லண்டனில் எதற்காக தமிழ் படிக்க வேண்டும்? (Post No.5006)

லண்டனில் எதற்காக தமிழ் படிக்க வேண்டும்? (Post No.5006)

 

Written by London Swaminathan 

 

Date: 13 May 2018

 

Time uploaded in London – 14-21 (British Summer Time)

 

Post No. 5006

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

லண்டன் க்ரோய்டன் தமிழ்க் கழக (பள்ளி) மூன்றாவது ஆண்டு விழாவில் (Croydon Tamil Kazakam) பேசுவதற்கு என்னை நேற்று (May12, 2018) அழைத்திருந்தார்கள். நானும் க்ரோய்டன் டெபுடி மேயர் மைக்கேல் செல்வநாயகமும்,  க்ரோய்டன் எம். பி. சாரா ஜோன்ஸுல் (Sara Jones, M. P.) பேசினோம். எங்களுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். நினைவுப் பரிசுகளும் அளித்தனர்.

Shawl to london swaminathan

நான் ஆற்றிய உரையின் சுருக்கம்

 

(முதலில் தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்களை வைத்து— அ, க,

ஆ, பை, கை, மை, வை, வா, போ, தீ, பூ– ஒரு விளையாட்டு விளையாடினேன். தமிழை சுவைபடக் கற்பிக்க   இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு. இது போல தினமும் மாணவர்களுக்கு விளையாட்டு, விடுகதை முதலியன சொல்லி சுவையுடன் வகுப்பை நடத்துங்கள்;  மாணவர்களை ஈடுபடுத்தும் இன்டெர் ஆக்டிவ் கேம்ஸ் (Inter Active Games) இருந்தால் ஆர்வத்துடன் தமிழ் படிப்பார்கள் என்றேன்.

 

பின்னர் சொற்பொழிவைத் துவக்கினேன்:-

எல்லோருக்கும் முதற்கண் வணக்கம்.

நான் ஈராண்டுகளுக்கு முன்னர் உங்கள் ஆண்டு விழாவுக்கு வந்தபொழுது 40 மாணவர்கள் இருந்தனர். இன்று அது எண்பது மாணவர்களாக உயர்ந்து விட்டது என்பதைக் கேட்டு மகிழ்ந்தேன்.

 

ஒவ்வொரு முறையும் எல்லோரும் தமிழ் கற்கச் சொல்லும் காரணங்கள்:–

தமிழ் பழைய மொழி, வளமான மொழி, தாய் மொழி, இனிமையான மொழி என்றெல்லாம் சொல்லுவர். நான் இன்று உங்களுக்கு- இங்குள்ள பெரியோர்களுக்கும்தான்.      — ஒரு புதிய காரணத்தையும் சொல்கிறேன்.

லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரி என்னும் (British Library) பழைய நூலகம் உள்ளது. 20,000 க்கும் அதிகமான நூற்றாண்டுக்கும் முந்தைய பழைய — தமிழ்ப் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். இது அதிசயமான விஷயம். இவைகளைப் படிக்க- பயன்படுத்த, கட்டணம் ஏதுமில்லை; நீங்கள் முகவரியுடன் கூடிய 2 யுடிலிட்டி பில்கள் (two utility bills) , கையெழுத்துடைய ஒரு பாஸ்போர்ட் அல்லது டிரைவிங் லைசென்ஸுடன் போனால் ஐந்து ஆண்டுகளுக்கு இலவச பாஸ் பெறலாம். நான் மூன்றாண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி சென்று புஸ்தகங்களை விளம்பரப்படுத்தி வருகிறேன்.

 

‘300 ராமாயணங்கள்’– என்று ஒருவர் புஸ்தகம் எழுதினார். ஆனால் பழைய புஸ்தகங்களைப் பார்த்தபோது அது தவறு; 3000 ராமாயணங்கள் இருக்கும் என்று தெரியவந்தது. எவ்வளவு கவிதைகள், நூல்கள், நாடகங்கள் – ராமாயணத்தை வைத்தே! அது மட்டுமல்ல; ஏரளமான பெண்கள் 100 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நூல்களை   எழுதியுள்ளனர் . அவர்கள் பெயர்களை நாம் கேட்டதே இல்லை. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மொழி பெயர்த்துள்ளனர். இது தவிர, ஏராளமான தமிழ்  நாடகங்கள் உள்ளன.

 

இவைகளை எல்லாம் யாருக்காக சேமித்து வைத்தனர்? எழுதியோரும் இவைகளை எல்லாம் யாருக்காக எழுதினர்? பல புஸ்தகங்களைக் கைகளில் எடுத்தால் அவைகள் உளுத்துப்போன நிலையில் உதிர்ந்தே போகின்றன. இவைகளைப்  படிக்கவாவது நாம் தமிழ் கற்க வேண்டும்’

 

 

 

தமிழால் இணைவோம்

சமீப காலமாக  ஒரு வாசகம் பிரபலமாகி வருகிறது – ‘தமிழால் இணைவோம்’ — அதன் பின்னாலுள்ள அரசியலை மறந்து விட்டு வாசகத்தை மட்டும் கவனியுங்கள். தமிழுக்கு அபாரமான இணக்கும் சக்தி இருக்கிறது. நான் பத்து நிமிட சொற்பொழிவுக்காகவா (மூன்று + மூன்று) ஆறு மணி நேரப் பயணத்தை இன்று செய்கிறேன்; இல்லை. தமிழ் என்று சொன்னவுடன் நாம் ஆர்வம் அடைந்து சிரமத்தைப் பார்க்காமல் வருகிறோம். ஜல்லிக்கட்டு போன்ற கிளர்ச்சிகளின் போது தமிழர்கள் ஒன்றுபட்டதைக் கண்டோம்.

 

தமிழில் இன்னும் என்ன செய்ய வேண்டும்?

 

‘தமிழ் வாழ்க’ என்று கோஷம் போடுகிறோம். தமிழில் எல்லாம் உளது என்கிறோம். ஆனால் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டியுள்ளது. பாரதியார் பாடல் போன்ற பல நூல்களுக்கு இன்டெக்ஸ் (INDEX) தேவைப்படுகிறது.

 

பாரதியார் ‘காக’த்தைப் பற்றி எங்கெல்லாம் பாடி இருக்கிறார் என்றால் அதைக் கண்டுபிடிக்க, நமக்கு நேரம் பிடிக்கிறது;

அவர் ‘காக்கைச் சிறகினிலே நந்த லாலா’, என்றும் ‘எத்தித் திருடும் அந்தக் காக்கை’ என்றும், ‘காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்றும் பல இடங்களில் பாடுகிறார். ஒரு இண்டெக்ஸ் இருக்குமானால் இது போன்ற விஷயங்களை விரைவில் கண்டு பிடிக்கலாம்.

 

இது போலத் தமிழ்ப் பழமொழிகள்  தொகுப்பு. நூறு ஆண்டுகளுக்கு முன் மதத்தைப் பரப்ப வந்த மூன்று வெள்ளையர் 20, 000 பழமொழிகளைத் தொகுத்து புஸ்தகங்களாக வெளியிட்டனர். ஆனால் இன்னும் 10, 000 பழமொழிகளாவது தொகுக்கப்படாமல் உள்ளன.

 

அவைகளை எல்லாம் ஸப்ஜெக்ட் (Subject wise) வாரியாக ‘ஆல்பபெட்’ வாரியாக (alphabetical order) வகைப்படுத்த வேண்டும்.

ஆங்கிலத்தில் நான்சென்ஸ் ரைம்ஸ் (Nonsense Rhymes ) உள்ளது போல தமிழில் நிறைய உள்ளன.

சூரியன் தங்கச்சி

சுந்தர வள்ளிச்சி

நாளைக் கல்யாணம்

மேளக் கச்சேரி

ஈக்கையாம் பிரண்டையாம்

ஈயக்காப்பு திரண்டையாம்

…………

 

இது போன்ற பல பொருளற்ற பாடல்களைத் தொகுக்க வேண்டும்.

 

இதோ பாருங்கள் சென்னையில் இருந்து வெளிவரும் கிரியா (creA) தமிழ் அகராதி. உங்கள் தமிழ் பள்ளிக்குக் கொடுப்பதாற்காக கொண்டு வந்துள்ளேன். இதில் பல புதிய தமிழ் சொற்களையும் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் வழக்குகளையும் காணலாம். இது போல ஆக்கபூர்வமான பணிகள் நிறைய உள்ளன. தமிழ் கற்கும் நாம் இவற்றைப் பிற்கால சந்ததியனருக்காக update ‘அப்டேட்’ செய்யலாம். புதிய சொற்களைச் சேர்க்க உதவலாம்.

எனக்குக் கொடுக்கப்பட்ட நேரம் பத்தே நிமிடங்கள் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.

 

என்னை இங்கு அழைத்தமைக்கு அனைவருக்கும் நன்றி; வணக்கம்.

 

(( நான் எழுதிச்சென்ற குறிப்புகளில் இருந்தும், நேரம் போதாமையால் சொல்லாமல் விட்ட விஷயம்:

Member of Parliament Sarah Jones addressing the gathering

பழந்தமிழ் புத்தகங்களும் புதிய அகராதிகளும் தேவையா? எல்லாம் கூகிள் GOOGLE  செய்தால் கிடைக்குமே என்று பல நண்பர்கள் என்னிடம் சொல்கிறார்கள்.அது ஓரளவே உண்மை. நான் காயத்ரீ மந்திரத்தைத் தேடி ‘காயத்ரி’ என்று போட்டால் கடவுளுக்குப் பதிலாக ஒரு அரை நிர்வாணப் பெண் படம் தான் வருகிறது; அவள் பெயர் காயத்ரீயாம்! ‘மந்தரா’ என்று போட்டாலுமொரு நடிகையின் படம் வருகிறது. அவள் ஒரு நடிகையாம்! ஆக, சரியான ‘ஸ்பெல்லிங்’ போடாவிட்டால் கூகிள் google விபத்தில் முடியும். மேலும் தமிழில் 10,000 பிளாக்குகள் இருக்கின்றன. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல பேனா கிடைத்தவன் எல்லாம் எழுதத் துவங்கி விட்டான்; தமிழ் தட்டச்சு தெரிந்தவன் எல்லாம் பிளாக் BLOG கட்டுரை எழுதுகிறான். அதில் எது சரி, எது தவறு என்பதை விஷயம் அறிந்தவரே வேறுபடுத்த இயலும். நிறைய தவறுகள் — சொற் குற்றம், பொருட் குற்றம், எழுத்துப் பிழைகள்— மலிந்துள்ளன. சில காலம் அதை மட்டுமே படித்தால் நாமும் ‘தமிழ்க் கொலை’யில் பங்கு கொண்ட பாவம் வந்து சேரும்.

london swaminathan speaking; Deputy Mayor of Croydon Michael Selvanayakam standing behind.

ஆகவே, முறையாகத்  தமிழ் பயில, ஆசிரியரைக் கலந்தாலோசிக்க இத்தகைய பள்ளிகள் தேவை)

 

–சுபம்–

தாய்லாந்தில் வேஷ்டி கட்டும் தமிழ் பிராஹ்மணர்கள்! (Post No.5003)

Written by London Swaminathan 

 

Date: 12 May 2018

 

Time uploaded in London – 8-43 am (British Summer Time)

 

Post No. 5003

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

தாய்லாந்தில் தமிழ் என்றே தெரியாமல், கோவிலில் ‘டிருவெம்பாவை’ (திருவெம்பாவை, மாணிக்கவாசகர்) ஓதிய கதையை தெ.பொ.மீ. போன்ற அறிஞர்கள் அந்தக் காலத்திலேயே எழுதிவிட்டனர். ஆனால் ஸத்ய வ்ரத சாஸ்திரி (1982) எழுதிய தாய்லாந்து பற்றிய ஆங்கில நூலில் மேலும் பல சுவையான செய்திகளைத் தருகிறார்.

 

தாய்லாந்து இப்பொழுது புத்தமத நாடு. ஆனாலும் இந்துமதத்தின் தாக்கத்தையும் ஸம்ஸ்க்ருதத்தின் செல்வாக்கையும் பண்பாட்டிலும் மொழியிலும் காண முடிகிறது. பல இந்துக் கோவில்களும் உள.

 

இங்கே பிராஹ்மணர்கள் வசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ‘’தாய்’’ (THAI LANGUAGE) மொழி மட்டுமே பேசுகின்றனர். நடை, உடை, பாவனையில், ஏனைய மக்களிடமிருந்து வேறு பட்டவர்கள். தூய வெள்ளை ஆடை மட்டுமே உடுத்துவர்; வேஷ்டி அணிகின்றனர். காலில் ஷூ, ஸாக்ஸ் அணிந்தாலும் அவையும் வெண்மையே.

 

ஆயிரக்கணக்கில் பிராமணர்கள் இருந்தும் தீக்ஷை எடுத்தவர்களை மட்டுமே பிராஹ்மணர் என்று சொல்லுவர். இப்படிப் பார்த்தால் ஐம்பது, அறுபது பேர் மட்டுமே பிராஹ்மணர். இந்த தீட்சையை வழங்குபவர் ராஜ குரு. அவர் இல்லாவிடில் ஹுவன் ப்ராம் (சுவர்ண பிராஹ்மண) இந்தப் பட்டத்தை வழங்குவார்.

 

ராஜ குரு என்பவரும் பிராஹ்மணரே; அவரை மற்றவர்களைக் கலந்தாலோசித்து மன்னர் தேர்ந்தெடுப்பார்.

மன்னர் கொடுக்கும் மான்யத்தொகை மிக மிகக் குறைவு என்பதால் ஏனைய பூஜைகள் மூலம் அவர்கள் தட்சிணை வாங்கிப் பிழைக்கிறார்கள்.21 வயத்துக்கு மேலுள்ள எந்தப் பிராஹ்மணனும் இதற்குத் தகுதி உடையவரே.

‘ட் ரி யம் பாவ்ய’, ‘ட் ரி ப் பாவ்ய’

 

1982 ஆம் ஆண்டு வெளியான இந்த நூலில் சாஸ்திரி மேலும் கூறுகிறார். ராஜ குரு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் ‘ட் ரி யம் பாவ்ய’, ‘ட் ரி ப் பாவ்ய’ விழா நடத்த வேண்டும். இவை தமிழில் உள்ள திருவெம்பாவை, திருப்பாவை என்பன ஆகும்.

முதலாவது விழாவில் சிவ பெருமானை மூன்று கட்டங்களில் வழிபடுவர். முதலில் இறைவனை ஆவாஹனம் செய்து, பின்னர் ஊஞ்சலில் எழுந்ததருளிச் செய்து, புனித நீரால் அபிஷேகம் செய்து, சாதம் முதலிய பிரஸாதங்களைப் படைப்பர். பின்னர் கடவுளை வழி அனுப்புவர். இது பத்து நாட்கள் நடைபெறும் விழா.

 

இதே காலத்தில் புதிய பிராஹ்மணர்களுக்கும் தீக்ஷை வழங்கப்படும். அவர்கள் ‘பூ சுத்தி’, ‘பூத சுத்தி’ செய்துவிட்டுக் கோவிலிலேயே தரையில் படுத்து உறங்குவர். மரக்கறி உணவை மட்டுமே உண்ணுவர். இந்த விரதம் டிசம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை நடக்கும். யார் யார் பிராமணர் பட்டம் பெற விரும்புகிறாரோ அவரவர்களுக்கு ராஜ குரு தீட்சை தருவார். தினமும் கணேசர், உமை, சிவன் வழிபாடு மாலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெறும்.

 

சிவபெருமான் இந்தப் பத்து நாட்களுக்குப் பூமிக்கு வருவதாகச் சொல்லி, திருவெம்பாவை படிப்பர். நவக்ரக வழிபாட்டுடன் பூஜைகள் துவங்கும். இரவு நேரத்தில் திருவீதி உலா நடக்கும். மக்கள் புத்தாடை அணிந்து வீடுகளை அலங்கரிப்பர்.

 

ஊஞ்சல் திருவிழாவும் உண்டு. இறைவனை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவர். இரண்டு தூண்களுக்கு இடையே ஒரு குவளையில் தண்ணீர் வைப்பர். இதுதான் சமுத்திரம்/கடல்.

இதுபற்றிய கதை ஒன்றும் சொல்லுவர். சிவ பெருமான் தன்னுடைய ஒரு காலால் பூமியை அமுக்கி நிலைபெறச் செய்தார். ஆயினும் அது வலிமையுடையதா என்று ஐயப்பாடு எழுந்தது. உடனே நாக தேவதைகளை அழைத்து பூதளத்தை அசைக்கச் சொன்னார். அப்போதும் அசையவில்லை. உடனே இறைவனுக்கு மட்டில்லா மகிழ்ச்சி. ஊஞ்சல் கட்டிய இரண்டு தூண்கள் இரண்டு மலைகள் ஆகும்; நடுவில் குவளையில் வைக்கப்பட்ட நீர் கடல் ஆகும். இவை எல்லாம் இறைவன் கருணையால் எல்லை தாண்டாமல் ஒழுங்காக இருக்கின்றன என்பதைக் காட்டுவதே இதன் தாத்பர்யம்.

 

இதே போல நாராயணணின் புகழ்பாட ‘ட் ரி ப் பாவ்ய’ (திருப்பாவை) விழா நடக்கும் சிவன் சென்றவுடன் நாராயணன் பூமிக்கு வந்ததாக ஐதீகம். இவ்வறு விழா நடத்திய பின்னர் பிராஹ்மணர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தங்கள் கைகளாலேயே மொட்டை அடிப்பர் அல்லது முடி இறக்கி குடுமி வைப்பர். இப்போதெல்லாம் கொஞ்சம் முடியை மட்டும் அடையாளபூர்வமாக வெட்டுகின்றனர்.

ஏர் உழும் பணி

அந்தக் காலத்தில் ராஜகுருவானவர் வேத முழக்கம் செய்தார். இப்போது அது இல்லையாம்.

 

Thai Rajaguru with Kanchi Shankaracharya

பணி

 

அந்தக் காலத்தில் அரசர்களே முன்னின்று பயிரிடுதலைத் துவக்கினர். இப்படி ஜனக மஹாராஜா ஏர் உழுதபொழுதுதான் சீதா தேவி கண்டு எடுக்கப்பட்டாள். இந்த வேத கால வழக்கம் தமிழ் இலக்கியத்திலும் உண்டு. தாய்லாந்தில்  இது நடத்தப்படும் முறை மிகவும் சுவையானது.

ராஜகுரு பஞ்சாங்கத்தைப் பார்த்து வைகாசி மாதம் நாள் குறிப்பார். முதல் நாள் பௌத்தர்கள், மரகத புத்தர் சிலை முன்னர் ஜபம் செய்வர். மறு நாள் அதிகாலையில் பிராஹ்மணர்கள் கௌரி, தரணி (பூமி), கங்கா (கங்கை நதி) பூஜை துவங்குவர். பலவகை தானியங்களை நீருடன் கலந்து தூவுவர். குறிப்பிடப்பட்ட நேரத்தில் மன்னர் வருவார். அவர் தனது பிரநிதியை அனுப்பி காளைகளை வணங்கி ஏர் உழச் செய்வார். அந்தப் பிரதி நிதி மரகத புத்தர் கோவில் புல்வெளியில் ஏரை முன்னும் பின்னும் இழுப்பார். பின்னர் காளைகள் திரும்பிச் செல்லும்.

 

ஏருழும் பிரதிநிதிக்கு முன்னர் பிராமணர்கள் செல்லுவர். மங்கையர் மங்களப் பொருட்களை ஏந்தி வருவர்.

ஏழு பொருள் சோதனை!

ஏர்  உழுதல்  முடிந்த பின்னர் காளை மாட்டு ச் சோதனை நடக்கும். மது, புல், எள், நெல், தண்ணீர், சோளம், பயறு வகைகளை வைத்து காளை மாட்டிடம் காட்டுவர். அது எதன் மீது பாய்ந்து முதலில் தின்கிறதோ அது அந்த ஆண்டு செழித்து வளரும் என்பது நம்பிக்கை.

 

காளை மாடு நெல்லையோ பயறு வகைகளையோ சோளத்தையோ முதலில் சாப்பிட்டால் அந்த வகை தானியம் அந்த ஆண்டில் அமோக விளைச்சல் பெறும். தண்ணீரை முதலில் சாப்பிட்டால் வெள்ளம் வந்து பயிர்கள் அழியும்; புல்லையோ எள்ளையோ சாப்பிட்டால், தானிய விளைச்சல் அரை குறையாக இருக்கும். மதுவைச் சாப்பிட்டாலோ வறட்சி தாண்டவம் ஆடும். நாட்டில் அமைதியின்மை ஏற்படும் என்று அறிவிப்பர். அத்துடன் ஏர் உழும் விழா இனிதே நிறைவு பெறும்.

இது தவிர பிராஹ்மணர்களின் பங்கு பணி வேறு சில சடங்குகளிலும் உண்டு. அவற்றைத் தனியே காண்போம்.

–சுபம்–

 

 

தாய்லாந்தில் ஒரு அதிசயக் கோவில் (Post No.4999)

Written by London Swaminathan 

 

Date: 11 May 2018

 

Time uploaded in London – 13-40 am (British Summer Time)

 

Post No. 4999

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

முதலிலேயே ஒரு உண்மையச் சொல்லி விடுகிறேன். போகாத இடம் பற்றி நான் எழுதுவதில்லை. ‘கண்ணால் கான்பதே மெய், காதால் கேட்பதெல்லாம் பொய்’- என்ற கொள்கை உடையவன் நான். ஆயினும் இப்பொழுது தாய்லாந்து பற்றி ஸத்ய வ்ரத சாஸ்திரி எழுதிய புஸ்தகத்தைப் படிக்கையில்தான் இப்படி ஒரு இடம் இருப்பதே தெரிந்தது. ஆகையால் அதை தமிழ் கூறு நல்லுலகத்துக்கும் செப்புவோமே என்ற நல்லெண்ணத்தில் எழுதுகிறேன். ஏனெனில் இது அதிசயங்கள் நிறைந்த கோவில்.

 

எங்கே உள்ளது?

தாய்லாந்தில் பூரிராம் (ராம புரி) மாகாணத்தில் உளது.

இடத்தின் பெயர் பனம் ரங். இது க்மேர் (கம்போடிய) கட்டிட பாணியில் அமைந்த கோவில். இந்து சிலைகளும், சின்னங்களும் உள

எவ்வளவு பழமையானது?

பத்தாம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டி இருக்கலாம்.

 

அது எப்படித் தெரிந்தது?

கம்போடியாவில் உள்ள அங்கோர்வட் முதலிய ஆலயங்களின் தாக்கம் இதில் இருப்பதாலும் சில கல்வெட்டுகளாலும் தெரிகிறது,

இதன் சிறப்பு ஏன் அங்கோர்வட் (கம்போடியா), போரோ புதூர் (ஜாவ, இந்தோநேஷியா போலத் தெரியவில்லை?

இப்பொழுதுதான் யுனெஸ்கோ போன்ற அமைப்புகள் இதைப் பாரம்பர்ய சின்னமாக அறிவிக்க அணுகியுள்ளனர்

தாய்லாந்து அரசும்

தபால்தலைகள் முதலியன வெளியிட்டு இதன் அருமை, பெருமைகளை உலகிற்குப் பறையறிவித்து வருகின்றது.

 

இளம் சிவப்பு மணற்கற்களைக் கொண்டு ஒரு குன்றின் மேல் கோவிலைக் கட்டி இருக்கின்றனர். இது சிவ பெருமான் குடிகொண்டுள்ள கயிலை மலையைச் சிறப்பிப்பதாகும்

அதிசயங்கள் என்ன?

1.ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று (ஏப்ரல் 13, 14) இந்தக் கோவிலின் 15 வாயில்களையும் சூரிய ஒளி தொட்டுச் செல்லும். அன்றைய தினம் முதல் பனம் ரங் விழா துவங்கும்.

அப்பொழுது சுவாமி திரு வீதி உலா நடக்கும்; நாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கும். பழந்தமிழ் நாட்டில் நடந்த இந்திர விழாக் காட்சிகளை நினைவு படுத்தும்

 

  1. கோவிலுக்குச் செல்வதற்கான பாதை 600 அடிக்கும் மேல் நீளமானது. போகும் வழியில் ஒரு மண்டபம் உண்டு; அங்குதான் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் அமர்ந்து அலங்காரம் செய்து கொள்வார். கிட்டத்தட்ட ராஜ ராஜ சோழன் ஆண்ட காலம்.

 

 

இந்த நீண்ட பாதையைக் கடந்தவுடன் இரண்டு நாகர் பாலங்கள் இருக்கும். அவைகள் மேலுலகத்துக்குச் செல்லும் வழிகளாகும். நாக லோகம் என்பது மேலுலக வழிகளைக் குறிக்கும்.

இதற்குப் பின்னரே உட்புறக் கோவில்.

 

அங்கே சிவன், விஷ்ணு சிலைகளைக் காணலாம். உயரமான அமைப்பு மேரு மலை என்றும் சொல்லுவர். சிவலிங்கமும் அங்கே உளது.

  1. இங்கு ராமாயணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும், இலங்கையிலும், தென்கிழக்காசிய நாடுகளிலும் உள்ள ராமாயணச் சிற்பங்களைக் காண்கையில் ஆதிகாலத்தில் மஹாபாரதத்தைவிட ராமாயணமே மக்களை அதிகம் கவர்ந்தது என்று சொல்லலாம்.

 

  1. ஒரு கையிலிருந்து இரண்டு ஐந்து தலை நாகங்கள் இருப்பதால் இது க்மேர் சிலைகளின் பாணியைப் பின்பற்றுவது தெரிகிறது. ஆகை யால் இந்த அமைப்பு பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

 

4.ஒரு கோபுரத்தில் நடராஜர், புன்னகை புரியும் ரிஷி , ஜடாயு, சீதையைக் கடத்தும் காட்சி, மாரீசன் வதை, சீதா ஸ்வயம்வரக் காட்சி, வில்லை முறிக்கும் காட்சி என்பன இருக்கின்றன.

 

இன்னொரு காட்சியில் ராமர் குதிரை மீது பவனி வருகிறார்; இசைக் கலைஞர்கள் முன்னே செல்கின்றனர்.

மண்டோதரி கையில் இந்திரஜித்தின் தயைக் கொடுக்கும் காட்சி, ராவணனுடன் ராமனும் லெட்சுமணனும் சண்டை போடும் காட்சி, ராமர் பட்டாபிஷேகத்துக்கு வரும் காட்சிகளும் காணப்படும்.

 

ரிஷிகள் ஜப மாலையுடன் அமர்ந்த காட்சிகளும் தத்ரூபமானவை.

 

நரேந்திர ஆதித்யன் என்பவன் சிவன் கோவிலைக் கட்டிய செய்தியை ஒரு கல்வெட்டு கூறுகிறது.

 

5.இன்னும் ஒரு அதிசயம் என்ன என்றால் திசைத் தெய்வங்களின் உருவங்கள் தனித் தனியே காணப்படுகின்றன. ஒரு காலத்தில் மரத் தூண்களில் பொருத்தப்பட்டு  கால வெள்ளத்தில் மரங்கள் உளுத்து உதிர்ந்து போய் இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.

 

ஒரே தலை உடைய ஐராவதம் மீது இந்திரன் பவனி வரும் காட்சி ஒரு காலத்தில் கிழக்குப் பக்கம் இருந்திருக்க வேண்டும் (சில கோவில்களில் 4 தலைகளுடைய யானை மீது இந்திர உருவம் இருக்கும்)

 

தென் கிழக்கு திக்கிற்கு அதிபதியான அக்னி தேவன் காண்டா மிருகம் மீது பவனி வருவது அதிசயமே; இந்தியாவில் அக்னியின் வாஹனம்– ஆடு.

மேற்குத் திக்கிற்கு அதிபதியான —- வருணன் நாகத்தின் மீது காணப்படுகி             றார். இந்தியாவில் முதலை அல்லது ஹம்ச வாஹனத்தில் வருணன் பவனி வருவார்.

 

குபேரன் சிஙத்தின் மீது இருப்பதும் தென் கிழக்காசிய மக்களின் நூதனக் கற்பனையைக் காட்டுகிறது. இந்தியாவில் அவரை யக்ஷன் மீது காணலாம். அவர் வட திசை அதிபதி.

 

வட மேற்கு திசைக்கு அதி தேவதையான ஈஸானன், சிவன் போல் காளை வாஹனத்தில் த்ரி சூலத்துடன் தோன்றுகிறார்.

 

மேல் திசைக்குரிய பிரஹ்மா நான்கு தலைகளுடன் மூன்று ஹம்ஸங்களுடன் (அன்னம்) வருகிறர். வேறு சிலைகள் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு சிலையிலும் பறவைகள், குரங்குகள், பூக்கள், மூர்த்திகளின் மீதுள்ள ஆடை ஆபரணங்கள் ஆகியவை (KHMER) ‘க்மேர்’ பாணியில் இருப்பது, அங்கோர் வாட்டின்- கம்போடியாவின்— தாக்கத்தைக் காட்டும்.

கோவிலைச் சுற்றி பல குளங்கள் கட்டப்பட்டிருப்பது இமயமலை கயிலையை நினைவு படுத்தும்.

6.இது ஒரு அவிந்துபோன எரிமலைக் குன்றின் மீது அமைக்கப்பட்டிருப்பதும் அதிசயமே.

இது தாய்லாந்தின் புனரமைப்புடன் இப்பொழுது சுற்றுலாப் பயணிகளுக்கான பூங்காவாக நுழைவுக் கட்டணத்துடன் திகழ்கிறது. இவ்வளவு காலமாக வெளி உலகம் இதை அறியவில்லை. உட்புற மூர்த்திகளின் உருவங்களின் புகைப் படங்கள் இன்னும் பிரபலமாகவில்லை.

 

 

 

 

 

 

சுபம்–

வெள்ளையன் ஹாலிடே வியந்த ‘சதி’! (Post No.4998)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 11 MAY 2018

 

Time uploaded in London –  7-37 AM   (British Summer Time)

 

Post No. 4998

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

வெள்ளையன் ஹாலிடே வியந்த சதி!

 

ச.நாகராஜன்

 

ஹிந்துக்களை கேலி செய்வதும் அவர்கள் வரலாறைக் கொச்சைப் படுத்துவதும் ஹிந்து துரோகிகளுக்கு ஒரு வாடிக்கையான பழக்கம்.

 

சமீபத்தில் சித்தூர் ராணி பத்மினியை அலாவுதீன் கில்ஜியுடன் தொடர்பு படுத்து எடுக்கப்பட்ட படம் ஹிந்துக்களின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டது.

 

சஞ்சய் லீலா பன்சாலி எடுத்த பத்மாவதி படம் அக்ரமான வழியில் சரித்திரத்தைச் சிதைத்து மாற்றி எடுக்கப்பட்ட படம்.

மஹா தியாகியான சதி பத்மினியை கொச்சைப் படுத்தியதை எந்த ஒரு ஹிந்துவாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சதியில் உடன்கட்டை ஏறியவர்களை ஹிந்துக்கள் தெய்வமாக மதித்தனர்.

 

அனைவரும் சதியாக வேண்டும் என்று ஹிந்து மதம் ஒரு நாளும் சொல்லியதில்லை. ஆனால் ஈருடல் ஓருயிராக இருந்தோர் கணவனுடன் உடன்கட்டை ஏற விரும்பினால் அதைத் தடை செய்யவும் இல்லை.

 

இந்த சதி பற்றிய நிஜ வரலாறு கூறும் ஆச்சரியமான விஷயங்களைக் கீழே பார்ப்போம்:

 

சதி என்பது அநாகரிகமான ஒரு பழக்கம் என்று தீர்மானித்த கார்ன்வாலிஸ் அதி 1805ஆம் ஆண்டு தடை செய்தான். அப்படி சதியாக விரும்பினால் மாஜிஸ்ட் ரேட்டின் அனுமதி பெற வேண்டும் என்று அவன் சட்டம் இயற்றினான். ஆனால் 1829இல் வந்த லார்ட் பெண்டிங் அதை இன்னும் கடுமையாக ஆக்கி சதி என்பது தற்கொலை என்று சட்டம் இயற்றினான்.

 

In 1805 Marquis of Cornwallis passed a regulation by which no one could become a Sati without the permission of the Magistrate. The law was made stricter in 1829 by Lord William Bentick who enacted Sati as a suicide and all who encouraged Sati in any way were made guilty of culpable homicide.

 

Halliday’s Testimony, 1829 – Buckland in his “Bengal under the Lieutenant Governors” writes: –

 

In 1829 just before the penalizing of Sati, Sir Fredierick Halliday, the first Lieutenant Governor of Bengal was the District Magistrate of Hoogly, on the bank of Ganges, where Sati, was frequent occurrence. The last case of Sati lawfully celebrated in Bengal is thus narrated by him :- “We tried our best to dissuade her, but all to no purpose ….. Seated close to me she looked up at my face with scorn and said,

 

BRING A LAMP”. THE LAMP WAS LIGHTED AND WITH SCORN AND DEFLANCE IN HER EYES, SHE PUT HER FINGER INTO THE FLAME. THE FINGER SCORCHED, BLISTERED AND BLACKENED AND FINALLY TWISTED UP. SHE REMAINED UNMOVED, NOT A MUSCLE TWITCHED AND NOT A SOUND ESCAPED.

 

 

“Are you satisfied?” she asked.

 

“Quite,quite satisfied,” was the reply. She asked my permission and I assented.

 

Cooly and calmly she mounted the funeral pyre and laid herself down beside a part of her husband’s clothing. The husband had died far away. She was covered with light brushwood and fire was set to the funeral pyre.”

 

The following true incident is given in Tavernier’s “Travels” (published in 1677) :-

 

The Raja of Vellore was killed in a battle with the King of Visapur. Eleven of his wives resolved to become Sati. The General of the Visapur army coming to know of it, imprisoned all of them together. They told the keeper at the time, “Imprisonment is futile, we shall die in three hours.”

 

After three hours all of them lay stretched on the floor dead, and were gone with their husband, without any mark of violence on their bodies.

 

ஆக சதியாக விரும்பினோர் உடல் மனம் ஆன்மாவினால் கணவனுடன் ஒன்று பட்டவர்கள்.

 

கண்டவுடன் காதல்; காமம் முடிந்தவுடன் டைவர்ஸ் என்ற நாகரிகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது பற்றி எதுவும் புரியாது என்பது தான் உண்மை!

 

ஆதாரம் : Truth, weekly Magazine Volume 86 Issue 1 dated 20-4-2018

நன்றி : ட்ரூத் வார இதழ்

*****

தள்ளாத வயதில் பொல்லாத ஆசை! (Post No.4997)

Compiled by London Swaminathan 

 

Date: 10 May 2018

 

Time uploaded in London – 13-25 (British Summer Time)

 

Post No. 4997

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

2300 ஆண்டுகளுக்கு முன்னர், ரோமானிய செனட்டர் (ஆட்சி சபை உறுப்பினர்) கேடோ(CATO) வின் மனைவி இறந்தாள். உடனே கேடோ ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

 

அவரது மகன் கேட்டான்

அன்புள்ள அப்பா! நான் உங்களுக்கு என்ன தீங்கு இழைத்தேன்?

இப்படி ஒரு சின்னம்மாவைக் கொண்டு வந்திருக்கீறீர்களே!

 

கேடோ சொன்னார்

அன்புமிக்க மகனே!  நீ எனக்குப் பேரானந்தம் தருகிறாய்; இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆனந்தம் பெறவே சின்னம்மாவைக் கூட்டி வந்தேன்.

XXXXX

 

மாமியாரைத் தள்ளிவிட அருமையான பள்ளம்!

உலகின் மிக பிரம்மாண்டமான இயற்கை அதிசயம் அமெரிக்காவில் உள்ளது. அதன் பெயர் மாபெரும் ஆற்றுக் குடைவரை (GRAND CANYON). பல லட்சக் கணக்கான ஆண்டுகளாக கொலராடோ நதி ஓடி, ஓடி அறுத்த பள்ளம் அது. அதன் உச்சியில் இருந்து கீழே பார்த்தால் மனிதனின் சிறுமையும் இயற்கையின் மஹிமையும் புரியும்; புத்தருக்குப் போதி மரத்தடியில் ஞானம் உண்டானதைப் போல, பித்தனுக்கும் கூட தத்துவ ஞானம் பிறக்கும். அப்பேற்பட்ட இயற்கை அதிசயம்.

 

இரண்டு தளபதிகள் அங்கே சந்தித்தனர்; ஒருவர் முதல் உலக மஹா யுத்தத்தில் பிரெஞ்சுப் படைகளின் தளபதி– அவருடைய பெயர் மார்ஷல் போச். (MARSHAL POCH) அவருடன் அமெரிக்க தளபதி கர்னல் ஜான் வைட் (COLONEL JOHAN R. WHITE) இருந்தார். இருவரும் இயற்கை அதிசயத்தின் ஆழ, அகல, உயரத்தைக் கண்ணால் அளந்தனர்.

 

கர்னல் வைட் நினைத்தார். நேச நாடுகளின் மாபெரும் தளபதியிடம் கருத்துக் கேட்போம்; அவர் சொல்லுவதை வருங்கால சந்ததியினர் அறிய பொன்னேட்டில் பொறிப்போம் என்று கருதி

“மார்ஷல், இது பற்றி தாங்கள் எண்ணுவது என்னவோ?” என்றார்.

 

மார்ஷல் சொன்னார்:

“என்ன அருமையான இடம்! மாமியார்களைத் தள்ளிவிட இதை விட ஆழமான பள்ளம் இல்லவே இல்லை!!!

XXXXXXX

அட 2 மனைவியா!! உனக்கு அதிர்ஷ்டமப்பா!

பிரிட்டனில் பிரபுக்கள் சபையில் லார்ட்/பிரபு ரஸ்ஸல் இருந்தார்.

அவரிடம் ஒருவர் ஆலோசனை கேட்டார்.

 

இருதார மணம் புரிவோருக்குக் கடுமையான ஒரு தண்டனையைச் சொல்லுங்கள்.

ரஸ்ஸல் பிரபு சொன்னார்,

அடச்சீ, நீ, தள்ளிப்போ!

 

இரண்டு மாமியார்களை விட பெரும் தண்டனையும் உண்டா?

XXXX

அதிக விசுவாசம் ஆபத்து!

ஒரு நாள் ஒரு பெண்மணிக்கு அதி பயங்கர கோபம்! நள்ளிரவைத் தாண்டியும்  கணவன் வீடு திரும்பவில்லை.

 

உடனே கணவரின் ஐந்து நண்பர்களுக்கும் தந்தி அடித்தார்.

 

ஜாக் (JACK), இன்னும் வீட்டிற்கு வரவில்லை; கவலையாக இருக்கிறது. அவர் இன்றிரவு உங்களுடன் தங்குகிறாரா?

 

இந்த தந்திக்குப் பதில் வரும் நேரத்தில், துரதிருஷ்டம் பிடித்த ஜாக் வீட்டுக்குள் நுழைந்தார்! ஐந்து விசுவாச நண்பர்களும், “ஆமாம், ஆமாம், ஜாக் எங்களுடன்தான் தங்குகிறார்” என்று வெவ்வேறு இடங்களில் இருந்து பதில் கொடுத்தனர் (அவரைக் காப்பாற்றும் முகத்தான்).

 

கணவனுக்கு செமை அடி!!!

 

XXXXXXXXXXXXXXXXXXXXX

ஒரு இளம் பெண் தேவை!

ஒரு மனைவி கணவன் படித்துவிட்டுக் கீழே போட்ட பத்திரிக்கையை எதேச்சையாக எடுத்தார்.

 

“ஏ வில்பர், நீயா பேனாவை வைத்து விளம்பரங்கள் மீது வட்டக் குறி (CIRCLED) போட்டு வைத்திருக்கிறாய்?

 

கணவன்;ஹலோ, டார்லிங்! என்ன விளம்பரம் அது? நினைவில்லையே!

 

“தனிமையில் வாடும் ஒரு ஆணுக்கு, ஒரு இளம் பெண் தேவை” என்ற விளம்பரம் எல்லாம் சர்க்கிள் போட்டு இருக்கிறதே! என்றாள் வயதான மனைவி.

 

கணவன்    -????????????????????

XXXX

மனிதர்கள் அயோக்கியர்கள்!!

ஒரு முறை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல டாக்டர் ரிச்சர்ட் செய்ன் என்பவரிடம் ஒருவர், மனிதப் பிறவிகளைப் பற்றிப் பேசி,  மிகவும் புகழ்ந்து தள்ளினார்.

அவரோ இடை மறித்துச் சொன்னார்

‘த்சு, த்சு த்சு அச்சச்சோ!’

மனிதர்கள் அயோக்கியர்கள். ஓடு காலிகள்; அப்படியில்லாவிடில் இவ்வளவு சட்டங்களும், இவ்வளவு மதங்களும் தேவைப் பட்டிருக்குமா?

 

XXX subham XXXX

 

 

தாய்லாந்தில் தமிழ் பொங்கல் பண்டிகை (Post No.4994)

Research article Written by London Swaminathan 

 

Date: 9 May 2018

 

Time uploaded in London – 10-22 am (British Summer Time)

 

Post No. 4994

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

தமிழர்கள் பொங்கல் பண்டிகையை அறுவடை விழாவாக கொண்டாடுகிறார்கள்; அன்றைய தினம் சூரியனை வழிபட்டு, பொங்கல் வைக்கிறார்கள். மறுநாளன்று ‘கோ மாதா’வான பசுமாட்டை வணங்கி கிருஷ்ணன் சிலையுடன் ஊர்வலம் விடுகிறார்கள். யாதவ குல மோஹனனான கண்ணன் பெயரில் ஜல்லிக்கட்டு விளையாடுகிறார்கள். இந்த வீர விளையாட்டின் வருணனை சங்க இலக்கிய நூலான கலித்தொகையில் உளது.

 

பொங்கல் என்று சொல்லும் பண்டிகையின் உண்மைப் பெயர் சங்கராந்தி. ஒரு உணவுப் பண்டத்தின் பெயரில் பண்டிகை இராது என்பது வெளிப்படை. தீபாவளி என்றால் லட்டு என்பது போல சங்கராந்தி என்றால் பொங்கல் சாப்பிடுவோம்.

சங்கராந்தி என்பது தென் கிழக்காசியா முழுதும், இந்தியாவில் தென் குமரி முதல் வட இமயம் வரை, கொண்டாடப்படுகிறது.

தாய்லாந்து, லாவோஸ் ஆகிய இரண்டு நாடுகளில் இதைக் கொண்டாட அழகான கதை சொல்லப்படுகிறது. அதாவது புத்த மத, நாட்டுப்புற கதைகளை எல்லாம் இதில் இணைத்து விட்டார்கள். ஆனால் இந்துமதப் பெயர் மட்டும் ‘சொங்ராங்’ (சங்கராந்தி) என்ற பெயரில் அப்படியே இருக்கிறது இந்து மதத்தின் வழக்கங்களும் மேரு மலையும் அப்படியே உளது.

 

இதோ சுவையான கதை!

 

தர்மாபரணன் என்ற ஒரு அறிவாளி வாழ்ந்து வந்தான். அவன் ஏழு வயது முதலே பேரர்றிஞன். ஆதி சங்கரர், சம்பந்தர் போல இளம் வயது மேதை. விக்ரமாதித்தன் போல பறவைகள் மிருகங்கள் பேசுவதை அறிந்தவன். அவன் மீது அந்த நாட்டின் மன்னன் கபிலபிரம்மனுக்கு ஒரே பொறாமை. அவனை போட்டிக்கு அழைத்தான். கபிலனுக்கு ஏழு பெண்கள்/புதல்விகள்.

 

 

இதோ பார்! சின்னப்பையா! நான் ஒரு விடுகதை போடுவேன். நீ சரியான பதில் சொன்னால், நானே என் தலையை வெட்டிக் கொள்வேன்; அப்படிச் சொல்லவில்லையானால் நீயே உன் தலையை வெட்டிக்கொள்ள வேண்டும் . சரியா? என்றான் கபிலன்.

 

உடனே சரி என்று தலை அசைத்தான் தர்ம ஆபரணன்.

 

விடுகதை இதுதான்:-

மனிதனுடைய ஜீவன் காலையில், நண்பகலில், மாலையில் எங்கே உளது?

 

தர்மன் இதைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்தான்; அவனுக்குத்தான் பறவைகளின் மொழி தெரியுமே! அவை இது பற்றி என்ன பேசிக்கொள்கின்றன என்று ஒட்டுக் கேட்டான். விடையும் கிடைத்து விட்டது.

நேராக கபிலனிடம் சென்று இதோ தயார் என்றான்

 

என் கேள்விக்கு என்ன பதில்? என்றான் மன்னன் கபிலன்.

தர்மன் சொன்னான்:–

காலையில், மனிதனின் ஜீவன் முகத்தில் உளது; ஆகையால்தான் நாம் துயில் எழுந்தவுடன் முகத்தைக் கழுவுகிறோம்.

 

மதியம், நமது ஜீவன் மார்பில் உளது;ஆகையால்தான் சந்தனம் பூசுகிறோம்.

 

மாலையில், நமது ஜீவன் காலில் உள்ளது. ஆகையால்தான் படுக்கைக்கு போகும் முன் கால் கழுவிவிட்டு படுக்கச் செல்கிறோம்.

 

இதைக் கேட்டவுடன் கபிலன் தன் தலையை வெட்டிக்கொண்டான். அதைச் சீவிய வேகத்தில் தலை காற்றில் பறந்தது.

 

கபிலனுக்கு ஏழு மகள்கள் உண்டல்லாவா?

அவர்கள் நினைத்தார்கள்; இந்தத் தலை பூமியில் விழுந்தால் பூமி எரிந்து கருகிவிடும்; காற்றில் இருந்தால் அனல் காற்றால் பூமி வறண்ட பாலை வனம் ஆகி விடும்; கடலில் விழுந்தால் அது வற்றிப்போய் விடும். ஆகையால் மேரு மலை மீதுள்ள குகையில் வைப்போம். ஒவ்வொரு ஆண்டும் முறை வைத்து அதைப் பாது காப்போம் என்று  எழுவரும் முடிவு செய்தனர். ஆண்டுக்கு ஒரு முறை — சங்கராந்தி தினத்தன்று– அதை ஊர்வலமாக எடுத்துச் செல்வோம் என்று முடிவு செய்தனர்.

 

காலப்போக்கில் அந்த ஏழு பெண்களுக்கும் பிடித்த உடை, உணவு, வாஹனம், தோற்றம் ஆகியவற்றை தாய்லாந்து மக்கள் கற்பித்தனர்; ஏழு நங்கைகளையும் வாரத்தின் ஏழு கிழமைகளுக்கு சொந்தம் ஆக்கினர். அவர்கள் கையில் ஆயுதம் அல்லது ஒரு பொருளைக் கொடுத்தனர்.

 

சங்கராந்தி நாள் எந்தக் கிழமையில் ஏற்படுகிறதோ அந்த கிழமைக்கு உரிய மங்கையின் கையில் என்ன உள்ளது, அவள் என்ன ஆடை அணிந்திருக்கிறாள்? அதன் வர்ணம் என்ன? போன்ற அம்சங்களை வைத்து அந்த ஆண்டில் என்ன நடக்கும் என்பதை  மக்கள் ஆரூடம் கூறினர்.

 

இந்த வழக்கத்தை இப்பொழுதும் மதுரை சித்திரைத் திருவிழாவில் காணலாம். கள்ள அழகர் (விஷ்ணு) என்ன நிற ஆடை உடுத்தி, வைகை ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்றவாறு மழை அறுவடை, நாட்டின் வளம் இருக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். பச்சைப் பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினால் பசுமை மிக்க அறுவடை இருக்கும் என்பது போல தாய்லாந்தில் கையில் வாளேந்திய சிவப்பு நிற மங்கைக்கு உரிய நாளில் சங்கராந்தி ஏற்பட்டால் யுத்தம் போர் மூளும் என்று தாய் மக்கள் நம்பினர்.

லாவோஸ் நாட்டில் அன்றைய தினம் மேருமலையைப் போல மணற் கோபுரங்களைக் கட்டி, அதற்கு மஞ்சள் ஆடை உடுத்தி, தோரணம் கட்டி, பூஜை புனஸ்காரங்களைச் செய்து நைவேத்யம் படைத்து வணங்குவர். அந்த படைப்புப் பொருட்களை புத்த பிக்ஷுக்களுக்கு வழங்குவர்.

 

இப்படிப் பல கதைகளை இணைத்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினாலும் சம்ஸ்க்ருத, தமிழ் சொற்கள் அப்படியே அப்பண்டிகையில் ஒட்டிக் கொண்டு இருக்கின்றன. தாய்லாந்து, லாவோஸ் நாட்கள் சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்டு பக்தர்களை ஊக்குவிக்கின்றன.

 

கிழமைகளையும் அதற்குரிய நங்கைகளின் பெயர்களையும் அவரவர்க்குரிய உடை, உணவு, வர்ணம், ஆயுதம், வாஹனம் முதலியவற்றையும் கீழே உள்ள பட்டியலில் காண்க:–

  • Sunday: TungsateveeRed dress, preferred wild fruit, discus in the right hand, shell in the left hand, garuda as the vehicle.

 

  • Monday: Korakatevee Yellow dress with pearl ornaments, preferred butter oil, dagger in the right hand, walking cane in the left hand, tiger as the vehicle.

 

 

  • Tuesday: Ragsotevee Light red dress with agate ornaments, preferred blood, trident in the right hand, arrow in the left hand, pig as the vehicle.

 

  • Wednesday: Montatevee Emerald green dress with cats eye ornaments, preferred milk and butter, sharp iron in the right hand and walking cane in the left hand, donkey as the vehicle.

 

 

  • Thursday: Kirineetevee Greenish yellow dress with emerald ornaments, preferred nuts and sesame seeds, elephant hook in the right hand, gun in the left hand, elephant as the vehicle.

 

  • Friday: Kimitatevee White dress with topaz ornament, preferred banana, dagger in the right hand, Indian vina in the left hand, buffalo as the vehicle.

 

 

  • Saturday: Mahotorntevee Black dress with onyx ornaments, preferred hog deer, discus in the right hand, trident in the left hand, peacock as the vehicle.

 

 

வாழ்க தமிழ்!!  வளர்க இந்துமதம்!

 

 

 

அனுமனுக்கு அயிந்திரம் தெரியும்! கம்பன் தகவல் (Post No.4989)

அனுமனுக்கு அயிந்திரம் தெரியும்! கம்பன் தகவல் (Post No.4989)

 

Written by London Swaminathan 

 

Date: 8 May 2018

 

Time uploaded in London – 9-19 am (British Summer Time)

 

Post No. 4989

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

இயைந்தன இயைந்தன இனைய கூறலும்

மயிந்தம் துயிந்தனும் என்னும் மாண்பினார்

அயிந்திரம் நிறைந்தவ நானை ஏவலால்

நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார்

 

பொருள்

படையின் முன்பக்கத்தில் இருந்த வானரர் இவ்வாறு மனத்திற்பட்டதைச் சொல்லுகையில், நீதி முறை அறிந்த காவலர்களான மயிந்தன், துமிந்தன் என்ற சிறப்புமிக்க இரு வானரர்கள் ஐந்திர இலக்கணத்தை நன்கு அறிந்தவனான அனுமன் கட்டளையால் அங்கு வந்தனர்.

–வீடணன் அடைக்கலப் படலம், யுத்த காண்டம்

 

இப்படிப் போகிற போக்கில் அனுமனுக்கு அயிந்திரம் தெரியும் என்று சொல்லிவிட்டுப் போகிறான கம்பன்.

 

அனுமனை நவ வியாகரண பண்டிதன் என்றும் ராமாயணம் வருணிக்கும். நவ என்றால் இரண்டு பொருள் உண்டு. புதிய மற்றும் ஒன்பது என்று.

அயிந்திரம் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்திலும் வருகிறது.

தொல்காப்பியனார் பாடிய தொல்காப்பியத்துக்கு பனம்பாரனார் அளித்தச்  சிறப்புப் பாயிரத்தில்

ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமையோனே

 

இதற்கு உரை எழுதிய பாஷ்யக்காரர்கள், “வடமொழிக் கண் புகழ்பெற்ற ஐந்திரம் என்னும் இலக்கணத்த்தைக் கற்றுப் புலமை வாய்ந்தவரும்’ என்று எழுதியுள்ளனர்.

 

ஆக ஐந்திரம் என்பது சம்ஸ்க்ருத இலக்கண

நூல் என்பது தெரிகிறது. இது கம்பன் காலத்தில் கூடக் கிடைத்ததாக தோன்றுகிறது.

 

பிருஹஸ்பதி என்பவர் தேவர்களின் குரு. அவர் எழுதிய நூலுக்குப் பெயர் ‘சப்த பாராயணம்’. அதை அவர் இந்திரனுக்குப் போதித்தார். வ்யாகரணம் (இலக்கணம்) என்பது ‘மரணாந்த வியாதி’ என்று உசநா என்ற மாபெரும் கவி கூறியதாக பிருஸ்பதி சொல்கிறார். அதாவது ‘ இலக்கணம் என்பது சாகும் வரை உள்ள நோயாம்’. உண்மைதான்! இலக்கணம் படித்தவன் அதை சாகும் வரை பின்பற்றி, விவாதித்து, வரம்பு மீறியவர்களைக் குறை கூறி, அதிலேயே பொழுதைக் கடத்துவான்.

 

பாரதியார் வாழ்க்கையில்…….

பாரதியார் வாழ்க்கையில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததை ஆக்கூர் அநந்தாச்சாரியார் எழுதியுள்ளார். சிலர் பாரதியின் பாட்டில் இலக்கணப் பிழை கண்டனர். பாரதி அவர்களை அழைத்தார். உம் கவிதையில் குறை உளது என்றனர்.

என்ன குற்றம்? சொற் குற்றமா? பொருட் குற்றமா ? என்று அவர் வினவினார்.

இரண்டும் இல்லை இலக்கணப் பிழை என்றனர்.

அவர் கேட்டார்? கவிதை முதலில் வந்ததா?

அல்லது இலக்கணம் முதலில் வந்ததா?

 

வந்தவர்கள் சொன்னார்கள்: கவிதைதான் முதலில் வந்தது- என்று.

நான் கவிதைதான் எழுதுகிறேன்; இலக்கணம் அன்று- என்று சொல்லி அவர்களை ஓட்டி விட்டார் பாரதியார்.

‘’இலக்கியமன்றேல் இலக்கணம் இல்லை’’ — என்பது ஆன்றோர் வாக்கு.

 

பிருஹஸதியின் கதைக்குத் திரும்பி வருவோம்.

யார் இந்த தகவலைக் கூறியது. பாணினியின் வியாகரண நூலான அஷ்டாத்யாயீக்கு பேருரை எழுதியவர் பதஞ்சலி முனிவர். அவர் எழுதிய மஹாபாஷ்யம்தான் இந்திரனுக்கு பிருஹஸ்பதி உபதேசித்த சப்த பாராயணம் பற்றி விளம்புகிறது.

 

இது பற்றி தைத்ரீய ஸம்ஹிதை மேலும் ஒரு சுவையான செய்தியைச் சொல்லுகிறது; அந்தக் காலத்தில் லக்ஷண விதிகள் இல்லையாம். லக்ஷண என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து வந்ததே இலக்கணம்; இதே போல லக்ஷியம் என்ற சொல்லில் இருந்து வந்ததே இலக்கியம் என்று ஆன்றோர் வழங்குவர். ஆக இந்திரன் பகுதி, விகுதி— இவைகளை எல்லாம் பிரித்து ஒரு இலக்கண நூல் செய்தான். அதுதான் ஐந்திரம்;

அயிந்திரம் என்பதே இந்திரன் என்ற சொல்லில் இருந்து பிறந்ததே!

 

தைத்ரீய ஸம்ஹிதைக்கு உரை எழுதிய ஸாயணாச்சாரியார் சொல்கிறார்:-

முன் காலத்தில் சொல் என்பது விளக்கப்படாமல் இருந்தது. தேவர்கள் வந்து அதை விளக்கும் படி கேட்டனர்; அப்போதுதான் இந்திரன் சொல்லின் ‘பகுதி, விகுதி’களைப் பிரித்து தனி இலக்கணம் எழுதினான்.

அந்தக் காலத்தில் இரண்டு வகையான இலக்கண மரபுகள் இருந்தன. ஐந்திர மரபு, மாஹேஸ்வர மரபு என்று.

இந்திரன் உண்டாக்கியது ஐந்திரம்.

பாணினி உண்டாக்கியது மாஹேஸ்வர மரபு- பாணிணீயம்

மொத்தம் எட்டு வகை இலக்கணங்கள் இருந்ததாகத் தெரிகிறது: பிரம்மா, சிவன், இந்திரன், பிருஹஸ்பதி, ப்ரஜாபதி, த்வஷ்டா, அபிசலி, பாணினி—-

 

ரிக்வேத கல்பத்ருமமும் எட்டு பேர் இலக்கணம் இயற்றியதாக இயம்பும்: வாயு, வருணன், ஸோமன், விஷ்ணு, இந்திரன், யமன், சந்திரன், ரௌத்தன்

 

பிற்கால நூலான, போப தேவர் இயற்றிய, ‘கவி கல்பத்ருமம்’ எட்டு இலக்கண ஆசிரியர்களின் பெயர்களை விளம்பும்; ஆபிசலி, பாணினி, காசக்ருத்சனன், சாகடாயனன்,இந்திரன், சந்திரன், ஜைனேந்திரன்.

 

ஸ்ரீ தத்வநிதி என்ற வைணவ நூல் ஒன்பது பெயர்களைத் தெரிவிக்கிறது—

 

ஐந்திரம், சாந்த்ரம், காச கிருஷ்த்ணம், கௌமாரம், சாகடாயனம், ஸாரஸ்த்வம், சாகல்யம், ஆபீசலம், பாணீணீயம்

 

ஐந்திரம் முதலியவை லௌகீக சாஸ்திர இலக்கணங்கள்; ப்ரதிசாக்யம் முதலியன வைதீக நூல் இலக்கணங்கள்.

 

பாணீணீயம், ஆபிசலம் ஆகியன லௌகீக, வைதீக நூல்கள் இரண்டுக்கும் பொருந்துவன.

 

பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார் (கி.மு ஏழாம் நூற்றாண்டு). அவருக்கு முன்னர் 35 ஸம்ஸ்க்ருத இலக்கண வித்தகர்கள் இருந்தனர்!! ஐந்திர வ்யாகரண நூலை நிறைய ஸம்ஸ்க்ருத, தமிழ், ப்ராக்ருத நூல்கள் குறிப்பிடுகின்றன.

 

 

25 மடங்கு பெரிது!

 

12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மஹாபாரத உரை ஆசிரியர் தேவ போதர் செப்புகிறார் :— பாணினி இலக்கண நூலைப் போல 25 படங்கு பெரியது ஐந்திர வ்யாகரண நூல்!

 

ஐந்திர இலக்கண நுல் வெகு காலத்துக்கு முன்னரே அழிந்துவிட்டது என்று கதைக் கடல் (கதா சரித் சாகரம்) சொல்லும்.

 

ஆனால் பிற்கால நூல்கள் ஐந்திர இலக்கண நூலின் சூத்ரங்களை மேற்கோள் காட்டுவதால் இப்படி ஒரு நூல் இருந்தது என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை!

 

கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த  பட்டாரக ஹரிச்சந்திரர், ‘ஸரக ந்யாச’ என்ற உரை நூலில் ஒரு சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார்.

 

‘’அத வர்ண ஸமூஹ’’ என்பது ஐந்திரத்தின் முதல் சூத்திரம்; இதன் பொருள்:- ‘பிறகு எழுத்துக்களின் தொகுப்பு’—

 

தொல்காப்பியமும் முதலில் எழுத்துகளைப் பற்றியே நுவலும்:

எழுத்தெனப்படுப

அகர முதல் னகரம் இறுவாய்

முப்பஃது என்ப

சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே.

 

‘அர்த்த: பதம்’ என்னும் இன்னொரு சூத்திரத்தை துர்காச்சாரியாரின் நிருக்த விருத்தியில் காண்கிறோம்; இதன் பொருள்:-  ‘பொருள் உள்ள எழுத்துக்களின் கூட்டுதான்’ சொல் எனப்படும்.

 

பிற்காலத்தில் சுஷேண வித்யாபூஷணர் எழுதிய ஒரு நூலிலும், பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரத்திலும் ஐந்திரம் குறிப்பிடப்படுவதால் அவர்கள் காலத்தில் இது இருந்திருக்கவேண்டும். ஆயினும் பாணினியின் இலக்கணம் பிரபலமானவுடன் ஐந்திரம் வழக்கொழிந்து போயிருக்கலாம்.

 

ஐந்திரம் பற்றிப் பல தவறான கருத்துகளும் உண்டு; சமண மதத்தின் 24ஆவது தீர்த்தங்கரரான மஹாவீரர், அல்லது பௌத்த சமயத்தைச் சேர்ந்த இந்திர கோமீதான் இதை இயற்றியவர் என்றும் இயம்புவர்.  இது தவறு.

 

தேவநந்தி என்ற பூஜ்யபாதர் எழுதிய ஜைனேந்திர வியாகரணம்தான் ஐந்திரம் என்ற தவறான பிரச்சாரமும் உள்ளது.

 

–Subham–

 

ராமனின் கலர் என்ன? அனுமனின் கலர் என்ன? (Post No.4986)

Hanumar stamp released by U N O.

Written by London Swaminathan 

 

Date: 7 May 2018

 

Time uploaded in London – 13-39 (British Summer Time)

 

Post No. 4986

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

ஜவஹர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா (DISCOVERY OF INDIA) புத்தகத்தில் ராமாயணம் குறித்து பிரெஞ்சு வரலாற்று அறிஞர் மிஷலெ (MICHELET)சொன்னதை மேற்கோள் காட்டுகிறார்–

ராமாயணம் இந்து மஹா சமுத்திரம் போலப் பரந்து விரிந்தது. அங்கே நாம் ஒரு தெய்வீக நல்லிணக்கத்தைப் பார்க்க முடிகிறது. பிணக்குகளிடையே பேரமைதி, அளப்பறிய இனிமை, உயிர்கள் அனைத்துடனும் எல்லையற்ற சஹோதரத்துவம், கடல் போன்று பரந்த அன்பு, கருணை, மன்னித்து அருளும் அருங்குணம் நிறைந்தது இந்தப் பெருங் காவியம்”

 

என்ன அற்புதமான வருணனை!

 

ராமனின் வர்ணம் பச்சை; லெட்சுமணனின் நிறம் தங்க நிறம்; அனுமனின் நிறம் ஊதா; ராவணனின் கலர் கருப்பு!!! எங்கே என்று கேட்கிறீர்களா? தாய்லாந்து நாட்டில்!

 

இந்திய- தாய்லாந்து உறவு பற்றிய சில சுவையான செய்திகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

 

2300 ஆண்டுகளுக்கு முன்னர், மாமன்னன் அசோகன், புத்த மதத்தைப் பரப்புவதற்காக இரண்டு துறவிகளை அனுப்பினான். ஏற்கனவே இந்தியாவுடன் இருந்த தொடர்பு காரணமாகவே இப்படி அனுப்பினான்.

தாய்லாந்தின் பழைய பெயர் சியாம தேசம்’ அதுவே சயாம் (SIAM) என்று மருவியது. இந்திய வணிகர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் வணிகம் செய்த காலத்தே, இப்பகுதியை சுவர்ண பூமி (தங்க நாடு) என்று அழைத்தனர்.

 

குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஆண்ட மன்னர்கள் தங்களை ராமா என்று அழைத்துக் கொண்டனர். அத்தோடு தலைநகரை அயோத்தியா (AYUTHTHAYA) என்றும் அழைத்தனர். அந்த அளவுக்கு ராமாயண காவியத்தின் தாக்கம் அங்கே இருந்தது.

 

தனபுரி என்னும் பகுதியை ஆண்ட மஹா தக்ஷின் என்பவர் ராமாயணக் கவிதைகளை எழுதத்துவங்கினார். பின்னர் முதலாவது ராமா (1782-1780) அதை 10,000 ஸ்லோகங்களாக எழுதி முடித்தார்.

 

முதலாவது ராமா ராமகியான் என்று அழைக்கப்படும் ராமாயணத்தை காவிய வடிவில் கொடுத்தார்; இரண்டாவது ராமா (1809-1824)  அதை . நாடகம் வடிவில் கொடுத்தார். ஆயினும் 1349 முதல்  ராமாயணம் சிறு சிறு பகுதிகளாக எழுதப்பட்டது. நாடகம், ஓவியம், கதைகளில் இடம்பெற்றது.

 

அருகிலுள்ள வியட்நாம், லாவோஸ், இந்தோநேஷியாவில் இந்து மத அரசர்கள் இருந்ததால் எல்லையோரப்   பகுதிகளில் ராமாயணம் பலவகை உருப்பெற்றது. வால்மீகி  ராமாயணத்துக்கும் தாய் மொழி ராமகியனுக்கும் பல வேறுபாடுகள் உண்டு.

 

இந்தோநேஷியாவில் இருந்து நிழல் நாடகம் (பொம்மலாட்டம்) இறக்குமதியானது. இதில் தோல் பயன்படுத்தப்படுவதால் ஹநாங் (தோல்) என்ற பெயரில் இது அறிமுகமானது. இதில் பொம்மலாட்டத்தில் பயன்படுத்தப்படும் கயிறு, நூல் இல்லாமல் கைகளினாலேயே ராமாயண கதாபாத்திரங்கள் செயலில் இறங்குவார்கள்.

இதில் ராமன் பச்சை வர்ணத்திலும், லெட்சுமணன் தங்க நிறத்திலும், ஹனுமார் ஊதா நிறத்திலும், ராவணன் கருப்பு நிறத்திலும் காட்டப்படுவர். பாமர மக்கள் கதையை அறிந்துகொள்ள இது உதவும். இவ்வாறு ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு வர்ணத்தில் இருப்பது தாய் பொம்மல்லாட்டத்தின் சிறப்பு ஆகும்.

தாய் ராமாயணத்தில் பல விநோதக் கதைகளும் உண்டு. ஹனுமார் லோப் பூரியை ஆண்ட கதையை, அடுத்த கட்டுரையில் சொல்கிறேன். லோப் பூரி என்பது லவ புரி என்பதன் மரு ஆகும். லவன், குசன் ஆகிய இருவரும் ராமனின் புதல்வர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே; லாவோஸ் என்னும் நாடே லவனின் பெயரால் வந்த நாடுதான் என்பர் அறிஞர் பெருமக்கள்!

 

வாழ்க தாய் ராமாயணம்!! வளர்க ராமன் புகழ்!!!

சுபம்–

ஜாதி பேதமற்ற சங்க இலக்கியப் புலவர்களுள் நால்வர்! (Post No.4985)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 7 MAY 2018

 

Time uploaded in London –  6-51 AM   (British Summer Time)

 

Post No. 4985

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

ஜாதி பேதமற்ற சங்க இலக்கியப் புலவர்களுள் நால்வர்!

 

ச.நாகராஜன்

 

சங்க இலக்கியத்தில் ஜாதி பேதமே இல்லை என்பதைச் சுட்டிக் காட்ட நான்கு புலவர்களைப் பற்றிய சில குறிப்புகளை இங்கே காணலாம். உலகத்தார் அனைவரையும் ஒன்று படுத்தும் ஒரு பெரும் சக்தியாக தமிழ் விளங்குவதையும் உணரலாம்.

சங்க இலக்கியம் முழுவதையும் படித்தால் பொன்னான தமிழ்நாடு நம் கண் முன்னே தவழும்.

அதை மீண்டும் கொணர முயல்வோமாக!

இதோ புலவர்கள் நால்வர்.

 

கபிலர்

புலனழுக்கற்ற அந்தணாளன் என்று போற்றப்படும் பெரும் புலவர் இவர்.

இவர் அந்தணர் (புறம் 200)

குறிஞ்சித்திணை பாடுவதில் இணையற்ற ஆற்றலுடையவர்.

ஐங்குறுநூற்றில் குறிஞ்சிப்பாட்டு நூறும், கலித்தொகையில் குறிஞ்சி 29 பாட்டும் இவர் பாடியனவாகும்.

இதனைப்,

“பெருங்கடுங்கோன் பாலை குறிஞ்சி கபிலன்

மருதனிள நாகன் மருத – மருஞ்சோழ

னல்லுத் தான்முல்லை நல்லந் துவனெய்தல்

கல்விவலார் கண்ட கலி”

என்ற வெண்பாவால் அறியலாம்.

அகநானூறில் 203ம் பாடல் தவிர ஏனைய பாடல்கள் அனைத்தும் குறிஞ்சித் திணைக்கு உரியவையே.

இவர் மழவர் பெருமகனாகிய நள்ளியையும், பேரூரினையும் புகழ்ந்து பாடியுள்ளார். (அகம் 238; 382)

குறுந்தொகையில் ஓரியினது கொல்லிப்பாவையினையும், காரியினது முள்ளூர்கானத்தையும் புகழ்ந்துள்ளார். (குறுந்: 100;198)

நற்றிணையில் காரி மாவூர்ந்து நிரைகவர்தலையும், அவன் ஓரியைக் கொன்ற வரலாற்றினையும் கூறியுள்ளார். (நற் 291;320)

ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழறிவுறுத்திக் குறிஞ்சிப்பாட்டுப் பாடியருளினார்.

செல்வக்கடுங்கோ ஆழியாதனைப் புகழ்ந்து இவர் பாடிய பத்துப் பாடல்கள் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.

இன்னா நாற்பதும் கபிலம் என்னும் நூலும் இவர் இயற்றிய மற்ற நூல்களாகும்.

இவர் பாணருடன் வாது செய்தவர்.

புறநானூற்றில் பாரி வள்ளலைப் பலபடியாகப் புகழ்ந்து பாடியுள்ளார். (புறம் 105;106)

பாரிவள்ளல் தன் மகளிரை மூவேந்தருக்கு மணம் செய்து கொடுக்க மறுத்தமை காரணமாக மூவேந்தரும் அவனைப் பகைத்து அவன் பறம்பு மலையை முற்றுகை இட்ட போது உள்ளே உணவின்றி வருந்திய அனைவரையும் காப்பதற்காக கிளிகளால் நெற்கதிரைக் கொணரச் செய்தார். (அகம் 78;303)

மூவேந்தரும் பறம்பு மலையைக் கைப்பற்றுவது இயலாத காரியம் என்று கண்டு மனம் தளர்ந்த காலத்து, அவர்களை இவர் இகழ்ந்து பாடியுள்ளார். (புறம் 109;110)

பாரி அவ்வேந்தரால் வஞ்சித்துக் கொல்லப்பட்ட பின்னர், அவன் மகளிரை அழைத்துச் சென்று பார்ப்பார் பால் அடைக்கலம் வைத்தார். (புறம் 113; 236)

இந்தப் பாரி மகளிர் தம் தந்தையின் மலையைச் சூழ்ந்து கொண்ட பகை வேந்தரது படையின் அளவு எந்தெந்த திசையில் எவ்வெவ்வளவு இருக்கிறதென்று உயர்ந்த குவடுகளில் ஏறி நின்று எண்ணிச் சொன்னார்கள் என்னும் குறிப்புத் தோன்ற இவர் பாடியுள்ளார். (புறம் 116)

பின்னர், அம்மகளிர்களை அழைத்துக் கொண்டு போய், அவர்களை மணந்து கொள்ளும்படி விச்சிக்கோனையும் இருங்கோவேளையும் அவர் புகழ்ந்து பாடினார். (புறம் 200;201)

அவர்கள் மறுத்தவுடன் அவர்களைச் சபித்து விட்டு மீண்டார்.

கடைசியாக அம்மகளிருள் ஒருத்தியைத் திருக்கோவலூர் மலையனுக்கு மணம் செய்து கொடுத்து விட்டுப் பெண்ணையாற்றினிடையே ஒரு பாறையில் தீ வளர்த்து அதில் புகுந்தார் என்று திருக்கோவலூர் சாஸனம் ஒன்றால் வெளியாகிறது. (ஆதாரம் : செந்தமிழ் தொகுதி-4; பகுதி-5 பக்கம் 232)

 

தித்தன்

தித்தன் ஒரு அரசன்.

இவன் தித்தன் வெளியன் எனவும் வீரைவெளியன் தித்தன் எனவும் கூறப்படுவான். (அகம் 152;188;226)

இவன் சிறந்த வீரன் மட்டுமன்றி பெரும் புலவனும் ஆவான். (அகம் 188)

இவனது தலைநகர் உறையூர்.

இவ்வூரைப் பகைவர் கைப்பற்றாவண்ணம் அரண்வலி மிகுந்த புறங்காடு உடையதாகவும் படைகாவல் உடையதாகவும் செய்து காத்து வந்தான். (அகம் 122; தொல்.பொருள் நச் 60)

இவனுக்குக் கற்பில் சிறந்தவளும் பேரழகியாயுமுள்ள ஐயை என்னும் பெயருடைய ஒரு மகள் இருந்தாள். ஒரு சமயம் வடுக அரசனான கட்டி என்பான் பாணனொடு சேர்ந்து கொண்டு தித்தனோடு போர் புரிய நினைத்து உறையூருக்கு அருகில் வந்து இருக்கும் போது, உறையூரின் கண் இத்தித்தனது நாளவைக்கண் ஒலிக்கப் பெறும் தெண்கிணைப்பாடு கேட்டு அஞ்சிப் போர் புரியாமல் ஓடினான். (அகம் 226) இவன் மகன் பெயர் போர்வைக்கோப்பெருநற் கிள்ளி.

 

மதுரை அறுவைவாணிகன் இளவேட்டனார்

இவர் வணிக மரபினர். (தொல் பொருள் மரபு 74)

அறுவை வாணிகன் என்றால் வஸ்திர வியாபாரி. (Cloth Merchant) திருவள்ளுவரின் திருக்குறளைச் சிறப்பித்துப் பாடியுள்ளோரில் இவரும் ஒருவர். பாலைத் திணையைத் தவிர ஏனைய எல்லாத் திணையையும் புனைந்து இவர் அகநானூற்றில் பாடியுள்ளார்.

படுத்த யானை முதுகினைக் காற்றிலசையும் வழைத்தாறு தடவும் என்பது இவரது அழகிய கூற்று. (அகம் 302)

 

ஆவூர் மூலங்கிழார்

இவர் சோழநாட்டில் பிறந்தவர். (புறம் 33) வேளான் மரபிணர்.

இவரது மகன் தான் பெரும் புகழ் படைத்த பெருந்தலைச் சாத்தனார் ஆவார்.

இவர் காவிரியைப் புகழ்ந்து பாடியுள்ளார். (அகம் 341)

யாகம் பண்ணாத பார்ப்பானுக்கு சங்கறுக்கைத் தொழிலாகுமென்று இழித்துக் கூறுவதாலும் (அகம் 24),  யாகம் பண்ணிய கௌணியன் விண்ணந்தாயனைப் புகழ்ந்து பாடியுள்ளமையாலும் (புறம் 1660 இவர் வைதிக மதத்தில் (இந்து மதத்தில்) பெரும் பற்றுள்ளவர் என்பது அறியப்படுகிறது.

 

***

காஞ்சி பரமாசார்யார் ஆயுள் கண்டுபிடித்த ‘டெக்னிக்’ (Post No.4982)

Written by London Swaminathan 

 

Date: 6 May 2018

 

Time uploaded in London – 6-58 am (British Summer Time)

 

Post No. 4982

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

திருச்சி அருகிலுள்ள கூத்தனூரைச் சேர்ந்தவர் ஸ்ரீ சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள். வேத பண்டிதர்; ரிக் வேதத்தின் ஒரு ஷாகையைப் படித்து காஞ்சிபரமாசார்ய ஸ்வாமிகளிடம் தங்க நாணயம், பசு மாடு, சால்வை பெற்றவர். பெரிய அறிஞர்–மஹா பண்டிதர். அவரிடம் ஒருவர் , இறந்து போனவரின் ஜாதகத்தைக் கொடுத்து அவரைச் சோதித்த போது அவருக்கு ஷாக் அடித்தது போல உடம்பு தூக்கிவாரிப் போட்ட நிகழ்ச்சியை முன்னரே எழுதினேன்.

 

அவரை மதுரை டி.வி.எஸ். நிறுவனத்தார் உபந்யாசம் செய்வதற்காக ஆண்டுதோறும் அழைத்தார்கள். அப்பொழுது அந்தக் கம்பெனி அனுப்பும் காரில் நானும் அவருடன் சென்று நோட்ஸ் (NOTES) எடுத்து அதை தினமணி பத்திரிகைக்கு செய்தியாகத் தருவேன். அவர் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை வேதத்தில் இருந்து மேற்கோள் காட்டிக் கொண்டே இருப்பார். இதனால், விஷயம் அறிந்தவர்கள், அவருடைய சொற்பொழிவைத் தவறாமல் கேட்பர். அவர் உபந்யாசத்தைத் துவங்கும்போது ‘உத்தமோத்தமர்களே” என்று துவங்குவார். என் அருகில் உடகார்ந்து இருப்பவர் உடனே காமெண்ட் (COMMENT) அடிப்பார். இங்கு இருப்பவர்களில் யார் உத்தமர்? என் உள்பட எவனும் உத்தமர் இல்லையே! என்பார். இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் ‘வெளுத்ததெல்லாம் பால்’ என்று எண்ணும் அளவுக்குக் குழந்தை மனம் படைத்தவர் சாஸ்திரிகள்.

 

என்னிடம் சொல்லுவார்: சாமிநாதா, நீ எங்கள் திருச்சி பஜாருக்கு வந்து பார்க்க வேண்டும். முனிவர்கள், சந்யாசிகளும் கூட மனம் தடுமாறிவிடும் அளவுக்கு பெண்கள் ஆடை அலங்காரம் இருக்கும் என்பார்.

நான் உடனே மாமா, எங்கள் மதுரையிலும் அப்படித்தான்.

நீங்கள் எங்கள் டவுன்ஹால் ரோடு (TOWN HALL ROAD) அல்லது, பணக்காரத் திருமணங்களுக்கு வந்து பாருங்கள்’ என்று சொல்லுவேன்.

 

இதை எழுதும்போது இன்னும் ஒரு விஷயமும் ஞாபகத்துக்கு வருகிறது. தொல்பொருட் துறை அறிஞர், வரலாற்று ஆசிரியரான டாக்டர் இரா.நாகசாமியும் பேச்சு வாக்கில் சொன்னார்; ‘பெரிய ஞானிகளையும் நிலை தடுமாறச் செய்து மனத்தை மாயையில் ஈடுபடுத்தும் சர்வ வல்லமை துர்கா தேவிக்கு உண்டு’ என்று சொல்லி ‘ஞானினாம் அபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா பலாத் ஆக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி’ என்ற துர்கா சப்தஸ்லோகீ வரிகளைக் கூறினார்

 

ॐ ज्ञानिनामपि चेतांसि देवी भगवती हि सा।

बलादाकृष्य मोहाय महामाया प्रयच्छति॥१॥

 

விஸ்வாமித்ரர், புத்தர் ஏசு முதலியோரையும் இறைவன் இப்படிச் சோதித்ததாக நாம் படித்து இருக்கிறோம்.

காஞ்சி பரமாசார்யார் வயதைச் சொன்ன சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள்!!!!

 

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகளுக்கு (காஞ்சி சங்கராச்சார்யார் ஸ்ரீ சந்திர சேகர இந்திர சரஸ்வதி 1894-1994) இன்னும் எவ்வளவு ஆண்டுகள் உயிரோடு இருப்போம் என்று அறிய திடீரென ஆவல் ஏற்பட்டது. அவர் 100 ஆண்டுகள் வாழ்ந்து 1994ல் சமாதி அடைந்ததை நாம் அறிவோம்.

 

ஒரு முறை அவர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகளை யாரும் இல்லாத போது அழைத்து, தன் கையில் அக்ஷதையைப் போடும்படி சொன்னாராம். சாஸ்திரிகளுக்கு ஒரே வியப்பு. ஆயினும் அவர் சொன்ன படியே செய்தார். அட்சதையைப் போட்டபின்னர் ஸ்வாமிகள் அதை எண்ணிப்  பார்த்துவிட்டு ‘ஓஹோ, நான் இவ்வளவு ஆண்டுகள் உயிருடன் இருப்பேன்’ என்றாராம். அது எத்தனை ஆண்டுகள் என்று சாஸ்த்ரிகள் சொல்ல மறுத்து விட்டார்.

 

மறைகளைக் காப்பவர்களே நான் மறையாளர் அல்லவா? (இரஹஸியம்=   மறை) இறுதிவரை சாஸ்திரிகள் எங்களிடம் சொல்லவில்லை.

இவை அனைத்தும் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகள்!!!!

 

xxxxxxxxxxxx SUBHAM xxxxxxxxxxx