சௌராஷ்டிர சமூகம் பற்றி மேலும் ஒரு பழைய நூல்

IMG_3283 (2)

Article No. 2093

Written by London swaminathan
Date : 23 August  2015
Time uploaded in London :– 13-25

சென்ற ஆகஸ்ட் 18- ஆம் தேதியன்று லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியிலிருந்து, தமிழ் நாட்டில் வசிக்கும் சௌராஷ்டிர ஜாதியினர் பற்றிய ஒரு சிறிய புத்தகத்தை இங்கே (கட்டுரை எண் 2081) கொடுத்திருந்தேன்.

இதோ மேலும் ஒரு புத்தகம். தலைப்பு ஸௌராஸ்ட்ரரின் பூர்வ சரித்திரம்; வெளியிட்ட ஆண்டு 1911. வெளியிட்ட இடம்-சேலம்.

முந்தைய புத்தகத்தின் பெயர்: ஸௌராஷ்டிர ஜாதியாரின் சரித்திர சாரசங்கிரகம், ஆண்டு 1903, கும்பகோணம் ஜெ.வி.பத்துருசுவாமியினால் பிரசுரம் செய்யப்பட்டது.

IMG_3284 (2)

IMG_3287 (2)

IMG_3285 (2)

IMG_3286 (2)

IMG_3288 (2)

IMG_3289 (2)

IMG_3291 (2)

IMG_3290 (2)

IMG_3292 (2)

IMG_3294 (2) IMG_3295 (2)

IMG_3296 (2)

IMG_3297 (2)

IMG_3298 (2)

IMG_3299 (2)

IMG_3301 (2)

IMG_3300 (2)

IMG_3303 (2)

IMG_6528 (2)

IMG_6664 (2)

முற்றும்

பிரிட்டிஷ் மஹாராணிக்கு ஜே! ஜால்ரா!! சம்சா!!! மஹா ஜால்ரா!!!!

IMG_3346 (2)

Research Article No. 2089

Written by London swaminathan
Date : 21 August  2015
Time uploaded in London :–  காலை மணி 10-02

இந்தியாவில் சுதந்திரத்துக்காகப் போராடியோர் எண்ணிக்கை மிகவும் குறைவே. அக்கால ஜனத்தொகையையும் (சுமார் முப்பது கோடி), பின்னர் தியாகிகள் என்று தாமிர பட்டயம் வாங்கியோர் எண்ணிக்கையயும் ஒப்பிட்டால் இது புரியும். பெரும்பாலான மக்கள், “ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன” என்று இருந்துவிட்டனர். விக்டோரியா மஹாரணி காலத்தில் இந்தியர்கள், குறிப்பாகப் பத்திரிக்கைகள் அனைத்தும், அவளை எப்படி போற்றிப் புகழ்ந்தன என்பதையும் ஜார்ஜ் மன்னர் இந்தியாவுக்கு வந்தபோது அவரை எப்படிப் பாராட்டினர் என்பதையும் பார்த்தால் இது விளங்கும்.

வெளி நாட்டினருக்கு ஜால்ரா அடிப்பதில், ஒத்து ஊதுவதில் தமிழர்கள் சளைக்கவில்லை. திராவிட பக்தன் முதலான பத்திரிக்கைகளில் வந்த பாடல்களே இதற்கு சான்று பகரும்.

IMG_3341 (2)

“ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்” — மெட்டில் ஒரு பாட்டு, “ராம ராம ஜய ராஜாராம்” — என்ற பஜனைப் பாட்டு மெட்டில் ஒரு பாட்டு என்று பிரிட்டிஷாரைப் புகழ்ந்து எழுதித் தள்ளிவிட்டனர். காந்திஜி போன்றோர் வந்து சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய போதும் வேடிக்கை பார்க்க வந்த கும்பலே அதிகம். காந்திஜி சுடப் பாட்டு இறப்பதற்கு முதல் நாள் வரை திண்ணைப் பேச்சிலும், மரத்தடிப் பேச்சிலும் அவரைக் குறை கூறியோர் எண்ணிக்கையே அதிகம்.

“நெஞ்சு பொறுக்குதிலையே–இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

இதையெல்லாம் கண்டு பொறுக்க மாட்டாமல்தான் பாரதியார் கொதித்தெழுந்தார். “நெஞ்சு பொறுக்குதிலையே–இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் …. அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே” என்றும், “நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே- வாய்ச் சொலில் வீரரடி” – என்றும் பாடினார்.

IMG_3340 (2)

1911 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். அப்போது இந்தியாவில் ஆங்கில ஆட்சியைப் புகழ்ந்து பலர் பாடல்கள் எழுதினர். பாரதியார், ரவீதிரநாத் தாகூர் முதலிய பெருங் கவிஞர்களும் இதில் அடக்கம். ஜனகனமன என்று துவங்கும் பாடலும் (பின்னர் நாட்டின் தேசீய கீதமானது) ஜார்ஜ் மன்னரை வரவேற்க எழுதப்பட்டதே. ஆயினும் இது ஒரு சர்ச்சையான பின்னர் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் தாகூர் மறுப்பு வெளியிட்டு, இது பொதுவான பாடல் என்றார்.

பாரதியார் எழுதிய “வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு” என்ற பாடலில் மிகவும் அழகாகப் பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டிவிட்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி, ‘நல்லது செய்’ (சுதந்திரம் வழங்கு) என்றும் பாடி இருக்கிறார். தாகூர் எழுதிய பாடலில் ‘ஆஹா ஓஹோ’ என்று புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.பாரதியார் பாடலில் அப்படி இல்லை.

ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்

ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில –

என்று சொல்லிவிட்டு பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்களைப் புகழ்கிறார். பின்னர்

ஆயினும் என்னை? ஆயிரங்கோடி தொல்லைகள் இன்னும் தொலைந்தனவில்லை

நல்குரவாதி நவமாம் தொல்லைகள்

ஆயிரம் எனை வந்தடைந்துள நுமரால்

என்னுமிங்கிவையெலாம் இறைவன் அருளால்

நீங்குவ அன்றி நிலைப்பனவல்ல

–என்று சொல்லி சுதந்திர வேட்கையையும் வெளிப்படுத்துகிறார். 1908 ஆம் ஆண்டில் பாரதியார் வெளியிட்ட ஸ்வதேச கீதங்கள் – என்ற தனது நூலில் சேர்த்த பாடல்களே அவருடைய தீவிர சுதந்திர வேட்கைக்குச் சான்று.

அவர் நடத்திய தேசபக்தப் பத்திரிக்கைகளைத் தவிர பெரும்பாலான பத்திரிக்கைகள் பிரிட்டிஷ் ஆட்சியாளரைப் புகழ்ந்தனவேயன்றிக் குறைகூற அஞ்சி நடுங்கின!

இத்துடன் இணைத்துள்ள பாடல்கலையும் விக்டோரியா மஹாரணியாரைப் புகழ்ந்து வெளியான தமிழ்ப் புத்தகத்தையும் பார்த்தால் அக்கால அடிவருடிச் சூழ்நிலை கண்ணுக்குமுன் திரைப்படம் போல வரும்!

இனி இணைப்புகளைக் காண்க:————

IMG_3344 (2)

IMG_3349 (2)

IMG_6004

IMG_6013

IMG_6014

IMG_6015

IMG_3345 (2)

—-முற்றும்—

TAMIL – ENGLISH PROVERB BOOK -1

IMG_3522 (2)

Article No. 2078

Written by London swaminathan

Date : 17  August  2015

Time uploaded in London :–  13-26

 

I have got three Tamil Proverb books from the British Library. They are more than 100 years old. This book was published in 1912 and it contains 108 Tamil proverbs and it’s equivalents in English.

IMG_3523 (2)

IMG_3524 (2)

IMG_3525 (2) - Copy - Copy - Copy

IMG_3526 (2) - Copy - Copy - Copy

IMG_3527 (2) - Copy - Copy

IMG_3528 (2) - Copy - Copy

IMG_3529 (2) - Copy - Copy

IMG_3530 (2) - Copy - Copy - Copy

IMG_3531 (2) - Copy - Copy - Copy

IMG_3532 (3) - Copy - Copy

IMG_3533 (2) - Copy - Copy

IMG_3534 (2) - Copy - Copy - Copy

IMG_3535 (2) - Copy

IMG_3536 (2) - Copy - Copy

IMG_3537 (2) - Copy

IMG_3538 (2) - Copy - Copy

IMG_3539 (2) - Copy - Copy

IMG_3540 (2) - Copy - Copy

IMG_3541 (2)

IMG_3542 (2) - Copy - Copy

—-End—-

நெப்போலியன் தந்திரம்: உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவது எப்படி?

napo6

Article No. 2075

Written by London swaminathan

Date : 16  August  2015

Time uploaded in London :–  7-31 am

நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் மாபெரும் வீரன். இறுதியில் ஆங்கிலேயர்களிடம் தோற்று, சிறையில் வஞ்சனையாகக் கொல்லப்பட்டார். அதாவது ரத்தத்தில் மெதுவாகக் கலக்கும் விஷத்தை உணவில் சேர்த்துக் கொடுத்து அவரை ஆங்கிலேயர்கள் கொன்றதை, பிற்காலத்தில் அவரது சடலத்திலுள்ள தலை முடிகளை ஆராய்ந்ததில் தெரிய வந்தது. நிற்க.

நெபோலியன், தனது படை வீரர்களுக்கு உற்சாகம் ஊட்ட பல தந்திரங்களைக் கையாள்வார். அவர் வழி … தனி வழி! படை வீரர்களைச் சந்திக்கும் முன்பு தனது மெய்க் காப்பாளர்களைக் கூப்பிட்டு, இந்தப் பட்டாளத்தில் உள்ள முக்கிய வீரர்களின் முழு விவரங்களையும் அறிந்து வா என்று சொல்லி அனுப்புவார். அவரிடம் கேட்ட விஷயங்களை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு பட்டாள அணிவகுப்பு மரியாதையை ஏற்கச் செல்வார்.

stamp napoleon bonaparte

stamp napoleon bonaparte

திடீரென்று ஒரு குறிப்பிட்ட படை வீரர் முன்பு நின்று, அவனது பெயரைச் சொல்லி அன்புடனும், அதிகாரத்துடனும் அழைத்து, “ ஆஹா, நீ இந்தப் பட்டாளத்தில் இருக்கிறாயா? நீ அந்த xxxxx போரில் போரிட்ட முறையை நான் மறக்கவே இல்லை. நீ பெரிய வீரன்தான். அது சரி, ஊருக்குப் போய் வந்தாயா? உனது தந்தை எப்படி இருக்கிறார்? —– இப்படி அன்பு மழை பொழிவார்.

திடீரென்று என்ன இது? உனக்கு இதுவரை ஒரு மெடல், விருது கூட கிடைக்கவில்லையா? இதோ இப்போதே உத்தரவு போடுகிறேன் – என்று சொல்லி அவருக்கு ஒரு விருதும் கொடுப்பார் (ராணுவ வீரர்கள் சிறப்பாகப் போர் புரிந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்து முதலியன அவர்கள் உடையிலேயே குத்தப் பட்டிருக்கும்/ பொருத்தப்பட்டிருக்கும்)

இப்படிச் சொல்லிவிட்டு அந்தப் படை வீரனுக்கு ஒரு பட்டம் கொடுக்கப்பட்டவுடன் பட்டாளம் முழுதும் ஒரே பரபரப்பு ஏற்பட்டு விடும். எல்லோரும், “ கடவுளே! நம் தலைவருக்குத் தெரியாத விஷயமே உலகில் இல்லை போலும்!! நம்முடைய ஊர், குடும்பம், நாம் போரிட்ட முறை எல்லாவற்றையும் தலைவர் அறிந்திருக்கிறார். நமக்கும் விரைவில் பட்டங்கள், விருதுகள், மெடல்கள் ஏதேனும் கிடைக்கலாம்” என்று பேசிக் கொள்வர். அது மட்டுமல்ல. இது மற்ற பட்டாளங்களுக்கும் காட்டுத் தீ போல பரவிவிடும். படை வீரர்கள் முன்னைவிட பன் மடங்கு உற்சாகமாகப் போரிடுவர்.

ஒரு தலைவனுக்குரிய அததனை குணநலன்களையும் பெற்றவர் நெப்போலியன்!

ORIGIN OF PARIAHS (TAMIL Book from British Library, Year 1894)

IMG_6657 (2)

Article No. 2074

Written by London swaminathan

Date : 16  August  2015

Time uploaded in London :–  6-37 am

I have been publishing booklets that are over 100 years old in this blog for the benefit of future researchers. They are from the British Library, London. I have got one on Pariah caste and two booklets on Saurashtras (of Tamil Nadu). Here is the booklet on Origin of Pariahs in Tamil:–

IMG_3230 (2)

IMG_3231 (2)

IMG_3233 (2)

IMG_3234 (2)

IMG_3235 (2)

IMG_3236 (2)

IMG_3237 (2)

IMG_3238 (2)

IMG_3239

IMG_3241 (2)

IMG_3240 (3)

IMG_3244 (2)

IMG_3243

Published in 1894

எகிப்திய, சுமேரிய கனவுகளும் இந்துமத கனவுகளும்

gudea

குடியா, சுமேரியன்

Article No. 2072

Written by London swaminathan

Date : 15  August  2015

Time uploaded in London :–  13-17

(Pictures are used from various sources)

இந்து மதத்தில் உள்ளது போலவே, கிரேக்க, சுமேரிய, எகிப்திய நாகரீகங்களிலும் கனவுகள் பற்றி நம்பிக்கைகள் உள. இவைகளையும், நான் முன்னரே பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் குறிப்பிட்ட பல்வேறு துறை விஷயங்களையும் கருத்திற் கொண்டால், நம்முடைய கலாசாரத்தின் தாக்கம் நன்கு புலப்படும். ரிக் வேத காலத்தில், கங்கை, சிந்து, சரஸ்வதி நதி தீரங்களிலிருந்து இந்துக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றபோது இக்கருத்துகள் பரவியிருக்க வேண்டும். ஆனால் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994), உலகம் முழுதும் ஒரு காலத்தில் சநாதன தர்மமே இருந்தது அதன் எச்ச சொச்சங்களும், மிச்ச மீதிகளும் இன்று உலகம் முழுதும் காணக் கிடக்கின்றன என்று கூறுகிறார். அதுவும் சரியென்றே தோன்றுகிறது.

சில ஒப்பீடுகளை மட்டும் காண்போம்:

1.கனவுகளுக்குப் பொருள் கூறும் ஒரு நூல் 1800 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் ஆர்டிமிடோரஸ் என்பவரால் (Five books of the Oneirocriticon by Artemidorous of Daldis , 2nd century CE) எழுதப்பட்டது. அதில் கனவுகளை எதிர்காலம் உரைக்கும் நேரடிக் கனவுகள், விளக்கம் தேவைப்படும் உருவகக் கனவுகள் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார். இரண்டாவது வகைக் கனவுகளுக்கு விளக்கம் தேட இப்புத்தகங்கள் உதவும். நாமும் வியாழ பகவான் இயற்றியதாக ஒரு புத்தகம் வைத்துள்ளோம். முன்னரே இதன் விவரங்களைக் கொடுத்துள்ளேன்.

ramesses

ராம்செஸ், எகிப்து

எகிப்திய நம்பிக்கைகள்

எகிப்து நாட்டில் ராம்செஸ் (ராமசேஷன்) என்ற பெயரில் 13 மன்னர்கள் ஆண்டனர். அவரது கால பபைரஸ் காகிதத்தில் (Ramesses Period ,1292- 1075 BCE) எழுதப்பட்ட கனவு பற்றிய விஷயங்கள் பின்வருமாறு:

1.ஒரு மனிதன் தன் கையாலேயே ஒரு எருதை அடித்துக் கொல்வதாகக் கனவு கண்டால் நல்லது. அவனுடைய எதிரி அழிவான் என்பது இதன் பொருள்.

2.முதலை மாமிசத்தை உண்பதாகக் கனவு காண்பதும் நல்லதே. அதாவது நீங்கள் அதிகாரி போல செயல்படுவீர்கள் என்பது இதன் பொருள்.

3.ஒரு நதியில் மூழ்குவது போலக் கனவு கண்டால் உங்கள் தீமைகள் அழிந்தன என்று பொருள். (நதிகளில் குளித்தால் பாவங்கள் அழியும் என்ற இந்துக்களின் நம்பிக்கையின் தாக்கம் இது).

4.வயதான ஒருவரைப் புதைக்கும் கனவு, வளம் கொழிக்கும், செழிக்கும் என்பதைக் குறிக்கும்

5.உங்கள் முகத்தையே கண்ணாடியில் பார்த்தால் வேறொரு மனைவி வரப்போகிறாள் என்று அர்த்தம்

6.வெள்ளை நிறச் செருப்புகள் அணிவதாகக் கனவு கண்டால் நீங்கள் உலகம் சுற்றும் வாலிபராகப் போகிறீர்கள்.

7.ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதாகக் கனவு கண்டால் துக்கச் செதி வரும் என்று பொருள்.

8.நாய் கடிப்பதாகக் கனவு கண்டால் நல்லதல்ல. உங்கள் மீது யாரோ ஏவல் பில்லி சூனியம் வைப்பர்.

9.படுக்கை எரிவதாகக் கனவு கண்டால், உங்கள் மனைவியை விரட்டியடிப்பீர்கள் என்று அர்த்தம்.

இவ்வாறு பல விஷயங்களை 3200 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியர் எழுதி வைத்தனர். பெரும்பாலான கனவு விளக்கங்கள் கணவன்-மனைவி பற்றியே உள்ளன!!

கனவுகளை, “கடவுள் அனுப்பும் செய்திகள்” – என்று எகிப்தியர் நம்பினர். நம்மைத் தொடர்புகொள்ள கடவுள் – கனவுகளைப் பயன்படுத்துவதாக எண்ணினர். மதுரை ஆதீன கர்த்தர் எழுதிய புத்தகத்தில் (இறந்தவர்கள் வாழும் நிலையும் அவர்களுடன் தொடர்புகொள்ளும் முறையும்), வீட்டில் நடக்கப்போகும் விபத்துகள், திருட்டுகள் குறித்து இறந்த ஆவிகள் கனவில் வந்து சொல்லிய செய்திகள் உள்ளன. அவற்றை எகிப்திய நம்பிக்கைகளுடன் ஒப்பிடுவது பொருத்தம்

கோவிலில் தூங்கினால் கடவுள் அனுப்பும் செய்திகள் கிடைக்கும் என்று எகிப்தியர்களும் சுமேரியர்களும் நம்பினர். நமது நாட்டில் தேவார மூவர் கண்ட பல கனவுகள் சிவன் கோவிலில் தூங்குகையில் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துமத அடியார்கள் எல்லோர் கதைகளிலும் கடவுள் பற்றிய கனவுகள் வருவதையும், புத்தர், மஹாவீரர் பிறப்பதற்கு முன்னர் அவர்களுடைய தாயார்கள் கண்ட கனவுகளையும் முன்னரே தந்துள்ளேன்.

சீனர்கள் மட்டும் கனவுகளுக்கு எதிர்மறைப் பொருள் கண்டார்கள். அதவது நீங்கள் இறப்பதாகக் கனவு கண்டால், உங்களுக்கு வாழ்நாள் மிக அதிகம் என்று பொருள்!

கிறிஸ்தவ மத நூலான பைபிளிலும் கனவுகள் பற்றிய பல குறிப்புகள் உண்டு. சாலமன் என்னும் மன்னனுக்கு கனவு மூலம் கடவுள் செய்தி அனுப்புகிறார். எகிப்திய மன்னனுக்கு தீய கனவுகளைக் கடவுள் உண்டாக்குகிறார். நிறைவேறாத ஆசைகள் கனவுகளாக வரும் என்ற பொருளும் உள்ளது (Genesis 41, Psalm 73:20,  1King 3:5).

gilgalouvre

ஜில்காமேஷ், சுமேரியா

சுமேரிய நம்பிக்கைகள்

சுமேரியர்களும் கடவுள் அனுப்பும் செய்திகளே கனவுகள் என்று நம்பினர். லகாஷ் நகர மன்னன் குடியா (குரு தேவ), கடவுளுக்கு ஒரு கோவில் எழுப்பு என்று தனக்குக் கனவில் உத்தரவு வந்ததாக 4000 ஆண்டுகளுக்கு முன் களிமண் பலகையில் எழுதி வைத்துள்ளார். இந்து மத அடியார்கள் எண்ணற்றவர்களின் கனவில் இப்படி உத்தரவு வந்ததை நாம் அறிவோம். குடியாவுக்கு உத்தரவு கொடுத்த கடவுளும் சிவபெருமானே! அந்தக் கடவுள் பெயர் கிரீசன். சுமேரிய மொழியில் நிங்கிரிசு என்பர். நின் என்றால் திரு என்று பொருள் (நின்+கிரிச).

உலகின் மிகப் பழைய காவியம் என்று மேலை நாட்டினர் நம்பும் ஜில்காமேஷ் காவியத்தில் அவருக்கு வந்த கனவுகள் பற்றி உள்ளன.

நினவே நகரில் அஷுர் (அசுர) பனிபால் வைத்திருந்த நூலகத்தில் கனவுகள் பற்றிய பல களிமண் பலகைத் துண்டுகள் கிடைத்தன. அதில் மன்னர் தான் கண்ட இஷ்டார் என்னும் தேவதையின் கனவு பற்றி எழுதி இருக்கிறார். கனவுகளுக்குப் பொறுப்பான மாமு என்னும் தேவதைக்கு அவர்கள் கோவிலும் கட்டிவைத்தனர்.

வேத, சுமேரிய, எகிப்திய, கிரேக்க, பைபிள் கனவுகளில் ஒரே அணுகுமுறை இருப்பது ஆய்வுக்குரியது.


My previous Research Articles on Dreams:

Role of Dreams in Tamil Saivite Literature (posted on July 4, 2013)

Do our Dreams have Meaning? (Posted on December 29, 2011)

God’s Note Book (posted on March 16, 2014)

Strange Dreams, posted on 27 July 2015Inauspicious Dreams: Dreams in Vedas and Upanishads, Posted on 28th July 2015

Vedic Echo in Sumerian and Egyptian Concept of Dreams, Posted 31 July 2015

விநோதக் கனவுகள், ஆகஸ்ட் 4, 2015

சிவனை நோக்கி கனவில் நடந்த கிருஷ்ணார்ஜுனப் பயணம் (பிப்ரவரி 4, 2015) – (எஸ். நாகராஜன் எழுதியது)

வித்தியாசமான விஞ்ஞானி யுங் (எஸ். நாகராஜன் எழுதியது)

வேத உபநிஷத்துகளில் கனவுகள், ஆகஸ்ட் 6, 2015

தோல்வி = வெற்றி = ஆப்ரஹாம் லிங்கன்!

lincoln 4

Article No. 2070

Written by London swaminathan

Date : 14  August  2015

Time uploaded in London :– 16-58

(Pictures are used from various sources)

வாழ்க்கையில் தோல்விக்கு மேல் தோல்வி ஏற்பட்டு வருகிறதே என்று எவரும் சோர்வுகொள்ள வேண்டாம். இதோ அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் சென்ற வெற்றிப்பாதையைக் கவனித்தால் போதும்; தோல்விதான் வெற்றிக்கு வழிகாட்டி என்பதை ஒப்புக்கொள்வோம்:

1881 –ல் வியாபாரத்தில் பெரும் நஷ்டம்

1832-ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி

1883-ல் வியாபாரத்தில் மீண்டும் நஷ்டம்

1834-ல் சட்ட சபத் தேர்தலில் வெற்றி

Abraham_Lincoln_1923_Issue-3c

1835-ல் அன்பு மனைவியின் மரணம்

1836-ல் சுவாசப் பை கோளாறினால் நோய்

1838-ல் சபாநாயகர் தேர்தலில் தோல்வி

1843-ல் நில அதிகாரிக்கான தேர்வில் தோல்வி

1843-ல் அமெரிக்க காங்கிரஸ் (பார்லிமெண்ட்) தேர்தலில் தோல்வி

1846-ல் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி

1848-ல் மறு தேர்தலில் தோல்வி

1855-ல் செனட் தேர்தலில் தோல்வி

1856-ல் உப ஜனாதிபதி தேர்தலில் தோல்வி

1858-ல் செனட் தேர்தலில் தோல்வி

1861-ல் ஜானாதிபதி தேர்தலில் மாபெரும் வெற்றி

1861-1865 வரை ஜனாதிபதியாக இருந்தார்.

lincoln 3licoln 2

1865 ஏப்ரல் 14 –ஆம் தேதி (தமிழ் புத்தாண்டு நாள்) அவர் தனது மனைவியுடன் ஒரு நாடகம் பார்த்துக் கொண்டிருக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நன்றி:– மஞ்சரி, பிப்ரவரி 1964

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!

flag students

Article No. 2069

Written by London swaminathan

Date : 14  August  2015

Time uploaded in London :– 16-18

(Pictures are used from various sources)

ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினம்

மிக வியப்பான விஷயம்! பாரதியார் இறந்து (1921) கால் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் இந்தியா சுதந்திரம் (1947) அடைந்தது. ஆயினும் அவருடைய தீர்க்க தரிசனப் பார்வை, சுதந்திர பாரதத்தைக் கண்டுவிட்டது. அவரது பாடல்களைப் படிக்கையில் இது நன்கு விளங்கும்.

சுதந்திரம் குறித்தும் அவர் காலத்தில் இருந்த இந்திய தேசியக் கொடி பற்றியும் அவர் பாடிய (( தாயின் மணிக்கொடி பாடலும்)) பாடல்கள் நமக்கு இந்திய வரலாற்றைக் – குறிப்பாகக் கொடியின் வரலாற்றைக்— கூறும்.

young_girl_20080124

youth-11

இதோ பாரதி கூறிய சுதந்திரப் பொன்மொழிகள்:—

1.ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று

பூமியில் இனி எவர்க்கும் அடிமை செய்யோம் – பரி

பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம் -(பாரதி)

2.வந்தே மாதரம் என்போம் – எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம் (பாரதியார்)

3.வெற்றி கூறுமின்! வெண் சங்கூதுமின்

கற்றவராலே உலகு காப்புற்றது

பாரிலுள்ள பல நாட்டினர்க்கும்

பாரத நாடு புது நெறி பழக்கல்

உற்றதிங்கிந்நாள், உலகெலாம் புகழ (பாரதியார்)

4.ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்

ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ, ஓங்குமினோ

தீது சிறிதும் பயிலாச் செம்மணி மாநெறி கண்டோம்

வேதனைகள் இனி வேண்டா; விடுதலையோ திண்ணமே (பாரதியார்)

indian-national-flag

5.தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரை\

கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்

வாராது வந்த மாமணியைத் தோற்போமோ? (பாரதியார்)

நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!

6.நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!

நரகமொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே

ஏலு மனிதர்  அறிவையடர்க்கும் இருள் அழிகவே

எந்த நாளும் உலகம் மீதில் அச்சம் ஒழிகவே (பாரதியார்)

fலக் பிக்

7.வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்

வேறொன்று கொள்வாரோ? – என்றும்

ஆரமுது உண்ண ஆசை கொண்டார் கள்ளில்

அறிவைச் செலுத்துவாரோ? (பாரதியார்)

8.வந்தேமாதரம் என்று உயிர்  போம்வரை

வாழ்த்துவோம் – முடி – தாழ்த்துவோம்

எந்த மாருயிர் அன்னையை போற்றுதல்

ஈனமோ? அவ – மானமோ? (பாரதியார்)

9.எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்

எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு (பாரதியார்)

HISTORY-FLAG

10.தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத் தாழ்ந்து

பணிந்து புகழ்ந்திட வாரீர்!

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன்

உச்சியின் மேல் ‘வந்தேமாதரம்’ என்றே

பாங்கின் எழுதித் திகழும் – செய்ய

பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!

இந்திரன் வச்சிரம் ஓர் பால் – அதில்

எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்

மந்திரம் நடுவுறத் தோன்றும் – அதன்

மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?

தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத் தாழ்ந்து

பணிந்து புகழ்ந்திட வாரீர்!

flag

11.பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்

புன்மை இருட்கணம் போயின யாவும் (பாரதியார்)

12.வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டுப்

பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை

வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க! (பாரதியார்)

IMG_6504

–சுபம்–

கல்விக்கு அழகு கசடற மொழிதல்

narendra-modi-speech

பிரதமர் நரேந்திர மோடி, டில்லி செங்கோட்டை

Article No. 2065

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 12  August  2015

Time uploaded in London :–  9-22 am

 

வாணீ = சொல்வன்மை = நன்மொழி தொடர்பான 30 பொன்மொழிகள்

 

1.அக்னிதா: அபி விசிஷ்டம் வாக் பாருஷ்யம் – சாணக்ய நீதி

சூட்டை விட சுடு சொல்லின் வெப்பம் அதிகம்.

((தீயினாற் சுட்ட புண் ஆறும், நாவினாற் சுட்ட புண் ஆறாது))

 

2.அனவசரே யதுக்தம் சுபாஷிதம் தச்ச பவதி ஹாஸ்யாய

நல்ல விஷயங்களைச் சொல்ல்பவரும் கேட்பவரும் அரிது.

 

3.கர்தவ்யம் ஹி சதாம் வச: — கதாசரித் சாகரம்

நல்லோற் சொற்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

4.கிம் கரிஷ்யந்தி வக்தார: ஸ்ரோதா யத்ர ந வித்யதே – சாணக்ய நீதி

கேட்பாரில்லாவிடில் பேசுபவர் என்ன செய்வார்?

((கடை விரித்தேன், கொள்வாரில்லை (ராமலிங்க சுவாமிகள்))

 netaji

நேதாஜி வங்காளி மொழிப் பிரசங்கம்

5.கோ வா துர்ஜனவாகுராசு பதித: க்ஷேமேண யாத: புமான் – பஞ்ச தந்திரம், பர்த்ருஹரி

கெட்டவர்களின் வலையில் விழுந்தவர்கள், யார் நல்ல நிலையில் மீண்டு வந்தனர்?

((நரி வகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம் நழுவி விழும் – பாஞ்சாலி சபதம், பாரதியார்))

 

6.க்ஷீயந்தே கலுபூஷணானி சததம் வாக்பூஷணம் பூஷணம் – பர்த்ருஹரி

உடம்பில் அணியும் அணிகலன்களுக்கு அழிவு உண்டு. சொல் எனும் அணிக்கு அழிவே இல்லை

 

7.ந ஹி ப்ரியம்  ப்ரவக்தும்  இச்சந்தி ம்ருஷா ஹிதைக்ஷிண:  — கிராதார்ஜுனீயம்

உண்மையான நலனை விரும்புவோர், இனிமையாக இருக்கும் என்பதற்காகப் பொய்யைச் சொல்லுவதில்லை.

 

8.நாப்ருஷ்ட: கஸ்யசித் ப்ரூயாத் – மனு

கேட்காததைச் சொல்லாதே

((பாத்திரம் அறிந்து தானம் செய்))

 

9.பரோபகரணார்த்தாய வசனே கா தரித்ரதா

பயனுள்ள சொற்களைச் சொல்வதில் கூடவா தரித்திரம்?

 

10.மஹீயாம்ச: ப்ரக்ருத்யா மிதபாஷிண: –  சிசுபாலவதம்

பெரியோர்கள் இயற்கையிலேயே குறைவாகப் பேசுவர்

(ராமபிரான் மித பாஷி, ஹித பாஷி, ஸ்ரீஉத பாஷி, பூர்வ பாஷி—வால்மீகி ராமாயணம்)

 nehru

பாரதத்தின் முதல் பிரதமர் நேருஜி சொற்பொழிவு

11.மிதம் ச சாரம் சவசோ ஹி வாக்மிதா — நைஷத சரிதம்

குறைவாக – பொருளுள்ள — விஷயங்களைப் பேசுவதே பேச்சுக் கலை

 

12.லௌகிகானாம் ஹி சாதூனாமர்தம் வாகனுதாவதி

ருஷீணாம் புனராத்யானாம் வாசமர்த்தோ அனுதாவதி – உத்தர ராம சரிதம்

 

நாம் காணும் பெரியோர்களின் சொற்கள், பொருளை அடிப்படையாக வைத்துச் சொல்லப்படுபவை. ஆனால் ரிஷிகளின் சொற்களே பொருளாகி விடுகின்றன. (அதாவது ரிஷிகளின் சொற்களே அஸ்திவாரம்)

 

13.ஸ்ருதேன யத்னேன ச வாகுபாஸிதா த்ருவம் கரோத்யேவ கமப்யனுக்ரஹம்  — காவ்யதர்ச:

 

கேள்வி ஞானம் மூலம் அல்லது முயற்சியின் மூலம் கற்றோருக்கு, சரஸ்வதி தேவி, எப்படியாவது நற்பயனைத் தருவாள்.

((கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு))

14.பல சொல்லக் காமுறுவர் மன்றமாசற்ற

சில சொல்லல் தேற்றாதவர் (குறள்  649)

சில சொற்களால் சொல்ல முடியாதோர், பல சொற்களைச் சொல்வர் (நேரத்தை வீணடிப்பர்)

 

15.சுமங்களோ பத்ரவாதி வதேஹ  — ரிக் வேதம்

மங்களகரமான, நன்மை பயக்கும் சொற்களைச் சொல்

 

indira UN Conference

ஐ.நா. சபையில் முன்னாள் பிரதமர் – இந்திராகாந்தி பேருரை

16.சதாம் ஹி வாணீ குணமேவ பாஷதே – கிராதார்ஜுனீயம்

நல்லோர்கள் எப்போதும் நற்குணங்களை மட்டுமே உரைப்பர்

 

17.சுதுர்லபா: சர்வமனோரமா கிர: – கிராதார்ஜுனீயம்

எல்லோரும் ஏற்கக் கூடிய இனிய சொற்களைப் பேசுவது கடினம்

 

18.ஹிதம் மனோஹாரி ச துர்லபம் வச: – – – கிராதார்ஜுனீயம்

நலம்பயக்கும், பிரியமான சொற்கள் கிடைப்பது அரிது.

 

19.ஆ நோ பத்ரா: ருதவோ யந்து விஸ்வத: – ரிக்வேதம் 1-89-1

எல்லா திசைகளிலிருந்தும் எங்களுக்கு உயர்ந்த கருத்துகள் வரட்டும்

 

20.சில்லெழுத்தினாலே பொருளடங்கக்

காலத்தால் சொல்லுக செவ்வி அறிந்து (ஆசாரக்கோவை)

கொஞ்சமாகப் பேசு, பொருளோடு பேசு, காலம் அறிந்து பேசு, கேட்பவர் விருப்பம் அறிந்து பேசு

 

21.சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்

செவ்வனாடியிற் செறித்தினிது விளக்கும் – நன்னூல்

 martinluther

மார்ட்டின் லூத கிங்

  1. கல்விக்கு அழகு கசடற மொழிதல் — வெற்றி வேர்க்கை

 

23.சொற்சோர்வுபடேல் – ஆத்திச் சூடி

சொல்ல வேண்டியதை மறக்காமல் சுவைபடச் சொல்லுக

 

24.மிகைபடச் சொல்லேல் — ஆத்திச் சூடி

அதிகமாகப் பேசாதே

 

25.பிழைபடச் சொல்லேல் – ஆத்திச் சூடி

 

26.மொழிவதறமொழி — ஆத்திச் சூடி

பேசும் பொருளை சந்தேகம் வராதபடி விளக்குக

 

27.சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மான்பினிது – இனியவை நாற்பது

 

28.பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்

மெய் போலும்மே மெய் போலும்மே – வெற்றி வேர்க்கை

பொய் சொல்பவன் தேன் ஒழுகப் பேசுகையில் அது உண்மை போலத் தோன்றும்

  1. மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையினால்

பொய் போலும்மே பொய் போலும்மே – வெற்றி வேர்க்கை

பேசத்தெரியாதவன் உண்மை பேசினாலும் அது பொய் போலத் தோன்றிவிடும்.

vajayee

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயீ

30.சிறந்தமைந்த கேள்வியராயினும் ஆராய்ந்து

அறிந்துரைத்தல் ஆற்றல் இனிது – இனியவை நாற்பது

பல நூல்களை நன்கு படித்திருந்தாலும், ஆராய்ந்த பின்னர் ஒன்றைச் சொல்லுவதே இனியது (நல்லது)

திருவள்ளுவரின் திருக்குறளில்  சொல்வன்மை (65 ஆவது) என்னும் அதிகாரத்தை ஒப்பிட்டு மகிழ்க!

12 அத்தியாயங்களில் 2647 ஸ்லோகங்களில் மனு என்ன செப்பினார்?- பகுதி 1

IMG_4756

IMG_4716

Research Article No. 2055

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 9  August  2015

Time uploaded in London :– காலை  8-37

மனு என்ன சொன்னார்? மனு நீதி நூலை முழுக்க படிக்கா முடியாவிட்டாலும் அவர் எதைப் பற்றி எழுதினார் என்று அறிய பினவரும் பொருளடக்கம் உதவும் (நன்றி:பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்). அடுத்தமுறை காமெராவுடன் சென்று இதைவிட நல்ல காப்பி எடுக்கையில் இதை அழித்து, அதைப் போடுகிறேன்.

பகுதி இரண்டில் தொடர்ச்சி உள்ளது.

IMG_4717

IMG_4718

IMG_4719

IMG_4720

IMG_4721

IMG_4722

IMG_4723

IMG_4724

IMG_4725

IMG_4726

IMG_4727

IMG_4728

IMG_4729

IMG_4730

IMG_4731

தொடரும்………………………………