நீசா: கலஹமிச்சந்தி ! ஒரு வரி சுபாஷிதங்கள் (Post No.13,114)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.114

Date uploaded in London – — 22 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஒரு வரி சுபாஷிதங்கள்

நீசா: கலஹமிச்சந்தி !

ச.நாகராஜன்

அழகிய சில சொற்களிலேயே மிக உயர்ந்த கருத்துக்கள் உள்ள சம்ஸ்கிருத சுபாஷிதங்களில் மேலும் சில இதோ:

1. தீரோ பூத்வாத்ராவய சத்ரூன் |

   தீரனாக இரு; எதிரிகளை ஒழி!

2. ந கச்சினாபராத்யதி |

  எந்த ஒருவரும் தவறு செய்யாமல் இல்லை.

3. ந காசஸ்ய க்ருதே ஜாது யுக்தா முக்தாமணே: க்ஷதி: |

   முத்தை எடுப்பதற்காக சிப்பிக்குத் தீங்கு இழைக்கக் கூடாது.

4. ந த்ருஷ்ணாயா பரோ வ்யாதி:   \

   ஆசையை விட பெரிய வியாதி கிடையாது.

5. ந நியமம் பிந்த்யாத் |

    விதிகளை ஒருவன் உதாசீனப்படுத்தக்கூடாது.

6. ந பவதி புனருக்தம் பாஷிதம் சஜ்ஜனானாம் |

   சஜ்ஜனங்களின் (தூய பெரியோரின்) வார்த்தைகளில் திருப்பிச்     

   சொல்லுதல் இருக்காது.

7. ந ரத்னமன்விஷ்யதி ம்ருக்யதே ஹி தத் |

    ரத்னம் ஒருவரைத் தேடி வராது; அதைத் தேடி நாம் தான் போக  

    வேண்டும்.

8. ந லோபாததிகோ தோஷோ எ தானாததிகோ குண: |

    லோபத்தை விட அதிக தோஷம் இல்லை; தானத்தை விட அதிக 

   புண்யம் இல்லை.

9. ந சித்தாவௌத்சுக்யம் கச்சேத், நாசித்தௌ தைன்யம் |

    லாபம் அடையும் போது மிகுந்த ஆவலுடனும் இருக்கக் கூடாது,    

    நஷ்டம் அடையும் போது கவலைப்படவும் கூடாது.

10. ந வைரமுத்பாதயேத்ஸ்வஸ்மாத் |

    ஒருவன் தானாகவே ஒரு எதிரியை உருவாக்கிக்கொள்ளக்  

    கூடாது.

11. ந ஸ்வல்பஸ்ய க்ருதே பூரி நாஷயேன்மதிமாந்நர: |

     புத்திசாலியான ஒருவன் குறைந்த லாபத்திற்காக அதிகம் நஷ்டப்படக் கூடாது.

12.  நஹி கஸ்தூரிகாமோத் சபதேன விபாவ்யதே |

    இசையின் மணம் (பெருமை) வலிந்து நிறுவப்படக் கூடாது.

13. நாஹங்காராத்பர: சத்ரு: |

   அகந்தையை விடப் பெரிய எதிரி இல்லை.

14. நஹ்ய மூலா ப்ரசித்யதி |

   அஸ்திவாரம் இல்லாமல் ஒருவன் புகழை அடைய முடியாது.

15. நாந்ருத்பாதகம் பரம் |

   கபடை விட வேறு ஒரு பாவம் கிடையாது.

16. நிர்வாணதீபே கிம் தைல தானம்?

   அணைந்து விட்ட விளக்கிற்கு எண்ணெய் இடுவது ஏன்?

17. நீசா: கலஹமிச்சந்தி |

   துஷ்டர்கள் எப்போதும் கலகத்தையே விரும்புவார்கள்.

18. நீசைர்கச்சத்யுபரி ச தஷா சக்ரநேமிக்ரமேண |

    சக்கரம் சுழல்வது போல காலமும் அதிர்ஷ்டமும் மேலும் 

    கீழுமாகச் சுற்றி வரும்!

19. பண்டிதோ ஹி வரம் சத்ருர்ன மூர்கோ ஹிதகாரக: |

     இதத்தைத் தரும் மூர்க்கனை விட எதிரியாக இருந்தாலும்   

    பண்டிதனே மேல்!

20. புத்ராதபி பயம் யத்ர தத்ர சௌக்யம் ஹி துர்லபம் |

    சௌக்யம் எங்கு இல்லையோ அங்கு மகனைக் கண்டால் கூட 

    ஒருவன் பயப்படுவான்.

21. ப்ரயோஜனமனுத்திஷ்ய ந மந்தோபி ப்ரவர்த்ததே |

     ப்ரயோஜனம் இல்லாமல் ஒரு மந்தமானவன்கூட செயலில்

    இறங்கமாட்டான்.

22. புபுக்ஷிதம் ந ப்ரதிபாதி கிஞ்சித் |

    பசியோடிருப்பவனுக்கு எதுவும் புரியாது.

23. ரஸமூலா ஹி வ்யாதய:   \

   உணவின் ருசி மூலமாகவே வியாதிகள் உருவாகின்றன.

24. விக்ரீதே கரிணி கிமங்குசே விவாத: |

    யானையே விற்கப்பட்டு விட்டபோது அங்குசத்தைப் பற்றி என்ன

    விவாதம்?

25. சுஷ்கவைரம் விவாதஸ்ச ந குர்யாத்கேநசித்சஹ |

    எந்த வித காரணமும் இன்றி யாருடனும் ஒருவன் பகையைக்

     கொள்ளக் கூடாது.

***

Leave a comment

Leave a comment