ரிக் வேதத்தில் நகைச்சுவை நடிகன் (Post No.4366)

Written by London Swaminathan

 

Date: 4 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-48

 

 

Post No. 4366

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நாடகங்களில் விதூஷகன் என்று ஒரு கதாபாத்திரம் உண்டு. 2000 ஆண்டுகளுக்கு முன் நாடகங்கள் எழுதிய காளிதாசனின் படைப்புகளிலும் அதற்கு முன்னரும் பின்னரும் விதூஷகன் இல்லாத நாடகம் கிடையாது. இப்போது திரைப்படங்களில் வரும்  நகைச் சுவைக் காட்சிக்கு மூலமே சம்ஸ்கிருத நாடகங்கள்தான். எகிப்து, கிரேக்கம் போன்ற பழைய நாகரீகங்களிலும் கூத்து உண்டு. ந்தக் காலத்தில் நாடகம் என் றாலே சங்கீத அல்லது நாட்டிய நாடகம்தான். இதன் மூலம் வசனங்களை எளிதில் நினைவு வைத்துக் கொள்வதும் மக்களைக் கவர்ந்திழுப்பதும் எளிதாகும்.

ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் முதலியோர் ரிக் வேதத்துக்குக் கற்பித்த தேதிகளைக் கணக்கிற்கொண்டால் எகிப்திய நாடகங்களுக்கும் முன்னோடி நாம்தான்.

ரிக் வேதம் பாரத நாட்டின் கலைக்களஞ்சியம்; அதில் இல்லாத விஷயங்களே இல்லை. அண்மையில் பழைய மலர் ஒன்றைப் படித்தேன். அதில் ரிக் வேதத்தில் கோமாளி பற்றிய குறிப்பு கூட இருப்பதை ஒருவர் எழுதியுள்ளார். நான் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாடகத்தின் தோற்றம் பற்றிய கட்டுரையில் ரிக் வேதத்திலுள்ள உரையாடல்களில் நாடக மூலக்குறுகளைக் காணலாம்.

உலகின் மிகப் பழைய நூலான– கவிதைத் தொகுப்பான — ரிக் வேதத்தின்  உரையாடல்கள் பத்தாவது மண்டலத்தில் உள்ளன:–
RV 10-51: அக்னி- வருணன்
RV 10-10 யமன்  – யமி

RV 1-179 அகஸ்தியர்– லோபாமுத்ரை

RV 10-95 புரூருவஸ்- ஊர்வஸி

RV 10-86 இந்திரன் — வ்ருஷகபி

மேலும் பல உரையாடல்கள் RV 10-135; 10-124; 4-26; 10-108; 10-28 உள்ளன.

புருஷமேத யாகத்தில் 200 பேருக்கு மேலாக “நரபலி கொடுக்கும்” பட்டியலில் காரி என்பவர் சிரிப்புக் கடவுளான ஹாசனுக்கு பலியிடப்படுவதாக உள்ளது. உலகில் சிரிப்புக்கும் ஒரு கடவுள் வேத கலத்திலேயே இருந்திருக்கிறது; (வாஜசநேயி சம்ஹிதை, தைத்ரீய சம்ஹிதை;VS 30-6 and T S 3-41.)  நாடகத்தில் கோமாளி என்னும் கதாபத்திரம் இருந்தனர் என்றால் அவர்களுடைய கலை ரசனை, முன்னேற்றத்துக்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்?

 

வண்டி இழுக்கும் குதிரை லேஸான பாரத்தை விரும்பும்; அது போல நகைச்சுவையுண்டாக்கும் கோமாளிகள் நல்ல சிரிப்பை உண்டாக்கும் லேஸான சொற்களை விரும்புவர்; காதலன் காதலியை நாடுவது போல; தவளைகள் உணவுக்காக ஏங்குவது போல –ரிக் வேதம் 9-112-4

 

சிலர் ரிக் வேதப் பாடல்களை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்:–

சமயப் பாடல்கள்

தத்துவப் பாடல்கள்

சமயத் தொடர்பற்ற பொதுப் பாடல்கள்

 

சமயம் தொடர்பான துதிப் பாடல்கள்தான் இதில் அதிகம்; நான் யார்? எங்கிருந்து வந்தேன்? பிரபஞ்சத்தின் காரணம் என்ன? என்ற சில தத்துவப் பாடல்களும் உள்ளன.

 

சமயத் தொடர்பற்ற பாடல்கள் பல சுவையான விஷயங்க ளைச் சொல்லும்; இதில் திருமணப் பாடல்களும் ஈமக் கிரியை தொடர்பான பாடல்களும் அடக்கம்.

 

சூரியன்-  சந்திரன் திருமணம் தொடர்பான ஒரு துதி (10-85) சுவையான துதியாகும். கணவன்  – மனைவி இருவர் இடையே உள்ள உறவு சூரியன், சந்திரன் போல இருக்க வேண்டுமாம்:

 

காலையில் ஒன்றும் இரவில் ஒன்றும் வெளிச்சம் தருவது போல வேலைக ளைப் பகிர வேண்டும்

இரண்டும் பூமியில் உயிரினங்கள் தழைக்க உதவுகின்றன (உயிருடன் உள்ளவரின் ஆரோக்கியத்துக்கு சூரியன் உதவும்; தாவரங்கள் வளருவது சந்திரனால் என்பது இந்துக்களின் நம்பிக்கை

 

 

நான் இன்று உன் கையைப் பிடிக்கிறேன் (பாணிக் கிரஹணம்) (மணமகன் தனது வலது கையால், மணமகளின் வலது கையைப் பிடித்துக்கொண்டு சொல்லும் மந்திரம்); உன்னுடைய கைகளைப் பற்றுவதால் நல்லதிர்ஷ்டம் வாய்க்கட்டும்; நாம் இருவரும் முதிய வயது வரை ஒன்றாக வாழ்வோம். என் வீட்டின் ராணியாக இருக்க உன்னை அர்யமன், பக, சவித்ரு, புரந்த்ரி ஆகியோர் அனுப்பியுள்ளனர்.

 

இந்த மந்திரத்தின் (10-85-36) கடைசி மந்திரம் முத்தாய்ப்பு வைத்ததாக இருக்கிறது:

 

என் வீட்டில் ஆட்சி செய்

கணவனின் பெற்றோர்கள்

சஹோதரன், சஹோதரி மீதும்தான்

எல்லோரும் உனக்குட் பட்டவர்களே10-85-46

திருமண துதிகளைப் படிக்கையில் பெண்களை எவ்வளவு உயர்த்தி வைத்து இருக்கிறார்கள், எவ்வளவு புகழ்கிறார்கள் என்று அறியலாம்.

 

சுபம், சுபம்–

ஆஷ் கொலை வழக்கு: பாரதியார் நூல்கள் – PART 42 (Post No.4364)

Written by S.NAGARAJAN

 

 

Date: 4 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-18

 

 

Post No. 4364

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 42

ஆஷ் கொலை வழக்கு – ரகமி எழுதியுள்ள ஆய்வுத் தொடர்

 

ச.நாகராஜன்

 

 

மஹாகவி பாரதியாரின் வாழ்க்கை பன்முகப் பரிமாணம் கொண்ட ஒன்று. சிறு வயதிலேயே அவர் மறைந்தார் எனினும் அவர் வாழ்க்கையில் அவர் சகோதரி நிவேதிதா, பால கங்காதர திலகர், மஹாத்மா காந்திஜி, அரவிந்தர், வ.உ.சி., வ.வே.சு. ஐயர் போன்ற ஏராளமான சரித்திரம் படைத்த பல பெரியோர்களைச் சந்தித்தார்.

சுதந்திரம் அடையத் தீவிரமாக உழைத்த புரட்சிவாதிகளிலிருந்து அஹிம்சை போதித்த காந்தி மகான் வரை அவரது வாழ்க்கை அனைவரையும் கண்டது. ஆனால் எதிலும் ஒரு சமச்சீர் தன்மையைக் கொண்டிருந்தார் அவர். அது தான் அவர் வாழ்க்கையில் நாம் காணும் ஒரு அற்புதம்.

இந்த வகையில் ஆஷ் கொலை வழக்கில் அவரும் சம்பந்தப்படுத்தப்பட்டார் என்பது சரித்திரம் தரும் தகவல்.

 

 

பழம் பெரும் எழுத்தாளரான ரகமி (முழுப்பெயர் ரங்கஸ்வாமி) தன் நேரம் உழைப்பு ஆகியவற்றை அர்ப்பணித்து ஆஷ் கொலை வழக்கு பற்றி முழுதும் ஆராய்ந்தார்.

 

 

அதன் அடிப்படையில் தினமணி கதிர் வார இதழில் 3-6-1984 தொடங்கி ஒரு நெடுந்தொடரை எழுதினார். இந்தத் தொடர் புத்தக வடிவில் வெளியிடப்படவில்லை என்றே எண்ணுகிறேன்.

(கதிர் வார இதழிலிருந்து தொகுத்து வைத்துள்ள கட்டுரைகள் என்னிடம் பத்திரமாக உள்ளன.)

*

அந்த நூலிலிருந்து பாரதியார் பற்றிய சில முக்கியப் பகுதிகளை  மட்டும் இங்கு தருகிறேன்.

 

1911ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதியன்று கலெக்டர் ஆஷ் என்பவரை வாஞ்சி ஐயர் மணியாச்சி ஜங்ஷனில் சுட்டுக் கொலை செய்தார்.

 

1911, செப்டம்பர் 11ஆம் தேதி, சனிக்கிழமையன்று (இது பின்னால் பார்க்கும் போது – செப்டம்பர் 11 – பாரதி மறைவு நாளாக அமைகிறது!) ஆஷ் கொலை சதி வழக்கு கேஸின் முதல் நாள் விசாரணை துவங்கியது.

 

14 பேர்கள் குற்றம் சாட்டப்பட்டு நிறுத்தப்பட்டனர். அனைவரும் தங்கள் மீது சாட்டப்பட்ட குற்றத்தை மறுத்தனர்.

 

பப்ளிக் பிராசிக்யூடர் நேபியர் தனது வாதத்தை முன் வைத்துக் கூறுகையில், “ திருநெல்வேலி கலெக்டர் ஆஷின் கொலைக்கு சதித் திட்டங்கள் புதுவையிலிருந்து ஆரம்பமாகியது என்று சொல்வதற்கு ஏற்றாற் போல, முதல் குற்றவாளி நீலகண்டன் புதுவையில் கவி பாரதியார் நடத்திய ‘இந்தியா’ பத்திரிகையில் சம்பந்தப்பட்ட பின் ‘விஜயா’ மற்றும் ‘சூரியோதயம்’ பத்திரிகைகளில் வேலை செய்த போது, அவைகள் சர்க்காரால் தடுக்கப்படவே, பின்னர் அவர், ‘கர்மயோகி’, ‘பால பாரதா’, தர்மா’ பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார்.

 

 

புதுவையிலிருந்த தீவிரவாதிகளுடன் நீலகண்டனும், கொலையாளி வாஞ்சியும் நெருங்கிப் பழகினர். இதில் வி.வி.எஸ் ஐயர், சுப்பிரமணிய பாரதி, மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரி, நாகசாமி இவர்கள் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டிற்கு விரோதமான அபிப்ராயங்கள் கொண்டிருந்தனர். இதனால் இவர்கள் விலாசங்களுக்கு வரும் கடிதங்கள் வெளிநாட்டுப் பிரசுரங்களைப் பரிசீலனை செய்த பிறகே அவர்களிடம் பட்டுவாடா செய்யும்படி புதுவை போஸ்ட்மாஸ்டர் எம்.கே.ஸ்ரீநிவாசய்யங்காருக்கு, கிரிமினல் இன்வெஸ்டிகேஷன் அதிகாரிகள் உத்திரவு செய்திருந்தனர். இதன்படியே எல்லாக் கடிதங்களும் பரிசீலனை செய்தே அவர்களிடம் டெலிவரியும் செய்யப்பட்டு வந்தது. சில சமயங்களில் சுப்ரமண்ய பாரதியாரே தன் பெயருக்கு வரும் தபால்களை வாங்குவதற்காக தபாலாபீசுக்கு வந்து விடுவார். அவர் சற்று முன் கோபக்காரர். தபால்கள் பரிசீலனை செய்து சற்று தாமதமாகப் பட்டுவாடா செய்வதையும் பொறுக்காமல் கோபித்துக் கொண்டு, “சீ.. சீ..! கேவலம் நாயும் கூட இந்தப் பிழைப்புப் பிழைக்குமே” என்று சொல்வதுண்டு.

 

 

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்துப் புதுவைக் கடற்கரையில் வி.வி.எஸ். ஐயர், சுப்பிரமணிய பாரதி, மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரி, வாஞ்சி இவர்கள் கும்பலாகப் பேசிக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாகத் திடீரென இவர்களைச் சந்தித்த போஸ்ட்மாஸ்டர் ஸ்ரீநிவாசய்யங்காரிடம் வி.வி.எஸ் ஐயர் தங்கள் பெயருக்கும் வரும் நிருபங்களைத் தாமதிக்காமல் உடனுக்குடன் டெலிவரி செய்ய வேண்டுமென்று சாதாரணமாகக் கூறினார். பக்கத்திலிருந்த வாஞ்சி, “எதற்காக நாம் போஸ்ட்மாஸ்டரிடம் கெஞ்சிக் கேடக வேண்டும்? அவர் ஒழுங்காகத் தபால்களைத் தாமதிக்காமல் தந்தால் அவருக்குத் தான் நல்லது. இத்தனையும் மீறி அவர் தாமதித்தால், நாம் அவரையே இந்த ஊரிலேயே தீர்த்துக் கட்டி விட்டால் போச்சு!” என மிக்க ஆத்திரத்தோடு சொன்னான்.”

 

நேபியரின் வாதம் இப்படி நீள்கிறது. (ஆஷ் கொலை வழக்கு -அத்தியாயம் 3)

 

*

 

பின்னால் நீலகண்ட பிரம்மசாரி என்று  அழைக்கப்பட்ட நீலகண்டன் (முதல் குற்றவாளி) தன் வாழ்க்கையில் வெறுப்புற்றதைக் குறிப்பிட்டு தன் ஸ்டேட்மெண்டில் கூறியது:

“கடைசியில் புதுவைக்குச் சென்று அங்கு நான் பழகிய தீவிரவாதி நண்பர்களிடமெல்லாம் என் நிலைமையைக் கூறினேன். எனக்குத் தகுந்த ஆதரவு இல்லை. மன விரக்தியடைந்த நான் சிலகாலம் ஹரித்துவாரத்திற்குச் சென்று  சிவனேயென அமைதியாக இருக்க எண்ணி என்னுடன் கூட வரும்படி கவி சுப்ரமணிய பாரதியாரைக் கூப்பிட்டேன். அவரும் என்னுடைய நிலைமையில் இருப்பதாகக் கூறினதும் நான் அவரையே என்னுடன் வட நாட்டிற்கு வந்து விடு என்றழைத்தேன். அதற்கு அவர் தன் பேரில் சென்னையில் ஏதேனும் புது வாரண்டுகள் பிறந்து அவைகள் பெண்டிங்கிலிருக்கிறதா என்ற விவரமறிந்து பின்னர் முடிவு கூறுவதாகச் சொல்லி, சென்னை போலீஸ் கமிஷனருக்கே பகிரங்கமாகக் கடிதம் எழுதிக் கேட்டார்.

 

 

போலீஸ் கமிஷனரிடமிருந்து வந்த பதிலில் வாரண்டுகள் ஒன்றும் புதிதாகப் பிறப்பிக்கப்படவில்லை என்று வந்ததும், அவருடைய குடும்ப நிலையின் காரணமாகத் என்னுடன் வட இந்தியாவுக்கு வரவில்லை.” (ஆஷ் கொலை வழக்கு -அத்தியாயம் 3)

 

*

 

கொலைவழக்கின் தொடர்ச்சியாக பிராசிகியூஷன் சாட்சியாக முன்சீப் பரமேஸ்வரய்யர் விசாரிக்கப்பட்டார். அவர் கூறியது:

“ போன வருஷம் ஜூலையில் நான் செங்கோட்டையில் மாஜிஸ்டிரேட்டாக இருந்தேன். கலெக்டர் ஆஷ் கொலை விஷயமாகப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரய்யரும், மதுரை இன்ஸ்பெக்டருமாகச் சேர்ந்து வாஞ்சியின் வீட்டைச் சோதனையிட்டபோது கூட இருந்தவன். துண்டுப் பிரசுரங்களைக் கைப்பற்றினோம்.

 

 

கிடைத்த அக்கடிதங்கள் மூலம் செங்கோட்டையிலுள்ள ‘சாவடி’ அருணாசலம் பிள்ளையின் வீட்டையும் சோதனையிட்டோம்.அங்கு ‘ஜென்ம பூமி’ புத்தகங்களும், சில பாடல்கள் அச்சடித்திருந்த நோட்டீஸ்களும் அகப்பட்டன. அப்பாடல்களில் கலெக்டர் விஞ்சை வெறி பிடித்தவன் போல சுதேசி மக்களை மதிப்பின்றிப் பேசுவதாக வெளியிட்டிருந்தது. சுதந்திரம் கேட்கும் பாரதவாசிக்கு ஆங்கிலேயன் கேட்கும் முறையில் கலெக்டர் விஞ்ச், வ.உ.சிதம்பரம் பிள்ளையைக் கேட்பது போல எழுதப்பட்டிருந்தது. நந்தன் சரித்திரத்தில் நந்தனுடைய சிதம்பர வாஞ்சையைப் பற்றி மற்றவர்கள் வந்து சொல்லக் கேட்டு, வேதியர் மகா கோபங்கொண்டு நதந்னை நோக்கிச் சொல்கிறார்: “சேரி முற்றுஞ் சிவபக்தி பண்ணும்படி வீட்டையாம் அடியிட்டையாம்” என்பது முதலான வார்த்தைகள் கூறிப் பயமுறுத்துகிறார். இதன் குறிப்பைத் தழுவி திருநெல்வேலி கலெக்டராகிய விஞ்ச், சிதம்பரம் பிள்ளைக்குக் கூறும் வரி இது

 

 

“நாட்டிலெங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய் -கனல்

மூட்டினாய்”

 

பயமுறுத்திக் கேட்கும் கண்ணிகள் எழுதப்பட்டிருந்தன. இதற்குப் பதில் கூறுவது போல் கலெக்டர் விஞ்சுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை கூறும் மறுமொழியாக உள்ளது: “சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோம் – இனி -அஞ்சிடோம்”  என்று கூறியிருந்தது.

மூன்றாவதாக  சுயராஜ்யம் கேட்கும் பாரதவாசிக்கு  ஆங்கிலேய உத்தியோகஸ்தன்  சொல்கிறான்.

 

 

நந்தனார் சரித்திரத்திலுள்ள , :மாடு தின்னும் புலையா – உனக்கு

மார்கழித் திருநாளா?” என்று வரும் வர்ண மெட்டில் உள்ளது.

‘தொண்டு செய்யுமடிமை  – உனக்கு

சுதந்திர நினைவோடா?” என்னும் பாடலையும் சேர்த்து இம்மூன்று பாடல்களுக்கும் எக்ஸிபிட் நம்பர் கொடுத்து கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது” என்றார்.

 

 

அச்சமயம் சீஃப் ஜஸ்டிஸ் அம்மூன்று பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கம் கேட்டார். அம்மூன்று பாடல்களும் ஏற்கனவே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருப்பதைப் பப்ளிக் பிராசிகியூடர் நேப்பியர் கோர்ட்டில் எடுத்துக் காட்டினார். அதனை பப்ளிக் கோர்ட்டில் படிக்கும்படி உத்தரவிட இரண்டு பேர்கள் படித்தனர்.

 

ஒருவர் தமிழில் ஒரு வரியைப் படிக்க, இதற்குச் சரியான மொழிபெயர்ப்புடன், விளக்கத்தையும் மற்றொருவர்  ஆங்கிலத்தில் கூறினார்.

 

இம்மூன்று பாடல்களையும் படித்து முடிக்க  சுமார் ஒன்றரை மணி நேரமாயிற்று. கோர்ட்டு முடிவதற்கும் மாலை மணி 5 ஆவதற்கும் சரியாக இருந்தது. இத்துடன் கோர்ட்டு கலைந்தது. (ஆஷ் கொலை வழக்கு -அத்தியாயம் 7)

 

*

 

 

நீலகண்ட பிரம்மச்சாரி மாடசாமி பற்றிக் கூறும் தகவல்கள் சுவையானவை. மாடசாமி தப்பிப் போனவர் போனவரே. அவரைப் பற்றி இன்று வரை ஒரு தகவலும் யாருக்கும் தெரியாது!

 

நீலகண்ட பிரம்மச்சாரி தனது வாக்குமூலத்தில், :நான் மறுபையும் புதுவைக்குச் சென்று நான் எழுதிய கட்டுரைகளை கவி சுப்பிரமணிய பாரதியிடம் காட்டினேன். அவர் அவைகளை அப்படியே பிரசுரிக்க வேண்டாமென்று சொல்லி அதில் சிலவற்றைத் திருத்தித் தந்ததை புதுவையிலிருந்து வரும் பேப்பர்களுக்குக் கொடுத்து விட்டு மிகுதி கட்டுரைகளை புத்தகமாக வெளியிடச் சென்னையில் “கார்டியன்” பிரஸ்ஸில் கொடுத்தேன்’ என்கிறார் (ஆஷ் கொலை வழக்கு -அத்தியாயம் 9)

*

இப்படி ஆஷ் கொலை வழக்கு முழுவதும் சுவைபட நூலில் கூறப்பட்டிருக்கிறது.

 

அனைத்து ஆவணங்களையும் முறைப்படி ஆராய்ந்து அதை சுவை மிகுந்த சரித்திர நூலாக்கித் தருகிறார் ரகமி.

பாரதியார் பற்றிய பல விவரங்களை இதில் காண முடிகிறது.

ஆனால் கோர்ட் சாட்சியங்கள் என்பதால் இவற்றைப் பல்வேறு இதர பாரதி பற்றிய நூல்களுடன் ஒப்பிட்டு கொள்வன கொண்டு நீக்குவன நீக்கலாம்.

 

நூலை எழுதி பாரதி இயலுக்கு ஒரு அரிய சேவையை செய்துள்ள ரகமியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சுதந்திரப் போரில் தென்னக எழுச்சியையும் உச்சத்தையும் தொட்டுக் காட்டும் நூலாகவும் இது அமைகிறது.

 

பாரதி அன்பர்களுக்குச் சுவை பயக்கும் நூலாக இது இருப்பதால், உடனடியாக இதைத் தங்கள் பட்டியலில் இதை இணைக்க வேண்டுவது அவசியமான ஒன்று.

****

 

 

வேத காலத்தில் வாஸ்து சாஸ்திரம் (Post No.4363)

Written by London Swaminathan

 

Date: 3 NOVEMBER 2017

 

Time uploaded in London- 16-20

 

 

Post No. 4363

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பிரபஞ்ச வாணி வானொலி நிலயம்!

 

செய்திகள் வாசிப்பது லண்டன் சுவாமிநாதன்!

முதலில் தலைப்புச் செய்திகள்:–

 

1.வாஸ்து சாஸ்திரத்தின் தோற்றம் வேத காலத்தில் இருப்பது சில மந்திரங்கள் மூலம் தெரிகிறது.

 

2.வேத கால ரிஷிகள் மந்திரங்களுக்குள்ள அபூர்வ சக்தி பற்றிப் பாடி இருப்பது ரிக் வேதத்தில் உள்ளது.

3.மூன்று முக்கிய மந்திரங்கள், வேத மந்திரங்களின் சக்தி — அபூர்வ சக்தி பற்றி,  ரிஷிகள், பாடியதைக் காட்டுகின்றன.

 

4.மந்திரங்களை ரஹசிய மொழியில் பாடுவது பற்றிய செய்தி ரிக் வேதத்தின் நாலாவது மண்டலத்தில் உள்ளது.

 

5.கடவுள்கள் கிழக்கு திசையில் இருந்து வந்ததாகவும், மேற்கு திசை மூலமாக கடவுளர் சொர்கத்துக்குச் சென்றதாகவும் பிராமண நூல்கள் சொல்கின்றன.

 

 

இதோ விரிவான செய்திகள்

விஸ்வாத்ரஸ்ய ரக்ஷதி ப்ரஹ்ம இதம் பாரதம் ஜனம் – ரிக் வேதம் 3-53-12

 

ஏவன் நு கம் தாசராக்ஞே சுதாசம் ப்ராவத் இந்த்ரோ ப்ரஹ்மணா வோ வசிஷ்டாஹா- 7-33-3

 

வசிஷ்டஸ்ய ஸ்துவதஹ இந்த்ரஹ அஸ்நோத் உரும் த்ருத்சுத்ய அக்ருணோத் லோகம் 7-33-5

 

மூன்று மந்திரங்களின் சுருக்கமான பொருள்:-

 

வானத்தையும் பூமியையும் தாங்கும் இந்திரனே உன் புகழ் பாடுகிறேன் நான்; விஸ்வாமித்ரரின் துதிகள் பரத இனத்தைக் காப்பாற்றும்

 

அவன் இதன் உதவியால் (யமுனை) ஆற்றைக் கடந்தான்; இவர்களின் உதவியுடன் அவன் பேதாவைக் கொன்றான்.

 

 

தாகம் எடுத்தவர் போல, அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தனர். பத்து அரசர் போரின்போது வசிஷ்டரின் துதிகளை இந்திரன் கேட்டான். த்ருத்சுக்களை வெல்ல வைத்தான்.

 

 

இதிலுள்ள சில விஷயங்கள் வெளிநாட்டினருக்கும் வியப்பை ஏற்படுத்தின; ரிக் வேதத்தின் பழைய மண்டலத்திலும் யமுனை நதி பற்றிப்பேசப்படுவது ஆரியர்கள் மேற்கிலிருந்து குடியேறினர் என்பதைப் பொய்மைப்படுத்துகிறது

பத்து அரசர்கள் போர் என்பது (தச ராஜ யுத்தம்) வேத கால இந்துக்கள் இடையே நடந்த சஹோதர யுத்தம். சேர சோழ பாண்டிய மன்னர்கள் 1500 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து சஹோதர யுத்தம்  செய்தனர். உலகில் நீண்ட கால தொடர் யுத்தம் செய்தவர்கள் தமிழர்களே. நல்ல வேளை! வெள்ளைக்காரர்கள் தமிழைப் படிக்காததால் ஒரு மன்னரை ஆரியன் என்றும் மற்றவனை  திராவிடன், பழங்குடியினன் என்றும் முத்திரை குத்த வாய்ப்பிலாமல் போனது. வேதத்தில் யா ராவது இருவர் சண்டை பற்றி மந்திரம் வந்தால், ஒருவனை ஆரியன் என்றும் மற்றவனை திராவிடன் அல்லது பழங்குடி மன்னன் என்றும் முத்திரை குத்தி பிளவு படுத்துவது வெளிநாட்டினர் சூழ்ச்சி. கரிகால் சோழன் கூட 9 பேரின் முடிகளை (மணி முடி) வென்றான்; சேரன் செங்குட்டுவன் ஏழு பேரின் மணி முடிகளை வென்றான். இதே போல பத்து மன்னர் யுத்தம் நடந்தது. வெள்ளைக்கார சூழ்ச்சிவாதிகளும், மார்கஸீயங்களும் இதை எல்லாம் வர்கப் போராட்டம் என்றும் இரு வேறு இனங்களின் போராட்டம் என்றும் சித்தரித்து நாட்டைப் பிளவுபடுத்தினர்.

 

ரஹஸிய மொழி

ரிக் வேதத்தின் நாலாவது மண்டலத்தில் ரஹஸிய மொழியில் வேத கால ரிஷிகள் கவிபாடுவது வருகிறது:

” நான் ரஹஸிய மொழியில் பாடிய துதிகள், ஏ அக்னி தேவனே! உனக்குப் புரியும். என்னுடைய ஞான மொழிகளில் என் கருத்துகளையும் எண்ணங்களையும் உதிர்த்தேன்”

தமிழர்கள் ‘மறை’ என்று வேதங்களை அழைத்தது இந்த ரஹசிய மொழிகளால்தான்.

 

திசைகள் பற்றி பிராமண மந்திரங்கள்

 

கடவுள், கிழக்கு திசையில் இருந்து நகர்ந்து மேற்கு திசையிலுள்ள மனிதர்களை நோக்கி வந்தார். இதனால்தான் மனிதர்கள் கிழக்கு நோக்கி பிரார்த்தனை செய்கின்றனர்- சதபத பிராhமணம் 2-6-1-11

 

(இந்துக்கள் எப்போதும் கிழக்கு நோக்கியே வழிபாடு செய்வர்; இறந்தோருக்கான வழிபாடு மட்டும் தெற்கு திசையை நோக்கி இருக்கும்)

 

எவரும் மேற்கு திசையில் தலைவைத்துப் படுக்கக்கூடாது; ஏனெ னில் கால்கள் இறைவனை நோக்கி அமைந்துவிடும்! தெற்கு திசை இறந்து போன முன்னோர்களுக்கும் (பிதுர்கள்) மேற்கு திசை நாகர்களுக்கும் உரித்தாகும். அங்கே கடவுளர் சொர்கத்துக்கு ஏகினர். வட திசை மனிதர்களுக்குச் சொந்தம்; அதனால்தான் வீடுகளில் தெற்கு வடக்காக உத்திரங்கள் அமைக்கபடுகின்றன. ஏனெனில் வடக்கு திசை மனிதர்களுடையது.  புனிதமற்ற இடங்களில் உத்திரம் , கிழக்கு மேற்காக இருக்கும். (சதபத பிராமணம் 3-1-1-7)

 

அவன் ஆட்டின் மயிரைக் கத்தரித்து, அவைகளை வடகிழக்கு நோக்கி அனுப்புகிறான்.; வடகிழக்குதான் மனிதர்களுக்கும் கடவுளருக்கும் உரிய திசை. அவன் ஆடுமாடுகளை அத்திசைக்கு அனுப்புவதால்தான் மனிதர்களும் கடவுளும் கால்நடைகள் மூலம் ஜீவிக்கின்றனர். (சதபத பிராமணம் 6-4-4-22)

 

வடகிழக்கு திசையை நோக்கி நின்றுகொண்டுதான் பிரஜாப்தி (பிரம்மா) உயிரினங்களைப் படைத்தார். மீண்டும் சொல்கிறேன். வடகிழக்குதான் மனிதர்களுக்கும் கடவுளருக்கும் உரிய திசை. சொர்கலோகக் கதவு அங்கேதான் இருக்கிறது. (6-6-2-4)

 

 

வடகிழக்கு திசையை நோக்கி நின்றுகொண்டுதான் பிரஜாப்தி (பிரம்மா), விஷ்ணுவின் காலடிச் சுவடுகள் மூலம், உயிரினங்களைப் படைத்தார். அவ்வாறே இப்போது யாகம் செய்பவன் வடகிழக்கு திசை நோக்கி நின்றுகொண்டு, விஷ்ணுவின் காலடிச் சுவடுகள் மூலம்,   உயிரினங்களைப் படைக்கிறான். (6-7-2-12)

 

அவன் எந்த திசையில் செல்வதானாலும் முதலில் கிழக்கு நோக்கிச் செல்லட்டும்; ஏனெனில் கிழக்குதான் அக்னி தேவன் பிரதேசம் –(6-8-1-8)

 

அவர்களுடன் அவர்கள் தென் மேற்கு திசை நோக்கிச் செல்கின்றனர். ஏனெனில் அது நிருதி (தீய தேவதை) யின் திசை (7-2-18

 

கிழக்கு என்பது கடவுளை நோக்கிய திசை– அக்னியை நோக்கிய திசை- 7-3-2-1

திசைகள், உத்திரங்கள், திசைக்குரிய தெய்வங்களின் குறிப்புகள் ஆகியன வாஸ்து சாஸ்திரத்தின் தோற்றத்தைக் காட்டுவனவாக உள்ளன.

 

வேத காலத்தில் துதிப்பாடல்கள் (சம்ஹிதை) தோன்றியவுடன் பிராமண நூல்கள் (கி.மு.1000 அல்லது அதற்கு முன்னர்) தோன்றின.

 

கிழக்கு திசை பறிய பிராமணக் குறிப்புகளும், வேதத்தில் கிழக்கு திசை இந்திரனுக்கு ஒதுக்கப்பட்டதும், ரிக் வேத நதிகள் துதி, கிழக்கிலுள்ள கங்கையிலிருந்து துவங்கி மேற்கிலுள்ள சரஸ்வதி செல்வதாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கங்கைச் சமவெளியில் புகழ் வாய்ந்த நாக ரீகம் மலர்ந்ததைக் காட்டுகிறது. அது மட்டுமல்ல, பகீரதன், சகரர் பற்றிய புராணக் குறிப்புகளும், உலகிலேயே பழமையான நகரமான காசி மாநகரம் கங்கையின் மீதமர்ந்ததும் கங்கைச் சமவெளியின் பழமையைக் காட்டுகின்றன; வெளி நாட்டுக்காரர்களின் வாதங்களில் உள்ள பொய்மைப் புனைந்துரையைக் காட்டுகின்றன.

 

ஆரியர் படை எடுப்பு பற்றிய கதைகள் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயினவே!

 

TAGS:–வாஸ்து சாஸ்திரம், தோற்றம், மறை மொழி, ரகசிய மொழி, கிழக்கு திசை, கடவுள் திசை

–சுமம், சுபம் —

பசுவின் வால் வேண்டுமா? நாயின் வால் வேண்டுமா? (Post No. 4359)

Written by London Swaminathan

 

Date: 2 NOVEMBER 2017

 

Time uploaded in London- 11-26 AM

 

 

Post No. 4359

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சொல்ல வரும் ஒரு கருத்தை மனதில் பதியுமாறு சொல்ல வல்லவர்கள் நம் தமிழ்ப் புலவர்கள்; வீட்டில் கிளிபோல ஒருத்தி இருக்க வெளியே காகம் போன்ற ஒருத்தி வேண்டுமா? பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடக்க விரும்புகிறீர்களா அல்லது நாயின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடக்க விரும்புகிறீர்களா? என்று நீதி வெண்பாப் புலவர் கேட்கிறார்.

 

நீதி வெண்பாப் பாடல்களை எழுதியவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் என்ன? பாடல் புரிந்தால் போதுமே!

உற்றபெருஞ் சுற்ற முறநன் மனைவியுடன்

பற்றிமிக வாழ்க பசுவின் வால் — பற்றி

நதிகடத்த லன்றியே நாயின் வால் பற்றி

நதிகடத்த லுண்டோ நவில்

 

பசு மாட்டின் வலைப் பிடித்துக்கொண்டு நீர் நிரம்பிய ஆற்று வெள்ளத்தை கடப்பதல்லாமல், ஒரு சிறு நாயின் வாலைப் பிடித்துகொண்டு ஆற்றைக் கடந்து செல்லல் முடியுமோ, நீயே சொல். அதுபோல பெருமையான நல்ல உறவினர்கள் தன்னைச் சூழ்ந்திருப்ப ஒருவன் தனக்கு வாய்த்த நல்ல மனைவியுடன் அன்புகொண்டு வாழக் கடவன்.

 

வியாக்கியானம்: நல்ல சுற்றத்தார் வினைவகையால் நேர்வராதலின் உற்ற பெருஞ் சுற்றம் என்றார் அஃதாவது நாமே இப்பிறவி முயற்சியால்  சேர்த்துக்கொள்ளல் இயலாதென்பது. பெருஞ்சு ற்றமென்றது, நல்ல தன்மைகளிற் பெருமை மிக்க உறவினரை; ஏனென்றால் அவருடைய பண்புகளே வாழ்க்கையாற்றைக் கடக்க உதவுமாதலின், வாழ்க்கையை இப்பாட்டில் ஆறாக உருவகப்படுத்தினார்.

 

நல்ல மனைவி

 

கடினமான வாழ்க்கையை கடந்து செல்ல துணையாக இருப்பவள் மனைவி; அவள் தன் கணவனின் விருப்பு, வெறுப்புகளை, நெருங்கிப் பழகுவதால் அறிந்து கொண்டு, அவன் இயல்புக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப இடனறிந்து, இடுக்கண் களைந்து, துணை புரிபவள் ‘நன்மனைவி’ .

 

மனைவியும் நெஞ்சொத்தவளாயிருத்தல் வேண்டுமென்பதால் நல்ல மனைவி என்ற அடையொடு சேர்த்துக் கூறினார். கணவனும் மனைவியும் தமக்குள்ள ஒருமைப் பாட்டினாலேயே எடுத்த வேலையை முடிக்கப் பெறுதல் வேண்டுமென்பது,

காதன் மனையாளுங் காதலனும் மாறின்றித்

தீதிலொருகருமம் செய்பவே

என்னும் நன்னெறிச் செய்யுளாலுந் தெளியப்படும்; மனைவி கணவனைப் பாதுகாக்கும் கடமையுடையவள் என்பது,

 

தற்கத்துத் தற்கொண்டாள் பேணித் தகை சான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் (56)

 

-என்னும் திருக்குறளிற் கண்டுகொள்க

 

பொருள்:– கற்பு நெறி தவறாமல் தன்னைக்காத்து, தன் கணவனையும் பேணி, தகுதி வாய்ந்த குடிப்பெருமையையும் போற்றிப்  பாதுகாத்து, எக்காலத்தும் மனச் சோர்விலாமல் வாழ்ப்பவளே பெண் எனப் போற்றுதலுக்குரியவள்.

நாலடியார், திருக்குறள் ஆகியவற்றில் பிறர் மனை நயவாமை குறித்துள்ள செய்யுட்களையும் படித்து ஒப்பிடுக.

 

சுபம், சுபம்–

 

இது தான் இந்தியா – ஜெஃப்ரி ஃபர்னாலின் அனுபவக் கூற்று! (Post No.4358)

Written by S.NAGARAJAN

 

 

Date: 2 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-58 am

 

 

Post No. 4358

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அதிசய பூ

இது தான் இந்தியா – ஜெஃப்ரி ஃபர்னாலின் அனுபவக் கூற்று!

 

ச.நாகராஜன்

 

 
Jeffery Farnol

 

 

பிரபல ஆங்கில காதல் கதை மன்னரான ஜெஃப்ரி ஃபர்னால் சுவையான காதல் அட்வென்சர் கதைகளை எழுதி உலகைக் கவரந்தவர்.

 

இங்கிலாந்தில் 1878ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி பிறந்த ஃபர்னால் இயல்பாகவே கலை உள்ளம் படைத்தவர். அவருக்குச் சிறு வயது முதலே எழுதும் கலை இயல்பாக வந்தது.

 

 

சார்லஸ் டிக்கன்ஸ், ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸன் ஆகியோரின் நாவல்களால் அவர் பெரிதும் கவரப்பட்டார்.

பல கவிதைகளையும் கதைகளையும் எழுத ஆரம்பித்தார். அவரது  தி ப்ராட் ஹைவே (The Broad Highway – 1910) என்ற நாவலை அமெரிக்காவில் பதிப்பகங்களுக்கு அனுப்பினார்.ஆனால் அவை அந்த நாவலை ஏற்க மறுத்துத் திருப்பி அனுப்பின.

 

உடனடியாக தனது மாமியாருக்கு அதை அனுப்பினார். அவர் இங்கிலாந்தில் இருந்தார்.இங்கிலாந்தில் அது வெளியிடப்பட்டது. மறு ஆண்டு அமெரிக்கப் பதிப்பாளர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.

 

தொடர்ந்து பத்து வருட காலம் முதலிடத்தைப் பிடித்து அந்த நாவல் சாதனை படைத்தது.

 

 

தொடர்ந்து தி அமெச்சூர் ஜெண்டில்மேன் உள்ளிட்ட ஏராளமான ரொமான்ஸ் நாவல்களை அவர் எழுதினார்.

அவர் 1936ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். மர்மமான இந்த தேசத்தைப் பார்த்து வியந்தார். மறுபிறப்பில் அவருக்கு நம்பிக்கை உண்டு.

8-4-1936இல் தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகைக்கு அவர் பேட்டி கொடுத்தார்.

 

அதில் அவர் கூறியது:

 

“India has mystified me. It is more beautiful than I could imagine or dream of. I am charmed by the life of the country, specially the villages, I believe in the Law of Karma, but I do not believe that men can ever be born as animals. It is impertinent for any one visiting India for a few weeks, or even months, to write a book on the life or people of India. This mighty land goes far beyond the understanding of any mere sojourner.”

 

 

“இந்தியா என்னைத் திகைக்க வைத்தது. நான் கற்பனை செய்ததை விட, கனவு கண்டதை விட, அது மிக அழகானது. இந்த நாட்டில் உள்ள வாழ்க்கை முறையால் நான் கவரப்பட்டேன். குறிப்பாக கிராமங்களில் உள்ளோரின் வாழ்க்கை முறையால். எனக்கு கர்ம பலன் கொள்கையில் நம்பிக்கை உண்டு. ஆனால் மனிதன் ஒரு போதும் மிருகமாகப் பிறக்கமுடியாது என்று நம்புகிறேன். சில வாரங்களோ அல்லது, ஏன், சில மாதங்களோ கூட இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வருகை புரியும் ஒருவர் இங்குள்ள வாழ்க்கை முறை பற்றியோ அல்லது மக்களைப் பற்றியோ எழுதுவது என்பது பொருத்தமற்றது. தற்காலிகமாக ஊர் சுற்றிப் பார்க்க வரும் ஒருவரது புரிதலுக்கு மிக மிக அப்பாற்பட்டது இந்த பிரம்மாண்டமான தேசம்.”

 

 

‘புரிந்து கொள்ள முடியாத மர்ம தேசமாக இருப்பது இந்தியா’ என்பதை மிக அழகாகப் புரிந்து கொண்ட ஃபர்னால் மன மகிழ்ச்சியுடன் இந்தியாவைச் சுற்றிப் பார்த்தார். மக்களைப் புரிந்து கொண்டார். மறுபிறப்பில் தனக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இது போல ஏராளமான அயல் நாட்டவர் வியக்கும் வாழ்க்கை முறை இந்திய வாழ்க்கை  முறை என்பது குறிப்பிடத்தகுந்தது.

***

 

இரண்டு முறை மட்டும் உண்க! வேதம் கட்டளை!! (Post No.4356)

Written by London Swaminathan

 

Date: 1 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-17 AM

 

 

Post No. 4356

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வேத சம்ஹிதைகளை அடுத்து எழுந்த பிராமணங்கள் என்னும் உரைநடை நூல்களில் நிறைய தத்துவக் கதைகள் உள்ளன. சில நேரடியாகவும், சில மறைமுகமாகவும் நமக்குப் பல நீதிகளை உணர்த்துவன. தமிழ், கிரேக்கம், லத்தீன் முதலிய பல மொழிகளில் நூல்கள் தோன்றுவதற்கு மிக, மிக, மிக முன்னதாக சம்ஸ்கிருதத்தில் தோன்றிய உரைநடை நூல்கள் இவை.

ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.

 

தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள் (இறந்துபோன முன்னோர்கள்), அசுரர்கள் ஆகிய அனைவரும் பிரஜாபதியிடம் (பிரம்மா) சென்றனர். “ஐயன்மீர்! நாங்கள் எப்படி வாழ்வேண்டும் என்று அறிவுறுத்தவும்” என்றனர். ஒருவர் பின்னர் ஒருவராக வரிசையாகச் சென்று வினவினர். அவரும் செப்பினார்  :

 

ஆடை அணிந்து வளைந்து நெளிந்து கூனிக் குறுகிய மனிதனே! நீ காலையிலும், மாலையிலும் உண்க.

 

தேவர்களே! யாகத்தில் கிடைக்கும் உணவை மட்டும் உண்க

 

பித்ருக்களே! மாதம் தோறும் ஒரு முறை நிலவு ஒளியில் உண்க

 

மிருகங்களோவெனில் நினனைத்தபோது, கண்டவை எல்லாவற்றையும் உண்ணலாம்.

 

அசுரர்களுக்கு இருட்டையும் மாயையையும் பிரம்மா கொடுத்தார்.

( கண்ட கண்ட நேரங்களில் கண்ட கண்ட வற்றை உண்பவன் மிருகம் என்பது சொல்லாமலே விளங்கும்; மாயையிலும் இருட்டிலும் மூழ்கிக் கிடப்பவர், இனம் புரியாத வஸ்துக்களை உண்பர்; தற்கால குடிகாரர்கள்; போதை மருந்துக்கு அடிமையானோரை ஒப்பிடலாம்;அல்லது பல்லி,தேள், பாம்பு போன்றவற்றை உண்ணும் வர்கத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து).

மனிதராயினும், தேவராயினும், மிருகமாயினும் — எவரும் இக்கட்டளைகளை மீறக்கூடாது. சில மனிதர்கள் இதை மீறி உண்கிறார்கள்; அவர்கள் அதர்ம வழிகளில் கொழுத்துப் போகிறார்கள். கொழுப்பு என்பது தவற்றினால் வருகிறது. ஆகையால் மனிதர்கள் காலையிலும் மாலையிலும் சாப்பிட வேண்டும்; எவர் ஒருவர் இந்த உண்மையை அறிகிறாரோ, அறிந்தபடி பின்பற்றுகிறாரோ, அவர் முழு வாழ் நாளும் வாழ்வார். அவர் பேசுவதெல்லாம் உண்மையாகிவிடும்;  ஏனெனில் இது தெய்வீக உண்மை– சதபத பிராமணம் 2-4-2-6

 

நீதி வெண்பாவில் வரும் தமிழ் பாட்டு ஒன்று கூறுகிறது:

ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!

இருபோது போகியே யென்ப—திரிபோது

ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப்

போகியே யென்று புகல் உண்பான் ”

 

 

(ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி  நான்குவேளை உண்பான் போகியே போகி (ஆள் அவுட்!) என்பது இதன் பொருள்).

இன்னும் ஒரு குட்டிக்கதை

 

மாதங்கள் ஏன் தெரியுமா ஒன்றை அடுத்து ஒன்றாக , வரிசையாக வருகின்றன? ஏனெனில் பிராமண/ புரோகிதர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக வருகின்றனர். அவர்கள் ஒழுங்காக வருகின்றனர்; ஒழுங்காக உள்ளே நுழைகின்றன்ர்; இதனால் மாதங்களும் இப்படி வரும்; ஆகவே ஒருவர் பின்னால் ஒருவர் செல்க; காலடிச் சுவட்டைப் பின்பற்றுக- 3-1-7-11

 

இந்த மந்திரம் ஒழுங்கையும், வரிசைக் கிரமத்தையும் கற்பிக்கும் மந்திரம் என்று எனக்குத் தோன்றுகிறது. இவை எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் அற்புதமான பொன்மொழிகள்!.

 

My Old Articles:-

ஒரு வேளை உண்பான் யோகி | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/ஒரு-வேளை-உண்பா…

15 Nov 2012 – ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே! இருபோது … (ஒருவேளை உண்பான் யோகி, இருவேளைஉண்பான் போகி மூவேளை …

உண்டி சுருக்குதல் … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/உண்டி-சுருக்குதல்…

17 Jun 2014 – ((காண்க:– எனது பழைய கட்டுரை; ”ஒருவேளைஉண்பான் யோகி”……கட்டுரை … ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே இருபோது …

 

xxxxx SUBHAM, SUBHAM xxxxxx

 

2 யானை மீது அமைக்கப்பட்ட மேடையில் கச்சேரி: ஸ்ரீ முத்தையா பாகவதர்! (Post No.4352)

Written by S.NAGARAJAN

 

 

Date: 31 October 2017

 

Time uploaded in London- 5-19 am

 

 

Post No. 4352

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

இசை இன்பம்

இரண்டு யானைகளின் மீது அமைக்கப்பட்ட மேடையில் கச்சேரி செய்த ஸ்ரீ முத்தையா பாகவதர்!

 

ச.நாகராஜன்

 

1

இந்தக்கட்டுரையின் ஆக்கத்திற்கு உதவியவர் எனது சம்பந்தி திரு சேஷாத்ரிநாதன் அவர்கள். அவருக்கு எனது நன்றி. அவரது தந்தையார் திரு ராமசுப்ரமணியன் அவர்களின் பாட்டியும் (அப்பாவின் அம்மா), முத்தையா பாகவதரின் தாயாரும் ஸ்ரீ எஸ். ஜி. கிட்டப்பாவின் தாயாரும் உடன் பிறந்த சகோதரிகள். ஆகவே திரு ராமசுப்பிரமணியனின் சித்தப்பா தான் ஸ்ரீ முத்தையா பாகவதர்.

 

 

Picture of Sri Ramasubramaniam

21-10-2017 அக்டோபர் 21,22,23 ஆகிய தேதிகளில் அவர் தனது பழைய நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு வயது 97. தெளிவாக நுணுக்கமான விவரங்களை அவர் இடம், தேதி, பெயருடன் தெரிவித்தது ஒரு அபூர்வமான விஷயம். திரு சேஷாத்திரிநாதன் மிகவும் பத்திரமாக வைத்திருந்த ஆவணங்களைப் பார்த்ததோடு அவற்றை உடனடியாக போட்டோ எடுக்க விழைந்தேன். அந்த போட்டோக்களை திரு கார்த்திக் (சேஷாத்திரிநாதனின் புதல்வர்) நேர்த்தியாக எடுத்துத் தந்தார். அவருக்கும் நமது நன்றி.

 

 

2

 

ஸ்ரீ முத்தையா பாகவதர் (பிறப்பு : 15-11-1877 மறைவு : 30-6-1945)

20 ராகங்களை உருவாக்கியவர்.

 

1930ஆம் ஆண்டிலேயே மியூசிக் அகாடமியால் சங்கீத கலாவிதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர். ஹரிகதா நிகழ்த்துவதில் வல்லவர். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் ஹரிகதை செய்வதைக் கேட்பதற்காக மக்கள் திரள் திரளாகக் கூடுவது வழக்கம். பல வெளிநாடுகளுக்கும் அவர் கப்பலில் செல்வது வழக்கம். சிலோன், பினாங்கு, ரங்கூன் உள்ளிட்ட பல இடங்களில் அவரது நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

 

 

3

மைசூர் மஹாராஜா ஒரு நாள் ஒரு நாதஸ்வர வித்வான் மைசூரில் முத்தையா பாகவதர் இயற்றிய வள்ளி நாயகனே என்ற பாடலை வாசிக்கக் கேட்டார். அப்போது அந்த நாதஸ்வர வித்வான் பாகவதரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் மன்னரிடம் கூற உடனே பாகவதருக்கு மைசூர் வருமாறு மன்னர் அழைப்பு விடுத்தார் மைசூருக்குச் சென்ற பாகவதர் மன்னரின் அன்புக்குப் பாத்திரராய் விளங்கினார்.

அங்கேயே வசித்து வந்தார் அவர். அவர் மறைந்ததும் மைசூரில் தான்.

 

 

அவருக்கு உரிய மரியாதை தருவதற்காக உப்பரிகையில் வீற்று கதை கேட்கும் மன்னர் தனக்குச் சமமான உயரத்தில் அவர் ஆசனம் இருக்க வேண்டும் என்பதற்காக உயரமான பெரிய இரு யானைகளை நிறுத்தி அவற்றிற்கு இடையே மேடையை அமைத்து அதில் முத்தையா பாகவதர் அமர்ந்து நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்வது வழக்கம்.

அந்த அளவுக்கு அவர் மைசூர் ராஜாவின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்தார்.

 

 

அவரது நிகழ்ச்சியால் பெரிதும் கவரப்பட்ட மஹாராஜா அவருக்கு யானைக்குட்டி ஒன்றைப் பரிசாக அளித்தார். அதைத் தனது இல்லத்திற்கு கூட்டிச் சென்ற முத்தையா பாகவதரால் அது அடிக்கும் ‘லூட்டியைச் சமாளிக்க முடியவில்லை.

கூடக் கூட்டிச் செல்லும் போது தெரு வீதிகளில் அது ஓடுமாம். மக்கள் மகிழ்ச்சியோடு அந்தக் ‘கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு மகிழ்வராம்.

 

வீட்டிலோ தம்புரா உட்பட்ட அனைத்துமே யானையால் உடைபட்டது.

 

பொறுக்க முடியாத முத்தையா பாகவதர் மன்னரிடம் சென்று அந்த அன்புப் பரிசு அன்புத் தொல்லையாக இருப்பதைத் தெரிவித்து யானைக் குட்டியைத் திருப்பிக் கொடுத்தாராம்.

மைசூர் மன்னர் சாமுண்டீஸ்வரி கோவிலில் அவரே பூஜை செய்வது வழக்கம். சாமுண்டீஸ்வரி அம்மன் மீது பல கீர்த்தனைகளை முத்தையா பாகவதர் இயற்றியுள்ளார். மன்னர் பூஜை செய்யும் போது முத்தையா பாகவதர் அந்தப் பாடல்கள் உள்ளிட்ட பல பாடல்களையும் பாடுவது வழக்கம்.

 

திருவனந்தபுரம் அரண்மனையிலிருந்தும் அவருக்கு அழைப்புகள் வழக்கமாக வரும்.

முத்தையா பாகவதர் சங்கீத உலகிற்கும் ஹரிகதா ப்ரவசன கலைக்கும் ஆற்றிய தொண்டு போற்றுதற்குரியது. அவரைப் பற்றிய பல நூல்கள் இப்போது வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று.

 

 

4

முத்தையா பாகவதர் மதுரையில் ஒரு சங்கீத பாடசாலையை ஆரம்பித்தார். மதுரை மணி ஐயர் உள்ளிட்ட பிற்கால பிரபலங்கள் பலரும் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்களே.மதுரை பள்ளிக்கு சங்கர சேர்வை என்பவர் முதல்வராக இருந்தார். அவரது தம்பி முருக பூபதி பிரபலமான மிருதங்க வித்வான். அந்தப் பள்ளியில் தான் திரு டி.என்.சேஷகோபாலன் பயின்றார்.

முத்தையா பாகவதரின் தம்பி ஹரிஹர பாகவதர் அவருடைய ஹரிகதா காலக்ஷேபத்திற்குப் பின்பாட்டுப் பாடுவார். அவர் இறந்தவுடன் அவரது குமாரர் வைத்தியலிங்கம் (மூக்காண்டி என்பது அவரின் செல்லப் பெயர்) அவர்களை முத்தையா பாகவதர் தத்து எடுத்து வளர்த்தார். பாகவதர் இறந்தவுடன் அவரது அந்திமக் கிரியைகளை இவரே செய்தார். சித்தூர் இசைக் கல்லூரியை வைத்தியலிங்கம் நிர்வகித்து வந்தார்.

 

(எனது சம்பந்த்தியின் தந்தையார்) திரு ராமசுப்பிரமணியனின் தமக்கையாரின் கணவர் திரு கிருஷ்ணமூர்த்தி டோலக் வாத்தியத்தை வாசிப்பதில் பெரும் நிபுணர். டோலக் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தாய் மாமன் முத்தையா பாகவதர்.

 

அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த எஸ்.ஜி.கிட்டப்பாவின் நிகழ்ச்சிகளுக்கு காசி ஐயர் ஹார்மோனியம் வாசிப்பார். டோலக்கை திரு கிருஷ்ணமூர்த்தி வாசிப்பார். அவரது இசை நிகழ்ச்சிகள் பற்றிய அனைத்து நோட்டீஸ்களும் கூட போட்டோ எடுக்கப்பட்டது. (இணைப்பு காண்க)

 

 

 

5

1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆனால் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பெரிய அளவில் இசை நிகழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி விட்டன.

 

விசேஷ துண்டு பிரசுரங்கள் கச்சேரிகளுக்கென வெளியிடப்பட்டன.(இணைப்பில் காண்க)

சங்கீதமும் ஹரிகதை உபந்யாசமும் தேசபக்தி எழுச்சிக்கும் விடுதலைக்கும் எப்படி வித்திட்டன என்பதை தனியே ஆராய வேண்டும். அவ்வளவு விஷயங்கள் அதில் உள்ளன.

 

 

ஹரிகதா சக்கரவர்த்தி ஸ்ரீ முத்தையா பாகவதர் பற்றிய விஷயங்களை அறிந்த  மகிழ்ச்சியுடன் பெரியவர் திரு ராமசுப்பிரமணியன் அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.

***

எதைச் செய்யக்கூடாது? இன்னா நாற்பது பொன்மொழிகள் (Post No.4350)

 

Written by London Swaminathan

 

Date: 30 October 2017

 

Time uploaded in London- 13-29

 

 

Post No. 4350

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

நவம்பர் 2017 (ஹே விளம்பி ஐப்பசி/கார்த்திகை) காலண்டர்

 

 

விழா நாட்கள்:- 4 குருநானக் ஜயந்தி, 6- கனகதாசர் ஜயந்தி, 23- சத்ய சாய் பாபா பிறந்த நாள்.

அமாவாசை-18; ஏகாதசி- 14, 29; பௌர்ணமி- 3; சுப முகூர்த்தம்- 2, 9, 24, 30

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பது என்னும் நூலில் இருந்து 30 பொன்மொழிகள் இதில் உள்ளன. ஒவ்வொரு மாத காலண்டரிலும் 30 அல்லது 31 பொன்மொழிகள் வீதம் இதுவரை ஆயிரத்துக்கும் மேலான பொன்மொழிகள் கடந்த ஈராண்டு காலண்டர்களில் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.

 

நவம்பர் 1 புதன் கிழமை

 

முக்கண்பகவன் அடிதொழாதார்க்கு இன்னா; சக்கரத்தானை மறப்பு இன்னா (சிவனையும், திருமாலையும், பிரமனையும் வழிபடாதார்க்கு இன்பமே இல்லை)

 

நவம்பர் 2 வியாழக்கிழமை

பந்தம் இல்லாத மனைவியின் வனப்பு இன்னா (மனைவிக்கு அழகு இருக்கலாம்; ஆனால் அன்பில்லாவிடில் இன்பம் இல்லை)

 

நவம்பர் 3 வெள்ளிக் கிழமை

தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா ( நல்ல நடிகர் போல அழகு இருக்கலாம்; ஆனால் தந்தை இல்லாத மகன், கல்வி கற்காமல்,  கட்டுப்பாடின்றி திரிவான்; ஆக அங்கே இன்பம் இல்லை)

 

நவம்பர் 4 சனிக்கிழமை

அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா (அந்தக் காலத்தில் பிராமணர்கள் மனு நீதி சொன்னபடி, சொத்து சுகங்களைத் தேடி வைக்கக்கூடாது; தினமும் யார் வீட்டிலாவது பூஜை செய்து அவர்  அந்த வருமானத்தில் வாழ வேண்டும்; அத்தகைய ஏழைப் பிராமணன் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடக்கூடாது)

 

நவம்பர் 5 ஞாயிற்றுக் கிழமை

பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா (பிராமணர்கள் மிகவும் சுத்த மானவர்கள்; அத்தகையோர் வாழும்    அக்கிரஹாரத்தில் நாய் அல்லது கோழி புகுந்தால் அவர்களுக்கு மகிழ்ச்சி இராது).

 

நவம்பர் 6 திங்கட் கிழமை

ஆர்த்த மனைவி அடங்காமை நன்கு இன்னா ( சில குடும்பங்களில் மனைவி, அடங்காப்பிடாரியாக இருப்பாள்; அங்கும் மகிழ்ச்சி இல்லை).

 

நவம்பர் 7  செவ்வாய்க் கிழமை

நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா ( அந்தக் காலத்தில் ஆற்றுப் பாலங்கள் அதிகமில்லை; சிலர் அசட்டுத் தைரியத்தில் நீந்துவர்; உயிரிழப்பர்; ஆகவே தெப்பமின்றி நீந்தக்கூடாது)

 

நவம்பர் 8 புதன் கிழமை

கடுமொழியாளர்  தொடர்பு இன்னா ( சிடு சிடுவென எப்போது பார்த்தாலும், எரிந்து விழும் அல்லது எதிர்மறை சொற்களைப் பேசும் ஆட்களை நண்பராக வைத்துக் கொள்ளதே; இன்பமே இராது)

 

நவம்பர் 9 வியாழக்கிழமை

எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா (சொந்தத்தில் எருது முதலியன இல்லாத உழவர்கள் உடனே உழ முடியாது; நிலத்தில் நீர்ப்பசை வீணாதலைக் கண்டு துன்பமே மிகும்).

 

நவம்பர் 10 வெள்ளிக் கிழமை

கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா ( ஒரு அரசனுடைய படைகள் புறங்காட்டித் தோற்று ஓடி வருவது துன்பமே தரும்).

நவம்பர் 11 சனிக்கிழமை

திரு உடையாரைச் செறல் இன்னா (செல்வந்தர்களைப் பகைத்தால் இன்பம் இல்லை)

 

நவம்பர் 12 ஞாயிற்றுக் கிழமை

 

சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா ( வேலி இல்லாத கரும்புத் தோட்டத்தைப் பாது காப்பது இன்பம் பயக்காது; பயிர் செய்தால், விலங்குகள் மேயா வண்ணம் பாதுகாத்தல் அவசியம்)

 

 

நவம்பர் 13 திங்கட் கிழமை

 

உறைசேர் பழங்கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா ( மழைக்காலத்தில் ஒழுகும் கூரை உடைய வீட்டில் வாழ்வது துன்பம் தரும்; அதாவது மழை வரும் முன்னே வலுப்படுத்தல் அவசியம்)

 

நவம்பர் 14 செவ்வாய்க் கிழமை

 

அறம் மனத்தார் கூறும் கடுமொழியும் இன்னா ( அற நெறியில் நிற்கும் நல்லோர் (கோபத்துடன்), சொல்லும் அறிவுரைகள் தீநெறியில் செல்லுவோருக்கு மகிழ்ச்சி தராது)

 

நவம்பர் 15 புதன் கிழமை

மறம் மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா (போர்க்களத்தில் (ஞாட்பில்) சோம்பி இருத்தல் வீரம் நிறைந்தவர்க்கு துன்பம் தரும்; பகைவர் தாக்கும் போது சுணக்கம் கூடாது)

நவம்பர் 16 வியாழக்கிழமை

 

இடும்பை உடையார் கொடை இன்னா ( வறுமையில் வாடுவோர், வெளி உலக பகட்டுக்காக, கொடையாளி போல நடிப்பது துன்பம் தரும்)

 

நவம்பர் 17 வெள்ளிக் கிழமை

 

ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா

(திறமை இல்லாதவன் படைக்கலங்களைக் கொண்டு சென்று போரிட்டால், வலிமையுள்ள எதிரி, அதையே பிடுங்கி அடிப்பான்; அப்போது துன்பம் வரும்)

 

நவம்பர் 18 சனிக்கிழமை

 

நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா ( வாசனை இல்லாத மலர்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் இன்பம் தராது; அழகான பெண்கள் குணம் இலாமல் இருந்தால் துன்பம்தான்)

 

நவம்பர் 19 ஞாயிற்றுக் கிழமை

 

தேற்றம் இலாதான் துணிவு இன்னா (திட்டம் இடாமல் காரியத்தைச் செய்பவனுக்கு இன்பம் இல்லை)

 

நவம்பர் 20 திங்கட் கிழமை

 

நகையாய நண்பினார் நார் இன்னா( சிரித்துச் சிரித்துப் பேசுவோர் உண்மை அன்பு காட்டாவிடில் துன்பமே) முகநக நட்பது நட்பன்று

 

நவம்பர் 21 செவ்வாய்க் கிழமை

 

இகலின் எழுந்தவர் ஒட்டு இன்னா ( கீழ் மக்களுடன் கொள்ளும் நட்பு, துன்பம் தரும்)

வள்ளல்கள் இன்மை பரிலர்க்கு முன் இன்னா (வள்ளல்கள் இல்லாத ஊரில் வாழும் புலவர்க்கு இன்பம் கிடைக்காது)

 

நவம்பர் 22 புதன் கிழமை

 

வண்மை இலாளர் வனப்பு இன்னா ( ஈகைக் குணம் இலாதோர் எவ்வளவு சிறப்பான தோற்றம் உடையாராக இருந்தாலும் மற்றவர்க்கு மகிழ்ச்சி தராது)

நவம்பர் 23 வியாழக்கிழமை

 

பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா (பொருளை உணரக்கூடிய அறிஞர்களிடையே கவிதைகளைச் சொல்ல வேண்டும்; மற்றவர்களிடம் உரைப்பது மகிழ்ச்சி தராது)

 

நவம்பர் 24 வெள்ளிக் கிழமை

 

இருள் சுடர் சிறு நெறி தாம் தனிப்போர்க்கு இன்னா ( இருட்டு வழிகளில் தனியே போவது துன்பம் தரும்)

 

நவம்பர் 25 சனிக்கிழமை

 

அருள் இல்லார் தம்கண் செலவு இன்னா (அருள் இலாதவரிடம் உதவி கேட்பது துன்பம் தரும்)

 

நவம்பர் 26 ஞாயிற்றுக் கிழமை

 

உடம்பாடு இலாத மனைவி தோள் இன்னா ( கருத்து ஒற்றுமை இல்லாத மனைவியின் தோள் துன்பமே தரும்)

 

நவம்பர் 27 திங்கட் கிழமை

 

இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா ( பிழையை மட்டும் பெரிது படுத்தும் நண்பர்களோடு வாழ்வது சுகம் தராது)

நவம்பர் 28  செவ்வாய்க் கிழமை

இடங்கழியாளர் தொடர்பு இன்னா ( காமம், கோபம் மிக்க கீழ்மக்கள் தொடர்பு துன்பமே அளிக்கும்)

 

நவம்பர் 29 புதன் கிழமை

 

இன்னா கடன் உடையார் காணப் புகல் ( கடன் வாங்கியோர், அதைத் திருப்பிக் கொடுக்காதவரை, கடன் கொடுத்தவரைக் காணும் போது எல்லாம் துன்பமே மிகும்)

 

நவம்பர் 30 வியாழக்கிழமை

 

கள் இல்லா மூதூர் களிகட்கு நன்கு இன்னா (குடிகாரர்களுக்கு கள் இலாத ஊர் துன்பத்தைத் தருகிறது)

–சுபம், சுபம்–

 

கம்பன் கவி இன்பம்:மேதையைக் கணித்தல் முடியுமா, என்ன? (Post no.4349)

Written by S.NAGARAJAN

 

 

Date: 30 October 2017

 

Time uploaded in London- 5-48 am

 

 

Post No. 4349

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 6)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299 ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

கொள்வன கொண்டு, குறைப்பன குறைத்து, சேர்ப்பன சேர்த்த மேதையைக் கணித்தல் முடியுமா, என்ன?!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

பாடல் 16

பூமி மாது புனையும் மஹாகவித்

தாம நாப்பண் தயங்கிச் சதிரொளி

ஏமம் வீசி எரிநடு நாயகம்

காம இன்பமும் கைப்பித்த கம்பனே

 

காம இன்பத்தையும் கசப்பென்று தள்ளிவிடத்தக்க இனிமையை ஊட்டும் கவி புனையும் கம்பன் என்னும் மஹாகவி , பூமி தேவி தன் மார்பில் அணிகின்ற மஹாகவிகளாம் இரத்தின வடத்தில் நடுவே நின்று, அழகிய ஒளியையும் இன்பத்தையும் எங்கும் வீசி மிளிர்கின்ற இரத்தினமாக இன்றும் பிரகாசிக்கின்றான்.

 

பாடல் 17

பாங்கில் வேந்தைப் பனிக்குடை பாலிக்கக்

தாங்கும் சக்கர வர்த்தித் தகையினர்;

தூங்குஞ் செந்தமிழ்த் தொல்கவி ராஜர்மேல்

ஓங்கும் கம்பன் ஒருகவி நீழலே

 

பாடல் 18

மான சமடு வந்த சரயு போல்

பாந சைப்புல வர்பல குன்றிடை

வான சைல மெனவளர் கம்பனுள்

ஞான வாவியிக் காவியம் நன்குமால்

 

பாடல் 19

(வேறு)

“வாங்கரும் பாதம் நான்கும் வகுத்தவான் மீகிதந்த

ஓங்கிடும் புகழ்நூற் பற்றி யுதவின னேனும் கம்பன்

வீங்கறி வுடைய ஞாலம் வேண்டிய வாறு காதை

ஆங்கங்கே திருத்தி யாண்டும் அழகுற அமைத்த திந்நூல்

 

பாடல் 20

முதலென வழிநூ லென்ன முடித்துளார் முறையிற் சென்றே

சதிருறா முதநூல் தானே தலைநின்று தயங்குமென்பர்;

மதத்திறன் மதிக்க லாதிம் மதம்விரித் துரைத்தார் தாமும்

எதிரிலா ராமகாதை யெதிர நாவெடுக்க லாரே.

 

பாடல் 21

நூலினை வகுத்துக் கூறும் நுண்ணறி வெனைத்தென் றாலும்

மேலினை வகுக்கு மாபோல் வினைக்கடை வியர்த்தமாமே;

ஞாலத்திற் புலவர் புந்தி நடைத்திறன் கணித்தல் சீவன்

மூலத்தைக் கணித்தல் போலும் முரட்டுற்ற முயற்சியம்மா!

 

பாடல் 22

பூதபென திகத்துட் கணிப் புதுமைபூத் தொளிராச் சத்தி

ஓதமோ ரளவைத் தாகி யொதுங்கலு மதற்கும் வேறாய்

மேதகு மனத்தி னூற்றம் விளைந்துமேக் குறலும் கால

பேதத்திற் பின்ன லாய பெரும்பரிணாம மன்றே

 

பரிணாமம் -இயற்கைத் தோற்றத்தினை விளக்கும் அபிவர்த்தன வாதக் கொள்கை ((Evolution)

 

பாடல் 23

ஆதலால் அறிஞ ரானோர் அளக்குறார் உளத்தி னாற்றல்

பூதலத் துயரின் போக்கைப் புனைபொறி புகுத்த நோக்கால்

மாதவத் துயர்ந்த முன்னோர் மாண்புள ரென்றும் பின்னோர்

மேதினி விளக்கு ஞானம் மேவல் போல் மேவினாரே

 

பாடல் 24

பண்பமை நூல்க ளெல்லாம் பண்டையர் போலப் பீடு

கொண்டன வென்னக் காட்சி கோடற்க இற்றை ஞான்றும்

எண்டயங் குறுநூல் செய்தாங் கிசைநட்டா ருளரே யாதற்

கண்டனம் ராம லிங்க கவியருட் பாவின் காட்டால்

 

பாடல் 25

ஆரிய மொழிக் கோர் ஆதி கவியெனும் அழிவில் சீர்த்தி

சேரிய முனிவன் றானே செப்பின னேனுந் தொன்னூல்

கூறிய அறிவில் ஞானக் கோளசைக் குனித்த கம்பன்

சீரிய கலைக்குச் சித்ர லைக்கவி சிறத்தல் செய்ய

 

பாடல் 26

குறைப்பன குறைத்து வேண்டிக் கொள்வன கொண்டு மாற்றம்

செறிப்பன செறித்துச் செப்ப னிட்டசே டகப் பொற் றட்டிற்

குறிப்ப்ன கோலத் துள்ள துகிலிகை கொண்டு யாணர்ப்

பொறிப்பன வாய பொன்சித் திரத்தின் வித்தார மம்ம!

 

***

வாங்க அரும் பாதம் வகுத்தவன் என்று வான்மீகியைக் கம்பன் புகழ்கிறான். ஒரு சுலோகத்தில் நான்கு பாதங்கள் உண்டு. அதில் ஒரு பாதத்தைக் கூட மாற்ற முடியாது; இடைச் செருகல் செய்ய முடியாது. அப்படி ஒரு சொல் மாலை வால்மீகி ராமாயணம்.

அதில் கம்பன் கொள்வன கொண்டான்; குறைப்பன குறைத்தான்; சேர்ப்பன சேர்த்தான். பொன் தட்டில் நமக்குத் தமிழில் ராமாயணத்தைத் தந்தான்.

பண்டைய நூல்கள் தான் நூல்கள் என்று எண்ண வேண்டாம். இந்த நாளிலும் கூட குறு நூல் செய்து இசை நட்டார் உளர்; அருட்பிரகாச வள்ளலார் எனப்படும் ராமலிங்கக் கவியின் அருட்பாவும் உண்டு, அல்லவா!

கம்பனை யாராலாவது கணிக்க முடியுமா, என்ன? புலவரின் புத்தி, நடைத்திறன் ஆகியவற்றைக் கணிக்கும் முயற்சியானது உயிர் எப்படித் தோன்றுகிறது என்ற மூலத்தினை ஆராய்ச்சி செய்வதற்கு ஒப்பாகுமல்லவா? அதை எப்படி யாராலும் கண்டுபிடிக்க முடியாதோ அது போல கம்பனின் அளவற்ற மேதா விலாசத்தையும் நடைத்திறனையும் யாராலும் கணிக்க முடியாது! அம்மம்மா!

என்று இப்படியெல்லாம் வியக்கிறார் கவிஞர் சிவராஜ பிள்ளை.

கம்பனில் தோய்ந்த ரஸிகர் அல்லவா, அவர்.

இன்னும் மேற்கொண்டு உள்ள பாடல்களை அடுத்துப் பார்ப்போம்.

                                  -தொடரும்

***

 

 

 

 

கர்ப்பூரமாமோ கடலுப்பு? (Post No.4321)

Written by London Swaminathan

 

Date: 21 October 2017

 

Time uploaded in London- 6-17 am

 

 

Post No. 4321

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கர்ப்பூரமும் வெள்ளை நிறம்; கடலுப்பும் வெள்ளை நிறம்.

இயற்கையில் கிடைக்கும்போது இரண்டும் ஒரே தோற்றம்.

ஆயினும் கர்ப்பூரமும் கடலுப்பும் ஒன்றாகுமா?

 

நான் மதுரையில் இருந்தபோது ஒரு பெரிய மில்லின் (நெசவாலை) ஒரு பெரிய அதிகாரியை எனது நண்பர் ஒருவர் கிண்டல் செய்வார். “அவன் யார் தெரியுமா? என் கூடப் படித்த காலத்தில் நசுங்கிய பித்தளைப் பாத்திரத்தில் தினமும் தயிர் சோறு கொண்டு வருவான்; பரம ஏழை; இன்று பார்! அவன் காரில் போகிறான்; நான் இங்கே உன்னுடன் உடகார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருகிறேன்” என்பார்.

 

அவரே இன்னொரு விஷயமும் சொல்லுவார்– ” பார் என் பாட்டியும் விக்டோரியா மஹாராணியாரும் ஒரே நேரத்தில் ஒரே வருடத்தில் பிறந்தவர்கள்; இதோ பார்! ஜாதகம்! என்று காட்டுவார். பாராண்ட விக்டோரியா மஹாராணி எங்கே? பார்வை இழந்த மதுரைக் கிழவி எங்கே?

 

ஆக, நம்மில் பலரும் அறியாமையின் காரணமாகவோ, பொறாமையின் காரணமாகவோ உயர்ந்த பதவியில், உயர்ந்த நிலையில் உள்ளவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொள்வோம். அவர்களுடைய முயற்சி, உழைப்பு முதலியவற்றை மறைத்துவிட்டு நம்மை அவர்களுக்குச் சரி சமமாக காட்ட முயல்வோம். இது தவறு என்பதை விளக்க சில அழகான தமிழ்ப் பாடல்கள் உள.

 

கர்ப்பூரம் போலக் கடலுப் பிருந்தாலுங்

கர்ப்புர மாமோ கடலுப்புப் — பொற்பூரும்

புண்ணியரைப் போல இருந்தாலும் புல்லியர்தாம்

புண்ணியரா வாரோ புகல்

–நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)

 

பொருள்:

கடல் நீரில் உண்டாகும் உப்பு,   கர்ப்பூரத்தைப் போலவே இருந்தாலும், அந்த உப்பு, கர்ப்பூரம் ஆகி விடுமா?

ஒருக்காலும் ஆகாது, அது போல,

 

தீச்செயல் புரிவோர், தோற்றத்தில், அழகு மிக்க நல்வினையாளர் போலத் தோன்றினாலும்,  அவர்கள் புண்ணியர் ஆகிவிடுவரோ? நீயே சொல்.

கான மயிலும் வான் கோழியும் ஒன்றா?

 

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்

பொல்லாச் சிறகைவிரித்  தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி – வாக்குண்டாம்

 

முறையாக யாப்பிலக்கணம் கற்காதவன், கற்றறிந்தோர் சபையில் கவி பாடுவதானது காட்டில் உள்ள மயில் தன் அழகிய தோகையை விரித்தாடியதைக் கண்ட வான் கோழி, தன்னையும் அந்த மயில் என்று எண்ணிக் கொண்டு, அதுவும் தன் அழகில்லாத சிறகுகளை விரித்தாடியது போலாகும்.

 

கல்லாதவன்= வான் கோழி

கற்றவன்= கான மயில்

 

தவறான கவிதைகள் = வான் கோழிச் சிறகு

இலக்கணக் கவிதைகள்=  மயில்தோகை

நாம் வான் கோழியைப் பின்பற்றமல் இருப்போமாக!

 

TAGS:–கற்பூரம், கர்ப்பூரம் உப்பு, மயில், வான்கோழி

சுபம்–