ரிக் வேதத்தில் தமிழ் சொற்கள்! (Post No.5392)

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

 

swami_48@yahoo.com

Date: 4 September 2018

 

Time uploaded in London – 6-34 am (British Summer Time)

 

Post No. 5392

 

TAMIL WORDS IN THE RIG VEDA

உலகின் மிகப்பழைய நூல் ரிக்வேதம். கி.மு 1700 முதல் கி.மு.6000 வரை பலராலும் தேதி குறிப்பிடப்பட்ட நூல். இந்துக்களைப் பொறுத்தமட்டில் இதன் பழமைக்காக மதிக்கவில்லை. வேதம் இன்றி இந்து மதம் இல்லை. இந்தப் பெருமைமிக்க நூலில் நிறைய தமிழ் சொற்கள் இருக்கின்றன. மொழியியல் விதிகளைப் பயன்படுத்திப் பார்த்தால் மறைந்திருக்கும் மேலும் பல தமிழ்ச் சொற்கள் மேலுக்கு வரும்.

 

எதற்காக இந்த ஆராய்ச்சி?

 

நிறைய பேர் ரிக் வேத ஸம்ஸ்க்ருதம் பழமையானது என்றும் அதற்குப் பின்னர் வந்த பாணினி-காளிதாசன் கால ஸம்ஸ்க்ருதம் வேறு என்றும் சொல்லுவர். ஓரளவுக்கு அது உண்மைதான். இது எல்லாப் பழைய மொழிகளுக்கும் பொருந்தும். பழங்கால தமிழ், ஆங்கிலம் ஆகிய எந்த மொழியின் பழைய இலக்கணமும் வேறு; சொற்களின் பொருளும் வேறு.

இவ்வளவு பழமை வாந்த நூலில் உள்ள சொற்களை நாம் இன்றும் பயன்படுத்துவது வியப்புக்குரிய விஷயம்!

 

இதோ சில தமிழ்ச் சொற்கள்:-

எண்கள் பற்றி:-

ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன. அடைப்புக்குறிக்குள் உள்ள எண்களில்முதலில் மண்டலம், பின்னர் மந்திரத் துதியின் எண், அதிலுள்ள மந்திர வரியின் எண் என்ற வரிசையில் கொடுத்துள்ளேன். இந்த எண்களை எடுக்க உதவிய நூல் பகவான் சிங்கின் ‘வேதிக் ஹரப்பன்ஸ்’ Vedic Harappans என்ற நூலாகும்.

 

உஷ் ட் ர – ஒட்டகம் (ரிக். 1-138-2; 8-5-37;8-6-48)

கர்தப- கழுத (ர=ல)/ கழுதை (1-29-5; 3-53-23)

காகம்பிர- காகம் (6-48-17)

மயூர- மயில் (1-191-4; 3-45-1; 8-1-25)

சிம்ஹ- சிங்கம் (5-44-1)

உட்ச- ஊற்று (2-16-7)

கூப – கூவம்/ கிணறு 1-105-17

குல்யா – குளம் , கால்வாய்

நீர் – நீர்

பூமி-புவி 2-14-7

யூப – 5-2-7 சங்கத் தமிழ்

புஷ்ப/ பூ – அதர்வ 8-712

பலி- 1-70-9

மது- தேன் 1-90-6

மத்ஸ்ய/ மச்ச – 10-68-8

ரத்ன- 1-20-7

ரஜ்ஜுப் பொருத்தம் – ரஜ்ஜு 1-162-8

ராஜசூயம்- அதர்வ – 4-8-1

புறநானூற்றின் அடிக்குறிப்பில் ராஜசூயன் வேட்ட பெருநற்கிள்ளி என்ற பெயர் உள்ளது

சங்கு- அதர்வ 4-10-1

களம்- நெல் அடிக்கும் களம் (10-48-7)

XXXX

 

சில சொற்களை அப்படியே தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தியுள்ளனர். அது ரிக்வேத காலம் முதல் இன்று வரை புழக்கத்தில் இருப்பதும் வியப்புக்குரிய செய்தி. இதோ சில சொற்கள்:

 

ரிஷபம் (6-16-47) (இடபம்/விடை – தேவாரத்தில்

வாரணம் (யானை) – ஆண்டாள் வாரணம் ஆயிரம்

கபி/கவி – குற்றாலக் குறவஞ்சி (10-86-5)

கோ (3-1-23)- கோவலன்/ கோபாலன் சிலப்பதிகாரம்

xxx

இன்னும் சில சொற்கள் சர்வ சாதாரணமாக பேச்சு வழக்கிலும் பத்திரிக்கைகளிலும் புழக்கத்தில் இருக்கின்றன.

ஸர்ப- சர்ப்பம்/பாம்பு (10-16-6),serpent

ம்ருக (மான்) – மிருகம்

மேஷ- மேட ராசி/ மேஷராசி

வராக – வராஹ அவதாரம்

ஹம்ச- அன்னம் (2-34-5)

ஆரண்யப் பசு – காட்டு மிருகம்/ எருமை (10-90-8) ;ஆரண்யம் (காடு) என்ற சொல் வேதாரண்யம் முதலிய ஊர்ப்பெயர்களில் காணப்படும்

பாச (கயிறு)- 2-27-16)

பஹு அன்ன – நிறைய உணவு

 

(பஹு என்பது தமிழில் வெகு என்று மாறும் (ப=வ)

அன்னம் – உணவு இப்பொழுதும் புழக்கத்தில் உள்ள சொல் – அன்ன தானம்

அங்குச- அங்குசம் (8-17-10)

 

கச (கசையடி)- (5-83-3)

தண்ட – தடி (8-33-6)

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் – தமிழ்ப் பழம்ழொழி

 

பந்தன – கட்டுதல் (5-12-4); ரக்ஷா பந்தன்

தான்ய – தானியம் (5-53-13)

பீஜ – விதை (ப=வ) (5-53-13)

சகன் – சாணம் (அதர்வண வேதம் 3-14-4)

வது/ பெண்5-37-3

ஸ்வப்ன – சொப்பனம் – 2-28-10

வசனம், வாக்கியம், வார்த்தை

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது?

ரிக் வேதம் என்பது உலகிலேயே பழைய நூலாக இருந்தாலும் அவற்றிலுள்ள சொற்களை இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். நான் கொடுத்த எடுத்துக் காட்டுகள் தவிர நூற்றுக் கணக்கான சொற்கள் உள்ளன. இன்னும் ஆங்கிலத்தில் நமக்குத் தெரிந்த சாதாரன சொற்களையும் ஒப்பிட்டால் அடுத்த நிமீடமே நமக்கு ஏறத்தாழ ஆயிரம் ரிக்வேதச் சொற்கள் தெரிந்து விடும். முப்பதுக்கும் மேற்பட்ட ஆங்கில, ஜெர்மானிய, பிரெஞ்சு அறிஞர்கள் வேதங்களைப் பற்றி எழுதியுள்ளனர். இப்படி வெளிநாட்டுக்காரர்களே வேதத்தைப் படிக்க இயலுமானால் நம்மால் முடியாதா? இதை உணர்ந்து அனைவரும் முறையாக வேதத்தைப் பயிலல் வேண்டும்.

நிற்க

 

நான் ஒரு புதிய கருத்தை வெளியிட்டு வருகிறேன். பரஞ்சோதி முனிவர்கள் முதலானோர் மறைமுகமாக வெளியிட்ட கருத்து அது. அதாவது தமிழும் ஸம்ஸ்ருதமும் சிவ பெருமானின் உடுக்கையின் இரண்டு பக்கங்களில் இருந்து பிறந்தன. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரு தாயின் இரண்டு பிள்ளைகள்.

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்

தொடர்புடைய தென்மொழியைஉலகமெலாம் தொழுதேத்தும்

குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்

கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்

 

–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

கடவுள் தந்த தமிழ்

வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி

நிழற்பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் சங்கண்

தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் (கம்ப இராமா.ஆரணி. அகத்தி.41)

 

 

அவ்வாறில்லாவிடில் சிவ பெருமான், அகத்தியனை வடக்கிலிருந்து அனுப்பித் தமிழுக்கு இலக்கணம் செய்யக் கேட்டிருக்க மாட்டார். இந்த இரண்டு மொழிகளுக்குள்ள தொடர்பு போன்ற நெருக்கம் வேறு எந்த மொழிக்கும் இடையில் காண முடியாதது. சந்தி இலக்கணம், வேற்றுமை உருபுகள் முதலிய பல அம்சங்களில் இரண்டும் ஒன்றே!

வாழ்க தமிழ்! வளர்க ஸம்ஸ்க்ருதம்!!

 

–subham–

 

 

 

கம்போடியாவில் கந்தன், காமராஜ்! (Post No.5383)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 1 September 2018

 

Time uploaded in London – 9-09 am (British Summer Time)

 

Post No. 5383

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

கந்தன், காமராஜ் பொன்ற பெயர்கள்  தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாகக் காணப்படும்  பெயர்கள்;  இந்தப் பெயர்கள்  ஸம்ஸ்ருதச் சொற்கள் என்றாலும் தமிழ்நாட்டில் நிறைய புழக்கத்தில் உள்ளது. இந்தப் பெயர்களும்  ஏனைய சில பெயர்களும் கம்போடியா நாட்டிலும் உள்ளன.  இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு நிலவிய தமிழர்களின்  செல்வாக்கைக் காட்டும்.

 

லண்டன் (SOAS) பல்கலைக்கழகத்தில் சீனியர் விரிவுரையாளராக வேலை செய்த ஜூடித் ஜாகப் (CAMBODIAN LINGUISTICS, LITERATURE AND HISTORY BY JUDITH JACOB AND EDITED BY DAVID A SMYTH) எழுதிய புஸ்தகத்தை நான் ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் இதோ:

 

ஒரு கல்வெட்டில் ‘மே கந்தன், தா கந்தன், கு கந்தன்’ என்று வருகிறது – இதன் பொருள் கந்தனின் தாய், கந்தனின் தந்தை, அவர்களுடைய மகன் கந்தன் என்பதாகும்.

 

(வா என்பது திரு, கு என்பது குமாரி அல்லது திருமதி)

 

கம்போடியா, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் நாட்டுப்புற கதைகளில் தனஞ்ஜயன் (அர்ஜுனனின் பெயர்) மிகவும் அடிபடும். கிட்டத்தட்ட தெனாலிராமன் கதைகள் போல பல நிகழ்ச்சிகள் இருக்கும்.

 

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் ‘தாக்கு அணங்கு’ கம்போடிய கதைகளிலும் உண்டு . காடு, மலை, மரம், ஏரி, குளம் ஆகியவற்றை ஆக்ரமிக்கும் பிரம்ம ராக்சஸ் போன்றவை அணங்கு என்னும் தேவதைகள்

 

ஒரு நாட்டுப்புற கதையிலும் கந்தன் வருகிறான்.

 

இதோ அந்தக் கதை:-

பிரம்ம தத்தன் என்ற அரசனின் மனைவி பெயர் காக்கி. (கார்கி என்பவள் உபநிஷத்தில் வரும் புகழ்பெற்ற பெண்மணி). கருடர்களின் அரசனுடன் ராஜா, சதுரங்கம் விளையாடுவான். அவன் காகியைக் காதலிக்கத் துவங்கினான். அரசனுக்குத் தெரியாமல் காதல் சமிக்ஞைகளைச் செய்வான். அவளும் காதல் வலையில் விழுந்தாள். ஒருநாள் கருட அரசன் ஒரு புயலை உருவாக்கி, எல்லோரும் பயந்துகொண்டு இருந்த சம்யத்தில் ராணியை அணுகி தன்னுடைய நாட்டுக்கு வரும்படி வலியுறுத்தினான். அரசனுக்கு நடந்தது தெரியாது. புயல் ஓய்ந்த பின்னர் கருட அரசன் வழக்கம்போல சதுரங்கமாட வந்தான். அரசனுக்கு அவன் மீது சந்தேகம் ஏற்படவே தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதி கந்தனை அழைத்து ஒரு பூச்சி ரூபத்தில் கருடனுன் போய், ரஹஸியத்தை அறிந்து வா என்று அனுப்பினான்

அங்கே கந்தனும் காக்கியைக் காதலித்தான்; பின்னர் திரும்பி வந்தான்; மறு நாளன்று வழக்கம்போல கருட ராஜா ‘செஸ்’ விளையாட வந்தபோது யாழ் வாத்தியத்தையும் வாசித்தனர். அப்போது காக்கியின் வேசித்தனத்தையும் ஏசினர் (கந்தனும் அவனுடைய ராஜா பிரம்மத்ததனும்).

 

கருட ராஜாவுக்குக் கோபம் வரவே அவளைத் திருப்பிக் கொண்டுவந்து விட்டான். பிரம்மதத்தனும் அவள் மீது கோபம் கொண்டு ஒரு படகில் வைத்து நதியில் அனுப்பிவிட்டான்.

 

இந்தக் கதையிலும் கந்தன் என்ற பெயர் தமிழ் வழக்குப்படி ‘கந்தன்’ என்றே வருகிறது; ‘ஸ்கந்த’ என்பது ஸம்ஸ்க்ருத மூலம்.

காமராஜ், அருண்ராஜ்

 

மற்றொரு கதையில் காமராஜ், அருண்ராஜ் என்ற பெயர்கள் வருகின்றன. இன்னொரு கதையில் கிருஷ்ணகுமார், சுவண்ண (ஸ்வர்ண) குமார் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.

 

ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்றபோதிலும் அவை தமிழர் பயன்படுத்தும் வடிவத்தில் இருப்பது தமிழ் மொழியின் தாக்கத்தைக் காட்டுகிறது.

 

 

 

 

அடிமைகளின் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்

 

அங்கோர் ஆட்சிக்கு முந்தைய கம்போடியாவில் (Pre-Angkhor) படித்த மக்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களையே பயன்படுத்தினர். அப்படிப்பட்ட பெயர்கள் அடிமைகளாக இருந்தவர்களிடமும் காணப்படுகின்றன. ‘வசந்த மல்லிகா’ என்பது ஒரு அடிமைப் பெண்ணின் பெயர்.

 

அடிமைகள், நாம் பயன்படுத்தும் பலசரக்கு சாமான்களைப் போல,

நடத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் எப்படி அடிமை ஆயினர் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது.

 

கோவிலுக்கு தானம் செய்யும் போது இத்தனை அரிசி மூட்டை அல்லது நிலம், இத்தனை அடிமை என்று எழுதப்பட்டது.

 

 

இந்தியாவில் காணப்படும் கல்வெட்டுகளைப் போலவே, கம்போடியக் கல்வெட்டுகளில் பின்வரும் தகவல்கள் இருக்கின்றன:

 

1.ஆளும் அரசனின் பெயர் அல்லது ஆண்டு;

2.தானம் செய்வோரின் பெயர்கள், பதவி;

3.எந்தக் கடவுளுக்கு தான்ம்

4.யார் யார் கொடுத்ததை அறக்கொடைக்கு எழுதுகின்றனர்.

5.அறக்கொடைக்காக அப்படி நிலத்தை விட்டுக் கொடுத்தோருக்கு என்ன நஷ்ட ஈடு அளிக்கப்பட்டது;

6.தானம் செய்யப்பட்ட நிலங்களின் பரப்பு

7.நிலத்துடன் தானம் செய்யப்பட அடிமைகளின் பெயர், அவர்கள்

செய்யப் போகும் வேலை;

8.குருமார்களுக்கான ஊதியம்

9.அறக்கொடை நிறுவனங்களுக்கு இத்தோடு கூடுதலாகத் தரப்படும் நந்தவனம், கடை முதலியன.

10.கொடுக்கப்படும் வேறு விலையுயர்ந்த பொருட்கள்

11.வருவாயை என்ன செய்வது, எப்படிச் செலவிடுவது;

12.எவரேனும் இந்த தானத்துக்குப் பாதகம் செய்தால் அவருக்குக் கிடைக்கும் தண்டனை.

இந்தக் கல்வெட்டு அமைப்பும் இந்தியாவின் செல்வாக்கைக் காட்டுகிறது. தமிழ்க் கல்வெட்டுகளும் இதே வரிசையில் விஷயங்களைத் தருகின்றன.

 

–சுபம்–

30 வெற்றிவேற்கை மேற்கோள்கள் (Post No.5378)

COMPILED BY LONDON SWAMINATHAN

Date: 30 August 2018

 

Time uploaded in London – 13-02 (British Summer Time)

 

Post No. 5378

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

செப்டம்பர் 2018 காலண்டர்; விளம்பி வருஷம் ஆவணி-புரட்டாசி

 

30 வெற்றி வேற்கை மேற்கோள்களும் ஆங்கிலத்தில் இம்மாத ஆங்கிலக் காலண்டரில் கொடுக்கப்பட்டுள்ளன. அதிவீர ராம பாண்டியனால் இயற்றப்பட்டவை.

 

பண்டிகை நாட்கள்: செப்.2 கிருஷ்ண ஜயந்தி/ ஜன்மாஷ்டமி;

5 ஆசிரியர் தினம்; 11 பாரதி நினைவு தினம்; 13 விநாயக சதுர்த்தி/ பிள்ளையார் சதுர்த்தி; 25- மாளயபக்ஷம் ஆரம்பம்

 

அமாவாசை -9; பௌர்ணமி- 24; ஏகாதஸி- 6, 20

முகூர்த்த நாட்கள்- 6, 12

 

செப்டம்பர் 1 சனிக்கிழமை

 

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்

 

செப்டம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை

 

கல்விக்கழகு கசடற மொழிதல்

 

செப்டம்பர் 3 திங்கட்கிழமை

செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்

 

செப்டம்பர் 4 செவ்வாய்க்கிழமை

வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்

 

செப்டம்பர் 5 புதன்கிழமை

மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை

 

செப்டம்பர் 6 வியாழக்கிழமை

வணிகர்க்கழகு வளர் பொருளீட்டல்

 

செப்டம்பர் 7 வெள்ளிக்கிழமை

உழவர்க்கழகு ஏர் உழுதூண் விரும்பல்

 

 

செப்டம்பர் 8 சனிக்கிழமை

மந்திரிக்கழகு வரும்பொருளுரைத்தல்

 

செப்டம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை

தந்திரிக்கழகு தறுகண் ஆண்மை

 

 

செப்டம்பர் 10 திங்கட்கிழமை

உண்டிக்கழகு விருந்தோடுண்டல்

 

செப்டம்பர் 11 செவ்வாய்க்கிழமை

பெண்டிர்க்கழகு எதிர்பேசாதிருத்தல்

 

செப்டம்பர் 12 புதன்கிழமை

குலமகட்கழகு தன் கொழுநனைப் பேணுதல்

 

செப்டம்பர் 13 வியாழக்கிழமை

அறிஞர்க்கழகு கற்றுணர்ந்தடங்கல்

 

செப்டம்பர் 14 வெள்ளிக்கிழமை

வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை

 

செப்டம்பர் 15 சனிக்கிழமை

தேம்படு பனையின் திரள் பழத்தொரு விதை
வானுற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க்கிருக்க நிழலாகாதே (வெற்றி வேர்க்கை)

 

தெள்ளிய வாலின் சிறு பழத்தொரு விதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயயினும் அண்ணல் யானை

அணிதேர்ப் புரவி ஆள் பெரும்படையொடு

மன்னர்க்கிருக்க நிழலாகும்மே

நறுந்தொகை (வெற்றி வேற்கை)

 

செப்டம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

 

செப்டம்பர் 17 திங்கட்கிழமை

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்

 

செப்டம்பர் 18 செவ்வாய்க்கிழமை

பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்

 

செப்டம்பர் 19 புதன்கிழமை

உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்

 

 

செப்டம்பர் 20 வியாழக்கிழமை

கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்

 

செப்டம்பர் 21 வெள்ளிக்கிழமை

அடினும் ஆவின் பால் சுவை குன்றாது

 

செப்டம்பர் 22 சனிக்கிழமை

 

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

 

செப்டம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை

 

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

 

செப்டம்பர் 24 திங்கட்கிழமை

 

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

 

செப்டம்பர் 25 செவ்வாய்க்கிழமை

 

கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை

 

செப்டம்பர் 26 புதன்கிழமை

அடினும் பால்பெய்துகைப் பறாது பேய்ச்சுரைக்காய்

 

செப்டம்பர் 27 வியாழக்கிழமை

 

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை

இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே

 

 

செப்டம்பர் 28 வெள்ளிக்கிழமை

 

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை

நீர்மேல் பாசிபோல் வேர் கொள்ளாதே

 

 

செப்டம்பர் 29 சனிக்கிழமை

 

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

 

 

செப்டம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை

 

சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம்

பெரியோராயின் பொறுப்பது கடனே

–subham–

வாஸ்து சாஸ்திரம்- ஸ்ரீ கணபதி ஸ்தபதி! (Post No.5341)

WRITTEN BY S NAGARAJAN

Date: 20 August 2018

 

Time uploaded in London – 5-50 AM (British Summer Time)

 

Post No. 5341

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

ஹிந்து உன்னதம்

 

வாஸ்து சாஸ்திரத்தை உன்னத நிலைக்கு ஏற்றிய ஸ்ரீ கணபதி ஸ்தபதி!

 

ச.நாகராஜன்

 

 

 

வாஸ்து சாஸ்திரம் ஹிந்து வாழ்க்கை முறையின் உன்னத சாஸ்திரங்களுள் ஒன்று.

 

பூவுலகில் பிறந்தோர் அனைவரும் தங்கள் வாழ்க்கையைத் திறம்பட சிறப்பாக அமைத்துக் கொள்ள வைக்கும் இந்த சாஸ்திரம் காலம் காலமாக விஸ்வகர்மா குலத்தினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 

 

இந்த குலத்தில் பிறந்து இந்தக் கலையின் உண்மையை உலகெங்கும் பறை சாற்றியவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ஸ்ரீ கணபதி ஸ்தபதி ஆவார்.

 

1927ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி பிள்ளையார் பட்டியில் வைத்தியநாத சிற்பிக்கும் வேலம்மாளுக்கும் மகனாகப் பிறந்த கணபதி ஸ்தபதி தன் முன்னோர்களின் பாதையில் சென்று வாஸ்து கலையைச் செவ்வனே பயின்றார்.

இவரது முன்னோர்களில் ஒருவரான ராஜ ராஜ பெருந்தச்சன் பத்தாம் நூற்றாண்டில் மாமன்னன் ராஜ ராஜ சோழனின் வேண்டுகோளுக்கு இணங்க பெரிய கோயிலை – பிரஹதீஸ்வரர் ஆலயத்தை – சிற்ப சாஸ்திரத்திற்கேற்ப அமைத்தவர்.

வாஸ்து சாஸ்திரத்தைத் தன் தந்தையாரிடமிருந்தும் தனது மாமா செல்லக்கண்ணு ஸ்தபதியிடமிருந்தும் இவர் பயின்றார்.

மாமல்லபுரத்தில் உள்ள கட்டிடம் மற்றும் சிற்பக் கலைக்கான அரசுக் கல்லூரியில் 27 வருடங்கள் தலைமைப் பொறுப்பை ஏற்று  திறம்பட அதை நடத்தி வந்தார்.

 

 

சிற்பக் கலை நலிவடைந்திருந்த நிலையில் அதைக் காத்து அதன் சிறப்புக்களை உலகிற்கு உணர்த்த வேண்டிய கால கட்டத்தில் வாழ்ந்த அவர் இதை சவாலாக ஏற்று வாஸ்து சாஸ்திரத்தின் மாண்பை காலத்திற்கேற்ப புதிய உச்சத்தில் ஏற்றினார்.

1988இல் பணி ஓய்வு பெற்ற பின்னர் வாஸ்து சாஸ்திரத்தின் மூலநூல்களையும் முறைகளையும் ஆராய்ந்து அதற்காக வாஸ்து வேத ஆய்வு மையத்தையும் அமைத்தார்.

 

ஏராளமான கோவில்களை புராதன சாஸ்திரம் சற்றும் வழுவாது அமைத்தார்; பெரும் புகழைப் பெற்றார்.

 

இவரது அரிய சாதனையைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு இவருக்கு 2009ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதை வழங்கிக் கௌரவித்தது. இன்னும் பல விருதுகள் இவரைத் தேடி வந்தன.

 

இவரது நுட்பமான திறமையை உலகில் உள்ள அனைவரும் மதித்தனர். அமெரிக்காவில் சிகாகோ, வாஷிங்டன் டி.சி. (சிவா – விஷ்ணு கோவில்), கெண்டுகி, போஸ்டன்,பால்டிமோர், சான்பிரான்ஸிஸ்கோ, ஹவாய் (சமரச சன்மார்க்க இறைவன் கோவில்) ஆகிய இடங்களில் கோவில்களை அமைக்க இவரை அங்குள்ளோர் அழைத்தனர். அவரும் இதை ஏற்று கோவில்களை சிற்ப சாஸ்திர முறைப்படி வடிவமைத்தார்.

 

பிரிட்டன், சிங்கப்பூர், மலாசியா, மரிஷியஸ், சீஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கோவில்களையும் வடிவமைத்தவர் இவரே.

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை,சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகம், ஹைதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை,முதல் சிற்பியான மயனுக்கு மாமல்லபுரத்தில் சிலை உள்ளிட்டவை இவரது மதிநுட்பத்தாலும் கைவண்ணத்தாலும் ஏற்பட்டவையே.

 

 

ஏராளமான வாஸ்து சாஸ்திர நூல்களை எழுதியுள்ள இவர் குறிப்பிடும் பழைய புராதன ஹிந்து சிற்ப சாஸ்திர நூல்கள் பல.

மானசாரம் குறிப்பிடும் 32 நூல்களின் பட்டியலை இவர் தந்துள்ளார்:

 

விஸ்வகர்மீயம், விஸ்வம், விஸ்வசாரம், ப்ரபோதம், விருத்தம்

மயமதம், த்வஷ்டா தந்த்ரம், மனுசாரம்,நலம், மானவிதி,

மானகல்பம், மானஸாரம், பேஹுஸ்ருதம், ஸ்ருஷ்டம், மான போதம்,

 

விஸ்வ போதம், ஆதிசாரம், விசாலாக்ஷம்,

விஸ்வகாஸ்யபம், வாஸ்து போதம்,

 

மஹா தந்த்ரம், வாஸ்து வித்யாபதி, பராசரீயகம்,

காலயூபம்,

 

சைத்யம், சித்ரம், ஆவர்யம், சாதக சார சம்ஹிதா,

பானுமதம்,  இந்த்ர மதம், லோகாகுவம், சௌரம்

ஆகியவை குறிப்பிடத் தகுந்த நூல்களாகும்.

 

 

மனுசாரம் குறிப்பிடும் 18 நூல்கள் சிறப்பானவை:

 

ஈஸானம், சித்ர காயபம், ப்ரயோக மஞ்சரி, பெருஹிதம்,

புத்த மதம், கௌதமம், குலாலம், வாசிஷ்டம்,

மனோகல்பம், பார்கவம், மார்கண்டம், கோபாலம்,

நாரதீயம், நாராயணீயம், கஸ்யபம்,

சித்ரயாமளம்,

சித்ரஹாஹுல்யம், தேசிகம்

 

 

இது தவிர கீழ்க்கண்ட முக்கியமான நூல்களும் உள்ளன:

 

வாஸ்து வித்யா, மனுஷ்யாலய சந்த்ரிகா,

சாரஸ்வதீய சித்ர கர்மா சாஸ்த்ரம்,

ப்ராஹ்மீய சித்ரகர்ம சாஸ்திரம்

சகலாதிகாரம்,சில்ப ரத்னம்,

சனத் குமார வாஸ்து சாஸ்த்ரம்,

சில்ப ரத்னாகரம், சர்வார்த்த சில்ப சிந்தாமணி

 

வட இந்திய சிற்பிகளால் பயன்படுத்தப்படும் நூல்கள்:

 

வாஸ்து ராஜவல்லபம், சமராங்கன சூத்ரதாரம்,

ரூப மண்டனம்,

கோதண்டமண்டனம், சில்ப ப்ரகாசா, அபராஜிதா,

ப்ருச்சா, ப்ரதிமா, மான லக்ஷ்ணம், க்ஷீர நவம்,

தீபார்னவம்.

இவ்வளவு நூல்களையும் படித்தால் வாஸ்து விஞ்ஞானத்தின் பெருமையும் உண்மையும் புலப்படும்

 

 

தனது ஆராய்ச்சி வன்மையால் கணபதி ஸ்தபதி அடைந்த அதிசயமான அனுபவங்கள் ஏராளம். அதை அவரே எழுதியுள்ளார்.

காஞ்சி பரமாசார்யருடனான அவரது அனுபவங்கள் சிலிர்க்க வைப்பவை.

வாஸ்து சாஸ்திரம் விஞ்ஞான பூர்வமான ஒன்று என்பதை அவர் Vastu Shastra – A Scientific Treatise என்ற தனது நூலில் விளக்கியுள்ளார்.

 

நிறைவாழ்வு வாழ்ந்து 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  5ஆம் தேதி அவர் இறைவனடி சேர்ந்தார்.

 

அவரது அதிசய அனுபவங்களையும், அவர் விளக்கும் நுட்பமான கருத்துக்களையும் இன்னொரு கட்டுரையில் காண்போம்.

***

தமிழர்களின் பழக்க வழக்கங்கள்! (Post No.5315)

Written by S Nagarajan

Date: 13 August 2018

 

Time uploaded in London – 7-55 AM  (British Summer Time)

 

Post No. 5315

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சங்க இலக்கியத்தில் காணப்படும் தமிழர்களின் பழக்க வழக்கங்கள்!

 

ச.நாகராஜன்

 

பழம் பெரும் இலக்கியமாக இலங்கும் சங்க இலக்கியம் தமிழர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றிய பல சுவையான செய்திகளைத் தருகிறது.

 

இவற்றை பகுத்தறிவு நோக்கோடு பார்க்கக்கூடாது; அறிவியல் உரைகல்லில் உரைக்கக் கூடாது.

இவை தமிழர்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்; அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்கள் வாழ்வு சிறந்து விளங்கியது.

சில அரிய வழக்குகளின் பட்டியல் கீழே தரப்படுகிறது.

 

குடவோலை எடுத்துப் பிரமாணம் செய்தல்

 

நுளைச்சியர் சுறவுக்கோடு நட்டு வருணனுக்குப் பரவுக்கடன் கொடுத்தல்

 

பார்ப்பார் தூது செல்லுதல்

 

மகளிர் சுவரில் கோடிட்டு நாள் எண்ணுதல்

 

மகளிர் பல்லி சகுனம் கேட்டல்

 

பிறை தொழுதல்

 

வேங்கை மலர் கொய்ய புலி புலி என்று கூவல்

 

சிறுமியர் அலவனாட்டுதல்

 

கிளி கடிதல்

 

 

வண்டலயர்தல்

 

சிற்றில் இழைத்துச் சிறு சோறடுதல்

 

ஓரையாடுதல்

 

மன்னர் கடகுக்காரரை அழைத்துப் படை காணுதல்

 

வீரர் போருக்குப் புறப்படுமுன் நடுகல்லைப் பூசித்தல்

 

நல்ல நிமித்தம் பார்த்தல்

 

வேளாப்பார்ப்பான் சங்கறுத்தல்

 

கொங்கர் மணியரை ஆர்த்து மறுகின் ஆடுதல்

 

மணமகளைப் புதல்வர் பெற்ற மகளிர் நால்வர் குளிப்பாட்டல்

 

இடையர் இடபத்தின் கழுத்தில் மூங்கில் குழாயில் உணவடைத்துக் கட்டி நிரை மேய்த்துச் செல்லல்

 

இறந்த வீரனுக்குரிய நடுகல் இடத்து அவன் பிடித்த வேல் முதலிய கருவிகளை ஊன்றியும் சார்த்தியும் வைத்தல்

உமணர் கழுதை மேல் உப்புப் பொதியை ஏற்றிச் செல்லல்

 

மேற்கண்டவை பாடல்களில் காணப்படும் செய்திகள்.

தமிழர் தம் பழம் இலக்கியங்களில் இப்படி அரிய செய்திகள் ஏராளம்  காணப்படுகின்றன.

 

மங்கையர் நெற்றியில் திலகம் இடும் பழக்கம் தொன்று தொட்டு பாரத நாடெங்கும் நிலவி வரும் பழக்கம்.

 

தமிழ் மங்கையரும் இதற்கு விலக்கல்ல. ஹிந்து மதத்தின் சிறப்புக்களில் இது ஒன்று. அடையாளங்களிலும் இது முக்கியமான ஒன்று.

 

பத்துப்பாட்டு நூல்களில் முதலாவதாக அமையும் திருமுருகாற்றுப்படையில் வரும் வரி இது:

 

திலகம் தைஇய தேங்கமழ்  திருநுதல் (திருமுருகாற்றுப்படை வரி 24)

 

நுதல் என்றால் நெற்றி. அது தேங்கமழ் திரு நுதல் ஆவது எப்போது? திலகம் இடும் போது!

 

நற்றிணையில் வரும் பாடல் வரி இது:

 

திலகம் தைஇய தேங்கமழ் திரு நுதல் (நற்றிணை 62 -6)

திருமுருகாற்றுப்படையில் காணப்படும் அதே வரி தான் இது.

 

கம்பன் சீதையை வர்ணிக்கும் போது வனிதையர் திலகம் என்கிறான். ஆக திலகம் என்பதை சிறப்புப் பட்டமாகப் பயன்படுத்த வழி கண்டவன் கம்பன்.

 

பின்னால் நமது நாளில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்; நடிகையர் திலகம் சாவித்திரி என்று பல திலகங்களைக் காண முடிகிறது.

 

திலகம் திருநுதலின் அலங்காரம்; மங்கலப் பொருள்; அழகையும் சிறப்பையும், மங்கலத்தையும் கூட்டுவது.

ஆகவே அதை சிறந்தவர்களின் பட்டப் பெயரில் இடம் பெறச் செய்து விட்டோம்!

 

கணவன் உடனுறைந்து இருக்கும் காலத்தில் மட்டுமே மகளிர் பூச்சூட்டுவர் சங்க காலத்தில். அவன் வெளியிடம் சென்றாலோ பூவைச் சூட்ட மாட்டார்.

 

ஐங்குறுநூறு தரும் வரி இது:

போதவிழ் கூந்தலும் பூ விரும்புகவே (ஐங்குறுநூறு  496-5)

நற்றிணையில் வரும் வரிகள் இவை:

மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇச்

சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய (நற்றிணை 42:8,9)

 

 

இதுமட்டுமன்றி மகளிர் காதில் பூவும் தளிரும் செருகிக் கொள்வர்.

இதை விளக்கும் பாடல் வரிகள் வருமாறு:-

 

வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்  (திருமுருகாற்றுப்படை வரி 31)

செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினள் (திருமுருகாற்றுப்படை வரி 207)

 

திருமணத்தின்போது மணமகன் மணமகள் கூந்தலில் மலர் சூட்டுவது வழக்கம். இதை ஐங்குறுநூறு கூறுகிறது.

நன்மனை வதுவை அயர இவள்

பின்னிருள் கூந்தல் மலர் அளிந்தோயே (ஐங்குறுநூறு 294 – 4,5)

 

கணவன் இறந்து விட்டால் கைம்மை அடைந்த மகளிர் பூச்சூட்ட மாட்டார்கள்.

 

இது பற்றிக் கூறும் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போம்:

 

ஒண்ணுதல் மகளிர் கைம்மை கூர

அவிர் அறல் கடுக்கும் எம்மென்

குவையிரும் கூந்தல் கொய்தல் கண்டே (புறம் 25; 12-14)

 

கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய (புறம் 261: 17-18)

 

மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வரை (புறம் 280:1)

 

புலி புலி என்று கூவி அச்சுறுத்தினால் வேங்கை மரம் தாழும் என தமிழ் மகளிர் நம்பினர். அப்படிக் கூவி அது தாழும் போது மலர்களைக் கொய்வது அவர்கள் வழக்கம்.

 

இதை விளக்கும் பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன:

ஏறாது இட்ட ஏமம் பூசல் (குறுந்தொகை 241:5)

 

ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழிப்

புலிபுலி என்னும் பூசல் தோன்ற (அகநானூறு 48:6-7)

 

பொன்னேர் புதுமலர்  வேண்டிய குறமகள்

இன்னா இசைய பூசல் பயிற்றலின் ….

… ஆகொள் வயப்புலி ஆகும் அஃதென  (அகநானூறு 52:3-6)

கருங்கால் ஏங்கை இருஞ்சினைப் பொங்கர்

நறும்பூக் கொய்யும் பூசல்  (மதுரைக்காஞ்சி 296-297)

 

தலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை

மலைமார் இடூஉம் ஏமப் பூசல் ( மலைபடுகடாம் 305-306)

 

இப்படி நூற்றுக்கணக்கான பழக்க வழக்கங்களை விளக்கும் ஏராளமான பாடல்களை சங்க இலக்கியம் தருகிறது.

படித்தால் சங்க கால  வாழ்க்கை பற்றி நன்கு அறிந்து கொள்ள முடியும்!

***

 

 

 

 

நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்! (Post No.5309)

Written by S Nagarajan

Date: 11 August 2018

 

Time uploaded in London – 7-00 AM  (British Summer Time)

 

Post No. 5309

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்!

 

ச.நாகராஜன்

 

அதிவீரராம பாண்டியன் இயற்றிய தமிழ்க் காவியமான நைடதம் சிருங்காரச் சுவை சொட்டச் சொட்ட எழுதப்பட்ட ஒன்று.

இதில் சுயம்வரப் படலம் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

திரிலோகத்தில் உள்ள அரசர்களெல்லாம் ஒருங்கு கூடி சுயம்வர மண்டபத்தில் வந்து சேர தமயந்தியின் தந்தையான வீமராஜன் மகிழ்ச்சியும் திகைப்பும் அடைந்தான்.

 

 

அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தன் மகளை மணம் செய விரும்புவது குறித்து மகிழ்ச்சி,

ஆனால் இவரை இன்னார் என்று நல்ல விதத்தில் அறிமுகப்படுத்தக் கூடியவர் இந்த மண்ணுலகில் இல்லையே என்பதை நினைத்து திகைப்பு.

 

 

நாரணனை மனம் உருக வேண்டினான். நாரணனோ பிரம்மாவை நோக்கி, ‘பிரம்ம தேவா!. இவர் இன்னின்னார் என்று கூற கலைமகள் அன்றி வேறு யார் இருக்கிறார்கள்” என்று கேட்டார். பிரம்மா கலைமகளை நோக்கி, “நீ சென்று அரசர் கூட்டத்தை தமயந்திக்கு இவர் இன்னார் என்று விளக்கி வருவாய்” என்று பணிக்க கலைமகள் சுயம்வர மண்டபம் வந்து ஒவ்வொருவரைப் பற்றியும் தமயந்திக்கு எடுத்துக் கூற ஆரம்பித்தாள்.

 

 

42 பாடல்களில் அரசர்கள் பற்றிய அறிமுகம் விளக்கப் படுகிறது.

தமயந்தியை மணக்க வேண்டி சுயம்வர மண்டபத்திற்கு வந்த இந்திரன், அக்கினி தேவன், யமன்,வருணன் ஆகியோரை விளக்கும் பாடல்கள் நளனுக்கும் இவர்களுக்குமாக அமைந்துள்ள சிலேடைப் பாடல்களாக அமைந்துள்ளன.

இந்திரனுக்கும் நளனுக்கும் சிலேடை:

 

கலை வளர்திங்க ளென்னக் கடிகமழ் கமலம் வாட்டுந்

திலக வாண் முகத் தாயிங்கு வைகிய சினவேற் காளை

வலனுடை வயிர வாளான் கற்பகமலிந்த தோளான்

பலபகைவரை முன்செற்ற பகட்டெழின் மார்பினானே.

 

இதன் பொருள் :- கலைமகளுடைய அருளும், நல்ல வாசனை பொருந்திய தாமரை மலரும் வாடி விடும்படியான, திலகமிட்ட சந்திரனைப் போன்ற முகத்தை உடைய தமயந்தியே! இங்கே இருக்கும் அரசன் கோபமும் வீரமும் ஒருங்கே பெற்றும், வலனைக் கொன்ற வெற்றியுடையவனும், வெற்றி மிகுந்த கூரிய வாளை உடையவனும், கற்பக மாலை சூடியவனும், மலை பிளக்கும் தோழனும், பகைவரை முதலில் ஜெயித்து  பெருமை பொருந்திய அழகிய மார்பினனுமான இந்திரன் ஆவான்.

இந்த அரசனின் வர்ணனை – கோபமும் வீரமும் ஒருங்கே பெற்றவன், கூரிய வாளை உடையவன், பகைவரை ஜெயித்தவன் ஆகியவை நளனுக்கும் பொருந்துபவை. ஆகவே இந்திரனையும் நளனையும் குறித்த சிலேடைப் பாடலாக இது அமைகிறது.

 

அக்னிதேவனுக்கும் நளனுக்கும் சிலேடை:

நகைமதி முகத்தாயீங்கு வைகிய நாமவேலான்

புகலுரும் வெகுளி யுள்ளத் தொருவினான் பொங்கி யார்த்த

பகையிருட் பிழம்பு சீக்கும் பலசுட ருமிழும் வாளான்

றகைமைசால் புலவ ரேத்துந் தால மேழுடைய கோவே

 

இதன் பொருள் :

சந்திர பிம்பம் போன்ற முகத்தை உடைய தமயந்தியே! (நகை மதி முகத்தாய்) இங்கு இருப்பவர் யார் எனில் சொல்ல முடியாத அளவு கோபமும் ஒளியும் பொருந்தியவனுமான அக்னி தேவன்.

இருளை ஒத்த பகைவரை தன் வாளால் வென்று பெருமை மிக்க புலவர்களால் சத்சத் தீவை உடையவன்.

 

 

தீவு தேவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அக்னியையே முதலாவதாக பூஜிப்பதாலும் அவர்களுக்கு வேண்டிய ஹவிர் பாகங்களை அக்னி மூலமாகப் பெறுவதாலும் வேதத்தில் அக்னியை மூலமாகச் சொல்வதாலும் இருள் பிழம்பை ஓட்டி ஒளி தரும் ஏழு நாவை உடையவன் ஆதலாலும் தேவர்களால் புகழப்படுவதாலும் அக்னி தேவன் இவ்வாறு புகழப் படுகிறான்.

 

 

அக்னியைக் கூறும் போது தேவர்கள் என்றும் நளனைக் குறிப்பிடும் போது புலவர்கள் என்று கூறுவதும் காண்க. தேவர்களும் புலவர்களும் சிலேடையாகக் கூறப்படுகிறது.

 

யமனுக்கும் நளனுக்கும் சிலேடை

அஞ்சன மெழுத லாற்றா தம்மவோ வென்று நையும்

வஞ்சிநுண் ணிடையா யிங்கு வைகிய நாமவேலா

னெஞ்சலி றருமன் றெண்ணி ரிருங்கட லுலக மெல்லாஞ்

செஞ்சவே யோசை போய தீதறு செங்கோல் வேந்தே

 

இதன் பொருள் : அஞ்சன மை எழுதும் போது அதன் கனம் கூடத் தாங்க மாட்டாது நைந்து போகும் நுண்ணிய இடையை உடையவளே! இதோ இருக்கின்றானே இவன் யம தருமன்! பயமுறுத்தும் வேல் படையை உடையவன். செவ்விய கால தண்டாயுதத்தைக் கொண்டு கடல் சூழ்ந்த உலகை புகழ் பரப்பச் செங்கோலால் ஆள்பவன்!

நளனும் இருங்கடல் உலகம் ஆள்பவன். செங்கோலால் ஆட்சி செய்து புகழ் பெற்றவன். ஆக ஈற்றடி இரண்டினாலும் நளனுக்கும் யமனுக்கும் சிலேடை புகலப்பட்டது.

 

வருணனுக்கும் நளனுக்கும் சிலேடை :

பாற்றிரை யமிரத மூறும் படரொளிப் பவளச் செவ்வாய்

கோற்றொடி மடந்தை யீங்கு வைகிய குலவுத் தோளான்

மகற்றருஞ் சிறப்பின் மிக்க வளங்கெழு புவன வேந்த

னாற்றிசை பரப்புஞ் சூழ்போ நலங்கெழு நேமி வேந்தே

 

இதன் பொருள் ; பாற்கடலில் தோன்றிய அமிர்தமென ஊறுகின்ற பவளச் செவ்வாயை உடையவளே! அழகிய வளையலை அணிந்துள்ளவளே! இங்கு  வந்திருப்பவன் நன்மை பொருந்திய கடல் அரசனான வருண தேவன்.

 

 

புவனம் என்றால் நீர் ; நீருக்கு அரசன் வருணன்

புவனம் என்றால் பூமி : பூமிக்கு அரசன் நளன்

நேமி என்றால் கடல். வருணனைக் குறிப்பது.

நேமி என்றால் சக்கரம். நளனைக் குறிப்பது.

ஆக வருணனுக்கும் நளனுக்கும் சிலேடை புகலப்பட்டது.

 

இப்படி இந்திரன், அக்னி, யமன், வருணன் ஆகியோரின் சிறப்பியல்புகள் அனைத்தும் ஒருங்கே கொண்டவன் என்று குறிப்பால் தமயந்திக்கு கலைமகள் சொல்லிக் கொண்டே வருகிறாள் என்பது சுவையான செய்தி!

அதிவீரராம பாண்டியனின் நைடதம் கற்போர்க்கு ஔடதம்.

***

 

தொல்காப்பியன் புகழ் (Post No.5217)

Written by London swaminathan

 

Date: 14 JULY 2018

 

Time uploaded in London – 14-37  (British Summer Time)

 

Post No. 5217

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

தமிழில் பழமையான நூல் தொல்காப்பியம் எனப்படும் இலக்கண நூலாகும்; இதன் ஆசிரியர் தொல்காப்பியர். அவர் குறித்துப் பல புலவர்கள் கூறிய பொன் மொழிகளைக் காண்போம்:

1.ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமையோன் – –பனம்பாரனார்

 

2.நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்

– பன்னிரு படலப் பாயிரம்

 

3.துன்னரும் சீர்த்தித் தொல்காப்பியன்

-புறப்பொருள் வெண்பா மாலை சிறப்புப் பாயிரம்

 

4.ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பிய முனி

–இலக்கணக் கொத்து சிறப்புப் பாயிரம்

 

சூத்திரங்களின் எண்ணிக்கை

இளம்பூரணர் உரை- 1595

நச்சினார்க்கினியர் உரை – 1611

 

பழம்பாடல்களின் படி 1612

 

பல சூத்திரங்களை ஒன்றாக இணத்தும் பகுத்தும் பார்த்ததால் இந்த வேறுபாடு என்று அறிஞர் பெருமக்கள் நுவல்வர்.

தொல்காப்பியத்தில் மூன்று அதிகாரங்கள்:–

சொல் அதிகாரம்

எழுத்து அதிகாரம்

பொருள் அதிகாரம்

 

பொருள் அதிகாரம் பிற்காலத்தியது என்பது ஆன்றோர் கருத்து.

 

 

தொல்காப்பியருக்குப் பிடித்த எண் 9

 

மூன்று அதிகாரங்களிலும் தலா ஒன்பது இயல்கள் உள.

அவையாவன:

 

எழுத்து அதிகாரம்

 

1.நூல் மரபு

2.மொழி மரபு

3.பிறப்பியல்

4.புணரியல்

5.தொகை மரபு

6.உருபியல்

7.உயிர் மயங்கியல்

8.புள்ளி மயங்கியல்

9.குற்றியலுகரப் புணரியல்

 

சொல் அதிகாரம்

 

1.கிளவியாக்கம்

2.வேற்றுமை இயல்

3.வேற்றுமை மயங்கியல்

4.விளி மரபு

5.பெயரியல்

6.வினையியல்

7.இடையியல்

8.உரியியல்

9.எச்சவியல்

 

பொருள் அதிகாரம்

1.அகத்திணயியல்

2.புறத்திணையியல்

3.களவியல்

4.கற்பியல்

5.பொருளியல்

6.மெய்ப்பாட்டியல்

7.உவமவியல்

8.செய்யுளியல்

9.மரபியல்

 

தொல்காப்பியருக்குத் தெரிந்த மொழிகள்:–

தமிழ், ஸம்ஸ்க்ருதம் (ஐந்திரம் எனும் இந்திரன் பெயரில் உள்ள ஸம்ஸ்க்ருத இலக்கணம் கற்றவர். இந்த இலக்கணம் கிடைக்கவில்லை)

 

தொல்காப்பியரின் காலம்

கி.மு.முதல் நூற்றாண்டு முதல் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரை

 

இவர் ஆய்த எழுத்து என்பப்படும் மூன்று புள்ளி எழுத்து பற்றிக் குறிப்பிடுவதால் முதல் நூற்றாண்டுக்குப் பிறப்ப

ட்டவர் என்பது சிலர் கருத்து.

 

இவர் எண்வகைத் திருமணம் பற்றியும் வேத காலக் கடவுளரான இந்திரனையும் வருணனையும் தமிழர் கடவுள் என்று குறிப்பிடுவதாலும்,  பொருள் அதிகாரம் பிற்காலத்தியது என்பர். இன்னும் சிலர் அவை இடைச் சொருகல் என்று சொல்லி தப்பித்துக் கொள்வர்.

 

இவர் அகஸ்த்ய ரிஷியின் சிஷ்யர். அவருக்கும் இவருக்கும் இடையே நடந்த மோதல் பற்றி ‘உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்’ பகர்வர். அதே நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் உண்மைப் பெயர் த்ருண தூமாக்கினி என்பர். தொல்காப்பியர் ஒரு பார்ப்பனர் என்றும் ரிக் வேதமும் பகவத் கீதையும் போற்றும் உசனஸ் ரிஷி பிறந்த காப்பிய கோத்திரத்தை சேர்ந்தவர் என்றும் செப்புவர்.

 

 

பொய்யுரை பேசும் திராவிடர்களுக்கு ஆப்பு வைக்கும் ஆதாரங்கள் தொல்காப்பியத்துக்கு உள்ளேயே இருக்கின்றன.

இவர் எழுத்து அதிகார உச்சரிப்பில் வேதம் பற்றிச் சொல்கிறார்.

மஹாபாரதம் முதலிய நூல்களில் உள்ள தர்ம, அர்த்த, காம, மோக்ஷத்தை அதே வரிசையில் அறம், பொருள், இன்பம் என்று சொல்கிறார்.

மேலும் இந்து தெய்வங்கள் அனைவர் பெயரையும் சொல்கிறார். சிவன் பெயரைச் சொல்ல வில்லை

 

இவர் நூலுக்கு ‘சர்டிபிகேட்’ கொடுத்தவர் கேரளத்து பிராஹ்மணன், சதுர்வேத சிகாமணி- நான்மறை முற்றிய அதங்கோட்டு (திருவிதாங்கோடு) ஆசார்யார்

 

இது அரங்கேறிய இடம்- நிலம் தரு திரு வில் பாண்டியன் சபை.

 

அக்காலத்தில் தமிழ் நாட்டின் எல்லை: குமரி மலை, திருப்பதி (வேங்கட மலை)

இவருக்கு பனம்பாரனார் உள்பட 12 சீடர்கள்.

இவர் பிறந்த இடமோ, இறந்த இடமோ, தாய் தந்தையர் பெயரோ தெரியாது.

 

இவர் இந்து தெய்வங்களைத் தவிர வேறு எவரையும் குறிப்பிடவில்லை. இவரது காலத்தில் பௌத்தமோ ஜைனமோ பிரபலம் ஆகாததால் இப்படி மௌனம் காத்திருக்கலாம்.

தொகாப்பிய ஏடுகளில் 2000 பாட பேதங்கள் இருந்தன. அவைகளை அறிஞர்கள் தட்டிக்கொட்டிச் சீர் செய்துவிட்டனர்.

 

இவர் நூலிலும் , சிலப்பதிகாரத்திலும், திருக்குறளிலும் அதிகாரம் என்னும் சொல் பயிலப்படுவதால் மூன்று நூல்களும் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் தொகுக்கபட்டு நமக்கு வழங்கியிருக்கலாம்.

 

தொல்காப்பியத்துக்குப் பல உரைகள் இருந்தாலும் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் உரைகளே சிறப்புடைத்து.

 

–SUBHAM–

 

குறள் கதை — ‘உண்டிக்கழகு விருந்தோடுண்டல்’ (Post No.5203)

Written by London swaminathan

 

Date: 10 JULY 2018

 

Time uploaded in London – 11-59 am  (British Summer Time)

 

Post No. 5203

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

‘உண்டிக்கழகு விருந்தோடுண்டல்’—வெற்றி வேற்கை, அதி வீர ராம பாண்டியன்

 

சாப்பாட்டிற்கு அழகு, விருந்தாளிகளுடன் பகுத்து உண்ணுதல் ஆகும். விருந்தோம்பல் என்னும் பண்பு பாரத நாட்டில் மட்டுமே உண்டு. இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம் என்பதற்கு இது மிகப்பெரிய சான்று

 

வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் விருந்தாளிக்குப் போட்டுவிட்டுத்தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை. அதை ஒரு தர்ம கைங்கர்யமாகவும் சொல்ல வில்லை. அன்ன சத்திரங்கள் ஆயிரம் அமைக்கவுமில்லை. மநு ஸ்ம்ருதியும், சிலப்பதிகாரமும், திருக்குறளும் சங்க இலக்கியமும் மட்டுமே செப்பும் கருத்து இது.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் 322)

 

பொருள்

தம்மிடமுள்ள உணவை எல்லோருக்கும் பகுத்துக் கொடுத்து தானும் உண்ண வேண்டும்; பிற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும்; நல்லோர் கூறிய எல்லா அறங்களிலும் இதுவே சிறந்த தர்மம்.

தனக்கு மட்டுமே சமைப்பவன் பாவி என்று பகவத் கீதையில்ன் கண்ணன் நுவல்கிறான்.

யஜ்ஞசிஷ்டாசினஹ சந்தோ முச்யந்தே சர்வகில்பிஷைஹி

புஞ்சதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மாமகாரணாத்

(பகவத் கீதை 3-13)

 

பொருள்

யக்ஞம் செய்து மிஞ்சியதை உண்ணும் சாதுக்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். ஆனால் எவர்கள் தமக்கெனவே சமைக்கின்றார்களோ அந்த பாபிகள் பாவத்தையே உண்கிறார்கள்.

 

இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு பெரியபுராணத்திலுள்ள இளையான்குடி  மாற நாயனார் வரலாறு ஆகும்.

இளையான்குடி என்பது ஒரு சிறிய கிராமம். அங்கே ஒரு சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் பயிர்த் தொழில் செய்யும் வேளாளர் குலத்தில் உதித்த பெருந்தகை. வந்தோருக்கெல்லாம் விருந்தளிப்பவர். இதனாலேயே ஏழ்மை நிலை அடைந்தவர். இவர் புகழை உலகிற்கு அறிவிக்க இறைவன் ஒரு திருவிளையாடல் செய்தான்

 

ஒரு நாள் இரவில் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது ஒரு துறவி அவர் வீட்டின் கதவைத் தட்டினார். வந்தவர்க்கு நள்ளிரவானாலும் சாப்பாடு போட வேண்டுமே என்று எண்ணி மனைவியிடம் என்ன இருக்கிறது? என்று வினவினார். அவர் முகமே பதில் சொல்லிவிட்டது.

விருந்தினருக்கு உணவளிக்க பக்கத்து வீட்டுக்குக் கூட போக முடியாத மழை ஒரு புறம்; இருள் மறு புறம். திடீரென அவர் மனைவிக்கு ஒரு  விஷயம் ஞாபகம் வந்தது. அன்று காலையில்தான் நெல் வயலில் தானியத்தை விதைத்து இருந்தார்கள். கொட்டும் மழையில் கிடைத்த தானியங்களை அள்ளி வரும்படி மனைவி சொன்னவுடன் அவரும் தலையின் மீது துண்டைப் போட்டுக்கொண்டு வயல் வெளியில் சேற்றிலும் சகதியிலும் மிதந்த விதை நெல்லை பொறுக்கி எடுத்து வடிகட்டி வைத்து நெல்லை மட்டும் அரிந்து கழுவினார். அதை உலையில் ஏற்றி சோறு வைத்தார்.

 

இதற்குள் கறியமுது வேண்டுமே என்று சிந்திக்க கொல்லைப்புற கீரை செடிகள் நினைவுக்கு வந்தன. அவைகளையும் பறித்து தண்டு ஒரு கூட்டு இலை ஒரு கறியமுது என்று விதவிதமாகச் சமைத்துவிட்டு விருந்தாளியை அழைக்க திண்ணைக்கு வந்தார். ஆனால் விருந்தாளி மாயமாய் மறைந்து விட்டார்! வந்திருந்தவர் சிவ பெருமானே என்பதை அறிந்தார். அவரும் ஒளி வடிவில் ரிஷப ஆரூடனாகக் காட்சி தந்தார்.

 

யார் ஒருவன் பகுத்துக் கொடுக்காமல் சாப்பிடுகிறானோ அவன் குற்றம் புரிந்தவனே. அவன் தோழர்களுக்கு உணவு அளிக்காவிடில் அவனை நேசிப்போர் யாரும் இரார்– இது ரிக் வேத மந்திரத்தின் ஒரு பகுதி (10-117-4/6)

 

விருந்தினரை எப்படிக் கவனிக்க வேண்டும் என்று காசிக் காண்டம் என்னும் நூலில் அதிவீர ராம பாண்டியர் எழுதியுள்ளார். இதை ஒருவர் பின்பற்றினால் வந்தவரின் உள்ளத்தை வென்றுவிடலாம். சிலர் நன்றாகச் சாப்பாடு போடுவர். ஆனால் பேசத் தெரியாமல் பேசி, போட்ட சாப்பாட்டின் பலனைக் கெடுத்துவிடுவர்.

விருந்தினனாக ஒருவன் வந்தெதிரின்

வியத்தல் நன்மொழியினுரைத்தல்

திருந்துற நோக்கல் வருகென வுரைத்தல்

எழுதல்முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றவன்றன் அருகுற விருத்தல்

போமெனிற் பின்செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல்லிவ் வொன்பான்

ஒழுக்கமும் வழிபடு பண்பே

 

–SUBHAM–

புலவர்களின் தமிழைப் பார்த்தார்கள்; ஜாதியைப் பார்க்கவில்லை! (Post No.5202)

Written by S NAGARAJAN

 

Date: 10 JULY 2018

 

Time uploaded in London –   6-32 AM (British Summer Time)

 

Post No. 5202

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சங்க காலம் பொற்காலம்

 

புலவர்களின் தமிழைப் பார்த்தார்கள்; ஜாதியைப் பார்க்கவில்லை!

 

ச.நாகராஜன்

 

 

சங்க காலத்தில் ஜாதி பேதம் இன்றைய திராவிட கண்களின் விஷப்பார்வை போல பார்க்கப்படவில்லை என்பது ஒரு அருமையான செய்தி.

 

அந்தக்காலத் தமிழர்கள் தமிழைப் பார்த்தார்கள்; தமிழ் கூறும் கருத்துக்களைப் பார்த்தார்கள்.

 

பாடியவர் அந்தணரா, அரசரா, இடையரா, எயினரா, கூத்தரா, தட்டாரா, வணிகரா, வேளாளரா என்று பார்க்கவில்லை.

அனைவரையும் மதித்தார்கள் – தமிழுக்காக, தமிழில் அவர்கள் தந்த கருத்துக்களுக்காக.

எடுத்துக்காட்டாக அகநானூற்றில் வரும் புலவர்கள் சிலரின் ஜாதியை இங்கு சுட்டிக் காட்டலாம்- இன்றைய திராவிட இயக்கங்கள் தீய நோக்கில் பரப்பும் விஷ பிரசாரத்தைத் தடுக்கவே இது தரப்படுகிறது.

 

ஜாதி மட்டுமல்ல, ஆண், பெண் என்ற பாலின பேதம் கூட அந்த காலத்தில் பார்க்கப்படவில்லை. பெண்பாற் புலவர்களும் உண்டு.

தமிழின் முன்னால் அனைவரும் சமம் என்ற உயர் நோக்கைச் சங்க காலம் கொண்டிருந்தது என்பதை இதன் மூலம் உணரலாம்.

பாடிய புலவர்களின் ஒரு பட்டியல் இதோ:

 

அந்தணர்:

ஆமூர்க் கௌதமன் சாதேவனார்

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கபிலர்

கோடிமங்கலம் வாதுளி நற் சேந்தனார்

செல்லூர்க் கோசிகன் கண்ணனார்

நக்கீரனார்

மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்

மதுரை இளங்கௌசிகனார்

மதுரைக் கணக்காயனார்

மதுரைக் கௌணியன் தத்தனார்

மாமூலனார்

இந்தப் பெயர்கள் மூலம் பொதுவாக ஊர்ப் பெயர்களை புலவர்கள் தம் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதைக் காணலாம்.

எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். கவுண்டின்ய கோத்திரம், கௌசிக கோத்திரம், வாதூல கோத்திரம் என்று இப்படிப் பல கோத்திரங்களை அவர்கள் பெயருடன் இணைத்துக் கொண்டிருந்தனர்.

 

அரசர்

அண்டர்மகன் குறுவழுதியார்

அதியன் விண்ணத்தனார்

ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன்

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்

சேரமான் இளங்குட்டுவன்

பாண்டியன் அறிவுடைநம்பி

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

பாலை பாடிய பெருங்கடுங்கோ

மருதம் பாடிய இளங்கடுங்கோ

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

வீரைவெளியன் தித்தனார்

 

 

இடையர்

இடைக்காடனார்

இடையன் சேந்தன் கொற்றனார்

இடையன் நெடுங்கீரனார்

இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்

எயினர்

எயினந்தைமகன் இளங்கீரனார்

விற்றூற்று மூதெயினனார்

 

கூத்தர்

உறையூர் முதுகூத்தனார்

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன்கூத்தனார்

மதுரைக் கூத்தனார்

மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன்மள்ளனார்

மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன்றேவனார்

 

தட்டார்

தங்காற் பொற்கொல்லனார்

மதுரை பொன்செய்கொல்லன் வெண்ணாகனார்

 

மந்திரத்தலைவர்

ஏனாதி நெடுங்கண்ணனார்

 

வண்ணக்கர்

வடமவண்ணக்கன் டேரிசாத்தனார்

 

வணிகர்

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

மதுரை அறுவைவாணிகன் இள வேட்டனார்

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்

வேளாளர்

ஆர்க்காடுகிழார்மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்

ஆவூர்கிழார் மகனார் கண்ணத்தனார்

ஆவூர் மூலங்கிழார்

மேற்படியார் மகனார் பெருந்தலைச்சாத்தனார்

உமட்டூர்கிழார்மகனார் பரங்கொற்றனார்

காட்டூர்கிழார்மகனார் கண்ணனார்

கோடியூர்கிழார்மகனார் நெய்தற்றனார்

செல்லூர்கிழார்மகனார் பெரும்பூதங்கொற்றனார்

நல்லாவூர்கிழார்

நெய்தற்சாய்த்துய்ந்த ஆவூர் கிழார்

நொச்சியமங்கிழார்

பொதும்பில்கிழார் வெண்கண்ணனார்

மதுரைக் காஞ்சிப் புலவர்

மதுரை மருதங்கிழார்மகனார் பெருங்கண்ணனார்

மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்

மாற்றூர்கிழார்மகனார் கொற்றங்கொற்றனார்

வடமோதங்கிழார்

 

அருந்தொடரால் பெயர் பெற்றோர்

அந்தியிளங்கீரனார்

இம்மென்கீரனார்

ஊட்டியார்

நோய்பாடியார்

வண்ணப்புறக்கந்தரத்தனார்

பெண்பாற்புலவர்

அஞ்சில் ஆந்தைமகள் நாகையார்

அள்ளூர் நன்முல்லையார்

ஒக்கூர் மாசாத்தியார்

ஔவையார்

கழார்க் கீரனெயிற்றியார்

குமிழிஞாழார் நப்பசலையார்

நக்கண்ணையார்

போந்தைப் பசலையார்

மதுரை நல்வெள்ளியார்

முள்ளியூர்ப் பூதியார்

வெள்ளிவீதியார்

வெறிபாடியகாமக்கண்ணியார்

 

75 புலவர்களின் பெயர்களை மேலே காணலாம். இந்தப் புலவர்கள் வெவ்வேறு ஜாதியினரைச் சேர்ந்தவராய் இருப்பினும் தமிழால் ஒன்றுபட்டவர்கள். சமமானவர்கள். மதிப்பைப் பெற்றவர்கள். ஆண், பெண் என்ற வேறுபாடும் சங்க காலத்தில் பார்க்கப்படவில்லை என்பதற்கும் இந்தப் பட்டியலே சான்று!

***

 

1916 வரை தமிழ் நாவல்கள், நாடகங்கள்! (Post No.5200)

Compiled by London swaminathan

 

Date: 9 JULY 2018

 

Time uploaded in London – 15-08  (British Summer Time)

 

Post No. 5200

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மலேயாவிலிருந்து வந்த சகலகலாவல்லி பத்திரிக்கை விளம்பரப்படி 1916 ஆம் ஆண்டு வரை வந்த தமிழ் நாவல்கள், நாடகங்களின் பட்டியல் கீழே உள்ளது. அக்காலத்திலேயே இத்தனை புஸ்தகங்களை எழுதி தமிழ்  வளர்த்தோரை நினைவுகூறுவது நம் கடமை.

 

இந்த நாவல்களைப் படிக்கையில் அக்கால எழுத்து நடை, மக்களின் விருப்பம், கலாசார வழக்கங்கள் ஆகிய தெளிவாகத் தெரியும் குறிப்பாக ஒருவருக்குத் திருமணம் செய்ய முனையும்போது பெண் வீட்டார் என்ன நினைக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதெல்லாம் இன்று வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கும்.

இதோ பட்டியல்:-

 

 

 

–SUBHAM–