HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL ; இந்து மத கலைச்சொல் அகராதி-114 (Post16,197)

Written by London Swaminathan

Post No. 16,197

Date uploaded in London – 14 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 ஆங்கில அரிச்சுவடி வரிசையில் இப்பொழுது வி V என்னும் எழுத்தின் கீழுள்ள முக்கிய சொற்களைக் காண்போம் :

வாசஸ்பதி மிஸ்ரா (900-980 CE)

உலகத்தில் இலக்கிய அதிசயம் புரிந்தவர் வாசஸ்பதி மிஸ்ரா ஆவார் . தான் எழுதிய அத்தனை நூல்களையும் அவர் எழுதிய கால வரிசைக் கிராமத்தில் அவரே கொடுத்துள்ளார் ; எப்பொழுது ? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்! இந்திய தத்துவ முறைகளை பற்றி விளக்கியவர்களில் இவரே முதல்வர் ; இவர் ஆதி சங்கரரின் பிரம்ம சூத்திர உரைக்கு உரை எழுதியவர் அந்த நூல் பாமதி என்ப்படும்இவர் எழுதிய நூல்களில் இதுதான் புகழ்பெற்றது. இவர் பீஹார் மாநிலத்தின் மிதிலா பிராந்தியத்தைச் சேர்ந்தவர் ; அந்த பகுதியிலிருந்து வந்ததால் சீதா தேவிக்கு மைதிலி என்றும் பெயர் .

வாசஸ்பதி மிஸ்ரா வாழ்ந்த நகரின் பெயர் வாசஸ்பதி; இவர் மனைவியின் பெயர் பாமதி . காலம் – பத்தாவது நூற்றாண்டு.

பாமதி பற்றி காஞ்சி சங்கராசார்யார் (1894-1994)

மிதிலையைச் சேர்ந்த சிறந்த அறிஞரான வாசஸ்பதி மிஸ்ரர், ஆதிசங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்திற்கு மிக விரிவானதொரு விளக்க உரையை (விவரணம்) எழுதத் தொடங்கினார்.அந்தத் தத்துவப் பணியில் அவர் தன்னை முற்றிலும் மறந்து, இரவும் பகலும் பல ஆண்டுகள் தீவிரமாக மூழ்கியிருந்தார். அவரது மனைவியான பாமதி, கணவரின் தியானத்திற்கும் எழுத்திற்கும் எந்தவித இடையூறும் நேராத வண்ணம், அவரிடமிருந்து எந்தவொரு உலகியல் எதிர்பார்ப்பும் இல்லாமல் பல வருடங்களாக அமைதியாகப் பணிவிடை செய்து வந்தார். அவளுக்கு ஒரு மனைவி இருக்கிறாள் என்பதைக் கூட வாசஸ்பதி மிஸ்ரர் மறந்திருந்தார். நூல் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட அன்று இரவு, விளக்கு வெளிச்சத்தில் தனக்கு எண்ணெய் ஊற்றி உதவிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து வியப்புடன், “நீ யார்?” என்று கேட்டார்.அவளோ எவ்வித வருத்தமும் இன்றி, “நான் உங்கள் மனைவி, என் பெயர் பாமதி” என்று கூறினாள். )தனது ஞானத் தேடலால் மனைவியின் வாழ்வையும் இளமையையும் கவனிக்கத் தவறிவிட்டோமே என்று வாசஸ்பதி மிஸ்ரர் வருந்தினார். அவளது அசாத்தியமான தியாகத்திற்கும், எதிர்பார்ப்பற்ற சேவைக்கும் கைமாறாக, தான் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவழித்து எழுதிய அந்த உன்னத வேதாந்த நூலுக்கு ‘பாமதி’ என்றே பெயரிட்டார். இந்த நூல் உலகம் உள்ளவரை அவளது பெயரை நிலைநிறுத்தும் என்று ஆசீர்வதித்தார். தத்துவ விளக்கம் (அவச்சேத வாதம்)’தெய்வத்தின் குரல்’ ஐந்தாம் பகுதியில், மஹா பெரியவா அத்வைதக் கோட்பாட்டை விளக்கும் போது, அத்வைதத்தில் உள்ள இரு முக்கியப் பிரிவுகளான விவரண பிரஸ்தானம் (VivaraNa Prasthaanam) மற்றும் பாமதி பிரஸ்தானம் (Bhamati Prasthaanam) ஆகியவற்றின் தத்துவ வேறுபாடுகளை எளிமையாக விளக்கியுள்ளார்: பிம்ப-பிரதிபிம்ப வாதம் (விவரண முறை): சூரியனின் ஒளி தண்ணீர்த் துளிகளில் பிரதிபலிப்பதைப் போல, ஒரே பரமாத்மா மாயையின் காரணமாகப் பல ஜீவாத்மாக்களாகத் தெரிகிறது என்பது விவரணப் பிரிவின் வாதம். [அவச்சேத வாதம் (பாமதி முறை): பாமதி பிரஸ்தானம் ‘அவச்சேத வாதம்’ (Avachchinna / Avachcheda Vaadam) எனப்படும் தத்துவத்தைக் கையாள்கிறது. ‘அவச்சேத’ என்றால் எல்லைகளுக்கு உட்பட்டது என்று பொருள். மஹா பெரியவா / காஞ்சி சங்கராசார்யார் (1894-1994)

 இதற்கு ஒரு எளிய உதாரணம் தருவார்: ஆகாயம் (வெட்டவெளி) என்பது எங்கும் நிறைந்தது. நாம் ஒரு திறந்தவெளியில் பல வெற்றுப் பானைகளை வைத்தால், ஒவ்வொரு பானைக்குள்ளும் ஆகாயம் இருக்கிறது. பானைக்குள் இருக்கும் ஆகாயத்தை ‘கடா ஆகாயம்’ (பானை ஆகாயம்) என்றும், வெளியில் இருக்கும் எல்லையற்ற ஆகாயத்தை ‘மஹா ஆகாயம்’ என்றும் சொல்கிறோம்.உண்மையில் ஆகாயம் இரண்டாகப் பிரியவில்லை. பானை என்ற எல்லை (உபாதி) இருக்கும் வரைதான் உள்ளே, வெளியே என்ற பேதம் தெரிகிறது. பானை உடைந்ததும் உள்ளே இருந்த ஆகாயம் மஹா ஆகாயத்தோடு ஒன்றிவிடுகிறது.இதேபோல, மனித உடலும் மனமும் பானையைப் போன்ற எல்லைகளாகும். இந்த எல்லைகளுக்குள் கட்டுப்பட்டுக் காணும் ஆன்மாவே ‘ஜீவாத்மா’. அறியாமை நீங்கி இந்த எல்லைகள் உடையும் போது, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அத்வைத உண்மை புலப்படும் என்று பாமதி பிரஸ்தானம் விளக்குவதாக மஹா பெரியவா /காஞ்சி சங்கராசார்யார் (1894-1994) குறிப்பிட்டுள்ளார். அத்வைத தத்துவ உலகிற்கு வாசஸ்பதி மிஸ்ரரின் ‘பாமதி’ உரை ஒரு மிகச்சிறந்த கொடை என்றும், இல்லறத்தில் இருந்துகொண்டே தியாக உணர்வோடு ஆன்மீகப் பணிக்குத் துணைநின்ற பாமதியின் பெருமைக்கு அது ஒரு சான்று என்றும் காஞ்சி ஆச்சார்யார் போற்றியுள்ளார்.

வாசஸ்பதி மிஸ்ரா எழுதிய நூல்கள்

1) நியாய கனிகா : This is a commentary on Vidhiviveka, a Bhāṭṭa Mīmāṃsā work of Maṇḍanamiśra.

2)  நியாயசூத்ரோத்தாரா : This is a compilation of the Nyāyasūtra fixing the readings of the text of the sūtras.

3)நியாய சூஸிநிபந்த : This arranges the same Nyāyasūtra.

4) நியாயவார்த்திக்க தாத்பர்ய டீகா : This work also known by its shorter and more popular name, ‘tātparyaṭīkā’, is an extensive commentary on the Nyāyavārtikā of Uddyotakara Bhāradvāja.

5) தத்வஷமீக்க்ஷ : It is generally believed to be a commentary on the Brahmasiddhi of Maṇḍanamiśra. But it has been recently suggested that this is also an independent Mīmāṃsa treatise of Vācaspati Miśra. This work is lost.

6) தத்வ பிந்து : This is also an independent Bhāṭṭa Mīmāṃsa treatise of Vācaspati Miśra.

7) சாணக்யா தத்வ கெளமுதி : This work, known briefly as Tattvakaumudī, is a brilliant commentary on the famous Sāṅkhyakārikā of Īśvarakṛṣṇa.

8) யோக தத்வ வைசாரதி known also by its shorter title Tattvavaiśāradī: This work is a commentary on the Pātañjalayogasūtrabhāṣya of Vyāsa.

9) பாமதி: The full title of this work is perhaps Śārīrakabhāṣya bhāmatī. This is the earliest known exhaustive and complete commentary on the Brahmasūtraśāṅkara-bhāṣya.

It is interesting to note that in a verse in the epilogue of the Bhāmatī Vācaspati Miśra gives a full list of his own works arranged exactly in the above order suggested by the modern researchers. In the Indian tradition Vācaspati Miśra is again perhaps the first writer to give a complete list of his works, that too in a chronological order.

***

வைதேஹி – சீதாதேவியின் பெயர்; ஜனகர் ஆண்ட விதேஹ நாட்டிலிருந்து வந்தவள் என்று பொருள்; விதேஹ என்றால் தேகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஆத்ம விடுதலையைப் பற்றி தியானம் செய்பவர்  என்று பொருள் . மிதிலை எரிந்திட வேதப்பொருளை வினவும் மதி ஜனகன் மதி என்று பாரதியார் புகழந்ததிலிருந்து இதை அறியலாம்.

***

வைகுண்டம்

விஷ்ணுவின் இருப்பிடம் ; லெட்சுமி தேவியுடன் வாசம் செய்யும் இடம் ; வானவியல் ரீதியில் இது மகர ராசியில் உள்ளது . சம்ஸ்க்ருத மொழியில் இதற்கு கவலை இல்லாத இடம் என்று பொருள்; வைகுண்டத்தை அடைவோருக்கு நித்திய ஆநந்தம், பேரானந்தம் இருக்கும்; பிறப்பு இறப்பு என்ற கவலையே இல்லை

இந்து சமய நூல்களில் பரமபதம்விஷ்ணு லோகம் என்றும் சொல்லுவார்கள் ;அங்கே தங்க மயமான கட்டிடங்களும் ரத்தின கற்களாளான கட்டிடங்களும் தொங்கும் தோட்டங்களும் இருப்பதாக புராணங்கள் வருணிக்கின்றன .

வைகுண்ட ஏகாதசி

மாதம் தோறும் இரண்டு முறை வரும் ஏகாதசி உண்ணாவிரத நாட்களில் மிகவும் சிறப்புடையது டிசம்பர் மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி  ஆகும்; இதற்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு . 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 20 இது வருகிறது. மார்கழி மாதத்தில் வரும் இந்த ஏகாதசியில் நாள் முழுதும் பட்டினி கிடந்து இரவு முழுதும் விஷ்ணுவைப் பற்றி கதைகளை அல்லது பாடல்களைக் கேட்டு பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் திறந்தவுடன் உள்ளே சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம்; அவ்வாறு செய்தால் பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலை  (மோக்ஷம்/ முக்தி) பெற்று வைகுண்டத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.

***

வாஜசநேயி

வாஜசநேயி சம்ஹிதை , நான்கு வேதங்களில் ஒன்றான யஜுர் வேதத்தின் (சுக்ல யஜுர் வேதம்) மந்திரத் தொகுப்பாகும். சூரிய பகவான் குதிரை (வாஜி) வடிவம் எடுத்து யக்ஞவல்கிய முனிவருக்கு இந்த வேதத்தை உபதேசித்ததால், இதற்கு ‘வாஜசநேயி சம்ஹிதை’ என்ற பெயர் வந்தது.  சமஸ்கிருதத்தில் ‘வாஜி’ என்றால் அன்னம் (உணவு) அல்லது குதிரை என்று பொருள்.  யக்ஞவல்கியர்: சூரிய தேவனை நோக்கித் தவம் புரிந்து, அவரிடமிருந்து நேரடியாகப் பெற்ற தூய்மையான வேதம் என்பதால் இது சுக்ல யஜுர் வேதம் (வெள்ளை யஜுர் வேதம்) என்றும் அழைக்கப்படுகிறது. வாஜசநேயி சம்ஹிதை இரண்டு முக்கிய கிளைகளாகப் (சாகாக்கள்) பிரிக்கப்பட்டுள்ளது: மத்யந்தின சாகா (Madhyandina Recension): வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இதில் 40 அத்தியாயங்கள், 303 அனுவாகங்கள் மற்றும் 1975 மந்திரங்கள் உள்ளன.

காண்வ சாகா (Kanva Recension): தென்னிந்தியாவில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இதிலும் 40 அத்தியாயங்கள் இருந்தாலும், 2086 மந்திரங்கள் உள்ளன. யாகங்கள் மற்றும் சடங்குகள்: தர்சபூர்ணமாஸம் (அமாவாசை, பௌர்ணமி யாகங்கள்), அக்னிஹோத்திரம், சோமயாகம், வாஜபேயம், அஸ்வமேதம் மற்றும் புருஷமேதம் போன்ற பல்வேறு வேத கால யாகங்களை நடத்துவதற்கான மந்திரங்கள் இதில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

ஈசாவாஸ்ய உபநிடதம்: இந்த சம்ஹிதையின் இறுதி அத்தியாயமான 40-வது அத்தியாயம் உலகப் புகழ்பெற்ற ஈசாவாஸ்ய உபநிடதம் ஆகும். இது ஆன்மா, தியாகம் மற்றும் பிரம்ம ஞானத்தைப் பற்றிப் பேசும் மிக முக்கியமான வேதாந்தப் பகுதியாகும்.

ருத்ராஷ்டாத்யாயி: சிவபெருமானை வழிபடும் புகழ்பெற்ற ‘ஸ்ரீ ருத்ரம்’ (நமகம், சமகம்) மந்திரங்கள் இந்த சம்ஹிதையின் 16 மற்றும் 18-வது அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ளன.

***

வஜ்ர

கடினமான என்பது இதன் பொருள்; இந்திரனின் ஆயுதம் இதுதான் ; தீய சக்திகளை அழிப்பதற்காக ததீசி முனிவர் தன்னுடைய முதுகெலும்பினைக் கொடுத்தார்; விஷ்வகர்மா அதிலிருந்து வஜ்ராயுதத்தை உருவாக்கி இந்திரனிடம் கொடுத்தார்

வைரம் என்னும் ரத்தினைக் கல்லுக்கும் இதே பெயர்; அது வஜ்ரம் என்னும் சொல்லின் மருவு ஆகும் ; பிராமணப் பெண்கள் பேசிய பிராகிருத மொழியிலிருந்து வந்தது ; வீட்டிலுள்ள பெண்களும் கீழ்மட்ட ஊழியர்களும் கொச்சையான சம்ஸ்க்ருதம் பேசுவர் ; இந்தப் பேச்சு வழக்கினை பிராகிருதம் என்பார்கள் ; காளிதாசன் நாடகங்களிலும் பெண்களும் வேலைக்காரர்களும் மீனவர்களும் பேசிய பிராகிருத வசனங்களைக் காணலாம் .

***

வாக்கியபதீயம்

வாக்கியபதீயம் (Vakyapadiya) என்பது 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய இலக்கண அறிஞரும் தத்துவஞானியுமான பர்த்ருஹரியால் (Bhartrihari) சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ஒரு புகழ்பெற்ற நூலாகும். இது மொழியியல் தத்துவம் (Philosophy of Language) மற்றும் சமஸ்கிருத இலக்கணத்தின் (Vyakarana) அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கும் மிக முக்கியமானதொரு நூல் [இந்த நூலின் முக்கிய அம்சங்கள் :1. மூன்று பிரிவுகள் (திரிகாண்டீ – Trikandi)இந்நூல் மூன்று முக்கிய காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: பிரம்ம காண்டம் (Brahma-kanda): இது மொழியின் ஆன்மீக மற்றும் பிரபஞ்சத் தன்மையை விளக்குகிறது. பிரம்மமும் மொழியும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை இது ஆராய்கிறது. 2.வாக்கிய காண்டம் (Vakya-kanda): இது வாக்கியங்களின் அமைப்பு, அதன் அர்த்தம் மற்றும் ஒரு வாக்கியம் எவ்வாறு முழுமையான பொருளைத் தருகிறது என்பதைப் பற்றி விவரிக்கிறது. 3.பத காண்டம் (Pada-kanda): இது சொற்கள், அவற்றின் இலக்கணக் கூறுகள், பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களின் பகுப்பாய்வு போன்றவற்றை விரிவாகக் கூறுகிறது.

 ஸ்போட வாதம் (Sphota Theory)

பர்த்ருஹரியின் மிக முக்கியமான பங்களிப்பு ஸ்போட (Sphota) என்ற கோட்பாடு ஆகும். இதன்படி, நாம் கேட்கும் ஒலிகள் தனித்தனியாக இருந்தாலும், அவை நம் மனதில் ஒரு முழுமையான கருத்தையோ அல்லது அர்த்தத்தையோ திடீரெனத் தோற்றுவிக்கின்றன (Bursts of sound conveying meaning). ஒரு வாக்கியத்தின் உண்மையான அர்த்தம் அதன் தனித்தனி சொற்களைக் கூட்டுவதால் வருவதில்லை, மாறாக அது ஒட்டுமொத்தமாகவே மனதில் புலப்படுகிறது என்று அவர் வாதிடுகிறார்.  மொழியும் அறிவும்  பர்த்ருஹரியின் கூற்றுப்படி, “உலகில் மொழி வடிவம் இல்லாத அறிவு என்று எதுவுமே இல்லை”. மனிதர்களின் அனைத்து எண்ணங்களும், உலகத்தைப் பற்றிய புரிதல்களும் மொழியின் மூலமாகவே கட்டமைக்கப்படுகின்றன என்பதை இந்நூல் ஆழமாக விளக்குகிறது.

***

வலன்  (वल).—(பலன் ) அசுரர்.

ரிக்வேதத்தில் இந்திரனால் கொல்லப்பட்ட அசுரர்களில் ஒருவன் . தேவர்களின் பசுக்களைத் திருடி குகைகளில் அடைத்துவைத்த இவனை இந்திரன் வஜ்ராயுதத்தால் கொன்றான் . இதற்கு தத்துவ விளக்கமும் உண்டு. உஷஸ் என்னும் ஒளி தேவதையை அசுரர் வலன் ஒளித்து வைக்கவே இந்திரன் அதை நீக்கினான்;   வலன் பற்றி அரவிந்தர் கூறியதாவது- இறைவனை அடைய முடியாது மனிதர்களை தடுக்கும் இருள் என்னும் அறியாமைதான் வலன்.

வேதங்களை மொழி பெயர்த்த வெளிநாட்டினர் இதை இயற்கை நிகழ்ச்சி என்றே கருதுகின்றனர் ; பசுக்களை குகையில் ஒளித்துவைத்தான் வலன், என்று எண்ணற்ற இடங்களில் ரிக் வேதம் சொல்கிறது ; இதை பசுக்கள் என்று எடுத்துக்கொள்ளாமல்,  திருமூலர் பசுக்களை எப்படிக் கையாள்கிறாரோ அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்து; பார்ப்பான் அகத்திலே பாற் பசு ஐந்துண்டு என்பது ஐந்து புலன்கள் என்று திரு மூலர் உவமிக்கிறார் . பத்ம புராண பூமி காண்டத்தில் இவனைப்பற்றிய கதை வருகிறது  – வலன் , ஒரு நாள் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்ட இந்திரன் அவன் மீது வஜ்ராயுதம் என்னும் இடி மின்னலைப் பாய்ச்சி அவனை வீழ்த்தினான் .

***

வால்மீகி கதை राम से बड़ा राम का नाम .

ராம் சே படா ராம் கா நாம்

“ராம் சே படா ராம் கா நாம்” (राम से बड़ा राम का नाम) என்பது புகழ்பெற்ற ஒரு இந்திப் பழமொழி ;. இதற்கு “ராமனை விட ராமனின் நாமமே (பெயரே) பெரியது” என்று பொருள்.இந்து மதக் கதைகளின்படி, இந்த வரிகளுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான பின்னணி உள்ளது:கடலைக் கடந்த அனுமன்: ராமபிரான் சீதையை மீட்பதற்காக இலங்கைக்குச் செல்ல கடலில் பாலம் கட்ட வேண்டியிருந்தது. அப்போது வானரங்கள் ‘ராம்’ என்ற திருநாமத்தை கல்லில் எழுதி தண்ணீரில் போட்டபோது, அந்தப் பாறைகள் நீரில் மிதந்தன. ஆனால், ராமரே ஒரு கல்லை எடுத்துப் போட்டபோது அது நீரில் மூழ்கியது. இதன் மூலம் ராமரின் சக்தியை விட அவரது பெயருக்கு அதிக சக்தி இருப்பது உலகிற்கு உணர்த்தப்பட்டது. ராமபிரானால் நேரடியாக சிலருக்கு மட்டுமே உதவ முடிந்தது. ஆனால், அவரது மறைவுக்குப் பிறகும் இன்று வரை கோடிக்கணக்கான பக்தர்கள் “ராம” நாமத்தை உச்சரிப்பதன் மூலம் தங்களின் இன்னல்களிலிருந்து விடுபட்டு அமைதி பெறுகிறார்கள்.

மிக முக்கியமான ஒரு விஷயம் ராமாயணத்திலேயே வருகிறது ;அதாவது வேடனாக வாழ்க்கை நடத்திய வால்மீகிக்கு ராம என்ற நாமத்தைச் சொல்ல  தெரியவில்லை. மரா,  மரா என்று நாரதர் உபதேசிக்கிறார் . அவன் முனிவர் ஆகி நமக்கு உலகப் புகழ்பெற்ற , காலத்தால் அழிக்க முடியாத ராமாயணத்தைக் கொடுத்தார் ; இதிலுள்ள மிகப்பெரிய உண்மை, ராமன் பிறப்பதற்கு முன்னரே ராம நாமம் துவங்கிவிட்டது பின்னர்தான் நமக்கு ராமாயணம் என்னும் நூல் கிடைத்தது ; இந்த சொல்லுக்கு உள்ள மந்திர சக்தியை வைத்தே வசிஷ்ட முனிவர் கெளசல்யா  தேவியின் குழந்தைக்கு ராம என்ற நாமத்தைச் சூட்டினார்.

வால்மீகி மர்மம்

சங்க இலக்கியத்தில் மிகவும் பழைய பகுதி புறநானூறு. இதில் 358–ஆவது பாடலை இயற்றியவர் வால்மீகி (வன்மீகனார், வான்மீகனார் என்று எழுதப்பட்டுள்ளது). யார் இந்த வால்மீகி என்று தெரியாமலேயே இருந்தது. இவரும் உலகப் புகழ்பெற்ற ராமாயணப் புகழ் வால்மீகி போலவே தவத்தின் பெருமையைப் பாடி இருக்கிறார். துறவறமே பெரிது, இல்லறம் அதற்குப் பக்கத்தில் கூட வரமுடியாது. யார் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்குவார்களோ அவளிடம் தான் லெட்சுமி தேவி ஒட்டிக்கொள்வாள். யார் பற்று வைத்திருக்கிறார்களோ அவர்கள் மீது லெட்சுமி தேவிக்குப் பற்று இராது. உலகம் நிலயற்றது. ஒரே நாளில் ஏழு மன்னர்களைக் கண்டது இந்த உலகம் என்று தத்துவ விஷயங்களைக் கூறியுள்ளார். இவர் ராமாயண வால்மீகியாக இருக்கலாம் என்று கூட சில அறிஞர்கள் கருதினர். அனால் உண்மையில் வால்மீகி என்பது ஒரு கோத்திரப் பெயர்.

வால்மீகி கோத்திரத்தில் பிறந்த எல்லோரும் அப்பெயரைவைத்துக் கொள்ளமுடியும். இது போதாயன ஸ்ரௌத சூத்திரத்தில் உள்ளதை பி.எல்.பார்கவா எழுதிய ‘’புராணத்தில் வரலாற்றுச் செய்திகள்’’ என்ற நூலில் எழுதியிருக்கிறார். கீழே ஆங்கிலப் பகுதியில்  இருப்பது அவருடைய வாசகம்: 

The following note was copied by me on 5th May 2002 from the book ‘’Retrieval of History from Puranic Myths’’ by P.L.Bhargava (available at SOAS LiBrary, University of London): 

Pravaradhyaya of the ancient Baudhayana Srauta Sutra (800 to 400 BC) mentions Valmiki as a Gotra in the Vatsa Paksha of the family of Bhrgu. This name thus could be borne by other persons of this gotra and this is proved by tha fact that we learn from the Taitriya Pratisakhya of a Phoenician Valmiki who was different from the famous poet Valmiki.’’

 ராமாயணம் எழுதிய வால்மீகி கொள்ளைக்காரனாக இருந்து—முனிவராகவும், உலக மஹா கவிஞராகவும் மாறினார். அவர் ராம ராம என்று செபித்து தவம் செய்த காலத்தில் அவர் மீது புற்று வளர்ந்தது. கறையான் புற்றுக்கு வன்மீகம் என்று சம்ஸ்கிருதத்தில் பெயர். அதன் காரணமாக அவர் வால்மீகி என்று பெயர் பெற்றார். ஆனால் புறநானூற்று வால்மீகி அவர் பிறந்த குலம், கோத்திரம் காரணமாகப் பெயர் பெற்றார்.

 பிற்காலத்தில் பல முனிவர்களும் சித்தர்களும் இதே பெயரில் இருந்து சித்தி அடைந்திருக்கிறார்கள். எட்டுகுடியில் ஒரு வால்மீகியின் சமாதி இருக்கிறது. அவர்கள் எழுதிய பாடல்களே அவர்களைப் பிற்காலத்தியவர் என்று காட்டிக் கொடுத்துவிடுகிறது. திருவாரூர், சங்கரன்கோவில், குடவாசல், திருவெற்றியூர், காஞ்சீபுரம் இப்படிப் பல கோவில்களில் வன்மீகநாதர் சந்நிதியும், திரு உருவங்களும் உண்டு. இவை எல்லாம் வன்மீகர் என்பது எவ்வளவு பொதுவாகப் புழங்கப்பட்ட பெயர்கள் என்பதற்குச் சான்று பகரும். ஒருவேளை ராமாயண வால்மீகியின் மீது அன்பு கொண்டு அவர் பெயரையே பலரும் சூட்டிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சோகம் மாறி ஸ்லோகம் பிறந்தது

வால்மீகி தன் இளமைப் பருவத்தில் ரத்னாகரர் என்ற பெயருடன் காடுகளில் வழிப்பறிக் கொள்ளை அடிக்கும் வாழ்க்கை வாழ்ந்தார்.

நாரதரின் கேள்வி: ஒருமுறை நாரத முனிவர் அங்கு வந்தார். அவரிடம் ரத்னாகரர் சிக்கினார். நாரதர் அவரிடம், “நீ செய்யும் பாவங்களுக்காக உன்னுடைய குடும்பத்தினர் உன்னுடன் பங்கு பெற்றுக்கொள்வார்களா?” என்று கேட்டார்.ரத்னாகரர் தன் மனைவியையும் குடும்பத்தினரையும் கேட்டபோது, “உன் பாவத்திற்கு நாங்க பொறுப்பல்ல” என்று அவர்கள் கூறினர். இதனால் மனம் மாறிய ரத்னாகரர் நாரதரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். நாரதர் அவருக்கு ‘ராம’ நாமத்தை உச்சரிக்க உபதேசித்தார். ரத்னாகரர் முழுமையான தியானத்தில் ஆழ்ந்து பல ஆண்டுகள் ராம நாமத்தை জபித்தார்.  அவரைச் சுற்றிலும் கறையான்கள் புற்று மூடிக்கொண்டன.மறுபிறப்பு: புற்றிலிருந்து (வால்மீகம் என்றால் புற்று) வெளிப்பட்டதால் அவர் ‘வால்மீகி’ என்று அழைக்கப்பட்டார்.

 ஒருநாள் தமஸா நதிக்கரையில் குளிக்கச் சென்றபோது, வேடன் ஒருவன் அம்பால் வீழ்த்திய இணைப் பறவைகளில் ஒன்று வீழ்ந்து இறக்க, மற்றொரு பறவை துயரத்தால் அலறியதைக் கண்டார்.அந்தத் துயரம் வால்மீகியின் நாவில் ஒரு சாபக் கவிதையாக இசை வடிவில் வெளிப்பட்டது. அங்கு தோன்றிய பிரம்ம தேவன்,  ஸ்ரீராமரின் வரலாற்றை இராமாயணம் என்ற காவியமாக எழுதும்படியும் வால்மீகியை ஆசீர்வதித்தார்.உலகில் மலைகளும் நதிகளும் எதுவரைக்கும் இருக்குமோ அது வரைக்கும் ராமாயணக் கதை உலகங்களில் விளங்கப் போகிறது என்று ஆசீர்வதித்தார் பிரம்மா.

யாவத் ஸ்தாஸ்வந்தி கிரய: சரிதஸ்ச மஹீதலே I

தாவத் ராமாயணகதா லோகேஷு ப்ரசரிஷ்யதி II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், முப்பத்தியேழாம் ஸ்லோகம்

பூமி உள்ளவரை ராமாயணம் ஒலிக்கும்!!!

ராமாயணம் தோன்றக் காரணமாக அமைந்ததே ஒரு சிலேடை ஸ்லோகத்தால் தான்!

இனிமையான குரலுடைய இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகளுடைய ஆண்,பெண் ஜோடியை குரூரங்களுக்கு இருப்பிடமான ஒரு வேடன் பார்த்தான்.அதில் ஆண் பறவையைக் கொன்றான்.பெண் பறவை கீழே தள்ளப்பட்டு பூமியில் புரளுகிற ரத்தத்தினால் பூசப்பட்ட சரீரமுடைய தன் ஜோடிப் பறவையைப் பார்த்து பரிதபிக்கத்தக்க புலம்பலைப் புலம்பிற்று. அந்தப் பறவையைப் பார்த்த தர்மாத்மாவான வால்மீகி முனிவருக்குக் கருணை உண்டாயிற்று. அவர் ‘இது அதர்மம்’ என்று ஒரு வசனத்தைக் கூறினார்:

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I

யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்

நிஷாத – வேடா! க்ரௌஞ்சமிதுனா – க்ரௌஞ்ச மிதுனத்தில் காம மோஹிதம் – காமத்தால் மயங்கி இருந்த ஏகம் – ஒன்றை அவதீ: – கொன்றாய் தத் ஸ்வே – அதனால் நீ ஷாஸ்வதீ: – நீடித்த சமா -ஆண்டுகளில் ப்ரதிஷ்டாம் – இருப்பை மா அகம::-அடைய மாட்டாய்

இதைச் சற்று சிந்தித்த அவருக்கு இதே வசனத்திற்கு வேறு ஒரு பொருள் தோன்றியது!

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I

யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்

மாநிஷாத – ஸ்ரீனிவாஸ! க்ரௌஞ்சமிதுனாத் – ராக்ஷஸ மிதுனத்தில் காம மோஹிதம் – காமத்தால் புத்தி கெட்ட ஏகம் – ஒருவனை அவதீ: – கொன்றீர்; யத் ஸ்வே – அதனால் நீர் ஷாஸ்வதீ: – நீடித்த சமா -ஆண்டுகளில் ப்ரதிஷ்டாம் – கீர்த்தியை மா அகம::-அடைந்தீராக!

ஆக இந்த ஸ்லோகமே இரு அர்த்தம் கொண்ட ச்லேடை ஸ்லோகமாக ஆனது!

சற்று சிந்தித்த அவருக்கு ஒரு அதிசயம் விளங்கியது!

பாதபத்தோக்ஷரசமஸ்தந்த்ரிலயசமன்வித: I

ஷோகார்தஸ்ய ப்ரவ்ருத்தோ மே ஸ்லோகோ பவது நான்யதா II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினேழாம் ஸ்லோகம்

சோகார்தஸ்ய – சோகத்தால் பீடிக்கப்பட்ட மே – என்னிடமிருந்து ப்ரவ்ருத்த – உண்டானதும் பாதபத்த: – பாதங்களோடமைந்த அக்ஷரசம: – எழுத்தொத்த தந்த்ரிலயசமன்வித: – வீணைத் தந்தியில் தாள லயத்தோடு கூடினது ஸ்லோக: – ஸ்லோகம் என்ற பெயர் உடையதாகவே பவது – இருக்கட்டும் அன்யதா ந – வேறு விதமாக இல்லை.

தானே தாள லயத்துடனும் அற்புதமான அர்த்தத்துடனும், பொருத்தமான சந்தத்துடனும் அமைந்த அந்தச் செய்யுளுக்கு ஸ்லோகம் என்று அவர் பெயர் தந்தார். இப்படியாகத் தான் சங்கீத லயமும் அர்த்தமும் சந்தமும் உள்ள ராமாயணம் உதயமாயிற்று!

Tags- வாசஸ்பதி மிஸ்ரா, பாமதி, .HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL , இந்து மத கலைச்சொல் அகராதி-114, வால்மீகி கதை

–subham

அதிவீர ராம பாண்டியன் நூல்கள் பற்றி 10 கேள்விகள்(Post.16,164)

Written by London Swaminathan

Post No. 16,164

Date uploaded in London – 4 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Source:
வெற்றிவேற்கை
(ஆசிரியர் : அதிவீரராம பாண்டியன்)
உரையும் கதைக்குறிப்பும்

வாழ்குடை, சுப்பிரமணிய சர்மா
மூன்றாவது பதிப்பு
ஆர். கணபதி அண்டு கம்பெனி,
பிரம்பூர், சென்னை.
1919 , 3rd edition
All Rights Reserved.)
(விலை அணா 5.
P.R. Rama Iyar and Co, Printers, Madras
————–

PROJECT MADURAI WEBSITE HAS THE FULL BOOK WITH NOTES AND 100 STORIES.

வெற்றிவேற்கை

1

அதி வீர ராம பாண்டியன்  யார் ?

2

அவர் எத்தனை நூல்களை எழுதினார் ?

3

வெற்றிவேற்கை’ நூலில் அவர் பெண்களுக்கு கூறும் புத்திமதிகள் என்ன  ?

4

66. முதலுள பண்டம் கொண்டுவாணிபம் செய்து

அதன்பயன் உண்ணா வணிகனும் பதரே.– இதன் பொருள் என்ன? நூலாசிரியர் நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா சொல்லும் கதை என்ன ?

5

உபநிஷத்தில் ஆலமரத்தின் விதையை வைத்து போதிக்கிறார் ஒரு ரிஷி; பஞ்ச  தந்திரக் கதையில் ஆலமரத்தின் அழகான  வருணனை வருகிறது; நமது புலவர் அதி வீர ராம பாண்டியன்  என்ன சொல்கிறார் ?

6

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்- என்பது சம்ஸ்க்ருதத்தில் மாதா பிதா குரு தெய்வம் என்ற வாக்கியத்திலும் ஆசார்ய தேவோ பவ என்ற  வேத வாக்கியத்திலும் வருகிறது . ஆனால் எழுத்து அறிவித்தவன் சிவன் என்ற புதிய விளக்கம் தருகிறார் 1919 ஆம்1919 ஆண்டு நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா அது என்ன விளக்கம் ?

7

பயணிகளுக்கு அதி வீர ராம பாண்டியன்  சொல்லும் அறிவுரைகள் என்ன ?

8

வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்

சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.

பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்

மெய்போ லும்மே! மெய்போ லும்மே!- இதற்கு நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா சொல்லும் கதை என்ன ?

9

தறுகண் யானை தான் பெரி தாயினும்

சிறுகண் மூங்கில் கோற்கஞ் சும்மே.- இதற்கு என்ன பொருள் ?

10

பெற்றமும் கழுதையும் மேய்ந்த வப்பாழ்

பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து

நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.– இதற்கு என்ன பொருள் ?

*********************************

விடைகள்

1.இவர் பாண்டி நாட்டிலுள்ள தென்காசியில் அரசு செலுத்தினவர். சந்திரவம்சத்துச் சிற்றரசர். சைவ சமயத்தினர். இவர் சகோதரர் வரதுங்கராம பாண்டியன். தென்காசியின் சிலாசாசனத்தினால் இவர் காலம் சாலிவாகன சகம் 1485 (1564–1604 ce)  என்று தெரியவருகிறது. கொற்கை யென்னும் பட்டணத்தில் இவரிருந்து அரசு நடத்தவில்லை. அஃது ஒருசமயம் இவரைச் சேர்ந்ததாக விருந்திருக்கலாம்.

***

2.’வெற்றிவேற்கை’, புத்தகத்துக்கு ‘நறுந்தொகை’ என்ற பெயருமு ண்டு. வெற்றிவேற்கை யென்பது புத்தகத்திலுள்ள தொடர்மொழி.  அதிவீரராம பாண்டியன்  செய்த வேறு நூல்கள் நைடதம், கூர்ம புராணம், காசிகாண்டம் என்பன. இவா சகோதரர் செய்த நூல் பிரமோத்தரகாண்டம். சிலர், கருவை வெண்பவந்தாதி கருவைக் கலித்துறையந்தாதி, கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி யென்ற மூன்று அந்தாதிகளை யும் இவர் செய்தாரென்று சொல்லுகின்றனர்.

***

3.பெண்களுக்கு கூறும் புத்திமதிகள்

12. பெண்டிர்க் கழகெதிர் பேராதருத்தல்.

பெண்டிர்க்கு – பெண்களுக்கு, அழகு – அழகாவது ஏன், எதிர் பேசாது – (கணவர் மொழிக்கு) எதிர்த்துப் பேசாமல், ஒருத்தல் – அடங்கியிருத்தலாம்.

14. குலமகட் கழகு தன் கொழுநனைப் பேணுதல்.

குலமகட்கு – நற்குலத்தில் ( உசித்த) பெண்களுக்கு, அழகு – அழகாவது, தன் – தன்னுடைய, கொழுநனை – நாயகனை, பேணுதல் – காப்பாற்றுதலாம்.

23. கொண்டோ ரெல்லாம் பெண்டிரும் அல்லர்.

கொண்டோர் எல்லாம் – (மணஞ் செய்து) கொண்ட மனைவிகள் யாவரும், பெண்டிரும் அல்லர் – நன்மனைவிகள் ஆகமாட்டார்கள்.

****

4.  முதலுள பண்டம் கொண்டுவாணிபம் செய்து

அதன்பயன் உண்ணா வணிகனும் பதரே.– இதன் பொருள் – நூலாசிரியர் சொல்லும் கதை :

உள் முதல் – தன்னிடத்துள்ள முதலால், பண்டம் – பொருள்களை, கொண்டு – வாங்கி வைத்துக்கொண்டு, வாணிபம் செய்து – வர்த்தகம் செய்து, அதன் பயன் – அதனால் வரும் லாபத்தை, உண்ணா – அநுபவியாத, வணிகனும் – வைசியனும், பதர்-பதராவான். எ – அசை .

 மைசூரில் சங்கரராவ் என்று ஒருவர் இருந்தார். அவருக்குப் பிதிரார்ஜிதமாக நாற்பது ஏகர் நிலம் இருந்தது. அவர் காலமறிந்து பயிர் செய்யத் தெரியாமல் வீண் செலவு செய்து கடன் பட்டுப் பாதி நிலத்தை விற்றுவிட்டார். மற்ற நிலங்கள் குத்தகையில் இருந்தன. தாசப்பா என்றவன் அவற்றை வைத்துக் கொண்டிருந்தான். ஒருநாள் தாசப்பா சங்கரராவைக் கண்டு ‘ஐயா! தாங்கள் நிலங்களை விற்கப்போவதாகச் சொல்கிறார்கள்; அது மெய்யாயின் அவற்றை எனக்கு விலைப்படுத்துங்கள் ! நான் பணம் கொடுக்கிறேன்’ என்றான். அவர் ஆச்சரியப் பட்டுத் தாசப்பா! எனக்கு எல்லா நிலங்களும் இருந்தும் செலவுக்குப் பற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை விற்றுக்கொண்டு வருகிறேன். நீ பாதி நிலத்தைக் குத்தகை யெடுத்து கொண்டு நிலம் வாங்குவதற்குப் பணம் சம்பாதித்திருக்கிறாய்; பணம் எப்படிச் சேர்த்தாய்? அதனை எனக்குச் சொல் ‘ என்று கேட்டார்.

அவன் ‘ஐயா! நீங்கள் எல்லாவற்றிற்கும் போ! போ!’ என்கிறீர்கள். நான் ஒவ்வொன்றுக்கும் ‘வா! வா!’ என்கிறேன். இதுதான் வித்தியாசம். அதாவது, நீங்கள் வேலையாட்களைப் போய் வேலை செய்யுங்கள்!’ என்கிறீர்கள். நான் ‘வாருங்கள்! வேலைக்குப் போகலாம்’ என்று அவர்களை அழைத்துக்கொண்டு போய் அவர்களோடு வேலை செய்து வருகிறேன். அதனால், எனக்கு அதிக லாபம் கிடைக்கின்றது’ என்று சொல்லி அந்நிலங்களை விலைக்குப் பெற்றுக்கொண்டான். ஆதலால், காலத்தில் பயிர் செய்து லாபம் சம்பாதிக்கத் தெரியாதவன் நெற்பதர் போலப் பயன்பட மாட்டான்.

— கதாவாசகம்.

***

5. தெள்ளிய வாலின் சிறுபழத் தொருவிதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயினும், அண்ணல் யானை

அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு

மன்னர்க் கிருக்க நிழலா கும்மே. 

தெள்ளிய – தெள்ளி யெடுக்கத்தக்க, ஆலின் – ஆலமரத்தின், சிறுபழத்து – சிறிய பழத்தினுடைய, ஒருவிதை – ஒருவிதையானது, தெள் – தெளிந்த, நீர் – நீரையுடைய, கயத்து – குளத்திலுள்ள, சிறு மீன் – சிறிய மீனின், சினையினும் – முட்டையைக் காட்டிலும், நுண்ணிதே – சிறியதே. ஆயினும் – ஆனாலும், அண்ணல் – பெருமை பொருந்திய, யானை – யானையும், அணி – அழகிய, தேர் – தேரும், புரவி – குதிரையும், ஆள் – காலாள்களுமாகிய, பெரும் – பெரிய, படையொடு – சேனைகளோடு, மன்னர்க்கு- அரசருக்கும், இருக்க (வெயிலில்) தங்கியிருக்க, நிழல் ஆகும் – நிழலைத் தரும். ஏ- அசை.

 நெடுங்காலத்துக்கு முன்னர்க் காசிபர் என்ற முனிவருக்கு இரணியகசிபு என்று ஒரு புத்திரன் பிறந்தான். அவன் மிகவும் பெரிய வடிவத்தைக் கொண்டவன். உதயகிரி அஸ்தமனகிரி என்ற இரண்டு மலைகளையும் அவன் தன் காதுக்குக் குண்டலங்களாக அணிந்து திரிந்ததுவே அவன் பெரிய வடிவத்தைப் பிரசித்தியாக்கும். அவன் ஒருவரும் பெறமுடியாத உயர்ந்த வரத்தைப் பிரமதேவரிடத்தில் பெற்றிருந்தான். அவன் வரம் இது:- ‘ இரவிலும், பகலிலும், உயிருள்ளவற்றிலும், உயிரில்லாதவற்றிலும், உள்ளிலும் வெளியிலும், தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன நிற்பன என்ற எழுவகைத தோற்றத்திலும் தான் இறக்கலாகாது’ என்பதாம். அவனைப்போல யோசித்து வரம் பெற்றவர் ஒருவரும் இல்லை. பெரும்பாலும் அவன் வரமடைந்ததற்கு இறவாமலேயே இருந்திருக்கவேண்டும். அவனுக்குப் பிடிவாதமும் பெருங்கோபமும் அதிகம். கருவம் அவன் நெஞ்சத்தில் குடி புகுந்தது. அதனால், அவன் கடைசியில் கொஞ்சமும் அறிவில்லாமல் எல்லாரும் தன்னையே கடவுள் என்று கொண்டாடும் வண்ணம் கட்டாயப்படுத்தத் தொடங்கினான். அறிவுள்ளவர் பலரும் அதனைச் சிறிதும் அங்கீகரிக்க வில்லை. உலகத்தில் அவன் உபத்திரவமும் பயமும் அதிகமாக வளரத்தொடங்கின. அப்புறம் ஸ்ரீ மகாவிஷ்ணு நரசிங் காவதாரம் செய்து அவனை உபாயமாகக் கொன்று உலகத்தின் பயத்தை நீக்கினார். ஆதலால், உருவத்தில் பெரியவர்களான அனைவரும் அறிவிலும் பெரியவர்களாக முடியாது.

— பாகவதம்.

*****

6.எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

a. எழுத்து – இலக்கண இலக்கிய நூல்களை, அறிவித்தவன் – (நமக்குக்) கற்பித்தவன், இறைவன் – கடவுளுக்குச் சமானமாக, ஆகும் – (வணங்கத்தக்கவன்) ஆவான்.

b. முற்காலத்தில் பாணினி என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் வடமொழியில் நிகரற்ற பண்டிதர். அவர் அப்பாஷைக்குத் தாம் ஓரிலக்கணம் செய்யவேண்டும் என்று பனிமலைச் சாரலில் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யத் தொடங்கினார். அப்பொழுது சிவபெருமான் அவருக்குத் தரிசனம் கொடுத்துத் தமது இடக் காத்திலிருந்த டமருகம் என்ற வாத்தியத்தை ஒலிக்கப் பண்ணினார். அவ்வாத்தியத்திலிருந்து பதினான்கு வகையான அக்ஷா சப்தங்கள் உண்டாயின. பாணினி முனிவர் அச்சப்தங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு இலக்கண சூத்திரங்களை உண்டு பண்ணினார். அதற்குப் பாணினி வியாகர்ணம் என்று பெயர். அப்புறம் பதஞ்சலி என்ற வேறொரு முனிவர் அதற்குப் பாஷியம் (உரை) எழுதி விளக்கினார்.

முன்பு இமயவரசன் புத்திரியான பார்வதிதேவிக்குப் பனிமலையில் திருக்கலியாணம் நடந்தது. அதற்கு உலகத்திலுள்ள எல்லாத் தேவர்களும் எல்லா முனிவர்களும் ஒன்றாகத் திரண்டு வந்திருந்தார்கள். அதனால், உலகத்தின் வடக்குத் திசையில் பளு அதிகமாயிற்று. அந்தப் பாரத்தைத் தாங்கமாட்டாமல் அத்திசை தாழ்ந்து தெற்குத் திசை உயர்ந்து போயிற்று. சிவபெருமான் அதன் காரணத்தை உணர்ந்து தெற்கில் சென்று உலகத்தின் பளுவைச் சமன் செய்யும்படி முனிவரிற் சிறந்த அகஸ்தியருக்குக் கட்டளை யிட்டனர்.

அம்முனிவர் கடவுளை வணங்கித் ’தலைவரே! தங்கள் திருக்கலியாணம் காண உலகத்தில் உள்ள அனைவரும் வந்து ஒன்றாகத் திரண்டிருக்கின்றனர். நான் மாத்திரம் அதனைக் காணாமல் அகல்வது நியாயமாகுமா? அதனுடன் தெற்குத்திக்கு திராவிட தேசம். எனக்கு அந்தப் பாஷை கொஞ்சமும் தெரியமாட்டாது. நான் சென்று அங்கு எப்படியிருப்பேன் ?’ என்று சொன்னார். சிவபெருமான் ’அன்பனே! கவலையுறாதே ; எமது திருமணக்கோலத்தை நீ விரும்பும் ஒவ்வொரு சிவதலந்தோறும் உனக்குக் காண்பிக்கிறோம். திராவிட பாஷையில் உனக்குச் சிறந்த ஞானம் உண்டாகும் வண்ணம் அநுக்கிரகம் செய்கிறோம். உன் பெயரால் இலக்கணமியற்றி நீ அந்தப் புராதன பாஷைக்குத் தலைவனாக விளங்கிவா!’ என்று திருவாய்மலர்ந்து,

அவருக்குத் தமிழ்ப்பாஷையையும் அதன் இலக்கணத்தையும் உபதேசம் செய்தனர். உடனே முனிவர் கடவுளிடம் விடை பெற்றுக்கொண்டு தென் திக்கை அடைந்து பொதிகை மலையில் தங்கித் தமது பெயரால் அகத்தியம் என்று ஒரு பெரிய இலக்கணமியற்றித் தமிழ்ப் பயிரை வளர்த்தார். ஆதலால், வடமொழி தென்மொழி யென்ற இரண்டு பாஷைகளுக்கும் முதலில் இலக்கணத்தை அறிய வித்தவர் சிவபெருமானே யாவர்.

— திருவிளையாடற் புராணம்.

———-

 எழுத்தறிவித்தவன் இறைவ னாகும்.

b. எழுத்து – இலக்கண இலக்கிய நூல்களை, அறிவித்தவன் – (உலகத்துக்கு) முதலில் கற்பித்தவன், இறைவன் ஆகும் – கடவுள் ஆவார்.

2. முன்னர்ச் சொன்ன பட்டணத்தைச் சார்ந்த மைலாப்பூரில் திருவள்ளுவர் என்று ஒரு தமிழ்ப்புலவர் இருந்தார். அவர் தமிழ்ப்பாஷையைத் தெளிவாகக் கற்றவர். நல்லொழுக்கம் நிறைந்தவர். இல்வாழ்க்கையில் இயைந்தவர். முனிவர்களைப்போல முக்காலத்தையும் அறிந்து சொல்கின்ற ஞானக்கண் பெற்றவர். அவர் திருக்குறள் என்று மிகவும் சிறந்த நீதி நூலொன்று இயற்றி அதனை மதுரைப் பட்டணத்துக்கு எடுத்துக் கொண்டு சென்று அங்கிருந்த தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார். அதன் பொருள் இணையற்றதென்று எல்லா மதத்தவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மிகவும் சிறிய வாக்கியங்களில் பெரிய விஷயங்களை அடக்கித் தெளிவாகச் சொல்லியிருக்கும் நீதி நூல் தமிழ்ப்பாஷையில் அஃதொன்றேயாகும் அந் நூல் அவர்கள் திறமையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல உணர்த்துவது மல்லாமல், படிப்பவர் மனத்தைப் பாகுபோல வுருக்கிப் பயன் பெறவும் செய்கின்றது. ஆதலால், திருவள்ளுவரைப் போலக் குற்றமும் சந்தேகமும் இல்லாமற் சொல்வது தான் ஒருவன் கற்ற கல்விக்கு அழகாகும்.

— புலவர் புராணம்.

****

7.பயணிகளுக்கு அவர் சொல்லும் அறிவுரைகள் :

76. சுழியா வருபுனல் இழியா தொழிவது.

சுழியா – சுழித்துக்கொண்டு, வரு – வருகின்ற, புனல் – வெள்ளத்தில், இழியாது- இறங்காமல், ஒழிவது – நீங்கவேண்டும்.

76. துணையோ டல்லது நெடுவழி போகேல்.

துணையோடு – துணையினோடு, அல்லது – அல்லாமல், நெடுவழி – தூரமான வழியில், போகேல் – (நீ செல்லாதே.

77. புணைமீதல்லது நெடும்புனல் ஏகேல்.

புணைமீது- தெப்பத்தின்மேல், அல்லது-அல்லாமல், நெடும் புனல் – பெரிய நீரில், ஏகேல்- (நீ ) நீந்திச் செல்லாதே.

79. வழியே யோக வழியே மீளுக.

வழியே – (ஒருவன் இல்லற) வழியிலே, ஏகுக – செல்லக் கடவன்; வழியே – (பின்னர் ) அவ்வழியிலிருந்து, மீளுக – (துறவற வழியில்) திரும்பக்கடவன். இன்னுமொரு பொருள் : போன வழியை நினைவு வைத்துக்கொண்டு அதே வழியில் திரும்புக. பலரும் சுற்றுலா செல்கையில் வழித்தவருவது இயற்கை.

***

8. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்

சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.

பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்

மெய்போ லும்மே! மெய்போ லும்மே!

வாய் – வாயானது, பறை ஆகவும் – தம்பட்டம் என்ற பறை வாத்தியமாகவும், நா – நாவானது, கடிப்பு ஆகவும் – அடிக்கும் கோலாகவும் கொண்டு, சாற்றுவது – கொட்டித் தெரிவிப்பதாகிய, ஒன்றை – ஒரு காரியத்தை, போற்றி – ஆதரவுடன், கேண்மின் – கேளுங்கள். பொய் உடை – பொய் பேசுதலையுடைய, ஒருவன் – ஒருமனிதன், சொல் பேசுகின்ற, வன்மையினால் உறுதிப்பாட்டினால், மெய்போலும் – (அவன் பேசிய பொய்ச் சொற்கள் ) மெய்யே போலத்தோன் றும்; மெய்போலும் – மெய்யேபோலத் தோன்றும். ஏ – இரண்டும் அசைகள்.

71. முன்னொரு காலத்தில் சத்திராஜித்து என்று ஒரு உயர்ந்த அரசன் இருந்தான். அவன் சூரியனைக் குறித்துத் தவம் செய்து ஸ்யமந்தகமணி யென்ற ஒரு சிறந்த இரத்தினத்தைப் பெற்றான். அம்மணி நாள் தோறும் ஒரு பாரம் எடையுள்ள தங்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரு சமயத்தில் கிருஷ்ணன் என்பவன் தனக்கு அந்த மணியைத் தரும்படி கேட்டதற்குச் சத்திராஜித்து மன்னவன் கொடுக்கமுடியாதென்று சொல்லிவிட்டான். பிற்பாடு அவன் தம்பி பிரேசனன் அம்மணியைக் கழுத்தில் தரித்துக்கொண்டு ஒருநாள் காட் டில் வேட்டையாடப் போனான். அவனை ஒரு சிங்கம் கொன்றுவிட்டு அத்தெய்வ மணியை எடுத்துக்கொண்டு போயிற்று. அதனைக்கண்ட ஜாம்பவான் என்னும் கரடி அச்சிங்கத்தைக் கொன்று தான் அம்மணியை அடைந்தது.

சத்திராஜித்து தம்பியும் மணியும் காணாமற்போன தனால் கிருஷ்ணன் தன் தம்பியைக் கொன்று ஒருவருமறியாமல் மணியை அபகரித்துக் கொண்டு விட்டான்’ என்று பலரும் கேட்க அவதூறு பேசத்தொடங்கினான். கிருஷ்ணன் அத்தெய்வமணியைத்தான் அப்கரிக்க வில்லையென்று பலர் முன்னிலையில் பலவிதமாகச் சொல்லியுங்கூட அவன் நம்பவில்லை. சத்திராஜித்து மன்னவனைச் சாந்தவர்களும் அவனைப் போலவே அவதூறு சொல்லிக் கிருஷ்ணனைத் தூற்றத் தலைப்பட்டார்கள். பின்பு கிருஷ்ணன் ஜாம்பவானைத் தேடிச் சென்று அவனோடு சண்டை செய்து ரணகளத்தில் அவனை வென்று அம்மணியைக் கொண்டுவந்து சத்திராஜித்து மன்னவனிடம் கொடுத்த பிற்பாடுதான் அவன் சொல் உண்மையாயிற்று. ஆதலால், சில சமயங்களில் மெய்ச் சொற்களும் பொய்ச் சொற்களாக மாறிப் போகின்றன.

— பாகவதம்.

***

9. தறுகண் யானை தான் பெரி தாயினும்

சிறுகண் மூங்கில் கோற்கஞ் சும்மே.- இதற்கு பொருள்:

தறுகண் – அஞ்சாமையை உடைய, யானை – யானையானது, தான் பெரிது ஆயினும் – தான் (எல்லா மிருகங்களையும் விட உருவத்தால்) பெரியதா யிருந்தாலும், சிறுகண் – சிறிய கணுக்கள் (உள்ள), மூங்கில் கோல்கு – மூங்கிற் கோலுக்கு, அஞ்சும் – பயப்படும்.

முன்னாளில் சூரியன் புத்திரனாகிய சுக்கிரீவன் என்ற குரங்குத்தலைவன் ரிசிய மூக மலையில் வாசம் செய்து வந்தான். அநுமான் முதலான அறிவில் மிகுந்த வாநரர்கள் அவனுக்கு மந்திரிகளாகி அப்பொழு தப்பொழுது ஆகுங் காரியங்களை அறிந்து சொல்லிவந்தார்கள். வாலி அவ்விடத்துக்கு வந்தால் இறந்து போவான் என்பதை அவன் அறியாமலிருக்கவில்லை. மதங்கர் என்ற முனிவர் வாலிக்கு அவ்வாறு சாபமிட்டிருந்தார். ஆனாலும், சுக்கிரீவன் இரவும் பகலும் வாலியை நினைந்து பயந்து நடுங்கிக் கொண்டேயிருந்தான். இராமன் வந்த பிற்பாடுதான் அவ னுக்கு அந்தப்பயம் நீங்கிற்று. ஆதலால், எவ்வளவு பத்திரமான இடத்திலிருந்தாலும் பெரிய சத்துருக்களுக்கு அனைவரும் பயப்படுவார்கள்.

— இராமாயணம்.

***

10. பெற்றமும் கழுதையும் மேய்ந்த வப்பாழ்

பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து

நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.– இதற்கு பொருள்:

பெற்றமும் – பசுக்களும், கழுதையும் – கழுதைகளும், மேய்ந்த – மேய்ந்து கொண்டிருந்த, அ பாழ் – அந்தப் பாழ் (நிலமானது), பொன் தொடி – பொன்னாலாகிய வளையல்களை (யணிந்த), மகளி ரும் – பெண்களும், மைந்தரும் -புருஷர்களும், செறிந்து – நிறைந்து, நெல் பொலி – நெல்லின் (குதிர்கள் ) விளங்குகின்ற, நெடுநகர் – பெரிய பட்டணம், ஆயினும் – ஆகும், ஆனாலும் – ஆகும்.

நெடுநாளைக்கு முன்பு கவுதமா என்ற முனிவர் தம் மனைவி அநசூயையோடு நைமிச வனத்தில் தவம் செய்துவந்தார். அப்பொழுது உலகத்தில் பன்னிரண்டு வருஷம் வரையில் மழை பொழியாமல் பெரும் பஞ்சம் பாவிப் பீடித்து வந்தது. வனத்திலிருந்த முனிவர்களும் நாட்டிலுள்ள அந்தணர்களும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வகையில்லாமல் கவுதமாச்சிரமத்துக்கு வந்து அவரைத் தஞ்சமடைந்தார்கள். கவுதம முனிவர் தமது உயர்ந்த வேத பாராயணத்தினாலும், சிறந்த தவவொழுக்கத்தினாலும் கோதுமைப் பயிர் செய்து அதிகமான தானியங்களை விளைத்து அத்தனை பெயரையும் குறைவில்லாமல் காப்பாற்றி வந்தார். பின்னர் இரண்டாவது தடவை நேர்ந்த அவ்விதமான மற்றொரு பஞ்சத்திலும் அவர் திரியம்பகம் என்றவிடத்தில் இருந்து கொண்டு தமது வேத பாராயண மகிமையினால் பிடி நெல்லை விதைத்துப் பயிர் செய்து விளைத்து எல்லாம் அந்தணர்களையும் பஞ்சம் தெளியும் வரையில் காப்பாற்றி வந்திருக்கிறார். அம்முனிவரைப்போல வேதமோதுவதும் அடுத்தவர்களை ஆதரிப்பதும் அந்தணர்களுக்குச் சிறந்த தருமமாகும்.– சிவபுராணம்.

–subham—

Tags- அதிவீர ராம பாண்டியன் நூல்கள், 10 கேள்விகள், வெற்றிவேற்கை, கதைகள் , சுப்பிரமணிய சர்மா

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 107; இந்து மத கலைச்சொல் அகராதி-107 (Post.16,155)


Written by London Swaminathan

Post No. 16,155

Date uploaded in London – 2 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

T Words Continued………………….

English version posted yesterday

துர்வாசு

யயாதிக்கும் தேவயானிக்கும் பிறந்த இளைய மகன்; அவனுடைய தந்தை முன்கூட்டியே முதுமை களையைப் பெற்றதால்  யார் இளமையைத் தருகிறீர்கள் எண்டு மகன்களை வினவினார்; அவனுடைய அண்ணன் யது என்பவனைப் போலவே, துர்வாசுவும் தந்தைக்கு இளமையைக் கொடுக்க மறுத்துவிட்டான் . உடனே தந்தை யயாதி சாபமிட்டார்: நீ ஆளக்கூடிய மக்கள் எல்லோரும் பாவம் செய்த  கும்பலாக இருக்கும்; அவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்பது  அந்த சாபம் ஆகும்.

***

த்வஷ்டா

ஒரு  நல்ல குணமுள்ள பிராமணன் இவன்; விஸ்வரூபா என்ற மூன்று தலையுள்ள மகனைப் பெற்றார் .இந்திரன் பொறாமையால் அவனைக் கொன்றான் . இந்திரனைப் பழிவாங்குவதற்காக த்வஷ்டா, மீண்டும் ஒரு மகனை உருவாக்கினார் . அவன் பெயர் விருத்ராசுரன் ;அவனையும் இந்திரன் கொன்றான்; பிராமணனைக் கொன்ற பாவம் – பிரம்மஹத்தி– இந்திரனைப் பீடித்தது ; ஒவ்வொரு புனிதத் தலமாகச் சென்று தனது பிராமணக் கொலை பாவம் தீர வேண்டும் என்று மன்றாடினான் . இந்தக் கதை தமிழ்நாட்டின் பல கோயில்களின் தல புராணத்திலும் உள்ளது

சிலர், இது பருவ நிலை பற்றிய கதை என்று வியாக்கியானம் செய்வார்கள்; அதாவது விருத்திரன் என்னும் வறட்சியை, இந்திரன் என்னும் மழை அழித்தது என்பது  அவர்களுடைய விளக்கம் ; இதில் கவனிக்க வேண்டிய விஷயம்: இந்திரனின் உணவை அவனுக்கு அளிக்க வேண்டாம் என்று இடையர்களிடம் கிருஷ்ணன் கூறியதால் இந்திரன் கோபம் கொண்டு மழையைக் கொட்டினான் ; அப்போது கோபாலர்களைக் காப்பதற்காக கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கினான் என்ற கதைக்கு விளக்கம் தருவதாகச் சொல்லிக்கொண்டு இது யாதவர்- இந்திரன் இன மோதல்  என்று இனபேதம் கற்பிக்கும் வெள்ளைக்காரர்கள் இந்த சம்பவம் பற்றி வாய்மூடி மெளனியாகி விடுவார்கள்; இந்திரன் ஏன்  காரணமில்லாமல் பிராமணனைக் கொன்றான் என்று விளக்க மாட்டார்கள் ; சம்பவமே நடக்காதது போல நடிப்பார்கள். 

***

தியாகராஜர் (1767-1847)

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்;  ஏனைய இருவர் சியாமா சாஸ்திரிகள், முத்துஸ்வாமி தீட்சிதர்.  திருவாரூரில் த்ரிலிங்க வைதிக தெலுங்கு பிராமணரான ராம ப்ரம்மம் என்ற பெரியாருக்கு மூன்றாவது மகனாக தியாகராஜர் அவதரித்தார்.  இவரது 18 வயதிற்குள்ளே வேதாத்யயனம், ஸம்ஸ்கிருதம், தெலுங்கு ஆகியவற்றில் நல்ல பயிற்சியைப் பெற்றுத் தேர்ந்தார். 18வது வயதில் திருமணமும் நடைபெற்றது. அவரது மனைவியார் காலமானார்.;அவர்களுடைய மக்களின் பெயர் சீதம்மா. சோந்தி வெங்கடராமையர் என்பவரிடம் சங்கீதம் பயின்றார். 79 வருடம் வாழ்ந்த அவர் சுமார் 24000 கிருதிகளை இயற்றியதாகவும் இப்போது சுமார் 730 கிருதிகள் மட்டுமே கிடைப்பதாகவும் சங்கீத விற்பன்னர்கள் கூறுவர். அவரது வாழ்வில் ஏராளமான அற்புத சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒவ்வொரு கிருதியின் பின்னாலும் ஒரு சம்பவம் இருக்கும் . 96 கோடி முறை ராம நாமத்தை ஜபித்து ராமபிரானின் தரிசனம் பெற்றார். சியாமா சாஸ்திரிகள் அடிக்கடி திருவையாறு சென்று அவரை சந்தித்து இசை பற்றி விவாதிப்பது வழக்கம். தன்னுடைய மகன் சுப்பராய சாஸ்திரியை தியாராஜரிடம் அனுப்பி சங்கீதம் கற்கவும் செய்தார் திருவையாறு என்னுமிடத்தில் தியாகராஜருடைய சமாதி உள்ளது ஆண்டுதோறும் அவர் சமாதி ஆன நாளில் தியாகராஜ ஆராதனை நடத்தப்படுகிறது அப்போது அவர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகளை பிரபல இசைக் கலைஞர்கள் கீழே தரையில் உட்கார்ந்து பக்தி சிரத்தையுடன் இசைப்பார்கள்.

1847ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதிக்குச் சமமான பராபவ வருடம் தை மாதம் பகுள பஞ்சமி நாளன்று திருவையாறு தலத்திலேயே அவர் சித்தியாகி மோக்ஷம் அடைந்தார் சுமார் 212 ராகங்களில் அவரது கிருதிகள் அமைந்துள்ளன. அவரே உருவாக்கிய சுமார் 66 புதிய அற்புத ராகங்களில் அவர் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.

***

தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி (பிப்ரவரி 192012-ல்  இதே பிளாக்கில் வெளியான என்னுடைய படைப்பு )

(கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்- மஹான் தியாகராஜரின் பாடல்களிலிருந்து)

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்று எங்கள் சுப்ரமணிய பாரதி சொன்னது உங்கள் கீர்த்தனைகளைக் கேட்டுத்தானோ!  13 வயதில் நீவீர் பாடிய முதல் பாட்டு என்ன?

நமோ நமோ  ராகவாய

**

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரே, 96 கோடி தடவை  ராம நாமம் ஜபித்தீர், எழுதினீர்.  “ஓ ராம, நீ நாமமு ஏமி ருசிரா ,ஸ்ரீ ராம, நீ நாமமு எந்த ருசிரா” என்று பத்ராசலம் ராமதாசர் பாடினார். நீங்கள் ராமனை எப்படிப் பாடினீர்கள்?

மேலு மேலு ராம நாம சுகமு ஈதரலோ

நிண்டு தாஹமு கொன்ன மனுஜுலகு நீருத்ராஹின சுகம் புகண்டே

சண்ட தாரித்ர மனுஜுலகு தன பாந்தமு அப்பின——–

( பொருள்: ராம, இந்தப் பூமியில் உன் நாமமே சுகம் தரும். தாகத்தால் தவிக்கும் மனிதனுக்கு தண்ணீர் கிடைத்ததைவிட, ஏழைக்குப் பணம் கிடைத்ததைவிட, வெப்பம் தாங்காதவனுக்கு குளிர்ந்த குளம் கிடைத்ததைவிட, பயத்தால் நடுங்குபவனுக்கு துணிவு கிடைத்ததைவிட, தீராப் பசியுடையவனுக்கு பாயசத்துடன் அறுசுவை விருந்து கிடைத்ததைவிட———– ராமா, உன் நாமமே சுகம் தரும்)

**

அருமையான பாட்டு. ஆழமான பொருட்சுவை. உங்களைத் திருடர்கள் தாக்கி வழிமறித்த போது ராம லெட்சுமணனே வந்து காப்பாற்றினார்கள். என்ன பாட்டு பாடியவுடன் அவர்கள் வந்தார்கள்?

முந்து வெனுக இரு பக்கல தோடை முரகர ஹர ராரா (தர்பார் ராகத்தில்)

(பொருள்: முர, கரகளை வதம் செய்தோனே, எனக்கு இருபக்கத்திலும் துணையாக வாரும் ஐயா—-)

**

ஒரு முறை ஒரு கிழ தம்பதியர் வந்து உம் கையில் காசையும் கொடுத்துவிட்டு ராமனும் சீதையுமாய் மறைந்தார்களே.என்ன பாடினீர்?

பவனுத நா ஹ்ருதயமுன (மோகன ராகத்தில்)

**

திருவாரூரில் அவதரித்த த்யாகப்ரம்மமே, உமது தந்தை ராமப்ரம்மத்தின் ராமாயண கதாகாலச்சேபத்தை கேட்டுத்தான் ராம பக்தி ஏற்பட்டிருக்க வேண்டும்.உமது குரு ராமக்ருஷ்ணானந்தா நாரத மந்திரம் உபதேசித்தார். ராமன் மட்டுமின்றி சிவன் முதலியோர் மீதும் கிருதிகள் பாடினீரா?

சிவ சிவ சிவ யனராதா,  பவ பய பாதலனண சுகோராதா (பந்துவராளி ராகம்) பொருள்: சிவ சிவ சிவ என்று சொல்லக் கூடாதா? உங்கள் பிறவி என்னும் துயரைப் போகக்கூடதா?)

**

உமது சங்கீத குரு வேங்கடரமணய்யா உமது கிருதிகளை வியந்து அவருடைய பதக்கங்களையே எடுத்து உம் மீது சூட்ட அதை பெருந்தன்மையுடன் அவரது மகள் கல்யாணத்தில் கொடுத்தீர்கள்..

சரபோஜி மன்னன் அழைத்தபோது போக மறுத்து “பணம் சுகம் தருமா, ராமா உன் முன்னிலையில் இருப்பது சுகமா” என்று பாடினீரே, அந்தப் பாட்டைக் கொஞ்சம்………

நிதி சால சுகமா ராமுனி சந்நிதி சேவ சுகமா (கல்யாணி ராகம்)

**

இதனால் உங்கள் தமையனார் கோபத்தில் நீர் பூஜித்த விக்ரகங்களை ஆற்றில் போட்டார். அதையும் கண்டுபிடித்தீர். 2000க்கும் அதிகமான கிருதிகளை எழுதினீர், 200க்கும் அதிகமான ராகங்களைப் பயன் படுத்தினீர்கள். எங்களுக்குக் கிடைத்ததோ 700 கிருதிகள்தான்.உங்கள் தமையன் செய்த அநியாயங்களை ராமனிடம் முறையிட்டீராமே!

அநியாயமு சேயகுரா ராம நன்னன்யுனிகா……..

(ராமா, எனக்கு அநீதி இழைக்காதே, என்னை வேற்று மனிதனாகப் பார்க்காதே………..என் அண்ணன் தரும் தொல்லைகள் தாங்கவில்லை.)

**

உங்களுக்குக் கோபம் அதிகமாமே. ஒருமுறை உங்கள் மனைவி இதைச் சுட்டிக் காட்டியவுடன் கோபத்தின் தீமையை உணர்ந்து ஒரு பாடல்…….

சாந்தமுலேக சவுக்கியமுலேது —–(சாந்த குணம் இல்லாவிடில் சௌக்கியமும் இல்லை).

**

நாதத்தின் தோற்றம், சப்தஸ்நரங்களின் பிறப்பு, ராகங்களின் குணம் பற்றியே 15 கிருதிகள் எழுதினீர். அவைகளில்  சில……

சோபில்லு ஸப்தஸ்வர ஸுந்தரலு பஜிம்பவே

நாபி, ஹ்ருத், கண்ட, ரசன நாச ஆதுலயந்து

சோபில்லு ஸப்தஸ்வர ஸுந்தரலு பஜிம்பவே

(பொருள்: ஏழு ஸ்வரங்கள் எனப்படும் சுந்தரர்களை வழிபடுவாய். கொப்பூழ், இதயம், தொண்டை, நாக்கு, மூக்கு ஆகியவற்றில் திகழும் சுந்தரர்களை வழிபடுவாய். ருக் சாம முதலிய வேதங்களிலும் காயத்ரி மந்திரத்திலும்,வானோர், அந்தணர் உள்ளங்களிலும், தியாகராஜனின் கீர்த்தனைகளிலும் நடமாடும் சப்தஸ்வரங்களை வழிபடு).

**

வெறும் வாய்ப்பாட்டு மட்டும் இறைவனிடம் அழைத்துச் செல்லுமா?

சங்கீத ஞானமு பக்தி வினா சன்மார்கமு கலதே

ப்ருங்கி, நடேச, சமீரஜ, கடஜ, மதங்க நாரத ஆதுலு உபாசிஞ்சே

சங்கீத ஞானமு பக்தி வினா சன்மார்கமு கலதே

(பொருள்: பக்தி இல்லாமல் பாடும் இசை, சன்மார்க்கத்துக்கு இட்டுச் செல்லாது. ப்ருங்கி முனிவர், நடேசன், வாயு மைந்தன், அகத்தியன், மதங்கர், நாரதர் முதலியோரால் உபாசிக்கப்பட்ட இசை ஞானம் (அவர்களைப் போல பக்தியுடன் பயிலப்பட வேண்டும்) பக்தி இலாவிடில் நல் வழிக்கு கொண்டுசெல்லாது.)

**

18 வயதில் பார்வதியையும் அவர் 5 ஆண்டுகளில் இறக்கவே அவர் தங்கை கமலாம்பாவையும் கல்யாணம் செய்தீர். ஒரு மகளை ஈன்றெடுத்தீர். நீங்கள் மூன்று நாடகங்கள் எழுதினீர்கள், அவை யாவை?

பிரஹலாத பக்தி விஜயம்நவ்க சரித்திரம்சீதாராம விஜயம்

**

புத்தூரில் கோவில் கிணற்றில் ஒருநல்ல மனிதர் தவறி விழுந்து இறந்தபோது என்ன பாட்டு பாடி அவரை உயிர்ப்பித்தீர்கள்?

நா ஜீவாதார நாநோமு பலமா

ராஜீவ லோசன ராஜராஜ சிரோமணி

நாஜீபு ப்ரகாசமா, நா நாசிகா பரிமளா

நா ஜப வர்ண ரூபமா, நாது பூஜாஸீமமா (பிலஹரி ராகம்)

(பொருள்: என் ஜீவனுக்கு ஆதாரமே, என் நோன்புகளின் பலனே, தாமரைக் கண்ணனே, ராஜ ராஜனே, என் கண்களின் ஒளியும் நீயே, மூக்கில் நறுமணமும் நீயே, என் ஜபங்களின் வடிவும் நீயே, என் பூஜை மலரும் நீயே)

**

திருவையாயாற்றில் சமாதி அடையும் முதல் நாளன்று பிரம்மாநந்தாவிடம்  சந்யாசம் பெற்றீர். இறுதி நாள் நெருங்கிவிட்டதை அதற்கு சில நாட்களுக்கு  முன் கனவில் கண்டு பாடிவிட்டீரே, அது என்ன பாட்டு?

கிரிபை நெல (சகானா ராகம்)

***

திருவையாற்றிலுள்ள உங்கள் சமாதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஆராதனையில் பாடப்படும் (ஐந்து) பஞ்ச ரத்தின கீர்த்தனைகள் எவை?

நாட்டை ராகத்தில்- ஜகதாநந்த காரக;

ஆரபி ராகத்தில் – சாதிஞ்செனேஓ மனசா;

கௌளை ராகத்தில் – துடு குகல நன்னே தொர;

வராளி ராகத்தில் – கன கன ருசிரா;

ஸ்ரீ ராகத்தில் –எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கு வந்தனமுலு

***

கர்நாடக சங்கீத பிதாமஹர் புரந்தர தாசர் தனது பாடல்களில் புரந்தர விட்டல என்றும் சியாமா சாஸ்திரிகள் சியாம கிருஷ்ண என்றும் முத்து சுவாமி தீட்சிதர் குரு குஹ என்றும் முத்திரை வைத்து பாட்டு எட்டுக் கட்டினர். உங்கள் முத்திரை என்னவோ?

பவமான சுதுடுபட்டு, பாதார விந்தமுலகு

நீ நாம ரூபமுலகு நித்ய ஜய மங்களம்

ப்ர்ஹ்லாத நரதாதி பத்லு பொகடி ஸண்டு

ராஜீவ நயன தியாகராஜாதி வினுதனமன

(தியாகராஜரின் சுந்தரத் தெலுங்கு வாழ்க, எங்கும் மங்களம் பொங்குக)

***

துளசி

Tulsi [तुलसी]

இந்துக்களின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்று துளசி. இதை நாம் மூலிகைகளின் ராணி QUEEN OF HERBS என்று அழைப்போம் , வெளிநாட்டினர் இதை மூலிகைகளின் ராஜா KING OF HERBS என்பார்கள் .

துளசி- Holy Basil,  Ocimum sanctum ; Family Lamiaceae

எந்தப் பெருமாள் கோவிலுக்கு எப்போது போனாலும்  உத்தூரணியில் துளசி ஜலத்தைக் கொடுப்பார்கள் . அதை மரியாதையுடன் உறியாமல் குடித்துவிட்டு தலையிலும் தடவிக்கொள்ளும்போது கிடைக்கும் புத்துணர்ச்சியைச் சொல்லில் வடிக்க இயலாது . வைணவப்  பெரியார்கள் இறந்தாலோ சமாதி அடைந்தாலோ அவர்கள் அடக்கம் செய்யப்பட இடத்தில் பிருந்தாவனம் என்ற பெயரில் ஒரு மடத்தை அமைப்பார்கள் . இந்தியா முழுதும் வீடுகளின் பின்புறத்தில் துளசி மாடங்களை அமைத்து அதை பய பக்தியுடன் பராமரித்து, தினமும் சில இதழ்களை பெருமாளுக்குப் படைத்துவிட்டு பிரசாதமாக உட்கொள்ளுவர். இதனால் இருமல் சளி , கபம் நோய்கள் வராது.இந்துக்கள் துளசி விவாஹம் நடத்திக் கொண்டாடுகிறார்கள் . துளசி மாலையை அணிகிறார்கள் . வட இந்தியாவில் துளசி  டீ யைக் குடிக்கிறார்கள் ; இது ஒரு மூலிகை டானிக் போன்றது .

துளசிக்கு பிருந்தா என்ற பெயரும் உண்டு; கிருஷ்ணர் சின்னப்பையனாக இருந்தபோது விளையாடிய துளசி வனத்துக்கு பிருந்தாவனம் என்று பெயர் .xxxx

துளசி விவாஹம்

துளசி விவாகம் (Tulsi Vivah) அல்லது துளசி கல்யாணம் (Tulasi Kaḷyaṇam) என்பதை வட இந்தியர்கள் கொண்டாடி வருகிறார்கள் .கார்த்திகை  மாதத்தில் பௌர்ணமி நாள் முதல் பதினொன்றாவது நாளுக்கு இடையில் வரும் நாட்களில் இந்த மங்கள விழா நடத்தப்படுகிறது.

 இதில்சாளக்கிராமம் அல்லது நெல்லி மரக் கிளையுடன் துளசிக்கு சம்பிரதாயத் திருமணம் நடைபெறுகிறது.

இது  திருமண பருவத்தின் தொடக்கத்தைக்  குறிக்கிறது.

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு “பிருந்தாவன துவாதசி’  என்றும் பெயர்.

நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக் கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்வார்கள்.

துளசி இலையின்,நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும் அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில், இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.

வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். சிலர் சாளக்கிராமம் என்னும் கல்லினை வைத்து அதைக் கல்யாண மாப்பிள்ளையாக அலங்கரிப்பார்கள்; அதே நேரத்தில் துளசியை மணப்பெண்ணாகப் பாவித்து  கல்யாணனப் பெண்ணைப்போல அலங்கரிப்பார்கள் ; இஷ்ட மித்ர பந்துக்களையும் நண்பர்களையும் அமர வைத்து சில துதிகளைப்பாடி ஆரத்தி எடுத்த பின்னர் பிரசாதம் வழங்குவார்கள்; வேத பண்டிதர்களை அழைத்து மந்திரமும் ஓதும்படி வேண்டுவார்கள் .

To be continued………………….

Tags– துளசி விவாஹம் HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 107; இந்து மத கலைச்சொல் அகராதி-107, தியாகராஜர்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 93; இந்து மத கலைச்சொல் அகராதி-93 (Post.16,058)

Written by London Swaminathan

Post No. 16,058

Date uploaded in London – 6 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version was posted on 5-8-26

சந்தியா வந்தனம்

பிராமணர்கள் தினமும் மூன்று காலம் சந்திக்கும் நேரங்களில் — அதாவது இரவும் காலையும், காலையும் பகலும், பகலும் மாலையும் சந்திக்கும் மூன்று நேரங்களில் செய்யும் சூரிய வழிபாடு இது. காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பது இதன் முக்கிய உபாசனை. முன் காலத்தில் ஏனைய  ஜாதியினரும், பெண்களும் சந்திரா வந்தனம் செய்ததை வாலமீகி ராமாயணம் முதலிய நூல்கள் செப்புகின்றன. ஒருவேளை அதிலுள்ள மந்திரங்கள் வேறு பட்டிருக்கலாம்.இந்த வழிபாட்டுக்கு தண்ணீர் வேண்டும். ஆரியர்கள் குளிர் பிரதேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொல்லும் அரைவேக்காடுகளுக்கு இந்து மதச்சடங்குகள் வேட்டு வைக்கின்றன .

***

சாந்திபனி

கிருஷ்ணர் காலத்தில் வாழ்ந்த குரு/ ஆசிரியரின் பெயர்.  மகரிஷி சாந்திபனியிடம் கிருஷ்ணர், பலராமன், குசேலர் என்னும் சுதாமா முதலியோர் சகல சாஸ்திரங்களையும் கற்றனர் . உஜ்ஜயினி நகரில் இப்படி ஒரு ஆஸ்ரமம் இருந்தது .

***

சங்கம்  /குழு , கூட்டம்

இந்த ஸம்ஸ்க்ருதச் சொல் தமிழ் வரலாற்றில் முக்கிய இடம்பெறுகிறது ; தமிழ் மொழியை வளர்க்க பாண்டிய மன்னர்கள் மூன்று இதனங்களில் முதல், இதை, கட்டைச் சங்கங்களை நிறுவியதாக பிற்கால உரைநடை  நூல்கள்   கூறுகின்றன . அதில் கூறப்படும் பத்தாயிரம் ஆண்டுக்காலம் முதலியன நமப்புக்கொட்டியதாக இல்லை . தொல்காப்பியரின் விதிப்படி ச என்னும் எழுத்தில் சொற்கள் துவங்க முடியாது . 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகப்புகளைப்பெற்ற இலக்கண வித்தகன் பாணினி எழுதிய அஷ்டாத்யாயி நூலில் சங்கம் என்னும் சொல் வருகிறது அவர் இதற்கான பல பொருள்களை இலக்கண விதிகளுக்கு உதாரணமாகக் காட்டியுள்ளார் ; அதில் ஒரு பொருள் குழு, பலர் இருக்கும் அமைப்பு என்பதாகும் ; ஆயத்தங்களை விருப் பிழைக்கும் ஆயுதஜீவி சங்கத்தையும் குறிப்பிட்டுள்ளார் . ப்புத்தர் இறந்த பின்னர் , பிட்சுக்கள் சங்கங்களை ஏற்படுத்தினார் கள். அவர்களைப்போலவே சமணர்களும் சங்கத்தை ஏற்படுத்தினார்கள் ; அவை எல்லாம் சமய அமைப்புகள் ; மொழியுடன் தொடர்புடையவை அல்ல 

தமிழ்ச் சங்கப்புலவர்களிடையே நடந்த கோஷ்டி ஓதல்களைத் திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களில் காணலாம் .

சத்சங்கம் என்ற சொல்லை ஆதிசங்கரரின் பஜ கோவிந்தம் முதலிய திதிகளில் காணலாம்.

***

சனி- சனைச்சரன் — சனிக் கிரகம்

சனீஸ்வரன்

பெயர்கள் – மந்தன்,சாயாபுத்திரன்,சூர்யபுத்திரன்,காரி,அனிலன்,முதுமகன்,

முடவன், ஊனன், பாவணன்,சஞ்சலன்,செனரி,நீலன்,கரியவன்,

மனைவிகள் –நீளா தேவி; இவளுக்கு பிறந்த குழந்தையே “குளிகன் “.

எந்த நல்ல காரியங்களும், குளிகன்”நேரத்தில் செய்ய வேண்டும் .அந்த காரியங்களைத் திரும்பத் திரும்ப செய்ய நேரிடும்

ஜேஷ்டா தேவி- இவள் மகன் “தரித்திரன்” .

மந்தா தேவி-

பூமியிலிருந்து சனி இருக்கும் அதிக பட்ச தூரம்- 88,லட்சத்து 66 ஆயிரம்மைல்கள்

குறைந்த பட்ச தூரம் – 74 லட்சத்து 66ஆயிரம்மைல்கள்

சூரியனை ஒருமுறை சுற்றி வர – 30 வருடங்கள்!!!!

நிறம் – கறுப்பு.ஆகையினால்தான் கறுப்பாக இருக்கும் எந்தப்

பொருளையும் அவருக்குப் பிடிக்கிறது.

வாகனம் – காகம் – கறுப்பு; தானியம் – எள் – கறுப்பு; உலோகம் – கறுப்பாயுள்ள இரும்பு; வஸ்திரம் – கரு நீலப் பட்டு அல்லது கறுப்புத் துணி; புஷ்பம் – கருங் குவளை. இஷ்ட காலம் – சாயும்காலம், பிரதோஷ வேளை

குணம் – தாமசம்; உத்யோகம் – அடிமை;  அதிதேவதை – யமன்;  பிரத்யதி தேவதை- பிரஜாபதி; ஜாதி – சண்டாளர்/ கலப்பு இனம்;

திசை – மேற்கு;  பூதம் – காற்று; தன்மை – ஆண் அலி;  மொழி – நீச பாஷை;  உடல் அதிபதி -நரம்புக்கு;

அவஸ்தை – விருத்தர் அல்லது வயதானவர்; சுவை – துவர்ப்பு; சமித்து – வன்னி; ரத்தினம் – நீலம்; சுபாபவம் – குரூரம்;

குணம் – பாவி; நாடி – வாத நாடி; ஆசனம் – வில்; தேசம் – சௌராஷ்டிரம்; கண்டம்- ஆப்ரிக்கா; கோத்திரம் – காஸ்யபம்;

ருது- வஸந்த ருது; காரகன்- ஆயுள் காரகன்;  உச்சம் – துலா ராசியில்; நீசம் – மேஷ ராசியில்;  சொந்த வீடுகள் – மகரம், கும்பம்;

பார்வை – 3, 7, 10;  நண்பர்கள் – புதன், சுக்கிரன்; எதிரிகள் – சூரியன், சந்திரன், செவ்வாய்; சமமானவர் – குரு; ஆதிக்கம் உள்ள நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்ரட்டாதி; தைலம் – நல்லெண்ணெய்; ப்ரீதி செய்ய தானம் – காராம் பசு, நல்லெண்ணெய், இரும்பு;  ப்ரியமான பலகாரம்- வெல்லம் கலந்த எள் உருண்டை, எள்ளும்,உளுந்தும் கலந்த சாதம்.

கோவில்கள் – திரு நள்ளாறு, கொள்ளிக்காடு,திருநெல்வேலி அருகில் உள்ள ஸ்தலங்களான,குன்னத்தூர் என்ற திரு வேங்கடநாதபுரம் , திருக்குளந்தை என்ற பெருங்குளம், சென்னையில் உள்ள பொழிச்சலூர், மதுரை அருகில் உள்ள குச்சனூர், சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சனீஸ்வரன் கோவில்.

கன்னி மாதம் என்ற புரட்டாசி மாதம் விஷ்ணுவிற்கு விசேஷமான மாதம்.அதே மாதத்தில் முதல் சனிக்கிழமையன்று ரோகிணி

நடசத்திரத்தில் பிறந்தவரே சனீஸ்வரன்!!! ஆகையால், புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்தவர்களையும், ரோகிணி நட்சத்திரத்தில்

பிறந்தவர்களையும் அவர் ஒன்றும் செய்ய மாட்டார்!!!

ஏழரை நாட்டு சனி

ஏழரை நாட்டு சனி, முதல் இரண்டரை வருடம், மங்கு சனி, இரண்டாவது இரண்டரை வருடம்;

பொங்கு சனி, மூன்றாவது இரண்டரை வருடம் இறுதிச்சனி- நடுங்க வைத்துவிடும்.

சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்ததினால், தண்டிப்பதில்

கடுமையான நீதிபதி!!! தண்டிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான்,,அவர் சிவனாக இருந்தாலும்

சரி, சொந்த சகோதரன் யமனாக இருந்தாலும்சரி……விடமாட்டார்!!!

அவர் அள்ளிக் கொடுப்பதில் வள்ளல், பிடிக்காதவர்க்கு கொள்ளி வைக்கும் சூரர்!!!

அஸ்வ ரகசியத்தை தெரிந்தவன், சிறந்த ஆட்சியாளன்,அழகான ராஜ குமாரன், சமையல் கலை வல்லுனன், நளன்!!!

காலை சரியாக கழுவ வில்லை என்ற ஒரே காரணத்திற்காக, நாட்டை விட்டு ஓட்டி, மனைவியைப் பிரிந்து, தனது ஆடையை இழந்து ,

மனைவியின் புடவைத் தலைப்பில் அலைய விட்டு, கடைசியில் தனது க்ஷேத்திரமான திருநள்ளாறுக்கு வந்து தன்னை வழிபட்ட பின்னரே

அவனுக்கு விடுதலை அளித்தார் சனீஸ்வர பகவான்!!!

கறுப்பு ஆடை

சனீஸ்வர பகவானுக்குப் பிடித்த கறுப்பு ஆடை அணிந்து, அல்லது கரு நீல ஆடை

அணிந்து 45 நாட்கள் விரதம் இருந்து, தரையில் படுத்து, உயரமான மலையிலேற்றி ஐயப்ப பக்தர்களுக்கு திருப்திகரமாக தரிசனம்

செய்வித்து திருப்பி அனுப்புகிறார்.

சனீஸ்வர பகவான் !!!

சிறை வாசம், தீராத நோய், கடும் கடன், அவமானம், ஆயுளுக்கு

அதிபதி இத்தனை அதிகாரமும் கொண்டவர் சனி!!!

நமது உடல் முழுவதும் பரவி இருக்கும் நரம்புக்கு அதிபதி சனி!!.,

சனியில் பலமில்லாததினால் வரும் வியாதியே காக்காய் வலிப்பு!!!

கர்ம வியாதி என்றும், தீராத நோய் என்று ஜோதிடர்களினால் வரணிக்கப் படுகிறது இது ……

சனியின் உலோகமான இரும்பைக் கொடுத்தவுடன் நிற்கிறது……

இவ்வளவு பெருமையும், கடூரமான, கண்டிப்பான, தலைவிதிப்படி

தண்டிப்பதில் தனக்கு நிகரற்ற அனைவரையும் நடுநடுங்க

வைக்கும் சனீஸ்வரரை பணியவைக்கும் தெய்வம் ஆஞ்சனேயர்!!!

சனிக்கிழமை சனிஸ்வரனை எள் விளக்கேற்றி வணங்கி வழிபட்டாலும் சரி ஆஞ்சனேயரை

வடைமாலை அணிவித்து வழிபட்டாலும் சரி , கருணை வைத்து அருள்புரிவார்!!!

அனைவரும் சனீஸ்வரனை வணங்கி அவனருள் பெறுமாறு வேண்டி

விடை பெறுகிறேன் சீனிவாசன்!!! நன்றி , வணக்கம்!!! (From Gnanamayam Broadcast from London; Speaker Santanam Srinivasan)

XXXX

ஶ்ரீ சனீஸ்வர காயத்ரி

ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயா புத்ராய தீமஹி

தன்னோ சனி: ப்ரசோயதயாத்

XXXX

ச்லோகம்

நீலாஞ்சன சமாபாசம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா

மார்த்தாண்ட சம்பூதம் தம் நமாமி சனைச்சரம்.

****

சஞ்சயன் 

மஹாபாரதத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ; பெயரின் பொருள்- வெற்றி  ; திருதராஷ்டிரனின் ஆலோ சகர்; தேரோட்டி;  வியாசரின் சீடர்; அவர் கொடுத்த வரத்தால் இருந்த இடத்திலிருந்தே மஹாபாரதப் போர் முழுதையும் நேரடி ஒளிபரப்பு செய்தவர் ; இந்த பூர்வ சக்தி துரியோதனன் இறந்த நாளில் கதறிக்கொண்டு யுத்தகாலத்துக்குச் சென்றவுடன் மறைந்துவிட்டது ; பகவத் கீதையில் சஞ்சயர் சொன்னார் என்று அடி கடி வரும்; இவர் மூலமே நமக்கு பகவத் கீதை கிடைத்தது ; ஒரு காலத்தில் பாணடவர்களிடத்தில் சமாதானத் தூதும் சென்றார் ; நடுநிலைவாதி ; உள்ளதை உள்ளபடியே உரைத்தவர் .

***

சங்கரர் – ஆதிசங்கரர்

அத்வைத தத்துவத்தைப் பரப்பிய மிகப்பெரிய ஞானி. காலடியில் அவதரித்து 32 ஆண்டுகளே வாழ்ந்த இவர் இயற்றிய நூல்கள் கணக்கற்றவை;.ஜீவாத்மாவானது ப்ரஹ்மத்திலிருந்து பிரிந்த ஆத்மனே தவிர வேறல்ல; அது பரப்ரஹ்மத்துடன் சேர்தல் வேண்டும், அதுவே மோட்சம் என்று போதித்தார் . இந்தியா முழுதும் வலம் வந்து பல தத்துவ ஞானிகளை வாதத்தில் வென்று பெரும் பக்தர் கூட்டத்தை உருவாக்கினார் நாட்டின் நான்கு மூலைகளில் — ஜோஷிமத், பூரி, துவாரகா, சிருங்கேரி – மடங்களை நிறுவி காஞ்சீபுரத்தில் முக்தி அடைந்தார் ; சிலர் இவர் இமயமலையில் முக்தி அடைந்ததாகவும் சொல்வர் ; சென்ற இடமெல்லாம் சக்தி வாய்ந்த லிங்கங்களையும் யந்திரங்களையும் அமைத்து கோவில்களுக்கு சக்தி ஊட்டினார் . இவர் பெயரில் உள்ள சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் இன்றும் பல லட்சக் கணக்கானோரால் பாடப்படுகின்றன ; விவேக சூடாமணி, செளந்தர்ய லஹரி, பஜகோவிந்தம்,  கனகதாரா ஸ்தோத்திரம் முதலிய ஒவ்வொன்றின் பின்னாலும் கதைகளும் அற்புதங்களும் உள்ளன ;  இவர் பகவத் கீதைவிஷ்னு சஹஸ்ரநாமம் , முக்கிய உபநிஷதங்களுக்கு எழுதிய உரைகளே இவரது புலமைக்குச் சான்று பகரும் ; சிறுவயதிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றார் ; இவரது காலம் எடடாம் நூற்றாண்டு என்றும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர் என்றும் இரண்டு கருத்துக்கள் உள்ளன ; இவரைப் போலவே பிற்காலத்தில் வாழ்ந்த அபிநவ சங்கரரின் வாழ்வும் ஆதி சங்கரர் வாழ்வும் அதிசயங்கள்  நிறைந்தவை; ஆகையால் காலத்தைத்  தெளிவாகச் சொல்லமுடியவில்லை . இவரது சீடர்கள் பரம்பரை, இன்றும் சங்கராசார்யார் என்ற பெயரில் இந்துமதத்தைப்  பரப்பிவருகின்றனர்.

***

சனத் குமாரர்

இந்து புராணங்களின் படி, படைப்புக் கடவுளான பிரம்மாவின் மனத்திலிருந்து தோன்றிய முதல் நான்கு ஞானிகளில் (மானச புத்திரர்களில்) சனத்குமாரரும் ஒருவர். ஏனைய மூவர் சனகர், சனாதனர், சனந்தனர் ஆவர். எப்போதுமே ஐந்த வயதுடைய குழந்தைப் பருவத் தோற்றத்துடன் இருக்கக்கூடிய இவர்கள், பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து மெய்ஞானம் பெற்ற ரிஷிகள் ஆவர்.

காஞ்சி  மஹாசுவாமிகள் (1894-1994) உரையில் சொல்வதாவது: ONLY SUMMARY IS GIVEN BELOW

பிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர். இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வபப்னம் வந்தது. ஸ்வப்பனத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.

விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ஸ்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.

“குழந்தை! நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்து ஆழ்ந்த பிடிமானத்தால், “அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?’ என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது” என்றார் பிரம்மா.

ஸனத்குமாரரிடம் பிரம்மா, “உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய். இந்த ஜன்மாவில் நீ, ‘தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்” என்றார்.

………………………..

ஸனத்குமாரர் அடுத்த ஜெனமாவில் பரமேசுவர தேஜஸாக ஜனித்து விடுவதென்றும், பிறகு அதை அம்பாள் சரவணம் என்ற தன் சரீரத்தில் தாங்கி ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்.

இதன்படியே பிற்பாடு ஈசுவரன் தன் நெற்றிக் கண்களிலிருந்து பொறிகளை வெளியிட்டார். ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர். அந்தத் தேஜசின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை.

அப்போது பிரம்மா அவளிடம், “இதைக் கொண்டுபோய் சரவணத்தில் சேர்த்துவிடு” என்றார்.

“……………………………..

ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. அதில் அவரே ஞான பண்டிதர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனானப்பட்ட நாரத மகரிஷி ஸனத்குமாரரிடம்தான் ஞானோபதேசத்துக்காக வருகிறார். ………..

‘இப்படியாக பகவான் ஸனத்குமாரர், இருள் கடந்த நிலையைக் காட்டினார். ‘அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்; அவருக்குத்தான் ஸ்கந்தன் என்ற பேர்’ என்று உபநிஷத்து இரண்டு தடவை முத்தாய்ப்பு வைக்கிறது.இருள் கடந்த ஒளி, ஞானாக்னி முருகன்தான். அதைத்தான் சாந்தோக்யம் சொல்கிறது.

TO BE CONTINUED…………….

TAGS- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 93; இந்து மத கலைச்சொல் அகராதி-93 , சனத் குமாரர் , ஏழரை நாட்டு சனி, சந்தியா வந்தனம்

Tamils Rewrite History: Purananuru wonders-48, Tamil Encyclopedia-88 (Post.16,055)

Written by London Swaminathan

Post No. 16,055

Date uploaded in London – 5 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Paripatal wonders

Purananuru wonders-48, Tamil Encyclopedia-88, One Thousand Interesting Facts -Part 88

Item 714 Poems on River and Hindu Gods

Tamils are nature lovers; they composed 26 long poems on River Vaigai of Madurai.

No where in the world we see such group of poems in one book, that too 2000 year old.

Paripatal – paripaatal- is one of the eight anthologies of Sangam literature. Like Sama Veda in Vedic literature this is the only anthology dealing with Tamil music. Out of the 70 poems we have got only 24 poems in full and nine more in fragments.

In the olden days we had

Eight poems on lord Vishnu

Thirty one poems on lord Murugan/ Skanda

One poem on Goddess Durga

Twenty six on river Vaigai and

Four on Madurai city.

***

Item 715 Poets Names in Sanskrit

Another wonder is Paripatal genre has pome running up to 400 lines.

Some half baked people considered it as late production because lot of poems are in praise of Hindu Gods.; they are proved wrong because Maruthan Ilanagan of Purananuru  praised Paripatal poet Nallanthuvanar (in Akam.59) which shows Nallanthuvan  was his contemporary or an earlier poet.

This book is about Pandya country. That is another specialty; all other Sangam books deal with the entire Tamil  Nadu.

We have at least 13 poets giving us 2050 lines.

Interesting point is poets have names like KESAVA and ACHYUTHA; and in Purananuru we have DAMODARA, KANNAN/Krishnan, VALMIKI etc.

It shows that there was no taboo in using Sanskrit names.

Another wonder is poets with Vaishnavite names praised Saivite gods.

***

Item 716 Balarama

In the modern days Krishna’s brother Balarama is not worshiped in big temples; but during Sangam age he was praised along with Krishna  his skin colour, his flag, plough on his shoulder, wearing ear stud in only one ear etc are described by poet  in the first poem.

This shows that Sangam age Tamils were great Hindus who have mastered all Sanskrit texts.

***

Item 717 — 1000 headed snake

If we go to Vishnu temples we can see five headed, seven headed and many headed snakes as the bed of Vishnu. We know all these are symbolic; but thuis is sung by Sangam age poets ; see poem 1.

We come across five headed snake even in Purananuru verse 37. That is the symbol of five senses.

***

Item 718 — seven types of catastrophes.

Paripatal poem two has very interesting information about seven types of catastrophes.

They believed that the apocalypse will have destructions from sky, fire, sea, earth quakes etc

***

Item 719 Vishnu avataras

Verse three described Avataras of Vishnu such as Annam/swan, Varaham/boar, Krishna .

Five planets are mentioned; 33 gods are listed.

Upanishad is also mentioned.

Four colours are attributed to Vasudeva, Sankarshana, Pradyumna and Aniruddha

***

Item 720

Paripatal poem 4, adds Narasimha avatar compared the sun, moon sky earth, wind rain, flower etc to Vishnu.

One would be reminded of Vibhuti yoga of Bhagavad Gita.

***

Item 721 puranic stories

Great tamil scholar U Ve Sa has listed the puranic episodes mentioned in Paripatal, which shows Tamils were thorough with Hindu puranas 2000 years ago.

Following are some of the episodes,

Ahalya becoming stone;

Devas getting Amrit;

Demons jumped and hid themselves in sea;

Vishnu becoming swan and stopping rain;

Indra guarding the Himalayas;

Indra being cursed;

Siva burning tri pura’ three hanging space stations;

Urvasi becoming horse;

Churning the milky ocean;

Garuda recuing Vinata;

Vishnu controlling arrogant Garuda;

Birth of divine medicine men;

Brahma sending Ganges river to earth.

***

Item 722 forty types of ornaments

Tamil scholar U Ve Sa listed over forty ornaments worn by Sangam age Tamils as found in Paripatal.

They were worn from head to foot.

All the statues from second century BCE show them to us; so it is not in exaggeration. No where in the world we see such head to foot ornaments.

***

Item 723 Rewrite History

Half baked foreign scholars (???) took the latest addition or interpolation from ancient Hindu books and gave the wrong dates.

They dated all Puranas in Gupta period or later.

Sangam Tamil Books exposed those idiots; all the Purana stories about Lord Vishnu, Lord Siva and Lord Skanda are in 2000 year old Sangam Tamil poems.

  Kumaragupta I (c. 415–455 CE): Preserved peace and founded Nalanda University.

  Skandagupta (c. 455–467 CE): Repelled early invasions by the Hunas (White Huns), straining imperial resources.

Kumara and Skanda for Lord Murugan is in Kalidasa’s books Meghaduta, Raghuvamsam and Kumarasambhavam.

Both these naes for Lord Muruga are in Paripatal and Tirumurugatruppadai, two Sangam books on Hindu Gods.

Gupta , who were Vishnu worshippers named their children after Lord Muruga/Skanda.

Even Asvaghosha stole Kalidasa’s names and compared Skanda with Buddha!!!!!!!

All the Sangam poems on Muruga/Skanda show Kalidasa lived before Sangam Age and influenced Gupta Dynasty, Asvaghosa and Sangam Poets.

Sangam Poems and Kalidasa works made two great Gupta Kings.

If we believe foreign idiots , then we will have to date all Sangam poems after Gupta period.

Sangam Age Tamils were well versed in all Puranic stories.

Yaudheya kings issued punch marked coins with Six Headed Muruga! Kalidasa and Sangam poems mentioned Six Headed Skanda=Muruga

***

Item 724

Murugan=Skanda names in Tamil:

Seyon – red coloured – in Tolkappiyam.

Son of Siva – pari. 9-6/7;

Red coloured like sun, six heads- Tirumurugu. Lines 1-11 and 77-125;

Looking like fire and coral – Pari.19-97/100;

His pearl garland looked liked the v shaped flight of migratory birds – Akam120;

Lord Muruga = Skanda had an elephant named Pinimukham as vahana – Kuru.1; Puram-56; Pathitr.11-16;

Pari .5-2, 17-44, 21-1; Murugu.78-82.

Peacock as his vahana is in many places.

His weapon Vel= spear is in innumerable poems.

All these are in Skaandam in Sanskrit Kandapuranam in tamil.

So purana dating is wrong.

***

Item 725 destroying demons

Kumarasambhava of Kalidasa made it very clear that incarnation of Muruga appeared to destroy demons.

They are called Tarakasura, Surapadma etc.

Again it is in a number of poems- Kuru.1;  Murugu.59-60; Pari.1-25; 5-7;

Puram. 23-3; Pathit-11-56; Perumpa- 456-460; many poems in Kalittokai.

***

Item 726 breaking Krauncha hill

Krauncha is the migratory bird that uses a Himalayan pass to enter India from China and Russia.

This Himalayan pass is linked with lord Murugan= Skanda in tamil and Sanskrit.

This also proves foreigners dating of Kalidasa and puranas wrong.

Breaking open Krauncha / Kuruku in tamil – Murugu.266; pari.8-29, 19-26, 19-102/103.

Geologists to do more research to find out whether any earth quake caused it. Tamil and Sanskrit literature shows clearly Muruga= Skanda did this with his vel/spear.

***

Item 727 Jambhudwipa in Tamil

Brahmins use the Jambhudwipa geography very often in their Sankalpa and priests use it almost every day whenever, wherever they do puja or any religious ceremonies.

Hindus are great historians and geographers and so they always begin any ceremony by announcing where and when they do it.

No culture in the world had this custom.

The great land mass of asia is called Jambhudwipa. Jambhu is the name of the blackberry trees of India. In tamil it is called naaval.

And so Tamils called india Naavalam  Tivu.

It is in Paripatal 5-8/10.

This shows that tamil never lacked behind their counterparts in the north.

Following references are found in Tamil about the tree and the Land of Jhambu tress (Jambudwipa): Paripatal 5-8,9 ,Puram 397, 177-11 ,Perum 465 ,Malai 135, Akam 380, Narr 35-2, Thiru 18, Post Sangam Literature: Mani 25—2—12/16, Silambu 17-15

KALIDAS: Megha 19 talks about the Jambu forests. Ragu 18—44 refers to Jhambu land.

Later Tamil poets such as Appar  (in marmaatrah thiruth thandakam) use this more times in their poems.

To be continued……………………

Tags– Jambhudwipa, Krauncha Hill, Muruga, Skanda, Kumara Gupta, Skanda Gupta, Date of Puranas, of Kalidasa, Paripatal wonders, Tamils Rewrite History: Purananuru wonders-48, Tamil Encyclopedia-88 , Item 727

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 88; இந்து மத கலைச்சொல் அகராதி-88 (Post.16,028)

Written by London Swaminathan

Post No. 16,028

Date uploaded in London – 28 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Words beginning with letter “S”

Sabha – assembly ; used in Rig Veda and Sangam Tamil literature.In Tamil it becomes Avai, because Tamil Grammar said no word should begin with SA. But nowadays used verywhere. Indian parliament has two chambers

Lok Sabha

Rajya Sabha

***

Sachi- Wife of Indra; another name Indrani; she is in the oldest book Rig Veda.

***

Sadhyas – saadhyaas

 A class or gana of inferior deities. They are the personified rites and prayers of he Vedas who dwell with the gods or  in the intermediate region between heaven and earth.Their number is 12 according one authority and 17 according to another. Puranas make them sons of Dharma and Sadhya (saadhyaas) , daughter of Daksha.

***

Sagara

Sea is called Saagara in Sanskrit because they were dug by the Sagaras.

Sagara was a king of Ayodhya and son of King Bahu, who was driven out of the country by the Haihayas. Bahu took refuge in the forest with his two wives. One of them was pregnant. Rival wife gave her a drug to prevent her delivery and hence the birth of the baby was delayed. In the meantime, Bahu died and she wanted to die with him in the pyre. But sage Aurva prevented her and told her that she would get a baby soon who will be a great king. And the baby was named Sagara. When he grew up, he vowed to eliminate the Haihayas and regain the lost kingdom. He defeated Yavanas and other foreign tribes and made them to shave off their hair fully or partly. Sagara married two wives Sumati and Kesini. Asamanja was born to Kesini and Sumati gave birth to 60,000 sons (In Sanskrit 60,000 is a phrase which mean s a lot). When Sagara did Ashvamedha Yaga, the horse disappeared; Sagara’s sons dug earth and found the horse in the Patala Loka (under earth) and meditating sage Kapila was near the horse. Thinking that he stole the horse the sons of Sagara threatened him. When Kapila opened his eyes, the sons were burnt to ashes. Asamanja’s son Anumat came to Kapila and begged him to send the dead ones to heaven. Then Kapila said that it will be done when The Ganges River flowed over the ashes. Anumat’s son was Dilipa and his son was Bhagiratha who brought Ganges from heaven to earth. The Holy River washed away the ashes of Sagaras. The water filled the Bay of Bengal and other seas. Then sea was called Saagara and the Ganga River was called Bhagirathi to honour Bhagiratha.

***

Sahadeva

One of the Five Pandava brothers; born to Madri with his twin Nakula. Both are considered sons of Vedic Twins Aswin brothers. Sahadeva, the youngest of the five was an expert in Astronomy.

***

Sairindhri- Sairindhri is Draupadi, the wife of the Pandavas, for whose sake the Kicakas have been slain, and she is disguised in Virata’s court.

During the thirteenth year of forest life, that is incognito period, Draupadi assumed this name and worked in Vrata’s court.

***

Saka dwipa

One of the seven islands of Puranic cosmology

The Maga Brahmins who came from Iran are associated with Saka Dwipa.

The identification is confusing ; some link them to Saka Tree area and others associate them to Saka Tribe.( Scythian) tribes of Central Asia.

***

Saka era

The Saka era is a historical calendar year-counting system starting in 78 CE, widely used across India and Southeast Asia and adopted as the Indian National Calendar in 1957

***

Sakalya and Saktayana

Ancient Grammarians ; Both lived before Panini and Yaska, the etymologist.

***

Sakas

Foreign tribes identified with Yavanas or Scythians. King Sagara conquered them.

***

Sakha-saakhaa- branch. Vedic recensions are called Sakhas . RSS gatherings are also called Sakhas/ branches.

***

Sakra – another name of Indra.

***

Sakti- Goddess; general meaning Power. Called by many names such as Gnana Sakti, Para Sakti, Kriya Sakti etc; also name of Vaishtha’s son.

***

Sakuni

Brother of Quuen Gandhari; he was an expert in gambling; he knew the cheating techniques in the game and defeated the Pandavas. They were driven out of the country and they spent 13 years in the forest.

To be continued………….

Tags- Sakuni, Sabha, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 88; இந்து மத கலைச்சொல் அகராதி-88

Important Upanishad Mantras in Sanskrit with meaning in English-11 (Post.16,022)

Written by London Swaminathan

Post No. 16,022

Date uploaded in London – 27 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

61

यस्मात्परं नापरमस्ति किंचिद्यस्मान्नणीयो न ज्यायोऽस्ति कश्चित्‌।
वृक्ष इव स्तब्धो दिवि तिष्ठत्येकस्तेनेदं पूर्णं पुरुषेण सर्वम्‌॥

yasmātparaṁ nāparamasti kiṁcidyasmānnaṇīyo na jyāyo’sti kaścit |
vṛkṣa iva stabdho divi tiṣṭhatyekastenedaṁ pūrṇaṁ puruṣeṇa sarvam ||श्वेताश्वतरोपनिषद्

There is naught higher than or different from Him; naught greater or more minute than Him. Rooted in His own glory He stands like a tree, one without a second and immovable. By that Being the whole universe is filled. श्वेताश्वतरोपनिषद्

***

62

Verse 2.4.5:

स होवाच: न वा अरे पत्युः कामाय पतिः प्रियो भवति, आत्मनस्तु कामाय पतिः प्रियो भवति । न वा अरे जायायै कामाय जाया प्रिया भवति, आत्मनस्तु कामाय जाया प्रिया भवति । न वा अरे पूत्राणां कामाय पुत्राः प्रिया भवन्ति, आत्मनस्तु कामाय पुत्राः प्रिया भवन्ति । न वा अरे वित्तस्य कामाय वित्तं प्रियं भवति, आत्मनस्तु कामाय वित्तं प्रियं भवति । न वा अरे ब्रह्मणः कामाय ब्रह्म प्रियं भवति, आत्मनस्तु कामाय ब्रह्म प्रियं भवति । न वा अरे क्षत्रस्य कामाय क्षत्रं प्रियं भवति, आत्मनस्तु कामाय क्षत्रं प्रियं भवति । न वा अरे लोकानां कामाय लोकाः प्रिया भवन्ति, आत्मनस्तु कामाय लोकाः प्रिया भवन्ति । न वा अरे देवानां कामाय देवाः प्रिया भवन्ति, आत्मनस्तु कामाय देवाः प्रिया भवन्ति । न वा अरे भूतानां कामाय भूतानि प्रियाणि भवन्ति, आत्मनस्तु कामाय भूतानि प्रियाणि भवन्ति । न वा अरे सर्वस्य कामाय सर्वं प्रियं भवति, आत्मनस्तु कामाय सर्वं प्रियं भवति । आत्मा वा अरे द्रष्टव्यः श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यो मैत्रेयि, आत्मनो वा अरे दर्शनेन श्रवणेन मत्या विज्ञानेनेदं सर्वं विदितम् ॥ ५ ॥

sa hovāca: na vā are patyuḥ kāmāya patiḥ priyo bhavati, ātmanastu kāmāya patiḥ priyo bhavati | na vā are jāyāyai kāmāya jāyā priyā bhavati, ātmanastu kāmāya jāyā priyā bhavati | na vā are pūtrāṇāṃ kāmāya putrāḥ priyā bhavanti, ātmanastu kāmāya putrāḥ priyā bhavanti | na vā are vittasya kāmāya vittaṃ priyaṃ bhavati, ātmanastu kāmāya vittaṃ priyaṃ bhavati | na vā are brahmaṇaḥ kāmāya brahma priyaṃ bhavati, ātmanastu kāmāya brahma priyaṃ bhavati | na vā are kṣatrasya kāmāya kṣatraṃ priyaṃ bhavati, ātmanastu kāmāya kṣatraṃ priyaṃ bhavati | na vā are lokānāṃ kāmāya lokāḥ priyā bhavanti, ātmanastu kāmāya lokāḥ priyā bhavanti | na vā are devānāṃ kāmāya devāḥ priyā bhavanti, ātmanastu kāmāya devāḥ priyā bhavanti | na vā are bhūtānāṃ kāmāya bhūtāni priyāṇi bhavanti, ātmanastu kāmāya bhūtāni priyāṇi bhavanti | na vā are sarvasya kāmāya sarvaṃ priyaṃ bhavati, ātmanastu kāmāya sarvaṃ priyaṃ bhavati | ātmā vā are draṣṭavyaḥ śrotavyo mantavyo nididhyāsitavyo maitreyi, ātmano vā are darśanena śravaṇena matyā vijñānenedaṃ sarvaṃ viditam || 5 |

The Maitreyi-Yajnavalkya conversation is a profound ancient dialogue from the The Brihadaranyaka Upanishad – Chapter II where Sage Yajnavalkya teaches his wife Maitreyi about wealth, love, the nature of the true Self (Atman), and how to attain immortality. 

5. He said: It is not for the sake of the husband, my dear, that he is loved, but for one’s own sake that he is loved. It is not for the sake of the wife, my dear, that she is loved, but for one’s own sake that she is loved. It is not for the sake of the sons, my dear, that they are loved, but for one’s own sake that they are loved. It is not for the sake of wealth, my dear, that it is loved, but for one’s own sake that it is loved. It is not for the sake of the Brāhmaṇa, my dear, that he is loved, but for one’s own sake that he is loved. It is not for the sake of the Kṣatriya, my dear, that he is loved, but for one’s own sake that he is loved. It is not for the sake of the worlds, my dear, that they are loved, but for one’s own sake that they are loved. It is not for the sake of the gods, my dear, that they are loved, but for one’s own sake that they are loved. It is not for the sake of the beings, my -dear, that they are loved, but for one’s own sake that they are loved. It is not for the sake of all, my dear, that all is loved, but for one’s own sake that it is loved. The Self, my dear Maitreyī, should be realised—should be heard of, reflected on and meditated upon. By the realisation of the Self, my dear, through hearing, reflection and meditation, all this is known.

Brihadaranyaka Upanishad (2.4.5)

***

63

नान्त: प्रजम् न बहि:प्रजम् नभोयत:प्रजम्, न प्रजानघनम्, न प्रजम् नाप्रजम् !

अट्रुष्टमव्यवहार्यम् अलक्षण-मचित्यम्-मव्यपतेश्य-मेकात्म-पोरत्ययसारम्- प्रपन्ज्चोपशमम्

शन्तम् शिव-मद्वैदम् चतुरथम् मन्यन्ते स आत्मा स विजेय !!- Mundakopanishad

nāntaḥprajñaṁ na bahiṣprajñaṁ nobhayataḥprajñaṁ na prajñānaghanaṁ na prajñaṁ nāprajñam|
adṛṣṭamavyavahāryamagrāhyamalakṣaṇamacintyamavyapadeśyamekātmapratyayasāraṁ prapañcopaśamaṁ śāntaṁ śivamadvaitaṁ caturthaṁ manyante sa ātmā sa vijñeyaḥ ||

He who is neither inward wise, nor outward wise, nor both inward and outward wise, nor wisdom self gathered, nor possessed of wisdom, nor unpossessed of wisdom, He Who is unseen and incommunicable, unseizable, featureless, unthinkable, and unnameable,Whose essentiality is awareness of the Self in its single existence, in Whom all phenomena dissolve, Who is Calm, Who is Good, Who is the One than Whom there is no other, Him they deem the fourth; He is the Self, He is the object of Knowledge.

***

64

सर्वे वेदा यत्पदमामनन्ति तपासि सर्वाणि  यद्वदन्ति |

यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पद सङ्ग्रहेण ब्रवीम्योमित्येतत् ||

sarve vedā yatpadamāmananti tapāṁsi sarvāṇi ca yadvadanti |

yadicchanto brahmacaryaṁ caranti tatte padaṁ saṁgraheṇa bravīmyomityetat ||

All the Vedas talk about which goal, to know which, people take to a life of study and spiritual discipline, I tell you in brief – that is om.

***

65

हिरण्मयेन पात्रेण सत्यस्यापिहितं मुखम् ।

तत्त्वं पूषन्नपावृणु सत्यधर्माय दृष्टये ॥१५॥

hirāṇmayena pātreṇa satyasyāpihitaṁ mukham |

tat tvaṁ pushann apāvṛṇu satya-dharmāya dṛṣṭaye || Ishavasya Upanishad Part 16, Mantra 15

The threshold of reality is veiled by golden light

Reveal it oh lord, for my dharma is to know the truth

-Isha Upanishad

—Subham-

Important Upanishad Mantras in Sanskrit with meaning in English-11

Important Upanishad Mantras in English and Sanskrit with Meaning- 10 (Post.16,008)

Written by London Swaminathan

Post No. 16,008

Date uploaded in London – 23 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 10

Mantra 56

सत्येन लभ्यस्तपसा ह्येष आत्मा सम्यग्ज्ञानेन ब्रह्मचर्येण नित्यम् ।

अन्तःशरीरे ज्योतिर्मयो हि शुभ्रो यं पश्यन्ति यतयः क्षीणदोषाः ॥ ५ ॥

Satyena labhyastapaso hyeṣa ātmā samyag-jñānena brahmacaryeṇa nityam |

antaḥ-śarīre jyotirmayo hi śubhro yaṃ paśyanti yatayaḥ kṣīṇa-doṣāḥ || Mundaka Upanishad (Chapter 3, Verse 1.5).

  • Satyena: By truthfulness. Not just theoretical truth, but strict alignment with reality and integrity in thought, word, and deed.
  • Labhyaḥ: Attainable / obtainable.
  • Tapasā: By austerity, intense focus, and self-discipline.
  • Eṣa Ātmā: This Supreme Self.
  • Samyag-jñānena: By correct, discriminative knowledge of reality.
  • Brahmacaryeṇa: By celibacy, continence, and controlled senses.
  • Antaḥ-śarīre: Within the body.
  • Jyotirmayo: Full of light, resplendent.
  • Śubhraḥ: Pure and untainted.
  • Yaṃ paśyanti yatayaḥ kṣīṇa-doṣāḥ: Whom the ascetics (yatayah), whose impurities have been destroyed (kshina-dosha), realize and behold. Mundaka Upanishad (Chapter 3, Verse 1.5).

***

57

यथोदकं शुद्धे शुद्धमासिक्तं तादृगेव भवति |एवं मुनेर्विजानत आत्मा भवति गौतम || १५ || Katha Upanishad Chapter 2, Section 1, Verse 15.

 yathōdakaṃ śuddhē śuddhamāsiktaṃ tādṛgēva bhavati |ēvaṃ munērvijānata ātmā bhavati gautama || 15 ||

“Just as pure water poured into pure water becomes the very same, so too, O Gautama [Nachiketa], does the Self of the wise sage who knows this become identical with the Supreme Self.

***

58

वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः संन्यासयोगाद् यतयः शुद्धसत्त्वाः ।

ते ब्रह्मलोकेषु परान्तकाले परामृताः परिमुच्यन्ति सर्वे ॥ ६॥ Mundakopanishad 3-2-6

vedāntavijñānasuniścitārthāḥ saṁnyāsayogādayatayaḥ śuddhasattvāḥ |

te brahmalokeṣu parāntakāle parāmṛtāḥ parimucyanti sarve || 6 || Mundakopanishad 3-2-6

Vedanta-vijnana-sunishcitarthah: Those who have thoroughly and undoubtedly understood the profound wisdom (Vijnana) of Vedanta.

Sannyasa-yogad: Those who have embraced renunciation and spiritual discipline.

Yatayah suddha-sattvah: Seekers of purified minds who continuously exert themselves on the path of truth.

Parantakale: At the time of the great end (at the time of death, when physical constraints are destroyed).

Paramrtah parimucyanti sarve: They become truly immortal (Paramrta) and are entirely liberated (Parimucyanti) in the realm of Brahman.

This verse describes the ultimate spiritual goal of a Jnani (a realized being). It emphasizes that true liberation is not merely an external journey, but an inward realization of one’s immortal nature.

***

59.

न चक्षुषा गृह्यते नापि वाचा नान्यैर्देवैस्तपसा कर्मण वा ।
ज्ञानप्रसादेन विशुद्धसत्त्वस्ततस्तु तं पश्यते निष्कलं ध्यायमानः ॥ ८ ॥

Mundaka Upanishad 3.1.8

na cakṣuṣā gṛhyate nāpi vācā nānyairdevaistapasā karmaṇa vā |
jñānaprasādena viśuddhasattvastatastu taṃ paśyate niṣkalaṃ dhyāyamānaḥ || 3-1-8 ||

8. He is not grasped by the eye; nor by speech; nor by other senses; nor by tapas; nor by karma; when one’s mind is purified by the clearness of knowledge, then alone he sees the indivisible (Brahman) by contemplation. Mundaka Upanishad 3.1.8

***

60

Atmanam rathinam viddhi shareeram rathameva tu,

Buddhim tu sarathim viddhi manaha pragrahameva tu.

Indriyani hayanyahur vishayansteshu gocharan, Katha Upanishad (1.3.3)

The atman is Ratha – the body,

The intellect is the Sarathi – driver,

The mind is the rein,

The senses are the horses, and

The Panch Vishayas – material objects of the five senses – are

the fields of pasture for the horses.

आत्मनं रथिनं विद्धि शरीरं रथमेव तु ।
बुद्धिं तु सारथिं विद्धि मनः प्रग्रहमेव च ॥

Ātmānaṁ rathinaṁ viddhi śarīraṁ rathameva tu |
Buddhiṁ tu sārathiṁ viddhi manaḥ pragrahamevaca || 

The verse equates the human system to a chariot, identifying each component’s spiritual role:

  • आत्मनं (Ātmānam): The Atman (the Self or Soul) is the owner or rider of the chariot.
  • शरीरम् (Śarīram): The Body is the chariot itself.
  • बुद्धिम् (Buddhi): Intellect is the charioteer (driver) who must guide the journey.
  • मनः (Manaḥ): The Mind is the reigns (used by the driver to steer).
  • इन्द्रियाणि (Indriyāni): The Senses are the five horses that pull the chariot. 

इन्द्रियाणि हयानाहुर्विषयाँ स्तेषु गोचरान् ।

आत्मेन्द्रियमनोयुक्तं भोक्तेत्याहुर्मनीषिणः ॥ ४ ॥

indriyāṇi hayānāhurviṣayām̐ steṣu gocarān |

ātmendriyamanoyuktaṃ bhoktetyāhurmanīṣiṇaḥ || 4 || Katha Upanishad (1.3.4)

इन्द्रियाणि (Indriyāṇi): The senses (eyes, ears, etc.).हयान् (Hayān): Horses.आहुः (Āhuḥ): [They] call / say.विषयान् (Viṣayān): The sense-objects.तेषु (Teṣu): On them.गोचरान् (Gocarān): Roads / paths of movement.आत्मेन्द्रियमनोयुक्तम् (Ātmendriyamanoyuktaṃ): The Atman (Self) combined with the senses and the mind.भोक्ता (Bhoktā): The enjoyer.इति (Iti): Thus.मनीषिणः (Manīṣiṇaḥ): The wise ones.

The wise declare that the sense organs (the eyes, ears, etc.) are the horses, and the objects of those senses are the paths they travel. When the Supreme Self (Atman) is connected with the body, the senses, and the mind, the wise call It the “enjoyer” or experiencer of the world.

TO BE CONTINUED……………………….

TAGS- Part 10, important Upanishad mantras

ராமாயணத்தில் வரங்கள் 65  – இந்திரன் ஹனுமாருக்கு வரம் அளித்தது! (Post.15,994)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,994

Date uploaded in London – 19 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் 65  – இந்திரன் ஹனுமாருக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் முப்பத்தாறாவது ஸர்க்கமாக அமைவது ‘ஹனுமார் வரம் பெற்றுக் கொள்வது’ என்னும் ஸர்க்கமாகும்.

ஶ்ரீ ராமர் அகத்திய முனிவரிடம் ஹனுமாரின் வரலாறைச் சொல்லுமாறு கேட்க அவர் ஹனுமாருக்கு இந்திரன் வரம் கொடுத்ததையும் கூறுகிறார்.

பிரம்மாவால் ஸ்பரிசக்கப்பட்டு ஜீவனைப் பெற்ற ஹனுமாரைப் பார்த்த வாயுதேவன் முன் போல சஞ்சரிக்கலானார். அனைத்து உயிர்களும் மகிழ்ந்தன.

வாயுதேவனை இன்னும் மகிழ்ச்சியுறச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் பிரம்மா தேவதைகளை நோக்கி இப்படிச் சொல்லலானார்:

“இந்த சிசுவால் உங்களுக்கு ஆக வேண்டியதாயிருக்கிற ஒரு பெரும் காரியம் உண்டாகப் போகிறது. ஆதலால் எல்லோரும் இந்த வாயுவின் ப்ரீதி நிமித்தம் வரங்களை விதியுங்கள்” (ததத்வதத்வம் வரானசர்வே மாருதஸ்யாஸ்ய துஷ்டயே – உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 9)

தத: சஹஸ்ரநயன: ப்ரீதியுக்த: ஷுபானன: |                            குஷேஷயமர்யீ மாலாமுத்க்ஷிப்யேதம் வசோப்ரவீத் ||                  

                         (உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 10)

தத: – அதன் மேல்                                                 ஷுபானன: – அழகான முகமுடைய                                            சஹஸ்ரநயன: – ஆயிரக் கண்ணன்  (இந்திரன்)                                ப்ரீதியுக்த: – அன்பு கூர்ந்தவராய்                                      குஷேஷயமர்யீ – பொற்றாமரை                                             மாலாம் – மாலையை                                                     உத்க்ஷிப்ய – கழற்றிக் கையிலெடுத்துக் கொண்டு                                    இதம் – பின்வரும்                                                              வச: – ஆக்கினையை                                                அப்ரவீத் – நியமித்தருளினார்

மத்கரோத்ச்ருஷ்ட வஜ்ரேண ஹனுரஸ்ய யயா ஹத: |                     நாம்னா வை கபிஷார்தூலோ பவிதா ஹனுமானிதி ||   

                         (உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 11)

கபிஷார்தூல – வானரோத்தமன்                                      அஸ்ய – இவனது                                                            ஹனு; – தாடை                                                             மத்கரோ ச்ருஷ்ட வஜ்ரேண – என் கையினின்று வீழ்ந்த வஜ்ராயுதத்தால்  ஹத: – அடியுண்டது                                                   யதா – என்னும் காரணத்தால்                                            ஹனுமான் – ஹனுமான்                                               இதி – என்கிற                                                                  நாம்னா வை – பெயராலேயே                                                  பவிதா – விளங்கட்டும்

அஹமஸ்ய ப்ரதாஸ்யாமி பரமம் வரமத்புதம் |                          இத: ப்ரப்ருதி வஜ்ரஸ்ய மமாவத்யோ பவிஷ்யதி ||                           

                    (உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 12)

அஸ்ய – இவனுக்கு                                                                   அஹம் – நான்                                                                      அத்புதம் – அற்புதமும்                                                 பரமம் – ச்ரேஷ்டமுமான                                                     வரம் – ஒரு வரத்தை                                                 ப்ரதாஸ்யாமி – கொடுக்கிறேன்                                            இத ப்ரப்ருதி – இது முதல்                                                மம – எனது                                                              வஜ்ரஸ்ய – வஜ்ராயுதத்தினால்                                                  அவத்ய – கொல்ல முடியாதவனாக                                  பவிஷ்யதி – விளங்குவான்

இப்படியாக இந்திரன் குழந்தைக்கு ஹனுமான் என்ற பெயரை அளித்ததோடு தனது வஜ்ராயுதத்தால் கூட அழிக்க முடியாதபடி விளங்குவான் என்று வரத்தை அளிக்கிறார்.

இந்த வரம் கேட்காமல் இந்திரனே மனம் மகிழ்ந்து தந்த வரமாகும்.

**

Important Upanishad Mantras in English and Sanskrit with Meaning- 9 (Post No.15,987)

Written by London Swaminathan

Post No. 15,987

Date uploaded in London – 16 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part -9

51

श्वोभावा मर्त्यस्य यदन्तकैतत्सर्वेंद्रियाणां जरयंति तेजः ।
अपि सर्वं जीवितमल्पमेव तवैव वाहास्तव नृत्यगीते ॥ २६ ॥

śvobhāvā martyasya yadantakaitatsarveṃdriyāṇāṃ jarayaṃti tejaḥ |
api sarvaṃ jīvitamalpameva tavaiva vāhāstava nṛtyagīte || 26 ||Verse 1.1.26 Katha-Upanishad

26. (Nachiketas says) Ephemeral these; Oh Death, these tend to the decay of the fire (vigour) of all the senses in man. Even the longest life is, indeed, short. Thine alone be the chariots, the dance and music. Verse 1.1.26 Katha-Upanishad

52

परीक्ष्य लोकान्कर्मचितान्ब्राह्मणो निर्वेदमायान्नास्त्यकृतः कृतेन ।
तद्विज्ञानार्थं स गुरुमेवाभिगच्छेत्समित्पाणिः श्रोत्रियं ब्रह्मनिष्ठम् ॥ १२ ॥

parīkṣya lokānkarmacitānbrāhmaṇo nirvedamāyānnāstyakṛtaḥ kṛtena |
tadvijñānārthaṃ sa gurumevābhigacchetsamitpāṇiḥ śrotriyaṃ brahmaniṣṭham || 12 ||Mundaka Upanishad 1.2.12

12. Let a Brahmin having examined the worlds produced by karma be free from desires, thinking, ‘there is nothing eternal produced by karma?; and in order to acquire the knowledge of the eternal, let him Samid (sacrificial fuel) in hand, approach a perceptor (preceptor?) alone, who is versed in the Vedas and centered in the Brahman.- Mundaka Upanishad 1.2.12

53

उद्गीतमैतत्परमं तु ब्रह्म
तस्मिंस्त्रयं स्वप्रतिष्ठाक्षरं च ।
अन्तरां ब्रह्मविदो विदित्वा
लीना ब्रह्मणि तत्परा योनिमुक्ताः ॥

udgītam etat paramaṃ tu brahma
tasmiṃs trayaṃ svapratiṣṭhākṣaraṃ ca /
atrāntaraṃ brahmavido viditvā
līnā brahmaṇi tatparā yonimuktāḥ //

–seventh verse of the first chapter of the Śvetāśvatara Upanishad.

This verse proclaims that the Supreme Brahman, untouched by phenomena, is the ultimate reality. It states that the triad of the enjoyer, the object, and the controller are established in this immutable, imperishable foundation. The sages who realize this essence become devoted to Brahman, merge into It, and are freed from the cycle of birth and rebirth.

54

संयुक्तमेतत् क्षरमक्षरं च व्यक्ताव्यक्तं भरते विश्वमीशः ।
अनीशश्चात्मा बध्यते भोक्तृभावाज्ज्ञात्वा देवं मुच्यते सर्वपाशैः ॥ ८॥

saMyuktametat kSharamakSharaM cha

      vyaktAvyaktaM bharate vishvamIshaH |

anIshashchAtmA badhyate bhoktR^i\-

      bhAvAj j~nAtvA devaM muchyate sarvapAshaiH || 8||Śvetāśvatara Upanishad 1-8

In Śvetāśvatara Upanishad 1-8, the text explains how the Supreme Lord sustains the universe—a combination of the perishable (the world) and the imperishable (the unmanifest). When an individual soul forgets this divine reality, it becomes bound by worldly pleasures, but realizing the Lord liberates it from all fetters.

Verse 8 is a cornerstone of Vedantic philosophy, outlining the fundamental triad of reality within the framework of Śaivism and general Vedanta:

  • The Perishable (Kṣara): The ever-changing, manifest material universe and gross bodies.
  • The Imperishable (Akṣara): The unmanifest cause of the universe and the subtle, internal bodies (like mind and ego).
  • The Lord (Īśa): The Supreme Self, the all-pervading Controller who supports both the manifest and the unmanifest.
  •  

The verse explains that the individual soul (Jīva), despite being fundamentally divine, loses its lordship and power over nature when it forgets the Supreme Lord. In this state of ignorance, the soul considers itself the “enjoyer” of worldly objects and binds itself to the cycle of karma.

However, when the soul awakens to the knowledge of the Supreme Divinity—recognizing that the Lord is the true substratum of all existence—its attachments fall away. By cutting these bonds (Pāśas), the soul achieves ultimate liberation (Moksha) and returns to its true, infinite nature

55

क्षारं प्रधानममृतं हरं क्षरात्मानावीशते देव एकः ।
तस्याभिध्यानाद्योजनात्तत्त्वभावाद्भूयश्चान्ते विश्वमायानिवृत्तिः ॥ १० ॥


kṣāraṃ pradhānamamṛtaṃ haraṃ kṣarātmānāvīśate deva ekaḥ |
tasyābhidhyānādyojanāttattvabhāvādbhūyaścānte viśvamāyānivṛttiz ||

Verse 10 of the first chapter of the Śvetāśvatara Upanishad states: “Matter is perishable; God is immortal and imperishable. Both perishable matter and the individual self are ruled by the Divine One. Through constant meditation on Him, uniting with Him, and reflecting upon His nature, all the illusions of the world ultimately cease.”

–subham—

Tags.  Important , Upanishad, mantras, Part -9