கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு எதிரியை செயலிழக்கச் செய் (Post No.11271)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,271

Date uploaded in London – –    17 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மானேஜ்மெண்ட் வழிகள்!

கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு எதிரியை செயலிழக்கச் செய்!

ச.நாகராஜன்

நவீன மேலாண்மை நிர்வாகம் பல யுக்திகளைக் கொண்டது.

அதில் ஒன்று : கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு எதிரியை செயலிழக்கச் செய்! என்பதாகும்.

இதை விளக்க ஒரு குட்டிக் கதை உண்டு.

அது இதோ:

ஒரு ஊரில் வணிகன் ஒருவன் வாழ்ந்து வந்தான். செல்வத்தை இன்னும் மிகுதியாகச் சேர்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு வந்தது. ஆகவே வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வணிகம் செய்து பணத்தைச் சம்பாதிக்கலாம் என்று அவன் நினைத்தான்.

கூடவே சூக்ஷ்மமான அவன் எச்சரிக்கை புத்தி அவனை ஒரு கேள்வி கேட்டது.

“ஒரு வேளை வணிகமே செய்யமுடியாமல் போய் பணம் சம்பாதிக்க முடியாமல் நஷ்டம் அடைந்து விட்டால்? வெளி நாட்டில் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்?” அவன் யோசித்தான்.

“ஒரு வேளை வெளிநாட்டு வணிகத்தில் நஷ்டம் அடைந்து விட்டால் இங்கு திரும்பி வந்து விடலாம். திருப்பி இங்கேயே வணிகத்தைச் செழிக்கச் செய்யலாம். அதற்கு  முதலீடாக ஒரு பெருமளவு பணத்திற்கு இங்கேயே இப்போதே வழி செய்து விட்டுப் புறப்படலாம்.”

இந்த எண்ணம் அவனுக்கு உற்சாகத்தைத் தந்தது.

அவன் ஒரு இரும்பு வியாபாரி.

நல்ல உயர்தர இரும்புத் தண்டுகளில் 100 டன் இரும்பை எடுத்தான்.

அவற்றைத் தனது நண்பனிடம் சென்று கொடுத்து, “நண்பா! நான் வெளிநாடு செல்கிறேன். வரும் வரை இதை பத்திரமாக வைத்திரு” என்றான்.

அந்த நண்பன் ஆவலுடன் அவற்றை வாங்கிக் கொண்டு, “சரி” என்றான்.

மாதங்கள் சில கழிந்தன. வெளிநாட்டு வர்த்தகத்தில் லாபம் வரவில்லை.

உள்ள பண்டமும் போய் நஷ்டத்தில் முடிந்தது.

வருத்தத்துடன் தன் சொந்த நாடு திரும்பினான் வணிகன்.

ஆனால் அவனுக்கு ஒரு ஆறுதல், ‘100 டன் விலை உயர்ந்த இரும்புத் தண்டுகள் உள்ளனவே, அவற்றை வைத்து நல்ல நிலையை அடைந்து விடலாம்’ என்று அவன் எண்ணினான்.

நேராக நண்பனிடம் சென்று தனது வணிகம் நினைத்தபடி நன்றாக நடக்கவில்லை என்று கூறி, “உன்னிடம் கொடுத்தேனே, இரும்புத் தண்டுகள் அவற்றைக் கொடு” என்றான்.

பேராசைக்காரனான அவனது நண்பன் திடுக்கிட்டான்.

“ஐயோ! அந்தக் கதையை ஏன் கேட்கிறாய்! அவை அனைத்தையும் பத்திரமாக என் ஷெட்டில் வைத்திருந்தேன். ஆனால் எலி வந்து அவற்றைத் தின்று விட்டது. நான் என்ன செய்வேன்?” என்றான் நண்பன்.

நண்பனின் மோசடி வணிகனுக்குப் புரிந்தது.

சற்று யோசித்து விட்டு சொன்னான்; “ஆமாம், ஆமாம், பொல்லாத எலி பற்றி எனக்குத் தெரியாதா என்ன?”

நண்பனுக்கு ஒரே குஷி. அப்படியே தான் சொல்வதை அவன் நம்பி விட்டான், சண்டையும் போடவில்லை!

இருந்தாலும் தான் மிகவும் நல்லவன் என்று அவன் நம்பவேண்டும் என்று நினைத்த நண்பன் வணிகனிடம் மறுநாள் அவனுக்கு விசேஷ விருந்து ஒன்று தரப்போவதாகச் சொல்லி அவனை அழைத்தான்.

“சரி, நாளை வருகிறேன்” என்று சொல்லி விட்டு வணிகன் கிளம்பினான்.

செல்லும் வழியில் மார்கெட்டில் நண்பனின் குழந்தைகளில் ஒன்றைக் கண்டான். அந்தக் குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்று தன் வீட்டு அறை ஒன்றில் பத்திரமாகப் பூட்டினான்.

மறுநாள் குறித்த நேரத்தில் நண்பனின் வீட்டுக்கு வந்தான். அங்கே நண்பன் மிக்க வருத்தத்துடன் சோகமாக இருந்தான்.

“என்ன விஷயம்?” என்று கேட்டான் வணிகன்.

“மார்கெட்டிற்கு போன என் மகனை நேற்றிலிருந்து காணோம்!” என்று புலம்பினான்  நண்பன்.

“ஓ! அது உன் மகனா? நேற்று திரும்பும் போது மார்கெட் வழியாகத் தான் சென்றேன். அங்கு குருவி ஒன்று ஒரு பையனை தூக்கிக் கொண்டு பறந்தது. என் கண்ணால் அதை நான் பார்த்தேன்? என்றான் வணிகன்.

நண்பன், “ என்ன உளறுகிறாய். குட்டிப் பறவை குருவி! அது என் மகனை – வளர்ந்தவனை- தூக்கிக் கொண்டு போனதாகச் சொல்கிறாய்! உன் மூளை கெட்டு விட்டதா, என்ன?” என்றான்.

“நண்பா! காலம் மாறி விட்டது இப்போது, உனக்கே தெரியும்! எலியானது நூறு டன் இரும்பைத் தின்னுகின்ற காலம் இது! ஒரு சிட்டுக்குருவி குழந்தையைத் தூக்கிக் கொண்டு பறந்து போகாதா, என்ன?” என்றான்.

நண்பனுக்கு இப்போது புரிந்து விட்டது, என்ன நடந்தது என்று.

உண்மையை வணிகனிடம் ஒப்புக் கொண்டான். 100 டன் இரும்பையும் திருப்பித் தந்தான்.

வணிகனும் அவனது மகனை பத்திரமாக அவனிடம் ஒப்படைத்தான்.

சரி, கதையின் நீதி என்ன?

கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு எதிரியை செயலிழக்கச் செய்!

இது தான் இன்றைய மானேஜ்மெண்ட் யுக்தி!

உனது எதிரிகள் உனக்கு என்ன செய்கிறார்களோ அதை அப்படியே கண்ணாடி பிரதிபலிப்பது போல அவர்களுச் செய்து விடு! அவர்களுக்குப் புரிந்த பாஷையில் நீ சொல்ல வேண்டியதைச் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்வார்கள்! அவர்கள் உனக்குக் கையாண்ட அதே முறையை திருப்பி விடு – கண்ணாடி பிரதிபலிப்பது போல!

உனக்கு வெற்றி நிச்சயம்

இது இந்தியாவின் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த நீதிக் கதைகளுள் (Indian Fables) ஒன்று.

‘THE 48 LAWS OF POWER’ என்ற தனது புத்தகத்தில் Robert Greene இதை ஒரு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார்! (464 பக்கங்கள்)

Disarm and infuriate with the Mirror Effect! இது தான் அவர் கூறும் நாற்பத்தி நான்காவது விதி!

**

புத்தக அறிமுகம் – 59

இது தான் இந்தியா!

பொருளடக்கம்

என்னுரை

1. இது தான் இந்தியா! – ஜிம் கார்பெட்டின் அனுபவம் – 1

2. இது தான் இந்தியா! – ஜிம் கார்பெட்டின் அனுபவம் – 2

3. இது தான் இந்தியா – ஜெஃப்ரி ஃபர்னாலின் அனுபவக் கூற்று!

4. இது தான் இந்தியா – ஹூவான் சு வாங்!

5. இந்திய ஜீவனைத் துடிக்க வைக்கும் ஏழை – ஹிந்துப் படகோட்டி!

6. துக்ளக் விரும்பிய கங்கை நீர்!

7. அக்பர் விரும்பிய அமரத்தன்மை அளிக்கும் கங்கை நீர்!

8. ஔரங்கசீப் பயன்படுத்திய கங்கை நீர்!

9. கங்கையின் புனிதம்!

10.ஹிந்து மதம் பற்றி டேவிட் ஃப்ராலி (வாமதேவ சாஸ்திரி)

11. பந்தரைத் தந்த மஹாராஜா!

12. ஹிந்துக்களின் உயரிய குணங்கள்-சில உண்மைச் சம்பவங்கள் – 1

13. ஹிந்துக்களின் உயரிய குணங்கள்-சில உண்மைச் சம்பவங்கள் – 2

14. ஹிந்துக்களின் தர்ம சிந்தனை!

15. ஹிந்து பரம்பரையின் நற்பண்புகள் எந்நாளும் தொடரும்!

16. வேதம் விளக்கும் சந்தோஷம்!

17. ஹிந்துக்களுக்கு தர்ம வாழ்வே வாழ்வு!

18. பாம்புகள் காத்த பைரவர் ஆலயம்!

19. கொள்ளைக்காரனைக் காப்பாற்றியவரைக் கண்டித்த மாமனாரும், மகனுக்கு நல்வழி காட்டிய தாயாரும்!

20. அக்பரும் சூரிய நமஸ்காரமும்!

21. பாரில் உள்ள தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம்!

22. பூர்வ குடியினரின் ஆத்திரமும் ஒரு விஞ்ஞானியின் திகைப்பும்!

23. க்ராண்ட் கான்யான் அனுபவமும் டாக்ஸி டிரைவர் தந்த வைர நகைகளும்!

24. தங்கப் பல்லக்கில் ஏற மறுத்த ராஷ்டிரபதி!

25. சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததே, இது ஒரு அதிர்ஷ்ட தினம்!

26. ஜெனரல் கரியப்பா இந்திய ராணுவத் தலைமைப் பொறுப்பை ஏற்றது எப்படி?

27. தன் புடவையால் இருவரைக் காத்த பெண்மணி!

28. மற்ற மதங்களை விட ஹிந்து மதம் உயர்ந்தது-ஏன்?

29. வந்தே மாதரம்! கீதம் பிறந்த கதை!

30. வேத மந்திரங்கள் மூலம் தீ மூட்டப்பட்ட உண்மை சம்பவம்!

31. இறந்த மகளை உயிர்ப்பித்த சரஸ்வதி தேவியை வணங்கத் துவங்கிய சுல்தான் இரண்டாம் இப்ராஹீம்!

32. நமது தேசத்தின் அடையாளம்!

33. இந்தியா மறந்த, ஜப்பான் போற்றும் ஒரு மகத்தான இந்தியர்!

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இந்தியா பூவுலகின் புண்ய பூமி. உலகின் தாயகம். இது கடவுளால் நிர்மாணிக்கப்பட்ட தேசம் என்பதை சம்ஸ்கிருத சுபாஷிதம் ஒன்று இப்படித் தெரிவிக்கிறது:

ஹிமாலயம் சமாரம்ய யாவத் இந்து சரோவரம் |
தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே ||

இமய மலையில் ஆரம்பித்து இந்து மாகடல் வரை எது எல்லையைக் கொண்டுள்ளதோ அது கடவுளால் நிர்மாணிக்கப்பட்ட ஹிந்துஸ்தானம் என்று அறியப்படுவதாகும். புவியில் வாழும் அனைவரும் பாரத தேசத்தின் ரிஷிகளிடமிருந்து எப்படி வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதைக் கற்க வேண்டும் என்கிறது மனு ஸ்மிருதி.

ஏதத்தேச ப்ரசூதஸ்ய சகாஷாதக்ரஜன்மனா |
ஸ்வம் ஸ்வம் சரித்ரம் சிக்ஷேரன் ப்ருதிவ்யாம் சர்வமானவா: ||

இந்தப் பூமியில் வசிக்கும் அனைவரும் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பது பற்றியும் நல்லொழுக்கம் கொள்வது பற்றியும் இந்த தேசத்தின் (பாரதத்தின்) புராதன ரிஷிகள், மகான்கள் ஆகியோரிடமிருந்து கற்க வேண்டும் – (மனு ஸ்மிருதி)

எல்லையற்ற இதன் பெருமையை பல்லாயிரக் கணக்கான சம்பவங்கள் அன்றிலிருந்து இன்று வரை நிரூபித்துள்ளன; நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

கடல் போன்ற அந்த சம்பவங்களில் ஒரு சில திவலைகளைக் கட்டுரைகளாகப் படைத்து வந்தேன்.

இந்தியாவின் மேன்மையைச் சுட்டிக் காட்டும் கட்டுரைகள் இப்போது பல பத்திரிகைகளிலும் ப்ளாக்குகளிலும் வெளியாகி வருகின்றன.

அவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, தொகுத்து அவ்வப்பொழுது ஆங்கிலத்தில் கல்கத்தாவிலிருந்து வெளிவரும் வார இதழான ‘ட்ரூத்’ – TRUTH வெளியிட்டு வருகிறது. அவற்றில் பலவற்றை அவ்வப்பொழுது தமிழாக்கம் செய்து தமிழ் வாசகர்களுக்கு அளித்து வந்தேன்.

இது போன்ற நல்ல கட்டுரைகளை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் https://sdpsorg.com/truth இணைய தளத்தில் படிக்கலாம்.

‘ட்ரூத்’ ஆசிரியர் டாக்டர் திரு ஷிப் நாராயண் சென் (Dr. Shib Narayan Sen) உற்ற நண்பராக இருந்து எனக்கு அவ்வப்பொழுது ஊக்கமும் உற்சாகமும் தந்து வருகிறார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.

இந்தக் கட்டுரைகளை www.tamilandvedas.com இல் அவ்வப்பொழுது வெளியிட்டு வந்த லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

இந்த நூலை அழகுற வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டுரைகள் வெளியான போது அவ்வப்பொழுது பாராட்டி எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                               ச. நாகராஜன்
31-8-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**

வால்மீகி  ராமாயணத்தில் பெண்கள் – 2 (Post.11,270)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,270

Date uploaded in London – 16 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியிடப்பட்டது .

இந்து மதம் ஒன்றில்தான் பெண்ணுக்கு சம உரிமை அளிக்கப்படுகிறது. இதை அர்த்த நாரீஸ்வரர் சிற்பம் விளக்குகிறது (சிவன் பாதி, உமை பாதி உருவம்). மனைவிக்கு வேதத்தில் அர்த்தாங்கினி  என்று பெயர். இதை இன்று ஆங் கிலத்தில்  தி அதர் ஹாப் THE OTHER HALF என்கின்றனர். இந்து மதத்தில் வாம/ இடது பாகத்தைப் பெண்களுக்கு அளித்தனர். இதை கிறிஸ்தவர்கள் அப்படியே எடுத்துக் கொண்டனர். பைபிளின் முதல் அதிகாரத்திலேயே ஆணின் இடது விலா எலும்பை எடுத்து இறைவன் பெண்ணை உருவாக்கினான் என்று கிறிஸ்தவர்கள் எழுதிவைத்தனர். அர்த்த நாரீஸ்வரர் சிலையில் இடது பக்கம் உமை /பார்வதி இருப்பதைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொண்டனர். பெண்களுக்கு தர்ம பத்தினி என்று இந்து மதத்தில் பெயர்; அதாவது அவள் இல்லாமல் எந்த நல்ல காரியமும் செய்யக்கூடாது; செய்ய முடியாது. பிற மதங்களில் பெண்களுக்கு இந்த பங்கு, பணி விதிக்கப்படவில்லை. யாக யக்ஞங்களில் அவர்கள் அருகில் நிற்பதோடு அவர்கள் ஒரு தர்ப்பைப் புல்லின் மூலம் கணவனின் தோளைத் தொட்டுக்கொண்டு நிற்பார்கள். அதாவது அவர்கள்தான் BATTERY பாட்டரி; அவர்கள் மூலம் கரண்ட் பாய்ச்சப்பட்டவுடன்தான் கணவர் சக்தி பெறுகிறார். நான் இல்லாமல் நீ இல்லை என்று சொல்லுவது போன்றது இது.

XXX

இவைகளை வால்மீகி ராமாயணத்தில் (வா.ரா .)காண்போம்

சீதையை காட்டுக்கு வரவேண்டாம் ஏனெனில் சிங்கம், புலி உலவும்; காலில் முள் குத்தும்; மேலும் சந்நியாசி (No sex; celibate life) வாழ்க்கை என்று எச்சரிக்கிறான்; சீதையோ கணவன் இருக்கும் இடமே சொர்க்கம்; ராமன் இருக்கும் இடமே அயோத்தி ; கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை! சாமியே ராமப்பா என்கிறாள் .

மனைவி என்பவள் பிறவிதோறும் தொடர்ந்து வருபவள்; இதற்கு சங்கத் தமிழ் நூல்களும் இயம்பும். எற்றறைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம் (ஆண்டாள் திருப்பாவை 29) என்று சீதை கூறுகிறாள்:

आर्यपुत्र पिता माता भ्राता पुत्रस्तथा स्नुषा।

स्वानि पुण्यानि भुञ्जानाः स्वं स्वं भाग्यमुपासते।।2.27.3।।

Translation

आर्यपुत्र ஆர்ய புத்ர (பண்பாடுமிக்கவனே) , पिता தந்தை , माताதாய் , भ्राता சகோதரன் , पुत्रः மகன் , तथा அவ்வாறே , स्नुषा மருமகள் , स्वानि அவர்களுடைய , पुण्यानि புண்யங்களை , भुञ्जानाःஅனுபவிக்கையில் , स्वं स्वम् அவரவர்  भाग्यम् விதிப்படி , उपासते கிடைக்கிறதல்லவா

இங்கே பூர்வ ஜன்மக் கருத்து வருகிறது

ஆர்ய புத்ர பிதா மாதா ப்ராதா புத்ரஸ் ததா

ஸ் வானி புண்யானி புஞ்ஜனாஹா  பாக்யம் உபாஸதே

XXX

வா.ரா.2-27-6

यदि त्वं प्रस्थितो दुर्गं वनमद्यैव राघव।

अग्रतस्ते गमिष्यामि मृद्नन्ती कुशकण्टकान्।।2.27.6।।

“ராகவா! (ரகு வம்ச ஆண் மகனே), நீ இப்போதே காட்டுக்குப் புறப்பட்டால் , உனக்கு முன்னே நான் முட்களையும், புல்லையும் நசுக்கிக்கொண்டு நட ப்பேன் — என்று சீதை சொல்கிறாள். அதாவது உனக்கு மெத்தை போன்ற பாதையைப் போட்டுத் தருவேன்”.

राघव ராகவா , अद्यैव இப்போதே , त्वम् நீங்கள் , दुर्गम् ஊடுருவ முடியாத , वनम् காட்டுக்கு , प्रस्थितः यदि புறப்பட்டால்  कुशकण्टकान् குச புற்கள், முட்கள் மீது , मृद्नन्ती நசுக்கி மெதுவாக்கிக்கொண்டு , ते अग्रतः iஉனக்கு முன்னால் , गमिष्यामि I நான் செல்வேன்

யதி த்வம் பிரஸ்திதோ துர்கம் வானம் அத்யைவ ராகவ

அக்ரதஸ்தே கமிஷ்யாமி ம்ருத்நந்தி குச கண்டகான்

தமிழில் காதலிக்குத்தான் காதலன் இதைச் செய்வதாகக் காண்கிறோம். ஆனால் வால்மீகியோ காதலி (சீதை இதைச் செய்வதாகக் கூறுகிறார்.

XXX

भर्तुर्भाग्यं तु भार्यैका प्राप्नोति पुरुषर्षभ।

अतश्चैवाहमादिष्टा वने वस्तव्यमित्यपि।।2.27.4।।

पुरुषर्षभ ஆண்களில் சிறந்தவனே , भर्तुर्भाग्यं tகணவனுக்கு எதுவோ , एका அதை மட்டுமே , भार्या மனைவி , प्राप्नोति அடைகிறாள் , अतश्च ஆகையால் , अहमपि நானும் கூட , वने காட்டில் t, वस्तव्यमिति வசிக்கவேண்டும் l, अदिष्टा एवஎன்பதே கட்டளை (உன்னுடைய சின்னம்மா போட்ட உத்தரவு உனக்கு மட்டுமல்ல; எனக்கும்தான். ஏனெனில் ஆணும் பெண்ணும் ஒன்னு ; அதை அறியாதவன் வாயில மண்ணு )– என்று சீதை செப்புகிறாள்

பர்த்து பாக்யம் து பார்யைகா ப்ராப்னோதி புருஷ ஷர்ப

அதஸ் சைவா ஹமாதிஷ்டா வனே வஸ்த்வயம்  இதி அபி

XXX

சீதா தேவி, கணவனுக்கு ஆலோசகராகவும் காட்சி தருகிறாள் (வா.ரா. 3-9-3/4)

காமம் காரணாமாக 3 தீமைகள் ஏற்படுகின்றன.முதலில் பொய் சொல்லுவான், அதைவிடக் கொடுமையானது பிறர் மனைவி மீது ஆசைவைப்பான்;காரணமே இல்லாமல் வன்முறையில் ஈடுபடுவான் ; கடைசி இரண்டும் மிகவும் கொடுமையானவை — என்று சீதை உரைக்கிறாள்

त्रीण्येव व्यसनान्यत्र कामजानि भवन्त्युत।

मिथ्यावाक्यं परमकं तस्माद्गुरुतरावुभौ।।3.9.3।।

परदाराभिगमनं विना वैरं च रौद्रता।

अत्र இங்கே(இந்த சூழ்நிலையில்  ), कामजानि காமத்தினால் ஏற்படும் , व्यसनानि தீயவை , त्रीण्येव மூன்று மட்டுமே , उत தான் , भवन्ति இருக்கின்றன , मिथ्यावाक्यम् பொய் சொல்லுதல் , परमकम् அதிலும் பெரிது , परदाराभिगमनम् மற்றவர் மனைவியுடன் கொள்ளும் தொடர்பு  विना वैरम् விரோதமே இல்லாதபோது , रौद्रता வன்செயலில் ஈடுபடுதல் , उभौ இந்த இரண்டு  तस्मात् ஆக , गुरुतरौ மோசமானவை .

த்ரீயமேவ வ்யஸனானி  அத்ர  காமஜானி பவந்த் யுத

மித்யாவாக்யம் தஸ்மாத் குரு தரா உபெள பரதாராபிகமனம்

வினா வைரம் ச ரெளத்ரதா

XXX

வாலியின் மனைவி தாரா மகனைவிட, கணவனை அதிகமாக நேசிக்கும் காட்சியையும் படம்பிடித்துக் காட்டுகிறார் புலவர் வால்மீகி: (வா.ரா. 4-19-18)

पुत्रेण मम किं कार्यं राज्येनच किमात्मना।

कपिसिंहे महाभागे तस्मिन्भर्तरि नश्यति4.19.18।।

புத்ரேண  மம கிம் கார்யம் ராஜ்யேன  ச கிம் ஆத்மனா

கபி ஸிம்ஹே  மஹாபாகே தஸ்மின் பர்த்தாரே நஸ்யதி


कपिसिंहे வானர வம்சத்தில் சிங்கம் போன்ற , महाभागे மிகச்சிறந்த , तस्मिन् அவர்  , नश्यति सति இறந்துகொண்டு இருக்கிறார் , मम எனக்கு  पुत्रेण என்னுடைய மகனால் , किं कार्यम् என்ன பயன்  राज्येन (अपि) च இந்த ராஜ்யம் கூட  , आत्मना என் உயிரும் கூட , किम् இருந்து என்ன /பயன்??

சிங்கம் போன்ற என் கணவன் இறந்த பின்னர் என் மகனால், ராஜ் யத்தால் என்ன பயன் ? உயிர் வாழ்ந்து என்ன பயன் ? – இது வாலியின் மனைவியின் புலம்பல்/அழுகை

TO BE CONTINUED………………………………..

Tags- வால்மீகி , ராமாயணம், பெண்கள், பகுதி 2, தாரா, வாலி சீதை

செப்பு மொழி முப்பத்தி ஒன்று! (Post No.11,269)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,269

Date uploaded in London – –    16 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்பு மொழி முப்பத்தி ஒன்று!

ச.நாகராஜன்

1. மெஷின்களுக்கு நாம் மெஷின்கள் இல்லை என்று நிரூபிக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் உள்ளோம்!

We live in an age where we have to prove to machines that we are not machines!

2.  வயதாக ஆக எனக்கும் கம்ப்யூட்டருக்கும் ஒத்துப் போகும் பல விஷயங்கள் உள்ளதைக் கண்டு கொண்டேன்.

இருவரும் நிறைய மெமரி, டிரைவுடன் ஆரம்பித்தோம். அப்புறம் இருவரும் அவுட் டேட் ஆகி விட்டோம். திடீரென்று இருவரும் எதிர்பாராத விதமாக க்ராஷ் ஆகி விட்டோம். இதன் விளைவாக இருவருமே பார்ட்ஸ்களை மாற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம். – வயதான ஒரு பெண்மணியின் கண்டுபிடிப்பு

The older I get more I have in common with Computers.

We both start out with lots of memory and drive, then we become outdated, crash unexpectedly, and eventually have to have our parts replaced.

–          An old woman’s findings 

3.  நான் உங்களது நவீன வசன கவிதை சிலவற்றைப் படித்தேன். அதை (கவிதையை கழட்டி விட்டு விட்டு) வசனமாக்கியது யார் என்று தான் ஆச்சரியப்படுகிறேன். – ஜான் பாரிமோர்

John Barrymore: I have read some of your modern free verse and wonder who set it free

4. வசன கவிதை எழுதுவது என்பது நெட்டை தலைகீழாக்கி டென்னிஸ் விளையாடுவது போலத் தான். – ராபர்ட் ஃப்ராஸ்ட்

Robert Frost: Writing free verse is like playing tennis with the net down.

5. நீங்கள் கவிதை எழுத விரும்பினால் பிழைப்புக்கு வேறு ஏதேனும் ஒரு வழி இருக்க வேண்டும். – டி.எஸ். எலியட்

T S Eliot: If you want write poetry you must earn a living some other way.

6. மொழி என்பது எளிதாக்கப்பட்ட சமிக்ஞை. கவிதை என்பது எளிதாக்கப்பட்ட மொழி! – ஃப்ரான்ஸிஸ் ஸ்கார்ஃப்

Francis Scarfe: Language is simplified gesture and poetry is simplified language.

7. கவிதை என்பது குரலுடன் நடனமாடுவது போன்ற ஒன்று.

Poetry is a sort of dancing with the voice

8. வசன கவிதை: மீட்டரின் மீதான மனதின் வெற்றி!

Free verse: The triumph of mind over meter.

9. நான் ஒரு ஹாலிவுட் எழுத்தாளர். ஆகவே எனது மூளையைக் கழட்டி வைத்து விட்டு ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட்டை அணிந்து கொண்டிருக்கிறேன்.  – பென் ஹெஸ்ட்

Ben Hecht : I’m a Hollywood writer, so I put on a sports jacket and take off my brain.

10. காலம் ஒரு சர்க்கஸ், மூட்டை கட்டிக்கொண்டு நகர்ந்து கொண்டே இருக்கும்.

Time is a circus always packing up and moving away.

11. வார்த்தைகள் உங்களை ஒரு எண்ணத்தைச் சிந்திக்க வைக்கும். இசை உங்களை ஒரு உணர்வை உணர வைக்கும். பாட்டு உங்களை ஒரு எண்ணத்தை உணர வைக்கும். ஸாண்டிஸ்

ஈ.ஒய். ஹார்பர்க் மேற்கோள் (1896-1981 அமெரிக்காவின் பிரபலமான பாடலாசிரியர், இடதுசாரி சிந்தனையுள்ளவர்)

“Words make you think a thought. Music makes you feel a feeling. A song makes you feel a thought.” santiz

E. Y. Harburg quotes (1896-1981 american popular lyricist leftist views sympathizer)

12. கஞ்சனுக்கு எப்போதும் தேவை உண்டு!

The miser is always in want!

13. தொட்டிலை ஆட்டும் கையே உலகை ஆள்கிறது!

The hand that rocks the cradle rules the world!

14. போதை மருந்தைப் புகைப்பவன் எப்படியாவது போதை மருந்தைக் கண்டுபிடிப்பான்.

An opium smoker will always find opium.

15.  கர்வமுள்ள ஒருவனின் மனமும் ஒரு பிச்சைக்காரனின் திருவோடும் என்றுமே ஒத்துப் போகாது.

A proud mind and a beggar’s purse agree not together.

16. நர்ஸ்கள் குழந்தைக்கு ஒரு துண்டு இனிப்பைக் கொடுத்து விட்டு அந்தச் சாக்கில் இரண்டு துண்டை தன் வாயில் போட்டுக் கொள்வர்.

Nurses put one bit in the child’s mouth and two in their own.

17. அவனை நான் ஏன் அடித்தேன் என்றால் அது உன்னை பயமுறுத்தத் தான்!

I beat him to frighten you!

18. ஒரு எதிரி என்பது மிகவும் அதிகம், நூறு நண்பர்கள் என்பது மிகவும் குறைவு!

One enemy is too many, a hundred friends too few.

19. வெப்பத்தைத் தாங்க சக்தி இல்லையெனில், சமையலறைக்குள் போகாதே!

If you can’t take the heat, stay out of the kitchen.

20. நடப்பது நடந்தே தீரும்!

What will be, will be!

21. துரோகம் செய்யும் நண்பனை விட வெளிப்படையாக உள்ள எதிரியே மேல்!

Better an open enemy than a false friend!

22. வறுமை வாசல் கதவைத் தட்டி விட்டு உள்ளே வரும் போது, காதல் ஜன்னல் வழியே வெளியே பறக்கும்!

When poverty comes in at the door, love flies out of the window!

23.  நாற்பது வயதிலும் நீ முட்டாள் என்றால் நிஜமாகவே நீ ஒரு முட்டாள் தான்!

A fool at forty is a fool indeed!

24. அவன் போப்பை விட பெரிய கத்தோலிக்கன்!

More catholic than the Pope!

25. நாக்கே தலையைக் காக்கும்!

The tongue is the protector of the head!

26. தாடி, கத்தரிக்கோல்- இரண்டுமே உன்னிடம் தான் இருக்கிறது!

The beard and the scissors are both in your hand!

27. பள்ளத்திலிருந்து வெளியே வந்தவன் கிணற்றில் விழுந்தானாம்!

Came out of the ditch and fell into the well!

28. மதில் மேல் எலிகள் உண்டு, எலிகளுக்கு காதுகள் உண்டு!

There are mice in the wall, and mice have ears.

29. சாவைத் தவிர மற்ற அனைத்திற்கும் ஒரு தீர்வு உண்டு!

There is a remedy for everything but death!

30. தூக்கம் என்பது சாவின் சகோதரன்!

Sleep is the brother of death!

31. அவர்களை ஜெயிக்க முடியவில்லை என்றால், அவர்களோடு சேர்ந்து விடு!

If you can’t beat them, join them!

பல தேசங்களில் வழங்கும் பழமொழிகள் ஒரே மாதிரியாக இருப்பது அதிசயமே! எங்கு வாழ்ந்தாலும் மனிதர்கள், மனிதர்களே!!

***

.

புத்தக அறிமுகம் – 58

தெய்வீக இரகசியங்கள்!

 பொருளடக்கம்

என்னுரை

1. விநாயக சதுர்த்தி வழிபாட்டின் இரகசியங்கள்!

2. திருவிளக்கு ஏற்றுவோம், செல்வச் சிகரம் ஏறுவோம்!

3. கலைமகளே, கடவுளர் தெய்வமே, கண் கண்ட தெய்வமே சரணம்!

4. லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் ஒரு இரகசியம்!

5. அனைத்து தெய்வங்களும் ஐக்கியம் : கேட்பதைக் கொடுக்கும் காமதேனு!

6. ஆடி மாதமும் அன்ன தானமும்!

7. சில சம்வாதங்களின் சுருக்கம்!

8. எந்தக் கேள்விக்கும் இதோ பதில்! இந்து மதம் வழங்கும் சம்வாதங்கள்!!

9. உயிர் காக்க உதவும் ஸ்தோத்திரங்கள்!

10. கஷ்டம் போக்கி இஷ்ட பூர்த்தி அருளும் (100) அஷ்டகங்கள்!

11. ஆச்சரியமூட்டும் சூரிய பூஜை ஸ்தலங்கள்!

12. நித்ய கல்யாணம் பச்ச தோரணம்! எத்தனை எத்தனை பண்டிகைகள்!

13. சீதா தேவி கூறிய கடைசிச் சொற்கள்!

14. அதிசயங்கள் பல கண்ட அற்புத பூமி அயோத்தி!

15. ரிஷிகள் தவம் புரியும் தலம் ரிஷிகேசம்; மோட்சத்தின் வாயில் ஹரித்வார்!

16. கைலாய யாத்திரைக்குப் புதிய சாலை!

17. இமயத்தில் சிவனது திருவிளையாடல்!

18. நுண்ணறிவை முழு ஆற்றலுடன் தரும் வேத கல்வி!

19. இந்துக்கள் சூரியனிடமிருந்து மந்திர ஒலியை எப்படிக் கேட்டார்கள்?!

20. விபூதி மஹிமை – 1

21. விபூதி மஹிமை – 2

22. விபூதி மஹிமை – 3

23. யாளி!

24. குருவுக்கா, கோவிந்தனுக்கா, யாருக்கு முதல் நமஸ்காரம்?!

25. தர்க்கம் பெரிதா, ஞானம் பெரிதா?

26. மௌனம் சர்வார்த்த சாதனம்!

27. ஒரு ரிஷியைச் சந்தித்த அரசன்!

28. கயிறு சார்த்திப் பார்த்தல்!

29. நான் ஏன் நன்றாக இருக்கிறேன்?

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

ஹிந்து தர்மம் ஒரு மதம்;

மதம் மட்டுமல்ல அது ஒரு தத்துவம்;

அது ஒரு தத்துவம் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை என்று பலரும் புகழ்ந்து பாராட்டும் சனாதன தர்மத்தில் மனிதனின் வாழ்க்கையை உயர்த்திச் செல்லும் ஏராளமான இரகசியங்கள் உள்ளன.

பிறந்தது முதல் இறப்பது வரை கர்ம பலன்களை அனுபவிப்பது உறுதி என்ற தலையாய கொள்கையை இந்து மதம் தருகிறது.

அதே சமயம் உன் தலை விதியை நீயே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் அது வலியுறுத்துகிறது.

தர்ம, அர்த்த, காமம் இவற்றுடன் மோக்ஷத்திற்கான வழியையும் காண்பித்து வாழ்வாங்கு வாழ வழி வகுக்கிறது சனாதன தர்மம்!

உத்தரேத் ஆத்மனாத்மானம் – ஆத்மாவை ஆத்மாவால் உயர்த்திக் கொள்க என்பது கண்ணபிரானின் கீதை அறிவுரை.

அதாவது உன்னை நீயே உயர்த்திக் கொள் என்பது இந்து மதத்தின் சாரம்.

இதற்கான வழிமுறைகளை, இரகசியங்களை நமது வேதம், புராணம், இதிஹாஸம், உபநிடதம், சாஸ்திரங்கள் உள்ளிட்டவற்றில் காணலாம்.

இந்த வழிமுறையில் தோன்றிய ரிஷிகள், அருளாளர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் ஏராளமான துதிகளையும் இதர வழிமுறைகளையும் நாம் மேம்படுவதற்காக நமக்கு வழிகாட்டி அருளியுள்ளார்கள்.

அவற்றைச் சுட்டிக் காட்டி பல கட்டுரைகளை ஞான ஆலயம், மாலை மலர் உள்ளிட்ட பத்திரிகைகளிலும் www.tamilandvedas.com ப்ளாக்கிலும் எழுதி வந்துள்ளேன்.

அவற்றின் தொகுப்பே இந்தக் கட்டுரைகள்.

இவற்றை அவ்வப்பொழுது வெளியிட்டு எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த மாலைமலர் அதிபர் திரு பாலசுப்ரமண்யன் ஆதித்தன் அவர்களுக்கும், ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களுக்கும், தமிழ் அண்ட் வேதாஸ் ப்ளாக்கைத் திறம்பட கடந்த பல வருடங்களாக நடத்தி வரும் லண்டன் திரு எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.

இந்த நூலை அழகுற வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஸ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டுரைகள் வெளியான போது அவ்வப்பொழுது வியக்கத்தக்க வகையில் எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

இந்தக் கட்டுரைகள் காட்டும் நெறிகள் மூலம் ஒருவர் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் இதைத் தமிழ் நெஞ்சங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                        ச. நாகராஜன்
23-8-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்-1 (Post No.11,268)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,268

Date uploaded in London – 15 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

வேத காலம் முதல் இந்தக் காலம் வரை பெண்களை வழிபடும் மதம் இந்துக்களின் மதம் மட்டுமே. பெண்களின் பெயரில் பல விரதங்களும் பண்டிகைகளும்  இருப்பது இதற்குச் சான்றாகும். மேலும் பெண்களை அழும்படி செய்தால் அந்தக் குடும்பம் வேரோடு அழியும் என்று மநு நீதி நூல் கூறுகிறது. மேலும் பெண்களுக்கு அவர்களுடைய சகோதரர்கள் ஏராளமான நகை நட்டுக்கள், துணி மணிகளை வாங்கிக் கொடுத்து அவர்களை எப்போதும் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கவிட வேண்டும் என்றும் மநு ஸ்ம்ருதி சொல்கிறது . பெண்களை சின்ன  வயதில் பெற்றோர்களும் இளம் வயதில் கணவர்களும் முதிய வயதில் மகன்களும் காப்பாற்றுவதை இன்றுவரை காண்கிறோம். ( இலங்கைத் தமிழர்கள் மட்டும் சிறிது மாற்றி இருக்கிறார்கள். முதிய வயதில் பெண்கள், மகள் (daughters)களுடன்தான் வாழவேண்டும்)

பெண்களை இந்துக்கள் பல கோணங்களில் அணுகுகிறார்கள். இதை சம்ஸ்க்ருத நூல்களிலும் தமிழ் நூல்களிலும் காணலாம். தாய் (Mother) என்ற நிலையில் வைத்துப் பார்க்கும்போது மிகவும் புகழ்வார்கள். மனைவி (wife) என்ற நிலையில் வைத்துப் பார்க்கையில் அழகு, அன்பு, காதல் கதைகளை வீசுவார்கள்; விலைமகள் (Prostitute) என்னும்போது சகதியை வாரி வீசுவார்கள். இதைத் திருக்குறள், கம்பராமாயணத்தில் கூடக் காண்கிறோம்.

வேத காலம் முதல் இதிஹாஸ காலம் வரை பெண்கள் கொடிகட்டிப் பறந்தார்கள் .கார்கி அபாலா விஸ்வ வாரா விஸ்பலா லோபாமுத்ரா ஆகிய வேதகாலப் பெண்கள் அக்காலப் பெண்களை நமக்குப்  படம்பிடித்துக் காட்டுகின்றனர். சுமார் 20 பெண்களுக்கு மேலாக வேத மந்திரங்களை இயற்றியள்ளனர் . அவற்றை இன்று வரை ஆண்கள், வேத பாட சாலைகளில் மனப்பாடம் செய்யவேண்டும் !

மஹாபாரத காலத்தில் சூதாட்டம் என்னும் கொடுமையில் சிக்கிய திரவுபதி எழுப்பும் கேள்விகள் பெண்களின் உரிமைப் போராட்டத்தைக் காட்டுகிறது. இந்தக் கட்டுரையில் வால்மீகி  ராமாயண (வா.ரா ) காலப் பெண்களின் நிலையைக் காண்போம் .சீதைஅனுசுயா (அனசூயா என்பது சரியான உச்சரிப்பு )அருந்ததி ஆகியோர் மிகவும் போற்றப்படுகின்றனர். இன்றுவரை பெண் குழந்தைகளுக்கு அந்தப் பெயர்களும் சூட்டப்படுகின்றன. அவர்களுக்கும் முன்னர் வாழ்ந்த தமயந்திசாவித்ரி பெயர்களும் இன்றுவரை புழக்கத்தில் உள்ளன.

Women in Valmiki Ramayana

வா .ரா . காலத்தில் பெண்கள் அந்தப்புரத்தில் ஒதுங்கி வாழவில்லை. வேத காலம் போலவே சுதந்திரப் பறவைகளாக இருந்தனர். ராமனை அயோ த்திக்குத் திரும்பி வாருங்கள் என்று கெஞ்சிக் கேட்க பரதன் சென்றான். அப்போது அவனுடன் தாய்மார்கள் , அதாவது இறந்துபோன தசரதனின் மனைவிமார்கள், அனைவரும் சித்ரகூடத்துக்குச் சென்றனர். புற நானூற்றில் காணப்படும் ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இல்லை. ஆகையால் தசரதனுடன் அவர்கள் இறக்கவில்லை. மநு நூலும் ‘சதி’ பற்றி ஒரு விதியும் இயற்றவில்லை.

விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள்

வேதகாலத்தில் பெண்கள் அலங்காரம் செய்துகொண்டு விழாக்களுக்குச் சென்ற காட்சிகள் உள்ளன. இதை வா.ரா. விலும் காணலாம் இளம்பெண்கள் நகை நட்டுக்களை அணிந்துகொண்டு தெருக்களில் திரிந்த காட்சிகளை வால்மீகி நம் கண் முன் வைக்கிறார்.அத்தகையோரைக் காண்பது சுப சகுனம் என்றும் கருதப்பட்டது.

பட்டாபிஷேக விழாவானாலும், பெரியோரை வரவேற்கும் நிகழ்ச்சியானாலும், பெரிய யாக யக்ஞங்களானாலும் சரி, இளம் பெண்கள் அங்கே இருந்ததை  வா . ரா  குறிப்பிடுகிறது

அரசர் என்பவர்கள், தனக்குப்பின்னர் ஆட்சி புரிய வாரிசு வேண்டும் என்று விரும்புவது இயற்கையே. ஆகையால் மகனுக்கு தசரதன் ஏங்குவதை வால்மீகி முதலிலேயே சித்தரிக்கிறார். தற்கால அரசியலில் கூட, ஜனநாயக நடைமுறைகள் இருந்தாலும் கூட , தலைவர்களின் மகன்களுக்கே பதவி கிடைக்கிறது ; மகன் இல்லாவிடில்தான் புதல்விகள் தலை எடுக்கின்றனர்.

பெண் குழந்தைகளை யாரும் வெறுக்கவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் அவள் கல்யாணம் ஆகி வேறு ஒருவனுடன் வாழப்போகிறாள்; தன்னுடன் கடைசிவரை இருக்கப்போவதில்லை என்பதை அறிந்த தாய்மார்கள் புத்திராக்களுக்காக ஏங்கியதில் வியப்பில்லை. மேலை நாடுகளைப் போல அல்லாமல், கூட்டுக்குடும்பம் நடத்தினர் இந்துக்கள். மேலை நாடுகளில் வயதான பெண்கள், முதியோர் இல்லங்களில் தனிமையில் (Lonely) வாடி வதங்குகின்றனர்.அல்லது கிழவிகளாகக் கூடி பிங்கோ, (Bingo, Playing Cards) சீட்டாட்டமாடிப் பொழுதைக் கழிக்கின்றனர் .

சீதை மீது ஜனகன் அன்பு மழை பொழிந்ததை வா.ரா. வில் காண்கிறோம் .குஷ நாப என்னும் சந்திரவம்ச அரசன் ஒரு நாட்டிய தாரகை மீது காதல் கொண்டு அவளை மணந்து சீரும் சிறப்புடனும் ஆட்சி செலுத்தினான். நாட்டிய பேரழகியின் பெயர் கிருதாச்சி. அவனுக்கு 100 பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் ஆடல், பாடல் , விளையாட்டுக்களில் ஈடுபட்டதை வா.ரா . வருணிக்கிறது 1-32-13

कुशनाभस्तु राजर्षि: कन्याशतमनुत्तमम्।

जनयामास धर्मात्मा घृताच्यां रघुनन्दन।।1.32.11।।

குச நாபஸ்து ராஜரிஷிஹி கன்யாசதம் அநுத்தமம்

ஜனயாமாஸ தர்மாத்மா க்ருதாச்யாம் ரகுநந்தன

ஓ ரகு நந்தன!

க்ருதாச்சி என்னும் தேவதை மூலம் ராஜரிஷி போல ஆண்டுவந்த குஷனாபன் மிகவும் அழகான நூறு பெண்களைப் பெற்றான் 1-32-11

तास्तु यौवनशालिन्यो रूपवत्य स्स्वलङ्कृता:।

उद्यानभूमिमागम्य प्रावृषीव शतह्रदा:।।1.32.12।।

தாஸ்து யெளவன சாலின்யோ  ரூபவத்ய ஸ்வலங்க்ருதா

உத்யான பூமிம்  ஆகத்ய பிராவ்ருஷீவ சதஹ்தாஹா 

गायन्त्यो नृत्यमानाश्च वादयन्त्यश्च सर्वश:।

आमोदं परमं जग्मुर्वराभरणभूषिता:।।1.32.13।।

காயந்த்யோ ந்ருத்யமாநாஸ்ச வாதயன்த்யஸ்ச ஸர்வசஹ

ஆமோதம் பரமம் ஜக்முவர் ராபர்ண பூஷிதாஹா

நன்கு அலங்காரம் செய்துகொண்ட அந்த ரூபவதிகள்/அழகிகள்

 கேளிக்கைப் பூங்காக்களில்  பாடிக்கொண்டும்ஆடிக்கொண்டும்,

வாத்தியங்களை வாசித்துக்கொண்டும் அணிகலன்களை அணிந்தவாறு

 எல்லா திசைகளிலும் ஆடி,ஓடித் திரிந்தனர் மழைக்கால

 மின்னல்கொடிகள் போன்று தோன்றிய அவர்கள் இன்பம் அடைந்தனர்.  1-32-12/13

अथ ताश्चारुसर्वाङ्ग्यो रूपेणाप्रतिमा भुवि।

उद्यानभूमिमागम्य तारा इव घनान्तरे।।1.32.14।।

அத தாஸ் சாரு சர்வாங்கம்யோ ரூபேணா ப்ரதிமா புவி

உத்யான பூமிமாகத்ய தாரா இவ கணாந் தரே

இந்தப் பூவுலகில் ஈடு இணையற்ற உடல் உறுப்புகளை பெற்ற அப்பெண்கள், பூங்காக்களில் உலவியது மேகங்களுக்கு இடையில் பளிச்சிட்ட நடசத்திரங்ககளைப் போல இருந்தது (1-32-14)

சமுதாயத்தில் பெண்கள் தடையின்றி உலவியதுடன்  தோழிகளுடன் , பல இடங்களுக்குச் சென்று வந்ததையும் படிக்கிறோம் வா.ரா (.7-2-9)

அந்தக் காலத்தில், குழந்தை இல்லாதவர்கள், பெண் குழந்தைகளை தாராள மாக , மனமுவந்து சுவீகாரம்/ தத்து  எடுத்தனர். லோமபாதர் (ரோமபாத என்றும் சொல்லுவர்) என்பவருக்கு வாரிசுகள் இல்லை. ஆகையால் அவர் தசரதன் மகளான சாந்தாவை, தத்து எடுத்து தனது சொந்த மகளாக வளத்தார் (வா.ரா .1-11-5, 1-11-19)

ஆயினும் பெண்களைக் கல்யாணம் செய்துதரும் வரை பெற்றோர்கள் கவலைப்பட்டதையும் வால்மீகி நமக்குக் காட்டுகிறார். வயதுக்கு வந்துவிட்ட சீதையை மணம் முடித்துத் தர ஜனகன் பட்ட கஷ்டத்தை வ ருணிக்கையில்  வறுமையில் வாடியவனுக்கு பணமே கிடைக்காத நிலையை உவமையாகப் பயன்படுத்துகிறார் வால்மீகி (வா.ரா .7-9-9)

சங்க நூல்களில் ஒன்றிலும் இதே கருத்து வருகிறது. வீட்டை விட்டு ஓடிப்போன, ஒரு  பெண்ணைத் தேடி வரும் தாய், வழியில் ஒரு பெரியவரைச் சந்தித்து இந்த அங்க அடையாளம் உடைய ஒரு பெ ண்ணைக்  கண்டீர்களா? என்று கேட்டபோது அவள் நல்ல ஆடவனுடன் செல்கிறாள்; கவலைப்படாதே; என்றோ ஒரு நாள் அவள் இப்படி மணம் முடித்துச் செல்ல வேண்டியவள்தானே என்று ஆறுதல் கூறுகிறார்.

To be continued…………………………………

 tags- பெண்கள், வால்மீகி , ராமாயணம், குசநாபன், இன்பம், மகிழ்ச்சி 

அறிவியல் அறிஞர் வாழ்வில்…7 (Post No.11,267)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,267

Date uploaded in London – –    15 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அறிவியல் அறிஞர் வாழ்வில் …   7

ச.நாகராஜன்

                
தன்னையே இதய ஆய்வுக்கு உட்படுத்திய விஞ்ஞானி!

வெர்னர் ஃபார்ஸ்மேன்  (Werner Forssman -பிறப்பு 29-8-1904 மறைவு 1-6-1979) நோபல் பரிசு பெற்ற ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி.

‘தன் இதயத்தைத் தானே தொட்டவர்’ என்ற பெயர் அவருக்கு உண்டு.

இதற்கான காரணம் அவர் தன்னையே இதய ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டது தான்!

அவரது டாக்டர் இப்படிச் செய்யக்கூடாது என்று அவரை கண்டிப்பாகச் சொல்லி இருந்தார்.

ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஜெர்டா டிட்ஜென் (Gerda Ditzen) என்ற நர்ஸிடம் நைஸாகப் பேசி தன்னை சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள உதவி செய்யுமாறு வேண்டினார்.

டிட்ஜென் அறுவை சிகிச்சை செய்யும் அறையில் அனைத்து உபகரணங்களையும் அறையையும் தூய்மையாக இருக்கச் செய்யும் பணியில் திறம்பட வேலை பார்த்து வந்தவர். அவர் இதற்கு ஒப்புக் கொண்டார் – ஒரு நிபந்தனையின் பேரில்.

இப்படி செருகு குழாயை இதயத்த்தில் செருக வைப்பதை தன் மீது தான் சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும், அவரை சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதும் தான் அந்த நிபந்தனை.

ஃபார்ஸ்மேன் ஒப்புக் கொண்டார். ஆனால் தந்திரமாக டிட்ஜெனைப் படுக்கையில் கட்டிப் போட்டு விட்டு தன் கையில் 60 சென்டிமீட்டர் நீளமுள்ள குழாயைச் செருகினார். எக்ஸ்ரே ரூமுக்கு ஓடினார்.

அது இதயம் வரை சென்றது.

இது பின்னால் அனைவருக்கும் தெரிய வந்தது.

இதய சம்பந்தமான வியாதிகளுக்கு இவரது கண்டுபிடிப்பு பெரிதும் உதவி செய்தது.

அவரை அனைவரும் புகழ்ந்தாலும் கூட அனுமதியின்றி இப்படிச் செய்ததற்காக  அவரை அவரது ஜெர்மானிய புரபஸரான சாயர்ப்ரூச் டிஸ்மிஸ் செய்து விட்டார்.

பின்னால் 1956இல் அவர் நோபல் பரிசு பெற்றார்.

12

உணவு விடுதியில் நாப்கினில் கண்டுபிடிக்கப்பட்ட MRI கண்டுபிடிப்பு!

பிரபல விஞ்ஞானியான பால் சி. லாடர்பர் (Paul C. Lauterber) 2003ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி.

(பிறப்பு 6-5-1929 மறைவு 27-3-2007)

கதிரியக்க பாதிப்பு இல்லாமல் மனித உடலின் உட்பகுதிகளைப் பார்க்க வழி வகுத்தவர் இவர் தான்!

எக்ஸ்ரே மூலமாக இல்லாமல், மாக்னெடிக் ரெஸொனன்ஸ் இமேஜிங் – எம் ஆர் ஐ (Magnetic Resonance Imaging – MRI) எனப்படும் உடலின் உட்பகுதிகளையும் மெல்லிய திசுக்களையும் பார்க்க வழி வகுக்கும் வழிமுறை இவரால் உருவாக்கப்பட்டது.

1980இல் உலகெங்கும் நடைமுறைக்கு வந்த இந்த எம் ஆர் ஐ வருடந்தோறும் சுமார் ஆறு கோடி பேர்களுக்கு செய்யப்படுகிறது.

இது மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தை நன்கு கண்காணித்து எந்த வியாதி எப்படி இருக்கிறது என்பதைக் கணிக்க உதவுகிறது. மூட்டு ஜாயிண்ட் உட்பட்ட பல மூட்டுகளைக் கண்காணிக்கவும் உதவுகிறது.

இது கண்டுபிடிக்கப்பட்ட விதம் சுவையானது. ஒரு நாள் லாடர்பர், உணவுவிடுதி ஒன்றில் உட்கார்ந்து கொண்டிருந்தார். திடீரென்று உத்வேகம் பெற்ற அவர் அருகிலிருந்த நாப்கினை எடுத்து அதில் வரைய ஆரம்பித்தார். அது தான் எம் ஆர் ஐ கண்டுபிடிக்க வழி வகுத்தது!

13

ஆர் என் ஏ கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!

சிட்னி ஆல்ட்மேன் (Sidney Altman)இரசாயன இயலில் 1989ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றவர். ஆர் என் ஏ (RNA( எனப்படும் ரிபோ நியூக்ளிக் ஆசிட் (Ribonucleic Acid) பற்றிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தவர் இவர். (பிறப்பு 7-5-1939 மறைவு 5-4-2022).

கெமிக்கல் ரீ ஆக்‌ஷன் எனப்படும் இரசாயன எதிர்வினையாற்றலைச் செய்ய புரோட்டீன்கள் மிகவும் தேவை என்பதை இவர் நிரூபித்தார்.

2010இல் இவர் ஹாரி க்ரெய்ஸருக்கு அளித்த ஒரு பேட்டியில் தான் இதை தற்செயலாகக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.

ஆர் என் ஏ மாலிக்யூலை அவர் ஆராய்ந்த போது அது புதிய புரோட்டீன்களை உருவாக்க எப்படி மரபணு குறியீட்டைக் கொண்டு செல்கிறது என்பதை ஆராய ஆரம்பித்தார். அவரே ஆச்சரியப்படும்படி, ஆர் என் ஏ மாலிக்யூல் இல்லாமல் புரோட்டீன் ஒரு என்ஜைம் போல வேலை செய்வதில்லை என்பதைக் கண்டுபிடித்தார். பின்னால் புரோட்டீனே இல்லாமல் கூட ஆர் என் ஏ மாலிக்யூல் ஒரு கிரியா ஊக்கிபோல செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடித்தார். அதுவரை அனைவரும் எண்ணி வந்ததற்கு மாறாக இந்தக் கண்டுபிடிப்பு அமையவே  அனைவரும் வியந்தனர். அவர் உலகப் புகழ் பெற்றார்!

**

புத்தக அறிமுகம் – 56

அறிவியல் துளிகள் – பாகம் – 16

பொருளடக்கம்

என்னுரை

392. ஹிட்லரின் சித்திரவதை முகாமில் புதிய உளவியல் சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தவர்!

393. 2022இல் விண்வெளியில் இந்திய வீரர்!

394. விண்வெளி ஆயுதங்கள் – 1

395. விண்வெளி ஆயுதங்கள் – 2

396. அறிவியல் வியக்கும் இசை!

397. ஆபரேஷன் ஃபைனல் – ஹாலிவுட் திரைப்படம்! – 1

398. ஆபரேஷன் ஃபைனல் – ஹாலிவுட் திரைப்படம்! – 2

399. தங்க புத்தர்!

400. அமெரிக்காவிற்கு கொலம்பஸின் பெயர் ஏன் சூட்டப்படவில்லை?

401. இன்றைய உலகின் மெமரி மன்னன் யார்?

402. மனிதரின் ஐந்தாயிரம் முகங்கள் அறியும் திறன்!

403. ஒபிஸிடி கோட் – 1

404. ஒபிஸிடி கோட் – 2

405. அமேஸிங் க்ரெஸ்கின்!

406. மரணமடைந்த பின் மீண்டவர்கள் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 1

407. மரணமடைந்த பின் மீண்டவர்கள் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 2

408. புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 1

409. புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 2

410. ஒவ்வொருவருக்கும் இரு உடல்கள் உண்டா?

411. உங்களுக்கு ஆறாவது அறிவு இருக்கிறதா?

412. ஜகதீஷ் சந்திர போஸை ஊக்குவித்த நிவேதிதா தேவி!

413. வாழ்க்கையை மாற்றப் போகும் அதிரடிக் கண்டுபிடிப்புகள் தயார், தயார்!

414. நமது மூளையுடன் கம்ப்யூட்டர் இணைக்கப்படும் நாளைய வாழ்க்கை!

415. சந்திரனை முதலில் படமாக வரைந்தவர்!

416. இனி விண்வெளியில் மனிதன் வாழமுடியும்!

முடிவுரை

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இன்றைய நவீன உலகில் அறிவியலின் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்.

ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்

இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.

எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 

பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

இந்த நூல் – பதினாறாம் பாகம் – எட்டாம் ஆண்டில் 27ஆம் வாரம் முதல் வெளியான 392 முதல் 416 முடிய உள்ள 25 அத்தியாயங்களின் தொகுப்பாகும்..

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

நன்றி

பங்களூர்
14-5-2022

ச.நாகராஜன்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**

Q & A – ETYMOLOGY OF ‘PAAL பால்’ FOR MILK IN TAMIL (Post.11,266)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,266

Date uploaded in London – 14 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

A J

To:Santhanam Swaminathan

Wed, Sep 14 at 4:55 AM

Praņām Santanam Swāmināthan ji, please express your opinion on the etymological derivation done below.

🙏🙏🙏

Milk

In Tamiļ (Tamizh), the word for milk is பால் (paal). The same (paal) becomes (paalu) in Telugu and (haalu) in Kannađa due to (pa ha interchangeability rule at beginning in Kannađa). Now every Tamizh word, needs to have a verbal root from which it can be derived. The same is the condition with Veda Bhāşā (Samskritam). For every word, you need to have the verbal roots. Bishop Robert Caldwell,  the well known Christian missionary who is primarily responsible for all anti Vedic, anti Samskritam and anti Bhāratam news that you hear from Tamil Nāďu very openly expressed that there is no verbal root in Tamizh from which the word (paal) for milk can be derived. Now if we explore in Veda Bhāşā (Samskritam), there is a verbal root (paa) which means to drink. All humans when they are born, they at first drink the milk of their mother. Hence it can be stated without any doubt that the word (paal) for milk in Tamizh is 100% derived from the verbal root (paa) which means (to drink). Mind it (paal), (paalu) and (haalu) are pure Tamizh,  Telugu and Kannađa words respectively.  But all three are derived from the verbal root (paa) which means to drink in Veda Bhāşā (Samskritam).

MY REPLY

TWO POINTS பால்/PAAL = MILK

Noun

पानकम् பானகம் PAANAKAM

verb

PAA पा பா/ குடி (சம்ஸ்க்ருதத்தில்)

THEORY OF VERBAL ROOTS FOR ALL WORDS IS WRONG. 

IN TAMIL GRAMMAR IT IS NOT MENTIONED.

EVEN IN SANSKRIT, IT IS NOT ACCEPTED BY ALL. COUNTER VIEWS WERE THERE EVEN DURING PANINI’S TIME- 2700 YEARS AGO.

SECOND POINT – PAAL FROM PAA TO DRINK–  IS A LONG THROW.. PAANI/WATER, PAANAM/ SWEET DRINK ARE RIGHT IN SANSKRIT.

BUT IN TAMIL WE USE ONLY NEER OR THANNEER FOR WATER. NO ‘PAA’ IS FOUND.

SO IT IS ONLY A GUESS. BUT IF YOU FIND MORE TAMIL WORDS WITH ‘PAA’ ROOT FOR DRINK, I WILL AGREE WITH YOU.

IN ENGLISH , NO ROOT IS AVAILABLE FOR THE WORD ‘DOG’.

நிம்பிரி = பொறாமை JEALOUSY

IN THE OLDEST BOOK IN TAMIL , TOLKAAPPIAM, THE WORD FOR JEALOUSY IS ‘NIMPIRI’.

I AM STILL LOOKING FOR THE ROOT OF NIMPIRI, BUT IN VAIN.

‘NIMPIRI’ IS FOUND ONLY ONCE IN TAMIL!

EVEN IN THE RIG VEDA THERE ARE WORDS USED ONLY ONCE, WHOSE MEANING IS GUESSED BUT NOT CONFIRMED OR ACCEPTED BY ALL.

Swami
020 8904 2879
07951 370 697

Blog: swamiindology.blogspot.com

TAGS- etymology, milk, Paal, Nimpiri

பிராக்ருத மொழியின் ஐம்பெரும் காப்பியங்கள் (Post No.11,265)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,265

Date uploaded in London – 14 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் உள்ளது போல பிராக்ருத மொழியிலும் 5 பெரிய காவியங்கள் உண்டு.

தமிழ் மொழியில் உள்ள 5 பெரிய காப்பியங்கள்

1.ஐம்பெரும் காப்பியங்கள்

சிலப்பதிகாரம் (எழுதியவர் – இளங்கோ அடிகள்)

மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்

சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்

குண்டலகேசி – நாகுதத்தனார்

வளையாபதி – பெயர் கிடைக்கவில்லை

(கடைசி இரண்டு நூல்களும் முழுமையாகக் கிடைக்கவில்லை.)

2.ஐஞ்சிறு காப்பியங்கள்

சூளாமணி –

நீலகேசி – தோலாமொழித் தேவர்

உதயணகுமார காவியம்

நாககுமார காவியம்

யசோதா காவியம்

(நான்கு நூல்களை யாத்தவர்களின் பெயர்களை தமிழ்கூறு நல்லுலகம் மறந்துவிட்டது)

ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள  ஐம்பெரும் காப்பியங்கள்

3.பஞ்ச மஹா காவியங்கள் (சம்ஸ்கிருதம்)

குமார சம்பவம்– காளிதாசன்

ரகுவம்சம் – காளிதாசன்

கிராதார்ஜுனீயம் – பாரவி

சிசுபாலவதம் – மாக

நைஷதசரிதம் – ஸ்ரீஹர்ச

xxx

4.பிராக்ருத மொழியின் ஐம்பெரும் காப்பியங்கள்

சேதுபந்த – புலவர் ப்ரவரசேன

ராவண விஜய –  நமக்குக் கிடைக்கவில்லை

ஹரி விஜய – நமக்குக் கிடைக்கவில்லை ; புலவர் சர்வசேன

கெளட வஹோ – புலவர் வாக்பதி

மதுமத விஜய -நமக்குக் கிடைக்கவில்லை

கிடைக்காத நூல்களிலிருந்து நமக்குப்  பல மேற்கோள்கள் மட்டும் கிடைத்துள்ளன.

ஹரி விஜய

நூல்கள் கிடைக்காவிடினும் பிற்கால உரைகார்கள், நூலாசிரியர்கள் வாயிலாக நமக்குப் பல விஷயங்கள் தெரிகின்றன. ஹரி விஜய என்னும் காவியம் ஸ்கந்தக என்னும் யாப்பில் அமைந்தது. சர்க்கங்களாகப் பிரிக்காமல் ஆசுவாசகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது விஷ்ணு புராணத்திலும் பாகவத புராணத்திலும் காணப்படும் பாரிஜாதக் கதையை கையாளும் நூல் இது.

சுவர்க்கத்திலிருந்து பாரிஜாத மரத்தைக் கிருஷ்ணன் கொண்டுவந்ததையும் ருக்மணி- ஸத்ய பாமாவிடம் நிலவிய பொறாமை, பூசல் பற்றியும் விவரிக்கும் நூல் இது .

சேது பந்தம் என்பது ராமாயணத்தில் வரும் சேது அணை / பாலம் கட்டப்பட்டதை விவரிக்கும் நூல்.

xxx

கெளடவஹ

வாக்பதி ராஜ எழுதிய கெளடவஹ , பலரும் அறியாத சரித்திர சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

கண்ணோசியை ஆண்ட யசோவர்மனைப் புகழும் கதை இது. கெளட தேச இளவரசனைத் தோற்கடித்த கதை . ஆனால் இலவசனின் பெயர் கூட இல்லை. பிற்காலத்தில் யசோ வர்மனே காஷ்மீர் அரசன் லலிதாதித் யனால் கொல்லப்பட்டான்( பொது ஆண்டு 740) .

இந்த நூல் காண்டங்களாகப் பிரிக்கப்படவில்லை. குலகங்காளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது . காதா என்னும் ஒரே ஒரு சந்தத்தில் அமைந்துள்ளது. இதை நாரிகேல பாக என்பர் . அதாவது தேங்காய் ஓடு போல கடினமான பகுதியை உடைத்து உள்ளே சென்றால் தேங்காய் கிடைக்கும். உள்ளேயுள்ள  இனிப்பான இளநீரையும் அருந்தலாம். இந்த நூலில் உவமைகளோடு உத்ப்ரேக்ஷங்களும் அதிகம் காணப்படும். உத்ப்ரேக்ஷ என்பது கற்பனை உவமைகள். இது அதுவேதான்; அது இதுவேதான் என்று கற்பிக்கப்படும்.

கவிஞர் வாக்பதி , இந்த நூலில் மங்களா சரணத்துக்கு 61 காதாக்களையும் / செய்யுட்களையும் , கவி ப்ரஸம்ஸா / கவிஞர்கள் புகழ்ச்சிக்கு  37 காதாக்களையும் , உலக நடைமுறைகளை வருணிக்க 150 காதாக்களையும் பயன்படுத்துகிறார்.

தாழ்ந்த நிலையில் உள்ள கவிஞர்கள் ஏதாவது எழுதக் கிடைக்காதா என்று அலைந்து திரிவர். உயர்ந்த கவிஞர்களுக்கோவெனில் தாமாகவே விஷயங்கள் வந்து சேரும் . அவர்கள் முயற்சி செய்யவேண்டிய தேவையே இல்லை.

xxx

சேதுபந்த காவியம்

1600 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ரவரசேனனால் எழுதப்பட்ட சேதுபந்த காவியம் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட காவியங்களில் தலை சிறந்தது ஆகும். ராமாயணத்திலுள்ள சேது அணை /பாலம் கட்டப்பட்ட பகுதியை மட்டும் எடுத்தாளும் கவிதை இது. தண்டி (Dandin)  பாண (Bhana) போன்ற கவிஞர்கள் இதை உச்சிமேல் வைத்துப் புகழ்கின்றனர் .

காளிதாசனின் ரகு வம்சம் , வால்மீகியின் ராமாயணம் ஆகியவற்றின் தாக்கத்தை இங்கே காணலாம்; ஆயினும் புதுமைகள் இல்லாமல் இல்லை; மாலை நேர வருணனை, காதல் காட்சிகள் நிலவொளிக் காட்சிகள் மிகவும் விரிவாகப் பேசப்படுகின்றன தோழிகள்  மூலம் காதல் ஓலைகள் அனுப்பும் செய்தியும் உண்டு.

இதற்குப் பின்னர் வந்த சம்ஸ்க்ருத காவியங்களான கிராதார்ஜுனியம், சிசுபாலவதம் ஆகியன சில விஷயங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளன. நீதி போதனைப் பாடல்கள் இருந்தாலும் சம்ஸ்க்ருதம் போல பழமொழிகள் இல்லை. தத்துவ விஷயங்களும் இல்லை.

காளிதாசனுடைய காவியங்களை ஒப்பிடுகையில் இவைகள் குறை உடைத்தே .

xxx

ஸம்ஸ்க்ருதம் என்பது இலக்கிய நடை; பிராகிருதம் என்பது பேச்சு நடை; நாம் வீட்டில் பேசும்போது கம்பன் போலவோ இளங்கோவைப் போலவோ அல்லது பாடப் புத்தகத்தில் உள்ள உரைநடை போலவோ பேசுவதில்லை.இதுதான் பிராகிருதம்; அதாவது கொச்சை நடை. இன்று தமிழ் நாவல்களில் காணும் நடை.

எப்படித் தமிழில் நெல்லைத்தமிழ், கோவைத்தமிழ் ,மதுரைத் தமிழ், இலங்கைத் தமிழ் உண்டோ அது போல பிராக்ருதத்திலும் பல வகை உண்டு. தொல்காப்பியரும் கூட பல நாட்டுத் தமிழ் பற்றிப் பாடியுள்ளார்.

பிராகிருத வகைகளில் சிறந்தது மஹாராஷ்டிர பிரதேசத்தில் பேசப்பட்ட மஹாராஷ்ட்ரி ஆகும். அதுதான் சிறந்து என்று தண்டின் முதலிய புலவர்கள் , விமர்சகர்கள் செப்பியுள்ளனர் .

xxx

காவியம் என்றால் என்ன ?

காவியம் என்று எந்த நூலைக் கூறலாம் என்று தண்டின் என்ற ஸம்ஸ்க்ருதப் புலவர் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே வரையறை செய்துள்ளார்-

1.இதிஹாச கதோத்பூதம்

கற்பனையில் உதித்த கதை அல்லாமல் பரம்பரையாக வந்த கதை யாகவோ இதிஹாச கதையாகவோ இருக்கவேண்டும் . அதில் வரும் கதாநாயகன் வீரனாகவோ, குணங்களின் சிகரமாகவோ ( சதுரோதாத்த நாயகம்)  இருக்க வேண்டும்.

2.நாடு , நகர, காடு, மலை, கடல் வருணனைகளும் சந்திர சூரிய உதயக் காட்சிகளும் , பூங்காக்களில் உல்லாசம் செய்யும் காட்சிகளும், காதல் காட்சிகளும், மதுபான கேளிக்கைகளும் இடம்பெறவேண்டும்

3.கல்யாணம், பிரிவு, குழந்தை பிறத்தல் , போர்கள், தூதர்கள், கதாநாயகனின் வெற்றி, மந்திராலோசனைக் கூட்டங்கள் இடம்பெறுவதோடு எதிரிகளின் சிறப்புகளையும் எடுத்து இயம்பலாம்

4.மிகவும் சுருக்கி வரைதல் (அசம் க்ஷிப்த கூடாது; நவரச உணர்ச்சிகள் (ரஸ பாவ நிரந்தரம் ததும்ப வேண்டும்.

5. யாப்பு அணிகளும், சந்திகளும் — புணர்ச்சி விதிகள் — நிறைந்து இருத்தல் அவசியம்

6.வெவ்வேறு அணிகளில் எழுதும்போது அவை கவர்ச்சிமிக்கதாக – (ஸ்ரவ்ய  விருத்தைஹி உபேதம் இருப்பதோடு காண்டங்களாகப் பிரிக்கையில் சின்னதாகவும் மிகப் பெரியதாகவும் இருத்தல் கூடாது

7. (ஸர்வத்ர பின்ன வ்ருத்தாந்தைஹி உபேதம்) – யாப்பு அணிகள், சந்தங்கள் மாறி மாறி வருதல் சிறப்பு ஆகும்

8.பிரார்த்தனையுடன் துவங்க வேண்டும்; எல்லோரையும் வாழ்த்தி ஆசி கேட்கலாம் அல்லது எதைப் பற்றி பேசப்போகிறோம் என்று பகரலாம்

9.அறம் , பொருள், இன்பம், வீடு என்ற இந்துமதக் கோட்பாடுகளை – தர்ம, அர்த்த, காம, மோக்ஷ — விதந்து ஓதுவதே காவியத்தின் நோக்கம்

காளிதாசன் எழுதிய காவியங்களில் இவை அனைத்தும் இருக்கின்றன. தமிழில் சிலப்பதிகாரத்தில் பெரும்பாலான அம்சங்களைக் காணலாம்.

–சுபம்–

Tags- காவியம், என்ன, ஐம்பெரும் காப்பியங்கள், சேதுபந்த, பிரவரசேன , வாக்பதி , கெளடவஹோ , ஹரிவிஜய , ருக்மிணி- சத்தியபாமா

அறிவியல் அறிஞர் வாழ்வில்… 6 (Post No.11,264)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,264

Date uploaded in London – –    14 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அறிவியல் அறிஞர் வாழ்வில் …   6

ச.நாகராஜன்

9

பெரு வெடிப்பும் கிரேக்க எழுத்துக்களும்!

ஜார்ஜ் காமோவ் (George Gamov – பிறப்பு 4-3-1904 மறைவு 19-8-1968) ஒரு ரஷிய விஞ்ஞானி. இயற்பியலிலும் பிரபஞ்ச இயலிலும் வல்லுநர். பின்னால் அவர் அமெரிக்காவில் சென்று வசித்தார். அவருடைய மனைவியை ரோ (Rho) என்ற செல்லப் பெயரிட்டு அவர் அழைத்தார். மனைவியின் பெயர் லியுபாவ் வோக்மின்ட்ஸெவா (Lyubov Vokhmintseva). ரோ என்பது கிரேக்க அகர வரிசையில் 17வது எழுத்து.

அவர் பிக்-பேங் தியரியில் பெரிதும் ஆர்வமுள்ளவர்.

அவரது மாணவரின் பெயர் ரால்ப் ஆல்பெர் (Ralph Alpher).

தனது மாணவருடன் சேர்ந்து அவர் பிக் பேங் என்னும் பெருவெடிப்பின் போது அதன் தோற்றம் பற்றிய ஒரு ஆய்வுப் பேப்பரைத் தயாரித்தார்.

தனது ஆய்வுப் பேப்பரில் இயற்பியல் விஞ்ஞானியான ஹான்ஸ் பெதே (Hans Bethe)யின் பெயரையும் அவர் சேர்த்தார்.

தனக்கு எப்போதுமே உள்ள நகைச்சுவை உணர்விற்கேற்ப ஆய்வுப் பேப்பரை தயார் செய்தவர்களின் பெயர்களாக ஆல்பா, பீடா, காமா (Alpha, Beta and Gamma) என்ற கிரேக்க எழுத்துக்களை நினைவு படுத்தும் விதமாக  ஆல்பர், பெதே, காமா (Alper, Bethe, Gamow) என்று குறிப்பிட்டார்.

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதை விளக்கும் ஆய்வுப் பேப்பரில் கிரேக்க முதல் எழுத்துக்களான மூன்றைக் குறிப்பிட்டு ஒரு சொல் விளையாட்டையும் செய்து மகிழ்ந்தார்.

10

ஓவியராக விரும்பிய மூளை இயல் விஞ்ஞானி!

{(சாண்டியாகோ ரொமன் இ கஜல் (1852-1934)}

ஸ்பெயினைச் சேர்ந்த விஞ்ஞானியான சாண்டியாகோ ரொமன் இ  கஜல் (1852-1934) நவீன நியூரோ ஸயின்ஸ் எனப்படும் மூளை இயலின் தந்தை என்று கூறப்படுபவர். 1906ஆம் ஆண்டு அவர் நோபல் பரிசை நரம்பு மண்டல அமைப்பு ஆராய்ச்சிக்காகப் பெற்றார். மூளையானது தனி செல் அமைப்புகளைக் கொண்டதாக உள்ளது என்பதை அவர் தான் முதன்முதலாகக் கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்புகளே மூளை எப்படி இயங்குகிறது என்பதை அறிந்து கொள்ள உதவியது.

அவருக்கு அறிவியலை விட கலையில் தான் மோகம் இருந்தது. அவரது தந்தையார் அவரை மருத்துவம் படிக்க ஊக்குவித்தார். ஆனால் அவருக்கோ ஓவியம் வரைவதில் தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. என்றாலும் மருத்துவத்தில் சேர்ந்தார். அறிவியல் அறிஞர் ஆனார். என்றாலும் கூட தனது ஓவிய ஆர்வத்தை அவர் விட்டு விடவில்லை. தனது பணிக்காலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மூளை பற்றிய படங்களை நுண்ணிய விவரத்துடன் தான் மைக்ரோஸ்கோப்பில் பார்த்த வண்ணம் வரைந்து தள்ளினார். இன்று மூளை இயலில் மூளை பற்றி அறிந்து கொள்ள அவை மிகவும் உதவுகின்றன.  நரம்பு மண்டலம் மற்றும் நியூரான் பற்றிய அவரது படங்கள் பெரிய வியன்னா செஷஸன் என்ற கலை இயக்கம் சித்தரிக்கும் மரம் போல பரந்து விரிந்து பல்வேறு கிளைகளுடன் கூடி வரையப்பட்டிருக்கிறது.

***

புத்தக அறிமுகம் – 57

அறிவியல் துளிகள் – பாகம் – 17

பொருளடக்கம்

என்னுரை

417. 2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள்! – 1

418. 2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள்! – 2

419. கனவு ஆராய்ச்சி பற்றிய விஞ்ஞானிகளின் கனவியல் பட்டறை!

420. மூன் ரஷ்!

421. அதி நவீன F 16 விமானத்தை எதிர்கொண்ட இந்திய விமானப் படை!

422. காந்த மனிதன்!

423. உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 1

424. உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 2

425. உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 3

426. உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 4

427. உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 5

428. உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 6

429. நீங்கள் பேசினால் போதும், உங்கள் முகத்தை வரைந்து விடலாம்!

430. உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பெருக கான் மாரி வழிமுறை!

431. சந்தோஷம் தரும் வாழ்க்கை அமைப்போம், வாரீர்!

432. ஐஸன்ஹோவர் பாக்ஸ்!

433. சந்திர வெற்றி!

434. வேண்டியதைத் திறம்படச் செய்து முடிக்க கெய்ஸன் மற்றும் ஜிடிடி வழிமுறை!

435. நோபல் பரிசை வென்றார் இந்தியர் அபிஜித் விநாயக் பானர்ஜி!

436. விண்வெளியில் நடை பயிலும் வீராங்கனைகள்!

437. செஸ் விளையாட்டு உடலின் ஆற்றலை உறிஞ்சுகிறதா? பரபரப்பு ஆய்வு!

438. உலக மக்களின் வாழ்க்கையையே மாற்றப் போகும் ஹோலோ லென்ஸ்!

439. 2019ஆம் ஆண்டின் அதிசய புதிய கண்டுபிடிப்புகள்!

440. மூட நம்பிக்கையை ஒழிக்க வழி வகுத்த கெப்ளர்!

441.ஐஸக் நியூட்டன் பற்றிய புதிய செய்திகள்!

442. கடந்த பத்தாண்டுகளின் ‘டாப் டென்’ கண்டுபிடிப்புகள்!

முடிவுரை

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இன்றைய நவீன உலகில் அறிவியலின் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்.

ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்

இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.

எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

4-3-2011இல் ஆரம்பித்து 16-2-2020 முடிய ஒன்பது ஆண்டுகள் இந்தத் தொடர் வெளி வந்தது. துரதிர்ஷ்டவசமாக கோவிட் பெருந்தொற்று நோய் உலகெங்கும் பரவவே பாக்யா இதழ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இடையில் வார இதழாக மலர்ந்து வந்த பாக்யா இதழ் 2019, ஏப்ரல் முதல் மாதம் இருமுறை மலர ஆரம்பித்தது.

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அறிவியல் துளிகளின் அனைத்து அத்தியாயங்களையும் பதினேழு பாகங்களில் வெளியிட முடிந்தது.

இந்த நூல் – பதினேழாம் பாகம் – ஒன்பதாம் ஆண்டில் வெளியான – 417 முதல் 442 முடிய உள்ள – 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும்.

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

அறிவியல் கற்போம்அறிவியலைப் பரப்புவோம்!

நன்றி
பங்களூர்                                   ச.நாகராஜன்

18-5-2022

‘SANSKRIT IS MALE, PRAKRIT IS FEMALE; PRAKRIT IS SWEETER THAN SANSKRIT’ (Post No.11,263)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,263

Date uploaded in London – 13 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quotations on Prakrit Poetry and language

Praise of Prakrit Poetry

In his introductory verses to Harshacarita, the poet Banabhatta praises Satavahana, also known as Salivahana and Hala,for his Gatha Sapta Sati (GSS) in these glowing terms

Satavahana made a treasury of fine sayings as of jewels;

(Avinasinam) immortal;indestructible refined;

Xxx

Uddhyotanasuri, the author of Kuvalayamala, extols Hala in these words:

“What is the use of composing poetry after the passing away of Hala whose poetry was on the tongues of even farmers while ploughing their fields?”

“When the intoxicating effect of wine is no more, what is the use of meat?”

xxx

Vakpati

The charm of Sanskrit speech blooms in its Prakritic shadow while the (innate ) glory of the Prakrit is heightened when it touched up by its sanskritization

Xxx

It is only in Prakrit that we can have in an abundant measure, ever fresh themes presented in a rich variety of styles, refreshingly cool and caressingly sweet. This will continue to be till the end of the world.

Xxx

All languages merge in it (Prakrit ) and emerge from it. Waters pour into the sea and flow out of it.

Xxx

A peculiar delight which dilates and closes the eyes, thrills the heart, rushing inwards and outwards

Gaudavaho v 65,v 92 v 93, v 94

Rajasekhara

Sanskrit compositions are harsh, while a composition in Prakrit sounds so soft. The difference between the two is as between the masculine and the feminine

Xxx

In other words,

You may respect Sanskrit but you will fall in love with Prakrit

Karpuramanjari 1-7

Xxx

Sanskrit speech is praiseworthy whereas Prakrit speech is naturally sweet.

Bala Ramayana 1-11

Xxx

Prakrit is the source of Sanskrit; it dances in the tongues of ladies of lovely eyes; when one hears it the words of Sanskrit language grate upon one’s ears; it’s prose is easy, does not contain hard letters and has very few compounds; and it is the abode of the god of love.

Bala Ramayana 1-11

Xxx

A commentator on Prakrit Prakasa

O,how marvellous! The Prakrit which is lovely like the moonlike face of the beloved is fascinating . It sparkles with Suktis (good sayings ) imbued with nectar like rasas .

Xxx

Ajnatakavih

Away with Sanskrit poetry and the poets who composed it. For Sanskrit, when read, sounds like tad tad tatta like a house of bamboos on fire 21

The Pandita who replies in Sanskrit, when Prakrit poetry is recited, pelts stones at the bed of flowers and destroys it .

Xxx

Gatha Saptasati (GSS)

Prakrit literature is vast and varied. It is composed in different languages like Ardhamagadi, Maharashtri, Sauraseni, Paisaci and Apabrahma.

Hala’s Sattasai or Gaathaa sapta sati (second century to third century ) is the earliest known anthology of Prakrit. It has 700 verses in Maharashtri Prakrit. It’s popularity is attested by the large number of commentaries on it and scores of quotations from it in works on poetics and the use made of it by the Prakrit grammarians.

Eminent poets like Bana, Uddyotanasuri, Abhinanda and Siddhanathan bestow high praise on it. And if imitation is an index of popularity we have its imitation in Sanskrit in Govardhana’s Arya sapta sati which is certainly modelled on Hala’s GSS.

The work differs in many manuscripts. It is mostly erotic. Each Gatha presents a miniature picture complete in itself. These Gathas mainly depict village life and peasantry. The family life of lower strata of the society is portrayed in its various contexts, but the erotic aspect dominates

The anthology is rich in maxims and popular sayings and sheds light on customs and conventions prevalent in those times. There are allusions to divine beings like Siva Parvati Gauri , Ganapathi Vishnu Lakshmi etc.

Source

Studies in Jain Literature, prof v m Kulkarni, Ahmedabad,2001

—subham—

Tags- Quotations, Prakrit , Poetry,  language, Gatha Saptasati , Ajnatakavih, Rajasekhara, Vakpati ,Uddhyotanasuri, Bana Bhatta, Gaudavaho

யானை விரட்டிய கர்வம் பிடித்த கவிஞர் மனம் மாறிய கதை (Post 11,262)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,262

Date uploaded in London – 13 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஹரிபத்ர (Haribhadra) என்ற கவிஞரின் கதை மிகவும் சுவையானது ; மஹாபாரதத்தில் வியாசர் செய்த தந்திரத்தை நாம்  எல்லோரும் அறிவோம். விநாயகரை மஹாபாரதத்தை எழுதித்தருமாறு வியாசர் அழைத்தார். உடனே அவர் இந்த மஹானிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று கருதி ஒரு கண்டிஷன்/ Condition நிபந்தனை  போட்டார்.  நான் நிறுத்தவே மாட்டேன். அந்த வேகத்தில் உம்மால் கவிதை மழை பொழிய முடியுமா ?என்றார். அப்படி நிறுத்தும்படி ஆனால் நான் வீட்டுக்குப் போய்விடுவேன் என்றார் பிள்ளையார்.

வியாஸர் உலக மஹா மேதாவி. OK OK ஓகே! ஓகே! நான் ஒரு கண்டிஷன் Condition போடுவேன்  ; நான் சொல்லும் எதையும் புரிந்து கொள்ளாமல் எழுதக் கூடாது என்றார் ; பிள்ளையாரும் OK That’s all right; agreed ‘ஓகே. தட் ஸ் ஆல் ரைட். அக்ரீட்’ என்றார் . வியாஸர் வேண்டுமென்றே பல புதிர்கள் மிக்க ஸ்லோகங்களை உதிர்த்தார். பிள்ளையார் தலையைச் சொறிந்துகொண்டு யோசிப்பதற்குள் வியாசர் ஒரு லட்சம் கவிதைகளைச் செய்து ‘கின்னஸ்’ சாதனை புஸ்தகத்தில் நுழைந்தார். உலகியேயே நீண்ட இதிஹாசத்தைச் செய்து பெயரும் பெற்றார். இதற்கு நேர் மாறாக ஹரிபத்ர என்னும் கவிஞர் செய்தார்.

என்ன செய்தார்?

அவர் ஒரு பிராமணன். ராஜஸ்தானில் சித்தூர் என்னும் இடத்தைச் சேர்ந்தவர். மகா மேதாவி. சம்ஸ்க்ருதத்தில், பிராக்ருதத்தில் உள்ள எல்லாவற்றையும் கற்றவர். அவர் தன் இடுப்பில் ஒரு தங்கப்பட்டயம் கட்டிக்கொண்டார். எவனாவது ஒருவன் எனக்குப் புரியாத விஷயத்தை, தெரியாத விஷயத்தைச் சொன்னால், நான் அவனுக்கு அடிமை; அவர் காலில் விழுந்து மாணவன் ஆகி விடுவேன் என்று எழுதிக் கொண்டு திரிந்தார். அதாவது உலகிலுள்ள எல்லாம் தெரிந்த மேதாவி என்று நினைத்துக் கொண்டு இருந்தார். அவர் ஒருநாள் தெருவில் போய்க்கொண்டு இருந்தபோது மதம் பிடித்த யானை ஓடிவந்தது; ஹரிபத்ர நடுங்கிப் போய் ஒரு உயரமான கோவில் படியில் ஏறி பெருமூச்சு வீட்டுக் கொண்டிருந்தார். கோவிலில் உள்ளே பார்த்தால் சமண மத தீர்த்தங்கரர்  சிலை இருந்தது; ஒரே எரிச்சல்; சீ, சீ!!  என்று சொல்லிக்கொண்டு சமண முனிவரைத் திட்டி ஒரு கவிதையை உரத்த குரலில் சொல்லிவிட்டு, யானை போனவுடன் வீடு திரும்பினார்.

அவர் செய்த கவியின் பொருள்: ஓ சமண முனிவரே! உம்  வயிற்றைப் பார்த்தாலேயே தெரிகிறது ; நீர் இனிப்புகளை அதிகம் தின்பவர் என்று .

மறுநாள் அதே கோவில் வழியாகச் சென்றபோது அங்குள்ள சமண மத பெண் துறவி ஒரு ஸ்லோகத்தை உரத்த குரலிலே சொல்லிக்கொண்டு இருந்தாள் ; அவள் பெயர் யாக்கினி மஹத்தரா ; அவள் சொன்னாள் :

சக்கிதுகம்  ஹரிபணகம் பணகம் சக்கி ய கேசவோ சக்கி

கேசவ சக்கி கேசவ து  சக்கி கேசி ய சக்கி ய

Chakkidugam Haripanagam Panagam Chakki Ya Kesavo Chakki

Kesav Chakki Kesav Du Chakki Kesi Ya Chakki Ya

சமண மத ஆகமங்களின்படி 24 தீர்த்தங்கரர் 12 சக்கரவர்த்திகள் 9 வசுதேவர்/நாராயணன் உண்டு என்பதாகும். அதை அந்தப் பெண்மணி விளக்கிக் கொண்டு இருந்தார்.

இதைக் கேட்ட ஹரிபத்ராவுக்கு அர்த்தம் புரியவில்லை. அட, நாம் கற்றறியாத ஒரு விஷயத்தை இவள் சொல்கிறாளே என்று நினைத்து, முதல் நாள் சமண தீர்த்தங்கரைத் திட்டி எழுதிய பாட்டில் ஒரு சொல்லை மாற்றிப்போட்டு பாராட்டிவிட்டு, பெண்மணியிடம் சென்று, அம்மணி, என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

அவர் எனக்கு அந்த அருகதை இல்லை. என் குரு ‘ஜின பட்ட சூரி’யிடம் அழைத்துச் செல் கிறேன் என்று கூறி , அவரிடம் அழைத்துச் சென்றார். அவரும் ஹரிபத்ரவை மாணவனாக ஏற்று ஸ்லோகத்தின் முழுப்பொருளையும் விளக்கி நூல்கள் செய்யுமாறு பணித்தார். சமண மதத்தில் அதுவரை இருந்த நூல்களைக் கற்ற ஹரிபத்ர , 1400 நூல்களுக்கு மேலாக இயற்றினார் என்று சொல்லப்படுகிறது; ஆயினும் 170 நூல்களே இப்போது கிடைத்துள்ளன. ஜின பட்ட சூரி இறந்தவுடன் இவரே அந்த ஆசார்ய நிலைக்கு உயர்த்தப்பட்டு ஹரிபத்ர சூரி என்று பெயர்பெற்றார்.

சம்ஸ்க்ருத, பிராக்ருத கவிஞர்கள் அடக்கமும் பணிவும் மிக்கவர்கள்; தங்களைப்  பற்றி எதுவுமே பாடவில்லை. இவர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்; ஆகையால் உலக மஹா கவிஞன் காளிதாசனைப் பற்றி பல கதைகள் இருப்பது போல வந்த செவி வழிக் கதைதான் யானை விரட்டிய கதையும் .

ஹரிபத்ர பற்றி இன்னும் ஒரு கதையும் உண்டு அவரிடம் சகோதரி மகன்கள் ஹம்ச , பரம ஹம்ச என்ற இருவர் கல்வி கற்றனர் ; அவர்கள் புத்த மத நூல்களைக் கற்றால் அவர்களை வாதத்தில் வெல்வது எளிதாகும் என்று கருதி புத்த துறவி போல வேஷம்போட்டுக் கொண்டு ஒரு புத்தமத துறவியிடம் சென்றதாகவும், உண்மையை அறிந்தபோது அந்த புத்தமதத் துறவி அவர்களை விரட்டி விட்டதாகவும் அப்போது அவ்விருவரும் உயிர் துறந்ததாகவும் இதனால் அவர்கள் மீது கோபம் கொண்டு வெறியாகத் திரிந்தபோது யாக்கினி மஹரத்தராவைச் சந்தித்து அஹிம்சை நெறியில் சென்றதாகவும் கதைகள் இருக்கின்றன.

அவரைப் பற்றிய கதைகள் உண்மையோ, பொய்யோ என்பது முக்கியமல்ல. அவர் எழுதிய நூல்கள் அவர்தம் பெருமையைப் பறை சாற்றுகின்றன. அவர் சம்ஸ்க்ருத, பிராக்ருத மொழிகளில் சமயம், உரைகள், விளக்க உரைகள், பிறமத தூஷண உரைகள், இலக்கண நூல்கள் என்று ஏராளமான விஷயங்கள் குறித்து நூல்களை யாத்ததிலிருந்தது பேரறிஞர் என்பது தெளிவாகிறது .

கர்வம் பிடித்த கவிஞர் பிற்காலத்தில் மனம் மாறி பணிவுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார்.

–subham —


Tags- பிராக்ருத மொழி, ஹரிபத்ர, ஜின பட்ட சூரி, சமண மத, யானை, கர்வம், கவிஞர்