மாற்றி யோசிக்க வழியைக் கூறிய எட்வர்ட் டி போனோ! – 2 (Post No.13,399)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.399

Date uploaded in London – 2 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 19-6-24 இதழில் வெளியான கட்டுரை.இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது

மாற்றி யோசிக்க வழியைக் கூறிய எட்வர்ட் டி போனோ! – 2

ச. நாகராஜன்

லேடரல் திங்கிங் (பக்கவாட்டு சிந்தனை)

பக்கவாட்டுச் சிந்தனை எனப்படும் லேடரல் திங்கிங் என்ற புதிய சிந்தனா உத்தியைக் கண்டுபிடித்து அதை உலகமெங்கும் பரப்ப ஆரம்பித்தார் இவர்.

1967-ம் ஆண்டு தனது முதல் நூலான ’தி யூஸ் ஆஃப் லேடரல் திங்கிங்’ என்ற நூலை அவர் வெளியிட்டார். சிறிது காலத்திலேயே பிரபலமான அவரது புதிய சிந்தனா முறையால் சைமன்ஸ், நோகியா. ஷெல் உள்ளிட்ட பன்னாட்டு உலக நிறுவனங்கள் அவரை அழைத்து இதில் பயிற்சியைத் தருமாறு வேண்டின.. 

பிரிட்டானிய ஏர்வேஸ். ஆப்பிள் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களில் உள்ளோருக்கு இதில் பயிற்சியும் தர ஆரம்பித்தார்.

இங்கிலாந்து, ஜப்பான், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் இவர் அழைக்கப்பட்டார். 1982-ல் பிபிசியில் ஒளிபரப்பான இவரது நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

எதையும் புதிய கோணத்தில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்தால் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம் என்பது இவரது கொள்கை.

லேடர்ல் திங்கிங் பற்றிய இவரது நூல் பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆயிற்று. 46க்கும் மேற்பட்ட மொழிகளில் இது மொழி பெயர்க்கப்பட்டது, 85க்கும் மேற்பட்ட இவரது நூல்கள், முன்னேறத் துடிக்கும் அனைவரும் நாடும் நூல்களாக அமைந்தன.

மனித குலத்தின் சிந்தனா போக்கை உருவாக்கிய 250 பேரில் இவரும் ஒருவராகக் கருதப்படுகிறார்.

திட்டத்தின் கருவிகள்

லேடரல் திங்கிங் என்ற புதிய சிந்தனா முறைக்கு சிந்திக்கும் வழிமுறைக்கான கருவிகள் பல உள்ளன. அவற்றைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்:-

உங்களின் எண்ணத்தால்திட்டத்தால்முடிவால் ஏற்படப் போகும் குறுகிய கால நீண்ட கால விளைவுகள் என்ன?

உங்கள் எண்ணத்தின் அல்லது திட்டத்தின் நல்ல விளைவுகள்தீய விளைவுகள் அல்லது சுவையான நிகழ்வுகள் எதாக இருக்கும்?

இந்த திட்டத்தின்  எல்லை எதுஇதை அமுல்படுத்த வசதியாக இருக்கும் சின்ன சின்ன அம்சங்களும் கால அளவும் என்ன?

இந்த திட்டத்தால், செயலால், முடிவால் என்னென்ன நேரலாம்முழுவதும் அலசிப் பாருங்கள்

இந்தத் திட்டத்தின் நோக்கம்குறிக்கோள் என்னஇது ஏன் முக்கியமாக இருக்கிறது?

இதை நிறைவேற்ற மாற்று ஏற்பாடுகள்திட்டங்கள்விருப்பத் தேர்வுகள் உண்டா?

இதைப் பற்றிய மற்றவர்களின் கருத்துபார்வை என்னஇதை எப்படி அவர்கள் ஏற்கக் கூடிய விதத்தில் விளக்க முடியும்?

இதில் உள்ள மிக மிக முக்கியமான மதிப்புள்ள விஷயங்கள் யாவை?

இதை செயலாக்குவதில் முதலில் செய்ய வேண்டியவை, அடுத்து செய்யவேண்டியவை என்ற பட்டியல் ரெடியா?

இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு, , இதன் விளைவுசெய்யப்படும் முறைசெயல் திட்டம் ஆகியவை தயாராக இருக்கிறதா?

இப்படி முதலில் பக்கவாட்டுச் சிந்தனை கருவிகள் எனப்படும் இந்தக் கேள்விகளுக்கான பதிலை தயார் செய்யுங்கள். பிரச்சினை சுமுகமாக முடியும்!

புதிய குறியீட்டு மொழி உருவாக்கம்

2000-ம் ஆண்டில் இப்போதுள்ள மொழிகள் ஒரு விஷயத்தைச் சரியாகச் சொல்லும் விதத்தில் வார்த்தைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் ஆகவே குறியூட்டு வார்த்தைகள் கொண்ட ஒரு மொழியைத் தான் உருவாக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ‘தி எட்வர்ட் டி போனோ கோட் புக்’ என்ற இவரது புதிய புத்தகம் உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அது என்ன குறியீட்டு மொழி?

எடுத்துக்காட்டாக டி போனாவின் 6/2 என்பதைச் சொன்னால் அது, “நீ எனது கருத்தின் பார்வையை எனக்குக் கொடு. நான் உனது கருத்தின் பார்வையை உனக்குக் கொடுக்கிறேன்” என்று பொருளாகும்இப்படி ஒரு புதிய மொழியை அவர் உருவாக்கினார்.

தனது வாழ்நாளில் ‘கவுன்ஸில் ஆஃப் யங் எண்டர்பிரை யூரோப்’ என்ற நிறுவனத்தை நிறுவி பதினைந்து லட்சம் இளைஞர்களுக்கு ஐரோப்பா, இஸ்ரேல், ரஷியா உள்ளிட்ட நாடுகளில் சிறிய தொழிலை ஆரம்பிக்க இவர் ஊக்குவித்தார்.

புதிய சிந்தனா முறையால் உலக நாடுகளுக்கு இடையே நிலவி வரும் சச்சரவுகளைப் போக்கிக் கொள்ளலாம் என்பது இவரது ஆக்கபூர்வமான எண்ணமாக இருந்தது.

புதிய சிந்தனா முறைக்கான உலக மையத்தை (தி வோர்ல்ட் செண்டர் ஃபார் நியூ திங்கிங்) இவர் மால்டாவில் நிறுவினார்.

குடும்பம்

டி போனோ 1971-ல் ஜோஸபைன் ஹால் ஒய்ட் என்பவரை மணந்தார். இரு மகன்கள் பிறந்தனர். பின்னால் தனது மனைவியை விவாகரத்து செய்தார். அவர் மறைந்த பிறகு அவரது உயிலில் இன்னும் ஒரு மகனின் பெயரும் ஒரு மகளின் பெயரும் சொத்துக்கு வாரிசுகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

மறைவு

டி போனோ தனது 88-ம் வயதில் 2021 ஜூன் 9-ம் நாளன்று இயற்கை எய்தினார். மால்டாவில் மெடினா என்ற இடத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

டி போனோவின் அறிவுரைகள்

பிரச்சினைகளைத் தீர்க்கவும் ஆக்கபூர்வமான சிந்தனையை வளர்க்கவும் ஏராளமான அறிவுரைகளை டி போனோ வழங்கியுள்ளார்.

அவரது கூற்றுகளில் சில:

படைப்பாற்றல் சிந்தனை என்பது ஒரு திறமை அல்ல, அது வளர்க்கப்படக்கூடிய ஒரு சாமர்த்தியம் தான்!

படைப்பாற்றல் என்பது சம்பிரதாயமான வழிகளை உடைத்து வித்தியாசமான வழியில் ஒரு விஷயத்தைப் பார்ப்பது தான்!

மனம் எதைப் பார்க்கத் தயாராக இருக்கிறதோ அதைத் தான் பார்க்கும்!

நுண்ணறிவு என்பது பிறப்புடன் வருவது. சிந்திப்பது என்பது கற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு திறமை!

புதிய சிந்தனா முறையை மேற்கொள்வோமா – டி போனோவுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்து விட்டு!

***

ஆந்திரத்தில் உள்ள 108 புகழ்பெற்ற கோவில்கள் -1 (Post No.13,398)

ஆந்திரத்தில் உள்ள 108 புகழ்பெற்ற கோவில்கள் -1 (Post No.13,398)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,398

Date uploaded in London – 1 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Tirupati Temple with Modi and Andhra CM Jagan Mohan Reddy

கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், இலங்கை ஆகிய பகுதிகளில் உள்ள 108 முக்கியக் கோவில்கள் பற்றி நான் எழுதிய நான்கு புஸ்தகங்களுக்கும்  நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஆந்திரம் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 108 முக்கிய கோவில்கள் பற்றி எழுதவும் ஆசை பிறந்தது . ஆந்திரம் என்றவுடனே நமக்கு நினைவுக்கு வருவது திருப்பதி பாலாஜி/ வெங்கடாசலபதி கோவிலும் காளஹஸ்திஸ்ரீசைலம் சிவன் கோவில்களும்தான். இவை தமிழ் நாட்டின் எல்லையை ஒட்டியவை. ஆனால் வட கோடி வரை எவ்வளவோ ஸ்தலங்கள் இருக்கின்றன. பெரும்பாலான வற்றைத் தமிழர்கள் அறியார் .

நான் மந்த்ராலயம் வரை சென்று வந்தேன். அதைத் தாண்டி மஹாராஷ்டிரம், பக்கத்து மாநிலமான கர்நாடகக் கோவில்களையும் தரிசித்து வந்தேன். இந்தியாவிலுள்ள இரண்டு லட்சம் கோவில்களையும் தரிசிக்க நூறு முறையாவது பிறக்க வேண்டும். இதுவரை நான், தென் குமரி முதல்  வட இமய ரிஷிகேஷ் -ஹரித்வார் வரை சென்றதே பெரும் பாக்கியம். இது ஒரு புறமிருக்க சென்ற ஆண்டு (2023) இலங்கையிலுள்ள கதிர்காமம், திருகோணமலை முதலிய தலங்களையும் தரிசிக்கும் பெரும்பேறும் பெற்றேன் . யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொல்லி ஆந்திர- தெலிங்கனா மாநில பயணத்தைத் தொடர்வோம் .

தெலுங்கானா அல்லது தெலிங்கனா என்பது பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (சங்கராசார்யார் 1894-1994) சொன்ன சுவையான விஷயத்தை முதலில் காண்போம் இதன் உண்மையான பெயர் த்ரி லிங்க தேசம். அது மருவி தெலுங்கானா ஆனது. இந்த தேசத்து பிராமணர்கள் வடக்கில் சென்றவுடன் அவர்கள் தில்லான், தில்லோன் என்று அழைக்கப்பட்டனர். பிரபல அரசியல் வாதிகள்,கிரிக்கெட் வீரர்களின் பெயர்களில் இதைக் காணலாம். த்ரிலிங்க தலங்கள் ஸ்ரீசைலம், காளேஸ்வரம் , திராஷாராமம் ஆகிய சிவன் கோவில்கள் ஆகும்.

Telangana CM Revanth Reddy with wife Geetha (Cong.Party)

ஆந்திரத்தின் புகழோ ரிக் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது ரிக்வேதத்தின் ஐதரேய பிராமணத்தில் ஆந்திரம் குறிப்பிடப்படுகிறது. தமிழில் மிகப்பழைய நூல்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வேங்கட மலையை தமிழ் நாட்டின் வட எல்லையாக குறிப்பிடுகின்றன. மெளரிய மன்னர்களும் தெற்குப் பகுதியை ஆந்திர என்று சுட்டிக் காட்டுகின்றனர் .

வடவேங்கடம் (TIRUPATI) தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து–(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:

****

நெடியோன் குன்றமும் (TIRUPATI-TIRUMALAI) தொடியோள் பௌவமும்

தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு– –சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2

****

இப்போது ஆந்திர மாநிலத்தை ஆந்திரம்- தெலுங்கானா ( 2014) என்று பிரித்தவுடன் எந்த க்ஷேத்திரம் /தலம் எந்த மாநிலம் என்ற குழப்பமும் ஏற்பட்டுவிட்டது. ஏனெனில் பழைய தல யாத்திரை நூல்களில் எல்லா இடங்களும் ஆந்திர மாநிலம் என்றே குறிப்பிடப்படும்.

கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா புண்ய நதிகள் பாயும் புண்ய பிரதேசம் இது. கரை தோறும் புனிதக் கோவில்கள் எழும்பியுள்ளன.

கப்பலோட்டிய சாதவாகன மன்னர்கள் மூலம் தென்கிழக்காசிய நாடுகளில் இந்து சமயம் பரவ வித்திட்ட புண்ய பூமி இது. அவர்கள்  உதவியுடன்தான் தமிழ் மன்னர்கள் இமயத்தில் கொடி நாட்டினர் என்பதை சிலப்பதிகாரம் நமக்குச் சொல்கிறது.

XXXX

Modi Ji in Tirupati Balaji temple

ஆந்திர மாநில ஸ்தலங்கள்

சங்கமேசுவரம், யாகந்தி கோவில், கபில தீர்த்தம், சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீசுவரர் கோவில், திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில், ராமகிரி வாலீசுவரர் கோயில்,பீமாவரம் சிவன் கோவில்

புங்கனூர் சிவன் கோயில், சிம்மாச்சலம் திரிபுராந்தகேசுவரர் கோயில், பஞ்சாராம ஸ்தலங்கள், லேபட்சி, வீரபத்திரன் கோவில் ஆகியன ஆந்திர பகுதியில் உள்ள முக்கிய சிவன் கோவில்கள் ஆகும்.

திருப்பதி பாலாஜி/ வெங்கடாசலபதி கோவில்.

திருச்சானூர் பத்மாவதி கோவில் (Padmavathi Temple) அல்லது அலர்மேல் மங்கை கோயில்

பஞ்சாராம ஸ்தலங்கள்–அமராராமம் , குமராராமம், திராஷாராமம், சோமாராமம், ஷிராராமம்

ஆந்திரத்தில் விஜயவாடா அருகில் குன்றிலுள்ள கனக துர்கா கோவில் மிகவும் பிரசித்தமானது

அஹோபிலத்தில் புகழ்பெற்ற நரசிம்ம சுவாமி கோவில் இருக்கிறது இரண்டு மூன்று  நாட்கள் தங்கினால் நவ நரசிம்மர்களையும் ஏழு கோவில்களில் தரிசிக்கலாம்

மந்த்ராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் சமாதி உள்ளது; அருகில் நிறைய கோவில்களும் இருக்கின்றன

ஹைதராபாத்தில் ஸ்ரீ ராமானுஜரின் சமத்துவ சிலை அண்மையில் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டுள்ளது

xxxx

Congress partty CM Revantha Reddy with his wife Geetha in Yadagiri Narasimha Swami Temple

தெலங்கானா மாநில ஸ்தலங்கள்

யதுகிரிக்கோட்டை லெட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ஆலம்பூர் நவப்பிரம்ம கோவில்கள் அம்மாபள்ளி ராமச்சந்திர சுவாமி கோவில், வார்கல் சரஸ்வதி கோவில், பனகல் சாயா சோமேஸ்வரர் கோவில், ஸ்ரீ லலிதா சோமேஸ்வரர் கோவில், நாகுனுர் கோட்டை-கோவில், ஆகியன தெலுங்கானாவில் முக்கியமானவை.

மேல் விவரம்

பத்ராசலம் பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில்,

ஐதராபாத் -செகந்திராபாத்  இரட்டை நகரத்தில் சங்கி கோவில்,

பிர்லா மந்திர் –  வெங்கடேசுவரரின் (திருமால்) பளிங்குக்கல்லாலான திருக்கோயில்.உச்சயினி மகாகாளிகோவில்  முக்கியமானவை

பீச்சுப்பள்ளி – (அனுமார் கொவில்) மெகபூப்நகர் மாவட்டத்தில் கிருட்டிணா நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்மிக்க தொன்மையான அனுமான் ஆலயம்.

ஆலம்பூர் – மெகபூப்நகர் மாவட்டதில் துங்கபத்ரா- கிருட்டிணா நதிகள் இணையுமிடத்தில் தட்சிண காசி என்று கொண்டாடப்படும், பரமேசுவரர் மற்றும் சோகுலாம்பா தெய்வங்கள் கோவில் கொண்ட தலம்.

வாரங்கல் பத்ரகாளி (ரௌதிர தேவி) கோவில் மற்றும் ஆயிரங்கால் மண்டபம்

வாரங்கல்- ராமப்பா கோவில்

பாசரா -கலைமகள் /சரஸ்வதி கோவில்

அனந்தகிரி காடு – அனந்தபத்மநாபர் கோவில்

மேதக்: அழகான தேவாலயம் மற்றும் கோட்டை

பத்ராசலம்: கோதாவரிக்கரையில் அமைந்த புகழ்பெற்ற இராமர் கோவில். பக்த ராமதாசர்  வழிபட்ட கோவில்.

யாதகிரிகுட்டா: திருமகள், நரசிங்கமர் (லட்சுமி நரசிம்மர்) சிறு குன்று. திருப்பதிக்கு ஒப்பான புகழ் மிக்க தெலங்காணா கோயில்.

காளேசுவரம்: ஆந்திர-மராட்டிய மாநிலங்கள் எல்லையில் கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மிக சிறப்புற்ற காளேசுவர முக்தீசுவர சுவாமி எனப்படும் சிவன் கோயில்; இக்கோவிலின் கருவறை மையத்தில் சிவனுக்கு (காளேசுவரர்) ஒரு லிங்கமும், எமனுக்கு (முக்தீசுவரர்) மற்றொரு லிங்கமுமாக இரண்டு லிங்கங்கள் இருக்கின்றன

நாகுனுர் கோட்டை: கரீம் நகர் பட்டணத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலுள்ள . கோட்டைக்குள் பல பாழடைந்த கோவில்களின் சிதிலங்கள் காணப்படுகின்றன.ஒரு சிவன் கோவிலின் தூண்களும், தாழ்வாரங்களும் மிக மிக கவர்ச்சிகரமாக உள்ளன. உட்புற பகுதிகளில் உள்ள மேல்மாடங்கள் இசைக்கலைஞர்கள் மிருதங்கம் மற்றும் இதர இசைக்கருவிகளில் இசைப்பதுப் போலவும், ஒயிலான நிலைகளில் பெண்கள் நாட்டியமாடுவதுப் போலவும் வடிவமைத்திருக்கும் சிற்பங்கள் கண்ணுக்குப் பெரும் விருந்து

Former Vice President Vankaiah Naidu with his wife at Balaji temple, Tirupati

Map of Telangana

வேமுலவாடா – கரீம் நகர் பட்டணத்திலிருந்து 38 கி.மீ தொலைவிலுள்ள இந்த ஊரில் சாளுக்கிய மன்னர்களால் CE 750–975 ஆண்டுகளுக்கிடையே கட்டப்பட்ட ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரர்  சுவாமி கோவிலுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அதிக வருவாய் உள்ள கோவில் நகரங்களில் ஒன்று. இந்த கோவிலின் வளாகத்தினுள் இராமன், இலக்குவணன், இலட்சுமி, கணபதி, பத்மனாபர் போன்ற தெய்வங்களுக்கும் கோவில்களுண்டு. மற்றோரு இடமான திரு பீமேசுவரரின் திருக்கோவில் மிகச் சிறப்புற்றது.

உமா மகேசுவரம் – மெகபூப் நகர் மாவட்டத்தில் மிக அடர்ந்த நல்லமலை காடுகளுக்கிடையே ஒரு உயர்ந்த மலைக்குன்றின்மேல் அமைந்துள்ள சிவபெருமானின் தலம். மல்லிகார்சுன சுவாமி (சிவன்) பிரமராம்பா அம்பாளின்  திருக்கோயில் உள்ளது.  கருவறைக்கு அருகில் பாபநாசனம் என்ற இடத்தில் ஊறும் கிணறு இருக்கிறது

ஒவ்வொரு தலத்தையும் விரிவாகக் காண்போம்

TO BE CONTINUED……………………………………….

Tags- தெலுங்கானா ,ஆந்திரம், கோவில்கள் ,திருப்பதி ஸ்ரீசைலம், அஹோபிலம், பத்ராசலம், காளஹஸ்தி, த்ரி லிங்க , கிருஷ்ணா , கோதாவரி, துங்கபத்ரா

Sangamam UK Annual Meeting, 29 June 2024 at Purley (Post No.13,397)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,397

Date uploaded in London – 1 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Sangamam UK third annual meeting was held on 29th June 2204 at Purley in Greater London area. About 25 active workers attended the meeting. Kalyan and Pravin introduced the organisation for new members and explained the recent activities of the organisation. Sri Prakash ji, active RSS karyakartha from Chennai, spoke for an hour on line and answered the questions raised by the UK Members. Those who couldn’t attend from far off places like Liverpool and Birmingham attended the meeting via zoom.

The program started with small refreshment
and Manju from Liverpool delivered the welcome note and program agenda.
Post welcome note, Dakshin Kshetra Sampark Pramukh Shri Prakash Ji, from Chennai, spoke.

Satish and Chelliya introduced the new members and mentioned recent activities conducted by the
organization. Mothi Sayeeram and Subbu explained the organization’s present state and
future roadmap to everyone. Those who couldn’t attend in person from far-off places like
Liverpool and Birmingham joined the meeting online

Last year Tamil Nadu Governor Sri Ravi Ji  addressed the annual gathering in Reading. This year RSS key Karyakartha from Chennai was the main speaker.

Sri Prakashji , an RSS Dakshin Kshetra Sampark Pramukh from Chennai,i, delivered his speech online from Chennai. He quoted elaborately from the works of Sri Ramakrishna Paramahamsa, Swami Vivekananda and folk tales from Ramayana. He explained the five point resolution passed by RSS for celebrating its centenary . RSS was started by Doctor Ji in 1925 with only 17 people. Now it has spread throughout India and he said just in the past week,  a two day training programme was conducted with 600 youths in Tamil Nadu.

Prakshji explained the RSS  Panch Parivartan program for benefits of the society. The program includes five key points for social transformation namely samajik samrasata, kutumb prabodhan, paryavaran, the insistence on ‘Swa’ and the duties of the citizens.

There is a need for comprehensive and immense efforts to sustain the lively and value-based nature of our family system. Through our day to day behaviour and conduct, we should ensure that our family life works for building character, enriching life-values and strengthening mutual relationships. The family life will be joyous and blissful through dining, praying, celebrating festivals and going on pilgrimage together, the use of mother tongue, insistence on Swadeshi and, nourishing and protecting family and social traditions. Family and Society are complementary to each other. To instil the sense of social responsibility, encouraging donations for social, religious and educational cause and readiness to help the needy as per ability should become the nature of our family.”

Saving water, reviving old values, living the life which Ramayana taught us, contacting and connecting families were explained by Prakashji with stories and anecdotes.

If the electrical connection fails in a house the electrician comes , restores the lost contact and then connects the wires. Then only we get back the bright lights. So, start with contact first and then connect the families through activities, Prakashji emphasized.

xxxx

London Swaminathan , who was invited as a guest speaker, spoke for 20 minutes about attracting new members through new activities.

Pravin, Sangamam organiser, UK introduced London Swaminathan as an author of 120 Tamil and English books and former BBC broadcaster, Dinamani Newspaper Senior Sub Editor and University of London (SOAS) Tamil Teacher where he helped his Professor Dr Stuart Blackburn, erecting Tamil Poet Tiru Valluvar statue donated by Government of Tamil Nadu .


Since the list of suggested activities was circulated to the members, London Swaminathan  briefly explained how successfully they conducted new activities in the past 18 years through four organisations. Now that zoom is available for online activities, lot of things can be done online, he reminded. But he warned not to initiate new activities without knowing the implications. Swaminathan insisted that Mental, Physical and Intellectual capacity along with available resources must be taken into account before starting new programmes. He gave an example of his friend who wanted to become a Mittal or an Ambani or an Adani overnight without any infrastructure. So, one must think small and get it done successfully. Then, one can expand it slowly.

Harini, key member of the Sangamam UK and her husbandMr Venkatesh were the hosts for this meeting. They made fantastic arrangements, provided refreshments and finally ended with dinner. As it was announced as a family gathering, many families came with their children.

The meeting concluded with a vote of thanks by Dr. Varadharajan and a group photo to
commemorate the occasion.

–subham—

Tags Sangamam UK, annual meeting, June 2024, Purley, London Swaminathan, Prakashji

மாற்றி யோசிக்க வழியைக் கூறிய எட்வர்ட் டி போனோ! – 1 (Post.13,396)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.396

Date uploaded in London – 1 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 19-6-24 இதழில் வெளியான கட்டுரை.இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது

மாற்றி யோசிக்க வழியைக் கூறிய எட்வர்ட் டி போனோ! – 1

ச. நாகராஜன்

பிரச்சினைகளும் தீர்வுகளும்

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் அன்றாடம் ஏராளமான பிரச்சினைகள் தோன்றுகின்றன. சிந்திக்கிறோம்; சிலவற்றிற்குத் தீர்வு கிடைக்கிறது. சிலவற்றிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறோம்.

மாற்றி யோசியுங்கள் என்று ஒரு புதிய வழியைக் காண்பிக்கிறார் எட்வர்ட் டி போனோ!

மாற்றி யோசிப்பது என்றால், அது என்ன? எப்படி மாற்றி யோசிப்பது?

இதை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட புதிர்களை முதலில் விடுவியுங்கள்.

முடியாவிட்டால் விடைகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது! அதைப் பார்த்துக் கொள்ளலாம்.

புதிர் 1

ஒரு பெண்மணிக்கு ஒரே நாளில் ஒரே சமயத்தில் இரு குழந்தைகள் பிறக்கிறது. ஆனால் அவர்கள் இரட்டையர் இல்லை. அப்படி என்றால் இதற்கான விளக்கம் என்ன?

புதிர் 2

வேகமாகச் சென்ற ஒரு கார் விபத்துக்குள்ளாகிறது. அதில் பயணித்த தந்தை உடனே இறந்து விடுகிறார். அபாய நிலையில் இருந்த பையனை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கின்றனர். அறுவைசிகிச்சைக்காக உள்ளே வந்த சர்ஜன், “இந்த ஆபரேஷனை என்னால் செய்ய முடியாது. இவன் எனது மகன்” என்கிறார். இதற்கான விளக்கம் என்ன?

புதிர் 3

அழகிய ராஜகுமாரியை ஏழை ஒருவன் காதலித்தான். அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். ஆனால் இதை அறிந்து கொண்ட அரசன் கோபப்பட்டான். அவனுக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் அவன் தன் மக்களிடம் தான் நேர்மை தவறாத ஒருவனாக நடந்து கொள்வதாகக் காண்பிக்க ஆசைப்பட்டான். அரசவையைக் கூட்டிய அரசன் தான் இரு துண்டுச் சீட்டுகளை ஒரு பெட்டியில் போடுவதாகவும் ஒன்றில் வேண்டாம் என்று இருக்கும்,இன்னொன்றில் மணம் புரியலாம் என்று இருக்கும் என்றும் எந்த ஒன்றை அந்த ஏழை எடுக்கிறானோ அதன் படியே முடிவு இருக்கும் என்று சொன்னான்.

பெட்டியில் இரு துண்டுச் சீட்டுகளை அவன் மக்களின் முன்னே போட்டான். ஆனால் அந்த இரண்டிலும் வேண்டாம் என்றே எழுதப்பட்டிருந்தது. இது யாருக்கும் தெரியாது.

ஏழையைக் கூப்பிட்டு ஒரு சீட்டை எடு என்றான் அரசன்.

அரசனின் தந்திரத்தை ஏழை புரிந்து கொண்டான். மாற்றி யோசித்தான். செயல்பட்டான்

ராஜகுமாரியை மணந்து கொண்டான். எப்படி?

புதிர் 1

விடை: அந்தப் பெண்மணிக்கு இரண்டுக்கும் மேல் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அந்தக் குழந்தைகளை இரட்டையர் என்று சொல்ல முடியாதல்லவா?!

புதிர் 2

விடை: ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த சர்ஜன் பையனுடைய அம்மா!

புதிர் 3

விடை: தனது மாமனராக ஆகப் போகும் அரசனை இழிந்தவனாகக் காட்டக் கூடாது. அதே சமயம் தான் ராஜகுமாரியையும் மணந்து கொள்ள வேண்டும். இரண்டு சீட்டுகளையும் மக்கள்  முன்னால் காண்பியுங்கள் என்றோ அரசன் நியாயமானவன் இல்லை என்றோ சொன்னால் அதன் பின் விளைவுகள் நன்றாக இருக்காது.

ஆகவே அந்த ஏழை யோசித்தான். பெட்டியில் கையை விட்டு ஒரு சீட்டை எடுத்தான். அதைப் படித்தான். அதை உடனே சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டான்.

“அரசரே! நான் எடுத்த சீட்டில் மணம் புரியலாம் என்று எழுதப்பட்டிருந்தது என்றான்.அடுத்த சீட்டை எடுத்துப்பார்த்து இதை உறுதி செய்து கொள்ளுங்கள், மக்களுக்கும் காட்டுங்கள்” என்றான் அவன்.

இப்போது அரசனுக்கு வேறு வழி இல்லை. அடுத்த சீட்டில் வேண்டாம் என்று இருக்கிறது.

ஆகவே அவன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதோடு தனது மருமகனாக வருபவன் ஒரு புத்திசாலி, தன் பெயரைக் காப்பாற்றுவான் என்பதையும் புரிந்து கொண்டான்.

திருமணம் நடந்தது!

மாற்றி யோசியுங்கள்! நிலைமையைச் சமாளியுங்கள்!!

மாற்றி யோசித்து எப்படி ஒரு நிலைமையைச் சமாளிப்பது?

இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு அருமையான சம்பவம் உண்டு.

ஒரு கைதி தனது மனைவிக்கு எழுதும் ஒவ்வொரு கடிதமும் அதிகாரிகளால் நன்கு படிக்கப்பட்டு சென்ஸார் ஆன பின்னே அவளிடம் சேர்க்கப்படுகிறது என்பதை நன்கு அறிவான்.

ஒரு நாள் மனைவியிடமிருந்து அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. மனைவி, தனக்கு தோட்டத்தில் செடிகளை நட ஆசை என்றும் ஆனால் தோட்டத்தில் உள்ள பூமியை உழுது தோண்டும் மெஷினை தனக்கு இயக்கத் தெரியாதென்றும் எழுதி இருந்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் அவள் வருத்தப்பட்டிருந்தாள்.

கைதி உடனே பதில் எழுதினான் மனைவிக்கு :”அன்பே! அப்படி எதுவும் செய்து விடாதே! அந்தத் தோட்டத்தில்தான் நான் திருடிய அத்தனை சொத்தையும் புதைத்து வைத்திருக்கிறென்” என்று!

ஒரே வாரத்தில் மனைவிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது.

திடீரென்று அரசு அதிகாரிகள் அங்கு வந்து நிலத்தை நன்கு தோண்டி எதையோ தேடினர் என்றும் ஒன்றும் காணாமல் திரும்பிப் போய் விட்டனர் என்றும் இப்போது செடிகளை தான் விரும்பியபடி நடப் போவதாகவும் எழுதியிருந்தாள்.

கைதிக்கு மகிழ்ச்சி. மாற்றி யோசித்து ஒரு வழியைக் கண்டுபிடித்து விட்டான் அல்லவா! அதனால்!

இதே போல் ஏராளமான சுவையான மாற்றி யோசிக்கும் வழிகளைக் கூறும் புதிர்களும் நிஜ சம்பவங்களும் உண்டு.

இதை உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர் தான் எட்வர்ட் டி போனோ

பிறப்பும் இளமையும்

எட்வர்ட் சார்லஸ் ஃபிரான்ஸிஸ் பியூப்ளியஸ் டி போனோ தெற்கு ஐரோப்பாவில் உள்ள மால்டா என்ற தீவில் செயிண்ட் ஜூலியன்ஸ் பே என்ற இடத்தில் 1933-ம் ஆண்டு மே மாதம் 19-ம் நாள் அன்று பிறந்தவர்.

தந்தை ஜோஸப் டீ போனோ ஒரு மருத்துவர். தாய் ஜோஸபைன் அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர். வகுப்பில் படிக்கும் போதெல்லாம் இவரே வகுப்பில் மிகவும் குறைந்த வயதுள்ள மாணவனாக இருப்பார். ஒவ்வொரு வகுப்பாகப் போகாமல் இரண்டு முறை மேல் வகுப்புகளுக்கு படிப்பில் சூரனாக இருந்ததால் தாவினார். பின்னர் . மால்டா பல்கலைக்கழகத்தில் பயின்று மருத்துவர் ஆனார். பின்னர் ஆக்ஸ்போர்டுக்குச் சென்றார். அங்கு உளவியலிலும் மனவியலிலும் தேர்ச்சி பெற்றார். தனது பிஹெச்.டி பட்டத்தைப் கேம்பிரிட்ஜில் பெற்றார்.

To be continued………………

tags- எட்வர்ட் டி போனோ