வால்டேரும் வள்ளுவரின் திருக்குறளும்!

voltaire guinea

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Research Article: Written by ச. நாகராஜன்

Date: 14th September 2015

Pot No: 2157

Time uploaded in London :–காலை 10-02

(Thanks  for the pictures) 

 

குறள் தெளிவு

 

.நாகராஜன்

 

 valluvar

வள்ளுவர் தபால் தலை படம்

குருடன் ரோஜா செடியைப் பார்ப்பது போல!

வள்ளுவரின் திருக்குறளுக்கும் வால்டேருக்கும் சம்பந்தம் இருக்கிறதா? வியப்பாக அல்லவா இருக்கிறது.

சற்றுப் பொறுங்கள்! கட்டுரையின் கடைசி பகுதியில் தெளிவு பிறக்கும்!

ஒரு சமயம் வால்டேர் (Voltaire) அவரது நண்பரான ஷெர்லாக் (Sherlock) என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார். ஷெர்லாக் அவரிடம், “வெளிநாட்டுக்காரர்கள் ஷேக்ஸ்பியரை அனுபவித்து ரஸிக்க முடியாது” என்றார். உடனே வால்டேர், “ஆமாம், அது உண்மைதான்! அவரது படைப்புகளை மொழிபெயர்ப்பின் மூலமாகவே அவர்கள் படிக்க வேண்டியிருக்கிறது. அதில் பிழைகள் ஏராளம் உள்ளன. அத்தோடு மூலத்தில் இருக்கும் அழகுகள் அத்தனையும் போய் விடுகின்றன. ஒரு குருடனை அவன் கைகளை ரோஜா செடியின் முள்கள் குத்திக் கொண்டிருக்கும் போது    ரோஜாவின் அழகைப் பார்த்து அனுபவி என்று வற்புறுத்த முடியாது” என்றார்,

வால்டேரின் இந்தக் கூற்று வள்ளுவரின் குறளுக்கும் நன்கு பொருந்தும்.அருமையான நூல் என்று திருக்குறளைப் பல மொழிகளில் மொழி பெயர்த்தாலும் அதன் அழகையும் அருமையையும் ஆழ்ந்த பொருளையும் தமிழை அறியாதவர்கள் அனுபவித்து ரஸிக்க முடியாது.

coin valluvar

வள்ளுவர் நாணயம் படம்

ஆய்விற்காக ஒரே ஒரு குறள்

எடுத்துக் காட்டாக ஒரே ஒரு குறளை மட்டும் எடுத்து அலசி ஆராய்வோம்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது       (குறள் 45)

இந்தக் குறளுக்கு G.U.Pope மொழியாக்கம் செய்த ஆங்கிலப் பெயர்ப்பு இது.

If love and virtue in the household reign,

This is of life the perfect grace and gain.

If the married life possess love and virtue, these will be both its duty and reward. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் மொழி பெயர்ப்பு சரி தான்.

ஆனால் வள்ளுவரோ தனது குறளை குறள் முழுவதும் உள்ள தேர்ந்தெடுத்து அமைக்கப்பட்ட சொற்களோடு ஒரு மர்மமான அதிசயமான முறையில் நெய்து இருக்கிறார்.

ஒரு குறளை மேலெழுந்தவாரியாகப் படித்துப் பொருளை அர்த்தம் செய்து கொண்டால் அதில் உள்ள ஆழத்தை அறிய முடியாது. அதாவது ஆழ்ந்திருக்கும் கவி உளத்தைக் காண முடியாது..

அன்பு, அறன், உடைத்து ஆயின், இல், வாழ்க்கை, பண்பு, பயன், அது – இந்த ஒன்பது சொற்களையும் அவர் குறளில் எங்கெங்கு எப்படிப் பயன்படுத்தியுள்ளார் என்பதைப் பார்க்க வேண்டும். இல் என்பதை இல்லம் என்றும் பயன்படுத்தலாம் இல்லை என்றும் பயன்படுத்தலாம். இல்லை என்ற பொருளில் அவர் பயன்படுத்தி இருந்தால் இந்தக் குறளுக்குத் தேவையற்ற இல்லை என்று வரும் குறள்களை நீக்கி விடலாம். இப்படி பொருத்தமான அர்த்தமுள்ள குறள்களைத் தனியே ஒப்பு நோக்கித் தொகுக்க வேண்டும். பொருத்தமுள்ள எல்லா குறள்களையும் பொருத்திப் பார்த்தால் பிரம்மாண்டமான அர்த்தம் வெளி வரும்.

அதாவது குறளில் சொல்லப்பட்டிருப்பது பனிக்கட்டியின் முனை போல இருக்க, உண்மையான பொருள் மறைந்திருக்கும் பிரம்மாண்டமான பனிக்கட்டியாக இருக்கிறது குறள் பாக்களில்.

voltaire

 வால்டேர் – அஞ்சல்தலை

772 இடங்களைப் பார்க்க வேண்டும்!

எடுத்துக் காட்டாக மேலே எடுத்துக் கொள்ளப்பட்ட குறளில் உள்ள வார்த்தைகளை ஆராய்வோம்.

அன்பு என்ற வார்த்தை 23 இடங்களில் வருகிறது.

அறன் என்ற வார்த்தை 21 இடங்களிலும் அறம் என்ற வார்த்தை 20 இடங்களிலும் அறத்தான் என்பது ஒரு இடத்திலும் அறத்திற்கு -2, அறத்தின் -2 அறத்து – 2, அறவோர் 1 இடங்களிலும் வருகிறது.

உடைத்து 34 இடங்களிலும் ஆயின் என்பது 35 இடங்களிலும் வருகிறது.

இல் என்ற வார்த்தை மட்டும் 118 இடங்களில் வருகிறது. வாழ்க்கை 19 இடங்களில் வருகிறது.

பண்பு 29 இடங்களிலும், பண்பின் – 3 இடங்களிலும் பண்பினார்கள் – 1 இடத்திலும் வருகிறது.

பயனும் என்பது 31 இடங்களில் வருகிறது.

அது என்ற வார்த்தை மட்டும் திருக்குறளில் எத்தனை இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியுமா?

430 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுமாராக இதையெல்லாம் கூட்டிப் பார்த்து ஆராய ஆரம்பித்தால் 772 இடங்களை நாம் ஆய்ந்து ஒரு குறளின் உண்மையான ஆழ்ந்த பல்வேறு அர்த்தங்களைக் கண்டு பிடிக்க வேண்டும். அத்தோடு இதையொத்த குறள்கள், இதற்கு விரிவை வழங்கும் குறள்கள் போன்ற பல்வேறு வகைகள் வேறு உண்டு. தமிழனாகப் பிறந்த பேற்றை எண்ணி மகிழ்ந்தவாறே, இந்த ஒரு குறளை மட்டும் ஆராய சற்று நேரத்தை அமைதியாகச் செலவழித்தால் குறளின் கட்டுக் கோப்பும் இதர அருமைகளும் தெரிய வரும்!

இன்னும் மறைந்திருக்கும் பொருளை வேறு ஆய்ந்து உணர வேண்டும்.

ஆகவே தான் இதற்குத் தமிழ் மறை என்று பெயர் வைத்தனர்.

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் என்ற ஔவையாரின் வாக்கிற்கு அர்த்தம் கண்டு பிடிப்பதற்கு வேறு, இன்னும் எவ்வளவு ஆராய்ச்சி நடத்த வேண்டுமோ!

ஒன்று மட்டும் நிச்சயம்! ஷேக்ஸ்பியரைப் பற்றி வால்டேரின் கூற்றில் ஐயம் இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு மேதையைப் பற்றிய இன்னொரு மேதையின் கணிப்பு அது. அதில் தவறு இருக்க முடியாது. அதையே ஒரு அடிப்படையாகக் கொண்டு திருக்குறளை நோக்கினால் திருக்குறளுக்கு மொழிபெயர்ப்பு எடுபடாது என்பதில் ஐயமே இல்லை.

வால்டேரின் கொள்கை வள்ளுவர் குறளுக்கும் சிறப்பாகப் பொருந்தும் என்பது தான் அவருக்கும் குறளுக்கும் உள்ள சம்பந்தம்! குறளைத் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் – முழுவதுமாக!

caoin valluvar2

காசுகளில் வள்ளுவர் படம்

தமிழர்கள் பாக்கியசாலிகள்

தமிழ் தெரிந்தவர்கள் உலகிலேயே கொடுத்து வைத்த பாக்கியசாலிகள்!

தெய்வத் தமிழ் மூலம் திருக்குறளைப் படிக்கலாம்; திருக்குறள் மூலம் தெய்வத் தமிழைத் தொழுது உய்யும் வழி அறியலாம்.

வாழ்நாள் முழுவதற்குமான துணையாக இலங்கும் ஒரே வழிகாட்டி நூல் அற்புதத் தமிழ்க் குறளே!

குறளே தான்!

************

நடிகர்களைத் தேர்வு செய்வது எப்படி? ஹாலிவுட் டைரக்டர்கள் வைக்கும் தேர்வுகள்

12 disciples

Picture of 12 Disciples of Jesus Christ

WRIITEN BY london swaminathan

Date : 13 September  2015

Post No. 2153

Time uploaded in London: – 10-47 am

(Thanks  for the pictures)

பிரபல ஹாலிவுட் டைரக்டர்கள் பற்றிய சில சுவையான சம்பவங்கள்:

ரஷ்யாவின் புகழ் பெற்ற டைரக்டர் கான்ஸ்டன் டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. அவரைச் சந்தித்த அமெரிக்க நடிகர் ஜான் பாரிமோர், ஒரு கேள்வி கேட்டார்: “அன்பரே, நீங்கள் எப்படி அருமையான நடிகர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? இதன் ரஹசியம் என்ன?”

இப்படி அவர் கேள்வி கேட்கும் போதே ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, ஒரு குண்டூசியைக் கையில் எடுத்துக்கொண்டார். கொஞ்சம் வெளியே போங்கள் – என்று நடிகர் பாரிமோரிடம் கூறினார். அவரும் வெளியே சென்றார்.

அடுத்த நிமிடமே, நீங்கள் இப்போது உள்ளே வரலாம் – என்று ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அழைத்தவுடன் பாரிமோர் உள்ளே வந்தார். குண்டூசி ஒன்றைப் போட்டுவிட்டேன்; கண்டுபிடித்துத் தாருங்கள் – என்றார்.

பாரிமோர் தேட ஆரம்பித்தார். மேஜையின் மீதிருந்த கோப்பைகளை எல்லாம் தூக்கிப் பார்த்தார். டேபிள் கிளாத் மீது கையால் தடவிப் பார்த்தார். பின்னர் அதன் ஒரு முனையைப் பிடித்துக் கொண்டு தூக்கிப் பார்த்தார். இப்படி தேடத் துவங்கியவுடன், ஸ்டானிஸ்லாவ்ஸ்கி சொன்னார்: நீங்கள் நல்ல நடிகர்; என் படத்தில் ‘சான்ஸ்’ கொடுக்கிறேன் என்றார்.

பின்னர், நடிக்க ஆசைப்பட்டு வருவோருக்கு இப்படித்தான் நான் சில வேலைகளைக் கொடுப்பேன். யார் ஒருவர் இயல்பாக, உண்மையில், தான் இழந்த ஒரு பொருளைத் தேடும் பாணியில், தேடுகிறார்களோ அவரையே நான் சிறந்த நடிகன் என்பேன். மிகைப்படுத்தி, அதிகப் பிரசங்கித்தனமாக இங்கும் அங்கும் ஆடி, ஓடி குண்டூசியைத் தேடியிருந்தால் அவருக்கு என்னிடம் நடிகர் வேலை கிடைக்காது என்றார்.

barrymoreRussia-2000-stamp-Konstantin_Stanislavski_

Baarymore (USA) Stanislavski (Russia) Stamps

உதவாக்கரைகளை வீட்டுக்கு அனுப்புவது எப்படி?

ஆங்கில நடிகரும் தியேட்டர் மானேஜருமான சர் ஹெர்ப்ர்ட் ட்ரீயிடம் ஒரு இள நடிகர், வேலை கேட்டு வந்தார். மேடையில் அவர் தோன்றியபோது, “ஒரு இரண்டடி பின்னால் போங்கள்” – என்றார். கொஞ்சம் நேரம் அவரை உன்னிப்பாகக் கவனித்தபோது “இன்னும் கொஞ்சம் பின்னால் போங்கள்” — என்றார். அவரது நடிப்பையெல்லாம் பார்த்தபோது “இன்னும் இரண்டடி பின்னால் போங்கள்” — என்றார். உடனே அவர், “ஸார், இனிமேல் நான் பின்னால் போனால், மேடையில் இருக்கமாட்டேன்; கீழேதான் இருப்பேன்” – என்றார்.

அது எனக்குத் தெரியும்; அதைத்தான் நான் சொன்னேன் – என்றார் ட்ரீ!

நடிக்கத் திறமையில்லை, வீட்டுக்குப் போங்கள் என்று சொல்ல பல வழிகள் உண்டு; அதில் இது ஒன்று!

jesus 12 disciples

கிறிஸ்துவுக்கே 12 சீடர்கள்தான்!

ஹாலிவுட் டைரக்டர்களில் புகழ்பெற்ற ஜோசெப் வான் ஸ்டான்பெர்க்கிடம்- பிரபல நடிகர் சாம் ஜெப் நடிக்கவந்தார். தி ஸ்கார்லெட் எம்ப்ரஸ் என்ற திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்தது. நடிகருக்கும், டைரக்டருக்கும் எப்போது பார்த்தாலும் சண்டைதான். சில உத்தரவுகள் நடிகருக்குப் பிடிக்கவில்லை. அதைத் தான் செய்யமுடியாது என்று மறுத்துவிட்டார்.

உடனே ஸ்டான்பெர்க் உரத்தகுரலில், “ என்னை யார் என்று உனக்குத் தெரியாதா? எனக்கு 10,000 சீடர்கள் (ரசிகர்கள்) இருக்கிறார்கள்; உனக்குப் புரிகிறதா? என்று சத்தம் போட்டார்.

உடனே சாம் ஜெப், அப்படியா! நீங்கள் உண்மையிலேயே பெரிய அதிர்ஷ்டசாலிதான்! ஏசு கிறிஸ்துவுக்கே 12 சீடர்கள்தான்!!! என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

–சுபம்—

சிரிப்பு! நகைப்பு! இளிப்பு! பகடி! நக்கல்! கிண்டல்!!! – பகுதி 1

M twain 2

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY london swaminathan

Date : 12 September  2015

Post No. 2151

Time uploaded in London: –  காலை 7-02

(Thanks  for the pictures)

‘ஓஸி’ டிக்கெட் கேட்போரை பழி வாங்குவது எப்படி?

மார்க் ட்வைன் என்பவர் பிரபல அமெரிக்க எழுத்தாளர். நகைச் சுவை மன்னர். மற்றவர்களை நையாண்டி செய்வதிலும் வல்லவர். ஒரு நாள் குதிரைப் பந்தயத்தில் ஒரு பேர்வழி அவரிடம் வந்து, அசடுவழிய நின்றான்.

“மிஸ்டர் மார்க் ட்வைன்! என்னிடம் ஊருக்குத் திரும்பிப்போக, டிக்கெட்டுக்குப் பணமில்லை. எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் வாங்குங்கள், ப்ளீஸ்!” என்றான்.

“அன்பனே! நானும் உன்னைப் போல எல்லாப் பனத்தையும் இழந்துவிட்டேன். நானும் ஒரு ஓட்டாண்டிதான். எனக்கு மட்டுமே டிக்கெட்டுக்குப்  பணம் உள்ளது. ஆயினும் உங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று மிகவும் ஆசை. ஒன்று செய்கிறேன். ரயிலில் எனக்குக் கீழே சாமான் வைக்கும் இடத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்; கால்களால் மறைத்துக் கொள்கிறேன். டிக்கெட் பரிசோதகர் வந்து போனபின்னர் நீங்கள் வெளியே வரலாம்” என்றார். அவரும் ஒப்புக் கொண்டார்.

இப்படி மார்க் ட்வைன் சொன்னபோதும் அவருக்குத் தெரியாமல், இரண்டு டிக்கெட் வாங்கி பையில் போட்டுக்கொண்டார். அந்த ‘ஓஸி’ப் பயண ஆசாமி, ரயிலில் சீட்டுக்கு அடியில் ஒளிந்து கொண்டார். டிக்கெட் பரிசோதகரும் வந்தார்.

அவரிடம் மார்க் ட்வைன் இரண்டு டிக்கெட்டுகளைக் கொடுத்தவுடன், அவர் வியப்புடன், மற்றொருவர் எங்கே? என்றார். ஓ, அவரா? இதோ சீட்டுக்கு அடியில் பாருங்கள். ஒரு ஆசாமி இருக்கிறான். அவனுக்குக் கொஞ்சம் பைத்தியம். ஆகையால் பயந்துகொண்டு இப்படித்தான் ஒளிந்துகொள்வான் என்றார். டிக்கெட் பரிசோதகர் அந்தப் “பைத்திய”த்தைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விட்டார்.

‘ஓஸி’ டிக்கெட்காரருக்கு பயங்கர கோபம். ஆனால் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அவரால் எதுவும் சொல்லவும் முடியவீல்லை, மெல்லவும் முடியவில்லை!

books picture2

வேண்டாத புத்தகங்களை வெளியே போடுவது எப்படி?

கொலம்பியா பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் க்ளைட் மில்லர். அவருக்கு மற்றவர்களைச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி!

பல பிரபல வெளியீட்டாளர்கள், விலைபோகாத, மட்டரக புத்தகங்களை இவருக்கு அனுப்பிவைப்பர். இவர் தன்னிடமுள்ள இப்படிப்பட்ட புத்தகங்களை அழகாக பார்சல் செய்து தன்னுடைய இனிய நண்பர்களுக்கு அனுப்புவார். அத்துடன் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பெயரில் பொய்க் கையொப்பமிட்டு ஒரு கடிதமும் வைத்துவிடுவார்:

இனிய நண்பருக்கு

வணக்கம். இத்துடன் நான் அண்மையில் வெளியிட்ட புகழ்மிகு நூல் அனுப்புகிறேன். இதை உங்களுக்கு அனுப்புவதற்குக் காரணம், உங்கள் பெயரை சில இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். அனுமதியில்லாமல் உங்கள் பெயரைப் பயன்படுத்தி விட்டேன். மன்னிக்கவும். இதில் உங்களுக்கு ஆட்சேபணை எதுவுமிராது என்று நம்புகிறேன்.

இப்படிக்கு

(ஆசிரியர் பெயர்)

புத்தகத்துடன் இந்தக் கடிதத்தைப் பெறும் அவருடைய நண்பர்கள், அன்றுள்ள எல்லா முக்கிய வேலைகளையும் பாதியில் போட்டுவிட்டு, குளிக்காமல் சாப்பிடாமல் அந்தப் புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டி தங்கள் பெயரைத் தேடுவர். பெயரைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிப்போய், மனைவி மக்களை அழைத்து இதில் என் பெயர் இருப்பதாக பிரபல நாவலாசிரியர் ஒருவர் எனகுப் புத்தகம் அனுப்பி இருக்கிறார். என் கண்ணுக்கு என் பெயர் தெரியவில்லை. நிங்களாவது கண்டுபிடியுங்கள் என்பார். அவர்களும் உட்கார்ந்து தேடுவர். அப்புறம் என்ன என்ன நடக்கும் என்பதை நான் எழுத வேண்டியதில்லை.

இப்படி பல புத்தகங்களை பல நண்பர்களுக்கு அனுப்பிய பேராசிரியர், கண்ணாடி முன் நின்றுகொண்டு, தபால் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு வீட்டிலும் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்துகொண்டு நமட்டுச் சிரிப்பு – விஷமச் சிரிப்பு – சிரிப்பார்!!

–சுபம்–

சிரிப்பு! நகைப்பு! இளிப்பு! பகடி! நக்கல்! கிண்டல்!!! – பகுதி 2

hogarth

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY london swaminathan

Date : 12 September  2015

Post No. 2150

Time uploaded in London: –  காலை 6-51

(Thanks  for the pictures)

கருமிக்கு ஓவியம் விற்பது எப்படி?

வில்லியம் ஹோகார்த் என்பவர் தலைசிறந்த ஆங்கில ஓவியர். ஒரு பெரிய பணக்காரர், அவரைச் சந்தித்து ஒரு ஓவியம் வரையுங்கள் என்றார். ஆனால் அவர் மஹா கருமி. அது ஹோகார்த்துக்கும் தெரியும் . ஆகையால் ஏதேதோ சாக்குப்போக்குச் சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்த்தார். ஆனால் அந்தக் கருமி — மஹா கஞ்சன் — விடாக் கொண்டன், கொடாக்கொண்டனாக நச்சரித்தார்.

ஹோகார்த்: சரி, உங்களுக்கு என்ன ஓவியம் வேண்டும்?

கருமி: மாடிக்குப் போகும் வழியில் செங்கடலை வரைந்து அதில் இஸ்ரேலியர்கள் கடந்து போவதையும் எகிப்திய பாரோவின் ஆட்கள் மூழ்குவதையும் (பைபிள் கதை), அப்படியே தத்ரூபமாக வரையுங்கள்.

ஹோகார்த்: அதற்கு பல ஆயிரம் பவுன்கள் செலவுபிடிக்குமே!

கருமி: முடியாது; சில நூறு பவுன்கள்தான் தருவேன்.

ஹோகார்த்: சரி, உங்களுக்காக வரைகிறேன்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஓவியம் தயார் – என்று ஹோகார்த் அறிவித்தார்.

கருமி ஆவலோடு ஓடிவந்தார். சுவர் முழுதும் சிவப்பு சாயம் பூசப்பட்டிருந்தது.

மஹா கருமி (கோபத்துடன்) : என்ன இது? நான் வரையச் சொன்னது இது இல்லையே. செங்கடல் எங்கே? பாரோ எங்கே? இஸ்ரேலியர்கள் எங்கே?

ஹோகார்த்: இதோ பாருங்கள் சிவப்பு சாயம், அதுதான் செங்கடல்

கருமி: இஸ்ரேலியர்கள் எங்கே?

ஹோகார்த்: அவர்கள் செங்கடலைக் கடந்து போய்விட்டார்கள்.

கருமி: எகிப்திய பாரோ (மன்னன்)வின் வீரர்கள் எங்கே?

ஹோகார்த்: அவர்கள் எல்லோரும் கடலில் மூழ்கிச் செத்துப் போய்விட்டார்கள்.

கருமிக்குப் புரிந்தது: கூலிக்கு ஏற்ற வேலைதான் கிடைக்கும் என்று!

ஹோகார்த்துக்கோ ஒரே மகிழ்ச்சி! நல்ல பாடம் புகட்டிவிட்டேன் என்று.

Kipling1977CF

ரட்யாட்ர்ட் கிப்ளிங் துணுக்கு!

கள்ளனுக்கு குள்ளன்

நீ பாய்க்கு அடியில் போனால் நான் கோலத்துக்கு அடியில் போவேன் என்பது கன்னடப் பழமொழி.

ரட்யார்ட் கிப்ளிங் பெரிய எழுத்தாளர். இந்தியாயவை அடிப்படையாக வைத்து கதை எழுதிய பெரிய ஆங்கில நாவலாசிரியர். அவருக்கு ஒரு அமெரிக்க ரசிகர் கடிதம் எழுதினார்:

அன்புள்ள கிப்ளிங்,

நீங்கள் உங்கள் இலக்கியப் படைப்புகளை விற்பதாக அறிந்தேன். ஒரு சொல்லுக்கு ஒரு டாலர் கட்டணம் வசூலிப்பதாகக் கேள்விப்பட்டேன். இத்துடன் ஒரு டாலர் நோட்டு இணைக்கப்படுள்ளது. எனக்கு ஒரு மாதிரி (ஸாம்பிள்) அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

இப்படிக்கு உங்கள்

பரம ரஸிகன்

உடனே கிப்ளிங் பதில் அனுப்பினார்:

அன்புள்ள ரஸிகா,

நன்றி.

இப்படிக்கு கிப்ளிங்

பரமரஸிகன் விடுவாரா? இந்த ஆளிடம் ஒரு சொல் மாதிரிக்கு எழுது என்றால் “நன்றி” என்று ஒரு சொல்லை எழுதி ஏமாற்றிவிட்டார். அவர் கள்ளன் என்றால் நான் கள்ளனுக்கும் குள்ளன் என்று காட்டுகிறேன் என்று எண்ணி, அனதக் கடிதத்தை ஏலம் விட்டார். இரண்டு டாலர் கிடைத்தது.உடனே கடிதம் எழுதினார்:–

அன்புள்ள கிப்ளிங்,

தங்கள் சொல் கண்டேன்; பேரானந்தம் கொண்டேன். அதை ஏலத்துக்கு விட்டேன். இரண்டு டாலர் கிடைத்தது. தபால் செலவு, பேப்பர் செலவு போக கிடைத்த லாபம் 90 செண்ட். அதில் சரி பாதி உங்களுக்குச் சொந்தம்! இத்துடன் 45 செண்ட் தபால் தலைகள்  அனுப்பி இருக்கிறேன்.

இப்படிக்கு உங்கள்

பரம ரஸிகன்.

பிரபல எழுத்தாளருக்கு எப்படி இருந்திருக்கும்? நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்!

அடியே! சொன்னதைச் செய்யடி!!

IMG_4372

Don’t Reblog it at least for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

 

Compiled by London swaminathan

Date : 8 September  2015

Post No. 2135

Time uploaded in London: – 5-31 AM

இது ஒரு கிராமப்புற கதை! ஒரூ ஊரில் படிக்காத ஒரு பட்டிக்காட்டான் இருந்தான்; சரியான முரடன். தினமும் மனைவியைக் காரணமில்லாமல் அடிப்பான். அவளும் பொறுத்துப் பார்த்தாள். ஒரு நாள் சிந்தித்தாள்; “இந்த ஆளுக்கு எப்படி நல்ல புத்தி புகட்டுவது? சரி! அவரையே கேட்டுவிடுவோம். நான் என்ன தப்பு செய்தேன்? ஏன் இப்படி தினமும் அடிக்கிறீர்கள்” என்று.

ஒரு நாள் நல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். “ஏங்க! நான் ஒரு தப்பும் செய்யாத போதும் ஏன் இப்படி என்னை தினமும் அடிக்கிறீங்க? என்று கேள்வி கேட்டாள்.

அவன் சொன்னான், “அடியே! நான் சொன்னதை நீ செய்வதில்லை. அதனால்தான் உன்னை அடிக்கிறேன். அடியாத மாடு படியாது” – என்றான்.

அவள் சொன்னாள்: “சரி, இனிமேல் நீங்கள் சொல்வதை அப்படியே செய்கிறேன். என்னைத் தொடக் கூடாது. சத்தியம் செய்யுங்கள்” என்றான். அவனும் அவள் தலை மேல் அடித்து சத்தியம் செய்துவிட்டான்.

அவளோ அடிபட்ட பாம்பு போலப் பழிவாங்கக் காத்திருந்தாள். அவன் வழக்கம்போல, “அடீ! நான் சாப்பிட வந்துவிட்டேன்” என்றான்.

அவள் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு, போட்டாள் ஒரு போடு, அவன் தலையில்!

“ஏய், ஏய், ஏன் என்னை அடித்தாய்?” என்றான்.

நீங்கள் ‘அடி’என்று சொன்னீர்களே என்றாள்.

மறுநாள் அவன் சாப்பிட வந்த போது தலையில் நிறைய ‘உமி’ யைத்தூவிக் கொண்டு வந்து சாப்பாடு போட்டாள். “அட, தலை எல்லாம் உமி!” என்றான்.

அவள் அவன் தலை முழுதும் ‘தூ தூ’ என்று துப்பித் தீர்த்தாள். “அடீ, ஏன் இப்படி துப்புகிறாய்?” – என்றான்.

கம்பால் போட்டாள் ஒரு போடு! அவன் காரணத்தைக் கேட்கும் முன்னர் அவளே சொல்லிவிடாள்: “முதலில் தலையில் உமி(ழ்) என்றீர்கள்; பின்னர் அடீ என்றீர்கள் – இரண்டையும் உடனே செய்துவிட்டேன்”.

அந்த சத்தியம் தவறாத ‘உத்தமன்’ பேசாமல் போய்விட்டான். மறு நாளைக்கு அவன் முதலாளியிடம் கூலி வாங்கிவந்தான். வழக்கத்தை விடக் கூடுதலாகப் பணம் கிடைத்த மகிழ்ச்சியில், “அடீ, இதைக் கொண்டு போய் வை”  – என்றான்.

போட்டால் ஒரு போடு அவன் மீது கம்பால்! “முட்டாள் பய கொண்டுவந்த பணம், மடப்பய கொண்டுவந்த பணம், எந்த நாய் இந்தப் பணத்தைக் கொடுத்ததோ” – என்று வையத் துவங்கினாள்.

“ஏய், ஏய், உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? ஏன் இப்படி வைகிறாய்?” – என்றான்.

“என்னங்க! முதலில் அடி என்றீர்கள் அடித்தேன். அப்புறம் பணத்தைக் கொண்ட்போய் “வை” என்றீர்கள். நன்றாக வைது தீர்த்துவிட்டேன். நீங்கள் சொன்னதை நான் மறுக்கலாமா?” என்றாள்.

பட்டிக்காட்டனுக்கு சங்கதி புரிந்தது. இவள் சரியான ஏட்டிக்குப் பூட்டியான பெண்; இனிமேல் நாம் ஒழுங்காக இல்லாவிட்டால் வண்டி ஓடாது என்று புரிந்து கொண்டான். மனைவியிடம் போய், இனிமேல் நான் உன்னை அடிக்கமாட்டேன். சரியான காரணமே இல்லாமல் உன்னைத் தண்டித்தேன். நீயும் என்னை அதே போல சரியான காரணமே இல்லாமல் தண்டித்து பாடம் புகட்டிவிட்டாய் – இனிமேல் அடிதடி இல்லாமல் வாழ்வோம்” என்றான். அவளுக்கும் மெத்த மகிழ்ச்சி!

கிராமப்புற மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாவிடாலும், வயல்காட்டிலும், மரத்தடியிலும், வீட்டுத் திண்ணையிலும் இப்படிப் பல கதைகள் சொல்லி, அரிய, பெரிய கருத்துக்களை கல்மேலிட்ட எழுத்துபோல மனதில் பதித்தனர்.

 —-xxxxx—–

எட்டு லட்சம் வரிகள் எழுதிய பின்னர் வியாசர் கண்டுபிடித்த பெரிய உண்மை!

Lift-someone-up

Compiled by London swaminathan

Date : 6 September  2015

Post No. 2130

Time uploaded in London : – 16-16

வியாசர் என்னும் மகரிஷி நான்கு வேதங்களைத் தொகுத்தார். உலகிலேயே நீண்ட இதிஹாசமான மஹாபாரதத்தை ஒரு லட்சம் ஸ்லோகங்களில் (இரண்டு லட்சம் வரிகள், பத்து லட்சம் சொற்கள்) எழுதினார். இதன் பின்னர் 18 புராணங்களை எழுதினார். அவைகளில் நான்கு லட்சம் ஸ்லோகங்கள். அதாவது எட்டு லட்சம் வரிகள். சுமார் 40 லட்சம் சொற்கள். இவைகளை எல்லாம் செய்ததற்காக அவரை சாதனைப் புத்தகத்தில் பதிவிடலாம். இனி எவரும் இத்தகைய சாதனையைச் செய்ய இயலாது! அதுவும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. இது ஒன்றே போதும்- இந்தியாதான் உலகில் முதலில் நாகரீகம் பெற்ற நாடாக இருந்தது என்று நிரூபிக்க!

இந்த எட்டு லட்சம் வரிகளையும் படித்தார் பஞ்சதந்திரக் கதைகளை எழுதிய பிராமணன் விஷ்ணுசர்மா. கடைசியில் இவ்வளவையும் எல்லோரும் படிக்கமுடியாதே என்று எண்ணி, அவர் எட்டு லட்சம் வரிகளில் சொல்ல வந்தது என்ன என்று நானே சொல்லிவிடுகிறேன் என்று பஞ்சதந்திரக் கதைகளில் ஒரு புதிர் போட்டார். அவரே விடையும் சொன்னார்:

“பரோபகாராய புண்யாய, பாபாய பரபீடணம்”

பொருள்: பிறருக்கு உதவி செய்வது புண்ணியம்; பிறருக்கு தீங்கிழைப்பது பாபம்.

இதைப் புரிந்து கொண்டால் உலகம் அமைதியுடன், ஆனந்தமாக வாழும்!

helping-others-quotes

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் விஷ்ணு சர்மன் எழுதிய பாட்டு இதுதான்:–
அஷ்டாடச புராணேஷு வியாசாய வசனத்வயம்

பரோபகாராய புண்யாய, பாபாய பரபீடணம் – பஞ்சதந்திரம்

18 புராணங்களில் வியாசர் சொன்ன விஷயம் இரண்டே இரண்டுதான்; பிறருக்கு உதவி செய்வது புண்ணியம்; பிறருக்கு தீங்கிழைப்பது பாபம்.

தமிழ் திரைப் படக் கதைகள் எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொல்லச் சொன்னால் என்ன சொல்வோம்? ஒரு கதா நாயகன், ஒரு வில்லன்; இறுதியில் நல்லது செய்யும் கதா நாயகன் வெற்றி பெறுவார். இதைத்தான் நமது புராண, இதிஹாசங்கள் சொல்லுகின்றன. வேதத்தில் சத்தியம் (உண்மை) ருதம் (ஓழுங்குமுறை) என்ற இரண்டுதான் திரும்பத் திரும்ப வருகிறது. இவை இரண்டும் உலகில் இருந்துவிட்டால் சண்டை ஏது? சச்சரவு ஏது?

எங்கும் பேரானந்தம், பிரம்மானந்தம், நித்தியானந்தம், சச்சிதாநந்தம் நிலவுமல்லவா?

18 புராணங்களும் அவைகளில் உள்ள ஸ்லோகங்களின் எண்ணிக்கையும்:–

Following are the 18 Puranas with the number of Slokas (couplets) they contain:

Agni   அக்னி                     16,000

Bhagavata      பாகவத        18,000

Bhavisya      பவிஷ்ய           14,500

Brahma        பிரம்ம          10,000

Brahmanda    பிரம்மாண்ட        12,000

Brahmavaivavarta பிரம்மவைவஸ்வத 18,000

Garuda     கருட               18,000

Kurma    கூர்ம                18,000

Linga     லிங்க                  11,000

Markandeya   மார்கண்டேய       9000

Matsya         மத்ஸ்ய          14,000

Naradiya   நாரதீய             25,000

Padma      பத்ம              55,000

Skanda           ஸ்கந்த        81,000

Vaman          வாமன          10,000

Varaha          வராஹ          24,000

Vayu        வாயு               24,000

Vishnu        விஷ்ணு            23,000

மொத்தம் = 800000 வரிகள் X ஒரு வரிக்கு 5 சொற்கள் வீதம்= 40 லட்சம் சொற்கள்!

மிகப் பெரிய புராணம் : கந்த புராணம்  Skanda Purana

மிகச் சிறிய புராணம் : மார்க்கண்டேய புராணம் Makandya Purana

மிகவும் பழைய புராணம் : விஷ்ணு புராணம் ( கி.பி.300)

lifting-up

சுவாமி விவேகாநந்தரும் இதையே செப்பினார்:

“எவனொருவன் பிறருக்காக வாழ்கிறானோ அவனே உயிர் வாழப்வன் மற்றவர் எல்லோரும் இருந்தும், இறந்தோருக்குச் சமம்

 “They alone live who live for others, the rest are more dead than alive”.

 

 

வள்ளுவரும் இதையே சொன்னார்

ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப்படும் – குறள் 214

சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் பொன்மொழித் தொகுப்பு நூலும் இதையே பகர்கிறது:

பரம் பரோபாகாரார்த்தம் யோ ஜீவதி ச ஜீவதி : எவன் பிறருக்கு உதவி செய்யும் வாழ்க்கை உடையவனோ அவனே வாழ்பவன்.

பெரியோர்கள் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பர்!

heart-quotes

— சுபம் —

எனக்கு ஒரு கண் போனாலும் போகட்டும்; அடுத்த வீட்டுக்காரனுக்கு…………..

dice

ஒரு வேண்டுகோள்: எனது கட்டுரைகளை உடனே “ரீபிளாக்: – செய்யாதீர்கள். ஒரு வாரம் இடைவெளி விடுங்கள். படங்கள் என்னுடையவை அன்று. ஆகையால் பயன்படுத்தாதீர்கள். கட்டுரை எழுதியவர் பெயர், பிளாக்-கின் பெயருடன் வெளியிடுங்கள்; மாற்றாதீர்கள்.

Compiled by London swaminathan

Date : 5 September  2015

Post No. 2127

Time uploaded in London : -7- 29 am

அழுக்காறு உடையார்க்கு அது சாலுமொன்னார்

வழுக்கியும் கேடீண்பது – குறள் 165

பொருள்:பொறாமை உடையார்க்கு அழிவினைத் தருவதற்கு வேறு எதிரியே தேவை இல்லை. அவன் கொண்டுள்ள பொறாமையே அந்த ஆளை அழித்துவிடும்.

தமிழில் ஒரு பழமொழி உண்டு: ‘எனக்கு ஒரு கண் போனாலும் சரி, எதிரிக்கு இரண்டு கண்களும் போகட்டும்’ என்று. பொறாமையாலோ, பழிவாங்கும் குணத்தாலோ இப்படி எண்ணம் வரலாம். இந்தப் பழமொழிக்குப் பின்னால் ஒரு கதையே உள்ளது!

ஒரு ஊரில் அடுத்தடுத்து இருவர் வசித்தனர். ஒருவருக்கு நல்ல, பெரிய, அழகான வீடு; அவர் மிகவும் நல்லவர். அடுத்த வீட்டுக்காரனுக்கு ஒரு சிறிய வீடுதான் இருந்தது. அவன் பொறாமைக்காரன். அடுத்தவர்களைப் பார்த்தே அவன் குடல் வெந்தது; கண்கள் கருகின. எப்படியாவது நாமும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று எண்ணி காட்டுக்குத் தவம் செய்யப்போனான். அவர்கள் வீடுகள் காட்டை ஒட்டியிருந்தன.

காட்டில் தவம் செய்யப் போனவுடன் ஒரு முனிவர் வந்தார். “என்னப்பா, காட்டில் தவம் செய்கிறாயே, எதற்காக?” என்றார். அவன் தனக்கு அடுத்த வீட்டுக்காரனைப் போல பெரிய வீடு, வாசல், நில புலன்கள் வேண்டும் என்றான். இப்படிச் சொன்னவுடன் அவனுடைய பொறாமைக் குணம் அவருக்குப் புரிந்துவிட்டது.

“அன்பனே! உனக்கு ஒரு தாயக்கட்டை தருவேன். அதை நீ மூன்று முறை மட்டுமே உருட்டலாம். ஒவ்வொரு முறை நீ உருட்டும்போதும், ஒரு கோரிக்கை நிறைவேறும். ஆனால் அடுத்தவீட்டுக்காரன் மீதுள்ள பொறாமை போகாவிட்டால், நீ வேண்டுவது எல்லாம், அவனுக்கு உன்னைப் போல, இரண்டு மடங்கு கிடைக்கும் என்றார்.

susidence

பொறாமைக்காரனுக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி சொல்லிவிட்டு, தாயக் கட்டையை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தான். அடுத்த வீட்டைப் பார்த்தவுடன் பொறாமை கொப்புளித்தது. எனக்கு அவனைப் போல பெரிய வீடு வாசல், மாட மாளிகை வேண்டும் என்று சொல்லி காயை உருட்டினான். என்ன அதிசயம்? அவனுக்கு கேட்டதெல்லாம் கிடைத்தது. ஆனால் பொறாமை போகாததால், அடுத்தவீட்டுக் காரனுக்கு இரு மடங்கு பெரிய வீடு கிடைத்துவிட்டது.

இப்பொழுது அவனது பொறாமை கொழுந்துவிட்டு எரிந்தது. அப்படியா சேதி! எனது அறிவை அந்த முனிவன் குறைத்து எடை போட்டுவிட்டான். இதோ பார் என்று சொல்லிக்கொண்டே இரண்டாவது முறை தாயக்கட்டையை உருட்டினான். எனக்கு ஒரு கண் போகட்ட்டும் என்றான். ஒரு கண் குருடாய்ப் போயிற்று. அடுத்தவீட்டுக் காரனுக்கு இரு மடங்கு கிடைக்கும் அல்லவா? அவனுக்கு இரண்டு கண்களும் போயிற்று. பொறாமைக்காரன் கைகொட்டிச் சிரித்து ஆனந்த நடனம் ஆடினான்.

சரி, வேறு எப்படி அடுத்த வீட்டுக் காரனை நாசமாக்கலாம் என்று யோசித்தபோது, திடீரென ஒரு யோஜனை பளிச்சிட்டது. எடுத்தான் தாயக் கட்டையை; என் வீடு பாதிப்பகுதி நிலத்தில் ஆழக் கடவதாகுக! என்றான். அப்படியே ஆயிற்று. அடுத்தவீட்டுக் காரனுக்கோ முழு வீடும் நிலத்துக்கு அடியில் போனது.  பொறாமைக்காரனுக்குப் பேரானந்தம். கைகொட்டிச் சிரித்தான். வரம் கொடுத்த முனிவனையே முட்டாளாக்கிவிட்டேன் என்று கொக்கரித்தான்.

blind Argentina1132 (2)

தோட்டத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த அடுத்த வீட்டு வேலையாட்கள், இவை எல்லாம் பொறாமைக்காரனோடு வேலைதான் என்பதை அவனது ஆட்ட,பாட்டத்தால் உணர்ந்து பொறாமைக்காரனை அடித்து நொறுக்கி அவனது செல்வங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு காட்டிற்குள் ஓடிவிட்டனர்!

உள்ளதும் போச்சுடா லொள்ளைக் கண்ணா! என்று அவன் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான்.

பொன்மொழிகள்:—-

1.ஔவியம் பேசேல் – ஆத்திச்சூடி

(ஔவியம்=பொறாமை, அழுக்காறு)

2.ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு – கொன்றைவேந்தன்

(ஔவியம்=பொறாமை, அழுக்காறு; ஆக்கம் = செல்வம்)

3.அவ்வித்து அழுக்காறு உரையாமை முன்னினிது – இனியவை நாற்பது.

(நான் எழுதிய முந்திய பொறாமைக் கதையையும் படிக்கவும்)

–சுபம்–

வன்னிய குல கல்யாணப் பாடல்

tamil bride

Compiled by London swaminathan

Date : 4 September  2015

Post No. 2123

Time uploaded in London : 9-34 am

வெளியான ஆண்டு 1894/ 1895

இருப்பிடம்: பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்

காப்பி எடுத்தவர்: லண்டன் சுவாமிநாதன்

மொத்த பக்கங்கள்: எட்டு+1

ஸைஸ்: பாக்கெட் புக் ஸைஸ்

IMG_4675 (2)

IMG_4676 (2)

IMG_4677 (2)

IMG_4678 (2)

IMG_4679 (2)

IMG_4680 (2)

IMG_4681 (2)

IMG_4682 (2)

IMG_4683 (2)

—subham—

உழைத்து வாழ வேண்டும்! குந்தித் தின்றால் குன்றும் கரையும்!!

2 er uzavan

Written by London swaminathan

Date : 3 September  2015

Post No. 2120

Time uploaded in London : 8-02 காலை

கிராமப்புற மக்களுக்கு எழுத்தறிவு குறைவு. ஆனால் பட்டறிவு மிகுதி. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பெற்ற அற்புதமான கருத்துக்களை கதைகள் மூலமும், பழமொழிகள் வாயிலாகவும் பசுமரத்தாணி போல மனதில் பதிய வைத்துவிடுவார்கள். இதோ ஒரு குட்டிக்கதை!

குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்பது பழமொழி. “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்; வீணில் உண்டு களித்திருப் போரை நிந்தனை செய்வோம்” என்று குரல் கொடுத்தான் புரட்சிக் கவிஞன் பாரதி.

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தார். ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருந்தார். உழைத்து உழைத்து ஓடாய்ப் போனார். தினமும் வயலுக்குச் சென்று நிரைய சாகுபடி செய்தார். நல்ல வரும்படி கிடைத்தது. பெரிய நிலச்சுவான்தார் ஆனார். அவருக்கு எட்டு பிள்ளைகள். எல்லாம் சோம்பேறிகள். குடியிலும் கூத்திலும் பணத்தை விரயமாக்கினர். தந்தையும் எவ்வளவோ நல்ல வார்த்தைகள் சொல்லிப் பார்த்தார். அவருக்கு 90 வயதானபோது மரணம் நெருங்கியது. இறுதியாக ஒரு முறை நல்ல வார்த்தை சொல்ல நினத்தார். எட்டுப் பிள்ளைகளையும் அழைத்தார்.

“அன்புச் செல்வங்களே! காடு வா, வா என்கிறது; வீடு போ, போ என்கிறது. காயமே இது பொய்யடா; இது வெறும் காற்றடைத்த பையடா – என்று ஆன்றோர் சொல்லுவர். எந்த நிமிடத்திலும் இந்த மூச்சுக் காற்று போகலாம். நான் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு ரகசியத்தை மட்டும் சொல்லி விடுகிறேன். நான் உழைத்துப் பாடுபட்டு தேடிய செல்வத்தை எல்லாம் நிலத்தில் ஆழமாகப் புதைத்து வைத்துள்ளேன். யார், யார் எதை, எதைத் தோண்டி எடுக்கிறீர்களோ அது, அது அவரவர்களுக்கே சொந்தம். மேலும் உங்களை ஊக்குவிப்பதற்காக ஒன்பது இடங்களில் செல்வத்தைப் புதைத்து வைத்திருக்கிறேன். யார் அதிகம் தோண்டுகிறீர்களோ அவர்களுக்குக் கூடுதலாக ஒரு புதையலும் கிடைக்கட்டும் என்று செய்து வைத்திருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. என் மீது நீங்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பீர்களானால் நான் இறக்கும் வரை புதையலைத் தேடக்கூடாது” – என்று சொன்னார்.

எட்டுப் பிள்ளைகளுக்கும் அளவிலா மகிழ்ச்சி. எப்போது இந்தக் கிழவனார் சாகப்போகிறார் என்று காத்திருந்தனர். அந்த நாளும் வந்தது. கிழவனார் இறந்தார். எட்டுப்பேரும் மிக ஒற்றுமையாக உடலை தூக்கிச் சென்று தகனம் செய்துவிட்டூ ஓடினர், ஓடினர், வயல் வெளியின் நான்கு எல்லைகளுக்கும் ஓடினர். கையில் கோடரி ,மண்வெட்டி சகிதம் ஓடினர். தோண்டினர், தோண்டினர், தோண்டிக்கொண்டே இருந்தனர்.

நாட்களோடின, வாரங்கள் பறந்தன; மாதங்கள் ஆகின. மழைக்காலமும் வந்தது. யாருக்கும் , எந்தப் புதையலும் கிடைக்கவில்லை. அட! வயல் வெளியோ சேரும், சகதியுமாக ஆய்விட்டது. அப்பா சாகுபடி செய்த அதே பயிர்களை நாமும் சாகுபடி செய்வோம் என்று முடிவெடுத்து களத்தில் இறங்கினர். அருமையான மகசூல். அப்பாவுக்குக் கிடைத்ததைவிட பன்மடங்கு விளைச்சல்; பொன் விளையும் பூமியைக் கண்டவுடன் அப்பா சொன்ன, “புதைத்துவைத்த புதையல்” இதூதான் என்பது அவர்களுக்கு விளங்கியது.

er uzavan

மேலுலகத்தில் இருந்து இதை வேடிக்கைப் பார்த்த, கிழவனாரின் ஆன்மாவும் சாந்தி அடைந்தது!

——-xxxxxx——-

இலங்கைச் சரித்திரம்

Article No. 2108

Compiled  by London swaminathan
Date : 30 August  2015
Time uploaded in London :– 7-14 am

IMG_4070

வடமொழியில் காந்தபுராணத்துள்ள, தக்ஷிண கைலாச மான்மிய சங்கிரகம் எனப்படும் இலங்கைச் சரித்திரம்

யாப்பாணத்து வண்ணைநகர் சு.ரத்தினசபாபதி சாஸ்திரிகளால் ஏடுகளிலிருந்து மொழிபெயர்த்துச் சொல்லியபடி, நல்லூர் வ.சின்னத்தம்பி புலவரால் அச்சில் பதிப்பிக்கப்பட்டது.

இந்த நூல் பிரிட்டிஷ் மியூசியத்தில் 1911- ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டதாக கடைசி பக்கத்தில் முத்திரை இருப்பதால் அதற்கு முன்பு பதிப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பொழுது லண்டன் பிரிட்டிஷ் லைப்ப்ரரியில் உள்ளது.

IMG_4071 - Copy

IMG_4072 (2) - Copy

IMG_4073 (2)

IMG_4074 (2)

IMG_4075 (2)

IMG_4080 (2)

IMG_4083 (2)

IMG_4084 (2)

IMG_4085 (2)

IMG_4086 (2)

IMG_4087 (2)

IMG_4088 (2)

IMG_4089 (2)

IMG_4090 (2)

IMG_4091 (2)

IMG_4092 (2) IMG_4094 (2)

IMG_4093 (2)

IMG_4095 (2) IMG_4096 (2)

IMG_4098 (2)

IMG_4099 (2)

IMG_4100 (2)

IMG_4101 (2)

IMG_4102 (2)

IMG_4103 (2)

IMG_4105 (2)