
Post No. 12,144
Date uploaded in London – – 17 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

1.சங்கீத மும்மூர்த்திகள் யாவர் ?
2.சங்கீதம் கற்க வருவோருக்கு தீட்சிதரின் க்ருதியைத்தான் முதலில் சொல்லித் தருவார்கள் . அது என்ன பாடல் ?
3.தீட்சிதரின் காலம் என்ன? பிறந்த ஊர் எது?
4.ஒவ்வொரு பாடகரும் இறுதியில் ஒரு முத்திரை வைப்பர்; எதை வைத்து தீட்சிதர் க்ருதி என்று கண்டுபிடிக்கலாம் ?
5.தீட்சிதர் பாடிய முதல் க்ருதி எது ? எங்கே பாடினார் ?
6.காஞ்சிபுரத்தில் யாரிடம் தீட்சிதர் தத்துவம் கற்றார்?
7.தீட்சிதரை தஞ்சாவூரில் சந்தித்த பிரபல பாடகர் யார் ?
8.எட்டயபுரத்தின் வறட்சியைக் கண்டு மனம் நொந்து,
என்ன கீர்த்தனை பாடி மழையை வருவித்தார் ?
9.கங்கையில் தீட்சிதருக்கு என்ன கிடைத்தது ?
10.நவாவர்ண கிருதிகள் என்பது என்ன ?

XXX
விடைகள்
1. தியாகராஜ சுவாமிகள், முத்து சுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்
2. ஹம்சத்வனி ராகத்திலுள்ள ‘வாதாபி கணபதிம் பஜே ‘.
3. பிறந்த ஊர் திருவாரூர் . அவர் வாழ்ந்த காலம் 1775-1835.
4. அவர் பாடல்கள் அனைத்தும் ‘குரு குஹ’ என்ற முத்திரையுடன் முடியும் .
5.திருத்தணியில் முருகன் மீது பாடினார். மாய மாளவ கெளல ராகம் ;
‘ஸ்ரீ நாதாதி குருகுஹோ ஜயதி ஜயதி’.
6.உபநிஷத் பிரம்மன்
7.சாமா சாஸ்திரிகள் (சியாமா சாஸ்திரிகள்)
8.ஆனந்தாமிர்தகர்ஷினி – அமிர்தவர்ஷினி ராகம்
9. வீணை கிடைத்தது
10. திருவாரூரில் குடிகொண்டுள்ள அன்னை கமலாம்பாள் மீது தீட்சிதர் பாடியவை நவாவர்ண கிருதிகள். தேவியானவள் ஸ்ரீ சக்ரத்தில் ஒன்பது முக்கோண கோட்டையின் நடுவில் அமர்ந்திருப்பது நவ ஆவரணம் எனப்படும் . இதில் அவர் வெவ்வேறு சம்ஸ்க்ருத வேற்றுமைகளை (விபக்தி) வைத்துப் பாடினார் . தீட்சிதர் சுமார் 440 கிருதிகளைப் பாடியுள்ளார் .
—subham—
Tags– மழை , அமிர்தவர்ஷினி, எட்டயபுரம், முத்து சுவாமி தீட்சிதர் , நவாவர்ணம் , கிருதிகள், வாதாபிம் , குருகுஹ