem is that the lover should come and meet the lady love in daytime instead of dangerous nighttime. If something happens to him she will die and we, her friends, will be in agony. And the hazards in his way are described graphically: flooded wild river in the mountain, floods dragging rut elephants, but courageous wild boar crossing it in spite of crocodiles lying on the rocks. When he comes to the meeting place, we are shown beautiful flowering trees with honeycombs
Indirectly saying ‘get married soon without taking great risk’. Kapilar is very good in portraying nature.
***
227
Akanānūru 19 composed by Porunthil Ilankeeranār has nothing new except a comparison between the owl and makuli drum. Both emit similar sounds. One more point should be noted. The owls don’t hoot without meaning; they speak with meaning like drums, says the poet. The hero speaking to himself about leaving his wife on a business trip; we come across Makuli drum, a musical instrument.
***
228
Speaking Drums
African tribes use drums to convey messages. Different types of beating convey different messages for their tribe at a distance. Here also Tamil commentators add such messages in the commentary for this verse. Tamil commentators hear the drums saying குத்திப்புதை, சுட்டுக்குவி meaning stab and bury; burn and pile up (see Manikkanar commentary in Varthamanan Pathippakam publication)
Three Old Articles written by me from Year 2014
தமிழ் முரசு, டமாரம் பற்றிய அதிசயச் செய்திகள்
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1386; தேதி நவம்பர் 3, 2014.
தமிழில் முரசு, பணை, முழவு, பறை பற்றிய பல சுவையான செய்திகள் இருக்கின்றன. முதலில் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியச் செய்திகளைக் காண்போம்.
1.அரசனுக்குப் பத்து அடையாளச் சின்னங்கள் உண்டு. அதில் ஒன்று முரசு. சங்கத் தமிழ் நூல்களில் முரசுடை மூவேந்தர் என்று சேர சோழ பாண்டியர் பாராட்டப்படுவர். மாணிக்கவாசகப் பெருமான் சிவபெருமானை அரசனாக வைத்துப் பாடிய திருத் தசாங்கத்திலும் பாரதியார், பாரத மாதாவை ராணியாக வைத்துப் பாடிய திருத் தசாங்கத்திலும் முரசு பற்றிய பாடல்களைக் காணலாம் (தச + அங்கம் = தசாங்கம்)
இன்பான் மொழிக் கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பான் முழங்கு முரசு இயம்பாய் — அன்பாற்
பிறவிப் பகை கலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை (திருத் தசாங்கம், திருவாசகம்)
2.கோட்டை வாயில் கொத்தளங்களில் முரசுகள் வைக்கப்படிருந்தன. கம்ப ராமாயண பால காண்ட, திரு அவதாரப்படலத்தில் கம்பனும் அயோத்தி மாநகர கோட்டையின் மேல் முரசுகள் முழங்கியதைப் பாடினன்.
3.முரசுகள் மூவகைப்படும்: கொடை முரசு, படை முரசு, மண முரசு என்னும் மூவகை முரங்களும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கு மாகலின் முரசு முழங்கு நெடுநகர் எனப்பட்டது என்று பதிற்றுப்பத்து பாடலுக்கு (2-7) உரை எழுதிய மி.பொன். இராமநாதன் செட்டியார் கூறுவர்.
4.போரில் முழக்கப்படும் வெற்றி முரசினைத் தெய்வமாகவே கருதி வீரர்கள் வழிபட்டதை சங்க இலக்கிய நூல்களில் பரக்கக் காணலாம். வீரர்கள் தாம் பெற்ற வெற்றி மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டே சென்று முரசை வழிபாட்டனர் என்று பதிற்றுப்பத்து (2-17-5/10) கூறும்
5.முரசில் உறையும் தெய்வத்துக்கு மாமிசம், ரத்தம், சோறு கலந்த பிண்டம் பலியாகத் தரப்பட்டது. இது பற்றி பதிற்றுப்பத்து (3- வரி30/39) உரையில் செட்டியார் அவர்கள் கூறுவதாவது:- தன் படை வீரர்கட்கு கடிய சினம் தோன்றுமாறு பேரொலியுடன் உச்சரிக்கப்படும் மந்திரத்தால் அரிய வெற்றியினைத் தரும் மரபுடைய முரசுறைக் கடவுளை வணங்கும் பொருட்டு, அக்கடவுளை வழிபடுவோன் பெறுதற்கரிய பிண்டத்தினைத் தன்கையில் ஏந்தி நின்றான். அப்பிண்டத்தைக் கண்டு கொடிய கண்களையுடைய பேய்ப் பெண் கைபுடைத்து நடுங்கினாள். அப் பிண்டம் போன்றே இரத்தம் கலந்த, நிறைந்த கள்ளினையுடைய பெரிய பலியினை எறும்பும் மொய்க்காது. பருந்தும் காக்கையும் மட்டுமே உண்ணும்.
6.முரசு வைக்கப்படும் கட்டில் புனிதமானது. மோசிகீரனார் என்ற சங்கப் புலவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனைப் பாடி பரிசில் பெற வந்தார். வந்த களைப்பில் முரசுக் கட்டிலில் படுத்து உறங்கிவிடார். இந்தக் குற்றத்துக்கு மரண தண்டனை கிடைத்திருக்கும். ஆயினும் புலவரின் நிலைமை கண்ட மன்னன் அவருக்கு கவரி வீசி மேலும் நன்றாகத் தூங்க உதவினான். வறுமை கண்டு மனம் இறங்கி அவருக்குப் பரிசு கொடுத்தான் என்று சங்க இலக்கியம் (புறம்.50) மூலம் அறிகிறோம்.
7. முரசுக்குப் போர்த்தும் தோல் வீரம் மிகுந்த காளை மாட்டின் தோலாக இருக்க வேண்டும் என்பது தமிழர் கொள்கை புலியைக் கொன்ற காளை மாட்டின் தோலை வைத்து முரசு தயாரிப்பர். புனை மருபு அழுந்தக் குத்திப் புலியொடு பொழுது வென்ற கனை குரல் உருமுச் சீற்றக் கதழ் விடை (காளை) உரிவை (தோல்) போர்த்த துனை குரன் முரசத் தானை (படை) – என்று சிந்தாமணிச் செய்யுள் கூறும்.
8.இனி ஆ.சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணி எனப்படும் தமிழ் என்சைக்ளோபீடியாவில் (கலைக்களஞ்சியம்) சொல்லும் சுவையான செய்திகளைக் காண்போம்: வீர முரசு, நியாய முரசு, தியாக முரசு என்று முரசு, மூன்று வகைப்படும். இதனை ‘’இமிழ் குரல் முரசு மூன்றுடனாளும் தமிழ் கெழு கூடல்’’ என்பதால் அறிக. இதனுள் வீர முரசினை நீராட்டிக் கடலேற்றி ஒலி நெடும் பீலியும், ஒண் பொறி மணித்தாரும் (மயில் தோகை + மாலை ), பொலங் குழை உழிஞையும் பொலியச் சூட்டி ( உழிஞைப் பூ) குருதிப் பலியீந்து (ரத்தம் கலந்த சோறு) பூசித்தல் பண்டைய வழக்கு (புறநானூறு பாடல் 50).
9. புறப் பொருள் வெண்பா மாலையில் முரசவாகை என்னும் துறை — பலியைப் பெறும் முரசு பற்றிக் கூறும் துறை என்றும் —பொன்னால் செய்த உழிஞை அணிந்து ஆடு வெட்டி பலி கொடுக்கும் முரசின் தன்மையைக் கூறும் துறை முரச உழிஞை என்றும் சொல்லப்பட்டுள்ளது.
.
வள்ளுவர் யார்:–
10.வள்ளுவர் யார்:– திருக்குறளை யாத்து உலகப் புகழ்பெற்ற — தமிழுக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்த — வள்ளுவர், பறை அறிவிக்கும் ஜாதியைச் சேர்ந்தவர் என்று பழைய நூல்கள் பகரும். இது பற்றி சிங்கார வேலு முதலியார் (அபிதான சிந்தாமணி) கூறுவதாவது: பழங்குடியினரில் பாணரை அடுத்து திராவிடரால் மதிக்கப்படவர் இவ்வகுப்பினர். இவர் அரசர் பால் கருமத் தலைவராயும், யானை மேலிருந்து முரசு அறைந்து அரசாணை சாற்றுவோராயும் (அதாவது அரசரின் உத்தரவுகளை யானை மீது ஏறிச் சென்று அறிவிப்போர்) விளங்கினர். இக்குடியினர் இன்றும் உளர்.
இவர் பறையில் சற்று உயர்ந்தவர். இவர்கள் பறையர்களுக்குப் புரோகிதர்கள்— இவர்கள் பிராமணர்கள் புரோகிதர் ஆகாமுன் பல்லவ அரசர்களுக்குப் புரோகிதம் செய்திருந்தவர்கள். இவர்களில் சிலர் புரோகிதம் செய்தும் சோசியம் சொல்லியும் வாழ்கிறார்கள். இவர்களிர் சிலர் தாசிரியராகவும் பூணூல் தரிப்பவராகவும் இருப்பர். இவர்களில் லிங்கதாரிகளும் உண்டு. இவர்களில் இரண்டு பிரிவுகள்: -அறுபது கக்ஷி, நாற்பது கக்ஷி. முதல் கூறியவன் நந்திக்குருக்களின் சந்ததியான்; மற்றவன் சிதம்பர சாயுச்சிய ஐயங்கார் வகையினன்; திருப்பணாழ்வார் குலம் என்பர். இவர்கள் திருவள்ளுவரைத் தங்களினத்தவர் என்பர் (தர்ஸ்டன்)
(அதாவது தர்ஸ்டன் என்பவர் ஜாதிகள் பற்றிச் சேகரித்து ஆங்கிலத்தில் ஏராளமான தொகுதிகளாக வெளியீட்டதில் இருந்து முதலியார் மொழி பெயர்த்தது)
11.தோல் இசைக் கருவிகள் என்ற தலைப்பில் தமிழ்ச் சொற்றொடர் அகராதி (வீ ஜெ செல்வராசு) தரும் தகவல்:–
12. ஆப்பிரிக்க நாடுகளில் டமாரம் மூலம் செய்திப் பரிவர்த்தனை செய்வர். — பழங்குடி மக்கள் முரசு ஒலி மூலமே பேசிக்கொள்வர். இது போன்ற செய்தி, இரண்டு சங்கப் பாடல்களிலும் வருகிறது. பாலைவனம் வழியாக அல்லது காடு வழியாக வணிகர்கள் செல்வர். கொள்ளையர் தாக்குவர் என்பதாலும், ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்பதாலும் வண்டிகளில் தொடர்ச்சியாகச் செல்லுவர். இவர்களை மரம் அல்லது குன்று உச்சியில் இருந்து உளவு பார்க்கும் கள்ளர்கள் தண்ணுமை என்னும் பறையை முழக்கிக்கொண்டு வந்து தாக்குவர். இது பற்றி குறுந்தொகை (390) அகநானூறு (63) ஆகிய பாடல்களில் கருவூர்க் கண்ணம்புல்லனாரும், உறையூர் முதுகொற்றனும் சில செய்திகளைத் தருவர்:–
காதலனும் காதலியும் பாலைவனம் வழியே போவதைக் கண்ட பெரியோர், “சூரியன் மறைந்து விட்டான், பொழுது சாய்ந்துவிட்டது, ஆறலைக் கள்வரின் தண்ணுமை ஒலி கேட்கத் துவங்கும். போகாதீர்கள்”.
ஒரு தாய் தன் மகளிடம் கூறுகிறாள்:
காதலனுடன் அவள் போய்விட்டாள் என்பதற்கு நான் வருந்தவில்லை. களவுத் தொழிலை உடைய எயின மறவர் இசைக்கும் தண்ணுமை ஒலி கேட்டு இவள் பயப்படுவாளே என்றுதான் வருந்துகிறேன்.
இது பழைய தமிழகத்தின் நிலையைப் படம்பிடித்துக் காட்டும். இரவுநேரத்தில் வறண்ட பாலை வழியாகச் செல்வோரை கள்ளர்கள் பறை ஒலி எழுப்பிக் கொண்டு வந்து தாக்குவர். அவர்கள் ஒலி கொடுப்பது மற்றவர்களை நடுங்கச் செய்யவும், தனது கூட்டத்தினருக்கு செய்தி கொடுக்கவும் என்று சொல்லலாம்.
பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள்
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1387; தேதி நவம்பர் 3, 2014.
உலகிலேயே மிகப் பழைய நூல் ரிக் வேதம்— ஜெர்மன் ‘அறிஞர்’ மாக்ஸ் முல்லர் கி.மு. 1200-க்குக் கீழ் இதை யாரும் கொண்டு வரவே முடியாது என்று எழுதிவிட்டுச் சென்றார். இப்போது வேத கால சரஸ்வதி நதி நீர் பாலை வனத்துக்கு அடியில் செல்வதும், அதை ரேடியோ ஐசடோப் முறையில் ஆராய்ந்து அதன் பழமையைக் கண்டதும் வேதத்தை மெதுவாக கி.மு. 1700-க்குக் கொண்டு சென்றுள்ளது. இந்துக்களைச் சீண்டுவவதையே பொழுது போக்காக – தொழிலாகக் கொண்ட அமெரிக்க ‘அறிஞர்களும்’ ரிக் வேதத்தின் பழைய பகுதி கி.மு 1700 என்று எழுதத் துவங்கிவிட்டனர்.
ஆனால் ஸ்ரீகாந்த் தலகாரி போன்றோர் ரிக்வேத மன்னர் வம்சாவளிகளை வரிசைப்படுத்தி இது இன்னும் பழமையுடையது என்று நிரூபித்து வருகின்றனர். இதை எல்லாம் கொண்டு பார்க்கையில் உலகில் முரசு, டமாரம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததும் நாமே என்று சொல்லத் தோன்றுகிறது. ஆயினும் எகிப்து போலவோ, பாபிலோனியா போலவோ நம்மால் “படம் காட்ட” முடியவில்லை!! ( நம்மிடையே படங்கள் இல்லை!!)
எது எப்படியாகிலும் இலக்கியச் செய்திகளில் நம்மை விஞ்ச எவரும் இல்லை இத்துறையில் — சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள அதிசய தமிழ் முரசுச் செய்திகளைத் தனியே தந்துவிட்டேன்.
பூமி துந்துபி என்னும் ஒரு வாத்தியம் பற்றி வேத இலக்கியங்கள் சொல்லும். அதாவது பூமியில் பெரிய குழி வெட்டி அதன் மீது மிருகத்தின் தோலைப் போர்த்தி அதை வாசிப்பது பூமி துந்துபி என கீத், மக்டொனல் தயாரித்த வேதிக் இண்டெக்ஸ் கூறும். இது மஹாவ்ரத யாகம் செய்யும்போது வாசிக்கப்படும் – துஷ்ட சக்திகளை விரட்ட இதன் இசை ஒலி உதவும் — சூரியன் தென் திசை செல்லுகையில் வட கோளார்த்தத்தில் இருளும் குளிரும் சூழும். அப்போது இது நிகழும்.
மஹா வ்ரத யாகம் பற்றி அக்னிஹோத்ரம் ராமானுஜாச்சாரியார் என்னும் பேரறிஞர் எழுதிய விஷயம் இந்து நாளேட்டில் வெளியாகி இருக்கிறது. அப்போது வேத கால இன்னிசைக் குழு (ஆர்க்கெஸ்ட்ரா) வாசித்தது. ஏராளமான வாத்தியங்களின் பெயர்களை வேத கால இலக்கியங்களும் அதற்குப் பின் எழுந்த அமர கோஷம் போன்ற நிகண்டுகளும் அள்ளித் தருகின்றன. இதோ மஹவ்ரத யாக இன்னிசை நிகழ்ச்சி:
‘ வேத யாகங்களில் உத்காதா, ஹோதா, அத்வர்யூ என்று பல பொறுப்புகளில் புரோகிதர்கள் இருப்பர். இவர்களில் உத்காதா நாற்காலியில் அமர்ந்து இருக்க, ஹோதா ஊஞ்சலில் ஆடுவார்; அத்வர்யூ பலகையில் அமர்வார். அப்போது சுமார் 100 கம்பி கொண்ட வானா என்ற இசைக்கருவி உள்பட சுமார் 20 வகை இசைக்கருவிகள் இசைக்க, பெண்கள் வட்ட வடிவில் நின்று கால்களால் தாளமிட்டு நகர்வர். அவர்கள் தலைகளில் நீர்க்குடங்கள் இருக்கும் அதாவது கரக ஆட்டம் ஆடுவர். இதுதான் கரக ஆட்டத்தின் தோற்றம்!!
வாண என்ற இசைகருவியே தமிழில் — பண், பாண, யாழ் பாண — என்ற சொற்களை கொடுத்ததா என்று ஆராய்தல் நலம். வேதத்தில் உள்ள யசஸ் – தமிழில் இசை என்று மாறியது. இரண்டுக்கும் புகழ், புகழ் பாடுதல் என்ற பொருள்கள் உண்டு. இது போன்ற நூற்றுக் கணக்கான சொற்களைப் பார்க்கும் எனக்கு, இரண்டு மொழிகளும் ஒரே மூலத்தில் இருந்து உதித்தன என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. நிற்க.
(வேதத்தில் எந்தெந்த இடங்களில் இந்தக் குறிப்புகள் உளது என்று அறிய விரும்புவோர் எனது ஆங்கிலக் கட்டுரையைக் காண்க)
ஆடம்பரம் – தோன்றிய வரலாறு
வேதத்தில் ‘’ஆடம்பர’’ என்னும் டமாரம் பற்றியும் வேறு பல முரசுகள் பற்றியும் செய்திகள் உள. தமிழில் “அவர் ஆடம்பரமாக கல்யாணம் செய்தார், ஆடம்பரமாக வாழ்கிறார்” — என்று சொல்லுவோம். உண்மையில் இந்த ஆடம்பரம் என்னும் கொட்டு கொட்டிக் கொண்டு நிகச்சிகள் செய்ததையே அப்படி சொல்கிறோம் என்றே தோன்றுகிறது. ஆக ஆடம்பரம் என்ற சொல் அத்தகைய நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படும் வாத்யமாகும்.
துந்துபி= தும் தும் பி = என்ற சொல்லில் இருந்து டமாரம், ட்ரம் என்ற சொற்கள் உருவானதையும் காணலாம். அமளி துமளி என்பதில் துமுல என்பது வடமொழிச் சொல். அதாவது “அமர/சமர துமுல” என்பது போர்க்கள ஒலியாகும். இவை எல்லாம் பகவத் கீதை முதல் அத்தியாயத்தில் உள. இதில் இருந்தே “டமல்சுவஸ்” என்ற ஆங்கிலச் சொல்லும் உருவானது.
போர்க்களத்தில் பீஷ்மர் சங்கு ஊதி போரைத் துவக்கினார். அப்போது யார் யார் என்ன சங்கு ஊதினர், பணவ கோமுக வாத்தியங்கள் திருதராஷ்ட் ரர்களின் நெஞ்சையும் விண்ணையும் மண்ணையும் எப்படி அதிரச் செய்தன என்றெல்லாம் பகவத் கீதை முதல் அத்தியாயம் எடுத்த எடுப்பிலேயே வருணிக்கிறது. இதில் துமுல, பணவ (சங்க இலக்கியத்தில் பணை= முழவு= முரசு) என்ற சொற்களைக் காண்க. போர்க்களத்தில் முரசு கொட்டும் வழக்கம் வேத கால வழக்கம் என்பது ரிக்வேதத்தில் ஐயம் திரிபற உறுதியாகிறது.
ரிக் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களை நாம் அன்றாடம் தமிழ் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம். பூமி என்றும் அதையே தமிழ்ப்படுத்தி புவி என்றும் சொல்லுகிறோம்
வேதம் கூறும் லம்பர, வனஸ்பதி, ஆடம்பர ஆகிய டமாரங்கள் தவிர சிவனின் டமருகம் தான் சம்ஸ்கிருத மொழியின் மூல எழுத்துக்களான 14 மாஹேஸ்வர சூத்ரங்களைக் கொடுத்தது என்பர் ஆன்றோர். அதையே தமிழுக்கும் மறைமுகமாகச் சொல்வர் பரஞ்ஜோதி முனிவர். வடமொழியைப் பாணிணிக்கும் அதற்கு இணையான தமிழ் மொழியை குட முனிக்கும் (அகஸ்தியர்) கொடுத்தவனே என்று சிவனைப் புகழ்வார் பரஞ்சோதி. ஆக தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தில் வந்தவை என்பது இப்பாட்டில் இருந்து தெள்ளிதின் விளங்கும். இதனாலன்றோ ஆழ்வார்களும் நாயன்மார்களும் இவ்விரு மொழிகளைக் கண் எனப் போற்றினர்.‘’டாம்டாம்’’ என்ற ஆங்கிலச் சொல்லும் (தமுக்கு அடித்தல்) இந்தியர் உருவாக்கிய சொல்லே. இதை ஆங்கில அகராதியில் காணலாம். நான் சிறு வயதாக இருக்கையில் மதுரையில் தொற்று நோய்கள் (அம்மை, காலரா) பரவும்போதும் , 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் இப்படி தமுக்கு அடித்துச் சொன்னதை கேட்டிருக்கிறேன். வள்ளுவர் யானை மீது இருந்து பறை அறிவித்து அரசு ஆணைகளை வெளியிட்டவர் என்பதை முன் ஒரு கட்டுரையில் தந்துள்ளேன்.
நாமும் தமுக்கு அடிப்போம்: தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்று!!
நாமும் பறை கொட்டுவோம்: தமிழும் சம்ஸ்கிருதமும் இரு கண் என்று!
தமிழ் டமாரம் பற்றிய அதிசயச் செய்தி
Date: 10 AUGUST 2019
Post No. 6756
ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள் முரசு அடித்து செய்திகளைப்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நான் லண்டனில் வாழும் வெம்பிளி பேட்டை, BRENT COUNCIL பிரென்ட் என்னும் நகரசபையின் கீழ் உள்ளது . இதை இலங்கைத் தமிழர்கள் எழுதுகையில் பிரென்ற் என்று எழுதுவார்கள். அவர்கள் நடத்தும் பள்ளிக்கூட அளவிலான கிரிக்கெட் போட்டிகளை பாடசாலை கிரிக்கெற் போட்டி என்று அறிவிப்பார்கள் . விக்கிப்பீடியாவுக்குப் போனால் அவர்கள் கனடா நாட்டிலுள்ள டொராண்டோ , ஒண்டாரியோ பெயர்களை எப்படி எழுதுகிறார்கள் என்று காணலாம் . இதோ விக்கிப்பீடியா :
ரொறன்ரோ= Toronto in Canada
தொராண்டோ (ஆங்கிலம்: Toronto; இலங்கை வழக்கம்:ரொறன்ரோ, தமிழக வழக்கம்: டொராண்டோ) . இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும், ஒன்ரோறியோ மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில் (ONTARIO ஒன்ட்டாரியோவில்), ஒன்ரோறியா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
***
இது பற்றி வியப்புடன், ஒரு இலங்கைத் தமிழரை இதை எப்படி உச்சரிப்பீர்கள் என்று கேட்டபொழுது டொரோண்டோ என்றார்
எழுதும்போது ஆங்கில “டி ” அல்லது தமிழ்ச் சபதத்திற்கு “ற்” என்று எழுதுகிறார்கள். இது வேறு எங்கும் இல்லாத வினோத இலக்கணம் . தமிழில் “ற்” எண்டு முடியும் சொற்களைக் காண முடியாது. ஆனால் இடையில் வரும்போது “டி ” என்னும் ஒலி “ற்” ஆக மாறுவதை நம்மாழ்வார் பாசுரங்களில் காணலாம் . பத்மநாபன் என்பதை ப”ற்”பானாபன் என்று சொல்லி அவர் பாடுகிறார் .
தமிழ் இலக்கணப்படி கல், பல், சொல் என்பதெல்லாம் இடையில் வரும்போது கற்குவியல், பற்பொடி, சொற்கள் என்று மாறுவதைக் காண்கிறோம் ஆனால் துவக்கத்திலும் இறுதியிலும் காண முடியாது எப்படி யாழ்ப்பாணத்தில் மட்டும் இப்படி வந்தது என்பது ஆராய்ச்சிக்குரியதே !
பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன்,
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம், என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன், விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே. 2-7-11
***
கிறி உறி மறி நெறி
கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே,
உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்,
மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை,
நெறி பட அதுவே நினைவது நலமே. 2-10-6
English translation of verse 2.10.6:
Desist from base deeds and remember
‘Tis good to think solely of traversing the road
Which leads to Māliruñ Cōlai where live together
Herds of deer and young ones and stays our Lord,
Who from hanging hoops ate up all the butter.
(From wisdomlib.org)
நம்மாழ்வாருக்கு மிகவும் பிடித்த சொற்கள் சில; இராப் பகல் என்பதை நிறைய பாசுரங்களில் உபயோகிக்கிறார் அது போல கிறி என்ற சொல்லும் அவருக்கு மிகவும் பிடித்த சொல்.
பொய், வஞ்சம், தந்திரம், மாயாஜாலம், வழி, குழந்தைகளின் முன் கையில் அணியும் ஆபரணம்.
இங்கு வழி , நல்ல வழி என்ற பொருளில் வருகிறது.
தமிழில் பொருள்
நல்ல வழியை எண்ணுவதே சிறந்தது ; இதை வீட்டுக் கீழ்மையை எண்ணாதீர்கள் . அத்திருமாலிருஞ் சோலையில்தான் உறி வெண்ணையை எடுத்துண்டு கண்ணன் கோயில் கொண்டுள்ளான். பெண் மான்கள் தன் குட்டிகளோடு சேர்ந்து வாழும் சோலை மலைக்குச் செல்லும் வழியை நினைப்பதே நல்லது .
மறி என்றால் ஆடு என்றே பெரும்பாலும் பொருள் வருகிறது. இங்கு மான்கள் என்று வருவதும் நோக்கற்பாலது .
***
திருக்குறளுக்கு புதுப் பொருள்!
ஈரடியால் உலகளந்தவனும் மூவடியால் உலகளந்தவனும்
பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம் ; அந்த அவதாரத்தைச் சொல்லும்போதெல்லாம் நம்மாழ்வார், குறளா திருக்குறளா என்று பாடுகிறார் . அவர் மனத்தில் உள்ள கருத்தினை நாம் அறிய முடிகிறது ; மூன்று அடிகளால் உலகத்தினை அளந்து ஓங்கி உலகளந்த உத்தமன்- த்ரி விக்ரமன் – என்ற பெயர் பெற்றான் விஷ்ணு .
இரண்டே அடிகளால் (குறள்) உலகத்தினையே அளந்துவிட்டான் வள்ளுவன்; அவன் பேசாத பொருள் இல்லையே!
வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-
குறளா என்று பல பாசுரங்களில் அழைத்தவர் இங்கு திருக்குறள் என்ற சொல்லையே பயன்படுத்துவத்தைக் கவனிக்க வேண்டும் . நம்மாழ்வார் திருக்குறளை நன்றாகக் கற்றவர் என்பதை பல பாசுரங்கள் மூலம் அறிய முடிகிறது . மாணிக்க வாசகரின் திருவாசகமும் அவர் பாசுரங்களில் எதிரொலிக்கிறது. அவற்றைத் தனியாகக் காண்போம் .
***
இதைத் திருவள்ளுவமாலையில் பரணரும் பாடியுள்ளார்.
மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து
இந்த பரணர் பிற்கால பரணர் ஆவார்.
–subham—
Tags- திருக்குறளுக்கு, புதுப் பொருள், கிறி உறி மறி நெறி, நம்மாழ்வார் இலங்கைத் தமிழ், திருக்குறளா
My Old Articles
இலங்கைத் தமிழும் இந்தியத் தமிழும்! கொஞ்சம் கதைப்போமா ? (Post No.13,659)
Post No. 13,659
Date uploaded in London – 12 September 2024
பரி, கரி, அரி, நரி, மறி, கிரி, சுரி, வரி (Post No.6057)
Date: 10 FEBRUARY 2019
Post No. 6057
தமிழ் ஒரு அழகான மொழி. பழைய கால ஆநந்தவிகடன் அகராதி அல்லது அதற்கு முந்திய நிகண்டுகள் ஆகியவற்றை எடுத்துப் பார்த்தால் மிகவும் வியப்பாக இருக்கும். ஒரு சொல்லுக்கு இத்தனை பொருளா என்று ஒரு புறம் வியப்போம். ஒரே பொருளைச் சொல்ல இத்தனை சொற்களா என்று மறு புறம் வியப்போம். தாமரை என்பதற்கு பல சொற்கள் இருக்கும். அரி என்ற ஒரு சொல்லுக்கு பல வித அர்த்தங்கள் இருக்கும். மேலும் ஒருஎழுத்து, இரு எழுத்துச் சொற்களைக் கொண்டே நிறைய விஷயங்களைச் சொல்ல முடியும்.
இந்தச் சொல்லையோ,சப்தத்தையோ வேறு மொழிகளில் பிரயோகித்தால் இன்னும் வியப்பான விஷயங்கள் வரும்.
உதாரணமாக அரி என்ற சொல்லுக்கு விஷ்ணு, பகைவன், சிங்கம் இன்னும் பல பொருள்கள் வரும். ஹீப்ரூ (Hebrew) மொழியிலும் அரி என்றால் சிங்கம் என்பதைக் கண்டு வியப்போம். கேஸரி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் (கேசம்/முடி உள்ள மிருகம்) ஸீசர் என்று உச்சரிக்கப்பட்டு ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ் சீசர் என்ற பெயர்களில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே புகுந்தது.
ஒரே சப்தம் வரும் சொற்களைச் சொல்லுவதும் கவிதை போல இருக்கும். அதை நினைவு வைத்துக் கொள்வதும் எளிதாக இருக்கும். சொல் விளையாட்டுகளை விளையாடவும் ஏதுவாக இருக்கும்.
குறுக்கெழுத்துப் போட்டி, தமிழ் ஸ்க்ராபிள் (Tamil Scrabble) , சொல் போட்டி போன்றவை மூலமும் விடுகதைகள் மூலமும் மாணவர்களை டெலிவிஷன், வீடியோ கேம்ஸ் முதலியவற்றில் இருந்து திசை திருப்பலாம்.
நான் என் மகன்களுடன் ரயிலில் செல்லும்போது ஒரே சப்தத்தில் முடியும் ஆங்கிலச் சொற்களைச் சொல்லி விளையாடுவோம். ‘ஷன்’ (Tion or Sion) என்று முடியும் சொற்கள் என்றால்
Consternation
Conflagration
Concentration
Condemnation
Education
Fruition
என்று நூற்றுக் கணக்கில் வரும்.
நாங்கள் மூவரும் சொன்ன சொற்களைக் கேட்டு ஆங்கிலேயர் ஒருவரே வியந்து பாராட்டினார். இன்னும் சிலர் மூக்கில் விரலை வைத்து வியக்காமல் கண்களால் வியந்தனர்.
தமிழிலும் இது போல அறிவு தொடர்பான விஷயங்கள் பரவ வேண்டும்
யூ ட்யூப், You Tube, Social Media, சோஷியல் மீடியா (பேஸ் புக், வாட்ஸ் அப்), பத்திரிக்கைகள், சினிமா, நாடகங்களில் சில காட்சிகள், பள்ளிக்கூடங்களில் போட்டிகள் மூலம் இவைகளை வளர்க்கலாம்.
நான் சொல்லுவதை விளக்க ஒரே ஒரு உதாரணம்:–
“ரி” சப்தத்தில் முடிய வேண்டும்
விலங்கியல் பெயராக இருக்க வேண்டும் என்று போட்டி விதி வைத்துக் கொள்வோம். எனக்கு உடனே நினைவில் வரும் சொற்கள்
அரி- சிங்கம்
பரி-குதிரை
வரி-வண்டு
நரி- நரி,குள்ள நரி
மறி- ஆடு
கரி- யானை
கிரி-பன்றி
உரி– கடல் மீன் வகை
சுரி- ஆண் நரி
அரி-குரங்கு, சிங்கம்
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். குறுக்கெழுத்துப் போட்டிகள் பிரபலமான காலத்தில் வந்த ஆநந்தவிகடன் அகராதி போன்றவை இருந்தால், ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள வேறு பொருள்களும் வியப்பைத் தரும்
வியப்பான செய்தி
தமிழில் அகராதியே இல்லை!!! இப்போது நீங்கள் எந்தக் கடையில் சென்று எந்தப் பதிப்பக அகராதி வாங்கினாலும், ஆங்கில-தமிழ், இந்தி -தமிழ் என்று வைத்துக் கொள்ளுங்களேன். தமிழ் என்ற பெயரில், சம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும். தனித் தனியாக ஒவ்வொரு பக்கத்திலும் தமிழ்- ஸம்ஸ்க்ருத சொல் விகிதாசாரம் போட்டுப் பார்த்தால் ஸமஸ்க்ருதச் சொற்களே அதிகம் இருக்கும்.
நம் முன்னோர்கள் தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் இரு கண்களாக பார்த்ததால் தமிழ் அகராதி என்ற பெயரில் ஸம்ஸ்க்ருதச் சொற்களையும் சேர்த்தனர். ஆங்கிலத்திலும் இப்படித்தான். பிற மொழிச் சொற்களும் ஆங்கில அகராதியில் இருக்கும்.
(ஆக்ஸ்போர்டு அகராதியில் உள்ள ‘ஐயோ,’ ‘பறையா’ என்ற தமிழ் சொற்களை அகற்றக் கோரி நான் இயக்கம் நடத்தி வருகிறேன்.)
எடிமலாஜிகல் டிக்சனரி என்ற பெயரில் பர்ரோ, எமனோ போன்றோர் திராவிடச் சொற்களை மட்டும் கொண்டு சொற் பிறப்பியல் (Etymological) அகராதி தொகுத்தனர்.
ஆனால் அதிலும் குறை கண்டேன். நீர் (Nereids=water nymphs) என்ற தமிழ்ச் சொல்
கிரேக்க மொழியிலும் உள்ளது அரிசி என்ற(Oryza) சொல் செமிட்டிக் மொழிகளிலும் கிரேக்கத்திலுமுளது. இவை தொடர்பின் மூலம் பரவியதா அல்லது மனித இனம் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தபோது பேசி, இப்போது மிச்சம் மீதியாக நிற்கின்றனவா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.
எடுத்துக் காட்டாக சப்த=ஏழு என்ற சொல் செமிட்டிக், ஸம்ஸ்க்ருதம் போன்ற பல மொழிகளில் 3000 ஆண்டுகளாக இருக்கிறது. ஆக, சிந்து-ஸரஸ்வதி நாகரீகத்திலும் இது இருக்கவேண்டும். இப்படி அணுகினோமானால் பல புதிர்களுக்கு விடை கிடைக்கும்.பிலோனிய தெய்வமான செப்பெத்து, யூதர்களின் சப்பத் (sabbath day= seventh day) ஆகியவை ஏழு தொடர்பானவை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் (GEM STONES) ரத்தினைக் கற்களை முந்தைய கட்டுரையில் கண்டோம் ; ஹயக்ரீவர் இதை அகஸ்தியருக்கு உபதேசித்தபோது புண்ணிய நாகரங்களின் பெயர்களையும் (HOLY CITIES) சேர்த்துள்ளார். தேவியின் நாமங்களை மக்கள் தங்களுடைய நகரங்களுக்கு, குறிப்பாக மன்னர்கள், சூட்டிக்கொண்டார்கள் என்பதே சரியான கருத்தாகும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் ஸ்ரீவிஜயம் என்ற நாமத்தைச் சூட்டிக்கொண்ட தென் கிழக்கு ஆசிய நாகரீகம் நீண்ட காலத்துக்கு கொடி கட்டிப் பறந்தது. அதைப் போல ஆதிசங்கரரும் ஹயக்ரீவரும் பெயர் சூட்டிய ஸ்ரீநகர் இன்றுவரை காஷ்மீரின் கவர்ச்சிமிகு தலைநகராக இருந்து வருகிறது.
முதலில் எல்லா நகரங்களின் பெயர்களையும் ஒரே மூச்சில் சொல்லும் ஆதி சங்கரரின் செளந்தர்ய லஹரி ஸ்லோகத்தை எடுத்துக்கொள்வோம்.
விஶாலா கல்யாணீ ஸ்புடருசிரயோத்யா குவலயை:
க்ருபாதாராதாரா கிமபி மதுராபோகவதிகா ।
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுனகரவிஸ்தாரவிஜயா
த்ருவம் தத்தன்னாமவ்யவஹரணயோக்யா விஜயதே ॥ 49 ॥
தேவியின் கண்கள் அகன்று இருப்பதால் – விசாலா ;
கல்யாணங்களை நடக்கச் செய்வதால் கல்யாணி ;
குவளை மலர்களாலும் வெல்லமுடியாத அழகுடையவள் என்பதால் அயோத்யா ;மழை போல் கருணை பொழிவதால் தாரா ;
இனிமையானவள் என்பதால் மதுரா;
போகத்தைத் தரும் பார்வையுடன் சிவனை நோக்குபவள் அல்லது
அபோகவதீ =நீண்ட பார்வை / நெடுநோக்குள்ளவள் போகவதீ;
காக்கும் சக்தி உடையவள் அவந்தீ ;
வெற்றியைத் தருபவள் விஜயா;
विशाला कल्याणी स्फुटरुचिरयोध्या कुवलयैः
कृपाधाराधारा किमपि मधुराभोगवतिका।
अवन्ती दृष्टिस्ते बहुनगरविस्तारविजया
ध्रुवं तत्तन्नामव्यवहरणयोग्या विजयते॥
viśālā kalyāṇī sphuṭarucirayodhyā kuvalayaiḥ
kṛpādhārādhārā kimapi madhurābhogavatikā |
avantī dṛṣṭiste bahunagaravistāravijayā
dhruvaṁ tattannāmavyavaharaṇayogyā vijayate ||
Meaning:-“All glories to Thy eyes which are wide (vishaalaa); auspicious (kalyaani) because of being brilliantly clear; undefeated (ayodhyaa) even by blue lillies; shedding a continuous flow of grace (kripaadhaaraa-dhaaraa); subtly sweet (madhura); long (abhogavathi); and offering protection to the world (avanthee). Surpassing all these great cities in their uniqueness, Thy glance is fit to be reffered to by the respective appellations.”
முதலில் ஆதிசங்கரரின் வியத்தகு பூகோள அறிவினை மெச்ச வேண்டும் . எட்டு நகரங்களின் பெயர்களின் வாயிலாக தேவியின் அபூர்வ குணங்களை நமக்கு எடுத்துரைக்கிறார் . அயோத்தி, காசி முதல் விஜயவாடா வரை நமக்கு புவியியலையும் கற்பிக்கிறார் அப்படிப்பட்ட அறிவியல் நோக்கு இருந்ததால்தான் நாட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு சங்கர மடங்களை நிறுவினார்; காலடியில் துவங்கி காஷ்மீர் வரை கால் நடையாகவே சென்று நாட்டினை வலம் வந்தார்
எந்த அசட்டுப்பிச்சுக்களாவது வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டினை ஒற்றுமைப்படுத்தினான் என்று சொன்னால் புறநாநூற்றின் இரண்டாவது பாடலையும் இந்த ஸ்லோகத்தையும் அவர்கள் முகத்தில் வீசலாம்; இமயம் முதல் பொதியம் வரை என்று பாடினார் மிஸ்டர் நாகராஜன் புறநானூற்றில்! அதாவது முடிநகராயர்! இங்கு சங்கரர் அயோத்தியில் துவங்கி விஜயவாடா வரை வந்து விட்டார் என்பது எனதுரையாகும்.
போகவதி என்ற நகரம் நாகலோகத்தில் உள்ள நாகர்களின் தலை நகரம் ; நல்ல அனுபவம் மிக்க பெண் என்பதால் பெண்களின் பெயர்களாகக் கதைப்புஸ்தகங்களில் காண்கிறோம்.
கல்யாணி என்பது சாளுக்கியர்களின் தலைநகரம் ;
மதுரா என்பது கிருஸ்ணன் பிறந்த பூமி; மதுரை மீனாட்சி அம்மனின் நகரம் என்றும் சொல்லலாம்
தாராDHARAவில் ஒரு மசூதிக்குள் சரஸ்வதி கோவிலும் சித்திரக் கல்வெட்டும் உள்ளது பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான உரையாற்றியுள்ளார்
ராமர் பிறந்த அயோத்தியின் பெருமை இப்போது உலகெங்கும் பரவிவிட்டது கோடிக்கணக்கானோர் அந்த ராமர் கோவிலுக்குச் சென்றவண்ணம் உள்ளனர்.
விஜயவாடாவில் உள்ள கனக துர்கா அம்மன் கோவிலுக்கு லட்சக்கணக்கானோர் வருகின்றனர்
காசியில் உள்ள விசாலாக்ஷி சமேத விஸ்வநாதரைத் தரிசிக்க ஆயிரக்கக்கான ஆண்டுகளாக இந்துக்கள் காசி யாத்திரை சென்று வருகின்றனர்
இதற்கு ஆதரவான சில நாமங்களை சஹஸ்ரநாமத்தில் காண்போம். லலிதா சகஸ்ரம் நாமத்தில் உள்ள எல்லா பெயர்களும் மிகவும் அர்த்தம் உள்ளவை.
இதில் டாக்கீஸ்வரி கோவில் உள்ள பங்களாதேஷ் தலைநகரம் டாக்கா வருகிறது
பஞ்சாபில் உள்ள ஜலந்தரும் வருகிறது
ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீ நகரும் வருகிறது
சண்டிகர் என்ற நாமத்தில் சண்டியைக் காணலாம்; சிம்லா என்ற ஹிமாசலப்பிரதேச தலை நகர் சியாமளா என்பதன் மருவு ஆகும்.
கல்கத்தா என்பது காளிகாட் என்பதிலிருந்து வந்ததை நாம் அறிவோம்
மும்பை என்பது மும்பாயி தேவி பெயர்; சென்னை என்பது சென்னம்மா தேவியின் பெயர் காமரூபம் என்னும் அஸ்ஸாம் காமாக்யா தேவி கோவில்கொண்ட இடம் ; கன்னியாகுமரியின் பெயரிலேயே பகவதி உறைகிறாள் காஸ்மீர் முதல் கன்யாகுமரிவரை தேவியின் பூமி என்று சொன்னாலும் மிகை ஆகாது ; இதோ உங்கள் பார்வைக்கு சில நாமங்கள்-
கல்யாணீ – நாமத்தின் எண் 324; காமகோடிகா / காஞ்சி – 589; சண்டிகா-755; டாகினீஸ்வரி – டாக்கா -484; துர்கா /துர்காபூர் – 190; திரிபுரா -626; பவானி-112; பாபநாசிநீ-பாபநாசம் – 167; புவனேஸ்வரீ – புவனேஸ்வர் -294; புஷ்காரா – புஷ்கர் -804; மஹாகாளி – காளிகாட்-கல்கத்தா – 751; மாயா /ஹரித்வார் – 716; விஜயா / விஜயவாடா – 346; வைஷ்ணவீ ; வைஷ்ணவிதேவீ- 892; ஜயா – ஜெயப்பூர் – 377; ஜாலந்தர ஸ்திதா -ஜலந்தர்– 378;ஸ்ரீ என்ற எழுத்துடன் துவங்கும் 12 பெயர்கள் அம்மனுக்கு உள்ளது ; இதன் தமிழ் வடிவம் திரு என்பதாகும் ; ஆகவே ஸ்ரீநகர் முதல் திருநகர் வரை உள்ள எல்லா ஊர்ப்பெயர்களையும் அம்பாளின் நகரங்களாகவே சொல்லலாம் .
–சுபம்—
Tags- லலிதா சஹஸ்ரநாமத்தில், புண்ணிய நகரங்கள் , ஆதி சங்கரரின், செளந்தர்ய லஹரி