Q & A ஆயிர மாமுக கங்கை என்று அப்பர் தேவாரத்தில் எங்கு வருகிறது? (Post.10,621)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,621

Date uploaded in London – –    2 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Question

V. C.

To:swami_48@yahoo.com

Mon, Jan 31 at 3:29 PM

அப்பர் தரும் …

அதிசயத் தகவல்

[அப்பர் என்னும் திரு நாவுக்கரசர் பாடிய தேவாரத்தில் நாம் ஏராளமான புதுப்புது தகவ ல்களை அறிகிறோம்.  

அவர் ஒரு நாயன்மார் மட்டுமல்ல; வரலாற்றுப் பேரறிஞர்.

பாடலிபுத்திரம் வரை சென்று நாட்டை அறிந்தவர். கங்கை-காவிரி, கங்கை- கோதாவரி பற்றிப் பாடுகிறார். 

அவர் பாட்டில் வரும் பூகோள விஷயங்களை தனி ஆராய்ச்சிக் கட் டுரையில் தருகிறேன். — ?  

கங்கை நதி வங்காளத்தில் நுழைந்தவுடன் ஆயிரம் கிளைகளாகப் பிரியும் அற்புத விஷயத்தை ‘ஆயிரம் மாமுக கங்கை’ என்ற வரிகளில் நமக்குச் செப்புவார்]  

?-ம் திருமுறை, அப்பர் தேவாரம்

சிவனார் திருத்தலம் நூற்றுக்கும் மேலே உண்டு.  

எந்த திருத்தலம் குறித்த பாடல் எண்ணில்  

அப்பர் என்னும் திருநாவுக்கரசர் சுவாமிகள்  

“ஆயிரம் மாமுக கங்கை”  

என்று பாடி உள்ளார் என்பதய்த்   

தெரிவித்து உதவுமாறு வேண்டுகின்றேன்.  

நன்றி, வணக்கம்.  

G.V.  

Answer given by London Swaminathan

ஆயிர மாமுக கங்கை என்று அப்பர் தேவாரத்தில் எங்கு வருகிறது ?

அப்பர் சமண மதத்தை தழுவியிருந்த காலத்தில் பாடலி புத்திரத்துக்குச் சென்றிருக்கவேண்டும். ஏனெனில் அவர் வங்காளத்தில் ஆயிரம் கிளைகளாக பிரிந்து கங்கை நதி, வங்காள விரிகுடாவில் விழும் செய்தியோடு நாவலம் தீவு – ஜம்பூத்வீபம் , போகும் வழியிலுள்ள கோதாவரி முதலிய நதிகளையும் குறிப்பிடுகிறார். 

இதோ அப்பரின் ஆறாம் திருமுறையில் உள்ள கங்கை நதிக் குறிப்புகள்:–

திருப்பூவணம்

ஆறாம் திருமுறை , பாடல்

மயல் ஆகும் தன்  அடியார்க்கு  அருளும் தோன்றும் ;

மாசு இலாப் புன்சடை மேல் மதியம் தோன்றும்;

இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் ;

இருங்கடல் நஞ்சு உண்டு  இருண்ட கண்டம் தோன்றும் ;

கயல் பாய கடுங்கலுழிக் கங்கை நங்கை

ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் -தோன்றும்

புயல் பாய்ச சட்டை விரித்த பொற்புத் தோன்றும்

பொழில் திகழும் பூவணத்து  எம் புனிதனார்க்கே

சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி .என் . ராமச்சந்திரன் இதை அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

Appar Alias Tiru Navukkarasar mentioned the Ganges river that branches out into 1000 small streams before merging with the sea. He lived during the reign of Mahendra Pallava (630 CE)

Behold  His grace for His loving servitors

Behold  the moon on His flawless hirsutorufous crest

Behold  His receiving of alms , so natural to Him

Behold  His neck dark with the oceanic venom

Behold  the flow of Ganga .. the river of a thousand fords

That falls from the heaven like a downpour

Into His widely spread matted hair

With all its abundant and  rolling  kayal fish

Such is He , the holy One of Poovanam girt with gardens  

xxxx

பல்வகைத் திருத்தாண்டகத்திலும்  இது போன்ற குறிப்பு வருகிறது

பாடல் 909

நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்  கண்டு

நிலை தளர ஆயிரமாமுகத்தினோடு

பாய்ந்து ஒருத்தி படர்சடைமேல் பயிலக்கண்டு

பட அரவும் பனிமதியும்  வைத்த செல்வர்

தாம் திருத்தித் தம் மனத் தை  ஒருக்காத் தொண்டர்

தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் பூந்துருத்தி என்பீராகில்

பொல் லால்புலால்  துருத்தி போக்கல் ஆமே

English translation by  DR T N RAMACHANDRAN

Beholding  Her concordantly concorporate with Him

She burst amain to devastate ( the earth)  with a thousand

Currents He caused her to flow in His matted hair

Where the opulent One sports a hooded serpent and a moist crescent

There are servitors ( of deluding senses )who do not

Rectify their mental kinks; yet if you before your bodies wilt

And you go about with a stick to walk with, but chant;

Poonthuruththi O Poonthuruththi , you can forever do away

With your cruel fleshy embodiment working like a bellows -909,

–Sixth Tirumurai of Appar Tevaram

Xx xxxx

கோதாவரி பற்றிய அப்பர் பாடல்

உருத்திர தாண்டகம் – பாடல் 7, ஆறாம் திருமுறை

மாதா பிதாவாகி மக்க ளாகி

..மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்

கோதா விரியாய்க் குமரி யாகிக்

..கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்

போதாய மலர்கொண்டு போற்றி நின்று

..புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி

யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி

..அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே

Xxxxx

கங்கை காவிரி

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்

கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீர் ஆடிலென்

எங்கும் ஈசன் என்னாதவர்க்கு இல்லையே (5-99-2)

–subham—

Tags- ஆயிரம் மாமுக, கங்கை, அப்பர், தேவாரம் கோதாவரி ,  காவிரி

Also read

மணல் ஜோதிடம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

7 Oct 2017 — கங்கை-காவிரி, கங்கை- கோதாவரி பற்றிப் … -நாலாம் திருமுறை, அப்பர் தேவாரம்.

மஹரிஷி கபிலர்! – கங்கை பூமிக்கு வந்த வரலாறு!(Post.9287)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9287

Date uploaded in London – –21 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹரிஷி கபிலர்! – கங்கை பூமிக்கு வந்த வரலாறு!

ச.நாகராஜன்

வால்மீகி ராமாயணம் பால காண்டத்திலும்  ஸ்ரீ மத் பாகவதத்திலும்  மஹரிஷி கபிலரைப் பற்றிய சரித்திர விவரங்களைக் காணலாம்.

ஸ்ரீ  ஹரியானவர் கர்த்தம பிரஜாபதிக்கு தேவபூதி என்பவளிடத்தில் கபிலர் என்னும் பெயருடன் அவதரித்தார். அவர் பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். இன்னொரு விருத்தாந்தம் அவர் சூரிய பகவானிடத்தில் சக்ரதனு என்ற பெயருடன் அவதரித்ததாகவும் பின்னால்

tags- மஹரிஷி,  கபிலர், கங்கை

ஔரங்கசீப் பயன்படுத்திய கங்கை நீர்! (Post No.4136)

Date: 7 August 2017

 

Time uploaded in London:- 6-51 am

 

 

Post No.4136

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

புனித கங்கை

 துக்ளக், அக்பர் ஆகியோர் போற்றிப் பயன்படுத்திய கங்கை நீர் பற்றிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரை வெளி வருகிறது.

ஔரங்கசீப் பயன்படுத்திய கங்கை நீர்!

 

ச.நாகராஜன்

 

 

முகலாய மன்னர்களில் ஹிந்து பண்பாட்டையும் ஹிந்துக்களையும் அதிகமாக வெறுத்த ஒரு மன்னன் ஔரங்கசீப் (பிறப்பு :14-10-1618 – மறைவு : 20-2-1707).

 

ஹிந்துக்களுக்கு இஸ்லாமின் பெயரால் அவன் ஆற்றிய கொடுமைகளை எழுத கை நடுங்கும். படித்தாலோ உள்ளம் பதறும்.

அப்படி ஒரு கோரமான பிறவி.

 

அவன் காலத்தில் பிரான்ஸை சேர்ந்த வைத்தியரும் யாத்ரீகருமான பெர்னியர் (Francois Bernier  பிறப்பு: 25-9-1620  மறைவு: 22-9-1688) இந்தியாவில் சுமார் 12 வருட காலம் தங்கி இருந்தார்.

ஔரங்கசீப்பைப் பற்றி அதிகாரபூர்வமான தகவல்களை அவர் தனது நூலான ‘டிராவல்ஸ் இன் தி முகல் எம்பயர்’ (Travels in the Mughal Empire) என்ற நூலில் தந்துள்ளார்.

 

அதில் ஒன்று ஔரங்கசீப் கங்கை நீரைப் பயன்படுத்தியது பற்றியது:

 

He (Aurangzeb) keeps in Delhi and Agra…. Kitchen apparatus, Ganges water and all the other articles necessary for the camp, which the Moghal has always about him, as in his capital, things which are not considered necessary in our kingdoms in Europe”

 

டெல்லியோ ஆக்ராவோ, அவர் (ஔரங்கசீப்) சமையலறை உபகரணங்கள், கங்கை நீர் மற்றும் இதர முகாமிற்குத் தேவையான சாமான்களை தலைநகரில் இருக்கிறார் போலவே தனக்குத் தேவையானவற்றை வைத்துக் கொள்கிறார். அவை ஐரோப்பாவில் உள்ள நமது அரசுகளில் தேவை என்று கருதப்படாதவை.

 

பெர்னியரும் கூட கங்கை நீரைப்  பயன்படுத்தியவரே. அதைப் பற்றி அவர் தனது பயண நூலில் தரும் தகவல்கள் இவை:

 

I shall not be exposed to any of these inconveniences and dangers, as my Nawab has with marked kindness ordered that a new loaf of his own household bread and a Sourai of Ganges water (with which, like every person attached to the court, he has laden several camels) should be presented to me every morning. A Sourai is that tin flagon of water covered with red cloth which a servant carries before his master’s horse.”

356ஆம் பக்கத்தில் அவர் கூறுவது இது:

 

“எனக்கு இது போன்ற அசௌகரியங்களோ அல்லது அபாயங்களோ வராது. ஏனெனில் நவாப் அதீதமான அன்புடன் எனக்கு அவருக்குத் தயாரிக்கப்படும் ரொட்டியையும் ஒரு சௌராய் கங்கை நீரையும் எனக்கு ஒவ்வொரு நாள் காலையும் தருமாறு ஆணையிட்டுள்ளார்.(அரசவையில் உள்ள ஒவ்வொருவருக்கும் பல ஒட்டகங்கள் உள்ளன) ஒரு சௌராய் என்பது தனது எஜமானனின் குதிரைக்கு முன்னால் ஒரு வேலையாள் ஏந்திச் செல்லும் சிவப்புத் துணியால் மூடப்பட்ட குவளையாகும்.

 

 

இதிலிருந்து நாம் அறிவது ஔரங்கசீப் மட்டுமல்ல, அவனது அரசவையில் இருந்த பிரபுக்கள் அனைவருமே கங்கை நீரைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது தான்.

 

லாகூரிலிருந்து 1665ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி எழுதிய தனது கடிதத்தில் பெர்னியர் மீண்டும் கங்கை நீரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

 

அவரது குறிப்பு:

 

The fruits, the sweet meats, the Ganges water, the saltpetre with which it is cooled and the betel are kept in four other tents.”  (page 365)

 

“பழங்கள், இனிப்பூட்டிய மாமிசம், கங்கை நீர், அதைக் குளிர வைக்கும் வெடியுப்பு மற்றும் வெற்றிலை ஆகியவை இதர நான்கு கூடாரங்களில் வைக்கப்பட்டுள்ளன.

 

ஹிந்து கலாசாரம். ஹிந்து மதம், ஹிந்துக்கள் – ஆகிய இவற்றை அறவே வெறுத்த முகலாயர்கள் – துக்ளக் முதல் ஔரங்கசீப் வரை – கங்கை நீரை விரும்பினார்கள்.

அதைத் தாங்கள் செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்றார்கள்.

 

 

தங்கள் சமையலுக்கு அதை மட்டுமே பயன்படுத்தினார்கள்.

அது மட்டுமல்ல, அரசாங்கத்தைச் சேர்ந்த செல்வந்தர்களும், பிரபுக்களும், உயர் அதிகாரிகளும் கூட கங்கை நீரையே பயன்படுத்தினர் என்பது மேற்கூறிய பல குறிப்புகளினால் தெரிய வருகிறது.

 

காலம் காலமாகத் தொன்று தொட்டு ஹிந்துக்கள் போற்றி வரும் கங்கா மாதாவை கடுமையான விதிகளை அனுசரிக்கும் இஸ்லாமியர்களும் போற்றி பயன்படுத்தினார்கள் என்பது சரித்திரம் தரும் உண்மை!

 

கங்கை போன்ற ஒரு புனித நதி உலகில் வேறெங்கும் இல்லை என்பதும் உண்மையே!!

***

 

 

 

 

 

துக்ளக் விரும்பிய கங்கை நீர்! (Post No.4130)

Written  by S NAGARAJAN

 

Date: 5 August 2017

 

Time uploaded in London:- 6-12 am

 

 

Post No.4130

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

புனித கங்கை

 

 

துக்ளக் விரும்பிய கங்கை நீர்!

 

ச.நாகராஜன்

 

 

ஹிந்து சரித்திரம் கண்ட விசித்திரமான மன்னர்களில் ஒருவர் முகம்மது பின் துக்ளக்.

 

ஒரு கிறுக்குத்தனமான ஆசாமி மன்னராக இருந்தால் என்னென்ன நடக்கலாம் என்பதற்கு துக்ளக் ஆட்சி ஒரு உதாரணம்.

தன் தந்தையின் வெற்றியைக் கொண்டாட ஒரு மர மாளிகையை அமைத்தான் துக்ளக். அதன் அஸ்திவாரத்தைப் பற்றி அவன் கவனம் கொள்ளவில்லை. விளைவு, தந்தையும் அவரது சேனா பிரமுகர்களும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அது இடிந்து வீழ்ந்தது.

தந்தைக்கு நல்ல வரவேற்பு!

 

 

அடுத்து வெள்ளி, தங்க நாணயங்களை தாமிர நாணயங்களாக மாற்றினான் துக்ளக். ஹிந்து பொற்கொல்லர்கள் ஒரிஜினலை விட பிரமாதமாக நாணயங்களைத் தாங்களாகவே தயார் செய்யவே தாமிர நாணயங்களை வாபஸ் வாங்கினான். இந்த விஷ பரிட்சையால் பெருமளவு கஜானா காலி ஆனது.

அடுத்தது தலை நகர் மாற்றம். 40 நாட்கள்  700 மைல் தூரம் தன்னுடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு டெல்லியை விட்டு புது தலை நகரான தௌலதாபாத் நோக்கிச் சென்றான் அவன்.

 

 

பலர் காடுகளில் சென்று ஒளிந்து கொண்டனர். பலர் வழியிலேயே செத்து மடிந்தனர். இந்த விஷ பரிட்சையும் கூட விபரீதத்தில் தான் முடிந்தது.

 

 

துக்ளக் – பல மொழிகள் கற்றவன்; கணிதத்தில் நிபுணன்; அழகாக எழுதுவான். சூஃபி யோகிகளின் பால் பற்று; கடுமையாக் இஸ்லாமிய விதிகளை அனுசரிப்பவன். 1325இல் தந்தையின் மறைவுக்குப் பின் முழு அரசாட்சிப் பொறுப்பை ஏற்றான்.20-3-1351இல் மறைந்தான்.

 

 

அவன் மறைவு கூட சற்று விசித்திரமானது தான். ஒரு அழுகிய மீனைச் சாப்பிட்டு அதனால் அவன் மரணம் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது!.

 

இப்படிப்பட்ட துக்ளக் விரும்பி அருந்திய நீர் புனிதமான் கங்கா நீர்

என்றால் அதிசயமாக இல்லை?!

 

மொராக்கோவிலிருந்து இந்தியா வந்த இபுன் பதாதா (1325-1354) என்ற யாத்ரீகர் தனது இந்திய வருகையில் தான் கண்டதை எல்லாம் எழுதி வைத்துள்ளார்.

 

அவர் துக்ளக் ஏற்பாடு செய்திருந்த அஞ்சல் சேவையை விரிவாக எடுத்துரைக்கிறார் இப்படி:

 

 

“This post is quicker than the mounted post. It is sometimes used to transport fruits from Khursan which are highly valued in India; they are put on plates and carried with great speed to the Sultan. In the same way they transport the principal criminals, they are each placed in a stretcher and the carriers run carrying the stretcher on their heads.”

 

 

துகளக் விரும்பி அருந்தியது கங்கா நீர்.

அது தௌலதாபாத்திற்கு இதே போலத் தான் கொண்டு வரப்பட்டது.

 

அது பற்றி இபுன் பதாதா குறிப்பிடுவது இப்படி:

 

“The Sultan’s drinking water is brought to him by the same means when he resides at Dawlatabad from the river Kank ( Ganges) to which the Hindus go on a pilgrimage and which is at a distance of forty days’ journey from there.”

கங்கை நீரை மட்டுமே அருந்தி வந்த முகம்மதிய மன்னர்கள் பலர்.

 

அவர்களுள் துக்ளக்கும் ஒருவர்.

மற்றவர்களைப் பற்றி இன்னொரு கட்டுரையில் காண்போம்.

***

கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்? (Post No.4101)

கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்? (Post No.4101)

 

Written by London Swaminathan


Date: 21 July 2017


Time uploaded in London- 13-45


Post No. 4101


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

இந்த நாட்டை வெள்ளைக்காரன்தான் ஒற்றுமைப் படுத்தினான், அதற்கு முன்பாக இந்தியர்களுக்கு  பரந்த இந்த பாரத நிலப்பரப்பு ஒரே நாடு என்பதே தெரியாது என்று பல திராவிடங்களும் மார்கஸீயங்களும் பிதற்றுவதைக் கேட்டிருப்பீர்கள். அவர்கள் சாலை போடாவிடில், ரயில்வே லைன் போடாவிடில் நாடே ஒற்றுமை அடைந்திருக்காது என்று அதுகளும் இதுகளும் திண்ணையில் உட்கார்ந்து அங்கலாய்ப்பதையும் பார்த்திருப்பீர்கள் இதெல்லாம் உண்மையில்லை என்பதற்குச் சான்று சங்கத் தமிழ் நூல்கள் முதல் பாரதி பாடல் வரை உள்ளது.

ஒரு சில எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப்போம்-

கங்கை- காவிரி இணைப்பு பற்றி அடிக்கடி பேசுகிறோம். ‘கங்கையை விட புனிதமான காவிரி’ என்று ஒரு ஆழ்வார் பாடுகிறார். இன்னும் ஒரு இடத்தில் ‘கங்கை ஆடிலென், காவிரி ஆடிலென்’ என்று புண்ய தீர்த்தத்தில் குளிப்பது பற்றிப் பாடுகிறார்.

இதோ அப்பர் வாக்கு:-

கங்கை யாடிலென் காவிடி யாடிலென்

கொங்கு தண்குமரித்துறை யாடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்

எங்கும் ஈசனெனா தவர்க்கில்லையே

–ஐந்தாம் திருமுறை

 

 

 

நமது தந்தையர்  காலத்தில் வாழ்ந்த பாரதியோ ‘கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என்கிறான்.

 

கம்ப வர்மனின் திருவாமூர்க் கல்வெட்டில் ‘கங்கையிடை குமரி இடை எழுநூற்றுக் காதமும்’ – என்ற வரி உள்ளது.


கம்பவர்மனின் திருவாமூர்க் கல்வெட்டு

 

ஸ்ரீ கம்ப பருமற்கு

யாண்டு இருபதாவது

பட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்க

தித்தன் பட்டைபொத்தன் மேதவம் புரிந்ததென்று

படாரிக்கு நவகண்டங் குடுத்து

குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்

வைத்தானுக்கு

திருவான்மூர் ஊரார் வைத்த பரிசாவது

எமூர்ப் பறைகொட்டக்

கல்மேடு செய்தராவிக்குக் குடுப்பாரானார்

பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலம்

குடுத்தார்கள்

இது அன்றென்றார்

கங்கையிடைக் குமரி இடை எழுநூற்றுக் காதமும்

செய்தான் செய்த பாவத்துப் படுவார்

அன்றென்றார் அன்றாள் கோவுக்கு

காற்ப்பொன் றண்டப்படுவார்

 

கங்கை நதி உலகின் மிகப் பழமையான, உலகின் முதல் கவிதைத் தொகுப்பான ரிக் வேதத்திலும் உள்ளது. எதற்காக இப்படி கங்கையையும் காவிரியையும் இணைத்துப் பேசுகின்றனர்?

 

இந்த நாடு ஒன்றே!

இந்தப் பண்பாடு ஒன்றே!!

 

என்பதை எடுத்துரைக்கத்தான்  காரிகிழார் முதல் (புறநானூறு பாடல் 6) பாரதி வரை இமயம்-குமரி பற்றிப் பாடுகின்றனர்.

சேரன் செங்குட்டுவனும், கரிகால் சோழனும் இமயம் வரை சென்று சின்னங்களைப் பொறித்தது  ஏன்?

கண்ணகி சிலைக்காக, இமயத்தில் கல் எடுத்து, கங்கையில் அதைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்தது ஏன்?

 

காளிதாசனின் ரகு வம்ச காவியத்தில் ஈரான் முதல் பாண்டியநாடு வரை ரகுவின் திக்விஜயம் செல்கிறது. இந்துமதி சுயம்வரத்துக்கு வந்த அரசர்களும் பாண்டியநாடு முதல் ஆப்கனிஸ்தான் வரை பல நாடுகளிலிருந்து வந்துள்ளனர். ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் ஒரு நாடு, நாம் ஒரே பண்பாடு என்ற கொள்கை மனதில் ஆழ வேரூன்றிவிட்டது.

 

திருமூலர் இமயத்தையும் சிதம்பரத்தையும் இலங்கையையும் இணைத்துப் பாடியது ஏன்?

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூரும் இவ்வானில் இலங்கைக் குறியுறுஞ்

சாருந்திலை வனத் தன் மாமலயத்து

ஏறுஞ் சுழுனை இவை சிவபூமியே”. (திருமந்திரம் – 2747)

 

 

(திருமூலரும் தீர்க்கரேகையும் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இப்பாடல் பற்றி மேல்விவரம் காண்க)

கல்வெட்டிலும் கூட கங்கை காவிரி பற்றி இருக்கிறது! ஆக நமது நாட்டில் அப்பர் காலத்துக்கு முன்னரே, காளிதாசன் காலத்துக்கு முன்னரே, சங்க காலத்துக்கு முன்னரே இமயம் முதல் குமரி வரை ஒன்று என்ற கொள்கை இருந்திருக்கிறது.

 

வெள்ளைக்காரன் ரோடு போட்டதும், ரயில் பாதை போட்டதும் அவனுடைய படைகளையும் விற்பனைப் பொருட்களையும் கொண்டு வந்து நம்மை அடக்கி வைக்கவும், கோஹினூர் போன்ற பொக்கிஷங்களைக் கடத்தவும்தான் என்பதை அறிக.

 

தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுக்க அகத்தியனை இமய மலையிலிருந்து சிவபெருமான் அனுப்பியதும் வரலாற்று உண்மை. தொல்காப்பியம் முதல் பாரதி பாடல் வரை இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

நமது வரலாற்றுப் புத்தககங்களை மாற்றி எழுதி நம் பிள்ளைகளுக்கு சரியான வரலாற்றைக் கற்பிக்க வேண்டும்.

இது நமது தலையாய கடமை!

–SUBHAM–

TAGS:– கங்கை, காவிரி, குமரி, ஒற்றுமை, வெள்ளைக்காரன்

சுமேரிய நாகரீகத்தில் கங்கை நதியும் கைலாஷ் பர்வதமும்! (Post No.3732)

Research Article Written by London swaminathan

 

Date: 17 March 2017

 

Time uploaded in London:- 21-11

 

Post No. 3732

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சுமேரிய நாகரீகத்தில் நீர் மற்றும் மலை பற்றிய தெய்வப் படங்களைப் பார்த்தாலோ, அவை பற்றி படித்தாலோ உடனே நினைவுக்கு வருவது கங்கை நதியும் கைலாஷ் பர்வதமும்தான். ரிக் வேதத்தில் நீர் என்பதைக் குறிப்பதற்குள்ள சொற்களை இவர்கள் பயன்படுத்தியதும் தெரிகிறது! இதோ சில சுவையான விஷயங்கள்:–

 

சம்ஸ்கிருதத்தில் தண்ணீருக்கு ஆபஹ,  அபாம் (நபத்), தோயம் என்றெல்லாம் சொற்கள் உண்டு. கங்கை என்பதை அவர்கள் எங்கை (ENKI) என்று மாற்றி நீர் தேவதைக்குச் சூட்டினர். ஆபஹ என்பதை அப்சு(APSU) என்று மாற்றி கடல் தேவதைக்குச் சூட்டினர். தோயம் என்பதை இயா (EA) என்று மாற்றி நீர்த் தேவதைக்குச் சூட்டினர். கைலாஷ் என்பதை லகாஷ் (LAGASH) என்று மாற்றினர்.

தேவாரம் திருமந்திரம் முதலிய பக்தி இலக்கியத்தில் ஆபஹ என்ற சொல்லை அப்பு என்றுதான் தமிழ்ப் படுத்துவர். பிரெஞ்சு மொழியில் கூட தண்ணீருக்கு யூ (EAU) என்றுதான் பெயர். எழுதும்போது இயௌ என்று எழுதுவர்.

 

பகீரதன் தவம் செய்து கங்கையைக் கொண்டு வந்ததும், சிவன் தலையிலிருந்து கங்கை பொங்கி வருவதும் நாம் அறிந்த கதைகள். இந்தக் காட்சிகளை அவர்கள் அப்படியே மெசபொடோமியாவின் (இராக் நாடு) டைக்ரிஸ், யூப்ரடீஸ் நதிகளுக்குப் பயன்படுத்தினர். நாம் எப்படி இந்தியாவிலுள்ள எல்லா நதிகளிலும், புனித நாட்களில்  கங்கை பாய்கிறது என்று சொல்கிறோமோ அதைப் போல அவர்களும் டைக்ரீஸ் யூப்ரடீஸ் நதிகளில் எங்கை (ENKI) என்னும் தெய்வம் இனிய நீரைக் கொட்டுகிறது என்று எழுதி வைத்துள்ளனர்.

புனித நாட்களில் எல்லா நதிகளிலும் கங்கை பாய்வதாக இந்துக்கள் நம்புகின்றனர். தீபாவளி நாளன்று எங்கு குளித்தாலும் அது கங்கைக் குளியலுக்குச் சமம். இதனால்தான் தீபாவளி நாளன்று “கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று கேட்கின்றனர்.

 

நாடு முழுதும்  நடக்கும் மினி (Mini Kumba Mela) கும்ப மேளவின்போது அந்த ஊரில் கங்கை பாய்வதாக ஐதீகம்.

 

கங்கை நீர் எல்லா வீடுகளிலும் ஒரு சொம்பில் இருக்கும் இதைப் புனிதப்படுத்தவும், தீட்டுக் கழிக்கவும், சுத்திகரிக்கவும் இந்துக்கள் பயன்படுத்துவர்.

 

சுமேரியாவில் கிடைத்த சிலிண்டர் முத்திரைகளில் கங்கை நீர் பூமிக்கு வரும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. இதை கங்கை என்றோ அல்லது கங்கை வரும் காட்சியியைக் காப்பி அடித்து பயன்படுத்தியதாகவும் சொல்லலாம்.

எங்கை என்னும் நதி புனிதமானது என்றும் தூய்மையானது என்றும் களிமண் வடிவப் பலகைகளில் எழுதப்பட்டுள்ளது. கங்கையின் மகள் பெயர் நான்ஷி (NANSHE) என்று சொல்லி அவளுக்கு வருடம் தோறும் எரிப்டு (Eribdu) என்ற இடத்தில் விழா எடுக்கின்றனர்.  இது நாம் செய்யும் கங்கா ஆரத்தி, கங்கா மாதா விழா போன்றது. நதிகளின் தோற்றுவாயிலிருந்து படகுப் பேரணி புறப்படும்.

 

சிலிண்டர் முத்திரைகளில்,  சில படங்களில் ஒரு சொம்பு இருக்கும் அதிலிருந்து நீர் பாய்வது போலவும் காட்டப்பட்டிருக்கும். அகஸ்த்ய மகரிஷியின் கமண்டலத்திருந்து காவிரி நதி பாய்ந்ததாக நாம் கூறும் கதையை ஒத்திருக்கும் இது.

 

சுமேரியர்கள், இந்துக்களைப் போலவே நதிகளைக் கடவுளராகவே கருதினர்

 

இவையெல்லாம் மற்றொரு பெரிய வரலாற்று உண்மையையும் தெரிவிக்கிறது. அதாவது, அவர்கள் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் என்பதும் அதுவும் சரஸ்வதி நதி, நிலத்துக்கடியில் மறைந்த பின்னர் (அந்தர்வாஹினி) இந்தியாவை விட்டு வெளியேறியவர்கள் என்றும் தெரிகிறது. அது எப்படி?

 

 

இந்தியாவின் நடுவிலுள்ள மத்தியப் பிரதேச காடு மலை குகைகளில் பிம்பேட்கா (Bhimbetka Cave Paintings) முதலிய இடங்களில் 40,000 ஆண்டுகள் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைவிடப் பழமையான 50,000 ஆண்டுக்கு முந்தைய ஓவியங்கள் கிடைத்திருப்பதையும் அண்மைக்காலத்தில் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன. ஆகவே இந்திய நாகரீகம் இங்கே தோன்றி இங்கேயே  வளர்ந்து உலகம் முழுதும் சென்றது உறுதியாகிறது.

 

இந்துக்கள் எங்கு குடியேறினாலும் அங்குள்ள நதிகளுக்குக் கங்கை என்று பெயர் சூட்டிவிடுவர். இலங்கையில் ஏராளமான நதிகளுக்கு கங்கை என்று பெயர். அசோக மாமன்னன், கப்பலில் கங்கை நீரை இலங்கைக்கு அனுப்பிவைத்தான். தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மீகாங் (மா கங்கா = கங்கை அன்னை), மத்திய ஆப்பிரிக்காவின் காடுகளுக்கிடையே ஓடும் காங்கோ (கங்கா) முதலிய பல நதிகள் கங்கையின் பெயரைத் தாங்கி இன்றும் ஓடுகின்றன.

 

சுமார் கி.மு.2000 ஆண்டு வாக்கில் பெரிய பூகம்பம், நிலச்சரிவு ஏற்பட்டு சரஸ்வதி நதி மறைந்தது. அத்துடன் அந்த நதிக்கரையில் தோன்றிய ஹரப்பா நாகரீகமும் மறைந்தது. அதையடுத்து ஏற்பட்ட வறட்சி, வெள்ளம் காரணமாக மக்கள் இந்தியாவுக்கு வெளியே செல்லத் துவங்கினர்.

அண்மைக் காலத்தில் நடந்த மரபியல் ஆராய்ச்சி, சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள் ஐரோப்பாவில் குடியேறியதையும் காட்டுகிறது. சரஸ்வதி நதியை ரிக்   வேதம் போற்றுகிறது. இது மறைந்த பின்னரே கங்கை நதி அந்த இடத்தைப் பிடித்தது. ரிக் வேதத்தின் காலம், சிந்து வெளிக்கு (ஹரப்பா நாகரீகம்) முந்தையது என்பதை அண்மைக் காலத்தில் கிரேக்க மொழி இயல் அறிஞர் நிகலஸ் கஜானாஸ் நிரூபித்துள்ளார். அவரது மொழி இயல் ஆய்வின்படி ரிக் வேதம் கி.மு.3300க்கு முந்தையது. அதற்கு முன் ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும், ரிக் வேதம் கி.மு 4500 க்கு முந்தையது என்பதை வானியல் குறிப்புகளை வைத்து முடிவு செய்தனர்.

 

ஆக சுமேரியர்கள் கங்கை நதிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத் திருப்பதால் இவர்கள் புராண கால இஞ்சினீயர் பகீரதனுக்கு பிற்பாடு இந்தியாவிலிருந்து வெளியேறியவர்கள் என்றும் கொள்ளலாம். இமய மலை பூகம்பத்தால் அடைபட்டு திசை மாறி வீணான கங்கை நீரை திசைதிருப்பும் மாபெரும் எஞ்சினீயரிங்/ பொறி இயல் அற்புதத்தைச் செய்தவர் பகீரதன். உலகின் முதல் சிவில் எஞ்சினீயர்.

 

சுமேரியாவிலும், எகிப்திலும் கி.மு 3000 முதல் முறையான அரசுகள் இருப்பதைக் காண்கிறோம். பல வருடங்களில் அலை அலையாக இந்துக்கள் குடியேறி இருக்கலாம். ஆனால் பெருமளவு குடியேற்றம் சரஸ்வதி நதி மறைந்து,  கங்கை அந்த இடத்தைப் பிடித்த காலத்தில்தான் நடந்தது என்றும் கருதலாம்.

 

இனி கங்கை- எங்கை (GANGA=ENKI) பற்றி மேலும் சில சுவையான செய்திகளைக் காண்போம்.

 

மெசபொடோமிய புராணக் கதைகளில் படைப்புத் தெய்வம் என்றும் மனித இனத்தைக் காக்கும் தெய்வம் என்றும் எழுதியுள்ளனர். காலப்போக்கில் பல உள்ளூர் தெய்வங்களுடன் பல கதைகள் கலக்கும்போது எல்லாவற்றையும் ஒரே தெய்வத்தின்பேரில் ஏற்றி விடுவர். இதை இப்போதைய இந்து மதத்திலும் காணலாம். வட      இந்தியர்களுக்கு முருகனுக்கு வள்ளி என்ற ஒரு பெண்ணும் மனைவி என்பது தெரியாது. தென்னிந்தியர்களுக்கு ஆஞ்சநேயரின் மனைவி பற்றி தெரியாது;  வட இந்தியாவில் அவர் பிரம்மசாரி அல்ல!

 

முடிவுரை:

கங்கை, கைலாஷ் போன்ற சொற்கள், கங்கை இறங்கிவரும் காட்சி கொண்ட சிலிண்டர் முத்திரைகள், நதிகளின் தெய்வீகதன்மை, புனிதத் தன்மை, தூய்மை பற்றிய சுமேரிய நம்பிக்கைகள் ஆகியன,  சுமேரியர்களும் இந்தியாவிலிருந்து போனவர்களே என்பதை உறிதிப்படுத்தும்.

 

–subham–

 

 

.

சிவபிரானின் தலையில் கங்கை இடம் பெற்ற காரணம் (Post No 2658)

ganga-river-route

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 24 March 2016

 

Post No. 2658

 

Time uploaded in London :–  8-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

விவேகானந்தர் வழி

 

 

கங்கையின் புனிதம்!

 

ச.நாகராஜன்

ganga-dussera-23

பிரம்மானந்தர் வாக்கு

 

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் ஆன்மீக புத்திரன் (Spiritual son) என்று அவராலேயே கூறப்பட்டவர் சுவாமி பிரம்மானந்தர். ராக்கால் என்று பூர்வாசிரம பெயரைக் கொண்ட இவரே பரமஹம்ஸ சீடர்களுள் முதலாவதாக அவரை வந்து அடைந்தவர்.

 

ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வழி நடத்தியவர்.

அவர் கங்கையைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் ஆழ்ந்த பொருளைக் கொண்டிருக்கின்றன.

 

The water of Ganges is verily the holiest of all waters; it fulfils one’s desires and is a help to realizing the ishtam. Sri Ramakrishna has said” “The water of the Ganges, the holy prasadam of Jagannath (at Puri) and the sacred dust of Vrindavan are verily Brahman in reality.”

 

 

“கங்கையின் ஜலம் உலகிலுள்ள நீர்களிலெல்லாம் புனிதமானது. அது ஒருவனுடைய ஆசையைப் பூர்த்தி செய்கிறது அவனது இஷடத்தை உணர உதவுகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறியிருக்கிறார்: “கங்கையின் ஜலம். பூரி ஜகன்னாதரின் பிரசாதம், பிருந்தாவனத்தின் தூசி ஆகிய உண்மையில் பிரம்மமே.”

 

 ganga

சிவபிரானின் தலையில் கங்கை இடம் பெற்ற காரணம்

 

தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த கங்கை முதலில் சிவபிரானின் ஜடாமுடியில் விழுந்து, அதன் பிறகு பூமியில் நதியாக ஓடினாள் என்று ஒரு புராணக் கதை உண்டு. சுவாமி விவேகானந்தர் அதற்கான காரணத்தை புதுமையாக விளக்கினார் இப்படி:

 

“கங்கை வீழ்வதற்கு ஏன் சிவபெருமானின் தலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஏனெனில்  கங்கை என்றல்ல; அனைத்து நதிகளும் அருவிகளும் சிவ பக்தைகள், சிவ பெருமானை வழிபடுபவர்கள். புரண்டோடும் நதிகளும், உச்சியிலிருந்து விழும் அருவிகளும் என்ன பாடுகின்றன, என்ன பேசுகின்றன என்பதை உற்றுக் கேட்டால், அது ‘வ்யோம், வ்யோம், ஹர ஹர(வ்யோம் என்பது சிவ பெருமானின் பெயர்களில் ஒன்று. வ்யோம் என்றால் ஆகாயம் அல்லது வெளி. அவர் எங்கு நிறைந்தவர் என்பது இதன் பொருள்) சிவ பக்தையாக இருப்பதால் தான் கங்கை சிவ பெருமானின் தலையை முதல் இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தாள்.”

 

எப்படி ஸ்வாமிஜியின் அருமையான விளக்கம்!

 

கங்கை மீது ஸ்வாமிஜியின் பக்தி

 

அவரவர் பக்குவத்திற்கும் கேள்வி கேட்கும் நிலைக்கும் ஏற்ப ஸ்வாமிஜியின் பதில் அமைவது வழக்கம்.

ஒரு முறை இளைஞன் ஒருவன் அவரிடம் வந்தான். “ஸ்வாமிஜி, இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் நீங்கள் புதிய மதம் ஒன்றைப் பிரசாரம் செய்கிறீர்களா” என்று கேட்டான் அவன்..

ஸ்வாமிஜி: “அது என்ன புதிய மதம்?

 

இளைஞன்: “கங்கையில் குளிப்பதால் முக்தி கிடைக்கும் என்பது போன்ற நம்பிக்கைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை அல்லவா, அதைச் சொன்னேன்.”

 

ஸ்வாமிஜி: “அது என்ன பேச்சு, அப்பா! நானே தினமும் கங்கையில் தான் குளிக்கிறேன். குளிக்க முடியவில்லை என்றால் கங்கை நீரைத் தலையில் தெளிக்கவாவது செய்யாமல் நான் இருந்ததில்லை. தலையில் தெளித்துக் கொள்கிறேன். ஒரிரு துளிகளைப் பருகவும் செய்கிறேன்.”

வந்த இளைஞன் தெளிந்தான்.

இப்படித் தவறாகத் தம்மைப் புரிந்து கொள்பவர்களை உடனுக்குடன் அந்த இடத்திலேயே தெளிவு படுத்தி விடுவார் ஸ்வாமிஜி.

கங்கையின் புனிதம் பற்றி புனிதமே உருவான அவர் சொல்வதைக் கேட்பதே அனைவருக்கும் ஆனந்தம்!

Haridwar-Tourism-Holy-Ganga-1

 

கங்கையின் கிழக்குப் பகுதியும் மேற்குப் பகுதியும்

 

 

கங்கைக்குக் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது தட்சிணேஸ்வரம். கங்கையின் கங்கோத்ரியாக அமைந்திருப்பது மேற்குக் கரையில் அமைந்துள்ள பேலும் மடம்.

 

பரமஹம்ஸரின் அனைத்து அமுத மொழிகளையும் உலகிற்குத் தொகுத்து அளித்த மஹேந்திரநாத் குப்தா (எம் என்று அழைக்கப்படுபவர்) ஒரு முறை தனது சீடர்களிடம் சொன்னார் இப்படி: “கங்கையின் மேற்குப் பகுதி வாரணாசி எவ்வளவு புனிதமானதோ அவ்வளவு புனிதமானது.  சாதாரண சின்ன புண்ணியத்தின் பயனா என்ன அது?”

 

கங்கையின் புனிதம் பற்றி மகான்களின் அமுத வாசகங்களுக்கு எல்லையே இல்லை!

*********

 

கர்நாடக இசையில் கங்கை நதியும் கூவம் நதியும்!(Post No. 2600)

Tiger_new

Compiled by london swaminathan
Date: 5 March,2016

 

Post No. 2600

 

Time uploaded in London :–  11-03 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

tiger you tube

டைகர் வரதாச்சாரியார் பிரபல பாடகர். இவரை ஒரு கச்சேரிக்கு அழைத்திருந்தனர். பாடகரோ கற்றுக்குட்டி; அவருக்கு வயலின் வாசித்தவரோ மஹா மேதை; இசைத்துறையில் ‘ பழமும் தின்னு கொட்டையும் போட்டவர்’! அல்லது கரைத்துக் குடித்தவர் என்று சொல்லலாம். கச்சேரி முடிந்தது. “இப்பொழுது டைகர் அவர்கள், ஒரு சில சொற்கள் சொல்லுவார்” என்று சொல்லி அவரைப் பேச அழைத்தனர். எப்பொழுதும் சுடு சொற்களைப் பெய்தறியாதவர் அவர். ஆனால், அன்று பாடியவர் அவர் காதில் கொஞ்சம் நாராசத்தைப் பாய்ச்சிவிட்டார் போலும்!

 

எல்லோரையும் பொதுப்படையாக வரிசையாகப் பாராட்டினார். இறுதியில் சொன்னார். “வயலின் வாசித்தவர் பற்றி நான் என்ன சொல்ல இருக்கிறது? நமது வயலின் மேதை ஒரு பெருங்கடல்’. ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உடையவர். பெருங்கடலில் தூய கங்கை நதி போன்ற நதிகளும், சாக்கடை மணம் வீசும் கூவம் போன்ற நதிகளும் சங்கமம் ஆவது இயல்புதானே!”

 

(சென்னை வழியாக ஓடும் கூவம் நதி, சாக்கடைக் கலப்பினால் நாற்றம் அடிக்கும் நதியாக இன்று ஓடுகிறது.)

Xxx

purandara stamp

புரந்தரதாசருக்கு சவுக்கடி!

கர்நாடக சங்கீதத்தின் பிதாமஹர் புரந்தரதாசருக்கு பூர்வ ஜன்ம கர்ம வினை பாக்கியிருந்தது. அதைத் தீர்க்க, அவருக்கு கடவுள் ஒரு தண்டனை கொடுத்தார்.

 

பண்டரீபுரத்தில் கோவில் கொண்டுள்ள விட்டலராயன் மீது அபார பக்தி பூண்டவர் நமது புரந்தரர். அதே ஊரில் கோவிலில் ஆடல், பாடலுக்காக நியமிக்கப்பட்ட தேவதாசிக்கும் ஸ்ரீ விட்டல் மீது அலாதி பக்தி. அது மட்டுமல்ல. புரந்தரரின் பாடல்கள், க்ருதிகள் மீதும் பேரன்பு, பெருங்காதல் கொண்டவர்.

 

ஒரு நாள் இரவு, கடவுளே புரந்தரதாசர் வேடம் கொண்டு , அந்த தேவதாசி வீட்டுக்குப் போய் ஆடலையும் பாடலையும் ரசிக்க வந்ததாகக் கூறினார். அந்தப் பெண்மணிக்குப் பேரானந்தம். ‘பழம் நழுவில் பாலில் விழுந்ததே’ என்று எண்ணி வியந்தார். ஆடினார், பாடினார், மெய்மறந்து போனார். புராந்தரர் வடிவத்தில் வந்த விட்டல், போவதற்கு முன் ஒரு கங்கணத்தை (காப்பு) பரிசுப் பொருளாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

 

மறு நாள் பண்டரீபுர விட்டல் சிலையின் மீது இருந்த கங்கணத்தைக் காணவில்லை. அது தேவதாசியிடம் இருப்பதும் தெரியவந்தது. செய்தி மெதுவாகப் பரவியது. புரந்தரர்தான் இரவில், தேவதாசி வீட்டுக்குப் போய் அதை அவரிடம் கொடுத்தார் என்று எல்லோரும் சொல்லவே புரந்தரர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். அவர் எவ்வளவோ மறுப்புச் சொல்லியும் தேவதாசியின் வாக்குமூலத்தைக் கொண்டு அவருக்கு சவுக்கடி வழங்கப்பட்டது. அவரை கோவில் வாசலிலுள்ள கம்பத்தில் கட்டி வைத்து சவுக்கடி கொடுத்தனர். திடீரென்று கோவிலின் கர்ப்பக்கிரஹத்திலிருந்து ஒரு அசரீரி கேட்டது. இறைவன், தானே புரந்தரதாசர் வடிவத்தில் சென்று ஆடலையும் பாடலையும் ரசித்ததாகவும் இந்த அவப்பெயரை புரந்தரர் மீது ஏற்றி அவரை சவுக்கடி பெற வைத்ததற்கு அவர் பூர்வ ஜன்ம வினையே காரணமென்றும் சொல்லியது. பாக்கியிருந்த கர்ம வினையைத் தீர்த்த புரந்தரதாசர்,

 

 

இன்று வரை நம் நினைவில் நீங்கா இடம் பெற்று நம்மையும் புனிதப்படுத்தி வருகிறார். அது மட்டுமல்ல. அவரை எந்தக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தார்களோ, அந்தக் கம்பத்துக்கு தாசர் கம்பம் என்று பெயரிட்டு இன்று வரை பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். புரந்தரர் கட்டப்பட்ட கல்லும் புனிதம் பெறும்!!

வாழ்க புரந்தரர் நாமம்!

 

Source: Facets of Indian Culture by R Srinivasan, B V Bhavan Publication 1990); தமிழாக்கம்: லண்டன் சுவாமிநாதன்

 

My previous articles on music:- 

Ganges and Coovam Rivers in Carnatic Music! (Post No.2597) 4-3-2016

Mystic No.7 in Music, Post No.977, 13-4-14

Musician who pledged a Raga, Post no.1074, 30-5-2014
True Art is Never Made to Order, post No.1066, 26-5-14

Acoustic Marvel of Madurai Temple 13-5-13

Superstition in the World of Music 12-4-14 (Post No.975)

Musical Pillars in Hindu Temples

Interesting Anecdotes from the World of Music (29 May 2014;Post No.1072)

Saint who went to Heaven with a Flute in Hand (16 April 14,Post No 983)

How did Rare Indian Animal Asunam become extinct? (15 April 14,Post No 981)

Rain Miracles: Rain by Fire and Music (7 January 2012)

மழை அற்புதங்கள் (7 ஜனவரி 2012)

இசைத் தமிழ் அதிசயங்கள் 31-1-2013

சங்கீதம் தோன்றிய வரலாறு- ஒரு புராணக் கதை 13-4-14 (976)

சப்தம் கேட்டால் இறந்துவிடும் அசுணமா? 15-4-14 (980)

கையில் புல்லாங்குழலுடன் சுவர்க்கத்துக்குப் போன மனிதர் 16-4-14 (982)

ஸ்ரீராமர் மீது முத்துசுவாமி தீட்சிதர் கிருதிகள் 8-4-14 (963)

-subham-

கங்கையின் பாவம் எப்படிப் போகும்? கம்பன் தரும் அதிசயத் தகவல்

gaumukh

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

 

Wriiten by London swaminathan

Date : 9 September  2015

Post No. 2140

Time uploaded in London: – காலை 9-01

மஹாபாவங்களைச் செய்தவர்கள் எல்லோரும் கங்கையில் போய் நீராடியவுடன் அந்தப் பாபங்கள் நீங்கி புண்ணிய ஆத்மாக்களாக வெளியே வருகின்றனர். இப்படிப் பல ஆயிரம் ஆண்டுகளாக கங்கையில் சேர்ந்த பாபங்களை எல்லாம் கங்கா தேவி என்ன செய்வாள்? அவளிடம் சேர்ந்த பாபம் எப்படிப் போகும்? இதற்கு கம்பன் விடை சொல்கிறான். ராமபிரான் போன்ற புண்யாத்மாக்கள், கங்கையில் நீராடினால், அந்தப் பாபங்கள் கங்கா தேவியிடமிருந்து அகன்றுவிடும்.

ganga-sacred-confluence

கன்னி நீக்க அருங் கங்கையும் கைதொழா

பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர்

என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்தை

உன்னின் நீகினென் உய்ந்தனென் யான் என்றாள்

–கங்கைப் படலம், அயோத்தியா காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்:–என்றும் அழியாத ஜீவநதியான கங்காதேவி ராமனை வணங்கி, “ இவ்வுலகத்தில் உள்ளவர்கள், தாம் செய்த – சொல்ல இயலாத பெரும் பாவங்களை என்னில் மூழ்கி நீக்கிக் கொள்வார்கள். என்னிடம் சேர்ந்த அந்தப் பாபங்களை எல்லாம், இன்று நீ நீராடியதன் மூலம் நான் போக்கிக் கொண்டேன்.

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தாற் போல!

கங்கை என்னும் கடவுள் திருநதி

தங்கி வைகும் தபோதர் யாவரும்

எங்கள் செல்கதி வந்தது என்று ஏமுறா

அம் கண் நாயகற் காண வந்து அண்மினார்

–கங்கைப் படலம், அயோத்தியா காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்:–கங்கை என்னும் தெய்வத் திருநதிக் கரையில் வாழும் தவ சீலர்கள் அனைவரும், தவத்தின் மூலம் நாங்கள் சென்று அடைய வேண்டிய புகலிடமான தெய்வம் இங்கேயே வந்துவிட்டது என்று அழகிய விழிகளை உடைய ராமனைக் காண்பதற்காக அவனிருக்கும் இடத்திற்கு சென்றனர்.

river-ganges-map

‘கங்கை என்னும் கடவுள் திருநதி’, ‘கன்னி நீக்க அருங் கங்கை’, ‘தள்ளும் நீர்ப் பெருங் கங்கை’, ‘வெண் நிறக் கங்கை’, ‘கங்கை அரும் புனல்’, ‘விரி திரைப் புனல் கங்கை’, ‘நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால் நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி’ – என்றெல்லாம் கங்கையை வருணிக்கிறான் கவி சக்ரவர்த்தி கம்பன்!

நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்

நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி

–என்று சொல்வதன் காரணம் என்ன தெரியுமா?

கங்கையோ கன்னி இளம் பெண். அவளுக்கு நரைத்த கூந்தல் எப்படி வரும்? அலைகள் வீசி, நுரை பொங்குவதால், அது நரைத்த கூந்தலுடைய ஒரு பெண் போலத் தோன்றுகிறதாம்! இது கம்பனின் கற்பனை! பொதுவாக நதிகளைக் கன்னி இளம் பெண்ணாகவும், கட்டழகிகளாகவும் வருணிப்பது இந்திய மரபு. காவிரியையும் வையை என்னும் பொய்யாக் குலக்கொடியையும் இளங்கோ அடிகள், சிலப்பதிகாரத்தில் வருணிப்பதைப் படித்தோருக்கு இது நன்கு விளங்கும்.

கம்பன் கவிநயம் படிக்கப் படிக்கத் தெவிட்டாதது!!!

LEAD Technologies Inc. V1.01

LEAD Technologies Inc. V1.01

–சுபம்–

பொங்கி வரும் புனிதம்! கங்கோத்ரி ரகசியம்!!

Sunrise_Varanasi
Sun Rise at Varanasi

By ச.நாகராஜன்
Post No.1287; Posted on 14th September 2014.

“ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ ( நதிகளுக்குள் கங்கா நதி நான்! )
கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் (10ஆம் அத்தியாயம், 31ஆம் ஸ்லோகம்)

விஸ்வ பாவினி மாதா
பிரபஞ்சத்தையே தூய்மையாக்கும் ‘விஸ்வ பாவினி’ என்றும், அனைவரின் பயங்களைப் போக்கும் ‘பய ஹாரிணி’ என்றும், அற்புதமான அங்கங்களைக் கொண்டிருக்கும் ‘சுப அங்கிணி; என்றும்,உலக மக்கள் அனைவரின் நதியாக ‘லோக நதி’ என்றும் போற்றித் துதிக்கப்படும் ஆயிரக்கணக்கான நாமங்களால் பூஜிக்கப்படுபவள் கங்கா மாதா!

பகீரதனின் தவத்தால் பூமியில் கங்கை இறங்கிய அரிய செயலை நினைத்து மனம் மகிழ்ந்த நரசிம்மவர்ம பல்லவன் அந்த அழியாக் காவியத்தை சிற்பமாக மாமல்லபுரத்தில் வடித்து பாரத ஒற்றுமையையும், நல்லோரின் அரிய செயல் உலகத்திற்கே நன்மை பயப்பதையும் சுட்டிக் காட்டினான் ராமேஸ்வரத்தில் மணல் எடுத்து கங்கோத்ரியில் கரைப்பதை தொன்று தொட்டு செய்து வரும் பண்பாட்டுப் பழக்கமும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஒரு சான்று!

GANGA SUNSET

நான்கு ‘க’காரங்கள்
ஹிந்துக்கள் போற்றும் நான்கு ‘க’காரங்கள் கங்கா, கீதா, காயத்ரி, கோ (பசு) ஆகும். மரணமடைந்த ஜீவனைப் பற்றி யமன் சர்ச்சை செய்யாமலிருக்க வேண்டுமா? ஆதி சங்கரர் அதற்கான எளிய உபாயத்தைக் கூறி இருக்கிறார்:

பகவத் கீதா கிஞ்சிததீதா கங்கா ஜல லவ கணிகா பீதா சக்ருதபி யேன முராரி சமர்ச்சா க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா
-பஜ கோவிந்தம் பாடல் 20

“பகவத் கீதையைச் சிறிது படித்தாலோ கங்கை ஜலத்தில் துளியை உட்கொண்டாலோ கிருஷ்ண நாமத்தை ஒரு முறையேனும் உச்சரித்தாலோ அப்படிப்பட்டவரைப் பற்றி யமன் விவாதிக்கவே மாட்டான்” என்று ஆணித்தரமாக ஆதி சங்கரர் பஜ கோவிந்தத்தில் அருளும் உரையைப் படிக்கும் போது கங்கா, கீதா, கிருஷ்ணா பற்றிய மஹிமையை உணர்கிறோம்; மலர்கிறோம்.
கங்கா ஜலத்தின் ஒரு சிறு துளி யமனையும் சற்று விலகி இருக்கச் செய்யும்!

அலெக்ஸாண்டர் விரும்பிய இறுதி இடம்
கங்கை எங்கிருந்து தோன்றுகிறது என்பது ஒரு அரிய ரகசியம். அந்த ரகசியத்தைப அறிய ஏராளமானோர் முயன்றதை சரித்திரம் விளக்குகிறது, அக்பர் (கி.பி,1336-1605) ஒரு பெரிய குழுவையை அனுப்பி கங்கை தோன்றும் இடத்தைப் பார்த்து வருமாறு அனுப்பினார். அக்பரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள அப்துல் ஃபஜல், அவர் எப்போதும் கங்கை ஜலத்தையே அருந்தி வந்தார் என்று குறிப்பிடுகிறார். வெளியிடங்களுக்குப் பயணம் செல்லும் போது கூட ஹரித்வாரிலிருந்து எடுக்கப்பட்ட கங்கை ஜலத்தையும் கூடவே அக்பர் கொண்டு சென்று பயன்படுத்தினார் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

ஸ்பெயினிலிருந்து வந்து அக்பர் அரசவையில் இருந்த கிறிஸ்தவ மிஷனரியான பாதர் மான்சரேட் தான் முதன் முதலாக இமயமலையின் வரைபடத்தைத் தயாரித்தார். 1807இல் பிரிட்டிஷார் கங்கையின் தோற்றம் காணத் துடித்து முயற்சியை ஆரம்பித்தனர். 1857இல் தான் அது சாத்தியமானது.

மாமன்னன் அலெக்ஸாண்டர் தனது இறுதி இருப்பிடமாக இருக்க விரும்பித் தேர்ந்தெடுத்த இடம் கங்கை பிரதேசம்!ஆனால் அவன் அல்பாயுளில் மறைந்து போனதால் அவன் விருப்பம் நிறைவேறவில்லை.

2500 கிலோமீட்டர் தூரம் ஓடுகின்ற புனித நதி கங்கை. அதன் அகலமோ மூன்று கிலோமீட்டர்கள். மழை காலத்தில் சில இடங்களில் பத்து கிலோமீட்டராகப் பரந்து ஓடும்! கோமுகியில் தோன்றி 250 கிலோமீட்டர் தூரம் பாகீரதியாகப் பரிணமிக்கும் பிரவாகம் தேவ ப்ரயாக்கில் அலக்நந்தாவுடன் இணைந்து கங்கையாக உருவெடுக்கிறது.

GANGA LAMP

அமேஸான் நதி 90 கிலோமீட்டர் அகலமும் 6992 கிலோமீட்டர் நீளமும் கொண்டு பெரிய நதியாக விளங்கினாலும் புனிதத்திலும் அரிய குணங்களிலும் சற்றும் கங்கைக்கு அருகில் கூட வர முடியவில்லை.

கங்கை நீரின் புனிதமும் அதிசயத் தன்மையும்
டி.எஸ்.பார்கவா என்பவர் மூன்று வருட கால ஆராய்ச்சியை கங்கையில் மேற்கொண்டு ஆக்ஸிஜனைப் பெற விரும்பும் அளவானது மற்ற நதிகளை விட கங்கை நீரில் மிகவும் குறைவு என்று கண்டு பிடித்துள்ளார். கங்கை நீரின் தூய்மையாக்கும் தன்மை உலகின் இதர எல்லா நதிகளைக் காட்டிலும் 25 மடங்கு அதிகம் என்றும் அவர் கண்டறிந்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியல் நிபுணரான் சி. இ.நெல்ஸன் ஹூக்ளி நதிப் பகுதியிலிருந்து எடுத்த நீர் லண்டனைச் சேரும் வரையில் கெடாமல் இருந்தது என்று அதிசயிக்கிறார் ஹூக்ளி கங்கையின் அசுத்தமான பகுதி. அதுவே இப்படி நீண்ட காலம் தூய்மையோடு இருந்தது என்றால் கங்கோத்ரியில் எடுக்கப்படும் நீர் எவ்வளவு காலம் புனிதத் தன்மை கெடாமல் இருக்கும்! பிரமித்து வியக்க வேண்டியது தான்!

1896ஆம் ஆண்டு, எர்னஸ்ட் ஹான்பரி ஹான்கின் என்ற பிரிட்டிஷ் உயிரியல் நிபுணர் கங்கை நீரை நன்கு ஆராய்ந்து தன் முடிவுகளை பிரான்ஸை சேர்ந்த அறிவியல் இதழில் எழுதி அறிவித்தார். அதில் காலரா கிருமிகளை கங்கை நீரில் விடும் போது அவை துடிதுடித்து மூன்றே மணி நேரத்தில் இறந்து விடுகிறது என்ற அதிசயச் செய்தியை அறிவித்தார்.இதே கிருமிகள் தூய்மையாக்கப்பட்ட நீரில் 48 மணி நேரமானாலும் அப்படியே இருப்பதை அவர் விவரித்த பொது உலகமே அதிசயித்தது. டெல்லியைச் சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் கங்கை நீர் கொசுக்களை உற்பத்தி செய்ய விடுவதில்லை என்ற அரிய ரகசியத்தைக் கண்டுபிடித்து அறிவித்துள்ளது.

இப்படிப்பட்ட இயற்பியல் உண்மைகளாலும் தெய்வீக ரகசியத் தன்மைகளாலும் தான் போலும், ஆயுர் வேத ஆசார்யர் சரகர் பல வித வியாதிகளுக்கு கங்கை ஜலத்தை அருமருந்தாக உட்கொள்ளுமாறு அறிவுரை பகர்கிறார்.

yoga-meditation-rishikesh
Meditation in Rishikesh

கங்கோத்ரி ஆலயம்
உத்தரகாசியிலிருந்து கங்கோத்ரி நோக்கிச் செல்லும் பாதை நெடுகிலும் அதிசயங்கள், ஆன்மீக வரலாறுகள், அவற்றுள் பொதிந்திருக்கும் ரகசியங்கள் தாம் உள்ளன.
சிவனின் ஜடாமுடியிலிருந்து கங்கை பூமிக்கு அவதரித்த கங்காவதரண் தினம் ஜேஷ்டா (ஆனி) மாதம் சுக்ல பட்சம் தசமி திதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த சுக்ல தசமியை கங்கா தசரா எனக் கொண்டாடுகின்றனர் அனைவரும்! கங்கோத்ரி ஆலயம் திறக்கப்படுவதும் இன்று தான்! கங்கோத்ரி ஆலயத்திற்கு அருகில் உள்ளது பகீரதன் தவம் செய்த அற்புத இடம்!

உத்தரகாசியிலிருந்து கங்கோத்ரி செல்லும் பாதையில் கங்கா நானியில் ரிஷி குண்ட் என்று அழைக்கப்படும் இடத்தில் வெந்நீர் ஊற்று உள்ளது. அதைத் தாண்டிச் சென்று சுகி எனும் அழகிய இடத்தில் பாகீரதி நதிக்கரை சரிவில் திரௌபதி கா தண்டா என்னும் இடம் உள்ளது. சுவர்க்கத்திற்கு செல்லும் வழியில் திரௌபதி உடலை உகுத்த பிரதேசம் இது. இந்தப் பகுதியின் அருகில் உள்ள ஹிமாச்சல் பகுதியில் திரௌபதி உடலை உகுத்த இடம் உள்ளது.

சுகியைத் தாண்டிச் சென்றால் ஹரிசில் என்று அழைக்கப்படும் ஹரி சிலா உள்ளது.கங்கை பூமியில் இறங்கியவுடன் விஷ்ணு தவம் செய்த இடம் ஹரிசில்! சில்லென்று அதி வேகமாக இங்கு வீசும் காற்றைப் பற்றி பக்தர்கள் கூறும் போது வாயு பகவான் விஷ்ணுவை வழக்கமாக வணங்கும் இடம் இது என்பதால் அவர் பிரத்யக்ஷமாக இங்கு இருக்கிறார் என்கின்றனர். இதையும் தாண்டிச் சென்றால் பிரபலமான கூர்க்கா வீர்ர் அமர்சிங் தாபா கட்டிய கங்கா மாதா கோவிலை அடையலாம்.

சுமார் 21 அடி சதுரபீடத்தில் ஒன்றரை அடி உயரமுள்ள கங்கா மாதா சிலை அற்புதமாக அமைந்திருக்க சற்று கீழே லக்ஷ்மி, சரஸ்வதி,அன்னபூரணி பாகீரதி, ஜாஹ்னவி,யமுனை ஆகியோரின் தெய்வீகச் சிலைகள் அமைந்துள்ளன.

3200 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக அமைந்துள்ள கங்கோத்ரியிலிருந்து கங்கா மாதா பொங்கி வரும் புனிதமாக, அமிர்த பிரவாகமாகப் பாய்ந்து அனைவரின் உடல் அழுக்கையும் உள்ள அழுக்கையும் போக்கி முக்தி என்னும் பேரின்ப நிலையையும் காலம் காலமாக அளித்து வருகிறாள்.

modi-aarti-1_051814120309

பொங்கி வரும் புனிதம்
அவளை மாசு படுத்தும் நவீன கால முயற்சிகளைத் தகர்த்து புகழோங்கிய பழைய காலப் பெருமையையும் புனிதத்தையும் திருப்பிக் கொண்டு வரும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டு விட்டது. கங்கையின் அசுத்தங்கள் அகற்றப்படுகின்றன. தூய்மைப் பிரவாகமாகப் பெருகி வரும் அலையில் ஊழல் எல்லாம் அடிபட்டு, அகற்றப்பட்டு மகோன்னதமான, பாரதம் உருவாக இருக்கிறது; உத்வேகம் ஊட்டப்பட்ட கங்கையின் செல்வர்களான நாம் உலகின் தலைமை பீடத்தைப் பெறப் போகிறோம்!

ganga ARTI2

கங்கா மாதா கீ ஜெய்!
(This article was written by my brother S.Nagarajan for a Tamil magazine: London Swaminathan)
ஞான ஆலயம் ஆகஸ்ட் 2014 இதழில் வெளியாகி உள்ள கட்டுரை
பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மெஜாரிடி பெற்றவுடன் நரேந்திர மோடி கங்கா ஆரத்தியை நிகழ்த்தி கங்கையை வழிபட அதைத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகப் பார்த்தவர்களின் மெய் சிலிர்த்தது. காலம் காலமாக நாம் வழிபட்டு வரும் கங்கா மாதா தூய்மைக்குத் தூய்மை தருபவள் அவளைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வு ஆரம்பமாகி விட்டதை ஒட்டி மலரும் கட்டுரை இது!
CONTACT swami_48@yahoo.com

The Holy Ganga River

(Pictures are taken from various websites;thanks)
***************
.