Q & A ஆயிர மாமுக கங்கை என்று அப்பர் தேவாரத்தில் எங்கு வருகிறது? (Post.10,621)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,621

Date uploaded in London – –    2 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Question

V. C.

To:swami_48@yahoo.com

Mon, Jan 31 at 3:29 PM

அப்பர் தரும் …

அதிசயத் தகவல்

[அப்பர் என்னும் திரு நாவுக்கரசர் பாடிய தேவாரத்தில் நாம் ஏராளமான புதுப்புது தகவ ல்களை அறிகிறோம்.  

அவர் ஒரு நாயன்மார் மட்டுமல்ல; வரலாற்றுப் பேரறிஞர்.

பாடலிபுத்திரம் வரை சென்று நாட்டை அறிந்தவர். கங்கை-காவிரி, கங்கை- கோதாவரி பற்றிப் பாடுகிறார். 

அவர் பாட்டில் வரும் பூகோள விஷயங்களை தனி ஆராய்ச்சிக் கட் டுரையில் தருகிறேன். — ?  

கங்கை நதி வங்காளத்தில் நுழைந்தவுடன் ஆயிரம் கிளைகளாகப் பிரியும் அற்புத விஷயத்தை ‘ஆயிரம் மாமுக கங்கை’ என்ற வரிகளில் நமக்குச் செப்புவார்]  

?-ம் திருமுறை, அப்பர் தேவாரம்

சிவனார் திருத்தலம் நூற்றுக்கும் மேலே உண்டு.  

எந்த திருத்தலம் குறித்த பாடல் எண்ணில்  

அப்பர் என்னும் திருநாவுக்கரசர் சுவாமிகள்  

“ஆயிரம் மாமுக கங்கை”  

என்று பாடி உள்ளார் என்பதய்த்   

தெரிவித்து உதவுமாறு வேண்டுகின்றேன்.  

நன்றி, வணக்கம்.  

G.V.  

Answer given by London Swaminathan

ஆயிர மாமுக கங்கை என்று அப்பர் தேவாரத்தில் எங்கு வருகிறது ?

அப்பர் சமண மதத்தை தழுவியிருந்த காலத்தில் பாடலி புத்திரத்துக்குச் சென்றிருக்கவேண்டும். ஏனெனில் அவர் வங்காளத்தில் ஆயிரம் கிளைகளாக பிரிந்து கங்கை நதி, வங்காள விரிகுடாவில் விழும் செய்தியோடு நாவலம் தீவு – ஜம்பூத்வீபம் , போகும் வழியிலுள்ள கோதாவரி முதலிய நதிகளையும் குறிப்பிடுகிறார். 

இதோ அப்பரின் ஆறாம் திருமுறையில் உள்ள கங்கை நதிக் குறிப்புகள்:–

திருப்பூவணம்

ஆறாம் திருமுறை , பாடல்

மயல் ஆகும் தன்  அடியார்க்கு  அருளும் தோன்றும் ;

மாசு இலாப் புன்சடை மேல் மதியம் தோன்றும்;

இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் ;

இருங்கடல் நஞ்சு உண்டு  இருண்ட கண்டம் தோன்றும் ;

கயல் பாய கடுங்கலுழிக் கங்கை நங்கை

ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் -தோன்றும்

புயல் பாய்ச சட்டை விரித்த பொற்புத் தோன்றும்

பொழில் திகழும் பூவணத்து  எம் புனிதனார்க்கே

சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி .என் . ராமச்சந்திரன் இதை அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

Appar Alias Tiru Navukkarasar mentioned the Ganges river that branches out into 1000 small streams before merging with the sea. He lived during the reign of Mahendra Pallava (630 CE)

Behold  His grace for His loving servitors

Behold  the moon on His flawless hirsutorufous crest

Behold  His receiving of alms , so natural to Him

Behold  His neck dark with the oceanic venom

Behold  the flow of Ganga .. the river of a thousand fords

That falls from the heaven like a downpour

Into His widely spread matted hair

With all its abundant and  rolling  kayal fish

Such is He , the holy One of Poovanam girt with gardens  

xxxx

பல்வகைத் திருத்தாண்டகத்திலும்  இது போன்ற குறிப்பு வருகிறது

பாடல் 909

நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்  கண்டு

நிலை தளர ஆயிரமாமுகத்தினோடு

பாய்ந்து ஒருத்தி படர்சடைமேல் பயிலக்கண்டு

பட அரவும் பனிமதியும்  வைத்த செல்வர்

தாம் திருத்தித் தம் மனத் தை  ஒருக்காத் தொண்டர்

தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் பூந்துருத்தி என்பீராகில்

பொல் லால்புலால்  துருத்தி போக்கல் ஆமே

English translation by  DR T N RAMACHANDRAN

Beholding  Her concordantly concorporate with Him

She burst amain to devastate ( the earth)  with a thousand

Currents He caused her to flow in His matted hair

Where the opulent One sports a hooded serpent and a moist crescent

There are servitors ( of deluding senses )who do not

Rectify their mental kinks; yet if you before your bodies wilt

And you go about with a stick to walk with, but chant;

Poonthuruththi O Poonthuruththi , you can forever do away

With your cruel fleshy embodiment working like a bellows -909,

–Sixth Tirumurai of Appar Tevaram

Xx xxxx

கோதாவரி பற்றிய அப்பர் பாடல்

உருத்திர தாண்டகம் – பாடல் 7, ஆறாம் திருமுறை

மாதா பிதாவாகி மக்க ளாகி

..மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்

கோதா விரியாய்க் குமரி யாகிக்

..கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்

போதாய மலர்கொண்டு போற்றி நின்று

..புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி

யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி

..அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே

Xxxxx

கங்கை காவிரி

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்

கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீர் ஆடிலென்

எங்கும் ஈசன் என்னாதவர்க்கு இல்லையே (5-99-2)

–subham—

Tags- ஆயிரம் மாமுக, கங்கை, அப்பர், தேவாரம் கோதாவரி ,  காவிரி

Also read

மணல் ஜோதிடம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

7 Oct 2017 — கங்கை-காவிரி, கங்கை- கோதாவரி பற்றிப் … -நாலாம் திருமுறை, அப்பர் தேவாரம்.