தமிழனுக்கு நேரம் காலம் தெரியுமா?

தமிழ் நாழிகை வட்டில்  இது போல  இருந்திருக்கும்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்.1855; தேதி 10 மே 2015

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

லண்டனில் பதிவு ஏற்றிய நேரம்- 14-53

Compiled by London swaminathan

Article No.1855; Dated 10 May 2015.

ஒரு சமுதாயம், நாகரீக வளர்ச்சியில் முன்னேறியதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? அவர்களுக்கு நேரம் ,காலம் பற்றிய அறிவும் உணர்வும் இருக்கிறதா? என்பதைக்கொண்டு கண்டுபிடிக்கலாம்.

முதலில் நேரத்தைக் காலத்தை அறிய ஒரு கருவி இருக்க வேண்டும். அதாவது கடிகாரமோ அல்லது அதற்கு இணையான மணி காட்டும் கருவியோ இருக்கவேண்டும்

இரண்டாவதாக, காலம் காட்டும் கருவி இருந்தாலும் நேரத்தின் அருமை பெருமையை உணர்ந்து அதை மதித்து நடக்க வேண்டும்.

பாரசீக நீர்க் கடிகாரம்

இந்த இரண்டும் தமிழர்களிடம் இருந்ததா? இரண்டும் இருந்தன. ஒன்றிரண்டு எடுத்துக் காட்டுகளைக் காண்போம். கிராமத்தார் பேச்சு வழக்கில் கூட ‘உச்சில’ (பகல் 12 மணி), ‘விடியல’ ( சூரிய உதயத்துக்கு முன்), ‘கருக்கல்ல’ (இரவு) என்று கொச்சைத் தமிழில் பேசிக்கொள்வார்கள்.

பிராமணச் சிறுவர்களுக்கு “காணாமல், கோணாமல், கண்டு கொடு” என்று கற்றுத் தருவார்கள். அதாவது ஒரு நாளைக்கு மூன்று முறை இறைவனைத் தொழுவதற்கு விதிக்கப்பட்டாலும் அதைச் சரியான நேரத்தில் செய்ய வேண்டும் அல்லவா? காலையில் சூரியனைக் ‘காணாமல்’, அதாவது சூரிய உதயத்துக்கு முன்னர், பகலில் நிழல் “கோணாமல்” —அதாவது உடலின் நிழல் கீழே விழாமல் இருக்கும் உச்சிப் பொழுதில், சந்தியா வந்தனம் செய்ய வேண்டும். மாலையில் ‘கண்டு’ —அதாவது சூரியன் மலை வாயில் விழுந்து மறைவதற்குள், சூரியனைக் “கண்டு” சந்தியாவந்தனம் செய்யவேண்டும் .

இவையெல்லாம் கடிகாரமின்றி சூரியனைக் கொண்டே நேரம் கணக்கிட உதவின. பெரிய அரண்மனைகளில் நாழிகைக் கணக்கர் என்போர் சரியாக நேரத்தைக் கணக்கிட்டு மணி ஓசை மூலம் அறிவித்தனர். இதற்காக அவர்களிடம் நாழிகை வட்டில் என்னும் கண்ணாடிக் குடுவை இருந்தது. நாழிகைக் கணக்கர் என்பார் பழைய பாட்டில்களைக் கூர்ந்து கவனித்து ஒரு மணிக்கு ஒரு முறை மணி அடிப்பர். இந்தக் கருவி பற்றி சங்க இலக்கியப் பாடல்கள் சொல்லும்.

how_did_the_ancient_chinese

சீன சூரிய ஒளி கடிகாரம்

நிழல் மூலம் நேரம் அறிய ஒரு பாடலையும் கற்பித்தனர். கருவிகளே இல்லாமல் மணியை அறிய இது உதவியது.

“காட்டுத் துரும்பெடுத்துக்

கண்டம் பதினாறாக்கி

நீடிக் கடந்தது போக

நின்றது நாழிகை”

ஒரு நீளமான வைக்கோல் அல்லது கயிறு அல்லது ஓலையை எடுத்துக் கொண்டு அதில் 16 விரல் அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். மீதிப் பகுதியை வெட்டி எறிந்து விட்டு 16 விரல்கடை துரும்பை (கயிறு/ஓலை/வைக்கோல்) இரு பாகமாக்கி மடித்து, வெய்யிலில் ஒரு பகுதியின் நிழல் ஏற்படுமாறு உயர்த்திப் பிடிக்கவேண்டும். நிற்கும் பாகத்தின் நிழல் கீழேயுள்ள பகுதியின் நுனியோடு பொருந்தும் வகையில் நிறுத்த வேண்டும். இதற்கு தேவையான அளவைவிட மிச்சப் பகுதி உங்கள் கையில் இருக்கும். அது எத்தனை விரல் அளவு இருக்கிறது என்பதை அளந்து, அத்தனை நாழிகை நேரம் என்று சொல்லலாம்.

அதாவது காலையில் இப்படி எடுத்தால் சூரியன் உதித்து இத்தனை நாழிகை ஆயிற்று எனலாம். மாலையில் பயன்படுத்தினால், சூரியன் மறைய இன்னும் இத்தனை நாழிகை என்று சொல்ல வேண்டும். ஒரு நாழிகை என்பது 24 நிமிடம். ஒரு நாளைக்கு 60 நாழிகைகள். தமிழ் நாட்டில் வசிப்போருக்கு பொதுவாக சூரிய உதயம்  காலை 6-30 மணி.

எ.கா.மாலையில் நின்ற பாகத்தின் அளவு ஏழரை விரல் அளவு.அப்படியானால் சூரியன் மறைய இன்னும் ஏழரை நாழிகை (7.5×24=180 நிமிடம்= 3 மணி நேரம்)

இன்னொரு முறை

சூரியனுக்கு முதுகைக் கட்டி நிற்க.தலையின் உச்சி நிழல் எங்கே விழுகிறதோ அங்கே ஒரு கோடு கிழித்தோ, ஒரு கல்லை வைத்தோ அடையாளம் செய்க. உங்கள் கால்கலைப் பய்ன்படுத்தி எத்தனை அடி (காலடி) என்று அளக்க. அந்த எண்ணுடன் 11ஐக் கூட்டுக. அனத எண்ணை 210ல் வகுக்கவும். இதில் வரும் ஈவு எண் (காலை நேரமானால்) உதயத்துக்குப் பின் உள்ள நாழிகை, அல்லது அஸ்தமனத்துக்கு முன் உள்ள நாழிகை (மாலை நேரமானால்).

எ.கா. நிழல் அளவு 31; 31+11+42

210/42=5; ஐந்து நாழிகை (5×24=120 நிமிடம்=2 மணி நேரம்)

எகிப்திய தண்ணீர்க் கடிகாரம்

இரவு நேரம்

இரவு நேரத்தில் சந்திரன் அல்லது நட்சத்திரங்களைக் கொண்டு நேரம் அறியலாம். ஆனால் இதற்கு நமக்கு முக்கிய நட்சத்திரங்கள் பற்றிய அறிவு வேண்டும். நிலவு, நட்சத்திரங்கள் ஆகியன ஒவ்வொரு நாளும் உதயமாகும் நேரம் குறிப்பிட்ட இடைவெளியில் தள்ளிக் கொண்டே போகும். இதைவைத்து நேரம் அறியலாம். இது பற்றி தனியே எழுதுகிறேன்.

நாழிகை வட்டில் (மதுரைக் காஞ்சி, வரி 671)

 

இது நாழிகை அளவைத் தெரிவிக்கும் கருவி. இது மெல்லிய தகட்டால் கிண்ணம் போல குழிந்து இருக்கும். அதில் ஊசி முனைத் துவாரம் இருக்கும். நீரில் மிதக்கவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உள்ளே வரும். அது நிறைந்தவுடன் மூழ்கும். அதற்கு ஆகும் நேரம் ஒரு நாழிகை (24 நிமிடம்).

மேலை நாடுகளில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட கண்ணாடிக் குடுவைகள் (Hour Glass) ஒன்றில் மணல் இருக்கும் அந்த மணல் கீழேயுள்ள குடுவையில் சேர்ந்தால் அரை மணி அல்லது ஒரு மணி என்று கணக்கிடுவர். உடனே அதைத் தலை கீழாகத் திருப்பி வைப்பர்.

சீன தண்ணீர்க் கடிகாரம்

-சுபம்-

நான் பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை – கம்பன்

பணிவு

Written by London swaminathan

Post No.1851; Date: 7 May 2015

Uploaded at London time: 19-51

புலவர்கள் பணிவும் அடக்கமும்!!

வாய் ஆறாக வயிறு களனாக உணரும் அறுசுவைகளோ சிறிது நேரமே நிலைத்து நிற்கும். செவி ஆறாகச் சிந்தை களனாக உணரத் தக்க கவிச் சுவையோ தெவிட்டாத தெள்ளமுதம் ஆகும்.

வால்மீகி முனிவர் வழிப்பறிக் கொள்ளைக்காரனாக இருந்தவர். பின்னர் முனிவர் ஆனவர். காட்டில் வசித்த அவர் ஒருநாள், ஒரு வேடனைக் கண்டார். ஒரு ஆண் பறவையும் பெண் பறவையும் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்த நேரத்தில் ஆண் பறவையை வில்லால் அடித்துக் கொன்றான் வேடன். பெண் பறவையோ சோகத்துடன் தனது கணவனை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. உடனே வால்மீகி, அவனைச் சபித்தார். அந்த சாபம் பாடல் வடிவில் வெடித்தது. அட! இது என்ன ஆச்சர்யம்! நான் சபித்த சாபம் “அனுஷ்டுப் சந்தஸ்” என்ற யாப்பில் ஒரு பாடலாக வந்ததே என்று வியந்தார். அதாவது, “சோகத்திலிருந்து ஸ்லோகம்” பிறந்தது.

அந்த நேரத்தில் பிரம்மதேவன் அவர் முன்னிலையில் தோன்றி சகல குண சம்பன்னனான, சத்ய பராக்ரமனான இராமபிரானின் தெய்வீகக் கதையைப் பாடச் சொன்னார். அப்படிப் பிறந்ததே ராமாயணம்.

இப்பேற்பட்ட வால்மீகியின் அற்புதமான ராமயணத்தைப் பாடவே தான் தமிழில் ராமாயணத்தை இயற்ற முயன்றதாக கவிச் சக்ரவர்த்தி கம்பன் கூறுகிறான்:

“வையம் என்னை இகழவும் மாசு எனக்கு

எய்தவும் இது இயம்புவது யாது எனின்

பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே”

இதற்கு முன் தனது செயலானது, ஒரு பெரிய பாற்கடலை பூனை நக்கி, நக்கி குடிக்க முயற்சிப்பது போலத்தான் தன் முயற்சியும் என்று அவை அடக்கத்துடன் கூறுகிறார்:

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!

பூசை=பூனை, காசு இல் கொற்றம்= குற்றமற்ற வெற்றியை உடைய

கவிதை என்பது என்ன?

உள்ளத்திலிருந்து பீறிட்டெழும் உணர்ச்சியே கவிதை. இந்த உணர்ச்சி இரக்கத்தின் காரணமாகவோ, அன்பின் காரணமாகவோ , அழகை ரசிப்பதன் காரணமாகவோ, தார்மீக கோபத்தின் காரணமாகவோ எழக்கூடும்.

காளிதாசன் எழுதிய மாளவிகா அக்னி மித்ரம் என்ற நாடகத்தில் சொல்லுகிறார்:

பழையதெல்லாம் நல்லது; புதியது எல்லாம் பயனற்றது என்று ஒதுக்கி விடாதீர்கள். அறிவுள்ள விமர்சகர்கள் தக்க முறையில் ஆராய்ந்து முடிவு எடுப்பர். மூடர்களோவெனில் மற்றவர் முடிவைச் சார்ந்து நிற்பர் என்கிறார்.

ரகுவம்ச காவியத்துவக்கத்தில் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படது போல சூர்ய வம்சப் பேரரசர்கள் பற்றித் தான் எழுத முயற்சிப்பதாகவும், இது ஒரு பெரிய சமுத்திரத்தை சிறிய படகின் மூலம் கடப்பதற்குச் சமம் என்றும் சொல்லுவார்.

ஆயினும் முன்னோர்கள் (வால்மீகி போன்ற ஆதி கவிகள்) ஏற்கனவே துளைத்த வைரத்தில் நூலை நுழைப்பது தனக்கு சிரமமான பணியல்ல என்றும் பணிவோடு பேசுகிறார்.

ஜஹான் ந பஹுஞ்சே ரவி, வஹாம் பஹுஞ்சே கவி

இந்தியில் ஒரு பழமொழி உண்டு:

ஜஹான் ந பஹுஞ்சே ரவி, வஹாம் பஹுஞ்சே கவி—என்று. சூரியன் (ரவி) பூக முடியாத இடத்திலும் கவி(ஞன்) புகுந்து விடுவான் என்பது இதன் பொருள். இதற்கு உதாரணமானவர்கள்: வால்மீகி, காளிதாசன், கம்பன், இளங்கோ, பாரதி முதலியவர்கள் ஆவர்.

பெரிய கலைக் களஞ்சியத்தை – ப்ருஹத் ஜாதகம் – ப்ருஹத் சம்ஹிதா முதலிய நூல்களை எழுதிய வராஹமிகிரர்,

சோதிட சாத்திரம் என்னும் பாற்கடலை, எனது புத்தி என்னும் மந்தர மலையால் கடைந்து, உலகிற்கு சந்திரன் போல ஒளியூட்டக்கூடிய சாத்திரத்தைக் கொடுக்கிறேன். முன்னோர் சொன்ன எல்லாவற்றையும் சுருக்கித் தந்துள்ளேன். அவற்றுடன் எனது நூலை ஒப்பிட்டு, தள்ளுவன தள்ளி கொள்ளுவன கொள்ளுங்கள் என்று அடக்கமாக வாசிக்கிறார்.

கவிஞர்கள் மாபெரும் அறிவாளிகள்; அதே நேரத்தில் மிக மிகப் பணிவுடையோர்.

கவிஞர்கள் இறக்கலாம்; கவிதைகள் இறக்காது; அவை அமரத்துவம் வாய்ந்தவை!

இலக்கியம் பற்றி 31 அற்புதப் பொன் மொழிகள்!

சுவாமியின் பொன்மொழி காலண்டர் – மன்மத வருடம்- வைகாசி (மே 2015)

இந்த பிளாக்—கில் இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆயிரத்துக்கும் மேலான தமிழ், சம்ஸ்கிருத பொன் மொழிகள் வெளியிடப் பட்டுள்ளன! படித்துப் பயன் பெறுக!!

Compiled by London Swaminathan

Article No.1835;  Dated 29 ஏப்ரல் 2015.

Uploaded at London time 8-38 am

 

முக்கிய நாட்கள்/ விழாக்கள்:– மே 1 தொழிலாளர் தினம்; மே 5- அன்னமாசார்ய ஜயந்தி, மே 13- தத்தாத்ரேய & ஹனுமன் ஜயந்தி,

மே 4 & 25 பிரிட்டனில் விடுமுறை

 

ஏகாதசி  : 14 & 29; அமாவாசை- 17; சித்திரா பவுர்ணமி- 3.

முகூர்த்த நாட்கள்:– 1, 6, 8, 10, 14, 15, 20, 22, 29

 

 

 

மே 1 வெள்ளிக்கிழமை

அர்த்தமாத்ரா லாகவேனாபி புத்ரோத்சவம் மன்யந்தே வையாகரணா: -சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

அரை மாத்திரை (எழுத்து/ஒலி) சேமிக்க முடிந்தாலும், இலக்கண வித்தகர்கள்,  ஒரு பிள்ளையைப் பெற்ற சந்தோஷத்தை அடைவர்.

 

 

மே 2 சனிக்கிழமை

 

உபமா காளிதாசஸ்ய பாரவேர் அர்த்தகௌரவம்

தண்டின: பத லாலித்யம் மாகே சந்தி த்ரயோ குணா:

-சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

உவமைக்குக் காளிதாசன், பொருளுள்ள கவிக்கு பாரவி, சொல் நயத்துக்கு தண்டி, மாகனோ இம்மூன்றும் உடைத்தவன்.

 

மே 3 ஞாயிற்றுக் கிழமை

உதிதே நைஷதே காவ்யே க்வ மாக: க்வ ச பாரவி:

நைஷத காவியம் உண்டான பின்னர், மாகன் எங்கே? பாரவி எங்கே?

 

 

மே 4 திங்கட் கிழமை

ஏகோ ரஸ: கருணா ஏவ நிமித்த பேதாத்

உத்தரராம சரிதம், பவபூதி

ரசம் என்பது கருணை ரசம் ஒன்றே: ஏனையவை அதிலிருந்து சில காரணத்துக்காகப் பிரிந்தவையே

 

 

மே 5 செவ்வாய்க் கிழமை

 

கரோதி ராகம் ஹ்ருதி கௌதுகாதிகம்

-பாணபட்டரின் காதம்பரி

மனதில் மகிழ்ச்சி உண்டானால் கதைகள் பிறக்கும்

 

மே 6 புதன் கிழமை

கலாரத்னம் கானம்

கலைகளில் சிறந்தது இசையே

மே 7 வியாழக் கிழமை

கவிதாயா: பரிபாகான் அனுபவ ரஸிகோ

விஜானாதி

கவிதையின் நயத்தை, அனுபவம் உள்ள ரசிகர்களே பூரணமாக அனுபவிப்பர்

 

மே 8 வெள்ளிக்கிழமை

கஸ்ய ந ஜனயதி ஹர்ஷம் சத் காவ்யம் மதுர வசனம் ச – காதா சப்த சதி, ஹாலன்

நல்ல காவியமும் இனிமையான சொற்களும் யாரிடத்தில்தான் மகிழ்ச்சியை உண்டாக்காது?

 

மே 9 சனிக்கிழமை

கா வித்யா கவிதாம் வினா

கவிதை இல்லாத கல்வி எதற்கு?

 

 

மே 10 ஞாயிற்றுக் கிழமை

காவ்யம் சுதா ரசஞானம் காமினாம் காமினீ சுதா

ரசனை உடையவர்களுக்கு காவியம் அமிர்தமயமானது; காம உணர்வுடையோருக்குப் பெண்களைப் போல

 

 22TH_MANGO_2349151f.jpg (636×401)

மே 11 திங்கட் கிழமை

காவ்ய சம்பந்தினீ கீர்த்தி: ஸ்தாயினீ நிரபாயினீ

இலக்கியத்தால் வரும் புகழ், அழியாத புகழாகும்

 

 

மே 12 செவ்வாய்க் கிழமை

காவ்யஸ்யாத்மா த்வனி:  – த்வன்யாலோக:

ஒரு காவியத்தின் ஆத்மா, அதிலுள்ள த்வனியேயாம் (இறைச்சி பொருள்)

 

 

மே 13 புதன் கிழமை

காவ்யேஷு நாடகம் ரம்யம்

காவியங்களில் நாடகம் இதமானது

 

மே 14 வியாழக் கிழமை

கத்யம் கவீனாம் நிகஷம் வர்தந்தி

கவிதை என்பது கவிஞர்களுக்கு இயற்கையாக வருவது (கவிஞர்களுடன் பிறந்தது கவிதை)

 

 

மே 15 வெள்ளிக்கிழமை

ஜயந்தி தே சுக்ருதினோ ரஸசித்தா: கவீஸ்வரா:

நாஸ்தியேஷாம் யச: காயே ஜராமரணஜம் பயம் –பர்த்ருஹரி

கவியரசர்கள், ரசத்தின் (நவரஸம்) கரை கண்டவர்கள். அவர்கள் புண்ணியம் செய்தவர்களாகத் திகழ்கின்றனர்.அவர்களுடைய புகழ் உடம்புக்கு மரண பயமோ, முதுமையோ இல்லை (பூத உடல் மறைந்தாலும் புகழ் உடம்பு நிலைத்து நிற்கும்)

 

மே 16 சனிக்கிழமை

தர்ம ஜிக்ஞாசமானானாம் ப்ரமாணம் பரமம் ஸ்ருதி: — மஹாபாரதம்

தர்ம நாட்டம் உடையோருக்கு பெரிய ப்ரமாணம் (சான்று) வேதம் ஆகும்.

மே 17 ஞாயிற்றுக் கிழமை

நரத்வம் துர்லபம் லோகே வித்யா தத்ர சதுர்லபா

கவிதவம் துர்லபம் தத்ர சக்திஸ்தத்ர சதுர்லபா – அக்னி புராணம்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது; அதிலும் கல்வி கற்றவராய் விளங்குவது அரிது;  அதிலும் கவிதை புனையும் ஆற்றல் அரிது; அதிலும் செல்வாக்குடைய வராய் (பெயர்பெற்றவராய்) விளங்குவது அரிது.

 

மே 18 திங்கட் கிழமை

நாட்யம் பின்னருசேர் ஜனஸ்ய பஹுதாப்யேகம் சமாராதனம் — மாளவிகாக்னிமித்ரம்

வெவ்வேறு ருசியுடையவர்களும் ஒருங்கே (அமர்ந்து) ரசிக்கவல்லது நாட்டியம்

 

மே 19 செவ்வாய்க் கிழமை

நிரங்குசா: கவய:

கவிஞர்களைக் கட்டுப்படுத்துவது எதுவும் இல்லை

(சிட்டுக் குருவிக்கு என்ன கட்டுப்பாடு?)

 

மே 20 புதன் கிழமை

புராணமித்யேவ ந சாது ஸர்வம் ந சாபி காவ்யம் நவமித்யவத்யம் — மாளவிகாக்னிமித்ரம்

பழமையானது என்பதால் மட்டும் எல்லாம் சிறந்தன என்பதும் இல்லை; புதியது என்பதால் சிறப்பில்லாதவை என்பதும் இல்லை.

மே 21 வியாழக் கிழமை

பாரதம் பஞ்சமோ வேத:

மஹாபாரதம் என்பது ஐந்தாவது வேதம் (அதாவது வேதத்துக்குச் சமமானது)

 

மே 22 வெள்ளிக்கிழமை

பாரதாம்ருதசர்வஸ்வம் கீதா

மஹாபாரதத்தைப் பிழிந்தெடுத்த அம்ருதம் பகவத் கீதை

மே 23 சனிக்கிழமை

யதிஹாஸ்தி ததன்யத்ர யன்னே ஹாஸ்தி ந தத் க்வசித்  – மஹாபாரதம்

உலகில் உள்ள எல்லாம் மஹாபாரதத்தில் உளது; இதில் இல்லாவிட்டால் உலகில் எங்கும் இல்லை.

 

மே 24 ஞாயிற்றுக் கிழமை

யஸ்ய வாக்யம் ச ருஷி:  -ருக் வேத சர்வாணுக்ரமணி

மந்திர ஸ்வரூப வாக்கியம் உடையவர் ரிஷி

 

மே 25 திங்கட் கிழமை

யஸ்ய ஸம்புடிகா நாஸ்தி குதஸ்தஸ்ய சுபாஷிதம் – பஞ்ச தந்திரம்

நெட்டுரு செய்ய முடியாதோருக்கு பொன்மொழிகள் என்ன பயன் தரும்?

 

மே 26 செவ்வாய்க் கிழமை

ரமணீயார்த்த ப்ரதிபாதக: சப்த: காவ்யம் – ரசகங்காதர:

அழகிய பொருள் உடைய  சொற்களை எடுத்துக் காட்டுவது காவியம் ஆகும் (  (சொல் அழகைப் பிரதிபலிக்கும் கண்ணாடி காவியம்)

 

மே 27 புதன் கிழமை

ரோசனார்த்தா பலச்ருதி: — பாகவதம்

படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிடவே பலஸ்ருதி சொல்லப்படுகிறது.

 

 

மே 28 வியாழக் கிழமை

வக்தார: சுலபா லோகே ஸ்ரோதாரஸ்து சுதுர்லபா:

சொல்லுதல் யார்க்கும் எளிது; கேட்பதே கடினம் (சொல்லிய சொல்லைக் கேட்டு அதற்குத்தக வாழ்க்கை அமைப்பது அரிது, அரிது).

 

 

மே 29 வெள்ளிக்கிழமை

வேதோகிலோ தர்மமூலம் – மனு

எல்லா தர்மங்களுக்கும் மூலம் வேதமே.

 

மே 30 சனிக்கிழமை

வேதோஹி விஞ்ஞானம்

வேதம் என்பது விஞ்ஞானம்

 

மே 31 ஞாயிற்றுக் கிழமை

ஸ்ரீமத்ராமாயணீ கங்கா புனாதி புவனத்ரயம்

ஸ்ரீமத் ராமாயணம் என்னும் கங்கா ப்ரவாகம் மூன்று  உலகங்களையும் புனிதமாக்கும்.

Pictures used here are from my face book friends; thanks.

கவிதைப் புதிர்: கணவனைப் பிரிந்த சீதை எப்படி மகிழ்ச்சியுடன் இருந்தாள்?

கட்டுரை எண்: 1832 தேதி: 28 ஏப்ரல் 2015

எழுதியவர் சந்தானம் நாகராஜன்

லண்டனில் பதிவு ஏற்றப்பட்ட நேரம்: காலை 6-24

 

சம்ஸ்கிருதச் செல்வம்பாகம் 3

4. கணவனைப் பிரிந்த சீதை எப்படி மகிழ்ச்சியுடன் இருந்தாள்?

.நாகராஜன்

 

கவிதைப் புதிர்களின் தொடர் வரிசையில் இன்னும் ஒரு பஹிர் ஆலாப வகை புதிர்:-

 

அநுகூல விதாயிதைவதோ                                                           

விஜயீ ஸ்யான் நநு கீத்ருஷோ ந்ருப:                                     

விரஹின்யபி ஜானகீ வனே                                                  

நிவஸந்தி முதமாதவௌ குத: I

 

இதற்கு விடை கண்டுபிடிப்பது கஷ்டம் தான்!

விதி ஒரு அரசனுக்கு அநுகூலமாக இருக்கும் போது அவன் எப்படி இருப்பான்?

விடை:- குசலவார்த்திதா: (மிகுந்த உற்சாகத்துடன் இருப்பான்)

தன் கணவனை விட்டுப் பிரிந்து காட்டில் சீதை இருந்த போதும் கூட அவள் எப்படி மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தாள்?

விடை:- குச லவ வர்த்திதா (குச, லவ ஆகிய இரு மகன்களும் உடன் இருந்ததால் சீதை சந்தோஷமாக இருந்தாள்.)

வியோகினி சந்தத்தில் அமைந்த செய்யுள் இது.

குசலவார்த்திதா என்ற ஒரே சொற்றொடரே இரு கேள்விகளுக்கும் விடையை அளிப்பது கண்டு  மகிழலாம்!

இன்னும் ஒரு புதிர்:-

அன்யஸ்த்ரீஸ்ப்ருஹ்ருயாலவோ ஜகதி கே பத்ம்யாமகம்யா கா

கோ தாது தஸ்ஷனே ஸமஸ்தமனுஜை: ப்ராவ்யர்தேஹநிர்ஷம் I

வ்ருஷ்ட்வைகாம் யவனேஷ்வரோ நிஜபுரை பத்யானனாம் காமினீம்

மித்ரம் ப்ராஹ கிமாதரேன சஹஸா யாராநதீதம்ஸபா II

அடுத்தவரின் வீட்டுப் பெண்களை யார் விரும்புகின்றனர்? (விடை ஜாராஸ் அதாவது கள்ளக் காதலர்கள்)

கால்களால் கடக்கப்படாதது எது? (விடை: நதி)

தஸ்னா என்ற (சம்ஸ்கிருத) வார்த்தைக்கு மூலம் எது?

விடை :- தம்ஸ்கடிப்பது என பொருள்

இரவும் பகலும் எல்லா மனிதரும் எதை அடைய பிரார்த்தனை புரிகின்றனர்?

விடை: மா: – லக்ஷ்மிஅதாவது பணம்

அழகிய தாமரை போன்ற முகமுடைய அழகியைப் பார்த்த பின்னர் யவன அரசன் ஆவலுடன் தன் நண்பனிடம் கூறியது என்ன?

விடை:- யாரா திதம்ஸா மா (இதன் பொருள்இப்படிப்பட்ட அழகிய பெண் இதற்கு முன் ஒரு போதும் பார்க்கப்பட்டதில்லை!)

யாரா ஜாராகாதலர்

நதிஆறு

தம்ஸ்தஸ்னா என்ற வார்த்தையின் மூலம்

மாபணம்

இந்த சொற்களின் சேர்க்கை பல கேள்விகளுக்கு விடை அளித்து விட்டது.

செய்யுளைச் சொல்லி விட்டு புதிரை அவிழுங்கள் என்றால் விடையைக் கண்டு பிடிக்க முடியுமா என்ன?

சார்தூலவிக்ரிதிதா என்ற சந்தத்தில் அமைந்த செய்யுள் இது.

பழைய கால ராஜ சபைகளில் ராஜாவின் முன்பு, இது போல பண்டிதர் ஒருவர் புதிரைப் போட மற்றவர்கள் பாடு திண்டாட்டமாக இருந்திருக்கும், இல்லையா!

***************

வேதத்தில் தமிழ் உணவுகள்: வடை, பாயசம், பிட்டு!!

Written by London swaminathan

Research Article No: 1830

Date: 27 April 2015; Uploaded in London at 10-13 am

ஆராய்ச்சிக் கட்டுரை எண் 1830

கட்டுரையாளர்; லண்டன் சுவாமிநாதன்

தேதி: 27 ஏப்ரல், 2015  லண்டன் நேரம்:காலை 10-13

(This is already uploaded in English)

சங்கத் தமிழ் இலக்கியத்தில் இட்லி, வடை, பொங்கல், தோசை இல்லாதது நமக்குக் கொஞ்சம் வருத்தம்தான். ஆயினும் ஊன் (மாமிசம்) பற்றியும், மது பற்றியும் வேறு பல சாப்பாடு வகைகள் பற்றியும் உள்ளன. சங்கத் தமிழ் இலக்கியங்களில் பிராமணர் வீட்டுக்குப் போனால் என்ன கிடைக்கும், மன்னர்கள் வீட்டுக்குப் போனால் என்ன கிடைக்கும் என்பனவற்றைத் தெள்ளத் தெளிவாகப் பாடி வைத்துள்ளனர். பிராமணர் தெருவில் கோழியோ நாயோ இரா என்றும் துல்லியமாகப் பாடி வைத்துள்ளனர். அவர்கள் முழுக்க முழுக்க ‘வெஜிட்டேரியன்’ என்பதை இவ்வளவு அழகாகச் சொல்லுகின்றனர். ஆயினும் பாரி முதலிய வள்ளல் பிறருக்கு அளித்த “நான் வெஜ்” – வகைகளையும் புகழத் தவறவில்லை. அதுவும் புலனழுக்கற்ற அந்தணாளன் என்று பாடப்பெற்ற கபிலர் என்னும் பிராமனப் புலவர் ஊன் ஊனவைப் பாராட்டினார்!! ஏனெனில் தமிழ் மன்னர்களோ பாணர், கூத்தர், விறலியரோ பிரியாணி இல்லாமல் வாழ முடியவில்லை. ஏராளமான பாடல்களில் பிரியாணிக்கு புகழ்மாலை!

மேலை நாட்டில் கொஞ்சம் வெய்யில் கூடுதலானால் உடனே தோட்டத்தில் பாய் விரித்து, ‘சேர்’ போட்டு,  நண்பர்களைக் கூட்டி, ‘பார்பிக்யூ; (கம்பியில் கோர்த்துச் சுட்ட மாமிச வகையறா, தொகையறாக்கள்) ‘பார்ட்டி கொடுப்பார்கள். இது கூட சங்கத் தமிழ் பாடலில் உள்ளது. இட்லி, வடை, சாம்பார் இல்லதது பெருங்குறையே! ஆனால் புளிக் குழம்பு உள்ளது. நிற்க! சொல்லவந்ததோ வேறு விஷயம்.

வேதத்தில் பிட்டு,அப்பம் ஆகியன உள்ளது. மதுரையில் பிட்டு விற்ற கிழவிக்கு சிவன் எப்படி உதவினார் என்பதையும், அவர் மீது பாண்டியன் போட்ட அடி, அங்கிருந்த எல்லார் முதுகிலும் விழுந்தது என்பதையும் மாணிக்கவாசகர் வரலாற்றின் மூலம் அறிவோம். இந்தப் பிட்டு என்ற தமிழ் சொல் வேதத்தில் உள்ளது.

அபூப என்று நெய்யப்பம், ஆப்பம் ஆகியன குறிப்பிடப் பட்டுள்ளன. இன்று வரை மலையாள தேசத்திலும், பிராமணர் வீட்டுக் கல்யாண சீர் வரிசையிலும் இந்த அப்பத்தைக் காணலாம். தமிழர்கள் விரும்பிச் சாப்பிடும் உளுந்து வடை, பருப்பு வடைகளை பிராமணர்கள் இறைவனுக்குப் படைக்கையில் (நைவேத்யம் செய்கையில்) – மாஷாபூபம் முதலிய சொற்களைப் பயன்படுத்துவதால் இன்றும் இது சம்ஸ்கிருத, தமிழ் சொற்களில் அப்படியே பயிலப்படுகிறது என்பது தெளிவு. இது தவிர நாம் இடியப்பம், குழியப்பம் என்று காலப் போக்கில் பல அப்பங்களைக் கண்டு பிடித்து அறுசுவை உணவுகளில் சேர்த்துவிட்டோம்.

சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் சொன்னது போல வேதம் கி.மு 4000- க்கு முந்தையது என்று கொண்டால் 6000 ஆண்டுகளாக சில சொற்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இருப்பதை எண்ணி எண்ணி இறும்பூது எய்தலாம்.

அந்தக் காலத்தில் ரிஷி முனிவர்கள் வீட்டுக்கு வந்தாலோ, அல்லது நாம் அவர்களுடைய பர்ணசாலைகளுக்கு (இலை/ஓலை வீடு) போனாலோ அங்கே “மது பர்க்கம்” கொடுக்கப்படும். இப்போது நாம் யாரவது வீட்டுக்கு வந்தால் காப்பி, தேநீர் அல்லது பழரசம் (ஜூஸ்) கொடுப்பது போல. மதுபர்கத்தில் தயிரும், தேனும் இருக்கும். இப்போது ஸ்ரீகண்ட் என்ற இனிப்பு செய்வது போல அந்தக் காலத்திலும் இதைச் செய்திருக்கிறார்கள் இப்போதும் குஜராத் முதலிய இடங்களில் ஸ்ரீகண்ட் கிடைக்கிறது.

இப்போது நாம் சாதத்துடன் பலவகைப் பொருட்களைக் கலந்து எலுமிச்சம்பழச் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், எள்ளுஞ்சாதம், தேங்காய்ச் சாதம், பிரியாணி, பால் சோறு என்று செய்வது போல வேத காலத்தில் பலவகை ஓதனம் (சோறு அல்லது களி) செய்தது பற்றிய குறிப்புகளும் நிறைய இருக்கின்றன.

இப்போது கிராமப்புறங்களில் அம்மன் உற்சவங்களில் கூழ், கஞ்சி வார்த்துக் கொண்டாடுவது போல அந்தக் காலத்தில் கஞ்சி, கூழ் செய்த குறிப்புகளும் உண்டு. வேதத்தில் குறிப்பிடும் தானியங்களின் பட்டியல் நீண்ட பட்டியலாகும்.

பத்து வகை மீன்களும் குறிப்பிடப்படுகின்றன. நீர், மீன், மயில், முதலிய சொற்கள் வேதத்தில் இருப்பதைக் கொண்டு பலரும் ரிக் வேதத்தில் தமிழ் சொற்கள் இருப்பதாக எழுதி வந்தனர். ஆனால் நீர் என்ற சொல் கிரேக்க மொழியிலும் உள்ளது. ஆகையால் தமிழும் வடமொழியும் ஒரே மூலத்தில் இருந்து வந்த மொழிகள் என்ற கொள்கையே சரியென்று படுகிறது. அதனால்தான் இப்படி பல சொற்கள் இரண்டு மொழி இலக்கியங்களிலும் இருக்கின்றன. வ்ரீஹி என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து அரிசி (ரைஸ்) வந்தது அல்லது அரிசியிலிருந்து வ்ரீஹி வந்தது என்றும் சொல்லலாம். மூல மொழி ஒன்றே என்பதற்கு பிட்டு, அப்பம் என்பனவும் சான்றாகத் திகழ்கின்றன.

பசு, காளை மாடு, பால் (பயஸ், ஆயச,க்ஷீர, துக்த) ஆகியவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்தி மக்களை நாகரீகப் படுத்தியது வேத கால இந்துக்களே. பசுவுக்கும் பாலுக்கும் வேதங்கள் கொடுக்கும் மரியாதையை உலகில் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் காணமுடியாது. வேதங்களில் பசு-கன்று இடையிலுள்ள அன்பை (வாத்சல்யம்) உவமையாகவும் பல இடங்களில் காணமுடியும். பசுவை ஒரு தாய் நிலைக்கு (கோ மாதா) என்பதை எந்த நாட்டு இலக்கியத்திலும் கான முடியாது. இன்று பால் உணவு இல்லாத இடமே இல்லை.

பால் (பயஸ், பாயச) பொருட்கள் பற்றி தனியே ஒரு கட்டுரை வரைவேன்.

மேற்கோள்கள்:

Apuupa (RV 3-52-7; RV 10-45-9), Satapatha Brahmana (2-2-3-12; 4-2-5-19)

வேதத்தில் சிகை அலங்காரம்

9bfdf-kundal2bazaku

Written by London swaminathan

Research Article No: 1826

Date: 24 April 2015; Uploaded in London at 13-25

ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்துக்களின் கலைக் களஞ்சியம் வேதங்கள் ஆகும். அவைகள் சமயம் சம்பந்தமான புத்தகங்கள். இருந்தபோதிலும் அவற்றில் பல வகை பொது விஷயங்களும் வருகின்றன. அதில் ஒரு சுவையான விஷயம் சிகை அலங்காரம்.

2000 ஆண்டுப் பழமையுடைய தமிழ் இலக்கியத்தில் ஐம்பால் கூந்தல் பற்றிய தகவல் பல இடங்களில் வருகின்றது. ஐம்பால் கூந்தல் என்பது

குழல், அளகம், கொண்டை, பனிச்சை துஞ்சை என்ற கூந்தலின் ஐந்து பகுப்புகள் என்று பதிற்றுப்பத்து (18-4)உரை கூறும். இவ்வாறு 5 வகை என்பதை விட்டு 5 பிரிவுகளாகப் பின்னிக் கொண்டனர் என்றும் பொருள் கொள்ள ஐம்பால் திணை போன்ற சொற்கள் உதவும்.

தமிழ் இலக்கியத்துக்கு 1700 ஆண்டுகளுக்கு முன்னால் எழுந்த வேதத்தில் நாற்பால் கூந்தல் பற்றிய விஷயம் கிடைக்கிறது.

இராக் நாட்டில் மலைப் பகுதிகளில் வசிக்கும் யசீதி பழங்குடி மக்கள் தீயை வணங்குவது, மயிலைப் புனிதப் பறவையாக வணங்குவது ஆகியன எல்லாம் அவர்கள் பழங்காலத்தில் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் என்பதை காட்டுவதை முன்னர் இரண்டு கட்டுரைகளில் தந்தேன். அவர்களும் இப்படிப் பலவகையாக நாற்பால், ஐம்பால் எனப் பிரிப்பது ஒப்பிடற்பாலது.

09f7f-yazid-boys-plait-like-girls

அமிபால், நாற்பால்  கூந்தல்—-யசீ்தீ  இன மக்கள்

கூந்தலை, தலை முடியை வைத்து சிவ பெருமான், புலஸ்த்ய மகரிஷி ஆகியோருக்கு பெயர்களும் உண்டு. சிவனுக்கு அவருடைய கேசம் (ஜடை) உயர்த்திக் கட்டியதால் “கபர்தின்” என்று பெயர். இன்றும் சாது சந்யாசிகள் இப்படி ஜடாதாரிகளாக வலம் வருவதை நாம் காணலாம். புலஸ்த்ய என்பது நீண்ட நேரான முடியைக் குறிக்கும். (எ.கா. புலஸ்த்ய மகரிஷி)

“அபாச” என்ற சொல் பெண்கள் பின்னல் போட்டுக் கொண்டதைக் காட்டும்; ரிக் வேதத்தில் 4 பின்னல் (இரட்டைச் சடைப் பின்னல் போல 4 சடை) போட்ட பெண் பற்றிய பாடல் (RV 10-104-3) உள்ளது.

அதர்வண வேதம், வாஜசனேயி சம்ஹிதையில் கேசம் என்ற சொல் பயிலப்படுகிறது (AV 5-19-3, 6-136-3). கத்தி, கத்தரிக்கோல் (மயிர் குறைக் கருவி) ஆகியன தமிழ், வேத இலக்கியங்களில் இருக்கின்றன.

நீண்ட கூந்தல் என்பது பெண்மையின் இலக்கணம் என்று சதபத பிராமணம்(SB 5-1-2-14) கூறும். மஹாபாரதத்தில் தன்னை இழிவு படுத்திய துச்சாதனனின் ரத்தம் தன் கேசத்தில் படும்வரை தலையை முடிக்கமாட்டேன் என்று திரவுபதி செய்த சபதம் அனைவரும் அறிந்ததே. அதாவது கேசம் (தலை முடி) என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. தனது கணவரைத்தவிர, வேறு எந்த ஆடவரும் கேசத்தைத் தொடக் கூடாது என்றும், கணவர் வேற்று தேசம் (வணிக நிமித்தம்) சென்ற போது பெண்கள் சிகை அலங்காரம் செய்வதில்லை என்றும் தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் படிக்கிறோம். முஸ்லீம் பெண்களும் தங்கள் குடும்பத்தினர் தவிர வேறு யாரும் தலை முடியைக் காணக்கூடாது என்று மறைப்பதும் ஒப்பிட வேண்டிய விஷயம்.

7d176-kundal

சிற்பத்தில் கூந்தல்

சீமந்தம், வளைகாப்பு !

சீமந்த என்றால் தலையில் வகிடு எடுப்பது என்று பொருள். ஒரு கர்ப்பிணிக்கு நடக்கும் வளைகாப்பு, சீமந்த விழாவில் தலை வகிடை முள்ளம்பன்றி முள் கொண்டு பிரிப்பர். இந்த வழக்கம் காடக சம்ஹிதையில் (23-1) சொல்லப்படுகிறது. இது நல்ல சுகப் பிரசவத்துக்கும் ஆண் குழந்தை கிடைக்கவும் செய்யப்படுவதாக ஐதீகம். இது “அக்குபங்சர்” (ஊசி மருத்துவம்) என்பது என் சொந்தக் கருத்து. பீஷ்மர் அம்புப் படுக்கையில் 58 நாட்கள் படுத்து ஆரோக்கியமாக இருந்து, தான் நினைத்தபோது உயிர் துறந்ததும் அக்குபங்சர் விஷயமே என்று முன்னரே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

வேதத்தில் வரும் ‘ஸ்தூக’ ( RV 9-97-17; AV 7-74-2 )  -என்ற தலை முடி அலங்காரம் — தலையில் புத்தர் போல முடிச்சு போடுவதாகும். இதைத் தென் கிழக்காசிய நாடுகளின் பெண்களின் சிகை அலங்காரத்தில் இன்றும் காணலாம். சிகா, சிகண்ட என்பது உச்சுக் குடுமியைக் குறித்தன.

ஆண்களும் பலவகை சிகை வகைகள் வைத்ததை புலஸ்த்ய, கபர்தின் (ருத்ரம்/யஜூர் வேதம்), மருத்துகள், பூசன் ஆகியோர் தொடர்பான வேத மந்திரங்கள் மூலம் அறிகிறோம்.

வேத கால இந்துக்கள் நீண்ட கூந்தல், அடர்ந்த கூந்தல் வளர ஆசைப்பட்டதை சிகை வளர்க்கும் அதர்வண வேத ஆரோக்கியக் குறிப்புகளில் (6-21; 6-2; கௌசிக சூத்திரம் 8-15; 8—9) இருந்தும் அறிய முடிகிறது. இதற்காக அவர்கள் சீர்ச மரம் (vanquiena spinosa), கடுக்காய் (bellerica Terminalia) ஆகியவற்றைப் பயன் படுத்தினர்.

755a4-shiva_meditating_rishikesh

கபர்தீன் (சிவன்)

சுருங்கச் சொன்னால் வேத கால மக்கள் நாகரீகத்தில் முன்னேறியவர்கள், கூந்தல்-சிகை, அலங்காரத்தில் கவனம் செலுத்தும் அளவுக்கு ‘பாஷன்’ வளர்ச்சி கண்டிருந்தது. வெளிநாட்டு “அறிஞர்கள்”, வேத கால மக்களை நாடோடிகள் என்று வருணித்தது எவ்வளவு நகைப்புக்குரியது என்பது வேதங்களை நேரடியாகப் படிப்போருக்கு உள்ளங்கை நெல்லிக்கனி (உள்ளங்கை பூசனிக்காய் என!!) என விளங்கும்!!!

8db7c-sadhwi

கேசவர், த்ரோணர், கௌரவரை வைத்து ஒரு புதிர்!

Written by S NAGARAJAN

Research Article No: 1824

Date: 24 April 2015; Uploaded in London at 8-22 am

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்பாகம் 3

2. கேசவர், த்ரோணர், கௌரவரை வைத்து ஒரு புதிர்!

.நாகராஜன்

கம்பன் ஒரு மஹா கவி. அவனைப் போல் ஒரு கவி இனி பிறப்பானா என்பது சந்தேகமே. சரஸ்வதியின் அருள் இருந்தால் மட்டுமே அப்படி ஒரு மஹாகவி இனி தமிழ் நாட்டில் பிறக்கக் கூடும்.

 

 

 அபார கற்பனை மின்னல்களை ஆங்காங்கு பளிச்சிடச் செய்து கவிதை வானில் பறந்து கொண்டே இருப்பான் அவன்.

 

உதாரணம் இந்திரஜித்தின் மாளிகை காவலர்களும் புதிர்களும். இது என்ன? இந்திரஜித்தின் மாளிகைக் காவலர்களுக்கும் புதிர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று திகைப்பு ஏற்படுகிறதல்லவா! கம்பனால் மட்டுமே இப்படிப்பட்ட திகைப்புகளைத் தர முடியும்!

 

 

அபார வீரனான இந்திரஜித்தை வெல்ல யாராலும் முடியாது. அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அனைவரும் நடுநடுங்குவர். அப்படிப்பட்ட வீரனின் மாளிகையில் காவல் காப்போர் பெயருக்குத் தான் காவல் வீரர்கள்! அவர்கள் யாரைக் காவல் காப்பது? அவர்களுக்குப் பொழுதே போகவில்லையாம், என்ன செய்வது? ஆகவே அவர்கள் இரவு  முழுவதும் விழித்துத் தங்கள் பணியை ஆற்ற ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள்! அது தான் ஒருவர் புதிர்களைப் போட வேண்டியது, மற்றவர் அதை விடுவிக்க வேண்டியது. பழங்கதைகளைப் பேசிக் கொண்டே இருப்பது, இப்படி பொழுதைப் போக்கினார்களாம், அவர்கள்!

பாடலைப் பார்ப்போம்:-

 

 

ஏதி யேந்திய தடக்கையர்  பிறையெயி றிலங்க                            

மூதுரைப் பெருங்கதைகளும் பிதிர்களு மொழிவார்                        

ஓதி லாயிர மாயிர முறுவலி யரக்கர்                                          

காது வெஞ்சினக் களியினர் காவலைக் கடந்தான்

                    சுந்தர காண்டம்ஊர்தேடு படலம்பாடல் 138

 

இதன் பொருள் : சொல்லப் போனால், ஆயுதங்களை ஏந்திய அகன்ற கைகளைக் கொண்டவர்களும் பகைவரைக் கொல்ல வல்ல கோபமாகிய கள்ளை அருதியவரும் தம் பிறைகளை ஒத்த பற்கள் தெரியும்படி  பழமையாகச் சொல்லப்பட்டு வரும் பெரிய கதைகளையும் விடுகதைகளையும் தமக்குள் பேசிக் கொண்டிருப்பவருமான பல ஆயிரம் மிக்க வலிமை பெற்ற அரக்கர்கள் அமைந்த காவலை அனுமன் தாண்டி உள்ளே சென்றான்.

 

 

இதற்கு உரை எழுதிய உ.வே.சாமிநாதையர், மூதுரை – ‘பழமொழிகளும் ஆம். பிதிர்கள்வழக்க்கு அழிப்பாங்கதைகள் ; இவற்றை உறக்கம் வராதபடி உரைப்பர் என்பது பழைய உரைஎன்று விளக்குகிறார்.

இன்னொரு பிரபல உரையாசிரியரான வை.மு.கோபாலகிருஷ்ண மாச்சாரியார் பாடலின் மூன்றாம் அடியில் உள்ள முறுவலி அரக்கர்என்பதற்கு பதிலாக உணர்விலி அரக்கர் என்ற பாட பேதத்தைத் தருகிறார்.

அவரது விளக்கவுரை:-

 

 

மூதுரைமுதுமொழி; அதன் இலக்கணம் – :நுண்மையும் சுருக்கமும் ஒளி உடைமையும், மென்மையும் என்று இவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரும் , ஏது நுதலிய முது மொழியானஎன தொல்காப்பியத்தில் காண்க.

 

பெரும் கதை:- தேவாசுர யுத்தம், க்ஷீராப்தி மதநம், பூர்வீக ராக்ஷஸர் வரலாறு போல்வன.

 

பிதிர்ஒரு சமயத்தில், கம்பர் ஔவையாரை நோக்கி,                   

ஒரு காலடீ  நாலிலைப் பந்தலடீஎன்று சொல்லி, “இதன் பொருள் என்?” என்று வினாவியதும், “ஆரையடா சொன்னாயடாஎன்று விடை கூறியதும் போல்வன! (ஆரைக்கீரை முதலின் காம்புகள் நான்கு பிளவுபட்ட இலையை உடையனவாய் இருக்கும்.)

 

எதிர்ப்பார் இல்லாமையால் புதிர்களைச் சொல்லிக் காலம் போக்கினர் காவல் வீரர்கள் என்பது கம்பனின் மின்னல் கற்பனை!

இனி இப்படிப்பட்ட அரும் புதிர்கள் தமிழ் மொழியிலும் சம்ஸ்கிருத மொழியிலும் ஆயிரக் கணக்கில் உள்ளன. அவற்றைத் தொகுப்பவர் தான் இல்லை.

 

ஆக இப்படிப்பட்ட பழம் பெரும் வரலாற்றைக் கொண்டவை கவிதைப் புதிர்கள்! அதை எடுத்துக் காட்டவே மேலே உள்ள கம்பனின் பாடல் உதாரணமாகத் தரப்பட்டது!

 

மேலும் சில சம்ஸ்கிருத புதிர் கவிதைகளைக் காண்போம்.

இப்போது காண இருப்பது கூட ஸ்லோகம்என்னும் புதிர் கவிதை. இதை விடுவிப்பது சற்று சிரமமான காரியம்.

 

கேசவம் பதிதம் த்ருஷ்ட்வா த்ரோணோ ஹர்ஷசுபாகத: I                   

ருதந்தி கௌரவா: சர்வே ஹா கேசவ கதம் கத:      II

 

 

இதன் பொருள் : ஒரு சவம் (பிணம்) நீரில் விழுவதைப் பார்த்த கழுகு ஒன்று  மிக்க மகிழ்ச்சியை அடைந்ததுதனக்கு சரியான விருந்து தான் என்று! ஆனால் நரிகள் ஏமாற்றத்துடன் ஊளையிடுகின்றன – “, கேசவா, எப்படி அது இப்படிப் போய்விட்டது” –என்று!

 

இந்தப் பாடலில் கே+ சவம் = கேசவம் ஆகிறது. சவம் என்றால் பிணம்; கே என்றால் நீர். த்ரோண என்றால் கழுகு; கௌரவா என்றால் நரிகள்.

ஆனால் பாடலை முதலில் கேட்கும் போது கேசவன், த்ரோண, கௌரவா என்றவுடன் பாண்டவ, கௌரவர்களை நினைத்தும் துரோணரை மனதில் கொண்டும் புதிரை அவிழ்க்கத் தோன்றும்.

 

உண்மையான விடையைக் கேட்டவுடன் புன்முறுவல் தான் தோன்றும்!

இப்படி ஒரு வகைப் புதிரும் இது போல் உண்டு!

இது அமைந்துள்ள விருத்தம் ஆர்யா விருத்தம்.

இனி பஹிர் ஆலாப வகை புதிர் ஒன்று இது:-

 

கேசரத்ருமதலேஷு சம்ஸ்தித: கீத்ருஷோ பவதி மத்தகுஞ்சர: I

தத்தவத: சிவமபேக்ஷ்ய லக்ஷணைர் அர்ஜுன: சமிதி கீத்ருஷோ பவேத் II

 

இது அமைந்துள்ள விருத்தம் –  ரதோத்தாத விருத்தம்

 

 

இதன் பொருள் :-

மத்த யானை கேசர மரத்தின் அருகே இறந்து பட்டால் என்ன ஆகும்?

சிவனை ஆராதித்து அர்ஜுனன் போர்க்களத்தில் எப்படி போர் புரிந்தான்?

 

இதற்கான விடை :- தானவகுலப்ரமரஹிதா:

இப்படிப் பார்த்தால் முதல் கேள்விக்கு விடை கிடைக்கும்–  கேசர மரத்தில் உள்ள தேனீக்களுக்கு யானையிடமிருந்து ஒழுகும் மதம் இதமான ஒன்றாகும்.

 

தானவகுலப்ரமரஹிதா:  – என இப்படிப் பார்த்தால் இரண்டாவது கேள்விக்கு விடை கிடைக்கும்.

அரக்கர்களின் கூட்டத்திலிருந்து ஏற்படும் கவலையிலிருந்து அர்ஜுனனுக்கு விடுதலை கிடைக்கும்.

(தானவஅரக்கர்)

எப்படி தானவகுலப்ரமரஹிதா: என்ற சொற்றொடரை இரு விதமாகப் பிரித்தால் புதிர் கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது.

 

 

விடைகளுடன் படிப்பதால் எளிதாக ரஸிக்க முடிகிறது. கேள்வியைக் கேட்டு விடையைக் கண்டு பிடியுங்க்ள் என்றால் சம்ஸ்கிருத பண்டிதராக இருந்தாலும் இரவுத் தூக்கம் போய்விடும்!

 

*************

 

வேதத்தில் தங்கமும் ரத்தினக் கற்களும்!

40624-gold2b2bganesh

Compiled by London swaminathan

Date: 23 April 2015; Post No: 1822

Uploaded in London 9-35 காலை

ரிக் வேதம் கி.மு 1700 அல்லது அதற்கு முந்தையது என்று மேலை உலகம் மெதுவாக ஒப்புக் கொள்ளத் துவங்கி விட்டது. நாள் ஆக ஆக ஜெர்மானியர் ஜாகோபி, சுதந்திரப் போர் வீரர் பால கங்காதர திலகர் ஆகியோர் வான சாஸ்திர கணக்குப்படி சொன்ன கி.மு. 4000-க்கும் முந்தையது ரிக் வேதம் என்றும் உலகம் ஒப்புக் கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை. வேதத்தில் ரத்தினக் கற்கள் மற்றும் தங்கம், வெள்ளி பற்றிய குறிப்புகள் சில முக்கியமான விஷயங்களை உணர்த்துகின்றன.

1.வேத கால இந்துக்கள் நாகரீகத்தில் மிகவும் முன்னேறியவர்கள். ஏனெனில் தங்கத்தை ஆற்று மணலில் சலித்து எடுப்பதோடு, அபராஜித தங்கத்தை வெட்டி எடுப்பதோடு, தற்காலத்தில் செய்வது போல தங்கத் தாதுக்களை உருக்கியும் தங்கம் எடுத்துள்ளனர்.

2.வேத கால நகைகளின் பெயர்களைப் பார்த்துவிட்டு, கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்களில் உள்ள நகைகளைப் பார்க்கையில் வேத காலத்தில் நகைகள் எப்படி இருந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அவர்கள் பணக்காரர்கள் என்பதும், உல்லாசமான வாழ்க்கை நடத்தினர் என்பதும் தெரிகிறது.

3.நகைகள், தங்கம், வெள்ளி முதலியவற்றுக்காண சம்ஸ்கிருத பெயர்களின் வேர் சொற்கள் முதலியன– வேறு ஐரோப்பிய மொழிகளில் இல்லாததால், ஆரியர்கள் வெளியிலிருந்த வந்தனர் என்ற கொள்கையில் பலத்த இடி விழுகிறது. அப்படி வெளியிலிருந்து வந்திருந்தால் இந்த மொழியின் தாக்கம் அங்கே இருந்திருக்கும். இது மட்டுமல்ல ஆயிரக் கணக்கான வேத கால சம்ஸ்கிருத்ச் சொற்கள் அந்த மொழிகளில் இல்லை. வில்லியம் ஜோன்ஸ் சொன்ன மொழிக் கொள்கை தவறு என்பதும் தெரிகிறது.

4.ரிக் வேதத்தில் மயில், நீர், மீன் போன்ற தமிழ் சொற்கள் இருப்பதாகக் கூறி சிலர் வியப்பர். இன்னும் சிலர், சிந்துசமவெளியில் தமிழ் “கதைக்கப்பட்ட”தற்கு இதுவும் ஒரு சான்று என்று கதைப்பர். ஆனால் நீர் போன்ற சொற்கள் பழம் கிரேக்கத்தில் இருப்பதை நான் காட்டியுள்ளேன். இப்பொழுது ரிக் வேதத்தில் காணப்படும் மணி என்ற சொல் சங்கத் தமிழ் நூல்களில் 400-க்கும் மேலான இடங்களில் காணப்படுவது எனது ஆராய்ச்சி முடிபுகளை உறுதிபடுத்துகிறது. அதாவது தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை- கிளைவிட்டுப் பிரிந்து 2000 ஆண்டானதால் இரண்டும்  தனி மொழிகள் ஆயின. இதை அறிந்த நம் முன்னோர்கள் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்குக் கடன் வாங்கவும் தயங்கவில்லை. முன்னர் இருந்த மூல மொழியைச் சேர்ந்த சொற்களே நீர், மீன்,அரிசி (வ்ரீஹி), மணி, இருதயம், மயூர (மயில்) முதலியன. இன்னும் நிறைய பொதுச் சொற்கள் ரிக் வேதத்தில் உள. அவைகளைத் தனிக் கட்டுரையாகத் தருவன்.

92909-gold2csriranjini2bkodampally

மனைவியருக்கு தங்கம் வாங்கிக் கொடுப்பதில் மகிழ்ந்தனர் கணவன்மார்கள்

5.வேதங்கள் சமய சம்பந்தமான மந்திரங்களை உடையவை. அவை தங்கம், வெள்ளி பற்றிய உலோகவியல் (மெட்டல்லர்ஜி) புத்தகம் அல்ல. ஆயினும் அதில் நிறைய விஷயங்கள் உள. இவைகளை மொத்தமாக வைத்துப் பார்க்கையில் – குறிப்பாக அவைகளில் வரும் மிகப் பெரிய டெசிமல் சிஸ்டம்/ தசாம்ஸ எண்களை வைத்துப் பார்க்கையில் இது நாகரீகத்தில் சுமேரிய எகிப்தியர்களை விட முன்னேறிய நாகரீகம் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதில் வரும் ஆபரணங்களின் பெயர்கள் உடலில் எல்லா உறுப்புகளிலும் நகைகள் அணிந்ததைக் காட்டுகின்றன.

6.வேத காலத்தில் பெண்கள் அணிந்த நகைகளைக் கற்பனை செய்ய, கிமு. மூன்றாம் நூற்றாண்டு முதல் நமக்குக் கிடைக்கும் கற்சிலைகள் உதவும். கிரேக்க, எகிப்திய, பாபிலோனிய பெண்கள் படங்களைப் பக்கத்தில் வைத்து ஒப்பிட்டால் இந்தியப் பெண்கள் தான் அதிக நகைகள் அணிந்திருந்தனர் என்பதும் தெரியும். கிரேக்கர் கழுத்தில் நகைகள் இரா. சுமேரியர் கழுத்தில் கொஞ்சம் இருக்கும். எகிப்தியர் மட்டும் கழுத்தளவுக்கு நம்மை ஒட்டி நகை அணிந்திருப்பர். ஆனால் இந்துக்களோ கழுத்துக்குக் கீழேயும் இடுப்பிலும், கைகளிலும், கால்களிலும் நகை அணிந்ததை சிற்பங்களில் காணலாம்.

7.ஆண்களும் நகை அணிந்ததை வேதங்கள் செப்பும். இந்திரன், மருத்துக்கள் நகை அணிந்ததையும் அஸ்வினி தேவர்கள் தங்க ஆசனம் பொருத்திய ரதங்களில் ஏறுவதையும் அவை கூறுகின்றன.

8.தங்க கரன்ஸிக்களும் (பணமாகப் பயன்படுத்தும் தங்கக் காசு), தங்கத்தை நிறுப்பதற்கான எடை அளவுகளும் இருந்தன இதுவும் பாரதம் முழுதும் ஒரே மாதிரி இருந்துள்ளது. 100 குந்துமணி அளவு, 100 தானிய எடை என்பன வேதத்தில் காணக் கிடக்கின்றன. திவோதாச என்ற மன்னன், ஒரு புரோகிதருக்கு தங்கக் கட்டிகளைப் பரிசளித்தான். இன்னொருவர் 4 தங்கத் தாம்பாளங்களைப் பரிசளித்தார்.

9.ஆயிரம் பொற்காசு அளிக்கும் வழக்கம் தருமி (திருவிளையாடல் புராணம், அப்பர் பாட்டு) காலம் வரை இருப்பதை நாம் அறிவோம். இதுவும் வேத கால வழக்கம். மாட்டின் கொம்பில் கட்டப்பட்ட ஆயிரம் பொற்காசுகளை ஜனக மாமன்னன் பரிசளித்ததை உபநிஷத்துகள் கூறும். இவ்வளவு தங்கத்தை கி.மு 1700-ஆம் ஆண்டிலேயே பரிசளித்திருந்தால் இந்தியா எவ்வளவு பணக்கார நாடாக இருந்திருக்க வேண்டும்?

10.”உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நாடு இந்தியா” — என்ற தலைப்பிட்ட ஐந்து ஆங்கிலக் கட்டுரைகளில் அலெக்ஸாண்டரும், கஜினிமுகமதுவும், கொலம்பசும், பிரிட்டிஷ், பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுகீஸியரும் ஏன் இந்தியாவை நோக்கி வந்தனர் என்று எழுதியுள்ளேன். ஐரோப்பவிலோ பிற நாகரீகங்களிலோ தங்கக் கட்டிகள், தங்கத் தம்பாளங்களை, முறையான சடங்குகளில் பரிசு அளித்ததாகப் படிக்க முடியாது.

248aa-amman2bgold

11.பெண்களுக்கு தாய் தந்தையரே நகை பூட்டிய செய்திகளும் வேத கால இலக்கியங்களில் இருக்கின்றன.

12.மணி என்பது வைரமாகவோ முத்து ஆகவோ இருக்கலாம் என ஆராய்ச்சியாளர் எண்ணுவர். அவைகளை நூலில் கோர்த்து கழுத்தில் அணிந்த குறிப்புகள் வேதத்தில் (மணி க்ரீவ) உண்டு. நூலில் கோர்த மணிகள் போல என்ற உவமை பகவத் கீதையிலும் சங்க இலக்கியத்திலும் உள்ளதை முன்னரே எடுத்டுக் காட்டி இருக்கிறேன்

13.பொற்கொல்லன், நகை விற்பவன் ஆகியோர் பெயர்களும் இருப்பதால், நகைத்தொழில் இருந்தது பற்றியும் அறிகிறோம்.

14.இன்றும் கூட பரிசு கொடுக்கும் போது சொல்லும் மந்திரங்களில் “சதமானம் பவது” என்று ஒரு மந்திரம் சொல்லப்படும் யார் என்ன ஓதி விட்டாலும் அதை ஓதிக் கொடுக்கும் ஐயர் “லட்சம் கட்டி வராஹன்” என்று சொல்லி பெண், மாப்பிள்ளை கையில் கொடுப்பார். இவ்வளவு பெரிய தொகை ஓதி விடப்படதாலேயே அத்தகைய மந்திரங்கள் காலாகாலமாக இருந்து வருகின்றன. சதமானம் என்பது 100 குந்துமணி (ரத்தி) எடைத் தங்கம் ஆகும்.

ஒரு பிச்சைக்கார  சமுதாயம், லட்சம் கட்டி வராஹன் என்று நினைத்துக்கூட பார்க்காது. வேத கால சமுதாயம் தங்கத்தில் புரண்ட சமுதாயம் என்பதால்தான் இத்தகைய மந்திரங்கள் வருகின்றன. அர்ஜுனன் உத்தரகுரு எனப்படும் இமயமலைப் பிரதேச நாட்டுக்குச் சென்று தங்கமும் ரத்தினமும் கொண்டு வந்ததாலேயே அவனுக்கு தனஞ்ஜயன் என்று பெயர்.

15.சிந்து, சரஸ்வதி நதிக்கரைகளில் தங்கம் கிடைத்ததால் அந்த நதிகளுக்கு தங்க (ஹிரண்மய) என்ற சிறப்பு அடைமொழி உள்ளது. காவிரிக்கும் ‘பொன்னி’ என்ற சிறப்புப் பெயர் இருக்கிறது

aeeb4-01_open_page_alapa_2296283f

காஞ்சனம் ஹஸ்த லட்சணம் (கைகளுக்கழகு கனக வளையல்கள்!!)

16.நிருக்தத்தில் (சொற்பிறப்பியல்) மணி என்பதற்கு சூரிய காந்தக் கல் என்று ஒரு உரைகாரர் பொருள் சொல்லுகிறார். அந்தக் காலத்திலேயே பஞ்சை எரிக்கும் பூதக் கண்ணாடி பற்றி நம்மவர் அறிந்திருந்தனர். வயதானவர்கள் தங்கத்தை அணிந்து இறந்தால் தங்கமாகவே ஆவர் என்ற நம்பிக்கை இருந்தது ஒரு மந்திரத்தின் மூலம் தெரியவருகிறது.

ஆங்கிலக் கட்டுரையில் நான் தொகுத்துக் கொடுத்து இருப்பதன் சுருக்கத்தை மட்டுமே இங்கே கொடுத்துள்ளேன். வேத கால இலக்கியமான சம்ஹிதை, பிராமணங்களில் எந்த எந்த இடங்களில் இந்த குறிப்புகள் வருகின்றன என்ற புள்ளி விவரங்களுக்கு எனது ஆங்கிலக் கட்டுரையைக் காண்க.

d482a-gem

–சுபம்–

வேதத்தில் கடலும் கப்பலும்!!

Olympias under Oar,

Research Paper No.1804; Date: 16th April 2015

Written by London swaminathan

Uploaded from London at  20–15

வேதங்களில் சொல்லப்பட்ட எல்லா விஷயங்களின் பட்டியலைப் பார்ப்பவருக்கு வியப்பு மேலிடும். உலகில் இவ்வளவு விஷயங்களை வேறு எந்தப் பழைய நூலிலும் காண முடியாது. சொல்லப் போனால், நூல் என்பதே சம்ஸ்கிருதம் தவிர வேறு எங்கும் அப்போது கிடையாது. கி.மு 1700 ஆம் ஆண்டு என்று இப்போது தேதி குறிக்கப்படும் ரிக் வேத காலத்துக்கு சுமார் ஆயிரம் வருடம் கழித்துத்தான் கிரேக்க மொழியில் நூல் வந்தது. கிட்டத்தட்ட அதை ஒட்டித்தான் பைபிளும் எழுதப்பட்டது. மற்ற மொழிகளில் லத்தீன் மொழியில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் புத்தகங்கள் வந்தன. தமிழில் தொல்காப்பியம் கி.மு. முதல் நூற்றாண்டில் வந்தது என்பர். ஆக ரிக் வேதத்துக்குப் பக்கத்தில் வைத்து ஒப்பிடக் கூடிய நூல்கள் இல்லை. சுமேரிய, எகிப்திய மொழிகளில் சுவரிலும், பேப்பரிலும், களிமண் பலகையிலும் இதற்கு முன் எழுதப்பட்ட விஷயங்கள் இருந்தாலும் அவைகள் நூல் என்ற இலக்கணத்துக்குள் அடங்குமா என்பது கேள்விக்குறியாகத் தொக்கி நிற்கும்.சீன மொழியிலும் உண்டு ஆனால் நூல்கள் இல்லை.

காலத்தைப் பற்றிக் கவலைப் படாமல் விஷயங்களுக்கு வருவோம். முன்னர் பல கட்டுரைகளில் நான் குறிப்பிட்ட டெசிமல் சிஸ்டம் (தசாம்ச முறை) — மிகப் பெரிய எண்கள்— மொழிகள் பற்றிய உவமைகள் — முப்பதுக்கும் மேலான பெண் தெய்வங்கள் — யாப்பிலக்கணத்துக்கும் முப்பதுக்கும் மேலான நதிகளுக்கும் பெண்களின் பெயர்களைச் சூட்டி அவர்களை உச்சாணிக் கொம்புக்கு ஏற்றியது — கிரேக்க மொழியில் நூல் எழுதத் துவங்குவதற்கு முன்னரே ஜனகர் கூட்டிய உலக தத்துவ மஹாநாட்டில் கார்கி வாசக்னவி என்ற பெண்மணி கலந்து கொண்டு மிகப்பெரிய அறிஞரைக் கேள்வி கேட்டது — ரிக்வேத முடிவில் உலக அமைதிப் பாடலை வைத்து அதை அழகாக முடிப்பது — உலகிற்கு 1,2,3 என்ற எண்களைக் கற்பித்தது —- இவைகளை எல்லாம் பார்ப்பவருக்கு உலகின் மிக மிக நாகரீக முதிர்ச்சி பெற்ற நாடு இந்தியாதான் என்பது தெரிகிறது, புரிகிறது. இதை, இந்துக்களை மட்டம் தட்டுவதற்காக முதலில் வேதம் படிக்க வந்த மாக்ஸ்முல்லர், வில்லியம் ஜோன்ஸ் போன்றோரும் கூட சொல்லிவைத்தனர்.

ship1

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சில “அறிஞர்கள்” (??????) வேதத்தில் சொல்லப்படும் சமுத்ரம் கடலே அல்ல, அது வெறும் குளம், வேதத்தில் சொல்லும் நூறு துடுப்புக் கப்பல், கப்பலே அல்ல–இப்படியெல்லாம் பிதற்றி வந்தனர். இதற்கு அவர்கள் கூறியதெல்லாம் எதிர்மறைச் சான்றுகள். அதாவது கடல் பற்றி அதைச் சொல்லவில்லை, இதைச் சொல்லவில்லை, உப்பு பற்றியே சொல்லவில்லை என்றெல்லாம் சொல்லி எதைச் சொல்ல வில்லையோ அதை ஆதாரமாகக் காட்டுவது. இதை உலகில் அறிஞர்கள் ஏற்பதில்லை. சங்கத் தமிழில் உள்ள முப்பதாயிரம் வரிகளில் தமிழர்கள் மலஜலம் கழித்த பாடலே இல்லை. ஆகவே தமிழர்கள் சாப்பிட்டார்களே தவிர, என்றும் மலஜலம் கழித்ததே இல்லை என்று அசட்டுப் பிசட்டு என்று எழுதி டாக்டர் பட்டம் பெறுவதற்கு சமம் இது. இப்படிதான் வெள்ளைத்தோல் அறிஞர்கள் தத்துப் பித்து என்று உளறி வைத்துள்ளனர். உண்மையில் தமிழர்களும் வடக்கே இருந்தவர்களும் போய்த்தான் உலகம் முழுதும் மொழி அறிவையும் நாகரீகத்தையும் பரப்பினர்.

முந்தைய கட்டுரைகளில் பல எடுத்துக் காட்டுகள் கொடுத்துள்ளேன். பாரத மக்கள் உலகம் முழுதும் சென்றனரே தவிர, பாரதத்துக்குள் நாம் குடியேறவில்லை. இதை அறியாத அரை வேக்காடுகள் உளறிக்கொட்டி கிளறி மூடின. தமிழர்கள் வடமேற்கில் இருந்து வந்தவர்கள் என்று கால்டுவெல் உளற, ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்தனர் என்று மாக்ஸ்முல்லர் உளற, இந்தியர்கள் குழம்பிப் போய்விட்டனர்! இந்தக் குழம்பிய குட்டையில், திராவிடங்கள் மீன் பிடிக்கப் பார்த்தன. இப்பொழுது அவர்களுக்கு எல்லாம் சங்கத் தமிழ் இலக்கியம் செமை அடி கொடுத்து வருகிறது. புற நானூற்றில் எந்தப் பாட்டை எடுத்தாலும் அதிலுள்ள நம்பிக்கை ஏற்கனவே சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. திருக்குறளில் எந்த அதிகாரத்தை எடுத்தாலும் அது ஏற்கனவே வடக்கே உள்ளது. யாரும் யாரையும் ‘’காப்பி’’ அடிக்கவில்லை. இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை. ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒரே மாதிரித்தானே சிந்திப்பர்!

பழங்கால உலக மொழிகள் எல்லாம் தமிழ், சம்ஸ்கிருத மொழிகளில் இருந்து வந்தவையே என்று முந்தைய கட்டுரைகளில் பல எடுத்துக் காட்டுகளைக் கொடுத்தேன். இது கப்பல் தொடர்பான கட்டுரை என்பதால் இன்னும் ஒரு பொருத்தமான உதாரணத்தைப் பார்ப்போம். கப்பல் என்ற தமிழ் சொல்லில் இருந்து ஷிப் என்ற ஆங்கிலச் சொல் வந்தது:- கப் (பல்)= ஸ்கிப்= ஷிப்; இதே போல நாவ் என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து நேவி என்ற ஆங்கிலச் சொல் வந்தது: நாவ்=நேவி=நேவல்.

ஆக இந்திய மூல மொழி இரண்டு கிளையாகப் பிரிந்து தமிழ் சம்ஸ்கிருதம் என மலர்ந்து, வளர்ந்து உலக மொழிகளைத் தோற்றுவித்தன.

கப்பல், கடல் பற்றிய குறிப்புகளைப் பார்க்கையில், வேத காலத்தில் மிகப் பெரிய கடல் வாணிபம் நடந்ததும் தெரிகிறது. ஆங்கிலக் கட்டுரையில் எல்லா குறிப்புகளையும் கொடுத்துள்ளேன். இங்கு முக்கிய குறிப்புகளை மட்டும் தருகிறேன்:–

1.வேதத்தில் வரும் நாவ் (படகு, கப்பல்) என்ற சொல்தான் இன்று உலகம் முழுவதும் கடற்படை (நேவி) என்ற சொல்லில் பயன் படுத்தப்படுகிறது. (RV 1-97-8)

2.வேதத்தில் குறைந்தது எட்டு முறை குறிக்கப்படும் விஷயம், நடுக் கடலில் தத்தளித்த பூஜ்யு என்பவரை அஸ்வினி தேவர்கள் காப்பாற்றிய செய்தியாகும். அவருடைய கப்பல் நூறு துடுப்புகள் உடைய கப்பல்.   RV 1-116-5; 1-117-14

3.பிராமணர்களைத் தொல்லைபடுத்துவதால் அழியும் நாடு கடலில் உடையும் கப்பலைப் போன்று அழிகிறது என்று அதர்வ வேதம் கூறும் (AV 5-19-8)

ship35

4.சமுத்ரம் (பெருங்கடல்) என்ற சொல் நிறைய இடங்களில் வேதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

5.கடல் செல்வங்கள் பற்றிய குறிப்புகளும் உள (RV 1-47-6; 7-6-7; 9-97-44)

6.முத்தும் பலவகைக் கடற்பயன்களும் குறிப்பிடப்படுகின்றன (RV 1-48-3, 1-56-2; 4-55-6)

7.தொலை தூரப் பிரதேசங்களுக்கு வாணிபத்தின் பொருட்டுச் சென்ற குறிப்புகளும் உள. இன்றும் தமிழர்கள் பயன்படுத்தும் வணிகம் சென்ற சொல்லே ரிக்வேதத்தில் இருந்து வந்த சொல்லே! (1-56-2; 4-55-6; RV 1-48-3)

8.வருணனும் வசிட்டனும் நடுக்கடலுக்கு கப்பலில் சென்றதை ஒரு பாடலில் காண்கிறோம் (RV 7-8-3)

9.சரஸ்வதி நதி கடல் வரை வருவதை ஒரு துதியும் இந்தியாவின் இருபுறம் உள்ள கடல்களை இன்னொரு துதியும் குறிப்பிடுகின்றன RV 10-136-5

10.மிகப்பெரிய இயற்கை அதிசயம் பல்லாயிரம் நதிகள் நீரைக் கொண்டுவந்து கொட்டினாலும் கடல் நிறைவதில்லை; எல்லை மீறுவதும்இல்லை என்று வேதம் துதி பாடுகிறது. சங்க இலக்கியத்தில் பரணரும் அதைப் பாடியுள்ளார் (RV 5-16-7)

  1. ரிக்வேதம் ஒரு மத நூல் என்றபோதிலும் 15 வகையான மீன்களின் பெயர்கள் அதில் உள்ளன.

12.ரிக் வேதத்திலும் தமிழின் பழைய நூல் தொல்காப்பியத்திலும் வருணன், கடல்வாழ் மக்களின் தெய்வம் என்று கூறப்படுகிறது.

13.தென் மாவட்டங்களில் கடலோரமாக வாழும் பரதவர்களுக்கும், ரிக் வேதத்தில் மிகவும் புகழோங்கிய பரதகுலத்துக்கும் தொடர்பு உண்டா என்றும் ஆராய வேண்டும்

14.வருணனை மேற்கு திசையின் அதிபனாக பிற்கால நூல்கள் வருணிக்கின்றன. மேற்கு திசையில் துவாரகா துறைமுகத்தில் இருந்து கிருஷ்ணர் நடத்திய கடற்படைத் தாக்குதல்களை “இந்து தெய்வங்களின் கடற்படைத் தாக்குதல் என்ற கட்டுரையில் கொடுத்துள்ளேன்

ship2

15.இந்துக்களுக்குக் கடல் என்பதே தெரியாது என்று சொன்னவர்களின் வாயில் அடிக்கும் வகையில் கடலுக்கு அடியில் மூழ்கிய துவாரகா கண்டுபிடிக்கப்பட்டது. தெற்கே ராமர் கட்டிய பாலம் ‘’நாசா’’ எடுத்த புகைப் படத்தில் தெரியவந்துள்ளது. கிருஷ்ணர் 125 ஆண்டுகள் வாழ்ந்து ஒரு வேடனால் கொல்லப்பட்ட அன்று, பெரிய சுனாமி தாக்குதல் ஏற்பட்டு துவாரகை கடலில் மூழ்கியதை விஷ்ணு புராணம் கூறுகிறது. அதே கி.மு3102-ஐ ஒட்டிதான் துவாரகை மூழ்கியதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆக இந்துமத நூல்கள் சொன்னதை கடல் அகழ்வாராய்ச்சிகளும் நிரூபித்துவிட்டன.

16.உலகம் முழுதும் உள்ள கடல்கள் இந்து ரிஷிகளின் பெயர்களில் உள்ளன: காஸ்பின் கடல்=காஸ்யப ரிஷி, ஏட்ரியாடிக் கடல் = அத்ரி மகரிஷி, ஏஜியன் கடல் = அகஸ்திய மஹரிஷி, பிளாக் ஸீ/ கருங்கடல்= வருணனின் நிறம் கருப்பு என்று வேதம் வருணிக்கிறது.

கட்டுரையின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.ஆங்கிலக் கட்டுரையில் மேல் விவரம் காண்க.

(கப்பல் படங்களுக்கும் கட்டுரைக்கும் நேரடித் தொடர்பு இல்லை)

ஆன்மீக அறிவியல் ஆய்வாளர் ச.நாகராஜன் : அறிமுகம்

gold  ganesh

Compiled by London swaminathan

Article No. 1791 Date 10th  April 2015

Uploaded from London at   8-13 am

 

This is an interview given by my brother S NAGARAJAN who contributes regularly to our blogs.

ஆன்மீக அறிவியல் ஆய்வாளர் ச.நாகராஜன் : அறிமுகம்

.நாகராஜன்அறிமுகம்

 

திரு.நாகராஜன் பாரம்பரியமிக்க தேசபக்த குடும்பத்தில் பிறந்தவர்.இவரது தந்தையார் திரு வெ.சந்தானம் சுதந்திரப் போரிலே ஈடுபட்டு சிறை சென்றவர்.மணிக்கொடி திரு பி.எஸ்.ராமையாவுடன் இணைந்து தமிழ் பத்திரிகை உலகில் ஒரு புது சகாப்தத்தைத் தோற்றுவித்தவர். சிறந்த பத்திரிக்கையாளராக விளங்கிய இவர் மதுரை தினமணிப் பதிப்பின் பொறுப்பாசிரியராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்தவர்.

 

தஞ்சை மாவட்டம் கீவளூரில் பிறந்த திரு ச.நாகராஜன் இது வரை சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கதைகள், நாடகங்கள், மதிப்புரைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.

 

விண்வெளி சாதனைகள் உள்ளிட்ட அறிவியல் கட்டுரைகள்,ஜோதிடம், வானியல்,வரலாறு, இலக்கியம்,சுற்றுலா இடங்கள்,புலன் கடந்த உணர்வியல்,கடல் வளம், மிருக இயல்,இசை, மந்திரம்,யந்திரம், சாதனையாளர்கள், உடல் ஆரோக்கியம், யோகா, வாஸ்து,ஹாலிவுட் சினிமா, தமிழ் திரை இசைப்  பாடல்கள் உள்ளிட்ட பல பொருள்களிலும் கட்டுரை படைத்திருப்பது இவரது தனிச் சிறப்பு.

 

திருச்சி வானொலி நிலையம் வாயிலாக இவரது நாடகப் படைப்புகள் ஒலிபரப்பாகி உள்ளன.ரேடியோ உரைகளும் மதுரை மற்றும் சென்னை வானொலி மூலமாக ஒலிபரப்பாகி உள்ளன.200க்கும் மேற்பட்ட சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டு உரைகளை சென்னை வானொலிக்காக இவர் படைத்துள்ளார்.ரெயின்போ வானொலிக்காக இல்லத்திலிருந்தே இணைப்பைப் பெற்று வானியலில் முக்கிய நிகழ்வுகள் ஏற்படும் போதெல்லாம் அவை பற்றிய செய்திகளைத் தந்ததோடு நேயர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.

 

இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தமிழ் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜயா டி.வியில் சுமார் 50 நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார். திருப்பாவைக்கு 30 நாட்கள் விஞ்ஞான ரீதியில் இவர் அளித்த விளக்கங்கள் நேயர்களின் கவனத்தைப் பெரிய அளவில் ஈர்த்தன.ஜயா தொலைக்காட்சி இவரை காலைமலர் நிகழ்ச்சியில் பேட்டி கண்டு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

 

வின் டி.வியில் நேரடி ஒளிபரப்பில் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் பற்றி அறிவியல் ரீதியாகக் கருத்துக்களை அளித்துள்ளார்.வசந்த் தொலைக்காட்சியில் ஹிக்ஸ்போஸன் பற்றிய அறிவியல் விளக்கம் தந்துள்ளார்.

 

சுயமுன்னேற்றம், படைப்பாற்றல் திறன், நிர்வாக இயல் உள்ளிட்ட புதிய உத்திகள் பற்றி உரைகள் ஆற்றியும், பயிற்சி முகாம் நடத்தியும் வந்துள்ளார். பல பொறியியல், கலைக் கல்லூரிகளில் மாணவ மாணவியருக்காக இவர் நடத்திய பயிற்சி முகாம்கள் அவர்களை மேம்பட வழி வகுத்தவை.

 

வாகன கட்டுமானத் துறையில் தென்னகத்தின் சிறந்த நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மேலாளராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பணியாற்றியுள்ளார்.

 

இலங்கை, பெல்ஜியம், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று பரந்த அனுபவம் பெற்றிருக்கிறார்.

 

இவரது படைப்புகள் தினமணி, தினமணி கதிர், தினபூமி, ஆனந்தவிகடன், பாக்யா,கலைமகள், மஞ்சரி, மங்கையர் மலர்,கோகுலம் கதிர், இதயம் பேசுகிறது, ஞான ஆலயம், சினேகிதி, சின்னத்திரை,ஜெம்மாலஜியும் ஜோதிடமும், ஆதிபிரான், ஹெல்த்கேர், குவைத் தமிழ் அமுதம்,THE HINDU உள்ளிட்ட பல பத்திரிக்கைகளில் இடம் பெற்றுள்ளன.

 

இவரது அறிவியல் தொடரானவிண்வெளியில் மனித சாதனைகள்’  மூன்று வருடங்களாக பாக்யா இதழில் பிரசுரிக்கப்பட்டு வாசகர்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்றது. இந்தியப் பத்திரிக்கைகளிலேயே விண்வெளி சாதனைகளைப் பற்றிய மிக நீண்ட தொடர் இவருடையதே என்பது குறிப்பிடத் தகுந்தது.

 

இவரதுமாயாலோகம்தொடர் 78 வாரங்கள் பாக்யாவில் தொடர்ந்து வெளி வந்தது. தற்போது அறிவியல் துளிகள் 210 வாரங்களைக் கடந்து பாக்யா இதழில் தொடர்கிறது.

இவரது படைப்புகள் வாரந்தோறும் http://www.nilacharal.com மின் இதழில் வெளிவருகிறது.

இவரது சகோதரர் திரு ச.சுவாமிநாதனின் swamiindology.blogspot.com மற்றும் tamilandvedas.blogspot.com ஆகிய தளங்களில் இவர் கட்டுரைகள் இடம் பெறுகின்றன.

 s nagarajan

Picture of S Nagarajan

இதுவரை இவர் படைப்புகளானவெற்றிக்கலை, அறிவியல் வியக்கும் ஆன்மீகம், நவகிரகங்கள்,அதிரடிமன்னன் ஜாக்கிசான்.அறிவுக்கும் அப்பால், பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும், அற்புத அவதாரம் ஸ்ரீ சத்யசாயிபாபா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆங்கிலம் அறிவோமா, விந்தை மனிதர்கள், சிறுவர்க்கான புராணக் கதைகள், உலகின் அதிசய இடங்கள், நாகநங்கை (சரித்திர நாவல்), விஜயதீபம் (சரித்திர நாவல்), வியப்பூட்டும் விஞ்ஞான புதுமைகள் 100, அறிவியல் நோக்கில் ஆன்மீக ரகசியங்கள், பிரமிட் மர்மங்களும் அதீத புலனாற்றல் அதிசயங்களும், திறன் கூட்டும் தியானம் விண்வெளியில் மனித சாதனைகள், விலங்கியல் உலகம், ஆஹா! அப்படியா (விஞ்ஞான கேள்வி பதில்கள்), ஆன்மீக ரகசியங்கள் உள்ளிட்ட 23 புத்தகங்கள் வெளி வந்துள்ளன.

 

இவரது நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலக் கட்டுரைகள் உலகின் தலை சிறந்த வலைத்தளமான http://www.ezinearticles.com-இல் வெளிவந்துள்ளன. இந்தக் கட்டுரைகளை 100184 வாசகர்கள் படித்துப் பயன்பெற்றுள்ளனர், இந்தக் கட்டுரைகளை பல நாடுகளிலும் உள்ள 1614 மின்னனு பத்திரிக்கைகள் விரும்பி மறுபிரசுரம் செய்துள்ளன.

இவரது ஆங்கிலப் புத்தகமான Breakthrough to Success என்ற வாழ்வியல் நூலை லண்டனிலிருந்து நிலா பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ளனர்.

நிலா பப்ளிஷர்ஸ் இவரது 52 தமிழ் நூல்களை மின்னணு நூல்களாக வெளியிட்டுள்ளனர்.

 

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு சுமார் 10000க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கலைச் சொற்களை இவர் தமிழாக்கம் செய்துள்ளார்அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றிலும் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் இவரது மொழியாக்கத் தமிழ்ச் சேவையை விரும்பிப் பெறுகின்றன.

இவர் பெற்ற பாராட்டுரைகளில் சில:

 

இயக்குநர் திரு கே.பாக்யராஜ்

வெற்றி ரகசியத்தை வெளியிடக் கூட விருப்பமின்றி அல்லது நேரமின்றி வெற்றி பெற்றவர்கள் மும்முரமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த நூலாசிரியர் நேர் சிந்தனையுடனும், நியாயமாகவும், நளினமாகவும், சிறப்பாகவும், சீராகவும் வெற்றிக்கலையின் ரகசியத்தை வெளியிடும் தன் பணியைச் செய்து முடித்திருக்கிறார்.

(வெற்றிக்கலை நூல் முன்னுரையில்)

***

திரு இராம.கோபாலன் இந்து முன்னணித் தலைவர்

பாரத நாட்டின் ஆன்மீகம் பற்றி நமது நாட்டினர்க்கே தெரிவதில்லை.இதன் காரணமாக தேசீயத் தன்மான உணர்வு கிட்டத் தட்ட இல்லையென்றே கூறி விடலாம். திரு.நாகராஜனின் இந்த அரிய தொண்டுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(அறிவியல் வியக்கும் ஆன்மீக ரகசியம் நூல் வாழ்த்துரையில்)

****

 chicago1

This picture was taken by my eldest brother S SRINIVASAN in Chicago where Swami Vivekananda addressed the World Parliament of Religions.

எழுத்தாளர் திரு அசோகமித்திரன்

பிரமிப்புஎன்ற தலைப்பில்..

திரு நாகராஜன் அவர்கள் எழுதியஆன்மீக ரகசியங்கள்என்ற நூலின் 27 கட்டுரைகளையும் படித்தபோது எனக்குப் பிரமிப்பு தான் முதலில் ஏற்பட்டது. ஆசிரியர் தான் எவ்வளவு விஷயங்களை அறிந்து அவற்றைத் தனதாக்கி இருக்கிறார்! ஒரு பெரிய நூலிலிருந்து மேற்கோள் காட்டி விடுவது எளிது. ஆனால் அதைத் தன் அனுபவபூர்வமாக உணர்ந்து இன்னொருவருக்குக் கூறுவது மிகுந்த, பயிற்சி, சிந்தனை, சிரத்தை இருந்தால் தான் சாத்தியம். நாகராஜனின் ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ள ஏராளமான விஷயங்கள் இதைக் காட்டுகின்றன.

 

நாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

(ஆன்மீக ரகசியங்கள் நூல் முன்னுரையில்)

***

 

தமிழறிஞரும் முன்னாள் டி..ஜியுமான திரு சு. ஸ்ரீபால் அவர்கள்

அதிசயமான சாதனைகள் படைத்தவர்களைப் பற்றி அற்புதமாக நூலாசிரியர் எழுதியிருக்கிறார். எனது பாராட்டுதல்கள்.

(விந்தை மனிதர்கள் நூல் முன்னுரையில்)

***

 

பிரபல விஞ்ஞானியும் DRDOவில் பல்லாண்டுகள் பணியாற்றியவருமான அறிஞர் திரு K.G.நாராயணன் அவர்கள்

ஐந்தாயிரம் ஆண்டுகளாக அறிந்து கொண்ட பொருள்களைவிட  பல மடங்குகள் அதிகமாக கடந்த முன்னூறு ஆண்டுகளில் அறிவியல் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறோம். இந்த மகத்தான முன்னேற்றங்களைப் பற்றி முடிந்தவரை தெரிந்து கொள்வது நாம் எல்லோருக்கும்  தவிர்க்க முடியாத தேவை ஆகி விட்டது.    திரு நாகராஜன் அவர்களின் அறிவியல் துளிகள் இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் தலையாயதாகத்  திகழ்கிறது. நம் நன்றிக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர் திரு நாகராஜன்.

(அறிவியல் துளிகள் நூல் முன்னுரையில்)

****

 

பிரபல விஞ்ஞானியும் ASIEOவில் பல்லாண்டுகள் பணியாற்றியவருமான திரு V தேசிகன் அவர்கள்

விண்வெளியில் மனித சாதனைகள்நூலானது வானவியல், விண்வெளி வீர்ர்கள், விண்வெளிப் பயணங்கள் மற்றும் இவற்றிற்குப் பின்னணியில் இருந்தோர் பற்றிய அனைத்தையும் கலந்து தரும் ஒன்று.

 

மற்ற கிரகங்களில் மனிதனின் குடியேறுவதற்கான ஆர்வமூட்டும் சாத்தியக் கூறுகளையும், பிக் பேங் பற்றிய ஒரு சிறிய சுருக்கத்தையும் நீங்கள் இதில் படிக்கலாம். இந்த நூலானது விண்வெளிக் கொள்கை ஒப்பந்தம் பற்றியும் மனிதன் கற்பனையில் தோன்றிய சுவையான பல சிறிய கதைகளையும், ஒரு விண்வெளி வீராங்கனை தனது ஒப்பனைப் பொருள்களை விண்வெளிப் பயணத்தின் போது கொண்டு சென்றது போன்ற துணுக்குச் செய்திகளையும் கூடத் தருகிறது.

 

சில புத்தகங்களை சுவைக்க வேண்டும்; மற்றவற்றை முழுங்க வேண்டும், ஆனால்  குறைந்த சில புத்தகங்களை மட்டுமே அசை போட்டு ஜீரணிக்க வேண்டும்இந்தப் புத்தகம் மூன்றாவது வகையில் நிச்சயமாகச் சேர்கிறது.

இந்த புத்தகத்தை அசை போட உங்களுக்கு என் இனிய வேண்டுகோள்.

(விண்வெளியில் மனித சாதனைகள் நூல் முன்னுரையில்)

***

 

Professor Benjamin LE BEAU    (Paris) 

If we think that ‘positive thinking’ is a product of the 20th century (thanks to Dale Carnegie, James Allen and or Norman Vincent Peale…), then Mr.S.Nagarajan, the author of  ‘BREAKTHROUGH TO SUCCESS’ has aptly proved that it is an Indian product that existed  ever since thousands and thousands of years.

In short, the book seems to be a cocktail of many individual articles previously published in ezines of the internet. The author certainly armed with patience collected quite a number of quotations & citations and skillfully used them to support his points of view. 

 In many places Mr. Nagarajan gives the gist of the articles in a sentence with simple words and that is his plus point. The author, perhaps a bibliophil merits applauses because he has imbibed in so many books.  Bravo!

(‘BREAKTHROUGH TO SUCCESS’ ஆங்கில நூலின் முன்னுரையில்)

****

அபஸ்வரம் திரு.ராம்ஜி

திரு.நாகராஜன் எழுதிய அதிரடி மன்னன் ஜாக்கிசான் என்ற நூலைப் படிக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. மிகுந்த ஆராய்ச்சியுடனும் கடின உழைப்புடனும்  இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.இதன் ஆசிரியருக்கு எனது பாராட்டுதல்கள்

(அதிரடி மன்னன் ஜாக்கிசான் நூல் முன்னுரையில்)

*********

 

டாக்டர் திருமதி கமலி ஸ்ரீபால் (கோகுலம் கதிர் இதழ் ஆசிரியர்)

படிக்கத் தொடங்கினால் படித்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் நூல்.ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல். இறைவன் அருளால் திரு ச.நாகராஜன் அவர்களின் இலக்கியப் பணி மேன்மேலும் வளர மனதாரப் பிரார்த்திக்கிறேன்.

(திறன் கூட்டும் தியானம் நூல் முன்னுரையில்)

*******

 

கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

விநாயகா பப்ளிகேஷன்ஸ் வெளியிடும் இந்த நூலில் திரு நாகராஜனின் பேனா பல இடங்களில் வித்தை காட்டி பறக்கும் தட்டுகளை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கின்றன.அவருக்குப் பாராட்டுக்கள்.பாடத் திட்டத்திற்கும் ஏற்ற நூல் இது.

(பறக்கும் தட்டுகளும் அயல் கிரகவாசிகளும் நூல் முன்னுரையில்)

***********

 

தமிழறிஞரும் இந்திய இயல் ஆராய்ச்சியாளருமான திரு ச.சுவாமிநாதன்

தமிழும் சம்ஸ்கிருதமும் பாரத நாட்டின் இரண்டு கண்கள்.

இவைகளில், பழமை, புதுமை, பெருமை, அருமை ஆகிய நான்கு குணங்களைப் பெற்றது சம்ஸ்கிருத மொழி. அந்த மொழியின் ஆழமான கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ள உதவுவது சுபாஷிதங்கள் எனப்படும் பழமொழி அல்லது பொன்மொழிகள். பலாப் பழத்தையோ ஆரஞ்சுப் பழத்தையோ ஒருவர் தனித் தனி சுளைகளாகக் கொடுக்கும்போது நாம் உடனே கையில் வாங்கி வாயில் போடுகிறோம். சம்ஸ்கிருத செல்வம் என்ற தொடரில் வந்த கட்டுரைகள் இத்தகைய பழச் சுளைகள். அதை நாகராஜன் அவர்களின் எழுத்து வடிவில் காணும் போது கொஞ்சம் சர்க்கரையும் தோய்த்துச் சாப்பிட்டது போல் இருக்கிறது. கூடுதல் இனிப்பு! ஆயினும் திகட்டாமல் மேலும் மேலும் சுவைக்கத் தோன்றுகிறது.

சம்ஸ்கிருதச் செல்வம் நூல் (சுபாஷிதங்கள் தொகுப்பு) முதல் பாகம் முன்னுரையில்

***

திருமதி  மஞ்சுளா ரமேஷ் (ஞான ஆலயம், சினேகிதி, ஶ்ரீ ஜோசியம் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்)

நமது ஆன்மீகத்தில் எத்தனை விஞ்ஞானமும் அதிசயங்களும் நிறைந்துள்ளன என்பதை ஆராய்ந்து அறியும் போது வியப்பும் பிரமிப்பும் தான் ஏற்படுகின்றன.ஆனால் இவற்றையெல்லாம் விளக்குபவர்கள் தான் குறைவாக உள்ளனர்.

  அப்படிப்பட்டவர்களில் மிக அபூர்வமானவர் என்றே திரு ச.நாகராஜன் அவர்களை சொல்லலாம். வேதங்கள், சாஸ்திரங்கள், ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் உள்ள உன்னதமான விஷயங்களை அறிவியல் ரீதியாக விளக்கி, அதே சமயம் சுவாரஸ்யம் குன்றாமல் அவர் ஞான ஆலயத்திற்கு எழுதி அனுப்புவார். வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம் என அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   எங்களுடைய இன்னொரு பத்திரிகையானஶ்ரீ ஜோசியம்பத்திரிகைக்கு விஞ்ஞானத்துடன் கூடிய ஜோதிட ரீதியான கட்டுரைகளை அனுப்பியிருந்தார். பிரமிக்க வைக்கும் தகவல்களை அவைகள் தந்தன.

    எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு பணியாற்று வரும் ச.நாகராஜன் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து இலக்கியப் பணியாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல  இறைவனை பிரார்த்திக்கிறேன். ‘அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மாநூல் முன்னுரையில்

***

 

திருவள்ளூர் N.C.ஶ்ரீதரன், MANAGEMENT CONSULTANT மற்றும் கல்வியாளர்

திரு. நாகராஜன் அவர்களின்சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்நான்காம் பாகம் படித்துப் பார்த்தேன். ஒவ்வொரு பக்கமும் ஒரு பொக்கிஷம்.

சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பற்றி இவ்வளவு எளிமையான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பை வேறு யாராலும் கொடுக்க முடியுமா என்பது சந்தேகம். ஒவ்வொரு பகுதியிலும் அவர் கொடுத்திருக்கும் விவரங்கள் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. படிப்பவர்கள் மிக மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

   இந்தப் புத்தகம் அனைத்துப் பள்ளியிலும் கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை தினமும் பள்ளிகளில் இறை வணக்க கூட்டத்தில் படிக்க வேண்டும்.

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்நான்காம் பாகம் முன்னுரையில்

***

 

தற்போது குடும்பத்துடன் சென்னையில் இவர் வசித்து வருகிறார்.

இவரது மின்னஞ்சல் முகவரி : snagarajans@gmail.com

*************************

swami_48@yahoo.com