அற்புத ஒற்றுமைகள்! தமிழும் சம்ஸ்ருதமும் ஒன்றே!!

Ashoka_Rock_Edict_at_Junagadh

ஜூனாகட் என்னும் இடத்தில் ஒரே பாறையில் அசோகன், ருத்ரதாமன், ஸ்கந்தகுப்தன் ஆகிய மூன்று மாபெரும் மன்னர்களின் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1503; தேதி 21 டிசம்பர், 2014.

கட்டுரையின் முதல் பகுதி ‘’தமிழும் சம்ஸ்ருதமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்’’ — என்ற தலைப்பில் வெளியாகியது. அதைப் படித்துவிட்டு இந்த இரண்டாம் பகுதியைப் படிக்க வேண்டுகிறேன். இது எனது நாற்பது ஆண்டு மொழி ஆராய்ச்சியின் முடிவுகள்:

1.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த தமிழ் , சம்ஸ்கிருதக் கவிஞர்கள் ஒரே பாணியைப் பின்பற்றி கவிகள் இயற்றியிருப்பது உலக மகா அதிசயம்! எந்த ஒரு கவிஞனிடமும் நீ ‘’அ’’ என்னும் எழுத்தில் இவ்வளவு கவிகள் பாட வேண்டும் ‘’ஆ’’ என்னும் எழுத்தில் இவ்வளவு கவிகள்தான் பாட வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் கவிதைகள் எழுதவும் வராது. ஆனால் வியப்பிலும் வியப்பு இப்படித் தான் இரு மொழி கவிஞர்களும் பாடி இருக்கின்றனர். அது மட்டும் அல்ல. இதே உத்தியைப் பயன் படுத்தி சிந்து சமவெளி எழுத்துக்களைப் படிக்கலாம். மாணிக்கவாசகர் பொன்றோரின் காலத்தை உறுதியாக்ச் சொல்லலாம். நான் ஒவ்வொன்றாக விளக்குகிறேன்.

முதலில் குறள், கீதை இரண்டை மட்டும் ஒப்பிட்டுக் காட்டினனேன். இதோ மேலும் சில எடுத்துக் காட்டுகள். ஒவ்வொரு எழுத்திலும் துவங்கும் கவிதைகளை/ செய்யுட்களைப் பாடற் முதற் குறிப்பு அகராதியில் இருந்து எடுத்துள்ளேன்:

நற்றிணை:–அ-35, ஆ-8, இ-26, ஈ-2, உ-20, ஊ-1, எ-9, ஏ-0, ஐ-3, ஒ-7, ஓ-4 ஔ-0
அககநனூறு:-அ-42 ஆ-6, இ-24, ஈ-2, உ-17, ஊ-2, எ-9, ஏ-1, ஐ-0, ஒ-4 ஓ-4 ஔ-0
புறநானூறு:–அ-32, ஆ-12, இ-22, ஈ-4, உ-11, ஊ-4, எ-14, ஏ-4, ஐ-1 ஒ-11 ஓ-4 ஔ-0
குறுந்தொகை:- அ-43, ஆ-7, இ-17 ஈ-2, உ15, ஊ-3 எ-13 ஏ-0, ஐ-1 ஒ-5 ஓ-2 ஔ-0
ஐங்குறு நூறு:- அ-107 ஆ-4, இ-11 ஈ-1 உ-7 ஊ-0 எ-20 ஏ-2, ஐ-1 ஒ-2 ஓ-1 ஔ-0
கலித்தொகை:- அ-18, ஆ-3, இ-7 ஈ-2, உ-4 ஊ-1 எ-6 ஏ-2 ஐ-0 ஒ-5 ஓ-0 ஔ-0
பதிற்றுப் பத்து:- அ-4 ஆ-2+1 இ-7+1 ஈ-0 உ-6 ஊ-0, எ-3+1 ஏ-0 ஐ-0, ஒ-1 ஓ-1 ஔ-0
junagadh-5

ஜூனாகட் அசோகன் பிராமிகல்வெட்டு

சங்க காலத்துக்குப் பிந்திய நூல்கள்
நாலடியார்:- அ-28 ஆ-11 இ-37 ஈ-4 உ-22 ஊ-5, எ-14 ஏ-4 ஐ-0 ஒ-5 ஓ-3 ஔ-0
பழமொழி:- அ-27 ஆ-18 இ-19 ஈ-2 உ-24 ஊ-2 எ-15, ஏ-1 ஐ-0 ஒ-10 ஓ-3 ஔ-0
திருக்குறள்:- அ-157 ஆ-23 இ-113, ஈ-8, உ-81 ஊ-21 எ-45 ஏ-9 ஐ-4 ஒ-40 ஓ-6 ஔ-0

இவற்றில் பெரும்பாலான நூல்கள் 400 பாடல்களையும் ஐங்குறு நூறு 500 பாடல்கலையும் திருக்குறள் 1330 குறள்களையும் பதிற்றுப் பத்து 80 பாடல்கள் + 8 பதிகங்களையும் உடையவை.

உயிர் எழுத்துக்களில் துவங்கும் பாடல்கள் சராசரியாக 28 விழுக்காடு வரும். குறளில் இது 38 விழுக்காடு வரை செல்வதால் காலத்தால் பிந்தியது என்று கொள்ளலாம். நாலடியார் பழமொழி ஆகியவற்றில் உயிர் எழுத்துப் பாடல்கள் 30 விழுக்காட்டைத் தாண்டுவதும் காலத்தின் தாக்கத்தைக் காட்டும். ‘’ஔ’’ என்னும் எழுத்தில் பாடல்கள் துவங்காமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் இதை ஒன்றை வைத்து மட்டும் காலத்தைக் கணக்கிடாமல் இதற்கு 50 மதிப்பெண்களும் எத்தனை வடசொற்கள் உள்ளன என்பதற்கு 50 மதிப்பெண்களும் கொடுத்தால் இன்னும் துல்லியமான முறையில் காலத்தைச் சொல்லலாம். இதற்கு சந்தானம் முறை என்று எனது தந்தையின் பெயரைச் சூட்டுவதற்கு ஆசை. அதை அறிஞர் உலகம் ஏற்றபின்னர் செய்வதே முறை.

suvadi_spl
தமிழ் ஓலைச் சுவடிகள்

இது போல ‘’க’’ முதல் ‘’ன’’ வரை தனிப் பட்டியல் உள்ளது. அதைத் தனியே காண்போம்.
இப்பொழுது இதை நான்கு வட மொழி நூல்களுடன் ஒப்பிடுவேன்:
பகவத் கீதை, ஆதி சங்கரரின் விவேக சூடாமணி, காளிதாசனின் குமார சம்பவம், சாகுந்தலம்:–

வடமொழியில் எ, ஒ ஆகிய குறில்கள் இல்லை. மேலும் க்ரு, க்லு என்பன உண்டு.
பகவத் கீதை:- அ-97, ஆ-17, இ-21, ஈ-1, உ-8, ஊ-2, ரு-1 , ஏ-21, ஐ ஓ-2 ஔ -0

விவேக சூடாமணி:- அ-105, ஆ-14, இ-8 ஈ-1 உ-7, ஊ-ஒ, ரு-1, ஏ-13 ஐ-0 ஓ-0 ஔ
குமார சம்பவம்:- அ-85 ஆ-14 இ-23 ஈ-2 உ-20 ஊ-1 ரு-1, ஏ-14 ஐ-0 ஓ–0 ஔ-0
சாகுந்தலம்: –அ-29 ஆ-6 இ-6 ஈ-1 உ-6 ஊ-0, ஏ 5, 0, ஐ-0 ஓ-0 ஔ-1

skt olai
சம்ஸ்கிருத ஓலைச் சுவடிகள்

இவைகளை நூற்றுக்கு எனக் கணக்குப் போட்டால் உயிர் எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் கீதையில் 24%, விவேக சூடாமணியில் 25-86%, குமார சம்பவத்தில் 25-68 % சாகுந்தலத்தில் 27-27 விழுக்காடு வரும். தமிழும் வடமொழியும் ஏறத்தாழ ஒரே விழுக்காடு உடையனவாக இருப்பதைக் காணலாம்.
இது போலவே ‘’க’’ — முதல் மெய்யெழுத்துக்களையும் ஒப்பிடலாம். அவைகளிலும் இரு மொழி ஒற்றுமையைக் காணமுடியும்.

contact swami_48@yahoo.com