புற்றுநோய்ச் சிகிச்சையில் பிளாட்டினம்; தங்கத்தை விட மதிப்பு மிக்கது! (Post.10,748)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,748

Date uploaded in London – –    15 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதுவரை 38 மூலகங்கள்/ தனிமங்கள் (CHEMICAL ELEMENTS) பற்றிய சுவையான செய்திகளைக் கண்டோம். இதோ தங்கத்தையும் விட  மதிப்பு உடைய  பிளாட்டினம் (PLATINUM) பற்றிய சுவையான செய்திகள்:–

உடலுக்கு பிளாட்டினம் தேவை என்று எந்த ஆராய்ச்சியும் காட்டவில்லை ; ஆனால் உடலுக்கு வரும் நோயையத் தடுக்கும் கருவிகளில் பிளாட்டினத்தின் பஃங்கு இன்றியமையையாதது ; இது வெள்ளி தங்கம் போன்ற ஒரு உலோகம் (metal) . ஆனால் அவற்றை விட மதிப்பும் விலையும் அதிகம்

புற்றுநோய்ச் (CANCER) சிகிச்சையில் பிளாட்டினம்:-

பிளாட்டினம், வெள்ளி போல பளபளக்கும்,  ஜொலி ஜொலிக்கும் ஒரு உலோகம். உலகில் அபூர்வமலாகக் கிடைக்கும் உலோகம் ; அது மட்டும் இதன் மதிப்பு உயரக் காரணம் அன்று. இதை காற்றோ, அமிலமோ, வேறு ரசாயனங்களோ எளிதில் (INERT) அரிக்க  முடியாது. ஆகையால் இந்த அபூர்வ குணத்தை புற்று நோய் சிகிச்சையில் பயன்படுத்துகிறார்கள். இந்த உலோகம் உள்ள மருந்து, புற்று நோய்  (Cancer) ‘செல்’லுக்குள் எளிதில் நுழையும்; ஆனால் அது பெருகுவதைத் தடுக்கும்  புற்று நோய்ச சிகிச்சையில் இதை பயன்படுத்துகிறார்கள்

புற்றுநோய் என்பது என்ன? செல்களின் தாறுமாறான வளர்ச்சி; அபரிமிதப் பெருக்கம். இவ்வாறு உடலில் ஒரு உறுப்பில் நிகழ்ந்தால் அது அந்த உறுப்பையே செயலற்றதாகச் செய்யும். அத்தோடு நில்லாமல், இதே செய்தியை உடலின் மற்ற செல்களுக்கும் அனுப்பிவிடும்; அப்போது அங்கும் புற்றுநோய் பரவும். இந்த நிலை ஏற்பட்டாமல் தடுக்க கீமோதெராபி (CHEMO THERAPY) எனப்படும் ரசாயன மருந்து சிகிச்சை கொடுக்கப்படும். அதில்தான் பிளாட்டினம் மிகவும் பயன்படுகிறது.

இதோ மேல் விவரம் ,

பிளாட்டினம் அடங்கிய ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவோருக்கு அலர்ஜி (Allergy) என்னும் ஒவ்வாமை ஏற்படலாம். இதன் பெயர் பிளாடினோசிஸ் (Platinosis). இது ஆஸ்த்மா, தடுமன் (cold) போன்ற அறிகுறிகளைக் காட்டும்.

1962-ம் ஆண்டு, பார்னெட் ரோசன்பர்க் (Barnett Rosenberg ) என்பவர் உயிரினங்களில் உள்ள ‘செல்’ கள் (CELLS)  மீது மின்காந்த மண்டலம் என்ன தாக்கத்தை ஏற்படும் என்று ஆராய்ந்து கொண்டு இருந்தார். மனிதர்கள் உள்பட எல்லா உயிரிங்களிலும் செல்கள் பிரிந்து, பிரிந்து பெருகிக்கொண்டே இருக்கும். அவர் ஆராய்ச்சியில் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார் ஈ கோலி (E. COLI = ESCHERICHIA  COLI) எனப்படும் பாக்டீரியாவில் மின்காந்த மண்டலம் (ELECTRO MAGNETIC FIELD)  பெரிய நூல் (filament) இழை போன்ற வளர்ச்சியைக் காட்டியது . செல்கள் வளர்ந்தாலும் அவை பிரியவில்லை . அதே விஷயத்தில் ரோசன்பர்க் 3 ஆண்டுகளுக்கு ஆராய்ச்சியை நீடித்தார்.அப்போது சில ரசாயனப் பொருட்களும் செல்கள் பிரிவதை, பெருகுவதைத் தடுக்கிறது என்று கண்டார். அதுதான் செல் பிரிவதைத் (CELL DIVISION)  தடுக்க உதவும் கீமோதெரபி உண்டாக உதவிய நிகழ்ச்சியாகும். 1978 முதல் இதை மனித நோயாளிகள் விஷயத்தில் பயன்படுத்த அனுமதி கிடைத்தது பின்னர் இதன் மூலம் பல்லாயிரக் கணக்காணோர் உயிர்பிழைத்தனர். குறிப்ப்பாக சிறுவர்கள் சிகிச்சையில் அதிக பலன் கிடைத்தது

பிளாட்டினம் மற்ற பொருட்களுடன் வேகமாக கிரியையில் ( INERT ) இறங்காது. இதனால் ரோசன்பர்க், பிளாட்டினத்தை ரசாயன சிகிச்சை முறையில் பயன்படுத்தினார். ஆனால் அதுவும் கூட குளோரைட் , அம்மோனியம் IONS அணுக்களுடன் சிறிது செயல்பாட்டில் இறங்கியது.இவற்றை எல்லாம் மனதிற்கொண்டு சிஸ்பிளாட்டின் CISPLATIN என்ற புற்றுநோய் சிகிச்சை மருந்து உருவாக்கப்பட்டது. அதன் விற்பனைப் பெயர் பிளாட்டினால் PLATINOL .

சிஸ் பிளாட்டின் போல வேறு சில பிளாட்டினம் சிகிச்சை மருந்துகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை புற்றுநோய் செல்களுக்குள் நுழைந்து அவற்றின் வளர்ச்சியை நிறுத்திவிடும்.. இது சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை செல்களிலும் பயன்படுகிறது . உடலுக்குள் செல்லும் எல்லா ரசாயனங்களும் வாந்தி எடுத்தல், சில உறுப்புகள் தற்காலிகமாக உணர்ச்சியை இழத்தல் முதலியவற்றை , அதாவது பக்க விளைவுகளை, உண்டாக்கத்தான் செய்கின்றன. அவற்றைத் தடுக்க வேறு சில மருந்துகளையும் சாப்பிடவேண்டிவரும். பெண்களின் ஜனன உறுப்புகளில் (Ovarian cancer) வரும் புற்றுநோயைத் தடுக்க கார்போ பிளாட்டின் (Carboplatin) உருவாக்கப்பட்டது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதனால் மேலும் மேலும் அதிக சக்தியுள்ள , குறைந்த பக்க விளைவுகள் உள்ள, மருந்துகள் கிடைக்கக் கூடும் . மொத்தத்தில் வாழ்நாளை நீடிக்கச் செய்து,  உயிர் இழப்புகளைத் தடுப்பதில் பிளாட்டினம் மருந்துகள் பேருதவி புரிந்து வருகின்றன.

கட்டுரையின் அடுத்த பகுதியில், பிளாட்டினத்தின் தொழில் முறை உபயோகங்களையும் பிளாட்டினம் நகை மீது பெண்களுக்குள்ள மோகத்தையும் காண்போம் .

–தொடரும் …………………

Tags-பிளாட்டினம், புற்றுநோய், மருந்து, சிஸ் பிளாட்டின்

400 ரிக் வேத ரிஷிகள் பட்டியல்-2 (Post No.10,747)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,747

Date uploaded in London – –    15 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேத கால புலவர்கள் 400 பேர் பட்டியல் தொடர்கிறது. நேற்று 47 பேரைக் கண்டோம்.

இரண்டாம் பகுதி

48.இட பார்கவ 10-171

இந்த்ர  1-165, 1-170, 4-18, 8-100, 10-28, 10-86

இந்த்ர முஸ்கவான் 10-38

இந்த்ர வைகுண்ட 10-48

இந்த்ர ப்ரமிதி வாசிஷ்ட 10-97

இந்த்ராணி 10-86, 10-145

இரும்பிடி கா ண்வ 8-16 -18

இ ச ஆத்ரேய 5-7, 8

இத்ம வாக தார்த்தச் யுத  9-26

உசத்ய ஆங்கிரஸ 9-50-52

உத்கீல காத்ய 3-15-16

உபமன்யு வாசிஷ்ட 9-97,

உபஸ்ருத வார்ஸ் த்திஹவ்ய 10-115

உருக்சய ஆமஹியாவ 10-118

உருசக்ய  ஆத்ரேய 5-69/70

ஊர்வசி 10-95

உல வாதாயான 10-186

உசன காவ்ய 8-84, 9-87/89

ஊரு ஆங்கீரஸ 9-108

ஊர்த்வ க்ருசண யாமாயண 10-144

ஊர்த்வ க்ராவா ஆற்புதி  10-175

ஊர்த்வ நாப ப்ரஹ்ம 10-109

ஊர்த்வச த்மா ஆங்கீரஸ 10-108

ரிஜ்ஸ்வா  பாரத்வாஜ 6-49/52, 9-98, 9-108,

ர்ஜ் ராஸ் வ  வார்சாகிர 1-100

73- ர்ணாஞ்சய 9-108

So far 73 poets covered

ர்ஷப  வைராஜ 10-166

ர்ஷப வைஸ் வாமித்ர 3-13/14; 10-166

ர்ஷப சக்வர 10-166

ர் ஷ்ய ஸ்ருங்க வாதரஸன 10-136/7

ஏக தாயு நவ் தச 8-80

ஏடச வாதரஸன 10-136

ஏவயாமருத் ஆத்ரேய 5-87

கக்ஷிவான் தை ர்க தமஸ 1-116/125; 1-16; 9-74

கண் வ கௌர 1-36, 1-43, 9-94

கத  வைச்வாமித்ர 3-17/18

கபோத நைர் த  10-165

கரிக்கரத  வாதரஸன  10-136

கர்ணஸ்ருத வாசிஷ்ட 9-27

கலி ப்ராகாத 8-66

கவச ஐலுச 10-30/34

கவி பார்கவ 9-47/49, 75/79

காஸ்யப மாரீச 1-99; 8-29; 9-64, 67, 91/92; 9-113/114; 10-137

குத்ச ஆங்கிரஸ 1-94/98; 1-101/115; 9-97

குமார ஆக்னேய 7-101/102

குமார ஆத்ரேய 5-2

குமார யாமாயன 10-135

குரு சுதி காண்வ 8-76/78

குல்மல பாரீஸ சைலூசி 10-126

குசிக ஐஸீரதி 3-31

குசிக ஸெளபரி  0-127

குஸீதி காண்வ 8-81/83

102. கூர்ம க்ருத்சமத 2-27/29

இதுவரை 100 புலவர்கள்

To be continued………………………………………………

tags–  ரிக் வேத, புலவர்கள் , 400 பேர்,  பட்டியல்-2,

காம தகனம் எனும் மதனோற்சவம் – part 2 (Post No.10,746)

FOR PICTURES GO TO MY BLOG swamiindology.blogspot.com

WRITTEN BY B.KANNAN, DELHI
Post No. 10,746
Date uploaded in London – – 15 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

காம தகனம் எனும் மதனோற்சவம் – 2
Written By B.Kannan, Delhi

அன்புடைய தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.
இப்பதிவில் சம்ஸ்க்ருதம் மொழியில் மதனோற்சவ நிகழ்வு எப்படியெல்லாம் கவிஞர்களால் விவரிக்கப் பட்டுள்ளது என்பதைக் காண்போம்………

மகா சிவராத்திரியுடன் சிசிர ருதுவின் பனிப் பொழிவு ” சிவ,சிவ” என்று விலகி விடும். அடுத்து வரும் பூரண நிலவு நாளில் வசந்த ருதுவின் வரவை மிக்க உற் சாகத்துடன் வரவேற்க எல்லாரும் தயாராகி விடுவர். நமக்குச் சிசிர ருதுவின் பிற் பகுதி நடக்கையில், வட இந்திய மாநிலங்களில் கோலாகலத்துடன் வசந்த ருது களை கட்ட ஆரம்பித்துவிடும்.

மாறன், அரூவனான அனங்கன், காதல் வேட்கையைத் தூண்டுவதால் ராகவிருந்தன், மனதை அலைக்கழிப்பதால் மன்மதன், தேவர்களையும் வசப்படுத்துவதால் கந்தர்பா, போதைப்பொருள் போல் செயலாற்றுவதால் மதனா, ரதியின் பதி என்பதால் ரதி காந்தா, மலர்க் கணைகளை உடையவன் ஆதலால் புஷ்பவான்,குசுமஷரா, மனதை ஏக்கமடையச் செய்வதால் காமன், காதல் நினைவுகளில் மூழ்க வைப்பதால் ஸ்மரா, செங்கரும்பு வில் ஏந்தி இருப்பதால் இக்ஷுதனுர்தாரா, என வெவ்வேறு நாமங்களால் அறியப்படுகிறான் வசந்தன்.
வசந்த ருது, ரதி-மன்மதன் என்று சொன்னாலே கவிகளின் எழுத்தாணி கிளுகிளக்க ஆரம்பித்துவிடும். சிருங்கார ரசம் கரைபுரண்டு ஓடுவதற்குக் கேட்கவா, வேண்டும்? பழையமுது, தொட்டுக்க மாவடுக்காக (எவ்வளவு முறைதான் பலாச்சுளையை மொய்க்கும் ஈக்கள் என்றுச் சொல்லிக் கொண்டிருப்பது?) ஆவலுடன் ஜீயர்புரம் ஓடோடிப் போகும் திருவரங்கன் மனநிலையில் தான் அவர்கள் இருக்கக் கூடும்! விரகதாபத்தில் சிக்கித் தவிக்கும் நாயகனின் உற்ற தோழனாக இருந்து நக்கல், நையாண்டி, வேடிக்கையாகப் பேசி அவனை ஊக்குவிக்கும் பணியை மேற்கொள்வது பிராக்ருத, சம்ஸ்க்ருதக் காவியங்களில் வரும் விதூஷகர்கள் மட்டுமே! பல நாடகங் களில் இதைக் காணமுடிகிறது.

இனிமையாகக் கூவும் குயில், பிள்ளை மொழி பேசும் பஞ்சவர்ணக் கிளி, பூக்களிலி ருந்துத் தேனை உறிஞ்ச ரீங்கரித்தவாறு வட்டமிடும் தேனீக்கள், எங்கு பார்த்தா லும் மரங்களிலிருந்து உதிர்ந்த பல நிற மலர்கள் தரையில் பரவி வண்ணப் பட்டுக் கம்பளம் விரித்தது போல் தோன்றும் காட்சி,மனத்தைக் கிறங்க வைக்கும் பூக்களின் நறுமணம், தன் இணைபிரியாத் தோழன், தென்றல் காற்று, மிரு துவாய் உடலைத்
தழுவிச் செல்வது என இத்தகைய முன்னறிவிப்புகளுடன் தலை நுழைப்பவன்தான் வசந்தன் மன்மதன் என்று காளிதாசன் குமாரசம்பவத்தில் வர்ணிக்கிறான்.

வடமொழி இலக்கியங்களில் கன்னோஜ் ராஜ்ஜியத்தின் மாமன்னன் ஹர்ஷவர்தன ரின் ரத்னாவளி நாடகம் இப்பண்டிகைக் காட்சிகளைக் கொண்டாதாக இருக்கிறது.. கவிதை இயற்றுவதிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். ரத்னாவளி, நாகாநந்தா, ப்ரிய தர்சிகா ஆகிய நாடகங்களை இயற்றியவர். நான்கு அங்கங்கள் கொண்ட இந்தக் காதல் நாடகம் “ரத்னாவளி” (ரத்தின நெக்லெஸ்-சிங்கள தேச இளவரசி) க்கும், கௌசாம்பியின் அரசன் வத்ஸராஜன் என்ற உதயணனுக்கும் இடையே அரும்பும் காதலைப் பின்னணியாகக் கொண்டது. ராணி வாஸவதத்தை செய்யும் இடையூ றுகள், விதூஷகனின் நகைச்சுவை, மேதாவினி எனும் பேசும் கிளியின் லூட்டி
என அனைத்தும் நம்மை முறுவலிக்க வைக்கின்றன. கடலிலிருந்து மீட்கப் பட்டவளாதலால் அவள் ‘சாகரிகா’ என்ற பெயரில் ராணி வாஸவதத்தையின்
பணிப்பெண்ணாக இருக்கிறாள்

இந்த நாடகத்தின் முதல் காட்சியே காமன் விழாவிலிருந்துத் தொடங்குகிறது. வசந் தோற்சவப் பண்டிகைக் கொண்டாட்டக் காட்சியை, அரசன் உதயணனுக்கு விதூஷ கன் வசந்தகன் சுவாரசியமாக விவரிக்கிறான்.

“அரசே, அதோ அந்தப் பணிப்பெண் மதுவைச் சுவைத்து விட்டுப் பண்ணும் ரகளை யைப் பாருங்கள்! கொண்டையில் சூடிய மலர்ப்பந்தின் பளுவைத் தாங்க முடியாமல் முடிக் கற்றைகள் அவிழ்ந்துப் பறக்க, நடனமாடும் கால்களின் அதிர்வால் இரண்டு கொலுசுகளும் சுணங்க, நடன அசைவுகளால் வேறு வழியின்றிக் கழுத்திலிருக்கும் ஹாரம் இருமலைக் குன்றுகளுக்கிடையே ஊஞ்சலாடுவதும், உருண்டுத் திரண்டப் பருத்த ஸ்தனங்களால் இடுப்பே முறிந்துவிட்டது போல் குனிந்தவாறே அழகைக் காட்டும் அந்தப் பைங்கிளியுடன் சேர்ந்து காமன் விழா கொண்டாட ஆசை, மன்னா, போகட்டுமா?” என்று ராஜனின் ஆசைத் தீயை வெகுவாகத் தூண்டுகிறான் விதூஷகன் .(பாடல் 1:16)
இதோ, மன்மதனை நாட்டின் பிரஜைகள் வரவேற்கும் விதத்தைப் பார்க்கலாம்…

धारायन्त्रविमुक्तसन्ततपय: पूरप्लुते सर्वत: |
सद्य: सान्द्रविमर्दकर्दमकृतक्रीडे क्षणं प्राङ्गणे ||
उद्दामप्रमदाकपोलनिपतत्सिन्दूररागारुणै: |
सौन्दूरिक्रियते जनेन चरणन्यासै: पुर: कुट्टिमम् || ( 1:11)

தா⁴ராயந்த்ரவிமுக்தஸந்ததபய: பூரப்லுதே ஸர்வத: |
ஸத்³ய: ஸாந்த்³ரவிமர்த³கர்த³மக்ருʼதக்ரீடே³ க்ஷணம்ʼ ப்ராங்க³ணே ||
உத்³தா³மப்ரமதா³கபோலனிபதத்ஸிந்தூ³ரராகா³ருணை: |
ஸௌந்தூ³ரிக்ரியதே ஜனேன சரணன்யாஸை: புர: குட்டிமம் ||

ஸத்³ய: க்ஷணம்ʼ= இந்தக்கணம் (பார்க்கும்போது), தா⁴ராயந்த்ர விமுக்த வஸந்தத: பய:= நீரை வீசும் கருவியிலிருந்து இடைவிடாமல் வீசப்படும் நீர், க்ருʼதக்ரீடே³= அவர்களின் விளையாட்டில், உத்³தா³ம ப்ரமதா³ = அங்குமிங்கும் (தப்பித்து) ஓடும் பெண்களின், கபோல நிபதத் ஸிந்தூ³ர= கன்னத்தில் இருந்து விழும் சிந்துரம், ராகா³ருணை:= சிவந்த பொடிகள், ஜனேன சரணன்யாஸை: =ஆண்களின் பாதச் சுவடுகள், ஸாந்த்³ர விமர்த³ கர்த³ம= மெல்லிய காலடி பதிப்புகளால் சேர்ந்த சேறு, புர: குட்டிமம் =தரை மற்றும் சுற்றுப்புறம், ப்ராங்க³ணே பூர: ப்லுதே ஸர்வத:= கூடும் அங்கணம் எங்கும் நிரம்பி ஸௌந்தூ³ரிக்ரியதே= அழகூட்டுகிறது.

பொருள்:
பீச்சாங்குழல் மூலம் நீரைப் பீய்ச்சியடிக்கும் ஜனங்களிடமிருந்துத் தப்பித்து ஓடும் பெருமைமிகு பெண்களின் பாதச்சுவடுகள் அவர்கள் கன்னங்களில் இருந்து விழும் சிந்துரத் துகள்கள், நீரில் கலந்த வாசனைப் பொருட்கள் இவையெல்லாம் வாச லெங்கும் பரவி வண்ணமயமான சேறாகி விட்டன!

இதனை அடுத்து ராணி வாஸவதத்தை, நன்றாக அலங்கரிக்கப்பட்ட நந்தவனத் திலுள்ள அசோகமரத்தின் கீழ் அனங்கனின் மறுபிறப்பாகக் கருதப்படும் கிருஷ் ணரின் புத்திரன் பிரத்யும்னனின் உருவச் சிலையை வைத்துப் பூஜிக்கிறாள். பிறகு அதே மாதிரி தனது பதி உதயணனை மரத்தின் கீழ் அமரவைத்து, புஷ்பாஞ்சலி செய்து தூப-தீபாராதனைக் காட்டி வணங்க மாறன் பூஜை நிறைவடைகிறது. ஆனால் நகர வீதிகளில் ஆரவாரத்துடன் விழாக் கொண்டாட்டம் தொடர்கிறது.

மேலே பார்த்தது வடநாட்டில் வாழ்ந்த அரசகவியின் மதனோற்சவத்தை விவரிக்கும் கவிதை. அடுத்து பதினான்காம் நூற்றாண்டில் தென்னாட்டில் வாழ்ந்த வைணவ சமயப் பெரியவரும், நிகமாந்த மஹாதேசிகன், சர்வதந்திர ஸ்வதந்திரர் என்று அழைக்கப்படும் ஶ்ரீ வேதாந்த தேசிகரின் கவிதை மொழியில் இப்பண்டிகையைக் குறித்துப் பார்ப்போம். வேதாந்த தேசிகர். நூற்றுக்கு மேற்பட்ட தத்துவ, கவிதை, நாடக நூல்கள் பலவற்றை ஒரு சமய குருவாக இருந்து இயற்றியுள்ளார். கவிதை இயற்றுவதில் காளிதாசன், பாரவி போன்ற பெறும் கவிஞர்களுக்குச் சற்றும் குறைந் தவர் அல்ல இவர். பரம அத்வைதியான கிருஷ்ண மிஸ்ரர் ஞான மார்க்கத்தினால் பெறுகிற அத்வைத சாந்த நிலையைப் பற்றி எழுதியுள்ளார். அதில் பல தத்துவங் களை உருவக (ALLEGORY)பாணியில் கதாபாத்திரங்களாக உலவ விட்டிருக்கிறார். ஞானத்தைத் தேடுகிற ராஜன் ‘விவேகன்’ மஹாமோஹன் எனும் ‘மாயை’யை வென்று ஞானத்தை அடைவதாக “பிரபோத (ஞானம்) சந்திரோதயம்” நாடகக் கதை போகிறது. தனது வசிஷ்டாத்வைதக் கொள்கைக்கு ”பிரபோத சந்திரோதயம்” ஒத்து வராது எனக் கருதியவர் அதே பாணியில் “சங்கல்ப சூரியோதயம்” என்ற நாடகத்தை, அதே உருவக கதாபாத்திரங்களுடன் இயற்றியுள்ளார். மனிதனின் குணங்களான ‘த்ருஷ்ணை (ஆசை), குஹனை (வஞ்சம்),அசூயை, ‘டம்பன்’ (தற்புகழ்ச்சி) ஆகியவை இதில் அடங்கும்.
பத்து அங்கங்கள் கொண்ட இந்த மிகப்பெரிய நாடகத்தின் காட்சிகள் நடைபெறும் அரங்கம் ஸ்ரீரங்கம். அங்கே மருத்வ்ருதா நதிக்கரையில் காமன் பண்டிகை நடைபெறு வதாக ஒரு வருணனை, இடம்பெறுகிறது.

மருத்வ்ருதா என்பது காவிரிதான். மருத் என்றால் காற்று.(மலைய மாருதம்) காற் றால் வளர்பவள் என்ற அர்த்தத்தில் காவிரிக்கு சம்ஸ்க்ருதத்தில் இந்தப் பெயர். அக்காலத்தில் சிறிது காற்றடித்தாலும் போதும் காவிரியில் வெள்ளம் வந்து விடும் (!!) என்பதால் இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

சங்கல்ப சூர்யோதய நாடகத்தின் துவக்கத்தில், ‘ஸ்த்ரீகளின் உடலமைப்பை ஒத்த வில், நாண்,அம்பு ஆகியக் கொடியகணைகளால் உள்ளங்களை வெல்ல வல்ல மன்மதனும் ரதியும்’ காமன் பண்டிகை நடைபெறும் இடத்துக்கு வருகிறார்கள். கூடவே வசந்தன் என்ற வசந்தகாலமும் மன்மதனுக்கு நண்பனாக வருகிறான். “நண்ப! நமது மகாமந்திரி மகாமோஹனுக்கே மங்கலம் உண்டாகுமாறும்,ராஜா விவேகனுக்குப் பீதியை விளைவிக்கும் படியும் மன்மத மகோத்சவமாம் உனது திருவிழாவை இப்போதே நான் தொடங்கப் போகிறேன்” எங்கிறான்.
காமன் பண்டிகை அழகிய சொல்லாட்சியுடன் கூடிய கவிதையாக கண்முன் விரிகிறது.

चूडा वेल्लित चारुहल्लक भरव्यालम्बि लोलम्बका:
क्रीडन्त्यत्र हिरण्मयानि दधत: शृङ्गाणि श्रुङ्गारिण: |
तन्वङ्गी करयन्त्र यन्त्रणकला तन्त्रक्षरद् भस्त्रिका
कस्तूरी परिवहमेदुर मिलज्जम्बाल लम्बालका: ||

சூடா³ வேல்லித சாருஹல்லக ப⁴ரவ்யாலம்பி³ லோலம்ப³கா:
க்ரீட³ந்த்யத்ர ஹிரண்மயானி த³த⁴த: ஶ்ருʼங்கா³ணி ஶ்ருங்கா³ரிண: |
தன்வங்கீ³ கரயந்த்ர யந்த்ரணகலா தந்த்ரக்ஷரத்³ ப⁴ஸ்த்ரிகா
கஸ்தூரீ பரிவஹமேது³ர மிலஜ்ஜம்பா³ல லம்பா³லகா: ||
பொருள்:
வண்டுகள் சூழும், அழகிய செந்நிறப் பூக்கள் அள்ளி முடிந்த கூந்தலைக் கொண்ட பெண்கள் கஸ்தூரி முதலிய வாசனைப் பொருட்கள் கலந்த நீரைத் தோற்பைகளில் அள்ளித் தெளித்து, அங்கே பொன்மையமான கொம்புகளில் நீரைத் தாங்கி வீசும் அழகிய இளைஞர்களுடன் விளையாட அவர்களின் தலை முழுவதும் முடிக்கற்றை கள் சேறாகி துவளுகின்றன…

சூடா³ வேல்லித சாருஹல்லக பர= தலையில் கட்டப்பட்ட நல்ல சிவந்த ரோஜா மலர்கள், கூட்டமாகத் தாங்கிய, வ்யாலம்பி³ லோலம்ப³கா= சுற்றி வரக்கூடிய வண்டுகள், ஶ்ருங்கா³ரிண:= அழகிய இளைஞர்கள், அத்ர க்ரீட³ந்தி= அங்கே விளையாடுகிறார்கள், ஹிரண்மயானி ஶ்ருʼங்கா³ணி =பொன்வண்ணமான கொம்பு களை, த³த⁴த:= தாங்குகிறார்கள், தன்வங்கீ³= அழகிய பெண்கள், கரயந்த்ர= கையி லிருக்கும் யந்த்ரணகலா =சிறு தோற்பையைக் கொண்டு அடிக்கிறார்கள், தந்த்ரக்ஷரத்³ ப⁴ஸ்த்ரிகா= அதிலிருந்து வெளிவரும், கஸ்தூரீ பரிவஹ மேது³ர மில= கஸ்தூரி போன்ற வாசனை திரவியங்கள் கலந்த, ஜம்பா³ல= சேறு போல செறிந்த நீரால், லம்ப அலகா:= கற்றையாய் தொங்கும் குழலை, முடிக்கற்றை உடையவர்கள்.

காவிரிக் கரையில் மதனோற்சவம் நடைபெறுகிறது. அங்கே பெண்கள் கஸ்தூரி, சந்தனம் முதலான வாசனை திரவியங்கள் கலந்த நீரை தோற்பைகளில் அள்ளி, ஆண்கள் மீது வீசுகிறார்கள். ஆண்கள் தங்கள் பங்குக்கு, தங்க மயமான கொம்பு களில் நீரை நிரப்பி பெண்கள் மீது வீசி விளையாடுகிறார்கள், என்று இப்படி காமன் பண்டிகை களை கட்டுகிறது…….

இன்னும் இம்மாதிரியானச் சம்பவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்…………

அடுத்து வசந்தவிழாவில் மங்கையருக்கும், மரங்களுக்கும் இடையே நிலவும் அன்புப் பிணைப்பைப் பற்றி பார்ப்போம்…….

    ------------------------------------------------------------------------------------------------------ 

TAGS, காம தகனம்-2, மதனோற்சவம் – 2, B.KANNAN

ஹரியோ, ஹரனோ நெற்றியில் எழுதியதை அழிக்க முடியாது! (Post No10,745)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,745
Date uploaded in London – – 15 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷித செல்வம்
ஹரியோ, ஹரனோ யாரானாலும் நெற்றியில் எழுதியதை அழிக்க முடியாது!

ச.நாகராஜன்

அருமையான சில சுபாஷிதங்கள் இதோ:

அர்யாநாமர்ஜனே துக்கமர்ஜிதானாம் ச ரக்ஷணே |
ஆயே துக்கம் வ்யயே துக்கம் திகர்தா: கஷ்டசம்ஸ்ரயா: ||

ஒருவன் பணம் சம்பாதிப்பதில் கஷ்டம் அடைகிறான். அதை பாதுகாப்பதிலும் அவன் கஷ்டமடைகிறான். சேர்ப்பதிலும் துக்கம் செலவழிப்பதிலும் துக்கம். சீச்சீ! துன்பத்திற்கு வழி வகுப்பதே பணம்!

One suffers while gaining wealth. One also suffers while protecting it. There is pain in gaining and pain in spending money. Fie on this money which leads to misery!

**

வலிபிமுர்கமாக்ராந்தம் பலிதைரங்கிதம் சிர: |
காத்ராணி ஷிதிலாயந்தே த்ருஷ்ணைகா தருணாயதே ||

முகம் முழுவதும் சுருக்கங்கள். தலை முழுவதும் வெள்ளை நரை! தளர்வடைந்த அங்கங்கள். ஆனால் ஆசை மட்டும் இளமையோடு இருக்கிறது!

The face is covered with wrinkles. The head is marked with white hair. The limbs have slackened. Desire alone is (still) young.
**

ஹரிணாபி ஹரேணாபி ப்ரஹ்மணாபி சுரைரபி |
லலாடலிகிதா ரேகா பரிமார்ஷ்டு ந சக்யதே ||

ஹரியாகட்டும் ஹரனாகட்டும் பிரம்மாவாகட்டும் அல்லது எந்த கடவுளாகட்டும் ஒருவராலும் நெற்றியில் எழுதியதை அழிக்க முடியாது.

The line (of fate) drawn on the forehead cannot be wiped out even by Lord Vishnu, Sankara, Brahman or any other god.

**
ஸ்வயம் மஹேச: ஸ்வஷுரோ நகேஷ:
சகா தனேஷஸ்தனயோ கணேஷ: |
ததாபி பிக்ஷாடனமேவ சம்போ:
பலியஸீ கேவலமீஸ்வரேச்சா ||

அவரோ சிவன் – மஹேசன். அவரது மாமனாரோ ஹிமயத்திற்கே அதிபதி. அவரது நண்பரோ செல்வத்திற்கு அதிபதி (குபேரன்). அவரது மகனோ கணங்களுக்கு அதிபதி (கணேசன்). என்றபோதிலும் கூட அவர் பிக்ஷைக்காக அலைகிறார். எல்லாவற்றையும் விட இறைவனின் இச்சையே சக்தி வாய்ந்த ஒன்றாகும்.

(Lord Siva is) himself a great God; (his) father-in-law (is) the lord of mountains (Himalaya); (his) friend (is) the lord of wealth and (his) son is the lord of Ganesa (i.e. Ganesa). Even then (Lord Siva) has to wander for begging alms. The will of the almighty alone is more powerful than anything else.

**
சிரஸா தார்யமாணோபி சோம: சௌம்யேன ஷம்புனா |
ததாபி க்ருஷதாம் தத்தே கஷ்ட கலு பராஷ்ரய: ||

சிவபிரானின் தலையில் இருந்த போதிலும் கூட சந்திரன் தேய்கிறது. உண்மையில் அடுத்தவரை நம்பி இருப்பது துயரமானது தான்!
The moon gets emaciated even though she is carried on the head by the gentle lord Siva. Indeed, dependence on others is miserable.
**
(English Translation by Saroja Bhate)

ரிக் வேத ரிஷிகள் பட்டியல் – பகுதி 1 (Post No.10,744)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,744

Date uploaded in London – –    14 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IN SANSKRIT ALPHABETICAL ORDER

ரிக் வேத ரிஷிகளின் பெயர்களும் அவர்களுடைய சூக்தங்கள்,  மந்திரங்கள், வரும் மண்டலமும்

அக்ருஷ்ட்டா மாசா : 9-86  1-10, 31-40 AKRSTAAH MAASAAHA

NINTH MANDALA 86TH HYMN

அக்ஷ மெளஜவான் 10-34

அகஸ்த்ய மைத்ராவருண 1-165, 13-15, 166 13-15; 166  – 169, 170-2,5; 171-178 179-3,4180-191

அகஸ்த்ய  சிஷ்ய  1-179,  5,6

அகஸ்த்ய வசா  1-60              5 names

அக்னி  10-124, 2-4

அக்னி   சக்ஷுச 9-106, 1-3, 1–14

அக்னி  தாபஸ 10-141

அக்னி   பாவக 8-102, 19-140

அக்னி  சவ்ஸிக்க  10-51, 2-4, 6-8, 52, 53, , 7980     10 names

அநாயஹ திசநாயஹ ஐஸ் வராஹ  9-109

அக்னியுத  ஸ்தவ்ர  10-116

அக்னியூப   ஸ்தவ்ர  10-116

அக்னிவருண சோமஹ  10-124, 1, 5-9

அகமர்ஷண மாதுசந்தச 10-190

அங்க அவ்ரவ 10-138

அங்கீரஸஹ சஹஸ்ரம் வஸுரோசிஸஹ 8-34, 16-18

அஜாமிள செளஹோ த்ர 4, 43-44

அஜாஹ பிரஸ்னியஹ 9-86

அத்ரி பெளம 5-27; 37-43, 76-77, 83-86; 9-67, 10-12, 86 41/45    20

அத்ரி சம்க் ய 10-143

அதிதி தாக்ஷயணீ  10-72

அனாந த பாருச்சேபி  9-111

அநில வாதாயான 10-168

அந்திகு ஸ்யாவாஸ்வி  9-101, 1-3

அபாலா 8-91

அப்ரதிரதஹ ஐந்த்ர 10-103

அபிதபா செளர்ய 10-37

அபீவர்த்த ஆங்கீரச 10-174

அமஹீயு  ஆங்கீரச 9-61                30

அம்பரீஷ வார்ஸாகிர 1-100, 9-98

அயாஸ்ய ஆங்கிரஸ  9 44-46; 10-67,68

அரிஷ்டநேமி தாரக்ஸ்ய 10-178

அருண வைதஹவ்ய 10-91

அரசத் ஹேரண்யஸ்தூப 10-149

அர்ச்ச நான ஆத்ரேய 5-63,64; 8-42

அற்புத காத்ரவேய 10-94

அவத்தசார காஸ்யப 5-44; 9-53-60

அவஸ்யு ஆத்ரேய 5-31

அஸ்வமேத பாரத 5-27       40 name’s          

அச்வஸூக்தி கான்வாயான 8-14,15

அஷ்டக வைஸ் வாமித்ர  10-174

அஷ்டாதம்ஷ்ட்ர வைரூப 10, 3

அஸித காஸ்யப  9, 5-24

ஆயு காண்வ 8-52

ஆசங்க ப்ளா யோகி 8, 1, 30-33

அம்ஹோமுக் வாமதேய 10-126    AMHOMUK VAMADEYA      47 names

தொடரும் …………………………………………….

STORY OF VEDIC SUNAHSEPHA IN GREECE AS CYNOSURE! (Post 10.743)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,743

Date uploaded in London – –    14 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

The story of Sunahshepa was recited in every Coronation ceremony of ancient India. The recitation was an important feature in Coronation ceremonies. It may sound strange that a story of attempted human sacrifice is recited in Coronations. William Henry Robinson who did much research on this story and the ceremony, compared it with Cynosure of Greece. Is it correct or just a namesake accidental coincidence?

Let me give the story of Sunahshepa  (from my article posted in September 2017)and meaning of Cynosure:-

“Nobody has any proof for Purushameda Yajna (Human Sacrifice). The only anecdote is Sunashepa Anecdote. The brief account is as follows:-

 It is from the Aitareya Brahmana: King Harischandra of the race of Ikshwaku, being childless, made a vow that if he obtained a son he would sacrifice him to Varuna. A son was born who was named Rohita, but his father postponed, under various pretexts, the fulfilment of his vow (sacrificing children is in every religious book all around globe; thousands of mysterious children’s graves are in Bahrain; read my article about Mysteries of Bahrain).

When he was ready to perform the sacrifice, Rohita refused to be the victim and he ran into the forest. He lived there for six years. He then met a poor Brahmin Rishi Ajigarta, who had three sons. He gave his second son Sunashepa (meaning Dog’s tail)  for an exchange of 100 cows. Sunashsepa was tied to a pole. Viswamitra was passing that way and found Sunashepa and released him. He thought it was barbaric to sacrifice a human being. Ramayana and Mahabharata gave different versions where Viswamitra’s two divine mantras released Sunashepa. He was adopted as a son by Viswamitra and changed his name as Devavarta.

This clearly shows that there was no such human sacrifice nor any custom before Harischandra, one of the long list of kings. Vedic literature was very huge and most of them came before Greeks started writing.

Foreigners thought they could use it against Hinduism; but they couldn’t because there was no human sacrifice even in this episode.

But on the contrary Hindus, particularly Brahmins, used it in a positive way. This is the longest and most interesting story in Aitareya Brahmana. The mere telling of the story saves one from sin.

“If a sinful king has the story of Sunashepa told him, not the slightest trace of sin and its consequences will remain in him. He must therefore give a 1000 cows to the teller of this story and a 100 to him who makes the responses required; and to each of them the gold embroidered carpet on which he was sitting; to the priest, besides a silver decked carriage drawn by mules. Those who wish for children should also have this story told them; then they certainly will be blessed with children”.

The boy’s name was Sunahshepa  that means dog’s tail.

Cynosure in Greek also means dog’s tail. But they applied it to Northern Pole Star, the fixed centre of the revolving heavens and a guide of travellers.

In Hindu coronation ceremonies the seats of the reciters of the legend were placed in front of the king’s throne, on the sacred ground , where the yearly cycle of ancient sacrifices had just been completed.

Robinson says,

The main purpose of the legend was to epitomize , and illustrate the inner spiritual teachings of the inspired Vedic hymns and ritual. These however became obscured as the Vedic age shaded off into that of the Upanishads. We find the Sunahshepa  story in the epics as well. It was recited during the Rajasuya . we have the full description of Yudhisthira’s Coronation in Mahabharata. Tamil Sangam literature mentioned the Rajasuya done by a Choza king. We know Jaichand’s coronation was done during Afghan invasion of India in 1190-92 CE.

xxxx

CYNOSURE

Cynosure means dog’s tail in Latin. But in modern English it means something that strongly attracts attention by its brilliance; Centre of Attention.

Etymologists say it came from the dog tail constellation Ursa Minor. Sailors used it for navigation. The tail points to the pole star.

In Greece it is neither connected with religious ceremony nor with the Coronation. The etymology of the word is as follows (etymon on line)

cynosure (n.)

“something that strongly attracts attention,” 1590s, from French cynosure (16c.), from Latin Cynosura, literally “dog’s tail,” an old name of the constellation (now Ursa Minor) containing what is now (but was not in ancient times) the North Star, the focus of navigation, at the tip of its tail; from Greek kynosoura, literally “dog’s tail,” from kyōn (genitive kynos; from PIE root *kwon- “dog”) + oura “tail” (see arse). Apparently in ancient times the whole constellation was used as a rough indicator of the celestial north pole. Related: Cynosural.

*kwon- 

Proto-Indo-European root meaning “dog.”

It forms all or part of: canaillecanarycanicularcanidcaninechenillecorgicyniccynicalcynosuredachshundhoundkennelProcyonquinsy.

It is the hypothetical source of/evidence for its existence is provided by: Sanskrit svan-, Avestan spa, Greek kyōn, Latin canis, Old English hund, Old High German hunt, Old Irish cu, Welsh ci, Russian sobaka (apparently from an Iranian source such as Median spaka), Armenian shun, Lithuanian šuo “dog.”

Superficially we can see some similarity in sound and meaning. Pole star/cynosure guides the sailors in the sea. King , the centre of attention in the coronation, guides the people.

xxx

My views

But the question why did Hindus insist the recitation of the legend in coronations still remains unanswered. My view is now the star Polaris form part of Dog’s tail. They named it Dog’s tail like we named the boy of Ajigarta Dog’s tail; it cannot be a given name. it may be some nickname. Hist story appeared only in later Brahmana literature. Like we forgot the reason for this name, Greeks also forgot the meaning of ’Dog’s tail. The star Polaris (Cynosure) is part of Little Bear (Ursa Minor) not Dog. But I would say that the Greeks meant only Vedic Sunahshepa. We were the one who gave star status to Dhruva (Pole Star) Nakshatra. But little boy Dhruva is different from this little boy Sunahshepa. Perhaps in the olden days there were two stories for the same Pole star. Greeks use it only namesake forgetting the Dog’s tail boy. But we remember the Dog’s tail boy Sunahshepa but use it only in Coronations not with the Pole Star.

The innocent victim was saved by the sage cum king Visvamitra from death. Like him, a king should save all innocent people who are victimized by someone. Harischandra made a stupid promise to Varuna and dodged without fulfilling it. Instead sacrificing his own son Rohita, he bought Sunahshepa to replace him. He was saved.

This legend gives more information about Vedic society.

We have not heard any human victim before or after Sunahshepa .

Sunahshepa was also successfully rescued by Visvamitra

What is the position of Harischandra in the Ikshwaku Dynasty?

Harischandra was No.31 in the list of Solar Dynasty and Rama was 62 in the list. Even if we give 20 year per king there is a gap of at least 600 years. But unlike modern warfare the kings were not killed in Hindu dynasties ,but subdued. So I would give at least 30 or 35 years per king. That means a gap of 1000 year between Rama and Harischandra. We see Visvamitra  and Vasistha in Harischndra period as well as Rama period. Both could not have lived 1000 years. So it is only a Gotra (clan) name and not an individual’s name. Hindus must know that these Gotra names are found even in 2000 year old Tamil Sangam literature (Kauskika/ Kosika= Visvamitra in Tamil as poets’ names)

xxxx

Etymology of Dog

It is interesting to find the etymology of Dog and how it travelled to Greece in post Vedic period.

Svana for dog is found in the Rig Veda, the oldest book in the world.

RV 1-161-13; 1-182-4; 2-39-4 ; 7-55-5; 10-86-4; 8-55-39-101-1; 4-18-3

Sarama – 1-62-3; 1-72-8 (Indra’s friend dog Sarama became Hermes in Greek legends)

AV.6-37-3; 4-36-6

Svana becomes Spa in Avestan (V=P change is noted in other words as well.)

‘S’ becomes C/K in Latin and Greek.

If we place the words in chronological order, Rig Vedic Svana (feminine Suni ) comes at the top. Next comes Spa of Avestan. So we know the origin is from India. Knowing that all the words origin  in Sanskrit and accepting it would show that the civilization migrated from India to the West, they invented imaginary ‘Proto Indo-European’ and ‘Indo- European’. If one looks at all the words for dogs even in adjacent area, they change beyond recognition. If we put them in the order of available literary records, the linguists will be proved wrong.

They don’t know the etymology of English word DOG until this day. They treat it as unknown mystery! Probably it jumped into England from Heaven!!

In fact, every language has some words the origin of which we can never explain. In Panini’s Ashtadhyayi we have at least 85 words that are not found in classical Sanskrit .

Svana becomes ‘NAAY’ in Tamil Sangam Literature. Most of the Sanskrit words lose Sibilant sound in Tamil because Tamil has no S or Sh,

Tamils use Kurai for the verb Bark. On the basis of this verb,  comes Kukkura, another word for Dog in Sanskrit.

English word ‘Cry’ may also be related to Kurai (bark) in Tamil.

I have shown previously that the dogs barking sound have been different in many European languages exploding the myth of onomatopoeia theory of linguists.

Conclusion

The story of Sarama/Hermes and the word Cynosure show the westward cultural migration . The word Cynosure attained unusual significance because of its association with Sunahshepa. Even today we use it English to mean Centre of Attention or Attraction. And we use Sunahshepa story recitation (centre of attention) in Coronations as centre of Attention.

–subham–

 tags-  Sunahshepa, Cynosure, Dog’s tail, Coronation, Polaris, Aitareya Brahmana

கள் குடித்த குரங்கைத் தேள் கொட்ட, பேயும் பிடித்தால்!!! (Post No.10,742)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,742

Date uploaded in London – –     14 MARCH   2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; 

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கள் குடித்த குரங்கைத் தேள் கொட்ட, பேயும் பிடித்தால் அது போடும் ஆட்டம், அடடா!

ச.நாகராஜன்

அருமையான சில சுபாஷிதங்கள் இதோ:

கேசிதஞாநதோ நஷ்டா: கேசின்னஷ்டா: ப்ரமாதத: |

கேசித் ஞானாவலேபேன கேசின்னஷ்டைஸ்து நாஷிதா: ||

சிலர் அறியாமையினால் நஷ்டம் அடைகின்றனர். சிலர் தங்கள் தவறுகளால் அழிவை அடைகின்றனர். சிலர் தாங்கள் அறிவு கொண்டிருக்கிறோம் என்ற கர்வத்தினால் நாசமடைகின்றனர். சிலரோ தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டவர்களாலேயே அழிகின்றனர்.

Some perished because of ignorance, some met with destruction due to (their mistakes), some perished due to the pride of knowledge. But some were destroyed by those who themselves were ruined.

அவ்யாகரணமதீதம் பின்னத்ரோண்யா தரங்கிணீதரணம் |

பேஷஜமபத்யஸஹிதம் த்ர்யமிதமக்ருதம் வரம் ந க்ருதம் ||

இலக்கணம் அறியாமல் கல்வி கற்றல், ஓட்டைப் படகினில் ஆற்றைக் கடத்தல், அபத்யமான உணவைச் சாப்பிட்டவாறே மருந்தை எடுத்துக் கொள்ளல் இந்த மூன்றும் செய்வதை விட செய்யாமல் இருப்பதே மேல்.

Learning without grammar, crossing river in a broken boat and taking medicine with improper diet, these three things are better not done than done.

உதாரஸ்ய த்ருணம் வித்தம் சூரஸ்ய மரணம் த்ருணம் |

விரக்தஸ்ய த்ருணம் பார்யா நி:ஸ்ப்ருஹஸ்ய த்ருணம் ஜகத் ||

உதார குணமுள்ளவர்களுக்கு பணம் புல்லுக்குச் சமானம். சூரர்களுக்கோ மரணம் புல்லுக்குச் சமானம். அனைத்தையும் துறந்தவனுக்கு மனைவி புல்லுக்குச் சமானம்.  ஆசையற்றவனுக்கு உலகம் புல்லுக்குச் சமானம்.

Money is worthless like a straw for a generous person. Death has no significance for a brave. Wife is as good as straw for a person free from attachment. The world is worthless for one who is free from desire.

கபிரபி காபிஷாயனமதமத்தோ வ்ருஸ்சிகேன சந்தஷ்ட: |

அபி ச பிஷாசக்ரஸ்த: கிம் ப்ரூமோ வைக்ருதம் தஸ்ய ||

ஏற்கனவே அவன் ஒரு குரங்கைப் போல இருப்பவன். மேலும் அவன் கள்ளை வேறு குடித்திருக்கிறான். அதே சமயம் அவனை ஒரு தேள் வேறு கொட்டி இருக்கிறது. அத்தோடு அவனை ஒரு பேய் வேறு பிடித்து விட்டது. இந்த நிலையில் அவனது செயல்களை எப்படி விவரிப்பது?

(Already he is) a monkey. Moreover, he got intoxicated with wine. (Then) he was bit by a scorpion (and in addition to that) he was possessed by a spirit. How to describe his feats (in this situation)?

யௌவனம் தனஸம்பத்தி: ப்ரபுத்வமவிவேகிதா |

ஏகைகமப்யனர்தாய கிமு யத்ர சதுஷ்டயம் ||

இளமை, செல்வ வளம், அதிகாரம் மற்றும் விவேகமற்றிருப்பது ஆகிய இந்த நான்கில் ஒன்று இருந்தாலும் அது நாசத்திற்கு வழி வகுக்கும். இந்த நான்கும் சேர்ந்து இருந்தாலோ என்னத்தைச் சொல்வது?

Any one of (the following) youth, riches, authority and recklessness can lead to peril, what to say if all the four are combined together?

(English Translation  by Saroja Bhate)

Tags- கள் , தேள், ஆட்டம், பேய்,   குரங்கு,

தமிழ்ப் பெண்ணின் மஹத்தான 2 கண்டுபிடிப்புகள் – 2 (Post No.10,741)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,741

Date uploaded in London – –    13 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ்ப் பெண்ணின் மஹத்தான 2 கண்டுபிடிப்புகள் – Part 2

ஆக மாறோக்கத்து நப்பசலையார்  சொன்ன கிரஹணம் எது என்பதைக் காண்போம்.; அத்தோடு தமிழன் மட்டுமே உலகம் உருண்டை என்பதைச் சொன்னானா என்றும் அடுத்த பகுதியில் காண்போம் ………………..

இரண்டாவது பகுதி……………..

சம்ஸ்க்ருத நூல்களான ஆர்ய படீயம் , பிருஹத் சம்ஹிதா ஆகியவற்றில் பழைய  விஷயங்கள் இருந்தாலும் இன்று நமக்கு கிடைத்துள்ள நூல்களின் காலம் 5 அல்லது 6- ஆ ம் நூற்றாண்டு என்றே கருடத்ப்படுகிறது. மேலும் குப்தர் கால வராஹ அவதார சிலைகளில் கூட மூக்கின் மேல் பூமி உருண்டை இல்லை. ஆனால் கிரேக்கர்களோ இதற்கு முன்னர் பூமி உருண்டை என்று சொன்னதாக என்சைக்ளோபீடியாக்கள் காட்டுகின்றன. 2000 ஆண்டுப் பழமையான் சங்க இலக்கியத்தில் உள்ள சொற்கள் பூமி உருண்டை என்று சொல்லுவதால், இந்தியாவில்  தமிழர்களே இதை முதலில் சொன்னதாக பெருமை பேசலாம்.

முதல் பகுதியில் ‘பருதி ஞாலம்’ (Round Earth) என்று நப்பசலை என்ற பெண்மணி பாடியிருப்பதைக் கண்டோம். அவர் சொன்ன கிரஹணம் மஹாபாரத ஜயத்ரதன் கொல்லப்பட்ட நாளில் ஏற்பட்ட சூரிய கிரஹணமாகவே இருக்கவேண்டும். கிருஷ்ண என்றால் கருப்பு நிறம் ;அவரது செய்யுளிலும் கண் மை போன்ற கருப்பு நிறம் கொண்ட ‘அஞ்சன வண்ணன்’ இருக்கிறது. அவர் பாராட்டிய ஆள் பெயரும் திரு கண்ணன் = ஸ்ரீ கிருஷ்ணன். அவர் காப்பாற்றியது ராமர் உதித்த சூரிய குலத்தைச் சேர்ந்த சோழ  மன்னன்.

மகாபாரதத்திலும் சூரியன் (கிரஹணம்) மூலமாக கிருஷ்ணன் அர்ஜுனனைக் காப்பாற்றி அரியணையில் அமர்த்தினான். அன்று அவன் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் உயிர்துறப்பேன் என்று சபதம் செய்திருந்தான். இந்த சிலேடை நயம் தோன்ற மிஸ். நப்பசலை பாடியது வியப்புக்குரியது.

ஏனாதி திருக்கண்ணன் = மஹாபாரத கண்ணன்

சோழ  குல  மன்னர் = சூரிய வம்சத்தவர்

அவர்களைக் காப்பாற்றியது சூரிய (கிரஹணம்)

.

சங்க கால ஏனாதி திருக்கண்ணன் உருவம் நமக்குத் தெரியாது. ஒருவேளை அவரும் கண்ண பரமாத்மா போல ‘காக்கா கருப்பாக’ இருந்திருப்பார் போலும்!

xxx

உலகம் உருண்டை (Earth is Round)

இதில் ஒரு வியப்பான விஷயம் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் முதல் முதலில் உலகம் உருண்டை என்று வந்தாலும் அந்த சொற்கள் அனைத்தும் சம்ஸ்க்ருத மூலம் உடையதாக உள்ளன.

முதல் பகுதியில் பருதி = வட்டம் கண்டோம். அது பெரி, பரி Peri, Pari என்று ஐரோப்பிய மற்றும் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதைக் காட்டினேன்.

இது தவிர சங்க இலக்கியத்தில் வட்டம் என்பதற்கு ‘மண்டிலம்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் பயன்படுகிறது. பல பாடல்களில் ஆதித்ய மண்டலம் என்று சூரியனைக் குறிக்கவே பயன்படுகிறது ஒரு சில பாடல்களில் சந்திரன், வட்ட வடிவ கண்ணாடியைக் குறிக்கப் பயன்படுகிறது ஆனால் 4, 5 பாடல்களில் பூமியைக் குறிக்கப்பயன்படுகிறது . கீழே  காண்க :-

முதலில் ஏனைய சொற்களைக் காண்போம்

வட்டம் – ஸ்பியர் sPHERE- ஸ்பரி – பரி

வட்டம் – சர்க்கிள் Circle – சக்ர – சகடம் Sakata (சங்க இலக்கியத்திலும் சகடம்/வண்டி உண்டு)

வட்டம் – GLOBE குளோப் – கோளம்

வட்டம் = ROLL உருள் – ரோல்

வட்டம் – ROUND உருண்டை – ரவுண்ட்

வட்டம் – RATHA/ ROTATE ரதம் – ரொட்டேட் – ரோட்டரி

வட்டம் – WHEEL  வலம் = வீல்

ஒரு சொல் ஆங்கிலத்தில் இருந்தால் அதன் மூலம் லதீன் அல்லது கிரேக்கம் அல்லது பழைய ஜெர்மானிய மொழியில் இருக்கும். இவை அனைத்தும் சம்ஸ்க்ருதத்தில் இருந்து பிறந்தவை. நமது மொழியின் பெயரைச் சொல்லாமல் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்பர் வெள்ளைக்காரர்கள். மேற்கூறிய எல்லா தமிழ் சொற்களும் ஆங்கிலத்தில் இருப்பதால் அவை தூய தமிழ்ச் சொற்கள் ஆகாது. ஆனால் நான் சொல்லுவது போல உலகின் பழங்கால மொழிகள் அனைத்தும் தமிழ் மற்றும் சம்ஸ்க்ருத மொழியில் இருந்தே வந்தன என்பதை ஒப்புக்கொண்டால் இந்தப் புதிருக்கு விடைகாணலாம் . ஆங்கிலத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள்  உள ; ஹோமர் கால கிரேக்கத்தில் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன. இவை எல்லாம் நமது மேற்கத்திய குடியேற்றத்தைக் (Westward Migration from India)  காட்டும்.

xxxx

பாகவதத்தில்

அகநாநானூறு 59-ம் பாடலில் கண்ணன்- கோபியர்- யமுனை/தொழுனை நதி குறிப்பு கிடைக்கிறது. இதற்குப் பின்னர்தான் பாகவத புராணம் வந்தது என்பது வெள்ளைக்காரன் முடிவு. இதனால் பாகவத புராணத்தில் வரும் பிரம்மாண்ட, ஜகத் அண்ட,  அண்ட கோச என்பன சங்க இலக்கியத்துக்கும் பிற்பட்டவை  என்று பலரும் கருதுவர் ; பாகவதத்தில் அண்ட = முட்டைவடிவ இருக்கிறது; ஆனால் கிருஷ்ண பக்தி கி.மு 200 ஐ ஒட்டிய காலத்திலேயே பரவியது, , அகஸ்தோக்ளிஸ் வெளியிட்ட பலராமன்- கிருஷ்ணன் உருவ நாணயத்தாலும் விதிஷாவில் உள்ள ஹெலியோடோரஸ் கருட தூபியாலும் தெரிகிறது

xxx

தமிழ் இலக்கிய சான்றுகள்

அகநானூறு 104-5, புறநானூறு  30-3, 367-1;குறுந்தொகை 300-7

முந்நீர் மண்டிலம் ,அகநானூறு 104-5, மதுரை மருதன் இளநாகனார் (கடல் சூழ்ந்த வட்ட வடிவ பூமி)

பரிப்புச் சூழ்ந்த மண்டிலம் , புறம்  30-3

நாகத்தன்ன பாகார்  மண்டிலம் ,புறம்  367-1

,கடல் சூழ் மண்டிலம் பெறினும் ,குறுந்தொகை 300-7(கடல் சூழ்ந்த வட்ட வடிவ பூமி)

குறைந்தது 4 இடங்களில் வட்ட வடிவ பூமி பற்றி 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியம் பேசுகிறது.

முடிவுரை –

பூமி உருண்டை என்பதை தமிழ் இலக்கியமே (இந்தியாவில்) உறுதி செய்கிறது  மஹாபாரத  சூர்ய  கிரஹணத்தையே நப்பசலை குறிப்பிடுகிறார். வட்ட வடிவம் பற்றிய எல்லா தமிழ் சொற்களும் சம்ஸ்க்ருதத் தொடர்புடையன. இவற்றில் பூமியை வட்டம் என்று வருணிக்கும் மண்டிலம், பரிதி என்பதும் அடக்கம்.

–subham–

tags- மண்டிலம், பூமி, வட்டம் , பருதி , நப்பசலையார்

காம தகனம் எனும் மதனோற்சவம் (Post No.10,740)

IF U DONT SEE FOUR ATTACHMENTS, PLEASE GO TO MY OTHER BLOG swamiindology.blogspot.com

WRITTEN BY B .KANNAN, DELHI
Post No. 10,740
Date uploaded in London – – 13 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

காம தகனம் எனும் மதனோற்சவம்
Written By B.Kannan, Delhi

அன்புடைய தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.

இப்பதிவில் தமிழ், சம்ஸ்க்ருதம், மொழிகளில் காமதகன நிகழ்வு எப்படி யெல்லாம் கவிஞர்களால் விவரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்………

பழங்காலத் தமிழர்களின் சிறப்புமிக்கப் பண்டிகைகளுள் ஒன்றாக காமன் பண்டிகை இருந்துள்ளது என்பதைப் பழந்தமிழ் நூல்கள் பலவும் குறிப்பிடு கின்றன. மந்திர மகோததி எனும் சம்ஸ்க்ருத ஸ்தோத்திரப் பாடல்மாறனை இப்படி அடையாளம் காட்டுகிறது.

”மலர்க் கணைகளைத் தன் வசம் வைத்திருப்பவனும், உலகத்து உயிரினங் களின் மகிழ்ச்சிக்குக் காரணக் கர்த்தாவாக இருப்பவனும், அன்புள்ளங்களின் மனதை அலைக்கழிப்பவனும், உலகின் கண்களாக விளங்கும் பூரண மன நிறைவு, அன்பு (நேசம்) ஆகிய இரண்டையும் தாராளமாய் அள்ளித் தருபவ னுமான, ஹே, மதனா, உன்னை மனதார வணங்குகிறேன்.”

தமிழ்ச் சங்க நூல் அகநானூற்றில்” கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை வைத்து கொங்கு நாட் டில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது எனத் தெரிகிறது.அங்கு ஒலி எழுப்புகின்ற மணிகளைக் கோர்த்து இடுப்பில் கட்டிக்கொண்டுத்தெருக்களில் ஆடிப்பாடி இவ்விழாவைக் கொண்டாடினர். உறையூரிலும்திருவரங்கத்திலும் “மூன்று பக்கம் நீர் சூழ்ந்து நிலம் துருத்திக்கொண்டிருக்கும் மேட்டில்மகளிர் தன் துணையைத் தழுவிக் கொண்டிருப்பர். அங்கு வில்லேந்திய மன்மதன், மனைவி ரதியுடன் விளையாடுவது போன்ற காமாண்டிக் கூத்து நிகழும் (கலித்தொகை 35:13-14).

மன்மதனை சிவன் எரித்த கதை இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசை முடிந்து மூன்றா வது நாள் தொடங்கி வளர்பிறையில் 15 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் காமன் பண்டிகை, காம தகனம்,காமன் கூத்து, காமாண்டி என்றும் கிராமப் புறங்களில் அழைக்கப்படுகிறது. இதன் கரு, நாட்டார் வழக்குமுறையில் பாடல், ஒப்பாரி, வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், லாவணி (இரு குழுக்கள் வாதம் செய்வது போல் பாடல் பாடி நடத்தும் கலை நிகழ்ச்சி) மூலமும், ஓவியம், சிற்பம், சிலைகள் வாயிலாகவும் அதிகப் பிரசித்தி அடைந்தது. அதே சமயம் வெவ்வேறு மாவட்டங்களுக்கிடையே நிலவிய மாறன் பிறப்பு, மற்றும் கதைசொல்லும் நடைவேறுபட்டதைக் கீழ்கண்ட நாட்டுப்புறப் பாடல் மூலம் அறிய முடிகிறது.

(நன்றி சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி நூல்)

“மால்மகன் மதனெங்குதொரு புராணம்
மலர்வேதன் மகனெங்குதொரு புராணம்
மால்வண்ணன் மகனெங்குதொரு புராணம்
தர்மன் மகனெங்குதொரு புராணம்
சால்கண்ணன் மகனெங்குதொரு புராணம்
சங்கல்பன் மகனெங்குதொரு புராணம்.”

முக்கியமாக, கந்தபுராணத்தில் இடம்பெறும் சம்பவங்களே இதன் பின் புலமாக விளங்குகிறது.

மன்மதனுக்குக் கோயில் கட்டி வழிபடும் வழக்கமும் ஆதியில் தமிழகத்தில் இருந்திருக்கிறது. மன்மதன் கோயில் காமட்டிக் கோயில் என்று சிற்றூர் மக் களால் குறிப்பிடப்படுகிறது. இதற்கு முன்புறமிருக்கும் திடலில் இவ்விழா நடைபெறும்.பந்தலின் நடுவே நடப்பட்டகம்பு ஒன்றில் மேல் வைக்கோல் பிரி சுற்றப்பட்டு, அதன் தலையில் வரட்டி வைத்துக் கட்டப்படும். மாவிலை, வேப்பிலை, குங்குமம், திருநீறு வைத்து அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் உருவம் காமதேவன் மன்மதனை உருவகப்படுத்தும். முன்பே பந்தலில் நடப் பட்டுள்ள ஆலங்கிளையின் அடியில் பரமசிவன் உட்கார்ந்து தபசில் ஆழ்ந் திருப்பார்.

அருகில் சொக்கப்பனை போன்ற அமைப்பில் ஒரு கூம்பு வடிவத்தில் கட்டப் பட்டுள்ளத் துவரை மிளார்களின் நடுவே மன்மதன் உருவம் வரையப்பட் டுள்ள படம் வைக்கப்பட்டிருக்கும். பரமசிவன் தபசிருக்கும் ஆலங்கிளைக்கும் மன்மதன் படம் உள்ள கூம்புக்கும் இடையே இரட்டைவாணம் கோர்த்தக் கயிறு கட்டப்பட்டிருக்கும். தீபாராதனை முடிந்ததும் சகடையில் அல்லது வெள்ளை நிற யானை மீதமர்ந்து ரதி மன்மதன் சுதைச் சிற்பங்கள், எதிரே ரதி மன்மதன் வேடமிட்டவர்கள் கைகளில் வில்லேந்தி முன்னே நடக்க ஊர் வலம் வந்து. பந்தலுக்குத் திரும்பும் மன்மதன் தபசிருக்கும் சிவனைநோக்கி மலர் அம்பு எய்யும் விதமாக, அவன் படம் இருக்கும் பக்கத்தில் தொங்கும் இரட்டைவாணம் பற்ற வைக்கப்படும். உடனே அது சீறியபடி சிவனை நோக் கிப் போகும். மறுமுனையை அடைந்ததும் இரட்டை வாணத்தின் மறுபகுதி தானாகவே பற்றிக் கொண்டு மன்மதனை நோக்கிச் சீறிப்பாயும். சிவன் நெற் றிக் கண்ணைத் திறந்து காமனை எரிப்பதாக அர்த்தம். காமன் படத்தின் மீது கற்பூரத்தைக் கொளுத்துவார்கள். படம் பற்றியெரிய அதைத்தாங்கி நின்ற துவரை மிளாறும் சடசடவென எரியும் அதிர்வேட்டு முழங்கி காமதகனம் முடிந்ததை ஊருக்கு அறிவிக்கும்.

ரதிதேவியின் சொல்லொன்னா சோகங்களைச் சுமந்தக் காதல் சொட்டும் பாடல்களை மன்மதன் மற்றும் ரதி என இரு குழுவாகப் பிரிந்து பாடுவார் கள்..பிறகு ரதி, சிவனிடம் அழுது புலம்புவதும் மன்மதனை மீண்டும் உயிப் பிக்க வேண்டுவதுமான ஒப்பாரி வடிவில் வெகு உருக்கமாய் இருக்கும். பாடல்கள் கொட்டு முழக்குடன் மூன்று நாட்கள் தொடரும். இவ்வகையானப் பாட்டுகள் அடங்கியப் புத்தகமே, மதுரை ஶ்ரீமத் பழநிக்
குமாருசாமிப் புலவர் இயற்றிய மன்மதன் லாவணி நூல் (1923)

அதற்குப் பின் மன்மதனுக்கு சிவன் மீண்டும் உயிர்க் கொடுத்து விட்டதாகக் கூறி அவனுக்கு மலர்ப் பந்தல் அமைக்கப்படும். காமதேவன்உருவபொம்மை எரித்த இடத்தில், காமன் உயிர்ப் பெற்றதற்கு அடையாளமாக மண் லிங்கம் எடுக்கப்பட்டு பச்சை மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து வழிபடுகிறார்கள். சிலர் பச்சைப் பப்பாளிச் செடியையும் நடுவர். மன்மதன் உயிரோடு மீண்டும் வந்துவிட்டதைக் கொண்டாடும் வகையில் பெண்கள் அனைவரும் மாவிளக்கு வைத்து வழிபடுவார்கள்.

கடைசி நாள் அன்று எரிந்த கட்சி, எரியாத கட்சி என்று போட்டிப் பாட்டுக் கச்சேரி நடக்கும். ஒருவர்” மன்மதன் சிவபெருமான் முன் நிற்க மாட்டாமல் எரிந்து சாம்பலாயினான். அவன் மீண்டும் பிழைத்து எழுந்திருந்திருக்க மாட்டான்” என்று பாட்டுக் கட்டுவார். மற்றொருவர்” மன்மதனுடைய செய லினால்தான் சிவபெருமான் உமையவளை மணந்து கொண்டார் என்பதால் காதலுக்கு ஒரு போதும் தோல்வியில்லை, வெற்றிதான்” என்று எதிர்ப் பாட்டு பாடுவார் கேட்கிற ரசிகர்களும் ஆளுக்கொரு பக்கம் ஆதரவு தரு வார்கள். முடிவில் மன்மதன் எரிந்து போகவில்லை என்ற முடிவை அனை வரும் ஏற்று மன்மதனைப் புகழ்ந்துப் பாடுவர். பெருத்த கோலாகலத்துடன், எரிந்தகட்சி, எரியாத கட்சித் தர்க்கப் பாடல், ரதி மன்மதன் தேர் ஊர்வலம் ஆகியவற்றுடன் பண்டிகை இனிதே முடிவடையும்.

அரியலூர்–தஞ்சை நெடுஞ்சாலையில் திருமானூரிலிருந்து சுமார் 20 கி.மீ .தொலைவில், ஏலக்குறிச்சி,பெரியமறை மாதூர் கடந்து அமைந்துள்ளது ஶ்ரீ பாலாம்பிகை உடனுறை ஶ்ரீசௌந்தரேஸ்வரர் திருநல்லூர்.,காமரசவல்லி ஆலயம். மகேசனின் அருளால் மன்மதன் உயிர்த்தெழுந்தத் தலம்.காவிரி வடகரை மயிலாடுதுறை வட்டத்தில், தேவாரப் பாடல் பெற்ற 26-வது சிவாலயம். ஶ்ரீ ஞானாம்பிகை சமேத வீரட்டேஸ்வரர் திருநல்லூர் கோவி லாகும். இங்குதான் காமன் ஈசனால் எரிக்கப்பட்டான் என்கிறது தலபுராணம். இவ்விரண்டுத் தலங்களிலும் காமதகன சம்பவம் மாசி பௌர்ணமி நாளில் வெகு விமரிசையாக நடந்தேறுகிறது.

அடுத்து, சம்ஸ்க்ருத இலக்கியத்தில் மதனோற்சவத்தைப் பற்றி பார்ப்போம்…
—————————————————————————————————————-

100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 3 (Post No.10,739)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,739

Date uploaded in London – –     13 MARCH   2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; 

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மார்ச் 2022 ஹெல்த்கேர் மாத இதழில் வெளி வந்துள்ள கட்டுரை

100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 3 

ச.நாகராஜன்

(56 முதல் 85 முடிய)

56. எவரையும் புண்படுத்தாமல் இன்னொருவரைப் போல நடித்துக் காண்பித்தல், அவர் செய்யும் செய்கைகளைச் செய்து காண்பித்தல் மூளையின் பல பகுதிகளை இயக்குகிறது.  மூளை புதிதாக ஒரு நிலையை எதிர்கொள்ள ஒருவரைத் தயாராக்கவும் இது உதவுகிறது,

,57. மூளையில் உள்ள முக்கியமான ஹார்மோன்களை வெளி விடுவதற்கு உதவுவது செக்ஸ் உறவு தான். உணர்ச்சி பூர்வமான அறிவு, சமூக இணைப்பு இவற்றைத் தருவதுடன் மன அழுத்தத்தை நீக்க வல்லது செக்ஸ் உறவு. சிலருக்கு இது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. பாஸிடிவாக சிந்திக்கும் திறனையும் நல்குகிறது.

58. மூளைக்குத் தேவையான மெலடானின் (Melatonin) ஆழ்ந்த உறக்கத்தைத் தர வல்லது. துரதிர்ஷ்டவசமாக நீல ஒளியில் இருந்தால் தூக்கம் வரும் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையல்ல. மாலை நேரத்தின் ஆரம்பத்தில் டி.வி. போன் ஆகியவற்றையும் இரவில் கம்ப்யூட்டரையும் உபயோகிக்காமல் இருந்தால் அது மூளைக்கு நல்லது. கணினியில் திரையை மூடி வைக்கும் பழக்கத்தை ஆரம்பித்தால், அது நலம்.

59. ஒமேகா 3 கொழுப்புச் சத்து மீன் உள்ளிட்ட மாமிசத்தில் உள்ளது. Docosahexaenoic acid, or DHA என்பது மூளைக்கும் கண்களின் ரெடினாவிற்கும் தேவையான ஒன்று. மூளையில் 60 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. இந்தக்  கொழுப்பில் 25 சதவிகிதம் DHA தான். 

60. தேங்காய் எண்ணெய் நியூரான்களைப் புதுப்பிக்க வல்லது. கெடோன் பாடீஸ் (Ketone Bodies or ketoacids) தேங்காய் எண்ணெயில் உள்ளது. கொழுப்பை ஆற்றலாக சக்தியாக மாற்ற வல்லது இதுவே. இது அபரிமிதமாக தேங்காய் எண்ணெயில் உள்ளது. வயிற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேங்காய் எண்ணெயை நமது உணவுப் பொருள்களுடன் கலந்து பயன்படுத்துவது நல்லது.

61. விடமின் D : விடமின் D உடலுக்கு – குறிப்பாக மூளை நரம்புகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. சூரிய வெளிச்சத்தில் முறையாக இருந்து சூரிய ஆற்றலைப் பெறலாம். சூரிய ஒளி தேவையான அளவுக்கு இந்த விடமினை நல்குகிறது.

62. உங்கள் குடல் நாளத்தில் உள்ள பாக்டீரியாக்கள் உங்கள் உடலுடன் ஒன்றி இயங்குபவை. வெளியில் வாங்கும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்தீர்களானால்  அருமையான ஆரோக்கியம் தரும் இந்த பாக்டீரியாக்கள் அழிந்து படும். ஆகவே இனிப்பையும் ப்ராசஸ்ட் ஃபுட் எனப்படும் வெளியில் வாங்கும் பதப்படுத்தப்படும் உணவு வகைகளையும் தவிருங்கள்.

63. விடமின் B12 குறைந்திருந்தால் நினைவாற்றல் குறையும். மனத்தின் ஆற்றல் குறையும். அதாவது மூளை ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். பால், முட்டை, மாமிசம் ஆகியவற்றில்  B 12 நிறையவே கிடைக்கும்.

64. மாமிசம், வெண்ணெய், சீஸ், க்ரீம், ஐஸ் க்ரீம் போன்றவை சாச்சுரேடட் கொழுப்பு வகைகளை அதிகம் கொண்டவை. அவை நினைவாற்றலைக் குறைத்து மறதியை அதிகப்படுத்தும். ஆகவே இவை தவிர்க்கப்பட வேண்டியவை.

65. க்ரீன் டீ : இதில் பாலிபெனால் எனப்படும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது உங்கள் மூளை செல்கள் சேதமாவதிலிருந்து தடுப்பவை. ஆகவே இதை வழக்கமாக அருந்தி வரலாம். இது நினைவாற்றலையும் கூடவே எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கும் மன ஆற்றலையும் கூட்டும்.

66. பழ ரஸம்: க்ரேப் ஜூஸ் அருந்துவது நல்லது. சரியான அளவு – பெண்ணுக்கு ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ், ஆணுக்கு இரண்டு கிளாஸ்! இரத்தத்தை மூளைக்குக் கொண்டு செல்லும் ரெஸ்வெரட்ரால் (Resveratrol) இதில் அதிகம் உள்ளது. அல்ஜெமிர் எனப்படும் மறதி நோயைத் தடுப்பது இது. புதிய திராட்சைப் பழம், கடலையும் கூட இதே சக்தியைத் தர வல்லவை. 

67. எப்போதும் உடலில் நீர் அருந்தி, உடலை தாகம் ஏற்படுத்தி வற்ற விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் டீ ஹைட்ரேட் நிலையை அடைந்தால் மூளைச் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும்.

68. கறி மசால் பொருள்கள் (Spices) : Cumin மற்றும் cilantro  ஆகிய கறி மசால் பொருள்கள் நினைவாற்றலைக் கூட்டுபவை என ஆய்வுகள் கூறுகின்றன. இதை உரிய அளவில் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

69. பச்சைக் கீரை வகைகள், பக்கவாதம், அல்ஜெமிர், பார்க்கின்ஸன் ஆகிய மூளையைப் பாதிக்கும் நோய்களிலிருந்து காக்கும். ஆகவே நல்ல புதிதாக, இலைகளுடன் உள்ள கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

70. பருப்பு வகைகள் மூளைக்கு ஊட்டச் சத்தை அளிப்பவை. பூசணி விதைகளில் உள்ள Zinc  நினைவாற்றலைக் கூட்டும். பருப்பு வகைகளில் உள்ள விடமின் E மூளைச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.

71. கார்போஹைட்ரேட் உணவு வகைகள் உடலுக்குச் சக்தி தருபவை. ஆகவே முழு கோதுமை ப்ரெட், ஓட் போன்றவற்றை உணவில் சேர்த்துக்  கொள்வது நல்லது.

72. காபி அருந்துவது குறுகிய கால நினைவாற்றலைக் (Short term memory) கூட்டும். 8 அவுன்ஸ் காபி அருந்துவது காப்பியில் உள்ள போதுமான காபினை (Coffeine) உங்களுக்கு நல்கும்.

73. ஆப்பிள் : நியூரோபாதுகாப்பை நல்குவது ஆப்பிளில் உள்ள ஒரு வகை வேதிப் பொருளான க்வெர்சிடின் (Querceting). மறதியைத் தவிர்ப்பது இது. இந்த வேதிப் பொருள் ஆப்பிளின் தோலில் தான் அதிகம் உள்ளது. ஆகவே தோலுடன் ஆப்பிளைச் சாப்பிட வேண்டும்.

74. சாக்லட் : நல்ல சாக்லட்டில் உள்ள ஃப்லவொனால் (Flavonols),  குறுகிய கால நினவாற்றலை அதிகரிக்கும்.

75. சூயிங் கம் : இதை விளையாட்டாக அனைவரும் வாயில் போட்டு மென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இது ஒரே நிலையைக் கொண்டிருக்கவும் (Mood stablity and alertness) எச்சரிக்கையுடன் இருக்கவும் உதவுகிறது. 

76. முட்டையும் சிக்கனும் : எது முதலில் தோன்றியது முட்டையா கோழியா என்ற ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம். இவை நினைவாற்றலைக் கூட்டுபவை. மூளைத் திறனை அதிகரிப்பவை.

77. கொழுப்புப் பொருள்கள் : அதிக அளவில் இல்லாமல் அளவோடு கொழுப்புப் பொருள்களை உண்பது நீண்ட கால நினவாற்றலைத் தரும். ஜீரணிக்கும் சமயம், கொழுப்பு பொருள்களிலிருந்து வெளிப்படும் ஹார்மோனுக்கு இந்த சக்தி உண்டு.

78. க்ளுகோஸ் : அளவோடு சாப்பிட்டால் எதுவும் அமிர்தமே. 25 கிராம் என்ற அளவில் உட்கொள்ளும் போது, இது எச்சரிக்கை தன்மையையும் நினைவாற்றலையும் ஊக்குவிக்கிறது.

79. பால் :  தினமும் பால் அருந்துபவர்கள் நினைவாற்றலையும், மூளைத்திறனையும் கொண்டிருப்பர் என்கிறது ஆய்வு. தினமும் ஒரு கிளாஸ் பாலை அருந்த வேண்டும்.

80. ஜங்க் உணவு வகைகள் : இவை உடலைப் பாழ்படுத்தும். மூளையை இருட்டடிப்பு செய்யும். உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டியவை ஜங்க் ஃபுட்.

81. மீன் எண்ணெய் : இது மூளை உறைப் பொருளாக உதவுகிறது. இதில் உள்ள EPA மற்றும் DHA என்பவை உணர்ச்சி மையத்தை வலிமைப் படுத்துகிறது.கவன சக்தியை அதிகரிக்கிறது.

82. மல்டி விடமின் : பல்வேறு வகையான விடமின் மாத்திரைகளைச் சாப்பிட பிடிக்கவில்லை எனில் எல்லாம் கலந்த மல்டி விடமின் மாத்திரைகளை டாக்டர் பரிந்துரையில் குறிப்பிட்டபடி அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம்.

83. சாப்பிடும் அளவைக் குறையுங்கள் : அதிகமாக உணவை எடுத்துக் கொள்வது மூளைக்கு இரத்த ஓட்டத்தைத் தடை செய்து குறைவாக்கி ஜீரண மண்டலத்திற்கு அதிக ரத்த ஓட்டத்தைத் தருகிறது. ஆகவே உணவின் அளவைக் குறைப்பதன் மூலம் மூளை ஆற்றலைக் கூட்ட வழி வகுத்தவர்கள் ஆவீர்கள். சோதனைச் சாலைகளில் குறைவாக கலோரிகள் உள்ள உணவை எலிகளுக்குச் சோதனை அடிப்படையில் தந்த போது இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

84. காலை உணவு : காலை உணவை ஏற்க மறுத்த சிறுவர்கள் அதைச் சாப்பிட ஆரம்பித்த பின்னர் கணிதத்தில் திறமை உள்ளவர்களாவதை ஆய்வுகள் உறுதிப் படுத்தியுள்ளன. ஒரு நாளில் மிக முக்கியமான உணவு காலை உணவே. ஒவ்வொரு நாளில் செயலாற்றலுக்கும் எரிபொருளாக இருந்து உங்களை இயக்க வைப்பது காலை உணவே தான்.

85. மது வேண்டாம். மூளையைப் பாழ்படுத்தி உடல் இயக்கத்தைத் தடுப்பது அதிக மது அருந்துவதே. இதன் தீய விளைவுகளைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையே இல்லை.

*** 

tags- 100 வழிகள,  மூளை