விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-11(Post.13,379)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,379

Date uploaded in London – 25 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-11(Post.13,379)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,379

Date uploaded in London – 25 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 ஸிபிவிஷ்டஹ –நாம எண் 273

ஒளிக்கிரணங்களில்  ஊடுருவி நிற்பவர் அல்லது யாகப் பசுக்களிடத்தில் யாக ரூபியாக  உறைபவர்.

ஸிபி என்றால் பசுக்கள்.

ஸைத்யாச் சயன யோகாச்  ச ஸீதிவாரி ப்ரேச க்ஷதே

தத்பாநாத் ரக்ஷணாச்  சைவ ஸிபயோ ரஸ் மயோ மதாஹா

தேஷூ ப்ரவேஸாத் விஸ்வேஸஹ  ஸிபிவிஷ்ட இஹோச் உச்யதே

பொருள் 

தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதால் அதை ஸி என்பர்; ஏனென்றால் அதில் மஹாவிஷ்ணு சயனம் செய்கிறார்.

சூரியனின் கிரணங்களை ஸிபி என்பர். ஏனென்றால் அது தண்ணீரை உறிஞ்சி தன்னகத்தே வைத்துக்கொள்கிறது.அவைகளுக்குள் விஷ்ணு புகுந்துவிட்டதால் விஷ்ணுவை ஸிபிவிஷ்ட. என்கிறோம்.

xxxxx

சிஷ்டேஷ்டஹ –நாம எண் 310-

ஞானிகளுக்குப் பிரியமானவர் – அவர்களால் பூஜிக்கப்படுபவர்

இதை பகவான் கிருஷ்ணரே பகவத் கீதையில் 7-17 சொல்கிறார்.

तेषां ज्ञानी नित्ययुक्त एकभक्तिर्विशिष्यते।

प्रियो हि ज्ञानिनोऽत्यर्थमहं स च मम प्रियः॥१७॥

தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகப⁴க்திர்விஸி²ஷ்யதே|

ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோऽத்யர்த²மஹம் ஸ ச மம ப்ரிய: ||7-17||

அவர்களில் நித்திய யோகம் பூண்டு  பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன். ஞானிக்கு நான் மிகவும் பிரியமானவன் ; அவன் எனக்கு மிகவும்  பிரியமானவன்-7-17

இதைக்  கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வள்ளுவர் சொல்லும்நாலாவது குறளுடன் ஒப்பிடலாம்.

எல்லாம் அறிந்த ஞானி இறைவனை வழிபடுவதால் கடவுளே எல்லா துன்பங்களையும் நீக்கி விடுவார்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.-4

விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.

xxxx

வ்ருஷ – நாம எண் 313

அடியார்கள் விரும்பியவற்றை மழை போலப் பொழிபவர்  அல்லது தரும வடிவினர்.

மஹாபாரதம் சாந்தி பர்வம் 352-23 சொல்கிறது

விருஷோ ஹி பகவான் தர்மஹ ஸ்ம்ருதோ லோகேஷு பாரத

நை கண்டுக  பதாக்யானைர் வித்தி மாம்   வ்ருஷமுத்தமம்

பொருள்

நிகண்டுகளில் போற்றுதற்குரிய தர்மம் வ்ருஷ என்று கூறப்பட்டுள்ளது ஆகையால் பார்த்தா ! என்னை  வ்ருஷ என்று அறிவாயாக.

xxxx

வாசுதேவ ஹ — நாம் எண் 332

அனைத்திலும் உறைந்து விளையாடுபவர் . எல்லாவற்றிலும் வசித்தும் எல்லாவற்றையும் மாயையால் மறைத்து வைத்தும் இருப்பதால் வாசு எனப்படுகிறார். விளையாடுவதாலும் , ஜெயிப்பதாலும் , பிரவிருத்தி நிவ்ருத்திகளை உண்டாக்குவதாலும் , பிரகாசிப்பதாலும், மோக்ஷத்தை கருதுகிறவர்களால் துதிக்கப்பெறுவதாலும்  தேவர் எனப்படுகிறார்.

மஹாபாரதம் சாந்தி பர்வம் சொல்கிறது :

சாதயாமி ஜகத் விஸ்வம் பூத்வா ஸூர்ய இவாம்சுபிஹி

ஸர்வ பூதாதி வாஸஸ்ச  வாஸு தேவஸ்ததஹ ஸ்ம்ருதஹ

சூரியனாக மாறி நான் உலகம் முழுதும் கதிர்களைப்  பரப்புகிறேன்.எல்லாரிடத்திலும் வசிக்கிறேன் .. அதனால் என்னை வாசு தேவ என்கிறார்கள்

***

மஹாபாரத உத்யோக பர்வம் 70-3 கூறுவதாவது:

வஸனாத்  ஸர்வ பூதானாம் வஸூத் வாத் தேவ யோனிதஹ

வாஸு தேவஸ்ததோ  ஞேயோ  யோகிபிஸ் தத்வ தர்ஸி பிஹி

எல்லா தேவர்களுக்கும் உறைவிடமாகவும் , எல்லா மக்களுக்கும் உறைவிடமாகவும் இருப்பதால் அவரை வாசு தேவ என்று  சொல்ல வேண்டும்.

—மஹாபாரதம்

***

விஷ்ணு புராணம் சொல்வதாவது:

ஸர்வத்ராஸ்செள  சமஸ்தஞ் ச வஸத்ரயேதி  வை யதஹ

ததஹ ஸ வாஸு தேவேதி வித்வத்பிஹி பரிபட்யதே

பரமாத்மாவானவர் எல்லா இடங்களிலும் எல்லாரிடத்திலும் வசிப்பதால் அறிஞர்கள் அவரை வாசுதேவ என்கிறார்கள் .

ஸர்வாணி தத்ர  பூதானி வஸந்தி பரமாத்மனி

பூதேஷு ச ஸ ஸர்வாத்மா வாஸு தேவஸ்ததஹ ஸ்ம்ருதஹ

பரமாத்மாவை வாசுதேவ என்பதற்கு காரணம் அவரிடத்தில் எல்லோரும் வசிக்கிறார்கள் ; அபவர் எல்லோரிடத்திலும் வசிக்கிறார்.

விஷ்ணு புராணம் 1-2-12 & 6-5-80

xxxx

ப்ருஹத்பானுஹூ — நாம எண் 333-

விஸ்தாரமாக எங்கும் பரவி நிற்கும் கிரணங்களை உடையவர் .

ப்ருஹந்தோ பானவோ யஸ்ய  சந்த்ர சூர்யாதி காமினஹ

விஸ்வம் ஜகத் பாஸயதி  ஸ  ப்ருஹத்பானுருச்யதே

சந்திர சூர்ய கிரணங்கள் எவரிடத்தில் உறைகின்றனவோ , உலகையெல்லாம் எவர் பிரகாசிக்கச் செய்கிறாரோ அவரை ப்ருஹத்பானு என்று அழைக்கிறோம்.

— subham—

Tags- விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள், part-11

Leave a comment

Leave a comment