கிரீஸ் நாட்டின் புலவர் ஹோமர் (Post No.9690)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9690

Date uploaded in London – –5 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOMER

ஹோமர்- கிரேக்க நாட்டின் புகழ்பெற்ற புலவர். இலியட் (ILIAD) ஒடிஸி (ODYSSEY) ஆகிய இரண்டு காவியங்கள் இவரது படைப்புகள். ஆடிஸி என்றும் சொல்லுவார்கள். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இரண்டுவித உச்சரிப்புகள்.

 எழுத்துகள் தோன்றுவதற்கு முன்னால் இவர் வாழ்ந்ததால் அவர் கைப்பட எழுதியிருக்க வாய்ப்பில்லை. அவர் சிந்தனையில் உதித்த கவிகள் கர்ண பரம்பரையாகி, செவிவழி மூலம் வந்திருக்க வேண்டும்.

     அவருடைய படைப்புகளில் மிக நீண்டது இலியட். இது 24 புத்தகங்களை உடையது. அந்தக் காலத்தில் எல்லாரும் வட்டமாக அமர்ந்துகொண்டு ஒருவர் பாடியவுடன் மற்றவர் திரும்பப் பாடுவார்கள். இவ்வழியிலேயே ஹோமரின் காவியங்களும் பரவின.

ஹோமர்-  இறந்த 300 ஆண்டுகளுக்குப் பின்னரே இரண்டு காவியங்களும் எழுத்து வடிவில் கொண்டு வரப்பட்டன.

     TROY நகரம் வீழ்ச்சியடைந்த பின்னர் ஒடிஸியஸ் மேற்கொண்ட பயணங்களை “ஒடிஸி” கூறுகிறது.

     கிரேக்கர்களுக்கும் ட்ரோஜன்களுக்கும் (TROJANS) இடையே நடந்த போரை “இலியட்” வருணிக்கிறது.

     கிரேக்க நாட்டுக் கவிஞர்களில் ஹோமர்தான் மிகவும் பிரபலமானவர். ஆனால் அவரைப் பற்றிய முழுவிவரங்களும் கிடைக்கவில்லை. ஹோமரைப் பற்றி பல வரலாறுகள் இருக்கின்றன. அவை உண்மையா என்பதை அறியமுடியவில்லை.

     இலியட்டும் ஒடிஸியும் இரண்டு ஆசிரியர்களால் படைக்கப் பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

     துருக்கியிலுள்ள ஸ்மிர்னா (SMYRNA) என்ற இடத்தில் ஹோமர் பிறந்ததாகச் சிலரும் CHIOS தீவில் (ISLAND OF CHIOS) பிறந்ததாகச் சிலரும் கூறுகின்றனர்.

ஆனால் இவர் கியோஸ் தீவில் நீண்டகாலம் வழ்ந்ததும் இவர் கண் பார்வையற்றவர் என்பதும் உறுதியாகத் தெரிகிறது.

பழங்கால கிரேக்கத்தில் வாழ்ந்த சில பாடகர்கள், கவிஞர்கள் கண் பார்வையற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MY OLD ARTICLES ON HOMER

ஹோமர் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

  1.  

Translate this page

12 Sept 2020 — Tagged with ஹோமர் … tamilandvedas.com, swamiindology.blogspot.com … ஹோமர் என்ற அந்தகக் கவிஞர் (blind poet Homer) எழுதிய இலியட், ஒடிஸி /ஆடிஸி (அமெரிக்க …


ஹோமர், உமர் கய்யாம் … – Tamil and Vedas

https://tamilandvedas.com › ஹ…

· Translate this page

11 Nov 2019 — Blind Poet Homer of Greece. Compiled by London swaminathaan. swami_48@​yahoo.com. Date: 11 NOVEMBER 2019. Time in London – 7-15 am. Post No. 7202. Pictures are taken from various sources; beware of copyright …


புத்தகம் எழுதுவது … – Swami’s Indology Blog

https://swamiindology.blogspot.com ›

  1.  

Translate this page

1 Jun 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact … இயற்றிய ஹோமரை கிரேக்கப் புலவர்கள் தெய்வ ஹோமர் என்று போற்றினர்).

—SUBHAM—

tags-இலியட், (ILIAD), ஒடிஸி, (ODYSSEY), ,ஹோமர்,

தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி (Post No.8672)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8672

Date uploaded in London – –12 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பொதுவாக மொழிகளைப் பெண்களாகக் (MOTHER OR SISTER LANGUAGE) கருதுவர். இந்த இந்துமத மரபை உலகம் முழுதும் இன்றும் பின்பற்றி, நெருங்கிய மொழிகளை சகோதரி – சிஸ்டர்- என்றே அழைப்பர் ; ஆயினும் மூளைச் சலவை செய்யப்பட தமிழர்களுக்காக ‘அண்ணன்’ என்று எழுதியுள்ளேன். இன்று உலகில் வழங்கும் மொழிகளில் அல்லது அவற்றின் மாபெரும் இலக்கியம் நூலகங்களை அலங்கரிக்கும் மொழிகளில் மிகவும் பழைய மொழிகள் சம்ஸ்க்ருதம், பாரசீகம், எபிரேயம் எனப்படும் ஹீப்ரு கிரேக்கம், லத்தின், தமிழ் ஆகிய மொழிகளாகும் . இவைகளில் தமிழ்தான் கடைக்குட்டி. அதாவது இலக்கியம், கல்வெட்டு சான்றுகளை எடுத்துக் கொண்டால் சின்னத் தம்பி தமிழ்தான்.

இரண்டு பொய்களைத் தமிழ் வெறியர்கள் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர்.

முதல் பொய் : —இன்று பேசப்படும் மொழிகளில் மிகவும் பழைய மொழி தமிழ் .

இரண்டாவது பொய் – தமிழ் தவிர மற்ற பழைய மொழிகள் எல்லாம் வழக்கொழிந்துவிட்டன.

இரண்டும் பொய் என்பதை விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்கள் படித்தவர்கள் அறிவர்.

தமிழில் கிடைத்த பழைய நூல் தொல்காப்பியம் . அது புள்ளி வைத்த (DOTTED CONSONANTS) எழுத்துக்கள் பற்றிப் பேசுவதால் அது 2000 ஆண்டுகளுக்குள் தோன்றிய நூலே என்பது அறிஞர் தம் முடிவு. மேலும் அதிலுள்ள சொற் பிரயோகங்களைக் கொண்டு பேராசிரியர் கே. ஏ.நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப்பிள்ளை போன்றோர் அது கிபி.ஐந்தாம் நூற்றாண்டு அல்லது     அதற்கும் பிந்தியது என்பர். ஆனால் நான் மேலே குறிப்பிட்ட பழைய மொழிகளில் அதற்கு முன்னரே நூல்கள் உள்ளன. (தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் விதிகள் தொல்காப்பியருக்கு முந்தியவை OLDER THAN TOLKAPPIAM)

கிரேக்க மொழி இன்று சுமார் ஒன்றரைக் கோடி மக்களால் பேசப்படுகிறது. கிரேக்க நாட்டிலும் சைப்ரஸ் தீவிலும் அதிகார பூர்வ மொழி அது. அல்பேனியா கருங்கடல், மத்திய தரைக் கடல் கரையோர பகுதிகளிலும் கிரேக்க மொழி பேசுவோர் உள்ளனர். இவர்கள் ஆதிகாலத்தில் பயன்படுத்திய எழுத்து லீனியர் பி (Linear B )என்பதாகும். அது அகர (not alphabet) வரிசை எழுத்தன்று. பிற்காலத்தில் பினீசிய எழுத்துக்களில் இருந்து ஆல்பா , பீட்டா , காமா , டெல்டா என்ற அகர வரிசை எழுத்துமுறை பின்பற்றப்பட்டது.

குறைந்தது 3500 ஆண்டுகளுக்கு எழுத்து வடிவத்தில் கல்வெட்டுகள் கிடைக்கின்றன . ஆனால் இலக்கியம் என்பது 2800 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றின. ஹோமர் என்ற அந்தகக் கவிஞர் (blind poet Homer) எழுதிய இலியட், ஒடிஸி /ஆடிஸி (அமெரிக்க உச்சரிப்பு ஆடிஸி Iliad and Odyssey )ஆகியன பழைய காவியங்கள் ஆகும்.

இந்த மொழியை சம்ஸ்கிருதம் தமிழ் மொழியுடன் ஒப்பிடுவோம் .முதலில் கிடைக்கும் தமிழ் இலக்கியம் சங்க கால இலக்கியம் . அது 2000 ஆண்டு பழமையுடைத்து . முதலில் கிடைக்கும் தமிழ் எழுத்து பிராமி எழுத்து அது 2300 ஆண்டு பழமையுடைத்து. ஆக கிரேக்க மொழிக்கு 800 ஆண்டு பிந்தியது.

தமிழர்களின் பழைய இலக்கண நூல் தொல்காப்பியம். இது ஆய்த எழுத்து என்னும் மூன்று புள்ளி, மற்றும் புள்ளி வைத்த மெய் எழுத்துக்கள் பற்றிப் பேசுவதால் தொல்பொருட்த் துறை அறிஞர்கள் இதை சுமார் 1500 ஆண்டு பழமையுடைத்து என்றுதான் கருதுகின்றனர் . மேலும் திருக்குறள் ‘அதிகாரம்’, தொல்காப்பிய ‘அதிகாரம்’, சிலப்ப’திகாரம்’ ஆகிய மூன்றிலும் ‘அதிகாரம்’ என்ற சம்ஸ்க்ருத சொல், சூத்திரம் என்ற சம்ஸ்க்ருத சொல் ஆகியன வருவதாலும் இதைப் பிற்காலத்தியது என்பர்.

இதைப் படிப்பவர்கள் எழுத்து/ வரி வடிவம் வேறு; மொழி (language and Script are different)  என்பது  வேறு என்பதை முதலில் தெளிவாக அறிதல் வேண்டும். தொல்காப்பியத்தின் விதிகள்/சூத்திரங்கள் மிகவும் பழங்கால விதிகளையும் சொல்கிறது. ஆகையால் அதற்கு முன்னரும் தமிழ் நூல்கள் இருந்தன. அவை நமக்குக் கிடைக்கவில்லை. பொதுவாக இப்படி அழிந்து போன நூல்களை எவரும் உறுதியான ஆதாரமாகக் கொள்வதில்லை. ஏனெனில் மைசீனியன் (Mycenean ) கிரேக்க மொழிக்கும் ஹோமர் புஸ்தகம் எழுதிய கிரேக்க மொழிக்கும் இடையே 600 ஆண்டுக்கால மர்மமான இடை  வெளி இருக்கிறது. சம்ஸ்கிருதத்திலோ இருக்கும் நூல்களை விட அழிந்துபோன நூல்களே அதிகம்!

இப்போது கிரேக்க மொழியை ஸம்ஸ்க்ருதத்துடன்  ஒப்பிடுவோம்

முதலில் எழுத்து  வடிவத்தில் சம்ஸ்கிருத மொழி இருப்பது  கி.மு 1340-ல் தெரிய வந்தது. இப்போது துருக்கி நாட்டில் இருக்கும் பொகஸ்கொய் என்னும் இடத்தில் வேத கால தெய்வங்களின் பெயரைச் சொல்லி கையெழுத்திட்ட உடன்படிக்கை பற்றிய செய்தி கிடைக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மிட்டன்னி நாகரீக மன்னர்கள் அனைவர் பெயரும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.. அதிலுள்ள வேத கால தெய்வங்கள் ரிக் வேத மந்திர வரிசையில் எழுதப்பட்டதால் ரிக்வேத மந்திரங்கள் கி.மு 1340க்கு முந்தியவை என்ற தொல்பொருட் துறை சான்றும் கிடைத்துவிட்டது. துருக்கி நாட்டில் கிடைத்த கக்கூலி எழுதிய குதிரை சாஸ்திரமும் சம்ஸ்கிருதத் சொற்களுடன் உள்ளன.

ஆயினும் இந்தக் கல்வெட்டு களிமண் பலகையில் கியூனி பார்ம் எழுத்தில் உள்ளது. இதற்குப் பின்னர் எகிப்தில் உள்ள  தசரதன் கடிதங்களும் சம்ஸ்கிருத சொற்களை உடையவை என்பதை விக்கிபீடியா உள்பட எல்லா என்ஸைக்ளோபிடியாக்களிலும்  காணலாம்.

ஆக எழுத்து வடிவில் கிரேக்க மொழியின் லீனியர் பி -க்கு சமமாக உள்ளது சம்ஸ்கிருதம்; இலக்கிய வடிவிலோ அதை விட  மிகப் பழமையானது; ஹோமர் இதிகாசத்தை எழுதும் முன்னரே பிரமாண்டமான அளவில் வேத கால இலக்கியத்தை எழுதி முடித்துவிட்டனர். சம்ஹிதை,  பிராமணங்கள், ஆரண்யகங்கள், முக்கிய உபநிஷத்துக்கள் அனைத்தும் எழுதி முடித்த காலத்தில் ஹோமர் Homer என்னும் கவிஞர் கிரேக்க மொழியின் முதல் படைப்புகளை  அளித்தார்.

ஆக தமிழை விட பழமையானது கிரேக்க மொழி என்பதும் அது இன்றும் கோடிக்கணக்கான மக்களால் பேசப்படுகிறது என்பதும் உண்மையே. அலெக்சாண்டரின் படை எடுப்புக்குப் பின்னர் அதன் ஆதிக்கம் மேலும் பரவியது. பூகோள ரீதியில் கிரேக்க நாட்டிலிருந்து இந்தியாவின் வடமேற்கு எல்லை வரை கிரேக்க மொழி எதிரொலித்தது. ஆக இதிலும் தமிழை விட முன்னிலையில் நிற்கிறது.

சம்ஸ்க்ருத மொழியோ துருக்கி- சிரியா எல்லையிலிருந்து தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் பரவியது; மத்திய ஆசிய பாலைவனத்திலிருந்து இந்தோனேஷியாவின் காடுகள் வரை சம்ஸ்கிருத ஓலைச் சுவடி அல்லது கல்வெட்டு காணப்படுகிறது ; சுருங்கச் சொன்னால் உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்திய மொழி. இது தவிர மொழி பெயர்ப்பு என்று எடுத்துக் கொண்டாலும் பழைய காலத்தில் அதிகமான  மொழிகளில் ஆக்கப்பட்டது பஞ்ச்ச தந்திரக் கதைகள் முதலியனதான்.

ஆனால் ஒரு மொழியின் சிறப்புக்கு பழமை மட்டும் காரணமன்று என்பதை நேற்று வந்த ஆங்கில மொழியின் பெருமையிலிருந்து அறியலாம். அரசியல்,பொருளாதார அம்சங்களும் மொழி பரவியதற்கு காரணங்கள் .

இனி கிரேக்க மொழி பற்றி விரிவாகக் காண்போம் .

தொடரும் …………………………………………………..

Tags–   கிரேக்க மொழி , காவியம் , ஹோமர், மைசீனியன்

ஹோமர், உமர் கய்யாம், ஷேக்ஸ்பியர் (Post No.7202)

Blind Poet Homer of Greece

Compiled by  London swaminathaan

swami_48@yahoo.com

Date: 11  NOVEMBER 2019

Time  in London – 7-15 am

Post No. 7202

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

50 ஆண்டுப் பழமையான இலங்கைத் தமிழ் மலர் ஒன்றில் இலியத், ருபாயத் காவியங்கள் குறித்தும் ஷேக்ஸ்பியர் பயன்படுத்திய 24,000 சொற்கள் பற்றியும் இரண்டு பயனுள்ள குறிப்புகள் கிடைத்தன. படித்து மகிழுங்கள்

from the British Library Catalog:—
My pictures taken at Stratford Upon Avon
Shakespeare Beer!!!!!!!!!!!!!!!

பெரியது கேட்கின்….. ஏனிட் பெரிது, அதனினும் பெரிது இலியட், அதனினும் பெரிது… (5344)

WRITTEN by London swaminathan

Date: 20 August 2018

 

Time uploaded in London – 20-23 (British Summer Time)

 

Post No. 5344

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

பெரியது கேட்கின்….. ஏனிட் பெரிது, அதனினும் பெரிது இலியட், அதனினும்  பெரிது… (5344)

 

இன்று அவ்வையாரிடம் யாராவது அவ்வையே இதிஹாசங்களில் எது பெரிதோ? என்று கேட்டால்,

ஐயனே உலகில் பழமையானதும் பெரிதுமான நூல் ரிக் வேதம்; அதில் 40,000 வரிகள் உள்ளன.

ஆனால் நீவீர் இதிஹாசம் பற்றிக் கேட்டதால் அது பற்றி மட்டும் செப்புவேன் கேளீர்:

Image of Virgil

பெரிது பெரிது வர்ஜிலின் ஏனிட் (Aeneid of Virgil) ,

அதனினும் பெரிது ஹோமரின் இலியட்

(Iliad of Homer)அதனினும் பெரிது வால்மீகியின் ராமாயணம்;

அதனினும் பெரிது வியாஸரின் மஹாபாரதம்

 

அதனினும் பெரிது எங்கும் இல்லை, இப்போதும் இல்லை!

 

தாங்க்ஸ் (Thanks), அவ்வை என்று சொல்லி விடைபெற்றால் பல உண்மைகள் புலப்படும்.

 

வர்ஜில் என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரோமானிய புலவர். அவர் எழுதிய காவியம் ஏனிட். அது லத்தீன் மொழியில் உள்ளது அதிலுள்ள வரிகள்- 9868

 

இதற்கு முன், கி.மு 800-ஐ ஒட்டி கிரேக்க மொழியில் ஹோமர் இரண்டு இதிஹாசங்களை இயற்றினார். அவற்றில் இலியட்டின் வரிகள் 15,693. இத்தோடு ஆடிஸி (Odyssey)  என்ற அவரது காவியத்தையும் சேர்த்தால் சுமார் 30,000 வரிகள்தான் வரும். அதற்கு முன் கிரேக்க மொழியில் எந்தப் படைப்பும் இல்லை. ஆனால் இலியட் காவியத்துக்கெல்லாம் முன் மாதிரியாக விளங்கிய வால்மீகி ராமாயணத்தில் 48,000 வரிகள். இதை விட மஹாபாரதம் பெரிது. 2,20,000 வரிகள். அதில் வியாஸர் சொல்லாத, பேசாத விஷயம் எதுவும் இல்லாததால், ‘வியாச்சோசிஷ்டம் ஜகத் ஸர்வம்’ (வியாஸரின் எச்சில்தான் உலகம் முழுதும்) என்பர்.

 

இந்துக்களின் கணக்குப்படி வால்மீகி ராமாயணமே முதல் காவியம். அதில் புத்த மதம் பற்றி ஒரு குறிப்பு இருப்பதாகச் சொல்லி அதை பின்னுக்குத் தள்ளுவர் வெளிநாட்டு ‘அறிஞர்கள்’.

 

மஹாபாரதத்தில் புத்த மதம், சமண மதம் பற்றிய குறிப்புகள் இல்லாமையால் அதை முன் வைப்பர். ஆனால் உண்மையில் எளிமையான காவியமான ராமாயணமே முதல் காவியம். இந்துக்கள் பயன்படுத்தும் ஸ்லோகம் என்பதே வால்மீகியின் சோகத்திலிருந்து வந்ததாக கதையும் உண்டு.

மஹா    பாரதத்துக்குப் பெருமை சேர்க்கும் இரண்டு விஷயங்கள்-

அதிலுள்ள பகவத் கீதை

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

 

ராமாயணத்தைப் பார்த்து, அல்லது அதைக் கேட்டு, கிரேக்க நாட்டுக்கு ஏற்ப ஹோமர் ஒரு இதிஹாசம் எழுதினார் என்று சில இலக்கிய விமரிசகர்கள் பகர்வர்:-

ட் ரோ ஜன் யுத்தம்= ராம ராவண யுத்தம்

ட் ராய் நகரம் = லங்கா

ஸ்பார்டா = அயோத்யா

மெனெலஸ் = ராமா

பாரிஸ்= ராவணா

ஹெக்டர் = இந்திரஜித் அல்லது விபீஷணன்

ஹெலன் = சீதா

அகமெம்னன்= சுக்ரீவா

பட் ரோ ஸியஸ்=  லக்ஷ்மணன்

நெஸ்டர்= ஜாம்பவான்

அகில்லிஸ் = அர்ஜுனா+,,,,,,,,மா+ லக்ஷ்மணா

என்று ஒப்பிடுவர்.

இது ஒருவேளை மிகைப்படுத்தப்பட்டது என்று கருதுவோரும் ஒரு விஷயத்தை மறக்க மாட்டார்கள் லத்தீன், கிரேக்க மொழிகளில் காவியங்களோ இதிஹாசங்களோ தோன்றும் முன் இலக்கியம் கிடையாது. ஸம்ஸ்க்ருதத்திலோ இதிஹாஸத்துக்கும் முன்னதாக பிரம்மாண்ட வேத கால இலக்கியம் உண்டு.

ராமாயண, மஹாபாரத இதிஹஸங்களைப் புகழாத இந்தியவியல் (Indologists) அறிஞர் எவருமிலர்.

 

–சுபம்–

கம்பன் வேய்ந்த காவிய விசித்திரம் (Post No.4373)

Written by S.NAGARAJAN

 

 

Date: 7 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-12 am

 

 

Post No. 4373

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 7)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299; 30-10-17- 4349 ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

கம்பன் வேய்ந்த காவிய விசித்திரம் தேர்ந்து கொள்ளுவர் சீரியோர்!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

பாடல் 27

வேறு

காதை யுள்ளமை காதைக

ளோதும் வாறெவர் ஓதினார்

மோது வார்புனற் கங்கைசார்

போது லாம் அதி போயபோல்?

 

பாடல் 28

இராம கதையெ னாவியல்

அராம மேலிடு வார்க்கிவை

சிராமம் * தீர்த்திடச் சிந்துபூம்

பராகப் பித்திகைப் பத்தியே

*சிரமம் என்னும் சொல் நீண்டு நின்றது

 

பாடல் 29

படிகம் போல்தெளி பனுவலும்

அடிக ளோடும் ராகமும்

துடிகள் தூக்கும் நோக்கமும்

வடிகொ ளும்பொருள் வண்மையும்

 

பாடல் 30

போந்த காதையின் போக்கொடு

ஆய்ந்து நோக்கியம் மாகவி

வேய்ந்த காவிய விசித்திரம்

தேர்ந்து கொள்ளுவர் சீரியோர்

 

 

பாடல் 31

செந்தொ டையொடு செம்பொருள்

வந்து லாவு கிளைக்கதை

முந்து சந்த முதற்கதைக்

குந்து  மந்தமில் லந்தமே

 

பாடல் 32

ஆன்ற ஓவியச் சீரையார்ந்

தேன்றி லங்குறு சித்திரம்

தோன்ற லான எழிற்சுடர்

ஞான்ற பின்னொடு நாறுமே

 

பாடல் 33

இசைக் கிசைதரு பின்னிலை*

இசைய தாகி யிணைந்தபோல்

வசையில் மாக்கதை மாணுற

அசைப்ப ராலநு காதையே

  • பின்னிலை :- Background – சித்திரக் கலைகளில் எழும் உருவங்களின் எழிலை மிகுக்க அவற்றின் பின்னமைக்கப்படுமரங்கத்தினையே இங்குப் பின்னிலை என்று சுட்டினேன்.

 

 

பாடல் 34

வேறு

காவின வேந்தனும் காவினைத் துறந்தனன் கமலப்

பூவின் வேந்தனும் படைப்பினிற் பொலிவழிந் தொழிந்தான்

சாவின் வேந்தனும் தண்ணளி காட்டிடச் சமைந்தான்

பாவின் வேந்தனாம் கம்பன்பா பம்புபன் னலத்தான்

 

பாடல் 35

கள்ளுண் மாந்தரும் கள்ளினைக் கைப்பெனக் கனன்றார் புள்ளுண் வேடரும் புனிதநன் னெறிவந்து புகுந்தார்

உள்ளுண் யோகியர் உறுபதம் சிறிதென ஒறுத்தார்

தெள்ளு தீந்தமிழ்க் கம்பன்செய் தென்கவி யின்பால்

 

பாடல் 36

ஆடல் வேண்டலர் ஆடின அரங்கிள மகளிர்

பாடல் வேண்டலர் பண்ணிசைக் கண்ணுளர், வெறிதார்

சூடல் வேண்டலர் தோகையர் கம்பன் சொல் லமிர்தம்

நாடல் வேண்டினர் நண்ணுறா மகிழ்ந்துய்க்க நயந்தே

 

பாடல் 37

எந்தச் சாதியர் எத்தொழி லாளரைப் பாலார்

சிந்த னைதெளி முதியரோ டிளைஞரா தியபேர்

அந்த மில்லராம் வேற்றுமை யாளரிக் கவியிற்

றந்த மக்குள தத்துவம் கண்டுளம் தழைவார்

 

பாடல் 38

சமைய வாதியர் தருக்கஞ்செய் தொக்கெலாம் தவிர்ந்தே

அமைய நின்றொளிர் அலகிலா வருந்தளிப் பொருளை

உமையின் பாகனோ டிலக்குமி கேள்வனென் றுன்னா

தவனி நாதனென் பொதுமையிற் காப்பொன்றே பணிந்தான்

 

Greek Poet Homer

 

பாடல் 39

ஹோமர் மாகவி யுதித்தவூர் வூங்கல அலவீ

காமென் றேயெழு நகரங்கள டுத்துப்போர் தொடுத்த

பாம கள்பணி கம்பனை யப்பரி சுரைத்த

பூமியிற்பெரி யாரையார் தம்மொழும் புணர்ந்தார்

 

பாடல் 40

வீறெ டுத்தகா வியமெனுங் கரும்பின்கான் விரித்துக்

சாறெ டுத்துல கர்க்கொரு காப்பியம் சமைத்தான்

சேறெ டுத்தமண் டூகம்போற் றேறலுண் ணாதே

மாறெ டுத்ததம் மதமுரை நூலென்றும் மருண்டார்

 

 

*

அருமையான் இப்பாக்களில் கவிஞர் சிவராஜ பிள்ளை ஸ்படிகம் போலத் தெளிவு,ராகம்,நல் நோக்கம், பொருள் வண்மை கொண்ட பாக்கள் கம்பனது பாக்கள் என்கிறார்.

மாகவி வேய்ந்த இந்தக் காவிய விசித்திரம் படித்து அதன் பொருளைத் தேர்ந்து கொள்ளுவர் சீரியோர் என்பது அவரது முடிவு.

 

பாவின் வேந்தனின் பாக்களைக் கேட்ட சாவின் வேந்தன் தண்ணளிக் காட்டிடைச் சமைந்தானாம்.

கள்ளுண்போர் கள்ளை விட்டனர். பறவையை உண்ணும் வேடர் தம் தொழிலை விட்டுப் புனித நன்னெறி வந்தனர். யோகியரோ உறுபதம் மிகச் சிறிது என்று எண்ணி மனம் மாறிக் கம்பனைக் களிக்க வந்தனராம்.

 

 

டான்ஸ் ஆடும் மகளிர் நாட்டியத்தை விட்டனராம். இசைக் கலைஞர்கள் பாடல் வேண்டாம் என்றனராம். அழகிகளோ மலர் மாலைகளைச் சூடிக் கொள்ள வேண்டாம் என்றனராம்.ஏன்? அவர்கள் நாடியது கம்பனின் அருமையான பாடல்களைத் தான்.

 

 

அது இருந்தால் போதுமாம்!

எந்த ஜாதியின்ராக இருந்தாலும் சரி, முதியவர், இளைஞர் யாராக இருந்தாலும் சரி, தனக்குள்ள தத்துவத்தைக் கண்டு மகிழ்ந்தனராம்- கம்பன் பாவில்!

 

சமயத்தை வைத்துச் சண்டை போடுவோர்க்குப் பொதுநெறி காட்டினான் புனிதன் கம்பன்.

 

ஹோமரைச் சொந்தம் கொண்டாட ஏழு நகரங்கள் போர் தொடுத்ததை வரலாறு கூறும். பாமகள் பணி கம்பனிடமோ பெரியார் அனைவரும் வந்து சேர்ந்தனர்.

 

கம்பனின் இன்பப் பா என்னும் தேனை அருந்தாமல் தம் தம் மதத்தையே உரைக்கும் நூல் கம்பனது நூல் என்று சேறில் உள்ள தவளை போல சிலர் கூறி மருண்டார்.

அருமையான மேலே கண்ட பாக்களில் கம்பனின் புகழைப் பாடுகிறார் கவிஞர்.

 

மேலும் தொடர்வோம்.

                                -தொடரும்

***

 

 

 

 

கம்பன் கவி இன்பத்தில் வம்பு-3 (Post No.4299)

Written by S.NAGARAJAN

 

 

Date:14 October 2017

 

Time uploaded in London- 5–31 am

 

 

Post No. 4299

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வர்ஜிலையும், ஹோமரையும், மில்டனையும் வம்பிக்கிழுக்க வேண்டாமே! – 3

.நாகராஜன்

 

6

அரவிந்த இலக்கியம் பெரிய கடலைப் போன்றது. அதில் நீந்திக் கரையேற முடியுமா? முடியாது.

அரவிந்தர் (1872-1950) கிங்ஸ் காலேஜ், கேம்பிரிட்ஜில் படித்தவர்.1893இல் இந்தியாவிற்குத் திரும்பியவுடன் அவர் பரோடா காலேஜில் ஆங்கில, பிரெஞ்சு இலக்கியத்தைக் கற்பித்தார்.

வால்மீகி, ஹோமர், மில்டன் பற்றி அவர் ஏராளமான அருமையான கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார். அவற்றில் ஓரிரண்டு கருத்துகளை மட்டுமே இங்கு பார்க்க முடியும் – இடம் கருதி!

அரவிந்தர் நூல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அன்பர்கள் சிறிது நேரம் ஒதுக்கி அவர் இந்திய பண்பாட்டைப் பற்றி என்ன சொல்கிறார் என்று படித்து மகிழலாம்.

இந்தியக் கலை, இந்திய இலக்கியம் பற்றிய அவரது அருமையான கருத்துக்களை The Renaissance in India and other Essay on Indian Culture என்ற நூலில் காணலாம்.

விண்ணை அளக்கும் கம்பீரமான வார்த்தைகளால் அவரது புகழாரத்தைப் படிக்கும் போது உள்ளம் குளிர்கிறது.

அதில் இலக்கியம் பற்றிய மூன்றாவது கட்டுரையில் ஆரம்பத்திலேயே திருவள்ளுவர், கம்பன் உள்ளிட்ட கவிஞர்களைப் பெருங்கவிஞர்கள் வரிசையில் சேர்க்கிறார்.

பின்னர் அவர் கூறுவது:

The pure literature of the period is represented by the two great epics, the Mahabharata, which gathered into its vast structure the greater part of the poetic activity of the Indian mind during several centuries, and the Ramayana.

 

 

These two poems are epical in their motive and spirit, but they are not like any other two epics in the world, but are entirely of their own kind and subtly different from others in their principle.

 

It is not only that although they contain an early heroic story and a transmutation of many primitive elements, their form belongs to a period of highly developed intellectual, ethical and social culture, is enriched with a body of mature thought and uplifted by a ripe nobility and refined gravity of ethical tone and therefore these poems are quite different from primitive edda and saga and greater in breadth of view and substance and height of motive — I do not speak now of aesthetic quality and poetic perfection — than the Homeric poems, while at the same time there is still an early breath, a direct and straightforward vigour, a freshness and greatness and pulse of life, a simplicity of strength and beauty that makes of them quite another kind than the elaborately constructed literary epics of Virgil or Milton, Firdausi or Kalidasa.

 

 

This peculiar blending of the natural breath of an early, heroic, swift and vigorous force of life with a strong development and activity of the ethical, the intellectual, even the philosophic mind is indeed a remarkable feature; these poems are the voice of the youth of a people, but a youth not only fresh and fine and buoyant, but also great and accomplished, wise and noble.

This however is only a temperamental distinction: there is another that is more far-reaching, a difference in the whole conception, function and structure.

 

அடுத்து உலக கவிஞர்களை நுணுகி ஆராய்ந்த அவர் வால்மீகி, வியாஸர், ஹோமர், ஷேக்ஸ்பியர் ஆகிய நால்வரை முதல் வரிசையில் வைத்தார்.

அடுத்து இரண்டாவது வரிசையில் தாந்தே, காளிதாஸர், Aeschoylus, Sophocles, வர்ஜில், மில்டன் ஆகியோரை வைத்தார். கதே மட்டும் மூன்றாம் வரிசை இடத்தைப் பெற்றார்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

Vyasa and Valmiki, Foundations of Indian Culture, Talks with Nrod Baran உள்ளிட்ட பல நூல்களை அன்பர்கள் படித்தால் இலக்கிய சிகரத்தில் ஏறலாம்; கம்பன், வால்மீகி, வர்ஜில், ஹோமர், மில்டன் ஆகியோர் பற்றிய அவர் கருத்துக்களை அறியலாம். இது ஒரு தனி நூலுக்குரிய ஆய்வாக அமைகிறது என்பதால் இந்த அளவில் இதை முடித்துக் கொள்வோம்.

7

மில்டனின் கவிதைத் திறத்தை மெச்சுவோர் இருளைப் பற்றி வர்ணிக்கும் அவனது அருமையான சொற்றொடரான, ‘Palpable darkness’ – தொட்டு உணரலாகும் இருட்டு என்பதை மேற்கோளாகக் காட்டுவர்.

கம்பனது காவியத்திற்கு வருவோம்.

ஆரணிய காண்டத்தில் மாரீசன் வதைப் படலத்தில் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் பதிப்பு) வரும் செய்யுள்களைப் பார்ப்போம். (138 முதல் 142 முடிய உள்ள பாடல்கள்)

சீதை மேல் மையல் கொண்ட ராவணன் ‘கன்னக் கனிய இருள் தன்னை பார்ப்போம். சூரியனை விட சந்திரன் சுடுகிறான்’ என்று கூறி சந்திரனை வரவழைக்கிறான். “நீ நீங்கு” என்றவுடன் இருள் வருகிறது.

அது எப்படி இருந்தது?

“ஆண்டப் பிறை நீங்கலும் எய்தியது அந்தகாரம்           தீண்டற்கு எளிதாய்ப் பல தேய்ப்பன தேய்க்கலாகி           வேண்டில் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகிக்        காண்டற்கு இனிதாய்ப் பல கந்து திரட்டல் ஆகி”

என்று ஆரம்பித்து இன்னும் மூன்று பாடல்களில் இருளை வர்ணிக்கிறான்.

அடுத்த பாடலில் ‘அம்பும் அனலும் நுழையா கன அந்தகாரத்து’ என்று வர்ணிக்கிறான்.

அதாவது பாணமும் அக்கினியும் உள்ளே சென்று பிளக்க முடியாத அடர்ந்த இருள் என்று வர்ணிக்கிறான்.

தீண்டற்கு எளிதாக – தொட்டு உணருவதற்கு எளிதாக இருந்த இருள், அம்பும் அனலும் நுழையா கடும் அடர் இருளாக மாறியது.

மில்டனை விட ஒரு படி மேல் சென்று எப்படி தண்ணீர் அடர்த்தியான ஐஸ்கட்டி போல ஆகிறதோ அது போல இருள் கெட்டியான கட்டி ஆகி விட்டதாகக் கூறுகிறான்.

எப்படிப்பட்ட வர்ணனை?

புராணம் கூறும் கிருஷ்ண சரித்திரத்திற்கு வருவோம்.

தனது குருவின் இறந்த புதல்வனை மீட்க கிருஷ்ணனது சஹஸ்ர கோடி சூர்யனுக்குச் சமமான சுதர்ஸன சக்கரம் அடரத்த இருளே குகை போல (கெட்டியாக, அடர்த்தியாக) இருந்ததை ஊடுருவிச் சென்றது என்பதைப் படிக்கிறோம்.

(இந்த உவமையைப் பல காலும் படித்து மகிழ்ந்து பிரமித்திருக்கிறேன்.)

ஆக காவியம் இயற்றிய் இரு பெரும் கவிஞர்களின் ம்னோ சஞ்சாரம் பற்றி அறிய இருள் பற்றிய இந்த உவமை வெளிச்சம் தருகிறது இல்லையா?

இப்படி நுணுகிப் படித்து மகிழ்ந்தால் பல முத்துக்களைப் பெறலாம்.

8

திரு ஆர்.நஞ்சப்பா அவர்களும் திரு டிஎஸ்கே ரகு அவர்களும் பதிவு செய்த கருத்துக்களினால் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன், வ.வே.சு.ஐயர், மஹ்ரிஷி அரவிந்தர் உள்ளிட்டோரின் நூல்களை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மகிழ்ச்சி.

அன்பர்களுக்கு எனது நன்றி.

****

இது வம்புத் தொடர் அல்ல; கரும்புத் தொடர் என்று ஆகி விட்டது. இத்துடன் தொடர் நிறைவுறுகிறது.

 

 

 

கம்பன் கவி இன்பத்தில் வம்பு-2 (Post No.4296)

Written by S.NAGARAJAN

 

 

Date:13 October 2017

 

Time uploaded in London- 6–08 am

 

 

Post No. 4296

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வர்ஜிலையும், ஹோமரையும், மில்டனையும் வம்பிக்கிழுக்க வேண்டாமே! – 2

.நாகராஜன்

 

4

இனி அடுத்து கவிதா ரஸிகரான வ.வெ.சு. ஐயர் எப்படி வர்ஜில், ஹோமர், கம்பன், வால்மீகி, கம்பன் ஆகியோரின் கவிதையை ரஸித்தார் என்று பார்ப்போம்.

கம்பன் கவிதை என்ற தொகுப்பு நூல் பிரமாதி (1939), பங்குனி 8,9,10 ஆகிய நாட்களில் காரைக்குடியில் நடைபெற்ற கம்பன் திருநாளில் வெளியிடப்பட்டது. அதில் முதல் கட்டுரையாக ‘கம்ப ராமாயண ரசனை’ என்ற தலைப்பில் வ்.வெ.ஸுப்ரஹ்மண்ய ஐயர் எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. வ.வெ.சு, ஐயரின் கம்பராமாயண ரசனை நூலை தில்லி தமிழ்ச் சங்கமும் பின்னாளில் வெளியிட்டது.

102 பக்கங்கள் உள்ள அந்த நூலில் சில பகுதிகளை மட்டும் இங்குக் காண்போம்.

5

வ.வே.சு. ஐயரின் கட்டுரை, அவரது சொற்களில் :

இது மாத்திரமில்லை, கம்ப ராமாயணமானது ஹோமர் எழுதிய இலியாதையும், விர்க்கிலீயன் எழுதிய ஏனயிதையும், மில்டனுடைய சுவர்க்க நஷ்டம் என்ற காவியத்தையும், வியாஸ பாரதத்தையும், தனக்கே முதல் நூலாக இருந்த வால்மீகி ராமாயணத்தையும் கூட பெருங் காப்பிய லட்சணத்தின் அம்சங்களுள் அநேகமாய் எல்லாவற்றிலும் வென்று விட்டது என்று சொல்லுவோம். இவ்விமரிசனத்தைத் தொடர்ந்து வாசிப்போருக்கு எமது இவ்வபிப்ராயத்தை மெய்ப்பிக்க முயலுவோம்.  (பக்கம் 4)

கவிதை என்னும் அணங்கு இலக்கண வித்துவானைத் தந்தையென மதித்து அவனை அணுகாள். தார்க்கிகளைச் சகோதரன் என்று பாவித்து அவனை நெருங்காள். வேதாத்தியயனம் செய்தவனை (யும், சந்தத்தையே கவனிப்பவனையும்) விட்டுச் சண்டாளர்களிடம் நின்று ஓடுகிறவர்கள் போல ஓடியே போய் விடுகிறாள்.; மீமாம்சையை ஆராய்பவனை நபும்ஸகன் என்று நினைத்து அவமதித்து விடுகிறாள்; காவியாலங்கார சாஸ்திரமறிந்தவனைக் கண்டதும் அவனையே தன் கொழுநனாகப் பாவித்து அவனைச் சேருகிறாள்…….. வால்மீகியைச் சாமானிய கவியாக நாம் பாவிக்கவில்லை. உலகத்திலுள்ள முதல் ஏழெட்டு மகா கவிகள் என்று கணக்கிட்டு எந்த ஜாதி அறிஞர் எண்ணினாலும் அந்தக் கணக்கில் வால்மீகியின் பெயரைச் சேர்க்காதிருக்க முடியாது. எமது சொந்த அபிப்ராயத்தில் உலகத்தின் ஒரு தனிக் காவியம் என்று சொல்லத் தகுந்தது கம்பராமாயணம் தான் என்றும், வால்மீகி ராமாயணம் அதற்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கும் என்றும் சொல்லுகிறோம்.   (பக்கம் 10,11)

ஹோமர் எழுதிய ஒதூஸியத்தில் வரும் குக்ளோப உபாக்கியானம், விர்க்கீலியனுடைய ஏனையத்தில் வரும் ஹார்ப்பியரின் செய்தி, ஆகிய இவைகளோடு தான் இந்த விராதன் கதையையும் இக்காண்டத்தின் கடைசியில் வரும் அயோமுகியின் கதையையும் ஒப்பிடலாகும். (The episode of Polyphemus the Cyclops in the Odyssey of Homer and the account of the Harpius in Virgil’s Eneid.) (பக்கம் 14)

 

மகாகவிகளெல்லாம் இத்தகைய மகா சந்தர்ப்பங்களில் பிரகிருதி மனித உணர்ச்சியோடு நடப்பது போல எழுதுவது சகஜமாயிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இலியாதின் 30-வது சருக்கத்தில் ஹோமர் பின்வருமாறு பாடுகிறார்:

“போர்க்கடவுள் துரோயா மீது வட்டமிட்டுக் கொண்டு தன் பயங்கரமான உருவத்தைப் ப்யற்காற்றாலும் மழை வேகத்தாலும் போர்த்தி மறைத்துக் கொண்டு, அத்துரோயாவின் உன்னதமான கோபுரங்களின் மீது நின்று கர்ஜித்துத் தன் வேகத்தைத் துரோயா நெஞ்சில் ஊற்றினான்.”

“பூதேவி புண்பட்டாள்; முடிவு வந்துற்றதென்று பகுதியாளும் தான் நிற்கும் அனைத்துப் பொருள்களினும் உயிர்த்துக் கொண்டு பொருமினாள், துடித்தாள் “ –

“Earth felt the wound and nature from her seat

Sighting through all her works, gave signs of woe

That all was lost” என்று மில்தனும் கற்பித்தெழுதுகிறான். எந்த ஜாதியினராயினும் பெருங் கவிகளின் இதயத்தில் ஒரே  மகாநாதம் ஒலிக்குமன்றோ? (பக்கம் 37)

 

உபாக்கியானங்கள் அமைப்பதில் ஹோமரைத்தான் – அவனும் இலியாதைப் பாடுகையில்தான் மிக சாமர்த்தியசாலி என்னலாம். அவன் எழுதிய ஒதூஸியம் என்னும் காவியத்தை உண்மையாக மகா காவியமென்று சொல்லக் கூடாது. அதை அநேகமாக உபாக்கியானங்களின் சேர்க்கையென்று சொல்லுவதே முறையாகும். ஆனால் இலியாதிலுள்ள அவனுடைய உட்கதைகள் சிறியனவாயும் அவய்வயங்களுக்கு அளவில் பொருத்தமாயும் இருக்கின்றன. கதையும் உபாக்கியானங்களும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு, கதைக்கு இடைஞ்சற்படுத்தாமல் பெரும்பாலும் எடுக்க முடியாதனவாய் இருக்கின்றன. ராமாயணத்தில் உபாக்கியான அமைப்பு இலியாதின் அமைப்புக்குத் தாழ்ந்ததன்று. (பக்கம் 39)

 

இவ் யுத்தகாண்டம்  ஒன்று மாத்திரம் அளவில் மேனாட்டுப் பெரிய மகா காவியங்களுக்கு ஏறத்தாழச் சரியாக இருக்கிறது. சாதாரணப் பதிப்புகளில் யுத்த காண்டத்தில் 4,358 விருத்தங்கள் காணப்படுகின்றன. இலியாதில் 15,693 அறுசீர் வரிகளே இருக்கின்றன என்று கணக்கிடுகிறார்களாதலால் கம்பனது யுத்த காண்டம் இலியாதை விடப் பெரியதாகவே இருக்கிறது. அவ் இலியாதில் உள்ள சகல சுவைகளையும் இக் காண்டத்தில் நாம் காணலாகும். (பக்கம் 53)

 

போரை வர்ணிப்பதில் ஹோமரே தான் சிறந்த கவி என்று மேனாட்டு ஆசிரியரின் கூற்றுக்களைக் கண்டும், ஹோமரின் உத்கிருஷ்டமான யுத்த வர்ணனைகளைப் படித்துப் பார்த்தும் நாம் மயங்கிப் போய், ஹோமரின் போர்ச் சித்திரங்களை விட உயர்ந்த சித்திரங்கள் கிடையா என மதித்திருந்தோம். ஆனால் கம்ப ராமாயணத்தின் யுத்த காண்டத்தைப் படித்துப் பார்த்ததும், கம்பன் போர் வர்ணனையில் ஹோமருக்குத் தாழ்ந்தவனில்லை என்றும், சில இடங்களிலும் சில விஷயங்களிலும் ஹோமரது போர் வர்ணனையை வென்றிருக்கிறானென்றும் கண்டு கொண்டோம். ஹோமரில் ஓர் குற்றம் இங்கு எடுத்தற்பாலது….. (பக்கம் 60)

தொடர்ந்து ஹோமரின் மீதான குற்றத்தை வ்.வெ.சு. ஐயர் விரிவாக விளக்குகிறார்.

மொத்தத்தில் சுவையான நூல்.

கம்பனின் காவியத்தை சிகரத்தில் நிறுத்தும் நேர்மையான விமரிசனம்.

அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நூல்.

கட்டுரையை முடிக்க வேண்டுமென்று நினைத்தாலும் அரவிந்த ரிஷியின் கருத்துக்களைப் பார்க்கவில்லை என்பதால் அடுத்த கட்டுரை தொடரும். அத்துடன் இந்த விமரிசனம்  பற்றிய தொடர் முடியும்.

***

 

வர்ஜில், ஹோமர், மில்டனைப் புகழக் காரணம் என்ன? (POST No.4272)

Written by S.NAGARAJAN

 

 

Date: 5 October 2017

 

Time uploaded in London- 5-35 am

 

Post No. 4272

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Russian stamp for English Poet John Milton

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 5)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239-இன் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

வர்ஜில், ஹோமர், மில்டனைப் புகழக் காரணம் என்ன -வால்மீகி, கம்பரைத் தெரியாததால் தான்!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

 

பாடல் 11

குமுத வாயிற் குழவி மிழற்றுறும்

அமுத தாரை இனிதென் றசைத்தஅவ்

விபுதன் நூலொடு மெய்ப்ப்ல கைக்கணே

சமனில் நின்று தயங்கத் தகுவது

 

பொருள்: குமுத மலர் போலும் இதழ்களுடைய சிறு குழந்தைகள் குழறும் கொச்சைச் சொற்கள் குழலினிலும், யாழினிலும் இனிமையுடையனவென்று கூறிய தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனார் செய்துள்ள தமிழ் மறையாகிய குறளோடு சங்கப் பலகையிற் சமனாக நிலவி நிற்கத் தகுதி வாய்ந்துள்ளது இக் கம்ப ராமாயண மகா காவியம்.

குறிப்பு: கம்ப ராமாயணம் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்னே கடைச்சங்கம் இறந்து போயினமையால் இந்நூல் சங்கப்பலகை ஏறாதொழிந்தது எனக் கூறல்

மிகையாகாது.

Greek Poet Homer on coin

பாடல் 12

அங்கம் சேரும் அவயவ சாலத்துள்

துங்கம் சேரொண்மை சூட்டும் முகமன்றே;

திங்கள் போலும் முகத்திற் கெழில்நிலம்

தங்கச் செய்வ சலச விழியரோ

 

பொருள்: ஓர் உடலைச் சேர்ந்த உறுப்புக் கூட்டத்தில் அவ்வுடலுக்கு அழகைத் தருவது முகமே ஆகும். சந்திரன் போல ஒளிரும் அம்முகத்திற்கும் அழகைப் பொழிவன ஆங்குத் தாமரை மலர் போல் விகசிக்கும் இரண்டு விழிகளுமேயாம்.

 

பாடல் 13

பாஷை மாதர் பலருளும் இன்னிசை

ஓசை மாதர் உறும்தமிழ் ஒண்டொடி

வாச வாண்முகம் வாய்ந்த விழியுகம்

ஏசில் ராமன் கதைகுறள் என்பவே

 

பொருள்: குற்றமற்ற ராமன் கதை, குறள் என்னும் இரண்டு நூல்களையும், உலகத்தில் நின்று நிலவும் அநேக பாஷைகள் என்னும் அழகிய மாதர்கள் குழுமிய கூட்டத்தில் இனிய ஒலியின்பத்தாற் சொல்லோசையின் அழகு இத்தன்மைத்தென விளக்கிக் காட்டும் தமிழாய அணங்கின் முகத்தில் இன்பாய வாசத்தையும் அறிவாய ஒளியையும் ஊட்டி இலகும் இரண்டு விழிகளென்னச் சொல்லலாம்.

 Poet from Italy -Virgil

பாடல் 14

காவி யன்றக விஞர்பூங் கானரு

காவி யன்றழ காரலர் தூவுமங்

காவி யன்றரு வன்றேஇத் தென்கவி

காவி யமணம் கான்றொளிர் கற்பகம்

 

பொருள்: (கால தேச வேற்றுமையாலும், மொழி வேற்றுமையாலும், பல்வேறு கவித்துறை வேற்றுமையாலும்) பல தொகுதியாகச் சேர்ந்து நிற்கும் கவிஞராம் காக்கள் நிறைந்திருக்கும் அழகிய மொழி ஆரண்யத்திற்கு அடுத்துத் தங்கி அழகிய மலர்களைத் தூவி விளங்கி நிற்கும் ஒரு பெரிய தருவென இவ்வெழிற்கலைஞனை யான் ஒப்பிடேன்; இக்காட்டில் நின்றும் மிக்க தூரத்தில் காவிய மணம் எக்காலத்தும் வீசிக் கொண்டு நிற்கும் ஒரு நிகரில் கற்பகத் தருவென்றே அவனை யான் சொல்லத் துணிவேன்.

 

பாடல் 15

நாமகள் அருள் நண்ணும் வரகவி

ஹோமர் வர்ஜில் மில்ற்றன் என்ன ஓதுவார்

வாமமார் வடதேச வான்மீகர் தென்

சீமையத் தமிழ்க் கம்பர்த் தெரியலார்

 

பொருள்: ஸரஸ்வதி கடாக்ஷம் பெற்று விளங்கும் வரகவிகள் ஹோமர், வர்ஜில், மில்ற்றன் என்னும் மூவரே என்று மேற்றிசையோர் கூறுகின்றனர். ஆனால் அவர் அங்ஙனம் கூறுவதற்குக் காரணம் வடதேசத்தில் அழகிய ஆரியப் புலவனாம் வான்மீகியையும் தென் தேசத்தில் இனிய தமிழ்க்கவியரசனாம் கம்பனையும் அறியாமையேயன்றி வேறன்று.

**

மேலே உள்ள அழகிய ஐந்து பாக்களில் கம்பனைப் பற்றிய கவிஞரின் உன்னதமான புகழாரத்தைக் காண்கிறோம்.

குறளுக்குச் சமமாக சங்கப் பலகையில் ஏறும் தகுதி பெற்றது கம்ப ராமாயணம்.

 

உடலுக்கு அழகு முகம்.முகத்திற்கு அழகு இரு விழிகள். அப்படிப்பட்ட விழிகளாக குறளும் கம்ப ராமாயணமும் திகழ்கின்றன.

உலகில் பல மொழிகள் உண்டு; ஒலியின்பம் மீதுற இனிய  சொல்லோசையால் அழகுறத் திகழும் இன்ப வாசம், அறிவு ஒளி என்னத் திகழும் இரு கண்கள் அல்லவா அவை!

 

 

காட்டில் விளங்கும் பெரியதொரு மரம் என இவனை நான் ஒப்பிட மாட்டேன். ஆனால் நினைத்ததை எல்லாம் தரும் கற்பக மரம் என்றே கூறுவேன்.

மேலை நாட்டினர் கவிஞர்கள் என்றால் ஹோமர்,வர்ஜில், மில்டன் ஆகிய மூவர் மட்டுமே கவிஞர்கள் என்று கூறுகின்றனர். ஏனெனில் அவர்கள் வடதிசைப் புலவனான வான்மீகியை அறிய மாட்டார். தென் திசைப் புலவனாகிய கம்பனை அறிய மாட்டார்.

Homer on Greek Stamp

 

இவர்களை அறிந்திருந்தால் அந்தக் கவிஞர்களின் நிலை என்ன ஆகுமோ

 

இப்படி அழகுற உலகளாவிய ஒரு சஞ்சாரத்தை மேற்கொண்டு வான்மீகியையும் கம்பனையும் உலக கவிஞர்கள் வரிசையில் முன்னணியில் நிறுத்தி அவர்கள் தகதிக்குத் தக்கபடி தர வேண்டிய மரியாதையை கவிஞர் சிவராஜ பிள்ளை அழகுத் தமிழில் தருகிறார்.

 

கம்ப ரஸிகரின் பாடல்கள் தொடரும்

***

 

சம்ஸ்கிருத மொழி அதிசயங்கள்!

yogaveshti,indus style

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1498; தேதி 19 டிசம்பர், 2014.

ஒவ்வொரு மொழியிலும் பல அதிசயங்கள் இருக்கத்தான் செய்யும். தமிழில் 12 உயிர் எழுத்துக்களில் ஒன்றான ‘’ஔ’’ என்னும் எழுத்தில் ஒரு சொல் கூட சங்க இலக்கியத்தில் இல்லை! சங்க இலக்கியத்துக்கு பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த திருக்குறளிலும் இல்லை. நாம் அறிந்த ஔவையார் என்ற புலவர் பெயரையும் அவ்வையார் என்றே அக்காலத்தில் எழுதினார்கள். தமிழில் பல எழுத்துக்களுக்கு தேவையே இல்லை என்பதை வேறு ஒரு கட்டுரையில் பட்டியல் போட்டுக் காட்டியுளேன். இன்னும் பல அதிசயங்கள் தமிழ் மொழியில் உண்டு. அதைத் தனியே காண்போம்.

சம்ஸ்கிருத மொழி அதிசயங்கள் பற்றி மோனியர் வில்லியம்ஸ் என்ற அறிஞர் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்:
“எண்ணிக்கையில் அதிகமான நூல்களைப் படைத்தது மட்டும் நம்மை வியப்பில் ஆழ்த்தவில்லை. அவர்களுடைய நூல்களின் நீளத்தைப் பாருங்கள்! வர்ஜில் என்ற புகழ் பெற்ற கவிஞரின் ‘’ஏனிட்’’ என்னும் நூலில் 9000 வரிகள்! கிரேக்க நாட்டின் முதல் காவியமான – ஹோமர் எழுதிய — இலியட்டில் 12,000 வரிகள். அவரே எழுதிய மற்றொரு காவியமான ஆடிஸியில்15,000 வரிகள்! ஆனால் இந்துக்களின் மஹாபாரதத்திலோ இரண்டு லட்சம் வரிகள்! இத்தோடு அதன் பிற்சேர்க்கையான ஹரிவம்சத்தைச் சேர்த்தால் இன்னும் அதிகமாகும்!

அவர்களுடைய இலக்கியத்தில் உள்ள ஞானம், இயற்கை அழகு, குடும்பத்தினர் இடையே நிலவும் அன்பு, வாத்சல்யம், நீதி போதனை ஆகிய எதிலுமே கிரேக்க, ரோமானிய (லத்தீன்) காவியங்களுக்கு அவை சளைத்தவை அல்ல”.

ஹெர்மன் ப்ரமோபர் என்பவர் ஜெர்மானிய அறிஞர் — அவர் கூறுகிறார்: “நமக்குத் தெரிந்த ஐரோப்பிய மொழிகளில் கிரேக்க மொழிதான இலக்கியச் செறிவுடைய வளமான மொழி. ஆனால் அதில் ஒரு வினைச் சொல் 68 வடிவங்கள் எடுப்பதை நாம் அறிவோம். அது கண்டு வியக்கிறோம். சம்ஸ்கிருதத்தில் ‘’க்ரு’’ (செய்ய) என்ற வினைச் சொல் 336 வினை வடிவங்களை உடையது! இதில் இன்னும் எவ்வளவோ சேர்க்க முடியும். அவைகளைச் சேர்க்காமல் 336.

athithi devo bhava

உபநிஷத்துகள் பற்றி மூவர் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தில் சம்ஸ்கிருத மொழியீன் ஆழத்தை அளந்து காட்டுகின்றனர்.

“சம்ஸ்கிருதத்தில் 800 வேர்ச் சொற்கள் இருக்கின்றன. அவைகளை அறிந்துவிட்டால் அவை மூலம் உருவாகும் நூற்றுக் கணக்கான சொற்களை அறிய முடியும். ஒரு எடுத்துக் காட்டு ‘’ராம’’ என்ற சபத்துக்கு வேரான ‘’ரம்’’, ரம்யதி என்பதை எடுத்துக் கொண்டால் அமைதியாக இரு, ஆனந்தமாக இரு, ஓய்வாக இரு, இன்பமாக இரு, மற்றவர்களுக்கு ஆனந்தம் கொடு,காதல் செய், விளையாடு, இன்பம் ஊட்டு, சாந்தமாக இரு, நிறுத்து, அசையாமல் நில் எனப் பல பொருள் தொனிக்கும்.

இதை எப்படி எல்லாம் பயன்படுத்த முடியும் என்பதற்குக் கீழே உள்ள எடுத்துக் காட்டைப் பாருங்கள்:
மூஷ் என்றால் திருடு என்று பொருள். மூஷிகம் என்றால் எலி. எல்லாப் பொருட்களையும் திருடிச் செல்லும் பிராணி. மூஷிக ரதி என்றால் பூனை என்று பொருள். இதில் ரம் என்ற இணைப்பு இருக்கிறது அதாவது எலியைத் தடுத்து நிறுத்தும் பிராணி அல்லது எலியினால் மகிழ்ச்சி கொள்ளும் பிராணி என்று பல பொருள் சொல்லலாம்—மூஷிக+ரதி.

இதையே ஆன்மீக விஷயங்களில் கூடப் பயன்படுத்தலாம். மூசிக என்பது ஆத்மா. மூஷிகரதி என்பது ஆன்மஞானம் பெற்றவன்.

இதையே வேத மந்திரங்களுக்கும் நாம் பயன்படுத்திப் பார்க்கலாமம். வேத மந்திரங்களின் பொருள் ஒரு மட்டத்தில் ஏதோ எலி, பூனை கதை சொல்லுவது போல இருக்கும். அதன் அடையாள பூர்வ அர்த்தமோ ஆன்மீக ரகசியமாக இருக்கும். அதன் மந்திர சப்தமோ, மந்திர ஒலியினால் வரும் பலன்களைக் கொடுக்கும்.

four vedas

வேத கால மொழி பல ‘’மறை’’கள் (ரகசியங்கள்) நிறைந்தவை. அது மட்டுமல்ல சொல்லின் இலக்கணம் முக்கியமல்ல. அந்தச் சொல்லுக்கு என்ன என்ன பொருள் என்று பார்த்தால் பக்கம் பக்கமாக எழுத முடியும். அந்தக் காலத்தில் குருகுல வாசத்தில் குரு தனது சீடர்களுக்கு இந்த ரகசியங்களை அவரவர் தராதரம் அறிந்து போதிப்பார்.

ரிக் வேதத்தில் 24 பிரிவுகள் இருந்தன. வியாசர் என்னும் மாபெரும் அறிஞர் அவை அழிந்து வருவது கண்டு, வருத்தப்பட்டு அவற்றைக் காப்பாற்ற முயன்றார். பெரிய ‘’கம்பெனி எக்ஸிகியுட்டிவ்’’ மாதிரி திட்டம் எல்லாம் போட்டு, நான்கு உலக மகா அறிஞர்களை அழைத்து வேதத்தை நான்காக வகுத்து அவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொடுத்தார். அப்படியும் நமக்குக் கிடைத்தது ரிக்வேதத்தின் ஒரே பிரிவு மட்டும்தான். பெரும்பகுதி அழிந்துவிட்டன. அந்த ஒரு பகுதியைக் கூட எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவ்வளவு பழமையானது — ரகசியங்கள் நிறைந்தது. சுமேரிய ஜில்காமேஷ் காவியம் போல எளிமையானது அல்ல. அதைப் போல சுவையில் மட்டமானதும் அல்ல. ரிக் வேத மந்திரங்கள் 10,000-க்குமேல் இருக்கின்றன. ரிக் வேத துதிகளின் எண்ணிக்கை 1028. சில துதிகளில் ஒரு மந்திரம் மட்டும் உண்டு. அதிகமாக ஒரே துதியில் 58 மந்திரங்கள் இருப்பதையும் காணலாம்.

ரிக்வேதம் தவிர வேறு மூன்று வேதங்களும் இருக்கின்றன. ஏறத்தாழ 20 வெளிநாட்டு அறிஞர்கள் இவைகளை மொழி பெயர்க்கிறேன் என்று வந்து திக்கு முக்காடித் திணறிப் போனதை அவர்கள் மொழிபெயர்ப்பு என்னும் ‘’தமாஷைப்’’ படிப்பவர்களுக்கு விளங்கும். ஒரு சொல்லை ஒருவர் மரம் என்றால் மற்றொருவர் நதி என்பார். இன்னும் ஒருவர் இது இராக்கதர் என்பார். இன்னும் ஒருவர் இது பொருளே விளங்காத பிதற்றல் என்பார். இன்னும் ஒருவர் படி எடுத்தவர் பிழை செய்திருக்கலாம், அந்தச் சொல்லுக்குப் பதில் இந்தச் சொல்லைப் போட்டால் எப்படி இருக்கிறது? என்று இடைச் செருகல் செய்வார். வேத மொழி பெயர்ப்புகளை அருகருகே வைத்துக் கொண்டு ஒப்பீட்டுப் பார்ப்பவர்களுக்கு நிறைய ‘’ஜோக்’’குகள் கிடைக்கும்.

classical skt

அந்தக் காலத்தில் இவர்கள் காசியில் உள்ள பண்டிதர்களை அழைத்தபோது வேதத்தின் புனிதத்தை உணர்ந்தவர்கள் மொழிபெயர்க்க உதவிசெய்ய மறுத்துவிட்டனர். பிராமணர்களில் மூன்றாந்தர ஆட்கள், காசுக்காக ஆசைப்பட்டு இவர்களுக்கு அரைக்குறை அர்த்தத்தைச் சொல்ல, ஆங்கிலமும் தெரியாமல் உளர, அவர்கள் சம்ஸ்கிருதமும் தெரியாமல் திணற, எல்லாம் கோளாறாகப் போயிற்று.

இப்பொழுது அமெரிக்காவில் சில புதுரக அறிஞர்கள் தோன்றியுள்ளனர். வேதத்தில் எதை எடுத்தாலும் ‘’செக்ஸ்’’ என்று சொன்னால் நன்றாகப் புத்தகம் விற்கும் என்று ஒரு சிலர் எழுதி பெரிய புத்தகக் கம்பெனிகள் மூலம் அவைகளை ஏற்றுமதி செய்கின்றனர். இன்னும் சிலர் இந்து மதத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று ‘’சமுத்ரம்’’ என்றால் அது ‘’கடல்’’ அல்ல, அது வெறும் குளம், ‘’புரம்’’ என்றால் சிந்து சம்வெளிக் ‘’கோட்டை’’கள் என்றெல்லாம் தத்துப் பித்து என்று எழுதி வருகின்றனர். இவர்கள் எல்லார் வங்கிக் கணக்குகளிலும் சேரும் பணம் எங்கே இருந்து வருகிறது என்பதைப் பார்த்தால் இவர்களின் பின்னால் இருக்கும் ஆட்களையும் சூழ்ச்ச்சிகளையும் சதிகளையும் நாம் அறியலாம்.

வெற்றி எட்டும் திக்கும் எட்ட கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்க வென்று கொட்டு முரசே! — பாரதி

மணமகளே, மணமகளே வா,வா! உன் வலது காலை எடுத்துவைத்து வா வா!!

Griha-Pravesh
Hindu Bride entering the house with her right foot stepping first

மணமகளே, மணமகளே வா,வா! உன் வலது காலை எடுத்துவைத்து வா வா!!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1397; தேதி 8 நவம்பர், 2014.

தமிழ்நாட்டில் திருமணப் பந்தல்களில் அடிக்கடி ஒலிக்கும் தமிழ் திரைப்படப் பாடல் “மணமகளே, மணமகளே வா வா! உன் வலது காலை எடுத்து வைத்து வா வா!!” — ஏன் வலது காலை எடுத்து வைக்க வேண்டும். இடது கால் கூடாதா?

உலகம் முழுதும் வலதுசாரிகளுக்கு கொஞ்சம் மதிப்பு அதிகம். இந்தக் கொள்கையை உலகம் முழ்ழுதும் பரப்பியோர் இந்துகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது கீழ்கண்ட விஷயங்களால் தெரிகிறது:

1.கடிகாரம் ஏன் வலமாகச் சுற்றுகிறது? இந்துக்கள் ஏன் கோவிலை வலமாகச் சுற்றுகிறார்கள்? இரண்டையும் ஒப்பிட்டால் நாமே கடிகாரத்தை வலமாகச் சுற்றவைத்தவர்கள் என்றும் தோன்றுகிறது. இந்துக்கள் எந்த சுப காரியத்தையும் வலப் பக்கமாகவே செய்வர்.

2.இடது கையை — சுத்தம் செய்யப் பயன்படுத்துவதால் மட்டும் வலது கைக்குப் பெருமை என்று எண்ணி விடக்கூடாது. சிலர் பிறப்பிலேயே இடது கையை அதிகமாகப் பயன்படுத்துவர். இப்படிப்பட்ட இடது கைக் காரர்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டனர். இடது கையரைவிட வலது கைக்காரர்கள் ஒன்பது ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்கிறார்கள். சர்வே, புள்ளி விவரம் எதுவும் நடத்தாமலேயே இந்துக்களுக்கு அந்தக் காலத்திலேயே இந்த விஞ்ஞான உண்மை தெரிந்திருக்கிறது.

right foot
Hindu Griha Pravesh Ceremony

3.இந்துக்கள் வீட்டில் யாராவது இடது கைப்பழக்கத்தோடு பிறந்து விட்டால் அவர்களை அதட்டி மிரட்டி வலது கைக்காரர்களாக மாற்றி விடுவர். வலது காலை எடுத்து வைத்துதான் கல்யாணப் பெண் வீட்டுக்குள் வரவேண்டும். கிரஹப் ப்ரவேசம், பூஜைகள் எல்லாவற்றிலும் எதையும் வலது புறமகவே செய்ய வேண்டும்

4.பிராமணச் சிறுவர்கள் செய்யும் சமிதாதானம், எல்லோரும் செய்யும் சந்தியா வந்தனம் ஆகியவற்றிலும் வலது கைப்புறமாகவே முத்திரைகள், பொட்டு வைக்கத் துவங்குவர்.

5.தமிழன் கண்ட அதிசயம்
சங்க இலக்கியத்தில் அடிக்கடி ஒரு உவமை வரும். அதாவது புலியால் தாக்கப்பட்ட மிருகம் வலப் பக்கம் விழுந்தால்தான் புலி சாப்பிடுமாம். இதை பத்துப் பதினைந்து புலவர்கள் பாடி விட்டார்கள்! ஆக மணப் பெண்ணை வலது காலை வைக்கச் சொன்ன தமிழன், காடுகளில் புலியையும் கவனித்திருக்கிறான் (காண்க புறம். 190, அகம் 238, 252).

6.இந்துக்கள் கோவில்களுக்குப் போனாலும், உணவகங்களுக்குப் போனாலும் வலது கையை மட்டுமே பயன்படுத்துவர். அதே போல சாது சந்யாசிகளும், கோவில் குருக்களும் கூட வலது கை மூலம் மட்டுமே எல்லாம் செய்வர்.

7.ஒரே ஒரு இடத்தில் மட்டுமே – மயானத்தில் மட்டுமே—சடலத்தை வலம் வராமல் – இடமாக வருவர். இதே போல பிராமணர்கள் தர்ப்பணம் செய்கையில் இடது தோளின் மீதிருக்கும் பூணூலை வலது தோளில் மாற்றி (அதாவது பூணூல் இடப்பக்கமாக சரியும்படி) நீர்க்கடன் செலுத்துவர். இந்துக்கள் செய்யும் பூஜைகளில் பெண்கள் எப்போதும் வலப்பகம் நிற்க வேண்டும்.

entering-the-new-house

8. இன்னும் ஒரு இடம் இறைவனே தனது இடப்பக்கத்தை உமை அம்மைக்குக் கொடுத்ததாகும். அர்த்த நாரீஸ்வரன் கதைதான் பைபிளில் ஆதாம்—ஏவாள் கதையாக வந்தது. இடப்பக்க எலும்பை உடைத்து பெண்ணை உருவாக்கினான் இறைவன். சம்ஸ்கிருதத்தில் பெண்ணுக்கு வாமா (இடது) என்ற பெயரும் உண்டு. (காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சொற்பொழிவில், வேதத்தில் உள்ள ஒரு கதைதான் இது என்பார். ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் இருந்தன. ஒரு பறவை பழம் சாப்பிடாமல் ஆனந்தமாக இருந்தது மற்றொன்று பழத்தைச் சாப்பிட்டது என்பது வேதக் கதை–. இதுவே ஆடம் எனபவர் ஆப்பிள் சாப்பிட்டகதையாக வந்தது. ஆத்மா என்பது ஆதாம் என்றும் ஈவ் என்பது ஜீவ்+ஆத்மா= ஜீவாத்மா என்றும் மாறியது.)

9.கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய ஆடிஸியில் பல இடங்களில் வலது பக்கப் பெருமையை எழுதி இருக்கிறார். ஒரு கருடன் வலப் பக்கமாகப் பறந்தவுடன் கடவுளே நல்ல சகுனம் காட்டிவிட்டார் என்று பாடுகிறார். இது போலப் பல இடங்களில் வலது என்பது அதிர்ஷ்டம் என்று எழுதுகிறார்.

left-right-handedness-dominance

வலப் பக்கம் இலை வந்தால், கணவர் நல்லவர்!

10.இங்கிலாந்தில் ஒரு குறிப்பிட்ட செடியை பூஞ்சட்டியில் வைத்துப் பெண்கள் தொங்க விடுவர் என்றும் அதன் இலைகள் வலப் பக்கம் திரும்பினால் கணவர் நல்லவர் என்றும், இலைகள் இடது பக்கம் திரும்பினால் கணவன் மற்ற பெண்களுடன் தொடர்பு கொண்டவன் என்றும் நம்பினர். இந்தச் செடிக்கு “மிட் சம்மர் மென்” என்று பெயர். ஆக ஐரோப்பவிலும் இந்த நம்பிக்கை இருந்தது தெரிகிறது.

11. வால்மீ கிராமாயண யுத்த காண்டத்தில் ராமன் சொல்கிறான்: இதோ எனது வலது கண் துடிக்கிறது. நான் யுத்தத்தில் வெற்றி பெறுவேன் என்கிறார். ஆண்களுக்கு வலது கண் துடித்தால் அதிர்ஷ்டம். பெண்களுக்கு வலது கண் துடித்தால் கெட்டது. உத்தர காண்டத்தில் சீதை புலம்புகிறாள்: என் வலது கண் துடிக்கிறது சகுனங்கள் சரியில்லை. எனக்கு தீங்கு நடக்கப்போகிறது”. அவள் சொன்னது சரிதன் — இதற்குப்பின், அவளை ராமன் காட்டிற்கு அனுப்பிவிட்டான்.

இதிலும் விஞ்ஞான உண்மை இருக்கலாம். பெண்களுக்கு வலப் பக்க மூளையும் ஆண்களுக்கு இடப்பக்க மூளையும் பலம் வாய்ந்தவை என்பது மருத்துவ அறிவியல் காட்டும் உண்மை. ஆனால் வலது மூளை உடலின் இடது பக்கத்தையும் இடது மூளை உடலின் வலது பக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது என்பதையும் மருத்துவ நூல் கூறுகிறது. ஆகவே வால்மீகி ராமயணம் சொல்வது உண்மையே.

12.இதே போல ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும், லத்தின் மொழியிலும் வலதைப் பாராட்டியும் இடது புறத்தை இகழ்ந்தும் பல பல மரபுத் தொடர்கள் உள்ளன ( எனது ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரங்களும் உள்ளன.)

13.இந்துக்கள் கிழக்கு நோக்கி நின்று பூஜை செய்வர். பிறகு வலது பக்கம் திரும்புவர். அது தெற்கு திசை — தட்சிண திசை. ஆகையால் இப்படி வலப்பக்கம் செல்வது ப்ர+தக்ஷிணம் எனப்படும்.

traditional_banana_leaf_meal
You have to use only right hand for eating

நீங்கள் இடதா? வலதா?

14.வாமாசாரம் என்பது இந்துக்களில் ஒரு வழிபடும் முறை. இதற்கு இடது புற முறை என்று பெயர். அவர்களுக்கு ஐந்து “ம” முக்கியம். அதாவது மது, மாது, மத்ஸ்யம் (மச்சம்=மீன்), முத்ரா (முத்திரைகள்), மைத்துனம் (செக்ஸ்) என்பன ஆகும். ஆகையால் இது கெட்ட பெயர் எடுத்தது . ஏனெனில், இந்த வழியும் கடவுளை நோக்கி அழைத்துச் செல்லுமானாலும், பாதியில் வழுக்கி விழும் வாய்ப்புகள் அதிகம்.

book on left

15.முடிவுரை:–

1.கிரேக்க, லத்தீன், பிரெஞ்சு, ஆங்கில மொழிகளில் உள்ள சொற்றொடர்கள் உலகம் முழுதும் இந்த வழக்கம் இரூப்பதைக் காட்டினாலும் இந்து மத நூல்களில் ஏராளமான குறிப்புகள் இருப்பதாலும் இன்று வரை நாம் மட்டுமே இதைப் பயன்படுத்துவதாலும் நாமே இதைத் துவக்கியவர்கள் என்று சொல்லலாம்.
2.வலது கால், வலது கை ஆகியவற்றின் பெருமைதனைக் கூறும் சொற்றொடர்கள் ஐரோப்பிய மொழிகளில் இருப்பதும் கருடன் பற்றிய குறிப்புகள் இருப்பதும் நம்முடைய தொடர்பைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

3.வலம்புரிச் சங்கு போன்ற புனிதப் பொருட்களும் வலதின் மகிமையை உணர்த்தும்

left_verse_right_brain

contact swami_48@yahoo.com