வரி விதிப்பது எப்படி? பர்த்ருஹரி, வள்ளுவன், மநு அறிவுரை (Post No.5793)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 17 December 2018
GMT Time uploaded in London – 8-33 am
Post No. 5793


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பர்த்ருஹரி நீதி சதகம் 40, 41, 42, 43

பர்த்ருஹரியின் நீதி சதகத்தைத் தொடர்ந்து காண்போம்

ஏழையாய் இருப்போனுக்கு ஒரு சில தானிய மணிகள் கிடைத்தால் மகிழ்ச்சி; ஆனால் அவனுக்கே நிறைய செல்வம் கிடைத்து கோடீஸ்வரன் ஆகிவிட்டாலோ உலகத்தையே ஒரு சிறு புல் என மதிப்பான். ஆக செல்வத்தின் தன்மை நிலையற்றது. ஒருவனுடைய சூழ்நிலையைப் பொறுத்தே அதன் முக்கியத்துவம்  உள்ளது

பர்த்ருஹரி நீதி சதகம் , ஸ்லோகம் 40

அதாவது செல்வம் ஒருவனை மாற்றி விடும். முதலில் சோற்றுக்கே லாட்டரி அடித்தவனுக்கு, லாட்டரி விழுந்து விட்டாலோ உலகத்தையே மதிக்கமாட்டான்

பரிக்ஷீணஹ கஸ்சித் ப்ருஹயதி யவானாம் ப்ரஸ்ருதயே

ஸ பஸ்சாத் ஸம்பூர்ணஹ கலயதி தரித்ரீம் த்ருண சமம்

அதஸ்சானே காந்தா குருலகுதயார்தேஷு தனினா

மவஸ்தா வஸ்தூனி ப்ரதயதி ச ஸங்கோசயதி ச- 40

இது செல்வம் வந்துவிட்டால் ஒருவன் தலைகால் புரியாமல் திரிவான் என்பதைக் காட்டும்.

தமிழிலும் பழமொழி உண்டு:

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்ரியில் குடை பிடிப்பான் – என்று.

பஞ்சதந்திரக் கதைகளில் விஷ்ணு ஸர்மன் இதை இன்னும் அழகாக வருணிப்பான். முதலில் சோர்ந்து கிடந்த எலிகள், வயிறு கொழுக்கச் சாப்பிட்டவுடன் எகிரிக் குதிக்க ஆரம்பிக்கும் இதுவே செல்வம் வந்தவர்களின் நிலையும் என்பது விளங்கும்.

ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் செல்வம் வந்தவுடன் ஒருவன் எப்படி மாறினான்  என்று சொல்லுகிறார்.

பரமஹம்ஸர்  சொல்கிறார்:-

பணம் என்பது வலிமைமிக்க, தீமைமிக்க கவர்ச்சிப்பொருள்.

ஒருவன் செல்வத்தைப் பெற்றதும் மிகவும் மாறிவிடுகிறான். வணக்கமும் அமரிக்கையும் உள்ள பிராம்மணன் ஒருவன் அடிக்கடி தக்ஷிணேஸ்வரத்து க்கு வருவதுண்டு. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவன் வரவேயில்லை. அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதும் எக்களுக்குத் தெரியவில்லை. ஒரு நாள் நாங்கள் படகு மார்க்கமாக கொன்னாகருக்குப் போனோம்.

படகிலிருந்து கீழே இறங்கும் போது, அந்தப் பிராம்மணன் பிரபுக்களைப் போல கங்கைக் கரையில் உடகார்ந்துகொண்டு, காற்று வாங்குவதைக் கண்டோம். அவன் என்னைக் கண்டதும்,

‘என்ன, ஸ்வாமி, சௌக்கியமா? ‘என்று கம்பீரத் தொனியுடன் கேட்டான். அவனது குரலில் இருந்த மாறுபாட்டைக் கவனித்ததும் நான் ஹிருதயனிடம், இவனுக்கு ஏதோ பணம் கொஞ்சம் கிடைத்திருக்கும் போலிருக்கிறது. என்ன மாறுதல் உண்டாகி இருக்கிறது, பார்த்தாயா? என்றேன். ஹிருதயன் விலா வலிக்கச் சிரித்தான்.

xxxx

வரி விதிப்பது எப்படி?

ஓ அரசனே! இந்தப் பூமி என்னும் பசுவிடம் இருந்து பால் கறக்க விரும்பினால், முதலில் கன்றுகள் என்னும் மக்களுக்கு உணவளித்துப் பாதுகாக்க வேண்டும். உனது மக்களை அன்புடனும் பரிவுடனும் போற்றிப் பாதுகாத்தால், பூமியானது கற்பக மரம் போல வேண்டியதை எல்லாம் உனக்கு அளிக்கும்.–41

இது எல்லா அரசுக்கும் இன்றும் பொருந்தும். முதலில் மக்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யாவிட்டால் அரசனின் வரி விதிப்புகள் எதிர்ப்பையே சந்திக்கும்.

காளிதாசனும் கூட இதை வேறு விதமாகச் சொல்லுவான். ஆயிரம் கிரனணங்களால் கடல் நீரை சூரியன் உறிஞ்சுவது எதற்காகத் தெரியுமா? அதை மழை போல பூமியில் கொட்டதான் என்பான். ஆக அரசனுடைய வரிவிதிப்பு மக்களுக்காகவே!

வரி விதிப்பது பற்றி சாணக்கியன் எழுதிய அர்த்த சாத்திரத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது. அது உலகின் முதலாவது பொருளாதார நூல். ஆகையால் அதில் வியப்பேதும் இல்லை ஆனால் வள்ளுவன், காளிதாசன், மனு முதலானோர் பொருளாதார விடயங்களை எழுத வரவில்லை. ஆயினும் அவர்களும் இவ்விஷயத்தைத் தொட்டுக்காட்டியுள்ளனர்.

அட்டை போல உறிஞ்சு!

மனுவின் வரிவிதிப்பு அணுகுமுறையும் சிறிது வேறுபட்டது.

ஒரு அரசனானவன், அட்டை போல, கன்றுக்குட்டி போல, தேனீ போல கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆண்டுக்கான வட்டியைப் பெறவேண்டும்.(7-129)

அட்டை போல (இரத்தத்தை) உறிஞ்சு என்று சொல்லுவது அவ்வளவு நன்றாக இல்லையே என்று எண்ணலாம். ஆனால் இது பணக்காரர் விஷயத்தில் பொருந்தும். நான் வாழும் லண்டனில் கூட அதிக பணம் சம்பாதிப்போரின் பணத்தில் 60 சதவிகிதத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். இது என்னடா பகற்கொள்ளை? என்று எண்ணுவோம். ஆயினும் கம்பெனிகள் வாரி வழங்குவதால் இந்தக் கட்டுப்பாடு.

அட்டை என்னும் பூச்சி இரத்தத்தை உறிஞ்சியதாலோ, கன்றுக்குட்டி பால் குடித்ததாலோ, தேனீக்கள் தேன் எடுத்ததாலோ எந்தப் பிராணியும் எந்தப் பூவும் அழிவதில்லை.

பணக்கார்களுக்கு அட்டை போலவும், மத்திய தர வர்கத்துக்கு கன்று போலவும் ஏழைகளுக்கு தேனீ போலவும் வரி விதிப்புக் கொள்கை இருக்கட்டும் என்று மனு சொல்லாமல் சொல்லுவான்.

வள்ளுவன் சொல்லுவான்:

அதிக வரி விதிப்பது பாலைவனத்தில் கள்ளர்கள் வழிமறித்து எடுக்கும் பகற்கொள்ளைக்கு நேர் நிகர் என்று.

வேலொடு நின்றான் இடு என்றது போலும்

கோலொடு நின்றான் இரவு (குறள் 552)

பொருள்:- ஒரு அரசன் குடிமக்களை  வருத்தி கட்டாயப்படுத்தி வரி வாங்குவது, வேல் ஏந்திய வழிப்பறிக் கொள்ளைக்காரன் வழி மறித்து பொருளைப் பறிப்பதற்குச் சமம்.

காளிதாசன், அவனது ரகுவம்ச காவியத்தில் சொல்லுவான்:-

ப்ரஜானாமேவ பூத்யர்த்தம்

சதாப்யோ பலிமக்ரஹீத்

சஹஸ்ர குணமுத்ஸ்ரஷ்டும்

ஆதத்தே ஹி ரசம் ரவி: (ரகு 1-18)

சூரியன் தன் ஆயிரம் கிரணங்களால் பல வகையான இடங்களிலிருந்து நீரை எடுக்கிறான். நீரை எடுக்கும் போது நீர் நிலைக்குத் தீங்கு செய்வதில்லை. எடுத்த நீரை மழையாக திருப்பித் தரும்போது பயிர்களும் உயிர்களும் செழிக்கின்றன. மழை எந்த வேறுபாடுமின்றி எல்லோருக்கும்  உதவுவது போல அரசனும் உதவுவான்.

இந்துமத நுல்களில் நாடும் பூமியும் பசுவுடன் ஒப்பிடப்படுகிறது. பசு பால் தருவது போல பூமியும் வற்றாது வளம் கொழிக்கும்.

ராஜன் துதுக்ஷஸி யதி க்ஷிததேனுமேனாம்

தேனாத்ய வத்ஸமிவ லோகமமும் புஷாண

தஸ்மிஞ்ச ஸம்யகனிசம் புரிபுஷ்யமாணே

நானாபலம் பலதி கல்பலதேவ பூமிஹி-41

ஒரு அரசன் நியாயமாக ஆட்சி செய்தால் வளம் கொழிக்கும். அநியாய ஆட்சி செய்தால் வறட்சி நிலவும் என்னும் பர்த்ருஹரியின் கொள்கையில் வள்ளுவனுக்கும் உடன்பாடு  உண்டு

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல் – குறள் 559

நீதி முறை தவறி மன்னன் ஆட்சி செய்தால் அவன் நாட்டில் மழை பெய்யாமல் போகும்.

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையும் தொக்கு – குறள் 559

தர்ம நூல்கள் செப்பும் படி ஆட்சி நடத்தும் மன்னவன் நாட்டில் மழையும் பெய்யும்; விளைச்சலும் பெருகும்.-559

இதையே காளிதாசனும் ரகு வம்ச காவியத்தில் செப்பினான் (5-29/33)

xxxx

அரசனும் விலை மாதும்

ஒரு அரசன் விலை மாதர் போன்றவன் என்று பர்த்ருஹரி சொல்லுவான். இக்கருத்து சங்க இலக்கிய நூலான புற நானூற்றிலும் (365) உள்ளது.

ஸத்யான்ருதா ச பருஷா ப்ரியவாதினீ ச

ஹிம்ஸ்ரா தயாலுஅபி சார்த்தபரா வதான்யா

நித்யவ்யயா ப்ரசுரனித்யதனாகமா ச

வாராங்கனேவ ந்ருபனீதிரனேகரூபா -42

ஒரு அரசனுடைய வாழ்வு ஒரு விபசாரியைப் போல பல உருவங்களை எடுக்கும். அவன் பொய்யும் பேசுவான்; மெய்யும் உரைப்பான். அவன் சுடு சொற்களும் பெய்வான்; இனிய சொல்லும் அருள்வான். கருணையுடன் இருப்பான்;சில நேரங்களில் கொடுங்கோலனாகக் காட்சி தருவான். அவன் கொடயாளியாகவும் இருப்பான்; கருமியாகச் செல்வத்தையும் சேர்ப்பான். சில நேரங்களில் பணத்தை விரயமும் செய்வான்- ஸ்லோகம் 42

இதை அடுத்த ஸ்லோகத்தில் என்ன சொல்கிறான் என்று பார்த்து ஒப்பிட வேண்டும். ஒருவனுடைய போக்கு எப்படியும் இருக்கலாம். அவனுடைய     அப்போதைய மனநிலையே இதற்குக் காரணம் என்றும் கொள்ளலாம் அல்லது அரசனானவன் இப்படி எல்லாம் இருக்கும் நிர்பந்தம் உண்டு என்றும் கருதலாம். ஆனால் அடுத்த ஸ்லோகத்தில் ஆறு நல்ல குணங்களைப் பட்டியலிட்டு  விடுகிறான். ஆகையால் பர்த்ருஹரியின் கொள்கை நமக்குத் தெளிவாகி விடுகிறது.

ஆக்ஞா கீர்த்திஹி பாலனம் ப்ராஹ்மணானாம்

தானம் போகோ மித்ரஸம்ரக்ஷனாம் ச

யேஷாமேதே ஷட்குணா நப்ரவ்ருத்தாஹா

கோஅர்த்தச்தேஷாம் பார்த்திவோபாஸ்ரயேண- 43

பொருள்

ஒரு அரசனுக்கு கீழ்க் கண்ட ஆறு குணங்கள் இல்லாவிடில் அந்த அரசனின் கீழ் வாழ்வதில் அர்த்தமே இல்லை; அரசனுக்குத் தேவையான ஆறு குணங்கள்–

ஆணை இடும் அதிகார தோரணை, புகழ், பிராமணர்களுக்கு பாதுகாப்பு வழங்கல், நண்பர்களைக் காப்பாற்றுதல், தானம், அதே நேரத்தில் இன்பமான வாழ்வு

வள்ளுவனும் இவைகளைச் சொல்லுகிறான்.

அரசனுடைய நீதி வழுவினால், பசுக்கள் பால் தராது; பிராமணர்களுக்கு வேதம் மறந்துவிடும் என்பான். இதன் பொருள்

கோ ப்ராஹ்மணேப்ய ரக்ஷதி (பசுவையும் பார்ப்பனர்களையும் போற்றுவதே நல்லாட்சியின் சின்னங்கள்)- குறள் 560

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின் -560

ஆக பாரதீய சிந்தனை இமயம் முதல் குமரி வரைஒன்றே!

परिक्षीणः कश्चित्स्पृहयति यवानां प्रसृतये
स पश्चात्सम्पूर्णः कलयति धरित्रीं तृणसमाम् ।
अतश्चानैकान्त्याद्गुरुलघुतया‌உर्थेषु धनिनाम्
अवस्था वस्तूनि प्रथयति च सङ्कोचयति च ॥ 1.40 ॥

राजन्दुधुक्षसि यदि क्षितिधेनुम् एतां
तेनाद्य वत्सम् इव लोकम् अमुं पुषाण
तस्मिंश्च सम्यगनिशं परिपोष्यमाणे
नानाफलैः फलति कल्पलतेव भूमिः ॥ 1.41 ॥

सत्यानृता च परुषा प्रियवादिनी च
हिंस्रा दयालुरपि चार्थपरा वदान्या ।
नित्यव्यया प्रचुरनित्यधनागमा च
वाराङ्गनेव नृपनीतिरनेकरूपा ॥ 1.42 ॥

आज्ञा कीर्तिः पालनं ब्राह्मणानां
दानं भोगो मित्रसंरक्षणं च
येषाम् एते षड्गुणा न प्रवृत्ताः
को‌உर्थस्तेषां पार्थिवोपाश्रयेण ॥ 1.43 ॥

tags-வரி விதிப்பது,  விலை மாது, பர்த்ருஹரி நீதி சதகம் 40, 41, 42, 43

–சுபம்—

Xxxx

சும்மா கொஞ்சம் கலாய்க்கலாம் சார், வாங்க! – 2 (Post No.5792)

Written by S Nagarajan

Date: 17 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 52 am


Post No. 5792

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

நாட்டு நடப்பு

சும்மா கொஞ்சம் கலாய்க்கலாம் சார், வாங்க! – 2

ச.நாகராஜன்

வாங்க, வாங்க! இன்னும் கொஞ்சம் கலாய்க்கலாமா, சார்?!

அரசியல்வாதிகளின் தொழில் என்ன?

அரசியல்வாதிகளின் தொழில் என்ன தெரியுமா? சொல்லுங்க!

சொல்றேனே! பிரச்சினை இல்லேன்னா ஏதாவது ஒரு பிரச்சினையை உருவாக்கனும். ஒரு பிரச்சின இருந்தாலோ அதை ஊதிப் பெரிசாக்கனும்.

அட இருக்கிற பிரச்சின அமுங்கிட்டு வரதுன்னா?

ஓ அப்படி கேக்கறீங்களா?

எதானாலும் ஒரு பொது தியரி இருக்குங்க! ஒண்ணு நீங்க Convince பண்ணுங்க, இல்லை confuse பண்ணிவிட்டுடுங்க! இப்படிச் செஞ்சா நிரந்தரமா நீங்க பொது வாழ்க்கையிலே இருக்க முடியுங்க! இது தாங்க இன்றைய Trend!

உதவி : Harry S.Truman

If you can’t convince them confuse them – Harry S. Truman

*

சரி, அரசியல்வாதி எப்படிப்பட்டங்க?

அவன் ஒரு நண்டு மாதிரி. வளைஞ்சு வளைஞ்சு தான் போகத் தெரியும். நேராகவே போக மாட்டான்!

உதவி : அரிஸ்டோபெனஸ்

Aristophanes : You cannot make a crab walk straight!

*

அண்ணே! என்னை ஒரு கமிட்டிலே போட்டிருக்காங்க! உங்க அட்வைஸ் தேவை!

ஆஹா! சொல்றேனே! நிறைய கமிட்டிங்களிலே நான் இருந்திருக்கிறதினாலே பல ரூல்களை ஃப்ரேம் செய்து வச்சிருக்கேன்! உனக்குச் சொல்லாம யாருக்குச் சொல்லப் போறேன்!

எப்பவுமே குறிப்பிட்ட நேரத்துலே கமிட்டி மீட்டிங்கிற்குப் போகாதே! அப்படிப் போனீன்னா நீ ஒரு கத்துக்குட்டின்னு நினைப்பாங்க!

மீட்டிங் ஆரம்பிச்சு பாதி நேரம் ஆகிற வரைக்கும் வாயையே திறக்காதே! அப்படி இருந்தா இந்த ஆள் விஷயம் தெரிஞ்ச ஆள்ன்னு நெனச்சிக்குவாங்க!

முடிஞ்ச மட்டும் எதுலயும் பட்டுக்காம பேசு; அப்ப யாரோட எதிர்ப்பும் உனக்கு வரவே வராது. எல்லாருக்கும் உன்ன பிடிச்சுப் போகும்!

ஏதாவது ஒரு விஷயம் பத்தி சந்தேகம் வந்தாக்க, உடனே ஒரு சப்-கமிட்டி போடச் சொல்லு. எல்லாருக்கும் அது பிடிக்கும்; இன்னும் பலபேரை உள்ள நுழைக்கலாம், இல்லையா! மீட்டிங்கை ஒத்திப் போடு அப்படீன்னு சொல்றதுலே முதல்லே நில்லு.அடடா! அப்புறம் பாரு!! அதுக்காகத் தான் எல்லாரும் வெயிட் பண்ணிட்டிருப்பாங்க! நீ ஃபேமஸ் ஆயிடுவே!

“அண்ணே! நீங்க தெய்வம்’ ண்ணே!”

உதவி : ஹாரி சாப்மேன்

Harry Chapman : Having served on various committees, I have drawn up a list of rules. Never arrive on time; this stamps you as a beginner. Don’t say anything until the meeting is half over, this stamps you as being wise. Be as vague as possible; this avoids irritating the others. When in doubt, suggest that a subcommittee be appointed. Be the first to move for adjournment ; this will make you popular; it is what everyone is waiting for.

*

அரசியல்வாதிக்கும் ராஜதந்திரிக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு ராஜதந்திரி, தான் தேசத்துக்குச் சொந்தம்னு நினைக்கிறான்; அரசியல்வாதியோ தேசமே தனக்குச் சொந்தம்னு நினைக்கிறான்; அவ்வளவு தான்!

உதவி : யாரோ சொன்னது.

Anonymous :A statesman thinks he belongs to the nation, but a politician thinks the nation belongs to him.

*

அரசியல்வாதிக்குச் சுதந்திரமாகச் செயல்பட உரிமை கொடுத்தால்?

அரசியல்வாதிகிட்ட போய் உன் கைகளை நான் கட்ட மாட்டேன்; சுதந்திரமாகச் செயல்படுன்னு சொன்னா, அவன் என்ன செய்வான், முதலில் உன் பாக்கட்ல தான் கையை விடுவான்.

Anonymous : Give a politician a free hand and he will put it in your pocket.

*

அரசியலில் மோசமான எதிரிகளை எப்படிச் சமாளிப்பது?

சொல்றேன். சில சமயங்களில் அரசியலில் நாத்தமடிக்கிற விலங்குகளோட சண்டை போட வேண்டியிருக்கும். ஆனா எந்த ஆயுதம் எடுக்கணுங்கறதை அந்த நாத்தமடிக்கிற விலங்குகள்கிட்ட விடற அளவுக்கு முட்டாளா இல்லாம நீ இருந்தா அது போதும்; ஜெயிச்சடலாம்! புரியுதா?

உதவி : ஜோ கனான்

Joe Cannon : Sometimes in politics one must duel with skunks, but no one should be fool enough to allow the skunks to choose the weapons.

*

இப்படி இன்னும் பல விஷயங்கள் பற்றிக் கலாய்த்துக் கொண்டே இருக்கலாம்,

கலாய்ப்புக்குப் பஞ்சமா என்ன? பிறகு பார்ப்போம்!

tags–கலாய்க்கலாம் – 2

**** 

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 16-12-18 (Post No.5789)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 December 2018
GMT Time uploaded in London – 14-09
Post No. 5789


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் கண்டுபிடிக்க வேண்டிய சொற்களின் எண்ணிக்கை குறைந்தது 9.

கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் இதோ:

குறுக்கே

1. மிக மோசமானவர் என்று பெயர் எடுத்த நவக்கிரஹம்

4. குதிரையைக் கொண்டு நடத்தும் யாகத்தினால் கிட்டும் பலம்.

6. தில்லை அம்பலத்தில் கூத்தாடும் கடவுள்

8. தேவர்களின் குரு

கீழே

1. ஆயிரம்; எல்லாக் கடவுளருக்கும் இந்த எண்ணிக்கையில் துதிகள் உண்டு

2. அறிவு; மேதாவிகளிடத்தில் இருப்பது;கீழேயிருந்து சொல்லை உருவாக்கவும்

3. குதிரைக்குப் போடுவது; கடிவாளம்; கீழேயிருந்து சொல்லை உருவாக்கவும்.

5. நன்னூல் என்னும் தமிழ் இலக்கண நூலை யாத்த முனிவர்

7. லயித்துப் போகும் நிலை (ஸம்ஸ்க்ருதச் சொல்)

X
னீஸ்ன்
X
XXXகா
ஸ்மே


X
XXXX
ம்

வான்


XXXந்X
பிருஸ்
திX

ANSWERS:–

குறுக்கே

1.சனீஸ்வரன் (சரியான பெயர்- சனைஸ்சரன்)- மிக மோசமானவர் என்று பெயர் எடுத்த நவக்கிரஹம்

4.அஸ்வமேத பல- குதிரையைக் கொண்டு நடத்தும் யாகத்தினால் கிட்டும் பலம்.

6.அம்பலவாணன்  — தில்லை அம்பலத்தில் கூத்தாடும் கடவுள்

8.பிருஹஸ்பதி– தேவர்களின் குரு

கீழே

1.சஹஸ்ரம்– ஆயிரம்; எல்லாக் கடவுளருக்கும் இந்த எண்ணிக்கையில் துதிகள் உண்டு

2. மேதஸ் – அறிவு; மேதாவிகளிடத்தில் இருப்பது; கீழேயிருந்து சொல்லை உருவாக்கவும் (ஸம்ஸ்க்ருதச் சொல்)

3.லகான்  — குதிரைக்குப் போடுவது; கடிவாளம்; கீழேயிருந்து சொல்லை உருவாக்கவும்.

5.பவணந்தி- நன்னூல் என்னும் தமிழ் இலக்கண நூலை யாத்த முனிவர்

7.லயஸ்- லயித்துப் போகும் நிலை (ஸம்ஸ்க்ருதச் சொல்)

–SUBHAM–

சும்மா கொஞ்சம் கலாய்க்கலாம் சார், வாங்க! – 1 (Post No.5787)

Written by S Nagarajan

Date: 16 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 31 am


Post No. 5787

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

நாட்டு நடப்பு

சும்மா கொஞ்சம் கலாய்க்கலாம் சார், வாங்க! – 1

ச.நாகராஜன்

நம்ம நாட்டு நடப்பைப் பத்தி பல பேர் பல காலத்திலேயும் சொல்லிட்டாங்க சார்!

சிலதைப் பார்ப்போம்; சிரிப்போம்!

உடம்பு சரியில்லீங்க; என்ன பண்றது?

உடம்பு சரியில்லாம போச்சு; என்ன பண்றது? டாக்டர் கிட்ட போனேன். அது இரட்டை மோசடியாப் போச்சு; அவர் என் வியாதி பத்தி இன்னொரு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கன்ஸல்ட் பண்றாரு! அவருக்கு ஒரு ஃபீஸ்; இவருக்கு ஒரு ஃபீஸ். இரட்டை மோசடி சார்!

இது தாங்க இப்ப எல்லா ஆஸ்பத்திரிலேயும் நடக்குது!

A Cynic says that double jeopardy, which we hear so much of nowadays, is when your doctor calls in a consulting physician.

*

கணவன் மனைவி பத்தி மாமியார் கிட்ட என்ன சொன்னான்?

மாமியார் தன் பெண்ணைப் பத்தி மாப்பிள்ளை கிட்ட வந்து, ‘அவ எப்படி செய்றா? அவ ஸ்பீடு எப்படி’ன்னு கேட்டா!

கணவன் சொன்னான்: ப்ரமாதம்!அவ சூப்பர்மார்கெட்ல நடந்தா ஒரு மணிக்கு 3000 ரூபாய்ங்க்ற ரேஞ்சில இருக்கு அவ ஸ்பீடு!

சொன்னவர் ஜோசப் சலக்

 Today women often push carts through supermarkets at speeds over $ 65 an hour : Joseph Salak

*

பிஸினஸ்ல யார் பார்ட்னர்?

உங்க பிஸினஸ்ல யார் சார் பார்ட்னர்?

அட என்னங்க, நீங்க! தெரியாதது மாதிரி கேட்கறீங்க! வழக்கமான பார்ட்னர் தான். ஒவ்வொரு பிஸினஸ்லயும் அரசாங்கம் தானே சீனியர் பார்ட்னர். லாபம் வந்தாலும் வராட்டியும் அவருக்கு பங்கை பிஸினஸ் ஆரம்பிக்கறதுக்கு  முன்னாடியே கொடுத்துடறோம் இல்ல!!!

உதவி : நார்மன் கஸின்ஸ்

Government in the U.S. today is a senior partner in every business in the country.  – Norman Cousins

*

நாளைய பத்தி சொல்லுங்க!

நாளைய பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்!

நேத்து இன்னியபத்தி நாளைன்னு சொன்னோம்; அவ்வளவு தான்!

உதவி :ஜேனட் கேரி

Yesterday we called today tomorrow! – Janet Cary

*

உங்க வேலை என்னங்க?

‘உங்க வேலை என்னங்க? கொஞ்சம் விவரமா சொல்றீங்களா?’

‘சொல்றேனே, விவரமாவே சொல்றேனே!

தொழிலாளிகள் வேலை பார்க்கறாங்க!

ஊதாரிகள் வெட்டிச் செலவு செய்றாங்க!

வங்கிக்காரங்க கடன் கொடுக்கறாங்க!

பொம்பளைங்க செலவழிக்கறாங்க!

திருட்டுப்பசங்க போலியா தயாரிக்கறாங்க!

வரிகளால எடுத்துகறாங்க!

சாவறங்க விட்டுட்டுப் போறாங்க!

வாரிசுங்க வாங்கிக்கிறாங்க!

சேர்க்க ஆசைப்படறவங்க சேர்க்கறாங்க!

கருமிகள் ஏங்குறாங்க!

கொள்ளைக்காரங்க கொள்ளையடிக்கிறாங்க!

பணக்காரங்க அதிகமாக்கிக்கறாங்க!

சூதாடிங்க சூதாடறாங்க!

இவ்வளவையும் நான் பயன்படுத்திக்கிறேங்க; அவ்வளவு தாங்க, என்னோட வேலை! நான் ஒரு அரசியல்வாதி!’

சொன்னவர் – யாரோ!

Workers earn it,

Spendthrifts burn it,

Bankers lend it,

Women spend it,

Forgers fake it,

Taxes take it,

Dying leave it,

Heirs receive it,

Thrifty save it,

Misers crave it,

Robbers seize it,

Rich increase it,

Gamblers lose it  ….

I could use it

*

இலக்கியவாதி என்ன ஆனார்?

ஏம்பா! நீ ஒரு இலக்கியவாதி தானே? இப்ப என்ன பண்றே?

நான் ஒரு ஜர்னலிஸ்ட் ஆயிட்டேங்க!

அப்படீன்னா?

அதாங்க! இலக்கியங்கறது பரபரப்பா சூடா வித்தியாசமா அப்பப்ப தர ஜர்னலிஸம் தாங்க!

உதவி : மாத்யூ ஆர்னால்ட்

Journalism is literature in a hurry – Mathew Arnold

*

நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்ன்ன்ன்!

நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன், என் காதலியை! நீடிச்சிருக்க ஆசிர்வாதம் பண்ணுங்க!

பண்றேனே!

உன்னோட மணவாழ்க்கை

காதல் ததும்பி வழிய ஒரே வழி

இரண்டு பேர்ல எப்பல்லாம் நீ தப்பு செய்யறயோ, உடனே அவகிட்ட ஒத்துக்க!

எப்பல்லாம் நீ சரியா இருக்கயோ, உன் வாயை அவகிட்ட மூடிக்க!

உதவி : யாரோ!

To keep your marriage brimming

With love in the laving cup,

Whenever you’re wrong, admit it,

Whenever you’re right, shut up!

*

உன்னைப் பற்றி நீயே சரியாகப் புரிந்து கொள்!

சார்! உன்னை நீ அறிவாய்ன்னு சாக்ரடீஸ் மாதிரி அடிக்கடி சொல்றீங்களே,எப்படி சார் அறியறது!

“அட, உன் ஃபிரண்டு மாதிரி இருக்கணும்னு சொல்றேம்பா!”

“அவன் மாதிரின்னா?”

அவன் என்ன பண்ணான்! ரூம் வாசல்லே ஒரு சீட்டை எழுதி வச்சான்’ல்லே அது மாதிரிப்பா! சீட்ல என்ன எழுதி இருந்தான்:

வாட்ச்மேன்! நிச்சயமா என்னை காலம்பற ஏழு மணிக்கு எழுப்பிடு. ரொம்ப முக்கியமான தவிர்க்க முடியாத வேலை சரியா ஏழு  மணிக்கு இருக்கு. மறந்துடாம எழுப்பிடு. சரியா டயத்துக்கு அதை முடிக்கணும். அதுனாலே நான் எழுந்துட்டேன்னு குரல் கொடுக்கற வரைக்கும் திருப்பித் திருப்பிக் கதவைத் தட்டு. மறந்துடாதே!

இந்த வரிகளுக்குக் கீழே ஒரு குறிப்பு இப்படி இருந்தது – எதுக்கும் பத்து மணிக்கும் ஒரு முறை வந்து பாத்துடு!

KNOW THYSELF!

A Yale undergraduate left on his dooe a placard for the janitor on which was written, “Call me at 7 O’Clock; it is absolutely necessary that I get up at seven. Make no mistake. Keep knocking until I answer. Under this he had written: “Try again at ten”.

*

என்னங்க, கலாய்ப்பு எப்படி இருக்கு? இன்னும் கொஞ்சம் கலாய்க்கலாமா?

Tags- கலாய்க்கலாம் சார், வாங்க! – 1 

*** 

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 15-12-18 (Post No.5785)

Written by London Swaminathan


swami_48@yahoo.com



Date: 15 December 2018


GMT Time uploaded in London – 16-49

Post No. 5785


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

மிகவும் எளிய குறுக்கெழுத்து; ஐந்தே சொற்கள்; முயன்று பாருங்கள் விடையும் உளது

1. சாளுக்கிய மன்னன்; இவன்பெயரில் இரண்டு மன்னர்கள் ஆண்டனர்.

4. அச்சம் தரும் (வலது கோடியில் எழுத்து துவங்கும்)

5. -சமணர்களின் மலை

2. சிவனுடைய உருவமற்ற நிலையில் அர்ச்சித்தல்

3. ஐந்தெழுத்து மந்திரம்

TAMIL CROSS WORD 15-12-18

புலிகேசி
x
ங்
வா
ங்


பூ



ஜைலை

1.புலிகேசி- சாளுக்கிய மன்னன்; இவன் பெயரில் இரண்டு மன்னர்கள் ஆண்டனர்.

4.பயங்கர- அச்சம்தரும்

5.ஜைன மலை- சமணர்களின் மலை

2.லிங்கபூஜை- சிவனுடைய உருவமற்ற நிலையில் அர்ச்சித்தல்

3.சிவாயநம- ஐந்தெழுத்து மந்திரம்

tags–குறுக்கெழுத்துப் போட்டி 15-12-18 

–SUBHAM–

பிதியாஸ் -டாமன் நாடகம் (Post No.5780)

Compiled by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 14 December 2018


GMT Time uploaded in London – 8-28 am

Post No. 5780


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

நேற்று பிதியாஸ்- பிசிராந்தையார் ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டேன். மலேசியத் தமிழ்ப் பாட நூலில் பிதியாஸ்- டாமன் நாடகம் சின்ன நாடகமாக வெளியாகியுள்ளது. இதே போல பிசிராந்தையார்- கோப்பெருஞ்ச்ழஷன் நாடகமும்  எழுதப்படவேண்டும்.

tags- பிதியாஸ் -டாமன் நாடகம்

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி14-12-18 (Post No.5779)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 14 December 2018


GMT Time uploaded in London – 7-54 am

Post No. 5779


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்திலுள்ள 18 தமிழ்ச் சொற்களைக் காணுங்கள்; காண முடியாவிட்டால் கீழேயுள்ள விடைகளை நாடுங்கள்.

1
2
3
4
4a








4b





5

6a6





7

8
6b
9

10



11a
11





12



குறுக்கே

1.உழவர் தொழிலுக்குத் தேவை

2.முஸ்லீம்களின் ஒரு பிரிவு

4.ஹோட்டல்களில் கிடைக்கும்

5.கபடிக் கபடி

6.அரசியல்வாதிகளுக்குப் பிடிக்கும்

6b.-புகழ், தேஜஸ்

9.பாசம்

11.வானத்தில் பறக்கும்

11a.தவறு செய்தால் இது போய்விடும்

12.வதந்தி

கீழே

2.ராமனின் புதல்வர்கள்

3.ஜப்பானியர் மூக்கு

4.- வங்கியில் கிடைக்கும்

4b- பூங்கா

6.சிவனின் தோழர்கள்

6. 6b.- மலர், பெருமாளின் மனைவியருள் ஒருவர்

7.பெண்களுக்கு மிகவும் பிடித்தது

6a.அழுக்கு

6b.தேவனின் பெண்பால்

8.ஏறக்குறைய

10.கொடு

9.பூமி

ANSWERS

குறுக்கே

1.கலப்பை 2.லப்பை 4.கா(4A.) ரம் 5.சடுகுடு 6.பூ6aமாலை

6b.தேசு 9.அன்பு 11.வி 11a.மானம் புரளி.

கீழே

2.லவகுசன், 3.சப்பை,4.கா (4B)சோலை, 6.பூதம், 6.பூ 6b.தேவி

7.வம்பு, 6A.மாசு,  6b.தேவி, 8.சுமார், 10.அளி, 9.புவி

க1
ல2ப்பை3
கா4
ர4a
ம்



ப்
சோ4b

டுகுடுச5
லைமா6aபூ6




வ7

சு8
தே6b
பு9
ன்அ10

ம்மா11a
வி11
வி

ளி
பு12

ர்

TAGS – குறுக்கெழுத்துப் போட்டி14-12-18

–SUBHAM–

தமிழ் நாட்டு பிசிராந்தையாரும் கிரேக்க நாட்டு பிதியாஸும் (Post No.5776)

தமிழ் நாட்டு பிசிராந்தையாரும் கிரேக்க நாட்டு பிதியாஸும் (Post No.5776)

Research Article written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 13 December 2018


GMT Time uploaded in London – 18-28

Post No. 5776


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கிரேக்க நாட்டு (கிரீஸ்) இலக்கியத்தில் அழியாத இடம் பெற்ற கதை பிதியாஸ்- டாமன் (Pythias- Damon) நட்புறவுக் கதை. அதை சங்க கால இலக்கிய பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் கதையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே இந்த ஆராய்ச்சிக் கட்டுரை.

நட்பின் இலக்கணம் என்ன?

வள்ளுவன் தமிழ் வேதமான திருக்குறளில் அழகாகச் சொல்லிவிட்டான்:

முகநக நட்பது  நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு-786

பொருள்

ஒருவரை ஒருவர் சந்தித்துச் சிரித்துப் பேசுவது உண்மையான நட்பு அல்ல; மனத்தளவில் உள்ளன்போடு ஒருவரை ஒருவர் போற்றுவதும் பாராட்டுவதுமே நட்பு

இதற்கு முன்னுள்ள குறளில் இன்னும் தெளிவாகச் சொல்கிறார்:-

புணர்ச்சி பழகுதல்  வேண்டா உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும் – 785

பொருள்

நட்பு கொள்வதற்கு ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்து, கட்டித் தழுவி, கை குலுக்கிப் பேச வேண்டும் என்பது  தேவையல்ல; ஒரே மாதிரியான சிந்தனையே (same wave length) நட்பு என்னும் உரிமையைக் கொடுத்துவிடும்.

இதற்கு முன்னுதாரணமான கதை கோபெருஞ்சோழன்  –  பிசிராந்தையார் கதையாகும்.

பலரும் அறியாத பிதியாஸ் – டாமன் கதையை முதலில் பார்த்துவிட்டு பிசிராந்தையாருக்கு வருவோம்.

கிரேக்கநாட்டின் மிகப்பெரிய தத்துவ அறிஞர் பிதகோரஸ் (Pythagoras) . அவர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். அவரும் வள்ளுவரைப் போலவே நட்பின் இலக்கணத்தை வரையரை செய்துள்ளார். அது என்ன? அதற்கு முன்னுதாரணமான கதைதான் — உண்மைக் கதைதான்  — பிதியாஸ் கதை.

பிதியாஸும் டாமன்   என்பவரும் இணை பிரியாத் தோழர்கள். கிரேக்க நாட்டின் தற்போதைய தலைநகரான ஏதென்ஸில் வாழ்ந்தவர்கள். ஒருமுறை அவர்கள் சைரக்யூஸ் (Syracuse) நகருக்கு வந்தனர். அங்கு டயோனிஸியஸ் (கி.மு. 405-367) என்ற கொடுங்கோலன் ஆட்சி நடாத்தி வந்தான். பிதியாஸ் ஒரு உளவாளி என்று எண்ணி சிறைப் பிடித்தான். எவ்வளவோ மன்றாடியும் மன்னன் விடுவதாயில்லை. மரண தண்டனையும் விதித்தான். இதைக் கேட்ட அவனது ஆருயிர்த் தோழன் டாமன் மனம் வெதும்பினான்.

பிதியாஸ், சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் தொலை தூரத்தில் வசிக்கும் தனது தாயார் உடல் நலம் குன்றி இறந்துவிடும் நிலையிலிருந்ததால் மன்னரிடம் ஒரே ஒரு வேண்டு கோள் மட்டும் விடுத்தான்.

“என்னுடைய மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னர், என் தாயாரை மட்டும் தரிசித்துவிட்டு, விடை பெற்று வருகிறேன்; அனுமதி தாருங்கள்; நான் ஓடி விடமாட்டேன்; கட்டாயம் திரும்பி வருவேன்; என்னை நம்புங்கள்” — என்றான்.

கொடுங்கோலன் டயோனிஸஸ் அதை நம்பவில்லை; உன் தாயாரோ தொலைதூர கிராமத்தில் வசிக்கிறாள்; உன்னை வெளியே விட்டால், நீ கூண்டுக் கிளியாகப் பறந்து விடுவாய். நீ திரும்பி வருவாய் என்று நம்புவதற்கு நான் என்ன இளிச்சவாயனா; முடியாது போ– என்றான்.

அப்போது அங்கே டாமன் பிரவேசித்தான்.

மன்னர் மன்னவா; பிதியாஸ் என்னுடைய ஆப்த சிநேகிதன்; அவனுக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்; அவன் சொன்ன நாட்களுக்குள் திரும்பி வராவிடில், நான் மரண தண்டனையை ஏற்கிறேன்; அவனை விடுத்து அந்த கை விலங்குகளை எனக்குப் பூட்டுங்கள். அவன் வராவிடில் என்னைக் கொல்லுங்கள்- என்றான். மன்னரும் கை விலங்கை மாற்றி பிதியாஸை அனுப்பிவிட்டு டாமனைப் பிடித்து சிறையில் தள்ளினான்.

அம்மாவைப் பார்க்கச் சென்ற பிதியாஸ் வரும் அறிகுறியே இல்லை; நாளையுடன் கெடு முடிகிறது.பிதியாஸ் வராவிட்டால் டாமன் தலை உருளுவது நிச்சயம். ஆனால் டாமநோ கொஞ்சமும் அஞ்சவில்லை. கெடு முடிவதற்குள் பிதியாஸ் வருவது உறுதி என்று கருதினான்.

கெடு முடியும் தருவாய். டாமனை மரண தண்டனை மேடைக்கு இட்டுச் சென்றனர். அப்போது வாசலில் ஒரே ஆரவாரம். காவல் காரன் ஓடி வந்து பிதியாஸ், அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருப்பதாக அறிவித்தான். உடனே அவனை இங்கே அனுப்பு என்றான் மன்னன்.

பிதியாஸ் மூச்சு இளைக்க இளைக்க பேசினான்,

மன்னர் மன்னவா என்னை மன்னியுங்கள்; என் அருமை நண்பன் டாமனை பெரிய இக்கட்டில் வைத்தது என் தவறே. நான் வரும் வழியில் பருவ மழை கொட்டி கப்பல் திணறிப்போய் தாமதமாகிவிட்டது. டாமனை விடுங்கள் நான் உங்கள் கட்டளைப்படி மரண தண்டனையை ஏற்பேன் என்றான்

இதைக்கேட்ட மாத்திரத்தில் கொடுங்கோல் மன்னனின் மகன், மரண தண்டனையை நிறை வேற்றும் வெட்டியான் ஆகியோர் கண்களில் கண்ணிர் பெருகியது

அரிய நட்பின் பெரிய சின்னம் பிதியாஸ்- டாமன் நட்புறவு என்பதை அறிந்த கொடுங்கோல் மன்னன் டயோனிஸஸ், இருவரையும் விடுதலை செய்தான். நீங்கள் இருவரும் என்னுடனும் நப்பு பாராட்டுங்கள் என்று இறைஞ்சினான்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

இப்போது எல்லோரும் அறிந்த பிசிராந்தையார்- கோப்பெருஞ் சோழன்  கதையைக் காண்போம்.

கோப்பெருஞ் சோழனை அவனுடைய மகன்கள் எதிர்த்தபோது, எயிற்றியனார் என்னும் புலவர் சொற்படி, நாட்டை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்தார். வடதிசை புனிதமான திசை என்பதால் பாண்டவ சஹோதர்கள் போல வடதிசை நோக்கி நடந்து கொண்டே இருந்து பூமியில் உடல் விழுந்து இறப்பர் பலர்; சிலர் இருந்த இடத்திலேயே வடதிசை நோக்கி அமந்து இறப்பர்; இந்த உண்ணா விரதத்துக்கு பிராயோபவேசம் என்று பெயர். ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்திலும் புறநானூற்றிலும் காணலாம்.

கோபெருஞ் சோழன் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதை அறிந்து பலரும் அவருடம் பந்தலில் உடகார்ந்து உயிர்துறந்தனர். பொத்தியார் என்ற புலவரை மட்டும் சோழன் திருப்பி அனுப்பிவிட்டான். நீ ஆண் குழந்தை பிறந்த பின்னர்தான் இப்படி சாக முடியும் என்று வீட்டுக்கு அனுப்பிவிட்டான். ஆனால் மன்னர், ஒரு ஆசனத்தை மட்டும் பிசிராந்தையாருக்காக ‘ரிஸர்வ்’ செய்தான். எல்லோருக்கும் ஆச்சர்யம். மன்னரே; அவரோ தொலைதூரத்தில் உள்ளார் உம்மையோ பார்த்ததே இல்லை. அவரை நண்பர் என்று சொல்லி இடம் ஒதுக்கச் சொல்கிறீரே என்று வியந்தனர்.

அதற்கு சோழன் பதில் சொல்கிறான்

தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்

பிசிரோன் என்பஎன் உயிர் ஓம்புநனே;

செல்வக் காலை நிற்பினும்

அல்லற்காலை நில்லலன் மன்னே (புறம் –215)

பொருள்

பாண்டிய நாட்டில் தொலைதூரத்தில் பிசிர் என்னும் ஊரில் என் நண்பன் இருப்பதாகச் சொல்லுவர். அவன் எனக்கு செல்வம் இருந்த காலத்தில் வாராவிட்டாலும் துன்பம் வந்த காலத்தில் வாராது இருக்க மாட்டான்

அவர் சொன்னபடியே பிசிர் வந்தார்! உசிர் தந்தார்!!

அவருடைய ஆரூயிர் நண்பர் புலவர் பிசிராந்தையார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததே இல்லை. ஆயினும் சோழன் எதிர்பார்த்தது போலவே பிசிராந்தையாரும் சாகும் வரை உண்ணா நோன்பில் கலந்து உயிர்நீத்தார்.

பிதியாஸ் கதைக்கு ஆதாரம்-  கிரேக்க  ஆசிரியர் அரிஷ்டசேன, ரோமானிய ராஜதந்திரி சிஸரோ, கிரேக்க ஆசிரியர் டியோதரஸ் சிகுலஸ்

பிசிராந்தையார் கதைக்கு ஆதாரம்- புறநானூறு பாடல்கள் 213-223

பிசிராந்தையார் யார்?

சங்க காலப் புலவர். அவர் பாடிய நரை முடி இல்லாமைப் பாடல் மிகவும் பிரஸித்தம்:

ஐயா, தொண்டுக் கிழமாகிவிட்டீரே; முடி மட்டும் கருக்கவில்லையே; ஏதேனும் கூந்தல் வளர் தைலம் தடவுகிறீரோ என்று எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். அவர் சொல்லுகிறார்:- ஐயன்மீர் என் வீட்டிலும் ஓம் சாந்தி, நாட்டிலும் ஓம் சாந்தி, என் மனதிலும் ஓம் சாந்தி; இப்படி சாந்தி நிலவுகையில் முடி எப்படி நரைக்கும்? என்று பாடுகிறார்:–

யாண்டு பலவாக நரையில வாகுதல்

யாங்கா கியரென வினவுதிராயின்

மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;

யான்கண் டனையர் என் இளையரும்: வேந்தனும்

அல்லவை செய்யான்காக்கும்அதன் தலை

ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே

——(புறநானூறு ,பாடல் எண். 191)

 பொருள்:-

நுமக்குச் சென்ற ஆண்டுகளோ  பலவாயின; இருந்தும் நரைமுடி காணவில்லை. இது எப்படி? என்று கேட்கிறீர்களா?

என் மனைவி நல்லவள்; என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள்; என்னிடம் பணிபுரியும் ஏவலரோ நான் ‘எள் என்றால் எண்ணை யாக’ நிற்பர்; குறிப்பறிந்து ஒழுகும்  தன்மையர். என் அரசன், எந்த தவற்றையும் செய்யான்; இதற்கெல்லாம் மேலாக என் ஊரிலுள்ள அறிஞர்கள் புலன்களை வென்று, உயர்ந்த குறிக்கோள் உடையவர்கள். (எனக்கு கலையே இல்லை; கவலை இல்லாதோருக்கு நரை முடி வராதே!)

புறநானூற்றிலுள்ள (பாடல் 191) படுத்தும்.

xxx

பிதியாஸ் – டாமன் கதை திரைப்படங்களாகவும் நாடகங்களாகவும் பரவியிள்ளது. அவர்கள் நட்புறவு பற்றிய பாடல்களும்  உண்டு.

கிரேக்க கதை காட்டும் மற்ற உண்மைகள்

1. இந்துக்களைப் போலவே அவர்களும் சொன்ன சொல் மீறாதவர்கள். அரிசந்திரனை நினைவு படுத்துகிறது பிதியாஸ் கதை.

2.நட்புறவின் சிறப்பு; பஞ்ச தந்திரக் கதைகளின் முதல் பகுதியே நட்புறவின் சிறப்பைப் பற்றியதே; குசேலர்- கிருஷ்ணரின் நட்புறவு மற்றொரு எடுத்துக் காட்டு; உயிர் காப்பான் தோழன். சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘எ டேல் ஆப் டூ சிட்டிஸ்’  (A Tale of Two Cities by Charles Dickens)  நாவலில் சிட்னி கார்ட்டனின் தியாகமும் நினைவு கூறத்தக்கது.

3. தாயைக் காண பிதியாஸ் மன்றாடியது- மாதா, பிதா குரு தெய்வம் என்ற வசனத்தை நினைவு படுத்தும்.

2500 ஆண்டுகளுக்கு முன்பு உலகம், தார்மீக ரீதியில் உளுத்துப் போகாமல் இருந்தது. போகப் போக  கழுதை தேய்ந்து ட்டெறும்பு ஆகி விட்டது.

வாழ்க நட்புறவு!

tags–நட்புறவு, 

பிசிராந்தையார், பிதியாஸ்- டாமன்

–subham–

யார் இந்தக் கவிஞர்? யார் அந்தச் சிறுமி? (Post No.5775)

Compiled  by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 13 December 2018


GMT Time uploaded in London – 7-58 am

Post No. 5775


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். கருணையே வடிவான அந்தப் பெண்மணி உலகப் புகழ் பெற்றாள். அவரைப் பாடிய கவிஞரும் தமிழ் கூறு நல்லுலகம் முழுதும் பிரசித்தமானவரே!

கவிதையைக் கடைசி வரை படித்தால் புதிர் விடுபடும்.

tags- அழ.வள்ளியப்பா, பிளாரன்ஸ் நைட்டிங்கேல்

நன்றி-மலேசிய தமிழ்ப் பாடநூல்

24 பன்மொழிப் புலவர்களைத் தேடும் போட்டி (Post No.5773)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 12 December 2018


GMT Time uploaded in London – 20-33

Post No. 5773


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

குறைந்தது 24 புலவர்கள் இக்கட்டத்தில் மறைந்துளர். பல மொழிகளில் ராமாயணம் எழுதியோர், தேவாரம் திருவாசகம், திருப்பாவை பாடியோர், தமிழ் மூதாட்டி முதல், யாதும் ஊரே யாவரும் கேளிர் — பாடிய புறநானூற்றுப் புலவர்கள் உள்பட 24 பேர்! பெயரைப் படித்தாலேயே புண்ணியம் கிட்டும்.

ம்ன்ர்
பிள்ர்ர்ணி
டா
ர்ண்மூல்ந்தான்

மாசுபூ
துசிதாஸ்ராங்

கிமீல்வாமீகு 
ழுத் ச் சன் 
காளிதான்ற 
ர்ளுள் வ ம்ன்
யாணாண்   வ
திவ்வைந்க்
தாகூர்பீகீ
பாப்ர்ர்
திருவாவூ ரர்

விடைகள்

கம்பன், காளிதாசன், துளசிதாஸ், வால்மீகி, மீரா, கபீர், தாகூர், பாரதியார், வள்ளுவர், கபிலர், கணியன் பூங்குன்றன், கல்ஹணன், நக்கீரன், மாமூலர், பரணர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், திருவாதவூரர், ஆண்டாள், அவ்வை, எழுத்தச்சன், பசவண்ணா, ராமதாஸர்

tags–புலவர்கள்,தேடும் போட்டி

–SUBHAM–