அப்பர் தெரிவிக்கும் இரகசியமும், எறும்புகளின் அணிவகுப்பும்! (Post No.5670)

Written by S Nagarajan

Date: 17 November 2018

GMT Time uploaded in London –7-09 am
Post No. 5670

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அப்பர் தெரிவிக்கும் இரகசியமும், எறும்புகளின் அணிவகுப்பும்!

ச.நாகராஜன்

1

அப்பர் தனது பாடல்களில் நூற்றுக்கணக்கான இரகசியங்களைப் போகிற போக்கில் தெரிவித்துக் கொண்டே இருப்பார்.

அதை ஊன்றிக் கவனித்து அறிய வேண்டியது நமது கடமை.

ஐந்தாம் திருமுறையில் பொதுப் பாடலாக அமையும் ஒரு பாடலை இங்கு பார்ப்போம்.

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்                                                                          ஆறு கோடி நாராயண ரங்ஙனே                                                                               ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்                                                                    ஈறி லாதவன் ஈசன் ஒருவனே. 

ஈசனின் வயது என்ன என்ற இரகசியத்தை போகிற போக்கில் இப்படி அப்பர் சொல்கிறார்.

இதுவரை நூறு கோடி பிரம்மாக்கள் பிறந்து இறந்து விட்டனர்.

அதே போல ஆறு கோடி நாராயணர்கள் அவதரித்து மறைந்து விட்டனர்.

இந்திரனைப் பற்றிச் சொல்லப் போனாலோ, கங்கை ஆற்றின் மணலை எண்ண முடியுமா? அதை எண்ணிப் பார்த்தால் எவ்வளவு எண்ணிக்கை வருகிறதோ, அந்த அளவு தோன்றி மறைந்து விட்டனர்.

ஆனால் ஈறு இல்லாதன் – முடிவே இல்லாதவன் – ஈசன் ஒருவனே என்பதை அறியுங்கள்.

Picture posted by Lalgudi Veda

2

பிரம்மாவின் ஆயுள் என்ன என்பதை வேதம் கூறுகிறது.

ஒரு மனித வருடம் – ஒரு தேவ அஹோராத்ரம் (அதாவது தேவரின் ஒரு பகலும் இரவும்)

360 தேவ அஹோராத்ரம் – 1 தேவ வருடம்

12000 தேவ வருடம் – ஒரு சதுர் யுகம்

ஒரு சதுர் யுகம் – ஒரு கிருதயுகம், ஒரு த்ரேதா யுகம், ஒரு த்வாபர யுகம், ஒரு கலியுகம் கொண்டது.

    ஒரு கலியுகம் – 4,32,000 மனித வருடங்கள்

ஒரு த்வாபர யுகம் – 8,64,000 மனித வருடங்கள்

ஒரு த்ரேதா யுகம் – 1,296,000 மனித வருடங்கள்

ஒரு கிருத யுகம் – 1,728,000 மனித வருடங்கள்

ஆக ஒரு சதுர் யுகம் – 4,320,000 மனித வருடங்கள்

71 சதுர் யுகம் – ஒரு மன்வந்தரம்

14 மன்வந்தரம்  ஒரு கல்பம்

2 கல்பம் – பிரம்மாவின் ஒரு பகல் ஒரு அஹோராத்ரம்

360 நாட்கள் – ஒரு பிரம்ம வருடம்

100  பிரம்ம வருடம் பிரம்மாவின் ஆயுள்

*

சிவ புராணத்தில் (7.4 TIME CALCULATION) பிரம்மாவின் ஆயுள் பற்றி இப்படி கூறப்படுகிறது.

பிரம்மாவின் ஒரு வருடம் = 1000 கல்பங்கள்

ஒரு பிரம்ம யுகம் என்பது அப்படிப்பட்ட 8000 வருடங்கள் கொண்டது.

ஒரு பிரம்ம சவனம் என்பது அப்படிப்பட்ட 1000 யுகங்களைக் கொண்டது.

பிரம்மாவின் ஆயுள் அப்படிப்பட்ட 3000 சவனங்களைக் கொண்டது.

இப்படிப்பட்ட பிரம்மாவின் ஆயுளுக்குள் ஐந்து லட்சத்து நாற்பதினாயிரம் இந்திரர்கள் வந்து போகின்றனர்!

பிரம்மாவின் முழு ஆயுள் விஷ்ணுவிற்கு ஒரு நாள்.

விஷ்ணுவின் முழு ஆயுளும் ருத்ரனுக்கு ஒரு நாள்.

ருத்ரனின் முழு ஆயுளும் சிவனுக்கு ஒரு நாள்.

சிவனின் ஆயுள் காலத்தில் ஐந்து லட்சத்து நான்காயிரம் ருத்ரர்கள் வந்து போகின்றனர்.

முழு விவரங்களுக்கு சிவ புராணத்தை கீழ்க்கண்ட தளத்தில் பார்க்கலாம்.

https://books.google.com/books?id=r6QZDQAAQBAJ&pg=PT221&lpg=PT221&dq=vishnu%27s+lifespan+equal+to+brahma%27s&source=bl&ots=77XFjyI4zQ&sig=PO8gS18WiJof4FvbVPRKyIyZmow&hl=ta&sa=X&ved=2ahUKEwiukIbt-9TeAhWnrFQKHWzLA14Q6AEwCXoECAcQAQ#v=onepage&q=vishnu’s%20lifespan%20equal%20to%20brahma’s&f=false

ஆக, அம்மாடியோவ் என்று இருக்கிறது கணக்கு!

 

3

பிரம்ம வைவர்த்த புராணத்தில்  கிருஷ்ண ஜன்ம காண்டத்தில் ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது.

இந்திரனுக்கு எங்கும் இல்லாத ஒரு அரண்மனை அமைக்க ஆசை. விஸ்வகர்மாவைக் கூப்பிட்டு அப்படி ஒரு அழகிய அரண்மனையை அமைக்கப் பணித்தான். விஸ்வகர்மாவும் தன் திறமையை எல்லாம் காட்டி ஒரு நகரையே அமைத்தான். ஆனால் இந்திரன் திருப்தியுறவில்லை. இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பதாகக் கூறிக் கொண்டே இருந்தான்.

சோர்ந்து போன விஸ்வகர்மா பிரம்மாவிடம் முறையிட நாளை உன் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும் என்று அருளினார்.

அடுத்த நாள் காலை இந்திரனின் வாசலில் ஒரு பிரம்மச்சாரி பிராம்மணன் வந்து சேர்ந்தான். அவனை வரவழைத்த இந்திரன் அவன் வந்த் நோக்கத்தைக் கேட்கவே, “நீங்கள் ஒரு அழகிய நகரை நிர்மாணிப்பதாகக் கேள்விப்பட்டேன். இன்னும் எத்தனை வருடங்கள் ஆகும் அது முடிய? இதுவரை எந்த இந்திரனும் செய்யாத ஒரு அரிய காரியத்தை ஆரம்பித்திருக்கிறாயே!”  என்றான்.

இந்திரன் சிரித்தான்.

“இது வரை எத்தனை இந்திரர்களை நீ பார்த்திருக்கிறாய்?” என்று கேட்டான்.

அதற்கு அந்த பிராம்மண பையன் ஒவ்வொருவரின் ஆயுளையும் விவரமாக எடுத்துரைக்க ஆரம்பித்தான்.

 “கணக்கிலடங்கா எத்தனை உலகங்கள். நீர்க்குமிழிகள் போல உடைந்து உடைந்து எத்தனை பிரபஞ்சங்கள். எத்தனை பிரம்மாக்கள். எத்தனை இந்திரர்கள்“ என்று விவரமாக ஒரு சொற்பொழிவையே ஆற்றிச் சிரித்தான்.

அப்போது அங்கு எறும்புகளின் அணிவகுப்பு ஒன்று சென்றது. அந்த எறும்புகளைப் பார்த்துச் சிரித்தான் அவன்.

“எதற்குச் சிரிக்கிறாய்?” என்று இந்திரன் கேட்டான்.

“இதோ, போகின்றனவே, கணக்கிலடங்கா எறும்புகள். இவை அனைத்துமே ஒரு காலத்தில் இந்திரர்களாக இருந்தவர்களே. புண்ணியம் போன பின் அந்த இந்திரர்கள் இதோ, இந்த எறும்பாக ஊர்கின்றனர்” என்றான்.

இதைக் கேட்ட இந்திரன் திடுக்கிட்டு பூரண ஞானத்தை அடைந்தான். கர்வ பங்கம் அடைந்தான்.

கர்மத்தினாலேயே ஒருவன் நல்ல பதவியை அடைகிறான் என்றும் அதே கர்மத்தினாலேயே அவன் கீழ் நிலையையும் அடைகிறான் என்பதையும் உணர்ந்து கொண்டான்.

எறும்புகளின் அணிவகுப்பு (The Parade of Ants)!

இதைப் படித்தால் எல்லையற்ற பிரபஞ்சத்தின் முடிவற்ற காலம் என்பது பற்றி அறிய முடியும்.

*

அப்பர்  பிரான் இந்தக் கணக்கையெல்லாம் எண்ணி எண்ணி வியந்தார்.

அந்தமில்லா – ஈறு ஒன்று இல்லா – பிரானின் பெருமை அவரை விக்கித்தது. உடனே, தனக்குத் தெரிந்த கால இரகசியத்தை உள்ளடக்கி, ஈறு இல்லா ஈசனைப் போற்றிப் பாடினார் :

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்                                                                          ஆறு கோடி நாராயண ரங்ஙனே                                                                                ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்                                                                    ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.
ஈசனின் வயது என்ன – ஈறு இல்லை – என்ற இரகசியத்தை போகிற போக்கில் இப்படி அப்பர் சொல்கிறார்.அப்பர் பிரானின் பாடல்கள் ஆழ்ந்த ரகசியங்களை விளக்குபவை; பொருளாழம் கொண்டவை.
தேவாரம் படிப்போம்; இரகசியம் அறிவோம்!!

 

TAGS- எறும்புகளின்,அணிவகுப்பு

****

சிலைகளைக் காத்துக் கலைக்கூடம் அமைத்த பாஸ்கரத் தொண்டைமான்! (Post No.5667)

Written by S Nagarajan

Date: 16 November 2018

GMT Time uploaded in London –5-59 am
Post No. 5667

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

சிலைகளைக் காத்துக் கலைக்கூடம் அமைத்த பாஸ்கரத் தொண்டைமான்!

ச.நாகராஜன்

1

   தமிழகத்தில் சிலை திருடிக் கடத்தும் மாபாவிகளைப் பற்றித் தினமும் ஒரு செய்தி வருகிறது.

தோண்டத் தோண்ட சிலைகள் – வீடுகளில், வயல்வெளிகளில் என!  செய்திகளைப் படித்தால் பகீர் என்கிறது.

தமிழகத்தின் பழம் பாரம்பரியத்தைப் பற்றிப் பேசி தமிழால் வயிறை வளர்த்து, கொள்ளை அடித்துச் சொத்துச் சேர்த்த மாபாவிகள் சிலைகளின் மேலும் கை வைத்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.

முகலாயர்களின் வழியேயும், ஆங்கிலேயர்களின் வழியேயும் வந்தோர் சிலைகளை உடைத்தனர்; கடத்தினர். இப்போது தமிழை வைத்து வணிகம் செய்வோர் சிலைகளையும் வணிகச் சரக்காக்கி விட்டனர். ஐயோ, தமிழகமே!

இந்தச் சிலைகளை அமைக்க மன்னர்கள் பட்ட பாடு எத்தனை; சிற்பிகள் தம்மை அர்ப்பணித்து ஆற்றிய சேவை எத்துணை பெரிய சேவை. எதிலாவது தம் பெயரை எந்த மன்னனாவது, சிற்பியாவது பொறித்தது உண்டா?

ஆனால் இப்போதோ?!

எங்கு பார்த்தாலும் ஒரு போர்டு, ஒரு சிலை. கக்கூஸ் திறந்தாலும் கல்வெட்டு; கல்லறைக்குப் போனாலும் கல்வெட்டு.

அங்கங்கு ஆர்ச். போகும் தெருக்களின் பெயர்களெல்லாம் பொல்லாதவர்களின் பெயர்கள்.

இதில் சிலை திருட்டும் இப்போது சேர்ந்து கொண்டது.

இப்படிப்பட்ட சிலைகளைக் காக்க எப்படிப்பட்ட முயற்சிகளை நம் மக்கள் மேற் கொண்டனர். அதைத் தொகுக்க வெண்டும். அது ஒரு பெரும் கலைக் களஞ்சியமாக அமையும்.

இதில் ஒரு சரித்திர ஏடு தான் தஞ்சைக் கலைக்கூடம்!

அதை அமைக்கப்பாடுபட்டவர் திரு பாஸ்கரத் தொண்டைமான். ( பிறப்பு: 22-7-1904 மறைவு 1965)

 

2

1951ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடந்த ஒரு சம்பவம் இது. கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தொல்பொருள் ஆய்வாளர் ஒரு சிலை கேட்பாரற்றுக் கிடக்கிறது என்றும் அதைத் தஞ்சாவூரிலிருந்து கல்கத்தா கொண்டு செல்ல அனுமதி தரவேண்டும் என்றும் மாவட்ட அரசு அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க, அதிகாரிகளும் சிலை எங்கேயாவது சரியாக இருந்தால் சரி என்று அனுமதியை வழங்கினார்கள்.

சிலையைப் பார்க்க ஒரு கூட்டம் கூடியது. கரந்தை நகரைச் சேர்ந்த பொது மக்கள் சிலையை எங்கும் எடுத்துச் செல்லக் கூடாது என்று ஒரேயடியாக கோஷம் போட்டார்கள்.

அப்போது அந்த சம்பவத்தைப் பார்த்த ஒரு இளைஞர் இப்படிப்பட்ட சிலைகளை எல்லாம் ஓரிடத்தில் கொண்டு சேர்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணினார்.

அவர் தான் பாஸ்கரத் தொண்டைமான்.

ராஜாஜி, டி.கே.சி., கல்கி உள்ளிட்ட ஏராளமானோரின் அன்புக்குரியவர்.

அவர் கவனிப்பாரின்றிக் கிடந்த சிலைகளை எல்லாம் சேர்த்து தஞ்சையில் கலைக்கூடம் அமைத்தார்.

நாடே அவரைப் பாராட்டியது.

எங்கு சிற்பம், சிலை என்றாலும் அங்கு பாஸ்கர தொண்டைமான் சென்று விடுவார்.

அவர் எழுத்தராகப் பணி புரியத் தொடங்கி கலெக்டராகப் பதவி உயர்வு பெற்றவர்.

கலா ரஸிகர்.கவிதை ரஸிகர். எழுத்தாளர். சிறந்த நிர்வாகி. வேங்கடம் முதல் குமரி வரை என்ற நூலை எழுதியவர். ஒவ்வொரு ஆலயத்திற்கும் சென்று அதைப் பற்றி எழுதியவர்.

3

செப்டம்பர் 2005இல் ‘கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக்களஞ்சியம்’ என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் சிலைகளை அமைக்கக் காரணமாக அமைந்த நிகழ்ச்சியும் அவரது அரும் பணியும் விவரிக்கப்பட்டுள்ளது.

பாஸ்கரத் தொண்டைமானின் புதல்வியார் திருமதி ராஜேஸ்வரி நடராஜன் பக்கங்கள் என்பதில் வரும் ஒரு பகுதியை அப்படியே கீழே காணலாம்:

திரு தொண்டைமான் அவர்களைத் தஞ்சை ஜில்லாவிலே பதவியேற்கச் செய்தது இறைவன் திருவுள்ளம் என்று தான் கூற வேண்டும். இராஜராஜ சோழன் கல்லால் இழைத்த காவியமாகிய பெரிய கோயிலை எடுப்பித்து வான்புக தேடிக்கொண்ட தஞ்சையிலே தான், தொண்டைமான் அவர்களும் கலைக்கூடம் அமைத்து அழியாப் புகழைத் தேடிக் கொண்டார்கள்.

    கலைக்கூடம் தோன்றிய வரலாறே ரசமானது. ஒரு நாள் தஞ்சைக்கருகில் உள்ள கருத்தட்டாங்குடிக்கு தொண்டைமான் சென்றார்கள். அங்கே கையிழந்த பிரம்மா ஒருவர் கவனிப்பாரற்றுக் கிடந்தார். கலையழகில் தோய்ந்த தொண்டைமானுக்கு, இப்படி வயல்வெளிகளிலும், ரோட்டுப் புறங்களிலும், சந்து பொந்துகளிலும்  சீந்துவாரற்றுக் கிடக்கும் தெய்வத் திருவுருவங்களை எல்லாம் ஒன்று சேர்த்து உயிர் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. அவ்வளவு தான். பிரம்மா தஞ்சை நோக்கிக் கிளம்பினார். அதுவரை ஏறிட்டுப் பார்க்காதவர்கள் கூட எதிர்ப்பைக் கிளப்பினார்கள். எதிர்ப்பை எல்லாம் சமாளித்துக் கொண்டு தஞ்சை அரண்மனை வந்து அமர்ந்து விட்டார் பிரம்மா. இதுவே பெரும் சாதனைக்குப் பிள்ளையார் சுழியாக அமைந்தது.

    அது முதல் தஞ்சை ஜில்லாவிலே கேட்பாரற்றுக் கிடந்த சிலைக்ளுக்கெல்லாம் அடித்தது யோகம். திரு தொண்டைமானவர்களின் ஆர்வமும் தூண்டுதலும் ரெவினியூ இலாகாவினரிடையேயும் மக்களிடையேயும் புது விழிப்பையும் உற்சாகத்தையுமே ஊட்டி விட்டன. ‘நான் முந்தி, நீ முந்தி’ என்று சிலைகளைக் கொண்டு வந்து குவித்தார்கள். பழைய அரண்மனையின் ஒரு பகுதியிலேயே இவை குடியேறின. சிற்பங்களுக்கேற்ப பீடங்களும், விளக்கங்களும் அமைக்கப்பட்டன.

குறைந்த கால அளவில் கவினார் கலைக்கூடம் ஒன்று உருவாகிவிட்டது. தொண்டைமானவர்களது விடா முயற்சியால். பொருளாதார நிலையைச் சரிக்கட்ட கலை விழாக்களும் நடத்தப் பெற்றன. தஞ்சையில் இதுபோல முன்னும் நடந்ததில்லை.பின்னும் நடந்ததில்லை என்னும் அளவுக்குப் புகழ் பெருகியது. கலைக் கூடத்திலே இன்று சேர்த்து வைக்கப்பட்டுள்ள கலைச் செல்வங்களின் மதிப்பு சுமார் மூன்றரைக் கோடி ரூபாய் என்று மேல் நாட்டு நிபுணர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள் என்றால் தொண்டைமான் அவர்களின் பணியின் உயர்வையோ சிறப்பையோ நான் சொல்ல வேண்டியதில்லையல்லவா?

4

பாஸ்கரத் தொண்டைமானின் அரும் பணியைப் பற்றி இன்று எத்தனை பேர் அறிவர்? அவரது பணியின் சிறப்பைச் சொல்வார் இன்று இல்லையே!

சிலைகளை இன்று கடத்தியோர் பற்றிப் பெரிதாக மக்களிடையே விழிப்புணர்வு

ஏற்பட்டதாகக் காணோம். அதைக் கண்டுபிடித்த போலீஸ் அதிகாரியும் பெரிதும் பாராட்டப்படக் காணோம்.

மாறாக காமக் கவிஞன் அழைத்த கதையும், சினிமாக் கதை திருட்டுக் கதையா, இல்லையா அதில் வருபவரின் பெயர் யாருடையது என்பதைப் பற்றியும் தான் ‘விழிப்புணர்வும்’, சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.

நொடிக்கு ஒரு செய்தி; நாளுக்கு ஒரு வீடியோ!

சமூக அவலங்கள் பற்றிய விழிப்புணர்வுச் செய்திகள் தேவை தான்.

அத்துடன் கூட, தமிழ் மக்கள் சிலைகளின் மீதும் கருத்தை வைக்க வேண்டிய தருணம் இது!

நமது பாரம்பரியத்தை உணர்த்தும் சிலைகளைக் காப்போம்; சந்ததிகளுக்கு அளிப்போம்!

****

பால் பிரண்டனின் மகன் காஞ்சி பரமாசார்யரைத் தரிசித்த அனுபவம்! (Post No. 5664)

Written by S Nagarajan

Date: 15 November 2018

GMT Time uploaded in London –10-37 am
Post No. 5664

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

A SEARCH IN SECRET INDIA

பால் பிரண்டனின் மகன் காஞ்சி பரமாசார்யரைத் தரிசித்த அனுபவம்! (Post No. 5664)

.நாகராஜன்     

பால் பிரண்டன் (Paul Brunton ) பிரிட்டனைச் சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர். அவரது இயற்பெயர்  ராபேல் ஹர்ஸ்ட்  (Raphael Hurst ; பிறப்பு 21-10-1898  மறைவு 27-7-1981)

1898இல் லண்டனில் பிறந்த இவர் 1930ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்தார். காஞ்சி பரமாசார்யரை தரிசித்த இவருக்கு அதிசய அனுபவம் ஏற்பட்டது. அவரது வழிகாட்டுதலின் பேரில் 1931ஆம் ஆண்டில் ரமண மஹரிஷியைச் சந்தித்தார். மஹரிஷியின் முன்னர் அமர்ந்திருந்த போது பெரும் ஒளி வெள்ளத்தைக் கண்டு ஆனந்தமுற்றார்.

ஆனால் ரமணாசிரமத்தில் அவரால் நெடுங்காலம் தங்க முடியவில்லை. ஆசிரமத்தின் நடைமுறை க் கட்டுப்பாடுகளை மஹரிஷியின் பூர்வாசிரம சகோதரரான ஸ்வாமி நிரஞ்சனானந்தா நிர்வகித்து வந்தார்.

ரமணாசிரம நிர்வாகத்திற்கு பிரண்டனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே அவர் அங்கிருந்து சென்றார். ஆனால் இறுதி வரை ரமண மஹரிஷியை அவர் மறக்கவில்லை.

அவரது பிரசித்தி பெற்ற புத்தகமான A Search In Secret India என்ற

பால் பிரண்டன் (Paul Brunton ) பிரிட்டனைச் சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர். அவரது இயற்பெயர்  ராபேல் ஹர்ஸ்ட்  (Raphael Hurst ; பிறப்பு 21-10-1898  மறைவு 27-7-1981)

1898 இல் லண்டனில் பிறந்த இவர் 1930ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்தார். காஞ்சி பரமாசார்யரை தரிசித்த இவருக்கு அதிசய அனுபவம் ஏற்பட்டது. அவரது வழிகாட்டுதலின் பேரில் 1931ஆம் ஆண்டில் ரமண மஹரிஷியைச் சந்தித்தார். மஹரிஷியின் முன்னர் அமர்ந்திருந்த போது பெரும் ஒளி வெள்ளத்தைக் கண்டு ஆனந்தமுற்றார்.

ஆனால் ரமணாசிரமத்தில் அவரால் நெடுங்காலம் தங்க முடியவில்லை. ஆசிரமத்தின் நடைமுறை க் கட்டுப்பாடுகளை மஹரிஷியின் பூர்வாசிரம சகோதரரான ஸ்வாமி நிரஞ்சனானந்தா நிர்வகித்து வந்தார்.

ரமணாசிரம நிர்வாகத்திற்கு பிரண்டனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே அவர் அங்கிருந்து சென்றார். ஆனால் இறுதி வரை ரமண மஹரிஷியை அவர் மறக்கவில்லை.

அவரது பிரசித்தி

1934ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இன்று வரை சுமார் இரண்டரை லட்சம் பிரதிகள் இந்தப் புத்தகம் விற்பனை ஆகியுள்ளது.

இந்தப் புத்தகம் மேலை உலகினருக்கு ரமண மஹரிஷியின் அவதார மஹிமையை விளக்கியது.

ரமணாசிரமத்திலிருந்து சென்ற பால் பிரண்டன் மைசூர் மஹாராஜா நான்காம் கிருஷ்ண ராஜா உடையார் அவர்களின் அழைப்பின் பேரில் மைசூர் சென்று சில காலம் வசித்தார். மஹராஜா தேர்ந்த அறிவாளி. பல நூல் கற்ற வித்தகர். ஆன்ம ஞானம் கொண்டவர். கலா ரஸிகர். அவரும் ரமண மஹரிஷியை திருவண்ணாமலை வந்து தரிசனம் செய்து ஆனந்தித்தவர்.

 

மைசூர் ராஜாவின் ராஜ குருவான சுப்ரமண்ய ஐயருடன் பால் பிரண்டன் நெருங்கிய தொடர்பு கொண்டு ஆன்மீக விஷயங்களைப் பற்றி விவாதித்து வந்தார்.

தன் வாழ்நாளில் பல புத்தகங்களை பிரண்டன் வெளியிட்டார். தனக்குத் தோன்றிய ஆன்மீகக் குறிப்புகளை உடனடியாக கையில் கிடைக்கும் பேப்பரில் எழுதி வைக்கும் பழக்கம் பிரண்டனுக்கு இருந்தது. இந்தக் குறிப்புகளை பொருள்வாரியாகப் பின்னர் கட்டுரைகளாகப் படைப்பது அவர் வழக்கம்.

தனது 83 வருட வாழ்க்கையில் அவர் சுமார் இருபதினாயிரம் பக்கங்களை எழுதியுள்ளார் எனில் அவர் எவ்வளவு படித்திருக்க வேண்டும், எவ்வளவு சிந்தித்திருக்க வேண்டும் என்பதை எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்.

அவர் தனது சிந்தனைப் போக்குக்குத் தக தனியாக ஒரு cult ஆரம்பிக்க விரும்பவில்லை; ஆரம்பிக்கவும் இல்லை.

இன்று நம்மிடையே அவரது 13 புத்தகங்கள் உள்ளன.

பல ஆன்மீக மகான்களைத் தரிசித்து பின்னர் அவர் இங்கிலாந்து திரும்பினார். மூன்றாவது உலக மகாயுத்தம் ஒன்று வரப் போகிறது என்று அவர் நம்பினார். தன் வசிப்பிடத்தை ஸ்விட்ஸர்லாந்தாக மாற்றிக் கொண்டார். இருபது ஆண்டுக் காலம் அங்கு வசித்து வந்த அவர் அங்குள்ள வெவே என்னுமிடத்தில் மறைந்தார்.

பால் பிரண்டனின் மகனான கென்னத் தர்ஸ்டன் ஹர்ஸ்ட் தனது தந்தையின் வழியில் புத்தகம் பிரசுரமான ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் 1984இல் இந்தியா வந்தார். முதலில் ரமணாசிரமம் சென்ற அவர் அங்கு  தனது தந்தை தங்கியிருந்த சிறு பங்களாவைப் பார்த்தார். ரமணாசிரமத்தைப் பார்த்து ஆனந்தித்த பின்னர் காஞ்சி பரமாசார்யரை தரிசிக்க ஆவல் கொண்டார். அப்போது ஆசார்யருக்கு வயது 91.

நேராக அவர் அப்போது தங்கியிருந்த ஊருக்குச் சென்றார். அங்கு தரிசிக்க முடியுமோ முடியாதோ என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அவரிடம் ஒரு பக்தர் அவரது கார்டை ஆசார்யரிடம் சமர்ப்பிக்குமாறு கூறினார். அதன் படியே செய்த அவருக்கு வியப்பு காத்திருந்தது.

ஆசார்யர் கூட்டம் அதிகமாக இருப்பதால் கோவிலின் பின்புறத்திற்கு வருமாறு அருளினார்.

தான் பால் பிரண்டனின் மகன் என்று அவர் ஆசார்யரிடம் தெரிவித்த போது, அது அவருக்குத் தெரியும். உங்களைப் பார்க்கத் தான் காத்துக் கொண்டிருக்கிறார் என்று மொழிபெயர்ப்பாளரிடமிருந்து பதில் வந்தது. அவருக்கு எப்படித் தனது வருகை தெரியும் என்பதை எண்ணி ஆச்சரியமுற்றார் கென்னத். ஆசாரியர் 38 வயதாக இருந்த போது எடுத்த போட்டோவைப் பிரசுரித்திருந்த புத்தகத்தை கென்னத் அவரிடம் காட்டிய போது, எனக்குத் தெரியும் என்ற பதில் வந்தது.

உலகின் இன்றைய நிலை பற்றிப் பல்வேறு கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்த கென்னத் உள்ளம் நெகிழ்ந்தார். அவருக்கு ஒன்றுமே கேட்கத் தோன்றவில்லை. சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்கரித்தார்.

ஆசார்யர் அவருக்கு ஆசி கூறி சந்தனத்தால் ஆன ஒரு ருத்ராட்ச மாலையையும் அவரது கழுத்தில் அணிவித்தார். அதை வாழ்நாள் முழுவதும் போட்டு வர ஆரம்பித்தார் பால் பிரண்டனின் மகனான கென்னத்.

அவர் பால் பிரண்டனைப் பற்றி எழுதிய குறிப்பையும் ஆசார்யருடனான சந்திப்பையும் பற்றி அவரே எழுதிய ஆங்கில மூலக் கட்டுரைகளைக் கீழே படிக்கலாம்.

 

A PERSONAL NOTE

Dr. Paul Brunton died July 27, 1981, in Vevey, Switzerland. Born in London in 1898, he authored thirteen books from “A Search in Secret India” published in 1934 to “The Spiritual Crisis of Man” in 1952. Dr. Brunton is generally recognized as having introduced yoga and meditation to the West, and for presenting their philosophical background in non-technical language.

His mode of writing was to jot down paragraphs as inspira- tion occurred. Often these were penned on the backs of envelopes or along margins of newspapers as he strolled amid the flower gardens bordering Lac Leman. They later were typed and classified by subject. He then would edit and meld these paragraphs into a coherent narrative.

Paul Brunton had lived in Switzerland for twenty years. He liked the mild climate and majestic mountain scenery. Visitors and correspondence came from all over the world. He played an important role in the lives of many.

“P.B.”, as he is known to his followers, was a gentle man. An aura of kindliness emanated from him. His scholarly learning was forged in the crucible of life. His spirituality shone forth like a beacon. But he discouraged attempts to form a cult around him: “You must find your own P.B. within yourselves,” he used to say.

KTH

FOREWORD TO THE REVISED EDITION                            A Search in Secret India was an instant success when published in 1934.It continues to be popular after many reprintings, and has been translated into several languages. Written at  the age of thirty-five, it was my father’s first book. To mark   the occasion, he adopted the pen name of Paul Brunton.

This is the story of his personal odyssey, his search for holy men to guide him on his quest. To this task he brought all his professional journalistic skills coupled with an extensive background in spiritual research.

 

My father was a pathfinder. In this book he introduced the terms yoga and meditation to the Western world. He travelled the length and breadth of the sub-continent interviewing yogis, fakirs, and mystics, exploring a side of India previously unknown to foreigners. His story became a tale of high spiritual adventure.

Fifty years later I retraced my father’s steps and journeyed around India giving “in memoriam” lectures in his honor. I learned that his name is still held in highest esteem. Many Indians told me they discovered their country’s spiritual dimension from this very book. I made a pilgrimage to the same ashram he discovered and offered my obeisance in the meditation hall where Ramana Maharshi had lived. I saw the small bungalow my father had inhabited, and I gazed up at towering Arunachala.

The highlight of my trip was my encounter with His Holiness Shri Shankara Acharya, the Spiritual Head of South India, whom my father describes in Chapter VIII. I had no prior intention of meeting him, but upon leaving the Ramanashram, decided to seek him out. After driving along country roads for three hours and locating the village where he was staying, history seemed to repeat itself as I was told there was no chance of my being granted an audience with him. However, a friendly disciple agreed to submit my card and returned with the news that His Holiness would received me at the rear of the temple, to avoid the crowds milling in front. His slight figure, clad in a saffron robe, reflected his ninety-one years. I told him I was the son of Paul Brunton. He replied briefly. The interpreter informed me, “He knows!” His Holiness spoke again. “He has been waiting for you! He has been expecting you,” said the interpreter. But how did he even know of me? How did he know I was in India, I wondered to myself? I held out a copy of this book and showed him his photograph, taken when he was thirty-eight. “I know!” was his comment.

At this point I had hoped to elicit his views on the world situation as had my father previously. But suddenly all questions melted, as I felt an onrush of peace and love. All I could do was prostrate myself in the time-honored tradition at the feet of His Holiness as he gave me his blessing. He then put around my neck a sacred mala, a garland fashioned from fragrant sandalwood. I wear it daily.

Thus the wheel came full circle half a century later.

Kenneth Thurston Hurst August, 1985

பிறப்பு, இறப்பு தீட்டு யார் யாருக்கு? எவ்வளவு காலம்? (Post No.5652)

Written  by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 11 November 2018

GMT Time uploaded in London –15-44
Post No. 5652

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

மநு நீதி நூல் – பகுதி 32

பிறப்பு, இறப்பு தீட்டு யார் யாருக்கு? எவ்வளவு காலம்? (Post No.5652)

மானவ தர்ம சாஸ்திரம் என்றும் மநு ஸ்ம்ருதி என்றும் அழைக்கப்படும் மநு நீதி நூலின் ஐந்தாவது அத்தியாயத்தைத் தொடர்ந்து காண்போம். ஸ்லோகம் 57 முதல் 110 வரையுள்ள முக்கிய அம்சங்களை முதலில் எடுத்துரைப்பேன்.

பிறப்பு இறப்பினால் வரக்கூடிய தீட்டின் காலம் என்ன, யாருக்குத் தீட்டு என்பன பற்றி செப்பிய பின், இந்தப் பகுதி அரசன் என்பவனை இறைவனுக்குச் சமமாகக் கூறுகிறது.

என் கருத்துக்கள்

இது ஆரிய திராவிடம் பேசுவோருக்குச் செமை அடி, தொகை அடி ,வகை அடி கொடுக்கும் பகுதி. இந்தியாவில் ஆரியர், திராவிடர் என்று இரு வேறு பிரிவினர் உண்டு என்ற வெள்ளைக்காரன் வாதத்துக்கு ஆப்பு வைக்கும் அருமையான பகுதி.

எப்படி ஆப்பு அவைக்கிறார்?

1.பிறப்பு, இறப்பு தீட்டு, பிண்டக் கிரியைகள், திதி என்பன காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பின்பற்றப்படுகின்றன. புறநானூற்றிலும் பிண்டம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல் உண்டு சங்க இலக்கியத்தில் 12 இடங்களில் வருகிறது இது உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் இல்லாமல் இமயம் முதல் குமரி வரை மட்டுமே காணப்படுவதால் இந்துக்கள் வெளியே இருந்து வந்தனர் என்று சொல்லுவோரின் முகத்தில்  கரி பூசப்படுகிறது.

2.பிறப்பு, இறப்பு தீட்டுப் போக குளியல் முறையைக் கூறுவதால் இந்துக்கள் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களேயன்றி குளிர்ப் பிரதேச நாடுகளில் இருந்து வரவில்லை என்பது நிரூபணமாகிறது.

3.ஏழு தலை முறை பற்றி மனுவும் சங்க இலக்கியமும் திருக்குறளும் செப்புவது இமயம் முதல் குமரை வரை ஒரே கலாசாரம் எனபதைக் காட்டி, ஆரிய திராவிடம் பேசும் பேய்மானிகளின் வாயில் வாக்கரிசி போடுகிறது.

4.தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் அரசனை இறைவன் என்று போற்றுகின்றனர். மநு சொன்னதையே வள்ளுவனும் பகர்வான். இறை,கோ என்ற தமிழ் சொற்கள் அரசனையும் இறைவனையும் குறிக்கும் கோயில் என்பது கடவுளின் கோயிலையும் மன்னன் அரண்மனையையும் குறிக்கும், மநு,  மன்னனை வேத காலக் கடவுளருடன் ஒப்பிடுகிறான். இது சங்க இலக்கியத்திலும் உளது. எகிப்து போன்ற சில கலாசாரங்களில் மன்னனை கடவுள் என்று போற்றியபோதும் தமிழ் ஸம்ஸ்க்ருதத்தில் உள்ளது போல இருவருக்கும் ஒரே சொற் பிரயோகம் இல்லை. தேவ என்பது கடவுளையும், மன்னனையும் குறிக்கும் ஸம்ஸ்க்ருதச் சொல்.

தேவி என்பது மஹாராணியையும் இறைவியையும் குறிக்கும் சொல்.

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப்படும் -குறள் 388

அதிகாரத்தின் பெயர் இறைமாட்சி (மன்னரைப் பற்றியது)

பொருள்

முறையாக ஆண்டு மக்களைக் காப்பாற்றும் ன்னன், மக்களால் இறைவன்/ கடவுள் என்று கருதப்படுவான்

செங்கோண்மை என்னும் அதிகாரத்திலும் மன்னனுக்கு இறை என்றே வள்ளுவன் சொல்லுவான்

 

  1. இந்தப் பகுதியில் பிணங்களை எடுத்துச் செல்லும் திசைகள் பற்றி மநு புகல்வதும் தற்கொலை பற்றி சொல்வதும் விநோதமான விஷயங்கள். இது, மநு மிகமிக முற்காலத்தவன் என்பதைக் காட்டும். ஏனெனில் நமக்குத் தெரிந்த வரலாற்றுக் காலத்தில் பிணங்களுக்கான திசை பின்பற்றப்பட்ட செய்திகள் கிடைத்தில.
  1. எண்.105 முதல் 110 வரையுள்ளஸ்லோகங்கள் அருமையான பொன்மொழிகள் மநுவின் தூய்மைக் கொள்கை இதில் தெரிகிறது. படித்து மகிழ்க.

8.ஸ்லோகம் 75ல் வெளிநாட்டு மரணச் செய்திக்கான தீட்டு பற்றி மொழிவதால். மநு எழுதிய காலத்திலேயே பல ஜாதிக்காரகளும் வெளிநாட்டில் வசித்தது தெரிகிறது

அமங்கலமான விஷயங்கள் பின்பகுதியில் வருவதற்காக பக்கங்களை மாற்றிக் கொடுத்துள்ளேன். படித்து மகிழ்க.

 

 

 

 

 

 

ஐந்தாம் அத்தியாயம் இன்னும் வரும்………………..

TAGS- பிறப்பு- இறப்பு தீட்டு, அரசன் கடவுள், தூய்மை அடையும் முறை

..சுபம்—

சூரியனையும் சந்திரனையும் பாம்பு விழுங்குவது ஏன்? (Post No.5647)

Written  by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 10 November 2018

GMT Time uploaded in London –11-57 AM
Post No. 5647

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பர்த்ருஹரியின் நீதி சதகம் ஸ்லோகங்கள் 28,29,30

நீதி சதகத்தில் நூறு பாடல்கள் இருப்பதை அறிவோம். இதுவரை 27 பாடல்களை குறள் கீதை முதலிய நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். நமது அறிவு வேட்டையைத் தொடர்வோம்.

பாடல் 28

பரிவர்தினி ஸம்ஸாரம் ம்ருதஹ கோ வா ந ஜாயதே

ஸ ஜாதோ யேன ஜாதேன யாதி வம்சஹ ஸமுன்னதிம் -28

நிலையற்ற இந்த உலகத்தில் யார் பிறப்பு- இறப்புச் சுழலில் விழவில்லை? ஒருவனுடைய குடும்பத்தின் செல்வ வளத்தையும் பெருமையையும் அதிகரிக்கும் பிறப்பே சிறந்தது.

பிராணிகளும், தாவரங்களும் இறக்கின்றன, பிறக்கின்றன. ஆனால் மனிதனுக்கும் அவைகளுக்கும் வேறுபாடு இல்லாவிடில் மனிதர்களும் அவைகளுடன் எண்ணப்படும். ஆகையால் வளத்தையும் நல்ல பெயரையும் சம்பாதிக்கும் வாழ்வே வாழ்வு ஏனையவை மிருக வாழ்வு.

ஒருவனுடைய மகன் செய்யும் செயற்கரிய செயல்களைக் கண்டு, இவன் தந்தை என்ன தவம் செய்து இந்தப் பிள்ளையைப் பெற்றானோ என்று வியக்க வேண்டும் என்று வள்ளுவனும் சொல்வான்.

புகழோடு வாழும் வாழ்க்கையே வாழ்க்கை; அல்லது பிறக்காமல் இருப்பதே மேல் என்றும் வள்ளுவன் மொழிவான்.

அவன் செப்பிய  குறள்கள் இதோ

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்னோற்றான்கொல் எனுஞ்சொல் –குறள் 70

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று- 236

உத்திஷ்ட! யஸோ லப!! எழுந்திரு! புகழ் அடை!!

–என்று அர்ஜுனனுக்கு கிருஷ்ணனும் பகவத் கீதையில் கட்டளை இடுகிறான் (11-33)

இவை மேற்கூறிய பர்த்ருஹரியின் கருத்தை எதிரொலிக்கும்.

xxx

 

குஸுமஸ்தபகஸ்யேவ த்வயீ வ்ருத்திர் மனஸ்வினஹ

மூர்த்னிவா ஸர்வலோகஸ்ய சீர்யதே வன ஏவ வா –29

பூங்கொத்து இருக்கிறது; அது காட்டிலும் இருக்கலாம்; அல்லது பெண்களின் தலையிலும் இருக்கலாம் இதே போலத்தான் ஒவ்வொருவருக்கும் இரண்டு நிலைகள் இருக்கின்றன.

பூங்கொத்து, பெண்களின் தலையை அலங்கரிக்கையில் சிறப்பு பெறும்; அதே பூங்கொத்து காட்டில் மலர்ந்து, யாரும் பார்க்காமல் உதிர்ந்தும் போவதுண்டு. ஆக புகழ் பெறுவதும் புகழ் இல்லாமல் வாழ்வதும் நம் கையில் இருக்கிறது.

வள்ளுவன் இந்த உவமையை வேறு ஒரு இடத்தில் பயன்படுத்துகிறான்.

வாசனை இல்லாத கல்யாண முருங்கைப் பூ

வள்ளுவன் சொன்னான்:-

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையாதார் – குறள் 650

தான் படித்த விஷயத்தை அழகாக விளக்கத் தெரியாதவர்கள், மலர்ந்தும் மணம் வீசாத மலர்களுக்கு ஒப்பாவர்

தமிழில்  இதை விளக்கும் அழகான பழமொழிகளும் உள

குடத்திலிட்ட விளக்கு போல (காட்டுப் பூ)

குன்றிலிட்ட விளக்கு போல (பெண்களின் சிகை அலங்காரப் பூ)

இஃதே போல சம்ஸ்கிருத்தத்திலும் ஒரு பாடல் உண்டு

 

நல்ல குலத்தில் பிறந்து அழகாக, இளமையுடன் தோன்றினாலும், படிக்கா விட்டால், வாசனை இல்லாத கிம்சுக (கல்யாண முருங்கைப் பூ போலத்தான்) மலர் போலவே இருப்பர்.

ரூப யௌவன சம்பன்னா விசால குல சம்பவா:

வித்யாஹீனா ந சோபந்தே நிர்கந்தா இவ கிம்சுகா:

xxxx

சூரியனையும் சந்திரனையும் பாம்பு விழுங்குவது ஏன்?

செயற்கரிய  செயல் செய்தால்தான் பெருமை; இதை பர்த்ருஹரி அழகாக விளக்குகிறார்

ஸந்த்யன்யேஅபி ப்ருஹஸ்பதி ப்ரப்ருதயஹ ஸம்பாவிதாஹா பஞ்சஷா

ஸ்தான்ப்ரத்யேஷ விஷேஷ விக்ரமருசீ ராஹுர்ந வைராயதே

த்வாவேவ க்ரஸதே திவாகர நிசா ப்ராணேஸ்வரௌ பாஷ்யவரௌ

ப்ராதஹ பர்வணி பஸ்ய தானவபதிஹி சீர்ஷாவசேஷா க்ருதிஹி-30

வானத்தில் குரு போன்ற கிரஹங்கள் பிரகாசிக்கின்றன. ஆனால் ராஹு அவைக   ளை விழுங்குவதில்லை. கிரஹண காலத்தில் சூரியனையும் சந்திரனையும் அல்லவா ராஹு விழுங்குகிறான். இவ்வளவுக்கும் அவன் தலை மட்டும்தான் இருந்தது!

இந்துக்களுக்கு ராஹு கேது ஆகிய இரண்டும் சாயா (shadows) கிரஹங்கள் (நிழல்கள்) என்பது தெரிந்தும், பாமர மக்களுக்குப் புரியவைப்பதற்காகவும், கிரஹண காலத்தில் சில செயல்களைச் செய்யக்கூடாது என்று எச்சரிக்கவும் சூரியனையோ, சந்திரனையோ ராஹு அல்லது கேது விழுங்குவதாகச் சொல்லுவர். உண்மையில் கிரஹண காலத்தில் , சூரியனோ சந்திரனோ பாம்பின் வாயில் போய்விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவது போலவே தோன்றும். மேலும் அமிர்தத்தைத் திருட முயன்ற ராஹு என்னும் பாம்பை விஷ்ணு வெட்டியதால் தலை மட்டுமே எஞ்சியதாகப் புராணக் கதைகள் புகலும். இதில் பர்த்ருஹரி உவமையாகக் காட்டி சொல்ல விழைவது என்ன வென்றால்,

பெரிய செயல்களைச் செய்தால்தான் புகழ். நோஞ்சானை அடித்துப் போட்டுவிட்டு பயில்வான் என்று பெயர் வாங்குவதில் பொருள் இல்லை.

செத்த பாம்பை அடித்துவிட்டு வீரன் என்று சொல்வதிலும் பொருள் இல்லை. ஆக செயற்கரிய செயலைச் செய்க.

இதை வள்ளுவனும் ஒரு குறளில் விளம்புவான்:-

நிலவரைநீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு –குறள் 234

ஒருவன் பூவுலகத்தில் புகழ் மணக்கும் செயல்களைச் செய்வானாகில், தேவலோகத்தில்  அவனுக்குத் தான் வரவேற்பு கிடைக்கும்; தேவர்களைப் போற்றமாட்டார்கள்.

परिवर्तिनि संसारे
मृतः को वा न जायते ।
स जातो येन जातेन
याति वंशः समुन्नतिम् ॥ 1.32 ॥

कुसुमस्तवकस्येव
द्वयी वृत्तिर्मनस्विनः ।
मूर्ध्नि वा सर्वलोकस्य
शीर्यते वन एव वा ॥ 1.33 ॥

सन्त्यन्ये‌உपि बृहस्पतिप्रभृतयः सम्भाविताः पञ्चषास्
तान्प्रत्येष विशेषविक्रमरुची राहुर्न वैरायते ।
द्वावेव ग्रसते दिवाकरनिशाप्राणेश्वरौ भास्करौ
भ्रातः पर्वणि पश्य दानवपतिः शीर्षावशेषाकृतिः ॥ 1.34 ॥

–subham–

பெங் சுயி- லோ ஷு சதுரம் (Post No.5646)

WRITTEN BY S NAGARAJAN

Date: 10 November 2018

Time uploaded in London – 8-52 AM (GMT)

Post No. 5646

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பெங் சுயி– லோ ஷு சதுரம்

ச.நாகராஜன்

கிறிஸ்து பிறப்பதற்கு முன் 2200 ஆண்டுகளுக்கு முன் சீனாவை ஆண்ட மன்னன் யூ, ஒரு நாள் மஞ்சள் நதிக்கரை ஓரம் உலாவப் போனான்.  அப்போது அங்கு ஒரு ஆமையைப் பார்த்தான். அதன் ஓட்டில் ஒரு சில புள்ளிகள் காணப்பட்டதையும் அவை சதுர வடிவத்தில் உள்ள கட்டங்களில் இருப்பது போலவும் அமைந்திருப்பதையும் பார்த்து ஆச்சரியப்பட்டான்.

அந்தப் புள்ளிகளின் கூட்டுத்தொகை ஒரே மாதிரியாக வரவே அவன் ஆச்சரியப்பட்டு தன் அரண்மனைக்கு அதைக் கொண்டு வந்தான்.  அந்த ஆமைக்கு அன்றிலிருந்து ராஜ உபசாரம் தான்!

 ஆமை ஓட்டின் முதுகில் இருந்த மாயச் சதுரம் போலவே தானும் அமைக்க ஆரம்பித்தான். அன்றிலிருந்து மாயச் சதுரத்தின் மகிமை உலகில் பரவ ஆரம்பித்தது.

அந்த மாயச் சதுரத்தின் ரகசியத்தை உணர்ந்தவர்கள் பெங் சுயி என்ற சீன வாஸ்து சாஸ்திரத்தைக் கண்டனர்.

ஆமையின் முதுகில் இருந்த மாயச் சதுரம் இது தான்:

 

தெற்கு   

    

 4    9     2

 3    5     7

 8    1     6

  வடக்கு   

இது வியக்க வைக்கும் பல விந்தைகளைக் கொண்டது.

இது லோ ஷு சதுரம் (LO SHU SQUARE) என்று அழைக்கப்படுகிறது.

இதை வைத்தே பெங் சுயி சூத்திரமான The Eight Mansions Formula அமைக்கப்பட்டுள்ளது.

குவா நம்பர் என்ற ஒரு எண் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க குவா சூத்திரம் உள்ளது. இதை ஒவ்வொருவரும் கண்டு பிடித்துக் கொண்டு அதற்குத் தக தன் உத்தியோகத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

பெங் சுயியின் வெற்றிக்கு நிதர்சனமாக நாம் காணும் ஒரு நகரம் ஹாங் காங். மேலை நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளின் மல்டி நேஷனல் நிறுவனங்கள் இப்போது பெங் சுயி படி தங்கள் வணிகத்தை மேம்படுத்தி வருகின்றன.

வீடு கட்டுவதற்கு விரும்பும் ஒருவர் இந்த பெங் சுயி உத்திகளின் படி வீட்டை அமைத்துக் கொள்ளலாம்; ஏற்கனவே வீட்டைக் கட்டியுள்ளவரும் தங்கள் வீட்டின் பகுதிகளை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.

பெங் சுயி சாஸ்திரத்தில் பிரபலமான லில்லியன் டூ இது பற்றித் தனது புத்தகமான ‘Feng Shui – The complete Guide to the art and practice of Feng Shui’-இல் விளக்கியுள்ளார்.

 

பெங் சுயி என்றால் காற்றும் நீரும் என்று பொருள். இதை நமது வாழ்க்கையின் வளத்திற்காகப் பயன்படுத்துவதற்கு இதன் அடிப்படை விதிகளை அறிந்து கொள்ள வேண்டும்.

அனைத்தையும் செய்வது ‘ச்சீ’ (Chi) எனப்படும் ஆற்றல் தான்! இந்த ஆற்றலை நமக்கேற்றவாறு முறைப்படுத்துவதற்கு பெங் சுயி உத்திகள் தேவை.

செல்வ வளம், உடல் நலம், மன நிம்மதி என அனைத்தையும் பெங் சுயி மூலம் அடைய முடியும்.

போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்ற லில்லியன் டூ பல வருட காலம் பெங் சுயி பற்றி ஆராய்ந்தார். தான் கற்றவற்றைப் பிறருக்குச் சொல்லித் தர விளைவுகள் அபாரமாக நல்ல விதத்தில் இருந்தன.

அந்த அனைத்து உத்திகளையும் படங்களுடன் விளக்கி 360 பக்கங்கள் கொண்ட இந்த நூலை உருவாக்கி இருக்கிறார்.

ஏழு பகுதிகள் கொண்ட இந்த நூலில் முதல் பாகம் பெங் சுயி உருவான வரலாறை விளக்குகிறது. இரண்டாம் பகுதி பெங் சுயி அடிப்படைகளை விளக்குகிறது.மூன்றாம் பகுதி நமது வீட்டில் இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்குகிறது. நான்காம் பகுதி தனி நபர் மேம்பாட்டுக்கானது. ஐந்தாம் பகுதி நமது தோட்டத்தில் பெங் சுயியைமுதல் எப்படிப் பயன்படுத்தலாம் என்பது பற்றி விளக்குகிறது. வணிக வெற்றிக்கு பெங் சுயி எப்படி உதவும் என்பதை ஆறாம் பகுதியும் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் பெங் சுயியின் உதவியை எப்படி மேற்கொள்ளலாம் என்பதை ஏழாம் பகுதியும் விளக்குகிறது.

யின் மற்றும் யாங் (Yin and Yang) ஆற்றலை எட்டு திசைகளிலும் சமச்சீராக்கி நமது குடும்பத்தையும், நம்மையும்  மேம்படுத்தும் இந்த பெங் சுயி ஒரு அற்புதக் கலை.

இதை முறையாக விளக்கும் லில்லியன் டூ புத்தகம் பெங் சுயி ஆர்வலர்களுக்கு ஒரு வரபிரசாதம்.

****

குறிப்பு : இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய மாயச் சதுரமும் கணிதப் புதிர்களும் என்ற நூலில் முதல் அத்தியாயத்தில் உள்ள முதல் மூன்று பாராக்கள் இந்தக் கட்டுரையின் முற்பகுதியாக அமைகிறது.

Tags- யின், யாங்மாயச் சதுரம்லோ ஷு சதுரம்

இங்கு இல்லாதது எதுவும் எங்கும் இல்லை, மகனே!(Post No.5642)

WRITTEN BY S NAGARAJAN

Date: 9 November 2018

Time uploaded in London – 6-56 AM (GMT)

Post No. 5642

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ச.நாகராஜன்

தடை இல்லாமல் வாழ்க்கை சீராகச் செல்ல?

விநாயகரை வணங்கு.

அனைத்திலும் வெற்றி பெற?

முருகா, துணை

படைப்பாற்றலுக்கு?

பிரம்மா

காத்து வளர்ச்சியுறச் செய்ய?

விஷ்ணு

நலம் தந்து வளம் பெறச் செய்து தீமைகளை ஒழித்து அருள் பாலிக்க

சிவமே துணை

அஷ்ட ஐஸ்வர்யமும் அஷ்ட சித்தியையும் பெற?

மஹாலக்ஷ்மியே சரணம்

வாக்குக்கும், அறிவிற்கும், ஞானத்திற்கும்?

சரஸ்வதி துதி

மொழிக்குத் துணை?

முருகா என்னும் நாமம்!

நெஞ்சத்தின் பயன்?

அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சம்

 

Navagraha picture posted by Lalgudi Veda

ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் ?

ஆதித்யன். சூரியன்

Picture posted by Lalgudi Veda

மனத்திற்கு?

சந்திரன்

வணிக வெற்றிக்கு?

புதன்

ஆசிரியத் தலைமைக்கு?

குரு

ஆயுளுக்கு?

காப்பதற்கும் வளர்ப்பதற்கும் சனி

வீரத்திற்கு?

செவ்வாய்

பகை கெட?

ராகு

முக்திக்கு

கேது

பொறுமைக்கும் நிலை பெறவும் பெறவும்?

பூமி

மூச்சிற்கு?

வாயு

நீடித்து வாழ?

அக்னி

எங்கும் பரந்த நிலை பெற?

ஆகாயம்

உயிர் வாழ?

நீர்

புற இருள் போக?

அக இருள், புற இருள் போக கண்

ஜீவனைத் தங்க வைக்க?

நாசி

உயிரை வளர்க்க?

உடம்பை வளர்த்தால் உயிர் வளரும்

செல்வத்துள் தலையாய செல்வம் பெற?

செவிச் செல்வம் செல்வத்துள் செல்வம்

சுவை பட வாழ்வதற்கு?

நாக்கு

 

வெளிச்சம் தருவது?

இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது

நமசிவாய என்னும் நாமம்

அதைத் தருவது?

பன்னிரு திருமுறைகள்

நலம் தரும் ஒரு சொல்.

நாராயணா என்னும் சொல்.

அதைத் தருவது?

நாலாயிர திவ்ய பிரபந்தம்

வாழ்க்கை தத்துவம் அறிய?

பகவத் கீதை

அரக்க சக்தியை வெற்றி பெற?

ஆதித்ய ஹ்ருதயம்

என்றும் மாறாதது?

வேதங்கள்

மாறுவது?

ஸ்மிருதிகள்

வலிமையுள்ளது?

காலம்

அனைத்தையும் அழிப்பது?

காலம்

அனைத்தையும் காப்பது?

காலம்

நினைக்க வேண்டிய ஒன்று?

எப்போதும் நினைக்க வேண்டியது மேலே சொன்ன அனைத்திற்கும் காரணமான ஆதி சக்தி!

இவை அனைத்தையும் தருவது எது?

ஹிந்துத்வம். இங்கு இல்லாதது எதுவும் எங்கும் இல்லை மகனே!

Tags–இல்லாதது ,இல்லை

***

தங்கம் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5641)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8 November 2018

GMT Time uploaded in London –18-30
Post No. 5641

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கீழேயுள்ள கட்டத்தில் குறைந்தது 22 தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. கண்டு மகிழ்க; தமிழ் வாழ்க

விடை கீழே உளது.

குறுக்கே

1.இது சரியாக இல்லாவிடில் வேலை கிடைக்காது

4.விலையுயர்ந்த பொருள்; பெண்களுகு உயிர்

7.தண்ணீர் இப்படி இருந்தால் தெளிய வேண்டும்

8.கட்டிடம் கட்டத் தேவை

10.கொடி பறக்கத் தேவை

11.சின்ன

  1. N0.9 ஒன்பதைப் பாருங்கள்

14.தவறு

15.சிவப்புக் குட்டி

16.பறவை

20.நுழை

21.நாயை விரட்ட உதவும்

22.வினவு

கீழே

2.சந்யாசிகள் வரவேற்பில் வழங்கப்படுவது

3.மீனாட்சியின் கண்

4.கால் காசுக்குப் பிரயோஜனம் இல்லை என்பர்

5.தோடி, பூபாளம், இந்தோளம்

6.கெடுதி

8.வெள்ளையுடன் பேசப்படுவது

9.பந்தைப்………… கட்டிப்…………………………….

10.தேங்காய் நாரின் மறு வடிவம்

13.இதற்கு மயங்காதோர் யார்?

16.கடலில் இருந்து வரும்; மழையைத் தரும்

17.காற்றினில் மிதந்து வரும் இனிமை

18.தாழ்ப்பாளின் நண்பன்

19.குடியைக் கெடுக்கும்

  1. கடவுள் கொடுத்த ஐந்து

21.தேள் கொடுக்கும்

 

 

விடை

1.தகுதி

2.கும்பம்

3.கயல்

4.தங்கம்

4.தம்பிடி

5.ராகம்

6.தீங்கு

7.கலங்கல்

8.கறுப்பு

8.கல்

9.பிடி

10.கயிறு

10.கம்பம்

11.குறு

12.பிடி

13.சங்கீதம்

15.செங்கன்று

14.பிழை

16.புள்

16.புயல்

17.கீதம்

18.கைப்பிடி

19.குடி

20.புலன்

20.புகு

21.கல்லடி

21.கடி

22.கேள்

TAGS–தங்கம், குறுக்கெழுத்துப் போட்டி

–subham–

தாமரைக்கு தமிழில் எத்தனை பெயர்கள்? (Post No.5640)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8 November 2018

GMT Time uploaded in London –16-26
Post No. 5640

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் நிகண்டுகளில் தாமரைக்கான பெயர்களைத் தருகையில் ஸம்ஸ்க்ருதப் பெயர்களையும் சேர்த்தே தருவர். ஏனெனில் சங்க காலம் முதல் இன்று வரை எல்லா அகராதிகளிலும் நிகண்டுகளிலும் ‘தமிழ்’ என்ற பெயர் இருந்தாலும் பாதி ஸம்ஸ்க்ருத்ப் பெயர்களே!!! அதை நினைவில் வைத்துக்கொண்டு கட்டத்தில் உள்ள 19 தாமரை மலரின் பெயர்களைக் கண்டு பிடியுங்கள். மலர் என்று மட்டும் பார்த்தால், இந்துப் பெண்களின் பெயர்களில் அதிகம் இடம் பெறுவதும் தாமரை மலரின் பெயர்களே.

 

கீழ்கண்ட பெயர்கள் உள்ளன:-

தாமரை, மலர், வாரிஜம், அம்புஜம், ஜலஜம்

அம்போருகம், கமலம், அரவிந்தம், இண்டை,

புண்டரீகம், முளரி, பங்கஜம், சதபத்ரி, பதுமம்

சரோஜம், நளினம், அரும்பு, முண்டகம், ராஜீவ.

சரோஜா, நளினி, பத்மா, அம்புஜம், ஜலஜா, கமலா முதலிய பெயர்கள் தாமரையின் பெயர்கள் என்று பலருக்குத் தெரியாது.

மலர் என்றால் தாமரை; இந்தியாவின் தேசீய மலரும் தாமரை.

Tags– தாமரை,  பெயர்கள்

தாமரை வாழ்க; தாமரை வெல்க

நரகத்தின் வாயிலும் சொர்க்கத்தின் வாசலும் (Post No.5639)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8 November 2018

GMT Time uploaded in London –15-24
Post No. 5639

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ், ஸம்ஸ்க்ருதம், பாலி மொழிகளில் பகவான் க்ருஷ்ணர், புத்தர், திருவள்ளுவர் ஆகியோர் ஒரே கருத்தை மொழிவது கண்டு இன்புறத்தக்கது. திருக்குறள் ,பகவத் கீதை, தம்மபதம், ஹிதோபதேசம், யோக வாசிஷ்டம் ஆகியவற்றில் ஒரே கருத்தைக் காண்பது மகிழ்ச்சி தரும்; அவற்றைப் படித்து ஞானம் பெறுவோம்.

காமம், வெகுளி, மயக்கமிவை மூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய் (குறள் 360)

பொருள்

விருப்பு, வெறுப்பு, அஞ்ஞானம் (காமம், க்ரோதம்,லோபம்) இவை மூன்றும் ஒருவன் மனதில் கூட வராத நிலயில் மெய்யுணர்வு தோன்றும்; வினை கெடும்; பிறவிப் பிணி என்னும் நோய் அகலும்—

என்று மெய்யுணர்வு அதிகாரத்தில் வள்ளுவர் பகர்வார்.

இதை முன்னரே பகவத் கீதையில் கண்ணனும் செப்பினான்:

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனம் ஆத்மனஹ

காமஹ க்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மாத் ஏதத் த்ரயம் (16-21)

பொருள்

ஆத்மாவிற்கு நாசம் விளைவிக்கும் இந்த நரக வாயில் மூவகைத்து– காமம், கோபம், லோபம் என்பன; ஆகையால் இம்முன்றையும் தள்ள வேண்டும்.

இதை புத்தர் ‘தம்மபத’த்தில் இவ்வாறு புகல்வார்:

யஸ்சசேதம் சமுச்சின்னம் மூலகச்சம் சமூஹதம்

ச வந்ததோஷோ மேதாவி சாதுரூபோ தி உச்சதி (தம்மபதம் , 263)

பொருள்

யார் ஒருவனிடத்தில் பொறாமை, பேராசை,கெட்ட குணம் ஆகியன களையப்படுகிறதோ, வேருடன் அகற்றப்படுகிறதோ, அவனே மேதாவி/ அறிஞன்; அழகன்.

xxx

 

ஸம்ஸ்க்ருதப் பொன் மொழி

காமோலோபஸ்ததா க்ரோதோ டம்பஸ் சத்வார இத்யமீ

பொருள்

ஆசை, கோபம், பேராசை/கருமித்தனம், டாம்பீகம்/தற்பெருமை ஆகிய நான்கும் நரகத்தின் வாசல்கள்

ஹிதோபதேசம் மொழிவது என்னவென்றால்,

மரணத்தின்  வாசல்கள் 4

அனுசித கார்யாரம்பஹ ஸ்வஜன விரோதோ பலீயஸா ஸ்பர்தா

ப்ரமதாஜன விஸ்வாசோ ம்ருத்யோர் த்வாராணி சத்வாரி

பொருள்

பயனற்ற வேலை செய்தல்,சொந்தபந்தங்களைப் பகைத்தல், தன்னைவிட வலியவனுடன் மோதல், இளம்பெண்களிடம் நம்பிக்கை வைத்தல் ஆகிய நான்கும் மரணப் பாதையின் வாசல்கள்.

 

மோக்ஷத்துக்கான 4 வாசல்கள்

மோக்ஷத்வாரே த்வாரபாலாஸ் சத்வாரஹ பரிகீர்த்திதாஹா

சாமோ விசாரஹ ஸந்தோஷஸ் சதுர்த்தஹ ஸத்ஸங்கமஹ

–யோக வாசிஷ்டம் 2-11-59

மோட்சத்தின் (வாசலில் நிற்கும்) காவல்காரர்கள் நால்வர்:

மனக் கட்டுப்பாடு, ஆத்ம விசரணை, திருப்தி (போதும் என்ற மனம்), சாதுக்களின் சஹவாசம் (தொண்டருடன் கூட்டு)

ஆக நல்ல வழி, கெட்ட வழி என்பதை எவரும் நினைவிற்கொள்ள வசதியாக ஆன்றோர்கள் கூறிவிட்டனர். பின்பற்றுவது நம் கையில்தான் இருக்கிறது.

Tags– நரக வாசல், சொர்க்க வாசல்,மோக்ஷ வாசல்

–சுபம்–