ஹென்றி ஃபோர்டின் வெற்றிக்குக் காரணம் (Post No.5486)

WRITTEN BY S NAGARAJAN

Date: 29 September 2018

 

Time uploaded in London – 6-11 AM (British Summer Time)

 

Post No. 5486

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ஹென்றி ஃபோர்டின் வெற்றிக்குக் காரணம் மறுபிறப்பு நம்பிக்கையே!

ச.நாகராஜன்

1

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை; இந்தியாவில் மதமாற்றத்தில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்று கிறிஸ்தவ பாதிரிகள் மும்முரமாக ஈடுபட்டு கோடிக் கணக்கில் டாலர்களைத் திரட்டுவதற்கான காரணம் அவர்களின் முதலுக்கே மோசம் வந்ததால் தான்!

 

மேலை நாடுகளில் இன்று ஏராளமானோர் மறுபிறப்பு நம்பிக்கை கொண்டு மறுபிறப்பு கொள்கை பற்றி அறிய மிகுந்த ஆவல் கொண்டு ஹிந்து மதத்தின் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர்.

 

இது அடிப்படையையே ஆட்டம் காண வைப்பதால் ஹிந்து மதத்தின் மீது  ஒரு மோசமான வெறுப்பை கிறிஸ்தவ பாதிரிகள் கொண்டுள்ளனர்.

 

ஆனால் மறுபிறப்பு நம்பிக்கையை நூறாண்டுகளுக்கு முன்பேயே  மேலை நாட்டில் பல பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் கொண்டிருந்தனர் என்பதை ஆதாரபூர்வமாக  வரலாறு நிரூபிக்கிறது.

மறுபிறப்பு நம்பிக்கையே தனது வெற்றிக்குக் காரணம் என்று அழகுறச் சொன்னவர் ஹென்றி போர்ட். மோட்டார் மன்னன் என்ற பெயரால் செல்லமாக அழைக்கப்படும் போர்ட் வாழ்க்கை சுவை தரும் ஒன்று.

 

 

2

 

ஹென்றி போர்ட் (பிறப்பு 30-7-1863 மறைவு 7-4-1947) தனது 26ஆம் வயது முதலே மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவரே San Francisco Examiner என்ற பத்திரிகைக்கு 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் இப்படி:

 

I adopted the theory of Reincarnation when I was twenty six. Religion offered nothing to the point. Even work could not give me complete satisfaction. Work is futile if we cannot utilise the experience we collect in one life in the next. When I discovered Reincarnation it was as if I had found a universal plan I realised that there was a chance to work out my ideas. Time was no longer limited. I was no longer a slave to the hands of the clock. Genius is experience. Some seem to think that it is a gift or talent, but it is the fruit of long experience in many lives. Some are older souls than others, and so they know more. The discovery of Reincarnation put my mind at ease. If you preserve a record of this conversation, write it so that it puts men’s minds at ease. I would like to communicate to others the calmness that the long view of life gives to us.

 

 

“26ஆம் வயதில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையைக் கொள்ள ஆரம்பித்தேன். மதம் ஒன்றும் தர முன்வரவில்லை. வேலை கூட பூரண திருப்தியைத் தரவில்லை. ஒரு பிறப்பில் நாம் பெற்ற அனுபவத்தை இன்னொரு பிறவியில் நாம் பயன்படுத்த முடியவில்லை எனில் அது மிக மோசம். மறுபிறப்பு பற்றி நான் கண்டுபிடித்த போது ஒரு பிரபஞ்ச திட்டத்தை கண்டுகொண்டது போல இருந்தது. எனது கருத்துக்களை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்தேன். காலம் என்பது இனி ஒரு எல்லைக்குட்பட்டதாக இல்லை. கடிகாரத்தின் முள்களுக்கு நான் இனி அடிமை இல்லை. மேதைத் தனம் என்பது அனுபவம். சிலர் அதை ஒரு பரிசு என்றோ அல்லது ஒரு திறமை என்றோ நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது பல ஜென்மங்களில் ஏற்பட்ட அனுபவங்களின் விளைவே. சிலர்  மற்ற ஆன்மாக்களை விட முதியவர்கள். ஆகவே அவர்களுக்கு அதிகம் தெரியும். மறுபிறப்பைக் கண்டுபிடித்ததிலிருந்து எனது மனம் தெளிவாக இருக்கிறது. இந்த உரையாடலை நீங்கள் பாதுகாத்தீர்கள் என்றால் இது மனித மனங்களை தெளிவாக இருக்கச் செய்கிறது என்று எழுதுங்கள். நான் மற்றவர்களுக்குச் சொல்ல விரும்புவது வாழ்க்கை பற்றிய நீண்ட நோக்கு நமக்குத் தரும் அமைதியைப் பற்றியே

போர்ட் கூறியதில் ஒரு சிறிய பகுதியையே மேலே நாம் படித்தோம்.

 

இன்னும் ஏராளமாக அவர் மறுபிறப்பு பற்றிக் கூறியிருக்கிறார்.

மனித வாழ்வில் ஒரு ஆறுதலையும் அர்த்தத்தையும் தரும் மறுபிறப்பு நம்பிக்கையே தன் வெற்றிக்குக் காரணம் என்று அவர் கூறியிருப்பது பொருள் பொதிந்த ஒன்று.

 

3

அமெரிக்காவின் 25வது ஜனாதிபதியான வில்லியம் மக் கென்லி (William McKinley) (பிறப்பு : 29-1-1843 சுடப்பட்டு மரணமடைந்த தேதி 14-9-1901) 1901ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி 50000 பேர் அடங்கிய ஒரு கூட்டத்தில் பங்கு கொண்டார். அவரைக் கொலை செய்ய முயன்ற ஜொல்காஸ் (Czolcosz) அது முடியாமல் போகவே மறுநாள் அவர் டெம்பிள் ஆஃப் மியூசிக் மைதானத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வந்த போது அவர் அருகில் வந்து அவரது அடிவயிற்றில் இரு முறை சுட்டான். மரண காயமடைந்த மக்கென்லி செப்டம்பர் 14ஆம் தேதி மரணம்டைந்தார்.

அவரது இறுதிச் ச்டங்கில் கலந்து கொள்ள வந்தார் போர்ட். அப்போது அவரது நண்பரான ஆலிவர் பார்தெல் (Oliver Barthel) என்பவர் அவரிடம் ஆர்லாண்டோ ஸ்மித் (Orlando Smith)  எழுதிய “A Short view of the Great Questions and Eternalism : A Theory of Infinite Justica”  என்ற புத்தகத்தை அளித்தார். இரு தொகுதிகள் அடங்கிய அந்த நூல் மறுபிறப்பு பற்றி நன்கு விளக்கும் ஒரு நூல். அதை நன்கு ஊன்றிப் படித்தார் போர்ட். அவரது மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை இன்னும் ஆழமானது. இதை போர்டின் வாழ்க்கை வரலாறை எழுதிய வின்செண்ட் கர்சியோ (Vincent Curcio) ‘ஹென்றி போர்ட்’ என்ற நூலில் எழுதியுள்ளார்.

 

4

இது போல ஏராளமான மேலை நாட்டு அறிஞர்களும், விஞ்ஞானிகளும், தொழிலதிபர்களும், சாமானியர்களும் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை கொண்டிருந்ததை நாம் பார்க்கலாம்.

நாளுக்கு நாள் ஏராளமானோர் அறிவுக்கு இணக்கமான, அறிவியலால் நிரூபிக்கப்பட்ட இந்த நம்பிக்கையைக் கொள்வதில் ஆச்சரியம் இல்லை!

 

இது கிறிஸ்தவ மதத்தின் ஆணி வேர் கொள்கையான, ‘பிறப்பு ஒன்றே; பின்னர் மீளாத் துயில் தான்’ என்பதை ஆட்டம் காணச் செய்வதால் பாதிரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பதிலும் ஆச்சரியம் இல்லை!!

***

 

எம்.ஜி.ஆர் பாடல்கள் : “நான் ஆணையிட்டால்!” (Post No.5477)

WRITTEN BY S NAGARAJAN

Date: 27 September 2018

 

Time uploaded in London – 6-01 AM (British Summer Time)

 

Post No. 5477

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

எம்ஜிஆர் நூற்றாண்டு. மக்களை உயிராக நேசித்தவரை – மக்களால் உயிராக நேசிக்கப்பட்டவரை மறக்க முடியுமா? நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை!

எம்.ஜி.ஆர் பாடல்கள் : “நான் ஆணையிட்டால்!

 

ச.நாகராஜன்

1

எம் ஜி ஆர் நூற்றாண்டு. மக்கள் திலகத்தை மறக்க முடியுமா? அவர் பாடல்களைத் தான் பாடாமல், கேட்காமல் இருக்க முடியுமா?

எம் ஜி ஆர் பாடல்கள் என்றாலே ஒரு தனிச் சொற்றொடராக விளங்குகிறது. அவருக்கென எழுதப்பட்ட பாடல்கள் என அர்த்தமாகிறது.

நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்?

அது நடந்து விட்டால் ! ஏழைகள் வேதனைப் பட மாட்டார்.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.

எம் ஜி ஆர் என்ற மூன்றெழுத்திலா?

அது முடிந்து விட்டால் என் பேச்சிருக்கும்.

கடமை. அது கடமை.

தூங்காதே தம்பி தூங்காதே

திருடாதே பாப்பா திருடாதே

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்!

 

இப்படி அற்புதமான பாடல்களை இன்றும் கேட்டு மகிழும்படி அளித்தவர் எம் ஜி ஆர். பல்லவி அவருக்குப் பிடித்திருந்தால் தான் கவிஞர் மேலே போகலாம்!

சில வரிகளைத் தனக்குப் பிடிக்கும் வரை மாற்றச் சொல்வார். ஏனெனில் அவை மக்களைச் சென்று சேர வேண்டுமே! அது எம் ஜி ஆர் பாடலாயிற்றே!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி, கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் எழுதிய எம்ஜிஆர் வரிகள் அவரை என்றும் வாழ வைத்திருப்பதோடு பாடல்களைப் படைத்த அவர்களையும் வாழ வைத்துள்ளது.

கணீரென டி.எம்.சௌந்தரராஜன் தன் குரலில் பாடிய பாடல்கள் இன்றும் எங்கும் ஒலிக்கின்றன. பானுமதி, சரோஜா தேவி, ஜெயலலிதா என கதாநாயகிகள் தலையை அசைத்து, புன்முறுவல் பூத்து, உடல் அபிநயம் காட்டி, நடித்து மக்களை மகிழ்வித்தது ஒரு புறம் இருக்க பாடல்களின் அர்த்தம் இன்றும் பேசப்படக்கூடிய அளவில் இருப்பது தான் அவற்றின் சிறப்பு.

நாடோடி மன்னன் படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் தூங்காதே தம்பி தூங்காதே.

தூங்காதே தம்பி  தூங்காதே-நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே! (தூங்)

நீ-தாங்கிய உடையும் ஆயுதமும்-பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்,
சக்தியிருந்தால் உன்னைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடம் கொடுக்கும் (தூங்)

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்; சிலர்
அல்லும் பகலும்  தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்ஷடமில்லையென்று  அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்-உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம்  கோட்டைவிட்டார்! (தூங்)

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்-உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வியழந்தான்!
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்-கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்-இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்-பல
பொன்னான வேலையெல்லாம்  தூங்குதப்பா! (தூங்)
[நாடோடி மன்னன்,1958]

 

பல நல்ல கருத்துக்களைத் தரும் இந்தப் பாடலுக்குப் பின்னர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருடாதே படத்திற்காக எழுதிய எம் ஜி ஆர் பாடல் திருடாதே பாப்பா திருடாதே!

 

திருடாதே! பாப்பா திருடாதே!
வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு

சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது

திரும்பவும் வராமே பார்த்துக்கோ (திரு)

திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்

திருடிக்கொண்டே இருக்குது-அதைச்
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்

தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்

திருட்டை ஒழிக்க முடியாது (திரு)

கொடுக்கிற காலம் நெருங்குவதால்-இனி

எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்

பதுக்கிற வேலையும் இருக்காது

ஒதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா

கெடுக்கிற நோக்கம் வளராது-மனம்

கீழும் மேலும் புரளாது! (திரு)

[திருடாதே,1961]

கொடுக்கிற காலம் நெருங்குவதால் இனி எடுக்கிற அவசியம் இருக்காது! எம் ஜி ஆர் அரசுப் பொறுப்பை ஏற்கக் கட்டியம் கூறிய பாடலோ இது.

மலம் நிறைந்த பாதாளச் சாக்கடை போல நாற்றம் பிடித்த கும்பலிலிருந்து தப்பி வெளி வந்தவர்கள் தமிழக சரித்திரத்தில் பலர். சிவாஜி கணேசன், கண்ணதாசன், எம்.ஜி.ஆர் என்று இந்த நீண்ட பட்டியலைத் தொகுக்கலாம். கொள்ளையடிக்கும் கும்பலிலிருந்து வெளி வந்த எம்.ஜி.ஆர் மக்களுக்காக எதைக் கொடுக்கலாம் என்று நினைத்தாரே தவிர அவர்களிடமிருந்து எதையெதை எடுக்கலாம் என்று ஒரு போதும் நினைத்ததில்லை; கள்ளப் பணத்தால் சொத்தும் சேர்த்ததில்லை.

 

அடுத்து அவரது உள்ளக்கிடக்கையை நன்கு தெரிவித்த பாடல் கவிஞர் வாலி எழுதியது.

நான் ஆணையிட்டால். எம் ஜி ஆர் ஆணையிட்டால் என்னென்ன நடக்கும்? பார்ப்போம்:

 

நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தொட மாட்டேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்
எதிர் காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

இங்கு ஊமைகள் தூங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா

பாடல் வரிகளுடன் எம்ஜிஆர் ஒன்றி விட்டார்; அல்லது எம்ஜிஆருடன் பாடல் வரிகள் ஒன்றி விட்டன.

1964இல் வெளியான தெய்வத்தாய் படம் அவரது மூச்சு எங்கிருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டியது. கவிஞர் வாலி எழுதிய பாடல் இது:

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..

அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்..

உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்..

அந்த ஊருக்குள் எனக்கோரு பேர் இருக்கும்..

கடமை அது கடமை..
கடமை அது கடமை..

அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்..

உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்..

அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்..

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்..

துணிவும் வரவேண்டும் தோழா..

பாதை தவறாமல் பண்பு குறையாமல்..
பழகி வரவேண்டும் தோழா..

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்..
துணிவும் வரவேண்டும் தோழா..

பாதை தவறாமல் பண்பு குறையாமல்.
பழகி வரவேண்டும் தோழா..

அன்பே உன் அன்னை..
அறிவே உன் தந்தை..
உலகே உன் கோவில்..
ஒன்றே உன் தேவன்..

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்..

உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்..
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்..

கடமை அது கடமை..
கடமை அது கடமை..

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்..
கோழை குணம் மாற்றுத் தோழா..

நாளை உயிர் போகும் இன்றுப் போனாலும்..
கொள்கை நிறைவேற்றுத் தோழா..

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்..
கோழை குணம் மாற்றுத் தோழா..
நாளை உயிர் போகும் இன்றுப் போனாலும்..
கொள்கை நிறைவேற்றுத் தோழா..

அன்பே உன் அன்னை..
அறிவே உன் தந்தை..
உலகே உன் கோவில்..
ஒன்றே உன் வேதம்..

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்..

உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்..
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்..

கடமை அது கடமை..
கடமை அது கடமை..

 

இப்படி, தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடக்கும் என்பதைப் பட்டியலிட்டுப் பாடிய எம்ஜிஆர் உலகம் முழுவதையும் அணைத்த பாடலை1965இல் வெளியான படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்காக கண்ணதாசன் அளித்தார்..

அற்புதமான அந்தப் பாடல் – அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்.

 

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே — (ஒரே வானிலே)

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லிலாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியிலாமல் வாழவில்லையே
போகும் போது வேறு பாதை போகவில்லையே — (ஒரே வானிலே)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை — (ஒரே வானிலே)

 

எம்ஜிஆரை மேடைக்கு மேடை கண்ணதாசன் கடுமையாக விமரிசித்தவர். ஒரு நாள் முதல் அமைச்சராக இருந்த எம்ஜிஆரிடமிருந்து அவரை உடனடியாக வந்து பார்க்குமாறு அழைப்பு வந்தது. கண்ணதாசன் அவரைச் சந்தித்த போது அரசவைக் கவிஞராக அவர் நியமிக்கப்பட்டிருப்பதைக் கூறிய எம் ஜி ஆர், ‘சரி’ என்று ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். கண்ணதாசன் நெகிழ்ந்து உருகிப் போனார்.

 

பொன் மனம் கொண்ட எம்ஜிஆரின் உடலும் தங்க மயம் தானே!

 

அதில் லயித்த கண்ணதாசன் அவரை கதாநாய்கி வர்ணிப்பது போலத் தன் உள்ளத்தில் பட்டதை அப்படியே சொல்லி விட்டார் 15-8-1963 அன்று வெளியான நீதிக்குப் பின் பாசம் படத்தில்:

“தேக்கு மரம் உடலைத் தந்தது

சின்ன யானை நடையைத் தந்தது

பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது

பொன்னல்லவோ நிறத்தை தந்தது” (மானல்லவோ கண்கள் தந்தது பாடல்)

தங்க நிற உடலுக்கு மட்டுமல்ல இந்த உவமை; தங்கமான மனதிற்கும் சேர்த்து உவமையாக வந்தது பொன்!

எம்.ஜி.ஆர் என்ற. மூன்றெழுத்து தமிழக மக்களில் உள்ளங்களில் என்றென்றும் நிரந்தரமாக இருக்கும்.

 

****

பக்தர்கள் ஆனாலும் மருந்து சாப்பிடுக: ஆதி சங்கரர் அறிவுரை (Post No.5473)

         

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 September 2018

 

Time uploaded in London – 6-56 am (British Summer Time)

 

Post No. 5473

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

பக்தர்கள் ஆனாலும் மருந்து சாப்பிடுக: ஆதி சங்கரர் அறிவுரை (Post No.5473)

 

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே-“

 

“உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தோர்க்குச் சீவன் சிவலிங்கம்”- திருமந்திரப் பாடல்

 

உலகிலேயே மிகவும் விஞ்ஞான பூர்வமான மதம் இந்து மதம். ஆயுர் வேதம் என்னும் மருத்துவ சாஸ்திரத்துக்கும் கூட ‘வேதம்’ என்ற சொல்லைச் சேர்த்த மதம். வேதம் என்றால் ‘அறிவு’. சித்த மருத்துவத்திலும் கூட ‘சித்த’ என்ற புனிதச் சொல்லைச் சேர்த்த மதம். ‘சித்த’ என்பது, அடையமுடியாத அபூர்வ சக்திகளை, காய கல்பத்தைக் குறிக்கும்.

 

உலகிலேயே கடவுளுக்கும் டாக்டர் பட்டம் கொடுத்த மதம் இந்துமதம் ஒன்றே. கடவுளை டாக்டர் என்றும் மருந்து என்றும் யஜூர்வேத மந்திரம் சொல்லும். ‘பேஷஜம்= மருந்து, பிஷக்= மருத்துவர்’.

 

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் இறைவனை ‘ஔஷதம்’ என்று புகழும். மூலிகைகளுக்கு ஓஷதி என்று பெயர். அவற்றிலிருந்து வருவதே ‘அவுசதம்’.

எல்லா நோய்களிலும் பெரிய நோய்- பிறவிப் பிணி. அதாவது ஜனன-மரணச் சுழல். பிறப்பு, இறப்பு என்னும் சுழல் வட்டம். ஆகையால் சமய நூல்களில் வரும் நோய் என்பது பிறவிப் பிணியைக் குறிக்கும் என்பது வியாக்கியானக்காரர்கள் சிலரின் விளக்கம். அது சரியல்ல என்பது சமய நூல்க ளைக் கற்றோருக்கு விளங்கும்.

 

பரமஹம்ஸர் போன்ற பெரியோர்கள், ரமணர் போன்ற பெரியோர்களுக்கு மட்டுமே உடல் என்பது ஒரு அழுக்குச் சட்டை போல. அவர்கள் இந்த உடலை நாம் கழற்றித் தூக்கி எறியும் சட்டை, வேட்டி போலக் கருதுவர். அவர்கள் ஜீவன் முக்தர்கள். இவர்கள் இருவருக்கும் புற்று நோய். அப்படியும் நோய் போக இறைவனை வேண்டவில்லை. ஏனெனில் வாழ்க்கையின் உயரிய பலனை இருக்கும்போதே அடைந்துவிட்டார்கள்.

 

நம்மைப் போன்ற அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு உடம்பும், உடல் ஆரோக்கியமும் அவசியம். இதைத்தான் திருமூலர் போன்ற பெரியோர்கள், சித்தர்கள் ஏராளமான பாடல் மூலம் விளக்கினர். கிராமப் புறங்களில் கூட சுவரை வைத்துத் தான் சித்திரம் என்பர். அதாவது உடல் நல்ல நிலையில் இருந்தால்தான் உயரிய லட்சியங்களை அடையமுடியும். சுவாமி விவேகாநந்தரும் அடிக்கடி மேற்கோள் காட்டும் உபநிஷத மந்திரம் – ‘ஆத்மாவை பலவீனமுடையவன் அடைய முடியாது’ என்பதாம்.

 

ஆதிசங்கரர் போன்ற மஹா தத்துவ தரிசிகளும் கூட பாடலில் உவமைகளாக இந்தக் கருத்தைச் சொல்லுவதைப் பார்க்கையில் நமக்கு அதன் பெருமை விளங்குகிறது. திருவள்ளுவரும் கூட சரிவிகித உணவு, மருந்து, நோய்கள் பற்றிப் பத்து குறள்கள் பாடிவிட்டார்.

 

இதோ விவேக சூடாமணி என்ற அற்புதமான துதியில் ஆதி சங்கரர் சொல்லும் இரண்டு பாடல்கள்:

 

பத்யம் ஔஷத ஸேவா ச க்ரியதே யேன ரோகிணா

ஆரோக்யஸித்திர் த்ருஷ்டாஸ்ய ந அன்யானுஷ்டித கர்மணா-53

எந்த ஒருநோயாளி மருந்தையும் பத்தியத்தையும் சரியான முறையில் உபயோகிக்கிறானோ அவன்தான் பூரண குணம் அடைவான்; மற்றவர்கள் அவனுக்காக செய்யும் பணிகளினால் அல்ல”- ஸ்லோகம் 53

 

இதை ஒருவர் பரிபூரண ஞானத்தை அடைவது அவரவர் முயற்சியால்தான் முடியும் என்பதற்கு அவர் உதாரணமாகக் காட்டுகிறார்.

“சொற்களும் , சாஸ்திர அறிவும், துதிகளும் உண்மை ஞானம் ஏற்பட உதவாது (அவைகள் ஏணிப்படிகளே) என்று விளக்கும்போது சங்கரர் சொல்கிறார்:-

 

ந கச்சதி விநா பானம் வ்யாதிர் ஔஷதசப்ததஹ

விநா அபரோக்ஷ அனுபவம் ப்ரஹ்மசப்தைர் ந முச்யதே- 62

“மருந்தைச் சாப்பிடாமல் மருந்தின் பெயரை உரத்த குரலில் சொன்னால் மட்டும் நோய் போய் விடாது; அதே போல பிரம்மன்/ பிரம்மம் என்று சொல்லுவதால் மட்டும் முக்தி கிடைத்து விடாது. மருந்தை எடுத்துச் சாப்பிடுபவன் போல   அதை உணர வேண்டும்”.

 

இது போல பல பாடல்களில் போகிற போக்கில் மருந்து, நோய்கள் பற்றிச் சொல்கிறார். சில நோய்கள் பிராரப்த கர்மத்தினால்- முன் வினைப் பயனால் வரும் என்றும் கூறுகிறார்.

 

திருவள்ளுவர் நேரடியாக நோய்கள் பற்றிச் சொல்கிறார். ஆதி சங்கரர் உவமைகளாகக் காட்டிச் செல்கிறார்.

படித்துப் பயன் பெறுவோம்.

 

 

–சுபம்–

அய்யங்காருக்கு பாரதியார் கடிதம் (5469)

அய்யங்காரின் அற்புத தமிழ் சேவை-3 (Post No.5469)

 

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 25 September 2018

 

Time uploaded in London – 9-17 am (British Summer Time)

 

Post No. 5469

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

இது பகுதி 3

 

பாரதியார், வ,உ. சிதம்பரம் பிள்ளை, உ.வே.சா. ஆகியோர் பல சமயங்களில் மு. இராகவையங்காரைப் பாராட்டி எழுதிய கடிதங்கள் இவை.

 

முதல் இரண்டு பகுதிகளைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.

 

 

 

 

–subham–

 

அய்யங்காரின் அற்புத தமிழ் சேவை-2 (Post No.5468)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 25 September 2018

 

Time uploaded in London – 7-30 am (British Summer Time)

 

Post No. 5468

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

UP TO 60 YEARS OF RAGHAVA IYANGAR

 

 

HIS RESEARCH PUBLICATIONS

 

TO BE CONTINUED IN PART 3

 

–SUBHAM–

 

அய்யங்காரின் அற்புத தமிழ் சேவை-1 (Post No.5467)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 25 September 2018

 

Time uploaded in London – 7-12 am (British Summer Time)

 

Post No. 5467

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மு.இராகவையங்கார்

பிறந்த ஆண்டு – 1878

இறந்த ஆண்டு- 1960

 

மு.ராகவ அய்யங்கார், தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவை மிகவும் அற்புதமான சேவை. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், மஹா கவி பாரதி, வ.உ.சி, உ.வே. சாமிநாத அய்யர் மற்றும் அவரது சம காலத்திய அறிஞர் பெருமக்கள் அனைவராலும் ஒருங்கே பாராட்டப்பட்டவர். மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட புகழ்மிகு செந்தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியர்.

 

40 ஆண்டுகளுக்கும் மேலாக அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். அவரது 60 ஆண்டு நிறைவின் போது வெளியான மலரில் அவரைப் பற்றிய முழு விவரங்களும் வெளியாகின. இதோ வையாபுரிப் பிள்ளை எழுதிய முகவுரை, ராமசந்திர தீக்ஷிதரின் கட்டுரை ஆகியன.

 

அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

 

 

அவரது ஆராய்ச்சியின் சிறப்பு

 

 

 

அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

 

to be continued in part 2 and 3…………………….

அவர் எழுதிய ஆராய்ச்சி நூல்கள்

அவரது வாழ்க்கைக் குறிப்பு ( 60 வயது வரை)

பாரதியின் பாராட்டும் வ.வு.சியின் பாட்டும்

–subham-

தேவையும், பேராசையும்! (Post No.5462)

Written by S NAGARAJAN

Date: 24 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 5-50 AM (British Summer Time)

 

Post No. 5462

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ச.நாகராஜன்

 

1997ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த காட்வின் சமரரத்னே (தோற்றம் : 6-9-1932 மறைவு 22-3-2000) ஹாங்காங்கில் ஒரு தொடர் சொற்பொழிவை நிகழ்த்தினார். 6-10-1997இலிருந்து 11-10-1997 முடிய ஆறு நாட்கள் நடந்த சொற்பொழிவைத் தொடர்ந்து ஏழாவது நாள் முடிவுரை நிகழ்த்தப்பட்டது. முடிவுரையில் அவர் தேவை பற்றியும் பேராசை பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டார்.

அதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது.

 

 

முதலில் காட்வினைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.

காட்வின் இலங்கையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். நூலகராக கெகல்லே பொது நூலகத்தில் 1956ஆம் ஆண்டு சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கினார். புத்தமதத்தில் ஆர்வம் ஏற்படவே அதைப் பற்றி நிறையப் படிக்கலானார்.

 

 

மறுபிறப்பு பற்றி ஆய்வு நடத்திய புகழ் பெற்ற விஞ்ஞானியான ஐயான் ஸ்டீவன்ஸன் இலங்கைக்கு வந்த போது அவருக்கு ஏராளமான உதவிகளைச் செய்ததோடு அவருக்கு மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். அதீத உளவியல் பற்றி அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

 

 

புத்த தியான முறையில் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படவே, பல நாடுகளிலிருந்தும் அவருக்கு தியான பயிற்சிகள் நடத்துவதற்காக அழைப்புகள் வந்தன. அதையேற்றுப் பல நாடுகளுக்கும் அவர் சென்றார்.

கல்மிஷம் இல்லாத எளிய சாதாரண வாழ்க்கையை மேற்கொண்ட அவரைப் பார்த்தால் பெரிய அபிப்ராயம் ஒன்றும் தோன்றாது. ஆனால் அவரைச் சந்தித்துப் பழகிய சில நிமிடங்களிலேயே அவர் சற்று வித்தியாசமான மனிதர் என்று தோன்றி விடும்.

 

 

அவரது சொற்பொழிவில் ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகளும், உவமைகளும், குட்டிக் கதைகளும் இடம் பெறும்.

தன்னைக் கேலி செய்யும் சம்பவங்களைக் கூட ஒளிக்காமல் அவர் பயிற்சியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார். அதில்  ஒரு சம்பவம் இது:

 

 

மேலை நாட்டில் நடந்த பயிற்சி முகாம் ஒன்றில் நிறைவு நாளன்று ஒரு பெண்மணி அந்த பயிற்சி முகாமில் அவர் கற்றதையெல்லாம் ஏற்கனவே அவரது நாயிடமிருந்து கற்று விட்டதாக கூறினார்.

 

 

இதைக் கேட்ட காட்வினுக்கு ஆவல் உந்தியது. “அப்படியா! அந்த நாய் பற்றி இன்னும் கொஞ்சம் விவரியுங்களேன்!” என்றார்.

அந்தப் பெண்மணி கூறினார்: “ நீங்கள் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ வேண்டும் என்று சொல்கிறீர்கள். என் நாய் எப்போதும் நிகழ்காலத்தில் தான் வாழ்கிறது! நீங்கள் எப்போதும் நன்றி உடையவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்; என் நாய் எப்போதுமே நன்றியுடன் இருக்கிறது! “ இதைத் தொடர்ந்து அந்தப் பெண்மணி அவளுடைய நாயின் நடத்தையை இன்னும் விவரமாகக் கூறிக் கொண்டே போனாள்.

 

 

கடைசியில் அவள் நிறுத்தியவுடன் காட்வின் அவளை நோக்கி, “உங்கள் நாய்க்கும் எனக்கும் வித்தியாசமே இல்லையா?” என்று கேட்டார்.

 

அதற்கு அந்தப் பெண்மணி, “ஏன் இல்லை? நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். என் நாய் பேசவே பேசாது” என்றாள்.

இப்படி காட்வின் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வெளிப்படையாக நகைச்சுவையுடன் சுவைபடக் கூறினார்.

2

இனி அவர் தேவை பற்றியும் பேராசை பற்றியும் தனது உரையாடலில் கூறியதைப் பார்ப்போம்.

 

அவர் இலங்கையில் நடத்தி வந்த தியான மையத்தில் ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவத்தைப் பற்றி அவர் விவரிக்க ஆரம்பித்தார்.

 

அவரது நண்பர் ஒருவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். அவர் ஒரு நாள் கோவில் ஒன்றிற்குச் சென்றார். கோவிலின் வாயிலில் பிச்சைக்காரர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். தனக்கு முன்னால் ஒரு சின்னத் துண்டை அவர் விரித்திருந்தார். அதில் பிச்சைக் காசு போடுவோர் போட்டுக் கொண்டிருந்தனர். அவர் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த நண்பர் அவரது முகத்தில் இருந்த அமைதியையும் அவர் கண்களை மூடி அமர்ந்திருந்த பாங்கையும் பார்த்து ஒரு ஓரமாக நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

திடீரென்று அந்த பிச்சைக்காரர் கண்களை விழித்துக் கொண்டு எழுந்தார். துண்டிலிருந்து சில காசுகளை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை தரையில் விட்டெறிந்தார்.அருகிலிருந்த ஒரு கடைக்குச் சென்று சாப்பிடுவதற்கு ஏதோ ஒன்றையும் குடிப்பதற்கு ஒரு பானத்தையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து எங்கேயோ நடந்து சென்றார்.

 

தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு பிச்சைக்காரராக இருந்த போதிலும் மீதியை அங்கேயே விட்டு விட்ட அந்தச் சம்பவம் நண்பர் மீது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்ப்டுத்தியது.

 

உடனடியாக அவர் மனதில் ஒரு கவிதை தோன்றியது “

 

He who knows his need

And yet without greed

Whatever be his creed

He is a saint indeed.

 

இது தான் அந்தக் கவிதை!

 

எவனுக்குத் தன் தேவை தெரியுமோ

தெரிந்திருந்தும் பேராசைப் படவில்லையோ

அவன் எந்த சமய நம்பிக்கை கொண்டவனாகத் தான் இருக்கட்டுமே

உண்மையில் அவனே ஒரு மகான்!

 

இதை எழுதி சமையலறையில் அவர் மாட்டி வைத்தார்.

இதை காட்வின் கூறி விட்டு, “ நீங்கள் உங்கள் பணத்தை எறிய வேண்டும் என்று நான் கூறவில்லை. தேவைக்கு உரியதை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். திருப்தியுடன் வாழுங்கள். இந்த ஆன்மீக குணம் தம்மத்தில் (புத்தமத தர்மத்தில்) அதிகமாக வலியுறுத்தப்படுகிறது. பாலி மொழியில் அருமையான ஒரு வார்த்தையால் இந்தக் குணம் விவரிக்கப்படுகிறது. அந்த வார்த்தை சந்துத்தி (Santutthi).

 

திருப்தி என்பது ஒரு பெரிய செல்வம்” என்று  முடித்தார்.

***

உண்மைக் கதை- வானத்தில் இருந்து வந்த மணமகள்!(Post No.5460)

WRITTEN by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 
23 September 2018

 

Time uploaded in London – 9-18 AM (British Summer Time)

 

Post No. 5460

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

கண்டதும் காதல், திடீர்க் காதல், ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ போன்ற ராமாயணக் காதல், தமிழ் இலக்கியத்தில் வரும் புலிக்கு அஞ்சி ஆண்மகனைத் தழுவி ஏற்பட்ட காதல், ‘யானைக்குப் பயந்து முருகனைத் தழுவிய வள்ளி காதல்’– என்று எவ்வளவோ காதல் கதைகளைப் படிக்கிறோம். எண்வகைத் திருமணங்களில் காதல் திருமணமும்  ஒன்று என்று மநு நீதி நூலும் தொல்காப்பியமும் அங்கீகரித்துள்ளதை எழுதினேன். வெளி நாட்டில் நடந்த இரண்டு பிரமுகர் காதல், மேற்கூறியவற்றை எல்லாம் ருசுப்பிக்கிறது.

 

லாரிட்ஸ் மெல்சியோர் (Lauritz Melchior 1890-1973) என்பவர் பிரபல ஆபரா பாடகர். டென்மார்க்கில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து இசை மூலம் புகழ் பெற்றவர். அவர் வாழ்வில் ஒரு அபூர்வ சம்பவம் நடந்தது. அவருக்கு 35 வயதானபோது ஜெர்மனியின் மூனிச் நகரில் ஒரு தோட்டத்தில் பாடல் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அடுத்த கச்சேரிக்காக ஒரே பாடலைப் பலமுறை பல விதமாகப் பாடிப் பயிற்சி செய்தார். அதில் ஒரு வரி,

“வாராய், வாராய், அன்பே! என்னிடம் வருவாயே, பறந்து வருவாயே!

ஒளி வீசும் சிறகுகளில் பறந்து வருவாயே” — என்று  தோட்டத்தில் நின்றவாறு பாடிக் கொண்டிருந்தார்.

 

என்ன அதிசயம்!

திடீரென்று அவர் கைகளிலொரு பெண் வந்து விழுந்தார். அதுவும் வானத்திலிருந்து பறந்து வந்து விழுந்தார். அப்படி வந்தவர் பிரபல நடிகை மரியா ஹாக்கர் (Maria Hacke)r ஆவார். அவர் ஒரு ஸ்டன்ட்(STUNT) காட்சிக்காக பாராச்சூட்டில் வந்து குதிக்கும் காட்சிக்காக பயிற்சி செய்து கொண்டிருந்தார். அது திசை மாறி,  லாரிட்ஸின் தோட்டத்துக்கு வந்ததோடு நில்லாமல், பாடகரின் கையில் போய் விழுந்தது. அவருக்கும் ஒரே அதிசயம்.

 

கண்ணும் கண்ணும் கலந்தது!

 

“கையும் கையும் கலந்திடவே ஜாலியாகவே,

காதல் கதை பேசிடலாம் ஜாலியாகவே”–

என்று பாடிக்கொண்டே திருமணமும் செய்து கொண்டனர்.

 

மனைவி அமைவதெல்லாம் வானம் கொடுத்த வரம்- என்று அவரும் எல்லோரிடமும் சொன்னார்.

 

கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது இதனால்தானோ!

 

XXX

நிகலஸ் ஷெங்க்( Nicholas Schenck (1881-1969) அமெரிக்காவின் கோடீஸ்வரர்களில் ஒருவர். ரஷ்யாவில் யூதர் குடியில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி எம்.ஜி.எம். (MGM) போன்ற பெரிய கம்பெனிகளை நடத்தி கோடி கோடியாகச் சம்பாதித்தவர். அவர் ஒரு முறை டாம் மெய்கன்ஸ் என்பவரின் கப்பலில் ஏறிக் கொண்டிருந்தார். தொலைவில் படகுத் துறையில் ஒரு அழகிய இளம் பெண் நிற்பதைக் கண்டார். அவர் மனதில் திடீரென்று ஒரு வெறி பிறந்தது. ஓடிப்போய் அந்தப் பெண்மணியைத் தண்ணீரில் தள்ளிவிட்டார். பிறகு அவரைப் பயம் பீடித்தது. ஏனெனில் அப்பெண்ணுக்கு நீந்தத் தெரியுமோ தெ ரியாதோ என்ற கவலை.

 

இந்தப் பெண்மணி மட்டும் வெளியே வந்தால், நம்மைத் திட்டித் தீர்த்து விடுவாள். முதுகில் ‘டப்பா கட்டி’ விடுவாரென்று எண்ணினார்.

 

அந்தப் பெண்மணி நீந்திக் கரை சேர்ந்து, அவரை நோக்கி ஓடி வந்தார்.  திட்டுவதற்குப் பதிலாக அவர், ஷெங்க் முன்னால் நின்று ஒரு புன்னகை செய்தார்.

 

சாதாரண புன்னகை அன்று. தெய்வீகப் புன்னகை. அதிலும் பெரிய புன்னகை; வஸீகரப் புன்னகை!

 

அதைப் பார்த்த ஷெங்க்,

அடக் கடவுளே! இப்படிப்பட்ட ஒரு தெய்வீகப் புன்சிரிப்பைப் பார்த்ததே இல்லையென்று கருதி அவர் மீது அன்பு பூண்டார். அது காதலாகக் கனிந்தது; திருமணமாக முடிந்தது!

 

XXX

சாமுவேல் புட்Samuel Foote(1720-1777) பிரபல நடிகர் ஆவார். நாடக நடிகர், மானேஜர் போன்ற பல பொறுப்புகளில் இருந்தவர். ஒரு நாள் எல்லா நடிகர்களும் அரட்டைக் கச்சேரியில் இறங்கினர். அன்றைய தலைப்பு- பிரபல நடிகையின் திருமணம். அந்த நடிகையின் கதையோ அதி பயங்கரக் கதை. நூறு பேருடன் கள்ளத் தொடர்பு! இப்படி அபக்கியாதி பெற்ற ஒருவரை ஒரு ஆண்மகன் திருமணம் செய்ய எப்படி முன்வந்தான் என்ற வியப்பு.

ஒரு நடிகர் செப்பினார்,

சேதி தெரியுமா? அவர் தனது கடந்த கால காமக் களியாட்டங்களை எல்லாம் அப்பட்டமாக ஒப்புக் கொண்டதால் அந்த ஆண்மகன் சம்மதித்தானாம்.

இன்னொருவர் மொழிந்தார்,

அட அதை விடுங்கள்; என்ன பொருத்தம், இந்தப் பொருத்தம்; கன கச்சித ‘மேட்ச்’

 

இன்னொரு நடிகர் இடைமறித்துப் பகர்ந்தார்,

அது மட்டுமல்ல; என்ன நேர்மை பாருங்கள்; என்ன துணிச்சல் பாருங்கள்!

 

பிரபல நடிகர் சாமுவேல் புட் சிரித்துக் கொண்டே சொன்னார்,

அடடா! என்ன ஞாபக சக்தி, அந்தப் பெண்ணுதான்! அவ்வளவு காதல் விஷயங்களையும் சொல்ல அவருக்கு எவ்வளவு நினைவாற்றல் இருந்திருக்க வேண்டும் !

 

XXX SUBHAM XXX

தமிழில் அலங்காரம்! (Post No.5455)

Written by S NAGARAJAN

Date: 22 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 5-42 AM (British Summer Time)

 

Post No. 5455

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தமிழில் அலங்காரம்!

 

.நாகராஜன்

 

ஒரு கவிதையை நன்கு ரசிக்க அலங்காரம் அல்லது அணி பற்றிய அறிவு நிச்சயம் தேவை.

 

முகம் அழகாக இருக்கிறது என்று சொல்வதை விட சந்திரன் போன்ற முகம் என்றால் நமக்கு இன்னும் நன்றாகப் புரியும்.

அவள் அழகில் ரம்பா என்று சொல்லும் போது ரம்பையை நாம் நேரில் கண்ட்தில்லை என்றாலும் அர்த்தம் என்னவோ புரிகிறது.

இப்படி உவமை, உருவகம் என பல்வேறு அணிகள் நமது புரிதல் தன்மையையும் அர்த்தத் தெளிவு காணலையும் தருவதோடு அழகு உணர்தலையும் மேம்படுத்துகின்றன.

 

பரத முனிவர் நாட்டிய சாஸ்திரத்தில் நான்கு அலங்காரங்களைப் பற்றிச் சொல்கிறார்.

 

சம்ஸ்கிருத இலக்கணத்திலோ சப்தாலங்காரம், அர்த்தாலங்காரம் என இரு வகை அலங்காரங்களைப் பார்க்கிறோம். இவற்றின் பட்டியல் நீளமானது.

 

தமிழில் சிறு எண்ணிக்கையில் ஆரம்பித்த அணிகளின் பட்டியல்  வீர சோழியம் நூலில் 35ஐ எட்டியது.

 

பின்னர் தண்டியலங்காரம் அலங்காரங்களின் பட்டியலில் 35ஐத் தர மாறனலங்காரமோ 64ஐத் தொட்டது.

 

திருத்தணிகை விசாகப்பெருமாளையர் அணியிலக்கணமோ 100 அணிகளைப் பட்டியலிட்டு விளக்கியுள்ளது.

இறுதியாக வந்த குவலயாநந்தம் என்ற நூலோ 120 அணிகளின் பட்டியலைத் தருகிறது.

 

அந்தப் பட்டியல் வருமாறு:-

1) உவமையணி

2) இயையின்மையணி

3) புகழ்பொருளொப்பணி

4) எதிர்நிலையணி

5) உருவக அணி

6) திரிபணி

7) பலபடப்புனைவணி

8) நினைப்பணி

9)  மயக்கவணி

10) ஐயவணி

11) வெற்றொளிப்பணி

12) தற்குறிப்பணி

13) உயர்வுநவிற்சியணி

14) ஒப்புமைக்குழுவணி

15) விளக்கணி

16) பின்வருவிலக்கணி

17) தொடர்முற்றுவுவமையணி

18) எடுத்துக்காட்டுவமையணி

19) காட்சியணி

20) வேற்றுமையணி

21) உடனவிற்சியணி

22) இன்மை நவிற்சியணி

23) சுருங்கச் சொல்லணி

24) கருத்துடையணி

25) கருத்துடையடைகொளணி

26) சிலேஷையணி

27) புனைவில்லிப் புகழ்ச்சியணி

28) புனைவுள்ளி வினையணி

29) பிறிதினவிற்சியணி

30) வஞ்சப்புகழ்ச்சியணி

31) வஞ்சப்பழிப்பணி

32) எதிர்மறையணி

33) முரண்மேல் வினையணி

34) பிறிதாராய்ச்சியணி

35) காரணவாராய்ச்சியணி

36) கூடாமையணி

37) தொடர்பின்மையணி

38) தகுதியின்மையணி

39) தகுதியணி

40) வியப்பணி

41) பெருமையணி

42) சிறுமையணி

43) ஒன்றுக்கொன்றுயுதவியணி

44) சிறப்புநிலையணி

45) மற்றதற்காக்கலணி

46) காரணமாலையணி

47) ஒற்றைமணிமாலையணி

48) மாலை விளக்கணி

49) மேன்மேலுயர்ச்சியணி

50) நிரல்நிறையணி

51) முறையிற்படர்ச்சியணி

52) மாற்றுநிலையணி

53) ஒழித்துக்காட்டணி

54) உறழ்ச்சியணி

55) கூட்டவணி

56) வினைநுதல் விளக்கணி

57) எளிதின் முடிவணி

58) விறல் கோளணி

59) தொடர்நிலைச் செய்யுட் பொருட் பேறணி

60) தொடர்நிலைச் செய்யுட்  குறிப்பணி

61) வேற்றுப்பொருள் வைப்பணி

62) மலர்ச்சியணி

63) கற்றோர் நவிற்சியணி

64) பேருய்த்துணர்வணி

65) பொய்த்தற்குறிப்பணி

66) வனப்பு நிலையணி

67) இன்பவணி

68) துன்பவணி

69) அகமலர்ச்சியணி

70) இகழ்ச்சியணி

71) வேண்டலணி

72) இலேசவணி

73) குறிநிலையணி

74) இரத்தினமாலையணி

75) பிறிதின் குணம்பெறலணி

76) தொல்லுருப் பெறலணி

77) பிறிதின்குணப்பேறின்மையணி

78) தன்குணமிகையணி

79) மறைவணி

80) பொதுமையணி

81) மறையாமையணி

82) சிறப்பணி

83) இறையணி

84) நுட்பவணி

85) கரவுவெளிப்படுப்பணி

86) வஞ்சநவிற்சியணி

87) குறிப்பு நவிற்சியணி

88) வெளிப்படை நவிற்சியணி

89) உத்தியணி

90) உலகவழக்கு நவிற்சியணி

91) வல்லோர் நவிற்சியணி

92) ம்டங்குதனவிற்சியணி

93) தன்மை நவிற்சியணி

94) நிகழ்வினவிற்சியணி

95) வீறுகோளணி

96) மிகுதி நவிற்சியணி

97) பிரிநிலை நவிற்சியணி

98) விலக்கணி

99) விதியணி

100) ஹேதுவணி

101) சுவையணி

102) கருத்தணி

103) வன்மையணி

104) சேர்க்கையணி

105) பாவகத் தோற்றவணி

106) பாவகச் சேர்க்கையணி

107) பாவகக் கலவையணி

108) காட்சிப் பிரமாணவணி

109) அநுமானப் பிரமாணவணி

110) ஒப்புப் பிரமாணவணி

111) சொற் பிரமாணவணி

112) பொருட்பேற்றுப் பிரமாணவணி

113) நுகர்ச்சியின்மை

114) பிறப்புப் பிரமாணவணி

115) எடுத்துக்காட்டுப் பிரமாணவணி

116) சேர்வையணி

117) உறுப்புறுப்பிக் கலவையணி

118) இரண்டு முக்கியமாகக் விளங்குங் கலவையணி

119) ஐயக் கலவையணி

120) ஒரே சொல்லையணுகி விளங்குங் கலவையணி

 

இப்படி 120 அணிகளைப் பற்றியும் தெரிந்து கொண்டால் கவிஞனின்  கவிதா ஞானமும் பொருள் வீச்சும் நன்கு புரியும்.

இதற்கான செய்யுள்கள் தமிழிலக்கியத்தில் ஏராளம் காணலாம்.

அவற்றை அணி விளக்கத்தோடு இனி வரும் கட்டுரைகளில் சிறிது காண்போம். சம்ஸ்கிருதத்தில் உள்ள அலங்காரங்களையும் தமிழ்க் கவிஞர்கள் விடவில்லை. அதையும் ஆங்காங்கே ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழின் அருமையும் பெருமையும் நன்கு புரியுமல்லவா! சிறிது தமிழிலக்கியக் களத்தினுள் இறங்குவோமா?

***

பூஜையில் 16 வித உபசாரங்கள் (Post No.5451)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 20  September 2018

 

Time uploaded in London – 17-34 (British Summer Time)

 

Post No. 5451

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பூஜையில் 16 விதமான உபசாரங்கள் உண்டு .இதை சோடசோபசாரம் என்று ஸம்ஸ்க்ருதத்தில் அழைப்பர். அபிஷேகம் என்பதில் தண்ணீர், இளநீர், பன்னீர், வாசனை நீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி முதலியன இருக்கும். சிவ பெருமானை அபிஷேகப் ப்ரியன் என்றும் விஷ்ணுவை அலங்காரப் ப்ரியன் என்றும் அழைப்பர். இதனால் சிவன் கோவில் அபிஷேக ஆராதனை பிரஸித்தம் என்பது விளங்கும். மலேயாவிலிருந்து  1956 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி என்ற இதழில் இருந்து பு.உ.கே.நடராஜ பிள்ளை எழுதிய கட்டுரையிலிருந்து இரண்டு பக்கங்களை இணைத்துள்ளேன்.

16 வகையான உபசாரங்கள்:

ஆவாஹனம், ஸ்தாபனம், சந்நிதானம்,ஸந்நிரோதனம், அவகுண்டனம், தேநு முத்திரை, பாத்யம், ஆசமநீயம், அர்க்யம், புஷ்பதானம், தூபம், தீபம், நைவேத்யம், பாநீயம், ஜப சமர்ப்பணம், ஆராத்ரிகம்.

 

இதை வேறு வகையாகவும் சொல்லுவர்:

தவிசளித்தல் (தவிசு= ஆசனம்)

கை கழுவ நீர் தருதல்

கால் கழுவ நீர் தருதல்,

முக்குடி நீர் தருதல்,

நீராட்டல்

ஆடை சாத்தல்

முப்புரி நூல் தருதல்

தேய்வை பூசல்

மலர் சாத்தல்

மஞ்சளரிசி தூவல்

நறும்புகை காட்டல்,

விளக்கிடல்

கருப்பூரம் காட்டல்

அமுதமேந்தல்

அடைகாய் (பாக்கு) தரல்

மந்திர மலரால் அருச்சித்தல்

 

பூஜை முடிந்தவுடன் பிரதக்ஷிணம் செய்வர்.

 

இறுதியில் சத்திரம் (குடை) சாமரம் வீசி,  ந்ருத்யம் (ஆடல்) சங்கீதம் (பாடல்), வாத்திய கோஷம் ஆகியவற்றுடனும் முடிப்பர்.

 

 

 

Bahubali (Jain) Maha Mastaka Abisheka

 

–subham–