தாயுமானவர் பொன்மொழிகள்- ஆகஸ்ட் 2024 காலண்டர் (Post No.13,489)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,489

Date uploaded in London – 29 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பண்டிகை நாட்கள் – ஆகஸ்ட் 3- ஆடிப் பெருக்கு ; 4- ஆடி அமாவாசை ; 7- ஆடிப்பூரம் ; 9- கருட பஞ்சமி; ; 15- சுதந்திர தினம், அரவிந்தர் பிறந்த தினம்; 16- வரலெட்சுமி விரதம்; 19- ரிக், யஜுர்  உபாகர்மா / ஆவணி அவிட்டம்; 20- காயத்ரீ ஜபம்; 26- ஜென்மாஷ்டமி/ கிருஷ்ண ஐயந்தி

For all poems in Tamil language go to Project Madurai website; no cookies, no cost; FREE.

அமாவாசை – ஆகஸ்ட் 4; பெளர்ணமி- 19;

ஏகாதஸி – உண்ணாவிரத நாட்கள்- 15, 29

சுப முகூர்த்த நாட்கள்- 16, 17, 30

xxxxx

ஆகஸ்ட்  1 வியாழக் கிழமை

அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
        ஆனந்த பூர்த்தியாகி
அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
        அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
        தழைத்ததெது

xxx

ஆகஸ்ட்  2 வெள்ளிக் கிழமை

 மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
        தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது

xxx

ஆகஸ்ட்  3 சனிக் கிழமை

 எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
        என்றைக்கு முள்ள தெதுஅது

xxx

ஆகஸ்ட்  4 ஞாயிற்றுக் கிழமை 

கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
        கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
        கருதிஅஞ் சலிசெய்குவாம்.         1.

xxx

ஆகஸ்ட்  5 திங்கட் கிழமை 

பேரானந் தம்பேசி மறையனந் தஞ்சொலும்
        பெரியமௌ னத்தின்வைப்பைப்
பேசரும் அனந்தபத ஞான ஆனந்தமாம்
        பெரியபொரு ளைப்பணிகுவாம்.         2.

xxx

ஆகஸ்ட்  6 செவ்வய்க் கிழமை 

சித்தமறி யாதபடி சித்தத்தில் நின்றிலகு
        திவ்யதே சோமயத்தைச்
சிற்பர வெளிக்குள்வளர் தற்பரம தானபர
        தேவதையை அஞ்சலிசெய்வாம்.    

xxx

ஆகஸ்ட்  7 புதன் கிழமை

பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப்
        பேதைக்கும் வெகுதூரமே

xxxx

ஆகஸ்ட்  8 வியாழக் கிழமை

பேய்க்குண மறிந்திந்த நாய்க்குமொரு வழிபெரிய
        பேரின்ப நிட்டை அருள்வாய்

xxxx

ஆகஸ்ட்  9 வெள்ளிக் கிழமை

 பாசா டவிக்குளே செல்லாதவர்க்கருள்
        பழுத்தொழுகு தேவதருவே
பார்குமண்ட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
        பரிபூர ணானந்தமே

xxxx

ஆகஸ்ட்  10 சனிக் கிழமை

தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன
        செயற்கொண் டிருப்பனமுதல்
தேகங்க ளத்தனையும் மோகங்கொள் பௌதிகஞ்
        சென்மித்த ஆங்கிறக்கும்
விரிவாய பூதங்கள் ஒன்றோடொன் றாயழியும்
        மேற்கொண்ட சேடம் அதுவே

xxx

ஆகஸ்ட்  11 ஞாயிற்றுக் கிழமை 

பிறவாமை யென்றைக்கும் இறவாமை யாய்வந்து
        பேசாமை யாகுமெனவே
பரிவா யெனக்குநீ யறிவிக்க வந்ததே

xxxx

ஆகஸ்ட்  12 திங்கட் கிழமை 

சென்மம்வரு மோஎனவும் யோசிக்கு தேமனது
        சிரத்தைஎனும் வாளும்உதவிப்
பந்தமற மெய்ஞ்ஞானதீரமும் தந்தெனைப்
        பாதுகாத் தருள்செய்குவாய்

xxxx

ஆகஸ்ட்  13 செவ்வய்க் கிழமை 

பாதரச மாய்மனது சஞ்சலப் ப்டுமலால்
        பரமசுக நிட்டை பெறுமோ
பார்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
        பரிபூர ணானந்தமே.

xxxx

ஆகஸ்ட்  14 புதன் கிழமை

சோற்றுத் துருத்தியைச் சதமெனவும் உண்டுண்டு
        தூங்கவைத் தவரார்கொலொ

xxxx

ஆகஸ்ட்  15 வியாழக் கிழமை

தன்னையே நோவனொ பிறரையே நோவனோ
        தற்கால மதைநோவனோ
பந்தமா னதுதந்த வினையையே நோவனோ
        பரமார்த்தம் ஏதுமறியேன்

xxxx

ஆகஸ்ட்  16 வெள்ளிக் கிழமை 

நின்னையே துணையென்ற என்னையே காக்கவொரு
        நினைவுசற் றுண்டாகிலோ
பாராதி யறியாத மோனமே யிடைவிடாப்
        பற்றாக நிற்கஅருள்வாய்

xxxx

ஆகஸ்ட்  17 சனிக் கிழமை

ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
        ஆளினுங் கடல்மீதிலே
ஆனைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
        அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்

xxxx

ஆகஸ்ட்  18 ஞாயிற்றுக் கிழமை

 சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தமுத்தி அருவுருவத்
        தன்மை நாமம்
ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற நின்
        றியக்கஞ் செய்யும்

xxxx

ஆகஸ்ட்  19 திங்கட் கிழமை 

அகரவுயி ரெழுத்தனைத்து மாகி வேறாய்
        அமர்ந்தென அகிலாண்டம் அனைத்துமாகிப்
பகர்வனஎல் லாமாகி அல்ல தாகிப்

xxxx

ஆகஸ்ட்  20 செவ்வய்க் கிழமை 

சன்மார்க்க நெறியிலாத் துன்மர்க்க னேனையுந்
தண்ணருள் கொடுத்தாள்வையோ

xxxx

ஆகஸ்ட்  21 புதன் கிழமை


ஆக்கையெனும் இடிகரையை மெய்யென்ற பாவிநான்
        அத்துவித வாஞ்சையாதல்
அரியகொம் பில்தேனை முடவனிச் சித்தபடி
        ஆகும்அறி வலிழஇன்பந்

xxx

ஆகஸ்ட்  22 வியாழக் கிழமை

தெய்வமறை முடிவான பிரணவ சொரூபியே
        சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
        சின்மயா னந்தகுருவே.         4 .

xxxx

ஆகஸ்ட்  23 வெள்ளிக் கிழமை 

கானகம் இலங்குபுலி பசுவொடு குலாவும்நின்
        கண்காண மதயானைநீ
கைகாட்ட வுங்கையால் நெகிடிக் கெனப்பெரிய
        கட்டைமிக ஏந்திவருமே

xxxx

ஆகஸ்ட்  24 சனிக் கிழமை

புவிராசர் கவிராசர் தவராச ரென்றுனைப்
        போற்றிசய போற்றிஎன்பார்
ஞானகரு ணாகர முகங்கண்ட போதிலே
        நவநாத சித்தர்களும்உன்
நட்பினை விரும்புவார்

xxxx

ஆகஸ்ட்  25 ஞாயிற்றுக் கிழமை 


நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப
        நிர்விடய கைவல்யமா
நிட்கள அசங்கசஞ் சலரகித நிர்வசன
        நிர்த்தொந்த நித்தமுக்த
தற்பரவித் வாதீத வ்யோமபரி பூரண
        சதானந்த ஞானபகவ

xxxx

ஆகஸ்ட்  26 திங்கட் கிழமை 

எல்லாமுன் அடிமையே எல்லாமுன் உடைமையே
        எல்லாமுன் னுடையசெயலே
எங்கணும் வியாபிநீ என்றுசொலு மியல்பென்
        றிருக்காதி வேதமெல்லாஞ்

xxxx

ஆகஸ்ட்  27 செவ்வய்க் கிழமை 

நானென்று நீயென் றிரண்டில்லை யென்னவே
        நடுவே முளைத்தமனதைக்
கட்டஅறி யாமலே வாடினே னெப்போது
        கருணைக் குரித்தாவனோ

xxxx

ஆகஸ்ட்  28 புதன் கிழமை

சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றினது
        தான்வந்து முற்றுமெனலால்
சகமீ திருந்தாலும் மரணமுண் டென்பது
        சதாநிட்டர் நினைவதில்லை

xxxx

ஆகஸ்ட்  29 வியாழக் கிழமை

கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவருங்
        கைகுவித் திடுதெய்வமே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
        கருணா கரக்கடவுளே. 7.

xxx

ஆகஸ்ட்  30 வெள்ளிக் கிழமை 

மழையே மழைத்தாரை வெள்ளமே நீடூழி
        வாழியென வாழ்த்தியேத்துங்
கடல்மடை திறந்தனைய அன்பரன் புக்கெளியை
        கன்னெஞ்ச னுக்கெளியையோ

xxxx

ஆகஸ்ட்  31 சனிக் கிழமை

பத்மநிதி சங்கநிதி இருபாரி சத்திலும்
        பணிசெய்யுந் தொழிலாளர்போல்
கேட்டது கொடுத்துவர நிற்கவைப் பீர்பிச்சை
        கேட்டுப் பிழைப்போரையுங்
கிரீடபதி யாக்குவீர் 

For all poems in Tamil language go to Project Madurai website; no cookies, no cost; FREE.

—-subham—

Tags-தாயுமானவர் பொன்மொழிகள், ஆகஸ்ட் 2024,  நற்சிந்தனை,  காலண்டர், Aurobindo Birth day.

Leave a comment

Leave a comment