London Swaminathan’s New book on TAMIL TIT BITS

London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in

Enjoy reading them.

Here is one of my latest books

முன்னுரை

பஸ்,ரயில் பயணத்தில் படிக்க சுவையான துக்கடாக்கள் என்பது புஸ்தகத்தின் தலைப்பு.  அது என்ன துக்கடா? என்று பலரும் வியக்கலாம். துக்கடா என்பது மராத்தி மொழிச் சொல். இதன் பொருள் துண்டுகள் ஆங்கிலத்தில் டிட்பிட்ஸ் TItbits என்றும் தமிழில் துணுக்குகள் என்றும் சொல்லலாம். இந்த தமிழ்த் துக்கடா நூலில் மறுபிறப்பு அதிசயம் , பல பிராமணர் கதைகள், பஞ்ச தந்திர நூல் தோன்றிய கதை, பரவிய கதை , பெண்கள் விஷயங்கள் மற்றும் பல குட்டிக்கதைகள் உள்ளன. பஸ், ரயில் பயணிகளுக்கு ஏற்ற துண்டு/ துக்கடா விஷயங்கள். எந்தத் தலைப்பிலும் படிக்கத் துவங்கலாம்; பொருளடக்கத்தைப் பார்த்தால் புஸ்தகம் என்ன என்பது புரிந்துவிடும், சப்ஜெக்ட் என்று சொல்லப்போனால் தமிழ், சம்ஸ்க்ருதம், சமயம், பண்பாடு, பொழுது போக்கு, மருத்துவம், ஜோக்குகள், எறும்பு, மருத மரம் முதலியன எல்லாம் வந்துவிடும்.

படித்து ரசியுங்கள்; கருத்துக்களை எழுதுங்கள்.

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

அக்டோபர் 2024

Swami_48 @yahoo.com

swaminathan.santanam@gmail.com

*****

பஸ்,ரயில் பயணத்தில் படிக்க சுவையான துக்கடாக்கள் title

பொருளடக்கம்

மறுபிறவி எடுத்த சிறுவன் : பாட்டியை மனைவி என, அழைத்த வினோதம்

கணக்கு வரவில்லை! கவிதை வந்தது! நான் கவிஞனாக மாறிய கதை — சரோஜினி நாயுடு

டாக்டர் வேலையை விட்டு, கவிதை எழுத வந்தவர்!

வாஜ்பாயி எழுதிய பஞ்சதந்திரக் கதைகள் உலகம் முழுதும் பரவியது எப்படி?-1

மயிலாப்பூர் பிராமணன் கதை, ஈரான் நாட்டுக்குப் போன சுவையான கதை!

முன்னோர்கள் பூமிக்கு இறங்கி வந்த இரண்டு அதிசய சம்பவங்கள்

தமிழர்களின் பழைய “கடி” ஜோக்குகள்!

சரகரும் சுஸ்ருதரும் என்ன எழுதினார்கள் ?

எல்லா ஜாதியினரும் சந்தியாவந்தனம்   செய்யலாம்- PART 1 !

எல்லா ஜாதியினரும் சந்தியாவந்தனம்   செய்யலாம்- PART 2 !

அதிசய பிராமணன்; பிராமண அதிசயம்!

உலகம் கெட்டுப் போனதற்கு பிராமணர்களே காரணம்?

கஞ்சக் கோமுட்டி, பேராசைப் பிராமணன் கதை

பிராம்மணோ போஜன ப்ரிய:

ஸங்கீதப் பேய்; பிராமணப் பேய்!

வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்’- ஒரு குட்டிக்கதை

கண்களுக்கு சூரியன், மனதுக்கு சந்திரன்,

நாக்குக்கு வருணன் கடவுள்

துர்க்கைக்கு ஏன் 10 கரங்கள் ?

நண்டு சாப்பிட்டால் குஷ்ட ரோகம் வரும்!

நாய் வாலும், நாய்ப் பாலும்! தமிழன் கண்டுபிடிப்பு!!

சிவனை வழிபட மூன்று மருத மரங்கள்

கடவுள் எங்கே இருக்கிறான் ? அப்பர், திருமுலர், கம்பர் பதில்

இந்து மதத்தில் எறும்பு – 1

கைகேயி எறும்புப் பெண்! கம்பன் சொல்லும் அதிசயக் கதை!! இந்து மதத்தில் எறும்பு – 2

இருதலைக் கொள்ளி எறும்பு! அப்பர் பெருமான் தவிப்பு!

தலைகீழாகக் காற்றில் நடந்த பெண்ணைக் காப்பாற்றிய நீதிபதி!

ஆசிரியரைப் பழிவாங்கிய நீதிபதி!

ஆண்களை விட பெண்களுக்கு சக்தி அதிகம்-சாணக்கியன்

கேட்பது பெண்கள் குணம்; வாங்கிக் கொடுப்பது ஆண்கள் கடமை!!!

கெட்ட மனைவியும் விஷப் பாம்பும்!

பெண்கள் 4 வகை- நாட்டிய சாஸ்திரக் கூற்று!

பெண்களின் அழகு எப்போது மறையும்?

வீண் பகட்டும், டம்பமும், ஆடம்பரமும் பெண்களுக்கே அதிகம்?

***********************

அட்டைப்படத்தில் எறும்பு, துர்கா, ப த கதை, பெண், பிராமணன், நாய், சரோஜினி நாயுடு , சூரியன்,

********

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title-  பஸ்,ரயில் பயணத்தில் படிக்க சுவையான துக்கடாக்கள்

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – October 2024

Subject – Culture and Entertainment

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 8500 articles in English and Tamil and 139 Tamil and English Books

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

*****

IF YOU WANT TO SEE ALL THE 137 BOOKS, PLEASE GO TO PUSTAKA.COO.IN

HOW TO READ OR DOWNLOAD OR GET PRINTED BOOKS?

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

சென்னை – சுவாமிமலை சாலையோரக் காட்சிகள் – Part 3 (Post 14,335)

Written by London Swaminathan

Post No. 14,335

Date uploaded in London –  1 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மார்ச் மாதம் (2025)  சென்னை முதல் கும்பகோணம் வரை  பயணம் செய்தபோது பார்த்த காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்

PART -3.

 Temple surrounded by DMK Flags

—-SUBHAM—

Tags- சென்னை – சுவாமிமலை,  சாலையோர, காட்சிகள் , Part 3

QUIZ சங்கரதேவ் பத்து QUIZ (Post No.14,334)

Written by London Swaminathan

Post No. 14,334

Date uploaded in London –  1 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சங்கரதேவ் 1449–1568

1.சங்கரதேவ் எங்கே, எப்போது பிறந்தார் ?

சங்கரதேவ் ஆலிபுகரி என்னும் அஸ்ஸாமிய கிராமத்தில் 1449-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர்- குசும்பர்  சிரோமணி  பூயன் ;

தாயின் பெய- சத்தியசந்த்யா

****

2.அவருடைய மனைவி பெயர் என்ன ?

அவர்  ஆம் வயதில் சூர்யபரீயைத் திருமணம் செய்துகொண்டார் . அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள்.

****

3.அவர் போதித்த கொள்கை என்ன?

அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில்  பின்பற்றப்படும் அவருடைய கொள்கை ஏக சரண தர்மம் எனப்படும்; இதன் பொரு ள் – கிருஷ்ணன் ஒருவரையே சரணம் அடைய வேண்டும் என்பதாகும்.

****

4.அவர் உருவாக்கிய கலைகள் சம்பிரதாயங்கள் என்ன ?

சத்ரியா – நடனக்கலை

சங்கீதம் – போர் கீத்

நாடகம் – அங்கியா நாட், பவோனா 

****

5.அவர் என்ன நூல்களை எழுதினார்

பாகவதத்தை அஸ்ஸாமிய மொழியில் எழுதினார்.

சிறு வயதிலேயே செய்யுட்களை எழுதி குரு தேவரை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தினார்;

அவர் எழுதிய நாடகங்கள், செய்யுட்கள் நூல்கள் –

ருக்மிணி ஹரணம்

ராம விஜயம்

கேலி கோபாலன்

காளீய தமனம்

அஜாமிள உபாக்கியானம்

கஜேந்திர பக்திப் ப்ரதீபம்

****

6.வர கீதம் என்பது என்ன?

அஸ்ஸாமிய மொழியில் அவர் பாடிய நாட்டுப் பாடல்கள் வர கீதம் எனப்படும். வர  கீதத்தின், மொழி, லயம், பாவம் சாதாரண மொழியிலிருந்து வேறுபட்டது; நீதிகள் நிறைந்தது; சங்கரதேவர் 249 சுமார் கீதங்கள் இயற்றினார்.

7. சங்கராதேவின் குரு யார் ? சங்கரதேவர் செய்த சாதனைகள் என்ன?

குரு– மஹேந்திர கண்டலி.

வெள்ளைப் பெருக்கெடுத்தோடும் பிரம்மபுத்ரா நதியைக் கடந்தது;

ஆசிரியர் சொன்னவுடன் கவி மழை பொழிந்தது ;

படகினை ஓங்கி கைகளால் குத்தி உடைத்தது;

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு தீர்த்த யாத்திரை செய்தது;

புதிய நாட்டிய, நாடக, இலக்கிய உத்திகளை உருவாக்கியது.

****

8.சங்கர தேவரின் சீடர் யார் ?

மாதவ தேவர் என்பவர் முக்கிய சீடர். ஒரு முறை சங்கர தேவரை கமலன் என்ற சிஷ்யன் வீட்டுக்கு அழைத்தான். அப்போது அவனது குடிசை தீப்பற்றி எரியவே சங்கர தேவர் கொண்டு சென்ற வர கீதச் சுவடிகளும் எரிந்து சாம்பலாயின உடனே மாதவ தேவரைப் பார்த்து நீ இயற்று என்றவுடன் அவர் பாடத் துவங்கினார் அந்த வகையில் மேலும் 189 வரகீதங்கள் உருவாயின.

****

9..ராமாயணத்தை அவர் பரப்பியது எப்படி?

ஸ்ரீ ராமனின் பாதங்களில் என் மனம் லயித்துவிட்டது என்ற சிறந்த பாடலை இயற்றினார். ராமாயணத்தையும் அவர் பாடல்களாகப்  பாடினார்.

****

10.அவர் எப்போது இறந்தார் ?

அவர் 120-ஆவது வயதில் பைலாதோவா என்னும் கிராமத்தில் புரட்டாசி மாதம் சுக்கில பட்ச துவிதீயை அன்று அமரர் ஆனார்.

–SUBHAM—

TAGS- சங்கர தேவ், அஸ்ஸாம், வரகீதம், சத்ரியா நடனம், கிருஷ்ணர், ஏக சரணம், , மாதவ தேவர்

சமர்த்த ராமதாஸர் – 1 (Post No.14,333)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,333

Date uploaded in London – –1 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

30-3-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞான மயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது

சமர்த்த ராமதாஸர் – 1

ச. நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.

ஶ்ரீ ராமரை தரிசித்து ராம பக்தியைப் பரப்பியதோடு ஹனுமாருக்கென பல கோவில்களை நிறுவியவரும் ஹிந்து ஸ்வராஜ்யத்தை நிறுவ சத்ரபதி சிவாஜிக்கு ஊக்கமூட்டியவரும் பெரும் மகானுமான சமர்த்த ராமதாஸரைப் பற்றி இன்று சிந்திப்போம்.

மஹராஷ்டிர மாநிலத்தில் சூர்யாஜி பந்த் என்பவருக்கும் ரேணுகா பாய் அம்மையாருக்கும் ஜம்ப் என்ற இடத்தில் 1608ம் ஆண்டு சமர்த்த ராமதாஸர் அவதரித்தார்.

அவரது இயற்பெயர் நாராயணன். இளவயதிலேயே அவர் ஶ்ரீ ராமரையும் ஹனுமானையும் வழிபட்டுத் துதிக்க ஆரம்பித்தார்.

இளவயதிலேயே ராம தியானத்தில் ஊறிய அவர் ஒரு நாள் அறை ஒன்றில் ராம தியானத்தில் மூழ்கி இருந்தார். அவரது தாயார் அவரிடம் என்ன செய்கிறாய் என்று கேட்ட போது ராமரை தியானிப்பதாகவும் உலக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார். அவரது தாயார் இந்த பதிலைக் கேட்டு வியந்தார். இதுவே அவரது வாழ்க்கைக் குறிக்கோளாக அமைந்தது.

இளவயதில அவருக்கு மணம் முடிக்க தீர்மானித்த அவரது பெற்றோர் அதற்கு ஏற்பாடு செய்தனர். திருமண சம்பிரதாயப்படி மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே ஒரு திரை தொங்க விடப்பட்டது. அப்போது திருமணத்தை நடத்தி வைக்கும் ஆசாரியர் ‘சாவ்தான்’ என்று கூறினார்.

‘சாவ்தான்’ என்ற சொல்லுக்கு ஜாக்கிரதை என்று பொருள்.

இதைக் கேட்ட ராமதாஸர் அந்த இடத்தை விட்டுக் கணப்பொழுதில் அகன்று ஓடினார்.

ராமதாஸர் பன்னிரெண்டு ஆண்டுகள் கோதாவரி நதிக் கரையில் நாசிக்கில் தங்கி இருந்தார். அதி காலையில் கோதாவரி நதியில் இடுப்பளவு நீரில் நின்று காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலானார்.

தினமும் வீதி வீதியாகச் சென்று பிட்சை கேட்டு அதை ஶ்ரீ ராமருக்கு முதலில் அர்ப்பணித்துப் பின்னர் தான் உண்பது அவரது வழக்கமானது.

வால்மீகி ராமாயணத்தை நன்கு கற்ற அவர் அதை முழுவதுமாக தன் கைப்பட எழுதினார். அந்த ஓலைச் சுவடிகள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.

ஶ்ரீ ராம் ஜய ராம் ஜயஜய ராம்  என்ற 13 எழுத்து மந்திரத்தை அவர் நாசிக்கில் உள்ள தபலி என்ற இடத்தில 13 லட்சம் தடவை ஜபித்து ராமரின் தரிசனத்தைப் பெற்றார்.

ராமரின் ஆணைப்படி எல்லா புனித தலங்களுக்கும் அவர் யாத்திரையை மேற்கொண்டார்.

ஒரு சமயம் விதவையான ஒரு பெண்மணியிடம், ‘நீ தீர்க்க சுமங்கலியாக இருப்பாய்’ என்று கூற அவளோ தனது கணவனின் இறந்த உடலைக் காண்பித்தாள். ராமதாஸர் அந்த உடலின் மீது நீரைத் தெளிக்க உடனே அவளது கணவன் உயிர் பெற்று எழுந்தான்.

இந்த சம்பவம் எங்கும் பரவி அவரது மகிமையை  உலகெங்கும் பறை சாற்றியது.

பண்டரிபுரத்திற்கு அவர் விஜயம் செய்யாது இருந்த போது ஒரு நாள் ஒரு அந்தண வேடத்தில் பண்டரிபுர விட்டலன் தன் கூட 300 பேரை அழைத்து அவரிடம் வந்து, ‘பண்டரிபுர விட்டலனை தரிசிப்பதில் அவருக்கு ஏதேனும் ஆட்சேபணை உண்டா’ என்று கேட்டார்.

ராமதாஸ், ‘இல்லை’ என்று கூறி அவருடன் பண்டரிபுரத்திற்குப் புறப்பட்டார். கோவிலை நெருங்கும் போது அந்த அந்தணர் மறையவே இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த ராமதாஸர் விட்டலனை தரிசிக்கச் சென்றார். அங்கே செங்கல்லின் மீது ஶ்ரீ ராமர் நிற்பதைக் கண்டு அதிசயித்தார்.

கிருஷ்ணர், ராமர் உள்ளிட்ட எல்லா அவதாரங்களும் ஒரே பரம்பொருளே என்று உணர்ந்த அவர்  பாண்டுரெங்கனின் புகழ் பாடினார்.

அங்கு பண்டரிபுரத்தில் அவரது சமகாலத்தவரான பெரும் மகான் துகாராமை அவர் சந்தித்தார்.

ராமர் அவரை கிருஷ்ணா நதிக்குச் சென்று சத்ரபதி சிவாஜிக்கு உதவி புரியுமாறு ஆணையிட உடனே அவர் அங்கு சென்றார்.

சத்ரபதி சிவாஜி அவரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம் உபதேசம் பெற்றார்; உத்வேகமும் பெற்றார்.

தனது ராஜ்யம் முழுவதையும் சமர்த்த ராமதாஸரிடம் அர்ப்பணித்த சிவாஜி மஹராஜ் அவரது ஏவலனாகத் தான் இருப்பதையே விரும்புவதாகத் தெரிவித்தார்.

ஒரு நாள் சிவாஜி ராமதாஸர் வீதி விதியாக பிட்சை எடுப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு ,‘ஒரு ராஜ்யமே உங்களுடையதாக இருக்கும் போது வீதி வீதியாகச் செல்வது ஏன்’ என்று ஒரு சீட்டில் எழுதி அதை தனது படைவீரரான பாலாஜியிடம் கொடுத்து இதை ராமதாஸரிடம் சென்று கொடுங்கள் என்றார்.

அந்த சீட்டைப் படித்துப் பார்த்த ராமதாஸர் மறு நாள் சிவாஜியை அழைத்தார். தன்னுடைய திருவோட்டை அவரிடம் கொடுத்து, ‘வாருங்கள், நாம் வீதி வீதியாகச் செல்வோம்’ என்றார்.

சதாரா நகரின் தெருக்களில் ராமதாஸரையும் சிவாஜியையும் இப்படிக் கண்ட மக்கள் ஆச்சரியமுற்று அவர்களை வணங்கி தங்கள் பிட்சையை அளித்தனர்.  பின்னர் நதிக்கரைக்குச் சென்ற ராமதாஸர் தான் பெற்றதை அங்கு சமைத்து உண்டார். அவருடன் சிவாஜியும் அந்த உணவை உண்டார்.

தனது பெயரால் அந்த சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும் என்று கூறிய ராமதாஸர் பகவா த்வஜத்தை அரசின் கொடியாக ஏற்றி அதை என்றும் காத்து வரவேண்டும் என்று அருளினார்.

இந்த சம்பவத்தினால் தான் பகவா த்வஜம் சத்ரபதி சிவாஜியின் ஹிந்து ஸ்வராஜ்ய த்வஜமாக ஆனது.

**