பாரதியார் நூல்கள் – 37 நாமக்கல் கவிஞர் கவிதைகள்! (Post. 4157)

Written by S.NAGARAJAN

 

Date: 24 August 2017

 

Time uploaded in London- 4-59 am

 

Post No. 4157

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 37

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை கவிதைகள்!

 

ச.நாகராஜன்

நாமக்கல் கவிஞர் என்று நாடறியும் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

திராவிட மாயையில் வீழாது தனது சமச்சீர் தன்மையைக் கொண்டிருக்கும் அபூர்வ தமிழர்களில் நாமக்கல் கவிஞரும் ஒருவர்.

அவர் காந்தியைப் பாடினார்; உலகம் வேண்டும் சாந்தியைப் பாடினார். இவரது பாடல்களுள் பெரும்பாலானவை காந்தியைப் போற்றிப் பாடியதே என்று கூறலாம்.

ஆரிய-திராவிட வாதம் என்பதெல்லாம் பொய் என்று உரக்கக் கூவியவர் என்பதாலும் அதைப் பற்றி அருமையான ஆய்வுக் கட்டுரைகள் எழுதியதாலும் இவர் தமிழருள் தலை சிறந்து நிற்கிறார்.

தேசமும் தெய்வமும் ஒன்று என்ற கொள்கையை உடைய இவர் ஒரு சிறந்த பாரதி பக்தர்.

பாரதியாரைப் போற்றி இவர் பாடிய ஏழு சிறந்த பாடல்கள் நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்ற தொகுப்பில் அடங்கி உள்ளன.

மூன்று பாகங்களைக்கொண்ட இந்தத் தொகுப்பு நூலில் மொத்தம் 251 கவிதைகள் உள்ளன.

முதல் பாகத்தில் பாரதி பாட்டு மற்றும் உலகம் வாழ்க ஆகிய இரு கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

இரண்டாம் பாகத்தில் பாரதி ஓர் ஆசான், பாரதிக்கு வெற்றி மாலை, பாரதி நினைவு, பாரதி எனும் பெயர் ஆகிய நான்கு கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

மூன்றாம் பாகத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி என்ற ஒரு கவிதை இடம் பெற்றுள்ளது.

எளிய சொற்களால் அரிய பெரிய கருத்துக்களைச் சொல்லும் வன்மை படைத்தவர் நாமக்கல் கவிஞர்.

பாரதியின் பாட்டு என்ற கவிதையில் பாரதியாரின் சொல் வன்மையைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:

அச்சமிகும் பேடிமையின் அடிமை வாழ்வில்

அடங்கியிருந் தறம்மறந்த தமிழர் நாட்டைப்
பச்சைமரத் தாணியெனப் பதியும் சொல்லால்

பாட்டிசைத்துப் பாலர்களும் நிமிர்ந்து நின்று,
நிச்சயமெந் தாய்நாட்டின் அடிமை வாழ்வை

நீக்காமல் விடுவதில்லை!’ எனமுன் வந்து
துச்சமெனச் சுகத்தையெல்லாம் துறந்து நிற்கத்

தூண்டியது பாரதியின் சொல்லே யாகும்.

படித்தறியா மிகஏழைக் கிழவ னேனும்

பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பா னாகில்
துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக் கொட்டித்

துளைமிகுந்த கந்தலுடை சுருக்கிக் கட்டி,
எடுத்தெறிய வேண்டுமிந்த அடிமை வாழ்வை

இப்பொழுதே இக்கணமே!’ என்றென் றார்த்திங்(கு)
அடித்துரைத்தே ஆவேசம் கொள்வா னென்றால்

அப்பாட்டின் பெருமைசொல யாரே வல்லார்!

புத்தொளியிற் பழந்தமிழ்க்கோர் புதுமை பூட்டிப்

புத்துயிரும் புதுமணமும் புகுத்தி ஞானச்
சக்தியளி மிகவிளங்கும் சொற்க ளாலே

தாய்நாட்டின் தளையறுக்கும் தவமே பாடி
எத்திசையும் இளந்தமிழர் இன்று கூடி

இறந்தேனும் ஈன்றவளை மீட்போம்!’ என்று
பக்தியோடும் அறப்போரில் முனைந்து நிற்கப்

    பண்ணினது பாரதியின் பாட்டே யாகும்.

 

காந்தியடிகளின் சிறந்த பக்தரான நாமக்கல் கவிஞர் அவரைப் பற்றி உரிய விதத்தில் கவி பாட கம்பனோ, காளிதாஸனோ தியாகராஜரோ அல்லது பாரதியோ இல்லை என்று அங்கலாய்க்கிறார் இப்படி:
கவிபாடிப் பெருமைசெய்யக் கம்ப னில்லை

கற்பனைக்கிங் கிலையந்தக் காளி தாசன்
செவிநாடும் கீர்த்தனைக்குத் த்யாக ரில்லை

     தேசீய பாரதியின் திறமும் இல்லை

“இமயம் முதல் குமரி முனை” வரை உள்ள இந்திய நாட்டின் ஒற்றுமையை பாரதியார் வலியுறுத்தினார். அதை நாமக்கல் கவிஞர் தன் பாட்டில் சுட்டிக் காட்டுகிறார் இப்படி:

தமிழரென்ற தனிப்பெயரைத் தாங்கி னாலும்

தனிமுறையில் அரசாளத் தலைப்பட் டாலும்
இமயமுதல் குமரிமுனை இறுதி யாகும்

இந்தியத்தாய் சொந்தத்தில் இடைய றாமல்
அமைதிதரும் ஒற்றுமையை அழுத்திச் சொல்லி

அன்புமுறை தவறாத அறிவை ஊட்டி
அமிழ்தமொழி தமிழினத்தின் ஆக்கம் காக்கும்

     ஆற்றல்தரும் பாரதிஓர் ஆசான் என்றும்.

                               (பாரதி ஓர் ஆசான் என்ற பாடல்)

தேர்ந்தெடுத்த சொற்களால் பாரதியின் புகழை நாமக்கல் கவிஞர் பாடும்போது அந்தப் பாட்டில் நம் உள்ளம் குளிர்கிறது:

சுத்தவீர தீரவாழ்வு சொல்லித்தந்த நாவலன்

சூதுவாது பேதவாழ்வு தொலையப்பாடும் பாவலன்
சக்திநாடிப் புத்திசெல்லச் சாலைகண்ட சாரதி

சத்தியத்தில் பற்றுக்கொண்ட சுப்ரமண்ய பாரதி.

ஆடுமாடு போலவாழ்வு அடிமைவாழ்வு என்பதை

அரிவரிக்கு வழியிலாத அனைவருக்கும் தென்படப்
பாடிநாடு வீடுதோறும் வீறுகொள்ளப் பண்ணினான்

பாரதிக்கு வேறொருத்தர் நேருரைக்க ஒண்ணுமோ?

அஞ்சிஅஞ்சி உடல்வளர்க்கும் அடிமைப்புத்தி நீக்கினான்

அன்புமிஞ்சும் ஆண்மைவாழ்வில் ஆசைகொள்ள ஊக்கினான்
கெஞ்சிக்கெஞ்சி உரிமைகேட்கும் கீழ்மைஎண்ணம் மாற்றினான்

     கேடிலாது மோடிசெய்யும் காந்திமார்க்கம் போற்றினான்.
(பாரதிக்கு வெற்றி மாலை என்ற பாடல்)

பாரதி நினைவு என்ற பாடலில் பாரதி என்று நினைத்தவுடன் என்ன நடக்கும் என்பதைக் கவிஞர் கூறுகிறார்:

சுப்ரமண்ய பாரதியை நினைத்திட் டாலும்

சுதந்தரத்தின் ஆவேசம் சுருக்கென் றேறும் ;
இப்ரபஞ்சம் முழுதும்நமக் கினமாய் எண்ணும் ;

இந்தியன்நான்என்றிடும்நல் லிறுமாப் புண்டாம் ;
எப்பெரிய காரியமும் எளிதாய்த் தோன்றும் ;

எல்லையற்ற உற்சாகம் எழுந்து பொங்கும்
ஒப்பரியதமிழன்எனும் உவகை ஊறும் ;

     உள்ளமெல்லாம் துள்ளியெழும் ஊக்க முண்டாம்.

தமிழர்களுக்கு நாமக்கல் கவிஞரின் அறிவுரை இது தான்:

சுப்ரமண்ய பாரதியின் பாட்டுபாடிச்

    சோம்பல், மனச் சோர்வுகளை ஓட்டு.

                     (பாரதி எனும் பெயர் என்னும் பாடல்)

சுப்பிரமணிய பாரதியின் நாமம் பற்றிச் சொல்ல வரும் கவிஞர் அது கவலையை நீக்கும் சூத்திரம் என்கிறார்:

அனுபல்லவி

நிதந்தரும் கவலையை நீக்கிடும் சூத்திரம்
நிச்சய புத்திதரும் அட்சய பாத்திரம்

சரணங்கள்

அச்சம் எனும்பிணியை அகற்றிடும் மருந்து
ஆற்றலைக் கொடுத்திடும் அமுதத்தின் விருந்து
கொச்சை வழக்கங்களைக் கொளுத்திடும் நெருப்பு
கொடுமையை எதிர்த்திடக் கூரிய மறுப்பு!
         (ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி என்னும் பாடல்)

பாரதியைப் போற்றும் அன்பர்களுக்கு நாமக்கல் கவிஞரின் பாடல்கள் தேன் வந்து பாயுது காதினிலே என்ற ரகத்தைச் சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களாகும்.

நாமக்கல் கவிஞரின் பாடல்கள் கீழ்க்கண்ட இணைய தளத் தொடுப்பிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.72,73,85 ஆகிய தொடர் எண்களில் நாமக்கல் கவிஞரின் கவிதைகள் உள்ளன.

 

இதே தளத்தில் பாரதியாரின் அனைத்துக் கவிதைகளும் இருப்பது குறிப்பிடத் தகுந்தது.

www.projectmadurai.org

ப்ராஜக்ட் மதுரைக்கு தமிழர்களின் நன்றி என்றும் உரித்தாகுக.

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 36 (Post No.4144)

Written BY S NAGARAJAN

 

Date: 10 August 2017

 

Time uploaded in London:- 5-22 am

 

 

Post No.4144

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 36

பாரதிதாசன் கவிதைகள்!

 

ச.நாகராஜன்

 

பாரதியாருடன் நெருங்கிப் பழகி அவரது கவிதா சந்நிதானத்தில் பெரிதும் ஆழ்ந்து ஈடுபட்டு மகிழ்ந்தவர்; பாரதியின் புகழை இடைவிடாது பரப்பியவர்; பாரதியாருக்குத் தன் அருமையான கவிதைகளினால் புகழாரம் சூட்டியவர் – இத்தனை பெருமைக்கும் உரியவர் பாரதிதாசன்.

 

புதுவையில் வாழ்ந்த காலத்தில் பாரதியார் பற்றி அதிகாரபூர்வமாக நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லும் பாங்கும் வன்மையும் தொடர்பையும் பெற்றவர் பாரதி தாசன் என்பதால் பாரதியார் பற்றிய அவரது எழுத்துக்களும் கவிதைகளும் மிக முக்கியமானவை.

 

பாரதிதாசன் கவிதைத் தொகுப்புகளில் அவர் பாரதிக்குச் சூட்டிய கவிதை முத்தாரங்களைப் படித்து மகிழலாம்.

அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட கவிதை ‘புதுநெறி காட்டிய புலவன்” என்ற கவிதையாகும்.

அதில் வரும் வரிகள் வைர வரிகள்:

 

பைந்தமிழ்த் தேர்ப்பாகன். அவனொரு

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!

குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா;

காடு கமழும் கற்பூரச் சொற்கோ;

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்

திறம் பாட வந்த மறவன்; புதிய

அறம் பாட வந்த அறிஞன்; நாட்டிற்

படரும் சாதிப் படைக்கு மருந்து!

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்;

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்;

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்’                   தமிழால், பாரதி தகுதி பெற்றதும்

தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்

எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்

 

இப்படி இனிய கம்பீரமான அழகிய சொற்களால் பாரதியைப் போற்றி மகிழ்ந்தார் பாரதிதாசன்; இந்தப் பாடலைப் பாடி மகிழ்கிறோம் நாம்!

“பாரதி உள்ளம்” என்ற கவிதையில்,

மேலவர் கீழவர் இல்லைஇதை

மேலுக்குச் சொல்லிட வில்லை

 

என்று கூறும் கவிஞர் பாரதியார் ‘நாலாயிரத்தவர் காண, தோலினில் தாழ்ந்தவ்ர் என்று சொல்லும் தோழர் சமைத்ததை உண்பார்’ என்று கூறுகிறார்.

 

கல்கி ஆரம்ப காலத்தில் பாரதியாரை உலக மகாகவி என்று சொல்ல முடியாது என்று ஆனந்தவிகடனில் எழுதிய போது வெகுண்டெழுந்தார் பாரதிதாசன்.

 

ஞானரதம் போலொரு நூல் எழுதுதற்கு

    நானிலத்தில் ஆளில்லை; கண்ணன் பாட்டுப்

போல் நவிலக் கற்பனைக்குப் போவதெங்கே?

    புதிய நெறிப் பாஞ்சாலி சபதம் போலே

தேனினிப்பில் தருபவர் யார்? மற்றும் இந் நாள்

  ஜெய பேரிகை கொட்டடா என் றோதிக்

கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்

  கொட்டி வைத்த கவிதை திசை எட்டும் காணோம்

 

என்று முழங்கி அடுக்கடுக்கான காரணங்களை அள்ளி வீசி மஹாகவி சாதாரண கவிஞர் அல்ல; உலக மகா கவி என்று சான்று காட்டி நிறுவினார்.

 

பின்னால் கல்கி மனம் மாறி பாரதிக்கு மணி மண்டபம் அமைத்ததை நாம் அறிவோம். அதற்குக் காரணமாய் அமைந்த பாரதி தாசர்களில் முத்ல் தாசனாக பெயரில் மட்டுமல்லாமல் செயலிலும் அமைந்தார் பாரதி தாசன்.

 

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதையில் இந்தத் தலைப்பில் பாரதியார் பாடிய கவிதை எப்படி எதனால் பிறந்தது என்ற கதையைச் சொல்கிறார் பாரதிதாசன்.

 

மதுரைத் தமிழ்ச்சங்கம் “தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால் அமைவான பாட்டுக்களிப்போம் பரிசு” என்று அறிவிப்பை வெளியிட அதனால் அன்பர்கள் பாரதியாரை வேண்ட அவர் எழுதிய கவிதை தான் செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதை!

 

 

திருப்பள்ளியெழுச்சி என்ற பாடலை பாரதியார் ஏன் பாடினார்? அதற்கான விடையைத் தருகிறார் தன் கவிதையில் பாரதிதாசன்.

ஒரு நாள், “பொற்பு மிகும் மடு நீரினில் ஆடிடப் போகும் வழியினில்” நண்பர் ஒருவரைப் பெற்ற முதுவயதன்னையார் அவரை வேண்டிக்கொள்ள, அவர் திருப்பள்ளி எழுச்சி பாடலைப் பாடினார்.

 

 

நாடக விமர்சனம் என்ற கவிதையில் பாரதியார் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றைக் கவிஞர் தருகிறார்.

ஒரு நாள் அனைவருடனும் ஒரு நாடகம் பார்க்கச் சென்றார் பாரதியார். அதில் விஷமருந்திய மன்னன் ஒருவன், “என்றனுக்கோ ஒருவித மயக்கந்தானே வருகுதையோ” என்று பாடத் தொடங்கினான். இதைக் கேட்ட பாரதியார், மயக்கம் வந்தால் படுத்துக் கொள்ள வேண்டியது தானே! வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா?” என்றார்.

 

 

அனைவரும் சிரித்தனர். இயல்புக்கு அல்லாததை ஒரு நாளும் ஏற்றவர் இல்லை கவிஞர் பிரான்.

 

பாரதியாரைப் பற்றி தெள்ளு தமிழ் வார்த்தைகளில் பாரதி தாசன் எழுதிய கவிதைகள் காலத்தால் அழியாதவை.

 

பாரதி இயலில் ஆர்வம் கொண்டோர் பாரதியாரைப் போற்றி பாரதிதாசன் இயற்றிய கவிதைகளைப் படித்தால் களியுவகை கொள்வது நிச்சயம்!

***

கம்பன் தீந்தமிழ் உண்டு கர சிரக்கம்பம் செய்வோம் வாரீர்!! (Post No.4103)

Written by S NAGARAJAN

 

Date: 22 July 2017

 

Time uploaded in London:- 5-28 am

 

 

Post No.4103

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

கம்பன் கவி இன்பம்

 

‘கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! மற்றும் ‘சொல் கண்டார் சொல்லே கண்டார்; ஞான எல் கண்டார் எல்லே கண்டார் ஆகிய கட்டுரைகளைத் தொடர்ந்து வரும் கட்டுரை இது.

 

பல அன்பர்கள் திரு கே.என். சிவராஜபிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை எங்கு கிடைக்கும் என்று கேட்டுள்ளனர்.

 

இந்த நூலை ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளின் முடிவில் மதுரையைச் சேர்ந்த சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர் திரு சொ.சொ.மீ சுந்தரம் எனக்குக் கொடுத்தார். உடனே அதை ‘படி எடுத்துக் கொண்டு அவரிடம் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தேன். ஆனால் அவரோ இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று அன்புடன் கூறினார். ஆனால் கடந்த நாற்பதுக்கும் மேலான வருடங்களில் பல இட மாற்றங்கள்; பல புத்தகங்கள் பலரிடம் சென்று விட்டன. ஆகவே இந்தப் புத்தகம் என்னிடம் இல்லை; ஆனால் எழுதி வைத்த கைப்பிரதி இருக்கிறது. அதை அப்படியே தருகிறேன்.

 

கம்பன் தீந்தமிழ் உண்டு கர சிரக்கம்பம் செய்வோம் வாரீர்!!

ச.நாகராஜன்

 

அற்புத கம்ப ரசிகரரும் கவிஞருமான கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயணக் கவுத்துவ மணிமாலையின் புகழைத் தனியே எடுத்துச் சொல்ல வேண்டாம். பாடல்களை ஒரு முறை படித்தாலேயே போதும் அதன் பெருமை தானாகவே புரியும்.

 

இரண்டாவது பாடலாக மலரும் பாடல் இது:

 

 

தேவ பாஷையில் இக்கதை செய்தவன்

யாவனோ அவன் பாவெனும் ஆவிநின்

றேவில் ராமன் தமிழ்க்கதை யாறெழுத்

தோவில் தெக்கணம் எங்கும் உலாயதே

 

 

   வடமொழியில் இந்த ராமகதையை இயற்றிய பெரும் புலவனாம், வான்மீகி முனிவனுடைய கவி என்னும் தடாகத்திநின்றும் உற்பத்தியாகி, கூரிய அம்போடு கோதண்டம் என்னும் வில்லைத் தரித்த ஸ்ரீ ராமனுடைய தமிழ்க்கதையாகிய ஆறு அழிதலில்லாத தென் தேசமாகிய தமிழ் நாடெங்கும் பரவிப் பாயா நின்றது.

 

மூன்றாம் பாடல்:

 

கம்பம் வேய்ந்த குடில்வைகு வார்மணிக்

கம்பம் வாய்ந்த பொன் மாளிகை கண்டவா

கம்பன் தீந்தமிழ் உண்டு கரசிரக்

கம்பம் செய்து கவிஞர் களிப்பரால்

 

(புல்லிய) கம்புகளினால் தெற்றப்பட்ட குடிசைகளில் இதுவரையும் வசித்து வந்த தமிழ்க் கவிஞர் மாணிக்கத் தூண்களால் தாங்கப் பெறும் பொன் மாளிகை ஒன்றினுட் புகுவாராகில் அவர் எத்துணை மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைவார்களோ அத்துணை மகிழ்ச்சியும் ஆச்சரியமும் கம்பனுடைய இனிய தமிழ்ப் பாவைப் பருகுவதனால் அடைந்து அவ்வுணர்ச்சிகளைத் தம் தலை அசைத்தலாலும் கை கொட்டலினாலும் வெளியிட்டு உலகத்தார் அறிந்து கொள்ளும்படி செய்வர்.

 

காமர் பூவுதிர் எனத் தொடங்கும் நான்காம் பாடல் ஏற்கனவே முந்தைய கட்டுரையில் வழங்கப்பட்டது.

ஐந்தாம் பாடல்:-

 

வான யாறு மடுத்த ப்ரவாகமோ?

கான யாறெனும் கங்கை திரண்டதோ?

தேனினால் நனி சிந்துறும் சிந்தென்ப

தேன்?இரா தமுதத்தும் இதன் சுவை!

 

(அன்றி இக்கம்ப ராமாயணத்தை) ஆகாசகங்கை பொங்கி வழிந்த ஒரு பெரு வெள்ளத்தோடு ஒப்பிடுவேனோ? அன்றி, அடவி வழி ஊடுருவிச் செல்லும் கங்கா நதியின் திரண்ட ஜலப்பெருக்கோடு ஒப்பிடுவேனோ? (தேனினுமினிய) தேவாமிர்தத்திலும் இதனுடைய இனிமை இல்லாதிருக்கும் பொழுது தேன் கூண்டுகள் இனிய தேனைச் சிந்தப் பெருகின ஒரு தேன் கடலோடு ஒப்பிடுவது பயன் தராத உவமையாம்.

 

கவிஞர் சிவராஜ பிள்ளை எப்படியெல்லாமோ முயன்று பார்க்கிறார்.

 

ஆகாய கங்கையின் பொங்கி வழியும் ப்ரவாகமா?

தேன் கடலா?  திவ்விய அமுதா?

எதைச் சொன்னாலும் அது சரியான உவமை ஆகாது.

 

    உணர்ச்சி பொங்க வார்த்தை வராது தோற்கும் நிலையில் கண்களில் நீர் வர, தலையை அசைக்க, கையைத் தட்ட – இதைப் பார்க்கும் அன்பர்கள் கம்பனின் பெருமையைத் தானே உணர வேண்டியது தான்!

 

அற்புத ரசிகக் கவிஞர் சிவராஜ பிள்ளையின் இதர பாடல்களையும் இனி  சுவைத்து மகிழ்வோம்.

****

 

 

மஹாத்மாவும் மகா கவியும் (Post No.4094)

Written by S NAGARAJAN

 

Date: 19 July 2017

 

Time uploaded in London:- 5-56 am

 

 

Post No.4094

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

மஹாத்மாவும் மகா கவியும்

 

 

பாரதி இயல்  

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 35

மஹாத்மாவும் மகா கவியும்! – கல்கியின் கட்டுரைகள்!

 

ச.நாகராஜன்

 

பாரதியாரைப் போற்றி கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய தொண்டைத் தமிழ்நாடு நன்கு அறியும்.

 

அவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு காந்தி பக்தராகத் திகழ்ந்ததோடு தனது கல்கி பத்திரிகையில் அவ்வப்பொழுது மஹாத்மாவைப் போற்றி சீரிய கட்டுரைகள் பலவற்றையும் எழுதி வந்தார்.

 

மஹாத்மாவும் மகாகவியும் என்ற நூல் மஹாத்மாவைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளையும் மகாகவிக்கு எட்டயபுரத்தில் எழுப்பப்பட்ட ஞாபகச் சின்ன விழா பற்றிய கட்டுரைகளையும் தொகுத்து வழங்குகிறது.

 

தலைப்பைப் பார்த்து மஹாத்மாவும் மகாகவி பாரதியாரும் சந்தித்த விஷயத்தையோ அவர்கள் தொடர்புடனான கட்டுரைகளோ இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் என்று நினைத்தவர் ஏமாந்தே போவர்.

 

காந்திஜி பற்றிய பத்து கட்டுரைகளும் பாரதியார் பற்றிய எட்டு கட்டுரைகளும் கொண்ட 103 பக்கங்கள் அடங்கிய இந்தச் சிறு நூல் 1957ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.

 

வெளியிட்டோர் : பாரதி பதிப்பகம், தியாகராய நகர், சென்னை -17.

எட்டயபுரத்தில் நடந்த மாபெரும் விழா பற்றி மனம் நெகிழ்ந்து  வந்தனம் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை பாரதியார் பற்றிய எட்டுக் கட்டுரைகளில் முதலாவதாக அமைகிறது.

 

 

அதில் கல்கி கூறுகிறார்: “ என்னுடைய சொந்த அனுபவத்தில், மனிதனுடைய புலன்களுக்கும் அறிவுக்கும் எட்டாத சக்தி ஒன்று இருப்பதாக நான் உணர்ந்திருக்கிறேன். அத்தகைய சக்தியானது வெறும் குருட்டுத்தனமான சக்தியல்ல! ஏதோ ஒரு ஒழுங்கின்படி, ஒரு நியதியின்படி, இந்த உலகத்தையும் இதில் நடைபெறும் சகல காரியங்களையும் நடத்தி வருகிறது என்றும் நான் நம்புகிறேன்.

 

அந்த சக்தியானது தற்சமயம் தமிழ்நாட்டை ஒரு மகோந்நதமான நிலைக்குக் கொண்டுபோகும் மார்க்கத்தில் நடத்திக் கொண்டு வருகிறது என்று நான் பரிபூரணமாய் நம்புகிறேன். பாரதியார் பாடிப் பரவியுள்ள பராசக்தி அதுதான் போலும்.

 

அந்த மகாசக்தியின் காரணமாகத்தான் எட்டயபுரத்தில் நாம்  கண்ட அற்புதம் நிகழ்ந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. மற்றப்படி மனிதப் பிரயத்தனத்தினால்  மட்டும் அவ்வளவு மகத்தான ஒரு வைபவம் நடந்திருக்கக்கூடும் என்று என்னால் நம்ப முடியவில்லை.

 

கல்கி அவர்கள் தனது சக பத்திரிகாசிரியர்களுடன் தான் நடத்திய விவாதங்களைக் குறிப்பிட்டு அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் அனைவரும் இந்த மாபெரும் விழாவிற்கு ஒத்துழைப்புக் கொடுதததற்கு நன்றி தெரிவிக்கிறார்.

“ஸி.ஆர்.சீனிவாசன் அவர்களைப் போன்ற பத்திரிகாசிரியர்களும் வ.ரா போன்ற எழுத்தாளர்களும் மற்றும் பல தமிழன்பர்களும் பல காலமாகச் செய்து வந்த இடைவிடாத பாரதி பிரசாரத்தின் பலனாகத்தான் இப்போது எட்டயபுர ஞாபகச்சின்னம் ஏற்படுகின்றது” – கல்கியின் இந்த வார்த்தைகள் தமிழ்நாடே ஒரு மனதாக மகாகவிக்கு ஞாப்கச்சின்னம் அமைப்பதில் ஈடுபட்டிருந்ததை உணர வைக்கிறது.

 

அடுத்த கட்டுரை புதுச்சேரியில் பாரதி விழாக் கொண்டாட்டம் நடைபெறுவதைக் குறிப்பிடுகிறது.

 

விண்ணுலகில் இருக்கும் பாரதியாரை வ்.வே.சு ஐயர் புதுவைக்கு அழைத்து வருகிறார். ஒரே கோலாகலம். என்ன என்று கேட்கும் பாரதியாருக்கு வ்.வே.சு.ஐயர்  “பாரதி விழாக் கொண்டாட்டம் நடக்கிற்து” என்று கூற பாரதியார்.”பாண்டியா! ஆச்சரியத்தினால் மூர்ச்சை அடைந்து விடுவேன்” என்கிறார்.

 

இப்படி ஆரம்பிக்கும் கட்டுரை 1945ஆம் ஆண்டு புதுவையில் நடந்த பாரதியாரின் கோலாகலக் கொண்டாட்ட விழாவை அழகுறச் சித்தரிக்கிறது.

 

அடுத்த கட்டுரை எட்டயபுரத்தில் என்ற கட்டுரை. பாரதியாரின் ஞாப்கச் சின்னத்திற்கு பிளான் போட்டுக் கொடுத்தவர் எஸ்.எம்.சித்தலே (F.R.I.B.A., F.I.I.A., A.M.T.P.T.) மகாராஷ்டிரா தேசத்தவர்.  இந்தியா தேசத்திலேயே பிரசித்தி பெற்ற நிபுணர்.

இவரைப் பற்றியும் நிதியைப் பற்றியும் விளக்குகிறது கட்டுரை.

 

அடுத்த கட்டுரை இரண்டு கவர்னர்கள். “ஹெர் எக்ஸலன்ஸி கவர்னர் சரோஜினி தேவியாரும், மேற்கு வங்க கவர்னர் ராஜாஜியும் மணி மண்டபத் திறப்பு விழாவிற்கு அக்டோபர் 12, 13 தேதிகளில் வரவிருப்பதைச் சுட்டிக் காட்டும் கட்டுரை.

இதோ ஒரு அற்புதம் என்ற அடுத்த கட்டுரை காணி நிலம் வேண்டும் என்று கேட்ட மகாகவிக்கு ஞாபகச் சின்ன மண்டபம் எழுப்பி தமிழ் மக்கள் அவரது காணி நில கோரிக்கையை நிறைவேற்றி விட்டன்ர் என்று கூறும் கட்டுரை!

பேசும் பொற்சித்திரம் என்ற கட்டுரை சின்னஞ்சிறு கிளியே – கண்ணம்மா, செல்வக் களஞ்சியமே பாடலின் சிறப்பைப் புகழ்ந்து கூறுகிறது.

 

கட்டுரையின் கடைசி பாரா:-

 

“எளிய, கொஞ்சும் தமிழில் பாடப்பட்ட இந்த ஒப்புயர்வற்ற கவிகள் தமிழுக்கு ஒரு பொக்கிஷம்; தமிழ் நாட்டுக் குழந்தைகளுக்கு மகாகவி அளித்த ஈடு இணையில்லாத பரிசு; உண்மையாகவே அட்சரலட்சம் பெறக் கூடிய பாடல்கள்.

 

அற்புதமான் இந்த கல்கியின் வரிகளே அட்சர லட்சம் பெறும்.

 

ஆனால் பாரதியாரின் இந்தப் பாடல் அவர் குழந்தைகளுக்கு அளித்த பரிசு மட்டும் அல்ல; உலகிற்கே அளித்த பரிசு. தமிழின் உயர்வுக்கு அளித்த பரிசு.

 

நீண்ட நீடூழி நெடுங்காலம் இந்தப் பாடலின் புகழ் ஓங்கி நிற்பதைத் தமிழர்கள் மனக்கண்ணால் உணரலாம்.

 

பாடுவோம் கொண்டாடுவோம் என்ற கட்டுரை பாரதி விழாக் கொண்டாட வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

 

கடைசிக் கட்டுரையான பாரதியாரின் இலட்சியங்கள் அவரது லட்சியங்களை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என்ற நல்லுரையுடன் முடிகிறது.

 

ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் பாரதியாருக்கு உரிய விதத்தில் ஞாபகச் சின்ன மண்டபம் அமைக்க கல்கி எடுத்த முயற்சிகள் ஒரு பெரிய அரிய காரியம்.

 

அந்தப் பணியில் பாரத நாடெங்கும் உள்ள இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் ஓரணியில் இணைந்தனர். கல்கியின் கனவு நனவாயிற்று.

 

பாரதி இயலில் பாரதியார் பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்ச்சி எப்படி ஏற்பட்ட்து என்பதை விளக்கும் ஒரு நூல் இது.

பாரதி அன்பர்களுக்கு கல்கியின் வெல்லமெனத் தித்திக்கும் தமிழ்க் கட்டுரைகள் இதில் உள்ளன.

 

போனஸாக அண்ணல் காந்தியடிகளைப் பற்றிய கட்டுரைகள் வேறு! படித்து ஆனந்திக்கலாம்!

***

சொல் கண்டார் சொல்லே கண்டார்– கம்பன் கவி இன்பம் (Post No.4088)

Written by S NAGARAJAN

 

Date: 17 July 2017

 

Time uploaded in London:- 5-59 am

 

 

Post No.4088

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 IMAGES OF SRI RAMA FROM FACEBOOK FRIENDS;THANKS.

 

கம்பன் கவி இன்பம்

 

கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! என்ற கட்டுரையைத் தொடர்ந்து வரும் கட்டுரை இது.

 

சொல் கண்டார் சொல்லே கண்டார்; ஞான எல் கண்டார் எல்லே கண்டார்!

ச.நாகராஜன்

 

 

கம்பனை அணு அணுவாக, சொல் சொல்லாகச் சுவைத்து ரசிக்கும் கவிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை தனது அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்:

 

சொல் கண்டார் சொல்லே கண்டார்; சொல்லினுட் சொலிக்கும் ஞான

எல் கண்டார் எல்லே கண்டார்; இனிமையோடிகலுஞ் சந்த

மல் கண்டார் மல்லே கண்டார்; மகிழ்கவித் துறைகை போய

வல் கண்ட புலவர் யாரிவ் வரகவி முடியக் கண்டார்?!!!

 

 

சொல்லைக் கண்டவர் கம்பனின் சொல் வண்ணத்தில் மூழ்கி விடுவார்கள். ஒரு சொல்லா, இரண்டு சொல்லா? ஒரு பாடலுக்கு நான்கு வரிகள்; ஒரு வரிக்கு சுமாராக ஆறு சொற்கள் என்று வைத்துக் கொண்டாலும் பத்தாயிரம் பாடலுக்கு சுமார் இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் சொற்கள். இவற்றில் பெர்முடேஷன் காம்பினேஷன் போட்டால் நமக்கு வரும் எண்ணிக்கை பல பல கோடிகள். அவ்வளவு விதமாக சொல்லோடு சொல்லினை இணத்து, சொற்றொடர்களை ஒன்றுடன் இன்னொன்றை ஒப்பிட்டு, அர்த்தங்களை அறிந்து, புரிந்து சுவைப்பது என்றால் ஒரு ஜென்மத்தில் நடக்கக் கூடிய காரியமா என்ன.

 

சொல்லைப் பார்க்கப் போய் சொல்லினுள் ஞான எல்லை, (எல் என்றால் ஒளி) – ஞான ஒளியைக் கண்டால் அதிலிருந்து மீள்வது எங்ஙனம்?

 

 

சொல்லினுள் ஜொலிக்கும் ஞான ஒளி கண்டவர் கண்டவரே; அதிலிருந்து அவர் எப்போது எப்படி மீள்வாரோ? யாருக்குத் தெரியும்.

 

சந்த இனிமையைக் கண்டவர்கள் அதிலேயே மாட்டிக் கொள்வார்கள்.

 

இப்படி இருக்கும் போது தமிழின் துறைகளை நன்கு கையாண்ட கம்பனின் கவிதையின் முடிவை முழுதுமாக யார் கண்டார்கள்.

 

 

இவ் வரகவியை “முடியக் கண்டவர்கள் யாரும் இலர்.

கே.என். சிவராஜ பிள்ளையுடன் ஓங்கிய குரலில் நாமும் ஆம், யாரும் முடியக் காண முடியாது என்று கூவுகிறோம்.

தோள் கண்டார் தோளே கண்டார் பாடலில் கம்பன் ராமனின் அழகை முடியக் கண்டவர் யாரும் இல்லை என்று ஒரு ‘போடு போடுகிறான் இல்லையா!

 

 

அதே “போடை அவருக்கே போடுகிறார் சிவராஜ பிள்ளை.

அற்புதமான பாடல் தானே இது?

கம்ப ராமாயணக் கவுத்துவ மணி மாலையில் (கம்பராமாயணக் கௌஸ்துப மணிமாலை) 72வது பாடலாக மலர்கிறது இது.

51வது பாடலில் இதையே வற்புறுத்துகிறார் அவர் இப்படி:

 

 

சொல்வளம் பெரிதென்கோ யான்? சொல்லினுட் டுளும்பு ஞான

நல்வளம் பெரிதென்கோ யான்? நவையறு மணிகள் வீசும்

வில்வளம் பெரிதென்கோ யான்? வியங்கியம் விழுமி தென்கோ?

பல்வளம் செறிந்து பண்ணாம் பரிமள மியன்ற பாவில்!

 

 

சொல்வளமா?

ஞான நல் வளமா?

மணிகள் வீசும் வில் வளமா?

அடடா, அனைத்தும் இணைந்து பல்வளம் செறிந்து காணும் கம்பனின் பண் கொண்ட பாடலை எப்படிப் புகழ்வது?

எங்களுக்கும் தெரியவில்லை.

 

கம்பன் புகழே புகழ்; அவன் பாடலே பாடல் என்று கவிஞர் சிவராஜ பிள்ளையுடன் மகிழ்ச்சியுடன் இணைந்து ஓர் குரலாய்க் கூவுகிறோம் நாம்.

அழகிய இந்த நூலில் வரும் பாடல்கள், கம்ப ராமாயணத்தில் வரும் முக்கியச் செய்யுள்களை நினைவுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்பதைக் கம்பனைக் கற்றோர் அறிவர்!

***

 

கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! (Post No.4082)

Written by S NAGARAJAN

 

Date: 15 July 2017

 

Time uploaded in London:- 5-38 am

 

 

Post No.4082

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

 

கம்பன் கவி இன்பம்

கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை!

 

ச.நாகராஜன்

 

 

தமிழுக்குக் ‘க-தி’ – க- கம்பன் – தி-திருவள்ளுவர்.

இருவர் புகழையும் யாராலும் முழுதும் உரைக்க முடியாது.

ஏனெனில் அப்படி ஒரு ஆழம். அப்படி ஒரு  அகலம். அப்படி ஒரு வீச்சு. அதிலே தான் தமிழின் மூச்சு.

 

கம்ப ராமாயணத்தையோ அல்லது திருக்குறளையோ முழுதுமாக அதன் அகல்,ஆழ, வீச்சுடன் யாராலும் இன்னொரு மொழியில் மொழியாக்கம் செய்ய முடியாது.

 

ஏனெனில் தமிழின் திறம் அப்படி.

ஒரு சொல்லில் ஓராயிரம் அர்த்தங்களைச் சொல்லும் உன்னத மொழி தமிழ்.

 

கம்பனைப் போற்றி எழுந்த பாடல்கள் ஏராளம்; ஏராளம்.

அவற்றில் சமீப காலத்தில் எழுந்த ஒரு அழகிய நூல்

கம்ப ராமாயணக் கவுத்துவ மணிமாலை.

 

கம்பனை முழுதுமாக ரசிக்கத் துடித்த கம்ப ரசிகர் கே.என்.சிவராஜ பிள்ளை அவர்கள் இயற்றிய அற்புதமான நூல் இது.

18-6-̀1968இல் எனது குறிப்புப் புத்தகத்தில் நான் எழுதி வைத்துள்ள பாடல்கள் 90. (தொண்ணூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் உண்டா எனத் தெரியவில்லை)

 

ஒவ்வொன்றும் கம்பனின் புகழ் பாடும் சுவை மிகுந்த பாடல்.

 

கம்பன் என்னும் ஓர் காளமே கம்தமிழ்

அம்பு ராசி அ டங்கலும் மொண்டு வான்

பம்பும் ஆரிய மாம் இம யம்படிக்

கிம்பர் நாட்டிற் கிறைத்ததண் வாரியே

 

என்று தொடங்குகிறது நூல்.

 

கம்பன் என்னும் இயற்கை வளம் நிறைந்து இருண்ட ஒரு மேகம் எழுந்து சென்று தமிழ் இலக்கிய இலக்கணக் க்டல் முற்றிலும் உண்டு அதனோடு அமையாது வானம் அளாவி ஓங்கி நிற்கும் வடமொழியாகிய சம்ஸ்கிருதம் என்னும் இமயமலையிற் சென்று படிந்து ஆங்குச் சூல் முதிர்ந்து இந்நாட்டுள்ளார் அனைவரும் பருகித் தழைக்கும் வண்ணம் பொழிந்த குளிர்ச்சியான மழைத்தாரையாகும் – இக்கம்ப ராமாயண மகா காவியம்.

 

குறிப்பு: மஹாகவியாகிய கம்பன் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஆழ்ந்தகன்ற பாண்டித்தியமுடைய ஒரு பெரும் புலவன் என்ன இங்குக் குறிப்பிடப்படுகின்றது.

 

 

இப்படித் தொடங்குகிறது நூல்.

 

முதல் பாடலிலேயே சம்ஸ்கிருத வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி இன்றி

கம்பன் தொட்ட மூலத்தைச் சுட்டிக் காட்டுகிறார் கவிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை.

 

முக்கியமான ஒரு விஷயம் அந்தக் காலத்தில் , அதாவது ஆயிரத்த்தி தொள்ளாயிரத்து அறுபதுகளுக்கு முன்னர் தமிழகத்தில் சம்ஸ்கிருதமும் தமிழும் இரு கண்கள் எனத் தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டு வந்தது.

சம்ஸ்கிருதம் அறிந்த பான்மையினால் தமிழின் வளத்தையும் சிறப்பையும் நன்கு அனுபவிக்க முடிந்தது. தமிழின் தனிச் சிறப்பை ஓங்கிய குரலில் உலகுக்கு எடுத்துரைக்கவும் முடிந்தது.

 

காமர் பூவுதிர் கற்பகக் காக்கொலோ?!

பூமகள் செவ்வி பொங்கும் பயோதமோ?!

நாமகள் மெய்ந் நடம் செயும் ரங்கமோ?!

பாமகார் பதிகம்பன் நற் பாடலே

 

கம்பனின் காவியம் அழகிய பூக்களைச் சொரியும் கற்பகக் கா வா?

இலக்குமி தேவியினுடைய ஐசுவரிய அழகு பெருகித் ததும்பும் பாற்கடல் தானோ?

 

அல்லது சரஸ்வதி தேவி தன் முழு மேனியும் கொண்டு நடனம் செய்யும் ஒரு நாடக சாலையோ?

இவற்றில் எவற்றுடன் கம்பனை நான் ஒப்பிடுவேன்.

அனைத்தையும் ஒப்பிடலாம்; அதற்கு மேலும் ஒப்பிடலாம்!

என்பது கவிஞரின் கருத்து.

 

இப்படி தொண்ணூறு பாட்ல்களில் கம்பனின் தமிழ் அமுதத்தைச் சுவைத்த பான்மையை மிக அருமையாகச் சொல்கிறார் சிவராஜ பிள்ளை.

அவரது தமிழ் வன்மையையும் சுவைக்கும் பான்மையினையும் இந்த நூலில் காணலாம்.

கம்ப ராமாயணத்தைச் சுவைக்கும் அன்பர்களுக்கு இந்த நூல் ஒரு அமுத நூல்!

***

பாரதியாரின் தம்பி (Post No.4076)

Written by S NAGARAJAN

 

Date: 13 July 2017

 

Time uploaded in London:- 5-44 am

 

 

Post No.4076

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 34

பாரதியாரின் தம்பி பரலி சு.நெல்லையப்பரின் வாழ்க்கைச் சித்திரம்

 

ச.நாகராஜன்

 

 

பாரதியாருடன் தொடர்பு கொண்டவர்களில் குறிப்பிடத்தகுந்தந்தவர் பரலி.சு.நெல்லையப்பர்.

இவரைப் பற்றிய இந்த நூல் சிறிதென்றாலும் (80 பக்க நூல்) சிறப்பானது. பல முக்கிய விஷயங்களைத் தரும் அரிய நூலாக அமைகிறது.

இதை எழுதியவர் பாரதி அன்பர் எதிரொலி  விசுவநாதன் (திருவாரூர் சு.விசுவநாதன்)

 

 

பரலி சு.நெல்லையப்பர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த நூல் இது.செப்டம்பர் 1969இல் முதல் பதிப்பைக் கண்டது.

18 அத்தியாயங்களில் பாரதியார் பற்றிய பல முக்கிய செய்திகளை அறிந்து கொள்கிறோம்.

நூலில் வரும் சில முக்கிய செய்திகளைப் பார்ப்போம்.

 

 

மகாகவி பாரதியார் பிறந்து ஏழு வருடங்களுக்குப் பின் அம்மகாகவியின் பெருமையை நாட்டிற்குணர்த்த இருவர் அடுத்தடுத்துத் தோன்றினர். ஒருவர் வ.ராமசாமி ஐயங்கார். 1889 செப்டம்பர் 17ல் தோன்றியவர்.அடுத்தவர் பரலி.சு.நெல்லையப்பர் 1889 செப்டம்பர் 18ல் தோன்றியவர்.

என்ன ஒரு அதிசயம். இருவரும் அடுத்தடுத்த நாளில் பிறந்திருக்கின்றனர்!

 

 

1908ஆம் ஆண்டு ஒரு நாள் காலை பத்து மணிக்கு வ.உ.சிதம்பரனாரின் வீட்டுக்கு வந்த பாரதியார் எதிர்பாராதவிதமாக பிள்ளையார் வீட்டின் முன் பகுதியில் அமர்ந்திருந்த நெல்லையப்பரின் கையைப் பற்றி ‘ஓய்- நம்மோடு வாரும்’ என்றவாறு வெளியே இழுத்துக் கொண்டு சென்றார்.

 

இது தான் அவரது முதல் சந்திப்பு!

*

சிதம்பரனார் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டித்து நெல்லையப்பர் ஒரு கட்டுரையை பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு அனுப்ப அது இந்தியாவில் பிரசுரிக்கப்பட்டு அதன் பிரதி ஒன்று அவர் வீட்டிற்கு வந்தது

*

புதுவைக்குச் சென்ற நெல்லையப்பர் அங்கு சூரியோதயம் பத்திரிகையில் வேலை செய்ய ஆரம்பித்தார். பாரதியின் வீட்டிலேயே (கலவை பங்களாவை விட்டு) தங்க ஆரம்பித்தார்.

*

அரவிந்தர் புதுவைக்கு டூப்ளே என்ற கப்பல் மூலம் பகல் ஒரு மணிக்கு வந்த போது பாரதியார் சீனுவாசாச்சாரியோரோடு நெல்லையப்பரும் அவரை வரவேற்கும் பேறு பெற்றார். நெல்லையப்பர் குடை பிடித்தார். பாரதியாரும் சீனுவாசாச்சாரியாரும் அரவிந்தர் பக்கத்தில் வந்தார்கள்.

 

அரவிந்தரும் பாரதியாரும் ஆங்கிலத்திலேயே உரையாடுவார்கள்.இடையிடையே எழும் சிரிப்பொலிகள் அவர்களின் தோழமையை எடுத்துக் காட்டும். அரவிந்தருக்குப் பிறகே வ.வே.சு. அய்யர் புதுவை வந்து சேர்ந்தார்.

*

திருப்பள்ளி எழுச்சி சூரியோதயம் பத்திரிகையில் வெளியானபோது முதற் பாட்டில் இரண்டாவது அடியாக,

 

எழும் பசும் பொற்சுடர் எங்கணும் பரவி

எழுந்து விளங்கியத றிவெனும் பரிதி

 

என்பதில் கடைசியான பரிதி என்ற சொல்லை மாற்றி இரவி என்ற சொல்லைப் போட்டால் அழகாக இருக்குமென்றும், மேலே பரவி என்றிருப்பதால் அதனையடுத்து இரவி என்றிருந்தால் ஓசைநயம் சிறப்பாக இருக்குமென்றும் பாரதியாரிடம் நெல்லையப்பர் சொன்னார். பாரதியார் உடனே இரவி என்ற சொல்லை ஏற்றுக் கொண்டார். இப்படி ஏற்றுக் கொண்டதன் மூலம் பாரதியார் நெல்லையப்பருக்கு தமிழ் ஆர்வத்தையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தினார்.

*

1917ம் ஆண்டில் கண்ணன் பாட்டு இரண்டாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டது. அச்சிட்ட கண்ணன் பாட்டுப் புத்தகங்களில் ஒரு பகுதியை நெல்லையப்பர் புதுச்சேரியிலிருந்த பாரதியாருக்கு அனுப்பி வைத்தார்.

பாரதியாரின் முழுநூல் ஒன்று புத்தக வடிவம் பெற்று முதன் முதலில் வெளிவந்தது குறித்து பாரதியார் பரமானந்தம் அடைந்தார். ஏதோ செயற்கருஞ்செயல் செய்த தீரனாக நெல்லையப்பரைப் போற்றினார்.

 

கண்ணன் பாட்டுக்கு அடுத்தபடியாக நாட்டுப் பாட்டு,முரசுப் பாட்டு, பாப்பாப் பாட்டு என்ற மூன்றும் நெல்லையப்பரால் பதிப்பிக்கப்பட்டது. 12 பக்கங்கள் கொண்ட முரசுப் பாட்டின் விலை அரையணா தான்.

**

 

நெல்லையப்பர் பதிப்பித்த நூல்களின் விவரங்களை விளக்கமாக இந்த நூலில் காணலாம்.

 

பாரதியாரின் கடைசி நாளான 1921ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியன்று தான் பாரதியார் நோய்வாய்ப்பட்டிருந்த விஷயம் நெல்லயப்பருக்கு எட்டியது. நெல்லையப்பர் திருவல்லிக்கேணி மாடவீதியில் குடியிருந்த டாக்டர் ஜானகிராம் என்பவரை அழைத்துக் கொண்டு வந்து பாரதியாரின் உடல் நிலையைக் கவனித்தார். ஆனால் பாரதியார் தனக்கு எந்த மருந்தும் வேண்டாமென்று  டாக்டரிடம் கண்டிப்பாகக் கூறிவிட்டார். அன்றிரவெல்லாம் பாரதியார் மயக்க நிலையிலேயே கிடந்தார். நெல்லையப்பரும் அவருடைய நண்பர் லட்சுமண அய்யர் என்பவரும் இரவு முழுவதும் பாரதியார் பக்கத்திலேயே அமர்ந்திருந்தார்கள். பாரதியார் படுக்கையிலிருந்து  அடிக்கடி எழுவதும்  மீண்டும் படுப்பதுமாக எமனுடன் போராடிக் கொண்டிருந்தார். பின்னிரவு சுமார் ஒன்றரை மணிக்கு பாரதியாரின் மூச்சு அடங்கியது.

 

பாரதியாரின் பொன்னுடலை நெல்லையப்பர், லட்சுமண் அய்யர், ஆர்யா, ஹரிஹரசர்மா ஆகியவர்கள் சுமக்கும் பேறு பெற்றார்கள்

பாரதியாரை மிகச் சரியாகக் கணித்தவர் நெல்லையப்பர்.

“இந்த ஆசிரியன் காலத்திற்குப் பின், எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின், இவர் பாடல்களை தமிழ்நாட்டு மாதர்களும், புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை நான் இப்பொழுதே காண்கிறேன்” என்று இவ்வாறு நெல்லையப்பர் பாரதியாரைப் பற்றி எழுதியிருப்பதே அவர் பாரதியாரின் கவிதா சக்தியை எப்படித் திறம்பட மதிப்பீடு செய்திருந்தார் என்பதற்குச் சரியான சான்று.

 

*

இந்த சிறிய அழகிய நூலுக்கு நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை முன்னுரை அளித்துள்ளார்.

நாரண துரைக்கண்ணன் சிறப்புரை, வெ.சாமிநாத சர்மா அறிமுக உரை, பாரதியாரின் புதல்வியார் சகுந்தலா பாரதி வாழ்த்துரை, ம.பொ.சி., ராய.சொக்கலிங்கம் வாழ்த்துரை ஆகியவை நூலுக்குப் பெருமை சேர்க்கிறது..

 

1969ல் வானதி பதிப்பக வெளியீடாக ஒண்ணரை ரூபாய் விலையில் வெளியிடப்பட்ட அரிய நூல் இது.

பாரதி அன்பர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய நூல்களுள் இதுவும் ஒன்று.

 

எதிரொலி விசுவநாதன் பாரதி இயலுக்குப் பெருமை சேர்த்த பாரதி அன்பராகிறார்.

****

அடுத்து இன்னொரு பாரதியார் பற்றிய நூலைக் காண்போம்.

லிப்ஸ்டிக்! ஸ்டிரா!! – கம்பன் தரும் வியப்பூட்டும் சித்திரங்கள்! (Post No.4020)

Written by S NAGARAJAN

 

Date: 21 June 2017

 

Time uploaded in London:-  5-44  am

 

 

Post No.4020

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

கம்ப சித்திரம்

 

இலங்கை மங்கையின் லிப்ஸ்டிக்! அயோத்தி மங்கையின் ஸ்டிரா!! – கம்பன் தரும் வியப்பூட்டும் சித்திரங்கள்!

 

ச.நாகராஜன்

 

கவிச்சக்கரவர்த்தி கம்பன் இராமாயணத்தில் ஏராளமான சுவையான செய்திகளைத் தந்துள்ளான்.

 

உற்றுக் கவனித்து ரசிப்போர் வியப்பது நிச்சயம்.

எடுத்துக்காட்டாக அவன் லிப்ஸ்டிக்கையும் ஸ்டிராவையும் குறிப்பிட்டிருப்பதைச் சொல்லலாம்.

 

இருபதாம் நூற்றாண்டில் நவ நாகரிக மங்கையர்  மேக் அப் செய்து கொள்ளூம் போது லிப் ஸ்டிக்கைப் பூசாமல் இருப்பது இல்லை.

 

இந்த உதட்டில் பூசும் அழகிய சாயம் பற்றி கம்பன் குறிப்பிடும் பாடல் இது:

 

 

குண்டலக் குழைமுகக் குங்கும கொங்கையார்

வண்டலைத் தெழுகுழற் கற்றைகால் வருடவே

விண்டலத் தகவிரைக் குமுதவாய் விரிதலால்

அண்டமுற் றுளதவூ ரழுதபே ரமலையே

     (அக்ககுமாரன் வதைப் படலம் பாடல் 42- வை.மு.கோ பதிப்பு)

 

 

இப்பாட்டின் பொருள் : குண்டலமென்ற காதணி அணிந்த செவி உடைய முகத்தையுடைய குங்குமக் குழம்பை அணிந்த மார்பகம் கொண்டவரான இராக்ஷஸ மகளிர்  வண்டுகளை அலையச் செய்து  மேல் எழுப்பப் பெற்ற கூந்தல் தொகுதி அவிழ்ந்து காலகளிலே விழுந்து புரண்டு கொண்டிருக்க நறுமணமுள்ள ஆம்பல் போன்ற செம்பஞ்சு ஊட்டிய வாய்களை திறந்து விரிவதனால் அந்த இலங்கையில் உள்ளார் அழுத பெரும் குரலோசை மேல் உலகம் வரை எட்டிற்று.

 

 

இலங்கை ராக்ஷஸ மகளிர் செம்பஞ்சுக் குழம்பை வாயில் அழகுக்காகப் பூசியதை கம்ப சித்திரம் காட்டுகிறது.

சிந்தாமணியிலும் கூட ‘அம்மலரடியுங்கையும் அணி கிளர் பவளவாயும் செம்மலர் நுதலு நாவும் திருந்தொளி யுகிரோடங்கே, விம்மிதப்பட்டு வீழ வலத்தகமெழுதியிட்டாள் என்று வருகிறது.

 

 

அலத்தகக் குமுதம் என்பது செங்குமுதம் ஆகும். அந்தக் காலத்திலேயே மகளிர் அனைவரும் செம்பஞ்சுக் குழம்பை வாயில் பூசிக் கொள்வது வழக்கம்  என்பது தெரிய வருகிறது.

அலத்தகம் என்பது தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் வருகிறது!

 

 Ms Lalita malar maniam of Kualalumpur enjoying tender coconut water with a straw.

 

ஆக லிப்ஸ்டிக்கை சுந்தர காண்டத்தில் கூறிய கம்பன். நாம் இன்று இளநீர் குடிக்கவும், குளிர் பானங்களைக் குடிக்கவும் பயன்படுத்தும் ஸ்டிரா பயன்பாட்டையும் பால காண்டத்தில் உண்டாட்டு படலத்தில் குறிப்பிடுகிறான்.

பாடலைப் பார்ப்போம்:

 

 

 

வான் துணை பிரிதலாற்றா வண்டினம் வச்சை மாக்கள்

ஏன்றமா நிதியம் வேட்ட விரவல ரென்ன வார்ப்பத்

தேன் தரு கமலச் செவ்வாய் திறந்தன ணுகர நாணி

ஊன்றிய கழுநீர் நாளத் தாளினால் ஒருத்தி உண்டாள்.

        (பாடல் 19)

 

 

தசரதனுடன் மிதிலை நோக்கிச் சென்றது அவனது சேனை.

அப்போது நடந்த நிகழ்ச்சிகளை வரிசையாகக் கூறுகிறான் கம்பன்.

 

பிரிய மாட்டாமல் ஆகாயம் வரை வண்டுகள்  மொய்த்துக் கொண்டிருக்கின்றன.கஞ்சனிடத்தில் இருக்கின்ற பெருஞ்செல்வத்தைக் கேட்க வந்துள்ள யாசகர்கள் போல அந்த வண்டுகள் ஆர்ப்பரிக்க சேனைக் கூட்டத்தில் சென்ற ஒருத்தி  தேனைச் சொரிகின்ற தாமரை மலர் போல உள்ள தனது செந்நிற வாயைத் திறந்து  மதுவைப் பருகுவதற்குக் கூசி, செங்கழுநீரின் உள் துளையுள்ள தண்டினால் கிண்ணத்தில் இருந்ததை உறிஞ்சிப் பருகலானாள்.

மதுவைப் பருக நாணிய அயோத்தி மங்கை செங்கழுநீரின் உள் துளை உள்ள தண்டை ஸ்டிராவாகப் பயன்படுத்தினாள். அந்தத் துளை வழியே மதுவை உண்டாள்.

 

 

ஆக லிப்ஸ்டிக்கும், லிப் மூலமாக உறிஞ்சிக் குடிக்கும் ஸ்டிராவும் கூட கம்ப சித்திரத்தில் இடம் பெற்று விட்டதை எண்ணி ரசிக்கலாம்; மகிழலாம்.

 

போகிற போக்கில் கம்பன் தரும் சின்னச் சின்ன தகவல்கள் இவை.

அந்தக் காலத்திலேயே லிப்ஸ்டிக்; அந்தக் காலத்திலேயே ஸ்டிரா!

அழகு தானே!

****

யமனுக்கு அப்பரின் பாராட்டு! கம்பன் ஜாக்பாட்டு!! (Post No.4014)

Written by S NAGARAJAN

 

Date: 19 June 2017

 

Time uploaded in London:-  6-35  am

 

 

Post No.4014

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

தேவார சுகம்- கம்பன் கவி நயம்!

யமனுக்கு அப்பரின் பாராட்டும்

கம்பன் கூறிய யமனுக்கான ஜாக்பாட்டும்!

 

ச.நாகராஜன்

 

காலன் மட்டும் அறிந்த கழலடி!

 

தரும தேவதையாகத் திகழும் யமனைக் கண்டால் எல்லோருக்கும் ஒரு வெறுப்பு. பயம். கவிஞர்களுக்கோ சொல்லவே வேண்டாம்.

பாரதியார் உட்பட அனைவருமே காலா என்னருகே வாடா, உன்னைக் காலால் சற்றே எட்டி மிதிக்கிறேன் என்ற அளவில் தான் பாடுவர்.

அப்பர் பிரான் சிவனின் காலால் யமன் எட்டி உதைக்கப்பட்ட சம்பவத்தை பற்பல பாடல்களில் எடுத்துக் கூறுவார்.

ஆனால் அவரே யமனின் அதி புத்திசாலித்தனத்தைப் பாராட்டி மகிழும் பாடலும் ஒன்று உண்டு.

யமன் எப்படி புத்திசாலித்தனமாக நடந்து கொண்டான்?

சிவனின் முடியைத் தேடி அலைந்த பிரம்மாவால் அதைக் கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லை.

தோல்வி தான் மிச்சம்.

சிவனின் அடியைத் தேடிச் சென்ற விஷ்ணுவால் அடியைக் காண முடிந்ததா? இல்லை.

தோல்வி தான் மிச்சம்.

 

ஆனானப்பட்ட பிரம்மா, விஷ்ணுவால் செய்ய முடியாத காரியத்தை எப்படிச் செய்வது.

யமன் யோசித்தான்.

மாற்றி யோசித்தான். ஒரு சின்ன தந்திரம் செய்தான்.

Alternative Thinking!!

 

அதன் விளைவாக சிவ பக்தனான மார்க்கண்டேயன் மீது ‘துணிந்து பாசக் கயிறை வீசினான்.

விளைவு, யாருமே பார்க்க முடியாத சிவனின் காலால் உதையுண்டான். சிவன் தரிசனம் சாத்தியமானது.

அந்தக் கழலடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் என்று சொல்லவும் வேண்டுமா?

 

பாடினார் அப்பர:-

“மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று, கீழ் இடத்து

மாலும் அறிந்திலன் மால் உற்றதே வழிபாடு செய்யும்

பாலன்மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக்

காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல் அடியே

    (ஆறாம் திருமுறை – தனித் திரு விருத்தம்- பவளவரைத் தடம் போலும் என்று தொடங்கும் பதிகத்தில் பதினொன்றாம் பாடல்)

காலன் மட்டும் அறிந்த கழலடி சிவனது அடி!

அறிதற்கு அறியா கழல் அடியை யமன் மட்டும் அறிந்ததை அப்பர் இப்படிப் பாராட்டுகிறார்.

 

கொள்ளப்பட்டுள உயிர் :கம்பன் கூறும் ஜாக்பாட்!

அடுத்து கம்பனுக்கு வருவோம்.

கம்பன் பல பாடல்களில் யமனைப்  பாடியுள்ளான்.

ஆனால் அவனது ஜாக்பாட் பாடல் யமனுக்கு அடித்த ஜாக்பாட் பற்றித் தான்!

 

அனுமன் இலங்கைக்குள் புகுந்து அசுரரை அழிக்க ஆரம்பித்தான். இராவணனின் புதல்வனான அக்ககுமாரன் – (அட்சகுமாரன்)என்பான் அனுமனுடன் போரிட வந்தான்.

அவ்வளவு தான், அனுமன் யமனுக்கு நண்பன் ஆகி விட்டான்.

ஒரு உயிர், இரண்டு உயிர் என்று எவ்வளவு நாள் எடுத்துக் கொண்டு போவான் யமன்.

ஜாக்பாட் அளவில் கொள்ளை கொள்ளையாக் உயிர்களைக் கொண்டு போக வகை செய்தான் அனுமன்.

 

பாடலைப் பார்ப்போம்:

பிள்ளப்பட்டன நுதலோடைக்கைர் பிறழ்பொற் தேர்பறி பிழையாமல்

அள்ளப்பட்டழி குருதிப் பொருபுனலாறாகப்படி சேறாக,

வள்ளப்பட்டன மகரக் கடலென மதிள் சுற்றியபதி மறலிக்கோர்

கொள்ளைப்பட்டுள வுயிரென்னும்படி கொன்றான் ஐம்புலன்வென்றானே

 

நித்திய பிரம்மச்சாரியாக இருப்பதால் ஐம்புலன் வென்றான் அனுமன்.

தோணிகள் (வள்ளப்பட்டன) நிறைந்த மகர மீன்கள் நிறைந்துள்ள கடலே அரணாக அமைந்துள்ள தனித் தீவு இலங்கை.

(அங்கு போரில்) வருகின்ற பிராணிகளை எல்லாம் அடித்துப் போட்டு அதனால் பெருகும் இரத்தம் ஆறு போல ஓடுகிறது.

அதில உடல் பியக்கப்பட்ட நெற்றியில் வீரப்பட்டம் அணிந்த யானைகளும் தேர்களும் குதிரைகளும் அந்த ஆற்றில் படிந்த சேறாக மாறும் படி யுத்தம் செய்கிறான் அனுமன்!

 

மறலிக்கு (எமனுக்கு) கொள்ளைப்பட்டுள உயிர் எனும்

எராளமான உயிர் என்னும் ஜாக்பாட்டை அளித்தான் அனுமன்!

ஓய்ந்து உலந்த எமன்

யமனின் நிலை பற்றி ஏற்கனவே கிங்கரர் வதைப் படலத்தில் ஒரு பாடலில் கம்பன் குறிப்பிடுகிறான்.

அனுமனைக் கொல்ல வரும் கிங்கரர்களை அவன் வதை செய்ய அரக்கர்களில் உயிர நீத்த உடல்கள் அரக்கருடைய தெருக்களில் எல்லாம் நிரம்பிக் கிடக்கின்றன.

அதனால் என்ன ஆயிற்று?

 

பாடலைப் பார்ப்போம்.

ஊனெலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான்

தானெலாரையும் மாருதி சாடுகை தவிரான்

மீன் எலாம் உயிர் மேகமெலாம் உயிர் மேன்மேல்

வானெலாம் உயிர்மற்றும் எலாம் உயிர் சுற்றி

  (கிங்கரர் வதைப் படலம் பாடல் 45)

அனுமனால் கொல்லப்பட்ட உயிர்களை எமனால் எடுத்துச் செல்ல முடியவில்லை.

உடம்புகளிலிருந்து உயிரைக் கவரும் காலன் ஓய்ந்து வலிமை கெட்டான்.

அதனால் எடுத்துப் போவாரின்றி நட்சத்திர மண்டலம் எல்லாம் உயிர்.

மேக மண்டலம் எல்லாம் உயிர்.

மிக உயரத்தில் உள்ள ஆகாயம் எல்லாம் உயிர்.

மற்றுமுள்ள இடைவெளி எல்லாம் உயிர்,

 

எப்படி இருக்கிறது யமனுக்கு வேலை, பாருங்கள்!! எல்லா உயிரையும் ‘கலெக்ட் செய்து – சேகரித்துக் கொண்டு செல்ல வேண்டும் அவன்!

எப்படி ஒரு  காட்சியை நம் முன்னே கொண்டு வருகிறான் கம்பன்!

உலக மொழிகளில் எல்லாம் ஒப்பற்ற இலக்கியம் தமிழ் இலக்கியம்

இது போல “யமப் பாடல்கள்தமிழ் இலக்கியத்தில் நூற்றுக் கணக்கில் உள்ளன. தமிழ் இலக்கியத்தில் மட்டுமே இப்படிப்பட்ட பாடல்கள் உள்ளன.

***

 

 

கம்பன் தரும் சித்திரம்: இந்திரஜித்தின் வீடு (Post No.4011)

Ramleela festival in Delhi, where demons are burnt

Written by S NAGARAJAN

 

Date: 18 June 2017

 

Time uploaded in London:-  6-40  am

 

 

Post No.4011

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

கம்பனின் கவிதை

கம்பன் தரும் சித்திரம்: இந்திரஜித்தின் வீட்டைக் காவல் காத்த லட்சணம்!

 

ச.நாகராஜன்

 

கவிச் சக்கரவர்த்தி கம்பன் தன் மேதா விலாசத்தைச் சுந்தர காண்டம் முழுவதும் அள்ளித் தெளித்துக் கொண்டே போகிறான்,

எந்த ஒரு செய்யுளை எடுத்துக் கொண்டாலும் சரி, அதை முழுவதுமாக இரசித்து லயித்து அதன் அருமை பெருமைகளை மனதில் ஏற்றிக் கொண்ட பின்னரே அடுத்த செய்யுளுக்குப் போக முடிகிறது.

 

 

ஆகவே தான் பாரதி கவிதையில் எல்லையொன்றின்மை அல்லது இன்ஃபினிடிக்கு உதாரணம் காண வேண்டுமென்றால் கமப்னின் கவிதையில் அவன் மேதா விலாசத்தின் மூலம் காணலாம் என்று புக்ழந்துரைத்தான்.

 

 

ஒரே ஒரு பாடலை மட்டும் இங்கு பார்ப்போம்.

இலங்கையின் பெருமையைச் சொல்ல வந்த கம்பன் இந்திரஜித்தின் மாளிகை பற்றிய காவலைச் சொல்கிறான்.

அந்த வீரர்கள் காவல் காத்த லட்சணத்தை அவன் சொல்லும் போது நகைச்சுவையும் தவழ்கிறது; இலங்கையின் அளப்பற்ற வீர பராக்ரம காவலும் புரிகிறது.

 

ஏதியேந்திய தடக்கையர் பிறை யெயிறிலங்க

மூதுரைப் பெருங்கதைகளும் பிதிர்களு மொழிவார்

ஓதி லாயிர மாயிர முணர்விலி யரக்கர்

காது வெஞ்சினக் களியினர் காவலைக் கடந்தான்

 

ஊர்தேடு படலம் பாடல் எண் 139 வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் பதிப்பு

– பாடல் எண் 234, சுந்தரகாண்டம் உ.வே.சா பதிப்பு

 

Ravana lifting Kailash

ஏதி ஏந்திய தட கையர் – வாள் முதலிய ஆயுதங்களைக் கொண்ட பெரிய கைகளை உடையவர்கள்

 

பிறை எயிறு இலங்க – பிறைச் சந்திரன் போன்ற வக்கிரமான பற்கள் வெளியே விளங்க இருப்பவர்கள் அதாவது சிரித்தவாறு புன்முகத்துடன் இருப்பவர்கள்

முது உரை பெருங்கதைகளும் பிதிர்களும் மொழிவார் – பழமொழிகளுடன் பெரிய சரித்திரங்களையும் விடுகதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்

 

காது வெம் சினம் களிறினர் – பகைவரைக் கொல்ல வல்ல பெரிய கோபத்தினாலாகிற போரில் பெரிய மகிழ்ச்சியை அடைபவர்கள்

 

ஓதில் ஆயிரம் ஆயிரம் உணர்வு இலி அரக்கர் – அளவு சொல்ல முனையும் போது ஆயிரத்தை ஆயிரத்தால் பெருக்கி வரும் தொகையை உடைய அறிவற்ற ராக்ஷஸர்களின் காவலை

கடந்தான் – அனுமன் அந்த இந்திரஜித்தின் வீட்டு வாயிலைக் கடந்து அதன் உள்ளே சென்றனன்.

 

இந்திரஜித்தின் வீட்டைக் காவலர்கள் காவல் காத்த லட்சணம் இது தான்.

 

அவர்கள் இரவு நேரப் ப்ணியாளர்கள். விழித்திருந்து காவல் காக்க வேண்டும்.

 

எதிரிகளே இல்லாத நாடு இலங்கை. எத்தனையோ வருடங்கள் ஆயிற்று போர் நடந்து. அப்போது என்ன தான் செய்வது- இரவு கண் முழிப்பிற்கு?

 

விடுகதைகளும் புதிர்களும் பெருங்கதைகளும் பேசி மகிழ்ந்து நேரத்தைப் போக்கினர் (வெட்டி அரட்டை அவர்களை மகிழ்வித்து கண் தூங்காமல் விழிக்க வைத்திருந்தது)

 

மூதுரை அல்லது முதுமொஈ என்பதற்கு தொல்காப்பியர் நல்ல விளககத்தை அளித்துள்ளார்: “ நுண்மையும் சுருக்கமும் ஒளியுடமையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக், குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழியான் “ என்கிறார் தொல்காப்பியர்.

பெருங்கதை என்றால் தேவாசுர யுத்தம், பாற்கடல் கடைந்தது, பழைய கால ராக்ஷ்ஸர் வரலாறு போன்றவை.

 

பிதிர் என்பது புதிர்.

 

இதற்கு வை.மு,கோ பதிப்பில் ஒரு எடுத்துக்காட்டு தரப்படுகிறது.

ஒரு சமயம் கம்பர் ஔவையாரை நோக்கி ‘ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடி’ என்று சொல்லி இதன் பொருள் என்ன என்று வினவினார்.

 

அதற்கு ஔவையார் அதே மரியாதையுடன், ‘ஆரையடா சொன்னாயடா’ என்று பதிலிறுத்தார்.

ஆரைக்கீரையின் காம்புகள் நான்கு பிளவுபட்ட இலைகளை உடையவனாய் இருக்கும்.

 

அதை டி போட்டு கம்பர் கேட்க ஔவையார் டா போட்டு பதில் சொன்னார்.

 

எதிரிகளே இல்லாத நாடு இலங்கை. அதன் வீரர்கள் காவல் காக்க கஷ்டப்பட்டு விழிக்க புதிர்களைப் போட்டு அதை விடுவித்து மகிழ்ந்து பொழுது போக்கினர். ‘டைம் பாஸ்’!

கம்பன் புதிர் போடுதலை எந்த இடத்தில் பொருத்தி இருக்கிறான் என்பதை நினைக்கும் போது வியப்பு மேலிடுகிறது.

இப்படி பொருத்தம்  பார்த்து அவனைப் போலச் சேய்யுளை அமைக்கும் கவிஞன் உலக அளவில் தேடினாலும் இன்னொருவர் கிடைக்க மாட்டான்.

 

உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை இது!

***