தாகூர் பொன்மொழிகள் : டிசம்பர் 2023 காலண்டர் (Post No.12,780)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,780

Date uploaded in London – –  –  29 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

பண்டிகை நாட்கள் – பாரதியார் பிறந்த நாள் 11;  ;மார்கழி மாதம் துவக்கம்-17 ; வைகுண்ட ஏகாதசி -23; கிறிஸ்துமஸ்- 25;  ஆருத்ரா தரிசனம் -27

அமாவாசை -12; பெளர்ணமி- டிசம்பர் 26;  ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 8, 23; சுபமுகூர்த்த நாட்கள் – 1, 7, 14

XXXXX

தாகூர் பொன்மொழிகள் : டிசம்பர் 2023 காலண்டர்

டிசம்பர் 1 வெள்ளிக் கிழமை

விடியல் இன்னும் இருட்டாக இருக்கும் போது, ஒளியை உணர்ந்து பாடும், பறவையின் உள்ளம் போன்றது. நம்பிக்கை.

xxxx

டிசம்பர் 2 சனிக் கிழமை

ஏற்கும்  திறனை  உண்டாக்கினால் அந்த அளவுக்கு  நமக்கு சொந்தமான எல்லாம் நம்மை வந்தடையும்;

XXXXX

டிசம்பர் 3 ஞாயிற்றுக் கிழமை

நட்சத்திரங்கள் உங்களுக்குள்  மறைந்திருப்பதால், உயர, உயர  போங்கள், ஆழமாக கனவு காணுங்கள், ஏனென்றால், குறிக்கோள்களுக்கு முன்னதாக அதைப் பற்றிய  கனவு இருக்கவேண்டும்

XXXX

டிசம்பர் 4 திங்கட் கிழமை

அன்பு என்பது கொடுக்கப்படும் பரிசு அல்ல ; அதை ஏற்போர் எங்கே என்று அது தேடுகிறது.

xxxx

டிசம்பர் 5 செவ்வாய்க் கிழமை

கற்பிப்பதன் முக்கிய பொருள், விளக்கங்களைக் கொடுப்பது அல்ல. அவன் மனதின் கதவுகளை தட்டுவது..

xxxx 

டிசம்பர் 6 புதன் கிழமை

கற்பிப்பதன் முக்கிய பொருள், விளக்கங்களைக் கொடுப்பது அல்ல. அவன் மனதின் கதவுகளை தட்டுவது..

xxxx

டிசம்பர் 7 வியாழக் கிழமை

கொஞ்சம்  விவேகம் இருப்பது ஒரு கண்ணாடி டம்பளரில் தண்ணீர் இருப்பது போன்றது- தெளிவானது, தூய்மையானது, ஊடுருவிப்  பார்க்கமுடியும்; அதிக   விவேகம் இருப்பது கடல் போல கருமையானது; ஆழத்தை அறிய முடியாது ; மர்மமானது

XXXX

டிசம்பர் 8 வெள்ளிக் கிழமை

மலரின் இதழ்களை மட்டும் பறித்தால்  மலரின் முழு அழகினைப் பெற முடியாது.

XXXX

டிசம்பர் 9 சனிக் கிழமை

வாழ்க்கை என்பது ஆனந்தம் என்று கனவு வந்தது; விழித்தேன் பார்த்தேன்; சே வைதான்  வாழக்கை என்று கண்டேன் அப்படியே செய் தேன் ; உண்மைதான் சேவை செய்வதே ஆனந்தம்.

XXXXX

டிசம்பர் 10 ஞாயிற்றுக் கிழமை

உண்மையான நட்பு, மின்விளக்கு போன்றது, எல்லாம் இருட்டாக இருக்கும்போது, அது நன்றாக பிரகாசிக்கிறது.

xxxx

டிசம்பர் 11 திங்கட் கிழமை

ஒரு குழந்தையை, உங்கள் சொந்தக் கற்றலுடன் மட்டுப் படுத்தாதீர்கள், ஏனென்றால் அவன் வேறொரு காலத்தில் பிறந்தவன்..

xxxx

டிசம்பர் 12 செவ்வாய்க் கிழமை

மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது. ஆனால் எளிமையாக இருப்பது, மிகவும் கடினம்.

xxxx

டிசம்பர் 13 புதன் கிழமை

நீரை நின்று, வெறித்துப் பார்ப்பதன் மூலம், நீங்கள் கடலைக் கடக்க முடியாது.

xxxx

டிசம்பர் 14 வியாழக் கிழமை

உங்கள் வாழ்க்கை விளிம்புகளில், லேசாக நடனமாடட்டும். ஒரு இலையின் நுனியில் பனி  போன்ற நேரம்.

xxxx

டிசம்பர் 15 வெள்ளிக் கிழமை

மனிதன் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய, மிக முக்கியமான பாடம், இந்த உலகில் வலி இருக்கிறது என்பதல்ல, அதை அவர் மகிழ்ச்சியாக மாற்றுவது சாத்தியமாகும் என்பதை..

xxxx

டிசம்பர் 16 சனிக் கிழமை

உங்கள் வாழ்க்கையில் இருந்து, சூரியன் வெளியேறியதால், நீங்கள் அழுதால் , உங்கள் கண்ணீர் நட்சத்திரங்களை பார்ப்பதை தடுக்கும்..

Xxxxx

டிசம்பர் 17 ஞாயிற்றுக் கிழமை

உலகை தவறாக படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று கூறுகிறோம்.

Xxxx

டிசம்பர் 18 திங்கட் கிழமை

நாம் எந்த அளவுக்கு பணிவாகஇருக்கிறோமோ அந்த அளவுக்குப் பெரியயோரை நெருங்கி விட்டோம் என்று பொருள்.

XXXX

டிசம்பர் 19 செவ்வாய்க் கிழமை

என் வாழ்க்கையில் மேகங்கள் மிதந்து வருகின்றன;மழையைக்  கொட்டவோ, புயல் வீசவோ அல்ல;அஸ் தமன வானத்திற்கு அழகு சேர்ப்பதற்காக !

XXXX 

டிசம்பர் 20 புதன் கிழமை

என் கடவுளை நான் நேசிக்க முடிகிறது, ஏனென்றால், அவரை மறுக்க அவர் எனக்கு சுதந்திரம் தருகிறார்.

xxxx

டிசம்பர் 21 வியாழக் கிழமை

நாம் எந்த அளவுக்கு பணிவாகஇருக்கிறோமோ அந்த அளவுக்குப் பெரியயோரை நெருங்கி விட்டோம் என்று பொருள்.

XXXX

டிசம்பர் 22 வெள்ளிக் கிழமை

பயத்தைக் கொடுக்காதே என்று அபயம் வேண்டமாட்டேன்;பயத்தை சந்திக்கும்போது எனக்கு பயமே இருக்கக்கூடாது என்றே வேண்டுவேன்.

XXXX

டிசம்பர் 23 சனிக் கிழமை

வலியை நீக்கிவிடு என்று கெஞ்ச்ச மாட்டேன்; எதையும் தாங்கும் இதயத்ததைக்  கொடு ; வெற்றியைக் கொடு என்றே வேண்டுவேன்.

XXXX

டிசம்பர் 24 ஞாயிற்றுக் கிழமை

பட்டுப்பூச்சி மாதக் கணக்கில் கணக்கு போடாது ; அந்த நொடியை மட்டுமே கருத்தில் கொண்டு, போதுமான நேரத்தை அனுபவிக்கிறது.

XXXX

டிசம்பர் 25 திங்கட் கிழமை 

இது காலைப்பொழுது என்று சொல்லிவிட்டு நேற்று  என்பது போலத் தள்ளிவிடாதீர்கள்; ஒவ்வொரு நாளையும் பெயர் வைக்க வேண்டிய புதிய குழந்தை போலக் காணுங்கள் .

XXXX

டிசம்பர் 26 செவ்வாய்க் கிழமை

வானம் கேட்பதற்கு  தயாராக இருக்கிறது . அதனுடன் பேசுவதற்கு பூமாதேவி மரங்களை உண்டாக்கி முடிவில்லாதா முயற்சியை செய்துகொண்டே இருக்கிறாள்

XXXX

டிசம்பர் 27 புதன் கிழமை

தகவல்கள் பல; ஆனால் உண்மை ஒன்றே

XXXXX

டிசம்பர் 28 வியாழக் கிழமை

தவறுகள் பற்றிய  எல்லாக் கதவுகளையும் அடைத்து விடாதீர்கள் ; அப்படிச் செய்தால் உண்மையின் கதவும் அடைபட்டுப் போகும்.

XXXX

டிசம்பர் 29 வெள்ளிக் கிழமை

அன்பு என்பது உணர்ச்சிக் கொந்தளிப்பு அல்ல அதுதான் இறுதி உண்மை. படைப்பின் இதய ஸ்தானத்தில் அது இருக்கிறது

XXXX

டிசம்பர் 30 சனிக் கிழமை

உண்மைக் கல்வி என்பது  தகவல்களை அள்ளித் தருவது அல்ல;.அத்தோடு படைப்பில் காணப்படும் எல்லாவற்றுடனும்  இணக்கமாக வாழக் கற்றுக் கொடுப்பதே உண்மைக் கல்வி .

XXXX

டிசம்பர் 31 ஞாயிற்றுக் கிழமை

ஒவ்வொரு குழந்தையும் என்ன செய்தி சொல்கிறது தெரியுமா? கடவுள் இன்னும் மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்கவில்லை என்பதே செய்தி.

xxxxx

BONUS QUOTE

நட்பின் ஆழம், அறிமுகத்தின் நீளத்தைப் பொறுத்தது அல்ல.

xxxx

—SUBHAM— 

TAGS – தாகூர் பொன்மொழிகள் , டிசம்பர் 2023 காலண்டர்

Leave a comment

Leave a comment