மார்ச் 2025 காலண்டர்; புரந்தரதாசர் பொன்மொழிகள் (Post No.14,240)

Written by London Swaminathan

Post No. 14,240

Date uploaded in Sydney, Australia – 24 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

2025 மார்ச் மாத பண்டிகைகள் மற்றும் விரதங்கள்

08 –      உலக மகளிர் தினம்12 –மாசி மகம்; 14-காரடையான் நோன்பு ஹோலி30யுகாதி31 – ரம்ஜான் ,

9/10 , 25/26    ஏகாதசி விரதம்; 14-பௌர்ணமி ; 29-அமாவாசை.

2025 மார்ச் மாத முகூர்த்த தினங்கள்

மார்ச் 2 ஞாயிறு, 3 திங்கள், 9 ஞாயிறு, 10 திங்கள், 12 புதன், 16 ஞாயிறு, 17 திங்கள்.

வட இந்திய சம்பிரதாயப்படி- 12,6,712

Here are auspicious/ Shubh Muhurats according to North Indian Customs:

1st March 2025 (Saturday), 2nd March 2025 (Sunday),

6th March 2025 (Thursday), 7th March 2025 (Friday),

12th March 2025 (Wednesday).

****

Thanks to dasar-songs.blogspot.com for rendering great songs of Purandara dasa in Tamil. இவை அனைத்தும் வேறு ஒரு வெப்சைட்டில் கண்ட மொழிபெயர்ப்பு; யார் மொழி பெயர்த்தார்கள் என்ற பெயர் இல்லை; அவர்களுக்கு நன்றி உரித்தாகுக

****

மார்ச் 1 சனிக்கிழமை,  

ஈ பரிய சொபகாவ தேவரலி நா காணே

கோபி ஜனப்ரிய கோபாலகல்லதே (ஈ பரிய)

இந்த (கீழ்க்கண்ட) சிறப்புகளை வேறு எந்த தேவரிடத்திலும் நான் கண்டதில்லை;கோபியர்களின் மனங்களைக் கவர்ந்த கோபாலனைத் தவிர (ஈ பரிய)

****

மார்ச் 2 ஞாயிற்றுக்கிழமை

தொரெயதனதலி நோடே தரணிதேவிகே ரமணா

சிரியதனதலி நோடே ஸ்ரீகாந்தனு

ஹிரியதனதலி நோடே சரசிஜோத்பவனய்யா

குருவுதனதலி நோடே ஜகதாதி குருவு (ஈ பரிய)

முதலாளிகளில் யார் பெரிய முதலாளி என்று பார்த்தால் இவர் உலகத்திற்கே முதலாளி

செல்வந்தர்களில் யார் பெரிய செல்வந்தர் என்று பார்த்தால் இவர் இலக்குமிக்கே கணவன்

மூத்தவர்களில் யார் மூத்தவர் என்று பார்த்தால் இவர் பிரம்மாவிற்கே தந்தை

ஆசான்களில் யார் பெரிய ஆசான் என்று பார்த்தால் இவர் உலகத்திற்கே ஆசான் (ஈ பரிய)

****

மார்ச் 3 திங்கட்கிழமை

பாவனத்வதி நோடே அமர கங்கா ஜனக

தேவத்வததி நோடே திவிஜரொடெயா

லாவண்யதலி நோடே லோகமோஹகனய்யா

ஆவ தைர்யதி நோடே அசுராந்தகா (ஈ பரிய)

புனிதர்களில் யார் மிகப் புனிதர் என்று பார்த்தால் இவர் புனிதமான கங்கையின் தந்தை

தேவர்களில் யார் பெரியவர் என்று பார்த்தால் இவர் தேவாதி தேவர்

அழகானவர்களில் யார் சிறந்தவர் என்று பார்த்தால், இவர் உலகத்தையே மயக்குபவர்

தைரியமானவர்களில் யார் மேலானவர் என்று பார்த்தால், இவர் பல அசுரர்களையே வென்றவர்

****

மார்ச் 4 செவ்வாய்க்கிழமை  

ககனதலி சஞ்சரிப கருட தேவனே துரக

ஜகதீதரசேஷ பரியங்க சயன

நிகம கோசர புரந்தர விட்டலகல்லதே

மிகிலாத தைவகளிகே ஈ பாக்யவுண்டே (ஈ பரிய)

வானத்திலேயே பறக்கும் கருட தேவனே இவனது வாகனம்

சேஷமே இவனது வாகனம்

வேதங்களில் பாடப்பட்டிருக்கும் இந்த புரந்தரவிட்டலனைத் தவிர

(மேலே சொன்ன) இந்த தகுதிகள் வேறு யாருக்கு உண்டு? யாருக்கும் இல்லை (ஈ பரிய)

**********

மார்ச் 5 புதன்கிழமை

தாள பேகு பக்க மேள பேகு

சாந்த வேளே பேகு கானவ கேளபேகு எம்புவரிகே (தாள)

தாளம் இருக்க வேண்டும்; பக்க வாத்தியங்களும் இருக்க வேண்டும்

அமைதியான நேரம்/காலம் இருக்க வேண்டும்; பாடலை கேட்க விரும்புபவர்களுக்கு (தாளம்)

****

மார்ச் 6 வியாழக்கிழமை

கள சுத்த இரபேகு திளிது பேளலு பேகு

களவள பிடபேகு களெமுக இரபேகு (தாள)

(பாடுபவர்) குரல் சுத்தமாக இருக்க வேண்டும்;

(பாடும் வரிகளை) தெரிந்து புரிந்து உச்சரிக்க வேண்டும்

(பாடுபவர், அவரது) மனதில் குழப்பங்களை விடவேண்டும்

(பாடுபவர் முகம்) நல்ல களையுடன் இருக்க வேண்டும் (தாள)

****

மார்ச் 7 வெள்ளிக்கிழமை

ஜதிப்ராச இரபேகு கதிகே நில்லச பேகு

ரதிபதிபிதனோளு அதி ப்ரேம இரபேகு (தாள)

எதுகை/மோனை இருக்க வேண்டும்;

(தக்க இடத்தில்) நிறுத்திப் பாட வேண்டும்;

ரதியின் கணவனான மன்மதனின் தந்தையான ஸ்ரீமன் நாராயணனிடத்தே பக்தி இருக்க வேண்டும் (தாள)

****

மார்ச் 8 சனிக்கிழமை,  

அரிதவரு இரபேகு ஹருஷ ஹெச்சலி பேகு

புரந்தரவிட்டலனல்லி த்ருட சித்த இரபேகு (தாள)

(என்ன பாடுகிறோம் என்று) தெரிந்தவராக இருக்க வேண்டும்;

(பாடலை) கேட்பவர்கள் ஆனந்தம் அடைய வேண்டும்

புரந்தரவிட்டலனிடம் திடமான பக்தி இருக்க வேண்டும் (தாள)

***

மார்ச் 9 ஞாயிற்றுக்கிழமை

யாரே ரங்கன யாரே கிருஷ்ணன

யாரே ரங்கன கரெய பந்தவனு (யாரே)

ரங்கனை, கிருஷ்ணனை யார் அழைத்தார்கள்?

(அழைத்தால் உடனே வந்துவிடுவானே என்று பொருள்)

****

மார்ச் 10 திங்கட்கிழமை

கோபால கிருஷ்னன பாப விநாசன

ஈபரி இந்தலி கரெய பந்தவனு (யாரே)

கோபால கிருஷ்னனை பாவங்களை போக்குபவனை

இந்த கணத்தில் அழைத்த மாத்திரத்தில் வருபவன் யார்? (யாரே)

****

மார்ச் 11 செவ்வாய்க்கிழமை  

வேணு விநோதன ப்ராண ப்ரியன

ஜானெயரரசன கரெய பந்தவனு (யாரே)

புல்லாங்குழல் ஊதுபவனை என் உயிரிலும் மேலானவனை

நல்லனவற்றை ஏற்றுக்கொள்பனை யார் அழைத்தது? (யாரே)

****

மார்ச் 12 புதன்கிழமை

கரிராஜ வரதன பரம புருஷன

புரந்தர விட்டலன கரெய பந்தவனு (யாரே)

கஜேந்திரனை (யானை) காப்பாற்றியவன் அனைவரிலும் சிறந்தவனை

புரந்தர விட்டலனை கூப்பிட்டால் உடனே வருவானே (யாரே)

*****

 மார்ச் 13 வியாழக்கிழமை

ஹெட்ட தாயி தந்தெகள சித்தவ நோயிசி

நித்ய தானவ மாடி பலவேனு

சத்ய சதாசார இல்லதவனு ஜப

ஹத்து சாவிர மாடி பலவேனு (ஹெட்ட)

பெற்ற தாய் தந்தையின் மனதை நோகவிட்டு

தினமும் தானங்கள் செய்து என்ன பலன்?

உண்மை பேசாமலும், நல்ல பழக்கங்களும் இல்லாதவன்

பத்தாயிரம் ஜபங்கள் செய்து என்ன பலன்?

****

மார்ச் 14 வெள்ளிக்கிழமை

தன்ன சதிசுதரு பந்துகள நோயிசி

சின்ன தானவ மாடி பலவேனு

பின்னானந்ததலி தேசதேசவ திருகி

அன்ன தானவ மாடி பலவேனு (ஹெட்ட)

தன் மனைவி மக்கள் உறவினர்களை நோகவிட்டு

செல்வத்தை தானம் செய்வதில் என்ன பலன்?

பகட்டுக்காக ஊர் ஊராகப் போய்

அன்னதானங்கள் செய்வதில் என்ன பலன்? (ஹெட்ட)

****

மார்ச் 15 சனிக்கிழமை,  

ஸ்னானக்கே பானக்கே ஆகுவ திளி நீரு

கானனதொளகித்து பலவேனு

ஆனந்த மூர்த்தி புரந்தர விட்டலன

நெயெனாத தனுவித்து பலவேனு (ஹெட்ட)

குளிக்கவும் குடிக்கவும் முடியாத சுத்தமான நீரானது

(யாரும் புகமுடியாத) காட்டுக்குள் இருந்து என்ன பலன்?

நமக்கு எப்போதும் ஆனந்தத்தைத் தரும் புரந்தரவிட்டலனை

நினைக்காத இந்த உடம்பு இருந்து என்ன பலன்? (ஹெட்ட)

***

மார்ச் 16 ஞாயிற்றுக்கிழமை

அஞ்சிகென்யாதகய்யா சஜ்ஜனரிகே

பயவு இன்யாதகய்யா

சஞ்சீவி ராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)

அச்சம் எதுக்கய்யா நல்லவர்களுக்கு

பயமும் எதுக்கய்யா

ஹனுமனை நினைப்பவர்களுக்கு அதற்குப்பின் (அஞ்சிகெ)

****

மார்ச் 17 திங்கட்கிழமை

கனசல்லி மனசல்லி களவளவாதரெ

ஹனுமன நெனெதெரே ஹாரிஹோகுதே பீதி (அஞ்சிகெ)

கனவிலும் நினைவிலும் இறுக்கம் (இருந்தால்)

ஹனுமனை நினைத்தால் ஓடிப்போகுமே அந்தப் பயம் (அஞ்சிகெ)

****

மார்ச் 18 செவ்வாய்க்கிழமை  

ரோம ரோமக்கே கோடி லிங்கவுதுரிசித

பீமன நெனெதெரே பிட்டுஹோகுதே பீதி (அஞ்சிகெ)

(தன் உடம்பில் உள்ள) ஒவ்வொரு முடிக்கும் கோடி சிவலிங்கங்களை நிர்மாணித்த

பீமனை நினைத்தால் விட்டுப்போகுமே அந்தப் பயம் (அஞ்சிகெ)

****

மார்ச் 19 புதன்கிழமை

புரந்தர விட்டலன பூஜெய மாடுவ

குரு மத்வராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)

புரந்தர விட்டலனை புஜை செய்யும்

குரு மத்வாச்சாரியரை நினைத்த பிறகு (அஞ்சிகெ)

****

மார்ச் 20 வியாழக்கிழமை

ஹரி கொட்ட காலக்கே உணலில்லா, உணலில்லா

ஹரி கொடத காலக்கே பாயி பிடுவேயெல்லோ ப்ராணி (ஹரி)

ஹரி (உனக்கு) அதிகமாக கொடுத்தபோது (அதை) பயன்படுத்தவில்லை

ஹரி கொடுக்காத சமயங்களில் (இன்னும் அதிகம் வேண்டுமென்று) கேட்க மறக்கவில்லையே மனிதனே (ஹரி)

****

மார்ச் 21 வெள்ளிக்கிழமை

ஹத்து சாவிர ஹொன்னு திப்பேலி ஹோளிட்டு

மத்தே உப்பில்லதே உண்டேயல்லோ ப்ராணி

ஹத்து சாவிர ஹொன்னு திப்பேலி போபாகா

ம்ருத்திகே பாயல்லி பித்தல்லோ ப்ராணி (ஹரி)

பத்தாயிரம் தங்கக் காசுகளை உள்ளே பத்திரமாக இட்டுவிட்டு

(கருமியாக) உப்பில்லாமல் உண்டாயே மனிதனே

(அந்த) பத்தாயிரம் தங்கக் காசுகள் காணாமல் போய்விட்டால்

உயிரையே விட்டுவிடுகிறாயே மனிதனே (ஹரி)

****

மார்ச் 22 சனிக்கிழமை,  

ஹுக்கியு துப்பவு மனெயொளகிரலிக்கே

குக்குரி அன்னவ திந்தெயல்லோ ப்ராணி

ஹெக்களத பாக்ய களிகெயலி போபாக

புக்கெய ஹொய்கொண்டு ஹோதேயல்லோ ப்ராணி (ஹரி)

நெய்யும், அரிசியும் வீட்டில் நிறைய இருந்தாலும்

(கருமியாக) கடலை கலந்த அன்னத்தை தின்கிறாயே மனிதனே

நிறைந்த செல்வம் ஒரு நாழிகையில் போய்க்கொண்டிருக்கும்போது

நீ காணாமல் போன ஒரு காசை தேடிப் போகிறாயே மனிதனே (ஹரி)

****

மார்ச் 23 ஞாயிற்றுக்கிழமை

நெண்டரிஷ்டரு பந்து மனெ முந்தே குளிதிதரு

குண்ட சுத்தி நீனாடித்யல்லோ ப்ராணி

கண்டக யமனவரு குண்டிசுத எளெவாக

நெண்ட ஸ்ரீ புரந்தரவிட்டலனு ப்ராணி

உறவினர்கள் உன் வீட்டுமுன் (உதவிகள் வேண்டி) காத்திருந்தபோது

சாக்குகள் சொல்லி அவர்களை தவிர்த்தாயே மனிதனே

யமதூதர்கள் உன்னை கயிற்றில் கட்டி இழுக்கும்போது

உன் உறவினர் (ஒரே ஒருவன்தான், அவனே) ஸ்ரீ புரந்தரவிட்டலன் (ஹரி)

****

மார்ச் 24 திங்கட்கிழமை

ஆச்சாரவில்லத நாலிகே

நின்ன நீச புத்திய பிடு நாலிகே

விசாரவில்லதே பரர தூஷிசுவுதக்கே

சாசிகொந்திருவந்தா நாலிகே (ஆச்சார)

நல்ல பழக்கங்கள் இல்லாத நாக்கே

உன் கெட்ட புத்தியை விட்டுவிடு நாக்கே

(எந்தக்) காரணமுமே இல்லாமல் அடுத்தவரை திட்டுவதற்காக

வெளியில் வருகிறாயே நாக்கே

***

மார்ச் 25 செவ்வாய்க்கிழமை

ப்ராத: காலதொள் எத்து நாலிகே

ஸ்ரீ பதி எனபாரதே நாலிகே

பதித பாவனா நம்ம ரதிபதி ஜனகன

சததவு நுடி கண்ட்யா நாலிகே (ஆச்சார)

காலையில் எழுந்து, நாக்கே

ஸ்ரீபதி என்று சொல்லக்கூடாதா, நாக்கே

அனைத்து பாவங்களையும் போக்குபவனான நம் மன்மதனின் தந்தை (ஸ்ரீமன் நாராயணன் பெயரை)

எப்பொழுதும் சொல்ல வேண்டும் கேட்டாயோ, நாக்கே (ஆச்சார)

****

மார்ச் 26 புதன்கிழமை

சாடி ஹேளலு பேடா நாலிகே

நின்ன பேடிகொம்பேனு நாலிகே

ரூடிகொடெயா ஸ்ரீரமணன நாமவ

பாடுதலிரு கண்ட்யா நாலிகே (ஆச்சார)

கோள் மூட்டாமல் இரு நாக்கே

உன்னை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நாக்கே

இந்த உலகத்தின் நாயகன் ஸ்ரீரமணனின் நாமத்தை

பாடிக்கொண்டேயிரு நாக்கே (ஆச்சார)

****

மார்ச் 27 வியாழக்கிழமை

ஹரிய ஸ்மரணே மாடு நாலிகே

நர ஹரிய பஜிசு கண்ட்யா நாலிகே

வரத புரந்தர விட்டலராயன

சரண கமலவ நெனெ நாலிகே (ஆச்சார)

அந்த ஹரியின் நினைவாகவே இரு நாக்கே

நாராயணனை எப்பொழுதும் பஜித்துக் கொண்டேயிரு நாக்கே

வரங்களை அருளும் புரந்தர விட்டலனின்

பாதகமலங்களை எப்பொழுதும் நினைத்துக் கொண்டேயிரு நாக்கே (ஆச்சார)

****

மார்ச் 28 வெள்ளிக்கிழமை

கோவிந்தா நின்ன நாமவே சந்தா

கோவிந்தா நின்ன நாமவே சந்தா (கோவிந்தா)

கோவிந்தா, உன் பெயரே மிகவும் அழகு

கோவிந்தா, உன் பெயரே மிகவும் அழகு (கோவிந்தா)

****

மார்ச் 29 சனிக்கிழமை,  

அனுரெணு த்ருண கஷ்ட பரிபூர்ண கோவிந்தா

நிர்மலாத் மனாகி இருவதே ஆனந்தா (கோவிந்தா)

அணுவைப் போல சின்னஞ்சிறிய கஷ்டங்களை போக்குபவனே கோவிந்தா ;மனது சுத்தமாக இருப்பதே ஆனந்தம் (கோவிந்தா)

****

மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரிஷ்டி ஸ்திதி லய காரண கோவிந்தா

பரி மஹிமெய திளியுவுதே ஆனந்தா

பரம புருஷ ஸ்ரீ புரந்தர விட்டலன

ஹிங்கதே தாசர சலஹுவுதே ஆனந்தா (கோவிந்தா)

ஆக்குதல் காத்தல் அழித்தல் ஆகிய அனைத்திற்கும் காரணமானவனே கோவிந்தா

(உன்) அளவில்லாத மகிமையை தெரிந்து கொள்வதே ஆனந்தம்

பரமபுருஷன் ஆன ஸ்ரீ புரந்தரவிட்டலனை

(எப்பொழுதும் பாடித் திரியும்) தாசர்களுடன் பேசிப் பழகுவதே ஆனந்தம் (கோவிந்தா)

****

மார்ச் 31 திங்கட்கிழமை

கல்லு சக்கரே கொள்ளீரோ நீவெல்லரு

கல்லு சக்கரே கொள்ளீரோ

கல்லு சக்கரே சவி பல்லவரே பல்லரு

புல்ல லோசன ஸ்ரீ கிருஷ்ண நாமவெம்ப (கல்லு)

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு – நீங்க எல்லோரும்

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு

கற்கண்டை சாப்பிட்டவருக்கே தெரியும் (அது எவ்வளவு இனிமையென்று)

மலர்க் கண்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர் என்னும் (கற்கண்டு)

—Subham—

Tags- 2025 மார்ச் மாத காலண்டர், புரந்தரதாசர் ,கீர்த்தனைகள் ,பொன்மொழிகள்

Leave a comment

Leave a comment