திரவுபதியை கிருஷ்ணன் காப்பாற்றியது ஏன்?

Was Draupadi Disrobed

Compiled by London swaminathan

Post No.2239

Date: 13 October 2015

Time uploaded in London: காலை 9-15

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

மஹாபாரதம் உலகிலேயே மிக நீண்ட இதிஹாசம். சமய சம்பந்தமான நூல்களில் இதுவே உலகில் பெரிய நூல். இது ஒரு பெரிய பொக்கிஷம். கடல் போலப் பரந்த விஷயங்கள் இதில் உள்ளன. இதில் எப்போது மூழ்கினாலும் முத்து, பவளம், வலம்புரிச் சங்குகள் கிடைக்கும். ஆனால் இதிலுள்ள விஷயங்களை யாரும் விஷயம் வாரியாகத் தொகுத்து வெளியிடவில்லை. இதிலுள்ள கதாபாத்திரங்கள், உவமைகள் முதலியன பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் உள்ளன. ஆனால் பொன்மொழிகளை விஷயம் வாரியாக (சப்ஜெக்ட்) வெளியிட்டால் நன்றாக இருக்கும். கீழேயுள்ள நான்கு ஸ்லோகங்கள் பல முக்கிய விஷயங்களைத் தரும்:

‘லக்கி’ திரவுபதி

சதுர்பி: காரணை: க்ருஷ்ண த்வயா ரக்ஷ்யாஸ்மி நித்யச:

சம்பந்தாத் கௌரவாத் சக்யாத் ப்ரபுத்வேநைவ கேசவ

(மஹாபாரதம், வனபர்வம்,12-127)

திரவுபதியைக் கிருஷ்ணன், காப்பாற்றியதற்கு நான்கு காரணங்கள் உண்டு:

1.சம்பந்தாத் = உறவு முறை

2.கௌரவாத் = மானத்தைக் காப்பாற்றும் பொருட்டு

3.சக்யாத்= நட்புமுறை

4.ப்ரபுத்வாத்= இறைவன் என்ற முறையில்

longest step

சுவர்க்கத்துக்குப் போக உதவும் படிக்கட்டு எது?

சத்யமே (உண்மை) ஸ்வர்கத்துக்கான மாடிப்படி. அதில் ஏறினால் எளிதில் சொர்க்கத்தை அடையலாம்.

ஏகமேவாத்விதீயம் யத் தத் ராஜன் நாவபுத்யசே

சத்யம் ஸ்வர்கஸ்ய சோபானம் பாராவாராஸ்ய நௌரிவ

(மஹாபாரதம், உத்யோக பர்வம்,33-47)

எவ்வாறு படகு ஒன்று கடல், அல்லது, நதியைக் கடக்க உதவுமோ அவ்வாறு சுவர்க்கம் செல்ல சத்யம் என்பது படிக்கட்டாகத் திகழ்கிறது.

ஏ, மன்னனே, நீ இதைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டாய். இதைவிட வேறொன்றுமில்லை.

(சுவர்க்கம் என்பது மேலே இருப்பதால் மேலேறிச் செல்லும் படி உவமையாக்கப்பட்டது)

Simple-Indoor-Stair-Treads

தர்மத்தின் விளக்கம், இலக்கணம் என்ன?

வேதோக்த: பரமோ தர்ம: தர்மசாஸ்த்ரேஷு சாபர:

சிஷ்டாசாரஸ்ச சிஷ்டானாம் த்ரிவிதம் தர்ம லக்ஷணம்

(மஹாபாரதம், வன பர்வம்,207-83)

தர்மம் என்பது மூன்று இடங்களில் இருக்கிறது:–

வேதத்தில் சொல்லப்பட்ட எல்லாம் தர்மம்

தர்மசாஸ்த்ரம் = நீதி நூல்கள் செப்புவது அனைத்தும் தர்மம்

சிஷ்டாசார: = ஆசாரம் பற்றிய விதிமுறைகலைச் சொல்லுவது எல்லாம் தர்மம் ( இதை ஒவ்வொரு காலத்திலும் குரு அல்லது குடும்பத்திலுள்ள பெரியோர்கள் சொல்லும் மொழிகள் எனக் கொள்ளலாம்)

 krshna eating

மற்றவர்கள் வீட்டில் சாப்பிடலாமா?

கிருஷ்ணர், கௌரவர்களின் பெரிய அரண்மனை விருந்தை விட்டுவிட்டு, தேரோட்டி விதுரன் வீட்டில் தங்கினார். ராமன், சபரி என்னும் வேடுவச்சி கடித்துக் கொடுத்த இலந்தைப் பழத்தைச் சாப்பிட்டார். கண்ணாப்ப நாயனார், எச்சில்படுத்டிக் கொடுத்ததை, சிவ பெருமான் ஏற்றார். ஏன்?

சம்ப்ரீதி போஜ்யான்யன்னானி ஆபத் போஜயானி வா புன:

ந ச சம்ப்ரீயசே ராஜன் ந சைவாபத்கதா வயம்

(மஹாபாரதம், உத்யோக பர்வம்,91-25)

அன்பின் காரணமாக அளிக்கப்பட்ட எதையும் ஏற்கலாம் ( அவர்கள் வீட்டில் சாப்பிடலாம்; அசுத்தமான உணவானாலும், தூய அன்பு, அந்த உணவைச் சுத்தப் படுத்திவிடும்)

ஆபத்துக் காலத்திலும் எங்கும் சாப்பிடலாம் (உயிரைக் காப்பதே முதல் கடமை; சுவர் இருந்தால்தானே சித்திரம்? உயிர் இருந்தால்தானே சாஸ்திரம்!)

–சுபம்-

டாக்டருக்கும் யமனுக்கும் வேறுபாடு என்ன?

cartoon-doctor-8

Compiled by London swaminathan

Post No.2227

Date: 9  October 2015

Time uploaded in London: 9-03 காலை

Thanks for the pictures.

ஒரு அருமையான சம்ஸ்கிருத ஸ்லோகம்.

இது, பல்லாயிரக் கணக்கான சம்ஸ்கிருதப் பாடல்கள் நிறைந்த புத்தகமான சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் நூலில் இருக்கிறது. அதாவது சம்ஸ்கிருத தனிப்பாடல் திரட்டு நூலில் ஒரு பாடல். அதில் டாக்டர்களைப் பற்றிக் கூறுவது உலகில் எல்லா மொழிகளிலும் ‘ஜோக்’-குகளாக உள்ளன.

வைத்யராஜ! நமஸ்துப்யம் யமராஜ சஹோதர!!

யமஸ்து ஹரதே ப்ராணான், வைத்ய: ப்ராணான் தனானி ச!

“ஹே, டாக்டர்! யமரஜனின் சகோதரனே!! உனக்கு வணக்கங்கள்!

யமன் என்பவன் உயிரை (மட்டும்) கொண்டுபோகிறான். டாக்டர்களோ உயரையும் பணத்தையும் சேர்த்துக் கொண்டுபோகிறார்கள்!!!”

இதே கருத்து உலகம் முழுவதிலும் டாக்டர்கள் பற்றிய “ஜோக்”–குகளில் இருப்பதை முன்னரே ஆங்கிலத்தில் நிறைய சம்பவங்கள் மூலம் கொடுத்துள்ளேன்.

டாக்டர்களின் அனுபவமின்மை பற்றியும் பல பொன்மொழிகள் உள. தமிழில் சொல்லுவோம்:

“ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” – என்று! இதுவும் சம்ஸ்கிருதத்தில் காணப்படுகிறது!

ஹத்வா ந்ருணாம் சஹஸ்ரம், பஸ்சாத் வைத்யோ பவேத் சித்த:

ஆயிரம் பேரின் கதையை முடித்தவுடன்தான், ஒரு டாக்டர் பெரிய டாக்டர் ஆகிறார்.

xxx

doctor

யாருக்கு முதல் மரியாதை என்று ஒரு டாக்டருக்கும் வழக்கறிஞருக்கும் வாக்கு வாதம் வரவே டயொஜெனிஸ் (கி.மு.412) என்ற கிரேக்க நாட்டு தத்துவ அறிஞரிடம் சென்றனர். அவர் சொன்னார்:

திருடன் முதலில் போகட்டும்; மரணதண்டனை நிறைவேற்றுபவன் அவன் பின்னால் செல்லட்டும்!

Xxx

அலெக்ஸாண்டர் துமா என்பவர் பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர். மார்செய் நகரத்தின் பிரபல டாக்டர் ஜிஸ்டால், அவரை விருந்துக்கு அழைத்தார். விருந்து எல்லாம் சுகமாக முடிந்தவுடன் தன்னுடைய ஆல்பத்தைக் காட்டினார் டாக்டர்.

“ஓய், நாவலாசிரியரே! நீரோ எழுத்துச் சித்தர்! எழுத்துத் தச்சர்! எங்கே பார்க்கலாம், உமது கை வல்லமையை? என் ஆல்பத்தில் ஏதாவது எழுதுங்கள் பார்க்கலாம்”– என்றார் டாக்டர் ஜிஸ்டால்.

நாவலாசிரியர் துமா, பேனாவை எடுத்தார், எழுதினார்:

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

—இதை எழுதிக் கொண்டிருக்கையில் டாக்டர் குறுக்கிட்டார். “எழுத்தாளரே உமது புத்தியைக்காட்டிவிட்டீரே! உங்கள் வர்க்கமே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்னுமினம். நான் விருந்து கொடுத்தவுடன், என்னை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து தள்ளுகிறீர்களே!”

நாவாலசிரியர் சொன்னார்; “அட! ஏன் அவசரப்படுகிறீர்கள்; நான் இன்னும் எழுதியே முடிக்கவில்லையே”- என்று சொல்லிக் கொண்டே கடைசி வரியை எழுதி முத்தாய்ப்பு (முத்தான ஆப்பு) வைத்தார்:

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

 

முழுக்கவிதையையும் படியுங்கள்:—-

 

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

–சுபம்–

பிரேதக் கடத்தல்

கனடா நாடு ஆண்டுதோறும் பேய்கள் பற்றிய தபால்தலைகளை வெளியிடுகிறது

Written by S NAGARAJAN

Post No.2224

Date: 8   October 2015

Time uploaded in London:  16-17

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

பாக்யா வார இதழில் கடந்த நாலரை ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கும் அறிவியல் துளிகள் தொடரில் 25-9-2015 இதழில் 240வது அத்தியாயமாக வந்த கட்டுரை

பிரேதக் கடத்தல்

.நாகராஜன்

சுவர்க்கத்திற்குப் போக விரும்புபவர்கள் கூட இறக்க விரும்புவதில்லை.” –  ஸ்டீவ் ஜாப்ஸ்

மனிதன் இறக்கும் போதும் கூடத் தன்னை நல்ல விதமாக “அனுப்பி வைப்பதையே” விரும்புகிறான். எரித்தாலும் சரி, புதைத்தாலும் சரி, கௌரவமாக அனுப்புங்கள் என்பதே ஒவ்வொருவரின் வேண்டுதலும்!

ஆகவே, கடத்தல்களில் மோசமான கடத்தல் பிரேதக் கடத்தல் தான் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். மிகவும் பிரபலமானவர்களின் உடல்களைப் புதைத்தால் அபாயத்தையும் கூடவே புதைப்பது போலத் தான்.

சமீபத்தில், லைவ் ஸயின்ஸ் ஜூலை 2015 இதழில் ஸ்டீபனி பப்பாஸ் என்ற அறிவியல் ஆய்வாளர் தந்திருக்கும் தகவல் நம்மை பரபரப்படைய வைக்கிறது.

ஜெர்மனியில் உள்ள கல்லறை ஒன்றிலிருந்து பிரபல டைரக்டரான எஃப்.டபிள்யூ.மர்னாவ் என்பவரின் உடலைக் கடத்தப் பலமுறைகள் முயற்சிகள் நடந்திருக்கின்றன. இவர் 1922ஆம் ஆண்டு அந்தக் கால  மௌனப் படமான ‘நொஸ்பெராடு’ என்ற படத்தில் பேய்களைப் பற்றிச் சித்தரித்திருந்தார்.

இவர் 1931ஆம் ஆண்டு மரணமடைந்தார். ஜெர்மனியின் தென்மேற்கில் உள்ள ஸ்டான்டார்ஃப் கல்லறையில் இவரது உடல் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.ஆனால் இன்றோ?

இவரது தலையை, அதாவது மண்டைஓட்டைக் காணோம் என்ற தகவலை பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் தருகிறது. அவரது கல்லறையில் மெழுகுவர்த்தி ஒன்று எரிந்து கொண்டிருந்தததாம்.

நிச்சயமாக பிசாசுப் பேர்வழிகளின் கைவரிசை தான் இது என்று அனைவரும் வருத்தத்துடன் கூறுகின்றனர். சில சமயம் கொள்ளைக்காரர்கள் இதற்கு ஒரு விலையை வைத்து சவத்தை வாங்க விரும்புவர்களிடம் அதை ஒப்படைப்பதும் உண்டு.

பிரபல நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் 1977இல் இறந்தார். அவரது உடலை அடுத்த ஆண்டே திருட முயற்சித்தனர். அமைதிக்குப் பெயர் பெற்ற ஸ்விட்சர்லாந்தில் அமைதியாக மீளா உறக்கத்தில் இருந்த அவருக்கா இந்த கதி என்று உலகமே அல்லோலகல்லோலப் பட்டது. 2014இல் இண்டிபெண்டண்ட் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த அவரது மகன் உலகின் மோசமான சம்பவம் இது என்று விமரிசித்தார்.

உடலைத் திருப்பித் தர பெரும் தொகையை சவத் திருடர்கள் கேட்ட போது சார்லி சாப்ளினின் மனைவி பணம் தர மறுத்து விட்டார். செத்த உடலுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்ற அவரது பதிலைக் கேட்டத் திருடர்கள் அதிர்ந்து போனார்கள்.

ஆனால் நல்ல வேளையாக இந்தப் பேச்சை ஒட்டுக் கேட்ட போலீஸார் கிழக்கு ஐரோப்பாவில் பதுங்கி இருந்த இரண்டு பிரேதத் திருடர்களைப் பிடித்தனர். ஒரிஜினல் கல்லறையிலிருந்து சற்று தூரத்தில் சவத்தைப் புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் ஆப்ரஹாம் லிங்கனுக்கே ஆபத்து என்பதைத் தான் யாராலும் ஜீரணிக்க முடியவில்லை! 1876இல் அவரது உடலுக்கு பெரும் தொகை பிணையாகக் கேட்கப்பட இருந்த ஒரு முயற்சியை ஆரம்பத்திலேயே ரகசிய போலீஸார் தகர்த்தனர். அவரது மகன் ராபர்ட் அறிவியல் ரீதியில் தன் தந்தையின் உடலைக் காப்பாற்றி விட்டார்.

சவப்பெட்டியை கெட்டியான எளிதில் தகர்க்க முடியாத கான்க்ரீட் சுவர் ஒன்றை அமைத்து அதன் கீழ் புதைத்து விட்டார் அவர்.

அதனால் அதை யாராலும் தோண்டி எடுக்க முடியாது, அப்போதும், இப்போதும், எப்போதும்!

அர்ஜெண்டினாவின் ஜனாதிபதியான ஜுவான் பெரானுக்கு 1955இல் மகத்தான சோதனை ஒன்று ஏற்பட்டது. பதனிடப்பட்டு இருந்த அவரது அன்பு மனைவி ஈவா பெரானின் உடலை ராணுவ அதிகாரிகள் கடத்திக் கொண்டு சென்று விட்டனர். அர்ஜெண்டினாவில் இடம் விட்டு இடமாக அந்தப் பிரேதம் “பயணம்” செய்து கொண்டிருந்தது. ஒருவழியாக பெரும் முயற்சியின் பேரில் ஸ்பெயினில் தஞ்சமாகப் புகலிடம் கொண்டிருந்த பெரான் 1971இல் அதைத் திரும்பப் பெற்றார். போனஸ் அயர்ஸில், நல்ல ஒரு கோட்டை போல அரண் செய்யப்பட்ட இடத்தில் அவர் தன் மனைவியை மீண்டும் நல்லடக்கம் செய்தார்.

சமீபத்தில் 2009 டிசம்பர் 11ஆம் தேதி சைப்ரஸ் ஜனாதிபதியான டஸாஸ் பபடோபௌலஸ் என்பவரின் கல்லறையைக் காணச் சென்ற அவரது முன்னாள் மெய்காப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். அங்கு ஒரு பெரும் பள்ளம் தான் இருந்தது. அலறி அடித்துக் கொண்டு தேட ஆரம்பித்த போலீஸார் அவரது உடல் இன்னொரு கல்லறையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்தனர். விசாரணையில் சகோதரர்கள் இருவரின் வேலை இது என்பது தெரிய வந்தது. அவர்களில் ஒருவன் ஆயுள் கைதியாக இருந்தான்.  அவனை சிறையிலிருந்து விடுவிக்க வெளியில் இருந்த ‘புத்திசாலியான’ அவனது சகோதரன் பிணையாக இந்த உடலைப் பயன்படுத்த திட்டமிட்டான். கடைசியில் பிடிபட்டான்.

திருடு போகும் பிரேதங்கள் ஒருபுறம் இருக்க, இறந்த பின்னர் உடலைத் தானம் செய்வோரின் எண்ணிக்கை அமெரிக்கா, பிரிட்டன், இந்தியாவில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

ஆராய்ச்சிக்காகவும் மருத்துவ மாணவர்களின் கல்விக்காகவும் பலரும் தங்களின் உடலைத் தானமாகத் தருகின்றனர். இப்படி உடலைத் தானமாகத் தருவதில் சட்ட சிக்கல்கள் நிறையவே உள்ளன. முறைப்படி தனது விருப்பத்தைத் தெரிவித்தவரின் உடலே தானமாகப் பெறப்படும். அவரது நெருங்கிய உறவினர் மட்டுமே அந்த உடலைத் தானமாகத் தர முடியும்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சி காரணமாக உடல் அங்கங்களைத் தானமாகக் கொடுப்போரின் எண்ணிக்கைம் சமீப காலத்தில் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்த அங்கங்களைப் பெறுவோர் மறுவாழ்வு பெறுவதும் இதனால் அதிகரிக்கிறது. பத்திரிகைகளின் சரியான ஆதரவும் சமூக ஆர்வலர்களின் ஊக்கமும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

‘இறந்த பின்னும் நீங்கள் ஃபேஸ்புக்கை பார்க்கலாம் இன்னொருவர் முகத்தில் உங்கள் கண்களைப் பொருத்துவதன் மூலம்’ என்ற ஈமெயிலைப் பெறாதவர் இன்று அநேகமாக இருக்கவே முடியாது.

இருந்தாலும் இறந்தாலும் பிறருக்கு உதவி செய்பவரே மேலோர்!

அறிவியல் அறிஞர் வாழ்வில்

பிரபல விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிஸன் தன்னை ஒரு விஞ்ஞானி என்று சொல்லிக் கொண்டதேயில்லை. தன்னை ஒரு வியாபாரி என்று சொல்லிக் கொள்வதில் தான் அவருக்கு விருப்பம் அதிகம். ‘எதிலும் லாபம் எப்போதும் லாபம்என்பதே அவரது முக்கியக் குறிக்கோள். ஒரு சமயம் அவரை ஒரு விஞ்ஞானி என்று குறிப்பிட்டிருந்த ஒரு பத்திரிகை கட்டுரையைக் காண்பித்து அவர் தனது நண்பர் ஒருவரிடம் கூறினார் இப்படி:-“இதோ பார், தப்பாகப் போட்டிருக்கிறார்கள். நான் ஒரு விஞ்ஞானி இல்லை. நான் ஒரு கண்டுபிடிப்பாளன் (Inventor). ஃபாரடேயை எடுத்துக் கொள். அவர் ஒரு விஞ்ஞானி. அவர் பணத்திற்காக உழைக்கவில்லை. அவர் அதற்கு நேரமே இல்லை என்று சொல்லி விட்டார். ஆனால் நானோ அதற்காகத் தான் உழைக்கிறேன். நான் ஒவ்வொன்றையும் வெள்ளி டாலரின் அளவை வைத்தே தான் மதிப்பிடுகிறேன். அந்த அளவுக்கு அது வரவில்லை எனில், அது சரிப்படாது என்பதை அறிந்து கொள்வேன்”.

 

அவர் ஒரு பிரம்மாண்டமான கோடைகால வாசஸ்தல மாளிகை ஒன்றைக் கட்டியிருந்தார். அதைப் பற்றி அவருக்கு ஏகப்பட்ட கர்வம். அந்த மாளிகையில் அதிக உடலுழைப்பின்றி காரியங்களை ஆற்றவல்ல ஏராளமான இயந்திர சாதனங்களை அவர் அமைத்திருந்தார். ஒரு சமயம் அவர், அவற்றை ஒவ்வொன்றாகத் தன் நண்பர்களுக்குக் காண்பித்தவாறே மாளிகையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.செல்லும் வழியில் திருப்பம் ஒன்றில் சுழல் குகை போன்ற ஒரு வழியில் செல்ல வேண்டியிருந்தது. அந்தச் சுழல் குகையைக் கடக்க பெரும் பிரயத்தனம் செய்தவாறே அனைவரும் கடந்தனர்.

 

அவர்களின் ஒருவர் கேட்டார்:” மிஸ்டர் எடிஸன், இப்படிப்பட்ட அருமையான சாதனங்களை நீங்கள் அமைத்துள்ளீர்கள். இந்த குகை மட்டும் ஏன் இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது? இந்த வழியைச் சுழற்றிச் சுழற்றி நாங்கள் நொந்து போனோம்

இதைக் கேட்ட எடிஸன் ஹாஹாஹா என்று சிரித்தார். “நண்பரே! இந்த சுழல் வழியை நீங்கள் ஒவ்வொருவரும் தள்ளும் போதும் எனக்கு மேலே மாடியில் உள்ள தொட்டியில் எட்டு காலன் தண்ணீர் நிரம்புகிறது. நீங்கள் வழியையா கடக்கிறீர்கள்? எனக்குத் தண்ணீர் நிரப்புகிறீர்கள்என்றார் அவர்.

 

நண்பர்கள் வியப்பு மேலிட விழுந்து விழுந்து சிரித்தனர்.

எதிலும் லாபம் எப்போதும் லாபம்; இப்படி ஒரு அபூர்வ விஞ்ஞானி!

*****************

ஜலே தைலம், கலே குஹ்யம், பாத்ரே தானம்!!!

Compiled by London swaminathan

Post No.2214

Date: 4   October 2015

Time uploaded in London: காலை 13-30

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

சம்ஸ்கிருதப் பொன்மொழிகள்

1).ஜலே தைலம் கலே குஹ்யம் பாத்ரே தானம் மனாகபி

ப்ராக்ஞே சாஸ்த்ரம் ஸ்வயம் யாதி விஸ்தாரம் வஸ்து சக்தித: — சாணக்கிய நீதி

நீரில் எண்ணையும், கெட்டவர்களிடத்தில் சொன்ன ரகசியமும், தகுதியுள்ளோரிடத்தில் கொடுத்த தானமும், அறிஞர்களிடத்தில் சொல்லப்படும் நூலறிவும் இயற்கையாகவே பரவிவிடும்.

Xxxx

2).ஜீவந்தோபி ம்ருதா: பஞ்ச வ்யாசேன பரிகீர்த்திதா:

தரித்ரோ வ்யாதிதோ மூர்க்க: ப்ரவாசீ நித்யசேவக:

வறுமையில் வாடுபவன், நோயாளி, முட்டாள், பிறதேசம் சென்றவன், தினக் கூலி ஆகிய ஐவரும் இருந்தும் இறந்தவர்கள் என்று வியாசர் கூறியுள்ளார்.

Xxx

3).த்ரிசங்கு இவ அந்தரா திஷ்ட – சாகுந்தலம்

திரிசங்கு போல அந்தரத்தில் நில்

Xxx

4).ந கலு ச உபரதோ யஸ்ய வல்லபோ ஜன: ஸ்மரதி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

செவிடனுக்கு குயில்களின் ஆலாபனை, மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதில்லை அல்லவா?

  

தபால்தலைகளில் குயில்

Xxx

5).நக்ன  க்ஷபணகே தேஸே ரஜக: கிம் கரிஷ்யதி – சாணக்யநீதி

எல்லோரும் நிர்வாணமாக இருக்கும் இடத்தி வண்ணானுக்கு என்ன வேலை?

Xxx

6).ந வா அரே சர்வஸ்ய காமாய சர்வம் ப்ரியம் பவதி

ஆத்மனஸ்து காமாய சர்வம் சர்வம் ப்ரியம் பவதி

உடல் மீது , உருவம் மீது அன்பு இல்லை.

ஆத்மாவைக் கருதியே அன்பு இருக்கிறது

ஒப்பிடுக:— “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு” (குறள் 786)

Xxx

7).ந வ்ருதா சபதம் குர்யாத் – மனு ஸ்மிருதி

வீண் உறுதி மொழி எடுக்காதே

Xxx

crane india Afghanistan-stamp790parrots

8).ந வ்யாபார சதேனாபி சுகவத் பாடயதே பக:- ஹிதோபதேசம்

நூற்றுக் கணக்கான முறை முயற்சி செய்தாலும் கொக்கு, கிளி போலப் பேச முடியாது

Xxx

9).ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா:

வ்ருத்தா ந தே யே ந வதந்தி தர்மம் – மஹாபாரதம்/ ஹிதோபதேசம்

எங்கே முதியோர் இல்லையோ அது சபையாகாது;

யார் தர்ம உபதேசம் செய்வதில்லையோ அவர்கள் மூத்தோர் அல்ல.

Xxx

10).ந ஹி மானுஷாத் ஸ்ரேஷ்டதரம் ஹி கிஞ்சித் – மஹாபாரதம்

மானுடப் பிறவிக்கும் மேலானது எதுவுமில்லை.

ஒப்பிடுக: அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.

Xxx

11).ந ஹி சிம்ஹோ கஜாஸ்கந்தீ பயாத் கிரிகுஹாசய:

–ரகுவம்சம்

யானைமீது தாக்குதல் நடத்தவல்ல சிங்கமானது, யானைக்குப் பயந்து குகையில் அடைக்கலம் புகாது.

Xxx

12).நஹி அமூலா ப்ரசித்யதி – சு.ர.பா.

மூலகாரணமின்றி எதுவும் பிரபலமாகாது.

ஒப்பிடுக: நெருப்பின்றிப் புகையாது.

–சுபம்–

ஒட்டகங்களுக்கு கல்யாணமாம்! கழுதைகள் கச்சேரியாம்!!

camel-stamp-du-t

Compiled by London swaminathan

Post No.2211

Date: 3rd   October 2015

Time uploaded in London: 13-29

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

கீழே சில அழகான சம்ஸ்கிருதப் பழமொழிகளையும் அவைகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளையும் கொடுத்துள்ளேன்.

1).அங்குலீ ப்ரவேசாத் பாஹு ப்ரவேசம்

விரல் அளவு இடமிருந்தால் உடலையே (தோள் மூல) நுழைத்துவிடுவர்.

ஒப்பிடுக: இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவர்

இந்தி பழமொழி: அங்குலீ பகங்கர் போங்சா பகட்னா

Xxx

2).அதி கஹனம் தமோ யௌவனப்ரபவம் – காதம்பரி

இளமையில் உண்டாகும் இருட்டு ஆழமானது.

ஒப்பிடுக: தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

இளமையில் கல்

Xxx

3).அபராதானுரூபோ தண்ட: – சாணக்யநீதி

குற்றத்துக்கேற்ற தண்டணை

Xxx

4).அம்புகர்போ ஹி ஜீமூதஸ்சாதகைர் அபிவந்த்யதே – ரகுவம்சம்

நீர் நிறைந்த மேகத்தைத் தான் சாதக பட்சிகள் வழிபடும்.

ஒப்பிடுக: பழமரத்தை நாடும் பறவைகள்

பணக்காரனைச் சுற்றி பத்துப் பேர் பைத்தியக்காரனை சுற்றிப் பத்துப் பேர்

ஜப் லகி பைசா காண்ட் மேம், தப் லகி தாகோ யார்

Xxx

5).ஆகரே பத்மராகாணாம் ஜன்ம காச்மணே: குத:  — ஹிதோபதேசம்

புஷ்பராகம் இருக்குமிடத்தில் கண்ணாடி மணிகள் எங்கிருந்து வந்தன?

ஒப்பிடுக: இவன் எப்படி இங்க வந்தான்!!!

xxx

camel india   donkey-240x300

6).உஷ்ட்ராணாம் விவாஹேஷு கீதம் காயந்தி கர்தபா:

பரஸ்பரம் ப்ரஸம்சந்தி அஹோ ரூபமஹோ த்வனி: – சமயோசித பத்ய மாலிகா

ஒட்டகத்தின் கல்யாணத்தில் கழுதைகள் பாடுகின்றன. ஒருவருக்கொருவர் புகழ்ந்து தள்ளினர். என்ன அழகு, என்ன குரல் வளம் என்று!

ஒப்பிடுக: ஜைசா கர், வைசா வர்

ஊண்டோம் கே விவாஹ் மேம் கதே கவையே

ஆபஸ் மேம் ஹீ ஏக் தூஸ்ரே கீ பரசம்ஸா கர்னா

Xxx

7).கஞ்சுகமேவ நிந்ததி பீனஸ்தனீ நாரீ

சிறிய மார்பகமுள்ள பெண், ரவிக்கையை வைதாளாம்!

ஒப்பிடுக: ஆடத் தெரியாத ………….ள் , தெருக்கோணல் என்றாளாம்

Xxx

8).கரீ ச சிம்ஹஸ்ய பலம் ந மூஷிகா

யானைக்குத்தான் சிங்கத்தின் பலம் தெரியும்; எலிக்குத் தெரியாது

ஒப்பிடுக: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை!

Xxx

9).காக யாசகயோர் மத்யே வரம் காகோ ந யாசக: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

காகம், பிச்சைக்காரர் ஆகிய இருவரில் காக்கையே உயர்ந்தது; பிச்சைக்காரர் அல்ல.

(காகத்தினால் பயனுண்டு; அசுத்தங்களை அகற்றுகின்றன)

crow plate crow plate2

Xxx

10).காகோபி ஜீவதி சிராய பலிம் ச புங்க்தே – பஞ்சதந்திரம்

காகம் கூட பலிச் சோற்றை உண்டே நீண்ட காலம் வாழ்கின்றன.

(மனிதர்கள் வயிறு வளர்க்கவே வாழ்கின்றனர். காகமோ, பலிச் சோற்றை உண்டு நமக்கு நீத்தாரின் அருளைப் பெற்றுத் தரும். ஊரையும் சுத்தமாக வைக்க உதவும்)

Xxx

11).காணேன சக்ஷுசா கிம் வா சக்சு: பீடைவ கேவலம் – சாணக்யநீதி

தொடர்ந்து வலி இருந்தால் காதால் என்ன பயன்? கண்களால் என்ன பயன்?

Xxx

12).கிம் வா அபவிஷ்யத் அருண: தமசாம் விபேத்தா

தம் சேத் சஹஸ்ரகிரணோ துரி நாகரிஷ்யத்- சாகுந்தலம்

இருளைப் பிளப்பவனாகிய சூரியன், அருணனைச் சாரதியாகக் கொள்ளாவிடில் இருளிலா மூழ்கி விடுவான்?

Xxx

13).குகர்மாந்தம் யசோ ந்ருணாம் – பஞ்ச தந்திரம்

மனிதர்களின் புகழ் கெட்ட செயலால் முடிந்துவிடும்

Xxxx

14).க்ஷணே க்ஷணே யன்னவதாம் உபைதி ததேவ ரூபம் ரமணீயதாயா: – சிசுபாலவதம்

அழகின் லக்ஷணம், நொடிக்கு நொடி புதுமை அடைவதாகும்.(எது நொடிக்கு நொடி புதுமை அடைகிறதோ, அதுவே அழகு)

ஒப்பிடுக: பெண்களின் ‘பேஷன்’!!!!!!!!!!!!

Xxx

15).க்ஷதே ப்ரஹாரா நிபதந்தி அபீக்ஷணம் – பஞ்ச தந்திரம்

விழுந்த இடத்திலேயே அடி விழுகிறது

ஒப்பிடுக:- பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்.

Xxx

India-stamp5886asiatic-lion-lioness

16).க்ஷுதார்த்தோ ந த்ருணம் சரதி சிம்ஹ: — சாணக்ய சூத்திரம்

சிங்கம் பசித்தாலும் புல்லைத் தின்னாது

ஒப்பிடுக: புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.

-சுபம்–

மஹரிஷியும் மகாத்மாவும்!

ramana2

Research article written by S NAGARAJAN

Post No.2208

Date: 2nd  October 2015

Time uploaded in London: 7-52 am

 

 

வாழ்விக்க வந்த மஹான்

அக்டோபர் இரண்டாம் நாள். காந்தி ஜெயந்தி. அண்ணலை நினைவு கூர வேண்டிய நன்னாள்!

 

மஹரிஷியும் மகாத்மாவும்!

.நாகராஜன்

 

 

மஹரிஷியும் மகாத்மாவும்

சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய அதிசயங்கள் இரண்டு. மஹரிஷியும் மகாத்மாவும்!

சமகாலத்தில் வாழ்ந்த இந்த இருவரைப் பெற பாரதம் என்ன தவம் செய்ததோ!

ஒருவர் தேசத்திற்கு விடுதலையை வாங்கித் தர முயற்சி செய்து, வெற்றி பெற்றார்.

இன்னொருவரோ அனைத்து ஆன்மாக்களுக்கும் பிறவியிலிருந்து விடுதலை பெறும் பெரு நெறியைக் காட்டினார்.

 

இருவரும் வாழ்க்கையும் சொல்வதும் ஒரே செய்தியைத் தான்!

MY LIFE IS MY MESSAGE (என் வாழ்க்கையே நான் தரும் செய்தி) என்பது தான்!

மஹாத்மா மஹரிஷியைப் பற்றி எப்போதுமே உயர்வாகப் பேசுவார். மஹரிஷியும் மஹாத்மாவைப் பற்றி உயர்வாகப் பேசுவார்.

இருவரையும் இணைத்து பெரும் நூலையே எழுதி விடலாம்.

காந்தி ஜெயந்தியை ஒட்டி இரு சம்பவங்களை நினைவு கூர்ந்து நமது வாழ்க்கையைப் புனிதமாக்குவோம்.

 ramana

ரமணாஸ்ரமத்தில் ராஜேந்திர பிரசாத்

 

1938ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி ஜம்னாலால் பஜாஜுடன் பாபு ராஜேந்திர பிரசாத் (இந்தியாவின் எதிர்கால முதல் ஜனாதிபதி; 1938இல் காங்கிரஸில் தலைவர்; காந்திஜியின் தொண்டர்) ரமணாஸ்ரமத்திற்கு வந்தார்.

ஜம்னாலால் பஜாஜ் ஏராளமான கேள்விகளைக் கேட்டு மஹரிஷியிடம் பதில் பெற்றார்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் சமயம். ரமண மஹரிஷியிடம் பிரியா விடை பெறும் நேரம்.

 

 

ராஜேந்திர பிரசாத் கேட்டார்:”-மஹாத்மா காந்திஜியின் அனுமதியுடன் நான் இங்கு வந்திருக்கிறேன். அவரிடம் சீக்கிரம் திரும்பிச் செல்ல வேண்டும். அவருக்கு பகவான் ஏதாவது செய்தி தர முடியுமா?”

பகவான்:- “அத்யாத்ம சக்தி அவருள்ளிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறது. அது போதும். அதை விட வேறென்ன வேண்டும்?”

தன்னை வழி நடத்தும் சக்தியையே காந்திஜியிடம் கண்டார் மஹரிஷி! பகவானைப் பணிந்து ராஜேந்திர பிரசாத்தும் ஜம்னாலால் பஜாஜும் விடை பெற்றனர்.

 

யாரேனும் சக்தி குறைந்திருப்பது போலக் காணப்பட்டால் அவரை ரமணாஸ்ரமம் போ என்று அனுப்பி விடுவார் மகாத்மா!

மஹாத்மாவின் ஒவ்வொரு செயலும் மஹரிஷிக்குத் தெரியும்!

 

 rajendra

கடவுள் காட்டும் வழிப்படி நடப்பவர் காந்திஜி!

1939ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி. 11ஆம் தேதி ஹரிஜன் இதழில் காந்திஜி எழுதியிருந்த கட்டுரையைச் சுட்டிக் காட்டினார் மஹரிஷி.

காந்திஜி அதில் எழுதி இருந்தார்:- “How mysterious are the ways of God! This journey to Rajkot is a wonder even to me. Why am I going, whither I am going? What for? I have thought nothing about these things. And if God guides me, what should I think, why should I think? Even thought may be an obstacle in the way of His guidance.

 

The fact is, it takes no effort to stop thinking. The thoughts do not come. Indeed there is no vacuum – but I mean to say that there is no thought about the mission.”

 

இதைப் படித்த மஹரிஷி இது எவ்வளவு உண்மை என்று கூறி ஒவ்வொரு வரியையும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார்.

பின்னர் இந்த எண்ணமற்ற நிலையைத் தாயுமானவர் பாடி இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

 

சும்மாவிருக்கச் சுகம் சுகமென்று சுருதி எல்லாம்                               

அம்மா நிரந்தரம் சொல்லவும் கேட்டு அறிவின்றியே                                 

பெம்மான் மௌனி மொழியையும் தப்பி என் பேதைமையால்                        

வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதி வசமே!”

 

வரிசையாக இப்படி மூன்று பாடல்களை பகவான் சுட்டிக் காட்டி காந்திஜி கூறிய நிலை மெய் தான் என்பதை விளக்கி அருளினார்.

மறுநாள் பக்தர் ஒருவர், காந்திஜி எண்ணங்களே அந்நியமாக இருக்கிறது என்ற நிலையையா சுட்டிக் காட்டி உள்ளார் என்று கேட்டார்.

மஹரிஷி: “ஆம்! நான் என்ற எண்ணத்திற்குப் பின்னரே அனைத்து எண்ணங்களும் எழும்.”

 

 gandhi3 gandhi  gandhi2

தொடர்ந்து பக்தர் காந்திஜி கடவுளின் வழிகாட்டலுக்கு நம் எண்ணமே ஒரு தடை என்று சொல்கிறாரே என்று விளக்கம் கேட்டார்.

அதற்கு மஹரிஷி,” சாதனை என்பது தடைகளை நீக்கவே! ஆனால் ஒரு நிலையில் அந்த சாதனைக்குப் பிறகும் ஒருவன் தனது இயலாமையை உணர்கிறான். அப்போது தான் கடவுளின் சக்தி உணரப்படுகிறதுஎன்று அருளினார்.

 

 

ஒரு உயரிய நிலையை இன்னொரு உயரிய நிலையை அடைந்த அனுபவஸ்தரே அறிய முடியும்; விளக்க முடியும், இல்லையா!

குழுமி இருந்த பக்தர்கள் அனைவரும் இருவரின் நிலையையும்மகாத்மா, மஹரிஷி இருவரின் நிலையையும் உணர்ந்து பிரமித்தனர்!

இப்படி ஏராளமான உரையாடல்கள் காந்திஜி பற்றி அவ்வப்பொழுது மஹரிஷி ஆஸ்ரமத்தில் நிகழ்த்துவதுண்டு!

ஒரே சக்தி, இரு வேறு இடங்களில் இரு வேறு விதமாக வேலை செய்தது. ஒன்றி இயக்கமாககாந்திஜி வடிவில்.

இன்னொன்று மௌனமாகமஹரிஷி வடிவில்!

 

 stamp_einstein1

ஐன்ஸ்டீனின் புகழாரம் இருவருக்கும் பொருந்துகிறது!

 

அற்புதமான மஹாத்மாவைப் பற்றி அவரது 70ஆவது பிறந்த நாளன்று பெரும் விஞ்ஞானியான ஐன்ஸ்டீன், “Generations to come, it may well be, will scarce believe that sucha man as this one ever in flesh and blood walked upon this earth” (வரும் தலைமுறையினர், இப்படிப்பட்ட ஒருவர் ரத்தமும் சதையும் பொருந்தி இந்த பூமியில் நடந்தார் என்பதை அரிதாகவே நம்புவர்) என்று கூறி பிரமித்தார்.

 

ஐன்ஸ்டீனின் இதே மொழியை மஹரிஷிக்கும் பொருத்திப் பார்த்தால் அப்படியே பொருந்துகிறது.

வருகின்ற தலைமுறையினர் மகாத்மாவையும் மஹரிஷியையும் பற்றி எண்ணி எண்ணி பிரமிப்பர்.

அவர்கள் நடந்த இந்த புனித பூமியில் நடக்கும் பேறு பெற்றதை எண்ணி மகிழ்ந்து அவர்களை கை கூப்பித் தொழுவோம்!

************* 

On the occasion of Mahatma Gandhi’s 70th birthday. “Generations to come, it may well be, will scarce believe that such a man as this one ever in flesh and blood walked upon this Earth.”

மனிதரில் எத்தனை வகை? வள்ளுவரின் பதில்!

IMG_3384

திருக்குறள் தெளிவு

மனிதரில் எத்தனை வகை? வள்ளுவரின் பதில்!

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by S NAGARAJAN

Date: 26 September 2015

Post No: 2189

Time uploaded in London :– 6-15 AM

(Thanks  for the pictures) 

 

.நாகராஜன்

 

அரசவையில் வள்ளுவர்

வள்ளுவர் வருகிறார் என்ற செய்தி கேட்டு மன்னம் ஓடோடி வந்து அவரை அரசவைக்குள் அழைத்துச் சென்றான். அப்பா! அரசவை சற்று நேரத்திற்குள் ததும்பி வழிந்தது. வள்ளுவர் மஹிமை!

மன்னர் வள்ளுவரை நோக்கிக் கரம் கூப்பினார். கேட்டார்:-“ஐயனே! நீண்ட நாளாக ஒரு சந்தேகம்! பெறுதற்கரிய மனிதப் பிறப்பை அடைந்தோர் ஏராளம். இந்த மனிதர்களில் எத்தனை வகை உண்டு?”

“மன்னா! மனிதர்களின் வகைகள் தானே தெரிய வேண்டும்! இதோ மக்களே பதில் சொல்வர்.“ என்ற வள்ளுவர், “ பல கிராமங்களின் வழியே வந்தேன் அல்லவா!   பல கிராமங்களிலிருந்தும் மக்களில் பலர் என்னுடன் இங்கு வந்துள்ளனர்.” என்று அரசவையில் மக்களோடு குழுமி இருந்த அவர்களைச் சுட்டிக் காட்டினார்.

1935 valluvar2

 

இறை என்று வைக்கப்படும்

அவர்களில் ஒருவரை அழைத்த வள்ளுவர், “நேற்று உங்கள் கிராமத்தில் என்ன நடந்தது? சொல்லுங்கள்!” என்றார்.

மன்னர், ராணி உட்பட அனைவரும் அவரை நோக்கினர்

“மன்னருக்கு வணக்கம். தெய்வப் புலவருக்கு வணக்கம்” என்று வணக்கம் செலுத்திய அவர் சொல்லத் தொடங்கினார். “இதுவரை நடந்திராத ஒரு சம்பவம் நேற்று எங்கள் கிராமத்தில் நடைபெற்றது. ஊரை ஒட்டி ஓடும் நதியில் பெரு வெள்ளம்! வெள்ள நீர் கிராமத்தில் புகுந்து விட்டது. இதனால் குழப்பம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர், பாதிப்புக்கு உள்ளாகாதோர் என்று இரு பிரிவுகளாக கிராமமே பிரிந்து மோதல் சூழ்நிலை ஏற்பட்டது. கொள்ளையர் சிலர் வேறு ஊருக்குள் புகுந்து அகப்பட்டதைக் கொள்ளையடிக்க நினைத்தனர்..”

மன்னர் பதைபதைத்தார். “அப்புறம்?” அவர் குரலில் வேகமும் அவசரமும் தொனிக்க மன்னரை இடைவெட்டி கிராமவாசி தொடர்ந்தார்.

“மன்னா! கவலைப்பட வேண்டாம். ஊரில் நீங்கள் அமைத்திருக்கும் கிராமத் தலைவர்கள் உடனடியாக இரு பிரிவுகளையும் இணைத்தனர்.. அவரவர்க்குத் தேவையானதை ஒரே நாழிகையில் கொடுத்து உதவவே கிராமமே ஒன்றானது. கிராமத்தில் இருந்த அரசு அதிகாரிகள் உடனடியாக வெள்ளம் உள் புகாமல் தடுப்புச் சுவரை எடுத்தனர். அதிகாரிகளில் இன்னொரு பிரிவினர் உணவுக்கு ஏற்பாடு செய்து அனைவருக்கும் வயிறார உணவைப் பரிமாறினர். கிராம காவல் படையினரோ கொள்ளையரை அடித்துப் பிடித்து இதோ உங்கள் முன்னிலையில் கொண்டு வந்துள்ளனர். அவர்களை தளபதி வசம் ஒப்புவித்து விட்டோம்.”

“இப்படி நிலைமை ஒரே நாளில் சீர் பட என்ன காரணம்?” வள்ளுவர் அந்த கிராமவாசியை நோக்கிக் கேட்டார்.

“ஐயனே! நம் மன்னரின் ஆட்சியில் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் எதையும் கோராமலேயே நேரம் அறிந்து நிலை அறிந்து அரசு அதிகாரிகள் உதவினர். எங்களிடம் பொருள் பெறுவதில்லை அவர்கள்! தங்கள் கைப்பொருளையே செலவழித்தனர். அதுவே காரணம்”

IMG_5641

வள்ளுவர் அனைவருக்கும் கேட்கும்படி கூறினார்:

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு                      

இறை என்று வைக்கப்படும் (குறள் 388)

மக்கள் ‘ஹாஹா’வென்று கூவினர். அரசன் இருக்கையிலிருந்து ராணி பின் தொடர எழுந்தோடி வந்து வள்ளுவரின் பாதங்களில் விழுந்து வணங்கினான்.

“ஐயனே! இறை என்பதைத் தலைவன் என்ற பொருளில் எடுத்துக் கொள்கிறேன்” என்று அவன் முடிப்பதற்குள், “எங்கள் மன்னா! எமக்கு இறைவா! நீ வாழ்க” என்று மக்கள் எழுந்து நின்று ஒரே குரலாகப் பெரு முழக்கம் செய்தனர்.

வள்ளுவர் புன்சிரிப்பு பூக்க, “அவர்கள் இறை என்பதற்கு என்ன அர்த்தம் எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ!” என்றார்.

 

தெய்வத்துள் வைக்கப்படும்

 

வள்ளுவர் அனைவரையும் அமரச் செய்தார். இன்னொரு கிராமத்திலிருந்து வந்தவரை அழைத்தார்.” நேற்று உங்கள் கிராமத்தில் என்ன நடந்தது?”

“ஐயனே! எங்கள் கிராமத்தில் நூறு வேலி நிலம் கொண்ட பெரும் பணக்காரர், -சிற்றரசருக்கு நிகரானவர் -இருக்கிறார். ஆனால் அவர் எதையும் தனக்கெனக் கொள்ளாமல் மக்களாகிய எங்களுக்கே தருகிறார். காலை முதல் இரவு வரை எங்கள் வாழ்க்கையை நல்வழிப் படுத்துவதே அவரது ஒரே தொழில். அவர் நடப்பதைப் பார்த்து நாங்கள் நடக்கிறோம். நேற்று வெள்ளம் போக்க அவர் அனைத்தையும் செய்தார். ஒரு கேடும் நிகழவில்லை. உரிய நேரத்தில் மாலையில் கோவில் பூஜையையும் முடித்து வழக்கம் போல சாவடியில் இராமாயணம் கூறவும் வந்தார் ஐயா!

நேற்றைய தினத்தை எங்களால் மறக்கவே முடியாது. பிரளயம் வந்தது என நினைத்தோம். அது பாற்கடல் ஆனது” என்றார்.

kanchi best anbe sivam

வள்ளுவர் இப்போது கூறினார்:-

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்                     

தெய்வத்துள் வைக்கப்படும் (குறள் 50)

‘ஹா ஹா’ என்றனர் மக்கள். ஒருவரைத் தலைவனாக வைத்தார். இன்னொருவரை தெய்வமாக வைத்தார்.

உயிர்வாழ்வாருள் வைக்கப்படும்

 

அடுத்து..

இன்னொரு கிராமத்திலிருந்து வந்த ஒருவரை அழைத்தார். அவர் கேளாமலேயே தன் கிராம நிகழ்வைச் சொல்ல ஆரம்பித்தார்.

“இதோ, எங்கள் அருகில் நிற்கிறாரே, இவர் ஒரு சாது! எங்கள் நினைவு தெரிந்த நாளிலிருந்து இவர் தேகம் பிறருக்காகவே இருக்கிறது. மருத்துவத் தொண்டு செய்வார். கோவில்களில் உழவாரப் பணி செய்வார். கூட்டு பிரார்த்தனைக்கு மக்களை அழைப்பார். ஏழைகளுக்கு உணவைத் தயார் செய்து தருவார். இவரிடம் பணம் ஏதுமில்லை என்றாலும் இதையெல்லாம் இவரால் செய்ய முடிகிறது, இவரது மூச்சு விடுவது ஏனையோருக்காகவே, ஐயனே!”

வள்ளுவர், ‘அந்த ‘உயிர் வாழ்வானை’ மன்னனுக்கு முன்னர் கூட்டி வா’ என்றார்.

‘உயிர் வாழ்வானா’? மன்னன் முகத்தில் சிறிது சந்தேகம் தோன்ற, “ஐயனே! அவர் தான் உயிர் வாழ்வானா? எல்லோரும் தானே உயிர் வாழ்பவர்கள்?!” என்றான்

வள்ளுவர் கூறினார்:

ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்                              

செத்தாருள் வைக்கப்படும்    (குறள் 214)

மக்கள் ‘ஹாஹா’ வென்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறருக்கு சேவை செய்பவனே உயிர் வாழ்பவன். ஏனையோர் இருந்தும் இறந்தவரே! உயிருடன் இருந்தாலும் செத்த பிணமே!

DRAGON3

அலகையா வைக்கப்படும்

 

இறுதியாக இன்னொரு கிராமவாசியை அழைத்தார் வள்ளுவர்.

அவர் தன் கிராமக் கதையைக் கூறலானார்:”ஐயனே! அவமானம்! சொல்லவே நாக்கு கூசுகிறது! எங்கள் கிராமத்தில் புல்லறிவு படைத்த ஒரு இளைஞன் இறைவனே இல்லை என்கிறான். தன்னுடன் அறியாப் பிள்ளைகளைத் திரட்டிக் கொண்டு தில்லை நடராசரையும் ஶ்ரீரங்கநாதரையுமே வன்முறையில் மிரட்டுகிறான்! கோவிலை இடி என்கிறான். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அவனுக்கு எவ்வளவோ நல்லுபதேசம் செய்தோம். அவன் பெற்றோரும் உறவினரும் கூட அவனைத் துறந்து விட்டனர்.”

அவன் முடித்தவுடன் வள்ளுவர் கூறினார்:-

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து                               

அலகையா வைக்கப்படும்   (குறள் 850)

ஆஹா! உலகோர் அனைவரும் உண்டு என்று சொல்லும் ஒன்றை இல்லை என்பான் வையத்தில் பேயாக வைக்கப்படுவான்.

மக்கள், ‘வள்ளுவர் வாழ்க’ என்று முழக்கம் செய்தனர்.

மன்னனோ, “ஐயனே ஒருவனை இறையாகவும் ஒருவனை தெய்வமாகவும் இன்னொருவனை உயிர் வாழ்பவனாகவும் ஏனோயோரை நடைப்பிணமாகவும், இன்னொருவனை பேயாகவும் வைத்தீர்களே!” ஆஹா! மனிதரில் இத்தனை வகையா!” என்று புளகாங்கிதத்துடன் கூறினான்.

மக்களில் பதரும் மிருகமும்

“ஐயனே! எனது அரசின் கீழ் உள்ள மக்களில் மோசமானவர் யாரேனும் உண்டோ, ஐயனே?”

வள்ளுவர் கூறினார்:

பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்

மக்கட் பதடி எனல் (குறள் 196)

ஆஹா! பயனற்ற சொல் சொல்பவன் மக்களில் பதர் போன்றவனா? அவனை ஒதுக்கித் தள்ள வேண்டும். மனிதருள் பதரைச் சொல்லி விட்டாரே!

“ஐயனே! மக்களில் மக்களாக இல்லாதவர் யாரேனும் உண்டோ?”

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்                       கற்றாரோடு ஏனை யவர்”   (குறள் 410

ஆஹா! எந்தக் கேள்விக்கும் வள்ளுவரிடம் இருக்கிறது பதில். இலங்கு நூல் கற்காதவன் மிருகமே!

முறையுடன் மக்களைக் காப்பவன் தலைவன். அவனே மக்களால் இறை எனப்படுவான்.

வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வம்.

பிறருக்காக வாழ்பவனே உயிருடன் இருப்பவன். தனக்காக மட்டும் வாழ்பவன் இருந்தும் இறந்தவனே!

உலகத்தார் உண்டு என்பதை இல்லை என்பவன் பேய்!

பயனற்ற சொல் பேசுபவன் பதர்.

நல்ல நூல் கற்காதவன் மிருகம்!! மனிதருள் இத்தனை வகையா?!

இலங்கு நூல் என்கிறாரே! இலங்கு நூல் எது?

அவர் கையில் இருந்த ஒரு சிறிய சுவடிக் கட்டை மன்னன் நோக்க அனைவரும் அதை நோக்கினர்.

“ஐயனே! நாங்கள் அனைவருமே உயர் நிலைக்குச் செல்ல ஆவலுடன் உள்ளோம்! உங்கள் கையில் உள்ள நூலை எங்களுக்குத் தர முடியுமா? அதில் இன்னும் ஏராளமான வகைகளைப் பற்றியும் வாழ்வாங்கு வாழும் முறை பற்றியும் நாங்கள் அறிய முடியுமே!”

வள்ளுவர் புன்முறுவலுடன் திருக்குறளை மன்னனிடம் அளிக்க கூட்டம் ஆரவாரம் செய்தது.

“இதல்லவோ தெய்வச் சுவடி! நாம் அனைவரும் இதைக் கற்று அதன்படி வாழ்வோம். உயர்வோம்!” என்று சபத மொழி கூறினான் மன்னன்.

“நன்று, நன்று” என்றனர் நல்லோர்! வள்ளுவர் சிரித்தார். வான் சிரித்தது. இலேசான தூறல் வீச, பூமித் தாய் மனம் குளிர்ந்தாள்.

திருக்குறள் வாழ்க! தெய்வத் தமிழ்ப் புலவர் வாழ்க!!

**************

நாய்வாலை நிமிர்த்த முடியாது!

dog,monkey1

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by London swaminathan

Date: 22 September 2015

Post No: 2179

Time uploaded in London :– 14-06

(Thanks  for the pictures) 

பிறவிக் குணம், சுபாவம் பற்றிய பொன்மொழிகள்

1.அங்கார: சததௌதேன மலினத்வம் ந முஞ்சதி

கரியை நூறு தடவைக் கழுவினாலும் அதன் கறுப்பு நிறம் போகாது

(ஒப்பிடுக: நாய் வாலை நிமிர்த்த முடியாது)

crow

2.ஆஜன்ம உன்மஜ்ஜது துக்தசிந்தௌ ததாபி காக: கில காக ஏவ

பிறந்த நாள் முதல் பாற்கடலில் மூழ்கினாலும் காகத்தின் கறுப்பு நிறம் போகாது

3.அதீத்ய ஹி குணான் சர்வான் ஸ்வபாவோ மூர்த்னி திஷ்டதி – ஹிதோபதேசம்

எல்லா குணங்களையும் மீறி ஒருவனுடைய சுபாவம் தலைதூக்கி நிற்கும்( அதாவது பிறவிக் குணம் மாறாது)

4.சுதப்தமபி பானீயம் புனர்கச்சதி சீததாம் – பஞ்சதந்திரம்

ஒப்பிடுக: சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

நன்றாகச் சூடேற்றினாலும், நீரின் குணம் குளிர்ச்சிஅடைவதுதான்

பெரியோரின் குணமும் அப்படித்தான்.

குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது (குறள்).

5.சுதப்தமபி பானீயம் சமயத்யேவ பாவகம்- பஞ்சதந்திரம்

நல்ல கொதிக்கும் நீரானாலும்

நெருப்பை அணைக்கத்தான் செய்யும்.

(ஒப்பிடுக: தேளைக் காப்பாற்றினாலும் அது கொட்டத்தான் செய்யும்)

6.ஸ்வபாவம் நைவ முஞ்சந்தி சந்த: சம்சர்கதோ அசதாம்

ந த்யஜந்தி ருதம் மஞ்சு காகசம்பர்கத: பிகா: – த்ருஷ்டாந்த சதகம்

தீயோர் சஹவாசம் இருந்தாலும் நல்லோர் கெடுவதில்லை; காகத்துடன் சம்பந்தம் வைத்திருந்தாலும் குயில்கள் அதன் இனிமையான குரலை விடுவதில்லை

ஒப்பிடுக:-புகைக்கினும் நன்மணம் குன்றாது   …. சங்கு சுட்டாலும் வெண்மைதரும்

7.ஸ்வபாவோ யாத்ருசோ யஸ்ய ந ஜஹாதி கதாசன – சாணக்ய நீதி

ஒருவர், தன் சுபாவத்தை விடுவதே இல்லை

476_Lion

8.ஸ்வபாவோ ஹி துரதிக்ரம: – ஹிதோபதேசம்

ஒருவரின் சுபாவமானது மீறமுடியாதது.

9.அனுஹூங் குருதே கனத்வனிம் நஹி கோபாயுருதானி கேசரி – சிசுபாலவதம்

இடியோசை கேட்டால் சிங்கம், பதிலுக்குக் கர்ஜிக்கும்; சிறு மிருகங்களின் சப்தத்துக்கு பதில்தராது.

ஒப்பிடுக: யானையைப் பார்த்து குரைத்த நாய் போல

10.ஆகண்ட ஜலமக்னோபி ஸ்வா லிஹத்யேவ ஜிஹ்வயா – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

பால் ஆறாக ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்.

ஒப்பிடுக: காவேரி கஞ்சியாய் ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்

11.ந ஸ்வபாவோ அத்ர மர்த்யானாம் சக்யதே கர்துமன்யதா – பஞ்சதந்திரம்

பூவுலகிலுள்ளவர்களின் சுபாவத்தை (இயல்பான குணத்தை) மாற்ற இயலாது

dog ele

12.நஹி கஸ்தூரி காமோத: சபதேன விபாவ்யதே – சமயோசித பத்ய மாலிகா

கஸ்தூரியின் மணத்தை ஒருவர் சபதம் செய்து நிரூபிக்க வேண்டியதில்லை. அது சுயமாகவே சுகந்த மணம் வீசும். நல்லோரும் சுயம் பிரகாசிகள்

(ஒப்பிடு: பல்பொடி வியாபாரி கூவி விற்பான்; வைர வியாபாரியை மக்கள் நாடிச்செல்வர்)

xxxxxxxxxxxxxxxxxxxxx

வள்ளுவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி!

 IMG_5749 (2)

Article written by S NAGARAJAN

Date: 21  September 2015

Post No: 2176

Time uploaded in London :– 7-52 am

(Thanks  for the pictures) 

 

By .நாகராஜன்

 

மன்றம் கூடியது

 

சில நிமிடங்களில் ஊர் மன்றம் கூடி விட்டது! ஏன்?

வள்ளுவர் வந்திருக்கிறாராம்!

வள்ளுவர் வந்திருக்கிறாராம்!

செய்தி அதிக வேகத்தில் பரவவே, பறக்கவே அனைவரும் ஊர் மன்றமான ஆலமரத்தடியில் கூடி விட்டனர். ஆலமரத்தைச் சுற்றியுள்ள மேடையில் அமர்ந்திருப்பவர் நிஜமாகவே வள்ளுவர் தான்!

அவரை வணங்கினர்; தொழுதனர்; கை கட்டி, வாய் மூடி உற்றுப் பார்த்து தங்களின் தரிசன பாக்கியத்தை நினைத்து மகிழ்ந்தனர்.

இன்று முழித்த வேளை நல்ல வேளை!

மெதுவாக ஊர்ப் பெரியவர் ஒருவர் எழுந்தார். ‘பெரிசு’ ஏதாவது பொருள் பொதிந்த ஒன்றைத் தான் கேட்கும்! அனைவரும் ‘பெரிசையும்’ அதற்கு வள்ளுவர் என்ன சொல்லப் போகிறார் என்பதையும் ஆவலுடன் எதிர் நோக்கினர்.

அப்போது கூட்டமாகக் கூடி இருக்கும் கூட்டத்தைப் பார்த்து பிச்சை எடுக்கும் வறியவன் ஒருவனும் ஓரமாக வந்து நின்றான்.

caoin valluvar2

பத்துக் கேள்விகள்

பெரியவர் கேட்டார்: “வள்ளுவரே! வணக்கம். உங்கள் அருளை நாடி நிற்கிறோம். அருள் அல்லாதது யாது?

வள்ளுவர் அவரைக் கனிவுடன் நோக்கினார். பின்னர் கூறினார்:-

“அருள் அல்லது யாதெனின் கொல்லாமை கோறல்

பொருள் அல்லது அவ்வூன் தினல்             (குறள் 254)

ஒரு கேள்வி; அதற்கு அற்புதமாக இரண்டு விஷயங்களைப் பதிலாகப் பெற முடிந்தது. ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பதே அருள்; அந்த மாமிசத்தை வாங்கித் தின்னுவதே பொருள் அற்றது.

ஊர் மக்கள் சைவ உணவை மட்டும் உண்ணத் தீர்மானித்து விட்டனர்.

ஒரு கேள்வி கேட்டு பதிலும் வந்ததால் அடுத்தவர் மெல்ல எழுந்தார்.

“வாய்மை எனப்படுவது யாது?”

“வாய்மை எனப்பதுவது யாதெனின் …..

யாதெனின்?!

“யாதொன்றும் தீமை இலாத சொலல்”   (குறள் 291)

ஆஹா! எளிமையான சுருக்கமான சூத்திரமாக இருக்கிறதே! பிற உயிருக்குத் தீமை பயக்காத சொற்களைச் சொல்லுவதே வாய்மை!

மூன்றாமவர் எழுந்தார்:-“ அறவினை யாது?”

“அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும்”            (குறள் 321)

தான் முதலில் சொன்னதை மீண்டும் வலியுறுத்தி வள்ளுவர் கூறியதை அனைவரும் பக்தியுடன் மனதில் குறித்துக் கொண்டனர். பிற உயிரைக் கொல்லாமல் இருப்பதே அறவினை. அப்படிக் கொல்வோருக்கு அறமற்ற பிற தீவினைகள் சேரும்.

கூட்டத்தில் அஹிம்சையைப் பின்பற்றுபவருக்கு ஒரே சந்தோஷம். மனதிற்குள் உருகினார்.

இன்னொருவர் கேட்டார்:- “நல் ஆறு யாது?”

நல்ல வழி எது என்றா கேட்கிறீர்கள்?

வள்ளுவர் கூறினார்:-“ நல் ஆறு எனப்படுவது யாதெனின்  யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி”    (குறள் 324)

அட, அதே கருத்து! திருப்பித் திருப்பி வலியுறுத்துகிறாரே! சொல் சிக்கனம் உடைய வள்ளுவர் ஆழ்ந்த கருத்தை வலியுறுத்தி, எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதே நல் ஆறு என்கிறாரே!

கையிலுள்ள பணம் சுருங்கக் கூடாது; குறையக் கூடாது என்ற கவலையில் இருந்தவர் கேட்டார்:- : செல்வத்திற்கு அஃகாமை யாது?

வள்ளுவர் சிரித்தார்:- “அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன் கைப் பொருள்”   (குறள் 178)

பிறர் கைப்பொருளைக் கவரக் கூடாது என்று இருத்தலே தன் கைப்பொருள் சுருங்காமல் இருக்கும் வழி!

மோசமான அரசியல்வாதிகள் எல்லாம் அங்கு தலையைக் குனிந்து கொண்டனர்.

நண்பர்கள் இருவர் எழுந்தனர்: ஒருவர் கேட்டார்:-“நட்பிற்குச் சிறந்த நிலை யாது?”

பதில் உடனே வந்தது: “நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை”   (குற:ள் 789)

நட்பிற்கு வீற்றிருக்கை – சிறந்த நிலை – மாறுபாடின்றி முடிந்த போதெல்லாம் உதவி செய்து தாங்கிக் கொண்டிருப்பதே ஆகும்.

அடுத்த நண்பர் பளிச்சென்று உடனே கேட்டார்:-“ பழைமை எனப்படுவது யாது?”

“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”    (குறள் 801)

பழகிய நட்பு, அதாவது பழைமை எனப்படுவது யாதெனில் பழகிய நண்பர் உரிமையாய் செய்யும் எந்தச் செயலையும் அவமதிக்காது ஏற்றுக் கொள்வதேயாகும்.

நண்பர்கள் இருவரும் மகிழ்ந்தனர்.

punul valluvar

பூணூலணிந்த, அபூர்வ வள்ளுவர் சிலை

அடுத்தவர் எழுந்தார்: “பேதைமை என்பது யாது?”

“பேதைமை அதாவது அறியாமை யாது என்று தானே கேட்கிறீர்கள்?

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு

ஊதியம் போக விடல்    (குறள் 831)

அறியாமை என்று சொல்லப்படுவது யாதென்றால், தனக்குக் கேடு விளைவிப்பனவற்றைக் கைக்கொண்டு நன்மை தருபனவற்றைக் கை நழுவி விடச் செய்வதாகும்!

இன்னொருவர் எழுந்தார்:-“ வெண்மை எனப்படுவது யாது?”

“வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை

உடையம் யாம் என்னும் செருக்கு” (குறள் 844)

வெண்மை அதாவது புல்லறிவு – கீழான அறிவு எதுவெனில் யாம் நிறைந்த அறிவு உடையோம் என்று தம்மைத் தாமே மதித்துக் கொண்டிருக்கும் செருக்கு-  அகம்பாவம் – தான்!

கூட்டத்தினர் அகம் மிக மகிழ்ந்தனர். எத்தனை ‘யாதெனின்?’ கேள்விகள். அத்தனைக்கும் உடனுக்குடன் பதில்!

வள்ளுவர் எட்டிப் பார்த்தார். ஓரத்தில் இருந்த பிச்சைக்காரன் முண்டியடித்துக் கொண்டு முன்னே வந்தான்.

வள்ளுவர் அவனுக்கு வழி விடுமாறு சைகை காட்டவே அனைவரும் ஒதுங்கினர்.

அவன் முன்னே வந்தான். “ஐயா! வணக்கம். இன்மையின் இன்னாதது யாது?”

தான் எடுக்கும் இந்த பிச்சையை விடக் கொடியது ஏதாவது இருக்கிறதா?

மனம் கலங்கி இருக்கும் அவனைப் பார்த்த வள்ளுவர் எழுந்தார். அனைவரும் எழுந்தனர்.

இன்மையின் இன்னாதது யாதெனின்..

அனைவரும் வள்ளுவரையே கவனித்தனர். இன்மையின் இன்னாதது யாதெனின்..

யாதெனின்..

வள்ளுவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி என்று கூட ஒன்று உண்டா, என்ன?

யாதெனின்;;

என்ன, வள்ளுவர் தடுமாறுகிறார். உடனுக்குடன் பதில் அளித்த வள்ளுவரா, யோசிக்கிறார், தடுமாறுகிறார், பதிலுக்காகத் தவிக்கிறார்.

கூட்டம் வியந்தது; பிரமித்தது.

தன் நிலையை அடைந்த வள்ளுவர் கூறினார்:-

“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது”    (குறள் 1041)

வறுமையை விடக் கொடியது என்னவென்றால்,..   என்னவென்றால் .. வறுமையைப் போலக் கொடியது வறுமையே தான்!

வள்ளுவரும் கலங்கி நின்றதைப் பார்த்த மன்றமே கலங்கியது.

பிச்சைக்காரன் கண்ணைத் துடைத்துக் கொண்டான்.

வள்ளுவரின் சாபம்

வள்ளுவர் சற்று உரத்த குரலில் கூறினார்:-

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்” (குறள் 1062)

பிச்சை எடுத்தும் உயிர் வாழுமாறு சிலரைப் படைத்திருந்தால் அந்த உலகை இயற்றியவன் அதே போல பிச்சை எடுத்து அலைந்து திரியட்டும்!

பிச்சைக்காரனின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டார் வள்ளுவர். அனைவரும் அவர் மேலே நடக்க வழியை விட்டனர்.

வள்ளுவரின் சாபத்தைக் கேட்ட இறைவன் சிரித்தான். ‘அடடா, என்ன கருணை நெஞ்சம், தெய்வப் புலவருக்கு!’

அருகிலிருந்த அன்னையைப் பார்த்துக் கண் சிமிட்டினான். மதுரையில் பொற்றாமரை ஏறிய ‘பொய்யில் புலவன்’ சாபம் கொடுத்து விட்டான், தேவியே! அதை சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டாமா?”

தேவியும் சிரித்தாள்.

“வைகை தான் பெருக்கோடுகிறது. வந்தியோ அழைக்கிறாள். பிட்டுக்காவது மண் சுமந்து உங்கள் திருவிளையாடலைத் தொடங்குங்களேன்!”

பத்தே பத்து –  ‘யாதெனின்’ குறள்கள்!

பத்து, நூறு, ஆயிரம் அறிஞர்களும் நூல்களும் சேர்ந்தாலும் விளக்க முடியாத அரிய கருத்துக்கள்,

இல்லையா?

குறள் வாழ்க! தமிழ் வாழ்க!! குறள் நெறி வாழ்வோர் எவரானாலும் எங்கிருந்தாலும் வாழ்க!

****************

நையாண்டிப் பாடல்கள் – சம்ஸ்கிருதத்தில்!

IMG_1625 (2)

DONT REBLOG IT AT LEAST FOR A WEEK. DONT USE PICTURES.

Compiled by S NAGARAJAN

Date: 16th September 2015

Post No: 2162

Time uploaded in London :– 8-20 am

(Thanks for the pictures) 

 

 .நாகராஜன்   நீலகண்ட தீக்ஷிதரின் கலி விடம்பனா பாடல்களில் நையாண்டிப் பாடல்கள் தனி ரகம். அதைப் பாட தனித் திறமை வேண்டும். கூடவே தைரியமும் வேண்டும்.ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் அபரிமிதமாக இருக்கும் போது இப்படிப்பட்ட பாடல்களை இயற்றுவது சுலபமான விஷயம்.ஆனால் பழைய கால மன்னர் ஆட்சியில் இப்படிப்பட்ட கவிதைகளை ஒருவர் இயற்றியுள்ளார் என்றால் அது ஆச்சரியமான விஷயம் தானே.17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நீலகண்ட தீக்ஷிதர் அற்புதமான கலி விடம்பனா என்ற நூலை இயற்றியுள்ளார். நூறு பாடல்களைக் கொண்ட இதில் நையாண்டிக்குப் பஞ்சமே இல்லை. (சில பிரதிகளில் 102 பாடல்களும் உள்ளன)இவர் மதுரையில் திருமலை நாயக்கர் அரசவையில் மந்திரியாக இருந்தவர். (இவரைப் பற்றி எனது சம்ஸ்கிருதச் செல்வம் தொடரில் நான்காம் அத்தியாயத்தில் படித்திருப்பதை இங்கு நினைவு கூரலாம்)  நையாண்டிப் பாடல்கள் ஜோதிடர், மருத்துவர், கவிஞர், மனைவியின் பிறந்தக உறவினர் என்று அனைவருமே இவரது பாடல்களுக்குத் தப்பவில்லை.சில நையாண்டிப் பாடல்கள் இதோ:-  आयुस्प्रश्ने दीर्घमायुर्वाच्यं मौहूर्तिकैर्जनैस् ।जीवन्तो बहुमन्यन्ते मृताः प्रक्ष्यन्ति कं पुनस् ॥ १६ ॥

ஜோதிடர் ஒருவரிடம் ஒருவர் தன் வாழ்நாளைப் பற்றி ஜோதிடம் கேட்டால், அவர் நீண்ட நாள் வாழ்வார் என்று சொல்ல வேண்டும். அவர் நீண்ட நாள் வாழ்ந்தால் ஜோதிடரைப் பற்றி உயர்வாக நினைப்பார். அவர் செத்து விட்டாலோ கேள்வி கேட்க அவர் உயிருடன் இருந்தால் தானே! (பாடல் 16)

भैषज्यं तु यथाकामं पथ्यं तु कठिनं वदेत् ।आरोग्यं वैद्यमाहात्म्यादन्यथात्वमपथ्यतस् ॥ २५ ॥

ஒரு மருத்துவர் தனது இஷ்டம் போல தனது நோயாளிக்கு மருந்து கொடுக்கலாம். ஆனால் உணவை எப்படி உட்கொள்ள வேண்டும் எதையெல்லாம் சாப்பிடலாம், எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளையும் கூடவே சொல்லி விட வேண்டும். நோயாளி ஒரு வேளை குணமாகி விட்டால் அதற்கான புகழை மருத்துவரின் திறமையே காரணம் என்று சொல்லிப் பெற முடியும். ஒருவேளை நோயாளி குணமடையாவிட்டால் அவர் சொன்னபடி பத்தியமாக இருக்க வில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம்!   (பாடல் 25)

लिप्समानेषु वैद्येषु चिरादासाद्य रोगिणम्  ।दायादाः संप्ररोहन्ति दैवज्ञा मान्त्रिका अपि  ॥ २९ ॥

ஒரு மருத்துவர் தொடர்ந்து தன்னிடம் சிகிச்சை பெறும் நீடித்த நோயுடைய ஒருவரிடமிருந்து பணம் பெற நினைக்கும் போது அவர் இன்னும் இரண்டு பேரை நோயாளியிடமிருந்து பண வசூல்  செய்வதைப் பார்ப்பார். ஒருவர் ஜோதிடர். இன்னொருவர் மந்திரவாதி!   (பாடல் 29)

स्तुतं स्तुवन्ति कवयो न स्वतो गुणदर्शिनस् ।कीतः कश्चिदलिर्नाम कियती तत्र वर्णना  ॥ ३५ ॥

ஒரு கவிஞர் தனது சொந்த கவித்வம் இல்லாமல், பல விஷயங்களைப் பற்றி தனக்கு முன்னால் இருந்த கவிஞர்களால் வர்ணிக்கப்பட்டவற்றையே வர்ணிப்பார். தேனீ என்ற ஒரு பூச்சி வகை இருக்கிறதல்லவா! அதைப் பற்றித் தான் எவ்வளவு பிரம்மாண்டமான விவரங்களைப் பார்க்க முடிகிறது!   (பாடல் 35)

IMG_1650 (2)

गृहिणी भगिनी तस्याः श्वशुरौ श्याल इत्यपि  ।प्राणिनां कलिना सृष्टाः पञ्च प्राणा इमेऽपरे  ॥ ४१ ॥

இந்தக் கலியுகத்தில் வாழ்வை நீட்டிக்கும் ஐந்து பிராண சக்திகள் – மனைவி, மனைவியின் சகோதரி, மனைவியின் சகோதரர், அவளது பெற்றோர் ஆவர்     (பாடல் 41)

ज्ञातेयं ज्ञानहीनत्वं पिशुनत्वं दरिद्रता  ।मिलन्ति यदि चत्वारि तद्दिशेऽपि नमो नमस् ॥ ९७ ॥ உறவினர்கள், ஞானஹீனர்கள், வம்பு பேசுபவர்கள், தரித்திர நிலையில் உள்ளவர்கள், ஆகிய இந்த நால்வரின் கூட்டு இருக்கும் திசைக்கே நமஸ்காரம் நமஸ்காரம். (பாடல் 97)

நூறு பாடல்களையும் படித்தால் அது எந்தக் காலத்திற்கும் பொருந்துவதாக இருப்பதைக் கண்டு வியக்கலாம்.

சம்ஸ்கிருதத்தில் பாடலைப் பார்க்க விரும்புவோர் https://docs.google.com/viewer?url=http://www.sanskritworld.in/public/assets/book/book_50dd30263ad34.txt

என்ற தளத்தை அணுகலாம்.

ஆங்கில மொழிபெயர்ப்புடன் கலி விடம்பனாவைப் படிக்க விரும்புவோர்  http://www.vidyavrikshah.org/literature/kalividambana/kalint.html  என்ற தளத்தை அணுகலாம். நன்றி கூறலாம்.

*********