அனிச்சம் பூவும் சீரிஷம் பூவும் ஒன்றா? (Post No.3601)

சீரிஷம் பூவின் படம் (from Ayurveda website)

 

Written by London swaminathan

 

Date: 3 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  6-41 am

 

Post No. 3601

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

சம்ஸ்கிருத இலக்கியத்தில் மிகவும் மென்மையான பூ சீரிஷம் என்றும் தமிழ் இலக்கியத்தில் மிகவும் மென்மையான பூ அனிச்சம் என்றும் கவிகள் பாடி வைத்துள்ளனர். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் இருவரும் ஒரே மலரைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்று முடிவுசெய்தேன். எனது ஆராய்ச்சியின் பலனே இக்கட்டுரை.

 

சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப் பாட்டிலும் கலித்தொகையிலும் அனிச்சம் பற்றிக் குறிப்பிடுகின்றனர். சங்க காலத்துக்குப் பின்னர்   வந்த திரு வள்ளுவர் அனிச்ச மலரை நான்கு இடங்களில் உவமையாகக் காட்டுகிறார்.

 

 

இலக்கியங்களில் மென்மைக்கு இலக்கணம் இந்தப் பூக்களே. கடினத்தன்மைக்கு வைரத்தை (வஜ்ரம்) உவமையாக காட்டுவது போல மென்மைத் தன்மைக்கு உவமை அனிச்சம் அல்லது சீரிஷம்.

 

உலகப் புகழ்பெற்ற காளிதாசன் குமார சம்பவத்திலும் ரகுவம்சத்திலும் சீரிஷ மலரின் மென்மைத் தன்மையை  எடுத்துக்காட்டுகிறார்.

 

பார்வதியை வருணிக்க முனைந்த கவிஞன் காளிதாசன், பார்வதியின் கைகள் சீரிஷ மலரைவிட மென்மையானவை என்பான்(குமார 1-41)

 

இன்னொரு அருமையான உவமை பார்வதியின் தவத்தைப் பற்றியது. சீரிஷ மலரானது தேனீக்களின் கால்களைத் தாங்குமேயன்றி, ஒரு பறவையின் கால்களைத்  தாங்க முடியுமா? அது போல பூப்போன்ற உடல்படைத்த பார்வதியின் உடலை கடுமையான தவசு தாங்குமா – என்பது காளிதாசனின் உவமை(குமார 5-4)

ரகுவம்ச காவியத்தில் சுதர்சன மன்னனின் உடல் சீரிஷ மலரைப் போல மென்மையானது என்று சொல்கிறான் (18-45).

 

அனிச்சம் பூ (according to Wikipedia)

 

தமிழ் இலக்கியத்தில்

மகளிர் சேகரித்த 99 மலர்களில் அனிச்சம் என்ற மலரையும் சேர்த்து கபிலர் பாடியுள்ளார் (குறிஞ்சிப் பாட்டு, வரி 62)

 

கலித்தொகையில் (91-1) அனிச்சம் மலர் சூடியது, மாலை சூடியது பற்றி மருதன் இளநாகன் பாடியுள்ளார்.

 

இதன் பிறகு கம்பராமாயணம் முதலிய பிற்காலக் காவியங்களிலும் இம்மலர் இடம்பெறுகின்றது.

 

வள்ளுவர் 4 குறள்களில் தெரிவிக்கும் கருத்துகள்:

 

மோப்பக்குழையும் அனிச்சம்(90)– முகர்ந்து பார்த்,,,,,லேயே வாடிவிடும்.

 

அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம் வீழ்பவள் (1111)– , அனிச்சம் பூவே! என் காதலி உன்னைவிட மென்மையானவள்.

 

(இதைக் காளிதாசன் பார்வதி பற்றிச் சொன்னதோடு ஒப்பிடலாம்)

 

அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் (1115)– காம்போடு அனிச்சம் பூவைச் சூடிவிட்டாள் என் காதலி. எடை தாங்காமல் வள் இறந்து போய்விடுவாள்.

 

அனிச்சம்…. மாதர் அடிக்கு நெருஞ்சி பழம் (1120)– அனிச்சம் பூவும் அன்னத்தின் இறகும் கூட  இப்பெண்ணின் பாதங்களில் நெருஞ்சிப் பழம் போலக் குத்தும்!

 

அனிச்சம் பூ எது? என்று சிலர் ஆராய்ச்சி செய்து சில படங்களை வெளியிட்டுள்ளனர். அவை சரி என்று எனக்குத் தோன்றவில்லை. இன்னும் சிலர் சீரிஷ மலர் எது என்று படம் போட்டுள்ளனர். அதுவே சரி என்று தோன்றுகிறது. இதற்கு நான் முன் வைக்கும் காரணங்கள்

 

 

  1. அனிச்ச மலர் என்று இவர்கள் குறிப்பிடும் மலர் முகர்ந்தால் வாடுவதில்லை

2.இது மற்ற பூக்களைப் போலவே மென்மை படைத்தது. உண்மையில் இதைவிட மென்மையான தமிழ் மலர்கள் உண்டு

  1. சீரிஷ மலரின் படம் ஓரளவுக்கு தமிழ்ப் பாடல் வருணனைக்கு அனுசரணையாக உளது. களிதாசன் சொல்லுவது போல தேனீக்கள் மட்டுமே உட்கார முடியும்

4.கபிலரும் இளநாகனும் சொல்லக்கூடிய அனிச்சம் தலை யில் அணிவது; மாலையாகச் சூடுவது. ஆனால் WEBSITE வெப்சைட் காட்டும் அனிச்சம் அணியப்படுவதுமில்லை; பூஜைக்கு உதவுவதுமில்லை

5.மேலு வெப்சைட் WEBSITE காட்டும் அனிச்சம் தமிழ்நாட்டில் அதிகம் காணப்படுவதில்லை.

6.எல்லாவற்றிற்கும் மேலாக சீரிஷம் படத்தையும் அனிச்சம் படத்தையும் அருகருகே வைத்துப் பார்த்தால் சீரிஷமே மென்மை என்பது தெரிகிறது

  1. சீரிஷம் என்ற பெயரை இன்றும் வட இந்தியப் பெண்கள் பெயரில் வைக்கின்றனர். தமிழர்களோவெனில் மற்ற மலர்களின் பெயர்களை பெண்களுக்குச் சூடுகின்றனர். ஆனால் அனிச்சம் என்று பெயர் வைப்பதில்லை.

 

  1. கடைசியாக அனிச்சம் என்பது தமிழ் சொல்லா என்று ஐயுற வேண்டியுள்ளது. அந்த ஒலியை ஒட்டிய தமிழ்ச்சொல் எதுவும் (அனி) சங்க இலக்கியத்தில் இல்லை. அனிச்சம் மட்டுமே உள்ளது. இது ஒரு பெரிய புதிரான மலர்தான்.

 

வள்ளுவன் சொன்னது போல அனிச்சமே! நீ வாழி! (“நன்னீரை வாழி அனிச்சமே”-குறள் 1111)

 

Botanical name of both the flowers as identified in the websites:

Sirisham – Albizia lebbek (East Indian Walnut); Family-Mimosaceae

Anicham- Anagallis arvensis (Scarlet Pimpernel); Family- Primulaceae

 

 

–சுபம்–

அஷ்டாவதானம் செய்த அதிசய முதலியார் – பகுதி 3 (Post No.3598)

Compiled by London swaminathan

 

Date: 2 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  5-40 am

 

Post No. 3598

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

“அதிசய முதலியார் செய்த அற்புதங்கள்” என்ற தலைப்பில் கடந்த இரண்டு நாட்களில் முதல் இரண்டு பகுதிகள் வெளியாகின. இது மூன்றாம் பகுதி.

 

1878-ஆம் ஆண்டு திருக்கழுக்குன்ற மலை அடிவார மஹா மண்டபத்தில் தசாவதானி ஜெகநாதபிள்ளை முன்னிலையில் கலியாண சுந்தர முதலியார் அஷ்டாவதானம் செய்து காண்பித்தார்.

 

அவ்வமயம் செங்கல்பட்டு வக்கீல் சுந்தர முதலியார் கேள்விக் கணை தொடுத்தார்– எங்கே புத்தகத்துக்கும் கரத்துக்கும் சிலேடை வைத்து செய்யுள் இயற்றுங்கள் பார்ப்போம் என்றார்.

 

மூடித் திறத்தலினால் மொய்ரேகையேயுறலால்

நாடியெவரு நண்ணுகையால்– கோடலினால்

வித்தகர்  கணத்துகின்ற வேதகிரி தண்பதியில்

அத்தமது புத்தகமுமாம் 

 

-என்று முதலியார் சிலேடை—(இரு பொருள்படும்படி செய்யுள்) — செய்தார்.

 

(அத்தம்=ஹஸ்தம்=கை=கரம்)

 

சிவக்கொழுந்து பண்டாரம் என்பவர், பால் என்னும் சொல் பத்து இடங்களில் வருமாறு கவி செய்க என்றார்.

 

பற்றுங்கொடிக்ககனும் பங்கயனும் காணாவும்

பற்றோலுரித்த வன்னப் பாலே பால் — மற்றப் பால்

மாட்டுப் பால் பூப்பால் மரப்பால் வனிதையர்பா

லாட்டுப் பாலப் பாலிப்   பால்

 

-என்று முதலியார் பாடினார்.

செய்யூர் ஜமீந்தார் வைத்தியநாத முதலியார் எழுந்து, நாடு என்று துவங்கி ஊர் என்று முடியுமாறு ஒரு கவி புனையுங்கள் என்றார்.

 

நாடுசேரன் சோழ நற்பாண்டியன் முதலோர்

தேடு பொருள் யாவுஞ்சிறக்குமா –னீடு தொண்டை

மண்டலத்திற் கோர்திலகன் வைத்தியநாதச் சீமா

னொண்டி   றலோடே வாழ்செய்யூர்

 

என்று முதலியார் பாடி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

 

 

அஷ்டாவதானத்தில் வெறும் கவி பாடுதல் மட்டுமல்ல. பலர் கூட்டல், கழித்தல் போடச சொல்லுவர். மற்றும் சிலர் முதுகில் கற்களையோ, விதைகளையோ வீசி எத்தனை கற்களைப் போட்டென் என்று கேட்பார். தமிழ் இலக்கியத்தில் கேள்விகள் கேட்பர்.  இது போல எட்டு செயல்களை ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். இவை எல்லாம் முடிந்தவுடன் செய்யூர் ஜமீந்தார் பரிசளிக்க முயன்றதைக் குறிப்பால் உணர்ந்து

 

காசுதனி லெனக்குக் கவலையில்லை பொற்சரிகைத்

தூசுதனிலேதுந் துயரிலை — வீசுபுக

ழீகட்டும் வள்ளா லியகற்றுக வென்னாசிரியர்

வீடுகட்டி வாழ்ந்திடவே –என்று பாடி முடித்தார்.

 

 

இதன் பொருளாவது: எனக்கு காசு பணம் வேண்டியதில்லை. என்னுடைய ஆசிரியரான தசவதானியாருக்கு வீடுகட்டிக் கொடுக்கவும் என்பதாகும். உடனே தசாவதானியார் ஜெகநாத பிள்ளைக்கு வீடு கட்டத் தேவையான பொருட்களை ஜமீந்தார் அனுப்பி வைத்தார்.

 

இதற்குப் பின்னர் ஜமீந்தாரின் வேண்டுகோளை ஏற்று திரிபுரசுந்தரி மாலை இயற்றினார்.

 

முதலியார், இடைகழி நாட்டுக்கு வந்திருக்கும் செய்தி கேட்டு ஜமீந்தார், யானையை அனுப்பி அவரை அழைத்துவர ஏற்பாடு செய்தார். ஆனால் அவர் ஒரு சீட்டுக் கவி மூலம் சின்னாட்களுக்குப் பின்னர் வருவதாக அறிவித்து சேயூரில் ஒரு வாரம் தங்கினார். அப்போது அவருக்குக் கிடைத்த பரிசுகள் அனைத்தையும் தன்னுடைய  ஆசிரியரான தசாவதானியாருக்கே கொடுத்துவிட்டார்.

 

திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து கமலபந்தமியற்றிப் பரிசு பெற்றார்.

பாம்பு கடித்தது

 

1879 ஆம் ஆண்டில் செங்கல்பட்டிலிருந்து திருப்போரூருக்குச் செல்லுகையில் ஒரு பாம்பு இவரைக் கடித்துவிட்டு படம் எடுத்து ஆடியது. இவர் தாம் இறந்து போய்விடுவோமென்றெண்ணி கையிலிருந்த கமலபந்தத்தின் பின்னால் தனது பெயர் முதலியவற்றை எழுதிவிட்டு தியானத்தில் மூழ்கி திருமுருகாற்றுபடையை ஜெபிக்கத் தொடங்கினார். அந்த    கமலபந்தம் திருப்போரூர் சிவசங்கரத் தம்பிரான் மீது இவர் இயற்றியதாகும். அப்போது அவ்வழியாக வந்த ஒரு தொட்டியன், பாம்பு கடித்த செய்தி கேட்டு அவருக்கு ஒரு மூலிகையைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னான். இவரும் குணமடைந்து தொட்டியனைத் தேடவே அவனைக் காணவில்லை. முருகப்பெருமானே வந்து உதவியதாக முதலியார் எண்ணினார். தம்பிரானிடம் நடந்த செய்திகளைச் சொல்லவே அவர் அன்று முருகனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளைச் செய்து முதலியாரை மகிழ்வித்தார்.

 

1879-ல் மேடவாக்கம் வெங்கடாசல முதலியார் குமாரத்தி பார்ப்பாத்தியம்மாளுக்கும் முதலியாருக்கும் திருமணம் நடந்தேறியது. காலப்போக்கில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. எஞ்சினீயர் அலு வலகத்தில் கிளர்க் உத்தியோகமும் கிடைத்தது.  பரங்கி மலைக்கு மாற்றப்படவே சென்னையில் மைத்துனர் கடையில் இருந்து கொண்டு சுதந்தர விருத்தியில் இறங்கினார். பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். பெரியபுராணம் முதலிய நூல்கள் பற்றி உபந்யாசம் செய்தார். நடராஜ சபை என்ற பெயரில் சமயப்  பணிகள் தொடர்ந்தன.

 

முதலியாரவர்கள், சிதம்பரத்தில் பாஸ்கர சேதுபதி மஹாராஜவைச் சந்தித்து வார்த்தை சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில் சித்திரகவி சடாதர நாவலர் அவரைச் சந்த்க்க வந்தார். நாவலர், தான் கவிபாடும் வல்லமை படைத்தவர் என்று சொல்லவே, மெய்கண்டநாதன் என்பதை வைத்து அஸ்வபந்தம் பாடும்படி சொல்லிவிட்டுப் போஜனத்திற்கேகினார் பாஸ்கர சேதுபதி.

 

நாவலருக்கோ ஒரு சொல் கூட வரவில்லை. மஹாராஜா வந்தபின்னரும் மவுனமா இருந்து விட்டார். முதலியாரோவெனில் ஒரு செய்யுளை எழுதி ராஜா கையில் கொடுக்க, அது அஸ்வபந்தத்தில் அடைபட்டது. நாவலர் சென்றவுடன் முதலியாருக்கு பரிசுகள் கிடைத்தன. ஒரு சால்வையும் போர்த்தினர். வெளியே காத்துக் கொண்டிருந்த நாவலர், தனது இயலாமையைச் சொன்னவுடன் அவருக்கு முதலியார் அஸ்வபந்த இலக்கணம் கற்பித்து, அந்தச் சால்வையையும் அவருக்கே போர்த்தி அனுப்பினார். கலியாண சுந்தர முதலியார் மிகவும் கருணை உள்ளம் படைத்தவர்.

 

 

முதலியார் இயற்றிய நூல்கள், தனிப்பாடல்களின் பட்டியல் மிக நீண்டது. வாழ்நாள் முழுதையும் சைவ சமயத்துக்கும் தமிழ்ப் பணிக்கும் பயன்படுத்தியவர். 1914-ஆம் ஆண்டில் மணவழகு கலியாண சுந்தர முதலியாரின் சஷ்டியப்த பூர்த்தியின் போது அவருடைய மாணவர்கள் ஒரு மலரை வெளியிட்டு அவரது சாதனைகள், திருப்பணிகளைத் தொகுத்து வெளியிட்டனர். அதன் சுருக்கத்தை மட்டுமே நான் மூன்று கட்டுரைகளில் தந்தேன்.

 

–சுபம்–

 

அதிசய முதலியார் செய்த அற்புதங்கள் – பகுதி 1 (Post No.3593)

Compiled by London swaminathan

 

Date: 31 JANUARY 2017

 

Time uploaded in London:-  9-13 am

 

Post No. 3593

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact: swami_48@yahoo.com

 

 

சென்னை பூவிருந்தவல்லி கலியாணசுந்தர முதலியார் ஒரு அஷ்டாவதானி; அதாவது ஒரே நேரத்தில் எட்டுவித செயல்களைச் செய்யும் அற்புதம் நிகழ்த்துபவர். அவருடைய 60-ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி அவர்களுடைய மாணவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட மலர் லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளது. அதில் படித்த சில விஷயங்கள்:-

 

இவர் சிறுவயதிலேயே தமிழ்ச் செய்யுட்களைப் படிப்பதிலும் மனனம் செய்வத்திலும் ஆர்வம் காட்டி வந்தார். வளர் மதி (சந்திரன்) போல் இவர் மதியும் வளர்ந்தது. சிறுவயதிலேயே இவருக்கு செய்யுள் இயற்றும்  ஆ ற்ற லும் வாய்த்தது.

 

தினமும் பள்ளிக்கூடத்துக்குப் போகும் முன், தெருக்கோடியிலுள்ள பிள்ளையார் கோவிலில் தானே இயற்றிய ஒரு செய்யுளின் மூலம் பிரார்த்திப்பார். சக மாணவர்களை அழைத்து நீங்களும் துதிபாடுங்கள் என்று சொல்லிக் கொடுப்பார். இதோ முதலியார் செய்த துதி:-

 

வாத்தியார் சொல்லிவைக்கும் வண்மையுள்ள பாடமெல்லாம்

நேர்த்தியா யென்மனதில் நேர்மையுடன் — பூர்த்தியுறச்

சுந்தர விநாயகனே தூய்மை பெறு நின்றாளென்

சிந்தையினிலே யிருக்கச் செய்

 

(நின்றாள் = நின் தாள் = உன்னுடைய பாதங்கள்)

xxx

இவர் தந்தையார் தினமும் திருமுருகாற்றுப்படையைப் படிக்கும்படி சொல்லவே முதலியாரும் அவ்வாறே செய்து முருக பக்தர் ஆனார்.

 

இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் நாட்களில் ஒரு நாள் ஆசிரியர் “வாடியோட வனச மன்னன்” என்ற ‘திருவரம்பக் கலம்பகம்’ பாடல்

பற்றிப் பாடம் எடுத்தார். அதில் முருகன் ஓட என்ற வரிகள் வந்தது இவருக்குப் பிடிக்கவில்லை. இவரோ தீவிர சிவபக்தர். அதைப் படிக்க

மறுத்துவிட்டார். உடனே வாத்தியார், முதலியாரின் தந்தையிடம் இதைத் தெரிவித்தார்.

 

இதற்குப் பின்னர் 38ஆவது வயதில் முதலியார் பாடிய திரு ஒற்றியூர் கலம்பகத்தில் திருமால், லெட்சுமி, பிரம்மா எல்லோரும் ஓட என்னும் பொருள்படும் பாடலை இயற்றி தனது கோபத்தைத் தணித்துக்கொண்டார்!

xxx

பள்ளிக்கூடப் பாடம் படிக்கும்  நேரத்தில் படிக்காமல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தால் ஆசிரியருக்குப் பிடிக்காது. அந்தக் காலத்தில் வாத்தியார்கள், பிரம்பைக் கையில் எடுத்து  தண்டிப்பது வழக்கம்.இப்படி விளையாடிய மாணவர் அருகில், கலியாண சுந்தர முதலியாரும் நின்றிருந்தார். ஒவ்வொருவரையாக அடித்த வாத்தியார். முதலியாரையும் அடித்து வைத்தார். உடனே அவர் செய்யுள் வடிவில் தனது தந்தையிடம் புகார் கொடுத்தார். அந்தச் செய்யுளை, முதலியாரின் தந்தை ஆசிரியரிடம் எடுத்துச் சென்று காட்டியவுடன், வாத்தியார் தான் செய்த தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர் ஐரோப்பிய பிள்ளைகள் படித்த கத்தோலிக்க பாடசாலையில், முதலியாரைச் சேர்க்க அவரே உதவி செய்தார். ஆயினும் முதலியார், ஈராண்டுகள் அங்கே படித்துவிட்டு, தாலுக்கா பாடசாலையில் சேர்ந்து  தனது படிப்பைத் தொடர்ந்தார்.

 

 

இதோ முதலியார் சிறு பையனாக இருந்தபோது கொடுத்த புகார் மனு:-

 

எந்தவித குற்றமுமியானின்று செய்யாதிருக்க

என்றன் தொடையிலேன் சூடு வந்ததெனப்

பூரணமாய்க் கல்வி கற்ற பூங்கா வனக் கவியை

காரணநீ கேட்டிடுக கண்டு.

எந்தன் என்பது என்றன் — என்று இருக்க வேண்டும் என்பது அக்காலத்தில் முதலியாருக்குத் தெரியாது.

 

xxxx

 

 

ஒருநாள் பள்ளிக்கூடம் முடிந்து ஒரு கீரைத் தோட்டம் வழியாக மற்ற மாணவர்களுடன் முதலியாரும் நடந்து வந்துகொண்டிருந்தார். கீரைப் பாத்தியை பிள்ளைகள் மிதித்துவிட்டனர் என்பதால் சூரன் என்ற பெயருள்ள தோட்டக்காரன் எல்லோரையும் ஒரு வளார் கொண்டு விரட்டிக் கொண்டு வந்தான். எல்லோரும் ஓடிவிட்டனர். முதலியார் மற்றும் பொறுமையுடன் நின்றவுடன் அவருக்கு அடி விழுந்தது. உடனே கோபத்தில் கவி பொழிந்தார்.

 

தோட்டக்காரச் சூரன் றோன்றி வளாரடியைப்

போட்டான் முதுகில் பொறுக்கேனான் — தோட்டிதழ்சேர்

தாராரும் காளியே தாரணியிலன்னவனைப்

பாராமலேயிருக்கப் பண்

 

என்று தோட்டத்தின் மூலையில் இருந்த காளி கோவிலில் பாடிவிட்டு வந்தார். அந்தச் சூரன் அன்றிரவு தோட்டத்தில் தவறி விழுந்து கால் உடைந்து முடவன் ஆகிவிட்டான்.

 

பகுதி இரண்டில் அஷ்டாவதான அற்புதச் செயல்களைக் காண்போம்

 

தொடரும்……………

 

 

 

 

சிம்பல் SYMBOL மயம் உலகம்!(Post No.3586)

Germany Stamps with Swastika

Written by S NAGARAJAN

 

Date: 29 January 2017

 

Time uploaded in London:-  5-29 am

 

 

Post No.3586

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

பாக்யா 20-1-2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

சிம்பல் மயம் உலகம்!

 

ச.நாகராஜன்

 

சிம்பல் (Symbol) எனப்படும் அடையாளக் குறியீடு அல்லது சின்னம் இன்று உலகில் பெற்றுள்ள முக்கியத்துவம் மனித சரித்திரத்தின் பரிணாம வளர்ச்சியையே சுட்டிக் காட்டுகிறது.

ஆயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும் சுருங்கி விட்ட உலகத்தில் எந்த ஒரு மொழி பேசுபவருக்கும் ஒரு மௌன மொழியாக, பல இடங்களில் உயிர் காக்கும் கருவியாக, சிம்பல் விளங்குகிறது.

 

 

எதிரிலே ஒரு பாலம் வருகிறது, பாதை வளைகிறது, மெதுவாகப் போ, ஆபத்தான ஹேர் பின் பெண்ட் என்றெல்லாம் இந்த சிம்பல்கள் சுட்டிக் காட்டுவதால் அல்லவா மனிதன் உயிரிழப்பு இல்லாமல் நிம்மதியாக ஒரு இடத்தைச் சென்று சேர முடிகிறது!

மொழிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகத்தை சிம்பல்களினால் படைக்க முடியும் என்று இந்த அடையாளக் குறியீட்டில் ஆர்வம் உள்ளவர்கள்  சொல்கின்றனர்.

 

 

ஹென்றி ட்ரைஃபஸ் (Henry Dreyfuss )   என்பவர் இந்த அடையாளங்களைத் தொகுப்பதில் முன்னோடி. சுமார் இருபதினாயிரம் சிம்பல்களை அவர் உலகெங்குமிலிருந்து பல்வேறு நாகரிகங்கள், நாடுகளிலிருந்து தொகுத்திருக்கிறார். சிம்பல் சோர்ஸ்புக் (Symbol Sourcebook) என்ற அவரது புத்தகம் ஆயிரக்கணக்கான சிம்பல்களைச் சித்தரித்து அவற்றின் அர்த்தத்தையும் விளக்குகிறது; பார்ப்போருக்குப் பிரமிப்பையும் தருகிறது.

 

 

வரலாறில் சிம்பல்களின் தாக்கம் மகத்தானது.

இரண்டாம் உலகப்போரில் அசுர சக்தியாக விளங்கிய ஹிட்லர் பல நாடுகளுக்கும் சிம்ம சொப்ப்னமாக இருந்தான். அவனது கொடியில் ஸ்வஸ்திகா பொறிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் முடிவில் அவன் வீழ்ச்சியையே அடைந்தான்; தற்கொலை செய்து கொண்டான்.

ஹிந்துக்களின் நலச் சின்னமாகவும் புனித அடையாளக் குறியீடாகவும் காலமெல்லாம் விளங்கி வருவது ஸ்வஸ்திகா. கோவில்களில் தவ்றாமல் இடம் பெறும் சின்னமும் இதுவே.

இதில் இரு வகை உண்டு. வலப்பக்க சுழற்சி உடைய ஸ்வஸ்திகா தைவிக் ஸ்வஸ்திகா என்று குறிப்பிடப்பட்டு நல்லனவற்றைத் தரும் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. இதையே ஹிந்து ஆலயங்களில் காணலாம்,

 

 

ஆனால் உலகின் அதிர்ஷ்டத்தின் காரணமாக ஹிட்லர் ஸ்வஸ்திகாவின் சுழற்சியை இடப்பக்கமாக மாற்றி அதை 45 டிகிரி கோணத்தில் வேறு வளைத்து தீமையைத் தரும் ஆசுரிக் ஸ்வஸ்திகாவைத் தேர்ந்தெடுத்தான். விளைவு, அசுர வேகத்தில் முன்னேறிய அவன் அதல பாதாளத்தில் வீழ்ந்தான்.

பண்டைய ரோமில் பாதாளக் கல்லறைகளிலும் இந்த ஸ்வஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது ஒரு அதிசய செய்தி. திபெத்திய சுவடிகள், குகைகள் மற்றும் ஆலயங்களிலும் ஸ்வஸ்திகா இடம் பெற்றுள்ளது.

 

 

 

இரண்டாம் உலகப் போரில் வி (V) என்ற வெற்றிச் சின்னத்தை தன் இரு விரல்களில் மூலம் காட்டினார் வின்ஸ்டன் சர்ச்சில். கையின் பின்புறம் தன்னை நோக்கி இருந்து ‘வி’-ஐப் பார்ப்போருக்குக் காண்பித்தால்,அது வெற்றி.

 

 

காண்பிப்பவரை நோக்கி உள்ளங்கை இருந்து இரு விரல்களைக் காண்பித்தால் அது அடுத்தவரை அவமானப்படுத்தும் சைகை.  சர்ச்சில் வெற்றிக்கான சைகையை வடிவமைத்து 1941, ஜூலை,20 ஆம் தேதி பிபிசி மூலம் பிரிட்டனில் அதை பிரபலப் படுத்தினார்.

மக்கள் திலகம் எம் ஜி ஆரும் இந்த வி சைகையையும் இரட்டை இலையையும் மக்களிடையே உற்சாகமாகப் பரப்பி தொடர் வெற்றி கண்டதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது.

ஆக உலக தலைவர்கள் அனைவருமே சிம்பல்களில் தனிக் கவனம் செலுத்துவது அதன் மூலம் மக்களை உத்வேகமூட்டி ஒரு பெரிய வெற்றிக்கு அழைத்துச் செல்வதற்கே.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 2008ஆம் ஆண்டு தனது தேர்தல் பிர்ச்சாரத்தின் போது தவறாமல் கையில் எடுத்துச் சென்றது ஹனுமானின் படத்தையே. இதை அப்போதைய எகனாமிக்ஸ் டைம்ஸ் (10-6-2008இதழ்) வெளியிட்டது.

 

 

இஸ்ரேலில் புனிதமாகக் கொண்டாடப்படும் ஸ்டார் ஆஃப் டேவிட் தென்னிந்தியக் கோவில்களில் தவறாமல் இடம் பெறுகிறது. முருகனின் அருளைப் பெற ஷட் கோணத்தை முருக பக்தர்கள் வீட்டில் வைத்து வழி படுகின்றனர்.

ஸ்ரீ சக்ரத்தின் பெருமையை அலெக்ஸி குலைச்சேவ் என்ற ரஷியர் பிரம்மாண்டமான் ஆய்வு செய்து பிரமிக்க வைக்கும் உண்மகளை ஆய்வு முடிவாகத் தந்திருக்கிறார்.ஸ்ரீ சக்ரத்தில் உள்ள ஒன்பது முக்கோணங்கள் ஒன்றை ஒன்று வெட்டினால் ஏற்படும் சந்திப்புப் புள்ளிகள் எவ்வாறு பல்வேறு புள்ளிகளுடன் ஒன்றோடு ஒன்று இணையும் என்ற கண்டுபிடிப்பும், அத்துடன் கூட இன்னும் விளங்கிக் கொள்ள் முடியாத விடை காண இயலாத அநேக அறிவியல் விளக்கங்களும் இந்த யந்திரத்தில் உள்ளன என்கிறார் அவர். ஸ்ரீ சக்ரத்தில் உள்ள சிக்கலான கணிதத்தை நவீன தலைமுறை கம்ப்யூட்டர்கள் கூட விடுவிக்க முடியவில்லை என்ற அவரது கூற்று நம்மை பிரமிக்க வைக்கிறது!

இந்த யந்திரத்தின் பல்வேறு ம்ஹிமைகளைப் பட்டியலிடும் அவர் எப்படி இந்த யந்திரம் பண்டைய காலத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது என்று வியக்கிறார்!

 

புத்த மதத்தினரின் தர்ம சக்கரம் உள்ளிட்ட நல்ல அடையாளக் குறியீடுகள் காலம் காலமாக பலன் அளித்து வருவதை பௌத்தர்கள் உணர்ந்து இன்றும் அவற்றை விடாமல் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அதிர்ஷ்ட சிம்பல்களை இனம் காட்டி உலகெங்கும் விற்பனை செய்யும் பல்வேறு நிறுவனங்கள் பணத்தில் கொழிப்பது கண்கூடாக நாம் இன்று பார்க்கும் உண்மை.

 

அமெரிக்க டாலர் இன்றும் உலகின் செல்வாக்கு மிக்க கரன்ஸியாக விளங்குவதற்கான காரணம் அதில் உள்ள பிரமிடும் கண்ணுமே என்பதை சிம்பல் ஆய்வாளர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர் (பாக்யா இதழில் அமெரிக்க டாலர் மர்மம் பற்றி ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது). அமெரிக்காவை நிறுவும் போது அதை ஸ்தாபித்த தலைவர்கள் செல்வாக்கு மிக்க சக்தியாக அமெரிக்காவை நீடுழி காலம் இருக்குமாறு செய்ய  இப்படிப்பட்ட பல இரகசிய சிம்பல்களை அமெரிக்க வாழ்க்கை முறையில் புகுத்தி விட்டிருக்கின்றனர் என்பதை வரலாறு தெரிவிக்கிறது.


 

உலகியல் வாழ்க்கைக்கு இன்று இன்றியமையாதது சிம்பலே. கணிதத்தின் சமன்பாடுகள், தொழிற்சாலையில் பல விஷயங்களை எளிதில் சுட்டிக் காட்டும் வழிகாட்டிகள், அறிவியலில் பலவற்றையும் விளக்கும் விளக்கக் குறியீடுகள், நெடுஞ்சாலைகள், விமானதளங்கள், கடல் வழிகள் என அங்கிங்கெனாதபடி எங்கும் வழிகாட்ட உதவும் அடையாளச் சின்னங்கள் ஆகியவை மட்டும் இல்லையெனில் இன்று வாழ்க்கை முறையாக நடைபெறாது. சிம்பல் இல்லாத உலகம் விபத்துள்ள உலகமாக ஆகி விடும்.

நமது அன்றாட வாழ்க்கை முறையில் ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்ப ஒரு சிம்பலைத் தேர்ந்தெடுக்க அவரவர் வாழ்க்கை முறை, தேசீயம், மதம் வழி வகுக்கிறது.

இந்த சிம்பல்களில் வெவ்வேறு வண்ணங்களும் சேர்க்கப்படும் போது அதன் மகத்துவம் பன்மடங்கு பெருகி விடுகிறது. கலர் தெராபி என்பது இன்றைய உலகில் பெரும் சிகிச்சை முறையாக உருவெடுத்து வரும் நிலையில் வண்ணங்களை இடம் அறிந்து பாரம்பரியமாக உள்ள சிம்பல்களில் நமது முன்னோர் இணைத்திருப்பது ஒரு பிரமிப்பூட்டும் செய்தியே!

சரியான சிம்பலை ஒருவர் நாடி அதை உரிய அளவின் படி செய்து நிர்ணயிக்கப்பட்ட வண்ணங்களையும் சேர்த்து வைத்துக் கொண்டால் அது அவருக்கு வேண்டியதைத் தந்து விடும். இதன் உண்மையை அனுபவத்தில் அறியலாம்!

மொத்தத்தில் சிம்பல்  மயம் உலகம்!

*****

 

மன்னர்கள் கால்கள் சிவந்தது எப்படி? (Post N0.3581)

Written by London swaminathan

 

Date: 27 January 2017

 

Time uploaded in London:- 10-30 am

 

Post No.3581

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

மன்னர்கள் கால்கள் சிவந்தது எப்படி?

 

தமிழ் மொழியிலும் சம்ஸ்கிருத மொழியிலும் ஏராளமான உவமைகள் ஒரே மாதிரி இருப்பதும், அவை உலகின் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் இல்லாததும் இரண்டு விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

 

 

 

போக்குவரத்து, தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரே பண்பாடு இருந்தது முதல் விஷயம்.

ஆரிய-திராவிட வாதம் கட்டுக்கதை என்பது இரண்டாவது விஷயம். அப்படி ஆரியரோ தமிழரோ வெளிநட்டிலிருந்து வந்திருந்தால் அங்கெல்லாம் இந்த உவமைகள் இருந்திருக்க வேண்டும்.

 

 

இதுவரை நூற்றுக் கணக்கான ஒற்றுமைகளைக் காட்டிவிட்டேன். இன்று மேலும் ஒரு காட்சியினைக் காண்போம்.

ரகுவம்சம் (9-13)

இந்திரனை தேவர்கள் எவ்வாறு பயபக்தியுடன் வணங்குவரோ, அவ்வாறே நூற்றுக் கணக்கான சிற்றரசர்கள் எல்லோரும் தசரதனின் கால்களில் விழுந்து வணங்கினர். அவர்கள் தங்கள் மணி முடிகளைச் சாய்த்தபோது தசரதனின் நகங்களின் ஒளி அதிகப்படுத்தியது. அதாவது முடிகளை தசரதனின் கால்களில் படாதவாறு பயபக்தியுடன் கிரீட ஒளி மட்டும் படும் தூரத்தில் வைத்து வனங்கினர். இதனால் தசரதனின் கால் விரல்கள் ஒளிவீசின.

 

 

 

ரகுவம்சம் (4-88)

ரகுவின் பாதங்களில் கொடி, கலசம், குடை ஆகியன ரேகை வடிவில் இருந்தன (சாமுத்ரிகா லக்ஷணம்). அவனிடமிருந்து விடை பெற்றுச் சென்ற சிற்றரசர்கள் அவன் காலில் விழுந்து தலையால்வ ணங்கியதால், அரசர்களின் முடியிலுள்ள மாலைகளிலிருந்து மகரந்தப் பெடிகளும் தேனும் விழுந்து அவனுடைய கால் விரல்கலைச் சிவக்கச் செய்தன.

 

ரகுவம்சம் (17-28)

அதிதி, சிம்மாசனத்தில் அமர்ந்தான். அதன் பாத பீடம் அரசர்களினின் மணிமுடிகள் வணங்கி, வணங்கி தேய்ந்து போயிருந்தன. விதானத்துடன் கூடிய அந்த தந்தையின் சிம்மாசனத்தில் அவன் அமர்ந்தான்.

 

 

இது போல காளிதாசன், அவனுடைய விக்ரம ஊர்வசீய நாடகத்திலும் குமார சம்பவ காவியத்திலும் பல இடங்களில் சொல்லுவான்.

 

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும்  துதிப்பாடல்களிலும் இவ்வாறு தேவியின் பாத கமலங்களில் மன்னர் முதல் எல்லோரும் வணங்கியதால் அவள் பாதம் சிவந்ததாக எழுதியுள்ளனர்.

 

சங்க காலத் தமிழ்ப் பாடல்களிலேயே இவ்வாறு இருக்கின்றன. சிலப்பதிகாரம் போன்ற காவியங்களிலும் உண்டு.

இதோ ஓரிரு எடுத்துக் காட்டுகள் மட்டும்:-

 

பட்டினப்பாலை (292-294)

 

மின்னொளி யெறிப்பத் தம்மொளி மழுங்கி,

விசிபிணி முழவின் வேந்தர் சூடிய

பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்கால்

 

திருமாவளவன் பற்றி உருத்திரங்கண்ணனார் பாடுகிறார்:

திருமாவளவனின் எயில் ஒளி வீசுவதால் பகைவர் அஞ்சி வந்தனர்; அவனது காலடியில் விழுந்தனர். அவ்வாறு அவர்கள் விழுந்து வணங்குதலால் அவர்களுடைய முடிகளில் உள்ள ரத்தினங்களின் ஒளியைப் பருகிய கழலணிந்த கால்களை உடையவன்…………….

 

 

காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதியில்:

விசும்பில் விதியுடைய

விண்ணோர் பணிந்து

பசும்பொன் மணிமகுடம்

தேய்ப்ப- முசிந்தெங்கும்

எந்தாய் தழும்பேறி

யேபாவம் பொல்லாவாம்

அந்தா மரைபோல் அடி— என்பார்

 

பொருள்:-

எம் தந்தையாகிய சிவபெருமானே! தேவர்கள் அல்லும் பகலும் உன் காலடிகளில் விழுந்து வணங்குகின்றனர். அதனால் பொன்னாலாகிய அவர்களுடைய மணிமகுடங்கள் உமது திருவடிகளில் உராய்வதனால் தழும்பேறி விட்டனவே. அழகிய செந்தாமரை நிர்றத்தில் உன் பாதங்கள் இதனால் சிவந்தனவோ—

 

இதை ஆதி சங்கரர் தேவியின் திருப்பாதங்களுக்குப் பயன்படுத்தி சம்ஸ்கிருதத்தில் கவி பொழிந்துள்ளார்.

 

இமயம் முதல் குமரி வரை ஒரே உவமைகள், ஒரே பண்பாடு!

 

–சுபம்–

 

தலையில் இருந்தால் முடி, கீழே விழுந்தால் மயிர்- வள்ளுவர் குறள் (Post No.3566)

Written by London swaminathan

 

Date: 22 January 2017

 

Time uploaded in London:- 15-42

 

Post No.3566

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

தமிழ்ப் புலவர்கள், நமக்குச் சொல்ல வேண்டிய விஷயங்களை எவ்வளவு வலுவாக– வலியுறுத்திச் சொல்ல வேண்டுமோ– அவ்வளவுக்குச் சொல்லுவர் அதற்கேற்ற உவமைகளையும் எடுத்தாள்வர்.

 

வள்ளுவப் பெருமான் “மயிர்” என்ற சொல்லை இரண்டு குறள்களில் பயன்படுத்துகிறார். மானம் என்ற , அ,,,,,,காரத்தில் அவைகளை வைத்திருப்பது பொருத்தமாக உள்ளது. நாம் யாரையேனும் அல்லது எ தையேனும் மட்டம் தட்ட வேண்டுமானால் “என் மயிர் போச்சு” என்று இழித்துரைக்கிறோம்; பழித்துப் பேசுகிறோம். ஆனால் அதே மயிர் தலையில் இருக்கும் வரை அதைச் சீவி முடித்து சிங்காரித்துப் பாராட்டுகிறோம். மயிருள்ள சீமாட்டி எஸ் கொண்டையும் போடுவாள் ஒய் கொண்டையும் போடுவாள் என்பது பழமொழி. அது மட்டுமல்ல. கணவன் வெளியூர் சென்றுவிட்டால் மனைவி சிகை அலங்காரம் செய்ய மாட்டாள் என்பது சம்ஸ்கிருத , தமிழ் இலக்கியங்களில் உள்ளது.  இமயம் முதல் குமரி வரை ஒரே பண்பாடு என்பதை  இது காட்டுகிறது. ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கை உடையோரின் மூஞ்சியில் இது  கரி பூசுகிறது.

 

 

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலயின் இழிந்தக் கடை (குறள் 964)

 

மக்கள் நெறி தவறி, உயர்ந்த நிலையிலிருந்து கீழே விழுந்தால், தலையிலிருந்து விழுந்த மயிர் போல ஆவர்.

 

மயிர் நீப்பின் வாழாக் கவரி மா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின்  (குறள் 969)

 

தன் உடம்பிலிருந்து ஒரு மயிர் நீங்கினாலும் வாழ விரும்பாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் போனால் உடனே உயிர் நீப்பர்.

 

விவேக சிந்தாமணி என்னும் நூலிலும் இதே கருத்தைக் கூறும் இரண்டு பாடல்கள் உள்ளன:-

 

மானம் உள்ளோர்கள் தன்னோர்

மயிர் அறின் உயிர் வாழாத

கானுறு கவரிமான் போல

கனம்பெறு புகழே பூண்பார்

மானம் ஒன்று இல்லார் தாமும்

மழுங்கலாய்ச் சவங்களாக

ஈனமாம் கழுதைக்கு ஒப்பாய்

இருப்பர் என்று உரைக்கலாமே.

 

இந்தப் பாடல் குறளில் வரும் அதே கவரிமான் கதையைச் சொல்லுகிறது. இன்னொரு பாடல், அது அது இருக்க வேண்டிய இடத்தில்தான் மதிப்பு என்கிறது.

 

சங்கு வெண் தாமரைக்குத்

தந்தை தாய் இரவி தண்ணீர்;

அங்கு அதைக் கொய்துவிட்டால்

அழுகச் செய்து அந்நீர் கொல்லும்;

துங்க வெண் கரையில் போட்டால்

சூரியன் காய்ந்து கொல்வான்;

தங்கள் நிலைமை கெட்டால்

இப்படித் தயங்குவாரே

 

பொருள்:-

சங்கு போன்ற வெள்ளைத் தாமரைக்கு, சூரியனும் தண்ணீரும் தாய், தந்தை ஆவர். ஆனால் அதே தாமரையைக் கொய்து தண்ணீரில் போட்டால் அதுவே அழுகச் செய்து விடும். கரையில் போட்டாலோ சூரியன் காயவைத்துக் கொல்வான். அது போலவே தங்களுடைய நிலை கெட்டு வேறிடத்தில் இருந்தால் கஷ்டப்படுவர்.

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா

 

கவிஞர் கண்ணதாசனும் இக்கருத்தை வலியுறுத்தும் பாடலை சூரியகாந்தி படத்தில் பாடி இருக்கிறார்.

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

 

–subham–

பட்டினத்தாரும் பம்பர விளையாட்டும்! (Post No.3563)

Written by London swaminathan

 

Date: 21 January 2017

 

Time uploaded in London:- 9-17 am

 

Post No.3563

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

 

பெரிய தத்துவங்களை அன்றாடம் காணும் சிறிய பொருட்களைக் கொண்டு விளக்குவதில் சமர்த்தர் பட்டினத்தார். காதற்ற ஊசி, ஒன்பது வாய் தோல் பை, எண் சாண் உடம்பு, ஆற்றில் கரைத்த புளி, ஒருவன் வாழ்நாளில் மூன்று முறை முழங்கும் சங்கு, உளியிட்ட கல் என்று நிறைய அழகான எடுத்துக்காட்டுகளையும் உவமைகளையும் நமக்களிக்கிறார்.

 

அவர் சிறு வயதில் நாம் எல்லோரும் விளையாடிய பம்பரத்தையும் பட்டத்தையும் கூடப் பாடலில் பதித்து, நம் மனதில் அரிய கருத்துகளைப் புதைக்கிறார்.

 

நமது உடல் பற்றி சந்யாசிகள் என்ன சொல்கிறார்கள் என்பது அத்தனையையும் சிலவரிகளில் சொல்லும் அழகே தனி அழகு!

 

 

 

பீற்றல் துண்டம் பேய்ச்சுரைத் தோட்டம்

அடலைப் பெரிய சுடலைத் திடருள்

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்

ஓயா நோய்க்கிடம் ஓடு மரக்கலம்

மாயா விகாரம் மரணப் பஞ்சரம்

சோற்றுத் துருத்தி கானப் பட்டம்

விதி வழித் தருமன் வெட்டும் கட்டை

சதுர்முகப் பாணன் தைக்கும் சட்டை

ஈமக் கனலில் இடு விருந்து

காமக் கனலில் கருகும் சருகு

 

என்று கோயில் திருப்பதிகத்தில் பாடி நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். இப்படிப்பட்ட உஅடலுக்குத் தான் நாம் தினமும் அலங்காரம் செய்டு நேரத்தை வீணாக்குகிறொம். இதைவிட முக்கியமான விஷயங்களைப் புறக்கணிக்கிறோம் என்பது ப்ட்டினத்தாரின் ஆதங்கம்.

 

ஒரு அழகான வாலிபன் அல்லது யுவதியின் 20 வயதுப் படத்தையும் எண்பது வயதுப் படத்தையும் அகுகருகே வைத்துப் பார்த்தால் பட்டினத்தார் சொல்லும் செய்தி நன்கு விளங்கும்.

 

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம், கானப் பட்டம் (காற்றில் சலசலக்கும் பட்டம்) என்பன மிகவும் அருமையான உவமைகள்.

திருவள்ளுவரும் இந்த உடல் போடும் ஆட்ட பாட்டங்களை நமக்கு நினைவு படுத்துகிறார்:-

 

நில்லாதனவற்றை நிலையின என்றுணரும்

புல்லறிவாண்மை கடை (குறள் 331)

 

உலகில் அழியக்கூடிய பொருட்களை நிலையாக இருக்கப்போகிறது என்று எண்ணினால் அந்த சிற்றறிவு ஒருவருக்கு இழிவான நிலை ஆகும்.

 

இதை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்று அதே அதிகாரத்தில் (நிலையாமை) வேறு ஒரு குறளில் சொல்லிவிட்டார்:-

 

நாச்செற்று விக்குள் மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப்படும் (335)

 

நாக்கு பேச முடியாமல் இழுத்துக்கொண்டு கடைசி விக்கல் (மரணம்) வருவதற்கு முன்னரே ஒருவன் விரைவாக தரும கைங்கரியங்களைச் செய்ய வேண்டும். நல்லறங்களைச் செய்ய வேண்டும்.

 

ஒன்றே செய்க, அதுவும் நன்றே செய்க, அதையும் இன்றே செய்க என்ற ஆன்றோரின் வாக்கை இதை விட தெளிவாக எப்படிச் சொல்ல முடியும்?

 

 

இன்னொரு இடத்தில் பம்பரத்தையும் காற்றாடியையும் குறிப்பிடுகிறார் பட்டினத்தார்!

 

கோபத்தீ மூட்டும் கொல்லன் துருத்தியை

ஐம்புலப் பறவை விளைமரப் பொதும்பை

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரத்தை

காசில் பணத்தில் சுழலும் காற்றாடியை

 

என்று அடுக்கிக் கொண்டே போய்

 

எம்பெருமான் நின் இணையடிக்கபயம்

அம்பலத் தரசே அடைக்கலம் உனக்கே

 

என்று இறைவனிடம் சரண் அடைந்து விடுகிறார். கோபத்தால் நாம் அனல் பறக்கும் மூச்சு விடுவதை ‘கொல்லன் துருத்தி’ என்றும் காசுக்காக நாம் ஆளாய்ப் பறப்பதை ‘காற்றாடி’ என்றும் சொல்லி கடவுளின் காலில்

விழுகிறார்.

 

அதுவும் கூட வள்ளுவன் சொன்னதே!

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல (குறள் 4)

 

விருப்பு வெறுப்பற்ற கடவுளின் காலில் விழுந்தவருக்கு எந்தக் காலத்திலும் துன்பம் வராது — என்கிறான் வள்ளுவனும்.

 

நாமும் பட்டினத்தார், வள்ளுவன் வாய்ச்சொல் வழி நிற்போம்.

 

–சுபம்–

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 20 (Post No.3562)

Written by S NAGARAJAN

 

Date: 21 January 2017

 

Time uploaded in London:-  7-17 am

 

 

Post No.3562

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 20

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 5

 

by ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்

  • கல்கி என்ற புனைபெயரில் நாம் அறிந்த ரா.கிருஷ்ணமூர்த்தி காந்தி ஆசிரமத்திலிருந்து எழுதிய ஒரு கட்டுரை குமரி மலரில் வெளியிடப்பட்டிருக்கிறது. எனது குருநாதர் பாரதியார்

பாரதியாரை நான் கண்ணால் பார்த்ததில்லை. ஆனால் அவரையே எனது பரம குருநாதராய்க் கொண்டிருக்கிறேன். எனக்கு தேசபக்தி ஊட்டியவ்ர் பாரதியார்.தாய்மொழிப் பற்றை அருளியவர் பாரதியார்.கவிதையின்பம் துய்க்கும் ஆற்றலை அளித்தவர் பாரதியார். ரஸிகர்களின் நட்பாகிய பெரும் பாக்கியத்தைத் தந்தவர் பாரதியார். என்னைப் போன்ற பரமானந்த சிஷ்யர்கள் தற்போது பாரதியாருக்குத் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்காக இருக்கின்றனர்.

 

     வங்காளியும் மகாராஷ்டிரமும், மலையாளமும், குஜராத்தியும் இந்நாளில் அடைந்திருக்கும் முன்னேற்றத்தையும், தமிழ் மொழியின் தற்கால ஈனஸ்திதியையும் எண்ணும்போது பெரும் மனச்சோர்வு அடைகிறேன். ஆனால் பாரதியாரின் ஒரு பாட்டின் ஓர் அடியைப் பாடியதும் இந்த மனச்சோர்வெல்லாம் பறந்து போகின்றது. நமது ஜாதி இன்னும் பெரிய காரியங்களைச் செய்யப் போகிறது என்னும் நம்பிக்கை உடனே பிறக்கிறது.

 

     தமிழ் சமூகத்தில் இன்னும் பாரதியார் தமக்குரிய ஸ்தானத்தை அடையவில்லை. யென்றே தோன்றுகிறது. பாடகர்களும், நாடகக்காரர்களும், பாரதியாரின் பாட்டைப் பாடாமல் வேறு ஏதோ ஹிந்துஸ்தானி மெட்டிலுள்ள அர்த்தமில்லாத அசட்டுப் பாடல்களையே தேசீய கீதமென்று பாடி வருகிறார்கள்.அவைகளைக் கேட்டு ரஸிகர்களும் ஆரவாரிக்கின்றார்கள். இந்தப் பாடல்கள் கேவலம் பிணங்களைப் போல உயிரற்று, கவிதையற்று வெறும் சொல்லடுக்குகளாயிருப்பதைக் காண்கிறேன். என்று இந்த போலி தேசீயக் கீதங்கள் மறைந்து பாரதியாரின் பாடல்கள் பாடப்படுமோ அந்த நாளுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.

 

  • ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி)

    காந்தி ஆசிரமம்

‘சுதந்திரச் சங்கு’ 9-9-1931 

39)  அடுத்து இலக்கியத் தலைவன் பாரதியார் என்ற தலைப்பில் சுதந்திரச் சங்கு இதழில் சங்கு சுப்பிரமணியன் எழுதிய க்ட்டுரை வெளியாகியுள்ளது.

  இலக்கியத் தலைவன் பாரதியார்

 

     எனது குருநாதர் பாரதியாரின் திரு உடலைத் தரிசித்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் அவரது பாடல்களை நான் எண்ணாத நாட்களில்லை. யான் எழுதும் வரிகளிலெல்லாம், சொல்லும் மொழிகளிலெல்லாம் அவரது சொற்கள் என்னையறியாமலே கலந்து வருகின்றவாதலால் அவர் என்னோடு இன்றும் இருப்பதாகவே நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

 

   இன்ப நாட்களில் பெருமிதத்தை ஊட்டுவதாயும், துன்ப நினைவுகளேற்படும்போது அவைகளை மாற்றும் மருந்தாகவும் இருப்பது பாரதியாரின் கவிதைகள். அவரது  காதற் பாட்டுகளையும், ‘காணி நிலம் வேண்டும்’ என்ப்ன போன்ற பாக்களையும் பாடும் போது இன்பம் பெருகுகின்றது.

     ‘தாய்த் திருநாடெனில்’ ‘இனிக் கையை விரியோம்’ என்பன போன்ற அவரது வரிகளை வாய்விட்டுக் கதறிக் கூறும்போது நம் தேசபக்தி அதிகமாகின்றது.

 

      இன்னொரு அனுபவத்தைச் சொல்லுகிறேன். அன்று கண்ணன் பிறந்த தினம் – நான் அலிபுறம் சிறையில் இருந்தேன் – என் மனத்தை அரிவாளால் பிளப்பது போன்ற ஓர் செய்தியை அன்று காலை எனக்கு வந்த கடிதத்தில் பார்த்தேன். என் மனமே மனத்தைத் தின்னத் தொடங்கிற்று. – அந்தச் சிறையின் மூலை, முடுக்குகளின் தனிமையும், அறையிலுள்ள நண்பர்களின் கூட்டமும் எனக்கு ஆறுதலளிக்கவில்லை.

   அச்சமயத்தில் ஓர் அன்பர் என்னை அணுகினார். ‘சங்கு ஸார்! இன்று ஜன்மாஷ்டமியாச்சே! கண்ணன் பாட்டு பாடலாகாதா?’ என்றார் அவர். அவருக்காக அன்பர்கள்  மத்தியில் உட்கார்ந்து கொண்டு பாடினேன். பாடப்பாட என்னைக் கவர்ந்திருந்த துயர்ப்படலம் மறைந்தது. பாரதியாரின் பாடல்கள் துயருற்ற தமிழருக்கு ஆறுதலளிக்கும் வண்மையுடையன என்பதை அன்று நான் உணர்ந்தேன்.

 

   தமிழ் மொழிக்குப் புதிய நடையையும், புதிய இலக்கியங்களையும் சிருஷ்டித்துத் தருவதற்கு அநேக இளைஞர்கள் முயன்று வருகிறார்கள். இவ்வளவு பேருக்கும் வழிகாட்டிய குருநாதன் பாரதியார் தான். இவ்வாறாக பாரதியார் எங்களுக்கு இலக்கியத் தலைவனாக இருந்து வருகிறார்.

 

   அவரது வாழ்க்கையினின்று என்னைப் போன்றவர்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. ‘எத்தகைய துன்பங்களுற்றாலும், பட்டினி கிடந்தாலும் தேசப் பணியையும் தாய்மொழித் தொண்டையும் மறக்கலாகாது’ என்பதே அந்தப் படிப்பினை.

 

                    கம்பனைப் பெற்ற நாட்டில்

                      கவிமணம் ஓயு நாளில்

                    வம்பரின் மந்தை தன்னில்

                       வளர்த்திட தேசபக்தி

                    உம்பர் மா உலகதாக

                       உயர்ந்திடத் தமிழகத்தை

                    அம்புவி வந்த வீரர்

                        அருங்கவி பாரதியே!

                         வாழ்க பாரதியார்!

                      -சங்கு சுப்பிரமணியன்

                     ‘சுதந்திரச் சங்கு’

                       9-9-1931

குமரி மலர் பத்திரிகையின் பழைய இதழ்கள் பாரதியார் பற்றிய ஒரு கலைக்களஞ்சியம். இன்னும் சில கட்டுரைகளைப் பார்ப்போம்

                 – தொடரும்

     *****

 

கம்ப ராமாயணத்தில் கண்ணாமூச்சி! (Post No.3556)

Written by London swaminathan

 

Date: 18 January 2017

 

Time uploaded in London:- 22-14

 

Post No.3556

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

 

கண்ணாமூச்சி விளையாட்டு உலகெங்கிலும் விளையாடப்படுகிறது. இது தமிழன் கண்டுபிடித்த விளையாட்டோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் மேலை உலகத்தில் கிரேக்கர்கள் முதல் முதலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதற்கும் முன்னரே 2000 ஆண்டுப் பழமையான சங்கத் தமிழ் இலக்கியத்திலும் அதற்கு ஆயிரம் ஆண்டுக ளுக்குப் பின்னர் வந்த கம்பராமாயணத்திலும் காணப்படுகிறது. ஒரே ஒரு வித்தியாசம் பழங்காலத்தில் இதைப் பெண்கள் விளையாடியதாகவே தமிழ் இலக்கியமும் சம்ஸ்கிருத இலக்கியமும் சொல்கின்றன.

பார்வதி, சிவ பெருமானின் கண்களை மூடி விளையாடியதாகவும் உடனே உலகமே இருண்டதாகவும், அதன் காரணமாக உலகிற்கு ஒளியூட்ட சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்க நேரிட்டது என்றும் புராணங்கள் செப்பும்.

 

முதலில் கம்ப ராமாயணப் பாடலைப் படித்து ரசிப்போம்:-

 

கம்பராமாயணம், பால காண்டம்

 

பொன்னே தேனே பூமகளே காண் எனை என்னா

தந் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி

இன்னே என்னைக் காணுதி நீ என்று இகலி தன்

நல் நீலக் கண் கையின் மறைத்து நகுவாளும்

 

பொருள்:-

 

தனக்கு நிகராக எவரையும் பெறாத ஒரு மங்கை, “பொன் போன்றவளே! தேனே! இலக்குமி போன்ற செல்வமுடையாளே! நான் ஒளிந்து கொள்கிறேன். நீ என்னைக் கண்டுபிடி பார்க்கலாம் என்று தோழியிடம் கூறினாள். அந்த்ச் சோலையில் மலர்ச் செடிகளும் புதர்களும் மண்டிக் கிடக்கும் இடத்தில் ஒளிந்து கொண்டாள். தோழி அவளைக் கண்டுபிடிக்க முடியாதபோது, பின்னே வந்து தோழியின் கருங்குவளை மலர் போன்ற பொத்திக் கொண்டு, “நீ இப்போது என்னைக் காண்பாயாக” என்று சொல்லி சிரித்தாள்.

 

 

கம்ப ராமாயணத்துக்கு முன்னரே சங்க கால இலக்கியத்தில் கண்பொத்தி விளையாடும் குறிப்பு கிடைக்கின்றது:

சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை யன்ன

நலம்பெறு கையின் என் கண்புதைத்தோயே

பாயல் இந்துணையாகிய பனைத்தோள்

தோகை மாட்சிய மடந்தை

நீயலது உளரோ என் நெஞ்சமர்ந்தோரே (293, ஐங்குறு நூறு)

 

 

பொருள்: மலையில் மணம் கமழும் காந்தள் போன்ற விரல்களால் என் கண்களைப் பொத்திய என் நங்காய், என் நெஞ்சில் என்றும் வீற்றிருப்பவர் பாயலில் என் மனதுக்கினிய துணைவியாகிய மயில் போன்றவளே. மனைத்தக்க மாண்புடைய மடந்தை நீயன்றி பிறர் யாருளர்? எதற்காக என் கண்ணைப் புதைத்தனை? (தலைமகன், தலைவியைப் பார்த்துச் சொன்னது)

 

 

இந்த விளையாட்டு எப்படி தோன்றியது?

தாய்மார்கள், குழந்தையை விட்டு விலகிச் சென்றால், சிறிது நேரத்தில் அழத் துவங்கும். சில நேரங்களில் குழந்தையை அழவிட்டு வேடிக்கை பார்க்க தாய்மார்கள் கதவுக்குப் பின்னாலோ, திரைக்குப் பின்னாலோ நிற்பர். குழந்தை அழுவதற்கு முன்னர், அதன் முன் தோன்றி கொஞ்சும் மொழிக ளைச் சொன்னவுடன் குழந்தை சிரிக்கும். அதைக் கண்டு தாய்மார்கள் மகிழ்வர். குழந்தை வளர்ந்த பின்னரும் இது நீடிக்கும். பின்னர் குழந்தை களே தமக்குள் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை ஆடத் துவங்கும். ஆதி மனிதன், குகைகளில் வாழ்ந்த காலத்தில் தன் மகன்களையும் கொஞ்ச நேரம் தவிக்கவிட்டுப் பின்னர் அவர்கள் முன் தோன்றி ஆனந்தப் படுத்தி இருப்பன். ஆகவே இது மிகப் பழங்கால விளையாட்டுகளில் ஒன்றாகும்.

 

இதை, கண்களில் துணியைக் கட்டிவிட்டு சுற்றி நின்றும் விளையடலாம். அல்லது ஒருவர் கண்ணைப் பொத்தி இருக்கையில் மற்றவர்கள் ஓடி ஒளிந்துகொண்ட வகையிலும் ஆடலாம்..

இந்த விளையாட்டில் பல சாதகங்கள் உள்ளன:

காசு பணம் தேவை இல்லை.

விளையாட விசேஷ பலகையோ, காய்களோ தேவை இல்லை

எத்தனை பேர் வேண்டுமானாலும், எந்த இடத்திலும், எவ்வளவு நேரம் ஆனாலும் விளையாடலாம்.

வயது வரம்போ, கால வரம்போ கிடையாது.

நல்ல உடற்பயிற்சியும் மனத் தெளிவும் பிறக்கும்.

பலருடன் தோளொடு தோள் உரசி ஆடுவதால் சகோதரத்துவம் வளரும்.

உலகிலேயே மிகப்பெரிய கண்ணாமூச்சி ஆட்டம் கேம்பிரிட்ஜ் அருகில் மில்டன் பூங்காவில் 2016 செப்டம்பரில்  நடந்தது. ஆயிரத்தும் மேலானோர் கலந்துகொண்டனர்..

–Subham–

 

தொல்காப்பியருக்கு நவரசத்தில் ஒரு ரசம் குறைந்தது ஏன்? (Post No.3553)

Written by London swaminathan

 

Date: 17 January 2017

 

Time uploaded in London:- 22-09

 

Post No.3553

 

 

Pictures are taken from different sources; thanks.

Pictures from Dhanyavarshini’s posts on Facebook; thanks

 

contact:– swami_48@yahoo.com

 

பரத நாட்டிய சாஸ்திரத்தில் ஒன்பது ரசங்கள், முக பாவங்கள், உணர்ச்சி வெளிப்படுத்தல்கள் இருப்பதை இந்தியர் அனைவரும், மற்றும் இந்தியக் கலையைப் பாராட்டுவோர் பலரும் அறிந்திருக்கிறார்கள். பிற்காலத் தமிழ் நூல்களும் ஒன்பான் ரசங்களை அங்கீகரித்துள்ளன. ஆனால் தொல்காப்பியர் மட்டும் நவரசத்தை —அஷ்ட ரசம்— ஆக்கிவிட்டார். இது ஒரு புதிராகவே இருந்து வருகிறது. ஏன் என்று தெரியவில்லை!

 

தொல்காப்பியம்–பொருளதிகாரம், மெய்ப்பாட்டியல்

 

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப (1197)

 

நகை (Laughter) என்பது இகழ்ச்சியிற் பிறக்கும்

அழுகை (Weeping) என்பது துன்பத்தில் பிறக்கும்

இளிவரல் (Despise/disgust)  என்பது அருவெறுப்பால் உண்டாகும்

மருட்கை (Wonder) என்பது வியப்பில் தோன்றும்

அச்சம் (Fear) என்பது பயத்தில் பிறக்கும்

பெருமிதம் (Fortitude, Heroism) என்பது வீரத்தால் பிறக்கும்

வெகுளி (Anger) என்பது கோபத்தால்/வெறுப்பால் தோன்றும்

உவகை (Delight/Happiness) என்பது மகிழ்ச்சியில் பிறக்கும்

சாந்தம் (Peaceful/ Tranquility) என்பது தொல்காப்பியத்தில் இல்லை!

 

சிருங்காரம் என்பதும் இல்லாவிடினும் அதை உவகையில் சேர்க்கமுடியும்

நவரசம் என்பது எவை?

 

சிருங்காரம், ஹாஸ்யம், கருணா, ரௌத்ர, வீர, பயங்கர, பீபத்ஸ, அத்புத, சாந்த என்று வடமொழி நூல்கள் விளம்பும்.

 

 

இடமொன்றுமைக்கரனீந்த மெய்ப்பகதெழிற்கிணையாத்

திடமொன்றியவணச் சிங்காரம் வீரஞ்சிரிப்பருளே

யடமின்றியஞ் சினம் குற்சையுஞ் சாந்தமுமற்புதமுங்

கடியென்று மொன்பது மாலிரதத்தைக் காட்டுதற்கே

–உபமான சங்கிரஹம் இரத்தினச் சுருக்கம்

 

 

இடது பக்கத்தை உமைக்கு சிவன் கொடுத்த சரீரத்தின் அழகிற்கு இணையாக உறுதியாகிய வண்ணம் 1.சிங்காரம், 2.வீரம், 3.சிரிப்பு, 4.அருள், 5.அடமில்லாத சினம், 6.குற்சை, 7.சாந்தம், 8.அற்புதம்,  9.கடி என்ற ஒன்பதும் அழகிய ரசத்தைப் புலப்படுத்துவதற்காம்.

பரத நாட்டியம் பயின்று அரங்கேறுவோர் அனைவரும் இந்த ஒன்பது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் முகபாவங்களைக் காட்டும் அழகு தனி அழகுதான்!

–சுபம்–