World Wonder -99 Flowers! Kapilar imitated Kalidasa!  Purananuru wonders-62; Tamil Encyclopaedia 102(Post.16,159)

Written by London Swaminathan

Post No. 16,159

Date uploaded in London – 3 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-62; Tamil Encyclopaedia 102, One Thousand Interesting Facts -Part 102

The next book we are going to see is Kurinchip Pattu (pronunciation- kurinjip paattu), one of the Ten Idylls ( Paththup Paattu) in Sangam Tamil Literature. It is a 261 lines long poem. It is a love poem. Kurichip pattu means mountain song; Tamils called the mountain landscape as Kurinchi; Kurinchi  is the name of a plant and its flowers blossom once in 12 years. Kurinchi blossom itself is a natural wonder. Tamils visit Nilgris and Kodaikanal to see the once in 12 year flowering.

Subject of the poem

A mother sees her daughter pine away day by day and is distressed, not knowing the causes. She consults soothsayers and makes offerings to gods for her daughter’s cure. A girl friend of the maiden knows the real cause and keeps it a secret. The girl fell in love with a man she met in the millet field. The poem described the meeting of the hero and the heroine in the natural surroundings.

***

 First, let me list the wonders in it:

It was written by the Brahmin poet KAPILAR who contributed highest number of poems to Sangam Tamil Literature;

He changed the mind of a North Indian Musician who criticised Tamil language and made him a Tamil poet!

To impress him Kapilar imitated Kalidasa’s poems; Rev G U Pope said that the poem was an imitation of Kalidasa, whose Rtu Samharam and Sakuntalam have beautiful description of Nature.

Biggest wonder is Kapilar listed 99 flowers at one go; it is not found in any other literature.

Reference to Sun God with a Chariot pulled by Seven Horses, worship of many gods; belief in rebirth;

Reference to the custom of Tamil women arranging their hair into five separate braids; it is seen in some parts of Burma and Iraq; in the absence of any painting or sculptures some scholars think it is five different hair styles.

***

Item 872 –Flower Wonder

The biggest wonder in Kurinchip Paattu is the list of 99 flowers at one go! Though Kalidasa, a Pre-Sangam Age poet and Valmiki also used as many flowers but not in one place in a poem.

Few of the flowers have Sanskrit names and few of the flowers are not satisfactorily identified; yet it shows the interest and  knowledge of botany in Sangam Age.

Following is the list: Lines 61- 98

பாறையில் மலர் குவித்த பாவையர்

———– ———— ———– வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,  65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,   70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,   75
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை   80
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,   85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,   90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்,   95
அரக்கு விரித்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலிவனம் மறுகி,
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇப், (61-98)

Collecting flowers and placing them on boulders

Attracted to the flowers that were
there, with desire,
we collected the flowers of red
kānthal with thick leaves, white āmpal,
delicate anichamkuvalai from cool
ponds, kurinji, vetchi, chenkoduvēri,
sweet mango, manichikai, unthoozh with
fragrant clusters of flowers, koovilam,
flame-like erulam, sulli, kooviram,
vadavanam, vākai, kudasam with white
flowers, eruvai, seruvilai, and
karuvilai with gem-colored flowers,
payini, vāni, kuravam with many clusters
of flowers, pasumpidi, vakulam, kāyā with
many clusters of flowers, āvirai with open
blossoms, vēral, sooral, small poolai,
small and fragrant kanni, kurukilai,
marutham, kōngam with open blossoms,
pōngam, thilakam, honey-fragrant pāthiri,
cherunthi, athiral, large cool chenbakam,
karanthai, kulavi, flourishing
fragrant mango, thillai, pālai, mullai
that has spread on rocks, kullai, pidavam,
siru mārōdam, banana, vallineythal flowers
with long stems, coconut, thalavam, lotus
with thorns on its stems, gnāzhal, wild
jasmine, cool fragrant kokudisedal,
chemmal
, small chengurali, kōdal, kaithai,
mature naruvalai, kānji, sapphire-colored
clusters of neythal flowers, pānkar, marām,
thanakkam with clusters, eengai, ilavam,
kondrai, adampu, perfect
āthi, avarai with long vines, pakandrai,
palāsam, pindi 
with clusters of blossoms,
vanji, large pithikam, sinthuvāram, thumpai,
thulāi, flame-like thōndri, nanthi, naravam,
fragrant punnākam, pāram, peeram, fresh
kurukkathi, āram, kāzhvai, fragrant punnai,
narantham, nākam, nallirul nāri, kuruntham,
vēngai and vermilion-hued thick, beautiful, red,
wild puzhaku, that were washed by the
rains, and piled them on a wide, clean boulder.

(Translation of Vaidehi Herbert is used; thanks)

My comments:

Anicham is not identified but guessed what it was; now not seen in any part of the world. Many of the flowers are not seen in other books of Sangam literature. Few are from Sanskrit literature that existed before Sangam Age.

***

Item 873 -New Poet Made

Yaaz Brahma Dutt was a North Indian musician and Aryan chieftain, who was an expert in playing Yaaz (lyre, lute); he criticised Tamil language. Kapilar being a Brahmin , taught him Tamil via Sanskrit. He impressed him and in course of time Yaaz Brahma Dutt became a Tamil Poet! That Brahma Dutt composed a poem in Tamil and, compilers included it in the Sangam corpus (see Kuruntokai 184)! This is really a wonder because within a short time a poet was created in the language which he was not speaking.

***




Item 874 -Many Gods Worship

Lines 1 to 8 give vital information about Hindu religion followed by the Sangam Age Tamils 2000 years ago. A friend of a women was consoling a mother whose daughter was love sick. That friend said that the mother worshipped MANY DIFFERENT GODS using flowers and fragrant materials. This is a severe blow to Anti Hindu Dravidians who projected Tamils as a No Faith Gang!

Using soothsayers is also mentioned.

***

Item 875 Rebirth

Lines 23 to 26 show Tamil girl’s strong belief in REBIRTH

 Heroine worries about her parent’s mis understanding of her ‘sickness’ and says “if I can’t get him as my husband in this birth I will get him in my next birth”.

There is a golden saying as well; if jewels are broken, they can be repaired, but if one’s character is ruined , cannot be set right.

***

Item 876 – Another Wordsworth

Kapilar described the beautiful Kurinchi landscape in lines 31- 61, that is before listing the 99 flowers.  The girl/heroine said where and when she fell in love. That was the place full of birds, waterfalls, bathing in crystal clear water etc. here we are reminded of William Wordsworth and his Daffodils!

***

Item 877 -Film Director of Indian Love Films!

107-127 a handsome man appeared

Here Kapilar, like a Tamil or Hindi film director , suddenly introduces appearance of some big hounds. When the girls got scared, the owner of the hounds appear and pacify the scared ladies and use the opportunity to talk to them and praise their beautiful faces. He asked whether they (heroine and her friends) saw the animal that escaped from him. He controlled the barking hunting dogs.

Another scene is introduced now . an angry elephant entered the fields to eat the millets. The girls ran towards the young man hugged him. He gave him full protection and praised girl, who is the heroine of the poem. Then, his country with natural spots is described.

***

Item 878

Dances -Lines 186-199

Here we come across different dances. Dancing girls’ rope walking adventures is mentioned.

Poet compared the peacock to the dancing girl who did rope walking- line 194.

Young man’s promise to marry that girl and provide wedding feast;

Sun riding a chariot with seven horses Line 215 ; mountain god’s worship;

Love at first sight; Meetings of lovers were  done more often;

Heroine worried about the safety of her lover b coming via forest route;

Delay in marriage made her lovesick.

***

Item 879 Peacocks drink Liquor!

People indulged in ‘honey sweet toddy’. The peacocks too drank it, only they drank the home made variety, mistaking it for water.

***

Item 880- Water used for swearing.

Hindus use water while giving away donations. They also use water for making promises or taking oaths. Here is an interesting reference to the custom of swearing  with water taken in hand by the one who makes the oath. Lines 210-213

****

Item 881 Nineteen Sanskrit words!

J V Chelliah (year 1946) says, “There are 261 lines in the poem, containing 1440 words of which 22 are not Tamil words. Nineteen are of Sanskrit origin, four are common to Tamil and Sanskrit and three are provincial words”.

My comments: even among the 99 flowers there are Sanskrit names; few examples Asoka, Palaasam, Tilakam, Bahulam (Vakulam) etc.

Apart from these wonders usual things like Nagaratna (cobra Jewel) in/ line 221, women lighting lamps in the evening, brahmins performing religious rites/ line 223, worship of Lord Muruga/Skanda, Gods residing caves, feast, pearl from elephant tusk/ line 36, body of women like flowers and birds are also mentioned.

To be continued……………………

Tags –  Kurichippattu, Kapilar, 99 flowers, Yaz Brahmdutt, Kalidas, Purananuru wonders-62; Tamil Encyclopaedia 102, One Thousand Interesting Facts -Part 102

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 108; இந்து மத கலைச்சொல் அகராதி-108 (Post16,158)

Written by London Swaminathan

Post No. 16,158

Date uploaded in London – 3 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted already.

துளசிதாஸ்

கோஸ்வாமி துளசிதாஸ் இயற்றிய Tulsidas (1543?–1623) ஹிந்தி மொழி ராமாயணம் வட இந்தியா முழுதும் பிரபலமான புனித நூலாகும்; அதன் பெயர் ராம சரித மானஸ் (Devanagari: रामचरितमानस rāmacaritamānasa),  துளசிதாஸ், உத்தர பிரதேசத்தில் ராஜாப்பூரில் பிறந்து காசியில் முக்தி அடைந்தார் அவர் இயற்றிய ஹனுமான் சாலிசா துதியை வட இந்தியக் குழந்தைகள் மனப்பாடமாகச்  சொல்லுவார்கள். எழுத்தறிவு இல்லா தோ ருக்கும் துளசிதாஸரின் இராமாயண வசனங்கள் அத்துபடி. அவர் வாழ்வும் தியாகராஜ சுவாமிகள் வாழ்வினைப்போல அற்புதங்கள் நிறைந்தது ; கம்ப ராமாயணப் பாடல் தெரியாத தமிழர் உண்டு; ஆனால் துளசி ராமாயணம் தெரியாதோர் வடக்கில் இல்லை.

***

தொல்காப்பியர்


(இவரைப் பற்றி இதே பிளாக்கில் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி அதைப் புஸ்தகமாகவும் வெளியிட்டுவிட்டேன்; ஆகையால் புல்லட் பாயிண்டில் சொல்கிறேன் ).

தமிழில் கிடைக்கும் நூல்களில் இவர் எழுதிய தொல்காப்பியமே மிகவும் பழமையானது என்று பெரும்பாலோர் நம்புகிறார்கள். இவரைப் பற்றியோ நூல் பற்றியோ சங்க இலக்கியத்தில் 30,000 வரிகளில் ஒரு வார்த்தையும் இல்லை. ஆனால் இரண்டு தகவல்களை  இலக்கிய முன்னோர்கள் விட்டுச் சென்றனர் . இவருடைய வகுப்பறை மாணவர் பனம்பாரனார் ,தொல்காப்பிய நூலுக்கு பாயிரம் (முன்னுரை) வழங்கியுள்ளார்; அதில் இந்த தொல்காப்பியர் அதங்கோடு என்னும் ஊரிலுள்ள நான்கு வேதம் படித்த (பார்ப்பன) ஆசார்யாரிடம் சர்ட்டிபிகேட் வாங்கினார், நிலந்தரு திருவில் பாண்டியன் அவையில் அரங்கேற்றினார் என்று எழுதியுள்ளார் இன்னொரு தகவலை மதுரை பாரத்வாஜக் கோத்திர பார்ப்பான் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர், 700 ஆண்டுகளுக்கு  முன்னர் எழுதிவைத்துள்ளார் தொல்காப்பியரின் பெயர் த்ருணதூமாக்கினி என்றும் அவர் அகஸ்தியரின் மாணாக்கர் என்றும் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் சாபமிடும் அளவுக்கு மோதல் ஏற்பட்டது என்றும் எழுதியுள்ளார் . இது ஒரு சில்லறை விஷயத்தில் நடந்த தகராறு ! அகஸ்தியரின் மனைவி லோபாமுத்ரா; அவர் மத்தியப்பிரதேச இளவரஸி ; அவரை அழைத்துவரத் தொல்காப்பியரை அனுப்பினார்; மதுரைக்கு அருகில் வந்தபோது வைகை நதி வெள்ளப்பெருக்கோடு ஓடியது. மாற்றான் மனைவியைத் தொடவும் கூடாது, பக்கத்தில் நெருங்கவும் கூடாது என்பதால் ஒரு கம்பினை எடுத்து நீ ஒரு பக்கம் பிடி; நான் எதிர்ப்புறத்தைப் பிடிக்கிறேன் என்று கடந்து வந்தனர். இதை அகஸ்தியர் அறிந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது ; சாபத்தில் முடிந்தது என்பது நச்சினார்க்கினியர் சொல்லும் கதை . இதை நம்புவோருக்கு ஒரு நற்செய்தியும் உள்ளது அகஸ்தியர்- லோபாமுத்ரா தம்பதிகளை ரிக்வேதம் சொல்லுவதால் தமிழும் ரிக்வேதம் போல 6000 ஆண்டுப் பழமை உடைத்து . உண்மையில் அதைப் பார்ப்பான் நச்சினார்க்கினியர் அப்படியே நம்பியது ராவணன் – பாண்டியன் சமாதான உடன்படிக்கைக் கதையிலும் உறுதியாகிறது; ராமன் எவ்வளவு பழமையோ பாண்டியர்களும் அவ்வளவு பழமை உடையவர்கள் என்பது நச்சி. யின் நம்பிக்கை. தொல்காப்பியர் காப்பியக்குடி என்னும் கோத்திரத்தில் தோன்றியவர்; இவர் பிராமணர் அல்ல என்று காட்டும்வகையில், இந்து விரோத திராவிடர்கள், இவருக்கு மீசை வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்னர் புதிய படமும் வரைந்து, வெளியிட்டுப் பரப்பி வருகின்றனர் ! காப்பியக்குடி உசனஸ் கவி என்பவர்தான் கவிகளின் மூல கர்த்தா. அதிலிருந்துதான் கவிகவிதைகாவ்யம் என்ற சொற்கள் பிறந்தன; பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் கவிகளில் நான் உசனஸ் என்று சொல்கிறார் அந்தக் கவி, ரிக் வேத காலத்தின் மிக மூத்த கவிஞன்.

தொல்காப்பிய பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

அறங்கறை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி

மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

தொல்காப்பியம் எழுத்துசொல்பொருள் என்ற மூன்று அதிகாரங்களை உடைத்து ; ஒவ்வொன்றிலும் ஒன்பது அத்தியாயங்கள் (இயல்கள்) . சுமார் 1612 சூத்திரங்கள் உள்ளன

இதன் காலமும் நூலாசிரியர் காலமும் பெரும் வாதப்பிரதிவாதங்களில் சிக்கியுள்ளது. தமிழ் வெறியர்கள் இதை 20,000 ஆண்டுப் பழையது என்றும் தமிழ்ப்  பிரியர்கள்  இது  2000 அல்லது 2300 ஆண்டு பழமையானது என்றும் கருதுகிறார்கள். மொழியியல் ஆய்வின்படி பொருள் அதிகாரம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது தெரிகிறது; மனு தர்மம் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள், பரத முனி சொல்லும் எட்டு வகை ரசங்களை இவர் கிளிப்பிள்ளை போல் சொல்வதும் வேத கால வருணனையும் இந்திரனையும் தமிழர் தெய்வங்கள் என்று சொல்லிவிட்டு சிவ பெருமானை அடியோடு மறந்ததும்  (மறைத்ததும்) பலருடைய புருவங்களை உயர்த்துகின்றன . (என்னுடைய கருத்து:– அதிகாரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் இருப்பதால் திருக்குறள், சிலப்பதிகாரம், பொருள் அதிகாரம் ஆகியன ஐந்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவை; தொல்காப்பியத்தில் என்மனார் புலவர் என்ற தொனி  200, 300 இடங்களில் வருவதால் தொல்காப்பியர் காலம் வேறு,  நூலின் காலம் வேறு என்பது தெரிகிறது- இது என் கருத்து )

***

திருவாசகம்

நால்வரில் – அதாவது நான்கு பெரியார்களின் ஒருவரான மாணிக்கவாசகர் பாடி அருளிய நூல்; இதைத் தவிர திருக்கோவையார் என்ற நூலினையும் யாத்தார் .திருவாசகம் நூலிலுள்ள சிவபுராணம் பகுதியும்  திருவெம்பாவைப் பகுதியும் மிகவும் பயிலப்படுபவை.  இவைகளோடு 51 தலைப்புகளில் 658 பாடல்கள் உள்ளன. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது ஆன்றோர் வாக்கு. பன்னிரு திருமுறைகள் என்ற 12 நூல் தொகுப்பில், இது எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது . மாணிக்கவாசகர் என்ற தலைப்பில் மேல் விவரம் காண்க .

***

திருமுறை – தேவாரம் என்ற தலைப்பில் விவரம் காண்க ; முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும் .

பன்னிரு திருமுறைகள் விவரம்

1, 2, 3 திருமுறைகள்: திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள்.

4, 5, 6 திருமுறைகள்: திருநாவுக்கரசர் (அப்பர்) தேவாரப் பாடல்கள்.

7ஆம் திருமுறை: சுந்தரர் தேவாரப் பாடல்கள்.

8ஆம் திருமுறை: மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவையார்.

9ஆம் திருமுறை: திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு (ஒன்பது புலவர்கள்).

10ஆம் திருமுறை: திருமூலரின் திருமந்திரம்.

11ஆம் திருமுறை: காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல புலவர்களின் பிரபந்தங்கள்.

12ஆம் திருமுறை: சேக்கிழாரின் பெரியபுராணம்.

***

திருமூலர் – திருமந்திரம்

திருமூலர் என்ற பெரிய சித்தர் எழுதிய நூல் திருமந்திரம். பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் 18 சித்தர்களில் ஒருவராகவும் இடம்பெறுகிறார் இவர் காஷ்மீர் மாநிலத்திலிருந்து வந்த சைவர் என்று கருதப்படுகிறது . இவருடைய தமிழ் நடையும் 3000 பாடல்களில் உள்ள விஷயங்களும் இவரை வெளி மாநிலத்தவர் என்பதையும் காலத்தால் பிந்தியவர் என்றும் சைவ – சாக்த- வேதாந்த கலப்பட நம்பிக்கையை உள்ளவர் என்பதையும் காட்டுகிறது . திருவாவடுதுறை என்ற ஊருக்கு வந்த பொழுது ஒரு பசுமாட்டு இடையன் திடீரென்று இறந்தவுடன், அஷ்ட மா சித்திகளில் பரகாயப்ரவேசம் என்ற சித்தியைப் பயன்படுத்தி இடையன் உடலில் புகுந்து பசுக்களை மகிழ்வித்தார் . பின்னர் அந்த ஊரிலேயே சமாதி அடைந்தார் . திருவாவடுதுறை சிவன் கோவிலில் அவருடைய சமாதி உள்ளது .

திருமந்திரப் பாடல்களில் சக்தி வழிபாடு, அஹம் பிராம்மாஸ்மி போன்ற வேதாந்தக் கருத்துக்கள், பசு-பதி- பாசம் என்ற சைவ சித்தாந்த கருத்துக்கள் , மந்திரம், தந்திரம், யந்திரம் என்ற சுவையான அவியலைக் காணலாம் ( என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள்  இதே பிளாக்கில் உள்ளன ; புஸ்தகமாகவும் கிடைக்கும்). யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது இவருடைய பாலிசி . தேவாரம் திருவாசகம் சொல்லாத சிவலிங்கம் போன்ற விஷயங்கள் இருப்பதால் இவரை எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாராண்டில் வைக்கலாம்.

***

திரு வள்ளுவர் – திருக்குறள்

திரு வள்ளுவர் எழுதிய  திருக்குறள் பாரத நாடு உலகிற்கு  வழங்கிய நன்கொடைகளில் ஒன்றாகும் . இரண்டே வரிகளில் அரிய, பெரிய இந்து மதக் கருத்துக்களை ஜூஸ் பிழிந்து தருகிறார். இந்து மத நூல்களில் அடிக்கடி கூறப்படும் தர்ம அர்த்த காமம் என்பதையே தன் நூலுக்கும் பெயர் சூட்டினார் அறம், பொருள், இன்பம் என்று அவற்றை மொழிபெயர்த்து மூன்று பிரிவுகளில் 1330 குறட்பாக்களாக உலகத்துக்கு வழங்கினார் .

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு — என்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடியது எவ்வளவு பெரிய உண்மை என்பது திருக்குறளை படிப்போருக்கு விளங்கும்

இந்திரன், கிருஷ்ணன், வாமனாவதாரம், லெட்சுமி, யமன், பிரம்மா,  சிவபெருமான் விஷம் குடித்தது முதலிய இந்து தெய்வங்களை மட்டும் பயன்படுத்துகிறார். பஞ்ச தந்திரக்கதைகள் , மனு ஸ்ம்ருதி, பகவத் கீதை அர்த்த சாஸ்திரம் முதலிய நூல்களின் முக்கிய பாக்களைக் கையாண்டுள்ளார் முதல் பத்து கடவுள் வாழ்த்துப் பாடல்களிலேயே ஏழு குறள்களில் இறைவனின் உருவத்தைக் குறிப்பிடுவதாலும் கொல்லாமையை அழுத்தம் திருத்தமாகவும் வலியுறுத்துவதாலும் இந்துக்களைத் தவிர வேறு எவருக்கும் பயன்படாத நூல் இது . நாஸ்தீகர்களை பேய் என்று திட்டுவதும், கஞ்சப்பயல்களின் கையை முறுக்கி குத்து, கரும்பு போலப்  பிழி என்று சொல்வதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் இந்த நூலின் காமத்துப் பால் பகுதியைக் கண்டு கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர்கள் பயந்து போய்விட்டனர் அதை வெளிப்படுத்தினால் வள்ளுவன் பெயர்  ரிப்ப்பேர் ஆகி விடும்மானம் விமானத்தில் பறந்துவிடும்,  திருக்குறளின் கதி சகதி ஆகிவிடும் என்று எண்ணி அதை மொழிபெயர்க்கவில்லை ; உலகில் இந்து மதம் ஒன்று மட்டுமே காமத்தையும் தர்ம -அர்த்த- காம- மோட்சம் என்ற நான்கில் வை த்திருப்பது அவர்களுக்குப் புரியாது; சுமார் 600 குறள்களில் ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள் இருப்பதால் இவர் தமிழையும்  ஸம்ஸ்க்ருதத்தையும் இரண்டு  கண்களாகப் போற்றிய பேரறிஞர் என்பதும் தெரிகிறது; நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எல்லா புஸ்தகங்களிலும் இவர் உயர் வகுப்பு- கீழ்ஜாதி தம்பதியருக்கு அவ்வையாரோடு ஏழு சகோததர சகோதரிகளுடன் அவதரித்த கதை சுவையாக வருணிக்கப்பட்டுள்ளது இவருடைய காலம் மொழி இயல் ரீதியில் ஐந்தாம் நூற்றாண்டு என்று தெரியவருகிறது; ஆனால் தமிழ் நாடு அரசு கி.மு 31 என்பதை ஒப்புக்கொண்டுள்ளது கிறிஸ்துவுடன் இவரைத் தொடர்பு படுத்தி கிறிஸ்தவப் பிரச்சாரகர்கள் பேசத் துவங்கியவுடன் அவர்களுக்கு ஆப்புவைக்க இந்த புதிய ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்து விரோத திராவிடர்கள் , வள்ளுவர் முகத்தில் இருந்த விபூதியை அழித்துப் புதிய படம் வெளியிட்டுள்ளனர் ; குறள்களுக்குப் புதிய வியாக்கியானமும் செய்துவருகின்றனர் ; பழங்காலத்தில் பத்துப் பேர் எழுதிய உரையில் ஐந்து உரைகள் மட்டுமே இப்பொழுது கிடைக்கிறது; அவர்களில் காஞ்சிபுர விஷ்ணு கோவில் பட்டர் பரிமேல் அழகர், 800 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய உரையே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது .

***

திரயம்பகேஸ்வரர்

சிவபெருமானின் பெயர்களில் ஒன்று; முக்கண்ணன் என்பது இதன் பொருள். புறநானூறு முதலிய நூல்களில் முக்கண்ணன் பற்றிய குறிப்புகள் உள்ளன . இதே பெயரில் சிவபெருமான், மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் கோயில் கொண்டுள்ளார். அந்தத் தலம், ராமேஸ்வரம் முதல் இமயமலை வரை  இடம்பெற்றுள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று  .

***

துருக்கி – துரகம்

சம்ஸ்க்ருத மொழியில் துரகம் என்றால் குதிரை. இது நிறைந்த நாடு என்பதால் அந்த நாட்டுக்குத் துருக்கி என்ற பெயர் ஏற்பட்டது . 3000  ஆண்டுகளுக்கு முன்னர் இந்துக்கள் நல்ல ஜாதிக் குதிரைகளைக் கொண்டுவந்து அந்த நாட்டில் பயிற்சி அளித்தனர். இபோது துலுக்க நாடாகத் திகழும் அந்த இடம் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்து பூமியாகத் திகழ்ந்தது. துருக்கியிலுள்ள போகஸ்கொய் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கியூனிபார்ம் எழுத்துள்ள கல்வெட்டுகள் சம்ஸ்க்ருத மொழியில் உள்ள கட்டளைகளைக் குறிப்பிடுகிறது; அதை எழுதியவர் கிக்கூலி என்பவர் ஆவார் ; கல்வெட்டின் தேதி கி.மு.BCE 1350 . அவன், அருகிலுள்ள மிட்டன்னி  சாம்ராஜ்யத்திலிருந்து வந்தவன் ; இராக், சிரியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் உள்ளடக்கிய பகுதிகளை மிட்டன்னி அரசர்கள் ஆண்டார்கள். தசரதன், பிரதஸ்தனன்  முதலிய இந்து மன்னர்கள் ஆண்டதையும் கல்வெட்டு காட்டுகிறது. அத்தோடு வேதகாலத் தெய்வங்களை சொல்லி உடன்படிக்கை செய்த கல்வெட்டும் கிடைத்தது. இவையெல்லாம் மாக்ஸ்முல்லர் (1823-1900) செத்துப்போன பின்னர் கிடைத்தது. அவர் சொன்ன வேத காலம் தப்பு என்பதையும் நிரூபித்தது.

To be continued…………………

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 108; இந்து மத கலைச்சொல் அகராதி-108, துருக்கி, துரகம், துளசிதாஸ் திரு வள்ளுவர் ,திருக்குறள்,  தொல்காப்பியம் , தொல்காப்பியர்

முத்துத் தாண்டவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,134)

Written by London Swaminathan

Post No. 16,134

Date uploaded in London – 27 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சீர்காழியில் கி.பி. 1525-1625 க்கும் இடைப்பட்ட காலத்தில் இசை வேளாளர் குடியில் முத்துத்தாண்டவர் பிறந்தார். இவரது இயற்பெயர் தாண்டவர் என்பதாகும். தமிழ் இசையை வளர்த்தவர்களில் இவர் பங்கு முக்கியமானது

1

முத்துத் தாண்டவரின் முதல் பாடல் தோன்றியது எப்படி ?

2

அப்பர், சம்பந்தர் ஆகியோருக்கு மக்களின் பசிப்பிணியை நீக்க, இறைவன் சிவ பெருமான் படிக்காசு வழங்கினார் என்பதை நாம் அறிவோம். இவருக்கும் பொற்காசுகள் கிடைத்ததா ?

3

இவர் பாடல்களுக்கு முதல் அடி எங்கிருந்து கிடைத்தது ?

4

பிரபல பாடகர்கள் கச்சேரிகளில் பாடும் அருமருந்தொரு தனிமருந்து

அம்பலத்தே கண்டேன் —  என்ற பாடலின் சிறப்பு என்ன ?

 5

முத்துத் தாண்டவரின் பாடல்கள்  நடன நிகழ்ச்சிகளிலும் பயன்படுகின்றன : அவைகளில் மிகவும் பிரபலமானவை எவை?

6

நடராஜர் ஆடியதை அப்படியே தாள நயத்துடன் நம்முடைய மனக்கண் முன்னே கொண்டுவரும் ஆட்டுக் காலைத் தாரும்

பாடலின் வரிகள் என்ன ?

7

கொள்ளிடம் ஆறு வெள்ளப்பெருக்கு எடுத்தபோது இவர் பாடியவுடம் வெள்ளம் தணிந்தது என்பார்கள் அந்தப்பாடல் என்ன பாடல் ?

8

இவருடைய எத்தனை கீர்த்தனைகள் நமக்கு கிடைத்தன ?

9

இவருடைய எல்லா பாடல்களையும் எழுத்து வடிவில் எங்கே பெறலாம் ?

சைவம்.ஆர்க் 85 பாடல்களை பதிவு செய்துள்ளது

10

மேலும் சில பு கழ்பெற்ற பாட்டுக்கள் களின் முதல் வரிகள் என்ன ?

*******************************

விடைகள்

1.இவர் தீராத வெப்பு நோயைத் தீர்த்துவைக்கும் இறைவனை நாடி சிதம்பரத்திற்குச் சென்றார். அங்கு ஆடல் வல்லானை வழிபட்டுக் கொண்டிருந்த போது, அடியவர் கூட்டத்திலிருந்து “பூலோக கயிலாச கிரி சிதம்பரம்” என்ற சொல் ஒலித்தது. அதனையே முதற்சொல்லாகக் கொண்டு, “பூலோக கைலாச கிரி சிதம்பரம் அல்லால் புவனத்தில் வேறு உண்டோ?” எனத் தொடங்கும் கீர்த்தனையைப் பாடினார். இதுவே இவரின் முதல் பாடலாக விளங்கியது. இப்பாடலைப் பாடி முடித்ததும் இவரைப் பிடித்திருந்த வெப்பு நோயும் நீங்கியது.

***

2.முத்துத்தாண்டவர் முதல் கீர்த்தனையைப் பாடி முடித்ததும் திருக்களிற்றுப் படியில் ஐந்து பொற்காசுகளை இறைவன் வழங்கினார். அதேபோல் நாள்தோறும் இறைவன் இவருக்குப் படிக்காசு வழங்கினார் என்று செவி வளை செய்திகள் கூறுகின்றன .

***

3.பக்தர்களின் உரையாடல்களில் கேட்கும் நல்ல சொற்களையே பாடலுக்கு முதல் அடியாக வைத்துப் பாடும் ஒரு கொள்கையை இவர் பின்பற்றினார்.

***

4.இவரை ஒரு முறை பாம்பு தீண்டியது. இந்தப்பாடலைப் பாடியவுடன் விஷம் நீங்கி குணம் அடைந்தார் என்பது வரலாறு

இராகம் : காம்போதி       தாளம் : ரூபகம்

பல்லவி

அருமருந்தொரு தனிமருந்து

அம்பலத்தே கண்டேன்     (அருமருந்)

அநுபல்லவி

திரும ருந்துடன் பாடும் மருந்து

தில்லை யம்பலத் தாடும் மருந்து

இருவி னைகள் அறுக்கு மருந்து

ஏழை யடியார்க் கிரங்கும் மருந்து     (அருமருந்)

சரணம்

கொன்றை தும்பை அணிந்த மருந்து

கோதை மீதில் படர்ந்த மருந்து

மன்று ளேநின் றாடும் மருந்து

மாணிக்க வாசகர் கண்ட மருந்து     (அருமருந்)

இந்திர ரானவர் வானவர் போற்றும்

இருடி கள்தமக் கெட்டா மருந்து

சந்திரர் சூரியர் காணா மருந்து

தானே முளைத்துத் தழைத்த மருந்து     (அருமருந்)

திரித்தி தித்தியென் றாடும் மருந்து

தேவாதி மூவர்கள் காணா மருந்து

கருத்தைத் திருத்தி இருத்தும் மருந்து

காலனைக் காலால் உதைத்த மருந்து     (அருமருந்)

***

5.நாட்டிய உருப்படிகளில் வர்ணத்திற்குப் பிறகு ஆடப்படும் உருப்படியாகப் பதம் விளங்குகிறது. இது சிருங்காரச் சுவையை மையமிட்டு படைக்கப்பட்ட உருப்படியாகும். முத்துத்தாண்டவர் ஆடல்வல்லான் மீது காதல் கொண்ட நிலையில் தலைவி கூற்றாகவும், தோழிக்கூற்றாகவும் பல பதங்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் 25 பதங்கள் மட்டுமே தற்காலத்தில் கிடைத்துள்ளன. அவற்றில் சில,

1. அப்படி இப்படி செய்ததற்கு ஒப்பினன் – கல்யாணி – ஆதி

2. தெருவில் வாரானோ – கமாசு – ஆதி (திச்ரநடை)

***

6.இராகம் : சுவர்ணாங்கி       தாளம் : ரூபகம்

பல்லவி

ஆட்டுக் காலைத்தாரும் என்சாமிவா தாட்டுக் காலைத்தாரும்     (ஆட்டுக்)

அநுபல்லவி

ஆட்டுக் காலைத் தாரும் அம்பல வாணரே

காட்டுப் புலியும் பாம்பும் காத்துக்கொண் டிருக்கின்ற     (ஆட்டுக்)

கின்னரர் கிம்புருடர் ஆதியர் வீணையர்

      கெருட காந்தருவர் சித்தர் வித்தியாதரர்

தன்னிகர் இல்லாத தந்திரர் மந்திரர்

      சரணஞ் சரணமென் றிருகை கூப்பிநிற்கப்

பொன்னின் விமானத்தர் சிவிகை வாகனத்தர்

      பூதகணாதிபர் போற்றி யடிவிரும்ப

அன்ன வாகனத்தன் விண்ணில்ஏற அயன்

      ஆட்டுக் காலைத்தேடிக் கோட்டுப்பன்றி ஆனான்     (ஆட்டுக்)

முப்பத்து முக்கோடி தேவர் குழாங்களும்

      முனிவர் ஆனவரும் இருடிகள் அனைவோரும்

செப்ப மான சந்திராதித்த ருங்கூடிச்

      செயசெய என்று பாதந்தமைத் தேடுகின்றனர்

ஒப்பில்லாத காளி அம்பலத்தே நின்று

      உன்றாளைக் கண்டுதொந் தோமென் றாடுகிறாள்

மெய்ப்பதமாகும் அந்தக் காலைஎனக்குத் தந்தால்

      வேண்டும் அறுபத்தைந்தாம் விளையாட்டாகுஞ் சாமி     (ஆட்டுக்)

ஆக்கிய திசைவளர் திக்குப் பாலகரும்

      ஆதி வைரவரும் நாரணர் அனைவரும்

தாக்கிய தாவர சங்கம கோடியுஞ்

      சந்தித்துப் பாதத்தைக் காத்துக்கொண் டிருக்கவே

பாக்கியஞ் செய்தவன் முயலகன் ஒருகாலைப்

      பற்றி முதுகணையில் வைத்துச் சுமந்துகொண்டான்

தூக்கிய பொற்றாளை எனக்குத்தந்தால் தலைசுமக்கும்

      சுமக்கும்போதும் போதும் போதுஞ்சாமி இந்த     (ஆட்டுக்)

***

7.பல்லவி

காணாமல் வீணிலே காலம் கழித்தோமே

அனுபல்லவி:

சேடனார் போற்றும் தில்லை சிதம்பர ஸ்தலத்தை

சரணம்1:

சேரன் சோழன் பாண்டியன் ஹிரண்யவர்மன் கோபுரமும்                                

சூர வீரப்ப பூபன் செய்த திருமதில்களும்                                             

பாருலகும் (பாருளரும்??) போற்றுகின்ற  பஞ்சாக்ஷரப்  படிகளும்         

ஹாரங்கள்  சூழ்ந்த திருவாயிரங்கால்  மண்டபமும்

 சரணம் 2:

கங்கையும் நிறைந்த சிவகங்கையும் படித்துறையும்                  மங்கை சிவகாமி  அம்மை வாசல் மணி மண்டபமும்                திங்களணி திருமூல நாதர் அருட் சன்னிதியும்                              பொங்கு செல்வம் போலுயர்ந்த தங்கப் பேரம்பலமும்

 சரணம்3:

நிர்த்த சபை கனக சபை சிற்சபையின் தரிஸனமும்

முக்தி பெறலாம் எனவே முழங்கும் சின்ன த்வனியும்            

பக்தர்குட் சிறந்த கோவிந்தராஜர் சுற்றிலும் துலங்க                  

ரத்ன ஸ்வர்ணக் கொடி  மரங்களும்

 சரணம்4:

தில்லை மூவாயிரவர் முனிவர் பெரு வீதிகளும்                        அல்லும் பகலும் அளிக்கும் அன்னதான சிறப்பும்                          சொல்லறியா  மாடங்களும் சோலைகளும் வாவிகளும்           நல்ல திருக் கூட்டங்களும் நாலு  திருவீதிகளும்

காணாமல் வீணிலே காலம் கழித்தோமே.

***

8. முத்துத் தாண்டவர் நிறைய கீர்த்தனைகளை எழுதியபோதும் நமக்கு 85 கீர்த்தனைகளே கிடைத்தன.

***

9.இவருடைய எல்லா பாடல்களையும் எழுத்து வடிவில் எங்கே பெறலாம் ?

சைவம்.ஆர்க் 85 பாடல்களை பதிவு செய்துள்ளது. Please go to shaivam. org website

***

10.இயற்றிய பாடல்களில் புகழ்பெற்ற சில:

பூலோக கயிலாசகிரி[2] சிதம்பரம் அல்லாற், புவனத்தில் வேறுமுண்டோ – ராகம் – கல்யாணி, தாளம் – ஜம்பை தாளம்

சேவிக்க வேண்டுமையா[3] – ராகம் -ஆந்தோளிகா, தாளம் – ஆதி தாளம்

சிற்சபைதனிலே கண்டு கொண்டேனென்றும் – ராகம் – நீலாம்பரி, தாளம் – திரிபுட தாளம்

நடனங்கண்ட போதே என்றன் சடலஞ்செய் – ராகம் – ஆகிரி, தாளம் – ஆதி தாளம்

பேசாதே நெஞ்சமே பேசாதே – ராகம்-சூரிய காந்தம், தாளம்- மிஸ்ர சம்ப தாளம்

காணாமல் வீணிலே காலங் கழித்தோமே[4] – ராகம் – தன்யாசி, தாளம் – மிஸ்ர சாபு

தரிசனம் செய்வேனே முக்தி கொடுக்கும்[5] – ராகம்- வசந்தா, தாளம்-ஆதி

தெண்டனிட்டே னென்று சொல்லுவீர், நடேசர்க்கு நான் – ராகம் – யமுனாகல்யாணி, தாளம் – ஆதி

***

ராகம் -யமுனாகல்யாணி, தாளம் – ஆதி

பல்லவி

தெண்டனிட்டேனென்று சொல்வீர் – நடேசர்க்கு நான்

தெண்டனிட்டேனென்று சொல்வீர்

அனுபல்லவி

அண்டமெல்லாம் பரவுங் கொண்டல் காள் கும்பிட்டேன்

ஆண்டவரெனும் தில்லைத் தாண்டவராயர் முன்போய்த்(தெண்டனிட்டேனென்று)

சரணங்கள்

1. பொருந்தும் காதல்கொண்டு பொன்னிதழ்த் தேனுண்டு

இருந்தோம் சொல்லவோ விண்டு ஏகாந்தம் தனிற்கண்டு(தெண்டனிட்டேனென்று)

2. கண்டால் வரும் அப்பேச்சு கன்னிவயதில் ஏச்சு

பண்டு சொன்னதும்போச்சு பார்வையவன் மேலாச்சு(தெண்டனிட்டேனென்று)

3. மன்னும் நாணம்போக்கி மனதைத் தாள் மலர்க்காக்கிச்

சென்னிமேற்கரங்கள் தூக்கித் தில்லைப்பதியை நோக்கித் (தெண்டனிட்டேனென்று)

–subham—

tags- முத்துத் தாண்டவர் பாடல்கள் ,10 கேள்விகள் ,அருமருந்தொரு தனிமருந்து அம்பலத்தே கண்டேன்

ஆயிரம் பொன்மொழிகள்! (161-180) Post No.16,115)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,115

Date uploaded in London – 22 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஆயிரம் பொன்மொழிகள்! (161-180) 

ச. நாகராஜன்

பொன்மொழிகள் தொடர்கின்றன… 

161. I CAN

I Ought, Therefore I CAN.   – Kant

Politeness

An Englishman once said to the artist, James Mcnell Whistller, that the politeness of the French was ‘all on the surface’, to which he replied: ‘And a very good place for it to be’.

Professional Man – Amateur Man

A professional is a man who do is job when he doesn’t feel like it. An amateur is a man who can’t do his job when he does feel like it.     – James Agate

Immortal – Dream

If we are immortal souls, we are immortal here: death is but our great progression; let us begin to live as the immortals should.    – William Smith

Heart

My heart is wax to be moulded as she pleases, but enduring as marble to retain.   – Cervantes

Heart – Love

One loving heart sets another on fire.   – St Augastine

Gentleman

I would rather prove myself to be a gentleman by being learned and humble, valiant and inoffensive, virtuous and communicable, than by a fond ostentation of riches.   – Izaak Walton

Gentleman – Mind – Vigour – Softness

If you would fall into any extreme, let it be on the side of gentleness. The human mind is so constructed that it resists vigour and yields to softness.    – S. Francis de Sales

Fool – Life

Long is the night to him who is awake; long is a mile to him who is tired; and long is life to the fool who does not know the true law.     – Dhammapada

Futility

A constant smirk upon face and a whiffling activity of the body are strong indications of futility. Whoever is in a hurry, shows that the thing he is about is too big for him.   – Lord Chesterfield

171. Purpose – Wish

Great men have purposes: Others have wishes.

Revenge

It is certain that a man who studieth revenge, keeps his own wounds green, which would otherwise heal and do well.                                                                                                – Bacon

Reform – Public Opinion

It is not the many who reform the world; but the few who rise superior to that Public Opinion which crucified Our Lord many years ago.                – Charles Kingsley

Rich and Poor

There are two things needed in these days, first for rich men to find out how poor men live, and second, for poor men to know how rich men work.   

Routine

Routine as a law is deadly. Routine as a resource in the temporary exhaustion of impulse and suggestion is often our salvation.                – Phillips Brooks

Prupose

A man without a purpose is soon sown at zero.                    – Carlyle

நல்ல குறிக்கோள் நயவா மனிதனிலை

ஒல்லி யிழிந்து விழும்               –  உலக உள்ளங்கள் (484)

                                         ஜெகவீரபாண்டியனார்

Poetry

You will find poetry nowhere, unless you bring some with you.    – Joubert

கவியின் கனிவெங்கும் காணாய் உனதுன்

கவியுணர்வில்லை எனின்                   –  உலக உள்ளங்கள் (243)

                                         ஜெகவீரபாண்டியனார்

Poetry

Poetry is the record of the best and happiest moments of the happiest and best minds.  – Shelley

ஆன்ற பெரியோர் அனுபவ வாழ்வுகளின்

சான்றுகளே காவியங்கள்                 –  உலக உள்ளங்கள் (750)

                                         ஜெகவீரபாண்டியனார்

Poetical Mind

A right moral state of heart is the formal and scientific condition of a poetical mind.  – Newman

நீதிநெறி நிறைந்த நெஞ்சமே நேரேசீர்

ஓது கவியின் உளம்                       –  உலக உள்ளங்கள்

                                         ஜெகவீரபாண்டியனார்

180. Idleness

Idleness is the key of beggary, and the roof of all evil.   – Purgeon

சிறுமைத் துயரெல்லாம் சேரவரும் சோம்பல்

வறுமைக் குரிய வழி                     –  உலக உள்ளங்கள் (134)

                                         ஜெகவீரபாண்டியனார்

***

மஹாபாரதம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,112)

Written by London Swaminathan

Post No. 16,112

Date uploaded in London – 21 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

மஹாபாரதப் போர் நடந்த தேதி பற்றி அறிஞர்கள் கூற்று என்ன ?

2

மஹாபாரதத்துக்கும் மர்ம எண் 18-க்கும் உள்ள தொடர்பு என்ன ?

3

சங்க இலக்கியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் இந்த இதிகாசம் குறித்து என்ன சொன்னார்கள் ?

4

உலக இலக்கியங்களோடு ஒப்பிடுகையில் மஹா பாரதத்தின் சிறப்பு என்ன ?

5

மஹாபாரதத்தை எழுதியர் யார் ? மஹாபாரதத்தை “டிக்டேட்” செய்தவர் யார் ?

6

மஹாபாரத யுத்தத்தில் எத்தனை டிவிஷன் படைகள் இருந்தன   ? அவைகளின் கமாண்டார்கள்/ தளபதிகள் யார் ?

7

பழங்காலத்தில் தமிழ்மொழியில் இதை மொழிபெயர்த்தர்களா ? அது பற்றிய செய்தி எந்தக் கல்வெட்டில் உள்ளது ?

8

பீஷ்மர் அக்குபங்க்சர் முறையை பயன்படுத்தி எத்தனை நாட்களுக்கு அம்புப் படுக்கையில் இருந்தார்; ஏன் ?

9

அர்ஜுனன் தன்னுடைய சொந்த மகனையே இழந்தான் ! அது எப்படி?

10

மறைந்து வாழவேண்டிய 13 ஆவது ஆண்டில் யார் யார் என்னென்ன வேஷம் போட்டார்கள் ?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள்

Sculpture of Chakra Vyuha- army formation– that caused the death of Arjuna’s son.

1.மஹாபாரதம் பற்றி நடந்த ஆய்வரங்கங்களிலும் அது தொடர்பான ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் கூறும் சில ஆண்டுகளைக் கண்போம்:–

எஸ்.பி.ராய் என்பார் ஆராய்ச்சியாளர்களை 4 பிரிவுகளாகப் பிரிக்கிறார்:–

முதல் அணி ( சம்பிரதாய கொள்கையினர் கி.மு 3100 க்கு முன்னர்)
டி.ஆர். மங்கட் — 3201
எம்.எம்.கிருஷ்ணமாச்சாரி 3137
சி.வி.வைத்யா — 3102
வி.பி.அத்வாலே – 3016

**

இரண்டாம் அணி ( கி.மு. 2500 ஆண்டை ஒட்டி)
வராஹமிகிரர்
கல்ஹணர்
பி.சி.சென்குப்தா

**

மூன்றாம் அணி ( கி.மு.1450 அல்லது அதன் கீழ்)
ஏ.கன்னிங்ஹாம் -1424
கே.பி.ஜைஸ்வால் –1424
தாரகேஸ்வர பட்டாசார்யா –1432
கிரிதர சேகர வசு (பாசு) – 1416
பங்கிம் சந்திர சாட்டர்ஜி — 1400
சுவாமி விவேகாநந்தா –1400
ஏ.டி.புசல்கர் – 1400
பால கங்காதர திலகர் – 1400
எச்.டி. தேவ் – 1400
பி.பி.கேட்கர் – 1267
ஸ்ரீ அரவிந்தர் -1191
கே.எல். தப்தாரி –1197
கே.ஜி.சங்கர் – 1197
சீதாநாத் பிரதான் – 1151

**

நான்காம் அணி ( கி.மு.950)
பர்ஜிட்டர் — 950
ராய் சௌத்ரி – 900

எச்.டி.சங்காலியா போன்றோர் இது நடந்திருந்தாலும் கி.மு.1500க்குப் பின்னரே நடந்திருக்க முடியும் என்பர்.

எஸ்.பி. ராய் என்பார் வானியல் கணக்குப்படி 1424 என்றும் மார்டன் ஸ்மித் என்பார் வம்ச கணக்குப்படி 1050 என்றும், சீனிவாச ராகவன் கி.மு 3067 என்றும் செப்புவர்.

எனது கருத்து:–

நாற்பது ஆண்டுக்காலமாக மஹாபாரதம் ஆராய்ச்சி தொடர்பான பத்துப் பதினைந்து புத்தகங்களைப் படித்ததில் எழுந்த கருத்துக்கள் இவை:–

ஆரிய – திராவிட இனவெறி வாதம் என்னும் சகதியில் சிக்காத மெகஸ்தனீஸ் போன்றோரும் அவரது கருத்துக்களை நமக்கு தெரிவித்த கிரேக்க ஆசிரியர்களும் மகத சாம்ராஜ்யத்தின் 143ஆவது மன்னர் ஆட்சிக் காலத்தில் தாங்கள் வந்ததாகச் சொல்லுகின்றனர். இவர்கள் இன்றைய அரசியல் கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் — ஒரு மன்னருக்கு உலகம் முழுதும் பின்பற்றப்படும் சராசரி 20 ஆட்சி ஆண்டு என்று கொண்டாலும் மெகஸ்தனீசுக்கு முன்னர் 2860 ஆண்டுகள் கிடைக்கும். ஆக, கலியுகத்தின் முதல் ஆண்டு கி.மு.3102 என்பது பொருந்தும். அதற்கு 36 ஆண்டுகளுக்கு முன் போர் நடந்தது.

***

2.மஹாபாரத்திலுள்ள 18 பருவங்கள்

சித்தர்கள் 18, தர்ம நூல்கள் 18, யாகங்கள் 18, பாஷைகள் 18, புராணங்கள் 18, உப புராணங்கள் 18, தேவாசுரப் போர் 18 ஆண்டுகள், ராம- ராவணன் யுத்தம் 18 மாதங்கள், மஹா பாரதப் போர் 18 நாட்கள், சேரன் செங்குட்டுவன் – க னக  விஜயன் போர் 18 நாழிகை,மஹா பாரத பர்வங்கள் 18, கீதையில் அத்தியாயங்கள் 18, தமிழ் நாட்டுக்கு அகஸ்தியர் அழைத்து வந்தா குடிகள் 18,  சங்க இலக்கிய நூல்கள் 18, அதற்குப்பின் வந்த கீழ்க்கணக்கு நூல்களை 18, கணங்கள் 18, சைவத் திரு மடங்கள் 18…….இவ்வாறு 18–ன் பெருமை மஹத்தானது. மகாபாரதப் போரில் மொத்தம் 18 அட்சௌகிணி (11+7 Divisions) சேனை பங்கேற்றது. இதில் கௌரவர்களின் தரப்பில் 11 அட்சௌகிணி சேனைகளும், பாண்டவர்களின் தரப்பில் 7 அட்சௌகிணி சேனைகளும் சண்டையிட்டன.

 மஹாபாரதம் 18 பர்வங்களின் பெயர்

1.   ஆதிபர்வம்      

2.   சபாபர்வம்   

3.   வனபர்வம்    

4.   விராடபர்வம்                 

5.   உத்யோகபர்வம்                

6.   பீஷ்மபர்வம்                           

7.   துரோணபர்வம்                      

8.   கர்ணபர்வம்               

9.   சல்யபர்வம்                        

10. சௌப்திகபர்வம்                 

11. ஸ்த்ரீபர்வம்                       

12. சாந்திபர்வம்                       

13. அநுசாஸனபர்வம்                    

14. அஸ்வமேதிகபர்வம்             

15. ஆஸ்ரமவாசிகபர்வம்                    

16. மௌஸலபர்வம்                 

17. மஹாப்ரஸ்தானிக பர்வம்       

18 ஸ்வர்காரோஹண பர்வம்      

****

பகவத் கீதையின் 18 அத்தியாயங்கள்

பகவத் கீதை 18 அத்தியாயங்களின் பெயர்கள்

  • அத்தியாயம் 1: அர்ஜுன விஷாத யோகம் (அருச்சுனின் கவலை மற்றும் ஏக்கம்)
  • அத்தியாயம் 2: சாங்கிய யோகம் (கீதையின் சாரம் மற்றும் ஆத்மாவின் தன்மை)
  • அத்தியாயம் 3: கர்ம யோகம் (செயல் மற்றும் கடமையின் வழி)
  • அத்தியாயம் 4: ஞான கர்ம சந்நியாச யோகம் (மெய்யறிவு மற்றும் தியாகம்)
  • அத்தியாயம் 5: கர்ம சந்நியாச யோகம் (செயல்களும் துறவும்)
  • அத்தியாயம் 6: த்யான யோகம் / ஆத்ம சம்யம யோகம் (தியானப் பயிற்சி)
  • அத்தியாயம் 7: ஞான விஞான யோகம் (இறைவனின் முழுமையான அறிவு)
  • அத்தியாயம் 8: அட்சர பிரம்ம யோகம் (எல்லையற்ற பிரம்மத்தை அடைதல்)
  • அத்தியாயம் 9: ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம் (மிக இரகசியமான தூய அறிவு)
  • அத்தியாயம் 10: விபூதி யோகம் (இறைவனின் எல்லையற்ற பெருமைகள்)
  • அத்தியாயம் 11: விஸ்வரூப தர்சன யோகம் (இறைவனின் பேரருள் வடிவம்)
  • அத்தியாயம் 12: பக்தி யோகம் (இறைப்பற்றின் வழி)
  • அத்தியாயம் 13: சேத்ர சேத்ரக்ஞ விபாக யோகம் (உடலும் ஆன்மாவும்)
  • அத்தியாயம் 14: குணத்ரய விபாக யோகம் (இயற்கையின் மூன்று குணங்கள்)
  • அத்தியாயம் 15: புருஷோத்தம யோகம் (உயரிய பரம்பொருளின் நிலை)
  • அத்தியாயம் 16: தெய்வாசுர சம்பத் விபாக யோகம் (தெய்வ மற்றும் அசுர குணங்கள்)
  • அத்தியாயம் 17: ச்ரத்தாத்ரய விபாக யோகம் (நம்பிக்கையின் வகைகள்)
  • அத்தியாயம் 18: மோட்ச சந்நியாச யோகம் (முழுமையான துறவும் சரணடைதலும்

****

3.போரில் இறந்த பாண்டவர், கௌரவர், நினைவாக தமிழ் மன்னன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பெருஞ்சோறு படைத்தான் . பெருஞ்சோறு என்பது போர் வீரர்களின் நினைவாக  திதி போல ஆண்டில் ஒரு தினத்தில் எல்லோருக்கும் விருந்து வைப்பதாகும் பெருஞ்சசோறு என்ற சொல் சங்க இலக்கியங்களில் வரும் வேறு இடங்களை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ

நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை

ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

(புறநானூறு – 2)

(அலங்கு = அசைகின்ற; உளை = பிடரி மயிர்; புரவி = குதிரை; ஐவர் = பாண்டவர் / தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன்; பொலம் = பொன்; தும்பை = வலிமை காரணமாகப் போர்புரியும் வீரர்கள் அணியும் பூ / தும்பைப் பூ; ஈரைம்பதின்பர் = நூற்றுவர் / துரியோதனன் முதலிய நூறு சகோதரர்கள்; ஒழிய = செத்த பின்னர் ;  வரையாது = அளவில்லாது)பெருஞ்சசோறு  படைத்த

xxx

பகவத் கீதை உபதேசத்தைக்  கூறியது

தொல் ஆணை நல் ஆசிரியர்

புணர்கூட்டு உண்ட  புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருவின் நெடியோன் போல — என்ற மதுரைக்கு காஞ்சி வரிகளில் உள்ளதை நச்சினார்க்கினியர் உரையில் காணலாம்.

xxxx

சிறுபாணாற்றுப்படை

காவெரி ஊட்டிய கவர்கணைத் தூணிப்

பூவிரி கச்சைப் புகழோன் தம்முன்

(சிறுபாணாற்றுப்படை அடிகள்,  238-239)

(கா = காடு, வனம், காண்டவ வனம்; எரி = தீ; காவெரி ஊட்டல் = காண்டவ வனம் எரியூட்டப் பெறுதல்; கவர் = பல; கணை = அம்பு; தூணி = அம்பு வைக்கும் கூடு; கச்சை = ஆடை வகை)

என்ற பாடல் பாண்டவருள் அருச்சுனனையும் வீமனையும் குறிப்பிடுகிறது.

காட்டிற்கு எரி ஊட்டியவனும், அம்புகள் நிரம்பிய அம்புக் கூட்டை உடையவனும், கச்சையை அணிந்தவனும் ஆகிய புகழை உடையவன் அருச்சுனன். அவனுடைய தம் முன் (மூத்தவன்) வீமன் ஆவான் என்பது இப்பாடல் வரிகளின் பொருள். மேலும் வீமனின் சமையல் சிறப்பும் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

xxx

பதிற்றுப் பத்தின் பாடல் (14) ஒன்று,  அக்குரன் என்றபெயரைக் கூறுகிறது  ; தலை ஏழு வள்ளல்களில் ஒருவனாக இருக்கலாம்; அல்லது கர்ணன் ஆக இருக்கலாம்; ஆதாரம் கிடைக்கவில்லை என்று தமிழ் தாத்தா உ வே சா எழுதியுள்ளார்

போர்தலை மிகுத்த  ஈர் ஐம்பதின் மரோடு

துப்புத்துறை போக்கிய , துணிவுடை ஆண்மை

அக்குரல் அனைய கைவண்மையையே – 14-5/7  பதிற்றுப்பத்து.

xxx

கலித்தொகையில் நிறைய செய்திக ள் உள்ளன

திருதராட்டினை வயக்குறு மண்டிலம் வடமொழிப்பெயர்பெற்ற முகத்தவன் – கலி25-1

என்று ஒரு புலவர்  குறிப்பிடுகிறார் 

கர்ணன் ஞாயிற்றின் மகனாகக் கலித்தொகைப் பாடல் ஒன்றில் குறிக்கப்பெற்றுள்ளான் (முல்லைக் கலி, 28). துரியோதனன் முதலியோர் சூழ்ச்சியால் பாண்டவர் தங்கி இருந்த அரக்கு மாளிகை தீ வைக்கப்படுகிறது. அத்தீயிலிருந்து வீமன் தன் சகோதரர்களைக் காப்பாற்றிய நிகழ்ச்சியை மற்றொரு கலித்தொகைப் பாடல் (பாலைக்கலி, 25) விவரித்துள்ளது.

பாடல் 25 வரிகள் 1-5

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
‘ஐவர்’ என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தராக்,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்குக்,
களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா,

பொருள்
வடமொழிப் பெயர்பெற்ற வயக்கறு மண்டிலம்போலும் முகத்தவனுடைய மக்களுள் மூத்த துரியோதனன் சூழ்ச்சியாலே ஐவரென்று உலகத்தார் புகழும் தன்மபுத்திரர் முதலியோர் உள்ளேயாகக் கையாலே புனையப்பட்ட அரக்கு மாளிகையை விரைந்து நெருப்பு சூழ்ந்தாற் போலக் களிப்பு விளங்குகின்ற மதத்தவாகிய கடிய களிகள் உள்ளேயாக.

பாடல் 52 வரிகள் 1 3
நூற்றுவர் தலைவனை துரியோதனனை பீமன் வெல்வதை குறிக்கிறது

முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செத்து,
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன்

பொருள்
முறம் போலுஞ் செவியாகிய மறைப்பிமாக வந்து பாய்ந்து மாறுபாடு செய்த புலியைக் கோபித்து மறத்தைத் தம்மிடத்தே கொண்ட நூற்றுவர்குத் தலைவனாகிய துரியோதனனைக் குறங்கில் உயிரை போக்குகின்ற பீமசேனனை போல் ……..

பாடல் 101 வரிகள் 15 – 20
பீமன் துரியோதனனின் மார்பை பிளந்து ரத்தம் குடித்தல்

மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண்
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்திக்,
கோட்டு இடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்-
அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்!
பொருள்
உயர்ந்த கொம்பிடத்தே வைத்த உலண்டினது நிறத்தையொக்கும் புல்லிய நிறத்தைத் தன்னிடத்தேயுடைய எருத்தினது நோக்கை அஞ்சானாய் அதின்மேலே பாய்ந்த இடையனைச் சாவக்குத்திக் கொம்பிடத்தே எடுத்துக்கொண்டு உடலைக்குலைக்கின்றதனுடைய தோற்றரவைக் காணாய்; அழகிய தலைமையினையுடைய மனமசைந்த இயல்பினையுடையளாகிய துரோபதையது துய்ய கூந்தலிலே கையை நீட்டிய துச்சாதனனுடைய நெஞ்சைப் பிளந்துபோகட்டுப் பகைவர்நடுவே தான்சொன்ன வஞ்சினத்தை வாய்க்கச்செய்த வீமசேனைப்போலும்

அசுவத்தாமா சிகண்டியை கொன்றது
பாடல் 101 வரிகள் 30 – 32

ஆர் இருள் என்னான், அரும் கங்குல் வந்து, தன்
தாளின் கடந்து அட்டுத், தந்தையைக் கொன்றானைத்
தோளின் திருகுவான் போன்ம்!

பொருள்
வருதற்கரிய கங்குலிலே அரிய இருளென்று கருதானாய் வந்து துரோணாசாரியனைக் கொன்ற சிகண்டியைத் தன் முயற்சியாலேவென்று கொன்று தன் தோளால் தலையைத் திருகும் அச்சுவத்தாமாவைப்போலும்

பாடல் 104 வரிகள் 56 – 59

புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல் வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், தொழூஉ.

பொருள்
போரைவிரும்பி மேலே சென்று துரியோதனாதிகள் படும்படி வரிந்து புனைந்த வலிய வில்லையுடைய தருமன்முதலியோர் கொன்ற பொருகின்ற களத்தையொக்கும்

xxx

பெரும்பாணாற்றுப்படையில், பாண்டவர் ஐவரும் கௌரவர் நூற்றுவரைப் போர்க்களத்தே வென்ற செய்தி கூறப்பட்டுள்ளது.

ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்

பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்

ஆராச் செருவின் ஐவர் போல

 (பெரும்பாணாற்றுப்படை அடிகள்,  415-417)

(ஈரைம் பதின்மர் = கௌரவர் நூற்றுவர்; பொருது = சண்டை இட்டு; களத்து = போர்க் களத்து; அவிய = இறக்க; பேர் = பெரிய; அமர்க் கடந்த = வெற்றி பெற்ற; கொடிஞ்சி = தேரின் ஒரு பகுதி; ஆரா = தணியாத; செரு = போர்; ஐவர் = பாண்டவர்)

பெரிய வெற்றியைப் பெற்றவர் பாண்டவர்; இவர்கள் நெடிய தேரினையும் தீராத போர் வேட்கையையும் உடையவர்கள்; கௌரவர்கள் நூறு பேரும் போர்க்களத்தில் இறக்குமாறு இவர்கள் பெரிய வெற்றியைப் பெற்றார்கள் என்பது இவ்வரிகளின் பொருள்.

சங்க இலக்கியங்களுக்குக் கடவுள் வாழ்த்தைப் பாடியவரை  பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைத்தனர் . இவர் பாடிய பாரத நூல் முழுவதும் கிடைக்கவில்லை. இதை பிற்கால பாண்டியர் சாசனமும் உறுதிப்படுத்துகிறது

****

4. இரண்டு சிறப்புகள் மகாபாரதத்துக்கு உண்டு ; உலகிலேயே மிக நீண்ட புஸ்தகம்;இதுதான்  ஒரு லட்சம் ஸ்லோகங்களை , அதாவது குறைந்தபட்சம் இரண்டு லட்சம் வரிகளை, அதாவது குறைந்தபட்சம்  பத்து லட்சம் சொற்களை உடைய புஸ்தகம் !

இரண்டாவது சிறப்பு :–

அதன் ஆதி பர்வத்தில் உள்ள ஸ்லோகம் சொல்கிறது:

உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் இதனில் உள. இதில் உள்ள எல்லாப் பொருட்களையும் காணும் இடம் உலகில் வேறு இல!!

வ்யாச்சோசிஷ்டம் ஜகத் சர்வம் — என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லுவர். அதாவது உலகில் நீங்கள் பார்க்கும் எல்லாம் வியாசரின் எச்சில்!

இதன் பொருள் என்ன என்றால் — வியாசர் என்னும் மாமுனிவர் எல்லா விஷயங்களையும் சுவைத்து, ரசித்து, சொல்லால் கடித்து — ராமனுக்கு மலை ஜாதி வேடுவச்சி சபரி என்னும் கிழவி — அன்போடு கடித்துக் கொடுத்த இலந்தைப் பழம் போல — நமக்கு அன்போடு “கடித்துக்” கொடுத்த கதை!

****

5.மஹாபாரதத்தை எழுதியர் பிள்ளையார்; மஹாபாரதத்தை “டிக்டேட்” செய்தவர் வியாசர். இதை அருணகிரிநாதர் சில திருப்புகளாகில் 500 ஆண்டுகளுக்கு முன்னரே பாடிவைத்துள்ளார்.

***

6.மஹாபாரத யுத்தத்தில் கெளரவர் தரப்பில் 11 டிவிஷன் படைகளும் பாண்டவர் தரப்பில் 7 11 டிவிஷன் படைகளும் இருந்தன.  

மாபாரதப் போரில்  கமாண்டார்கள்/ தளபதிகள் :–

பாண்டவர் படையின் தலைமை தளபதிதிருஷ்டத்துயுணன் (Dhrishtadyumna): பாண்டவர்களின் முழு 18 நாள் போருக்கும் இவரே தலைமைத் தளபதியாக (Supreme Commander-in-Chief) செயல்பட்டார். பாண்டவர் படையின் முக்கிய தளபதிகள் மற்றும் மாவீரர்கள்:அர்ச்சுனன் மற்றும் பீமன்: போர்க்களத்தின் முக்கிய வியூகங்களை தாங்கிப் போராடிய முதன்மைக் கமாண்டர்கள்.  சாத்யகி (Satyaki): யாதவப் படைப்பிரிவின் முக்கிய வீராதிவீரன்.  அபிமன்யு: அருச்சுனனின் மகன்,.கடோற்கஜன்: பீமனின் அரக்க மகன்.விராடன் மற்றும் துருபதன்: பாண்டவர்களை ஆதரித்த நாட்டின் மன்னர்கள்.

கௌரவர் படையின் தலைமை தளபதிகள் (சேனாதிபதிகள்)கௌரவர் தரப்பில் 18 நாள் போரில் வெவ்வேறு காலக்கட்டங்களில் ஐந்து முக்கிய தளபதிகள் தலைமைப் பொறுப்பை ஏற்றனர்: பீஷ்மர் (Bhishma) – 1 முதல் 10 நாட்கள் வரை): போரின் முதல் பத்து நாட்கள் கௌரவப் படையின் தலைமைத் தளபதியாக இருந்து கடுமையாகப் போராடினார். துரோணாச்சாரியார் (Drona )- 11 முதல் 15 நாட்கள் வரை): பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு குருவான துரோணர் தளபதியாகப் பொறுப்பேற்றார்.கர்ணன் (Karna – )16 மற்றும் 17-வது நாள்): துரோணரின் மறைவுக்குக் பின் கர்ணன் தளபதியாக நியமிக்கப்பட்டார்.சல்லியன் (Shalya – 18-வது நாள்): கர்ணனின் மறைவுக்குப் பின் இறுதி நாள் போரில் மத்வதேச மன்னரான சல்லியன் தளபதியானார். அஸ்வத்தாமன் (Ashwatthama): துரியோதனன் வீழ்ந்தபின் இறுதி இரவில் கௌரவப் படையின் கடைசித் தளபதியாகப் பொறுப்பு வகித்தான்.

கௌரவர் படையின் மற்ற முக்கிய கமாண்டர்கள்:துரியோதனன் மற்றும் துச்சாதனன்: கிருபாச்சாரியார் (Kripacharya): போரில் உயிர் பிழைத்த முக்கிய குரு மற்றும் தளபதி.கிருதவர்மன் (Kritavarma).

***

7.பாரதம் பாடிய மிஸ்டர் மஹாதேவன் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) பாரதத்தை மொழிபெயர்த்ததை சங்க இலக்கிய கடவுள் வாழ்த்துக்கள் மூலம் அறிகிறோம்; மேலும் மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி  சங்கம் வைத்தும் என்று சின்னமனூர் பெரிய சாசனமும் முன்னாள் பாண்டியர்களைப் பற்றி கூறுகிறது

***

8.பீஷ்மர் போரில் வீழ்ததப்பட்டவுடன் அக்குபங்க்சர் முறையைப் பயன்படுத்தி 58 நாட்கள் அம்ம்புப்படுக்கையில் இருந்தார் ; அவர் தன்னுடைய வாழ்நாள் முழுதும் பிரம்மச்சர்யம் அனுஷ்ட்டி ப்பதாக அற்புத சபதம் செய்த போது அவர் நினைத்த தருணத்தில் உயிர்விடலாம் என்ற வரம்   அவருக்குக் கி டைத்தது . உத்தராயண புண்ய காலத்தில் உயிர்விட்டால் நல்லது என்ற நம்பிக்கை காரணமாக சுமார் இரண்டு மாதங்களுக்கு உயிரோடு உருந்து பின்னர் மேலுலகம் சென்றார் . இன்று ம் கூட ஆண்டுதோறும் பீஷ்ம அஷ்டமி என்று எல்லோரும், குறிப்பாக பிராமணர்கள், அவருக்குத் தர்ப்பணம் செய் கின்றனர் தந்தையின் காதலி — மீனவப் பெண்மணி – தனக்குப் பிறக்கும் பிள்ளைதான் அரசனாக வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தாள்; அப்போது பீஷ்மர் உலகம் வியக்கும் பிரம்மச்சர்ய விரதம் பற்றி அறிவித்தார்  வானஉலகம் முழுதும் Terrific! Terrific! Wonderful! Amazing!   பீஷ்ம பீஷ்ம என்று ஆரவாரம் செய்தது. அவரது உண்மைப்ப பெயர் தேவவிரதன் . சந்தனு மஹாராஜாவுக்கும் கங்கா என்ற பெண்ணுக்கும் மகனாக அவதரித்தார்  .

***

9 அர்ஜுனன் மகன் அபிமன்யு , கெளரவர்களின் சக்ர வியூயூகத்தில் நுழைந்து சண்டையிட்டான் ; அதிலிருந்து வெளிவருவதை அவன் கற்றுக்கொள்ளவில்லை ; இதனால் மரணம் சம்பவித்தது.

அருச்சுனனை திசைதிருப்ப  கௌரவப் படைகள் சக்கரவியூகம் அமைத்தன. வியூகத்திற்குள் நுழையும் வழி அபிமன்யுவிற்குத் தெரியும். ஆனால் வெளியேறும் வழி அவனுக்குத் தெரியாது.அபிமன்யுவுடன் உள்ளே செல்ல முயன்ற மற்ற பாண்டவர்களை ஜெயத்திரதன் தடுத்து நிறுத்தினான். இதனால் அபிமன்யு மட்டும் தனியாக மாட்டிக்கொண்டான். துரியோதனனின் மகன் லட்சுமணன் உள்ளிட்ட பலரைக் கொன்றான்.போரின் நெறிமுறைகளுக்கு மாறாக, துரோணர், கர்ணன், கிருபர், துரியோதனன் உள்ளிட்ட பல முன்னணி கௌரவ வீரர்கள் சேர்ந்து ஒரே நேரத்தில் அவனைத் தாக்கிக் கொன்றனர்.

***

10.பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் 12 ஆண்டுகள் முடிந்த பிறகு, 13-வது ஆண்டை அஞ்ஞாதவாசம் (யாரும் அடையாளம் கண்டுகொள்ளாமல் மறைந்து வாழும் காலம்) விராட மன்னனின் [விராட தேசம்] அரசவையில் பின்வரும் வேடங்களில் கழித்தனர்:

தருமபுத்திரர்: ‘கங்க பட்டர்’ (Kanka) என்ற பெயரில் விராட மன்னனின் அரசவை ஆலோசகராகவும், தாயம் விளையாடுபவராகவும் இருந்தார்.

பீமசேனன்: ‘வல்லவன்   (Vallava) என்ற பெயரில் அரச சமையலறைச் சமையற்காரராக (Cook) பணியாற்றினார்.

அருச்சுனன்: பிருஹன்னளை ‘ அல்லது ‘பேடி’ (Brihannala – அலியும் பெண்ணுமாக) என்ற உருவத்தில் விராட மன்னனின் மகளான உத்தரأவிற்குப் நடன மற்றும் இசை ஆசிரியராக இருந்தார்

.நகுலன்: ‘கிரந்திகன்’ (Damagranthi) என்ற பெயரில் குதிரை லாயத்தில் குதிரைகளைப் பராமரிக்கும் வேலை செய்தான்.

சகாதேவன்: ‘தந்தபாலன்’ (Tantipala) என்ற பெயரில் பசுப் பட்டறையில் ஆடு, மாடுகளை மேய்க்கும் பணியை மேற்கொண்டான்.

திரௌபதி: ‘ சைரந்திரி  அல்லது ‘மாலினி’ (Sairandhri) என்ற பெயரில் விராட மன்னனின் மனைவி சுதேஷ்ணா தேவியின் அந்தப்புரத் தலைவியாக/சேவையாடியாகப் பணிபுரிந்தார்

–subham—

Tags- மஹாபாரதம் ,10 கேள்விகள்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 100; இந்து மத கலைச்சொல் அகராதி-100 (Post.16,103)

Written by London Swaminathan

Post No. 16,103

Date uploaded in London – 18 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted yesterday

சுபத்ரா

வாசுதேவனின் பெண் ; கிருஷ்ணர், பலராமன் ஆகியோரின் சகோதரி; அர்ஜுனனின் மனைவி; அபிமன்யுவின் தாய். இதே பெயரில் பலர் இருந்ததை மஹாபாரதம் தெரிவிக்கிறது. பூரி ஜகந்நாதரின் ரத யாத்திரையில் சுபத்ராவுக்கு ஒரு ரதம் உள்ளதால், ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் உலகம் முழுதும் நடத்தும் ரத யாத்திரையில் சுபத்ரா ரதத்தையும் கொண்டுவருவதால், மேலும் பிரபலமாகிய பெயர் ஆகிவிட்டது. தமிழ் நாடு வரை பெண்களின் பெயராகவும் இருக்கிறது; சங்க இலக்கியத்தில் வரும் மாறோக்கத்து நப்பசலையார் என்ற பெண் கவிஞரின் பெயர் சுபத்ரா என்பது நான் ஆராய்ச்சியில் கண்ட துணிபு. தமிழ் நாட்டைப்போலவே அம்மான் மகளான சுபத்ராவை அர்ஜுனன் மணந்தான் . ஆகவே முறைப் பெண்ணை மணப்பது வடக்கிலும் இருந்தது உறுதியாகிறது . துவாரகாவுக்கு விருந்தினராக வந்த அர்ஜுனன் , சுபத்ராவைக் கடத்தி கல்யாணம் கட்டியதை பலராமன் கடுமையாக ஆட்சேபித்தார். ஏனெனில் சுபத்திராவை துர்யோதணனுக்கு மணம் செய்விக்க பலராமன் திட்டமிட்டிருந்தார் ;கடைசியில் கிருஷ்ணன் தனது அண்ணனை சமாதானப்படுத்தினார்.

***

சுக்ரன் / சுக்ராச்சார்யா

சுக்ரன் என்பது வெள்ளி கிரகம் ; சுக்ல என்றால் வெள்ளை நிறம் . வெள்ளி என்னும் கிரகத்தையும் மழையையையும் தொடர்புபடுத்தி பல செய்யுட்கள் புறநானூற்றிலும் சம்ஸ்க்ருத நூல்களிலும் உள்ளன ; விஞ்ஞானிகளுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது .

சுக்ராச்சார்யா என்ற பிராமணன் அசுரர்களின் குரு;  பிருஹஸ்பதி என்ற பிராமணன் தேவர்களின் குரு. இருவரையும் இரு அந்தணர் என்று சங்க இலக்க்கி யம் பாடுகிறது; சுக்ராசார்யாரின் மகள் தேவயானி , பிருஹஸ்பதியின் மகன் கச்சனின் மீது கொண்ட காதல் கதை திரைப்படமாக வந்ததால் தமிழர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவள் தேவயானி. (இந்த பிளாக்கில்  கச்ச-தேவயானி கதை முன்னரே கொடுக்கப்பட்டுள்ளது ).

பிராமணர்கள் தான் அசுரர்களுக்கும் குரு என்ற உண்மையும் அசுரர்கள் தவம் செய்து பிரம்மாவிடமிருந்தும் சிவ பெருமானிடமிருந்தும் வரங்களைப் பெற்றனர் என்ற புராண உண்மையும் திராவிட- ஆரிய வாதத்துக்கு செமை அடி கொடுக்கிறது; வெளிநாட்டு விஷமிகள் அசுரர்களை திராவிடர் என்று வருணித்து இந்துக்களை பிரிக்கப்ப்பார்த்தனர்  ; அந்த வாதம் செல்லாக்காசாகிவிட்டது .

***

சுக்ர நீதி

சுக்ராசார்யார் அல்லது உஷனர் என்பவர் தங்களுடைய அரசியல், சமூகம், தர்மம், நீதி முதலிய தலைப்புகளில் கருத்துக்களை வெளியிட்டனர் ; அவை சுக்ர நீதி என்ற பெயரில் பிரபலமாகிவிட்டது.

***

சுந்தர காண்டம்

ராமாயணத்தில் ஐந்தாவது காண்டம்  இது;  சுந்தர காண்டத்தைப் படித்தால்ர்      ஆ  அஞ்சசனேயரைப் போல எடடுத்த காரியம் யாவினும் வெற்றியும் மங்களமு ம் ஏற்படும் என்ற நம்பிக்கையால் சம்ஸ்க்ருத சுந்தர காண்டம் அல்லது அதன் தமிழ் மொழிபெயர்ப்பைப் படிப்பது வழக்கத்தில் உள்ளது அதை பூஜை அறையில் வைத்து மரியாதை செய்வார்கள்  . சுந்தர காண்டஉபன்யாசம் செய்யும் சாஸ்திரிகளுக்கு கணையாழி அத்தியாயம் சொல்லும்போது பட்டு சால்வை, தங்க மோதிரம் ஆகியவற்றையும் பரிசாக அளிப்பார்கள் . இதில் முக்கிய அத்தியாயங்கள் என்னவென்றால் அனுமன் சீதையை சந்த்தித்து ராமனனின்  மோதிரத்தைக் கொடுத்துவிட்டு அவளுடைய மோதிரத்தை ராமனுக்கு அளித்தது மற்றும் இலங்கைக்கு தீ வைத்தது முதலியன ஆகும்; அனுமனின் வெற்றிப்பயணத்தால் இதைப்படித்தாலோ கேட்டாலோ எல்லா காரியங்களும் வெற்றியடையும், சுபமாக முடியும், கல்யாணங்கள் நடைபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

முக்கிய அத்தியாயங்கள்

Chapter 1 – அனுமனின் புறப்பாடு;

Chapter 6 – ஹனுமான் ராவணன் அரண்மனையை நோட்டம் விடுதல்;

Chapter 7 – புஷ்பக விமான வருணனை

Chapter 8 – Further Description of the Aerial Chariot Pushpaka

Chapter 15 – ஹனுமான் சீதா தேவியைக் காணுதல்; 

Chapter 22 – சீதைக்கு ராவணன் விடும் மிரட்டல்

Chapter 27 – திரிஜடையின் சுபக் கனவு

Chapter 32 –  ஹனுமான் சீதையின் முன் தோன்றி ராமபிரானைப் புகழ்தல்

Chapter 37 – ஹனுமான்சொன்ன மீட்பு திட்டாத்தை சீதா தேவி நிராகரித்தல்

Chapter 38 – சீதாதேவி தனது நகையை ராமனுக்கு கொடுத்து அனுப்புதல் ;

Chapter 49 – ஹனுமான் பல இடங்களை அளித்து பல தளபதிகளைக் கொன்றதால் அரக்கர்கள் பிடித்தல்

Chapter 53 – அனுமனை தெருத்தெருவாக இழுத்துச் செல்லும்படி ராவணன் உத்தரவு; வாலில் வைத்த தீயை அவன் இலங்கை நகருக்கு இட்டான்

Chapter 54 – லங்கா நகரம் தீக்கிரை

Chapter 64 – சுக்ரீவன் , ராமபிரானுக்கு ஆறுதல் சொல்லல்;

Chapter 65 – கண்டேன் சீதையை என்ற தலைப்புச் செய்தியுடன் ராமனை அனுமன் சந்தித்து அளவளாவுதல்

Chapter 68 – சீதாதேவிக்கு சொன்ன ஆறுதலை ராமனுக்கு அப்படியே எடுத்துரைத்தல்

***

சுமேரு

இமய மலைக்கும் அப்பாலுள்ள ஒரு தங்க நிற மலை என்றும் வடதுருவம்தான் சுமேரு என்றும் கருத்துக்கள் உள்ளன இதை சூரியனும் சந்திரனும் வலம் வருவதாகச் சொல்வதால் வடதுருவம் அல்லது ஆர்ட்டிக் வட்ட நா டுகள் என்பது ஒரு வாதம்.

வித்யாதரர்கள், கிம்புருஷர்கள் முதலிய தெய்வீக புருஷர்கள் சுமேருவில் வசிக்கிறார்கள் .

***

சுரா  பானம்

இது சோம ரசத்திலிருந்து வேறுபட்ட பானம்; இந்த வேற்றுமைகளை விளக்கிவிட்டு  இதைத்  தவிர்க்கும்படி வேதம் புத்தி சொல்கிறது.  அரிசியை அல்லது தேனை அல்லது கரும்புச் சாற்றை புளிக்கவைத்து இதைச் செய்வதையும் சம்ஸ்க்ருத நூல்கள் விளக்குகின்றன

***

சூர்ய வம்சம் 

புராதன மன்னர்களை சந்திர வம்சம் என்றும் சூரிய வம்சம் என்றும் இந்துமத புராணங்கள் பிரிக்கின்றன. அதன்படி இக்ஷ்வாகு முதல் 145-க்கும் மேற்பட்ட மன்ன ர்களின் பட்டியலைப் புராணங்கள் தருகின்றன . இதன் கடைசி மன்னர் சுமித்ரன், நந்த வம்ஸத்துக்கு முன்னால் வாழ்ந்தவன் ; அதாவது 2600 ஆண்டுகளுக்கு முந்தையவன் சுமித்ரன்! ஒரு மன்னனுக்கு 20 அல்லது 25 ஆண்டுகளை வரலாற்று அறிஞர்கள் ஒதுக்குகின்றனர்;

ராம பிரான் , சோழ மன்னர்கள் ஆகியோர் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இந்துமத புராணங்களை நம்புவோர் சிந்து வெளி நாகரீகமும்  சூர்ய வம்ச ஆட்சிக்குள் வந்துவிடுவதை ஒப்புக்கொள்ள வேண்டும் ஏனெனில் இக்சிவாகு 2800+600=3400 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தியை ஆண்டிருப்பார் ; அயோத்தியிலிருந்து ஹரப்பாவும் மொஹன்சதாரோவும் அதிக தூரம் இல்லை.

ஆரிய- திராவிடம் பேசும் அறிவிலிகளுக்கு இது செமை அடி கொடுக்கும் ;மாக்ஸ்முல்லரைப் புரட்டிப் புரட்டி அடித்த பேராசிரியர் வில்சன் சொல்வது போல ரிக்வேதத்துக்கு 2000 BCE  கொடுத்தாலும் சிந்து வெளி நாகரிகத்துக்கு , அடி உதை விழும் !

***

சூர்யன்

சோலார் என்ற ஆங்கிலச் சொல் சூர்ய என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபே; ர+ல இடம் மாறும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்கண விதி

 சூரியனுக்கு ஒரு சக்கரமும் ஏழு குதிரைகளும் இருப்பதாக புராணங்கள் சொல்லுவதை சங்கத் தமிழ் புலவர்களும் செப்புகின்றனர் வானவில்லில் காணப்படும் ஏழு நிறங்களை ஏழு குதிரைகள் என்று அடையாள பூர்வமாகச் சொல்லுவார்கள். சூரியனுக்கு முன்னால், பல்லாயிரம் குள்ள  முனிவர்கள் — வாலகில்யர்கள்–  செல்வதை புராணங்களும் சங்கப்புலவர்களும் செப்புகின்றனர்; இதுவரை விஞ்ஞானிகள் இதை விளக்கவில்லை . அவர்கள் விளங்காதவர்களே! காஷ்மீர் முதல் பாகிஸ்தானில் இப்போதுள்ள மூல்டான் முதல் ஒரிஸ்ஸாவிலுள்ள கோனார்க் வரை சூரியனுக்கு கோவில்கள் இருந்தன . முஸ்லீம் வெறியர்கள்  அவைகளை உடைத்து அழித்ததை வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். சூரிய கிரஹணம் பற்றி ரிக் வேதத்திலும் மகாபாரதத்திலும் புறநானூற்றிலும் குறிப்புகள் காணப்படுகின்றன; சூரியனுக்கு மனைவிககள் உண்டு என்று சொல்லுவதும் அடையாள பூர்வ செய்திகளே நிழல் / சாயா ஒரு மனைவி!

அமரகோசத்தின் ஆசிரியர் அமரசிம்மன் சூரியனுக்கு 37 பெயர்களைச் சொல்லியிருக்கிறார். அவையாவன:–

அர்யமா = பித்ரு தேவதா, சூரியனின் பக்தர்கள்

ஆதித்ய: = அதிதி வம்சத்தில் வந்தவர்

த்வாதசாத்மா =

திவாகர: = நாள் என்பதை உருவாக்குபவன்

பாஸ்கர: = ஒளியூட்டுபவன் (பாஸ்பரஸ் என்ற மூலகத்தின் பெயரும் இதே பொருளுடைத்து)

அஹஸ்கர: = நாள் என்பதை உருவாக்குபவன்

ப்ரத்ன:= இருட்டை ஒழிப்பவன்

ப்ரபாகர: = ஒளியூட்டுபவன்

விபாகர: = ஒளியூட்டுபவன்

பாஸ்வான்= ப்ளியுடையவன்

விவஸ்வான் = பலவித ஆடைகளை உடையவன்

சப்தாஸ்வ = ஏழு குதிரைகளை உடையவன் (வானவில்லின் வண்ணங்கள்)

ஹரிதஸ்வ = பச்சைக் குதிரை உஅடையவன்

உஷ்ணரஸ்மி: = வெப்பமான கதிர் உடையவன் (பல பெண்களுக்கு ரஸ்மி என்று பெயர்; அதாவது கிரணம், கதிர் ஒளி)

விகர்தன: = பாலிஷ் செய்யப்பட்டவன், மெருகூட்டப்பட்டவன், விசேஷன கர்தவ்யம்

அர்க: = பூஜிக்கப்படதக்கவன் (அருகம் புல், தாமிரம், ஸ்படிகம், இந்திரன் என்றும் இச்சொல் பொருள்படும்)

மார்த்தாண்ட: = ‘இறந்த கோளத்தில்’ இருப்பவர்

மிஹிர: = வெளிவருபவன் (புத்தன் என்றும் இச்சொல் பொருள்படும்)

அருண: = சூர்ய சாரதி ( மற்ற பொருள்கள்= சந்த்யா ரகம், நிசப்தம், கபிலர், குஷ்டநோய், குணவான்)

பூஷா = புஷ்டியை ஏற்படுத்துபவன் (சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தைப் பெறு என்பது சம்ஸ்கிருத பழமொழி; இலவச வைட்டமின் ‘டி’ தருபவன்)

த்யுமணி: = வானில் தோன்றும்ரத்தினக் கல்

தரணி = சம்சாரக் கடலைக் கடக்கச் செய்வோன் (ஏனைய பொருள்= குமரி, படகு)

மித்ர: = சூரியன் (நண்பன்)

சித்ரபானு: = வண்ணக் கதிர் உடையோன்

விரோசன: = ஒளிவீசுபவன் 9மற்ற அர்த்தங்கள் = நிலவு, பிரஹலாதன் மகன்)

விபாவசு: = ஒளிதருபவன் (மற்ற பொருள்= ஒருவித நெகலஸ், பாவக)

க்ரஹபதி: = கிரகங்களுக்கு நாயகன்/தலைவன்

த்விஷாம்பதி:= ஒளிக்கு அதிபன்/தலைவன்

அஹர்பதி:= நாளுக்கு தலைவன் (அஹர் = பகல், பகலவன்)

பானு: = ஒளி

ஹம்ச: = சூரியன்

சஹஸ்ராம்சு: = 1000 கதிர் உடையோன்

தபன: = தபிக்கச் செய்பவன்(தபி = சூடேற்று; தப=தவ)

சவிதா= சூரியன்

ரவி: = சூரியன்

சுர: = பார்க்கக்கூடிய அனைத்தையும் தூண்டுபவன் (விழித்தெழச் செய்வான்)

சூர்ய: = சுர: என்பதைக் காணவும்.

தமிழ்நாட்டில் தினமணி, தினகரன் போன்ற பத்திரிக்கைகள், ஆங்கிலத்தில் ‘சன்’ போன்ற பத்திரிக்கைகள் சூரியன் பெயரைத் தாங்கி வருகின்றன. உலகிலுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் சூரியன் பெயரில் நாளேடுகள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரத்திலுள்ள 12 மந்திரங்களும் மீண்டும் பிரபலமாகி வருகின்றன.

பல ஆண்கள், பெண்களின் பெயர்களும் சூரியன் பெயரிலிருந்தும், ஒளி என்பதிலிருந்தும் வந்தவை.

சூரியனுக்கு ‘இனன்’ என்று ஒரு பெயர் உண்டு; அதிருந்து வந்ததே இன்கா நாகரீகம் என்று முன்பே எழுதியிருக்கிறேன்.

அம்சுமாலி (நீர்நிலைகளின் தலைவன்), பஹ: ( ஐஸ்வர்யம்) முதலிய வேறு 17 பெயர்களையும் அமர கோச உரைகாரர்கள் விளம்புவர்)

சூரியனுக்கு அருகாமையில் உள்ள மாடர, பிங்கள:, தண்ட: பற்றியும் அமரம் பேசும்; இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

6000 ஆண்டுகள் பழமையான ரிக் வேதத்தில் சூரியனைப் பற்றிய 6 கண்டுபிடிப்புகள் உள்ளன. அவைகளை அண்மைக் காலத்தில் நடந்த  விண்வெளி ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

1.சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS (Already posted in English)

11 ஆண்டுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப்புள்ளிகள் அதிகரிக்கின்றன. இவை பற்றி 100, 200 ஆண்டுகளாகத்தான் விஞானிகளுக்குத் தெரியும். சீனாக்காரர்கள் இதை 2800 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதாக என்சைக்ளோபீடியாக்கள் என்னும் கலைக்களஞ்சியங்கள் செப்பும். அந்த அரை வேக்காடுகளுக்கு, ரிக் வேதத்தில் SUN SPOTS ‘சன் ஸ்பாட்ஸ்’ எனப்படும் குறிப்புகள் 6000 ஆண்டுக்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பது தெரியாது!

காண்க மந்திரம் – Sun spots in Sun—RV 10-189

சூரியனின் கருப்புப் புள்ளிகள் 10-189-1

புள்ளிகள் உடைய காளை கிழக்கே வந்துவிட்டான்.அம்மாவுக்கு முன் அமர்ந்து இருக்கிறான்.தந்தை போலுள்ள வானத்தில் முன்னேறுகிறான் . (வானத்தை தந்தையாகவும் பூமியைத் தாயாகவும் வருணிப்பது வேதம் முழுதும் உள்ளது.)

இது பாம்புராணி (ஸர்ப்ப ராக்ஞி)  என்னும் பெண் புலவர் சூரியனை நோக்கிச் சொல்லும் துதி என்று வேதத்தைத் தொகுத்தோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தலைப்பும் போட்டுவிட்டனர்

2.சூரியனும் விட்டமின் ‘டி ‘ யும் SUN AND VITAMIN D

இப்போது மேலை நாடுகளில் விட்டமின்/ வைட்டமின் டி VITAMIN D  பற்றி பெரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கிடைப்பதை விட மேலை நாடுகளில் குறைவாகவே சூரிய வெளிச்சம் கிடைக்கிறது.  இதை அறிந்த இந்து விஞ்ஞானிகள் ஜோதிடத்திலும் சூரியனே ‘ஆரோக்கியகாரகன்’ என்று சொல்லி அவனை வழிபட விதி இயற்றினார்கள். இதை அதிகாலை சூரிய  நமஸ்காரம் மூலமும் பிராமணர்களின் த்ரி கால / மூன்று வேளை/  சந்தியாவந்தனம் மூலமும் கற்பித்தனர்.

XXX

3.சூரிய ஒளி சிகிச்சை PHOTO THERAPY AV 2-67; RV1-191-8/9

எங்கள் லண்டனில் குழந்தைகள் கொஞ்சம்  மஞ்சள் நிறைத்த தோலுடன் பிறந்தாலும் அதை வீட்டுக்கு அனுப்பாமல் ஆஸ்பத்திரிலேயே விளக்கின் கீழ் வைத்து சிகிச்சை தருவார்கள். தோல் நோய் உடைய பெரியவர்களையும் கூட விளக்குத் தொட்டியில் நிற்கவைத்து சிகிச்சை தருவார்கள். சூரிய ஒளியின் இந்த அபார மருத்துவ குணங்களை ஏராளமான ரிக் வேத மந்திரங்கள் பாடுகின்றன.

இது ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் இரண்டு மஞ்சள்  காமாலை மந்திரங்களில் வரும் செய்தி. AV 2-67; RV1-191-8/9

சூரியனை குதிரைகள்/ VIBGYOR ஏந்து கின்றன;4-13 -3

சூரிய ஒளியை முப்பட்டக (PRISM) கண்ணாடி வழியே செலுத்தினால் வான வில்லின் 7 கலர்களையும் (VIBGYOR)  காணலாம். இதையும் கூட புலவர்கள் பாடத் தவறவில்லை .

XXX

4. சூரியனே கண்ணுக்கு ஒளி தருபவன் SUN AND EYE;  RV 10-90

இறைவனின் கண்களில் இருந்து சூரியனும் மனத்திலிருந்து சந்திரனும் உதித்ததாக ரிக் வேத்தத்தின் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் (10-90) சொல்லும். சூரியனை உலகத்தின் கண் என்று வருணிக்கும் துதிகளும் உள .Sun’s link with Eye- RV.10-90

சந்த்ர மா மனஸோ ஜாதஹ ; சக்ஷோர் ஸூர்யோ அஜாயத – RV. 10-90

சூரியனே எங்கள் கண்களுக்குக் காட்சியை அளிக்கவும் 10-158. இதைப்  பாடிய புலவர் பெயர் கண். அவர் சூரியனின் புதல்வர்

XXX

5.சூரியன் ஒரு நக்ஷத்திரம் SUN IS A STAR

சூரியன் ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்றும் அது மஞ்சள் நிற YELLOW STAR வகையைச் சேர்ந்தது என்றும் தற்காலத்தில் படிக்கிறோம். இதைவிட கடுமையான வெப்பம் உடையது நீல, சிவப்பு நிற நக்ஷத்திரங்கள் என்பதை தற்கால வானியல் புஸ்தகங்கள் செப்பும். பல்லாயிரம் கோடி நக்ஷத்திரங்கள் உண்டு என்பதை மாணிக்கவாசகர், பாரதி முதிலியோர் பாடியுள்ளனர். இந்து மதத்தில் உள்ள சின்னக் குழந்தை கூட விநாயகரைப் புகழும் ‘வக்ரதுண்ட மஹா காய’ துதியில் பிள்ளையாரை

‘கோடி சூர்ய பிரகாசம்’ உடையவன் என்று புகழும். . பகவத் கீதையில் விசுவ ரூப தரிசன ஸ்லோகத்தை, முதல் முதலில் அணு குண்டு வெடித்ததைக் கண்ட அமெரிக்க விஞ்ஞானி, அப்படியே  நினைவு கூர்ந்ததை எழுதியுள்ளேன். அதில் அர்ஜுனன் ‘திவி சூர்ய சஹஸ்ரஸ்ய’ என்று கண்ணனை வருணிக்கிறான் ; கிருஷ்ணா! ஆயிரம் சூரியன் ஒரு சேர உதித்தாற் போல உன்னைக் காண்கிறேன் என்கிறான். ஆக சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதும் அது போல என்பதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக் குழந்தைகளுக்கும் தெரியும். 100 ஆண்டுக்கு முன்னர் ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கிரிப்பித் முதலியோர் அப்படியே சொல்லியும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

காண்க ரிக் வேதம்  Sun is a Star — RV 10- 156

அக்கினியே ஜன ங்களுக்கு  ஒளியை அளித்துக் கொண்டு வானிலே அழியாத நட்சத்திரமான சூரியனை உயர்த்தினாய் “– 1-156

இன்னும் ஏராளமான கண்டுபிடிப்புகள் உள்ளன

பிக் பாங்க் BIG BANG  என்னும் மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு பற்றியும், கருந்துளைகள் BLACK HOLES பற்றியும் எழுதியுள்ளேன்

XXX

6.சூரியகிரஹணம்

அத்ரி மகரிஷியுடைய  அற்புதங்களை விவரிக்கும் எல்லா மந்திரங்களும் அவர் சூரிய கிரஹணத்தைக் கணக்கிட்டு, சீடர்கள் மத்தியில் அற்புதம் செய்த நிகழ்வும் ரிக்வேதத்தில் உள்ளது. (இது பற்றி எனது பழைய கட்டுரையில் விவரம் காண்க ). இதே உத்தியை ஜயத்ரதனை வதம் செய்ய மஹாபாரதத்தில் கிருஷ்ணன் பயன்படுத்தியதையும் எழுதியுள்ளேன்.

***

சுஸ்ருதர் 

சுஸ்ருதர் எழுதிய சுஸ்ருத சம்ஹிதை என்னும் மருத்துவ நூல் 2600 ஆண்டு பழமையானது. அவர் அட்டை என்னும் பூச்சியைப் பயன்படுத்தி ரத்தம் எடுக்கும் வைத்தியம், செயற்கை மூக்கு ஆபரேஷன், 145 வகையான கருவிகளைக் கொண்டு ஆபரேஷன் செய்வது முதலியன பற்றி எழுதி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவை அனைத்தும் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன .

சர்ஜரி என்னும் அறுவைச் சிகிச்சையின் தந்தை இவரே என்று இப்போது உலகம் ஒப்புக்கொண்டு ஆஸ்திரேலியா முதலிய இட்டங்களில் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்களில் இவருடைய சிலையை வைத்துள்ளனர்.

சுஸ்ருத ஸம்ஹிதாவில் 186 அத்தியாயங்கள் உள.  பூர்வ-தந்த்ராவில் 120-ம்  , உத்தர-தந்த்ரா வில் 66-ம் உள்ளன.

பூர்வ-தந்த்ராவில்

•             சூத்ர ஸ்தான (46 அத்தியாயங்கள் ): மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள், அறுவைச் சிகிச்சைக் கருவிகள்; மருத்துவ மாணவர் பயிற்சி, மருந்தியல்

•             நிதான ஸ்தான (16 ): நோய்களை உண்டாக்கும் கிருமிகளும் பொருள்களும்

•             சரீர ஸ்தான (10 ): மனித உடற்கூறு, கருவின் வளர்ச்சி, முக்கிய உ டல் உறுப்புகள் , மர்ம ஸ்தானங்கள்

•             சிகித்ஸா ஸ்தான (40 ): பொதுவான சிகிச்சை , அறுவைச் சிகிச்சை செய்வது எப்படி;

•             கல்ப ஸ்தான (8 ): விஷங்களும் , விஷத்தை அகற்றும் சிகிச்சைகளும்

•            

உத்தர-தந்த்ரா ( – 66 அத்தியாயங்கள் )

•             கண், காது மூக்கு நோய்களும் சிகிச்சைகளும் (சாலக்கிய தந்த்ரா), குழந்தை வைத்தியம் (கௌமார பிரித்ய), மன நோய் வைத்தியம் (பூத வித்யா), பொதுவான மருந்துகள்  (காய சிகித்ஸா)

To be continued…..

Tags- சுஸ்ருதர் , சுபத்ரா , HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 100; இந்து மத கலைச்சொல் அகராதி-100 , சூரியன், சூர்ய வம்சம்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 97; இந்து மத கலைச்சொல் அகராதி-97 (Post.16,082)

Written by London Swaminathan

Post No. 16,082

Date uploaded in London – 12 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Shyama Sastri (1762-1827)

One of the Trinities of Carnatic Music (Sangita Trimurti) – the musical genius and composer Shyama Shastri was born to Visvanatha Iyer and Vengalakshmi in a Tamil Brahmin family at Tiruvarur on April 26, 1762.  Venkata Subrahmanya popularly known as Shyama Shastri was the eldest of the three jewels of Carnatic music – Tyagaraja, Muthuswami Dikshitar, and Shyama Shastri .

At a very young age, Shyama Shastri showed great musical ability. Discovering his interest in music, his mother requested her brother to initiate his music education and teach him the fundamentals of music. Shyama Shastri’s earliest gurus were his father who taught him devotional songs and his uncle who taught him the basics of music. However, his was a well-to-do family of priests and felt that Shyama would not be able to earn a living as a musician.

Shyama Shastri’s family moved on to settle in Thanjavur.  A chance encounter with Sanyasi Sangita Swami, a mendicant and musical exponent from Kasi who was passing through Thanjavur, breathed new life into Shayma Shastri’s music education.

During Sangita Swami’s short stay of four months at Thanjavur, he taught Shyama Shastri all the intricate details of Raga, Tala and Swara Prastharas (improvisation with musical notes). Impressed by his melodious voice, keen intellect and grasping power, the Sanyasi directed his student to approach Paccimiriyam Adiyappayya, a prominent court musician in Thanjavur.

Shyama Shastri was a Devi Bhakt (devotee of the Goddess) and priest at the temple of Goddess Bangaru Kamakshi, where his forefathers were priests for several years. Most of his compositions are on Devi Kamakshi.

Shyama Shastri composed nearly 300 krithis in praise of the Goddess. He also created Navaratnamalika which is a set of nine compositions praising the Goddess Meenakshi of the famed Meenakshi Temple in Madurai. He went on pilgrimage and created compositions on deities of the temples he visited. He wrote compositions praising Tiruvaiyaru Dharmasamvardini, Nagapattinam Neelayadakshi, Thiruvanaikaval Akhilandeswari, one Tana Varnam on Kanchi Varadaraja and one krithi on Vaidheeswarankovil Muthukkumaraswamy.

His compositions were in three languages -Tamil, Telugu, and Sanskrit – he preferred Telugu as the medium of expression. He is the only one among the ‘Trinity’ to have composed in Tamil. He was a contemporary of Saint Tyagaraja and Muthuswami Dikshithar. Tyagaraja and Shastri  spent a lot of time discussing music together.

King Sarabhoji of Thanjavur was his patron.His Mudra in the kritis is Shyama Krishna’. On February 6, 1827, he at the age of 65, this great Kamakshi devotee breathed his last.

***

Sindhu

Sindhu River, is a major 3,180 km (1,980 mi) trans-Himalayan river in Asia. It originates in Tibet, flows through Ladakh (India) and Pakistan, and empties into the Arabian Sea. It gave India its name; Greeks and Persians did not have S and so they called Hindu. Sangam Tamils never mentioned this river and so no connection with Indus Valley Civilization. But Sangam Tamils mentioned River Ganga 17 times. They also knew Himalayas but no knowledge of North West India. Major Tributaries: Jhelum, Chenab, Ravi, Beas, and Sutlej rivers. Sindhu is mentioned in the Rig Veda, the oldest book in the world. it cradled ancient urban centres like Harappa and Mohenjo-Daro (now in Pakistan). Harappa is also mentioned in the Rig Veda as Hari Yupia (Where Vishnu’s Yupa Pole  is found)

***

Sikhandi

Śikhaṇḍī (शिखंडी).—Shikhandi fought in the Kurukshetra war on the side of the Pandavas, according to the Mahābhārata He was originally born as a girl child named ‘Shikhandini’ to Drupada. Shikhandi was killed by Ashwatthama on the 18th day of battle. S/he was the rebirth of Ambā, daughter of the king of Kāśī. Ambā ended her life with the vow that she would take revenge on Bhīṣma and was born in the next life as the daughter of king Drupada under the name Śikhaṇḍinī, and Śikhaṇḍinī helped Arjuna in the war at Kurukṣetra to kill Bhīsma. During the battle of Kurukṣetra, he fought in front of Arjuna, while attacking Bhīṣma. Bhīṣma dropped his weapons because it was against the rule to kill a “woman” and this allowed Arjuna to fill Bhīṣma with arrows from behind Sikhandin/i. Śikhaṇḍī was later killed by Aśvatthāmā, while he was asleep in the Pāṇḍava camp. Both incidents show war means treachery.

***

Sita

Rama’s wife; an ideal woman who shared all the sufferings of her husband Rama in the forest for 14 years. She was abducted by the demon king Ravana of Sri Lanka . Rama invaded Lanka with the support of Vanara Sena and killed Ravana and rescued Sita. Because a washer man doubted her integrity, Rama sent her to forest where she stayed with Rishi Valmiki. She gave birth to Twins Kusa and Lava. Both met Rama later and Rama recognised them and Sita. But Sita Devi entered the earth where from she came. When she was a baby Janaka found her in the field and Viswamitra helped Rama to meet her and marry her. Two Ramayana anecdotes are in Sangam Tamil literature praising Rama and condemning Ravana.

***

Siva

Auspicious form of Rudra. Rig Veda mentioned only once according to Professor Wilson. Yajur Veda gave the mantra Nama Sivaya in Rudram.  Though foreigners got confused and confused Hindus, Tamils from the Sangam days are clear that both Rudra and Siva are one. Tamils mentioned his Blue Throat, Three Eyes etc 2000 years ago. His consort was Parvati/Uma and his abode was Kalilash in the Himalayas. He has many forms and formless shape called Linga.  Linga was mentioned in Sanskrit and Tamil at a very late stage. Not in Sangam books nor in Tevaram or Tiruvasagam

Siva manifests himself in five different forms

1.     He who is the soul of the universe is called Īśāna.

2.     The illusory (māyā) material world is Tatpuruṣa;

3.     Buddhi with its eight components beginning from dharma is Aghora;

4.     Vāmadeva pervades the whole of the universe in the form of ahaṅkara

5.     and the manas-tatva (mind) is Sadyojāta.

***

Soma

The Divine Elixir with mysterious properties extracted from a mysterious plant, now extinct. Vedas differentiated Soma from Sura (liquor).

Like Anti Hindu foreigners mislead the world by wrong interpretation of Harappan Civilization, they misled the whole world by dubbing Soma plant as a g drug. They identified some plants as Soma plants but never proved it was the one that Vedic Hindus used.

Soma is also Moon and Moon God.

Divine elixir Soma was extracted from  a plant of heavenly origin which grew on remote mountains. An entire Mandala of hymns in the Rig Veda is devoted to this plant. If one reads those hymns in Rig Veda and other hymns in other Vedas one would understand where foreigners went wrong. Very elaborate rituals were detailed in the Vedas for the preparation of this elixir for the Yagas. Foreigners who showed fake and false proofs for Aryan migration to India could not show anything similar to Soma in other parts of the world. If they have really identified the plant, they would have made a drink like Coca Cola and made millions of dollars every minute. Because they were frauds, they could not prove anything they said. They couldn’t even give proper meaning for many Soma hymns and so the mystery continues.

The Soma hymns in the Rig Veda are an extensive collection of sacred chants dedicated to Soma, both a ritual plant extract and the divine god of inspiration, energy, and immortality. Entirely comprising Mandala 9 (all 114 hymns) plus dozens scattered across other books, they describe the pressing, filtering, and exhilarating effects of the sacred juice. If it is a real hallucinate drug no stupid would waste it by pouring it into Yaga fire.

Mandala 9: Known entirely as the Pavamana Mandala, dedicated completely to Soma Pavamana (Soma being purified).

***

Somaskanda

Somaskanda.—South Indian representation of Śiva along with Umā and Skanda

In Sanskrit, Somaskanda (सोमास्कन्द) means “with Uma and Skanda“. It is a compound word formed from sa (with), Uma (another name for the goddess Parvati), and Skanda (their son, also called Kartikeya or Murugan). Lord Skanda is seated in the centre with Siva and Uma.  South Indian temples have many idols of Somaskanda

**

Sringeri

Sringeri is a historic hill town in the Chikkamagaluru district of Karnataka,  set along the Tunga River. It is famous for the Sringeri Sharada Peetham, the first cardinal  Mutt established by the philosopher Adi Shankaracharya.

Jagadguru Shankaracharya Sri Bharati Tirtha Mahaswamiji is the current head of the Mutt and his junior is Jagadguru Shankaracharya Sri Sri Vidhushekhara Bharati . Pujas are done every day both in the temple and the Mutt. They have lot of followers in Kerala, Karnataka and other parts of the world.

***

Srngara rasa

Śṛṅgārarasa (शृङ्गाररस).—the sentiment of love. And it is one of the Nava Rasas (nine sentiments or moods). It is used in Bharta Natyam and dramas.

This sentiment of love (śṛṅgāra-rasa) is divided into two varieties—

1.     union (sambhoga-śṛṅgārarasa),

2.     separation (vipralambha-śṛṅgārarasa).

In Bharata Muni’s ancient text the Natya Shastra, eight primary rasas (aesthetic flavours or emotional essences) are codified. Each rasa is evoked in the audience through the expression of a corresponding permanent psychological state (sthayi bhava).

The Eight Primary Rasas:

Śṛṅgāra (The Erotic / Romantic): Arises from rati (love or attraction).

Hāsya (The Comic): Arises from hāsa (mirth or laughter).

Karuṇa (The Pathetic): Arises from śoka (sorrow or grief).

Raudra (The Furious): Arises from krodha (anger).

Vīra (The Heroic): Arises from utsāha (energy, enthusiasm, or courage).

Bhayānaka (The Terrible): Arises from bhaya (fear or terror).

Bībhatsa (The Disgusting): Arises from jugupsā (aversion or disgust).

Adbhuta (The Marvellous / Wonder): Arises from wonder or astonishment (vismaya)

The ninth rasa added to the original eight in Indian aesthetic theory is Śānta (peace, calmness, or tranquillity), turning the traditional group of sentiments into the Navarasa. Scholars like Udbhata and later Abhinavagupta formally introduced and championed Śānta as the ninth rasa.

***

Sthanu


Another name of Siva.

Sthāṇu (स्थाणु) refers to “immovable” or “standing firmly”.—A particular posture adopted by some holy men (sādhus) who vow to remain for months or years perfectly motionless. Sthāṇu is also an epithet applied to Śiva. It refers to his great ascetic practices (tapas), when he remains motionless like a post, until the dissolution of the universe (pralaya).

Sthāṇu (स्थाणु).—a. [sthā-nu pṛṣo° ṇatvam] Firm, fixed, steady, stable, immoveable, motionless; नित्यः सर्वगतः स्थाणुरचलोऽयं सनातनः (nityaḥ sarvagataḥ sthāṇuracalo’yaṃ sanātanaḥ) Bhagavadgītā (Bombay) 2.24; Mahābhārata (Bombay) 1.34.5.

– An epithet of Śiva; स स्थाणुः स्थिरभक्तियोगसुलभो निःश्रेयसायास्तु वः (sa sthāṇuḥ sthirabhaktiyogasulabho niḥśreyasāyāstu vaḥ) V.1.1.

S/Thanumalayan Temple, also known as the Suchindram Temple, is a famous Hindu temple  located in Suchindram, Tamil Nadu, India. It is unique because the main deity represents the Hindu Divine Trinity (Trimurti)—Lord Shiva (Stanu), Lord Vishnu (Mal), and Lord Brahma (Ayan)—combined into a single form.

To be continued…………………….

Tags- Shyama Sastri, Sthanu, Siva, Somaskanda,Sindhu river,  Navarasa, Srngara rasa,  HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 97; இந்து மத கலைச்சொல் அகராதி-97

Sexy Joke; Purananuru wonders-52, One Thousand Interesting Facts – Part 92 (Post.16,078)

Written by London Swaminathan

Post No. 16,078

Date uploaded in London – 11 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Item 752 Theory of Evolution again

Paripatal verses 2 and 13 compare Pancha Bhutas with Lord Vishnu. In Puram verse 2 by Sangam poet Mr Nagarajan (Mudi Nagarayar in Tamil) also we see Pancha Bhutas. Appar in Sixth Tirumurai Tevaram  (Vaitheeswaran Koil Decad) and Manikkavasagar also said the same.

Greeks did not have Five Elements; in China five elements are different. Only Sangam poets and earlier Sanskrit poets listed same Pancha Bhutas= Five Elements.

According to them Earth is given No.5;

Earth has five qualities: sound; touching/feeling, fire; taste; smell.

**

Water is given No.4;

Water has four qualities – sound; touching/feeling, fire; taste;

**

Fire is given No.3

Fire has three qualities- sound, feeling, light;

**

Air is given No.2; Air has sound and feeling;

and

Space is given No.1.

Space has only one quality – sound.

**

Those who study astronomy knows that the space is full of sounds coming from different galaxies.

What is interesting is the order of five elements.

Sound/space, Wind, Fire, Water, Earth.

After Big Bang (sound), wind was blowing big flame cooled and formed Earth; then water came from rain; and the earth appeared when water stayed within sea.

Only because of scientific thinking and only because of scientific knowledge they gave numbers to five elements.

More over we see the continuity in thinking from Sangam Age Paripatal to Appar Tevaram or Manikkavasagar’s  Tiruvasagam.

இதோ புறநானூற்றுப் பாடல் 2 Pura Nanuru Verse 2

மண் திணிந்த நிலனும்-earth

நிலம் ஏந்திய விசும்பும்-sky

விசும்பு தைவரு வளியும்-wind

வளித்தலைஇய தீயும்-fire

தீ முரணிய நீரும், என்றாங்கு- water

ஐம்பெரும் பூதத்து five elements இயற்கை போலப்

***

பரிபாடல் Paripaatal 13

ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே; 18 space

இரண்டின் உணரும் வளியும் நீயே; wind/star dust

மூன்றின் உணரும் தீயும் நீயே;   fire   

நான்கின் உணரும் நீரும் நீயே; water

ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே: land/earth

அதனால், நின் மருங்கின்று மூ ஏழ் உலகமும் 23

***

Appar Tevaram Sixth Tirumurai

மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு  1 sky

வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்- 2 fire

தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்  4 water

தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச- 5 earth

மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை

வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்

***

திருவாசகம் Tiruvasagam of Manikkavasagar

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி” (தி.8 திருவாசகம். போற்றித் திருவகவல் – 137 – 41) என்பது முதலியனவாக அருளிச்செய்தவற்றையும் அறிக.

இதில் பஞ்சபூதங்களில் ஐந்து தன்மைகளை அழகாக எடுத்துரைக்கிறார் மாணிக்கவாசகர்  திருவாசகத்தில் போற்றித்  திரு அகவல்  பாட்டில்

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி 5 earth

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி4 water

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி 3 fire

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 2 wind

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி- 1 space

என்று சிவபெருமானைப் போற்றுகிறார்

The beauty lies not only in the Pancha Bhuta Numbers but also in the continuity for thousands of years. It is from the Vedic literature they got these facts.

***

Item 753

Another beauty is the same attributes to Lord Vishnu in Paripatal and Purananuru:

Eagle Flag- Garuda Flag’

Many headed snake;

Conch and wheel of Vishnu are compared with moon and sun.

***

Item 754 Kalidasa simile in Paripatal

Paripatal verse 14 is on Lord Muruga with usual details. The interesting thing is the poet’s name is KESAVAN!

But Paripatal 15 on Lord Vishnu gives us a clue on date of Kalidas. I have shown that Sangam poets used at least 200 similes from Kalidasa’s seven books.

Here is one more simile.

The most famous Sloka on Lord Siva is Kalidasa’s first verse in Raghuvamsam (a book with hundreds of similes):

वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये।

जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ॥ १-१

vāgarthāviva saṁpṛktau vāgarthapratipattaye |

jagataḥ pitarau vande pārvatīparameśvarau || 1-1 (Raghu)

I adore the Parents of Universe, pArvati – parameshvara, who are indissolubly cleaved together like sound and sense (Word and Meaning)

This simile “like sound and sense” or Word and Meaning is used for Lord Vishnu in this Paripatal verse 15!

One more proof to show that Sangam poets were well versed in Kalidasa of Second century BCE.

This poem shows us the beautiful Azakar koil near Madurai, also known as Tirumalirum Cholai.in those days Krishna’s brother Balarama was also worshipped there according to the poem

Lord Vishnu’s five symbols are listed.

***

Item 755 Praying facing towards a particular Direction


Muslims wherever they are , face the direction of Mecca and do the prayer. Even the air planes of Muslim countries show this direction on the screen.

This custom is in ancient Hindu scriptures. Here the poet says go to Vishnu’s shrine ( in Azakarkoil) with your family worshipping that direction.

So even the direction where famous shrines were considered holy.

For instance, North is the holiest direction for Hindus because of Himalayan shrines. Even Sangam poets and kings fast unto death facing only North.

***

Item 756 Sexy Joke about menstruation

Paripatal verse 16 is on River Vaigai

Here is a scene portrayed by the poet on menstruation as a joke.

River Vaigai is compared with Pandyan king’s generosity.

Later the poet says,

 Relatives around a woman squirted red colour water on her. She did not wipe it completely.

Her lover came; her friends warned him not to go near her because she has monthly periods; saying this ,they laughed ;

Her lover knew that it was just red colour water; he smelt the fragrance of the water; she felt very shy; her lover wiped out the red colour stain on her body and laughed.

Though we see women’s menstruation in another poem in Kuruntokai- 157, it is indicated indirectly. This type of poem is rare in Hindu literature.

Vaigai river is compared with Ganges.

Poem about Menses’

குக்கூ என்றது கோழிஅதன் எதிர்

துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம் —

தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.

–அள்ளூர் நன்முல்லை (MISS Jasmine)- –குறுந்தொகைப் பாடல் 157

Here the poetess Miss Jasmine (Mullai=Jasmine) sings about the shock she had. She thought of enjoying with her husband in bed ; but in the night she had her monthly periods; she says, Oh My God; it is dawn; I hear “Cock-a-doodle-doo”; it is shocking;  the dawn is like the sword that divides me from my lover.

Hindu women never allow her husband near for three days.  In the Brahmin community she has to stay outdoors in a secluded place. Tamil Scholar U Ve Sa. has added more comments to this poem Kuruntokai 157.

***

Item 757 Long Metaphor

Paripatal verses 17 and 18 are on Lord Skanda/Muruga.

It is about Tirupparamkundram temple near Madurai.

Here there is a long metaphor:

Elephant = cloud;

Cloth decorating face of elephant= lightning

Hall of paintings= Manmathan’s weaponry;

Running streams in the hill= quiver;

Fingers= Kaanthal flowers;

Indra’s bow= Rainbow;

Arrows= flowers;

War drums = thunder;

Yaaz /Lute music= Vedic chanting

And the people pray for their welfare and the welfare of their relatives.

***

Item 758 King’s Visit to Temple Tirupparamkundram

In Purananuru we saw most famous Pandya King Mudukudumi Peruvazuthi going round Madurai Shiva Temple.

Here in Paripatal verse 19, we see Pandya king visiting Tirupparamkundram Skanda/ Muruga temple with his family and ministers.

It is compared with Stars and Moon going round the holy Meru Mountain.

***

Item 759 Famous Hall of Painting

Though we come across paintings in many Sangam poems, here is a detailed report.

The Hall of Painting had Sun and Planets; it shows Hindus interest in Astronomy;

All the painting halls are inside the  temples, not in palaces! (Kutralam Chitra Sabha etc)

An innocent village woman asked why there is a cat in the religious painting. Immediately her husband enlightened her by telling her the story of Indra molesting Ahalya and running away like a cat.

***

Item 760   Knowledge in World Geography

Hindus of ancient India were far advanced in World History and World Geography.

Their knowledge in World History is seen in the reference to the death of thousands of kings in Kural and Purananuru; also we see seven kings taking the throne on the same day in Purananuru.

Here Vedic reference to sea is repeated.  Hindus knew thousands of rivers pouring water into sea every second and yet the sea coast line is same.

They watched the weather for thousands of years and reported the  wonder, the sun is sucking water from the sea every second; the rivers around the world pouring water into the sea, and yet it never became full and crossed the coast line.

This is in Paripatal verse 20,  Pathitrupathu verse 90 and Maduraikanchi – Line 425.

Unless Hindus pass this information from one generation to another, poets could not have said this.

That shows another fact- passing information by mouth, which we see in Vedic Recitation for 6000 years (Herman Jacobi and B G Tilak’s Dating of Rig Veda)

To be continued……………………………..

Tags- Sex joke, menstruation, Paripatal, Paintings in temple, river and sea, word and meaning, Kalidas simile, Indra as cat, Purananuru wonders-52, Tamil Encyclopedia-92, One Thousand Interesting Facts – Part 92. Item 760.

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 96; இந்து மத கலைச்சொல் அகராதி-96 (Post.16,075)

Written by London Swaminathan

Post No. 16,075

Date uploaded in London – 10 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

எஸ் என்ற ஆங்கில எழுத்தின் கீழ் உள்ள சொற்கள் தொடர்ச்சிEnglish version posted yesterday.

XXX

சரயு

ராமாயணம் மூலம் புகழ்பெற்ற புனித நதி; சரயு நதிக்கரையில் அயோத்தி நகரம் அமைந்துள்ளது ; உத்தரப்பிரதேச யோகிஜி அரசு லட் சக்கணக்கான தீபங்களை ஏற்றி கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் பதிவாகிவருவதால் மேலும் புகழ் கூடி வருகிறது

இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை நதியின் ஏழு உபநதிகளில் சரயு நதி ஒன்று. பெண்களின் பெயராகவும் இன்றுவரை நிலவிவருகிறது ;மகாபாரதத்திலும் பல பருவங்களில் குறிப்பிடப்படுகிறது; பஞ்ச பாண்டவர்கள் தரிசித்த நதி இது . பீஹார் மாநிலத்தில் ரேவல்கஞ்ச் என்னுமிடத்தில் கங்கை நதியுடன் சங்கமிக்கிறது.

***

சங்கரதேவ

சங்கரதேவ (1449-1568 CE), அஸ்ஸாம் மாநிலத்திலும் வடகிழக்கு இந்தியாவிலும் புகழ்பெற்ற ஞானி; சரண நாம தர்மவாஸ் என்னும் வைஷ்ணவ இயக்கத்தை நிறுவினார் ; கிருஷ்ணன் ஒருவனே கடவுள் என்று போதித்தார் ; சகல கலா வல்லுநர்; புதிய இசைப் பாணியை உருவாக்கினார் ; புதிய நடன முறையை உண்டாக்கினார்; ஓவியங்களை வரைந்து இந்துமதத்தைப் பரப்பினார்; இவருடைய ஓவியங்கள் லண்டனில் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் உள்ளன .சமயம் மட்டுமின்றி கலைகளின் கர்த்தாகவும் விளளங்கினார்

 25 ராகங்களைப் படைத்தார். ஏக சரண நாம தர்மா ,  என்பது கிருஷ்ண பக்தியைப் பரப்பி வருகிறது; நாடு முழுதும் பலமுறை யாத்திரை செய்தார் . அஹொம் அரசு பின்பற்றிவந்த மிருக பலியை நிறுத்தி உண்மையான இந்து மதத்தை பின்பற்றுவோராக்கினார் ; இந்தியாவில் இவரைப் போல பன்முக சமயப்பிரசாரகர் வேறு எவருமில்லை.

QUIZ சங்கரதேவ் பத்து QUIZ (Post No.14,334)

Written by London Swaminathan

Post No. 14,334

Date uploaded in London –  1 April 2025

xxxx 

சங்கரதேவ் 1449–1568

1.சங்கரதேவ் எங்கே, எப்போது பிறந்தார் ?

சங்கரதேவ் ஆலிபுகரி என்னும் அஸ்ஸாமிய கிராமத்தில் 1449-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர்- குசும்பர்  சிரோமணி  பூயன் ; தாயின் பெய- சத்தியசந்த்யா

****

2.அவருடைய மனைவி பெயர் என்ன ?

அவர்  ஆம் வயதில் சூர்யபரீயைத் திருமணம் செய்துகொண்டார் . அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள்.

****

3.அவர் போதித்த கொள்கை என்ன?

அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில்  பின்பற்றப்படும் அவருடைய கொள்கை ஏக சரண தர்மம் எனப்படும்; இதன் பொருள் – கிருஷ்ணன் ஒருவரையே சரணம் அடைய வேண்டும் என்பதாகும்.

****

4.அவர் உருவாக்கிய கலைகள் சம்பிரதாயங்கள் என்ன ?

சத்ரியா – நடனக்கலை

சங்கீதம் – போர் கீத்

நாடகம் – அங்கியா நாட், பவோனா

****

5.அவர் என்ன நூல்களை எழுதினார்

பாகவதத்தை அஸ்ஸாமிய மொழியில் எழுதினார்.

சிறு வயதிலேயே செய்யுட்களை எழுதி குரு தேவரை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தினார்;

அவர் எழுதிய நாடகங்கள், செய்யுட்கள் நூல்கள் –

ருக்மிணி ஹரணம்

ராம விஜயம்

கேலி கோபாலன்

காளீய தமனம்

அஜாமிள உபாக்கியானம்

கஜேந்திர பக்திப் ப்ரதீபம்

****

6.வர கீதம் என்பது என்ன?

அஸ்ஸாமிய மொழியில் அவர் பாடிய நாட்டுப் பாடல்கள் வர கீதம் எனப்படும். வர  கீதத்தின், மொழி, லயம், பாவம் சாதாரண மொழியிலிருந்து வேறுபட்டது; நீதிகள் நிறைந்தது; சங்கரதேவர் 249 சுமார் கீதங்கள் இயற்றினார்.

***

7. சங்கராதேவின் குரு யார் ? சங்கரதேவர் செய்த சாதனைகள் என்ன?

குரு– மஹேந்திர கண்டலி.

வெள்ளைப் பெருக்கெடுத்தோடும் பிரம்மபுத்ரா நதியைக் கடந்தது;

ஆசிரியர் சொன்னவுடன் கவி மழை பொழிந்தது ;

படகினை ஓங்கி கைகளால் குத்தி உடைத்தது;

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு தீர்த்த யாத்திரை செய்தது;

புதிய நாட்டிய, நாடக, இலக்கிய உத்திகளை உருவாக்கியது.

****

8.சங்கர தேவரின் சீடர் யார் ?

மாதவ தேவர் என்பவர் முக்கிய சீடர். ஒரு முறை சங்கர தேவரை கமலன் என்ற சிஷ்யன் வீட்டுக்கு அழைத்தான். அப்போது அவனது குடிசை தீப்பற்றி எரியவே சங்கர தேவர் கொண்டு சென்ற வர கீதச் சுவடிகளும் எரிந்து சாம்பலாயின உடனே மாதவ தேவரைப் பார்த்து நீ இயற்று என்றவுடன் அவர் பாடத் துவங்கினார் அந்த வகையில் மேலும் 189 வரகீதங்கள் உருவாயின.

****

9..ராமாயணத்தை அவர் பரப்பியது எப்படி?

ஸ்ரீ ராமனின் பாதங்களில் என் மனம் லயித்துவிட்டது என்ற சிறந்த பாடலை இயற்றினார். ராமாயணத்தையும் அவர் பாடல்களாகப்  பாடினார்.

****

10.அவர் எப்போது இறந்தார் ?

அவர் 120-ஆவது வயதில் பைலாதோவா என்னும் கிராமத்தில் புரட்டாசி மாதம் சுக்கில பட்ச துவிதீயை அன்று அமரர் ஆனார்.

***

சர்ப்ப

ரிக் வேதம் முதல் காணப்படும் இந்தச் சொல்லிலிருந்து சர்பண்ட் SERPENT என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது; நாகம் என்னும் சொல்லிலிருந்து ஸ்நேக் SNAKE (ஸ்னாக்க) என்ற ஆங்கிலச் சொல் உருவானது. ரிக்வேதத்திலும், சிந்துவெளி முத்திரையிலும் சர்ப்ப ராணி இருக்கிறாள். கேரளம் முழுதும் பாம்புகளை வழிபடும் காவுகள்/ கோவில்கள் உள்ளன . கர்நாடகத்தில் குக்கே சுப்ரமண்ய சுவாமி கோவிலில்,  கல்லினால் ஆன, ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளைக் காணலாம் ; தமிழ் நாட்டில் நாகர் சிலை இல்லாத கோவில் இல்லை என்றே சொல்லலாம்; குமரி மாவட்ட நாகர் கோவில், மஹாராஷ்டிரா நாகபுரி, காஷ்மீர் அனந்த  நாக் வரை பாம்பு வழிபாடு உள்ளது. குழந்தை பிறக்காவிடில் பூர்வ ஜென்மத்தில் பாம்புகளைக் கொன்றதால் நாக தோஷம் வந்ததாக கருதுவதால் எங்கும் நாகர் சிலைகள் காணப்படுகிறது ; உயிருள்ள பாம்புகளை வழிபடும் நாக பஞ்சமி பண்டிகை மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

***

சதக்ரது

சதக்ரது(शतक्रतु).— இந்தி ரனின் பெயர் ; நூறு அஸ்வமேத யா கங்களை செய்தவன் என்பது அர்த்தம்; யார் நூறு அஸ்வமேத யாகங்களை செய்த்தாலும் இந்திரன் பதவியை அடையலாம்; ரிக்வேதத்திலேயே சதக்ரது (शतक्रतु)—    என்ற சொல் பயிலப்படுகிறது

***

சதருத்ரிய

 (शतरुद्रीय):—ருத்திரன் என்னும் சிவபெருமானை நூற்றுக்கணக்கான பெயர்களில் போற்றும் நமகம்-சமகம் என்னும் துதி யஜுர்வேதத்தில் உள்ளது ; சத ருத்ரீய என்றால் 100 ருத்திரன் நாமங்கள் என்று பொருள்; சிவன் என்பது சாந்தமான மங்களமயமான உருவம்; ருத்ரன் என்பது அவரே அழிக்கும் தொழிலை எடுப்பதற்கான உருவம் ; இந்த துதியில் சிவனின் நேர்மறையான குணங்களும் எதிர்மறையான குணங்களும் மாறி மாறி வரும் ; கடவுளின் இருவேறு அம்சங்கள் இவை (முன்னர் ருத்ரன் என்ற தலைப்பில் மேல் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன)).

***

சதி

சதி என்பது  பார்வதியின் பெயர்; அவளது தந்தை தட்சன், அவளது கணவன் சிவனை அவமத்தித்ததால் யாகத் தீயில் விழுந்து உயிர்துறந்தாள்;  கணவன் சிதைத் தீயில் ஏறி அவளைப்போலவே உடலைத் தியாகம் செய்யும் பெண்களையும் சதி என்பர்; இந்த முறை புறநானூற்றில் உள்ளது; ஆனால் ரிக் வேதத்திலோ மனு ஸ்ம்ருதியிலோ இல்லை; ராமாயண மஹாபார தப் பெண்மணிகள், கண்வன்  இறந்த பின்னரும் வாழ்ந்ததைக் காண்கிறோம்; ஆகையால் இது கட்டாயமில்லை ; விருப்பட்டவர்கள் அப்படிச் செய்தனர் ஆனால்வங்காளத்தில் சொத்துக்களைப்பெறுவதற்காக பலரைக் கட்டாயப்படுத்தி சிதைத்தீயில் ஏற்றியதால் பிரம்ம சமாஜம் இந்த வழக்கத்தைத் தடை  செய்ய உதவியது .வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள் JOAN OF ARC ஜோன் ஆப் ஆர்க் போன்ற லட்சக்கணக்கான பெண்களை விட்ச் / சூன்யக்காரி என்று சொல்லி தீயில் உயிருடன் எரித்துக் கொன்றனர் ; அந்த அட்டூழியங்களை மறைப்பதற்கு, வெளிநாட்டில், சதி படங்களை வெளியிட்டுக் கிறிஸ்தவப் பிரசாரம் செய்தனர். அதற்கு நிதியும் வசூலித்தனர்.

***

சத்வ குணம்

சத்வம் என்பது முக்குணங்களில் ஒன்று ; பெரியோர்களின், முனிவர்களின் சாந்த குணம் இது ; இதற்கு அடுத்தபடியாக ராஜஸ குணமும் கீழ்மட்டத்தில் தாமச குணமும் வருகிறது .உடலின் , உள்ளத்தின் தூய்மை, மனதின் சமநிலை, மரக் கறி  உணவு, கோபம் இல்லாமை, கருணை   ஆகியவற்றைப் போற்றும் குணம்; இன்பமும் துன்பமும்  ஒன்று ;பொன்னும் ஓடும் ஒன்று என்னும் உயர்ந்த குணம் ; பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா மூன்று குணங்களின் தன்மைகளையும் விரிவாக விளக்கியுள்ளார் ; காண்க – பகவத் கீதை அத்தியாயங்கள் 14; 17. Chapter 14 (verses 5–18) and Chapter 17.

***

சத்யம் சிவம் சுந்தரம் s s s

சத்யம் என்பதைத் தமிழில் வாய்மை , உண்மை, மெய்மை என்று மொழிபெயர்த்துள்ளனர்; சம்ஸ்க்ருதத்தில் இதை மனோ வாக் காயம் என்ற மூண்டிலும் தூய்மை என்பர் ; உலகில் சத்தியத்தை கடவுளாக அவனகக ஒரே மதம் இந்து மதம்; மூன்று ஜாதிக்காரர்களும் வேத பாட சாலையில் நுழைந்தவுடன் ஆசிரியர் கற்பிக்கும் முதல் வரி சத்யம் வத = உண்மையே பேசு ; உபநிஷத ம் முழுதும் சத்யம் போர்ராப்படுகிறது இந்தியாவின் குறிக்கோள் வாசகமே உண்மைதான் ; சத்யமேவ ஜெயதே= வாய்மையே வெல்லும் என்பது இந்தியாவின் தேசீய சின்னத்திலும் தமிழ்நாட்டின் அரசு சின்னத்திலும் உளது . இது முண்டகோபநிஷத் வாசகம்.

சத்யம் சிவம் சுந்தரம் என்பது உபநிஷத உரைகளில்/[பாஷ்யங்களில் போற்றப்படுகிறது ; உண்மை, மங்கள ம் , அழகு என்பது இதன் பொருள் ; இதை ஸ்வேதாஸ்வதர உபநிஷத் சிவனே உண்மை; சிவனே மங்களம் ; சிவனே அழகு என்று விளக்குகிறது

சத்யா சாயிபாபாவின் வாழக்கை வரலாற்றையும் உபநிஷதங்களையும் கூறும்நூலி ன் தலைப்பு- சத்யம் சிவம் சுந்தரம் ; இதனால் இது கோடிக்கணக்காகனோருக்குத் தெரிய வந்தது ; அதற்கு முன்னர் ஆன்மீக நாட்டம் உடையோர் மட்டுமே அறிந்த சொல் இது ; அவர் பஜனைகளில் அவரே சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம்மா என்ற உபநிஷத வாக்கியத்தை பஜனை ஆக்கியதால் கோடிக்கு கணக்கானோரின்  வாய்கள் இதை முணுமுக்கத் துவங்கின. அதுவும் புகழ்பெற்ற உபநிஷத வாக்கியம்

தைத்திரீய உபநிஷத் (2.1.1):  “சத்யம் ஞானம்  அனந்தம் பிரம்மா”— Brahman is Truth, Knowledge, and Infinite.

பிருஹதாரண்யக உபநிஷத் (2.3.6):  “சத்தியஸ்ய சத்யம்”—பிரம்மன்  என்று இறைவனை சத்யம் என்று வழிபடுகிறது

முண்டக உபநிஷத் (3.1.6):  “சத்யம் ஏவ ஜயதே நான்ருதம் “—வாய்மையே வெல்லும் ; பொய்மை வெல்லாது என்கிறது

ரிக் வேதம் முதல், பர்த்ருஹரியின் நீதி சதகம் முதல், வள்ளுவனின் திருக்குறள் வரை பல நூறு பாடல்களில் சத்யம் போற்றப்படுகிறது; இது இந்துக்களின் தனிச் சொத்து; தனிச் சிறப்பு ; பரிபாடல் என்னும் சங்க நூலில் மனைவியிடம் கணவன் எப்படியெல்லாம் சத்தியம் செய் கிறான் என்ற பட்டியலே உள்ளது.

***

ஷ்யமந்தக

சியமந்தக வைரத்தின் நீண்ட கதை பாகவதத்தில் உள்ளது ; டைமண்ட் DIAMON என்ற சொல்லே ஷ்யமந்தக என்பதிலிருந்து வந்தது என்று என்னுடைய ஆராய்ச்சி காட்டுகிறது ; கெட்ட ஜாதி வைரம் வந்தால் அந்தக் குடும்பத்தில் கொலை, கொள்ளை , திருட்டு, அநீதி நடக்கும் என்பதை பாகவத புராணம் அழகாக விளக்குகிறது; கிருஷ்ணன் கூட இதன் தாக்கத்திலிருந்து தப்ப முடியாததால் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்ற பழமொழிக்கேற்ப இதைத் துறந்துவிட்டார்; ஐரோப்பா முழுதும் கொலைகளைச் செய்த இந்த வைரம் இப்போது ஹோப் டயமண்ட் HOPE DIAMOND என்ற பெயரில் அமெரிக்காவில் மியூஸியத்தில் உள்ளது.

வஜ்ரம் என்ற சொல்லும் சம்ஸ்க்ருத மொழியில் வைரத்தைக்குறிக்கும் ; தமிழ்ச் சொல் வைரம், வஜ்ரத்தின் திரிபே.

ஸ்யமந்த = டயமண்ட ஆன மொழியியலை ஆங்கிலத்தில் விளக்கியுள்ளேன்

S=T interchangeability is seen in hundreds of English words that we use everyday

Some examples :

condition, education, ambition- in hundreds of words with TION, the pronunciation is SION.

So Syamantaka + Tiamanthaka= DIAMOND is linguistically possible.

சியமந்தக வைரத்தின் கதை

கொலவெறி வைரம்!!!!!

(தமிழ்நாட்டில் பல குடும்பங்களில், குறிப்பாக பிராமண மற்றும் செட்டியார் குடும்பங்களில் வைரம் வாங்குவதற்கு முன் அதை வீட்ல் சில நாள் வைத்து நல்ல செய்திகள் வருமா என்று பார்த்தே வாங்குவார்கள். ஏனெனில் சில வைரங்களில் குறைகள் இருக்கும். இதோ, கிருஷ்ண பரமாத்மாவை படாத பாடு படுத்திய வைரம் பற்றிப் படியுங்கள்)

வைரங்கள் பெண்களின் சிறந்த நண்பர்கள் என்று ஆங்கிலத்தில் சொல்லுவதுண்டு. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் கட்டாயம் கடவுளுக்கும் வைரத்துக்கும் ரொம்ப தூரம்!! சியமந்தக மணி எனப்படும் வைரம் கண்ண பிரான் காலத்தில் இருந்தது. அது யாதவ குலத்தில் மூன்று கொலைகளுக்கும் பல சண்டைகளுக்கும் காரணமாகிவிட்டது பின்னர் இது பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கும் பல சாவுகளுக்கும் சண்டைகளுக்கும் வித்திட்டது. இதை இப்போது வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் மியூசியத்தில் பார்க்கலாம். ஆனால் அவர்களுக்கே இது கண்ணனின் வைரம் என்று தெரியாது

சத்ரஜித் என்பவர் ஒரு யாதவர் தலைவர். அவர் சூரிய தேவனை வழிபடுவார். ஒரு நாள் சூரிய தேவனே அவருக்கு ஒரு பெரிய வைரத்தைக் கொடுத்தார். (அதாவது அவர் கோவிலுக்குச் சென்றபோது அது பூமியிலிருந்து கிடைத்தது.) அது பள பள என்று ஜொலித்தவுடன் கிருஷ்ணருக்கும் கூட பொறுக்கவிலை. அதை உக்ரசேனன் என்பவனிடம் கொடு என்றார். ஆனால் சத்ரஜித் அதற்கு மறுத்துவிட்டார்.

சத்ரஜித் அவருடைய தம்பி ப்ரசேனன் என்பவரிடம் கொடுத்துவைத்தார். அவன் அதை எடுத்துக் கொண்டு வேட்டை ஆடப்போனான். அவனை ஒரு சிங்கம் அடித்துக் கொன்றது. இந்த வைரத்தை கரடி இனத் தலைவர் ஜாம்பவான் எடுத்துச் சென்றார். முன் காலத்தில் மக்கள் தங்களை அடையாளம் கூற ஒரு பறவை அல்லது மிருகம் பெயரைச் சொல்லுவார்கள். ஜம்பவான் கரடி இனம் எனப்படும்  மலை ஜாதி இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பிள்ளைகள் அந்த வைரத்தை வைத்து விளையாடத் துவங்கினர்.

எல்லோரும் கண்ண பிரானைச் சந்தேகப் பட்டனர். உடனே அவர்ப்ரசேனனைத் தேடிச் சென்றார். காட்டில் அவனது சடலத்தையும் மற்ற அடிச் சுவடுகளையும் கண்டு அதைப் பின்பற்றினான். ஒரு மாதம் சண்டை போட்ட பின்னர் ஜாம்பவானுடன் ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. அவருடைய பெண் ஜாம்பவதியைக் கல்யாணம் செய்து கொண்டால் சியமந்தக மணியைத் திருப்பித் தருவதாகச் சொன்னார். கண்ணனுக்கு அடித்தது யோகம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரு பெண்+ ஒரு வைரம்!!

துவாரகைக்குத் திரும்பிவந்தார். வைரத்தை சத்ரஜித்திடமே திருப்பித் தந்தார். அவருக்கு ஏக சந்தோஷம். அவருடைய பெண் சத்யபாமாவையும் கண்ணனுக்கு மணம் முடித்தார். சியமந்தக வைரத்தால் இரண்டு பெண்கள் லாபம் !! இந்த நேரத்தில் ஹஸ்தினாபுரத்திலிருந்து எஸ்.ஓ.எஸ். (அவசர உதவி தேவை என்று) செய்தி வந்தது. பாண்டவர்கள் அனைவரும் அரக்கு மாளிகை தீ விபத்தில் இறந்துவிட்டதாக வந்தது செய்தி. அங்கே சென்றால் எல்லோரும் சுபம்.

இதற்குள் சத்ரஜித் வீட்டில் சததன்வா என்பவன் புகுந்து சத்ரஜித்தைக் கொன்றான். வைரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். சத்யபாமாவுக்கு ஒரே துக்கம். துவாரகைக்குத் திரும்பி வந்த கண்ணனிடம் கதறி அழுதாள். கண்ணனும் பலராமனும் சததன்வாவைத் தேடினர். அவன் பீஹாருக்கு ஓடிவிட்டான். குஜராத்திலிருந்து ஆயிரம் மைல் துரத்திச் சென்று அவனைக் கண்ணன் கொன்றான். பின்னர்தான் தெரிந்தது. அதை அவன் அக்ரூரன் என்பவனிடம் கொடுத்து வைத்தான் என்பது. கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பி வருவதற்குள் அவன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிக்கு ஓடிவிட்டான். ஆட்களை அனுப்பி அவனை கண்ணன் அழைத்து வந்தார். மீண்டும் ஒரு சமரச ஒப்பந்தம். அக்ரூரனே அதை வைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் துவாரகையை விட்டு வெளியே போகக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். இதற்குப் பின் அந்த வைரத்தின் கதை தெரியவில்லை.

ஹோப் வைரம்

சியமந்தக மணியை ஒரு கோவில் அம்மனின்  நெற்றியில் பதித்து வைத்தனர். அதைத் திருடிய அர்ச்சகருக்கு மரண தண்டனை கிடைத்தது. அதைத் திருட்டுத்தனமாக வாங்கிய பிரெஞ்சுக்காரர் ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர் வெறி நாய்கள் கடித்து இறந்தார். இதற்கு ஹோப் வைரம் என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டது!

இந்தியாவிலிருந்து பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா சென்ற ஹோப் வைரம் இதே போல படுகொலைகள், வழக்கு வாய்தாக்கள், சண்டை சச்சரவுகள், கடன் திவாலாக்கள் எல்லாவற்றையும் உண்டாக்கியது. மேலும் ஹோப் வைரம் புற ஊதா கதிர்களில் தக தக என்று சிவப்பாக ஜொலிக்கிறது. இதைத்தான் பாகவதமும் சூரியன் போல ஜொலித்த வைரம் என்று சியமந்தக மணி பற்றியும் கூறுகிறது. பலரும் அதை மாணிக்கம் என்று நம்பினர். ஆனால் அது வைர வகைகளில் ஒரு அபூர்வ வைரம். இப்போது அது அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் ஸ்மித்சோனியம் மியூசியத்தில் உள்ளது.

இது மனிதர் கையில் இருந்தால் பல துரதிருஷ்டங்கள் ஏற்படுவதால் கடைசியாக இதை வைத்திருந்த வாட்சன் என்பவரிடமிருந்து இதை அந்த மியூசியத்துக்கு நன்கொடையாக வாங்கிவிட்டனர். அவரும் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவருக்கு முன் ஹோப் என்பவர் வைத்திருந்ததால் இதற்கு ஹோப் வைரம் என்று பெயர். உண்மையில் இது ஹோப்லெஸ் (அவ நம்பிக்கை) வைரம்!!!

முதலில் இது லாம்பெல் இளவரசி கைக்குப் போனது. அவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. அதன் பின்னர் ஜாக்ஸ் செலோட் என்பவர் கைக்குப் போனது. அவர் புத்தி சுவாதினம் இழந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பின்னர் ரஷிய இளவரசர் கனிடொவ்ஸ்கியை அடந்தது. அவர் தனது காதலிக்குக் கொடுத்துவிட்டு பின்னர் அவளை கொலையும் செய்தார். பிறகுதான் ஹென்ரி தாமஸ் ஹோப் வாங்கினார்.

பிரெஞ்சுப் புரட்சியில் லூயி மன்னரையும் அவருடைய மனைவி மேரி அன்டாய்னெட்டையும் கில்லட்டின் எந்திரத்தில் வைத்து பகிரங்கமாக கொடூரமாகக் கொன்றதைப் படித்திருப்பீர்கள். அப்போது இந்த ஹோப் வைரம் (கண்ண பிரானின் சியமந்தகம்) அவர்கள் கையில் இருந்த்தது. உலக வரலாற்றில் ஒரு மன்னரும் ராணியும் இவ்வளவு பரிதாபமாக இறந்தது கிடையாது. அதற்குப் பின் வேறு ஒருவர் கைக்குப் போய் அவர்கள் குடும்பத்தில் பெரிய சண்டை ஏற்பட்டு பல ஆண்டுகள் வழக்கு நடந்தது. இதை வாங்கிய ஒருவர் பணம் எல்லாம் இழந்து திவால் ஆனார்.

To be continued……………………

Tags- சரயு, சங்கரதேவ, சதி, சதரூன்றிய, சத்யம், சியமந்தக, டைமண்ட், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 96; இந்து மத கலைச்சொல் அகராதி-96 ,சியமந்தகம், ஹோப் வைரம்

Tamils Rewrite History: Purananuru wonders-48, Tamil Encyclopedia-88 (Post.16,055)

Written by London Swaminathan

Post No. 16,055

Date uploaded in London – 5 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Paripatal wonders

Purananuru wonders-48, Tamil Encyclopedia-88, One Thousand Interesting Facts -Part 88

Item 714 Poems on River and Hindu Gods

Tamils are nature lovers; they composed 26 long poems on River Vaigai of Madurai.

No where in the world we see such group of poems in one book, that too 2000 year old.

Paripatal – paripaatal- is one of the eight anthologies of Sangam literature. Like Sama Veda in Vedic literature this is the only anthology dealing with Tamil music. Out of the 70 poems we have got only 24 poems in full and nine more in fragments.

In the olden days we had

Eight poems on lord Vishnu

Thirty one poems on lord Murugan/ Skanda

One poem on Goddess Durga

Twenty six on river Vaigai and

Four on Madurai city.

***

Item 715 Poets Names in Sanskrit

Another wonder is Paripatal genre has pome running up to 400 lines.

Some half baked people considered it as late production because lot of poems are in praise of Hindu Gods.; they are proved wrong because Maruthan Ilanagan of Purananuru  praised Paripatal poet Nallanthuvanar (in Akam.59) which shows Nallanthuvan  was his contemporary or an earlier poet.

This book is about Pandya country. That is another specialty; all other Sangam books deal with the entire Tamil  Nadu.

We have at least 13 poets giving us 2050 lines.

Interesting point is poets have names like KESAVA and ACHYUTHA; and in Purananuru we have DAMODARA, KANNAN/Krishnan, VALMIKI etc.

It shows that there was no taboo in using Sanskrit names.

Another wonder is poets with Vaishnavite names praised Saivite gods.

***

Item 716 Balarama

In the modern days Krishna’s brother Balarama is not worshiped in big temples; but during Sangam age he was praised along with Krishna  his skin colour, his flag, plough on his shoulder, wearing ear stud in only one ear etc are described by poet  in the first poem.

This shows that Sangam age Tamils were great Hindus who have mastered all Sanskrit texts.

***

Item 717 — 1000 headed snake

If we go to Vishnu temples we can see five headed, seven headed and many headed snakes as the bed of Vishnu. We know all these are symbolic; but thuis is sung by Sangam age poets ; see poem 1.

We come across five headed snake even in Purananuru verse 37. That is the symbol of five senses.

***

Item 718 — seven types of catastrophes.

Paripatal poem two has very interesting information about seven types of catastrophes.

They believed that the apocalypse will have destructions from sky, fire, sea, earth quakes etc

***

Item 719 Vishnu avataras

Verse three described Avataras of Vishnu such as Annam/swan, Varaham/boar, Krishna .

Five planets are mentioned; 33 gods are listed.

Upanishad is also mentioned.

Four colours are attributed to Vasudeva, Sankarshana, Pradyumna and Aniruddha

***

Item 720

Paripatal poem 4, adds Narasimha avatar compared the sun, moon sky earth, wind rain, flower etc to Vishnu.

One would be reminded of Vibhuti yoga of Bhagavad Gita.

***

Item 721 puranic stories

Great tamil scholar U Ve Sa has listed the puranic episodes mentioned in Paripatal, which shows Tamils were thorough with Hindu puranas 2000 years ago.

Following are some of the episodes,

Ahalya becoming stone;

Devas getting Amrit;

Demons jumped and hid themselves in sea;

Vishnu becoming swan and stopping rain;

Indra guarding the Himalayas;

Indra being cursed;

Siva burning tri pura’ three hanging space stations;

Urvasi becoming horse;

Churning the milky ocean;

Garuda recuing Vinata;

Vishnu controlling arrogant Garuda;

Birth of divine medicine men;

Brahma sending Ganges river to earth.

***

Item 722 forty types of ornaments

Tamil scholar U Ve Sa listed over forty ornaments worn by Sangam age Tamils as found in Paripatal.

They were worn from head to foot.

All the statues from second century BCE show them to us; so it is not in exaggeration. No where in the world we see such head to foot ornaments.

***

Item 723 Rewrite History

Half baked foreign scholars (???) took the latest addition or interpolation from ancient Hindu books and gave the wrong dates.

They dated all Puranas in Gupta period or later.

Sangam Tamil Books exposed those idiots; all the Purana stories about Lord Vishnu, Lord Siva and Lord Skanda are in 2000 year old Sangam Tamil poems.

  Kumaragupta I (c. 415–455 CE): Preserved peace and founded Nalanda University.

  Skandagupta (c. 455–467 CE): Repelled early invasions by the Hunas (White Huns), straining imperial resources.

Kumara and Skanda for Lord Murugan is in Kalidasa’s books Meghaduta, Raghuvamsam and Kumarasambhavam.

Both these naes for Lord Muruga are in Paripatal and Tirumurugatruppadai, two Sangam books on Hindu Gods.

Gupta , who were Vishnu worshippers named their children after Lord Muruga/Skanda.

Even Asvaghosha stole Kalidasa’s names and compared Skanda with Buddha!!!!!!!

All the Sangam poems on Muruga/Skanda show Kalidasa lived before Sangam Age and influenced Gupta Dynasty, Asvaghosa and Sangam Poets.

Sangam Poems and Kalidasa works made two great Gupta Kings.

If we believe foreign idiots , then we will have to date all Sangam poems after Gupta period.

Sangam Age Tamils were well versed in all Puranic stories.

Yaudheya kings issued punch marked coins with Six Headed Muruga! Kalidasa and Sangam poems mentioned Six Headed Skanda=Muruga

***

Item 724

Murugan=Skanda names in Tamil:

Seyon – red coloured – in Tolkappiyam.

Son of Siva – pari. 9-6/7;

Red coloured like sun, six heads- Tirumurugu. Lines 1-11 and 77-125;

Looking like fire and coral – Pari.19-97/100;

His pearl garland looked liked the v shaped flight of migratory birds – Akam120;

Lord Muruga = Skanda had an elephant named Pinimukham as vahana – Kuru.1; Puram-56; Pathitr.11-16;

Pari .5-2, 17-44, 21-1; Murugu.78-82.

Peacock as his vahana is in many places.

His weapon Vel= spear is in innumerable poems.

All these are in Skaandam in Sanskrit Kandapuranam in tamil.

So purana dating is wrong.

***

Item 725 destroying demons

Kumarasambhava of Kalidasa made it very clear that incarnation of Muruga appeared to destroy demons.

They are called Tarakasura, Surapadma etc.

Again it is in a number of poems- Kuru.1;  Murugu.59-60; Pari.1-25; 5-7;

Puram. 23-3; Pathit-11-56; Perumpa- 456-460; many poems in Kalittokai.

***

Item 726 breaking Krauncha hill

Krauncha is the migratory bird that uses a Himalayan pass to enter India from China and Russia.

This Himalayan pass is linked with lord Murugan= Skanda in tamil and Sanskrit.

This also proves foreigners dating of Kalidasa and puranas wrong.

Breaking open Krauncha / Kuruku in tamil – Murugu.266; pari.8-29, 19-26, 19-102/103.

Geologists to do more research to find out whether any earth quake caused it. Tamil and Sanskrit literature shows clearly Muruga= Skanda did this with his vel/spear.

***

Item 727 Jambhudwipa in Tamil

Brahmins use the Jambhudwipa geography very often in their Sankalpa and priests use it almost every day whenever, wherever they do puja or any religious ceremonies.

Hindus are great historians and geographers and so they always begin any ceremony by announcing where and when they do it.

No culture in the world had this custom.

The great land mass of asia is called Jambhudwipa. Jambhu is the name of the blackberry trees of India. In tamil it is called naaval.

And so Tamils called india Naavalam  Tivu.

It is in Paripatal 5-8/10.

This shows that tamil never lacked behind their counterparts in the north.

Following references are found in Tamil about the tree and the Land of Jhambu tress (Jambudwipa): Paripatal 5-8,9 ,Puram 397, 177-11 ,Perum 465 ,Malai 135, Akam 380, Narr 35-2, Thiru 18, Post Sangam Literature: Mani 25—2—12/16, Silambu 17-15

KALIDAS: Megha 19 talks about the Jambu forests. Ragu 18—44 refers to Jhambu land.

Later Tamil poets such as Appar  (in marmaatrah thiruth thandakam) use this more times in their poems.

To be continued……………………

Tags– Jambhudwipa, Krauncha Hill, Muruga, Skanda, Kumara Gupta, Skanda Gupta, Date of Puranas, of Kalidasa, Paripatal wonders, Tamils Rewrite History: Purananuru wonders-48, Tamil Encyclopedia-88 , Item 727