விமான சாஸ்திரம்- சுப்பராய சாஸ்திரி – 1 (Post No.5142)

Written by S NAGARAJAN

 

Date: 24 JUNE 2018

 

Time uploaded in London –  6-56 am  (British Summer Time)

 

Post No. 5142

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

 

பாரத சாஸ்திர ரகசியம்

புராதன சாஸ்திரங்களை உலகிற்கு அறிமுகப் படுத்திய மேதை சுப்பராய சாஸ்திரி – 1

 

ச.நாகராஜன்

 

சுப்பராய சாஸ்திரியின் சரித்திரம் மிகவும் ஆச்சரியமூட்டும் ஒன்று.

 

புராதன சாஸ்திரங்களை எல்லாம் அவர் அறிமுகப்படுத்திய போது இந்தியாவே வியந்தது.

விமான சாஸ்திரம் பற்றி அவர் தந்த விவரங்களைக் கொண்டு ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிக்கும் முன்னரே பம்பாயில் விமானம் ஒன்று செய்யப்பட்டு அதன் சோதனை ஓட்டம் ஒன்று நடந்ததை சமீப காலத்தில் பலரும் பல கட்டுரைகளின் வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.

 

சுப்பராய சாஸ்திரியின் இளமைப் பருவம் மிகவும் சோகமான ஒன்று.

 

இளமையிலேயே அனாதரவாக கைவிடப்பட்ட அவர் கொடூரமான ஒரு தோல் வியாதியால் பாதிக்கப்பட்டார்.

வியாதியுடன் ஒவ்வொரு இடமாகத் தவழ்ந்து தவழ்ந்து சுற்றி அலைந்தார்.

 

ஒரு நாள் தாகத்தைத் தணிக்க நீரை அருந்துவதற்காக ஒரு குளத்திற்குச் சென்றார். தவறி அந்தக் குளத்தில் அவர் விழுந்த போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது.

 

அவர் ஒரு குகைக்குள் இருந்தார். ஒரு சாது அவரைக் கண்டு இரக்கப்பட்டு அவரது வியாதியைத் தனது தபோ சக்தியின் மூலம் குணப்படுத்தினார்.

அத்துடன் அவர் நிற்கவில்லை.பாரதத்தின் புராதன சாஸ்திரங்கள் பலவற்றைச் சொல்லலானார். அவற்றை சுப்பராய சாஸ்திரியின் நினைவில் தக்க வைத்தார். அவற்றை நன்கு கற்பித்தார்.

நினைத்த போது அந்த சாஸ்திரங்கள் அனைத்தும் அவருக்கு நினைவுக்கு வரும் படி அவர் அனுக்ரஹித்தார்.

அம்சுபோதினி என்று ஒரு சாஸ்திரம். சூரிய கிரணங்களின் சக்தி பற்றிய சாஸ்திரம் அது.

 

வைமானிக சாஸ்திரம் என்ற சாஸ்திரம் விமானங்களை எப்படி அமைப்பது என்பதைச் சொல்லும் சாஸ்திரம். இது பரத்வாஜ  முனிவரால் இயற்றப்பட்டது.

 

இவை அனைத்தையும் நன்கு  கற்றுக் கொண்ட சுப்பராய சாஸ்திரி பெங்களூர் வந்தார்.

 

அங்கு இவரது ஞானத்தைக் கண்ட பலரும் வியந்தனர்.

மஹா சங்கல்பம் என்ற ஒன்றை பெரிய காரியம் ஒன்றைச் செய்யும் முன்னர் ஹிந்துக்கள் செய்வது வழக்கம்.

இந்த மஹா சங்கல்பம் மிக அழகிய சொற்களால் ஆனது. ஒசை நயம் கொண்டது. அதில் மனித குலத்தின் மொத்த ஞானமும் அடங்கிய பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளடங்கியுள்ளன.

இதைச் சற்று உன்னிப்பாக ஆராய்ந்தாலேயே போதும் புராதன பாரதம் எப்படிப்பட்ட் ஆன்மீக ஞானத்தைக் கொண்டிருந்தது, எத்தனை கலைகளில் சிறந்திருந்தது என்பது தெரிய வரும். அனைத்து விஞ்ஞானமும் அதில் உள்ளது.

 

இதை ஆராய்ந்த மஹரிஷி அனகல் சுப்பராய சாஸ்திரி அதன் மஹிமையை உலகிற்கு எடுத்துரைத்தார்.

சாஸ்திரி அவர்கள் பல சாஸ்திரங்களையும் சொல்லச் சொல்ல அவற்றை அப்படியே பங்களூரைச் சேர்ந்த ஜி.வெங்கடாசல சர்மா எழுதலானார்.

 

சாஸ்திரங்களின் விவரங்களையும் சாஸ்திரி எடுத்துரைத்தார்.

அவரே கன்னடத்திலும் தெலுங்கிலும் அவற்றை விவரித்தார்.

அதை அப்படியே ஆங்கிலத்தில் வெங்கடாசல சர்மா மொழி பெயர்த்தார்.

 

இந்த சாஸ்திரங்களின் பட்டியல் மிக நீண்ட ஒன்று. அவற்றில் சிலவற்றின் சுருக்கத்தை இங்கு பார்ப்போம்:

அக்ஷரலக்ஷ சாஸ்திரம் : இந்த சாஸ்திரம் அகர முதலான எழுத்துக்கள், அதற்குரிய எண், அல்ஜீப்ரா,ஜாமெட்ரி, மற்றும் இதர  கணிதங்கள்,குறியீடுகள் ஆகியவற்றை விளக்கும் ஒன்று. பதினான்கு லோகங்களிலும் உள்ள வெவ்வேறு மொழிகளை எப்படி அமைப்பது என்பன உள்ளிட்ட விவரங்களையும் இது விளக்குகிறது.

லிகித சாஸ்திரம் : இது எல்லா ஸ்லோகங்களையும் எப்படி எழுதுவது என்பதை விளக்கும் கலை.

கணித சாஸ்திரம் : சகல லோகங்களிலும் உள்ள கணிதங்களை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் 18 சாஸ்திரங்கள் அடங்கி உள்ளன.

 

ஜோதிட சாஸ்திரம் : இது 64 விதமான வானவியல் மற்றும் ஜோதிட ரகசியங்களை விளக்கும் சாஸ்திரமாகும்.

நிருக்த சாஸ்திரம் : வேதங்களின் பாஷ்யங்களாக விளங்கும் ஆறு அங்கங்களை விளக்கும் சாஸ்திரம் இது.

 

 

வைசேஷிக சாஸ்திரம் : இதில் ஏழு சாஸ்திரங்கள் உள்ளன. நியாய சாஸ்திரத்துடன் தொடர்புள்ள சாஸ்திரம் இது.

வேதாந்த சாஸ்திரம் : இதில் 132 வேதாந்த சித்தாந்தங்களை விமரிசித்து அல்லது மறுத்துரைத்துச் சொல்லும் உரைகள் உள்ளன.இது பூர்வ பக்ஷம் எனப்படும். மேலும் இதில் பிரஸ்தான த்ரயம் எனப்படும் வேதாந்தம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக சித்தரிக்கப்படுகிறது.

பட்ட சாஸ்திரம் : இதில் 5 விதமான வெவ்வேறு சாஸ்திரங்கள் விளக்கப்படுகின்றன.இவை நியாய சாஸ்திரத்துடன் தொடர்பு கொண்டவை.

 

ப்ரபாகர சாஸ்திரம்:  மூன்று விதமான ப்ரபாகர சித்தாந்தங்கள் உள்ளன. இவை நியாய சாஸ்திரத்துடன் ஒப்பிடக் கூடியவை.

நியாய சாஸ்திரம் : இதில் 84 சாஸ்திரங்கள் உள்ளன. இவை கதாதரி என்ற ஐந்து வேதங்களைச் சொல்பவை.வைகானஸ தர்க்கத்தில் உள்ள 42 வேதங்கள் மற்றும்  கௌட தர்க்கத்தில் உள்ள 60 வேதங்கள் ஆகியவற்றின் விளக்கத்தை இதில் காணலாம்.

 

வியாக்ரண சாஸ்திரம் :இலக்கணம் பற்றியது. ஒன்பது விதமான வியாகரணங்கள் உள்ளது.பாணிணீயம்,மஹா வியாக்ரணம், ஐந்திரம்,சந்திரா,சகதவனம், ஸ்போத்தயானம் போன்றவை இதில் அடங்கும்.

சப்த சாஸ்திரம் :ஒலியின் நுணுக்கங்களை கூறும் சாஸ்திரம் இது. இதில் ஆறு சாஸ்திரங்கள் உள்ளன.

தர்க்க சாஸ்திரம் : லாஜிக் என ஆங்கிலத்தில் கூறப்படும் சாஸ்திரம் இது. தர்க்கம் பற்றிய எட்டு சாஸ்திரங்கள் உள்ளன. விவாதம் பற்றிய 84 சாஸ்திரங்கள் இதில் உள்ளன.

 

– அடுத்த கட்டுரையுடன் முடியும்

***

 

 

குரு தேக் பகதூரின் ஒப்பற்ற தியாகம்! (Post No.5136)

Written by S NAGARAJAN

 

Date: 22 JUNE 2018

 

Time uploaded in London –  5-23 am  (British Summer Time)

 

Post No. 5136

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

குரு தேக் பகதூரின் ஒப்பற்ற தியாகம்!

 

ச.நாகராஜன்

1

பாரதத்தின் வரலாற்றை சரியாக எழுத வேண்டிய அவசியம் முன் எப்போதையும் விட இப்போது அவசியமாகிறது; இது அவசரத் தேவையும் கூட.

செகுலரிஸம் என்ற போர்வையில் கிறிஸ்தவ பாதிரியின் கல்லறையில் அவர் தமிழ் மாணவன் என்று பொறித்திருக்கிறார் என்று சிறு பிள்ளைகளின் பாட புத்தகத்தில் பொய்யும் புரளியுமாக எழுதி வைப்பது; குரு தேக் பகதூரின் ஒப்பற்ற அற்புதமான தியாகத்தைக் கொச்சைப் படுத்துவது அதை NCERT மூலமாகப் பரப்புவது போன்ற பல அபாயகரமான அசிங்கமான பல நூறு “செகுலரிஸ வித்தைகளைப்” பார்த்து விட்டோம்.
(“தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு” இந்தியாவில் தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குழு ஆகும். இது மத்திய, மாநில அரசுகளுக்குக் கல்வி குறித்த ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கும் குழுவாக செயல்பட்டு வருகிறது. –

The National Council of Educational Research and Training (NCERT) is an autonomous organisation set up in 1961 by the Government of India to assist and advise the Central and State Governments on policies and programmes for qualitative improvement in school education.)

செகுலரிஸ போர்வையில் கம்யூனிஸ்டுகளும், வெறிபிடித்த மதமாற்றப்  பாதிரிகளும், இஸ்லாமிய தீவிரவாதிகளும், ஐந்தாம்படை வேலை பார்க்கும் போலி ஹிந்துக்களும் உலவுவதும் அறிஞர்கள் போல ஆய்வு என்ற பெயரில் விஷக் கருத்துக்களைத் திணிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

குரு தேக்பகதூரைப் பற்றி Guru Tegh Bahadur’s martyrdom

– Satish Chandra என்ற சதிஷ் சந்திராவின் கட்டுரையும் அதற்கு உரிய பதிலடிக் கட்டுரையாக , An untenable attempt என்று Gurtej Singh எழுதிய அழகிய கட்டுரையையும் ஹிந்து நாளேடு பிரசுரித்தது.

இணையதளத்தில் கீழ்க்கண்ட தொடுப்புகளில் அன்பர்கள் கட்டுரைகளை முழுதுமாகப் படிக்கலாம். (16-10-2001 மற்றும் 13-11-2001 இதழ்களில் வெளியானவை)

http://www.thehindu.com/2001/10/16/stories/05162524.htm

 

http://www.thehindu.com/thehindu/op/2001/11/13/stories/2001111300020100.htm

 

 

2

நமது நாட்டின் சேவையில் சீக்கியர்களின் சேவை மகத்தானது.

இவர்களைத் தரம் தாழ்த்திப் பேசுவதும், இவர்களின் பணியை கொச்சைப் படுத்துவதும் இவர்களை தேசீய நீரோட்டத்திலிருந்து பிரித்து பிரிவினையை ஏற்படுத்தும் தீய எண்ணத்தின் அடிப்படையிலானது.

இந்திய சுதந்திரப் போரில் பிரிட்டிஷ் பாதக அரசால் தூக்கிலிடப்பட்ட 124 வீரர்களில் 71 பேர்கள் சீக்கியர்கள். ஒரே ஒருவர் தான் முஸ்லீம். அவரும் கூட கைபர் பிராந்தியத்தைச் சேர்ந்த பத்தான். ஆயுள் தண்டனை தரப்பட்ட 3500 சுதந்திரப் போர் தியாகிகளில் 2200 பேர்கள் சீக்கியர்கள்.

1919ஆம் ஆண்டு புனிதத் தலமான அமிர்தசரஸில் நிராயுதபாணிகளாக இருந்தவர்களை பிரிட்டிஷ் அரசு வக்கிரமாக ஈவிரக்கமின்றி வதை செய்தது; அதில் 1301 பேர்கள் பலி ஆயினர். அவர்களுள் 799 பேர்கள் சீக்கியர்கள். ஒருவர் கூட முஸ்லீம் இல்லை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆக வரலாறு நெடுக ஹிந்துக்களும் சீக்கியர்களும் தங்கள் இன்னுயிரைத் தேசத்திற்காக தியாகம் செய்ததில் சளைத்ததே இல்லை.

 

3

குரு தேக் பகதூர் (Guru  Tegh Bahadur) பத்து சீக்கிய குருக்களில் ஒன்பதாம் நானக் குருவாவார். (தோற்றம் 1-4-1621 மறைவு 24-11-1675). சீக்கிய குருக்களில் முதல் குருவான குரு நானக் அவர்களின் ஆவி இவர் மீது ஆவிர்பவித்ததாக நம்பப் படுகிறது.

குரு கிரந்த் சாகிப்பில் இவரது 115 கவிதை நடையிலான இறைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இவரது பெருமை அளப்பரியது.

பல்கலை வித்தகர் இவர். வில்வித்தை, கத்திச் சண்டையில் நிபுணர். குதிரையேற்றத்தில் வல்லவர். பழைய இதிஹாஸ நூல்களில் அவற்றின் ஆழம் கண்டவர்.

பதினான்காம் வயதிலேயே முகலாயரை போரில் எதிர்கொண்ட அஞ்சா நெஞ்சர் இவர்.

பகலா என்னும் இடத்தில் 26 வருடங்கள் 9 மாதங்கள் 13 நாட்கள் இவர் தவத்தில் இருந்தார். குடும்ப பொறுப்பை விட்டு விட்டு அதிகமாக தவத்தில் ஈடுபட்ட காலம் இது.

காஷ்மீரி ஹிந்து பண்டிட்களை கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றும் அநியாயத்தைத் தட்டிக் கேட்டார் இவர்.

ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் இஸ்லாமிற்கு மாற்றும் முகலாய அரசின் போக்கை வன்மையாகக் கண்டித்து தைரியமாகப் போர்க்கொடி உயர்த்தினார்.

அனந்தபூர் சாஹிப் என்னும் அழகிய நகரை பஞ்சாப் மாகாணத்தில் நிறுவினார். பிலாஸ்பூர் ராணியான சம்பாவிடமிருந்து 500 ரூபாய் கொடுத்து இதற்கான இடத்தை இவர் வாங்கினார். பாடியாலா நகரையும் இவரே தான் நிறுவினார்.

ஜிஹாங்கீர் அநியாயமாக ஐந்தாம் சீக்கிய குருவான அர்ஜுன் சிங்கைக் கொலை செய்ததன் காரணமாக, இவருக்கு பலத்த பாதுகாப்பை இவரது மெய்காப்பாளர்கள் தந்தனர்.

ஆனால் ஔரங்கசீப் இவரைப் பிடித்து வந்து இஸ்லாமிற்கு மாறு; இல்லையேல் உயிரை எடுப்பேன் என்று கூறிய போது ஒருக்காலும் இஸ்லாமிய மதத்தை ஏற்க மாட்டேன். சாவதே மேல் என்று முழங்கினார்.

 

அனைவருக்கும் முன்பாக 1675-ல் இவர் தலை துண்டிக்கப்பட்டது. இவர் இறந்த இடம் குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப். இவர் உடல் எரிக்கப்பட்ட இடம் குருத்வாரா ராகெப் கஞ்ச் சாஹிப்.

தனது இன்னுயிரை ஈந்து தன் மானத்தைக் காத்த மாபெரும் வீரரான இவரைக் கொச்சைப் படுத்துவதும் ஔரங்கசீப்பை புகழ்வதும் தேசப்பற்றில்லாதவர்கள் மட்டுமே செய்யக்கூடிய செயலாகும்.

இவரைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் உள்ளன. நாடு முழுவதும் இவர் சுற்றி வந்ததால் மக்களின் அளவிலா அன்பையும் மதிப்பையும் சம்பாதித்தார்.

குரு தேக் பகதூரைப் போற்றுவோர் பாரத தேச பக்தர்கள்; இவரது வரலாற்றை மாற்றத் துணிவோர் இந்த தேசத்தின் துரோகிகள்!

குரு தேக் பகதூரை வணங்குவோம்; போற்றுவோம்!

***

ஜப்பானில் பிள்ளையார் & ஸரஸ்வதி கோவில்கள்! (Post No.5128)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 19 JUNE 2018

 

Time uploaded in London –  11-55 am (British Summer Time)

 

Post No. 5128

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஜப்பானில் 131 ஸரஸ்வதி கோவில்கள் இருக்கின்றன. டோக்கியோ, கொயசான், டகாவோ முதலிய இடங்களில் கணபதி (பிள்ளைஐயார்) கோவில்கள் இருக்கின்றன.

 

ஜப்பானில் எடொ (Edo) என்னும் ஊரில் ஜெர்மன் டாக்டர் பிலிப் ப்ரன்ஸ் வோன் சீபோல்ட் (1823-28) வாழ்ந்தார். அங்கு கணபதி என்னும் கடவுள் எவ்வளவு பிரஸித்தமானவர் என்று அவர் எழுதிய ஜப்பானிய கடவுள்கள்  (1832) என்ற நூலில் எழுதியுள்ளார். கணபதிக்குப் பல கோவில்கள் இருந்தமை குறித்தும் ஒரு பேட்டை அவர் பெயரில் ஷோடன் சோ என்று அழைக்கப்படாதாகவும் எழுதுகிறார்.

1970 ஆம் ஆண்டில் அந்த கோவிலுக்கு லோகேஷ் சந்திரா என்ற இந்திய-ஜப்பானிய அறிஞர் சென்றார். அப்பொழுதும் அங்கு வழிபாடு நடந்தது. 1200 ஆண்டுகளாகத் தொடர்ந்து வழிபாடு நடக்கிறது. அந்த ஒன்பதாம் நூற்றாண்டு ஆலயத்தில்!

 

லோகேஷ் சந்திரா அங்கு சென்றபோது ஏராளமான தம்பதியர் இல்லற இன்பம் வேண்டியும், மூத்தவர்கள் சந்தோஷத்தையும் வணிகத்தில் வெற்றியையும் நாடி வந்தனர் என்றும் கூறுகிறார். அவரை நந்திகேஸ்வரர் (காங்கிடென்) என்றும் சொல்லுவர்.

 

ஸரஸ்வதி தேவிக்கு 131 கோவில்கள் உள. ஜெர்மானிய புஸ்தகத்தை மொழிபெயர்த்தால் அக்கலத்தில் அங்கு இருந்த உயிர்த் துடிப்புள்ள பௌத்த, இந்து சமய வழிபாடுகளை அறியலாம்.

 

புயற்காற்றுத் தாகுதல்களைத் தடுக்க 1836-ல் வருண பகவானுக்கு ஒரு ஆலயம் சமைக்கப்பட்டதாம். அரசு வேலையில் உயர பிரம்மாவையும், மழைக்காக வருணனையும், விஷ முறிவுக்காக கருடனையும், நல்ல வர்த்தகம்- போர் வெற்றிக்காக மஹா காலனையும் அவர்கள் வழிபட்டதாக எழுதியுள்ளார். இந்தியாவுக்கு வெளியேயுள்ள பிள்ளையார் கோவில்களில் மிகவும் பழமையானது எடோ நகர கோவில்தான்.

தத்துவ வித்தகர்களுக்கு கோவில்கள்

நரா என்னும் இடத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற தத்துவ வித்தகர்களுக்கு  சிலைகள் உள்ளன. 1208ல் புகழ்பெற்ற சிற்பி உன்கேய் (Unkei) செதுக்கிய வசு பந்துவின் சிலையும், ஆசங்கரின் சிலையும் அங்கே உள்ளன. அவற்றின் ஜப்பானிய பெயர்கள்- செய்ஷின், முசாக்கு

 

நாளந்தா ஈ அற்புதம்!

818 ஆம் ஆண்டில் கோங்கோ சம்மை (வஜ்ரஸமாதி), சீனா வழியாக நாளந்தாவுக்கு வந்தார். பீஹார் மாநிலத்திலுள்ள நாளந்தாவில் சாப்பாடு அறைகளில் லட்சக் கணக்கில் ஈக்கள் இருக்கும் என்றும் ஆனால் புத்த பிக்ஷுக்கள் வந்து சாப்பிடத் துவங்கியவுடன் அவை மாயமாய் மறைந்து விடும் என்றும் எழுதி வைத்துள்ளார்.

 

ஜப்பானில் மஹாபாரதம்

ரிஷ்யஸ்ருங்கர் கதை ஜப்பானில் நடித்துக் காட்டப்படுகிறது (kabuki drama Naru-kami) . இது சீனா  வழியாக ஜப்பான வந்தது. ஒரு பிரெஞ்சு ஆசிரியரின்  (Edouard Chavanes ) மொழிபெயர்ப்பு இதற்கு அடிப்படையாக அமைந்தது. அவர் ஏக ஸ்ருங்க என்ற (இக்காகு சென்னின்) மஹாபாரதக் கதையை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தார். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த சீன யாத்ரீகன் யுவாங் சுவாங்கும் காந்தாரத்திலுள்ள ஏக ஸ்ருங்க ஆஸ்ரமத்தைப் பற்றி எழுதினார். இது காந்தாரத்தில் ஸ்வாட் மலை அடிவாரத்திலுள்ளது.

 

ஹோம குண்டம் படம்

 

டோஜி மடாலயத்தில் ஹோம குண்டம் படம் உள்ளது. நவக்ரஹங்களையும் 28 நக்ஷத்ரங்களையும் வழிபட பல்வேறு வகை ஹோமங்கள் ஒரு சுவடியில் காணப்படுகின்றன. இது ஒன்பதாம் நூற்றாண்டு சுவடி.

 

சாலையில் ஒரு பிரம்மாண்டமான வட்ட வடிவப் பாறையில் நவக்ரஹங்களுக்கான பீஜாக்ஷர மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. ஸம்ஸ்க்ருத ஓரெழுத்தான ரோ இதில் உள்ளது. இதை நமது ஆசிரியர் பார்த்துக் கொண்டு இருக்கையில் ஒரு நவீன உடை அணிந்த இளம் பெண் வந்து ஒரு காகிதத்தை வைத்து அதன் மீது ஒரு ஆரஞ்சுப் பழத்தை வைத்து நைவேத்யம் செய்ததைக் கண்டார்.

புகாகு, ஜிகாகு

ஜப்பானில் ஒரு  ஏரியின் பெயர் பீவா; இதன் பொருள் வீணை. அது வீணை வடிவில் இருப்பதால் அந்தப் பெயர். இதே போல ஜிகாகு புகாகு என்ற நாட்டிய வகைகளில் இந்தியக் கதைகளும் நகைச் சுவைக் கதைகளும் இடம் பெறுகின்றன. இந்தக் கதைகள் பாரத நாட்டுக் கதைகள் என்பதால் அதன் தாக்கம் நன்றாகத் தெரிகிறது.

 

–SUBHAM–

 

 

ஸந்யாஸி செய்த ஒரு லக்ஷம் பொம்மைகள்! (Post No.5124)

Huge Navagraha Inscription

Written by LONDON SWAMINATHAN

 

Date: 18 JUNE 2018

 

Time uploaded in London –  10-47 am  (British Summer Time)

 

Post No. 5124

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

ஸந்யாஸி செய்த ஒரு லக்ஷம் பொம்மைகள்! (Post No.5124)

ஜப்பானிய புத்த மத சந்யாஸி (Enku) என்கு (1632- 1695) ஒரு லட்சம் பொம்மைகள் செய்து உலக சாதனை படைத்தார். அவரது வாழ்க்கை அற்புதமான ஒன்று.

 

என்கு(Enku) என்பவர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் ஒரு புத்தமதத் துறவி. இந்துக்கள் லக்ஷார்ச்சனை, லக்ஷ தீபம், லக்ஷ ஹோமம் என்றெல்லாம் செய்து இறைவனைப் போற்றுவர். ஒரு இலக்ஷம் முறை ராம நாமம் அல்லது ஓம் நம சிவாய எழுதுவதாக வேண்டிக் கொள்வர். இதே பாணியில் என்கு என்ற சாதுவும் நான் மரத்தில் ஒரு லக்ஷம் புத்தர் உருவங்களைச் செய்யும் தவத்தை மேற்கொள்வேன் என்று சபதம் செய்தார்; அந்த சபதம் நிறைவேற அவருக்கு 28 ஆண்டுகள் ஆயின. போகும் போதும் வரும்போதும் பார்த்த மரத்துண்டுகளை எல்லாம்

உளியால் செதுக்கி புத்தர் உருவங்களை உருவாக்கினார்.

 

ஒரு லக்ஷம் புத்தர் உருவங்களை செதுக்கியபோது கடைசி பொம்மையின் பின்புறத்தில் அவரே எழுதினார்- ‘ஒரு லக்ஷம் புத்தர்கள் நிறைவு பெற்றது- என்று. எத்தகைய அரிய தவம் பாருங்கள். அத்தோடு அவர் நிற்கவில்லை. அவர் புத்தர் உருவங்களை செதுக்கிக் கொண்டே இருந்தார்.

பொம்மை செய்வது ‘சாகாரம்’ என்னும் முதல் படிதான்; தவத்தின் அடுத்த படியில் ஏற முயன்றார்.அது ‘நிராகாரம்’ ஆகும்; அதாவது புத்தமத பாஷையில் சமாதி அடைதல். இது அடையாளபூர்வ சமாதி ஆகும்.

 

நாகரா நதியின் கரையில் ஒரு குழி வெட்டும்படி கூறினார். அதற்குள் இறங்கிக் கொண்டு ஒரு மூங்கில் குழாய் மூலம் சுவாஸிக்க ஏற்பாடு செய்துகொண்டார். குழாய் தவிர மற்ற எல்லா இடமும் குழியை மூடச் செய்தார். பூமிக்கடியில் உண்ணாவிரதம், ஜபம், மணி அடித்தல் மூலம் அவர் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியும். அப்படியே பல ஆண்டுகள் கழித்து சமாதி ஆனார்.

 

அவர் சமாதி உள்ள இடத்தில் மிக உயர்ந்த ஓக் மரங்களும் செர்ரி மரங்களும் பூங்கொடிகளும் அமைதியாகத் தவழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அந்த செடிகொடிகளைத் தொட யாரையும் அனுமதிப்பதில்லை. யாரேனும் அவைகளை வெட்டினால் அதிலிரு ந்து ரத்தம் வரும் என்பர்.

 

புகழ்பெற்ற துறவி என்கு Enku , ஒரு கவிஞரும் கூட. பல கவிதைகளை இயற்றியுள்ளார்.

 

அவர் எழுதிய ஒரு கவிதையின் வரிகள்:–

 

“நாள் தோறும் தூய்மை பெறுகிறது மனது

வானத்தில் உலவும் நிலவும் நானும்

வட்டமாகி முழுமை பெறுகிறோம்”.

 

அவரது பௌர்ணமி நிலவு ஒளி இன்றும் வீசிக் கொண்டே இருக்கிறது!

Homa (Havan) Kunda in Japan

துறவிக்கு ஸம்ஸ்க்ருதம் கற்றுத் தந்தாள் ஸரஸ்வதி தேவி!

 

ஜப்பானில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த துறவியின் பெயர் ஜியுன் சோஞ்சா (Jiun Sonja1718-1804). அவர் குணக் குன்று. அவரை ‘ஆர்ய’, ‘அர்ஹத்’ என்ற அடைமொழிகளுடன் அழைப்பர்.

 

(ஆர்யன் என்றால் ‘பண்பாடுமிக்கவன்’ என்று பொருள்; பாரதியார் பாடல் முழுதும் ‘ஆரிய’ என்பது இப்பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது; மாக்ஸ்முல்லர், கால்டுவெல் போன்ற மதப் பிரசாரகர்களின் பொருள் அன்று.)

 

ஜப்பானில் கிடைக்கும் எல்லா ஸம்ஸ்க்ருத சுவடிகளின் தொகுப்பை ஆயிரம் பகுதிகளாக வெளியிட அவர் விரதம் பூண்டார். அவைகளில் 300 பகுதிகள் கோகிஜி (Kokiji) பௌத்த மடாலயத்தில் இருக்கின்றன. அவர் தமிழ் தாத்தா உ.வே. சுவாமிநாத அய்யர் போல ஹோர்யூஜி, ஷோர்யோஜி, சுய்செஞ்சி முதலிய மடாலயங்களில் உள்ள சம்ஸ்க்ருத சுவடிகளைத் திரட்டினார். அவைகளில் 59 பகுதிகளை இந்திய- ஜப்பானிய அறிஞர் லோகேஷ்  சந்திரா வெளியிட்டுள்ளார்.

ஜியுன் சோஞ்சா தன்னைப் பற்றிச் சொல்லுவது அற்புதமான விஷயங்களாகும்.

 

“ஸரஸ்வதி தேவியே எனக்கு ஸம்ஸ்க்ருதம் கற்பித்தாள்; அவள் ஸம்ஸ்க்ருதம் சொல்லுவது என் காதுகளில் விழும். என் பேனாவைக் கையில் எடுத்தால் நான் எழுதுவது ஸம்ஸ்க்ருதம் ஆகத்தான் இருக்கும்”.

 

சித்தம் லிபியில் அவர் ஸம்ஸ்க்ருதம் எழுதினார். தர்ம அலைகள்  ஜியுன் சோஞ்சா என்ற கரையில் மோதின என்றால் மிகப் பொருத்தமே. சாந்தமான சொற்கள் அவருடைய இறகுப் பேனா வழியே பாய்ந்தன .இது இந்திய- ஜப்பானிய உறவுப் பாலமாகத் திகழ்கின்றது என்றால் மிகையாகாது.

அவருடைய ஆயிரம் பகுதி ஸம்ஸ்க்ருதம் கலை க்களஞ்சியத்துக்கு ‘போங்காக்கு ஷின்ரியோ’ என்று பெயர் (ஜப்பானிய மொழியில் ஸம்ஸ்க்ருதம் பெயர் போங்கோ). கந்தல் ஆடையுடன் காட்சி தந்த துறவி மூலம் ஸ் தேவியே  ஸம்ஸ்க்ருத நூல்களைப் பரப்பியதாக ஜப்பானியர் நம்புகின்றனர். கோகிஜி மடாலயத்தில் முப்பது ஆண்டுகள் தங்கி அறப்பணி ஆற்றினார். இன்றும் அந்த மடத்தில் ஸரஸ்வதி வியே பிரதான தெய்வம். ஆண்டுதோறும் அவளுக்கு விழா எடுக்கின்றனர்.

 

-Subham–

பிள்ளைமார் வாழ்க! – 2 (Post No.5123)

Written by S NAGARAJAN

 

Date: 18 JUNE 2018

 

Time uploaded in London –  7-32 am  (British Summer Time)

 

Post No. 5123

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

தேசம், தெய்வம், தமிழ் போற்றிய உத்தமர்கள்

 

பிள்ளைமார் வாழ்க! – 2

 

ச.நாகராஜன்

 

6

பிள்ளைமார் வாழ்க என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை (எண் 4566) 31-12-2017 அன்று வெளியிடப்பட்டது.

 

வந்தது ஒரு விமரிசனக் கடிதம்.

 

சரியாகத் தெரிந்து கொண்டு எழுதுங்கள் என்பது தான் சாரம்.

உத்தமர்களைப் புகழ்ந்து எழுதப் போய் வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

விவரம் என்ன என்று ஆராய ஆரம்பித்ததில் பிள்ளைமார் என்பதில் சுமார் 20க்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளன என்று தெரிய வந்தது.

 

நல்லவர்கள் எல்லோரையும் இனம் காட்டி அவர்களைப் போற்றுவதற்காக எழுதப்பட்ட கட்டுரை அது.

வேற்றுமைகள் இருப்பின் அதை மறந்து புகழ வேண்டிய குணங்களை இனம் கண்டு புகழ வேண்டும்; போற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

விக்கிபீடியாவில் பிள்ளைமார் பற்றி நிறைய விஷயங்கள் உள்ளது.

 

7

பிள்ளைமார் என்ற பட்டியலை எடுத்துக் கொண்டால் போற்ற வேண்டியவர்களின் பட்டியல் மிக நீளமானது. (தயவுசெய்து உட்பிரிவுகள் இருப்பின் அதை மறக்க வேண்டுகிறேன்.)

மனோன்மணீயம் எழுதிய சுந்தரம் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, எஸ்.வையாபுரி பிள்ளை, வ.சு.செங்கல்வராயன் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், அகிலன், ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை, பரலி சு.நெல்லையப்பர், செண்பகராமன் பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை, மறைமலை அடிகள் என நீண்டு கொண்டே போகும் இந்தப் பட்டியல்.

தேசத்திற்கும், தெய்வீகத்திற்கும், தமிழுக்கும் பிள்ளைமார் சமூகம் ஆற்றிய தொண்டைப் புகழ வார்த்தைகளே இல்லை.

பிள்ளை என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன் என்றார் ஜெயகாந்தன்.

 

இதையே  பிள்ளைமார் குலத்தில் பிறந்த அனைவரும் சொல்வார்கள் – ஏனெனில் குலப் பெருமை அப்படி இருப்பதால்!

எல்லோரையும் பற்றி எழுதுவது என்றால் அது ஒரு பிள்ளைமார் என்சைக்ளோபீடியா ஆகி விடும்.

ஆகவே சுருக்கமாகச் சிலரைப் பற்றி இங்கு பார்க்கலாம். இந்தத் தொடர் கட்டுரையை இத்துடன் முடிக்கலாம்.

 

 

8

 

வ.உ.சி. (தோற்றம் 5-9-1872 மறைவு 18-11-1936)

 

கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தத்ரூபமாக வ.உ.சி-ஐ நம் மனக்கண் முன்னே நிறுத்தினார்.

 

பார்த்தவர்கள் மனம் கலங்கியது.

செக்கிழுத்த செம்மலை எப்படிப் புகழ்வது?

மஹாகவி பாரதியாருடனான அவரது நெருங்கிய தொடர்பை யாரும் மறக்க முடியாது.

அழியாத அமர வரிகளால் பாரதியார் அவரை தனது பாடல்களில் சித்தரித்து விட்டார்:

கலெக்டர் விஞ்ச்  ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லியது

 

ராகம் – தாண்டகம் தாளம் – ஆதி

நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை

நாட்டினாய், கனல் மூட்டினாய்,

வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே

மாட்டுவேன்; – வலி காட்டுவேன். (நாட்டி)

கூட்டம் கூடி வந்தே மாதரமென்று

கோஷித்தாய், – எமை தூஷித்தாய்,

ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல்

ஓட்டினாய், – பொருள் ஈட்டினாய் (நாட்டி)

கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்

கூறினாய், – சட்டம் மீறினாய்,

ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே

ஏசினாய், – வீரம் பேசினாய் (நாட்டி)

அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்

ஆக்கினாய், – புன்மை போக்கினாய்,

மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை

மீட்டினாய், – ஆசை ஊட்டினாய் (நாட்டி)

தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத்

தூண்டினாய், – புகழ் வேண்டினாய்,

கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்

காட்டினாய். – சோர்வை ஓட்டினாய் (நாட்டி)

எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை

ஏவினாய், – விதை தூவினாய்,

சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்

செய்யவோ? – நீங்கள் உய்யவோ? (நாட்டி)

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்

சொல்லுவேன், – குத்திக் கொல்லுவேன்

தடிப் பேசுவோ ருண்டோ ? சிறைக்குள்ளே

தள்ளுவேன், – பழி கொள்ளுவேன். (நாட்டி)

 

கலெக்டர் வின்சுக்கு  ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி

சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே

துஞ்சிடோ ம் – இனி அஞ்சிடோ ம்

எந்த நாட்டினும் இந்த அநீதிகள்

ஏற்குமோ? – தெய்வம் பார்க்குமோ?

வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை

வாழ்த்துவோம் – முடி தாழ்த்துவோம்

எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்

ஈனமோ? – அவ மானமோ?

பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு

போகவோ? – நாங்கள் சாகவோ?

அழுது கொண்டிருப் போமோ? ஆண்பிள்ளைகள்

அல்லமோ? – உயிர் வெல்லமோ?

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்

நாய்களோ? – பன்றிச் சேய்களோ?

நீங்கள் மட்டும் மனிதர்களோ? – இத்

நீதமோ? – பிடி வாதமோ?

பார தத்திடை அன்பு செலுத்துதல்

பாபமோ? – மனஸ் தாபமோ?

கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது

குற்றமோ? – இதில் செற்றமோ?

ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது

ஓர்ந்திட்டோ ம் – நன்கு தேர்ந்திட்டோ ம்

மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம்

மலைவு றோம்; – சித்தம் கலைவுறோம்.

சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்

சாயுமோ? – ஜீவன் ஓயுமோ?

இதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி

ஏகுமோ? – நெஞ்சம் வேகுமோ?

 

பாடலை விளக்கவும் வேண்டுமோ?

நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்த பிள்ளை அவர்களை இந்தியர்கள் – குறிப்பாகத் தமிழர்கள் ஒருநாளும் மறக்க மாட்டார்கள்.

 

*

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை (தோற்றம் 19-10-1888 மறைவு 24-8-1972)

காந்தியக் கவிஞர் என்று புகழ் பெற்ற இவரது பாடல்கள் ஏராளமானோரை பரவசப்படுத்தியது; ஊக்கப்படுத்தியது!

 

*

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (தோற்றம் 27-7-1876 மறைவு 26-9-1954) குமரி மாவட்டத்தில் தேரூரில் வாழ்ந்த தமிழ்க் கவிஞர். ஏராளமான தேசியப் பாடல்கள், குழந்தை இலக்கியப் பாடல்கள் என பல துறைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர்

 

*

ஆக தமிழுக்குத் தொண்டு செய்த பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

தமிழர்கள் மறக்க முடியாத சமூகம் பிள்ளைமார் குலம் என்று கூறலாம்.

 

இறுதியாக கட்டுரையை இந்த வரிகள் மூலம் முடிக்கலாம்:

 

நல்ல நல்ல ‘பிள்ளைகளை’ நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி!

***

 

ஜப்பானில் தருமா (தர்மபோதி) பொம்மை! (Post No. 5121)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 17 JUNE 2018

 

Time uploaded in London –  10-03 am  (British Summer Time)

 

Post No. 5121

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

ஜப்பானில் தருமா (தர்மபோதி) பொம்மை! (Post No. 5121)

 

ஜப்பானுக்கு எப்படி சர்க்கரை வந்தது? இக்ஷ்வாகு வம்சம் இந்தியாவில் புராண வம்ச பரம்பரையில் முதலில் நிற்பர் ; இக்ஷ்வாகு என்றால் கரும்பு. அவர்தான் கரும்பு என்னும் பயிரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் வழியில் வந்தவர் புறநானூற்றுப் பாடலில் புகழப்படும் அதியமான். சத்தியவான் என்பதை தமிழில் அதியமான் என்பர். அவரைக் கரும்பு கொண்டு வந்ததாக      அவ்வையாரும் பாராட்டுகிறார் புறநானூற்றில்! ( எனது பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் முழு விவரம் உளது); சிந்து சமவெளியிலும் சர்க்கரை கண்டு பிடிக்கப்பட்டதால், சிந்து-ஸரஸ்வதி நதி தீர நாகரீகம், வேத காலத்துக்கும்  பிற்காலத்தியது என்பது உறுதியாகிறது.

 

ஜப்பானியர்களுக்கு இனிப்பும் சர்க்கரையும் தெரியாது-டாங் (Tang) வம்ச காலத்தில் கஞ்சின் (Ganjin) என்ற குரு சர்க்கரையைக் கொண்டுவந்தார் (கி.பி.753). பின்னர் 806-ல் கோபோ டாய்ச்சி (Kobo Daichi)  சில இனிப்புப் பண்டங்களைக் கொணர்ந்தார். இப்படியாக இக்ஷ்வாகு மன்னர் கண்டு பிடித்த கரும்பு, பாரத தேசத்திலிருந்து சீனாவுக்குச் சென்று அங்கிருந்து ஜப்பானுக்குச் சென்றது இனிப்பான- சுவையான செய்தி.

British PM Margaret Thatcher with Daruma Doll in 1986

தர்மபோதி

ஜப்பானியர் இல்லங்களில் தொழிற்சாலைகளில் உள்ள அதிர்ஷ்ட பொம்மை தர்மா பொம்மை. இது இந்தியத் துறவி தர்ம போதியின் சிலை ஆகும்.

ஆறாவது நூற்றாண்டில் சீனாவுக்கு ஜென் புத்தமதத்தைக் கொண்டு சென்ற இந்தியத் துறவி தருமபோதி ஜப்பானியரின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டார். ஜப்பானின் லக்கி/ அதிர்ஷ்ட பொம்மை தர்மா (Daruma Doll) பொம்மை. இதயத்தைத் தொடும் கொள்கைகளை உரைப்பது ஜென் கொள்கை.

 

தர்மபோதி எட்டு ஆண்டுகளுக்கு அல்லும் பகலும் அனவரதமும் தியானம் செய்தார். இப்படி வால்மீகி முனிவர் தியானம் செய்ததால் அவர் மீது புற்று வளர்ந்து, அவர் பெயரே ‘புற்று’ என்று ஆகிவிட்டது. ஆனால் தர்மபோதியின் கால்களோ, சுருங்கிவிட்டன. ஒரு உறுப்பை நீண்ட காலம் பயன்படுத்தாவிடில் அது செயல் இழந்து விடும். இதனால் கால்கள் இல்லாத உருட்டு வடிவமாக — தர்மா பொம்மை உருவானது. அது வீட்டில் இருந்தால்தான் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையும் வளர்ந்தது. இன்று வரை அது வணிக நீதியில் பலவகையாக உருவாக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

 

 

தர்மா பொம்மையின் கண்ணில் வர்ணம் பூசுவது அதிர்ஷ்டத்தைக் கொணரும் என்ற நம்பிக்கை ஜப்பானில் உளது. அரசியல்வாதிகளும் இதை எல்லோர் முன்னிலையிலும் செய்வர். க்யோடோ பிராந்தியத்தில் 28 ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த யூகியோ ஹயசிடா இப்படிச் செய்தார். தேர்தலுக்கு முன்னர் ஒரு கண்ணில் அவர் மை பூசினார். வெற்றிக்குப் பின்னர் தர்மா பொம்மையின் மறு கண்ணில் மை தீட்டினார்.

 

பிரிட்டனில் ஸண்டர்லாண்ட் என்னும் இடத்தில் மிகப்பெரிய ஜப்பானிய கார் (நிஸ்ஸன்) தொழிற்சாலை உளது; அங்கே 1986-ல் கார் தொழிற்சாலையைத் துவக்கிவைத்த பிரதமர் மார்கரெட் தாட்சர் ஒரு தர்மா பொம்மையின் கண்ணில் மை தீட்டினார். . சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கே சென்ற பிரதமர் டேவிட் காமெரோன் மின்சார கார் உறபத்தியைத் துவக்கி வைத்தார். அந்தத் தொழிற்சாலையின் வெற்றியைக் குறிக்கும் முகத்தான் அதே தர்மா பொம்மையின் இன்னொரு கண்ணில் மை தீட்டினார்.

 

1990 பிப்ரவரி 21-ல் ஜப்பானிய லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைவர் டொஷிகு கைப்பு வெற்றி பெற்றார். அவர் மிகப்பெரிய தர்மா பொம்மையில் வர்ணம் பூசி வெற்றி விழா நடாத்தினார்.

ஜப்பானில் லெட்சுமி

 

இந்துத் தெய்வமான லக்ஷ்மி ஜப்பானில் கோவில் கொண்டுள்ளார். அவளுடைய ஜப்பானியப் பெயர்- கிச்சிஜோடன். 1997ல் இந்தியாவின் ஐம்ப தெய்தாவது சுதந்திரக் கொண்டாட்டங்கள் ஜப்பானிலும் நடந்தன. துணை ஜனாதிபதி கே ஆர் நாராயணன், பிரிட்டிஷ் மஹாராணி எலிசபெத் ஆகியோர் வருகை புரிந்தனர். அப்பொழுது பிரிட்டிஷ் மியூஸியம் 300 கலைப் பொருட்கள், சிலைகளை அனுப்பி வைத்தது. அதில் ஒன்று ஜப்பானிய லக்ஷ்மி. ஒரு கை, வரத முத்ரை காட்டும் மறு கையில் சிந்தாமணி ரத்தினம் இருக்கும். இது ஹையன் (Heiyan Period) கால பொம்மை.

 

இந்த விழாவில் இந்திய ஜப்பானிய அறிஞர் லோகேஷ் சந்திரா உரை ஆற்றுகையில் “ராணியாரே, நன்றி; உங்கள் நாட்டில் செல்வம் செழிக்க நாங்கள் லக்ஷ்மியை (பிரிட்டிஷ் மியூஸியத்துக்கு) அனுப்பிவைத்தோம் ; செல்வம் பாய்ந்து ஓடுகிறது; இப்பொழுது அதை அடையாள பூர்வமாக இந்தியாவுக்கு இலாவிடினும் இந்திய சுதந்திர விழாவுக்கு அனுப்பினீர்களே; நன்றி” என்றார். உடனே இந்திய துணை ஜனாதிபதி கே ஆர் நாராயணன்— லோகேஷ் சந்திரா கைகளை நைஸாக அமுக்கி ‘சபாஷ்’ கொடுத்தார்.

 

–SUBHAM–

ஜப்பானில் ஸம்ஸ்க்ருதம்! (Post No.5116)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 16 JUNE 2018

 

Time uploaded in London –  7-33 am  (British Summer Time)

 

Post No. 5116

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

சம்ஸ்க்ருத மொழியின் தாக்கம் இல்லாத நாடுகளே உலகில் இல்லை; போர்னியோ (இந்தோநேஷியா) காட்டுக்குள் சம்ஸ்கிருத கல்வெட்டுகள்; மத்திய ஆஸிய பாலைவனத்தில் சம்ஸ்கிருதச் சுவடிகள்; சீனாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஸம்ஸ்க்ருத நூல்களின் மொழிபெயர்ப்பு; துருக்கியில் வேதகால தெய்வங்களைக் கூறும் கி.மு1400 ஆண்டுக் கல்வெட்டு. எகிப்தில் தசரதன் (கி.மு1300) கடிதங்கள்; துருக்கியில் தசரதன் (துஷ்ரட்ட) பிரதர்தனன் ஆட்சி; தென் கிழக்காசிய நாடுகளில் 1500 ஆண்டுகளில், 1000 ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள். ஜப்பான் கொரியா முழுதும் போதிசேனர் மூலம் ஸம்ஸ்க்ருத்ச் சுவடிகள்; மேலை நாடுகள் முழுதும் ஸம்ஸ்க்ருதத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, இதாலியன்,ஸ்பானிஷ், லத்தீன், கிரேக்கம்– தமிழிலோ ஸம்ஸ்க்ருதக் கலப்பில்லாமல் ஒருவர் கூட, ஐந்து நிமிடம் கூடப் பேச முடியாத நிலை. எந்தப் பத்திரிக்கையின் எந்தப் பக்கத்தைத் திறந்தாலும் ஸம்ஸ்க்ருத சொற்கள்!!!

 

ஸம்ஸ்க்ருதம் இல்லாத கட்டுரை, பிளாக், உரை, சொற்பொழிவு, நாளிதழ், டிவி, அன்றாடப் பேச்சு — எதுவும் இல்லை! நிற்க.

 

இப்பொழுது லோகேஷ் சந்திரா என்பவர் எழுதிய நூலில் ஜப்பானிய மொழியில் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் பற்றி அரிய விஷயங்களைத் தொகுத்துத் தருகிறார். இதோ லோகேஷ் சந்திரா செப்பும் அற்புதச் செய்திகள்:-

 

 

ஜப்பானிய மொழியில் ஸம்ஸ்க்ருத மொழியை பொங்கோ (BONGO) என்று அழைப்பர்

பொன் =பிராஹ்மன்

கோ = மொழி

 

இளவரசர் ஷோடோகு ஜப்பானின் முதல் அரசியல் சட்டத்தை ஸம்ஸ்க்ருத துதியுடன் — உஷ்னீசவிஜயா – தாரணீ என்று– எழுதி புனிதப் படுத்தினார். இது ஓலைச் சுவடியில் குப்தர் கால லிபியில் (எழுத்தில்) பொறிக்கப்பட்டுள்ளது.

 

கி.பி.706-ல் போதிசேனர் என்ற இந்திய யோகியை புத்தமத ‘க்யோகி’ (GYOGI) ஜப்பானிய- ஸம்ஸ்க்ருதம் கலந்த மொழியில் வரவேற்றார்.

 

டாய்ஞ்சி கோவிலில் போதிசேனரும், புத்தஸ்திராவும் ஜப்பானியர்களுக்கு ஸம்ஸ்க்ருதம்  கற்றுக்கொடுத்தார். 1300 ஆண்டுகளுக்கு ஸம்ஸ்க்ருதம் கற்பித்த அறையை குரு ஒனோ (ABBOT ONO) எனக்குக் காண்பித்தார்.

 

ஜப்பானிய புஸ்தகங்களை உள்ளபடி அறிய வேண்டுமானால் ஸம்ஸ்க்ருத அறிவு அத்யாவஸியம் என்பதை கோபோ டைச்சி (கி.பி806) அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஷிங்கோன் (SHINGON) கோவில்களில் தினசரிப் பிரார்த்தனைகள் ஸம்ஸ்க்ருத  மந்திரங்களுடன் ஹோமத்துடன் நடை பெறுகின்றன.

 

மெய்ஜி புனர்நிர்மாணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானிய அறிஞர்கள் ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் சென்று ஸம்ஸ்க்ருதம்  பயின்றனர்.

 

தி யங் ஈஸ்ட் (THE YOUNG EAST) என்ற பத்திரிக்கையில், இந்திய- ஜப்பானிய உறவு பற்றி  பேராசிரியர் ஜுஞ்சிரோ டகாகுசு (PROF.JUNJIRO TAKAKUSU) ஏழு கட்டுரைகள் எழுதினார். அவற்றில் இந்தியாவிலிருந்து ஜப்பான் பெற்றது என்ன? என்று விளக்கினார்:

 

1, 2- யோகிகள் பற்றிய கட்டுரை

3 இந்து மத தெய்வங்கள்

4 சங்கீதமும் நாட்டியமும்

5 சதுரங்க விளையாட்டும் பருத்தித் துணியும்

6 பெயர்களும் சொற்களும்

7 மேலும் பல பெயர்களும் சொற்களும்

 

அவர் கொடுத்த நீண்ட பட்டியலில் அன்றாட வழக்கிலுள்ள ஜப்பானிய  சொற்களின் ஸம்ஸ்க்ருத  மூலம் கட்டப்பட்டுள்ளது:

 

ஜப்பானிய மொழி — ஸம்ஸ்க்ருத மொழி

 

ஹதா = பதாகா (கொடி, சின்னங்கள்)

சரவ= சரவா (தட்டு)

கஹர ஓடு= கபால

அபட = அற்புத

சொர = ஸ்வர் (வானம்)

மோஷ= மூர்ச்சா (MODULATION ஏற்றி இறக்கும் குரல்)

டஸ்ஷின்= தக்ஷிணை

 

அகா= அர்க்ய (தீர்த்தம்/தண்ணீர் AQUA)

(எனது கருத்து– இன்றும் பிராஹ்மணர் குடும்பங்களில் குழந்தைகளுக்கு அமுது ஊட்டும்போது மம்மம் சாப்பிடு ‘அக்கம்’ குடி என்று சொல்லுவர்- இவை இரண்டும் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து பிறந்த லத்தீன் மொழிச் சொற்கள்- ஆக்வா AQUA= தண்ணீர்)

 

நமோ = நம (ஸ்தே; ஸ்காரம்’ நம’ சிவாய)

வனன் = வந்தனம்

பன்டய்= வந்தே (மாதரம்)

 

தேர= மூத்தோர் (பாலி, ஸம்ஸ்க்ருத சொல்)

அரண்ய (கோவில்)= அரன்

கரன் = சங்காராம

தோ= தூப, பகோடா

 

 

ஷுமி-தன்= சுமேரு (நடுப்பகுதி)

ஷரி= சரீர

அகட (விஷ முறிவு)= அகத

ரூரி= வைடூர்ய

ஹரி = ஸ்படிக

(எனது கருத்து- ஹரி என்பது மஞ்சள் பச்சை ஆகிய நிறக் கற்களுக்கு ஸம்ஸ்க்ருதத்தில் பயன்படுத்தப்படுகிறது)

 

கேச = காஷாய உடை

கண்ட (நிறம்) = கந்த

செந்தன் = சந்தன

க்யார= அகரு/ அகில்

கரிரோகு= ஹரீதக (கடுக்காய்)

ஆமலக = ஆமலக/நெல்லிக்காய்

 

உடோங்கே= உடும்பரா

குன்ரோகு= குன்டுருக

யென்பு= ஜம்பூ (நாவல் மரம்)

ஷர = சால

தொரயோ/ பைதர= தால பத்ர

முட (வீண்)= முதா

செட்சுன= க்ஷண ( நொடியில்)

யஜுன் = யோஜனை (தூரம்)

கிசா = கஜ/யானை

முஷிர= மற்கட (குரங்கு)

கர்யோபிங்க ( வான் குருவி)= கலவிங்க

பிடா (அறிவு)= வேத

யுக , யுய் = யோகி, யோக

ஷமோன், பிகு= ஸ்ரமண, பிக்ஷு

டலி, ஜபி= தகனம் (ஜபிட-பாலி மொழி)

ட்சுசுமி/ துடுமி- துந்துபி ( வாத்யம்)

 

இன்னும் பல சொற்களை அவர் பட்டியலிட்டுள்ளார். நல்ல ஸம்ஸ்க்ருத  அறிவுடையோரே அவற்றை புரிந்து கொள்ள முடியும்.

 

-சுபம்-

நீங்கள் மட்டும் சிகரெட் குடிக்கலாம்! (Post No.5112)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 15 JUNE 2018

 

Time uploaded in London –  7-47 am  (British Summer Time)

 

Post No. 5112

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜெனெரல்  எலெக்ட்ரிக் கம்பெனியில் வேலை பார்த்தவர் சார்லஸ் ஸ்டெய்ன்மெர்ட்ஸ் ( Charles Steinmetz). அவர் இல்லாமல் கம்பெனி ஓடாது என்று சொல்லும் அளவுக்கு திறமை சாலி. ஆனால் அவரிடம் உள்ள ஒரு தீய பழக்கம் புகை பிடிப்பது- இடைவிடாமல் சிகரெட் பிடிப்பார் அல்லது சுருட்டு புகைப்பார்.

 

ஜெனெரல் எலெக்ட்ரிக் கம்பெனி (GENERAL ELECTRIC) திடீரென ஒரு விதி கொண்டுவந்தது. யாரும் கம்பெனி வளாகத்தில் புகை பிடிக்கக்கூடாது என்று ஆங்காங்கே போர்டு வைத்தனர். ஆயினும் சார்ல்ஸ் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு அதிகாரி வந்தபோதும் இவர் புகை கக்கிக் கொண்டிருந்தார்.

 

“ஐயா! உங்களுக்கு இந்தக் கம்பெனியில் புகைபிடிக்கக் கூடாது என்ற விதி இருப்பது தெரியாதோ?” என்று கடுமையான குரலில் உரைத்தார். அது சார்ல்ஸின் மனதில் உரைத்தது. ஆயினும் பதில் சொல்லாமல் அதிகாரியை ஏற இறங்க உற்றுப் பார்த்தார்.

 

அதிகாரியும் இடத்தை விட்டு அகன்றார். மறு நாள் சார்ல்ஸ் ஸ்டெய்ன்மெர்ட்ஸ் வேலைக்கு வரவில்லை. நாள் ஒன்று, இரண்டு, மூன்று என்று உருண்டு ஓடின. எல்லோருக்கும் ஒரே கவலை. அவர் சம்பந்தப்பட்ட துறை வேலை அனைத்தும் ஸ்தம்பித்து நின்றன. உடனே தேடும் வேலை துவங்கியது.

 

அவர் வெகு தொலைவில் ஒரு நகரில் ஒரு ஹோட்டலில் உட்கார்ந்துகொண்டு வழக்கம்போலப் புகை விட்டுக் கொண்டு இருந்தார்.

என்னப்பா, இது? உன்னை உலகமே தேடிக் கொண்டு இருக்கிறது. என விஷயம்?

அவர் சொன்னார்- ஒன்றுமில்லை- கொஞ்சம் சந்தோஷமாக புகைபிடிக்க இங்கு வந்தேன் என்று.

மறுநாள் அவர் வேலைக்கு அழைத்து வரப்பட்டார்.

அவர் தொடர்ந்து ஊதிக்கொண்டுதான் இருந்தார். யாரும் அதை கண்டு கொள்ளவில்லை.

 

அறிவுக்கும் திறமைக்கும் அவ்வளவு மதிப்பு. அதனால்தான் பிராஹ்மணர்களுக்கு பெரிய குற்றம் செய்தாலும் மரண தண்டனை கிடையாது என்று மநு முதலியோர் எழுதி வைத்தனர். புத்தரும் மநுவும் பிராஹ்மணர்கள  என்ன செய்தாலும் அவர்களைத் துன்புறுத்தக்கூடாது என்று சொல்லிவைத்தனர் (காண்க தம்ம பதம்)

 

 

அரசர்கள் அட்டூழியம் செய்தாலும் அவர்கள் கொல்லப்படமாட்டார்கள்; பிராஹ்மணர்களைப் போல அரசர்களும்; அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்; இப்படி இந்தியாவின் கிழக்குக் கரையிலிருந்து விரட்டப்பட்ட விஜயன்தான் இலங்கையில் ஒரு சிங்கள சாம்ராஜ்யத்தை உருவாக்கினான்.

 

ரஷ்ய அரசாங்கத்தை எதிர்த்த எல்லோரும் தொலைதூர சைபீரியாவுக்கு அனுப்பபட்டு தீர்த்துக் கட்டப்பட்டனர். ஆயினும் அந்நாட்டின் அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை என்பப்படும் ஷகாரோவை மட்டும் அரசு கொல்ல வில்லை. கம்யூனிஸ்ட் அரசும் கூட அவருடைய அறிவுக்கு மதிப்பு கொடுத்து, வீட்டுச் சிறை (HOUSE ARREST) மட்டுமே வைத்தது. பிற்காலத்தில் விடுதலையும் செய்யப்பட்டார்.

 

கம்பனுக்கும் சோழனுக்கும் சண்டை வந்த போது கவிச் சக்ரவர்த்தி கம்பன் கோபித்துக் கொண்டு வெளியேறினான்.

 

 

கம்பன் சொன்னான் – உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு? ( “எந்த மரமாவது குரங்கை வேண்டாம் என்று சொல்லுமா? நீ இல்லாவிடில் எனக்கு வேறு ஒரு அரசன் ஆதரவு தருவான்” என்று தொனிக்கச் சொல்லி சென்று விட்டார்.

–SUBHAM–

ஆண் குழந்தை பெற வழி! SEX செக்ஸ் பற்றி மநு (Post No.5109)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 14 JUNE 2018

 

Time uploaded in London –  14-23  (British Summer Time)

 

Post No. 5109

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

மனு நீதி நூல்- பகுதி 20

ஆண் குழந்தை பெற வழி! SEX செக்ஸ் பற்றி மநு (Post No.5109)

 

மூன்றாம் அத்யாயத் தொடர்ச்சி

 

எனது கருத்துகள்:

கீழ்கண்ட ஸ்லோகங்களில் மநு, பெண்களைப் புகழ்ந்து கூறுவது போல உலகில் வேறு எந்த நூலும் புகழ்ந்ததில்லை. பெண்கள் அழுதால்    அந்தக் குடும்பங்கள் வேருடன் சாயும் என்பதும், கணவன் மட்டும் மகிழ்ந்தால் போதாது, குடும்ப மகிழ்ச்சிக்கு மனைவியும் மகிழ வேண்டும் என்பதும் நோக்கற்பாலது

 

வரதட்சணை வாங்கி பெண்களை மணப்பது தவறு என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மநு கூறியது அவரை முற்போக்குச் சிந்தனையாளர் என்பதைக் காட்டும்

 

2600 ஸ்லோகங்களுக்கும் மேலாக உள்ள மநு ஸ்ம்ருதியில் இடைச் செருகலாக வந்த 40 ஸ்லோகங்களை மட்டும் காட்டி மநுவை மட்டம் தட்டும் திராவிடங்களுக்கும் மார்கஸீயங்களுக்கும் செமை அடி கொடுக்கும் பகுதி இது.

 

செக்ஸ் செய்வதற்கு உரிய நாட்கள் எவை , ஆண், பெண் குழந்தைகள் பெற எப்பொழுது படுக்க வேண்டும் என்பது பற்றி மநு கூறுவதை விஞ்ஞான முறையில் ஆராய்வது நன்மை பயக்கும்.

 

யாகங்களுக்கும் மழைக்கும் உள்ள தொடர்பு ஏற்கனவே விஞ்ஞான முறையில் நிரூபிக்கப்பட்டுவிட்டது. கார்பன் ஸீடிங் (carbon seeding) என்று மேகங்களில் விஞ்ஞான முறையில் இப்பொழுது செய்வதை அன்றே ரிஷி முனிவர்களும் மநுவும் செப்பியது கண்டு, கேட்டு இன்புறத்தக்கது; வியக்கற்பாலது!

 

 

தினமும் செய்ய வேண்டிய ஐம்பெரும் வேள்விகள் திருக்குறள் முதலிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் உள; ஐம்பெரும் கொலைக் களங்களும் தமிழ் நூல்களில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இது அருமையான ஒரு கொள்கை. முன்னோர்களையும் பிராணிகளையும் காப்பது மனிதனின் கடமை என்ற சிந்தனை உலகில் வேறு எந்த பழைய நூலிலாவது இருக்குமா என்பது கேள்விக்குறியாக தொக்கி நிற்கும்.

சில வேலைகளைச் (Works, jobs) செய்யக் கூடாது என்று மநு விதிக்கும் தடைகள் இக்காலத்துக்குப் பொருந்தா; சொல்லப்போனால் இன்று மநு நீதி நூல் புழக்கத்தில் இல்லை. இன்றைய அரசியல் அமைப்புச் சட்டமே பல முறை திருத்தப்பட்டுவிட்டது. அம்பேத்கர் போன்றோர் கீழ் ஜாதிகளுக்கு சலுகை தருவது பற்றிச் சொன்ன விதிகளே மீறப்பட்டுவிட்டன. மேலும் பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூ டாது என்ற தடையையும் யாரும் மதிப்பதில்லை. பிராஹ்மணர்கள்   வெளிநாடுகளுக்குச் செல்லக் கூ டாது என்ற தடையையும் யாரும் மதிப்பதில்லை.

 

தருமம் என்பது கால தேச வர்த்தமானத்தை (சூழ்நிலை)ப் பொறுத்தது என்று மநு முன்னரே பீடிகை போட்டதும் அவ்வப்பொழுது உள்ள பெரியோர்களைக் கேட்டு அனுசரித்துப் போங்கள் என்று மநு சொன்னதும் நினை  விற் கொள்ளத் தக்கது.

 

சுமார் 2700 ஸ்லோகங்களில் இடைச் சொருகலாக வந்த ஒரு 40 ஸ்லோகக்ங்களை ஒதுக்கிவிட்டால் மநுதான் உலகிலேயே சிறந்த சட்டப் புத்தக நிபுணர் என்ப தை உலகம் ஒப்புக்கொள்ளும்.

 

மூன்றாம் அத்யாயத் தொடர்ச்சியைக் காண்போம்:——

3-43 தன் குலப் பெண்களைக் கரம் பிடித்து ஏற்கும் பாணிக் கிரஹணம் சிறந்தது. ஏனைய குலப் பெண்களை மணக்கையில் பின்வருவனவற்றைச் செய்க

 

3-44 ஒரு பெண் மேல் ஜாதிக் காரனை மணந்தால் க்ஷதரியப் பெண் ஒரு அம்பையும், வைஸ்யப் பெண் ஒரு சாட்டையையும், சூத்திரப் பெண் மணமகனின் ஆடையின் நுனியையும் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும்.

 

( ஜாதி முறைகளோ இந்த மாதிரி விநோத வழக்கங்களோ உலகில் எந்தப் பகுதியிலும் இல்லை. ஆகவே இந்துக்கள் வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற வாதம் பொய்மையில் பிறந்த வாதம் என்பது எனது கருத்து)

மனைவியுடன் எப்போது படுக்கலாம்? (செக்ஸ்)

3-45 பருவ காலங்களில் கூடலாம்; பிறர் மனைவியை நாடக்கூடாது; விரும்பும் போதும் கூடலாம்; ஆனால் விலக்கப்பட்ட நாட்களைத் தவிர்க்க வேண்டும்

 

(விலக்கப்பட்ட நாட்கள்- பௌர்ணமி, அமாவாஸை, அஷ்டமி, சதுர்தஸி- அதாவது பௌர்ணமி, அமாவாஸைக்கு முதல் நாள்)

 

3-46 மாதவிடாய்க் காலத்திலிருந்து 16 நாட்கள் கூடுவதற்கு உரியதாயினும் முதல் நான்கு நாட்களை நல்லோர் விரும்புவதில்லை.

 

3-47 இவைகளிலும் ஏகாதஸி (11), த்ரயோதஸி (13)களை விலக்கினால் ஏனைய பத்து நாட்கள் சிறந்தவை.

ஆண் பெண் குழந்தை பெற வழி

3-48 மாத விலக்கிலிருந்து 6, 8, 10, 12, 14, 16 பேன்ற இரட்டைப் படை எண்கள் வரும் நாட்களில் புணர்ந்தால் ஆண் குழந்தையும் ஒற்றைப் படை எண்களில் புணர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கும்.

 

(இது ஆராய்ச்சிக்குரிய விஷயம்; ஒவ்வொரு ஆண் மகனும் ஒரு DIARY டயரி வைத்துக் கொண்டு எழுதி வந்தால் இதை ஆராயலாம்; அல்லது சரியான தகவலை ஆராய்ச்சியளர்களுக்குத் தந்தால் அவர்கள் இதை மெய்ப்பிக்கலாம் என்பது எனது கருத்து)

 

3-49 சேர்க்கையின் போது ஆண் விந்து அதிகமானால் ஆண் குழந்தையும், பெண் கரு சுரப்பு அதிகமானால் பெண் குழந்தையும் சம அளவில் இருந்தால் அலியும் பிறக்கும். மொத்தத்தில் எல்லாம் குறைவாக இருந்தாலும் பிறப்பு வேறுபடும்.

 

(மநு நூலுக்கு நிறைய உரைகாரர்கள் வியாக்கியானம் செய்து இருக்கிறரர்கள்; அவைகளில் கருத்து வேறுபாடும் உண்டு; ஆராய்ச்சியாளர்கள் அந்த உரைகளைப் படித்து ஜீரணித்து தெளிவான மொழியில் எழுதினால் பயன்தரும் என்பது என் கருத்து)

 

3-50 மேற்சொன்ன விலக்கத்தக்க ஆறு நாட்கள் + பௌர்ணமி, அமாவாஸை ஆகிய 8 நாட்களில் மனைவியுடன் கூடாதவன் பிரம்மச்சாரிக்குச் சமமானவன்

 

3-51 பணம் பெற்றுக் கொண்டு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது அறிவாளிகள் செயல் அன்று; அது பெண்களை விற்பனை செய்ததாகும்

 

3-52 பெண்ணின் சீதனப் பணத்தால் வாழும் கணவனும் தந்தையும் பாவத்தால் அழிவுறுவர்.

 

3-53 ஆர்ஷ விவாஹம் எனப்படும் மு றையில் பசுவும் காளையும் தருகிறார்கள். அதுவும் வரதட்சிணை இல்லையா என்று சிலர் நினைப்பர். அப்படியல்ல; விற்பனைக்கென பணம் வாங்குதலே பாவம்

3-54 பெண்ணுக்கான பணம் வாங்காமல் கல்யாணம் செய்து கொடுப்பவன் அந்தப் பெண்ணின் மீது அன்பும் கருணையும் உடைவன் ஆவான்.

பெண்களைப் போற்றாத இடத்தில் தெய்வம் வசிக்காது

3-55 பெண்ணின் தந்தை, கணவன், சஹோதர்கள், மைத்துனர் ஆகியோர் பெண்ணுக்கு பரிசுகள் தந்து சந்தோஷப்படுத்த வேண்டும்.

3-56 ஆடை அணிகலன்களுடன் பெண்கள் மரியாதை செய்யப்படும் இடத்தில் தெய்வங்களும் மகிழ்ச்சியுடன் வசிக்கும்; எந்த வீட்டில் இப்படிப் பெண்கள் போற்றப்படுவதில்லையோ அங்கு செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகி விடும்.

 

(நான் ஆயிரம் ஸம்ஸ்க்ருத, தமிழ், ஆங்கில நூல்களையாவது கட்டாயம் படித்திருக்கிறேன்; உண்மையைச் சொல்கிறேன்; இப்படிப் பெண்களைப் போற்றும் பாக்களை யாங்கணும் கண்டதில்லை- இது ஸத்தியம்)

 

3-57 பெண்கள் வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தும் குடும்பங்கள் அழிந்துபோகின்றன. எங்கு அவர்கள் சந்தோஷத்துடன் இருக்கிறார்களோ அக்குடும்பங்கள் செழிக்கின்றன; தழைத்து ஓங்குகின்றன

 

3-58 எந்த ஒரு வீட்டில் பெண்கள் தன்னை மரியாதையுடன் நடத்தாமைக்காக சாபம் இடுகிறார்களோ அந்தக் குடும்பம் அடியோடு அழியும்; மாய மந்திரத்தால் அழிக்கப்பட்டது போல மறைந்தே போகும்

 

(மநுவின் எச்சரிக்கை, அவர்க்குப் பெண்கள் மீதுள்ள மரியாதையையும் அச்சத்தையும் காட்டுகிறது. உலகில் இது போன்ற கடுமையான சொற்றொடர்களை எங்கும் காண முடியாது)

 

3-59 ஆகவே செழித்துத் தழைத்து, வளத்துடன் வாழ விரும்பும் குடும்பங்கள் தனது குலப் பெண்களுக்கு ஆடைகள், நகைகள், உணவு முதலியவற்றைத் திருவிழா நாட்களிலும் பண்டிகைக் காலத்திலும் கொடுத்து சந்தோஷப்படுத்த வேண்டும்.

 

(இந்த ஒரு ஸ்லோகத்துக்காவது பெண்கள் மநு என்னும் புலவனுக்கு/ முனிவனுக்கு ஆயிரம் முறை நன்றி சொல்ல வேண்டும்; இன்றும் கூட பிராமஹ்மணர் குடும்பங்கள் பொங்கல், தீபாவளியின் போது சஹோதரிகளுக்கு பணமும் உடைகளும் தருகின்றனர்)

3-60 கணவனும் மனைவியும்– இருவரும் மனம் ஒருமித்து- மகிழ்ச்சியுடன் வாழும் குடும்பத்தில்தான் சந்தோஷம் நிலவும். ஒருவரை ஒருவர் சந்தோஷப்படுத்த வேண்டும்

 

(கணவன் மட்டும் மகிழ்ந்தால் போதாது; பெண்களையும் மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்று மநு சொல்கிறான்;    அந்தக் காலத்தில் பெண்கள் வீட்டின் வாசலைத் தாண்டுவது கல்யாணம் அல்லது திருவிழா நாட்களில் மட்டுமே; இன்று போல பெண்கள சம்பாதிக்கவும் இல்லை; கிளப்புகள் சினிமாக்கள், குடி, கூத்துகளுக்கும் செல்லவில்லை. அப்பேற்பட்ட காலத்திலேயே இருவர் மகிழ்ச்சி பற்றி இயம்புகிறான் மநு!)

 

3-61 மனைவி சோபிக்காவிட்டால கணவனுக்கு இன்பம் ஏற்படாது. அப்படி மனைவி செய்யாவிட்டால் அந்தக் குடும்பத்தில் குழந்தைகளும் பெற வாய்ப்பு இல்லை ( அதாவது மனைவியை கணவன் அழகு செய்ய வேண்டும்; அந்தக் கவர்ச்சி மூலம் அவள் கணவனைத் திருப்திப்படுத்த வேண்டும்; அதன் மூலம் தாம்பத்ய உறவு சிறக்கும்)

 

3-62 மனைவி மகிழ்ச்சியுடன் இருந்தால்தான் சந்ததி தோன்றும்; அது மட்டுமல்ல; கணவன் விரும்பாத மனைவி பிறரால் தீண்டப் பெற்று குடும்பமும் கெட்டுப்போகும்

 

3-63 தகாத திருமணங்களாலும், சமயச் சடங்குகளைச் செய்யாமையினாலும், வேதமோதாமையினாலும், அந்தணர் முதலிய பெரியோரைப் போற்றாமையினாலும் உயர்ந்த குலங்களும் தாழ்ந்து போகும்.

3-64 (பிராஹ்மணர் தவிர்க்க வேண்டியவை)- கைவினைப் பொருட்கள் செய்தல், பசு, குதிரை, வண்டிகள் வைத்து வணிகம் செய்தல், ஏர் பிடித்தல், அரசுப் பணிகளில் ஈடுபடுதல், வேதம் ஓதாமல் இருத்தல், தாழ்ந்த குலப் பெண்கள் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளல்,

3-65 தகுதியற்றோரை வைத்து யாக யக்ஞாதிகள் செய்தல், கடவுளையும் சடங்குகளையும் எதிர்த்துப் பேசுதல், அனுஷடானங்களைக் கடைப்பிடிக்காமல் இருத்தல்—- இவைகளால் பிராஹ்மண குலம் தாழ்ச்சியுறும்.

 

3-66 வறுமையில் வாடினாலும் வேதத்தைப் படிப்போர் புகழையும் செல்வத்தையும் பெற்றவர்களாவர்

ஐந்து பெரிய வேள்விகள்

 

3-67 இதுவரை இல்லறம் பற்றி இயம்பினேன்; இனி இல்லறத்தானுடைய ஐந்து பெரிய வேள்விகள் பற்றி விளம்புவேன்.

 

 

3-68 ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து கொலைக் களங்கள் இருக்கின்றன; அவையாவன:  மாவு அறைக்கும் இயந்திரம், தானியம் இடிக்கும் உரல், உலக்கை, வீட்டைச் சுத்தம் செய்யும் விளக்குமாறு, நீர்க்குடம், அடுப்பு (நம்மை அறியாமலேயே புழு பூச்சிகளை அழிக்கும் இடங்கள் இவை)

 

3-69 இந்த ஐந்து  பாவங்களையும் போக்குவதற்காக ரிஷி முனிவர்கள் ஐந்து பெரும் வேள்விகளைக் கூறுகின்றனர்:

 

1.வேதம் ஓதுதல்

2.முன்னோர்களை வழிபடல்

3.வேள்விமூலம் இறைவனை வழிபடல்

4.பிராணிகளுக்கு உணவளித்தல்

5.விருந்தோம்பல்

 

(இது பாரதீய பண்பாட்டின் சாரம்; திருக்குறள் முதலான நூல்களிலும், சிலப்பதிகாரத்திலும் இருப்பதைக் காண்க; உலகில் வேறு எந்த பண்பாட்டிலும் இத்தகைய கொள்கைகள் இல்லாததால் இந்துமதம் இந்தியாவில் தோன்றி வளர்ந்தது என்பதையும் அறிக; வெளிநாட்டினர் செய்த பரப்புரை பொய்மையில் விளைந்த அடியற்ற, உளுத்துப் போன வாதம் என்பதையும் தெளிக)

3-71 எவன் ஒருவன் இந்த ஐந்து பெரு வேள்விகளைச் செய்கிறானோ அவன் அந்த கொலைக்கள பாவங்களில் இருந்து விடுபடுவான்

 

3-72 கடவுள், விருந்தினர், தன்னைச் சேர்ந்தோர், முன்னோர்கள், தான் ஆகிய ஐவரையும் போற்றாதவன் இருந்தும் இறந்தவனுக்குச் சமம்

 

3-73 இந்த 5 வேள்விகளுக்கு அஹுத, ஹுத, பிரஹுத, ப்ராம்யஹுத, ப்ரஸீத என்று பெயர்கள் (அதாவது தீ வேள்வியில் இடப்படாதது, வேள்வித் தீயில் இடப்படுவது, இரைப்பதன் மூலம் அளிக்கப்படுவது, புரோஹிதர்களுக்கு அளிக்கப்படுவது, தின்னப்படுவது என்று பொருள்)

3-74 அஹுதம்-பிரம்ம வேள்வி; ஹுதம்- தெய்வ வேள்வி; ப்ரஹுதம் பூத வேள்வி; ப்ராம்யஹுத- மானுட வேள்வி; ப்ரசீதம்- பிதுர்/ முன்னோர் வேள்வி

 

3-75 ஒருவன் வறுமையில் வாடினாலும் இயன்றதைச் செய்யலாம். தேவ யக்ஞம் மூல ஒருவன் தாவரங்களையும் பிரானிகளையும் கப்பாற்றியவன் ஆகிறான்

 

3-76 தேவர்க்கு அளிக்கும் ஹவிஸ் (உணவு) சூரியனுக்கு சென்று மழை பொழிவிக்கிறது. இதனால் விளைவு அதிகரிக்கும்; அதனால் உயிரினங்கள் வாழும்; இது வேத வாக்கு

 

(இது பகவத் கீதையிலும் உளது)

3-77 எல்லா ஜீவராசிகளும் பிராண வாயுவினால் (ஆக்ஸிஜன்) வாழ்வதைப் போல இல் வாழ்வான் மூலமாகவே ஏனைய மூன்று ஆஸ்ரமங்களான பிரம்மச்சாரி, வானப் ப்ரஸ்தன், சந்யாஸி ஆகிய மூவரும் வாழ்கின்றனர்.

 

(இந்த ஸ்லோகமும் திருக்குறளில் உள்ளது. ‘தென்புலத்தார்  தெய்வம்’ என்ற குறளையும் ‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்’ என்ற குறளையும் ஒப்பிடுக)

3-78 மற்ற மூன்று பிரிவிலுள்ளோர் வேதம் ஓதுவதற்கும் பிக்ஷை ஏற்பதற்கும் இல்லறத்தான் உதவுவதால் கிரஹஸ்தனாக இருப்பதுதான் சிறப்பு

 

(ஏனைய மூன்று பெயருக்கும் ஆதாரம் கல்யாணம் செய்து பிள்ளை பெற்று வாழ்பவன். ஆகையால் புத்த மதம், சமண மதம் போலல்லாது இந்து மதம் இல்வாழ்வானைப் போற்றுகிறது. துவக்க காலத்தில் துறவறத்தை மட்டுமே வலியுறுத்தியதால் பௌத்தமும் சமணமும் வற்றிப் போயின)

 

3-79 இக, பர நன்மைகளை விரும்புவோன் மிக உற்சாகத்தோடு கடமை ஆற்ற வேண்டும்; புலன் விஷயங்களில் பலவீனம் உடையவன் நல்ல இல்லறத்தான் ஆக இருக்க இயலாது.

 

3-80 தேவர்கள், முனிவர்கள், விருந்தினர்கள், பிராணிகள், முன்னோர்கள் ஆகிய ஐவரும் இல்வாழ்வானையே நாடி நிற்கின்றனர். ஆகையால் பின்வருவனவற்றைச் செய்க

 

3-81 வேதம் ஓதுவதால் முனிவர்களையும், ஹவிஸ் (அவி) சொறிவதால் தேவர்களையும், உணவு படைப்பதால் விருந்தினர்களையும், பலி (உணவு) கொடுப்பதால் உயிரினங்களையும் திதி/சிரார்த்தம் செய்வதால் பிதிரர்களையும் (இறந்துபோன முன்னோர்கள்) திருப்தி செய்க

 

3-82 முன்னோர்களுக்கு நீரோ, பால், பழம், கிழங்கோ, சோறு படைத்தோ தினமும் திருப்தி செய்க

 

3-83 பிதுர் வேள்விக்கான உணவைக் கொண்டு ஒரு அந்தணனுக்கு உணவு படைக்கலாம். பூத வேள்வியில் இப்படி எவருக்கும் தனி உணவு படைக்கத் தேவை இல்லை.

 

தொடரும்……………………

மன்னர்களின் விநோதப் பெயர்கள்_ யானை, கழுதை, குதிரை! (Post No.5105)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 13 JUNE 2018

 

Time uploaded in London –  11-14 am  (British Summer Time)

 

Post No. 5105

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மன்னர்களின் விநோதப் பெயர்கள்_ யானை, கழுதை, குதிரை! (Post No.5105)

 

காரவேலன் என்ற கலிங்க மன்னன் மிகவும் புகழ்பெற்றவன். அவன் கலிங்க நாட்டை ஆண்டவன்; இப்பொழுதும் அவனுடைய ஹத்திகும்பா (யானைக் குகை) கல்வெட்டைக் காணலாம். இது ஒரிஸ்ஸாவில் உதயகிரி- கண்டகிரி மலையில் உளது. புவனேஸ்வரத்துக்கு அருகில் பிராக்ருத மொழியில், பிராஹ்மி லிபியில் எழுதப்பட்ட இக்கல்வெட்டு 2200 ஆண்டுப் பழமை உடைத்து. தமிழர்களின் கூட்டணியை உடைத்ததாகவும் பாண்டிய மன்னரிடமிருந்து ரத்தினக் கற்களைக் கப்பமாகப் பெற்றதாகவும் இவன் பெருமை பேசுவதால், தமிழ் வரலாற்றுக்கும் இவன் கல்வெட்டு துணைபோகிறது. இவனிடம் தோற்றுப்போன தமிழ் மன்னர்கள் யார் என்று தெரியவில்லை.இது ஒரு புறம் இருக்க இவனுடைய பெயர் கழுதையா என்ற ஒரு ஆராய்ச்சியும் 1940ஆம் ஆண்டு வூல்நர் நினைவு மலரில் (Woolner Commemoration Volume, year 1940) வந்துள்ளது. அதை ஆராய்ந்து எனது கருத்தையும் முன்வைப்பேன்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜே.பிரஸிலுஸ்கி (J.Prezyluski) எழுதிய  கட்டுரையில் சொல்லும் விஷயம் பின்வருமாறு:

 

கார+ வேல= கருப்பு வேல் என்று இருக்கலாம் (தமிழ்ப் பெயர் என்று கொண்டால்)

காரவேல = கர+வெல்லக= பாகற்காய் (ஸம்ஸ்க்ருத பெயர் என்று கொண்டால்)

 

அக்காலத்தில் முண்டா மொழிகள் அப்பகுதியில் இருந்ததால் அதன் செல்வாக்கும் இருக்கக்கூடும்.

 

இம்மன்னன் பற்றிய தகவல்கள் வேறு எங்கும் இல்லாததால் பெரும் இடர்ப்பாடு நிலவுகிறது. ஆயினும் இவன் சொல்லும் சதகர்ணி, மற்றும் இந்திய-யவன (Indo-Greek)  அரசன் ஆகியோர் உண்மையில் இருந்தவர்கள். ஆகையால் இந்த மன்னன் ஆண்டதில் கேள்விக்கு இடமில்லை. பெயர்தான் பிரச்சனை தருகிறது.

 

‘கர’ என்றால் கழுதை என்ற பொருள் உண்டு (கர்த்தப). ஸம்ஸ்க்ருதத்தில் மிருகங்களின் பெயர்கள் ‘ப’ அல்லது ‘வ’ என்னும் எழுத்தில் முடிவடைவதால் கழுதை (கரவ) என்று கொள்ளலாம்.

 

விஷ்ணு புராணத்தில் ‘கர்த்தபில்லா’ வம்சம் பற்றிய செய்தி உளது. இவர்கள் ஆந்திரர்களை அடுத்து ஆட்சிக்கு வந்ததாக புராணம் விளம்பும்.

 

சமணர்களின் நூலான ‘கால்க கதா’வில் கர்த்தபில்லா பற்றிய கதை வருகிறது அவன் காலகாசார்யா என்னும் சமண முனிவரை அவமானப் படுத்தியதால், அவர் கோபித்துக் கொண்டு போய் சக வம்ச மன்னர்களத் தூண்டிவிட்டு, உஜ்ஜையினி நகர கர்த்தபில்லா ஆட்சியை விழுத்தாட்டியதாக விஷ்ணு புராணம் விளம்பும். இவனுடைய பெயரும் கழுதையின் (கர்த்தப) பெயரே.

 

காரவேலனும் ஒரு சமண மன்னன். கர்த்தபில்லா பெயரின் பொருள்= கழுதைக்குப் பிறந்தவன். அது போல காரவேல என்பதும் கழுதைப் பயல்- கழுதை மகன் என்று இருக்க வாய்ப்பு உண்டு. அதாவது ஒரு தெய்வீக கழுதைக்கும் சாதாரண ராஜாவுக்கும் பிறந்தவனாக இருக்கலாம் — என்று சொல்லி பிரெஞ்சு கட்டுரையாளர் கட்டுரையை முடிக்கிறார் (வூல்நர் கம்மமொரேஷன் வால்யூம், 1940)..

 

Hathigumpa Caves

எனது கருத்து:

 

கழுதை போல உதடு இருப்பதால் இப்படிப் பட்ட பெயர் வந்து பின்னர் நிலைத்து இருக்கலாம்; கரோஷ்டி என்ற வடமேற்கு இந்திய லிபிக்கும் ‘கழுதை உதடு’ என்றே பொருள்- அதன் எழுத்துக்கள் அப்படித் தோன்றுவதால் பட்டப்பெயர் நிலைத்துவிட்டது.

 

காரவேலன் பெயரைத் தமிழ் பெயர் என்று கொண்டால் ‘கூர் வேல்’ என்று திருப்பாவையில் வரும் சொல்லையும் பொருத்தலாம். ‘கூர்வேல்  நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்’–

திருப்பாவை 1

 

காரவேலன், தான் வென்ற பகைவர் நாட்டில் கழுதை பூட்டி ஏர் உழுதான் என்று அவனுடைய கல்வெட்டு கூறுகிறது. இதனாலும் ‘கழுதை பூட்டி ஏருழுதவன்’ என்பது காரவேலன் என்று மருவி இருக்கலாம். இது ஸம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டுக்கும் பொருந்தும் வியாக்கியானம்!

 

எனது முந்தைய கட்டுரையில் உள்ள பகுதி இதோ:–

 

 

சங்க இலக்கியத்தில் கழுதை

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை புலவர் நெட்டிமையார் பாடிய பாடலில் கழுதையைப் பூட்டி ஏர் உழுதல் பற்றிப் பாடுகிறார். இதையே காரவேலன் ( 193 BC to 170 BC) கல்வெட்டும் கூறுகிறது.

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

பாழ் செய்தனை, அவர் நனந்தலை நல் எயில்;

(புறம் பாடல் 15, நெட்டிமையார்)

முது குடுமிப் பெருவழுதி தன் பகைவர் நாடுகளை வென்று, தேரோடிய தெருக்கள் வழியாக ஏர்பூட்டிய கழுதைகளை நடத்திச் சென்று உழுதான் என்று புலவர் பாடுகிறார்.

அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியின் புகழ் பாடிய அவ்வையாரும் இதையே கூறுகிறார்:

அணங்குடை மரபின் இருங்களந்தோறும்,

வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்

வைகல் உழவ!  (புறம் 392, அவ்வையார் )

 

இதன் பொருள்: திறை கொடாத மன்னரின் மதில்களை வஞ்சனையின்றிப் பொருது அழித்துப், போர்க்களத்திலே கடும் போர் இயற்றிக், கழுதை பூட்டி உழுது, கவடியும் வேலும் விதைக்கும் இடையறாத போர் வெற்றி நிறைந்த வேந்தனே!

இதிலிருந்து ஒரு மன்னனை அவமானப்படுத்த, அவன் ஊரைப் பாழ்படுத்துவதோடு, அங்கே கழுதைகளை அனுப்பி ஏர்பூட்டி உழுதல் வழக்கம் என்றும் அதிலும்  வெள்ளை வரகும், கொள்ளும் பயிரிடுதல் வழக்கம் என்றும் தெரிகிறது. இது நாடு முழுதும் இருந்த பாரதீய பண்பாட்டின் ஒரு அம்சம்.

எல்லோரும் வெறுக்கும் மூதேவியின் வாஹனம் கழுதை

xxx

Hathigumpa Caves

மத்திய இந்தியாவிலும் பீஹாரிலும் ஆட்சி செய்த காளசூரி மன்னர்களும், காஸி நகர் காஹத்தவாலாவும், வங்காளத்தை ஆண்ட பால மன்னர்களும் பண்டல்கண்ட் பகுதியை ஆண்ட சண்டேளா மன்னர்களும் அஸ்வபதி,கஜபதி, நரபதி- என்று பட்டம் வைத்துக் கொண்டனர். குதிரைப் படைத்தலவர், யானைப்படைத் தலைவர், காலட்படைத் தலைவர் என்று பட்டம் வைத்துக்கொண்டனர்.

 

தமிழிலும் கூட கரிகாலன் (கருகிய கால் உடையவன்) போன்ற விநோதமான காரணப் பெயர்கள் உண்டு.

 

–சுபம்–