டாக்டருக்கு நோயாளி, தட்டானுக்குத் தங்கம், ஐயருக்கு பக்தன் வேண்டும் ! (Post 10,114)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,114

Date uploaded in London – 20 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் சுவையான கவிதை!

மனிதர்களின் மனோபாவத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டும் அற்புதமான கவிதை ரிக் வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தில் கடைசியில் உள்ளது. இது சோமபானம் பற்றிய பகுதி RV.9-112

முதலில் கவிதையைப் படியுங்கள். பின்னர் என் கருத்துக்களை சொல்கிறேன்.

Xxx

9-112-1

சோமனே ! நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிகளைச்  செய்கிறோம் ;

மனிதர்கள் செய்யும் தொழில்கள் பலதரப்பட்டவை; தச்சன் மரத்தை விரும்புகிறான் ;

அட்டைகள் (Doctors) காயமடைந்தவர்களை விரும்புகிறது ; பிராமணர்கள்  வழிபடுவோர்  வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இந்துவே ! நீ இந்திரனுக்காக பெருகவும்

Xxxx

9-112-2

காய்ந்த, முதிர்ந்த  மரங்களினாலும், பறவைகளின் சிறகுகளாலும் அம்புகள் செய்யப்படுகின்றன

கொல்லன் பட்டறைத் தட்டானும் தங்கத்துக்காக அலைகிறான்

(இங்கு கொல்லன் பட்டறையைக் குறிக்கும் ஊதுலையும் வருவதால் அக்கால இரும்பு/ ஆயுத ஆலைகளைக் குறிக்கின்றன)

இந்துவே ! நீ இந்திரனுக்காக பெருகவும்

xxx

9-112-3

நான் ஒரு புலவன் (ரிஷி சிசு ஆங்கிரசன்  இதைப்  பாடுகிறார்); என் தாய் திரிகைக் கல்லில் தானியங்களை அரைக்கிறாள் ;என் தந்தை ஒரு டாக்டர். பலவிதத் தொழில்களை செய்யும் நாங்கள் செல்வத்தை விரும்பி , இவ்வுலகத்தில் தொழுவத்திலுள்ள பசுக்களை போல இருக்கிறோம்;

(ஒரே இடத்தில் அடைந்து கிடக்கிறோம்) . இந்துவே ! நீ இந்திரனுக்காக பெருகவும்

(இந்த இடத்திலும் கிரிப்பித் Griffith டாக்டர் என்பதை அட்டை என்று மொழி பெயர்த்துள்ளார் . ஆயினும் அட்டைகளை மருத்துவத்தில் பயன்படுத்தியது சுஸ்ருதர் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னதுதான். Please see the link at the end))

Xxx

9-112-4

இழுக்கும் குதிரை இழுப்பதற்கு சுகமான (எடை அதிகம் இல்லாத) தேரை விரும்புகிறது . விருந்தினர்களை அழைப்பவர்கள் இன்பத்தை (கேளிக்கை , அரட்டை, மகிழ்ச்சி )  விரும்புகின்றனர் ; காதலனோ காதலி வருகையை விரும்புகிறான் ; தவளையோ ஆற்று வெள்ளத்துக்காக ( அதை எதிர்பார்த்து) காத்திருக்கிறது .

இந்துவே ! நீ இந்திரனுக்காக பெருகவும்

xxx

எனது கருத்துக்கள் !

ரிக் வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று சொன்ன மாக்ஸ்முல்லர் கும்பலுக்கும் மார்க்சீய கும்பலுக்கும் செமை அடி , மிதி அடி கொடுக்கும் பாடல் இது. அந்தக்காலத்தில் எத்தனை வகை தொழில்கள் இருந்தன என்பதும் ஆயுதம் செய்யும் தச்சனுக்கு கொள்ளை பணம்- தங்கக் கட்டிகள்/ காசுகள் கிடைத்ததும் இந்தப் பாடலில் இருந்து தெரிகிறது.

ஜாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்பதையும் மூன்றாவது பாடல்/ மந்திரம் விளக்குகிறது .

அந்தக் காலத்தில் குலத் தொழில் முறை இல்லை. ஒரே குடும்பத்தில் கவிஞன், டாக்டர், மாவு அரைக்கும் பெண்மணி ஆகியோரையும்  காண்கிறோம். ஜாதித் தொழில்கள் இல்லை

பாடலின் கடைசி வரிகள் ஒரே மாதிரி இருப்பதை நோக்கவும். இது போல பல்லவி உடைய கவிதைகள் ரிக் வேதம் முழுதும் விரவிக்கிடக்கின்றன. இதை சங்க இயக்கியமான ஐங்குறு நூறு பின்னர் வந்த சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் காணலாம். இது ‘கும்மியடி, கும்மியடி’ போன்ற பாட்டுக்கள் போன்றவை. அந்தக் காலத்தில் இசை வளம் பெருகியதை இந்தப் பல்லவிப் பாட்டுக்கள் காட்டுகின்றன

xxx

டாக்டர்கள் – பிராமணர்கள் – ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் !

அட்டைகள் ரத்தத்தை உறிஞ்சுவதற்காக காயமடைந்தோருக்காக காத்திருக்கின்றன என்பது R T H GRIFFITH கிரிப்பித் சொல்லும் தகவல் ; இந்த இடத்தை ‘நோயாளிகளுக்காக காத்திருக்கும் மருத்துவர்கள்’ என்று ஜம்புநாதன் மொழி பெயர்க்கிறார்   ((மருத்துவன் நோய்கள் (பெருக) வேண்டும் என்று விரும்புகிறான்)) ; ரிக் வேத ஸம்ஸ்க்ருத பகுதியில் மருத்துவர்/ டாக்டர்/ பிஷக்  என்ற சொல்லே உள்ளது .

அலட்சியமாக , பொருத்தமில்லாத சிகிச்சை தரும்  மருத்துவர்களை அட்டை leech என்று கிண்டல் அடிப்பது உண்டு . இது மரியாதைக் குறைவான சொல். தமிழில் பணப் பெருச்சாளி என்றும் ஆங்கிலத்தில் சுறாமீன் loan sharks  என்றும் சொல்லுவது போல.

அப்படியென்றால் டாக்டர்களும் அட்டைகளும் ஒன்று ! ஒருவன் பணத்தை உறிஞ்சுகிறான். அட்டையோ ரத்தத்தை உறிஞ்சுகிறது . இதே போல பிராமணர்களையும் இந்த மந்திரத்தில் சேர்த்திருப்பது அவர்களையும் கிண்டல் செய்யும் விதத்தில் இருக்கிறது. தட்சிணைக்காக காத்திருக்கிறார்கள் என்று பொருள்படும்

பாரதியாரும் இதை மனதில் கொண்டுதான் பிராணர்களைச் சாடும் வரிகளை எழுதினார் போலும் (பேராசைக்காரனடா பார்ப்பான்; அவன் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்)

Xxx

நாலாவது மந்திரத்தை, பாடலைப் பாருங்கள்; மனித சுபாவத்தை அப்படியே படம் பிடித்து விட்டது. எல்லோரும் சுகத்தை விரும்புகின்றனர். விருந்து கொடுப்போர், தனது வீட்டுக்கு, கல்யாணத்துக்கு, வந்த அனைவரும் கேளிக்கை, தமாஷ் ஆகியவற்றை அனுபவித்து திருப்தியாக மகிழ்ச்சியாக வீடு திரும்புவதை விரும்புகின்றனர்.

பொதுவாக நாம் எல்லோரும் குறைந்த வேலை; நிறைந்த சம்பளத்தை எதிர் பார்க்கிறோம். அது போல தேர் இழுக்கும் குதிரையும் ஆட்கள் அல்லது பொருளின் எடை குறைவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இதுதான் மனிதனின் எண்ணமும்.

இங்கே இன்னொரு விஷயத்தையும் ஆழ்ந்து படிக்கவேண்டும். தேரின் பா கங்கள் தேர் சவாரி, அது கொண்டு வரும் பொருள்கள் பற்றி நூற்றுக்கணக்கான பாடல்கள்/மந்திரங்கள் உள்ளன. இது அந்தக் கால சாலைகளின் உயர்ந்த நிலை,போக்குவரத்து Road Transport வசதிகளைக் காட்டுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் அற்புதமான சாலைப் போக்குவரத்து இருந்திருக்கிறது . தேர்கள் பற்றி மட்டுமே வேத கால இலக்கியத்தில் 60-க்கும் மேலான சொற்கள் இருக்கின்றன. ‘வைகலும் எண் தேர் செய்யும் தச்சன்’ என்று சங்க இலக்கியமும் இயம்பும். ரிக் வேதமோ அதற்கு 3000 ஆண்டுகளுக்கும் முந்தையது!

1. WE all have various thoughts and plans, and diverse are the ways of men.

     The Brahman seeks the worshipper, carpenter seeks the cracked wood, and leech the maimed. Flow, Indu, flow for Indra’s sake.

 

2. The smith with ripe and seasoned plants, with feathers of the birds of air,

     With stones, and with enkindled flames, seeks him who hath a store of gold. Flow, Indu, flow for Indra’s sake.

 

3. A bard am I, my dad’s a leech, mammy lays corn upon the stones.

     Striving for wealth, with varied plans, we follow our desires like kine. Flow, Indu, flow for Indra’s sake.

 

4. The horse would draw an easy car, gay hosts attract the laugh and jest.

     The male desires his mate’s approach, the frog is eager for the flood, Flow, Indu, flow for Indra’s sake.

नानानं वा उ नो धियो वि वरतानि जनानाम |
तक्षा रिष्टं रुतं भिषग बरह्मा सुन्वन्तमिछतीन्द्रायेन्दो परि सरव ||


जरतीभिरोषधीभिः पर्णेभिः शकुनानाम |
कार्मारो अश्मभिर्द्युभिर्हिरण्यवन्तमिछतीन्द्रायेन्दो परि सरव ||


कारुरहं ततो भिषगुपलप्रक्षिणी नना |
नानाधियोवसूयवो.अनु गा इव तस्थिमेन्द्रायेन्दो परि सरव ||


अश्वो वोळ्हा सुखं रथं हसनामुपमन्त्रिणः |
शेपो रोमण्वन्तौ भेदौ वारिन मण्डूक इछतीन्द्रायेन्दो परि सरव ||

nānānaṃ vā u no dhiyo vi vratāni janānām |
takṣā riṣṭaṃ rutaṃ bhiṣagh brahmā sunvantamichatīndrāyendo pari srava ||


jaratībhiroṣadhībhiḥ parṇebhiḥ śakunānām |
kārmāro aśmabhirdyubhirhiraṇyavantamichatīndrāyendo pari srava ||


kārurahaṃ tato bhiṣaghupalaprakṣiṇī nanā |
nānādhiyovasūyavo.anu ghā iva tasthimendrāyendo pari srava ||


aśvo voḷhā sukhaṃ rathaṃ hasanāmupamantriṇaḥ |
śepo romaṇvantau bhedau vārin maṇḍūka ichatīndrāyendo pari srava ||

இரத்தம் உறிஞ்சும் அட்டை வைத்தியம் (Post No.8033)

https://tamilandvedas.com › இரத்…

· 

24 May 2020 — அட்டை (Leech) என்பது நீரில் வாழும் பிராணி . … சுஸ்ருதரும் அட்டை வைத்தியம் பற்றி …

— subham–

tags — குலத் தொழில், டாக்டர் ,அட்டை, பிராமணன் , தட்டான், தங்கம் ,புலவன்

பிராமணர்களுக்கு ஜே! மநு நீதி நூல்-7 (Post No.4471)

WRITTEN by London Swaminathan 

 

Date: 8 DECEMBER 2017 

 

Time uploaded in London-  14-52

 

 

Post No. 4471

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

(முதல் ஆறு பகுதிகளைப் படித்துவிட்டு இதைப்படிப்பது பொருள் விளங்கத் துணை புரியும்)

முதல் அத்தியாயம் ஸ்லோகம் 92

மனிதனின் தேகமே பரிசுத்தமானது. அதிலும் முகம் மிகவும் பரிசுத்தமானது

 

93.அந்த பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாலும், வேதத்தை ஓதுவதாலும், க்ஷத்ரியனுக்கு தர்மத்தைப் போதிப்பதாலும் பிராமணன் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.

 

94.அந்தச் சுயம்புவான பிரம்மாவானவர், தேவர்கள், பிதுர்களுக்கு

யக்ஞம், சிரார்த்தம் முதலியன செய்து திருப்திப்படுத்துவதற்கும், மற்ற வருணத்தாருக்கு தர்ம உபதேசம் செய்து காப்பாற்றும் பொருட்டும், முகத்தில் இருந்து பிராமணர்களை உருவாக்கினார் அல்லவா?

 

95.பிராமணன் சொன்ன மந்திரத்தினால் தேவர்களும் பித்ருக்களும் தம்தம் அவிர்பாகங்களை (உணவை) அடைகின்றனர். அதனால் அவனைவிட உயர்ந்தவர் இல்லை.

  1. அசையும் அசையாப் பொருட்களில் புழுக்கள் உயர்ந்தன. அவைகளைவிட, அறிவோடு வாழ்கின்ற பசு முதலிய பிராணிகள் உயர்ந்தன. அதைவிட மனிதன் உயர்ந்தவன். அவர்களிலும் வேதம் ஓதும் அந்தணர்கள் உயர்ந்தவர்கள்.

97.அவர்களிலும் வேதத்தின் பொருளை அறிந்த பண்டிதர்கள் உயர்ந்தவர்கள்; அதைவிட விதி விலக்குகளை அறிந்தவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களிலும் தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொண்டு வாழ்வோர் உயர்ந்தவர்கள். அவர்களிலும் பிரம்மத்தை உணர்ந்த ஞானிகள் உயர்ந்தவர்கள்.

 

98.பிராமணன் என்பவன் தர்மத்தின் வடிவமாக இருக்கிறான். தர்மம் விளங்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட  அவன் ஞானத்தினால் மோட்சத்திற்கு உரியவன் ஆகின்றான்.

 

99.பூமியில் பிறந்திருக்கின்ற பிராமணன், பெருமை பெற்றவனாய், நால் வர்ணத்தாருடைய தர்மம் என்னும் பொக்கிஷத்தை காப்பாற்றுகிறான்.

 

100.பிராமணன் முதல் வர்ணத்தானவன் என்பதாலும், பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாலும் எல்லா வர்ணத்தாரிடமிருந்தும் தானம் வாங்க அருகதை உள்ளவன் ஆகின்றான்.

 

101.ஆகையால் பிராமணன் தர்மம் வாங்கினாலும் அவன் பொருளையே — தன் பொருளையே சா     ப்பிடுகிறான்; தன் உடைகளையே உடுத்துகிறான். தன்னுடையதையே தானம் வாங்குகிறான். மற்றவர்கள் அவன் தயவில் வாழ்கிறார்கள்.

  1. அந்த பிராமாணன் உடைய, மற் றவர்களுடைய தர்மங்களை பகுத்தறிவதற்காக, மனித யோனியில் பிறவாத ஸ்வாயம்புவ மநு இந்த சாஸ்திரத்தைப் பிரபலப்படுத்தினார்.

103.இந்த சாஸ்திரத்தின் பயனை அறிந்த பிராமணர்களே இதைக் கற்கலாம்; தனது சீடர்களுக்குக் கற்பிக்கலாம். மற்றவர்களுக்குக் கற்பிக்கக் கூடாது.

104.விரத அனுஷ்டானங்களுடன் இதை பின்பற்றுபவனுக்கு மனம், உடல், சொல்லினால் ஏற்படும் குற்றங்கள் வாராது.

  1. இதை ஓதுகின்ற பிராமணன தன்னுடைய சமூகம் முழுவதையும் தூய்மைப் படுத்துகிறான். தன்னுடைய முன் ஏழு, பின் ஏழு தலைமுறைகளை நல்ல கதி அடையச் செய்கிறான். அவன் இந்த பூமி முழுவதையும் தானம் வாங்குவதற்கு உரியவன் ஆகின்றான்.

106.இந்த சாஸ்திரத்தை ஓதுகின்றவர்களுக்கு இது மங்களத்தையும் கீர்த்தியையும் (புகழ்), ஆயுளையும், உயர்ந்த மோக்ஷ கதியையும் தருகின்றது.

 

  1. இந்த சாஸ்திரத்தில் தொன்றுதொட்டு வந்த நான்கு வருணத்தாரி னொழுக்கங் களும்,வினைகளால் ஏற்படும் விளைவுகளும்,எல்லா அறங்களும் சொல்லப்பட்டுள்ளன.

 

108.வேதத்திலும் ஸ்ம்ருதியிலும் உள்ள ஒழுக்கவிதிகளே எல்லோருக்கும் முக்கியமானதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால் யார் சுகம் அடைய விரும்புகின்றனரோ அவர்கள் இதில் ஈடுபடவேண்டும்.

 

109.ஒழுக்கத்தைவிட்ட பிராமணனுக்கு வேதத்தில் சொல்லிய பலன்கள் கிடைப்பதில்லை. ஒழுக்கம் உடைய பிராமணனுக்கு எல்லா நன்மைகளும் கிட்டும்

 

110.முனிவர்கள் ஒழுக்கத்தின் பலனை அறிந்து எல்லாத் தவத்திற்கும் அதுவே முதற்காரணம் என்று சொல்லுகின்றனர்.

எனது கருத்து

இந்தப்  பகுதியைப் படிக்கையில் ,மநு, ஒரேயடியாக பிராமணர்களை உயர்த்தி வைத்ததுபோலத் தோன்றும். ஆனால் 2600 ஆண்டுகளுக்கு முன்னர், யாக யக்ஞங்கள் தேவை இல்லை என்று சொன்ன புத்தரும் பிராமணர்களை உச்சானிக் கொம்பில் வைத்திருப்பதுடன் ஒப்பிட்டு பொருள் காண வேண்டும; புத்தர் அப்படி ஏன் சொன்னார் என்று அதன் தாத்பர்யத்தையும் அறிய வேண்டும்

 

“ஒரு மகானும், பிராமணனும் கடந்த கால பாவங்களினால் பாதிக்க படுவதில்லை; அவன் தனது சொந்த தாய் தந்தையரைக் கொன்று இருந்தாலும், இரண்டு நல்ல அரசர்களிக் கொலை செய்திருந்தாலும்,  ஒரு பெரிய நாட்டையும், மக்களையும் சீரழித்து இருந்தாலும் அவனைப் பாவங்கள் அணுகாது (தம்மபதம் 294) என்று புத்தர் செப்புகிறார்.

 

ஆயினும் 26ஆவது (தம்மபதம்)  அத்தியாயம் முழுதும் பிராமணன் யார் என்று இலக்கணம் கற்பிக்கிறார். அதாவது அன்பும் கருணையும் ஒழுக்கமும் அறிவும் உடையவனே பிராமணன் என்பதைத் தெளிவாக்குகிறார். இது போலவே மநு வும் வேதம் கற்காதவனோ, ஒழுக்கம் இல்லாதவனோ பிராமணன் இல்லை  என்பார். அது மட்டுமல்லாமல் கடு மையான விதிகளையும் விதிக்கிறார்.

 

வள்ளுவரும் அந்தணர் என்போர் அறவோர் என்றும் எவ்வுயிர்க்கும் கருணை காட்டுபவன் என்றும்,கொல்லாமை என்னும் விரதத்தைப் பின்பற்றுபவன் என்றும் பிறப்பொழுக்கம் குன்றாதவன் என்றும் பிராமணர்களுக்கு இலக்கணம் கற்பிக்கிறார் (குறள்  30, 134, 543, 560, 28, 8).

ஆகவே ஒழுக்கமும் அன்பும் கருணையும் உடையவர்களுக்குச் சிறப்பு சலுகை இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை எல்லாம் கடுங்குளிர்ப் பிரதேச கட்டாய முகாம்களுக்கு அனுப்பி’ காணமற் போகச் செய்த’ கம்யூனிஸ ரசும் கூட ரஷ்யாஷ்வின் அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை என்று கருதப்பட்ட ஷகாரோவ் அவர்களைக் கொல்லாமல் வெளியேற அனுமதித்தது. அறிவாளிகளையோ, தூதர்களையோ கொல்லக்கூடாது என்ற தர்மத்தைப் பல நாடுகளும் கடைப் பிடித்தன. இந்துக்கள், இத்தோடு பெண்களையும் புற முதுகு காட்டுவோரையும் கொல்லக்கூடாது என்ற தர்மத்தையும் கடைப் பிடித்தனர்.

 

மநு பிராமணர்களுக்கு ஜே போட்டாலும் அத்தகைய இலக்கணத்திற்கு உட்படும் பிராமணர்கள் மிகவும் குறைவு என்பதை நாம் அறிவோம்.

 

மனுவே கூட பூணூல் போட எல்லோரும் உயர்ந்தவர், பிராமண குலத்தில் பிறந்து விட்டாலேயே உயர்ந்தவர் என்று சொல்லாமல், ஒழுக்கமும் வேதம் ஓதுதலுமே பிராம்ம ணத்துவத்தின் உரைகல் என்று பகர்வது கருத்துக்குரியது; கவனத்துக்குரியது.

 

இறுதியாக மநு சொல்லுவதை எழுத்துக்கு எழுத்து அப்படியே எடுத்துக் கொண்டு ‘பொங்கி எழுவோர்’ அவர் சொல்லும் மற்ற விஷயங்களையும் நம்ப வேண்டும்.

அவர் எழுதிய சாத்திரம், சரஸ்வதி- த்ருஷத்வதி நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்வோருக்கு அந்த நதிகள் ஓடிய காலத்தில் (கி.மு.2000க்கு முன்) எழுதப்பட்டது. அதற்குப் பின் அது எவ்வளவோ மாற்றங்களை அடைந்திருக்கிறது; இடைச் செருகலுக்கு உடப்படிருக்கிறது.

 

சுபம்–

 

பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர், அப்பர் செப்பல் (Post No.4393)

பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர், அப்பர் செப்பல் (Post No.4393)

 

 Written by London Swaminathan 

 

Date: 13 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-21

 

 

Post No. 4393

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பூணூல் அணிந்த ராவணனை, “இரா+வண்ணன்= இருட்டு போலக் கருப்பு நிறத்தன்” என்று சொல்லி அவனுக்கு திராவிட முத்திரை குத்தும் அறிவிலிகள் உலகில் உண்டு! இப்படிப் பிரித்தாளும் சூட்சி உடையோர் தமிழ் நாட்டில் காலடி எடுத்து வைப்பர் என்று முன் உணர்வால் அறிந்து இராவணனுக்கு பிராமணன் என்று ‘அக்மார்க்’ முத்திரை வைத்துவிட்டனர் அப்பரும் கம்பரும். ஒருவர் சுமார் 1500 ஆண்டுகளுக்கும் மற்றொருவர் 1000 . ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர்.

 

 

அப்பர் நாலாம் திருமுறையில் ராவணன் பற்றிச் சொல்லுகையில் அவனுடைய பூணூலையும் சேர்த்துப் பாடுகிறார்.

 

அசுரர்கள் ராக்ஷசர்கள் தேவர்கள், நாகர்கள் முதலியோர் , ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று நம் வேத, இதிஹாச புராணங்கள் பேசும்; ஆனால் வேற்றுமை பாராட்டி இந்துக்களைப் பிரிக்க விரும்பும் அரசியல்வாதிகளும், பிற மதத்தினரும் ஒரு சாராரை திராவிடர்கள் என்றும், பழங்குடி மக்கள் என்றும் சொல்லிப் பிரித்தாளுவர்.

 

எல்லாக் கதைகளிலும் சிவனிடமோ, பிரம்மாவிடமோ அசுரர்களும் வரம் வாங்கினர். அவர்களும் ஒரே கடவுளை வணங்கினர்; அந்தக் கடவுளரும் பாரபட்சமின்றி வரம் ஈந்தனர். ஆனால் உலக விதி, ‘அறம் வெல்லும், பாவம் தோற்கும்’ என்பதாகும். இதனால் வரம் பெற்றும் கூடத் தீயோர் வெல்ல முடியாது. ராவணனும் பல வரங்களைப் பெற்றும், செய்த தவற்றினால் உயிர் இழந்தான். ராவணன் பூணூல் பற்றி அப்பர் தரும்  தகவல் இதோ:

 

மாலினா ணங்கையஞ்ச மதிலிலங் கைக்குமன்னன்

வேலினான் வெகுண்டெடுக்கக் காண்டலும் வேத நாவன்

நூலினா  னோக்கிநக்கு நொடிப்பதோ ரளவில்வீழக்

காலினா  லூன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

பொருள்:-

பெருமையுடைய உமா தேவியார் அஞ்சுமாறு, முப்புரிநூல் அணிந்த திரு மார்பினரும், வேதம் ஓதும் திரு நாவினை உடையவருமான இராவணன், கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க,  ஈசன் ஒரு நொடிப்பொழுதில் அவ்வரக்கன் அஞ்சுமாறு திருப்பாத விரலால் அமுக்கியவர். அந்த ஈசன் உறையும் இடமே கழிப்பாலை என்னும் திருத்தலம்

 

 

வேத நாவர்- மறை ஓதும் நாவினை உடையோர்

நூலினான் – நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன்

 

இரண்டும் இராவணனைக் குறித்தன எனக் கொண்டு, சாம வேத கானம் பாடியவன், நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன் என்றுரைத்தல் பொருத்தம் உடைத்து என்று தருமபுர ஆதீனப் புலவரின் தேவார உரை கூறும்.

 

இதி வேதம் ஓதுதலையும், முப்புரி நூல் அணிவதையும் சிலர் சிவன் மீது ஏற்றிச் சொல்லுவர். அப்படிச் சொல்லும் வழக்கம் அரிது. அப்படிச் சொன்னாலும் அதை பிரம்மனுக்கே ஏற்றிச் சொல்லுவர்.

 

பூணூலும் வேத நாவும் ராவணனையே குறிக்கும் என்பதற்கு கம்ப ராமாயணம் துணை புரியும்; இதோ கம்பன் கூற்று:–

வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்

ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் — என்று சுந்தர காண்ட நிந்தனைப் படலத்தில் ராவணனை வருணிக்கிறான் கம்பன்; இதன் பொருள்:-உலகைப் படைத்தவன் பிரம்மன்; அவன் மகன் புலஸ்தியன்; அவன் மகன் விசிரவசு; அவன் மகன் ராவணன்; ஆயிரம் கிளைகளை உடைய சாம வேதத்தில் வல்லவன்.

பிரம்மாவை வேதியன், பிராமணன் என்றே இலக்கியங்கள் போற்றும்

அக்க குமாரன் வதைப் படலத்தில் கம்பன் சொல்லுவான்:

அயன் மகன் மகன் மகன் அடியில் வீழ்ந்தனள்

மயன்மகள் வயிறு அலைத்து  அலறி மாழ்கினாள் என்று. இதன் பொருளாவது– மயனுடைய மகளான மண்டோதரி தன் கணவனான ராவணனிடம் சென்று வயிற்றில் அடித்துக்கொண்டு அலறினாள்– சீதையை விட்டுவிடு என்று. ராவணனுக்குக் கம்பன் கொடுக்கும் அடை மொழி– பிரம்மனின் மகனான, புலஸ்தியன் மகனான, விசிரவசுவின் மகனான ராவணன்  என்பதாகும்.

அதே சுந்தர காண்டத்தில் பிணிவீட்டு படலத்தில்,

அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல்

தந்தவன் அன்புக்கு ஆன்ற தவநெறி உணர்ந்த தக்கோய்” என்று சொல்லுவான்; உலகங்கள் மூன்றையும் ஆதிகாலத்தில் படைத்த அந்தணன் பிரம்மாவின் வழி வந்தவனே! என்று  ராவணனை போற்றும் வரிகள் இவை. ஆக கம்பராமாயணம் முழுதும் ராவணன் ஒரு பிராமணன் என்று அடிக் கோடிட்டுக் கொண்டே செல்வான் கம்பன். இதன் காரணமாகவே தேவாரத்துக்கு உரை எழுதிய பெரியாரும் பூணுல் அணிந்ததையும் வேத பாராயணம் செய்ததையும் அப்பர் பாட்டில் ராவணனுக்கு உரித்தானதாகச் சொல்கி றார். நாம் அதை ஏற்பதில் தயக்கம் ஏதுமில்லை.

 

சுபம் –

 

அதிசய பிராமணன்; பிராமண அதிசயம்! (Post No.4276)

Written by London Swaminathan

 

Date: 6 October 2017

 

Time uploaded in London- 19-26

 

Post No. 4276

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

உலகிலேயே பழைய சடங்கு ஒன்றைப் பினபற்றும் ஒரே இனம் பிராமணர்கள்; அவர்கள் உலகிலேயே பழைய சடங்கைச் செய்வதாக விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்கள் உரைக்கும்.

 

அது என்ன பழைய சடங்கு?

சந்தியாவதந்தனம்!

அதில் அவன் ஒரு நாளைக்கு மூன்று முறை சுமார் 100 கடவுளர், ரிஷிகள் பெயரைச் சொல்லுகிறான். தொல்காப்பியம் உரைக்கும் தமிழ் கடவுள்கள் இந்திரன், வருணன், விஷ்ணு பெயர்களையும் சங்கத் தமிழ் நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களையும் , வரலாற்றுப் புருஷர்களான ஜனமேஜயன் முதலியோர் பெயர்களையும் சொல்கிறான். அவ்வளவு கடவுள் பெயரையும் சொல்லிவிட்டு அனத முழுமுதற் கடவுளான பிரம்மனும் நானும் ஒன்றே என்றும் சொல்லுகிறான். இது உபநிஷத மந்திரம் (அஸாவாதித்யோ பிரம்ம, பிரம்மைவாஹமஸ்மி)

சங்கத் தமிழர்கள் அதிகமாகப் புகழும் கபிலன், ஒரு பிராமணன். அவரை ‘’புலன் அழுக்கற்ற அந்தணாளன்’’ என்று புலவர் பெருமக்கள் போற்றுவர். அவர்தான் சங்கத்தமிழ் புலவர்களில் அதிக கவி மழை பொழிந்தவர்.

 

அந்தக் காலத்தில் பிராமணர்கள் ஒழுக்க சீலர்களாகவும், தன்னலமற்ற ரிஷி முனிவர்களாகவும் விளங்கினர். இதனால் பார்ப்பனரையும் கடவுளையும் ஒன்றாகப் பார்த்தனர். ( இன்று அவர்கள் த்ரிகால சந்தியா வந்தனம் செய்யாததால் அவர்கள் மதிப்பிழந்து விட்டனர்)

 

திரி கால சந்தியா வந்தனம்= முக்கால சந்தியா வழிபாடு

சந்தியா= தேவியின் பெயர், சந்தி/அந்தி நேரத்தின் பெயர்0.

நான் யஜூர் வேத ஆபஸ்தம்ப சூத்திர முறைப்படியுள்ள சந்தியாவந்தனத்தை இங்கே பயன்படுத்துகிறேன். மற்றவர்கள் சில மாறுபாடுகளுடன் செய்வர். சிலர் இ தைவிடக் கூடுதலான மந்திரங்களைச் சொல்லுவர். ஆயினும் முக்கியச் சடங்குகள் மாறாது

பிராமணர்களை பூசுரர்கள், அதாவது பூவுலகில் நடமாடும் தேவர்கள், என்று மனு ஸ்மிருதி முதலிய நூல்கள் விதந்து ஓதுகின்றன. சங்கத் தமிழ் நூல்களோவெனில் பிரமணர்களை பசுக்களுடன் ஒப்பிடுகின்றன. கண்ணகியோவெனில் பார்ப்பனர்களையும், பத்தினிகளையும் விட்டுவிட்டு மதுரையை எரி! என்று அக்கினி தேவனுக்குக் கட்டளை இடுகிறாள். முதுகுடுமிப் பெருவழுதியோ பார்ப்பனர்களுக்கும் சிவன் கோவிலுக்கும் மட்டும் தான் தலை சாய்ப்பான் என்று புற நானூறு செப்பும். மாவீரன்   சேரன் செங்குட்டுவனோவெனில் மன்னனைக் கண்டித்த பார்ப்பனன் மாடல மறை யோனுக்கு துலாபரம் செய்து தன்னு டைய எடையான 55 கிலோ தங்கத்தை அளித்ததாக சிலப்பதிகாரம் முழங்குகிறது.

 

 

பிராமணர்களின் சந்தியா வந்தனம் மாக்ஸ்முல்லர் (Max Muller) வகையறாக்களின் மண்டையில் சுத்தியல் அடி கொடுக்கிறது. அதுகள், ‘ஆரியர்கள்’ என்று வேதத்தில் இல்லாத ஒரு இனத்தை கற்பித்து அவர்கள் ஐரோப்பாவிலிருந்தோ, மத்திய ஆசியாவிலிருந்தோ நுழைந்ததாக கதை கட்டின. அப்படி ஒரு குளிர்ப்  பிரதேசத்தில் இருந்து வந்திருந்தால் தண்ணீர் சம்பந்தமான சடங்குகளே இராது. பிராமணர்களோ தண்ணீர் இல்லாமல் வாழ மாட்டார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்குகளிலும் தண்ணீர்தான் முக்கியம்; உலகிலேயே தண்ணீருக்கு அதிகமான சொற்களை உடைய மொழி-சம்ஸ்கிருதம்! பிராமணர்கள் வாழும் அக்கிரஹாரம் எப்போதும் நதிக்கரையில்தான் இருக்கும்

 

பிராமணர்கள் நாள் தோறும் நதிக்கரைக்குச் சென்று சூரிய உதயத்துக்கு முன்னரும், நடுப்பகலிலும், சூரிய அஸ்தமனத்துக்கும் முன்னரும் அந்தி நேரச் சடங்குகளைச் செய்வர். இதற்கு அவர்களுக்குத் தேவையாநது தண்ணீர் ஒன்று மட்டுமே.

 

(சூரியனைக்) காணாமல், (நிழல்) கோ ணாமல், ( சூரியனை) கண்டு கொடு என்பது பிராமணப் பழமொழி)

சுருங்கச் சொன்னால், இது நீரைக் கொடுத்து, சூரியனின் அருளை வேண்டுவது. உலகில் நமக்குக் கண்ணுக்குத் தெரியும் சக்திகளில் மிகப் பெரியது சூரியன். அதற்கு ஒப்பிட உலகில் வேறு ஒரு பொருளும் இல்லை. ஒவ்வொரு நிமிடமும் அதற்குள் பல கோடி ஹைட்ரஜன்  குண்டுகள் வெடிப்பதால் நமக்கு சக்தி கிடைக்கிறது. சூரியன் அழிந்தால் எட்டாவது நிமிடத்தில் பூமி இருண்டு விடும்; சில தினங்களுக்குள் உயிர் இனங்கள் அழியத் தொடங்கும்.

 

இதனால் கடவுளுக்கு நிகராக ஒரே ஒரு பொருளை மட்டுமே – ஒளியை – சூரிய ஒளியை ஒப்பிட்டனர். அதற்குப் பின் சக்தியின் வடிவான காயத்ரீ தேவியை வழிபடுவதே சந்தியா வந்தனத்தின் முக்கிய கட்டம்.

 

இதைச் செய்ய பத்து நிமிடம்தான் ஆகும். அதற்குள் 100 முதல் 150 பெயர்களை அவர்கள் சொல்லுவர். தனது கோத்திரம், குலம் சூத்திரம், அவர்களுக்கு மூலமான ரிஷிகளின் பெயர்க ளைப் பகருவர். நவக்கிரகங்களின் பெயர்களையும் மொழிவர். திசைகள், “கை தொழு எழுவர்” என்று சங்க நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களை  வழிபடுவர்.

 

கிருஷ்ணரும் அர்ஜுனரும் பழங்குடி மக்கள் ( கோண்டுகள் – கோண்ட்வானா லாண்ட்= காண்டவ வனக் காட்டு மக்கள்) வாழும் காண்டவ இனக் காடுகளை அழித்தபோது, நாகர்களுக்கும், பாண்டவர்களுக்கும் மிகப்பெரிய பகைமை மூண்டது. அதற்கு சமாதனம் செய்ய ஜரத்காரு, ஆஸ்தீகர் ஆகியோர் வந்தனர். நர்மதை நதிக்கரையில் ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாகம் (நாகர் படுகொலை) நிறுத்தப்பட்டது. பரீக்ஷித் மஹாராஜன் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இது நடத்தப்பட்டது. அப்பொழுது மயன் தலைமையில் சென்ற ஒரு குழு தென் அமெரிக்காவில் மாயன் (MAYAN)  நாகரீகத்தை நிறுவியது; ( எனது பழைய ஆய்வுக் கட்டுரையில் முழு விவரம் காண்க) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவமும் பிராமணர்களின் சந்தியா வந்தனத்தில் இடம் பெறுகிறது.

நான் லண்டன் மாநகரில் தேம்ஸ் நதி தீரத்தில் தினமும் இரு முறை  மட்டுமே சந்தியா  வந்தனம் செய்கிறேன். மதிய வேளைகளில் வெளியே இருப்பதால் செய்ய இயலவில்லை. ஒருநாள், நாம் எவ்வளவு பெயர்களை இதில் சொல்கிறோம் என்று கூட்டல், கழித்தல் கணக்குப் போட்ட போதுதான் 100 பேருக்கும் மேலாக வந்தது தெரிந்தது. அதுவும் தொல்காப்பியர் சொல்லும் கடவுளர் பெயர்கள் அதில் இருப்பதும், உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் சொல்லும் காயத்ரி மந்திரம் அதில் இருப்பதும் வியப்பை ஏற்படுத்தியது. 6000 ஆண்டுகளுக்கு முன்னர் சரஸ்வதி நதி தீரத்தில் நம்மவர் செய்த ஒரு சடங்கை இன்று வரை கடைப்பிடிப்பதால் என்னை நானே படிம அச்சு (FOSSIL) — பழங்காலச் சுவடு– என்று நினைத்து பெருமை அடைந்தேன்.

 

 

சில ஆண்டுகளுக்கு முன்னர் “பிராமணர்  இல்லையேல் தமிழ் இல்லை” (No Brahmins, No Tamil) என்று சங்க காலம் பற்றி ஒரு கட்டுரையும், பிராமணர்களை கின்னஸ் நூல் சாதனைப் புத்தகத்தில் குறிப்பிட வேண்டும் என்று ஒன்பது கட்டுரைகளையும் எழுதினேன். அதன் தொடர்ச்சியாக இதையும் படிக்க வேண்டுகிறேன்.

 

சிலர் நர்மதை நதி பற்றிய மந்திரம் சொல்லுவதில்லை; வடக்கத்தியர் நகக்கிரஹ தர்ப்பணம் செய்வதில்லை. ஆகாயால்தான் கூட்டல் கழித்தலுக்குப் பின்னர் நூற்றுக்கு மேலான பெயர்கள் என்று சொன்னேன். யமனுக்கு மட்டுமே பத்து பெயர்கள் வரை சொல்லுகிறோம்.

 

சந்தியாவந்தனம் பற்றிய இன்னொரு வியப்பான செய்தி– காயத்ரி தேவியை  “உன்னுடைய மலை உச்சியில் உள்ள வீட்டுக்குப் போகலாம்” என்று விடை கொடுத்து அனுப்புகிறோம். இந்த “சிகர” என்ற வார்த்தையை (ZIGGURAT) ஜிக்குராட் என்று அழைத்தனர். சுமேரியர்களும் மலை உச்சியில் தெய்வத்தை வைத்தனர். ஆனால் அது எல்லாம் மியூசியங்களுக்குப் போய்விட்டன. மோசசும் ஜீசசும் தோன்றும் முன்னர் துவங்கிய சந்தியா வந்தனத்தைச் செய்யும் பிராமணர் ஒவ்வொருவரும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறத் தகுதி உடையவர்களே.

 

தினமும் மூன்று முறை சந்தியா வந்தனம் செய்யும் பிராமணனைக் கண்டால் ஒரு பெரிய கும்பிடும் போடுங்கள்.

நிற்க; இதோ பிராமணர் சொல்லும் தெய்வங்கள், புனிதர்களின் பட்டியல்:-

ஓம், அச்யுதா, அனந்தா, கோவிந்தா, விஷ்ணுவின் 12 பெயர்கள்- கேசவா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு. மது சூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ச்ரீதரா, ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா,

கணேச தியானம், (ஆதி சைவர்களாக இருந்தால் சில மாறுபாடுகள் உண்டு)

 

ஏழு லோகங்கள்- பூர், புவ, சுவர், மஹ, ஜன, தபோ, சத்ய லோகங்கள்

காயத்ரீ மந்திரம் பல இடங்களில் வருகிறது

பரமேஸ்வர (ப்ரீத்யர்த்தம்); வைணவர்கள் வேறு பெயர் சொல்லுவர்.

ஆப: (நீர்), சூர்யன், அக்னி,

பிரம்மன் (பிரும்மா அல்ல), நவக்கிரஹங்கள்- சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், ப்ருஹஸ்பதி, சுக்ர, சனைச்சர, ராஹு ,கேது

பிரம்மா, பரமாத்மா,

சப்த ரிஷிகள்: அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட,கௌதம, காஸ்யப, ஆங்கிரஸ்

 

யாப்பிலக்கண அணி: காயத்ரீ, உஷ்னிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தி, த்ருஷ்டுப், ஜகதி

ஏழு வேத காலக் கடவுளர்: அக்னி, வாயு, அர்க, வாகீச, வருண, இந்திர, விச்வே தேவா, தேவதா:

 

வாமதேவ ரிஷி, காயத்ரீ, சாவித்ரீ, ஸரஸ்வதீ, விச்வாமித்ர ரிஷி

அபிவாதயே என்னும் மந்திரத்தில் ஒருவருடைய கோத்ரம், ரிஷிகளின் பெயர்கள் வரும். எடுத்துக் காட்டாக எனது குலத்தில், வைஸ்வாமித்ர, அகமர்ஷண, கௌசிக, ஆபஸ்தம்ப, ஸ்வாமிநாத: (My name)

 

சந்தியா, சாவித்ரி, காயத்ரீ, சரஸ்வதி, சர்வ தேவதா:

(சில பெயர்கள் திரும்பத் திரும்ப வரும்; கூட்டல் கழித்தலுக்குப் பின்னரும் 100 பெயர்களுக்கு மேல்!)

 

4 திசைகள் – கிழக்கு, தெற்கு, மேற்கு வடக்கு திசைகளுக்கு வந்தனம்

மேல், கீழ், இடைவெளி,பூமி, ம்ருத்யவே,

யமன்

 

(யமன், வருணன், சூரியன், காயத்ரீ முதலிய தெய்வங்களுக்கு பத்து, பதினைந்து சிறப்புப் பெயர்கள் வரும். அவைகளையும் சேர்த்தால் 150 பெயர்கள் வரை செல்லும்)

 

எடுத்து க்காட்டாக யமன் பற்றிய பெயர்களை மட்டும் தருகிறேன்:

யமன், தரமராஜன்,ம்ருத்யவே, அந்தகாய, வைவஸ்தாய, காலாய, சர்வபூதக்ஷயாய, ஔதும்பராய, தத்னாய, நீலாய, பரமேஷ்டினே, வ்ருகோதராய, சித்ராய, சித்ரகுப்தாய.

 

பின்னர் க்ருஷ்ண பிங்களம் ( சங்கர நராயணன்= ஹரிஹரன்)

 

நர்மதை நதிக்கு வணக்கம்- ஜனமேஜய, ஆஸ்தீக மகரிஷி- ஜரத்காரு- பன்னகேப்ய:-

சூரியன் பற்றிய நீண்ட மந்திரம்

நாராயணனுக்கு எல்லாம் சமர்ப்பணம்

 

சவித்ரு தேவன்

ஓம் தத் சத்

90 பெயர்களுக்கு மேல் வரும் தெய்வங்களோடு யமன் பற்றி வரும் 13 பெயர்கள் மற்றும் இது போல ஒவ்வொரு மந்திரத்திலும் வரும் பெயர்களைச் சேர்த்தால் 150 பேருக்கும் மேலாக வரும்!

 

வாழ்க பிராமணர்! வளர்க சந்தியாவந்தனம்!!

 

Please read my old articles:-

Brahmins deserve an entry in to Guinness Book of Records …

tamilandvedas.com/2012/01/26/327

Brahmins deserve an entry in to Guinness Book of … That is why I say Brahmins deserve a mention in the Book of Records. 32. … by Tamil and Vedas on January 26, …

Brahmins deserve an entry in to Guinness Book of Records -Part 5

  • Brahmins | Tamil and Vedas
  • tamilandvedas.com/category/brahmins
  • … Asoka mentioned Brahmins first and … //tamilandvedas.com/2017/05/30/about-brahmins-buddha-and … “Brahmins deserve an entry in to Guinness Book of …

·         No Brahmins, No Tamil!! | Tamil and Vedas

tamilandvedas.com/2012/01/14/no-brahmins-no-tamil

No Brahmins, No Tamil!! … political parties in Tamil Nadu has misled the public to a great extent that they really believed Brahmins were aliens to Tamil culture.

·         No Brahmins, No Tamil!! | Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2012/01/no-brahmins-no-tamil.html

No Brahmins, No Tamil!! By S Swaminathan … literature would find out that without Brahmins Tamilwould have died or at least become poorer two thousand years ago.

–SUBHAM—

 

TAGS: பிராமணன், அதிசயம், சந்தியவந்தனம், 100 கடவுள்

 

 

திருக்குறளில் பசு, ‘கோ மாதா’ (Post No.4054)

Written by London Swaminathan
Date: 5 July 2017
Time uploaded in London- 17-44
Post No. 4054
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

இமயம் முதல் குமரி வரை பண்பாடு ஒன்றே. பசுவுக்கும் பிராமணனுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுப்பது இலக்கிய வழக்கு. வாழ்க அந்தணர், வானவர் ஆனினம் (திருஞான சம்பந்தர் தேவாரம்) என்பர்.  இதையே சம்ஸ்கிருதத்தில் “கோப்ரஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம், லோகாஸ் சமஸ்தோ சுகினோ ப வந்து” என்பர். அதாவது பிராமணன் முதலான எல்லாரும் பசு முதலான எல்லா ஜீவன்களும் சுபமாக இருக்கட்டும் உலகம் முழுதும் சுபமாக இருக்கட்டும் என்பது இதன் பொருள்.

 

ஏன் பசுவையும் பிராமணனையும் மட்டும் சொல்ல வேண்டும்? சுயநலம் இல்லாமல் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு அளிப்பதாலும் பாலும் வேதமும் எல்லோருக்கும் பயன்படுவதாலும் அவர்களை முதலில் வைத்து மற்றவர்களையும் வாழ்த்தினர்.

 

ஒரு வட்டத்தில் முதல் புள்ளி முடிவான புள்ளி, துவங்கும் இடம், முடியும் இடம் என்று எதுவும் கிடையாது. ஆனால் நாமாக ஒரு கோடு போட்டு இது துவங்கும் இடம், இது முடியும் இடம் என்போம்; ஓட்டப் பந்தயம் நடக்கும் வட்டமான மைதானங்களில் இதைக் கண்கூடாகக் காணலாம். அது போலவே சமுதாயத்தில் எல்லோரும் ஒரு உடலின் அங்கம் என்று ரிக்வேதம் (புருஷ சூக்தம்) சொல்கிறது. எல்லோரும் சமம் ஆயினும் ஒரு துவக்கம் இருக்க வேண்டும்.

 

தமிழ் வேதம் என்று திருவள்ளுவ மலை போற்றும் திருக்குறளில் பசுவையும் பிராமணனையும் வள்ளுவரும் முதலிடத்தில் வைக்கிறார்.

 

ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின் (குறள் 560)

 

ஒரு நாட்டில் ஆட்சியாளர்கள் நியாயமான ஆட்சி நடத்தாவிடில் ஆறு தொழில்களைக் கொண்ட அந்தணர்கள் வேதங்களை மறந்து விடுவர்; பசுக்களும் பால் தராது. இந்தக் கருத்தும் “பசு-பிராமணன்” என்ற ஜோடியும் இமயம் முதல் குமரி வரை எல்லா மொழி நூல்களிலும்,

குறைந்தது  மூவாயிரம் ஆண்டுகளாக, உள்ளது.

 

புற நானூற்றில் நெட்டிமையார் (புறநானூறு பாடல் 9)

பாடிய பாடலில்— பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டும் பாடலில்—- ஆவும் ஆன் இயற் பர்ப்பன மாக்களும் என்ற வரிகள் வருகிறது.

 

கண்ணகிக் பிராமணர்களையும் பெண்களையும் எரிக்காமல் தீயோரை மட்டும் எரி என்று மதுரையில் அக்கினி தேவனுக்கு உத்தரவிட்டது போல பாண்டிய அரசனும் பிராமணர்களும் பசுக்களும் பெண்களும்,நோயாளிகளும் என்று சொல்லிவிட்டுப் போர் தொடுப்பானாம் என்கிறார். அது தர்ம யுத்தம் நடந்த காலம்.

 

இவ்வாறு சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பிராம- பசு ஜோடி  வருகி றது

 

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளி வந்தது இல் (குறள் 1066)

 

பசுவைக் காப்பது புனிதமானது. ஆயினும் ஒருவன் பசுவுக்காக தண்ணீர் கொடுங்கள் என்று தர்ம நியாயப்படி தண்ணீர் கேட்டாலும் பிச்சை, பிச்சைதான்; அது போல பிச்சை எடுப்பதைப் போல  நாவுக்கு இழிவான செயல் வேறு ஒன்றும் இல்லை.

 

பசு மாட்டை ஏன் வள்ளுவர் உதாரணமாக வைத்தார். பசுக்களைப் பூஜித்து காப்பாற்றுவது இந்துக்களின் கடமை. அதற்காக தண்ணீர் வேண்டும் என்று கேட்பது தர்மமே. ஆனாலும் அதை பிச்சை கேட்கும் நிலை வந்துவிட்டால், அதுவும் ஒருவனுக்கு இழிவான செயலே.

 

 

தமிழ் நாட்டில் கோவில் வாசல்களில் பசுமாடுகளைக் கட்டி வைத்திருப்பர். அதன் அருகிலேயே அகத்திக் கீரையை விலைக்கு விற்கும் பெண்களும் நிற்பர். பக்தர்களில் பலர் காசு கொடுத்து அகத்திக் கீரையை வாங்கி பசுமாட்டுக்குப் போடுவர். இது ஒரு பெரிய தருமம்; எளிதில் புண்ணியம் சேர்க்கும் வழி.

 

இதைத் திருமூலரும் செப்புவார்:

 

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே

பொருள்:-

 

எல்லோரும் எளிதில் செய்யக் கூடிய வைகளைத் திருமூலர் சொல்லிக் கொடுக்கிறரர். இதை யாரும் செய்யலாம்; எப்போதும் செய்யலாம்; செலவின்றிச் செய்யலாம். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொல்வதைப் புறநானூற்றில் புலவர் கபிலர் அப்படியே சொன்னார்; “பத்ரம் புஷ்பம் பலம் தோயம்” (பச்சிலை, பூ, பழம், தண்ணீர்) ஆகிய எதனாலும் என்னைப் பூஜிக்கலாம். இதைப் புறநானூற்றில் (106) புல், இலை, எருக்கம் ஆயினும் — கடவுள் ஏற்பார் என்று கபிலர் சொன்னார்.

 

திருமூலரும் கடவுளுக்கு ஒரு வில்வ இலையையோ, அருகம் புல்லையோ, துளசி இலையையோ கொடுத்தால் போதும் என்பார். அது போல பசு மாட்டுக்கு ஒரு கைப்பிடி புல் அல்லது அகத்திக் கீரை கொடுத்தால் போதும்.  நாம் சாப்பிடும் முன்னால் ஒரு கைப் பிடி அரிசியை ஏழைகளுக்கு, அனாதை ஆச்ரமங்களுக்கு என்று ஒரு பானையில் எடுத்து வைக்க வேண்டும். இதை

 

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) பிடி அரிசித் திட்டம் என்று துவக்கி வைத்தார். இதை எல்லாம் செய்ய முடியாதவர்கள் கூட தன் இன்மொழியால் மற்றவர்களுக்கு நல்லதை உரைத்து அவர்களைக் கடைத்தேற்றும் புண்ணியத்தைச் செய்யலாம்.

ஆக, யார் பசுவைப் பற்றிப் பேச வந்தாலும் அத்தோடு பத்து நல்ல செயல்களும் கூடவே வரும்!

 

–Subahm–

 

 

 

புத்தரும் பிராமணர்களும்: இரண்டு சுவையான சம்பவங்கள்! (Post No.3949)

Written by London Swaminathan

 

Date: 28 May 2017

 

Time uploaded in London: 11-07 am 

 

Post No. 3949

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

புத்தர் பற்றி வெள்ளைக்காரர்கள் எழுதியதை அப்படியே நம்பிவிடக்கூடாது. அவர் ஏதோ இந்து மதத்துக்கு எதிராகப் புரட்சிக்கொடி தூக்கியதாகவும் பிராமணர்களை எதிர்த்ததாகவும் வெளிநாட்டுக்காரர்கள்

எழுதியதை நம்பி இங்குள்ள திராவிட பக்தர்களும் புத்தர் படத்தை தனது வீட்டில் மாட்டி வைத்திரு ப்பர். அவர்களுக்கு புத்தர் ‘தம்ம பத’த்தில் என்ன சொன்னார் என்று தெரியாது பாவம்! அதாவது அறியாத ஜீவன்கள்; சுக்கான் உடைந்த கப்பல்கள்; வழி தெரியாமல் திணறும் அந்தகர்கள்.

 

என்னுடைய பல திராவிட நண்பர்கள் இன்னும் திருக்குறளையே படித்ததில்லை. படித்த பிறகு அதன் கருத்துகளை வேறு ஜீரணம் செய்யவேண்டும்; பின்னர் அதில் ஒரு திருக்குறளையவது பின்பற்ற வேண்டும்! நடக்குமா?

 

புத்தமதத்தினரின் வேதப் புத்தகமான தம்ம பதத்தில் 423 ஸ்லோகங்கள் உண்டு. அதில் கடைசி அத்தியாயம் ‘பிராமணர்’ என்ற தலைப்பிட்ட 26-ஆவது அத்தியாயமாகும். அதில் 41 ஸ்லோகங்கள் இருக்கின்றன. அதாவது அந்தப் புத்தகத்தில் பத்தில் ஒரு பகுதி. அவ்வளவு முக்கியத்துவம் பிராமணர்களுக்கு!

அசோகனும் தனது கல்வெட்டுகளில் முதலில் பிராமணர்களைக் குறிப்பிட்டுவிட்டே மற்ற வகுப்பினரைக் குறிப்பிடுவான்; அவ்வளவு பய பக்தி.

 

எப்படி தமிழ் வேதமான திருக்குறள் இருக்கும் வரை இந்துமதம் அழியாதோ, அப்படி தம்மபதம் உள்ளவரை இந்துமதம் அழியாது. ஏனெனில் இரண்டு நூல்களிலும் இந்துமதக் கருத்துகள் அப்படியே உள்ளன. ஆயினும் வள்ளுவனும் புத்தனும் வெறும் சடங்குகளையும், யாகத்தில் உயிர்ப் பலியையும் எதிர்த்தது உண்மையே. அவர்கள் இருவரும் உலக மக்கள் எல்லோரும் ‘வெஜிட்டேரியன்ஸ்’ – சாக பட்சிணிகள்– ஆக வேண்டும் என்று எதிர்பார்த்தனர். அது என்றுமே நடவாத காரியம். இது இந்துக்களுக்குத் தெரியும். ஆனால் மனிதன் உயர்நிலையை அடைய ஒவ்வொருவரும் மாமிசத்தை தவிர்த்தே ஆக வேண்டும். மாமிசமுண்ணாததால் மட்டும் உயர்நிலையை அடைந்து விடமுடியாது.

 

தம்மபதத்தில் பிராமணர் பற்றிய அதிகாரத்தில் யார் பிராமணன் என்று விவரிக்கிறார். அதற்கு முன்னரும் 6, 7 இடங்களில் பிராமணர் பற்றிச் சொல்கிறார்.

 

“ஒரு பிராமணனும் முனிவனும் கடந்த கால பாவங்களில் இருந்து விடுபட்டவர்களாவர்; அவன் தனது தந்தை தாயைக் கொன்று இருந்தாலும், இரண்டு நியாயமான அரசர்க ளைக்கொன்று இருந்தாலும். ஒரு நாட்டையே சீரழித்திருந்தாலும், மனிதர்களின் மாணிக்கம் போன்றோரைக் கொன்று இருந்தாலும் அவர்கள் தூயவர்களே (தம்மபதம் 294, 295)

 

ஏன் இப்படிச் சொன்னார்? ஒரு முனிவனும், ஒரு பிராமணனும் சொல், செயல், சிந்தனையில் (திரிகரண சுத்தி) ஒன்றுபட்டுவிட்டால் பின்னர் அவர்கள் பூலோக தேவர்கள் ஆவர்.

 

வள்ளுவனும் புத்தனும் சொன்ன எல்லா கருத்துகளும் ஏற்கனவே உள்ள கருத்துகள்தான். ஆனால் அவைகளைச் சுருக்கமாக, ஆழமாக, அழுத்தமாக, மக்கள் பேசும் மொழிகளில் (பாலி, தமிழ்) சொன்னதும் அவைகளை அவர்கள் தன் வாழ்நாளில் பின்பற்றிக் காட்டியதுமே அவர்களுடைய நூல்களை வேதங்கள் அளவுக்கு உயர்த்தின.

 

தம்மபத நூலுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அதில் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த தத்துவ அறிஞர் டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய உரையில் வரும் இரண்டு சம்பவங்களைக் காண்போம்:-

 

முதல் சம்பவம்

 

ஒரு பிராமணர் யாக யக்ஞாதிகளை முடித்துவிட்டு அவற்றின் பிரசாதத்தைக் கொண்டு வந்தார். புத்தரிடம் வந்தவுடன் அவைகள் என்னவென்று கேட்டார். அவை யாகத்தின் மிச்சம், மீதி என்று அறிந்தவுடன் புத்தர்  சொன்னார்:-

“ஓய், பிராமணரே! யாகத் தீயில் குச்சிகளை (சமித்து) வைப்பதன் மூலம் நீவீர் தூய்மையாகிவிட்டதாக எண்ண வேண்டாம். இதெல்லாம் மேம்போக்கானவை. நான் என்னுள்ளே உறைந்துகிடகும் அகத் தீயை எழுப்புகிறேன். அந்த ஞானத் தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். இந்த வேள்வியில் என்னுடைய நாக்குதான் யாகக் கரண்டி; என்னுடைய இருதயம்தான் (உள்ளம்தான்) யாக குண்டம்” என்றார் புத்தர்.

 

பிராமணர்கள் செய்த யாக யக்ஞங்கள் காலப்போக்கில் பொருளற்றுப் போய் வெறும் சடங்குகள் ஆனதால் புத்தர் இப்படிப் புகன்றார். ஆனால் புத்தருக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த பிருஹத் ஆரண்யக, முண்டக உபநிஷத்துகளிலேயே இக்கருத்து உள்ளது. புத்தரோ வள்ளுவரோ புதிதாக ஒன்றும் சொல்லவில்லை

 

இரண்டாவது சம்பவம்

ஒருமுறை புத்தர், அம்பலதிகா என்னும் இடத்திலுள்ள பொது மண்டபத்துக்குள் வந்தார். அப்பொழுது  அவர்கள், புத்தர் மீது குற்றச் சாட்டுகளை சுமத்திவிட்டு வெளியேறிய, ஒரு பிராமணன் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். புத்தர் சொன்னார்,

 

 

” என்னைப் பற்றியோ, நான் போதிக்கும் விஷயங்கள் பற்றியோ, புத்த பிட்சுக்கள் பற்றியோ யாராவது குறைகூறினால் ஏன் கோபப்படுகிறீர்கள்? இப்படிக் கோபப்பட்டால் உங்களால் ஆன்மீக  முன்னேற்றம் காண முடியாது. மேலும் ஏனையோர் சொல்வது சரியா தவறா என்று பகுத்துணரும் சக்தியையும் இழந்து விடுவீர்கள்” என்று எச்சரித்தார்.

 

புத்தரின் வெற்றிக்கு இதுதான் காரணம். அவர் கோபப்பட்டதாக ஒரு சம்பவமும் இல்லை. மற்றவர்களைக் குறைகூறியதாகவும் ஒரு சம்பவமும் இல்லை. காலப்போக்கில் அவரது பிரதம சீடர்களாக ஆனவர்களும் பிராமணர்களே!

தான் சொல்லும் கருத்துகளை, அவர்  பின்பற்றினால், பின்னர் அவருடைய உபதேசங்களுக்கு மந்திர சக்தி வந்துவிடும்.

ராமகிருஷ்ண பரமஹம்சர்,  சுவாமி விவேகாநந்தர், ரமண மகரிஷி, காஞ்சிப் பெரியவர் ஆகிய பெரியோர் வாழ்விலிருந்து இவற்றை அறியலாம்.

 

–சுபம்–

கஞ்சக் கோமுட்டி, பேராசைப் பிராமணன் கதை

brahmin 2

Compiled by London swaminathan

Article No. 1793;11th  April 2015

Uploaded from London at   5-34 am

 

 

ஒரு ஊரில் ஒரு கோமுட்டிச் செட்டி இருந்தார். அவர் மஹா கஞ்சன். அதே ஊரில் புரோகிதம் செய்யும் ஒரு பிராமணர் இருந்தார். அவர் மிகவும் பேராசைக்காரர். ஒரு ஆடி அமாவாசை அன்று எல்லோரும் நதிக்கரையில் நீத்தார் நினைவாக தர்ப்பணம்-திதி கொடுத்தனர். கோமுட்டி செட்டியாரும் அவ்வாறு செய்ய எண்ணினார். காலையில் போனால், ஐயருக்கு நாலு அணா தட்சிணை கொடுக்க வேண்டி இருக்கும், நாம் மெதுவாக உச்சிப் பொழுதில் போவோம் என்று உச்சிப் பொழுதில் நதிக் கரைக்குப் புறப்பட்டார்.

அப்போதுதான் பிராமணர் தர்ப்பைக்கட்டு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்படத் தயாரானார். செட்டியாரைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி. வாங்கோ செட்டியார்வாள், என்ன தாமதம்? அதனால் என்ன, வாங்கோ, உங்களுக்கும் பண்ணி வைக்கிறேன் என்று தர்ப்பைக் கட்டை அவிழ்த்து ஆயத்தமானார்.

ChettiarBommai

செட்டியார் பொம்மை (கொலுவில்)

செட்டியாருக்கு  தர்ம சங்கடமான நிலை. பிராமணரிடம் மாட்டேன் என்று சொல்லி அவர் சாபத்துக்கு ஆளாக முடியாது. அடடா, இடுப்பில் பணத்தை முடிந்துகொள மறந்துவிட்டேனே, என்றார்.

அட, செட்டியார்வாள், உமது கிருஹம் (வீடு)தான் எனக்கு நன்றாகத் தெரியுமே. நாளை நானே வீட்டுக்க்கு வந்து தட்சிணை வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அவருக்கு தர்ப்பணம் செய்துவைத்தார். செட்டியார் மனதில் பலா  ஐடியாக்கள் உதித்தன. சரி என்று சொல்லி உட்கார்ந்து எல்லாம் முடிந்தபின்னர் விடை பெற்றுக் கொண்டார்.

அந்தப் பிராமணர், மறுநாள் அதிகாலையில் செட்டியார் வீட்டுக்குப் போய் கதவைத் தட்டினார். ஜன்னல் வழியாகப் பிராமணரைப் பார்த்தவுடன் மனைவியிடம், “நான் செத்துப் ஓய்விட்டேன் என்று சொல்லி விடு, அவர் பணம் வாங்க வந்திருக்கிறார்” என்று சொன்னார். மனைவியும் அழுத கண்ணீரும் சிந்திய மூக்குமாக வந்து கதவைத் திறந்து, ஐயஹோ, அவர் போய்விட்டாரே என்று கதறினார்.

 

பிராமணர் மனதில் கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டது. அதற்கென்ன நானே காரியம் எல்லாம் செய்து முடிக்கிறேன், கவலைப் படாதீர்கள் என்று சொல்லி ஈமக் கிரியைகளுக்கு ஆட்களை ஏற்பாடு செய்தார். செட்டியார் கொஞ்சமும் பயப்படவில்லை. பிணமாகக் கிடந்தார். வீட்டின் முன்னால் பாடை தயாராகி, அவரைத் தூக்கி வைத்தனர். சங்கு ஊதியது, மணி அடித்தது, இறுதி ஊர்வலமும் புறப்பட்டது. ஐயர் முன்னே செல்ல நெருங்கிய உறவினர்கள் பின்னே வர, ஊர்வலம் சுடுகாட்டை அடைந்தது.

அந்தப் பிராமணர் எல்லா கிரியைகளையும் முடித்த பின்னர் சிதைக்குத் தீ மூட்டப்பட்டது. சுடுகாட்டில் பிணத்துக்கு தீ வைத்த பின்னர் யாரும் திரும்பிப் பார்க்கக்கூடாது என்ற சம்பிரதாயம் உண்டு. ஆகவே பிராமணர் திரும்பிப் பார்க்காமல் சென்று ஒரு மரத்தின் பின்னர் ஒளிந்து கொண்டார். சிதைத் தீ கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. யாரும் இல்லை என்பதை ஓரக் கண்ணால் பார்த்த செட்டியார், தாவிக் குதித்து வெளியே வந்தார். அப்பாடா, அந்தப் பிராமணனுக்குக் காசு கொடுக்காமல் தப்பிக்க எவ்வளவு சிரமப் பட்டுவிட்டேன் என்று சொல்லி பெருமூச்சு விட்டார். மரத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்த பிராமணருக்குச் செட்டியாரின் குரல் தேன் போல ஒலித்தது. செட்டியார் முன்னால் தாவிக் குதித்து வந்து, எங்கே என் நாலணா? என்று கேட்டார்.

brahmin

“கள்ளனுக்குக் குள்ளன்” — என்பது தமிழ்ப் பழமொழி

நீ பாய்க்கு அடியில் போனால் நான் கோலத்துக்கு அடியில் போவேன் என்பது – கன்னடப் பழமொழி!

swami_48@yahoo.com

பிராமணன் மீது நஷ்ட ஈடு வழக்கு! ஒரு பழைய சுவையான கதை!

king

Article No.1734; Date:- 20th March, 2015

Written by London swaminathan

Uploaded at London time 9-04 am

மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி, பழி ஓரிடம் பாவம் வேறிடம்

 

பழி ஓரிடத்திலே பாரம் ஒரிடத்திலே என்றும், பாவம் ஓரிடத்திலே என்றும் ஒரு பழமொழி உண்டு. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி அல்லது சமம் என்று மற்றொரு பழமொழி உண்டு. முட்டாள் களிடையே மௌனமாக இருப்பதே மேல் என்றும், புத்திசாலிகள் மௌனம் கடைப்பிடிப்பர் என்றும் சம்ஸ்கிருதத்தில் பழமொழிகள் இருக்கின்றன. மௌனம் என்பது அறியாமையைக் காட்டும் என்று நேர் எதிர்மாறாகக் கூறும் பழமொழியும் சம்ஸ்கிருத நூல்களில் வருகிறது. இதை விளக்க ஒரு சுவையான கதை இருக்கிறது.

மோக்ஷ சாதன ரஹஸ்யம் என்னும் நூலில் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவம் சொல்லும் கதையை என் சொற்களில் கூறுகிறேன்:-

ஒரு ஊரில் திருடன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு பணக்கார பிராமணன் வீட்டில் திருடுவதாற்காக இரவு நேரத்தில் சென்று சுவற்றில் கன்னம் வைத்தான் (ஓட்டை போடுதல்). அந்தச் சுவர் ஈரமான சுவர். உடனே இடிந்து விழுந்தது. மூச்சுவிட முடியாமல் திருடன் செத்தான்.

திருடர்களின் நண்பர்கள் நஷ்ட ஈடு கோரி பிராமணன் மீது வழக்குத் தொடுத்தனர். அவர், அது தனது குற்றம் இல்லை என்று சொல்லி வழக்கை மன்னன் முன்னிலையில் வைத்தார்.

மன்னன்: ஓய், பிராமணரே! ஏன் இடியும் அளவுக்கு ஈரத்துடன் சுவரைக் கட்டினீர்?

மன்னா! அதை நான் அறியேன். பெரிய கொத்தனார்தான் அதைக் கட்டினார். அவரைக் கேளுங்கள்.

brahmin

யார் அங்கே? பெரிய கொத்தனாரை இழுத்து வாருங்கள்.

ஓய் கொத்தனாரே! சுவற்றை இவ்வளவு ஈரத்துடன் கட்டியதால் திருடன் இறந்துவிட்டான். நீர்தான் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்.

மன்னா! நான் என்ன செய்வேன்? வேலையாள் கலந்துகொடுத்த சிமெண்டை (காரையை) அப்படியே பூசினேன். ஈரக் கலவை பற்றி அவனைத் தான் கேட்க வேண்டும்

யார் அங்கே? சித்தாளை இழுத்து வாருங்கள்.

ஏய், ஏன் ஈரக் கலவையான காரையை அளித்தாய்?

மன்னர் மன்னா? வழக்கத்தைவிட பெரிய பானையை அன்று என் கையில் கொடுத்தான் குயவன். அதில் கொஞ்சம் தாண்ணீர் கூடுதலாகப் போய்விட்டது. நான் குயவனை நம்பியிருந்தேன்.

bricklayer_1

யார் அங்கே? குயவனை இழுத்து வாருங்கள்.

குயவரே! என்ன காரியம் செய்தாய்? வழக்கத்தைவிட பெரிய பானையைக் கொடுத்ததால் ஒரு மரணம் சம்பவித்துவிட்டது. நீயே நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்.

மன்னர், மன்னா! உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அன்று நம்மூர் விபசாரி, பேரழகி பகல் நேரத்தில் மேனியை மினுக்கி குலுக்கி, நடந்து சென்றாள் —- அவள் அழகில் மயங்கி நின்றபோது இந்தத் தவறு நிகழ்ந்துவிட்டது. அவளை அழைத்து விசாரியுங்கள்.

யார் அங்கே? அந்தப் பேரழகியை இழுத்து வாருங்கள்.

மன்னா! எனது தொழில் தர்மப்படி நான் இரவு நேரத்தில்தான் வெளியே வருவேன். மேலும் எனது வாடிக்கையாளர்களின் நலன் கருத்தி துவைத்த, தூய ஆடைகளை அணிவதே வழக்கம். அன்று வண்ணான்,என் வீட்டுக்குத் துணிகளைக் கொண்டு வராததால் அவன் வீட்டுக்குப் பகலில் நடந்து போனேன். வண்ணான் ஏன் தாமதித்தான்? தயவுசெய்து அதை விசாரியுங்கள்.

potter

யார் அங்கே? அந்த வண்ணானை இழுத்து வாருங்கள்.

மன்னவனே! எனது தொழிலில் மிகவும் முக்கியமான கொள்கை காலத்தில் துணிகளைக் கொடுப்பது. நான் வழக்கம் போல காலையில் சலவைத் துறைக்குச் சென்றேன். அன்று ஒரு சந்யாசி ஆற்றங்கரையில் என் கல்லில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அவரைத் தடுக்க மனமில்லாமல் காத்திருந்தேன். அதனால் தாமதம் ஏற்பட்டது. அது என் பிழையன்று. அந்த சந்யாசி ஏன் என் படித்துறைக்கு அன்று வந்தார்?

யார் அங்கே? அந்த சந்யாசியை அழைத்து வாருங்கள்.

முனிவரே! ஏன் இப்படி வண்ணான் துறைக்கு வந்து துணி துவைத்தீர்?

அந்த முனிவர் அன்று மவுன விரதத்தில் இருந்ததால் எந்த பதிலும் சொல்லவில்லை. எத்தனை முறை கேட்டாலும் அவர் மவுனம் சாதித்தார்.

CIS:4660:1/(IS)

மன்னன்:– அமைச்சரே! இதற்கு என்ன பொருள்?

மன்னர் மன்னா! “மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி”. ஒருவர் தக்க விளக்கம் கூற முடியாதபோது அவர் அதை ஒப்புக்கொண்டதாகவே கொள்ளல் வேண்டும் என்று நமது  நீதி நூல்கள் பகர்கின்றன என்றார் அமைச்சர்.

அப்படியா? இந்த சந்யாசி நஷ்ட ஈடு கொடுக்கும் வரை இவரை சிறையில் அடையுங்கள் என்று மன்னன் உத்தரவிட்டான்.

பழி ஓர் இடம், பாவம் அல்லது பாரம் ஓர் இடம்.

washing clothes

மஹாபாரதத்தில் மாண்டவ்ய முனிவர் கதையிலும் இதையே காண்கிறோம். மிகச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். அரண்மனையில் கொள்ளையடித்த நகைகளுடன் திருடர்கள், அந்த ரிஷியின் வீட்டில் ஒளிந்து கொண்டனர். அப்போது ரிஷி, மௌன விரதம் அனுஷ்டித்து இருந்தார். ராஜாவின் சேவகர்கள், அந்த வீட்டில் தேடிப் பார்த்ததில் திருடர்களும் அரண்மனைச் செல்வங்களும் கிடைத்தன. மாண்டவ்யர்தான் அவர்களை ஒளித்து வைத்துவிட்டு, சும்மா மௌனம் இருப்பதாக பாசாங்கு செய்தார் என்று எண்ணி திருடர்களுடன் அவரையும் ராஜாவின் முன்னிலையில் நிறுத்தினர். எல்லோரையும் கழுவேற்றிக் கொல்ல மன்னன் உத்தரவிட்டான். கழுவில் அவர் மட்டும் உயிரோடு நின்றதால் அரசன் தன் தவற்றை உணர்ந்து அவரை விடுதலை செய்தான். மௌனம், ஆபத்தில் முடிந்த கதை இது!

பிரம்மாவின் 29 பெயர்கள்!

brahma stamp
Stamp for Brahma issued by France

Research paper written by London Swaminathan
Research article No.1424; Dated 21 November 2014.

“பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்” என்ற தலைப்பில் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியாகியது. அதைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.
அமரகோசம் என்ற வடமொழி அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த அகராதியில் பிரம்மாவுக்கு 29 பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய கடவுளருக்கு

சிவனுக்கு 52 பெயர்களும்
விஷ்ணுவுக்கு 46 பெயர்களும்
பலராமனுக்கு 17 பெயர்களும்
அம்பாளுக்கு 21 பெயர்களும்
லெட்சுமிக்கு 14 பெயர்களும்
கணபதிக்கு 8 பெயர்களும்
முருகன்/ ஸ்கந்தனுக்கு 17 பெயர்களும்
இந்திரனுக்கு 35 பெயர்களும்
அக்னிக்கு 34 பெயர்களும்
யமனுக்கு 14 பெயர்களும்
வருணனுக்கு 5 பெயர்களும்
வாயுவுக்கு 20 பெயர்களும்
குபேரனுக்கு 17 பெயர்களும்
சூரியனுக்கு 37 பெயர்களும்
மன்மதனுக்கு 19 பெயர்களும்
ஜினதேவனுக்கு 18 பெயர்களும்
புத்தபகவனுக்கு 7 பெயர்களும்

கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பல உரைகள் எழுந்தன. அவைகளைப் படித்தால் சம்ஸ்கிருதத்தையும் இந்து மதத்தை யும் “ஓரளவுக்கு அறிந்ததற்குச் சமம்”.

museum brahma

பிரம்மாவின் பெயர்களை மட்டும் இன்று காண்போம்:

1.பிரம்மா= மூச்சுக்காற்றை அளிப்பவர்; பெரியவர்
2.ஆத்மபூ= தான் தோன்றி
3.சுரஜேஷ்ட= தேவர்களில் மூத்தவர், பெரியவர்
4.பரமேஷ்டி= பெரிய ஆசையான மோட்சத்தை தருபவர்; யாகத்தால் பூஜிக்கப்படுபவர்; இதய தாமரையில் வீற்றிருப்பவர்.
5.பிதாமஹர்= பாட்டனார்
6.ஹிரண்யகர்ப்பர்= தங்க முட்டை (யிலிருந்து வந்தவர்)
7.லோகேச= மக்கள் ஈசன், உலகு இயற்றினான்
8.ஸ்வயம்பூ= தான் தோன்றி (இது ஸ்வயம்பூ லிங்கமாகத் தோன்றும் சிவ பெருமானுக்கும் உள்ள பெயர்)
9.சதுரானானன= நான்முகன் ( நாற்புறமும் பார்வை உடையவர் )
10.தாதா = உயர் தலைவன்
11.த்ருஹினஹ= படைப்போன்
12.அப்ஜயோனி = தாமரையில் உதித்தோன்
13.கமலாசன = தாமரையில் அமர்ந்தோன்

14.ஷ்ரஷ்ட= உலகைப் படைத்தோன்
15.பிரஜாபதி= மக்களை உருவாக்கியவன்; படைத்தோன்
16.வேதா= வேதம் உடையோன்
17.விஸ்வஸ்ரு = எல்லாம் அறிந்தவன் (கேட்பவன்)
18.விதாதா= உயர் தலவன்
19.விதி = வேதம் உடையவன்; விதிகளை எழுதுபவன்
20.நாபிஜன்ம= நாபியில் (தொப்புள்) உதித்தோன்
21.பூர்வ= முன்னோன்
22.கமலோத்பவ = தாமரையில் உதித்தோன்
23.சதானந்த = எப்போதும் மகிழ்பவன்
24.நிதன = ( மரணம் எனப் பொருள்; ஆயினும் பிரம்மாவுக்கு இது எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை)
25.ரஜோ மூர்த்தி = ரஜோ குணம் உடையவர்
26.சத்யக = உண்மை விளம்பி
27.ஹம்சவாஹன; அன்னப் பறவை வாஹனம் உடையோன்
28.விரிஞ்சி = உலகைப் படைத்தோன்
29.அண்டஜ= முட்டையில் உதித்தோன்

guimet-brahma-from-cambodia
Brahma from Cambodia, Museum Guimet, Paris

அமரகோஷம் போன்ற நிகண்டுகள் பெரிய விஷயங்களையும் அழகாக மனப்பாடம் செய்யும் வகையில் பாடலாக எல்லாவற்றையும் கொடுத்து விடும். இதோ பிரம்மாவின் 29 பெயர்களும் அடங்கிய அமரகோச ஸ்லோகம்:

பிரம்மாத்மபூ: ஸூரஜ்யேஷ்ட: ப்ரமேஷ்டி பிதாமஹ:
ஹிரண்யகர்ப்போ லோகேஸ: ஸ்வயம்பூஸ் சதுரானன

தாதா அப்ஜயோனி த்ருஹிர்ணோ விரிஞ்சி கமலாசன:
ஸ்ரஷ்டோ ப்ரஜாபதிர் வேதா விதாதா விஸ்வஸ்ருத் விதி:

நாபிஜன்மாண்டஜ: பூர்வோநிதன: கமலோத்பவ:
ஸதானந்தோ ரஜோமூர்த்தி சத்யகோ ஹம்சவாஹன

இந்தப் பெயர்களைத் தவிர அவருக்கு வேறு சில பெயர்களும் உண்டு. உலகம் முழுதும் பிரம்மா வழிபாடு இருக்கிறது. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் என்னும் இடத்தில் பூஜிக்கப்படுகிறார். மற்ற எல்லாக் கோவில்களிலும் சிலை உண்டு. தென் கிழக்காசிய நாடுகள் முழுதும்— குறிப்பாக கம்போடியா, இந்தோ நேசியாவில் நிறைய சிலைகள் உள்ளன. பால்டிக் நாடுகளில் இவர் ‘’ஸ்வேதோவித்’’ என்ற பெயரில் வழிபடப்படுகிறார். இவருடைய நாலு முகங்கள் நால்திசைகளையும் பார்ப்பதால் இப்பெயர். வெள்ளை நிறத்தவர் என்ற பொருளும் உண்டு. இந்தியாவில் எல்லாப் பெரிய கோவில்களிலும் பிரம்மா இருக்கிறார். எகிப்தில் ‘’பிதா’’ என்ற பெயரில் பிரம்மா இருக்கிறார் (மாதா பிதா இன் ஈஜிப்ட் என்ற என் ஆங்கிலக் கட்டுரையில் மேல் விவரம் காண்க)

brahma-temple7
Brahma’s Temple at Pushkar, Rajasthan

பிரம்மாவின் ஐந்தாவது தலை சிவனால் கிள்ளி எறியப்பட்டது. நான்கு கைகளில் ஜபமாலை, வேதப் புத்தகம், கமண்டலம், யாகக் கரண்டி வைத்திருப்பார். மனைவி சரஸ்வதி — இவருக்கு அன்ன வாகனம். அவர் உடல் செந்நிறம். ஆயினும் வெள்ளை வஸ்திரம் தரித்து இருப்பார். வரம் கொடுப்பதில் தயாள குணம். ராமனுக்கு மட்டுமின்றி, பலி, ராவணன் ஆகிய ராக்ஷசர்களுக்கும் வரம் கொடுத்தவர்.

சதபத பிராமணம் என்னும் நூலில் பல அடையாளபூர்வ கதைகள் உள்ளன. பிரம்மா — ‘’பூர்’’ என்று சொன்னவுடன் பூமியும் ‘’புவர்’’ – என்று சொன்னவுடன், காற்றும், ‘’ஸ்வர்’’ என்று சொன்னவுடன் வானமும் உருவானதாக சதபதப் பிராமணம் கூறும்.

படைப்புத் தொழில் செய்தபின் அவர் அலுப்பால் படுக்கவே எலும்புகள் விலகி மூட்டு வலி ஏற்பட்டது ஆயினும் பின்னர் சரியானது. அக்னிஹோத்ரம் என்னும் யாகத்தால் அவர் மூட்டுகள் ஒன்று சேர்ந்து அவர் பலம் பெற்றார் என்றும் சதபதம் கூறும். இந்த விலகிப்போன மூட்டுகள் எலும்புகள் ஆகியன ‘’காலம்—பருவங்கள்’’ எனப் பொருள்படும். சங்கேத மொழியில் பேசுவது ரிஷிகளுக்கு மிகவும் பிடிக்கும் என்று வேதமே சொல்லுகிறது

prambanan
Brahma’s Temple ta Prambhanan, Indonesia

பிரம்மன், பிராமணன், பிரம்மா

பிரம்மன், பிராமணன், பிரம்மா ஆகிய மூன்றும் வெவ்வேறு பொருள் உடையவை. பிரம்மம் என்பது கடவுள்; பிராமணன் என்பது ஜாதிப் பெயர்-பிரம்மத்தை நாடுவதே அவன் வாழ்க்கையின் லட்சியம்., பிரம்மா என்பவர் மும்மூர்த்திகளில் ஒருவர். இது தவிர ‘’பிராமணம்’’ என்ற நூல் வேத இலக்கியத்தில் சம்ஹிதைகளைத் தொடர்ந்து வந்த இலக்கியங்கள்.

பிரம்மாவுக்கு தனி வழிபாடு, பூஜை- புனஸ்காரங்கள் இல்லாவிடினும் துதிப்பாடல்களிலும், பஜனைப்பாடல்களிலும் திரி மூர்த்திகளின் பெயர்களில் அவர் பெயரும் சேர்ந்தே வரும். சுசீந்திரம் போன்ற இடங்களில் தான்+மால்+ அயன் என்ற பெயரில் கடவுள் வணங்கப் படுகிறார். பிரம்மாவின் வாய் — இடைவேளை இன்றி வேதத்தை ஒலிபரப்பும் வேத ஒலிபரப்பு ரேடியோ ஸ்டேஷன் — ஆகும். அவர் எப்போதும் வேதமுழக்கம் செய்தவண்ணம் இருப்பார்.

வேதத்தில் இவர் பெயர் பிரஜாபதி, வால்மீகி ராமாயணத்தில் பிரம்மா என்ற பெயருடன் வலம் வருகிறார். சிவனுடைய அடி முடி தேடிய படலத்தில் பொய் சொன்னதால் வழிபாடு இல்லாமற் போனது என்பர்.

யசோதர்மன் என்பவன் கி.பி. 533ல் வெளியிட்ட மாண்டசோர் கல்வெட்டில் படைப்போன், காப்போன், அழிப்போன் ஆகிய மூவரும் பிரம்மாவே என்று சொல்லி இருக்கிறார்.
பிரம்மா வாழ்க! பிரம்மம் வாழ்க! பிரம்மத்தை நாடும் பிராமணர்கள் வாழ்க! பிராமணம் என்னும் நூல்கள் வெல்க!!
brahma (1)halebedu
Brahma at Halebedu, Karnataka.

Except my Brahma stamp photo all other pictures are taken from different websites; thanks.

-சுபம்-