பணம்: தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன் மொழிகள் 7 (Post No.13,719)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,719

Date uploaded in London – 28 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பணம் அல்லது செல்வம் பற்றிய கருத்துக்கள் உலகம் முழுதும் ஒன்றுதான்!

பணம் பத்தும் செய்யும்; பணம் இல்லாதவன் பிணம் ; பொருள் இல்லாதவர்க்கு இந்த உலகம் இல்லை; பணக்காரன் பின்னால் பத்துப் பேர் பைத்தியக்காரன் பின்னால் பத்துப் பேர் – என்ற கருத்துக்களை  ஷேக்ஸ்பியரும்  சொல்கிறார். ஆயினும் தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் இந்துக்கள் மீண்டும் ,மீண்டும் சொல்லும் சில கருத்துக்கள்  ஷேக்ஸ்பியரில் இல்லை . அவையாவன

1.செல்வம் சகடக்கால் போல சுழன்று கொண்டே இருக்கும்; அது ஓரிடத்தில் நிற்காது .

2.செல்வம் உடையோர் தான தர்மம் செய்ய வேண்டும் ; அது புண்ணியம் .

3.பணத்தினால் முக்தியை அடைய முடியாது.

4.பிற மக்களை அழ, அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்.

5.பணம் என்றாலே தொல்லைதான்

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்துக்களின் உயர்ந்த சிந்தனைகள் ஷேக்ஸ்பியரில் இல்லை.

ஷேக்ஸ்பியர் பொன்மொழிகளை திருக்குறள் , நாலடியார் , நீதி வெண்பா முதலிய பாடல்களுடனும்  தமிழ் சம்ஸ்க்ருத பழமொழிகளுடனும் ஒப்பிடலாம்.

****

இதோ ஷேக்ஸ்பியரின் பொன் மொழிகள்

மச் அடோ அபவுட் நத்திங் என்ற நாடகத்தில் ஷேக்ஸ்பியர் இன்னும் ஒரு நல்ல பொன்மொழியை உதிர்க்கிறார் :

நல்ல உருவம், நல்ல வடிவு இருந்து பையில் பணமும் இருந்துவிட்டால்  உலகத்தில் ந்தப் பெண்ணையும் வாங்கிவிடலாம் ஆனால் அவள் தயவும் வேண்டும் —

—Beatrice, Much Ado About Nothing, Act 2 Scene 1 

****

பணம் வந்தால் ஒருவனின் குணங்களும் மாறிவிடும் ; அதை ஆங்கிலப்புலவனும் நாடக ஆசிரியருமான  ஷேக்ஸ்பியரும் சொல்கிறார்

நான் பிச்சைக்காரனாக இருக்கையில் பணக்காரனை ஆவதில் பாவம் ஏதுமில்லை என்பேன் பணக்காரன் ஆகிவிட்டாலோ பிச்சை எடுப்பது பாவம் என்பேன்; தீயது என்பேன் —Bastard, The Life and Death of King John, Act 2 Scene 1

லக்ஷ்மீவந்தோ ந ஜாநந்தி ப்ராயென பரவேதனாம்

சேஷே தராபார க்லாந்தே சேதே நாராயணஸ் சுகம்  

சம்ஸ்க்ருத சுபாஷிதம்

பொருள்

செல்வந்தர்களுக்கு பிறருடைய வேதனைகள் புரியாது ; பூமியையே தாங்கி நிற்கும் ஆதிசேஷன் என்னும் பாம்பின்மீது நாராயணன் சுகமாகத் தூங்குவது போல.

ஐயமிட்டு உண் என்று சொன்ன அவ்வையாரே  ஏற்பது இகழ்ச்சி என்று சொன்னது நம் நினைவுக்கு வரும்

*****

இந்த மஞ்சள்  வர்ண அடிமை எல்லா மதங்களையும் உடை ப்பான் ; குஷ்டரோகிகளையும் புகழ வைப்பான்; பெரிய ஆட்களுடன் சம நிலையில் உட்கார வைப்பான்; வி தவைகளையும் திருமணம் செய்ய வழிவகுப்பான் — டிமோன்ஸ் ஆப் ஏதென்ஸ் நாடகம்

– Power of gold in Timons  of Athens

இதை  விட தங்கத்தின் செல்வத்தின் சக்தியை யாரும் அழகாகச் சொல்ல முடியாது; இவைகளைத் தமிழ் பழமொழிகளில் காண்கிறோம்.

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே- கா.மு.செரீப் (திரைப்படப் பாடல்)

பணக்கார அவிசாரி பந்தியிலே, அதில்லாத அவிசாரி சந்தியிலே!

காசு கொடுத்தால் வேசி வருவாள், கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்காளும் ஆத்தாளும் கூட வருவார்கள்

*****

தங்கம் இருந்தால் எங்கும் நுழைய அனுமதி உண்டு — என்று சிம்பலின் Cymbeline என்ற நாடகத்தில் ஒரு வசனம்!

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்

பணம் இருந்தால் பாட்சா, பணம் இல்லாவிட்டால் பக்கிரி

பணக்கரன் பின்னால் பத்துப் பேர், பைத்தியக்காரன் பின்னால் பத்துப் பேர்

****

பணம் முன்னே சென்றால் பின்னே வழிகள் திறக்கும்—  

இது மெரி வைவ்ஸ் ஆப் விண்ட்சர் Merry Wives of Windsor

என்ற நாடக வசனம்

இதை நாம் வள்ளுவரின் குறளுடன் ஒப்பிடலாம்.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகியாங்கு (குறள் 247)

பொருள்

பணம் இல்லாதவர்களுக்கு இந்த உலகத்தில் நல்ல வாழ்வு இல்லை; அது போல அருள் (கருணை) இல்லாதவர்களுக்கு சுவர்க்கத்தில் இடம் இல்லை.

****

கடன் வாங்காதே கடன் கொடுக்காதே– என்ற கருத்து ஹாம்லெட் நாடகத்தில் வருகிறது ; இது நல்ல புத்திமதி

Neither a borrower nor a lender be- Hamlet

இதை பஞ்ச தந்திரம் என்ற உலகப் புகழ்பெற்ற சம்ஸ்க்ருத நூல் பின்வருமாறு சொல்கிறது:

பணமே நீ ஒரு தொல்லை

உன்னை சம்பாதிப்பதும் கடினம்;

பாதுகாப்பதும் கடினம் ;

பணம் என்றாலே தொல்லைதான் ;

ஆரம்பமாவதும் பொன்னுக்குள்ளே

அது ஆடி முடிவதும் பொன்னுக்குள்ளே

A trouble to acquire; a trouble to protect

A trouble if it is lost; a trouble if it is spent

Money is nothing but trouble

Alas ! from beginning to end.

–Panchatantra Fables

பணம் இருந்தாலோ இல்லாட்டாலோதானே இந்தக் கடன் கொடுக்கும், வாங்கும் பிரச்சினைகள் வரும்!

****

 சாணக்கிய நீதியில் சாணக்கியன் பகர்வான்-

கெட்ட வழியில் சம்பாதித்த பணம் பத்து ஆண்டுகளுக்கு இருக்கும். பதினோராவது ஆண்டு துவங்கும் போது அடியோடு, வேரோடு பிடுங்கிக் கொண்டு போய்விடும்.

அன்யாயோபார்ஜிதம் வித்தம் தச வர்ஷாணி திஷ்டதி

ப்ராப்தே சைகாதசே வர்ஷே ஸமூலம் தத் வினஸ்யதி

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659

பிற மக்களை அழ, அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே ஏற்படும்.

****

செல்வம்  என்பது சக்கரம் போல. அது மாறி மாறி வரும் என்று ரிக் வேதம் புகலும். அதை (248) குறளில் கண்டோம்.

****

1157. ஈட்டி எட்டியமட்டும் குத்தும், பணம் பதின்காதமும் குத்தும்.

****

1. “But the comfort is, you shall be called to no more payments, fear no more tavern-bills.”— First Gaoler (Jailer), Cymbeline, Scene 5 Act 4

செத்துப்போனால் ‘பில்’களைக் கட்டும் தொல்லை இராது என்பதும் சிம்பலின் நாடகத்தில் வருகிறது .

மரணம் அடைபவனுடன் செல்வம் வராது என்ற இந்துமதக் கருத்தினுக்கு இணையானது இது.

*****

ஷேக்ஸ்பியர் எச்சரிக்கை!

அவருடைய அப்பா நல்ல பணக்காரன்தான்  ஆயினும் யாராவது  நரகத்தைக் கல்யாணம் கட்டுவானா ?

(அந்தப் பெண் ஒரு Shrew சிடுமூஞ்சி, அடங்காப்பிடாரி).

 “Think’st thou, Hortensio, though her father be very rich, any man is so very a fool to be married to hell?”   — Gremio, Taming of the Shrew, Act 1 Scene 1

****

நாலடியார் பாடல்

அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்

பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடெய்தும்

ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்

செத்த பிணத்திற் கடை. பாடல்-281

காவி தோய்ந்த ஆடையை இடுப்பில் சுற்றிக்கொண்டு ஞான வாழ்வு வாழ்ந்தாலும், பத்தோ எட்டோ உடையவராயின் அவர்கள் பலர் இடையிலும் நன்கு மதிக்கப்படும் சிறப்பினை அடைவார்கள். அவ்வாறன்றி, உயர்குடியிலே பிறந்தவராயினும், ஒரு பொருளும் இல்லாதார் உயிர்போன பிணத்திலும் இழிந்தவராகக் கருதப்படுவர்.

****

அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்

செங்கண்மா லாயினும் ஆகமன் — தம்கைக்

கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார்

விடுப்பர்தம் கையால் தொழுது.

விஷ்ணுவே வந்தாலும் கையில் காசு இல்லாவிடில் வேசிகள் திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

*****

ஆணமில் நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக்

காண மிலாதார் கடுவனையர் — காணவே

செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்

அக்காரம் அன்னார் அவர்க்கு.

வேசிகளுக்கு காசில்லாதவன் விஷம்; ஆனால் செக்கிழுத்து எண்ணெய் நாற்றத்துடன் வந்தாலும் காசு கொடுத்தால் கட்டி அணைப்பார்கள்.

*****

ஆதி சங்கரர்

பஜ கோவிந்தம் நூலில் ஆதி சங்கரர் விளம்பும் உயரிய கருத்துக்களை ஷேக்ஸ்பியரில் காண முடியாது

 மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்

குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்

யல்லபஸே நிஜ கர்மோப்பாத்தம்

வித்தம் தேன வினோதய சித்தம்

ஏ மூடனே அளவற்ற செல்வம் சேர்க்கும் உன் தணியாத தாகத்தை விட்டுவிடு. சஞ்சலமும் பேராசையும் இல்லாமல் மெய்ப்பொருளைப் பற்றிய எண்ணங்களை உன் மனதில் நினை. நீ அடையும் செல்வம் எல்லாமே நீ செய்யும் வினைகளாலும் வினைப்பயன்களாலும் தான். அதைக் கொண்டு உன் மனதில் திருப்தி அடை. நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

****

अमृतत्वस्य नाशास्ति वित्तेनेत्येव हि श्रुतिः ।

ब्रवीति कर्मणो मुक्तेरहेतुत्वं स्फुटं यतः ॥ 7 ॥

விவேக சூடாமணியிலும் ஆதி சங்கரர் இதைச் சொல்கிறார்

பணத்தினால் முக்தியை அடைய முடியாது என்று வேதங்களும் விளம்புகின்றன. பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் இரன்டு மனைவிகளை உடைய யாக்ஞவல்க்ய மகரிஷி, மைத்ரேயி என்ற மனைவியிடம் இதை சொல்கிறார்.

—subham—-

TAGS- தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில், ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள் 7,  பணம், செல்வம், பெண்கள், தங்கம், வேசிகள்

உலகையே சிரிக்க வைத்த நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின்! – 1 (Post No.13,718)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.718

Date uploaded in London – 28 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 11-9-24 இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

உலகையே சிரிக்க வைத்த நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின்! – 1 

ச. நாகராஜன்

சிரிஉலகமே உன்னுடம் சிரிக்கும்!

“சிரி; உலகமே உன்னுடன் சேர்ந்து சிரிக்கும். அழு; நீ மட்டும் தனியே அழுவாய்” என்பது உலகப் பழமொழி. உலகையே பல வருட காலம் தன்னுடைய நடிப்பால் சிரிக்க வைத்த நடிகர் சார்லி சாப்ளின்.

அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டு. பூங்காக்களில் தூங்கி சோகமான இளமைப் பருவத்தைக் கழித்தவர், உலகையே சிரிக்க வைத்து மகிழ்ச்சியால் ஆட்டுவித்தார் என்றால் அது பிரமிப்பூட்டும் ஒரு விஷயம் தானே! அவரைப் பற்றிப் பார்ப்போம்.

பிறப்பும் இளமையும்

சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் இங்கிலாந்தில் லண்டனில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ம் தேதி பிறந்தார். அவரது தந்தை நல்ல மேடைப் பாடகர், நடிகரும் கூட. தாயார் லிலி ஹார்லியோ நல்ல நடிகை, பாடகியும் கூட.  குடிப்பழக்கத்தால் சாப்ளினின் தந்தை அவர் பத்தாம் வயதை எட்டும் முன்னமேயே மறைந்தார். தாயாருக்கோ மனோவியாதி ஏற்பட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சகோதரர் சிட்னியுடன் சாப்ளின் படாதபாடு பட்டார். சோகமான இளமைக் காலத்தில் பல நாட்கள் அவர் இரவில் பூங்காக்களில் படுக்க வேண்டியதாயிற்று. 1896-ம் ஆண்டு சாப்ளினும் அவரது சகோதரரும்  பப்ளிக் போர்டிங் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். அதாவது அந்தப் பள்ளி அனாதைகளுக்கும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்குமான பள்ளியாகும். 18 மாதங்கள் அங்கே கழித்தார் சாப்ளின்.

ஐந்து வயதில் மேடையில் பாட்டு

சார்லினுக்கு ஐந்து வயதாகும் போது அவரது தாயார் லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருந்தார். திடீரென்று பாதியில் அவரது தொண்டை அடைத்து விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் அவர் திகைத்தார். உடனே நிகழ்ச்சி அமைப்பாளர் சாப்ளினை மேடைக்கு இழுத்துச் சென்று, “பாடு” என்றார். அவரும் தனக்குத் தெரிந்த “ஜாக் ஜோன்ஸ்” என்ற பாட்டைப் பாடினார். ரசிகர்கள் அதை ரசித்து ஆரவாரம் செய்து நாணயங்களை வீசினர். உடனே சாப்ளின், “இந்தக் காசுகளை எடுத்துக் கொண்டபின் தொடர்கிறேன்” என்றார். இன்னும் ஆரவாரம் அதிகமாகி அதிகமான நாணயங்கள் மேடையில் வந்து விழுந்தன. பின்னால் அவர் மேடை நிகழ்ச்சிகளில் தைரியமாகப் பங்கேற்க இது உதவியது.

குடும்பம்

29 வயதான சார்லி சாப்ளின் 1918ல் 17 வயது இளம்பெண்ணான நடிகை மில்ட்ரெட் ஹாரிஸை மணம் புரிந்தார். சரியான பொருத்தம் இல்லை என்று விவாகரத்து செய்த அவர் தனது 35-ம் வயதில் 16 வயதுப் பெண்ணான லிடா க்ரேயை மணந்தார். அதுவும் ‘ப்ரேக்-அப்’பில் முடிந்தது. அடுத்து 1943-ல் 54 வயதான அவர் 18 வயதான ஓனா ஓநீல் என்ற மங்கையை மணந்தார். ஆனால் இந்த மணம் அவர் இறக்கும் வரை நீடித்தது. ஓனாவுக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்தன. சாப்ளினுக்கு மொத்தக் குழந்தைகள் 11.

படங்களில் நடிக்கவும் தயாரிக்கவும் அனைத்திற்கும் தனக்கு ஊக்கம் கொடுத்தது தன் அன்னையே என்று பின்னால் பாசத்துடன் குறிப்பிட்டார் சாப்ளின்.

ட்ராம்ப் என்ற பாத்திரம் உருவான விதம்

சார்லி சாப்ளினை அடையாளம் காட்டும் பாத்திரமாக ஆனது ட்ராம்ப் என்ற பாத்திரம். தான் ட்ராம்ப் ஆன விதத்தைப் பற்றி அவரே இப்படி சொல்லி இருக்கிறார்.

“இது தற்செயலாக உருவான ஒரு பாத்திரம். கீஸ்டோன் ஸ்டுடியோவில் ஒரு நாள் ஹோட்டலுக்கான செட் ஒன்று போடப்பட்டது. சீக்கிரமாக காமடியன் டிரெஸ் ஒன்றைப் போட்டு வருமாறு என்னை அனைவரும் வற்புறுத்தினர்.”

இப்படி வற்புறுத்தப்பட்ட சாப்ளீன் மேக் -அப் அறைக்குச் சென்று  தொளதொள பேண்ட் ஒன்றை எடுத்துப் போட்டுக் கொண்டார். அதற்கு மாறுபாடாக இருக்கும் படி இறுக்கமான கோட் ஒன்றை அணிந்தார். முகபாவங்களை மறைத்து விடாமல் இருக்கும் படி சின்ன மீசை ஒன்றை ஒட்ட வைத்துக் கொண்டார். விசித்திரமான தொப்பி ஒன்றையும் அணிந்தார். பெரிய ஷூக்கள் இரண்டையும் போட்டுக் கொண்ட போது காமடி பாத்திரமான ட்ராம்ப் பாத்திரம் கச்சிதமாக உருவாகி விட்டது. செட்டில் அவரைப் பார்த்த அனைவரும் வியந்து பாராட்டினர். பொதுமக்களும் இந்த பாத்திரத்தை விரும்பி வரவேற்று ஏற்றுக் கொண்டனர்.

7-2-1914-ல் வெளியானது ‘தி ட்ராம்ப்’ என்ற படம்.

கீஸ்டோனில் உருவான அவரது 35 நகைச்சுவை ட்ராம்ப் படங்கள் அவருக்கு உலகில் தனி ஒரு இடத்தைப் பெற்றுத் தந்து விட்டது.

ஏறிக் கொண்டே போன சம்பளம்

முதலில் வாரம் 150 டாலருக்கு ஒப்பந்தமான அவரது சம்பளம் சில வாரங்களில் 1250 டாலராக ஆனது. சில ஆண்டுகளிலேயே பல்லாயிரம் டாலராக உயர்ந்து விட்டது.

அமெரிக்க ஜனாதிபதியை விட அதிகமாக ஆனது அவர் சம்பளம். அமெரிக்க ஜனாதிபதி வருடத்திற்கு 75000 டாலர் வாங்கிய போது 1916-ல் அவர் நியூயார்க்கில் ம்யூட்சுவல். ஃபிலிம் கார்பொரேஷனுடன் ஆறு லட்சத்தி எழுபதாயிரம் டாலருக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடார்.

இதனால் அவரே ஒரு ஸ்டுடியோவை உருவாக்கினார். சொந்தமாக படங்களை எடுக்க ஆரம்பித்தார்.

ஐன்ஸ்டீனுடன் சார்லி சாப்ளின்

பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1931ம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸுக்கு விஜயம் செய்தார்.

சார்லி சாப்ளின் அவரைத் தான் நடித்த படமான ‘சிடி லைட்ஸ்’ என்ற படத்தை பிரத்யேகமாக  திரையிட்டுக் காண்பிக்க ஆசைப்பட்டு அதைப் பார்க்க வருமாறு அவரை வேண்டிக்கொண்டார்.

இருவரும் காரில் செல்கையில் அங்கு குழுமியிருந்த மக்கள் கையை அசைத்து உற்சாகமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஐன்ஸ்டீனை நோக்கிய சார்லி சாப்ளின், “இந்த ஜனங்கள்  ஏன் தெரியுமா உங்களை உற்சாகமாக வரவேற்கிறார்கள், அவர்களில் ஒருவருக்கும் உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை! அதனால் தான்! என்னை ஏன் தெரியுமா வரவேற்கிறார்கள்! என்னை எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள், அதனால் தான்!”என்றார்.

ஐன்ஸ்டீன் சிரித்தார்!

காந்திஜியுடன் சாப்ளின்

1931-ம் ஆண்டு வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் வந்த காந்திஜியை சந்திக்க பெரிதும் விரும்பினார் சாப்ளின். சரோஜினி நாயுடு காந்திஜியிடம் சாப்ளின் ஒரு பெரும் நகைச்சுவை நடிகர் என்பதை விளக்கினார். டாக்டர் கத்தியால் என்பவரின் வீட்டில் தங்கி இருந்த காந்திஜி அவரைச் சந்திக்க மாலை ஆறரை மணிக்கு நேரம் ஒதுக்கினார். சாப்ளின் காந்திஜியிடம் இயந்திரப் பயன்பாட்டைப் பற்றிப் பேசினார். காந்திஜி இயந்திரங்களைத் தான் எதிர்க்கவில்லை என்றும் அதற்கு அடிமையாவதையே தான் எதிர்ப்பதாகவும் விளக்கினார். தொடர்ந்து ஏழு மணிக்கு நடந்த பிரார்த்தனைக் கூட்டத்திலும் சாப்ளின் கலந்து கொண்டார். காந்திஜியின் இயந்திரம் பற்றிய கருத்தைப் பின்னால் பூடகமாகத் தன் திரைப்படங்களிலும் அவர் புகுத்தினார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

to be continued……………………………….

**

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200 மூலிகை மருந்துகள்

 பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200 மூலிகை மருந்துகள் new.pdf

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200 மூலிகை மருந்துகள் (1).pdf

From

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200 மூலிகை மருந்துகள் new.pdf

posted on 27th september 2024 as free book.

  JUST TESTING NEW FORMAT; PLEASE BEAR WITH ME.

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200 மூலிகை மருந்துகள் (1).pdf

Pigs in Shakespeare and Tamil Hindu Scriptures (Post No.13,717)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,717

Date uploaded in London – 27 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Both Judaism and Islam have prohibited eating pork and its products for thousands of years. But Christians and non-vegetarian Hindus eat pork. Tamil saint Kannappa Nayanar, who gave both of his eyes to Lord Siva, offered pork to Lord Siva. There are many references to hunting wild pigs or boar for meat. They were not considered unclean animals. In fact, there are references of raising pigs in towns.

In local legends like Tiruvilayadal Purana , we even see pigs were helped by Lord Siva.

But in general, both Hindus and Shakespeare held pigs in the lowest category of animal kingdom.

In the Merchant of Venice drama , Shakespeare shows the hatred for pigs through Shylock’s  dialogue.

Here are some references from the play:

Yes, to smell pork; to eat of the habitation which
your prophet the Nazarite conjured the devil into. I
will buy with you, sell with you, talk with you,
walk with you, and so following, but I will not eat
with you, drink with you, nor pray with you.

Explanation — Perhaps in an aside where he is thinking to himself, Shylock, a Jew, points out the differences between his culture and the Christian culture practiced by Bassanio and Antonio. Shylock expresses his revulsion to smelling and eating pork and implies that Christians should feel the same way, since Christ (“the Nazarite”) cast the spirit causing a man’s insanity into a herd of swine, which makes pigs the “habitation” of the devil.

*****

Some men there are love not a gaping pig;
Some, that are mad if they behold a cat;
And others, when the bagpipe sings i’ the nose,
Cannot contain their urine: for affection,
Mistress of passion, sways it to the mood
Of what it likes or loathes. Now, for your answer:
As there is no firm reason to be render’d,
Why he cannot abide a gaping pig;
Why he, a harmless necessary cat;

— The Duke has just asked Shylock why he would prefer a pound of flesh to 3,000 ducats and Shylock has just said he will not give a reason, but he keeps on talking anyway, comparing his “humour” (his desire for Antonio’s flesh) to other people’s unreasonable fears of cats, pigs and bagpipe playing.

****

The wretched, bloody, and usurping boar,

That spoil’d your summer fields and fruitful vines,

Swills your warm blood like wash, and makes his trough

In your embowell’d bosoms, this foul swine

Lies now even in the centre of this isle,

Near to the town of Leicester, as we learn

From Tamworth thither is but one day’s march.

William Shakespeare (1564-1616)

—- The Tragedy of King Richard III, Act 5, Scene 2 (1593-3).

*****

From Hindu Books

Naladiyaar

So we don’t see any hatred towards pigs or boars in general . only similarity is they are considered lower kind of  animals.

Hindu Tamils went forward with boar or wild pig hunting  and raised them at towns.

Here are two verses rom Naladiyar to show how they took care of the pigs

Good instruction thrown away on thankless people.

When you expound the way of virtue to ungrateful people, —which is like mashing up sweet mangoes for a pig in a food — trough , — those virtuous teachings lose all their force —have their point (தைல) broken (தக#) by the obtuseness of the disciple— and do not enter into, or suit his ear, — like a stake which one would drive in on the side of a hill. –Naladiyar

Here we come to know that they prepared gruel for pigs

****

ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன

மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள் — கோட்டை

வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி

செயிர்வேழ மாகுதல் இன்று.- Naladiyar

Base men illiberal even in prosperity.

Worthless persons even in high estate do not the deeds that men of noble birth perform even in their poverty. Okeen-eyed maid! Men may enring and arm the boar’s tusks, but it will not even so become a warlike elephant.

*****

From Tirumanthiram of Tirumular

2918. பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்

தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்

குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்

குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே. 53- Tirumular

2918: Conquer Indriyas and Reach Iruvinai-Oppu and Malapari Pakam

Pig and Snake, Cow and Monkey

Together were in the lowly Jackal herd;

Joining them not and debasing himself not,

When, in balance, deeds good and bad are equal weighed

The Jiva, tinier than crab’s-eye berry,

Its ego’s diminution saw.

****

2926. போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்

ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்

நாகமும் எட்டொடு நாலு புரவியும்

பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே. 61

Here we see them grouped with low class people.

2926: The Lord Drives in the Tattvas into the Infant Body

The eight constituents of Body Subtle

That ultimate leave,

The eight and ten Tattvas that sneak in,

With Purusha in them immersed,

The orifices nine,

The Kundalini that serpent-like coils,

The life breath twelve finger-measure (angula) long,

-If these, the Divine Charioteer drives not in,

Verily may the infant less than human be (say, pig).

****

Tamil  saint Tirumular supported vegetarianism like Tiru Valluvar and he cursed meat eaters that they would be biorn as pigs in their next birth.

கொன்றிலாரை கொலச் சொல்லிகூறினார்

தின்றிலாரை தினச் சொலி தெண்டித்தார்

பன்றியாய் படியில்பிறந்து ஏழ் நரகு 

ஒன்றுவார் அரன் ஆணை! இது உண்மையே!– Tirumular

Those who ask others to kill animals (for meat)

Those who force others to eat meat

Will be born as pigs and suffer in seven types of hell

This is the order by Lord Siva! True indeed!-Tirumular

****

From Tamil Book Neethi Venba

Tamil Book Neethi Venba contains didactic verses where pig is compared with the elephant .

One verse says what is the use getting so many children like piglets ? they are valuless. Lookt athe elephant which gives birth to only one calf. One must have one good child like elepant and not many like piglets.- Neethi Venba

Another verse says

Look at the elephant! When pigs are crossing their path, the elephants just negotiate and go around them; it is not that they are scared of pigs. In the same way, when ignorant people challenge the wise people, they simply avoid them and go their own way- Neethi Venba

****

Tamil Proverbs

887. ஆனை ஒரு குட்டி போட்டும் பயன்  பன்றி பல குட்டிப்போட்டும் பயன் இல்லை

It is of value though an elephant brings forth a single young one but the many young

ones of a pig are of no value.

One good thing is better than ten bad ones.

3777. தான் தின்னத் தவிடு இல்லை. வாரத்துக்குப் பன்றிக் குட்டியா?
He has no bran to eat, why seek a young pig to rear for hire ?

4515. பன்றிக்குட்டிக்கு ஒருசந்தி ஏது?
Does a young pig observe fasts?

4516. பன்றிக்குட்டி ஆனை ஆமா?
Will the young pig become an elephant?

4617.பன்றி பட்டால் அவனோடே, காட்டானை பட்டால் பங்கு.
If a hog be shot he takes the whole, if an elephant be shot I shall have a share.

4618. பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.
The sow has many young ones at a time, the lioness only one.

4619. பன்றி பல குட்டி போட்டு என்ன?
What, if a sow has a numerous litter?

4620. 
பன்றியோடு கூடிய கன்றும் மலம் தின்னும்.
A calf that goes with a pig will eat excrement.

All these show that pigs are useless, valueless and unclean animals .

(Verses and Proverbs were taken from PROJECT MADURAI website; thanks.)

–subam—

Tags – Pigs, boar, pork, swine, hog, Shakespeare, Tamil Verses, Neethi Venba, Tirumular, Naladiyar, Tamil Proverbs, Elephant,

Rare Pictures of Brahmins from Christian Propaganda Book-2 (Post No.13,716)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,716

Date uploaded in London – 27 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I came across a hundred-year-old book in the University of London Library. The Christians tried to convert people from all communities. The author photographed men and women from all communities. He admits it is very difficult to convert learned Brahmins. Here are the pictures with his comments.

Book Title- not known  Wrapper torn

Year of Publication 1904

Location—SOAS, London University Library

Theme – Christian propaganda and conversion

–subham—

Tags- Brahmins, 00 year old book, Christian propaganda, old ladies, village people, Part 2,

பகவத் கீதையை அறிமுகப்படுத்திய ஜெர்மானியர் (Post No.13,715)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,715

Date uploaded in London – 27 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பிராமணர்களின் (BRAHMIN EMIGRATION) தென்கிழக்காசிய குடியேற்றம் பற்றியும், இந்தோனேஷியாவின் கவி மொழி KAWI LANGUAGE

பற்றியும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர் வில்லியம் வான் ஹம்போல்ட் 1767-1835 (WILHEM VON HUMBOLDT 1767-1835). சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் சேவைகளைச் செய்தது குறிப்பிடத் தக்கது.

கவி மொழி என்பது இந்தோனேஷியாவில் வழங்கிய பழைய ஜாவானிய மொழி. OLD JAVANESE . இந்துக்களின் பிராமி எழுத்திலிருந்து தமிழ் எழுத்துக்கள் உருவானதுபோல  தென் கிழக்காசியா முழுதும் கவி என்னும் எழுத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பயன்பட்டது. இதைக் கொண்டு சென்றவர்கள் பிராமணர்கள் என்பது ஹம்போல்ட்டின் துணிபு. இந்தோனேஷிய மொழிகளில் பிராக்ருதக் கலப்பு இல்லாமல் தூய சம்ஸ்க்ருதம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் இது பற்றிச் செய்த ஆராய்ச்சி நீடிக்க முடியாதபடி அவரது மரணம் குறுக்கிட்டது. முதல் தொகுதி மட்டும் அவரது சகோதரர் அலெக்சாண்டர் மற்றும் அறிஞர் புச்மான் (ALEXANDER VON HUMBOLDT, J K E BUSCHMANN)  மூலம் 1836- ஆம் ஆண்டில் வெளியானது.

இந்தத் தொகுதியின் முதல் பகுதியில் இந்தியா – ஜாவா தொடர்பும், இரண்டாவது பகுதியில் கவி மொழி ஆராய்ச்சியும் மூன்றாவது பகுதியில் மலாய் மொழி ஆராய்ச்சியும் உள்ளன.

கவி மொழியில் நிறைய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருப்பதால் இந்திய ர்கள் அரசியலிலும் கலாசாரத்துறையிலும் கொடிகட்டிப் பறந்தது விளங்கும்  இதற்கு காரணம் பிராமணர்கள் குடியேற்றம். அவர்கள் மஹாபாரத, இராமாயண இதிஹாஸக் கதைகளை எடுத்து வந்து பரப்பினார்கள். இதனால் தோல் பாவைக்கூத்து (PUPPET SHOW) , பொம்மலாட்டக் கலைகள் தோன்றின.

புத்த சமண மதங்கள் பரவும் இடங்களில் பிராகிருத மொழியின் தாக்கத்தைக் காணலாம். கவி மொழியில் அவை இல்லாமல் தூய ஸம்ஸ்க்ருதம் இருப்பதால் பிராகிருதம் தோன்றுவதற்கு முன்னுள்ள ஆதிகாலத்திலேயே பிராமணர்கள் இந்தக் கதைகளை கொண்டுவந்திருக்க வேண்டும் என்பதும் அவரது துணிபு.

இதற்கெல்லாம் முன்னர் ஹம்போல்ட் செய்த முக்கிய பணி பகவத் கீதை பற்றி ராயல் பிரஷ்யன் அகாடமி ROYAL PRUSSIAN ACADEMY வெளியீடுகளில் மூன்று ஆண்டுகளுக்கு (1825 TO 1827) கட்டுரைகள் எழுதியதாகும். கீதையின் முழுக்கருத்துக்களையும் வெளியிடுவதே தனது லட்சியம் என்றார். சம்ஸ்க்ருத இலக்கணம் தொடர்பான கட்டுரைகளை ஸ்லெகல் நடத்திய A E SCHLEGEL’S INDISCHE BIBILOTHEK பத்திரிகைகளுக்கு எழுதினார் .

****

எங்கே பிறந்தார்? எங்கே சம்ஸ்க்ருதம் கற்றார் ?

கார்ல் வில்லியம் வான் ஹம்போல்ட்  ஒரு மொழியியல் அறிஞர், ராஜதந்திரி ஆவார்  அவர் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் சம்ஸ்க்ருத அறிஞர் பிரான்ஸ் பாப்பை  (FRANZ BOPP)  அலுத்து ஸம்ஸ்க்ருதத் துறையை உருவாக்கினார்

அவருடைய மொழிக்கொள்கை —

ஒரு மொழியின் குணமும் கட்டமைப்பும் அதைப் பேசுவோரின் அறிவையும் வாழ்க்கையையும் காட்டிவிடும் என்று முதன் முதலில் அறிவித்தார் . இவைகள் மக்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது என்பதையும் காட்டினார்.

அவர் பிறந்த இடம் பாட்ஸ்டேம் POTSDAM ;

பிறந்த தேதி -22-6-1767

முதலில் அவர் பிரஷ்யா எனப்படும் ஜெர்மனியின் தூதராக இத்தாலிக்கு அனுப்பப்பட்டார். அந்தப் பதவியைத் துறந்த பின்னர் பெர்லின் யூனிவர்சிட்டியைத் தோற்றுவித்தார். மாணவர்கள் அறிவை வளர் ப்பதோடு ஒழுக்கத்தையும் வளர்க்க வேண்டும்; நிறைய ஆராய்ச்சி செய்யவேண்டும் என்ற கருத்துக்களை வலியுறுத்தினார்

மேலும் பல பதவிகளை வகித்த அவர்,  பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்  தனது சொந்த எஸ்டேட்டில் வசித்தவர் 8-4-1835 –ல் காலமானார்.

ஸம்ஸ்க்ருதப் படிப்பு

முதலில் கிரேக்க இலக்கியம் பற்றி கட்டுரைகள் எழுதினார் ஸ்பெயினில் பயணம் செய்தபோது உலகில் வேறு எதிலும் ஒட்டாமல் தீவு போல நிற்கும் பாஸ்க் BASQUE  மொழியில் ஆர்வம் ஏற்பட்டது; அந்த மொழி பற்றிய இவரது கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

அவர் லண்டனில் பிரான்ஸ் பாப்  (FRANZ BOPP) என்பவரிடம் சம்ஸ்க்ருதம் பயின்றார். சம்ஸ்க்ருதம் மற்றும் சீன மொழி ஆகிய இரண்டும் முழுக்க முழுக்க வித்தியாசமானவை என்பனவற்றை உணர்ந்து ஒப்பிட்டு இலக்கணம் குறித்தும் எழுதினார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இப்படிப் பல புதுமைகளை புகுத்தி மொழியியல் ஆராய்ச்சியில் புத்துணர்வு ஏற்படுத்தினார்.

—SUBHAM—

TAGS-பகவத் கீதை, அறிமுகம், ஜெர்மானியர் , கவி மொழி ,

வில்லியம் வான் ஹம்போல்ட்

ஜயது ஜயது ஹிந்து ராஷ்ட்ரம்! (Post No.13,714)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.714

Date uploaded in London – 27 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஜயது ஜயது ஹிந்து ராஷ்ட்ரம்!

ச. நாகராஜன்

பன்னிரண்டாவது ‘வைஷ்விக் ஹிந்து ராஷ்ட்ர மஹோத்ஸவம் மிகச் சிறப்பாக தனது 12வது வருடத்தை முடித்துள்ளது.

ஹிந்து ராஷ்ட்ரம் மிக விரைவாக நிறுவப்படும் என்ற நம்பிக்கையை இந்த பன்னிரண்டு வருடங்களில் இந்த சங்கம் ஏற்படுத்தியுள்ளது.

ஶ்ரீ ராமரது ஆலயத்தை அயோத்தியாவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது இதற்கான அறிகுறியாகும்.

ஹிந்து நாகரிகமும் இந்தியாவும் நெடுங்காலம் நிலைத்திருக்க வேண்டுமானால் அதற்கான ஒரே வழி ஹிந்து ராஷ்ட்ரம் அமைக்கப்படுவதே ஆகும்.

இந்தியாவை 2047க்குள் அதாவது சுதந்திரம் கிடைத்த நூறு அண்டுகளுக்குள் இஸ்லாமிய நாடாக ஆக்கத் திட்டமிட்டு செய்யப்படும் சதிகள் அனைவரும் அறிந்ததே.

‘காலிஸ்தான்’ தலைவராக இயங்கும் அம்ரித்பால் சிங் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடனும் காஷ்மீரத் தீவிரவாதிகளுடனும் இணைந்து இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். சமீபத்திய பாராளுமன்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

அடுத்து ஹைதராபாத் பாக்யநகர் தொகுதியிலிருந்து அஸாவுதீன் ஓவைசி பதவி ஏற்கும் போது பாலஸ்தீன் வாழ்க என்ற கோஷத்தை தைரியமாக எழுப்பியுள்ளார்.

இவர், ‘ஆந்திராவில் 51 சதவிகிதம் முஸ்லீம் ஜனத்தொகை வந்து விடும். 50 சதவிகிதம் என்றால் அது நூறு சதவிகிதம் தான்’ என்று  மிரட்டியுள்ளது குறிப்பிடத்தகுந்தது. அதாவது 51 சதவிகிதம் எட்டியவுடம் மீதி 49 சதவிகிதத்தினர் ஒன்று பயமுறுத்தப்படுவார்கள் அல்லது இஸ்லாமுக்கு வலிய மாற்றப்படுவார்கள் என்றே இதன் பொருள் என்று கொள்ளலாம்.

ராகுல் காந்தி அவர்களோ ஹிந்துக்களை, “வன்முறை மக்களது கூட்டம்” என்று கூறியுள்ளது கவலைப்பட வைத்துள்ள ஒரு அம்சம்.

ஆக இந்த நிலையில் ஹிந்து ராஷ்ட்ரம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஹிந்து ராஷ்ட்ர மஹாநாடு கோவாவில் போண்டாவில் ஶ்ரீ ராம்நாத் தேவஸ்தானில் 2024, ஜூன் 24-ம் தேதி முதல் ஜூன் 30 முடிய நடைபெற்றது.1000 பிரதிநிதிகள் இந்தியாவின் 26 மாநிலங்களிலிருந்தும் அமெரிக்கா, சிங்கப்பூர், காணா நேபாள் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் வந்து இதில் பங்கேற்றனர். பல விசேஷ நிகழ்ச்சிகள் இதில் நடைபெற்றன.

ஹர ஹர மஹாதேவ என்ற கோஷத்துடன் முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

இந்தியாவையும் நேபாளத்தையும் ஹிந்து ராஷ்ட்ர என்று அறிவிக்கப்பட வேண்டும். செகுலர் மற்றும் சோஷியலிஸ்ட் என்ற வாசகங்கள் அரசியல் சாஸனத்தின் முன்னுரையிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

காசி மற்றும் மதுரா கோவில்கள் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றப்பட்டு ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.

மதமாற்றத் தடைச் சட்டத்தை மிகக் கடுமையாக அமுல் படுத்த வேண்டும்.

பசு வதையை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும்.

Places of Worship’ மற்றும் WAQF சட்டங்களை நீக்க வேண்டும்.

ஜனத்தொகை கட்டுப்பாடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

காஷ்மீர் ஹிந்துக்களுக்கான புனருத்தாரணம் செய்யப்பட வேண்டும்.

ஶ்ரீ ராம் சேனா அமைப்பைத் தடை செய்த கோவா அரசு அதை நீக்க வேண்டும்.

ரோஹின்யா மற்றும் பங்களாதேஷ் ஊடுருவல்காரர்களை அகற்ற வேண்டும்.

OTT Platforms குறித்த சரியான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும்.

இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் ஹிந்து ராஷ்ட்ரம் குறித்த ஒரு தெளிவான வடிவமைப்பும் செயல் திட்டமும் உருவாக்கப்பட்டது.

ஆலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களிலிருந்து 100 மீட்டருக்குள் மதுபான விற்பனை செய்யலாம் என்று கோவா அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது.  கோவா அரசு உடனடியாக இதை ரத்து செய்து விட்டது.

இப்போது 710 ஆலயங்களில் எந்த வித உடை அணிந்து வர வேண்டும் என்பது அமுல்படுத்தப்பட்டு விட்டது.

இன்னும் 14000 ஆலயங்கள் ஒரே மஹா சங்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் செகுலர் அரசு தன் கைவசம் நான்கு லட்சத்து ஐம்பதினாயிரம் கோவில்களை வைத்துள்ளது.

இவற்றை அரசின் கையிலிருந்து விடுவித்து நல்ல பொறுப்பான ஹிந்து அமைப்புகள் வசம் நிர்வாகத்திற்காகத் தர வேண்டும்.

அர்ஜுனன் உள்ளிட்ட பாண்டவர் வசம் அதிக சேனை இல்லை – கௌரவர்கள் கொண்டிருந்தது போல! ஆனால் அவர்கள் வசம் தர்மம் இருந்தது.

அதே போல ஹிந்து ராஷ்ட்ர அமைப்பை மேற்கொள்வோரிடம் அதிக பலம் இல்லை தான்; ஆனால் தர்மம் இருக்கிறது.

தர்மம் வெல்லும்!*

கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான ‘ட்ரூத்’ இதழின் 92வது தொகுதி 18வது இதழில் வெளியாகியுள்ள ‘ஜயது ஜயது ஹிந்து ராஷ்ட்ரம்’ என்ற கட்டுரையிலிருந்து தொகுக்கப்பட்ட விஷயங்கள் மேலே தரப்பட்டுள்ளது.

நன்றி: TRUTH 16-8-2024 வார இதழ்

**************

Rare Pictures of Brahmins from Christian Propaganda Book-1 (Post No.13,713)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,713

Date uploaded in London – 26 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I came across a hundred-year-old book in the University of London Library. The Christians tried to convert people from all communities. The author photographed men and women from all communities. He admits it is very difficult to convert learned Brahmins. Here are the pictures with his comments.

Book Title- not known  Wrapper torn

Year of Publication 1904

Location—SOAS, London University Library

Theme – Christian propaganda and conversion

–subham—

Tags- Brahmins, 00 year old book, Christian propaganda, old ladies, village people, Part 1

How did Chennai Brahmin Story go to Iran and spread to other countries? (Post No.13,712)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,712

Date uploaded in London – 26 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 This is Part two

Vajapeye wrote Pancatantra Fables from Mylapore in Tamil Nadu!-2

We saw in the first part that an 80 year old Brahmin Visnu Sarma Vajapeye from Mahilaaroopya wrote Panca Tantra  and that place was identified as Mylapore of Chennai by Prof. H H Wilson who translated the Rig Veda.

In this second part we will see that Visnu Sarma’s story migrated to Iran 1500 years ago through a Persian minister

Once Khosro Anushirvan (Ancestres Castri, in North) King of Iran ( Edon)  was presented a book which contained among other things the secret to raise the dead by means of an elixir. The book explained how the elixir was extracted from herbs and trees growing on the high mountains of India. The king eager to find out the truth about the elixir sent out his chief minister and treasurer Burzoe, to india, providing him with a great deal of gold and silver to defray the expenses of long and arduous journey, and with letters to many monarchs in India requesting their help .

Burzoe on reaching India received all the help he needed and with the wisest and most learned  sages began combing the mountains for the herbs and trees mentioned in the book. But to no avail, no extract had the power of restoring the dead to life . Burzoe and the learned Indian sages were driven to the conclusion that everything that had been written about the elixir in the book, was ‘false and untrue’.

Burzoe, greatly distressed, consulted the learned sages as to what he could do to not to return empty handed to his king. Then a’ famous philosopher ‘, who had also searched long and in vain for the Elixir of Life only to discover at the end  that the elixir in truth was a book, showed Burzoe a copy of it. This philosopher also explained the allegory contained in the first book , the one presented to the king of Iran, which started Burzoe on his travels, as follows:

The high mountains were the wise and learned men of lofty intellect; the trees and herbs their various writings and wisdom extracted from these writings the Elixir of Life that revived the dead intelligence and buried thoughts of the ignorant and unlearned.

Buzoe asked for a copy of the book which was always in he hands of those kings, for that is was  full of moral philosophy and permission to translate it into his own language  for his king. And so with the help and knowledge of all those learned philosophers, Burzoe rendered the famous book into Pehlavi language and returned home with it.

King Khosro Anushirvan  studied the book deeply and was impressed by the wisdom it contained  that he began to collect books  with great diligence  and sought out learned men to come and live in his court. Then he built a great library in his palace, in which the book he esteemed so highly – the Pancatantra was given the place of honour, being of examples and instructions for a man’s life , and also of justice and the fear of god. Burzoe travels ended happily.

It is based on the English version of Pancatantra – Sir Thomas North’s The Fables of Bidpai of sixteenth century.

–subham—

Tags- PancaTantra, Iran, Burzoe, Persian King, Fables of Bidpai, Elixir of Life, herbs in India, Chennai Brahmin Story,, Bidpai

மயிலாப்பூர் பிராமணன் கதை, ஈரான் நாட்டுக்குப் போன சுவையான கதை! (Post No.13,711)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,711

Date uploaded in London – 26 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 வாஜ்பாயி எழுதிய பஞ்சதந்திரக் கதைகள் உலகம் முழுதும் பரவியது எப்படி?- PART-2

கட்டுரையின் முதல் பகுதியில் விஷ்ணு சேர்மன் என்ற 80 வயது கிழட்டுப் பிராமணன் பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியதையும் அதுதான் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே உலகம் முழுதும் பரவிய முதல் சம்ஸ்க்ருத நூல் என்றும் கண்டோம்.

ஈ மஹிளா வேத  பூர்

அதை எழுதிய விஷ்ணு சர்மா வாஜ்பேயி சென்னையிலுள்ள மயிலாப்       போ ரைச் சேர்ந்த அக்கிரகார பிராமணன் என்று ரிக்வத்தை மொழிபெயர்த்த எச் எச் வில்சன் PROFESSOR H H WILSON  கூறுவதையும் கண்டோம். அந்தப் பிராமணன் அந்த இடத்தை மஹ்யாரூப்யம் என்று சொன்னதை பேராசிரியர் வில்சன் மட்டுமே அடையாளம் கண்டார்.

இது எப்படி ௧௫௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் ஈ இரான்  (பெர்சியா- பாரசீகம் ) நாட்டுக்குப் போய் அங்கிருந்து ஐரோப்பா முழுதும் பரவியதேது என்ற கதையைக் கேளுங்கள்

மூலிகை தேடிய கதை

இந்தியாதான் நிறைய வைர  வாரமும் தங்கமும் மூலிகைகளும் நிறைந்த நாடு என்பது உலகம் முழுதும் அறிந்த உண்மை. இதனால்தான் கொலைகார கொள்ளைக்காரன் கொலம்பஸ் இந்தியாவைத்த தேடித் புறப்பட்டு மேற்கைநிதியத் தீவுகளில் இறங்கி அதை இந்தியா என்று சொன்னானா.இன்றுவரை அமெரிக்க வரை அந்த இந்திய பெயர் ஒட்டிக்கொண்டது. நிற்க.

பாரசீகம் எனப்படும் ஈரான் நாட்டில் குஷ்ரோ அனு ஷ்ரவண  என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனிடம் யாரோ ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான். அதில் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மூலிகை பற்றி எழுதியிருந்தது. அது  இந்தியாவில் கிடைக்கும் என்று அறிந்து  முதலமைச்சர் புர்சொயியை இந்தியாவுக்கு அனுப்பினான்

CHIEF MINISTER BURZOE , KING KHOSRO ANUSHIRVAN (ANESTRES CASTRI, IN NORTH ) OF IRAN (EDON)  AROUND 570 CE .

இந்தியாவில் செலவுகளைச் சமாளிப்பதாற்காக தங்கம், வெள்ளிக் கட்டிகளையும் கொடுத்து அனுப்பினான்  அது மட்டுமல்லாமல் இந்திய மஹாராஜாக்களுக்கு கடி தங்களையும் கொடுத்து வைத்தான் .இந்தியாவிலுள்ள ரிஷி முனிவர்களும் அறிஞர்களும் அவனுக்கு எல்லாவித உதவிகளையும் நல்கினர். காடு மலை கழனிகளையெல்லாம் விடாமல் தேடினர். ஆனால் சாவா மருந்து அளிக்கும் மூலிகைகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அந்தப் புஸ்தகத்தில் எழுதிய விஷயங்கள் தவறு என்று எல்லோரும் ஒருமானதான முடிவுக்கு வந்தனர். அடக் கடவுளே!  நான், மன்னருக்கு என்ன பதில் சொல்லுவேன் என்று தவியா த் தவித்தார் அமைச்சர் புர்சொயி. ஒரு பிரபல இந்து தத்துவ அறிஞர் அவரைச் சந்த்தித்து “கவலை வேண்டாம் இந்தப் புஸ்தகத்தை உன் மன்னரிடம் காண்பி” போதும் என்றார்.

அதில் மூலிகை பற்றிய அரிய உண்மை பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது : உயர்ந்த மலைகள் என்பன உயர் நிலையைடைந்த பேரறிஞர்கள் அதில் குறிப்பிடப்பட்ட மூலிகைகள் என்பன முனிவர்கள் எழுதிய புஸ்தகங்கள்  மற்றும் அதன் சாரமும் ஆகும்;

இறந்தோரை எழுப்புவது என்பது அறியாமையில் மூழ்கி புதைந்து கிடப்போரை உசுப்பி விடும்  ஞானம் ஆகும்

புர்சொயிக்கு பேரானந்தம் கிடைத்தது. எனக்கு புஸ்தகத்தின் காப்பி வேண்டுமே என்று கேட்டார். அது எல்லா இந்திய அரசர்களிடமும் இருந்த புஸ்தகம். உடனே நகலும் கிடைத்தது; அதைப் பாரசீக (பஹலவி) மொழியில் மொழிபெயர்க்க அனுமதியும் வாங்கி மொழிபெயர்த்தார்.

அதைக் கண்ட மன்னனுக்கு பிரம்மானந்தம்! உடனே இது போன்ற அறிஞர்களை நமது சபைக்கு அழையுங்கள் என்று ஆணையிட்டான். தனது அரண்மனையில் ஒரு பெரிய நூலகத்தை உருவாக்கினான்; அதில் அந்த புஸ்தகத்தை சிம்மாசனத்தில் வைத்தான்அந்தப் புஸ்தகம்தான் பஞ்ச தந்திரம் என்னும் ஸம்ஸ்க்ருதக் கதை புஸ்தகம்!

அராபிய மொழியில் இதன் பெயர் கலிலா வா திம்னா .

KALILAH WA  DIMNAH IN ARABIC, EIGTH CENTURY CE

என்ன துரதிருஷ்டம் என்றால் அந்த பஹலவி   மொழி ஒரிஜினல் இப்போது இல்லை ;மைலாப்பூர் பிராமணன் எழுதிய ஒரிஜினல் — மூலப் புஸ்தகமும் இல்லை; இந்தியாவில் 200 பேர் படி (COPIED)  எடுத்து வைத்திருந்தனர் அவையும்  பஹலவி  மொழியில் எழுதியதை அராபிய மொழியில் ஆக்கிய புஸ்தமும்தான் இப்போது நம்மிடம் புழங்கி வருகின்றன.

யார் யார் இந்துக்களைக் காப்பி அடித்தனர் ?

முதல் முதலில் பெளத்தர்கள் இந்துமதக்க கதைகளை ஜாதக்கதைகளை என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார்கள்.  ராமன், தசரதன் போன்றோரையும் போதிசத்துவர் என்று புளுகினார்கள் இன்று கிறிஸ்தவர்களும், கர்நாடக பாடகிகளும், திராவிடர்களும் இதே போல புளுகு மூட்டைகளைக் கட்டி இலவசமாக வழங்குவதைக் காண்கிறோம். வள்ளலார் , வள்ளுவர்  ஆகியோர் நெற்றியில் இருந்த விபூதியை அழித்தையும் நாம் காண்கிறோம் .

ஐரோப்பாவில் இது எப்படி உருவெடுத்தது என்ற புள்ளிவிவரம் இதோ:-

THE ARABIAN NIGHTS .  THE GESTA ROMANORUM , BOCCASIO’S DECAMERON CHAUSER’S CANTERBURY TALES, THE FABLES OF LA FONTAINE

SOME STORIES OF GRIMM

BRE’ER RABBIT STORIES OF NORTH AMERICA

இந்தக் கதைகளை அராபிய இரவுகள் , பொக்காஸியோ எழுதிய டெக்கமரான் சாசர் எழுதிய கான்டர்பரி கதைகளில் காணலாம்  எல்லோரும் ஈயடிச்சான் காப்பி அடிக்காமல் தங்கள் நாட்டுக்கு ஏற்றவாறு கதைகளை மாற்றி எழுதினார்கள்

லா பாந்தேன் (1678)  என்ற பிரெஞ்சுக்காரர் மட்டும் 400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய  கதைகளில் பஞ்ச தந்திர புஸ்தகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவை, ஈசாப் கதைகளுக்கும் முந்தியவை என்று திட்டவட்டமாக்க கூறுகிறார்

இந்துக்கள் தங்கள் நாகரீகத்தை 1500 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கும் பரப்பியதற்கு கிடைத்த முதல் வலுவான ஆதாரம் இந்த சம்ஸ்க்ருத நூல்தான் .

வட அமெரிக்கா வரை இந்தக் கதைகள் பரவிவிட்டது

இந்தியாவிலேயே தண்டி எழுதிய தச குமார சரித்திரம், சுக சப்ததி, ஹிதோபதேசம் , திருக்குறள் முதலிய நூல்களில் இதன் தாக்கத்தை காணலாம்.

THE ART OF STORY TELLING

உலகில் கதை சொல்லும் கலையை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் இந்துக்கள்! எல்லா இதிகாசங்களும் புராணங்களும் வாய்மொழியாக முதலில் சொல்லப்பட்டதாவே நமது நூல்கள் செப்புகின்றன. வால்மீகி அல்லது வியாசர் அல்லது நைமிசாரண்ய முனிவர்கள் உருவாக்கிய சம்ஸ்க்ருத இலக்கியத்துக்குப் பக்கத்தில் கூட உலகின் வேறு எந்த மொழியும் நெருங்க முடியாது!  இவை அனைத்தும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை .

சங்க இலக்கியத்தில் கிருஷ்ணன் கோபி கதையும் கூட வந்துவிட்டது இந்திரனை திருவள்ளுவரும் தொல்காப்பியரும் பத்து இடங்களுக்கு மேல் குறிப்பிடுகின்றனர்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏழு நூல்களை சம்ஸ்க்ருதத்தில் எழுதி உலகப் புகழ்பெற்ற காளிதாசன் மேகதூத நூலில் சொல்கிறான்-

கிராமங்களில் ஆல மரத்துக்கடியில் கிராம முதியோர்கள் பிரமாதமாக உதயணன் கதைகளை சொல்லுவதைக் கேட்டுக்கொண்டே போ மேகமே1” என்று மேகத்தைத் தூது விடுகிறான். அதுதான் உலகின் முதல் தூத இலக்கியம் .

இதைப் படிக்கும்போது பாரதியார் சொன்ன சத்தியமான வாக்கு நினைவுக்கு வருகிறது :

எல்லாரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற் களிக்கும் –

ஆம் இந்தியா உலகிற்களிக்கும் –

ஆம் ஆம் இந்தியா உலகிற் களிக்கும் – வாழ்க” – –பாரதியார் பாடல்.

திருக்குறளில் பஞ்சதந்திரக் கதை வரும் குறள்கள்: 273, 274, 277, 481, 495, 500, 633

ஒவ்வொரு கதைத் தழுவலிலும் மிருகங்களின் பெயர்களை குறிப்பாக, முக்கிய கதா பாத்திரங்களான இரண்டு நரிகளின் பெயர்களை எப்படியெல்லாம் எழுதினார்கள் என்பது ஒரு பெரிய கதை; மொழியியலை ஆராய்வோருக்கு அவை பெரும் விருந்து!

****

பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை (Post No.3531)

 Date: 10 January 2017

Post No.3531

ஒரு குரங்கு போய், ஆப்பு வைத்த இடத்தில் கால் சிக்கியது போல, நாம் எல்லோரும் ஆசை வயப்பட்டு சிக்கிக் கொள்கிறோம். குரங்கு சப்தமிட்டது போலவே நாமும் துயரம் வருகையில் ஓலம் இடுகிறோம். இதைப் பட்டினத்தார் மிக அழகாகப் பாடுகிறார்:-

“நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

நலம் ஒன்றும் அறியாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல் போலப்

புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்

கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.

— பட்டினத்தார் பாடல்

(நவ நிதியம்= ஒன்பது பெரிய நிதிகள், நாரி=பெண், பூப்பிளக்க= பூமியே பிளக்கும் அளவுக்கு/ நாக்கு கிழிய)

 –SUBHAM–

TAGS- மயிலாப்பூர் ,பிராமணன் கதை, ஈரான் நாடு, சுவையான கதை, வாஜ்பாயி, பஞ்சதந்திரக் கதைகள் பரவியது எப்படி?- PART-2, திருக்குறளில்,  பஞ்சதந்திரக் கதை குறள்கள்: