சிந்தனைச் சிற்பிகள் (ஜய வருடம்) 2014 டிசம்பர் மாத காலண்டர்
முக்கிய நாட்கள்: — டிசம்பர் 2 கீதா ஜயந்தி, 5 திருக் கார்த்திகை, 6 சர்வாலய தீபம், 11 பாரதியார் பிறந்த நாள், 21 ஹனுமத் ஜயந்தி, 25 கிறிஸ்துமஸ்; அமாவாசை:22, சுபமுஹூர்த்த நாள்:– 1, பௌர்ணமி – 6, ஏகாதசி- 2, 18
பாரதி பாடல்களிலிருந்து 31 முக்கிய மேற்கோள்கள்
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1444; தேதி 29 நவம்பர், 2014.
டிசம்பர் 1 திங்கட் கிழமை
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே- அதைத்
தொழுது படித்திடடி பாப்பா !
டிசம்பர் 2 செவ்வாய்க் கிழமை
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்.
சேமமுற வேண்டும் எனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்
டிசம்பர் 3 புதன் கிழமை
அன்பென்று கொட்டு முரசே – மக்கள்
அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு
யாவரும் ஒன்று என்று கொண்டால்
டிசம்பர் 4 வியாழக் கிழமை
தங்க மதலைகள் ஈன்றமுது ஊட்டித்
தழுவியது இந்நாடே – மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே
டிசம்பர் 5 வெள்ளிக் கிழமை
யாகத்திலே தவ வேகத்திலே – தனி
யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினிலே உயர் நாடு
டிசம்பர் 6 சனிக் கிழமை
சாதி இரண்டொழிய வேறில்லை என்றே
தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம்
டிசம்பர் 7 ஞாயிற்றுக் கிழமை
பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே
பார்மிசை ஏதொரு நூல் இது போலே
டிசம்பர் 8 திங்கட் கிழமை
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகு இன்பக் கேணி என்றே – மிக
நன்று பல்வேதம் வரைந்த கை பாரத
நாயகி தன் திருக்கை
டிசம்பர் 9 செவ்வாய்க் கிழமை
அன்பு சிவம் உலகத் துயர் யாவையும்
அன்பினில் போகும் என்றே – இங்கு
முன்பு மொழிந்து உலகாண்டதோர் புத்தன்
மொழி எங்கள் அன்னை மொழி
டிசம்பர் 10 புதன் கிழமை
நாவினில் வேதம் உடையவள் கையில்
நலம் திகழ் வாளுடையாள் – தனை
மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்
டிசம்பர் 11 வியாழக் கிழமை
நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரிவாள் எங்கள் தாய் – அவர்
அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்
ஆனந்தக் கூத்திடுவாள்
டிசம்பர் 12 வெள்ளிக் கிழமை
பேரிய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும்
ஆரிய நாடு என்றே அறி
டிசம்பர் 13 சனிக் கிழமை
பேசுகவோ சத்தியமே, செய்க தர்மமே என்று ஒலி செய்
முத்தி தரும் வேத முரசு
டிசம்பர் 14 ஞாயிற்றுக் கிழமை
இனி ஒரு விதி செய்வோம் — அதை
எந்த நாளும் காப்போம்;
தனி ஒருவனுக்கு உண்விலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
டிசம்பர் 15 திங்கட் கிழமை
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்திய மக்கள்;
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நநட்டு மன்னர்
டிசம்பர் 16 செவ்வாய்க் கிழமை
வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர் வீரம்
செறிந்த தமிழ்நாடு
டிசம்பர் 17 புதன் கிழமை
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்
டிசம்பர் 18 வியாழக் கிழமை
வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திரு நாடு
டிசம்பர் 19 வெள்ளிக் கிழமை
ஆண்களோடு பெண்களும்
சரி நிகர் சமானமாக
வாழ்வம் இந்த நாட்டிலே
டிசம்பர் 20 சனிக் கிழமை
வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?
டிசம்பர் 21 ஞாயிற்றுக் கிழமை
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்
நீர் அதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்
டிசம்பர் 22 திங்கட் கிழமை
ஆதி மறை தோன்றிய நல் ஆரிய நாடு எந்நாளும்
நீதி மறைவின்றி நிலைத்த திரு நாடு
டிசம்பர் 23 செவ்வாய்க் கிழமை
பெண் என்று சொல்லிடிலோ – ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! நினது
எண்ணம் இரங்காதோ?
டிசம்பர் 24 புதன் கிழமை
காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்கும் திசை எல்லாம் நாம் அன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்
டிசம்பர் 25 வியாழக் கிழமை
பயம் எனும் பேய்தனை அடித்தோம் – பொய்மைப்
பாம்பைப் பிளந்து உயிர் குடித்தோம்;
வியன் உலகனைத்தையும் அமுதென நுகரும்
வேதவாழ்வினைக் கைப் பிடித்தோம்
டிசம்பர் 26 வெள்ளிக் கிழமை
மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று – அந்த
மூலப் பொருள் ஒளியின் குன்று
நேர்த்தி திகழும் அந்த ஒளியை – எந்த
நேரமும் போற்று சக்தி என்று
டிசம்பர் 27 சனிக் கிழமை
தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்
டிசம்பர் 28 ஞாயிற்றுக் கிழமை
கட்டுண்டோம் பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்
டிசம்பர் 29 திங்கட் கிழமை
சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே;
தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம்
30 செவ்வாய்க் கிழமை
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா
31 புதன் கிழமை
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே