சம்ஸ்கிருதம் பேச்சு மொழியே! அசைக்க முடியாத சான்றுகள்!! Post No. 2360

IMG_9008 (2)

Already posted in English

Research Article written  by London swaminathan

Date: 25 November 2015

Post No. 2360

Time uploaded in London :– 8-24 AM

( Thanks for the Pictures  ) 

ஆராய்ச்சிக்கட்டுரை எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்

 

சம்ஸ்கிருதம் பேச்சு மொழியே என்பதற்கு 3000 ஆண்டுகளாக நமது இலக்கியத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. இந்தப் பதிவில் நான் மேற்கோள் காட்டும் எல்லா கதைகளும் எனது பிளாக்குகளில் உள்ள 2300 கட்டுரைகளில் ஏற்கனவே உள்ளதால் மீண்டும் கதைகளைச் சொல்லாமல் தலைப்புகளை மட்டும் காட்டுவேன்.

 

முன் காலத்தில் குருகுலத்துக்குச் சென்ற சிறுவர்களுக்கு முதல் நாள் கற்றுக் கொடுத்த பாடம், “சத்யம் வத” (உண்மையே பேசு). ரிக் வேதத்தின் ஆணி வேறே சத்தியம்தான். அதுதான் இந்தியாவின் தேசிய சின்னத்திலும் இருக்கிறது (சத்யமேவ ஜயதே).எதற்காக இவ்வளவு பீடிகை என்றால் நமது வேத, இதிஹாசக் கதைகள் எல்லாம் உண்மையே. அவை அத்தனையிலும் சம்ஸ்கிருதம் பேசியது பற்றி எண்ணற்ற குறிப்புகள் வருகின்றன.

 

வேதத்தில்

இந்திரனைக் கொல்லக்கூடிய ஒரு புத்திரன் வேண்டுமென்று வேண்டப்போய், இந்திரனால் கொல்லப்படக்கூடிய ஒரு மகன் வேண்டும் என்று தவறாகக் கூறிய பின்னர், விருத்ராசுரன் பிறந்தான்; இறந்தான்.

IMG_9007 (2)

உபநிஷதத்தில்

அசுரர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகிய மூவரும் சம்ஸ்கிருதம் பேசினார்கள். உடனே மூவரும் இடி முழக்கத்தை சம்ஸ்கிருதச் சொற்களாக எடுத்துக்கொண்டனர் (இந்தக் கதையை மட்டும் பின்னால் இணைத்துள்ளேன்)

இதிஹாசத்தில்

ராமாயணத்தில் கும்பகர்ணனுக்கு நீண்ட நித்திரை வந்ததற்கும் காரணம் அவன் சம்ஸ்கிருதத்தில் தவறாக வேண்டியதே என்பதை நாம் அறிவோம்.

அஸ்வத்தாமா ஹத: என்ற தர்மனின் வாசகம்தான் மஹாபாரதப் போரின் போக்கையே மாற்றியது. இதனால் துரோணர் மனமுடைந்து இறக்க நேரிட்டது. போர்க்களத்திலும் சம்ஸ்கிருதமே பேசப்பட்டது. அர்ஜுன- கிருஷ்ண உரையாடல் சம்ஸ்கிருதத்தில் நடந்ததால்தான் நாம் இன்று பகவத் கீதையைப் படிக்க முடிகிறது.

 

 

சிலப்பதிகாரத்தில்

ஒரு பார்ப்பனப் பெண், தண்ணீர் குடத்தை எடுத்துக்கொண்டு, வீட்டில் நுழைகையில், அவளை வாசலில் வரவேற்க வந்த கீர்ப் பிள்ளையின் வாயில் ரத்தம் இருப்பதைக் கண்டு அவசரப்பட்டு அதன் தலையில் தண்ணீர் குடத்தைப் போட்டு அதைக் கொன்றவுடன் அவளது கணவன் ஓலைச் சுவடியில் சம்ஸ்கிருத வாசகத்தை எழுதிக் கொடுத்துவிட்டு யாத்திரை சென்றபோது, ரோட்டில் நின்று கதறிய அந்தப் பாப்பாத்திக்கு கோவலந்தான் சம்ஸ்கிருத வாசகத்தைப் படித்து வழிகாட்டுகிறான். வைஸ்யனாகிய கோவலனுக்கும் சம்ஸ்கிருதம் தெரியும்.(கீரிப் பிள்ளை கொன்றது குழந்தையை அல்ல; குழந்தை அருகே வந்த பாம்பைக் கொன்றது)

 

ஊர்ப் பெயர்கள், தெருப்பெயர்கள், அப்பா, அம்மா பெயர்கள்

இந்தப் பெயர்கள் எல்லாம் எல்லா குடும்பங்களிலும் இன்றுவரை சம்ஸ்கிருத்த்திலேயே இருப்பதும் சம்ஸ்கிருதம் பேச்சுவழக்கில் இருந்ததைக் காட்டுகிறது.சங்க இலக்கியத்தில் நிறைய புலவர்களின் பெயர்களும் சம்ஸ்கிருதத்தில் இருப்பதையும் முன்னரே பட்டியல் போட்டுக் காட்டிவிட்டேன்.

புராணத்தில்

நகுஷன் இந்திர பதவி வகித்த காலத்தில் குள்ளமான அகத்திய முனிவர் பல்லக்குச் சுமக்கையில் ஒரு பக்கம் சய்ய்ந்து இருப்பதைக் கண்டு “சர்ப்ப, சர்ப்ப” என்று சம்ஸ்கிருதத்தில் கட்டளையிடவே அவனை சர்ப்பமாக(பாம்பாக)ப் போகும்படி சபித்த கதையை நாம் அறிவோம். அங்கும் மன்னனும், முனிவரும் சம்ஸ்கிருதமே பேசினர்.

அகத்தியருக்கு நர மாமிசம் சமைத்துப் போட்ட இல்வலனிடம் “வாதாபி ஜீர்ணோ பவ” என்று சொல்லி வாதாபியை வயிற்றில் கரைத்தபோது அகத்தியர் சொன்னதும் சம்ஸ்கிருதமே.

 

காதா சப்த சதி தோன்றக் காரணம்

 

காதா சப்த சதி என்னும் அருமையான பிராக்ருத நூல் தோன்றக் காரணமும் ராணியின் ஒரு சம்ஸ்கிருதக் கட்டளையைத் தவறாகப் புரிந்த ராஜா வெட்கப்பட்டு படிக்கத் துவங்கியதே என்பதையும் முன்னரே எழுதிவிட்டேன். (சம்ஸ்கிருதமும் பிராக்ருதமும் வேறு வேறு மொழிகளல்ல; ஒன்று இலக்கிய வழக்கு, மற்றொன்று பேச்சு வழக்கு; இதையும் முன்னரே எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிவிட்டேன்)

 

எனது பிளாக்கில் நான் முன்னர் எழுதிய ஒரே ஒரு கட்டுரையை மட்டும் கீழே இணைத்துள்ளேன்:

தண்டர், இடி மின்னல்

த………………….த…………………..த……………………. கதை

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண் 850 தேதி 19 பிப்ரவரி 2014

Translation of my Post posted in English on 19th February 2014 in this blog.

த…..த…..த….. என்ற மூன்று எழுத்துக்களை (சொற்களை) பிரபலமாக்கியோர் மூவர். ஒருவர் நமது காலத்தில் வாழ்ந்து, நமக்கு எல்லாம் அருள் புரிந்து சிவமயமாகிவிட்டவர்-காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994). மற்றொருவர் ஆங்கில இலக்கிய பாடம் படிக்கும் எல்லோருக்கும் தெரிந்த அமெரிக்க ஆங்கில மொழிக் கவிஞர்– நாடக ஆசிரியர் டி.எஸ்.எலியட் (1888—1965). மூன்றாவது மனிதர் , 3000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த ஒரு ரிஷி. பிருஹத் ஆரண்யக (பிருஹத்= பெரிய, ஆரண்யக= காடு) உபநிஷத்தில் த….த…த…..கதையை முதலில் நமக்குச் சொன்னவர். அதாவது வேத கால ரிஷிகள்.

முதலில் நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த காஞ்சிப் பெரியவர் எழுதிய சம்ஸ்கிருதப்பாடலும் அதன் மொழி பெயர்ப்பும். இதை 1966 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் பாடுவதற்காக அவர் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு எழுதிக் கொடுத்தார்:

மைத்ரீம் பஜத, அகில ஹ்ருஜ்-ஜேத்ரீம்!
ஆத்மவதேவ பராநபி பச்யத!
யுத்தம் த்யஜத! ஸ்பர்தாம் த்யஜத!
த்யஜத பரேஷ்வக்ரமம்-ஆக்ரமணம்!
ஜநநீ ப்ருதிவீ காமதுகாஸ்தே,
ஜநகோ தேவ: ஸகல தயாளு:!
தாம்யத! தத்த! தயத்வம் ஜநதா:!

ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!

 

இந்த கீதத்தின் தமிழாக்கம்:

அனைத்துளம் வெல்லும் அன்பு பயில்க!
அன்னியர் தமையும் தன்னிகர் காண்க!
போரினை விடுக! போட்டியை விடுக!
பிறனதைப் பறிக்கும் பிழை புரிந்தற்க!
அருள்வாள் புவித்தாய், காமதேநுவாய்!
அப்பன் ஈசனோ அகிலதயாபரன்!
அடக்கம் – கொடை – அருள் பயிலுக, மக்காள்!

உலகினரெல்லாம் உயர்நலம் உறுக!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக! – என்பதுதான்.

கதை என்ன?

இப்பாடலில் வரும் தாம்யத – தத்த – தயத்வம் என்ற சொற்றொடர் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருவதாகும். அது குறித்த கதை: ஒரு சமயம் தேவர்கள், மானுடர்கள், அசுரர்கள் ஆகிய மூன்று இனத்தாரும் ப்ரஜாபதி (ப்ரஹ்மா) யிடம் உபதேசம் வேண்டினர். அவர் தமது உபதேசத்தை த-த-த என்ற இடியின் ஒலியாகக் கூறி அருளினார். ‘த ‘ என்பதை தேவர்கள், ‘தாம்யத’ எனப் பொருள் கொண்டனர். அப்பதத்துக்குப் ‘புலன்களைக் கட்டுப்படுத்துங்கள்’ என்று அர்த்தம். தேவர்கள் புலனின்பம் துய்ப்பதிலேயே ஈடுபட்டவர்கள். ஆதலால் தங்களுக்கு இந்த உபதேசம் எனக் கொண்டனர்.

 
மானுடரோ ‘த’ என்பதை ‘தத்த’ எனப் பொருள் கொண்டனர். ‘தத்த’ என்பதற்கு ஈகை உடையவர் ஆக இருங்கள் என அர்த்தம். மானுடர்களுக்கு ஈகை குணம் மிகவும் குறைவாக இருப்பதாலேயே இப்படி உபதேசம். அசுரர்கள் ‘த’ என்பதை ‘தயத்வம்’ – அதாவது, தயையுடன் இருங்கள் – எனப்பொருள் கொண்டனர்.

 

ஆதிசங்கரர் இதற்கு உரை எழுதுகையில், மானுடரிலேயே தெய்விக குணமும், அசுர குணமும் உடையவர்கள் இருப்பதால் இம்மூன்று உபதேசங்களுமே மானுடர்களுக்கானவை எனத் தெளிவு செய்துள்ளார். –(பாடலின் தமிழ் வடிவம் கல்கி பத்திரிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது;நன்றி)

 

அமெரிக்க கவிஞர் டி.எஸ்.எலியட்டுக்கு இந்துமதத்தில் பேரார்வம் உண்டு. அவர் கீழை—மேலை நாட்டு கருத்தொற்றுமை காணும் முகத்தான் அவரது நீண்ட தத்துவக் கவிதையான தி வேஸ்ட்லாண்டின் இறுதிப் பகுதியில் இந்த தாம்யத, தத்த, தயத்வ என்ற சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே சேர்த்து சாந்தி, சாந்தி, சாந்தி, என்று சொல்லி கவிதையை முடிக்கிறார்.
எனது ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரம் காண்க.

(இந்தக் கதையானது அக்காலத்தில் சம்ஸ்கிருதம் பேச்சு வழக்கில் இருந்ததையும், அதை அரக்கர், மானுடர், தேவர் மூவரும் பேசினர் என்பதையும் காட்டும் என்பது எனது துணிபு.)

 

 

 

இளிச்சவாய் ஏகநாத ஐயர் (POST No. 2351)

ப்ரஹ்மின்1 (2)

மேலும் ஒரு சம்ஸ்க்ருத ஜோக்!

Compiled by London swaminathan

Date: 22 November 2015

POST No. 2351

 

Time uploaded in London :– காலை 9 -13 மணி

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

“ஒரு நாள் என் மாமனார் வீட்டுக்குச் சென்றேன். அங்குப் பத்துப்பதினைந்து நாள் வயிறு குறையாமல் திருப்தியாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு சம்ஸ்க்ருத பாஷையில் தேர்ச்சி அதிகமாதலால் ஒருநாள் யோஜித்து மாமியார் வீட்டுச் சுவற்றில்,

 

“ஸ்வஸ்ருகிருகநிவாஸ

ஸ்வர்கதுல்யோநராணாம்”

அதாவது மாமியார் வீட்டில் வசிப்பதானது மனுஷர்களுக்குச் சொர்க்கத்துக்குச் சமானம் என்று எழுதி வைத்தேன். மறுநாள் மத்தியான போஜனத்துக்குப் பிறகு நான் எழுதிய சுவற்றைப் பார்க்க, நான் எழுதியதற்குக்கீழே

 

“எதிபதி குணக்ஞஹா

பஞ்சமேஷஸ்தினாதி”

 

அதாவது மாப்பிள்ளை நல்ல குணமுள்ளவனாக இருந்தால் ஐந்து, ஆறு தினத்துக்கு மேலிருக்க முடியாது என்று யாரோ எழுதிவைத்திருப்பதைப் பார்த்தவுடன் எனக்குப் பகீரென்று அடிவயிற்றில் நெருப்பு வைத்தது போலிருந்தது.

 

உடனே அதன் கீழே நான்

“ததிகிருத மதுவர்ஜியம்

மாஸமேகம்வஸாமி

 

அதாவது தயிர், நெய், பால் இவைகளில்லாமல் ஒரு மாஸம் வசிக்கலாமல்லவா? என்று எழுதிவிட்டேன். அதற்கு மறுநாள்தான் எனக்குச் சனியன் பிடித்தது. நான் யெழுதிவைத்ததற்குக் கீழே மறுநாள்  பார்த்தேன்.

“ததுபரி தினமேகம்

பாதரக்ஷப்ரயோககா”

 

அதாவது இதனைக் கண்டதற்கு மேல் ஒருநாளிருப்பதாயிருந்தாலும் ஆற்காடு ஜோட்டடிதான் கிடைக்கும் என்று எழுதியிருந்தது. அதைத் திருப்பித்திருப்பி வாசித்துக்கொண்டிருந்தேன். அங்கு மறைவில் ஒளிந்துகொண்டிருந்த என் மைத்துனன் இடதுகையாலே இடது கால் ஜோட்டடி மகோற்சவம் நடத்தி, “இளிச்சவாயா, மாமியார் வீட்டுச் சொத்து என்ன பிள்ளையில்லா வீட்டுச் சொத்து என்று நினைத்தாயா?” என்று சொல்லி வழியனுப்பினான் அதனால்தான் நான் இளிச்சவாயன் ஆனேன்”.

“ஸ்வஸ்ருகிருகநிவாஸ ஸ்வர்கதுல்யோநராணாம்

எதிபதி குணக்ஞஹா பஞ்சமேஷஸ்தினாதி

ததிகிருத மதுவர்ஜியம் மாஸமேகம்வஸாமி

ததுபரி தினமேகம் பாதரக்ஷப்ரயோககா”

 

–சுபம்–

இலக்கியத்தில் சிறந்தது நாடகமே! (POST No. 2345)

kalidas-cinema-song-book

 

Compiled   by London swaminathan

Date: 20  November 2015

POST No. 2345
Time uploaded in London :– காலை 7-50
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(தமிழன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: யார் ஒரு கட்டுரையை எழுதினாரோ அவர் பெயரில்லாமல் அதை வெளியிடாதீர்கள். அதைவிடக் கொடுமை, அதை உங்கள் கட்டுரை போல வெளியிடாதீர்கள். இவ்வாறு செய்தால் தமிழ் செழிக்கும்; உங்கள் குலம் தழைக்கும்; சத்யமேவ ஜயதே! வாய்மையே வெல்லும்)

 

shakuntala-raja-ravi-varma

காவ்யேஷு நாடகம் ரம்யம்

தஸ்ய ரம்யா சகுந்தலா

தத்ராபி ச சதுர்தோங்க:

தத்ர ஸ்லோக சதுஷ்டயம்

 

பாட்டின் பொருள்:

“காவியங்களில் சிறந்தது (மனோ ரம்யமானது) நாடகம்; அந்த நாடகங்களில் சிறந்தது சாகுந்தலம்; சாகுந்தலம் நாடகத்தில் சிறந்த காட்சி நாலாவது காட்சியாகும். அந்தக் காட்சியிலும் சிறந்தது நான்கு ஸ்லோகங்கள்”.

 

உலகப் புகழ்பெற்ற காளிதாசன் ஒரு சொல் தச்சன்; ஒரு சொல் சிற்பி. ஒரு சொல் ஓவியன். ஆயிரம் உவமைகளுக்கும் மேலாக எழுதி உலகையே வியக்கவைத்த மாபெரும் கவிஞன். அவனுக்கு நிகராக இதுவரை யாரும் தோன்றவில்லை; இனிமேலும் தோன்றப் போவதுமில்லை.

 

காளிதாசனின் சாகுந்தலம் நாடகத்தில் நாலாவது அங்கத்திலுள்ள 6, 18, 19, 22 எண்ணுள்ள ஸ்லோகங்களை ஏன் இப்படிப் புகழ்கின்றனர்? காளிதாசன் மிகப்பெரிய ‘ஸைகாலஜிஸ்ட்’ – அதாவது உளவியல் நிபுணன். சகுந்தலா என்னும் கானகப் பெண் (சகுந்தலா=பறவைப் பெண்) பறவைகளால் வளர்க்கப்பட்டவள். அவளுடைய வளர்ப்புத் தந்தையான கண்வ மகரிஷி, இந்த நான்கு ஸ்லோகங்களில் மனித உள்ளத்தில் பீறிடும் உணர்ச்சிகளை வடித்துக் கொட்டுகிறார்.

 

ஒரு மணமான பெண் பிறந்தகத்தை விட்டு, மாப்பிள்ளையின் புக்ககத்துக்குப் போகும்போது தாயார் கண்ணீர் வடிக்கிறாள். இவ்வளவு நாள் ‘கிளி போல’ வளர்த்த பெண்ண இன்று ஒரு புதிய ஆண்மகனிடம் ஒப்படைக்கிறேனே, அவன் இவளை அன்பாகப் பாதுகாப்பானா? என்று அஞ்சுகிறாள்.

 

கண்வ மகரிஷியும் இப்படிக் கண்ணீர் விடுகிறார், சகுந்தலை என்னும் அப்பாவிப் பெண்ணுக்காக. அப்பொழுது அவர் கூறுகிறார். ‘’முற்றும் துறந்த முனிவனான எனக்கே இப்படி உணர்ச்சி கொந்தளிக்கிறதே; உண்மையில் பெற்றெடுத்த தாயும் தந்தையும் புதுமணப் பெண்ணை அனுப்பும்போது எப்படி பரிதவிப்பார்கள்’’ என்று கண்வ மகரிஷி புலம்புகிறார். இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் காளிதாசன் எழுதிய காவியம்; சொல்லோவியம்.

 

பிற்காலத்தில் ஷேக்ஸ்பியர் என்னும் மாகவி – நாடகாசிரியன்– இதைப் பார்த்து காட்டில் வாழும் மிராண்டா என்னும் அப்பாவிப் பெண்ணை ‘’புயற்காற்று’’ என்னும் நாடகத்தில் (டெம்பெஸ்ட்) இதே போல படைத்திருக்கிறான்.

சாகுந்தலத்தில் கீழ்கண்ட சொற்களில் துவங்கும் அந்த 4 ஸ்லோகங்களை, நாடகத்தில், கதையுடன் சேர்த்துப் படிக்கையில் இன்னும் ரசிக்கலாம். இனி சுருக்கமாகப் பொருள் காண்போம்.

 

kali stamps 1

1).யாஸ்யத்ய…………………….

2).பாதும் ந ப்ரதமம்……………………..

3).அஸ்மான் சாது……………………………

4).சுஸ்ரூஷஸ்வ………………………….

முதல் ஸ்லோகத்தின் பொருள்:

கண்வர் பேசுகிறார்:

இன்று சகுந்தலை புறப்படுகிறாள்; இதை நினைக்கும்போதே என் நெஞ்சம் கலங்குகிறது. கண்ணீர்த் துளிகள் பெருகி, என் தொண்டையை அடைக்கிறது. கவலையால் என் புலன்கள் மரத்துப் போய்விட்டன. முனிவனான எனக்கே அன்பினால் இப்படி உணர்ச்சிப் பெருக்கெடுக்குமானால், குடும்பத்திலுள்ள தந்தைமார்களுக்கு , மகள் வீட்டை விட்டு வெளியேறும்போது எவ்வளவு துயரம் இருக்கும்?

 

2-ஆவது ஸ்லோகத்தின் பொருள்:

மரம், செடி, கொடிகளைப் பார்த்து கண்வர் புலம்பல்:

‘’உங்களுக்குத் தண்ணீர் விடாமல், அவள் தண்ணீர்கூட குடிக்கமாட்டாளே! அவளுக்கு அணிகலன்களை அணிவது விருப்பமென்றாலும் ஒரு இலையைக்கூட பறிக்கமாட்டாளே! செடிகள் பூக்கும் காலம் வந்தவுடன் , முதல் மலர் மலர்ந்த நாளன்று அவள் எவ்வளவு சந்தோஷப்படுவாள். அப்பேற்பட்ட சகுந்தலை, இன்று தனது கணவனுடன் சேர்ந்து வாழ, அரண்மனைக்குப் போகிறாள்! நீங்கள் எல்லோரும் அதற்கு அனுமதி கொடுக்கவேண்டும்.’’

 

செடிகொடிகளைப் பார்த்து அனுமதி கோருவதும், அவைகளை சகுந்தலை தம் குழந்தை போல போற்றி வளர்த்த்தும் பாரதீய சிந்தனையின் உச்சகட்டமாகும். பிற்காலத்தில் பாரதியார் “காக்கை, குருவி எங்கள் ஜாதி; நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” – என்று பாடியதை, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே காளிதாசன் பாடிவிட்டான்.

 kali stamp 2

3-ஆவது ஸ்லோகத்தின் பொருள்:

சார்ங்ரவா! நீ அரசனிடம் சகுந்தலையை ஒப்படைக்கும் போது நான் கூறுவதாக இதைச் சொல்லு:

“தவ சிரேஷ்டர்களாகிய எங்களை மனதில் வைத்துக்கொள்; உன்னுடைய உயர்குடிப் பிறப்பையும் நினைவிற்கொள்: யாரும் சொல்லாமலேயே அவளே உன் மீது காதல்கொண்டு அன்பைக் காட்டியதையும் மறவாதே. மற்ற மனைவியரிடத்தில் நீ காட்டும் அதே அன்பை இவளிடமும் காட்டு. அவளுக்கு அதிர்ஷ்ட தேவதை கண் திறக்கட்டும். பெண்ணின் வீட்டார் இதற்கு மேல் கேட்பது கூடாது.’’

 

4-ஆவது ஸ்லோகத்தின் பொருள்:

‘’பெண்ணே! கணவர் வீட்டில் மூத்தோர் சொல்வதையெல்லாம் கவனமாகக் கேள்; மற்ற மனைவியரை உன்னுடைய நெருங்கிய நண்பர்களாக நடத்து. உனது கணவன் உன்னிடம் இசகு பிசகாக நடந்தாலும் அவனுக்கு கீழ்படியாமல் இருந்துவிடாதே. வேலைக்காரர்களிடம் அன்பாக நடந்துகொள்; தலைக் கனத்துடன் தவறு செய்துவிடாதே. நீ நான் சொன்னபடி செய்தாயானால், இளம் வயது மனைவியரும், பெரும் கௌரவத்தைப் பெறுவார்கள்.கெட்ட மனைவியர்தான் குடும்பத்தில் பாய்ந்த விஷத்துக்குச் சமம்.”

 

காளிதாசன் 2000 ஆண்டுக்கு மு கூறிய கருத்துகள் இன்றும் எவ்வளவு பொருத்தம் பாருங்கள்!

 

காளிதாசனைப் படியாதோர் படியாதவர்களே!

–சுபம்–

 

சேவலிடம் பாடம் கற்போம்! POST No. 2339

cock1

Written  by London swaminathan

Date: 18 November 2015
POST No. 2339
Time uploaded in London :– 14-47
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சம்ஸ்கிருதம் அழகான மொழி! அற்புதமான ஒரு மொழி! அதில் பேசப்படாத விஷயங்களே இல்லை. வாக்கிங் ஸ்டிக் (கைத்தடி) பற்றி சரக சம்ஹிதையில் ஸ்லோகம் இருக்கிறது; ஊழல் பற்றி கௌடில்யர் அர்த்தசாஸ்திரத்தில் ஸ்லோகம் இருக்கிறது; காலப் பயணம் பற்றி மஹாபாரதத்தில் ஸ்லோகம் இருக்கிறது; செண்ட் செய்வது பற்றி வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதாவில் ஸ்லோகம் இருக்கிறது.பல்லாயிரம் பழமொழிகளும், நீதி மொழிகளும் உள்ளன.

 

சேவல் பற்றியும் புத்தகப் பாதுகாப்பு குறித்தும் சம்ஸ்கிருத தனிப்பாடல் திரட்டு கூறுவதானது:-

 

யுத்தம் ச ப்ராதருத்தானம் போஜனம் சஹ பந்துபி:

ஸ்த்ரியமாபத்ரதாம் ரக்ஷெச்சது: சிக்ஷதே குக்குடாத்

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 162/403

சேவற்கோழி கற்பிக்கும் பாடம் நான்கு:

1.யுத்தம்= சண்டை போடுவது எப்படி?

ப்ராதருத்தானம் = அதிகாலையில் எழுந்திருத்தல்

போஜனம் = அனைவருடனும் உண்ணல்

ஸ்த்ரீ ரக்ஷணம் – பெண்களைப் பாதுகாத்தல்

Books 2

நூல் பாதுகாப்பு

தைலாத் ரக்ஷேத் ஜலாத் ரக்ஷேத் ரக்ஷேத் சிதிலபந்தனாத்

மூர்க்கஹஸ்தே ந தாவ்யமிதம் வததி புஸ்தகம்

தைல – எண்ணெய்

ஜல – தண்ணீர்

சிதில பந்தனாத் – சரியாகத் தொகுத்துக் கட்டாத பக்கங்கள்

மூர்க்க ஹஸ்த தான- படிக்க விருப்பமில்லாத வர்களிடம் அளித்தல்

மேற்கூறிய நான்கிடமிருந்தும் புத்தகங்களைப் பாதுகாக்க வேண்டும்; நீரும், எண்ணையும் நூல்களை நாசம் செய்யுமல்லவா?

(மூடர்களிடம் கொடுத்தால் அவன் பக்கோடா, பஜ்ஜி கட்ட அந்தப் பக்கங்களைப் பயன்படுத்துவான்!!!)

 

தமிழும் சம்ஸ்கிருதமும் படியுங்கள்! அறிவை வளருங்கள்!!

 

 

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்!

aathi-sudi1

Compiled by London swaminathan

Date: 14 November 2015

POST No. 2328

Time uploaded in London :– காலை 10-26

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES;

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

((மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளைத் திருடாதீர்கள். இது தமிழையும் உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடும்; “ஷேர்” செய்யுங்கள் தவறில்லை; ஒரு வாரத்துக்குப் பின் “ரீப்ளாக்” செய்யுங்கள்; தவறில்லை. கட்டுரை எழுதியவர் பெயரையும், பிளாக்- கின் பெயரையும் வெட்டிவிட்டு வெளியிடாதீர்கள்))

 

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியிலுள்ள பழைய தமிழ் புத்தககங்களில் பல சுவையான விஷயங்கள் கிடைக்கின்றன. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் இவையனைத்தும் மறைக்கப்பட்டு விட்டன. ஆயினும் 100 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களும் தமிழர்களும் எழுதிய நூல்களில் இவை அப்படியே உள்ளன.

நமக்குத் தெரிந்த திருவள்ளுவர் ஒருவர்தான். ஆனால் கபிலர், அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் இருந்ததாக ஒருவர் ஆராய்ச்சிப் புத்தகம் எழுதியுள்ளார். நான் மொழியியல் அடிப்படையில் குறைந்தது மூன்று அவ்வையார்கள் இருந்ததை நிரூபிப்பேன். இந்தக் கதையில் வரும் அவ்வையார் வள்ளுவர், பிற்கால அவ்வையாரின் சமகாலத்தவராக இருக்கக்கூடும். இவைகள் கட்டுக் கதைகளோ என்று எண்ணத் தோன்றும். ஆயினும் நெருப்பில்லாமல் புகையுமா? என்ற தமிழ்ப் பழமொழியை நினைவிற்கொண்டு படியுங்கள்.

அவ்வையார் ஏழு பேருடன் பிறந்தார். அவர்களில் கடைசி சகோதரர் திருவள்ளுவர்!

coin valluvar

யார் அந்த எழுவர்?

பூர்வத்தில் ஆதி என்ற பெண்மணிக்கும் பகவன் என்ற பிராமணனுக்கும் பெண்மக்கள் நால்வரும் ஆண் மக்கள் மூவரும் பிறந்தனர்.

அவ்வை

உப்பை

அதிகமான் (ஆண்)

உறுவை

கபிலர் (ஆண்)

வள்ளியம்மை

திருவள்ளுவர் (ஆண்)

பகவனும் ஆதியும் யாத்திரை புறப்பட்டனர். இது வாழ்நாள் முழுதும் செய்யும் புனித யாத்திரை என்பதால் பகவன் ஒரு நிபந்தனை போட்டார். உனக்கும் எனக்கும் பிறக்கும் குழந்தையைப் பிறந்த இடத்திலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்றார். தாய் மனம் பொறுக்குமா? “அது எப்படி, சுவாமி முடியும்?” என்று கேட்டார். “மரத்தை வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்” என்று இறைவன் மீது பாரத்தைப் போடு என்று பதில் சொன்னார் பகவன்.

அந்தப் பெண்ணும் குழந்தை பிறக்கும்போது அவர் மனம் மாறிவிடுவார் என்று பேசா மடந்தையாக தீர்த்த யாத்திரையைத் தொடர்ந்தாள். ஒரு ஆண்டில் முதல் குழந்தை பிறந்தது. முன்னரிட்ட நிபந்தனையின் படி “குழந்தையை விட்டுப் புறப்படு” – என்றார் பகவன். அவள் தயங்கினாள். ஆனால் குழந்தையே அதிசயமாக வாய்திறந்து ஒரு பாட்டுப்பாடியது:–

என்னுடைய தலைவிதி இதுதான் என்று எழுதிய சிவன் செத்தா விட்டான்?. நீ கவலையில்லாமல் போ – என்று அக்குழந்தை பாடியது.

“இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி

விட்ட சிவனுஞ் செத்துவிட்டானோ? – முட்டமுட்டப்

பஞ்சமே யானாலும் பாரமவனுக்கன்னாய்

நெஞ்சமே யஞ்சாதே நீ”

 

இப்படி அதிசயமாக ஒரு பிறந்த குழந்தை பாடியவுடன் ஆதி நம்பிக்கையுடன் அக்குழந்தையை விட்டுச் சென்றாளாம். அந்த முதல் குழந்தையே அவ்வை.

இதற்கடுத்த குழந்தை உப்பை என்னும் பெண். அந்தக் குழந்தையும் பிறந்தவுடன், யானை முதல் எறும்பு வரை காக்கும் இறைவன் என்னைக் காப்பாற்றுவான் என்று பாடியதாம்.

 

“அத்தி முதல் எறும்பீறான உயிர் அததனைக்கும்

சித்த மகிழ்ந்தளிக்கும் தேசிகன் – முற்றவே

கற்பித்தான் போனானோ? காக்கக் கடனிலையோ?

அற்பனோ அன்னாய் அரன்?”

 

இதைக்கேட்டவுடன் அவள் குழந்தையை அங்கேயே போடுவிட்டுப் புறப்பட்டாள்.

மூன்றாவது குழந்தை ஆண். அதிகமான் என்ற பெயர். அக்குழந்தையும் பாடியது:

அம்மா கருப்பைக்குள் இருக்கும் குழந்தைக்கும், கல்லுக்குள் வசிக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன். நீ கவலையிலாமல் செல் என்றது.

கருப்பைக்குண் முட்டைக்கும் கல்லினுட் டேரைக்கும்

விருப்புற்றமுதளிக்கும் மெய்யன் – உருப்பெற்றால்

ஊடி வளர்க்கானோ? ஓகெடுவாய் அன்னாய்! கேள்

வாட்டமுனக்கேன்? மகிழ்!

ஔவையார்1

நான்காவது குழந்தையோ, அம்மா, கருப்பைக்குள் இருக்கும் குழந்தை தாயின் உணவையே உண்டு வளரவில்லையா? இதுவும் இறைவனின் செயலில்லையா? நீ ஏன் கவலைப்படுகிறாய்? என்று கேட்டவுடன் அக்குழந்தையையும் விட்டுச் சென்றாள்.

சண்டப்பைக்குள்ளுயிர்தன் தாயருந்தத் தானருந்தும்

அண்டத்துயிர் பிழைப்பதாச்சரியம்  – மண்டி

அலைகின்ற அன்னாய்! அரனுடைய உண்மை

நிலைகண்டு நீயறிந்து நில்.

இதைக் கேட்டு ஆதி , சமாதனம் அடைந்தாள் பின்னர் ஐந்தவது பிள்ளையைப் பெற்றபோது அதுவும் ஒரு வெண்பா பாடியது.

நடுக் காட்டில் கல்லுக்குள் இருக்கும் தவளையையும் அறிந்து அதற்குப் படியளக்கும் இறைவன் எனக்கு உணவளிக்கமாட்டானா? இதைவிட அவனுக்கு வேறு என்ன வேலை?

கண்ணுழையாக் காட்டிற் கருங்க ற்றவளைக்கும்

உண்ணும் படியறிந் தூட்டுமவர் – நண்ணும்

நமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர்

தமக்குத் தொழிலென்னதான்?

ஆறாவது குழந்தை, “தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கே உணவளிக்கும் கடவுள் எனக்கும் உணவளிப்பான். தாயே, வருந்தாது செல்க” என்று வெண்பா இயற்றியது:

அன்னை வயிற்றில் அருத்தி வளர்த்தவன் தான்

இன்னும் வளர்க்கானோ? என் தாயே! – மின்னரவஞ் சூடும் பெருமான், சுடுகாட்டில் நின்று விளை

யாடும் பெருமான் அவன்”

இதைக்கேட்டவுடன் தாயும் உச்சி குளிர்ந்து விடை பெற்றுச் சென்றாள்

ஏழாவது குழந்தையும் ஒரு வெண்பா பாடி தாய்க்கு நம்பிக்கையூட்டியது. அக்குழந்தைதான் பிற்காலத்தில் பெரும்புகழெடுத்த வள்ளுவன்:

உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் கடவுள் காப்பாற்றுவான். அதில் நானும் ஒருவனில்லையா? எனக்கு என்ன வரும் என்பது அவனுக்குத் தெரியும். கவலையில்லாமற் செல்க – என்றது.

எவ்வுயிரும் காக்கவோர் ஈசனுண்டோ, இல்லையோ?

அவ்வுயிரில் யானொருவன் அல்லனோ? – வவ்வி

அருகுவது கொண்டிங் கலைவதேன்? அன்னே

வருகுவதுதானே வரும்?

 

sundarambal2

இந்தக் கதையில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, தெரியாது. பாடல்கள் அனைத்தும் இந்துமதக் கருத்துக்களை எதிரொலிக்கிறது. ஆகையால் இவற்றைப் போற்றிப் பாது காக்கவேண்டும்.

எல்லாப் பாடல்களிலும் சிவ பெருமான் அருள் போற்றப்படுகிறது!

உலகத்தைப் படைத்த கடவுள் யாரையும் பட்டினி போடாமல் ஏதோ ஒருவிதத்தில் காப்பாற்றி விடுவான். காளிதாசன் சொன்னது போல அவனே உலகிற்கெல்லாம் தாயும் தந்தையும்:

ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ – காளிதாசனின் ரகு வம்சம்.

வாழ்க தமிழ்! வளர்க அவ்வை- வள்ளுவன் புகழ்!!

–சுபம்–

கோமுட்டிகளைக் கொட்டிய கொண்டித் தேள் !

தேள்

Compiled by London swaminathan

Date: 12 November 2015

POST No. 2323

 

Time uploaded in London :– 18-04

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

விகடன் ப்ரவேசம்

அகட விகட தீரன் மெத்த மெத்த

அறட்டுக்காரன் கவி புறட்டுக்காரன்

ககனமதைப் பாயாய்க் – கணத்தினில்

கக்கத்திற் சுருட்டிப் பக்குவஞ் செய்வேன்

காசினி முழுவதையும் – எந்தன்

நாசியலடைப்பேன் வாசிபோல

வேதமுடிவறிவேன் – அந்த விமலனையும் விண்டு வேதனையும்

அடுப்புக் கல்லாய் வைத்து – இந்த

அகிலந்தன்னையோர் அகலாக்கி

சப்த சமுத்திர நீர்தன்னைச்

சடுதிலகலியிற் பாய்ச்சியே நான்

தேவர்கள் முதலோரை – விரைவில்

சேர்த்து ஒன்றாயதிற் போட்டுக் காய்ச்சி

பஸ்பமதாய்ச் செய்து – நெற்றியில்

பரிவுடனணிந்திடும் சூரன் நானே!

தந்தினத்தினதினன

நகைச்சுவை இறை வணக்கம்

ககனே காக ரத்னானி க்ரக ரத்னானி மூஷிகா

சயனே மட்குண ரத்னானி சபாரத்னானி விதூஷக

ககனே- ஆகாயத்திற்கு

காக ரத்னானி – காகங்கள் பறப்பது அழகு

க்ரகரத்னானி – வீட்டிற்கழகு

மூஷிகா – பெருச்சாளிகள் வசிப்பது

சயனே- படுக்கைக்கு

மட்குண ரத்னானி – மோட்டுப் பூச்சிகள் வசிப்பது

சபாரத்னானி- சபைக்கு அழகாவது

விதூஷகா – காணதனைத்தியும் கண்டவிதம் பிரசங்கம் செய்யும் விகடப் பிரசங்கிகள்

scorpion-4

கோமுட்டிகள் பிரயாண ஒற்றுமை

ஆறுபேர் கோமுட்டிகள் ஒரு ஊருக்குப் போகும் மார்க்கத்தில் கள்ளியும் கத்தாழையும் நிரம்பி, ஆதிசேடன் குட்டிகள் வசிக்கும் பாழுங்கோவிலொன்றிருந்தது. அக்கோவிலில் முக்குறுணியரிசிப் பிள்ளையாரொன்றிருந்தது. விரிந்த முகமும் பெரிய துதிக்கையும் ஒருவிரல் ஆழமுள்ள தொப்புளுமாய் வீற்றிருந்ததைக் காணவும் அதில் ஒருவருக்கு சேஷ்டை சும்மாவிராமல் பிள்ளையார் தொப்புளில் விரலை விட்டார். அப்போது உள்ளேயிருந்த கொள்ளித் தேளொன்று நறுக்கென்று கொட்டியது.

அவர் மூக்கில் விரலை வைத்துமுகர்ந்து பார்த்துக்கொண்டு மற்றொருவரிடம்,”ஏமி பாவா! மஞ்சி வாசனரா, கமகமனி மணக்குசுந்தி” என்றான். இதைக் கேட்டு நிஜமென நம்பிய மற்றொருவனும் தன் விரலையுந்திணித்தான். அவனையும் ஒரு போடு போட்டது. அவனும், :அவுனுரா, பாவா, கஸ்தூரி வசன, கதம்ப வாசன, அத்தர் வாசன, அந்தா சேரி அரிகுமுக்குலோபனிசேஸ்துந்தி” யென்றான்

மூன்றாமவன் கையை விட அவனையும் தீண்டவே அவன் முன்னவனைப் போல வாசனை பிடித்து மெச்சினான். அந்தப் பாழுந்தேளுக்கு விஷமெங்கிருந்ததோ தெரியவில்லை, அத்தனை பேரையும் கொட்டிவந்தது.

இப்படியிருக்க கடைசியான ஒருவன் கையை விட்டான். அவன் மட்டும் அலறிப் புடைத்துக்கொண்டு, “அரே உரே, தேளுரா தேளு, கொண்டித் தேளுரா” எனவே எல்லோரும், அவுனுரா மாஅப்ப” என்று கட்டிக்கொண்டு நெறியின் உபத்திரவத்தால் அழுது சந்தோஷித்தனர்.

–சுபம்—

“பிராமணா போஜனப்பிரியா, நாரதா கலகப்பிரியா”

IMG_7068 (2)

Compiled by London swaminathan

Date: 11 November 2015

POST No. 2320

 

Time uploaded in London :– காலை 8-16

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை!

நூலைக் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

IMG_7072 (2)

போளி வடை சாப்பிட்ட ஸம்வாதம்

தண்டுலபுரம் பட்டாமணியக்காரர் சம்சாரம் அன்னபூரணியம்மாள் வீட்டில் குருவும் சீஷனும் திருப்தியாக புசித்துவிட்டு மீளுகையில் கீழே குனியமுடியாமல் சீஷனைப் பார்த்து, “அடே! பிரமானந்த சிஷ்யா! என் காலில் செருப்பு இருக்கிறதா பாரடா” என்றார். சிஷ்யனும் வயிறு நிரம்ப புசித்திருக்கிறபடியாலே குனிந்து பார்க்கச் சக்தியற்று ஆகாசத்தைப் பார்த்து, “சுவாமி, நட்சத்திர மண்டலம் வரை எங்கும் தேடிப்பார்த்தேன். காணப்படவில்லை” என்றான்.

சீ!சீ! பிருஷ்டா, தலை குனிந்து கீழே தேடடா” என்று குருவானவர் கோபித்துக்கொண்டு சொல்ல, “தங்களைப் பார்க்கிலும் குறைவாகச் சாப்பிட்ட முட்டாளென்று நினைத்தீரோ” என்று சீடன் ஜவாப்பு சொன்னான். இவர்கள் நம்மைப் பார்க்கிலும் போஜனப்ரியர்கள் யார் இருக்கப் போகிறார்கள் என்று நடந்து போகையில் வேறொரு சாப்பாட்டு ராமன், தெருத் திண்ணையில் படுத்துப் புரண்டு வயிற்றைத் தட்டிக்கொண்டு இப்படி அப்படி நெளிந்து அவஸ்தைப் பட்டுக்கொண்டி ருக்கையில் அவனது தாயார் வந்து அருகில் நின்று, “அப்பனே, இரண்டு ஓமம் தரட்டுமா?” என்று கேட்டாள். அதற்கவன் நகைத்துக் கொண்டு ஒரு ஓமத்துக்கு இடமிருந்தால் இன்னும் இரண்டு போளி சாப்பிட்டிருக்கமாட்டேனா? என்றான்.

இதைச் செவியுற்ற சீடனும் குருவும் இது ஏது நம்மைப் பார்க்கிலும் அகாதமாயிருக்கின்றது என்று தங்களிருப்பிடம் சேர்ந்தார்கள்.

IMG_7072 (3)

பிராமணா போஜனப் பிரியா

ஒரு நாள் ஜலக்கரையில் உட்கார்ந்து ஜெபம் பண்ணிக்கொண்டிருந்த பிராமணனண்டை மற்றொரு பிராமணன் வந்து “ஐயா, பெரியவரே! இன்று என் ஆத்தில் திவசம், பிராமணார்த்தத்திற்கு வரவேண்டுமென்று கூப்பிட்டான்.

“பிராமணா போஜனப்பிரியா, நாரதா கலகப்பிரியா” என்றபடி முடாமுழுங்கிப் பிராமணன் வேட்டை கிடைத்ததென்று கனைத்து, கொஞ்சமும் வஞ்சமன்னியில் இடுப்பில் கட்டியிருந்த அரைஞாண் அறுபடும்படியாகச் சாப்பிட்டுவிட்டு அடுத்த வீட்டுத் திண்ணையில் படுத்திருக்கும் பொழுது அவ்வீட்டுக்குரிய ஸ்த்ரீ, “ ஏங்காணும் சாஸ்திரிகளே, இப்படி திண்ணையில் விழுந்து புரளுகிறீர்களே! இரண்டு மினறு ஜலம் குடிக்கிறதுதானே என்று கேட்டதற்கு, “ அம்மா!   இரண்டு மினறு ஜலம் சாப்பிட இடமிருந்தால், இன்னும் இரண்டு வடையாவது திணித்திருக்க மாட்டேனா?” என்று சாவதானமாகப் பதில் சொல்லிவிட்டு எழுந்திருந்து தன் வீட்டை நாடிச் சென்றான்.

–Subham–

தீபாவளிக் கட்டுரை: தீப மங்கள ஜோதீ நமோ நம!

diya

Compiled by London swaminathan

Date: 10 November 2015

Post No:2317

Time uploaded in London :– காலை 5-13

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

இன்று தீபாவளித் திருநாள்! பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

உலகில் இந்துக்களின் தனிச் சிறப்பு கடவுளை ஒளிரூபத்தில் வழிபடுவதாகும்; இதன் முத்தாய்ப்புதான் தீபாவளியும் கார்த்திகையும்! தமிழர்கள் கார்த்திகை நாளன்று வீடெங்கும் தீபங்களை ஏற்றி வைப்பர். வடக்கில் வாழும் நம் சகோதரர்கள் தீபாவளித் திருநாளன்று இவ்வாறு அகல் விளக்கு ஏற்றி வைப்பர்.

இந்த ஒளி வழிபாடு உலகம் முழுதும் இந்துமதம் இருந்த காலத்தில், எல்லா தேசங்களிலும் இருந்தது. மோசஸ் ஒளிரூபத்தில் ஆண்டவனைக் கண்டதும், பிற மதத் தலைவர்கள் ஒளிரூபத்தில் தேவதைகள் வந்ததாகக் கூறுவதும் இதையேதான். இந்துமதம் மறந்துபோன நாடுகளில் இந்த ஒளி வழிபாடு இப்போது இல்லை. ஆனால் பாரதத்தில் இன்று வரை அது நீடிக்கிறது.

சங்க இலக்கியத்தில் கார்த்திகை தீபம் பற்றிய குறிப்புகள் உண்டு; ஆனால் தீபாவளி பற்றி நேரடிக் குறிப்புகள் இல்லாவிடினும் மனைவியைக் குடும்ப விளக்கு என்று பாடும் சங்க இலக்கியப் பாடல்கள், விளக்கின் முக்கியத்துவத்தைக் காட்டும்.

diya2

இது எப்போது துவங்கியது?

உலகிலேயே மிகப் பழைய சமய நூல் ரிக் வேதம்; அதில் காயத்ரீ மந்திரம் இருக்கிறது. அது கடவுளை ஒளி உருவத்தில் வழிபடும் மிகப் பழைய துதி! பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், சிந்து, சரஸ்வதி, கங்கை நதிக்கரையில் ஒலித்த அந்த மந்திரம் இன்று வரை ஒலிக்கிறது. உலகில் வேறெங்கும் காணாத புதுமை இது. காயத்ரீ மந்திரத்தில் துவங்கிய ஒளி வழிபாடு பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷதத்திலும் தொடர்கிறது.

“அஸதோ மா சத் கமய

தமஸோ மா ஜோதிர் கமய

ம்ருத்யோர் மா அம்ருதம் கமய!”

உபநிஷதங்களிலேயே மிகவும் பழையது பிருஹதாரண்யக உபநிஷத்! அதில் “இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்” — என்று வேண்டுகிறோம் (தமஸோ மா ஜோதிர் கமய).

ஆயிரம் தீபம்

பகவத் கீதையில் ஒளி வழிபாடு

அர்ஜுனனின் ஐயங்களை அகற்ற கிருஷ்ணன் விஸ்வரூபம் எடுத்தபோது அது ஆயிரம் சூரியன் ஒரே நேரத்தில் உதித்தது (கீதை 11-12) போலிருந்ததாம்! கீதையைப்படித்து அதில் ஊறிப்போன அணுகுண்டின் தந்தை ஓப்பன்ஹீமர் முதல் அணுகுண்டு சோதனையின் போது தோன்றிய ஒளியைப் பார்த்து அசந்து போய், இந்த (திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய 11-12) ஸ்லோகத்தைச் சொன்னார்.

கண்ண பிரான் ஒளி ரூபத்தில் தோன்றியது மட்டுமின்றி பகவத் கீதையில் ஞானதீபம் (அறிவு ஒளி) என்ற உவமையைப் பல இடங்களில் கையாளுகிறான் (10-11; 4-3, 4-19)

ஆழ்வார்கள், நாயன்மார்கள்

பகவத் கீதையைத் தொடர்ந்து நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஞான விளக்கு பற்றிப் பாடுகின்றனர். விளக்கு, திரி உருவகத்தை அப்பர் பெருமான் தேவாரத்தில் பாடுகிறார். பூதத்தாழ்வார் திவ்யப் பிரபந்தத்தில் பாடுகிறார்.

ஞான தீபம்= ஞான விளக்கு ( பகவத் கீதை 10–11)

“பக்தர்களின் உள்ளத்தில் நிலைபெற்று என் அருளால் பிரகாசிக்கும் ஞான தீபத்தால் அஞ்ஞான இருளை நாசம் செய்கிறேன்:– இதற்கு அண்ணா (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை) எழுதிய உரையில் சில பாடல்களை மேற்கோள் காட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது:–

போதாந்தப் புண்ணியர்கள் போற்றி சய போற்றியெனும்
வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே – (தாயுமானவர்)

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா – நன்புருகு
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் — (பூதத்தாழ்வார்)

ஞான அக்னி = ஞானத் தீ ( கீதை 4-19 )
“எவனுடைய எல்லா கருமங்களும் ஆசையும், அதற்குக் காரணமான சங்கல்பமும் அறுபட்டு, ஞானத் தீயில் பொசுங்கிய வினைகளை உடைய அவனை பண்டிதன் என்று அறிவாளிகள் கூறுவர்”.

திருமூலர் பாடுகிறார்:

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே
– திருமந்திரம்

DEEPA LAKSHMI, FB

இதற்கெல்லாம் பின்னர்வந்த அருணகிரிநாதர் சந்தத் தமிழில் அழகாகப் பாடுகிறார்:

தீப மங்கள ஜோதீ நமோ நம

தூய அம்பல லீலா நமோநம

தேவ குஞ்சரி பாகா நமோ நம- அருள்தாராய்

பாரதியார், காயத்ரீ மந்திரத்தை தமிழில் மொழிபெயர்த்த வரிகளுடன் கட்டுரையை நிறைவு செய்வோம்:

“செங்கதித் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்ந்து தெளிகின்றோம்–அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக”

–சுப்பிரமணிய பாரதி

–சுபம்–

வேடிக்கையான தமிழ்ப் பழமொழிகள்!!!

gold necklace

Article Written by London swaminathan

Date: 8 November 2015

Post No:2311

Time uploaded in London :– காலை 7-14

(Thanks for the Pictures ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

“தான் ஆண்ட உலக்கையும், தங்கப் பூஞ்சரடும் தலைமருமகளுக்கு!”

ஒரு பெண்ணை அவளுடைய மாமியார் கொடுமைப் படுத்தி வந்தாளாம். ஒரு நாள் அவள் பொறுமை எல்லைமீறிப் போனது. அப்பொழுது கணவனும் ஊரில் இல்லை. உரலில் மாவு இடித்துக் கொண்டிருந்த போது வழக்கம்போல மாமியார் வந்து வசைமாறி பொழிந்தாள். பின்னர் மாமியார் மத்தியான வேலைத் தூக்கம் போட்டார். அதுதான் தக்க சமயம் என்று கருதி, மருமகள் உலக்கையைக் கொண்டு,  மாமியாரின் மார்பில் ஒரு போடு போட்டார். அவருக்குப் பேச்சு நின்று போய் மூச்சுத் திணறல் வந்தது. மாமியார் போட்ட கூச்சலைக் கேட்டு பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுக் காரர்கள் எல்லாம் கூடிவிட்டனர்.

பேச்சு நின்று போன மாமியார், இறப்பதற்கு முன்னர், குற்றவாளியைக் காட்டிக் கொடுக்க எண்ணி, தனது மார்பைத் தொட்டுக் காட்டிவிட்டு, உலக்கையைக் கையால் சுட்டிக் காட்டிவிட்டு, பின்னர் மருமகளையும் சுட்டிக்கட்டினாள். அதாவது மாமியார் சொல்ல வந்தது:-

என்னை உலக்கையால் மார்பில் அடித்தது தன் மரு மகளே என்று.

ஆனால் மருமகளோ மஹா கெட்டிக்காரி. எல்லோரும், மாமியார் என்ன சொல்கிறார்? எங்களுக்குப் புரியவில்லையே? என்று கேட்டனர். அவள் சொன்னாள்:–

மாமியாருக்கு என் மீது கொள்ளை அன்பு. நான் மாவு இடிக்கப் பயன்படுத்திய உலக்கை எனக்கே சொந்தம் என்றும் அவர் மார்பில் அணிந்திருக்கும் வைர நெக்லசும் எனக்கே கிடைக்க வேண்டும் என்றும் அவர் சைகை காட்டுகிறார் ; ஏனென்றால் நான் தான் வீட்டுக்குத் தலை மருமகள் என்றாள். இதற்குள் மாமியாரின் உயிரும்பிரிந்தது. எல்லோரும் மாமியாரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது நம் கடமை என்று சொல்லி, மருமகளுக்கே உலக்கையையும், வைர நெக்லசையும் அளித்தனர்!!

IMG_4564

அடுப்பே வனவாசம்,கடுப்பே கைலாசம்

மாமியாரின் கொடுமைக்கு உள்ளான ஒரு மருமகளின் புலம்பல் இது. எனக்கு வனவாசமும், கைலசமும் போல இந்த மருமகள் பொறுப்பு இருக்கிறது

அரிசி என்று அள்ளிப் பார்ப்பாருமில்லை, உமி என்று ஊதிப் பார்ப்பருமில்லை

இது இன்னுமொரு மருமகளின் புலம்பல்: யார் என்னைக் கவனிக்கிறார்கள்? என்னை அரிசி போலவும் நடத்துவதில்லை; உமியா என்று ஆராய்வதுமில்லை; ‘உப்புக்குச் சப்பை, ஊருக்கு மாங்கொட்டை’ என்பது போல என் வாழ்வு இருக்கிறது – என்பது இதன் பொருள்.

pestle mortar

சீரங்கத்தில் உலக்கை கொடுத்தது போல

ஸ்ரீரங்கத்தில் கோவிலில் பெண்கள், மாவு இடித்தல் போன்ற வேலைகளைச் செய்வது வழக்கம். இந்தப் பொறுப்பை ஏற்போர், நாள் முழுதும் மாவு இடிக்க வேண்டும். இதை மேற்பார்வையிட ஒரு கண்காணியும் இருப்பார். கொஞ்சதூரத்தில் அவர்களுடைய குழந்தைகளை அந்தப் பெண்கள் மரத்தில் கட்டிய தூலியில் போட்டு வைத்திருப்பர். குழந்தை திடீரென்று அழத்துவங்கினால், யாராவது அந்தப் பக்கம் வருவோர் போவோரிடம், “இந்தாருங்கள், கொஞ்சம் இந்த உலக்கையைப் பிடியுங்கள். இதோ குழந்தை அழுகிறது. என்ன என்று பார்த்துவிட்டு வருகிறேன்” — என்று சொல்லி உலக்கையைக் கை மாற்றுவார். அவ்வளவுதான். குழந்தையைக் கவனிக்கப்போன பெண், வீட்டுக்கே போய்விடுவாள். திரும்பி வரமாட்டாள். யார்  உலக்கை பிடித்தார்களோ அவர்கள் சூரிய அஸ்தமனம் வரை மாவு இடித்தாக வேண்டும்!!

இதுபோன்று எங்கெங்கெல்லாம் ஒருவர் இன்னொருவர் தலையில் வேலையைச் சுமத்திவிட்டு நழுவுகிறார்களோ அங்கெல்லாம் இந்தப் பழமொழி பயன்படுதப்படும்.

razor

திருப்பதி அம்பட்டன் கதை

இதுபோல திருப்பதி பற்றியும் ஒரு கதை உண்டு.திருவிழாக் காலங்களில் நிறைய பேர் முடி காணிக்கை கொடுத்து, மொட்டை அடித்துக்கொள்ள வருவார்கள். அவர்கள் கொடுக்கும் காசு மீது ஆசையுள்ள நாவிதர்கள் எல்லோரையும், ‘இங்கே வா, இங்கே வா’ என்று அழைத்துக் கூலியை வாங்கிக்கொண்டு, ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் முடியைச் சிரைத்துவிட்டு, அடுத்த மண்டபத்தில் புதிய வாடிக்கை பிடிக்கப் போய்விடுவர். பாதி முடி கொடுத்தவர்கள், வெளியே போனால் நகைப்புக்கு இடமளிக்கும். ஆகையால் அவிழ்த்த துணியோடு அவனுக்காக காத்திருப்பர்.

இப்படி ஏதேனும் ஒரு விஷயத்துக்காக அல்லது சுய லாபத்துக்காக யாராவது ஒருவர் அரைகுறை வேலை செய்தால் அதற்கு திருப்பதி அம்பட்டன் வேலை என்று பெயர்!!

–சுபம்–

லண்டனில் பூனைக்கு ஒரு சிலை! ஒரு எழுத்தாளனின் சுவையான வரலாறு!

IMG_7857

Article Written by London swaminathan

Date: 7 November 2015

Post No:2308

Time uploaded in London :–7-58    AM

(Pictures in this article are taken by London swaminathan) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

IMG_7854

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உலகப் புகழ்பெற்ற ஒரு நாய்க்கு ஒரு சிலை இருப்பது பற்றி முன்னரே எழுதியுள்ளேன். அதற்கு சிலை பெறும் தகுதி உண்டு. ஒரு பேராசிரியர் தினமும் அந்த நாயை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ரயில் ஏறுவார். மாலையில் திரும்பி வரும்போது அவரை நாய்  வரவேற்கும். ஒரு நாள் அவர் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இறந்துவிட்டார். பாவம் ஹசிகோ என்ற பெயருள்ள அந்த நாய்க்கு எஜமானர் இறந்தது தெரியாது. ஒன்பதரை மாதங்களுக்கு தினமும் ரயில் வரும் அதே நேரத்துக்குச் சென்று காத்திருந்தது. பின்னர் இறந்து விட்டது. இன்று ஹசிகோ நாயைத் தெரியாதோர் ஜப்பானில் இல்லை. அது புகழுக்கு உரிய நாய்.

ஆனால் வேடிக்கை! ஒரு செயற்கரிய செயலும் செய்யாமலேயே சிலை பெற்று விட்டது ஹாட்ஜ் (Hodge) என்னும் பூனை. “பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்” – என்பது தமிழ்ப் பழமொழி. ஹாட்ஜ் செய்த புண்ணியம் என்ன தெரியுமா? அது உலகப் புகழ் பெற்ற ஆங்கில அகராதி மன்னன், பெரும் எழுத்தாளன், இலக்கிய விமர்சகன், ஷேக்ஸ்பியர் நாடகத் தொகுப்பாளன், பேச்சு மன்னன், நாவுக்கரசன் சாமுவேல் ஜான்சனின் Samuel Johnson (1709 – 1784) நெருங்கிய தோழன். அவ்வளவுதான். அவர் வளர்த்த பூனை என்பதால் அதற்கு, ஜான்சன் வீட்டுக்கு முன்னால், தெருவிலேயே ஒரு சிலை. அதைக் காண தினமும் ஒரு கூட்டம். நானும் போய்ப் புகைப்படம் எடுத்தேன்.

ஆனால் நான் போனது பூனையைத் தேடி அல்ல. புனைக்கதை மன்னனைத் தேடி! அவர்தான் எழுத்துச் சிற்பி சாமுவேல் ஜான்சன்! அவருடைய வரலாறு மிக மிகச் சுவையூட்டும் வரலாறு. சுருக்கமாகச் சொல்கிறேன்.

IMG_7860

சாமுவேல் என்ன சாதித்தார்? 1930 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி வருவதற்கு முன்னர், மிகப்பெரிய அகராதியைத் தயாரித்து ஆங்கில இலக்கிய வரலாற்றில் அழியாத இடம் பெற்றார். பிரான்சு நாட்டில் 40 அறிஞர்களைக் கொண்ட குழு, 40 ஆண்டுக் காலத்துக்கு உழைத்து பிரெஞ்சு மொழி அகராதியைத் தயாரித்தது. ஆனால் சாமுவேல் ஜான்சனோ மூன்றே ஆண்டுக் காலத்தில் ஒரு அகராதியைத் தயாரித்தார்.

கடன்கார எழுத்தாளன்!

இதற்காக அவரைப் பாராட்டி மூன்றாம் ஜார்ஜ் மன்னர் 300 பவுண்டு வருடாந்திய பென்ஷன் தொகை அளித்தார். அதை ஏற்க ஜான்சன் பயந்தார். மற்றொருவரின் கைப்பாவை ஆகி, எழுத்துச் சுதந்திரம் பறி போய்விடுமோ என்று அஞ்சினார். பின்னர் நண்பர்கள் சொற்படி அதை ஏற்றார். இத்தனைக்கும் அவர் கடன் பாக்கிக்காக இரண்டு முறை கைதானவர்!! ஒரு முறை 4 பவுண்டு, இன்னொரு முறை 40 பவுண்டு கடன் பாக்கிக்காக போலீசார் அவரைக் கைது செய்தனர். ஒவ்வொரு முறையும் அவரை நண்பர்கள் காப்பாற்றினர். அதுவும் எப்படி? இலவச அன்பளிப்புத் தொகை கொடுக்கவில்லை. இவர் ஏதேனும் ஒரு கதை, அல்லது இலக்கியப் படைப்பு எழுதித் தருவதாகச் சொன்னவுடன் அவர்கள் பிணைத் தொகையைக் கொடுத்து இவரை விடுவித்தனர்.

ஆனால் நாளடைவில் ஜான்சனின் புகழ் பரவவே, அவரைச் சுற்றி அறிஞர் கூட்டம் குவிந்தது. அவர் தொடங்கிய வாசகர் வட்டத்தில் சேர ‘கியூ’வில் நிற்கவும். சிபாரிசுக் கடிதம் பெறவும் தேவை ஏற்பட்டது.

ஜான்சனுக்கு ஸ்காட்லாந்துக்காரர்களைக் கண்டால் பிடிக்காது. ஆனால் ஸ்காட்லாந்திலிருந்து வந்த ஜேம்ஸ் பாஸ்வெல் என்ற அறிஞர் இவருடன் நண்பராகி ‘ஜான்சனின் வாழ்க்கை வரலாறு’ என்று புத்தகம் எழுதினார். அதனால் ஜான்சனின் புகழ் உச்சாணிக்குப் போய்விட்டது.

IMG_7865

ஜான்சன் சிறந்த பேச்சாளர்; நகைச்சுவை ததும்ப உரையாற்றுவார். அவருடைய இலக்கிய, அரசியல் விமர்சனத்தைக் கேட்க எப்பொழுதும் ஒரு கூட்டம் அவரைச் சுற்றி நிற்கும். அவர் சொன்னதை எல்லாம் பத்திரிகைகள் வெளியிடுமளவுக்குப் புகழ் பரவியது. அவரே ‘ராம்ப்ளர்’ என்றொரு பத்திரிக்கையும் நடத்தினார். ஆனால் பின்னர் அது மூடு விழா கண்டுவிட்டது.

ஜான்சன் ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடியதால் 17 வீடுகளுக்கு இடம் மாறினார். பிறந்ததோ லண்டனுக்கு வெளியே. இப்பொழுது அவர் வசித்த ஒரு வீட்டில் மியூசியம் இருக்கிறது அங்கு அவருடைய இரண்டு ஒரிஜினல் அகராதிகள் உள்ளன. மேலும் 4 நகல்கள் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளன.

IMG_7893

ஷேக்ஸ்பியர் நாடகத்தொகுப்பு

ஜான்சனுக்கு முன்னால் ஷேக்ஸ்பியர் நாடகங்களை வெளியிட்டோரும், நடித்தோரும், ஷேக்ஸ்பியரின் எழுத்துக்களை மக்களின் ரசனைக்கேற்ப அவ்வப்பொழுது மாற்றினர். ஜான்சன் மிகப் பெரிய முயற்சி செய்து ஷேக்ஸ்பியரின் ஒரிஜினலை அப்படியே வெளியிட்டார்.  ஷேக்ஸ்பியர் காலத்தில் அந்தச் சொற்களுக்கு என்ன பொருள் நிலவியதோ அதை விளக்கி எழுதி நல்ல பதிப்பைக் கொண்டுவந்தார். இன்று நாம் காணும் நாடகம் எல்லாம் ஜான்சன் வெளியிட்ட திருத்திய பதிப்பே!

லண்டன் “போர்” அடித்தால், வாழ்க்கையே ‘போர்’!

பிற்காலத்தில் ஜான்சனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாஸ்வெல், ஸ்காட்லாந்திருந்து லண்டனுக்கு இடம்பெயர்ந்து குடியேறத் தயங்கினார். லண்டனுக்கு வந்துவிட்டால் அது மிகவும் சலிப்பை ஏற்படுத்துமே என்றார். அதற்கு ஜான்சன் என்ன தெரியுமா பதில் சொன்னார்: “ஒருவனுக்கு லண்டன் மாநகரம் களைப்பையோ சலிப்பையோ எற்படுத்துமானால் அவர் வாழ்க்கையே சலிப்பானதுதான்” என்றார். லண்டனில் ‘போர்’ அடித்துப் போனவர் எவரும் இல்லை! . பின்னர், ஜேம்ஸ் பாஸ்வெல்லுடன், ஸ்காட்லாந்து முதலிய இடங்களைச் சுற்றிப்பார்த்தார்.

ஜன்சன் எழுதிய கதைகள், கட்டுரைகள், இலக்கிய விமர்சனக்கள் எல்லாம் புத்தக வடிவில் வந்துவிட்டன. ஆங்கிலக் கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை, இலக்கிய விமர்சனத்தோடு ஆறு பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்.

IMG_7877   IMG_7878

உருவத்தில் பெரியவர்; விநோத நடை, உடை பாவனை!

1709 ஆம் ஆண்டில் லிட்ச்பீல்ட் என்னுமிடத்தில் பிறந்த ஜான்சன் ஆஜானுபாஹு. பலத்த உடல்வாகு கொண்டவர். கண்பார்வை மங்கியவர். புத்தகங்களை முகத்துக்கு அருகில் வைத்துப் படிக்கக்கூடியவர். ஒரு காதும் கேளாது. விநோதமான நடவடிக்கைகளை உடையவர். இதனால் அவரைப் பலரும் பைத்தியம் என்று நினைப்பர். வில்லியம் ஹோகார்த் என்ற ஓவியர் இவரைப் பார்க்க வந்த போது, சரியான மடையன் என்று நினைத்தார். அவர் பேசத் துவங்கிய பின்னர்தான் அவர் ஒரு அறிஞர் என்று தெரிந்தது. அவருடைய தந்தை புத்தகக்கடை வைத்திருந்தார். அவருடைய கண், காதிலிருந்த குறையை, அவர் மூளை ஈடு செய்தது. எதையும் ஒருமுறை படித்தவுடன் அது அப்படியே மனப்பாடம் ஆகிவிடும். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கப்போனவர், பணம் கட்ட முடியாததால் படிப்பைவிட்டு விட்டு ஆசிரியர் ஆனார். பின்னர் பத்திரிக்கையாளர் ஆனார்.

அவருடைய வாழ்வில் நடந்த இன்னொரு விநோதம், அவர் வயதைப் போல இரு மடங்கு வயதுடைய ஒரு விதவையைத் திருமணம் செய்துகொண்டதாகும். கையில் காசு இல்லததால் காப்பிக் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் பொழுதைக் கழித்த அவர் 1738ல் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அவர் ஒரு கவிஞரும் கூட.

அந்தக் காலத்திலிருந்த ஆங்கில அகராதிகள் தெளிவான விளக்கம் இல்லமல் குறைபாடுகளுடன் இருந்தன. ஆகையால் ஒரு புத்தகக் கடைக்காரர், ஜன்சனிடம் பணம் கொடுத்து, அவருக்கு ஆறு உதவியாளர்களையும் அனுப்பினார். ஜன்சனின் பல்துறை அபார அறிவினால் சில ஆண்டுகளில் அப்பணி முடிந்து அவருக்கு பெரும் புகழைக் கொடுத்தது. 1930 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் அகராதி வெளிவரும்வரை அகராதி என்றால், அது ஜான்சனின் அகராதிதான் என்று பெயர் விளங்கியது. அவர் 43,000 சொற்களுக்கு விளக்கம் கொடுத்தார்.

IMG_7902  IMG_7918

1759 ஆமாண்டில் அவர் தாயார் இறந்தபோது இறுதிச் சடங்குகளுக்கு மட்டுமே அவரிடம் பணம் இருந்தது. ஒரு நாவல் எழுதித் தருவதாகச் சொல்லி பணம் கடன் வாங்கினார். சொன்னபடியே நாவலையும் முடித்துக் கொடுத்தார்.

ஆங்கிலக் கவிஞர்கள் வாழ்க்கையை இவர் எழுதுவதற்கு கொஞ்சம்தான் பணம் வாங்கிக் கொண்டார். தான் முப்பது ஆண்டுக் காலம் படித்ததை நினைவிற்கொண்டு அருமையாக எழுதி முடித்தார். இதைப் பார்த்துவிட்டு சிலர்,  “என்ன அநியாயம் இது? இவ்வளவு பெரிய பணிக்கு கொஞ்சம் பணம் கொடுதிருக்கிறார்களே?” என்று அங்கலாய்த்தனர். அதற்கு ஜான்சன் என்ன தெரியுமா பதில் சொன்னார்:- “அவர்கள் சரியாகத்தான் பணம் கொடுத்திருக்கிறார்கள். நான் தான் கொஞ்சம் அதிகமாக எழுதிவிட்டேன்” – என்றார்

பெருந்தன்மை மிக்கவர். மற்றவர்களுக்கு உதவி செய்தவர். ஆங்கில இலக்கிய உலகில் அழியா இடம் பெற்றவர் சாமுவேல் ஜான்சன்.

IMG_7909

IMG_7912

IMG_7908

–Subham–