யார் மனைவி? எவன் மகன்?

IMG_4485

Compiled  by London swaminathan

Post No.2254

Date: 18 October 2015

Time uploaded in London: 14-59

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

1.ரத்னாகரோ ஜலநிதிரித்யசேவி தனாசயா

தனம் தூரே அஸ்து வதனமபூரி க்ஷாரவாரிபி:

பண ஆசையால் கடலில் இறங்கினால், பணம் தூரப் போய்விட்டது; வாய் எல்லாம் உப்பு ஆனதுதான் மிச்சம்!

ஹிந்தி: சௌப்பே கயே சப்பே பனனே துப்பே ஹீ ரஹ் கயே.

Xxx

2.சர்வம் ஸ்ரத்தயா தத்தம் ஸ்ராத்தம் – ப்ரதிமா

சிரத்தையாகச் செய்யப்படுவது சிராத்தம்

Xxx

3.சர்வஜன மனோபிராமம் கலு சௌபாக்யம் நாம –ஸ்வப்னவாசவதத்தம்

எல்லோர் மனதையும் கவரக்கூடிய விஷயமே சௌபாக்கியம் எனப்படும்.

Xxx

IMG_4496 (2)

யார் மனைவி? எவன் மகன்?

4.சா பார்யா யா ப்ரியம் ப்ரூதே

ச புத்ரோ யத்ர நிவ்ருத்தி:

தன்மித்ரம் யத்ர விஸ்வாச:

ச தேஸோ யத்ர ஜீவ்யதே – (மஹாபாரதம்)

யார் அன்பாகப் பேசுகிறாளோ அவளே மனைவி,

யார் சுகமான வாழ்வு தருகிறானோ அவனே மகன்,

எங்கே விஸ்வாசம் (நம்பக்கூடிய தன்மை) இருக்கிறதோ அவனே நண்பன்,

எங்கு நல்ல வாழ்க்கை நடத்தமுடிகிறதோ அதுவே நாடு.

ஹிந்தியில்

பார்யா வஹீ ஹை, ஜோ ப்ரிய போலே,

புத்ர வஹீ ஹை, ஜிஸ்ஸே சுக மிலே,

மித்ர வஹீ ஹை ஜிஸ்மேம் விஸ்வாஸ் ஹோ,

தேஷ் வஹீ ஹை, ஜஹாம் ஜீவிகா ஹோ.

doctor3

யார் டாக்டர்? யார் போலி மருத்துவர்?

ஸ்ருதே பர்யவதாதத்வம் பஹுசோ த்ருஷ்டகர்மதா

தாக்ஷ்யம் சௌசமிதி ஞேயம் வைத்யே குணசதுஷ்டயம்

–சரக (சூத்ரம்) 9-6

நல்ல மருதுவரின் 4 லட்சணம்:

ஸ்ருதே பர்யவதாதத்வம் = மருத்துவ அறிவு

பஹுசோ த்ருஷ்டகர்மதா= நல்ல அனுபவம்

தாக்ஷ்யம் = திறமை

சௌசமிதி= தூய்மை (சுத்தம்)

நோயாளிகளை எப்படி கவனிப்பது?

மைத்ரீ காருண்யமார்தேஷு சக்யே ப்ரீதிரூபேக்ஷணம்

ப்ரக்ருதிஸ்தேஷு பூதேஷு வைத்யவ்ருத்திஸ்சதுர்விதா

–சரக (சூத்ரம்) 9-26

மைத்ரீ = நட்புடன் அணுக வேண்டும்

காருண்யம்= கருணை இருக்க வேண்டும்

ப்ரீதி = உற்சாகமாக சிகிச்சைதர வேண்டும்

உபேக்ஷணம்= நோயாளியிடத்தில் அனுதாபம் இருக்க வேண்டும்

போலி வைத்யர்கள் எப்படி இருப்பர்?

குசேல: கர்கச: ஸ்தப்தோ க்ராமணீ ஸ்வயமாகத:

பஞ்ச வைத்யா ந பூஜ்யந்தே தன்வந்த்ரிசமா அபி

–சம்ஸ்கிருத பொன்மொழி

மருத்துவப் பிதாமஹான் தன்வந்த்ரிக்குச் சமமானவராக இருந்தாலும் கீழ்க்கண்ட ஐந்து போலி மருத்துவருக்கு மதிப்பளிக்க வேண்டாம்:–

குசேல: = மோசமான ஆடை அணிந்தவர்

கர்கச: =முரட்டுப் பேர்வழி

ஸ்தப்தோ = பிடிவாதக்காரன்

க்ராமணீ =குதர்க்கமான (நேர்மையற்ற) பார்வையுடையோன்

ஸ்வயமாகத: = தானாக (அழையாமலே) சிகிச்சைதர வருபவன்

திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் சொன்ன விஷயங்களி இவற்றுடன் ஒப்பிட்டு மகிழ்க!!!

–சுபம்–

Leave a comment

Leave a comment