QUIZ  வெந்நீர் ஊற்றுகள் பத்து QUIZ (Post No.12,539)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,539

Date uploaded in London – –  30 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Quiz serial No.76

1.இந்தியாவில் எத்தனை வெந்நீர் ஊற்றுகள் (Hot Springs ) இருக்கின்றன ?

xxx

2.இயற்கையின் அதிசயம் இந்த வெந்நீர் ஊற்றுகள் அவை எப்படித் தோன்றுகின்றன?

Xxx

3.இமய மலையில் யமுனை நதி உற்பத்தியாகும் யமுனோத்ரிக்குப் போகும் வழியில் என்ன வெந்நீர் ஊற்று இருக்கிறது?

Xxx

4. பத்ரிநாத் செல்லும் வழியிலும் சுட்டு நீர் ஊற்று இருக்கிறதா?

xxx

5.லடாக் பிரதேசத்தில்  ஒரு பகுதியையே  வெந்நீர் ஊற்றுகள் (ஹாட் ஸ்பிரிங்ஸ்) என்று அழைப்பது ஏன்?

xxxx

6. இந்தியாவில் அதிக வெந்நீர் ஊற்றுகள் உள்ள பகுதி எது ?

xxxx

7. இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 5 புகழ்பெற்ற சுடு நீர் ஊற்றுக்களின் பெயர்கள் என்ன?

xxx

8.இந்தியாவிலேயே அதிக வெப்பம் உடைய ஊற்று எது ?

xxxx

9.வெப்ப நீர் ஊற்றுகளில் குளிப்பது ஆரோக்கியம் தரும் என்பது உண்மையா?

xxx

10.வெப்ப நீர் ஊற்றுகளினால் சுற்றுலா வளர்கிறதுகடுங் குளிர்ப் பிரதேசங்களில் குளிப்பதற்கு உதவுகிறதுஅதிலுள்ள கந்தகத் தன் மை ஆரோக்கியம் அளிக்கிறதுஇவை தவிர அவைகளுக்குப் பயன் உண்டா ?

xxxx

விடைகள்

please continue in

swamiindology.blogspot.com

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 13 (Post No.12,538)


Ganesh in Japan

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,538

Date uploaded in London – –  30 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 13

24.நல்லூர் கயிலாய நாத பிள்ளையார் கோவில்

பிள்ளையார், கணபதி, கணேசர், விநாயகர் , யானை முகன் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் பிள்ளையார் கயிலாயம் முதல் இலங்கையின் தென் கோடியில் உள்ள  கண்டி நகர் வரை எங்கும் காட்சி தருகிறார். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் எல்லா நாடுகளிலும் பிள்ளையார் விக்கிரகங்கள் கிடைத்துள்ளன. இத்தாலி நாட்டுத் தலைநகர் ரோமாபுரியில் கணேஷ் என்பதை ஜானேஷ் (Janus)  என்று வழிபட்டனர் ; ஜப்பானிலும் பிள்ளையார் கோவில்கள் உண்டு

சங்க இலக்கியத்தில் பதிகப் பகுதியில் மட்டும் பிள்ளையார் பற்றிய ஒரு குறிப்பு இருப்பதைப் பலரும் பிற்காலச் சேர்க்கை என்பர். ஆயினும் எனது ஆராய்ச்சியில் கபிலர் என்ற பிராமணப் புலவர் பெயரே பிள்ளையார் பெயர் என்பதைக் காட்டியுள்ளேன் . அந்தப் பார்ப்பனர்தான் சங்க இலக்கியத்தில் அதிகப் பாடல்கள இயற்றியவர். அவர் தனது புறநானுற்றுப்   பாடலில் புல் , எருக்கம் , இலை , நீரைக் கொடுத்தாலும் இறைவன் மறுப்பதில்லை என்று பாடுகிறார்.

புறநானூறு பாடல் 106

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை

கடவுள் பேணேம் என்னா; ஆங்கு,

மடவர் மெல்லியர் செல்லினும்,

கடவன், பாரி கை வண்மையே.

இது பகவத் கீதையின் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் — என்ற ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு என்பதும் அவர் குறிப்பிடும் புல் இலை எருக்கம் என்பது விநாயகர் வழிபாட்டில் மட்டுமே பயன்படும் அருகம்புல் எருக்கம் இலை , பூ என்பதும் நான் ஆராய்ச்சியில் கண்ட விஷயங்கள் ஆகும்.

மேலும் மஹேந்திர பல்லவன் (600 CE) காலத்தில் வாழ்ந்த அப்பரும் சம்பந்தரும் தேவாரத்தில் பிள்ளையாரைப் பல இடங்களில்……………………..

Please continue in swamiindology.blogspot.com

மாஸ்டர் மஹாஷய்- கதாம்ருதம் அளித்த மகான்! (Post No.12,537)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,537

Date uploaded in London –  30 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா – கதாம்ருதம் அளித்த மகான்!

ச.நாகராஜன்

ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை உலகம் அறிய வழி வகுத்தவர் ‘எம்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மகேந்ந்திரநாத் குப்தா ஆவார்.

பரமஹம்ஸர் அவரை மாஸ்டர் என்று அழைப்பார்.

ஆகவே அவரை அனைவரும் மரியாதையுடன் மாஸ்டர் மஹாஷய் என்று கூறுவர்.

‘எம்’ என்றே அவர் அனைத்து ஆன்மீக விஷயங்களையும் எழுதுவது வழக்கம்.

அவருக்கு இன்னும் சில புனைப்பெயர்கள் உண்டு – மணி, மோஹினி மோஹன், பக்தர் – இப்படியெல்லாம் அவர் ராமகிருஷ்ண கதாம்ருதத்தில் அறிமுகப்படுத்தப்படுவார்.

1854ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அவர் பிறந்தார். அன்று நாக பஞ்சமி தினம். சதயம் அவரது நக்ஷத்திரம். எட்டுக் குழந்தைகளில் மூன்றாவதாக அவர் பிறந்தார்.

அந்தண குடும்பத்தில் பிறந்த அவர் ஒரு பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.

1873ஆம் ஆண்டு நிகுஞ்சா தேவி என்னும் அம்மையாரை அவர் மணந்தார்.

அபாரமான ஞாபகசக்தி உள்ளவர் எம். 1867ஆம் ஆண்டு முதல் டயரி எழுதுவதை அவர் வழக்கமாகக் கொண்டார். இப்படி ஒரு நாட்குறிப்பை தினமும் எழுத வேண்டும் என்று அவரிடம் யாரும் சொல்லவில்லை.

இதன் பலன் 15 ஆண்டுகள் கழித்துத் தான் தெரிய வந்தது.

1882ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி அவர் பரமஹம்ஸரை தரிசித்தார்.

தனது நாட்குறிப்பில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரை சந்திக்கும்போதெல்லாம் அங்கு நடப்பது அனைத்தையும் நாட்குறிப்பில் எழுதலானார்.

இதுவே ஶ்ரீ ராமகிருஷ்ண கதாம்ருதமாகப் பரிணமித்தது.

ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் 1836ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் நாள் அவதரித்தார். 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி சமாதி எய்தினார்.

மகேந்திரநாதர் ராமகிருஷ்ண கதாம்ருதத்தை முதலில் GOSPEL OF SRI RAMAKRISHNA என்று ஆங்கிலத்தில் 1897ஆம் ஆண்டு வெளியிட்டார்.

வங்காள மொழியில் இதன் முதல் பாகம் 1902லும் இரண்டாம் பாகம் 1904லும் மூன்றாம் பாகம் 1908லும் நான்காம் பாகம் 1910லும் ஐந்தாம் பாகம் 1932லும் வெளியானது.

பின்னால் ஏராளமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது.

இந்த கதாம்ருதத்தை உலகிற்கு அளிப்பதற்காகவே அவர் பிறந்தார் போலும்!

ஐந்தாம் பாகத்தின் முடிவை இரவு ஒன்பது மணிக்கு அவர் எழுதி முடித்தார்.

உடனே அவருக்கு தலைவலி ஆரம்பித்தது.

அவருக்குப் பிடித்த பாட்டை அவர் வாய் முணுமுணுக்க ஆரம்பித்தது;

“ஓ! குருவே! அம்மா, என்னை உன் மடியில் ஏந்திக் கொள்”

1932ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் தேதி சனிக்கிழ்மையன்று அவர் சமாதி எய்தினார்.

எழுபதாவது வயது முதல் அவர் மிஹிஜம் என்ற இடத்தில் ஒரு குடிலில் வசித்து வந்தார். இரு அறைகள் அங்கு இருந்தன. ஒன்றில் எம் வசித்தார். இன்னொன்று ஸ்டோர் ரூம். வாரந்தாவில் இரு சிறிய அறைகள் இருந்தன. ஒன்று சமையலறை. இன்னொன்று குளியலறை.

இங்கு தனது வாழ்நாள் இறுதி வரை அவர் தன்னைச் சந்தித்த பக்தர்களுக்கெல்லாம் ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றியும் பல அரிய ஆன்மீக விளக்கங்களையும் தந்து வந்தார்.

ஸ்வாமி விவேகானந்தரை அவர் சுக மஹரிஷியின் மறு அவதாரம் என்றே கருதினார்.

அன்னை சாரதா தேவியார் 1853ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி அவதரித்தார். அவர் 1920ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் நாளில் சமாதி அடைந்தார்.

பரமஹஸருடனும் அன்னை சாரதா தேவியாருடனும் அருள் பெற்று வாழ்ந்த நாட்களை மஹேந்திரநாதர் புனிதமாகக் கருதினார்.

மிகுந்த வேதனையுடன் அவர் சில சமயம் புலம்புவதுண்டு இப்படி:

“ அடடா! அன்னை போய் விட்டார். 35 ஆண்டுகள் நம்மை பாதுகாத்தார். ஐந்தே வருடங்கள் தான் ஶ்ரீ ராமகிருஷ்ணரின்  அற்புதமான தெய்வீக பாதுகாப்பில் இருந்தோம். ஆனால் அன்னை 35 ஆண்டுகள் நம்மை நன்கு வளர்த்தார். அடடா! அவரும் போய் விட்டாரே!”

இதனால் அவர் மனதளவிலும் உடல் அளவிலும் பாதிக்கப்பட்டார்.

தனிமையில் வாழ மிஹிஜம் நோக்கி வந்து அங்கு வாழலானார்.

மஹேந்திர நாதர் இங்கு தன்னைப் பார்க்க வந்த பக்தர்களிடம் பேசியதை எல்லாம் ஸ்வாமி நித்யாத்மனானந்தா M-The Apostle & the Evangelist  என்று ஆங்கிலத்தில் இரு பாகங்களாக வெளியிட்டுள்ளார்.

அற்புதமான ஆன்மீக ரகசியங்களை மஹேந்திரநாதர் விளக்கியுள்ளதை இதில் காணலாம்.

***

விண்வெளி, அயல் கிரகவாசிகள் பற்றி இலங்கைத் தமிழ் அறிஞருடன் விவாதம் (Post.12,536)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,536

Date uploaded in London – –  29 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

செப்டம்பர் 7, 2023 முதல்  11, 2023 வரை ஐந்து நாட்களுக்கு ஸ்ரீ லங்காவில் இருந்தேன் . எனக்கு பல்வேறு உதவிகளைச்  செய்த அடையபலம் ஏ ஆர் விஸ்வநாத தீட்சிதர் , கொழும்பு நகரில் லார்சன் அண்ட் டூப்ரோ கம்பெனியில் சீனியர் மனேஜராகப் பணியாற்றுகிறார். வஜ்ரா ரோடு பிள்ளையார் கோவிலில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏறிக்குதித்து வேறு ஒரு கோவிலுக்கு விரைந்தோம். ஆனால் போகும்போதே கோவில் மாலை 7 மணிக்கு மூடப்பட்டுவிடும் என்று எச்சரித்தார் ; அப்படியானால் இன்னொரு நாள் பார்க்கலாமே ! என்ன அவசரம்? மணி 7 ஆகப்போகிறதே என்றேன். இல்லை ; அதில் வேறு ஒரு விஷயம் இருக்கிறது. உங்களுக்கு அதிர்ஷ்டம்  இருந்தால் கிடைக்கும் என்றார் . ஏற்கனவே அவர் துவாரகா, ஷண்முகா வெஜிட்டேரியன் உணவு விடுதிகள் பற்றிச் சொல்லி பசியைக் கிளப்பி விட்டிருந்ததால் அதுதான் அடிக்கப்போகும் அதிர்ஷ்டமோ என்று எண்ணிக்கொண்டே சென்றேன். ஆட்டோவும் ஒரு இருண்ட தெருவுக்குள் நுழைந்தது .நாங்கள் எதிர்பார்த்துச் சென்ற ஐச்வர்ய லட்சுமி அம்மன் கோவில் மூடப்பட்டிருந்தது Aishwarya Lakshmi Amman Temple is a Hindu temple located in Colombo. It is one of the 3909 Hindu temples in Sri Lanka. . அது கொழும்பு வெல்லவத்தைப் பகுதியில் தோன்றிய புதிய கோவில் ஆகும் . இலங்கையில் உள்ள 3909 இந்துக்கோவில்களில் அதுவும் ஒன்றாகும்

அங்கு தேவியருடன் எல்லா மூர்திதகளும் ஆஞ்சனேயரும்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கோவிலை 7 மணிக்கே மூடிவிடும் கா ரணம் தெரியவில்லை .

கோவிலுக்கு எதிரே கம்பவாரிதி ஜெயராஜ் வீடு இருப்பதாகவும் அவர் பெரிய தமிழ்அறி ஞர் என்றும் என் காதில் ஓதினார் விசுவநாதன்.

அடடா, எனக்கு யு ட்யூப் YOU TUBE மூலம்  தெரிந்தவர் அவர் ; ஆனால் லண்டனில்,   முன்பின் சொல்லாமல் யார் வீட்டுக்கும் போய்ப் பழக்கமில்லையே; இது முறையா? என்றேன்.அதனால் என்ன அவர் அனுமத்தித்தால் தானே பார்க்கப் போகிறோம் என்று சமாதானம் சொன்னார். வீட்டிற்குள் தைரியமாக நுழைந்தோம். திரு ஜெயராஜின் செக்ரட்டரி போல செயல்படும் அன்பரிடம் , அடையபலம் விஸ்வநாதன் என்னை  அறிமுகம் செய்துவைத்து பத்து நிமிடம் அவரைப் பார்க்க வந்திருப்பதாக சொன்னார். அவரும் எங்களை இருக்கையில் அமரச் சொன்னார். எதிர்பாராத விஜயம் என்பதால் கையில் பழமோ SWEET சுவீட்டோ வாங்கிச் செல்லவில்லை. பெரியவர்களை சந்திக்கும்போது ஒரு எலுமிச்சம்  பழமாவது கொண்டு செல்ல வேண்டும். நல்ல வேளையாக, நான் எழுதிய புஸ்தகங்களில்  ஏழு எட்டு என் பையில் இருந்தது .

அவரும் எங்களை சில நிமிடங்களுக்குள் உள்ளே அழைத்தார். அவருக்கு முறையான வணக்கம் செய்துவிட்டு நான் இலங்கை வந்த நோக்கத்தைச் சொல்லிவிட்டு என் புஸ்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்தேன். அவைகளைப்  பார்த்துவிட்டு  ஒரு புஸ்தகத்தை ஆர்வ த்தோடு எடுத்துக்கொண்டு முகத்தில் வியப்புக்குறிகளுடன் பேசத் தொடங்கினார்.

என்னுடைய அந்த புஸ்தகத்தின்  தலைப்பு –

இந்துமத நூல்களில் வெளி உலக வாசிகளும் காலப்பயணமும்

அதைப்பார்த்த அவர் நானும் இந்த விஷயம் பற்றித்தான்  சிந்தித்துக்……

please continue in swamiindology.blogspot.com

மாவிட்டபுரம் கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து…….- Part 12 (Post.12,535)

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் Picture from Wikipedia

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,535

Date uploaded in London – –  29 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 12

23. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்

MAVIDDAPURAM KANDSWAMY TEMPLE

இலங்கையிலுள்ள பழைய கோவில்களில் மிகவும் கீர்த்தி வாய்ந்தது மாவிட்டபுரம்  கந்தசுவாமி  கோவில் . இந்த ஊரின் பழைய பெயர் கோவில் கடவை . இது யாழ்ப்பாணத்திலிருந்து பத்து மைல் தூரத்தில் இருக்கிறது.  சோழ நாட்டுடனும் பாண்டிய நாட்டு மதுரையுடனும் நெருங்கிய தொடர்புடைய ஊர். குதிரை முகம் நீங்கிய, சோழ இளவரசி கோவிலைக் கட்டுவதற்கு மதுரை நகர சிற்பிகளைக் கொண்டு வந்தாள் . அவள் மூலமாக இந்த ஊருக்கு மா /குதிரை +விட்ட/ நீங்கிய + புரம் /ஊர்  என்ற பெயர் வந்ததாம் . அதுமட்டுமல்ல அருகிலுள்ள காங்கேசன் துறைக்கும் அவள் மூலமே பெயர் உண்டாக்கியது காங்கேயன் என்பது முருகனின் ஸம்ஸ்க்ருதப் பெயர் . அந்த முருகன் சிலை கொண்டுவரப்பட்ட துறைமுகம் காங்கேசன் துறை ஆயிற்று.

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வரலாறு

மருதப்பிரவீகவல்லி எனும் குதிரை முகமுடைய சோழ இளவரசிக்கு மா/குதிரை முகம் நீங்க முருகப் பெருமானின் பிரார்த்தனை உதவியது அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து ஆலயத்தைக் கட்ட மதுரை நகரிலிருந்து சிற்பிகளை வரவழைத்தாள் . கோவில், அவளுடைய காலத்துக்கு முன்னரும் இருந்தது. அவள் செய்தது முறையான கட்டுமானம் தான் .

திசை உக்கிர சோழன் என்பவனின் மகள் மருதப்பிரவீகவல்லி ; பிறவியிலேயே அவளுக்கு கோணல் மூஞ்சி; வைத்தியர்களால் குணப்படுத்த………………………

please continue in swmiindology.blogspot.com

நடுங்கும் சீனா! வளரும் பாரதம்!! (Post No.12,534)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,534

Date uploaded in London –  29 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

நடுங்கும் சீனா! வளரும் பாரதம்!!

ச.நாகராஜன் 

சமூக ஊடகங்களிலிருந்து வந்த ஒரு செய்தி: 

ஏன் ராகுல் காந்தி, சீனாவின் சார்பாக அதானியை எதிர்க்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதானி சீனாவின் ஆசைகளை வெகுவாகத் தகர்த்து விட்டார்.

அதானி சீனாவை இஸ்ரேலில் ஹைஃபா துறைமுகத்தில் (Haifa Port) தோற்க அடித்து விட்டார்.

சீனாவை கொழும்பு துறைமுகத்தில் தோற்க அடித்து விட்டார்.

சீனாவை எகிப்தில் தோற்க அடித்து விட்டார்,

ஆஸ்திரேலியாவில் நிலக்கரியை சீனா தோண்டி எடுப்பதைத் தோற்க அடித்தார்.

பெருவில் சீனா தாமிரத்தை எடுப்பதைத் தகர்த்தார்.

இந்தியா ஐரோப்பாவிற்கு நேரடியாகச் செல்லும் பாதை கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.

அதானி கிரிஸீல் உள்ள துறைமுகங்களான கவலா, வோலோஸ், அலக்ஸாண்ட்ரபுலி (Kavala, Volos, Alesandroupoli in GREECE) துறைமுகங்களைக் கையகப்படுத்துவதில் ஒப்பந்த விவாதத்தின் கடைசி கட்டத்தை எட்டியுள்ளார். கிரீஸில் உள்ள பிராஸ் துறைமுகத்தைப் (Greece’s Port of Piraeus) பயன்படுத்துவதைப் பற்றியும் இந்தியா பரிசீலித்து வருகிறது.

ஐரோப்பாவிற்கு இந்தியா நேரடியாகச் செல்வதில் கிரீஸ் ஒரு முக்கிய பங்கை வகிக்க இருக்கிறது – இந்த ஒப்பந்தம் முடிவடைந்தால்.

வணிகப் போக்குவரத்து மார்க்கம் 

மும்பையிலிருந்து யுஏஇக்குச் – ஐக்கிய அரபு அமீரகத்திற்கு – (Mumbai to UAE) செல்வது ஏற்கனவே பாதுகாப்பான நேர் வழியாக உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சவூதி, சவூதியிலிருந்து ஜோர்டான், ஜோர்டானிலிருந்து இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்திற்கு ரயில் பயணம் – இப்படி வழி தயாராகி விட்டது.

ஹைஃபாவிலிருந்து கிரீஸுக்கு கப்பல் பயணம். அங்கிருந்து ஐரோப்போ, யூரேஸியா – இதற்கான பேச்சு வார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

இந்த வணிக வழியானது நமது பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது வருடத்திற்கு முன்பு திட்டமிடப்பட்டது. இது சீனாவின் OBOR எனப்படும் – ONE BELT, ONE ROAD – ஒரு வளையம் ஒரே சாலை என்ற சீனாவின் திட்டத்திற்கான பதிலடி. சீனா 20+ வருடங்களாக இதை அனுபவித்து வருகிறது.

இது நமது நாட்டின் வணிகப் போக்குவரத்துச் செலவைக் குறைக்கும் இந்தியாவின் ஏற்றுமதி- இறக்குமதியை ஊக்குவிக்கும்.

அதானி சீனாவிற்கு எதிராக இந்தியாவிற்காக இதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறார்.

இன்னுமா புரியவில்லை? ஒரு மேப்பையும் பேனாவையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த இடங்களை எல்லாம் அதில் குறித்துக் கொள்ளுங்கள். என்ன தெரிகிறது. சீனாவின் குரல்வளை நெறிக்கப்படுகிறது, இல்லையா?!

யாரெல்லாம் சீனாவில் அதிக முதலீடு செய்திருக்கிறார்கள் என்று இப்போது பார்ப்போம் – 90 சதவிகிதம் அமெரிக்காவும் ஐரோப்பாவும் தான்!

ஆக இந்தியா வளர்ந்தால் யாருக்கு பண நஷ்டம்?

ஐரோப்பா, அமெரிக்கா, சீனா – இந்த நாடுகளுக்குத் தான்!

நமது நாடு முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது.

சேதம் ஏற்பட்ட பின் அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று திணறாமல்!

புரிகிறதா சூக்ஷ்மம்?! 

***

நன்றி : ஆங்கில வார இதழ் TRUTH, KOLKATA Volume 91 Issue 22 dated 15-9-2023

கண்டி புத்தர் பல் கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- 11 (Post.12,533)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,533

Date uploaded in London – –  28 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கண்டி புத்தர் பல் கோவில்   இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 11

22. கண்டி நகர புத்தர் பல் கோவில் TEMPLE OF BUDDHAR SACRED TOOTH RELIC, KANDY, SRI LANKA.

இந்து மதக் கோவில் பட்டியலில் புத்த மதக் கோவிலிச் சேர்க்கக் காரணம் , இந்துக்களும் இந்தக் கோவிலுக்கு விஜயம் செய்வதே. மேலும் அங்கு பல இந்துக் கோவில்களும் உள்ளன. அவற்றை பெளத்த மதத்தினரும் வழிபடுகின்றனர்

கண்டி  நகரம் இலங்கையின் தலை நகராகவும் இருந்தது. இங்கிருந்து ஆண்ட ராஜ வம்சத்தினரின் பாதுகாப்பிலேயே புத்தரின் பல் (Sacred Tooth) இருக்கிறது.

கொழும்பு நகரிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில்  KANDY/ கண்டி நகரம் இருக்கிறது , சுமார் 4 மணி நேரத்தில் காரில் செல்லலாம்.

பழைய அரண்மனையின் ஒரு பகுதி  தலத மாளிகை;  அதில் புத்தர் பல் தரிசனத்துக்கு வைக்கப்பட்டுள்ளது அங்கு சித்திரம் தீட்டப்பட்ட சுவரும் இருக்கிறது. ஒரு தங்கத் தாமரை மலரிலிருந்து  புறப்படும் கம்பியின் மீது பல் நிற்கிறது

சிங்களவர்கள் பல போலி பற்களைச் செய்து சீனா முதலிய நாடுகளுக்கு அனுப்பினார்கள். சீன சக்ரவர்த்தி குப்லாய்கான் , ஒரு பல்லை இலங்கையிருந்து பெற்றதாக மாக்கோ போலோ யாத்திரை நூலில் எழுதி வைத்துள்ள்ளான் . புத்தரின் பல், நிறைய சண்டைகளுக்கும் ஏமாற்று வித்தைகளுக்கும் காரணமாக அமைந்தது .

கண்டி நகர சின்னங்களை யுனெஸ்கோ UNESCO , உலக பாரம்பர்ய சிறப்புமிக்க இடங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது மேலும் இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரமுள்ள மலைப் பகுதியில் இருப்பதால் இயற்கை எழில் கொஞ்சசம் இடமாகத் திகழ்கிறது  விக்கிரமபாஹு என்ற மன்னன் இந்த நகரை உருவாக்கினான். இன்றுவரை, நகரம் அதன் பழமையான வடிவத்தில் பாதுகாக்கப்படுகிறது. இது கட்டிடக்கலை மற்றும் வரலாற்றின் பல நினைவுச்சின்னங்களையும், கொண்டுள்ளது.

கண்டி மன்னரின் சிம்மாசனம் கொழும்பு மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏனைய கலைப் பொருட்கள் இங்கேயுள்ள அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன . அரண்மனையும், மியூசியமும், பல்/ Tooth இருக்கும் கோவிலும் பார்க்கவேண்டிய இடங்கள் சிம்மாசனங்கள், செங்கோல் மற்றும் பல அரச பாத்திரங்கள் உட்பட அருங்காட்சியகத்தின் பெரும்பாலானவை   பல்லே வஹாலாவில் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பொருட்கள் அரண்மனையின் பிரதான கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

நகரின் நடுவில்  போகம்பரா ஏரி உள்ளது.; ஏரியின் நடுவில் கோடைகால அரண்மனையுடன் ஒரு சிறிய தீவு உள்ளது,  . அங்கு ஒரு காலத்தில் ராஜாவின் அரண்மனை இருந்தது,

ஏரியில் புத்தரின் புனிதப் பல்லுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது. கோயிலின் மற்றொரு பெயர் தலதா மாளிகை.

தலதா மாளிகைக்கு அருகில் 4 இந்து கோவில் கட்டிடங்கள் உள்ளன. அவை நாதன் , கதிர்காம தெய்வம், பத்தினி தெய்வம் மற்றும் விஷ்ணு  ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை.

xxxx

எசல பெரஹெரா

ஆண்டு தோறும் நடைபெறும் புத்தர் பல் ஊர்வலத் திருவிழா……………………

please continue in swmiindology.blogspot.com

வாழ்வுக்கு ஆதாரமான நதி வளம் காப்போம்!-Part 2 (Post.12,532)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,532

Date uploaded in London –  28 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாழ்வுக்கு ஆதாரமான நதி வளம் காப்போம்!

உலக நதிகள் தினம்! (பகுதி 2)

ச.நாகராஜன்

பெயர்களில் மட்டும் உள்ள ஏரிகள்!

இது மட்டுமின்றி சென்னை, பெங்களூர் போன்ற நகர்களில் ஏராளமான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறி அந்த ஏரிகள் அந்தப் பகுதிகளின் தெருக்களின் பெயர்களில் மட்டுமே இன்று இருக்கும் அவல நிலையையும் பார்க்கிறோம்.

சீனாவின் மஞ்சள் நதி

இது இப்படி எனில் சீனாவின் இரண்டாவது பெரும் நதியும் வாழ்வாதாரமாகவும்  திகழும் மஞ்சள் நதி பாழ்பட்டு அசுத்த நதியாகவே ஆகி விட்டது. அதன் 66 விழுக்காடு நீர் குடிக்க முடியாத அசுத்த நீர். 435 கோடி டன்கள் அளவு கழிவு நீர் அதில் கலக்கப்பட்டதாக 2005ஆம் ஆண்டு நதி நீர் அறிக்கை தெரிவித்தது. சீனாவின் 5464 கிலோமீட்டர் நீளமுள்ள மஞ்சள் நதியின் நிலையும் பரிதாபகரமாக ஆகி விட்டது.

நடந்தாய் வாழி அமேஸான்

அடுத்து உலகின் மிகப் பெரும் நதியான அமேஸானைப் பார்ப்போம்.

பெருவிலுள்ள ஆண்டஸ் மலையில் 17000 அடி உயரத்தில் உள்ளது அழகிய ஏரி லாரிகோச்சா. இதுவே அமேஸான் நதியின் மூலம்.

இங்கிருந்து பிறக்கும் நதி 4000 மைல் தூரம் நடை பயின்று பல இடங்களில் பல…………..

please continue in swamiindology.blogspot.com

OCTOBER 2023 CALENDAR WITH QUOTES FROM BHARTRUHARI’S NITI SATAKA (Post No.12,531)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,531

Date uploaded in London – –  27 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

FESTIVAL DAYS – OCT. 2- GANDHI JAYANTI; 14- MAHALAYA AMAVASAI; 15-NAVARATRI BEGINS; 23- SARASVATI PUJA; 24- VIJAYA DASAMI; 28- CHANDRA GRAHANA/ LUNAR ECLIPSE.

NEW MOON DAY-  14; FULL MOON DAY – 28/ LUNAR ECLIPSE

EKADASAI FASTING DAYS – 10, 24

AUSPICIOUS DAYS– 18, 20, 27

XXXX

FOLLOWING ARE QUOTES FROM BHARTRUHARI’S NITI SATAKA

XXX

OCTOBER 1 SUNDAY

Fool’s mind: We can
bring out a gem held in the mouth of a crocodile.
cross an ocean of great waves ; can wear an angry cobra on our head like a jewel.
But we cannot understand the mind of a fool.

XXX

OCTOBER 2 MONDAY

Fool’s mind: We can extract oil from a fistful of sand, by effort;
quench our thirst by drinking water from a mirage;
fetch horn of a rabbit by exploring the earth;
but cannot appreciate and understand a knave’s mind.

XXX

OCTOBER 3 TUESDAY

PERSON WHO TRIES TO SATISFY A FOOL IS ALSO A FOOL.
He is equal to a person who:
1. wants to tie down an elephant using stems of a lotus;
2. cut a diamond using delicate flowers;
3. convert all the salty water of the seas into sweet water.

XXX

OCTOBER 4 WEDNESDAY

SILENCE IS THE BEST ORNAMENT FOR AN IGNORAMUS IN AN ASSEMBLY OF SCHOLARS.
The creator desired to help the ignoramuses, to have control on themselves and hide their ignorance. Hence he created the shelter of
silence, particularly in an assembly of scholars.

XXX

OCTOBER 5 THURSDAY

Ignoramus’s repentance:
He laments: When I knew a little, I behaved like an elephant in rut. I behaved as though I was omniscient. After exposure to and friendship with great scholars, I realised that I knew very little. All my pride fell like fever. Now, I feel more comfortable.

XXX

OCTOBER 6 FRIDAY

The knave does not know manners and respect. The dog in possession of a bone while chewing it refuses to see and recognise even the Lord of Heaven even if he presents himself before it. The poet describes the bone: full of worms, blood, oozing obnoxious smell, abominable and despicable.

XXX

OCOBER 7 SATURDAY

A person who does not have the following is a beast in the guise of a man.
1. education, knowledge and realisation 2. penance. 3. adherence to duty and ethics;
He is a burden to the earth.

XXX

OCOBER 8 SUNDAY

Lion’s behaviour:
Even if extremely hungry, lean by old age, having dilapidated life, facing a stage of hardships and is in danger,
A lion will long to split the forehead of an elephant and eat its content;
Why it does it consume dry grass?
Great people even in distress do not resort to unethical deeds.

XXX

OCOBER 9 MONDAY

Fire can be extinguished using water.
2. Scorching son can be overcome using umbrella.
3. Berserk elephant can be regulated using a goad (pointed needle).
4. Cows, donkeys can be driven using stick.
5. Diseases can be mitigated using medicine
6. Poisons, toxins can be fought with charms, incantation, spell.
But there is no solution for the stupidity of a fool.

XXX

OCOBER 10 TUESDAY

The Ganga river started its downward journey of its self pollution.
1. From heavens to the head of S`hiva;
2. From Shiva’s head to the Himalayas.
3. From Himalayas to the earth.
4. From the earth to the Seas.
5. From the sea to the world beneath (pataalam).

XXX

OCOBER 11 WEDNESDAY

The Ganga river started its downward journey of its self pollution.
1. From heavens to the head of S`hiva;
2. From Shiva’s head to the Himalayas.
3. From Himalayas to the earth.
4. From the earth to the Seas.
5. From the sea to the world beneath (pataalam).

XXX

OCOBER 12 THURSDAY

Two alternatives for a flower:
1. adorn the hair plaits of women
2. wither on forest paths.

XXX

OCOBER 13 FRIDAY

The thousand headed serpent Aadis`eesha bears on his hood the entire Universe.
The great turtle Kuurma avataara carries the serpent on its back.
It drops the Universe in the ocean mercilessly for passing on to the great Hog: Varaha avataara.
The actions of great persons are beyond explanations and forms!

XXX

OCOBER 14 SATURDAY………………………………Please continue in swamiindology.blogspot.com

நகுலேஸ்வரம்-  இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – 10 (Post No.12,530)

Indian Prime Minister Narendra Modi in Naguleswaram temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,530

Date uploaded in London – –  27 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  –Part 10

21.நகுலேஸ்வரம் கோவில் Keerimalai Naguleswaram temple

நகுல என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு கீரி என்று பொருள்; தமிழ் நாட்டில் நிறைய தலங்கள் ஈ முதல் எறும்பு வரை, எறும்பு முதல் யானை வரை சிவன் கோவில்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது போல கீரி  மலை நகுலேஸ்வரமும் சிவ பெருமானுடன் தொடர்புடைய தலம் ஆகும்

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் இதுவும் ஒன்று என்பதை முந்திய கட்டுரைகளில் கண்டோம். நகுலேஸ்வரம் கோவில் யாழ்ப்பாணத்தில் கீரி மலை அருகில் உள்ளது.. காங்கேசன் துறைக்கு அருகில் இது இருக்கிறது .

நகுலேஸ்வரமும் , போர்ச்சுகீசிய கிறிஸ்தவ வெறியர்களிடமிருந்து தப்பவில்லை அவர்கள் அ.ழித்த 500–க்கும் மேலான இந்துக்கோவில்களில் இதுவும் ஒன்று. ஆனால் தமிழ்நாட்டில் முஸ்லீம் வெறியர்களிடமிருந்து விக்கிரகங்களைக் காப்பாற்ற அர்ச்சகர்களும் பக்தர்களும் என்ன செய்தார்களோ அதையே இங்கும் இந்துக்கள் செய்தனர் சீரும் சிறப்பும் பெற்று பெரிய கோபுரங்களுடன் விளங்கிய கோயிலை கிறிஸ்தவர்கள் தரைமட்டம் ஆக்கியபோதும் பரசுபாணி என்ற பிராமணர் , விக்கிரகங்களை ஒரு கிணற்றுக்குள் போட்டு மறைத்துவைத்தார். பிற்காலத்தில் இந்துக்கள் அதைக் கண்டுபிடித்து மாபெரும் கோவிலை எழுப்பினர் .

இந்து மதத்தின் ஒரிஜினல் Original பெயர் சநாதன தர்மம் ; இதன் பொருள் ஆதி, அந்தம்; முடிவே இல்லாதது இது.

கீரி (Mongoose Faced Saint)  முக முனிவர்

கீரி மலையில் கீரி என்ற பிராணியின் முகத்தை உடைய ஒருவர் வசித்ததாகவும் அவர் சிவனை வழிபட்டு நேரான முகம் பெற்றதாகவும் கோவில் வரலாறு சொல்கிறது. இதனால் இறைவனுக்கு நகுலேஸ்வரன்  என்றும் இறைவிக்கு நகுலாம்பிகை என்றும் நாம கரணம் செய்யப்பட்டது.

முனிவரின் முகம், கோர வடிவம் பெற்றதற்கு  மற்றொரு முனிவரின் சாபமே காரணம்.

சங்க இலக்கியத்தில் சான்று

புறநானூற்றில் ஒரு புலவரின் பெயர்…………………………….

Please continue in swamiindology.blogspot.com