Compiled by London swaminathan
Date : 6 September 2015
Post No. 2130
Time uploaded in London : – 16-16
வியாசர் என்னும் மகரிஷி நான்கு வேதங்களைத் தொகுத்தார். உலகிலேயே நீண்ட இதிஹாசமான மஹாபாரதத்தை ஒரு லட்சம் ஸ்லோகங்களில் (இரண்டு லட்சம் வரிகள், பத்து லட்சம் சொற்கள்) எழுதினார். இதன் பின்னர் 18 புராணங்களை எழுதினார். அவைகளில் நான்கு லட்சம் ஸ்லோகங்கள். அதாவது எட்டு லட்சம் வரிகள். சுமார் 40 லட்சம் சொற்கள். இவைகளை எல்லாம் செய்ததற்காக அவரை சாதனைப் புத்தகத்தில் பதிவிடலாம். இனி எவரும் இத்தகைய சாதனையைச் செய்ய இயலாது! அதுவும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. இது ஒன்றே போதும்- இந்தியாதான் உலகில் முதலில் நாகரீகம் பெற்ற நாடாக இருந்தது என்று நிரூபிக்க!
இந்த எட்டு லட்சம் வரிகளையும் படித்தார் பஞ்சதந்திரக் கதைகளை எழுதிய பிராமணன் விஷ்ணுசர்மா. கடைசியில் இவ்வளவையும் எல்லோரும் படிக்கமுடியாதே என்று எண்ணி, அவர் எட்டு லட்சம் வரிகளில் சொல்ல வந்தது என்ன என்று நானே சொல்லிவிடுகிறேன் என்று பஞ்சதந்திரக் கதைகளில் ஒரு புதிர் போட்டார். அவரே விடையும் சொன்னார்:
“பரோபகாராய புண்யாய, பாபாய பரபீடணம்”
பொருள்: பிறருக்கு உதவி செய்வது புண்ணியம்; பிறருக்கு தீங்கிழைப்பது பாபம்.
இதைப் புரிந்து கொண்டால் உலகம் அமைதியுடன், ஆனந்தமாக வாழும்!
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் விஷ்ணு சர்மன் எழுதிய பாட்டு இதுதான்:–
அஷ்டாடச புராணேஷு வியாசாய வசனத்வயம்
பரோபகாராய புண்யாய, பாபாய பரபீடணம் – பஞ்சதந்திரம்
18 புராணங்களில் வியாசர் சொன்ன விஷயம் இரண்டே இரண்டுதான்; பிறருக்கு உதவி செய்வது புண்ணியம்; பிறருக்கு தீங்கிழைப்பது பாபம்.
தமிழ் திரைப் படக் கதைகள் எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொல்லச் சொன்னால் என்ன சொல்வோம்? ஒரு கதா நாயகன், ஒரு வில்லன்; இறுதியில் நல்லது செய்யும் கதா நாயகன் வெற்றி பெறுவார். இதைத்தான் நமது புராண, இதிஹாசங்கள் சொல்லுகின்றன. வேதத்தில் சத்தியம் (உண்மை) ருதம் (ஓழுங்குமுறை) என்ற இரண்டுதான் திரும்பத் திரும்ப வருகிறது. இவை இரண்டும் உலகில் இருந்துவிட்டால் சண்டை ஏது? சச்சரவு ஏது?
எங்கும் பேரானந்தம், பிரம்மானந்தம், நித்தியானந்தம், சச்சிதாநந்தம் நிலவுமல்லவா?
18 புராணங்களும் அவைகளில் உள்ள ஸ்லோகங்களின் எண்ணிக்கையும்:–
Following are the 18 Puranas with the number of Slokas (couplets) they contain:
Agni அக்னி 16,000
Bhagavata பாகவத 18,000
Bhavisya பவிஷ்ய 14,500
Brahma பிரம்ம 10,000
Brahmanda பிரம்மாண்ட 12,000
Brahmavaivavarta பிரம்மவைவஸ்வத 18,000
Garuda கருட 18,000
Kurma கூர்ம 18,000
Linga லிங்க 11,000
Markandeya மார்கண்டேய 9000
Matsya மத்ஸ்ய 14,000
Naradiya நாரதீய 25,000
Padma பத்ம 55,000
Skanda ஸ்கந்த 81,000
Vaman வாமன 10,000
Varaha வராஹ 24,000
Vayu வாயு 24,000
Vishnu விஷ்ணு 23,000
மொத்தம் = 800000 வரிகள் X ஒரு வரிக்கு 5 சொற்கள் வீதம்= 40 லட்சம் சொற்கள்!
மிகப் பெரிய புராணம் : கந்த புராணம் Skanda Purana
மிகச் சிறிய புராணம் : மார்க்கண்டேய புராணம் Makandya Purana
மிகவும் பழைய புராணம் : விஷ்ணு புராணம் ( கி.பி.300)
சுவாமி விவேகாநந்தரும் இதையே செப்பினார்:
“எவனொருவன் பிறருக்காக வாழ்கிறானோ அவனே உயிர் வாழப்வன் மற்றவர் எல்லோரும் இருந்தும், இறந்தோருக்குச் சமம்
“They alone live who live for others, the rest are more dead than alive”.
வள்ளுவரும் இதையே சொன்னார்
ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் – குறள் 214
சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் பொன்மொழித் தொகுப்பு நூலும் இதையே பகர்கிறது:
பரம் பரோபாகாரார்த்தம் யோ ஜீவதி ச ஜீவதி : எவன் பிறருக்கு உதவி செய்யும் வாழ்க்கை உடையவனோ அவனே வாழ்பவன்.
பெரியோர்கள் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பர்!
— சுபம் —
You must be logged in to post a comment.