Date uploaded in London – – 2 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்ற பகுதியில் 120 வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………
PART 13
xxxxx
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்–13
121. வயிற்றுக்கு கிருமிக்கு
எலிச்செவியம், முருங்கை வேர், திரிபலை இவை நறுக்கி கிஷயமிட்டு ஒரு சங்கு அளவு கொடுக்க புழுக்கள் நிவர்த்தியாகும்.
XXXXX
XXXX
122. நீர் எரிவுக்கு
எலுமிச்சம்பழச்சாறும் நல்லெண்ணெயையும் சமன் கலந்து ஒரு பலமிருக்கும்படி சாப்பிட்டால் எரிவு தீரும் .
XXXX
XXXX
123. இரத்தம் போல் நீர் இறங்குவதற்கு
எருமைப் பாலிரண்டு படியில் பொன்னாங்கண்ணி வேர் எலுமிச்சங்காய் அறைத்துப்போட்டு நன்றாய்க் காய்ச்சி புரை குத்திக் கடைந்து வெண்ணெய் எடுத்து அந்த வெண்ணையை அதிகாலை மூன்று நாள் சாப்பிடவும்; அந்த மோரை தாக சாந்தி செய்து வரவும் ; மேற்படி வியாதி தீரும்.
XXXX
124. சர்வ சிரங்குக்கும்
எலியாமணக்கு சமூலத்தை பழச்சாற்றில் அறைத்து வேப்பெண்ணெயில் கலக்கிக் காய்ச்சி எல்லாவித சிரங்குக்கும் தடவி வர ஆறிப்போகும்.
XXXX
125.நீரொழுக்கிற்கு
எள்ளுப்புண்ணாக்கும் கோவையிலையும் சரியிடை கூட்டி அறைக்காரம் சேர்த்தது புரட்டி ஒரு கொத்து கொடுத்துவரவும் . இப்படி மூன்று நாள் கொடுக்க சாந்தியாகும்.
XXXX
126. இரத்த மூலத்திற்கு
எருக்கன் கிழங்கும் புழுங்கலரிசியும் சரியிடை உளுந்து
கால் பங்கு கூட்டி அறைத்து புளிக்க வைத்து தோசை சுட்டுக்கொடுக்க இரத்த மூலம் தீரும்; இப்படி மூன்று நாள் அல்லது 5 நாள் கொடுக்கவும்.
XXXXX
127. காமாலைக்கு
எருமைச் சாணிப்பால் எருமைத் தயிர் இரண்டும் கலந்து சீரகம் வெங்கா…ம் சமன் சேர்த்து மேற்படி தயிர்விட்டு அறைத்து எருமைப்பாலில் கலக்கிக் கொடுக்கவும்; இப்படி 5- 7 வேளை கொடுக்க சாந்தியாகும்.
XXXX
128. கல் அடைப்புக்கு
எருக்கன் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு சேர்க்காமல் வெற்றிலை பாக்குடன் வைத்து தின்னவும். இப்படி 2 அல்லது 3 வேளை தின்னவும் ; கல்லடைப்பு தீரும்.
XXXX
129. உண்ணாக்கு வளர்த்திக்கு
எவாச்சாரம் கல் சுண்ணாம்பும் சமநிடை எடுத்து எலுமிச்சம்பழச் சாற்றில் அறைத்து பயரளவு எடுத்து உள் நாக்கில் தடவவும். குணமாகும்.
XXXX
130. இருதய வலிக்கு
எலுமிச்சம் பழம் 5 பிழிந்துகொண்டு அகில் குலாப்புத் தூள் சந்தனத்தூள் ஜாதிக்காய்த் தூள் வகைக்கு ஒரு ரூபாயிடை காவிக்கல் ஒரு விராகநிடை கூட்டிக் கலக்கி வைத்துக்கொண்டு ஒரு வேளைக்கு ஒரு ரூபாயிடை புசித்துவரவும். இருதய காபரா நெஞ்சத் துடிப்பு இதுகள் நீங்கும்
XXXX
— SUBHAM—
TAGS- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 13, எலுமிச்சம் பழம், எருக்கன் பூ