
Date: MARCH 27, 2018
Time uploaded in London- 5-56 am
Compiled by S NAGARAJAN
Post No. 4854
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
பாடல்கள் 476 முதல் 484
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்
பாரதி பத்துப்பாட்டு
நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி தொடர்கிறது.
மூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி
22 முதல் 30 வரை உள்ள பாடல்கள்
சக்தி எனுமோர் அரியநற் பாட்டில்
சக்தி எவையென பட்டிய லிட்டாய்
எக்க ணத்திலும் உரியநற் பண்பாய்
எண்ணத் திருந்திடும் எரியதே சக்தி
தக்க ததுவென தெளிவுறச் சொன்னாய்
தழல துவேசிவ சக்தியா மென்றாய்
இக்க ணத்தினில் அதையுணர் வோர்கள்
என்றும் வாழ்வினில் வெற்றியே காண்பார்
சக்தி விளக்கமென் றருளிய பாட்டில்
சாற்றும் மூர்த்திகள் மூவரென் றாலும்
தக்க தோர்மூலப் பெருவெளி யொன்றில்
தானே அவைகிளை விட்டன யென்றாய்
மிக்க அவ்வொளியே சக்தியென் றிட்டாய்
மேன்மை பெற்றிடப் போற்றிடச் சொன்னாய்
எக்க ணத்திலும் எதனிலும் என்னை
என்றும் நினைந்தவனை வாழ்த்தினேன் நின்னை
மகாசக்தி வெண்பா மனத்திற்கு யெந்தன்
மகாசக்தி யைக்கூறும் மாண்பால் – தகாதவற்றை
நீக்கி எனதருள் நீங்கா வகைகாட்டி
காக்கும் கவசமது காண்
போற்றி அகவலில் படைப்பு முதல்நாள்
ஆற்றும் செயல்கள் ஐந்தையும் உரைத்தாய்
உலகம் நானாய் ஒவ்வொரு பொருளிலும்
கலந்து நிறைந்ததும் கனிவுடன் பகர்ந்தாய்
ஆனால் இதுவரை ஆய்ந்த ஞானிகளும்
காணாக் குறிப்பினைக் காட்டலால் மகிழ்ந்தேன்
உயிரில் உயிரென உரைத்தாய் இயல்பே
உயிரது இறப்பினும் உளதென் றனையே
யோகியர் ஞானம் யாதென உன்போல்
யூகித்தோர் வரியில் உரைத்தவர் யாருளர்?
சைவசித் தாந்த சார மென்பாரே
நைவதின் றியுன்போல் நயம்பட உரைத்ததார்?
யானெனும் அகங்காரம் எனதெனும் மகங்காரம்
ஏனென விடுத்தவன் ஏற்புறு யோகியென்றாய்
நோக்கு மிடமெல்லாம் நின்னருள் ஞானம்
நீக்க மின்றி நிறைந்ததே வாழ்கநீ!
நாவுக்க ரசரின் அரங்க மாலை – என்றும்
நம்மங் கம்யாவும் இறைவ னுக்கே
மேவும்ப டியமைந் ததென்றே உரைக்கும் -அந்த
மேன்மைபோல்நீ வரைந்தாய் எனக்கும்
சக்திக்கு ஆத்ம சமர்ப்பணமாக – நீ
சாற்றியதோர் புதிய அங்க மாலை
எக்காலத் தையுமிங்கு வென்று வாழும் – அதுபோல்
எவர்வா ழினுமென் னருளும் மேவும்
கருணையின் வடிவமாய் சக்தியின் சொரூபமாய்
காண்பதில் நிறைவுகொள் ளாமல்
உருத்திர ஆங்காரக் காளியாய் எந்தனின்
ஊழிக்கூத் தினைப்பாட லுற்றாய்
ஒருமுறை அதையெவர் பாடினும் அங்குநான்
ஓங்காரக் காளியாய் வந்தே
பெருகிய வெறியுடன் நடம்புரி வேனதில்
பேரண்டம் குலுங்கிடும் அன்றோ?
காலவ னத்தினிலே – நானோர்
களிவண் டாமெனவே
சீலமு டன்சொன்ன – உவமையில்
சிந்தை குளிர்ந்ததடா
மாரியெ னைப்பணிந்தும் – மாந்தர்
மனம்வெளுக் காநிலையைக்
கூறிவ ருந்தினையே – அதிலுன்
குமுறலைக் கண்டேனடா
காணிநி லந்தனையே – தனக்குக்
கருத்துடன் கேட்டாலும்
பேணிஇவ் வையத்தைப் – பாட்டால்
பாலிக்க நினைத்தாயடா
பராசக்தி பார்வையில் பாரதி தொடரும்
தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி