வாரங்கல் ஆயிரம் தூண் கோவில்; ஆந்திர கோவில்கள் – Part 27 (Post No.13,609)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,609

Date uploaded in London – 30 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

வாரங்கல் ஆயிரம்கால் (தூண்) கோவில்; ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 27

,ஹைதராபாத்தை அடுத்து தெலுங்கானாவின் இரண்டாவது பெரிய நகரம் வாரங்கல் . இந்த நகரம் ஒரு காலத்தில் காகதீய வம்சத்தின் தலைநகராக இருந்தது. ஆயிரம் தூண் கோயில் மற்றும் பிரதாபருத்ரா கோட்டை முக்கிய இடங்கள்.

ஹைதராபாத்திலிருந்து வாரங்கலுக்கு 160 கிலோமீட்டர் தூரம் .

xxx

தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில்  ஹனமகொண்டா என்ற ஊரில் ஆயிரம் தூண்களின் கோவில்  உள்ளது வாரங்கல் ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவுதான் .காசிப்பேட்டையிலிருந்து 10 கி.மீ. இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால்  திரிமூர்த்திகள், அதாவது, சூரியன், விஷ்ணு மற்றும் சிவன் சந்நிதிகள் இருப்பதாகும்.

இதை  ருத்ரேஸ்வர ஸ்வாமி கோவில், என்றும் அழைப்பர். இங்கு சிவன், விஷ்ணு, சூரியன் ஆகிய மூவருக்கும் கோவில் இருக்கிறது. சாளுக்கிய கலை அம்சங்கள் நிறைந்தது.

இந்து கட்டிடக்கலைக்கு ஒரு அழகிய உதாரணம், 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இது  . இந்த கோவிலில் ஆயிரம் தூண்கள் உள்ளன, ஒவ்வொன்றும் நுணுக்கமான வடிவமைப்புகளுடன் செதுக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ஒரு பெரிய விஷ்ணு சிலை உள்ளது. கோவிலைக் கட்டுவதற்கு 72 ஆண்டுகள் ஆயிற்றாம் .1175 – 1324  க்கு இடையில் புகழ்பெற்ற காகதீய வம்சத்தின் மன்னர் ருத்ர தேவாவின் உத்தரவின் பேரில் இது கட்டப்பட்டது.

இந்த கோவிலில் நுண்ணிய  சின்னங்கள், துளையிடப்பட்ட திரைகள், பாறையில் வெட்டப்பட்ட யானைகள் மற்றும் ஒரே கல்லிலான  நந்தி ஆகியவை உள்ளன. இங்குள்ள தூண்கள் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்டிருக்கின்றன,

கட்டிடக் கலைஞர்கள் கோயிலின் அஸ்திவாரங்களை வலுப்படுத்த மணல் பெட்டி அமைப்பைப் பயன்படுத்தினர்.  ஆழமான பள்ளம் தோண்டி மணல் மற்றும் பாறைக் கற்றைகளால் நிரப்பினர். 

 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. இந்திய தொல்லியல் துறை இந்த பழமையான தலைசிறந்த படைப்பை இப்போது நிர்வகிக்கிறது.

திரிகூடாலயம் என்று அழைக்கப்படும், சிவன் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது, மற்ற இரண்டு சன்னதிகள் தெற்கு மற்றும் மேற்கு நோக்கி உள்ளன. காகதீய ஆட்சியாளர்கள் சிவனின் சிறந்த பக்தர்களாக இருந்தனர், மேலும் அவர்கள் அதிகாலையில் சூரியனின் கதிர்கள் நேரடியாக சிவலிங்கத்தின் மீது பட வேண்டும் என்று விரும்பினர். விஷ்ணு மற்றும் சூரியனின் சன்னதிகள் ஒரு சதுர வடிவ மண்டபத்தின் வழியாக சிவனுடன் இணைகின்றன.

நான்காவது பக்கத்தில் ஒரு மேடையில் சிவனின் புனிதமான வாகனமான அழகிய ஒற்றைக்கல் ஆறு அடிகள் உயர நந்தி உள்ளது. கோவிலின் முழு அமைப்பும் நட்சத்திர வடிவில் உள்ளது.  கல்வெட்டுகள் நிறைய உள்ளன.

 கோவிலுக்குள் நுழையும் போது, ​​நுழைவாயிலின் இருபுறமும் யானைகளின் அழகிய சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன. சுற்றியுள்ள தோட்டங்களில் சிறிய சிவலிங்கங்கள் உள்ளன. துக்ளக் வம்ச முஸ்லீம் அரசர்கள் கோவிலை நாசம் செய்தனர். பின்னர் மீண்டும் சீரமைக்கப் பட்டது.

திருவிழாக்கள்

கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மகா சிவராத்திரி, குங்கும பூஜை, நகுல சவிதி, கார்த்திகை பௌர்ணமி, யுகாதி, விநாயகர் திருவிழா, போனலு திருவிழா மற்றும் பதுகம்மா திருவிழா ஆகியவை அடங்கும். சாரலம்மா யாத்திரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா.

வாரங்கல்லில் காகதீய மன்னன் கஜபதியும் அவனது புதல்வி ருத்ரம்மாவும் கட்டிய கோட்டை முக்கிய சுற்றுலாத் தலம்; அது சாஞ்சி ஸ்தூபி போல 4 அலங்கார வாசல்களை உடையது.

xxxxx

இவை தவிர பத்மாக்ஷி கோவில், பத்ரகாளி கோவில், வீர நாராயண ஆலயம், சமணர்களின் கோவில் ஆகியனவும் வாரங்கல்லில் இருப்பதால் பக்தர்கள் ஒன்றிரண்டு நாட்களை செலவிடவேண்டும் .

ஸ்ரீ வீரநாராயண ஆலயம். நகர மையத்தில் இருந்து சுமார் நான்கு கிமீ ;  கோவில் வளாகம் பெரியது ; பல கோவில்கள் , ஒரு பெரிய குளம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

பத்மாக்ஷி கோவில் வாரங்கலில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். நகரின் மையத்தில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது.  . வாரங்கலின் காவல் தெய்வம் பத்மாக்ஷி தேவி. கோவில் வளாகத்தில் நான்கு கோவில்கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்தின் வெவ்வேறு வடிவங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

ராயபர்த்தி சிவன் கோவில், சுயம்பு கோவில் ஆகிய இரண்டும் சிவன் கோவில்கள்.. சிவன்  கோவில் கட்டிடக்கலை.அழகுமிக்கது  . இது நகர மையத்தில் இருப்பதால் எளிதில் அடையலாம்; ஏனைய கோவில்களுக்கு பஸ் அல்லது ஆட்டோவில் செல்லலாம்

சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில்  சுயம்பு கோவில் இருக்கிறது 1,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்த கோவில் வாரங்கலின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அறிய சிறந்த இடமாகும். கோவில் வளாகத்தில் பல சந்நிதிகள்  உள்ளன, எல்லா கோவில்களும் பமையான வரலாறும், சிறந்த கட்டிடக்கலை, சிற்பங்களும் ஊட்டிய ஆகையால் வரலாற்றுப் பிரியர்களுக்கு வாரங்கள் ஒரு சொர்க்க பூமி.

–subham—

Tags- வாரங்கல் ஆயிரம் தூண் கோவில்; ஆந்திர கோவில்கள் – Part 27

Leave a comment

Leave a comment