ஒரு படி தானியத்துக்கு ஒரு படி முத்து! பரஞ்சோதி முனிவர் தகவல்-3 (Post.14,516)

Written by London Swaminathan

Post No. 14,516

Date uploaded in London –  15 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பரஞ்சோதி முனிவர் சொல்லும் அதிசயச் செய்தி

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-3

பரஞ்சோதி முனிவர் , அவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில், நிறைய அதிசயச் செய்திகளைக் கொடுக்கிறார்; அதில் ஒன்று பாண்டிய நாட்டில் எடைக்கு எடை முத்து கிடைக்கும் என்னும் செய்தி ஆகும் . மதுரை நகர பெண்களிடம் ஒரு படி எள் , அல்லது கொள்ளு கொடுத்தால் அவர்கள் ஒரு படி முத்து கொடுப்பார்கள் . அதை பெண்கள் வளையல்களாகவோ, மாலைகளாகவோ செய்துகொள்ளலாம். மதுரை மீனாட்சி கோவிலில் அம்மனுக்கு உள்ள முத்து அங்கி, முத்து மாலைகளை பார்க்கையில் இது உண்மைதான் என்றும் தெரிகிறது .

வேழம் உடைத்து மலைநாடு

          மிகுமுத்து உடைத்து தென்னாடு;

தாழ்வில் தொண்டை வளநாடு

          சான்றோர் உடைத்தென்று உரைத்ததல்லால்

சோழன் புவிசோறு உடைத்தென்னும்

          துதியால் எவர்க்கும் உயிர்கொடுத்து

வாழும் பெருமைத் திருநாடு

          வளம்சேர் சோழ மண்டலமே   

மலைநாடாகிய சேரநாடு யானைகளை உடையது. தென்னாடாகிய பாண்டி நாடு முத்து உடையது. தொண்டை நாடு சான்றோர் உடையது. சோழ வளநாடு சோறு உடையது. சோறு உயிர் கொடுப்பதால் எல்லா நாட்டையும் விடச் சோழ நாடே சிறந்தது.

வேழ முடைத்து மலைநாடு, மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து – பூழியர்கோன்

தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை

நன்னாடு சான்றோர் உடைத்து

என்றார் ஒளவையார் (தொண்டை மண்டல சதகம், மேற்கோள் 13)

****

இதோ திருவிளையாடல் புராணப் பாடல்

துள்ளு சேல்விழி நுளைச்சியர் சுறவொடு மருந்தக்

கள்ளு மாறவுங் கூனலங் காய்தினை யவரை

கொள்ளு மாறவுங் கிழங்குதேன் கொழுஞ்சுவைக் கன்னல்

எள்ளு மாறவு மளப்பன விடைக்கிடை முத்தம் 42

  துள்ளுகின்ற கெண்டை மீன்போலுங கண்களையுடைய நெய்தனிலப் பெண்களால், சுறா மீனோடு உண்ணுதற் பொருட்டு, கள்ளையும்  இனிய

கரும்பையும், வாங்குதற் பொருட்டும், புளியங்காய், தினை கிழங்கு, தேன் இவைகளை, வாங்குதற் பொருட்டும், அவரை கொள், எள் இவைகளை வாங்குதற் பொருட்டும்,

 அளவுக்கு அளவு முத்துக்கள் அளக்கப் பெறும்

.

அந்தக் காலத்தில் பண்டமாற்றுமுறை நாடங்கிலும் வழகத்தில் இருந்தது யாரிடம் எது அதிகம் இருந்த தோ அதைக் கொடுத்து வேறு ஒரு பண்டத்தை  வாங்கினார்கள் பாண்டிய நாட்டில் முத்துக்கள் ஏராளமாக கிடைத்ததால் அதை அளந்து கொடுத்து தானியங்களை வாங்கினார்கள் .

கருவி வாள் சொரி மணிகளும் கழை சொரி மணியும்

அருவி கான்ற பல் மணிகளும் அகன் தலை நாகத்து

இரவி கான்ற செம் மணிகளும் புனம் கவரி மான்

குருவி வீழ்ந்திடக் கொடிச்சியர் கோத்துஎறி கவண்கல்.    49

.மேகங்கள் சொரிந்த முத்துக்களும், மூங்கில்கள் சொரிந்த முத்துக்களும், அருவிகள் ஒதுக்கிய பல்வகை மணிகளும்,

அகன்ற படத்தினையுடைய நாகத்தினின்றும், உமிழப்பட்ட,

சூரியன்போலும் சிவந்த மணிகளும்,  தினைப்புனத்தின் கதிர்களைக்

கவர்கின்ற கூட்டமாகிய மான்களும் குருவிகளும் வீழும்படி,

 குறமகளிர் கவணில் கோத்து எறிகின்ற கற்ககள் ஆகும்

 கொடிச்சியர் – குறிஞ்சிநில மகளிர். (49)

குறிஞ்சிநில மகளிர், கவண் கல் வீசவும் ரத்தினக் கற்களைத்தான் பயன்படுத்துவார்களாம்!

—–subham—-

Tags-, கவண் கல், தானியத்துக்கு, முத்து , பரஞ்சோதி முனிவர், ரத்தினக் கற்கள், வேழம் உடைத்து மலைநாடு,தென்னாடு முத்துடைத்து

கோலாகலமான கோவள குதூகலம் (Post No.14,515)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,515

Date uploaded in London – –15 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

12-4-25 மாலைமலர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை!

சுற்றுலா பயண இடங்கள்

கோலாகலமான கோவள குதூகலம்

ச. நாகராஜன்

கோவளம் தரும் குதூகலம்!

தூய்மையான காற்று, மனதை மயக்கும் தென்னை மரங்கள் சூழ்ந்த இயற்கைச் சூழ்நிலை, அற்புதமான கடற்கரைகள், ஆகியவற்றைக் கொண்ட கோவளம் அனைவரது பட்ஜெட்டிற்கும் ஏற்ற ஒரு சுற்றுலா பயண இடமாகும்.

கேரளத்தில் அரபிக் கடலில் அமைந்துள்ள இந்த கடற்கரை பகுதி வெளி நாட்டோர் விரும்பி வரும் இடமாகும்.

கோவளம் என்றாலேயே மலையாள மொழியில் தென்னந்தோப்பு பகுதி என்றே பொருள்.

 இது திருவனந்தபுரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல டாக்ஸி, கார் வசதிகள் உண்டு.

.கலங்கரை விளக்கக் கடற்கரை, ஹவா கடற்கரை, சமுத்திரக் கடற்கரை ஆகிய மூன்று அடுத்தடுத்த பிறை போன்ற கடற்கரைகளை இது கொண்டுள்ளது

 டைவிங் உள்ளிட்ட நீர் விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அருமையான இடமாகும்.

 இங்குள்ள ஏராளமான பீச் ரிஸார்ட்களில் ஏதேனும் ஒன்றில் தங்கி இருந்தால் நிச்சயமாக சூரியோதயம் மற்றும் அஸ்தமனத்தில் மிளிரும் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

கோவளத்தின் தெற்குப் பகுதியில் உள்ள லைட் ஹவுஸ் பீச் அனைவரும் செல்ல விரும்பும் பிரசித்தமான ஒரு கடற்கரையாகும். 118 அடி உயரமுள்ள லைட் ஹவுஸ் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. 140 படிகள் ஏறி பார்வையாளர்கள் பார்க்கும் இடத்தை அடைந்தால் அங்கிருந்து ரம்யமான காட்சியைப் பார்க்கலாம்.

 இங்குள்ள மணல் விசேஷ தாதுக்களில் கலவையினால் உண்டான ஒரு விதமான கருப்பு நிற மணலாகும்,

 கோவள கடற்கரைக்குப் போட்டி போடும் விதத்தில் விழிஞத்துக்கு அருகே அற்புதமான காட்சிகளோடு இருப்பது பூவார் கடற்கரையாகும்,.

இங்கு நெய்யாறு அரபிக் கடலில் கலக்கும் காட்சி கண்ணைக் கவரும் ஒன்று.

 ஆயுர்வேதத்திற்குப் பெயர் பெற்ற இடமான திருவனந்தபுரத்தில் சௌவாரா கடற்கரையில் மசாஜ் உள்ளிட்டவற்றைச் செய்து கொள்வதோடு பல வியாதிகளைப் போக்கும் சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ளலாம். ஆயுர்வேத மையங்கள் பல அமைந்துள்ள பகுதி இது.

 கடற்கரையில் காற்று வாங்கிய பின் நிம்மதியாக அருகிலுள்ள திருவனந்தபுரத்தில்  உள்ள பார்க்க வேண்டிய பல இடங்களுக்கும் செல்லலாம்.

 பத்மநாபஸ்வாமி ஆலயம்

 விஷ்ணு எழுந்தருளியுள்ள பத்மநாபஸ்வாமி ஆலயம் வழிபாட்டுக்குரிய இடமாக அமைகிறது.  

108 வைணவ திவ்ய தலங்களுள் இதுவும் ஒன்று. இங்குள்ள பத்மநாபசுவாமியின் மூல விக்கிரகம் 12008 சாளக்கிராமங்களால் ஆனதாக குறிப்பிடப்படுகிறது. இவை நேபாளத்தில் உள்ள கந்தகி நதியிலிருந்து கொண்டு வரப்பட்டவையாகும்.

கர்பக்ருஹத்தில் உள்ள ஒரு கல் மேடை மேல் அமைந்துள்ள மூல விக்ரஹம் 18 அடி நீளத்திற்கு உள்ளது.

மூன்று வெவ்வேறு வாயில்களிலிருந்து இதை தரிசிக்கலாம். முதல் வாயிலில் தலையையும் மார்பையும் தரிசிக்கலாம். இரண்டாவது வாயிலில் கைகளும் மூன்றாம் வாயிலில் பாதங்களும் தரிசிக்கலாம். இங்குள்ள சிற்ப வேலைப்பாடுகளும் ஓவியங்களும் மனதைக் கவர்பவை.

இந்தக் கோவிலில் ஆறு பாதாள அறைகள் உள்ளன. சமீப காலத்தில் இவற்றைத் திறந்து பார்த்த போது ஏராளமான தங்க நகைகள், வைர வைடூரியங்கள் உள்ள பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் என மதிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் அதிக பணமுள்ள கோவிலில் இதுவும் ஒன்று என்பதை இந்த பாதாள அறைகள் உறுதிப்படுத்துகின்றன.

 மிருகக்காட்சி சாலை

திருவனந்தபுரத்தில் உள்ள மிருகக்காட்சிசாலை மிகவும் பழமையான ஒன்றாகும். இங்கு விலங்குகள் கூண்டில் அடைக்கப்படாமல் இருப்பதால் இவற்றைப் பார்ப்பது இயற்கைச் சூழ்நிலையில் இவற்றைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும்.

 நேபியர் மியூஸியம்

பத்தொன்பதாம் நூற்றாண்டு அருங்காட்சியகமான இதில் வெங்கலச் சிலைகள், அணிகலன்கள் உள்ளிட்டவற்றைக் கண்டு மகிழலாம். தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ளது இது.

 சித்ரா ஆர்ட் காலரி

நேப்பியர் மியூசியத்தை ஒட்டி அமைந்துள்ள சித்ரா ஆர்ட் காலரி பாரம்பரியமான கலைப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் கலையகமாகும்.

ஆகப் பெரும் ஓவியரான ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுள்ளன. ராஜபுதன பாணி, பாலினீசிய பாணி, தஞ்சாவூர் பாணி உள்ளிட்ட பல வகை ஓவியங்களை இங்கு பார்த்து பரவசம் அடையலாம்.

 கனகக்குன்னு அரண்மனை:

இது திருவனந்தபுரத்தின் மையத்தில் உள்ள நேப்பியர் அருங்காட்சியகம் அருகே உள்ள அருங்காட்சியகமாகும்.

இது பல கலை நிகழ்ச்சிகள் அரங்கேறும் இடமாகும். பாரம்பரிய கலை விழா நடக்கும் போது சுற்றுலாப் பயணிகள் திரளாக வந்து இதில் கலந்ஹது கொள்கின்றனர்.

இதைக் கட்டியவர் ஶ்ரீ மூலம் திருநாள் ஆவார்.

 குதிரை மாளிகை அரண்மனை

இது திருவிதாங்கூர் அரசுக்குச் சொந்தமான ஒரு அரண்மனையாகும்

 .பத்மநாப சுவாமி கோவிலுக்கு அருகில் உள்ளது இது.  இந்த மாளிகையில் கூரைப் பகுதிக்குக் கீழே 22 குதிரைச் சிற்பங்கள் உள்ளதால் இது குதிரை மாளிகை என்று அழைக்கப்படுகிறது.

 எண்பது அறைகள் கொண்ட இந்த மாளிகையில் இருபது அறைகள் அருங்காட்சியகத்தைக் கொண்டுள்ளது. திருவிதாங்கூர் அரசுக்குச் சொந்தமான படைக்கலங்கள், சிம்மாசனங்கள், ஓவியங்கள் உள்ளவற்றை இங்கு காணலாம. கேரள வரலாற்றை நன்கு அறிந்து கொள்ளலாம். இங்குள்ள மாடத்திலிருந்து பத்மநாப சுவாமி கோவிலைப் பார்த்து மகிழலாம்.

 பிரதான சாலையான மகாத்மா காந்தி சாலை ஷாப்பிங் செய்ய உகந்த இடமாகும்.

 பசுமை நகரம் என்று மகாத்மா காந்தியால் புகழப்பட்ட திருவனந்தபுரத்தில் பார்ப்பதற்கு இன்னும் நிறைய இடங்கள் உள்ளன.

வேலி லகூன், கரமண நதி, வெள்ளயானி ஏரி, கவுடியார் அரண்மனை உள்ளிட்ட இடங்களை நமக்குள்ள நேரத்தைப் பொறுத்து திட்டமிட்டுப் பார்க்கலாம்.

 கேரளத்தின் இந்தப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்தால் ஒருவர் மனதில் தோன்றும் எண்ணம்: “சும்மாவா சொன்னார்கள் இதை கடவுளின் சொந்த நாடு” என்று!

***

38Pictures of 2500 Indian Stamps!- Part 38 (Post No.14,514)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,514

Date uploaded in London – –14 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 38

Stamps posted today include 1991 STAMPS

Ariyakkudi Ramanuja Iyengar, Babu Jagjivan Rama, Jain Muni, Orchids of India, Six orchids, Sea Cow, River Dolphin, Sriram Sharma Acharya, K Shankar Pillai Cartoons, Rajiv Gandhi, Gopinath Bardoli, Sri Prakash, Greetings stamps, Mahadevi Verma, Jaishankar Prasad, Parliamentary conference, Seventh Triennale, Jagannath Sunkerset, Beware of Drugs, Remote Sensing Satellite, World Peace, Gandhi Re.1

–subham—

Tags– Pictures of 2500 Indian Stamps, Part 38, year 1991 , Ariyakkudi Ramanuja Iyengar, Babu Jagjivan Rama, Jain Muni, Orchids of India, Six orchids, Sea Cow, River Dolphin, Sriram Sharma Acharya, K Shankar Pillai Cartoons, Rajiv Gandhi, Gopinath Bardoli, Sri Prakash, Greetings stamps, Mahadevi Verma, Jaishankar Prasad, Parliamentary conference, Seventh Triennale, Jagannath Sunkerset, Beware of Drugs, Remote Sensing Satellite, World Peace, Gandhi Re.1

பரஞ்சோதி முனிவரின் சொற்சிலம்பம்-2 (Post No.14,513)

Written by London Swaminathan

Post No. 14,513

Date uploaded in London –  14 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பரஞ்சோதி முனிவரின் சொற்சிலம்பம்-2

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-2

ஆறு என்ற சொல்லினை வைத்து விளையாடுகிறார்

அறு கால் பீடத்து உயர் மால் ஆழி கடைந்த அமுதை                                       அரங்கேற்று மா போல்

அறுகால் பேடு இசைபாடும் கூடல் மான்மியத்தை                                               அரும் தமிழால் பாடி

அறுகால் பீடு உயர் முடியார் சொக்கேசர் சந்நிதியில்                                                  அமரர் சூழும்

அறுகால் பீடத்து இருந்து பரஞ்சோதி முனிவர் அரங்கு                                                ஏற்றி னானே.- திருவிளையாடல் புராணம் 

பொருள்

ஆதிசேஷனாகிய சயனத்தில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலானவர் திருப்பாற்கடலைக் கடைந்து அதிலுள்ள அமிர்தத்தை அரங்கேற்றிய முறைமை போல் , பெண் வண்டுகள் இசை பாடும்படி யான சோலைகளையுடைய திருவாலவாயின் மான்மியத்தை அரிதாகிய தமிழினாற்பாடி , அருகினாற் பெருமையோங்கிய திருமுடியுடையராகிய சொக்கநாதசுவாமி சந்நிதியில் தேவர்கள் சூழ்ந்திருக்கும் அறுகால்  பீடத்திலிருந்து பரஞ்சோதி முனிவர் அரங்கேற்றினார் .

(இந்த உரை ந மு வேங்கடசாமி நாட்டாரால் வழங்கப்படவில்லை ஏன் என்று தெரியவில்லை )

இதை ஆறுகால் உடைய தேனீ அருகம் புல்,  மீனாட்சி கோவிலில் உள்ள ஆறுகால் மண்டபம் என்ற பொருளில் பரஞ்சோதி முனிவர் பயன்படுத்தியுள்ளார்

*****

பூகோள உருவகம்

அடுத்தபடியாக புவியியலைப் பயன்படுத்தி ஒரு செய்தி அளிக்கிறார் ;   இதன் மூலம் அக்காலத்தில் அட்லாஸ் ATLAS என்னும் வரைபடம் இருந்ததை அறிகிறோம். ஏனெனில் பின்னால் வரும் ஒரு செய்யுளிலும் இத்தகைய பூகோள உருவகம் வருகிறது 

மாய வன்வடி வாயது வைய மாலுந்திச்

சேய பங்கய மாயது தென்னனா டலர்மேற்

போய மென்பொகுட் டாயது பொதியமப் பொகுட்டின்

மேய நான்முக னகத்தியன் முத்தமிழ் வேதம்.

பொருள்

புவியானது திருமாலின் வடிவம் போன்றது;  (அப்புவியின்

ஒருகூறாகிய) பாண்டியன் நாடானது, அத்திருமாலின் சிவந்த உந்தித் தாமரை போன்றது; (அந்நாட்டின்) பொதியின் மலையானது. அத்தாமரை மலர்மேல் நீண்ட  மெல்லிய கொட்டை போன்றது; (அம்மலையின்கண்) அகத்திய முனிவன்,  அக்கொட்டையிலிருக்கும் நான்முகன் (போல்வான்); (அம் முனிவன் போற்றி வளர்த்த) மூன்று பிரிவினதாகிய தமிழானது, (அந்நான்முகன் அருளிய) வேதம் (போன்றது)

அகத்தியன் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கத்து வீற்றிருந்து தமிழறிவுறுத்தியும், தொல்காப்பியன் முதலிய பன்னிருவர்க்குத் தமிழறிவுறுத்தியும், அகத்தியமென்னும் முத் தமிழிலக்கணத்தை அருளிச்செய்தும் பல்லாற்றானும் தமிழை வளம்படுத்திச் செந்தமிழ்க் குரவனாகத் திகழந்தமையின், தமிழை இவன் வெளியிட்டானாக உபசரித்துக் கூறுவர். அகத்தியற்கு முன்னும் தமிழ் உயரிய நிலையிலிருந்ததென்பதே ஆராய்ச்சியாற் பெறப்படும் உண்மை.

*****

சிவன்தான் தமிழையும் சம்ஸக்ருதத்தையும் உண்டாக்கினான் என்று பரஞ்சோதி முனிவர்சிவ ஞான முனிவர்பாரதியார் முதலியோர் பாடியிருப்பதை முதல் கட்டுரையில் கண்டோம்.

****

இன்னும் ஒரு உருவகம்

நாவலர்பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்

உரை

  திருநகரச் சிறப்பு

மங்க லம்புனை பாண்டிநா டாகிய மகட்குச்

சங்க லம்புகை தோளிணை தடமுலை யாதி

அங்க மாம்புறந் தழுவிய நகரெலா மனைய

நங்கை மாமுக மாகிய நகர்வளம் பகர்வாம்.

     (இ – ள்.) மங்கலம்புனை – பல நலன்களையும் பூண்ட,

பாண்டி நாடு ஆகிய மகட்கு – பாண்டிநாடு என்னும் மங்கைக்கு,

புறம் தழுவிய நகர் எலாம் – (அதன்) புறத்தே சூழ்ந்த நகரங்கள்

அனைத்தும்சங்கு அலம்பு கை – வளை ஒலிக்குங் கைகள்தோள்

இணை – இரண்டு தோள்கள்தடம்முலை – பெரிய கொங்கைகள்,

ஆதி அங்கம் ஆம் – முதலிய உறுப்புக்கள் ஆகும்அனைய

நங்கை – அங்ஙனமாய நங்கையின்மாமுகம் ஆகிய நகர்வளம் –

பெருமை பொருந்திய முகமாகிய மதுரை நகரின் சிறப்பினை,

பகர்வாம் – கூறுவாம் எ – று.

கொங்கை யேபரங் குன்றமுங் கொடுங்குன்றுங் கொப்பூழ்

அங்க மேதிருச் சுழியலவ் வயிறுகுற் றாலஞ்

செங்கை யேடக மேனியே பூவணந் திரடோள்

பொங்கர் வேய்வனந் திருமுக மதுரையாம் புரமே.

     (இ – ள்.) (அந்நங்கைக்கு) கொங்கை – கொங்கைகள்பரங்

குன்றமும் கொடுங்குன்றும் – திருப்பரங்குன்றமும் திருக்கொடுங்

குன்றமுமாகும்கொப்பூழ் அங்கம் – உந்தியாகிய உறுப்புதிருச்சுழி

யல் – திருச்சுழியலென்னுந் தலமாகும்அவ்வயிறு – ழேகிய வயிறு,

குற்றாலம் – திருக்குற்றாலமென்னுந் தலமாகும்செங்கை –

சிவந்தகைஏடகம் – திருவேடகமென்னுந் தலமாகும்மேனி –

உடல்பூவணம் – திருப்பூவண மென்னுந் தலமாகும்திரள்தோள் –

திண்ட தோள்கள்பொங்கர் வேய்வனம் – சோலைகள் சூழ்ந்த

வேணுவனமென்னுந் தலமாகும்திருமுகம் – அழகிய முகம்மதுரை

புரம்ஆம் – மதுரை யாகிய நகரம் ஆகும் எ – று.

     அந்நங்கைக்கு என்பது வருவிக்க. கொடுங்குன்று –

பிரான்மலை. வேய்வனம் – திருநெல்வேலி. 

–subham—-

Tags- பரஞ்சோதி முனிவர், சொற்சிலம்பம், உருவகம், பூகோளம், புவியியல், அட்லஸ், திருவிளையாடல் புராணம்ஆராய்ச்சிக் கட்டுரை-2

வித்தியாசமான நடிகை! மரிலு ஹென்னர்! ((Post No.14,512)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,512

Date uploaded in London – –14 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

2-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

வித்தியாசமான நடிகை!

மரிலு ஹென்னர்! (MARILU  HENNER)

உலகில் நூறு பேரில் ஒருத்தியம்மா நீ! 

ச. நாகராஜன் 

உலகில் ஆயிரக்கணக்கில் நடிகைகள் உள்ளனர்; அவர்களின் நடிப்புத்திறன் பற்றி வியந்து பாராட்டுவோரும் ஏராளம்.

ஆனால் இந்த நடிகைகளில் ஒரே ஒரு நடிகை மட்டும் அவரது நினைவாற்றல் திறனுக்காக இன்னும் அதிகமாகக் கொண்டாடப்படுகிறார்

அவர் தான் மரிலு ஹென்னர்! உலகில் அதிக நினைவாற்றல் திறன் கொண்ட நூறு பேரில் ஹென்னரும் ஒருவர் என்றால் ஆச்சரியம் தானே!

1980, ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி என்று சொல்லுங்கள். உடனே ஹென்னர் அது ஒரு புதன்கிழமை. என்று ஆரம்பித்து அன்று தான் எந்த இடத்தில் இருந்து யாரைப் பார்த்து என்னென்ன செயல்களைச் செய்தேன் என்று விவரிப்பார்.

இப்படி தன் வாழ்வின் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு கணத்தையும் அதிசயிக்கத் தக்க விதத்தில் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கும் இவரை ஹெச் எஸ் ஏ எம் ஸ்பெஷலிஸ்ட் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஹெச் எஸ் ஏ எம் என்றால் HIghly Superior Autobiographical Memory – HSAM –மிக உயரிய சுயசரிதை நினைவாற்றல் என்று பொருள்.

இவருக்கு ஐந்து வயதாகும் போதே இவருடன் பழகியவர்கள் இவரது இந்த அதிசய நினைவாற்றலைக் கண்டு வியந்து பிரமித்தனர்.

இவரை விஞ்ஞானிகள் ‘மூளையின் நினைவாற்றல் திறன்’ ஆய்வுக்காக அழைத்தனர். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்ட இவரிடம் ஐநூறு கேள்விகள் கேட்கப்பட்டன. அத்தனைக்கும் பளீர் பளீரென்று பதில் அளித்தார் இவர். எம் ஆர் ஐ ஸ்கேன் உள்ளிட்ட அனைத்தும் எடுக்கப்பட்டன. ஆய்வாளர்களுக்கு வியப்பு தான் மிஞ்சியது!

இவர் தனது அனுபவங்களை டோடல் மெமரி மேக் ஓவர் (2012ல் வெளியானது) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அமெரிக்காவில் சிகாகோவில் 1952ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி ஹென்னர் பிறந்தார்.

1977lல் ஒரு காமடி படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் வெகு விரைவில் பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். இவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட புகழ் பெற்ற திரைப்படங்கள் மற்றும் டிவி ஷோக்களின் பட்டியலைப் பார்த்தாலேயே இவர் எப்படிப்பட்ட வித்தியாசமானவர் என்பது புரியும்.

சிறந்த நடனைக் கலைஞர். ஆரோக்கிய நலத்திற்காக இவர் விசேஷ தயாரிப்புகளைத் தயாரிப்பவர். ஸ்டேஜில் ஏறினாலே போதும், அனைவரையும் சிரிக்க வைப்பவர். பல பத்திரிகைகளிலும் கட்டுரைகளை எழுதுபவர்; பத்திரிகைகளின் அட்டைப்படத்தை அலங்கரிப்பவர்! எல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஒரு சிறந்த உணர்வூக்கம் தரும் பேச்சாளர் (மோடிவேஷனல் ஸ்பீக்கர்)! இப்படி பல சிறப்புகளைக் கொண்டவர் இவர்!

இவரது புகழ் பெற்ற பொன்மொழிகளுள் இரண்டை இங்கு காணலாம்:

உங்களுக்குத் தெரியுமா, பல பிரபலங்கள் நான் டாக்ஸியில் அமர்ந்திருக்கும்போதே நான் யார் என்பதைத் தெரிந்து கொள்கிறார்களே, அப்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே, அது தனி தான்!

எந்தவிதமான சூழ்நிலைகள் உங்களுக்கு உகந்தது என்பதை நீங்கள் நிர்ணயித்துக் கொள்வது மிக மிக முக்கியம்; பிறகு உங்களின் தேவைக்குத் தக அந்த சூழ்நிலையை நீங்கள் கட்டமைக்க வேண்டும்!

ஹென்னர், –  உலகில் நூறு பேரில் ஒருத்தியம்மா, நீ!

***

Translating Poetry is Difficult, Why? (Post No.14,511)

Written by London Swaminathan

Post No. 14,511

Date uploaded in London –  13 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 A B Keith wrote in his preface to his History of Sanskrit Literature, “The Kavya literature includes some of the great poetry of the world, but it can never expect to attain wide popularity in the West, for it is essentially untranslatable”.

1

John Brough in his book Poems from the Sanskrit gives some examples. He says to take an extreme illustration,

Paanau padmadiyaa madhuukaumukulabhraantyaa tathaa kandayor

Niilendiivarasankayaa  nayanayor bandhuu kabudhyaadhare ….

Not great poetry, admittedly; but still poetry, and quite gracefully expressed. Yet, let us translate with the most precise identification of the flowers mentioned:

“(The bees think that) your hands are Nelumbo nucifera,

That your cheeks are buds of Bassia latifolia,

That your eyes are blossoms of Nymphaea stellata,

That your lips are Pentapetus phoenica

(or Terminalia tomentosa )

And how can we consider the English reader  that there is any poetry at all?”

John Brough continues , “Now Sanskrit verses are shapely. They have a very definite and strict metrical form, and often have extremely complex  and subtle sound patterns of assonance and alliteration. The qualities of rhythm, of shapeliness, of the music of the words, cannot be directly transferred to another language and there is no perfect solution.

2

John Brough gives another example .

IN HAMBURG LEBTEN ZWEI AMEISEN

DIE WOLLTEN  NACH AUSTRALIEN REISEN

BEI ALTONA AUF DER CHAUSSEE

DA TATEN IHNEN DIE BEINE WEH

UND DA VERZICTETEN SIE WEISE

DANNAUF DEN LETZTEN TEIL DER REISE (German)

MEANING

In Hamburg there lived two ants who made up their minds to travel to Australia. Then, on the pavement at Altona  (just outside Hamburg) their feet hurt; and thereupon they sensibly  gave up the last part of the journey.

But the English reader may perhaps get more of the bite of the original epigram from

Two ants who lived in London planned

To walk to Melbourne overland

, but footsore in Southampton Row

When there were still some miles to go,

They thought it wise not to extend

The journey to the bitter end. (English)

3

Only on the rarest of occasions , a lucky chance of language may make it possible to reflect  a pun in the receiving language; and usually verbal play, if it is essential to the verse,  makes the verse in question untranslatable.  To take a rather trivial example,

Mukhena candrakaantena mahaaniilaih siroruhaih

Paanibhyaam padmaraagaabhyaam raje ratnamayiva saa

Bhartruhari ,131.

“Since her face has the beauty of the moon, and her hair was jet black, and her hands were the colour of lotuses , she seemed to be all made of jewels.

Nothing can be done to make this into an acceptable verse in another language, since it does not even make sense  until the reader knows that candrakaanta, in addition to meaning ‘having the beauty of the moon’ , is also the name of a precious stone; that mahaaniila means very black and also sapphire; and the padmaraaga means lotus coloured and also ruby.”

POEMS FROM THE SANSKRIT; TRANSLATED WITH INTRODUCTION BY JOHN BROUGH; PENGUIN BOOKS

My comments

I have the English translation of Bharati’s poems. When I read it, I can’t see the beauty of Tamil language or the force with which it is done. It is true with all the language translations. Tirukkural is also translated in verses and in prose. But the verses, despite alliteration, do not bring out the meaning in depth. Only in the prose we get the poet’s original meaning.

–subham—

Tags – Poetry, Untranslatable, Bhartruhari , John Brough, A B Keith, gems, jewels,

Pictures of 2500 Indian Stamps!- Part 37 (Post No.14,510)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,510

Date uploaded in London – –13 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 37

Stamps posted today include 1990 STAMPS

M G RAMACHANDRAN, CHARAN SINGH, OIL FIELD, HO CHI MINH, PENNY POST, ASIAN DEVELOPMENT BANK, CONCH,  BOMBAY SAPPERS, TRIANGLE STAMP, SUKHA SHRAMDAN, CHANDIGARH, CUTTACK, DANCING WOMAN, INDO SOVIET JOINT ISSUE, BIKANER, HYDERABAD,  GREETINGS,  BORDER  GUARD ON CAMEL,  CHILDREN’S ART, GORKHA RIFLES,  A K GOPALAN, SURYAMALL MISHRAN, KANAKA DAS, TERCENTENARY, MINAR, DNYANESHWARI, SHIPPING ON THE GANGES, MADAN MOHAN MALAVIA, GANDHI FULL SHEET, 10P, 15 P STAMPS, FARMER 15P , TYAGARAJA,

 –subham—

Tags– Pictures of 2500 Indian Stamps, Part 37, year 1990 , M G RAMACHANDRAN, CHARAN SINGH, OIL FIELD, HO CHI MINH, PENNY POST, ASIAN DEVELOPMENT BANK, CONCH,  BOMBAY SAPPERS, TRIANGLE STAMP, SUKHA SHRAMDAN, CHANDIGARH, CUTTACK, DANCING WOMAN, INDO SOVIET JOINT ISSUE, BIKANER, HYDERABAD,  GREETINGS,  BORDER  GUARD ON CAMEL,  CHILDREN’S ART, GORKHA RIFLES,  A K GOPALAN, SURYAMALL MISHRAN, KANAKA DAS, TERCENTENARY, MINAR, DNYANESHWARI, SHIPPING ON THE GANGES, MADAN MOHAN MALAVIA, GANDHI FULL SHEET, 10P, 15 P STAMPS, FARMER 15P , TYAGARAJA,

பாரதியார் சொன்ன ஐந்து ஆடுகள் கதை;  குரு கோவிந்தர் (Post No.14,509)

Written by London Swaminathan

Post No. 14,509

Date uploaded in London –  13 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(11-5-2025 எழுதிய குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-9; குரு கோவிந்த சிம்மன் கதை (Post No.14,499) கட்டுரையின் தொடர்ச்சி)

மொகலாயர் காலத்தில் முஸ்லீம்கள் செயத கொடுமைகளை பாரதியார் சத்ரபதி சிவாஜி கவிதையில் கொட்டி முழக்கினார். ஆனால் அதை விட நீண்ட கவிதை  சீக்கிய மதத்தின் கடைசி குரு குருகோவிந்தர் மீது அவர் இயற்றிய கவிதை ஆகும்; மொத்த வரிகள் 204.

இந்தப்பாடலில் கடைசி வரிதான் முக்கியம்:

அவனடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள்

குருகோ விந்தக் கோமகன் நாட்டிய

கொடிஉயர்ந் தசையக் குவலயம் புகழ்ந்தது

ஆடியே மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி-204

முஸ்லீம் மன்னர்களில் மிகவும் கொடியவன் அவுரங்கசீப் ; சீக்கிய மத குருமார்களையும் அவர்களுடைய குடும்பத்தையும் உயிருடன் கொன்றவன்; சீக்கிய சிறுவர்கள் மீது உயிருடன் இருக்கும் போதே கல்லறை எழுப்பியவன். அவனுடைய ஆட்சிக்கு இருவர் சாவு மணி அடித்தனர் ஒருவர் சத்ரபதி சிவாஜி மற்றும் ஒருவர் குருகோவிந்தர்.

ஆகவே நீண்ட கவிதையின் நோக்கத்தைக் கடைசி வரியில் சொல்லிவிட்டார்

வெள்ளைக்காரர்களும் இபோதைய அரசியல்வாதிகளும் புகழும் கொடியவனுக்கு சாவு மணி அடித்தவர் குருகோவிந்தர்.

இதில் அவர் சுவையான கதை ஒன்றை பாடல் வடிவில் சொல்கிறார்.

குருகோவிந்த சிங் கதை

குருகோவிந்தர் , சீக்கிய  மதத்தில் முக்கிய கொள்கைகளை

அறிவித்தார்; இனி தனக்குப்பின்னர் குரு இல்லை ; சீக்கிய மத நூலான ஆதிக்கிரந்தமே குரு; மேலும் சீக்கியர்களுக்கு ஐந்து புனிதத் சின்னங்கள் உண்டு. (முந்தைய கட்டுரையில் கொடுத்துள்ளேன்).

கால்ஸா என்ற அமைப்பையும் நிறுவி சீக்கியர்களை பாதுகாத்தார். அந்த கால்ஸா அமைப்பு தோன்றிய கதைதான் ஐந்து ஆடுகள் கதை. இதை பாரதியார் கவிதை வடிவில் நமக்குத் தந்துள்ளார் ; இதோ அந்தக் கதை

கால்ஸா அமைப்பு தோன்றிய கதை

வைசாகி என்பது சீக்கிய புத்தாண்டு நாள்;

அன்றைய தினம் அவர் சீக்கியர் கூட்டத்தைக் கூட்டினார். பெரும் கூட்டமும் கூடியது தனக்கு மதத்தைக் காப்பாற்ற உயிர்ப்பு பலி  தேவைப்படுகிறது என்று அறிவித்து யாராவது தயாரா என்று கேட்டார் ; காளிக்குப் பலியிட வீர்கள் தேவை என்று அவர் அறிவித்தார் ஒருவர் முன் வந்தவுடன் கூடாரத்துக்குள் அழைத்துச் சென்றுவிட்டு அவர் மட்டும் ரத்தம் சொட்டும் வாளுடன் திரும்பி வந்து இன்னும் ஒரு பலியைக் காளி கேட்கிறாள் என்றார் இன்னும் ஒருவர் முன் வந்தார்; இவ்வாறு ஐந்து பேர் முன்வந்தவுடன்   அவர்களை கூடாரத்திலிருந்து அழைத்து வந்து அவர்களை பஞ்ச பியாரே- அன்பிற்குரிய ஐவர் என்று அறிவித்தார் . அதுதான் கால்ஸா அமைப்பு.

அவர் மட்டும் ஐந்து முறை வெளியே வந்த போது அவரது கத்தியில் சூடான ரத்தம் வழிந்தோடியது ; கூட்டம்  முழுதும் ஒரே அதிர்ச்சி; ஆச்சர்யம் !திகைத்துப்போய் நின்ற கூட்டத்துக்கு முன்னர் கூடாரத்திலிருந்து ஐந்து வீரர்கள் சீக்கியர்களின் புனித உடையில் தோன்றினர் ; எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர். ஏனெனில் குருகோவிந்தர் அழைத்துச் சென்ற ஐந்துபேரும் பலியிடப்படாமல் திரும்பி  வந்து இருந்தனர் அப்போது குரு கோவிந்தர் அறிவித்தார் தான் வெட்டிக்கொன்றது ஐந்து ஆடுகள் தான் என்றும் உயிர்த்தியாகம் செய்ய முன் வருவோரே மக்களைக் காப்பாற்ற முடியும் என்றும் அறிவித்தார் அதிலிருந்து சீக்கியர்கள் தங்களை சிங்கம் (சிம்ம- சிங்க- சிங்) என்று அழைத்துக்கொண்டனர். அவர்களுக்கு ஞான ஸ்நானம் வழங்க புதிய முறையையும் குருகோவிந்தர் உண்டாக்கினார் ; அமிர்தம் என்று சொல்லப்படும் இனிப்புக் கரைசலை செய்து அதில் இருபுறமும் கூர்மையுள்ள  வாளைத் தோய்த்து அந்த அமிர்தக கரைசலை சீக்கியர்கள் அருந்த வேண்டும் என்றார் . இவர் எழுப்பிய வீரப்படை காரணமாக மொகலாய ஆட்சி முடிவுக்கு வந்தது . 700 ஆண்டு முஸ்லீம் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் வெள்ளைக்காரன் உள்ளே நுழைந்து பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் 300 ஆண்டு ஆண்டான்; இதையும் பாரதியார் வேறு ஒரு பாடலில் ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர்  ஆட்சி என்று சாடுகிறார் . முஸ்லீம்களையும் வெள்ளையக்கார கிறிஸ்தவர்களையும் பாரதியார் புரிந்து கொண்டது போல வேறு எவரும் புரிந்துகொள்ளவில்லை; பாரதி ஒரு தீர்க்கதரிசி மட்டுமில்லை. வரலாறு எழுதிய வரலாற்று ஆசிரியன் என்றாலும் மிகையாகாது..

****

பாரதியார் பாடல்- குருகோவிந்தர் 

{[குறிப்பு]: ‘குரு கோவிந்தசிம்ஹ விஜயம்’ — என்பது 1941ஆம் வருடப்

பதிப்பின் தலைப்பு ஆகும்.}

YEAR 1699

ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு

விக்ரம னாண்டு, வீரருக் கமுதாம்

ஆனந்த புரத்தி லார்ந்தினி திருந்தனன்

பாஞ்சா லத்துப் படர்தரு சிங்கக்

குலத்தினை வகுத்த குருமணி யாவான் 5

ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன்

வானம்வீழ்ந் துதிரினும் வாள்கொடு தடுக்கும்

வீரர் நாயகன், மேதினி காத்த

குருகோ விந்த சிங்கமாங் கோமகன்

அவன்திருக் கட்டளை அறிந்துபல் திசையினும் 10

பாஞ்சா லத்துறு படைவலோர் நாடொறும்

நாடொறும் வந்து நண்ணுகின் றாரால்.

ஆனந்த புரத்தில் ஆயிர மாயிரம்

வீரர்கள் குருவின் விருப்பினைத் தெரிவான்

15

கூடிவந் தெய்தினர் கொழும்பொழி லினங்களும்

புன்னகை புனைந்த புதுமலர்த் தொகுதியும்

பைந்நிறம் விரிந்த பழனக் காட்சியும்

“நல்வர வாகுக நம்மனோர் வரவு” என்று

ஆசிகள் கூறி ஆர்ப்பன போன்ற

புண்ணிய நாளிற் புகழ்வளர் குரவன் 20

திருமொழி கேட்கச் செறிந்தனர் சீடர்கள்.

“யாதவன் கூறும்? என்னெமக் கருளும்?

எப்பணி விதித்தெம தேழேழ் பிறவியும்

இன்புடைத் தாக்கும்?” எனப்பல கருதி,

மாலோன் திருமுனர் வந்துகண் ணுயர்த்தே

25

ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும்

தேவரை யொத்தனர் திடுக்கெனப் பீடத்து

ஏறிநின் றதுகாண்! இளமையும் திறலும்

ஆதிபத் தகைமையும் அமைந்ததோ உருவம்

விழிகளில் தெய்வப் பெருங்கனல் வீசிடத் 30

திருமுடி சூழ்ந்தோர் தேசுகாத் திருப்ப

தூக்கிய கரத்தில் சுடருமிழ்ந் திருந்தது

கூறநா நடுங்குமோர் கொற்றக் கூர்வாள்

எண்ணிலா வீரர் இவ்வுரு நோக்கி

வானின் றிறங்கிய மாந்திரிகன் முனர்ச் 35

சிங்கக் கூட்டம் திகைத்திருந் தாங்க்

மோனமுற் றடங்கி முடிவணங் கினரால்

வாள்நுனி காட்டி மாட்சியார் குரவன்

திருவுள நோக்கஞ் செப்புவன். தெய்வச்

சேயித ழசைவுறச் சினந்தோர் எரிமலைக் 40

குமுறுதல் போல்வெளிக் கொண்டன திருமொழி:

வாளிதை மனிதர் மார்பிடைக் குளிப்ப

விரும்புகின் றேன்யான் தீர்கிலா விடாய்கொள்

தருமத் தெய்வந் தான்பல குருதிப்

பலிவிழை கின்றதால் பக்தர்காள்! நும்மிடை 45

நெஞ்சினைக் கிழித்து நிலமிசை யுதிரம்

வீழ்த்தித் தேவியின் விடாயினைத் தவிர்ப்ப

யார்வரு கின்றீர்!” என்னலும் சீடர்கள்

நடுங்கியோர் கணம்வரை நாவெழா திருந்தனர்.

கம்மென ஓர்சிறு கணங்கழி வுற்றது 50

ஆங்கிருந் தார்பல் லாயிர ருள்ளொரு

வீரன்முன் வந்து விளம்புவன் இஃதே:

குருமணி, நின்னொரு கொற்றவாள் கிழிப்ப

விடாயறாத் தருமம் மேம்படு தெய்வதத்து

இரையென மாய்வன் ஏற்றருள் புரிகவே.” 55

புன்னகை மலர்ந்தது புனிதநல் வதனம்

கோயிலுள் அவனைக் குரவர்கோன் கொடுசெல

மற்றதன் நின்றோர் மடுவின்வந் தாலெனக்

குருதி நீர்பாயக் குழாத்தினர் கண்டனர்.

பார்மின்! சற்குரு பளீரெனக் கோயிலின் 60

வெளிப்போந் தாங்கு மேவினோர் முன்னம்

முதற்பலி முடித்து முகமலர்ந் தோனாய்

மின்னெனப் பாய்ந்து மீண்டு வந்துற்றனன்.

மீண்டுமவ் வுதிரவாள் விண்வழி தூக்கிப்

பின்வரு மொழிகள் பேசுவன் குரவர்கோன்: 65

மானுடர் நெஞ்சிலிவ் வாளினைப் பதிக்கச்

சித்தம்நான் கொண்டேன் தேவிதான் பின்னுமோர்

பலிகேட் கின்றாள் பக்தர்காள்! நும்முளே

இன்னும் இங் கொருவன் இரத்தமே தந்துஇக்

காளியைத் தாகங் கழித்திடத்துணிவோன் 70

எவனுளன்?” எனலும் இன்னுமோர் துணிவுடை

வீரன்முன் நின்று விருப்பினை உணர்த்தினன்.

இவனையுங் கோயிலுள் இனிதழைத் தேகி

இரண்டாம் பலிமுடித் தீண்டினன் குரவன்

குருதியைக் கண்டு குழாத்தினர் நடுங்கினர். 75

இங்ஙன மீண்டுமே இயற்றிப்

பலியோ ரைந்து பரமனங் களித்தனன்.

அறத்தினைத் தமதோர் அறிவினாற் கொண்ட

மட்டிலே மானிடர் மாண்பெற லாகார்

அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி 80

வாட்குத்து ஏற்று மாய்பவர் பெரியோர்,

அவரே மெய்ம்மையோர் முத்தரும் அவரே

தோன்று நூறாயிரம் தொண்டர் தம்முள்ளே

அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே

தண்ணருட் கடலாந் தகவுயர் குரவன் 85

கொடுமைசேர் சோதனை புரிந்திடல் குறித்தனன்

அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர்

ஐவரைக் கண்டபின் அவ்வியல் உடையார்

எண்ணிலர் உளரெனத் துணிந்துஇன்பு எய்தினன்

வெய்யசெங் குருதியின் வீழ்ந்துதா மிறந்து 90

சொர்க்கமுற் றாரெனத் தொண்டர்கொண் டிருக்கும்

ஐந்துநன் மணியெனும் ஐந்துமுத் தரையும்

கோயிலு ளிருந்துபே ரவைமுனர்க் கொணர்ந்தான்!

ஆர்த்தனர் தொண்டர்! அருவியப் பெய்தினர்!

விழிகளைத் துடைத்து மீளவும் நோக்கினர்! 95

ஜயஜய குருமணி ஜயகுரு சிங்கம்

எனப்பல வாழிகள் இசைத்தனர், ஆடினர்

அப்போழ் தின்னருள் அவதரித் தனையான்,

நற்சுடர்ப் பரிதி நகைபுரிந் தாங்கு

குறுநகை புரிந்து குறையறு முத்தர் 100

ஐவர்கள் தம்மையும் அகமுறத் தழுவி

யாசிகள் கூறி அவையினை நோக்கிக்

கடல்முழக் கென்ன முழங்குவன்: — “காணீர்!

காளியும் நமது கனகநன் னாட்டுத்

தேவியும் ஒன்றெனத் தேர்ந்தநல் அன்பர்காள், 105

நடுக்கம்நீரெய்த நான் ஐம் முறையும்

பலியிடச் சென்றது, பாவனை மன்ற

என்கரத் தாற்கொலோ நும்முயிர் எடுப்பன்

ஐம்முறை தானும் அன்பரை மறைத்துநும்

நெஞ்சகச் சோதனை நிகழ்த்தினன் யானே. 110

தாய்மணி நாட்டின் உண்மைத் தனயர்நீர்

என்பது தெளிந்தேன். என்கர வாளால்

அறுத்ததிங் கின்றைந் தாடுகள் காண்பீர்!

சோதனை வழியினுந் துணிவினைக் கண்டேன்

களித்ததென் நெஞ்சம் கழிந்தன கவலைகள்.” 115

குருகோ விந்தன் கொண்டதோர் தருமம்

‘சீடர்தம் மார்க்கம்’ எனப்புகழ் சிறந்தது

இன்றுமம் மார்க்கத் திருப்பவர் தம்பெயர்

காலசா’ என்ப ‘காலசா’ எனுமொழி்

முத்தர்தம் சங்க முறையெனும் பொருளது 120

முத்தர்தம் சபைக்கு மூலர்க ளாகமற்று

ஐவரன் னோர்தமை அருளினன் ஆரியன்.

சமைந்தது ‘காலசா’ எனும்பெயர்ச் சங்கம்

பாரத மென்ற பழம்பெரு நாட்டினர்

ஆவிதேய்ந் தழிந்திலர், ஆண்மையிற் குறைந்திலர் 125

வீரமுஞ் சிரத்தையும் வீந்தில ரென்று

புவியினோர் அறியப் புரிந்தனன் முனிவன்.

அந்நாள் முகுந்தன் அவதரித் தாங்கு ஓர்

தெய்விகத் தலைவன் சீருறத் தோன்றி

மண்மா சகன்ற வான்படு சொற்களால் 130

எழுப்பிடுங் காலை, இறந்துதான் கிடக்கிலள்,

இளமையும் துணிவும் இசைந்துநம் அன்னை

சாதியின் மானந் தாங்கமுற் படுவளென்று

உலகினோ ரறிவிடை யுறுத்தினன் முனிவன்

ஐம்பெரும் பூதத் தகிலமே சமைத்த 135

முன்னவ னொப்ப முனிவனும் ஐந்து

சீடர்கள் மூலமாத் தேசுறு பாரதச்

சாதியை வகுத்தனன் தழைத்தது தருமம்

கொடுங்கோல் பற்றிய புன்கைக் குரிசிலர்

நடுங்குவ ராயினர். நகைத்தனள் சுதந்திரை. 140

ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு

விக்கிர மார்க்க னாண்டினில், வியன்புகழ்க்

குருகோ விந்தன் கொற்றமார் சீடரைக்

கூட்டியே தெய்வக் கொலுவொன் றமைத்தனன்

காண்டற் கரிய காட்சி! கவின்திகழ் 145

அரியா தனத்தில் அமர்ந்தனன் முனிவர்கோ.

சூழ்ந்திருந்தனர் உயிர்த் தொண்டர்தா ஐவரும்

தன்திருக் கரத்தால் ஆடைகள் சார்த்தி

மாலைகள் சூட்டி மதிப்புற இருத்திக்

கண்மணி போன்றார் ஐவர்மேற் கனிந்து 150

குழைவுற வாழ்த்திக் குழாத்தினை நோக்கி

காண்டிரோ! முதலாங் `காலசா,” என்றனன்

நாடுந் தருமமும் நன்கிதிற் காப்பான்

அமைந்ததிச் சங்கம் அறிமின் நீர் என்றான்.

அருகினில் ஓடிய ஆற்றின் நின் றையன் 155

இருப்புச் சிறுகலத் தின்னீர் கொணர்ந்து

வாள்முனை கொண்டு மற்றதைக் கலக்கி

மந்திர மோதினன் மனத்தினை அடக்கிச்

சித்தமே முழுதுஞ் சிவத்திடை யாக்கிச்

சபமுரைத் திட்டான், சயப்பொருந் திருஅக் 160

கொலுமுனர் வந்து குதித்துநின் றிட்டாள்.

ஆற்றுநீர் தனையோ அடித்ததத் திருவாள்

அயர்ந்து போய்நின்ற அரும்புகழ் பாரதச்

சாதியின் திறல்கள் தம்மையே இயக்கி

நல்லுயிர் நல்கினன். நாடெலாம் இயங்கின. 165

தவமுடை ஐவரைத் தன்முனர் நிறுத்தி

மந்திர நீரை மாசறத் தெளித்து

அருள்மய மாகி அவர்விழி தீண்டினன்

பார்மினோ உலகீர்! பரமனங் கரத்தால்

அவர்விழி தீண்டிய அக்கணத் தன்றே 170

நாடனைத் திற்கும் நல்வழி திறந்தது!

சீடர்க ளனைவரும் தீட்சைஇஃ தடைந்தனர்.

ஐயன் சொல்வன், “அன்பர்காள்! நீவிர்

செய்திடப் பெற்ற தீட்சையின் நாமம்

அமிர்தம் என்று அறிமின்! அரும்பேறாம் இது 175

பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார்.

நுமக்கினித் தருமம் நுவன்றிடக் கேண்மின்.

ஒன்றாம் கடவுள். உலகிடைத் தோன்றிய

மானிட ரெல்லாஞ் சோதரர் மானுடர்

சமத்துவ முடையார், சுதந்திரஞ் சார்ந்தவர். 180

சீடர்காள்! குலத்தினும் செயலினும் அனைத்தினும்

இக்கணந் தொட்டுநீர் யாவிரு ஒன்றே.

பிரிவுகள் துடைப்பீர்! பிரிதலே சாதல்.

ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி

வகுப்பவர் வகுத்து மாய்க, நீர் அனைவிரும் 185

தருமம், கடவுள், சத்தியம், சுதந்திரம்

என்பவை போற்ற எழுந்திடும் வீரச்

சாதியொன் றனையே சார்ந்தோ ராவிர்.

அநீதியும், கொடுமையும் அழித்திடுஞ் சாதி;

மழித்திட லறியா வன்முகச் சாதி; 190

இரும்பு முத்திரையும் இறுகிய கச்சையும்

கையினில் வாளும் கழன்றிடாச் சாதி;

சோதர நட்புத் தொடர்ந்திடு சாதி;

அரசன் இல்லாது தெய்வமே யரசா

மானுடர் துணைவரா, மறமே பகையாக்

195

குடியர சியற்றுங் கொள்கையார் சாதி;

அறத்தினை வெறுக்கிலீர் மறத்தினைப் பொறுக்கிலீர் தாய்த்திரு நாட்டைச் சந்ததம் போற்றிப்

புகழொடு வாழ்மின்! புகழொடு வாழ்மின்!”

என்றுரைத் தையன் இன்புற வாழ்த்தினன் 200

அவனடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள்

குருகோ விந்தக் கோமகன் நாட்டிய

கொடிஉயர்ந் தசையக் குவலயம் புகழ்ந்தது

ஆடியே மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி.

—SUBHAM—

TAGS- அரங்கசீப் ஆட்சி, பாரதியார் பாடல், குருகோவிந்தர், குருகோவிந்த சிங் ,ஐந்து ஆடுகள் கதை,

தமிழும் சம்ஸ்க்ருதமும் ஒன்னு! அதை அறியாதவன் வாயில மண்ணு!(Post.14,508)

Written by London Swaminathan

Post No. 14,508

Date uploaded in London –  13 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-1

மூன்று பெரும் புலவர்கள் என்ன சொன்னார்கள் ?

தமிழும் ஸம்ஸ்க்ருதமும் சிவபெருமானிடம் பிறந்தவை ; இரண்டும் சமமானவை .

யார் அந்த மூன்று முனிவர்கள் ?

நமது காலத்தில் வாழ்ந்த சித்தர் , முனிவர் பாரதியார் (1882-1921)  ; அவருக்கு முன் வாழ்ந்த சிவஞான முனிவர் (1753 – 1785); அவர்களுக்கு எல்லாம் முன்னர் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் .

மூவரும் ஸம்ஸ்க்ருதமும் தமிழும் கற்றுத் தேர்ந்தவர்கள் ; அவர்களின் படைப்புகளில் இதைக் காண்கிறோம் .

மூவர் சொன்னதையும் கால வரிசைப்படி காண்போம்.

1

21. தமிழ்த்தாய்; பாரதியார் (1882-1921) பாடல்

தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்

(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)

ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை

மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்,

ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்.

****

2

சிவஞானசுவாமிகள்- காஞ்சிப் புராணத்தில்

   ‘’வடமொழியை பாணிணிக்கு வகுத்து அருளி

தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம்

தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்

கடல் வரைப்பினிதன் பெருமை யாவரே கணித்து அறிவார்’’

சிவஞான முனிவர் (1753 – 1785)

*****

3

திருவிளையாடல் புராணத்தில் பாணினி ,அகத்தியர்

பரஞ்சோதி முனிவர் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்.

விடை உகைத்தவன் பாணினிக்கு இலக்கணம் மேல்                                                      நாள்

வட மொழிக்கு உரைத் தாங்கி அயன் மால் மாமுனிக்கு

திடம் உறுத்தி அம் மொழிக்கு எதிர் அக்கிய தென்                                                    சொல்

மட மகட்கு ஆங்கு என்பது வழுதி நாடு அன்றோ.    56

 திருவிளையாடல் புராணம்

****

நாவலர், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்

உரை

இடபவாகனத்தைச் செலுத்துகின்ற சிவபெருமான், முன்னொரு காலத்திலே, பாணினி முனிவனுக்கு சமஸ்கிருத மொழிக்கு வியாகரண சூத்திரத்தை அருளிச் செய்ததுபோல, பொதியின் மலையிலுள்ள பெருமை பொருந்திய அகத்திய முனிவனுக்கு, தமிழிலக்கணத்தைத் திடம்பெற அறிவுறுத்தி,  தென்மொழியாகிய தமிழ்  நங்கைக்கு, நடனசாலையென உணர்ந்தோரால்

புகழ்ந்து கூறப்படுவது, பாண்டி நாடு அல்லவா

அகத்தியர் சிவபெருமானிடத்தே தமிழ் கேட்டதனை,

உழக்குமறை நாலினு முயர்ந்துலக மோதும்

வழக்கினு மதிக்கவியி னும்மரபி னாடி

நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண்

தழற்புரை சுடர்க்கடவு டந்ததமிழ் தந்தான்”

என்று கம்பருங் கூறியுள்ளார்.

****

கண் நுதல் பெரும் கடவுளும் கழகமோடு அமர்ந்து

பண் உறத் தெரிந்து ஆய்ந்த இப் பசுந் தமிழேனை

மண் இடைச் சில இலக்கண வரம்பு இலா மொழி போல்

எண் இடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ.   57

திருவிளையாடல் புராணம்

நெற்றியிற் கண்ணையுடைய முதற் கடவுளாகிய சிவபெருமானும்,

சங்கத்தின்கண் வீற்றிருந்து, செப்பமுற, ஆராய்ந்து தெரிந்த, இப் பசிய

தமிழ்மொழியானது, மற்றை நிலங்களிலுள்ள, இலக்கண வரையறை இல்லாத, சிலமொழிகளைப்போல, அமையக் கிடந்ததாக

நினைக்கவுங் கூடுமோ (கூடாது)

****

     சிவபெருமான் கழகமோடமர்ந்து தமிழாராய்ந்ததனை “தலைச்

சங்க மிருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக்

கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும்,

நீதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்

தொன்பதின்மர் என்ப” என்னும் இறையனாரகப்

பொருளுரையானும், இப் புராணத்தின் சங்கப்பலகை கொடுத்த

படலத்தில்,

பொன்னின் பீடிகை யென்னும் பொன்னாரமேல்

துன்னு நாவலர் சூழ்மணி யாகவே

மன்னி னார்நடு நாயக மாமணி

என்ன வீற்றிருந் தார்மது ரேசரே”

நதிய ணிந்தவர் தம்மொடு நாற்பத்தொன்

பதின்ம ரென்னப் படும்புல வோரெலாம்

முதிய வான்றமிழ் பின்னு முறைமுறை

மதிவி ளங்கத் தொடுத்தவண் வாழுநாள்”

என வருதலானும், நம்பி திருவிளையாடற் புராணத்தானு மறிக.

சேக்கிழார்குரிசிலும் திருத்தொண்டர் புராணத்தில்,

“சென்றணைந்து மதுரையினிற் றிருந்தியநூற் சங்கத்துள்

அன்றிருந்து தமிழாராய்ந் தருளிய வங்கணர்”

எனவும், “திருவாலவாயில், எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கமிருந்தது”

எனவும் கூறியருளினார்.

****

பல மொழிகள் பேசப்படும் இடங்கள்

சிங்களஞ் சோனகஞ் சாகஞ் சீனந் துளுக்குடகம்

கொங்கணங் கன்னடங் கொல்லந்தெ லுங்கங்க லிங்கம்வங்கம்

கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலம்

தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே”

என்னுஞ் செய்யுளாலறிக.

****

என் கருத்து

மாக்ஸ்முல்லர் கும்பல் சொன்னதும் கால்டுவெல் கும்பல் சொன்னதும் தப்பு என்பதை, மூவர் சொன்னதை நம்புவோர் அறிவார்கள்; ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்று மாக்ஸ்முல்லரும், திராவிடர்கள் மத்த்தியதரைக்கடல் பகுதியிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்று கால்டுவெல்லும் கூறினார்கள் ; இந்துக்களோவெனில் இரு மொழிகளையும் இரண்டு கண்களைப் போல பாதுகாத்து இரண்டும் சிவபிரான் தந்தவை என்று நம்புகின்றனர். இந்த பூமியில் பிறந்து வளர்ந்ததாக நம்புகின்றனர் . இதை பாரதியாரும் சொன்னார்:

பாரதியாரின் தேசிய கீதங்கள்

9. எங்கள் தாய்

(காவடிச் சிந்தில் ஆறுமுக வடிவேலவனே என்ற மெட்டு)

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு

சூழ்கலை வாணர்களும் – இவள்

என்று பிறந்தவள் என்றுண ராத

இயல்பின ளாம் எங்கள் தாய்.

யாரும் வகுத்தற் கரிய பிராயத்த

ளாயினு மேயங்கள் தாய் – இந்தப்

பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்

பயின்றிடு வாள்எங்கள் தாய்.

****

சம்ஸ்க்ருத மொழியின் சப்தங்கள் சிவபிரானின் உடுக்கையிலிருந்து எழுந்தவை என்று பாணினி கூறுகிறார்; அதை மகேஸ்வர சூத்திரங்கள் என்று சொல்லுவார்கள் ; இன்று வரை பிராமணர்கள், பூணுல் மாற்றிக்கொள்ளும் ஆவணி வட்டச் சடங்கில் – உபாகர்மா சடங்கில்–  அதைச் சொல்லி வருகின்றனர் அன்று வேத ஆரம்பக் கல்வியை மீண்டும் புதுப்பிக்க சம்ஸ்க்ருதம் தேவை என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு .

மூவர் சொன்னதிலும் சம்ஸ்க்ருதமும் தமிழும் இணையானவை என்ற சொல் இருப்பதை அடிக்கோடு இடவேண்டும்  ஆகவே இரண்டும் ஒரே காலத்தில் பிறந்த உலகின் மிகப்பழைய மொழிகள் என்பதே இந்துக்கள்நம்பும் கொள்கை.

இலக்கிய வடிவில் கிடைப்பதும், எழுத்து வடிவில் கல்வெட்டுகளில் கிடைப்பதும் வேண்டுமானால் வேறுபடலாம் பருவ காலமும் மக்களின் உதாசீனமும் ஏராளமான நூல்களை அழித்தன. வெளிநாட்டுப் படை எடுப்பாளர்களால் நாளந்தா, காஞ்சீபுர பல்கலைக்கழக நூலகங்கள் அழிந்தன . ஆகவே சமய நூல்களில் உள்ளதை நம்புவது நம் கடமை!

சம்ஸ்க்ருதம் வாழ்க!  தமிழ் வெல்க!

–subham—

Tags-தமிழும் சம்ஸ்க்ருதமும்,  ஒன்னு,  அறியாதவன் வாயில மண்ணு, பாரதியார், பரஞ்சோதி முனிவர் , சிவஞான முனிவர், திருவிளையாடல் புராணம், ஆராய்ச்சி  கட்டுரை-1

கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள்! – 2 (Post.14,507)

SPEAKER S NAGARAJAN, BANGALORE

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,507

Date uploaded in London – –13 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

11-5-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது. 

கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள்! – 2

ச. நாகராஜன் 

பிரச்சினைகளையும் அவற்றைப் போக்க ஓத வேண்டிய கந்த புராணப் பாடல்களையும் அழகுறத் தொகுத்து பிரார்த்தனை நூலாக ‘கவலைகள் போக்கும் கந்தபுராணம்’ என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. 

61 பாடல்கள் அடங்கியுள்ள 12 பக்கம் உள்ள இந்த நூல் பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

குழந்தைகள் கல்வியில் முன்னேற

புத்திரபாக்கியம் பெற்றிட

பதவி கிடைத்திட

பயம் நீங்க

நோய்நொடிகள் நீங்க

அரசு பயம் நீங்க

சத்ரு பயம் நீங்க

பூமி மனை அடைய

மரண பயம் நீங்க

பெண்கள் மனதில் இடம் பெற

காவல் தெய்வம் துணை நிற்க

அச்சம் நீங்கிட

எதிரிகள் நீங்கிட

திருமண பாக்கியம் பெற்றிட

சிவப்பரம்பொருளைச் சரணடைய

தொழில் லாபம் ஏற்பட

கர்வம் நீங்க

சிவபரத்துவம் உணர

வெற்றி, புகழ் அடைந்திட

செல்வ வளம் பெற

மன அமைதி பெற

ஆகிய தலைப்புகளில் துதிக்க வேண்டிய பாடல்கள் தரப்பட்டுள்ளன.

இத்துடன் கிருத்திகை விரத முறையும் அதன் பலனும், ஸ்கந்த சஷ்டி விரத முறையும் அதன் பலனும், கந்தபுராண பாராயண பலன் ஆகியவையும் நூலில் தரப்பட்டுள்ளன.

கந்தபுராணம் படித்தால் கைமேல் பலன் என்பது அனுபவ வாக்கு.

இப்படிப்பட்ட அரும் நூலைத் தொகுத்து அதை இலவசமாகவும் பக்தர்களுக்கு விநியோகித்து வருகிறார் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிவஶ்ரீ தில்லை எஸ். கார்த்திகேய சிவம் அவர்கள்.

இதுமட்டுமின்றி ஶ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் புராணம், கந்தபுராணம் அற்புதத் திருப்பாடல்கள், கந்தபுராணக் கட்டுரைகள் (இரு தொகுதிகளாக உள்ள ஆய்வுக் கட்டுரைகள்), கந்தபுராணத்தில் முருகப்பெருமானின் விரதங்கள், கந்தபுராணத்தில் சிவபரத்துவம், கலிதோஷம் போக்கும் கந்தபுராணம் உள்ளிட்ட நூல்களும் கந்தபுராண ஞானஸபை, கள்ளக்குறிச்சி, 606202 சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

நூலின் விலை ரூ 50 முதல் 150 வரை நூலின் பக்கம் மற்றும் விவரங்களுக்குத் தக்கபடி அமைந்துள்ளது.

இலவச நூலைப் படித்து அதில் உள்ளபடி பாராயணம் செய்து புத்திரபாக்கியம் பெற்ற அன்பர்கள் பரவசம் அடைந்ததை அறியும் போது ஆனந்தம் அடைகிறோம். விரும்புவோர் திரு கார்த்திகேயசிவம் அவர்களிடமிருந்து தேவையான நூலைப் பெறலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9751848933.

கச்சியப்பர் கந்தபுராணத்தை அரங்கேற்றிய மண்டபம் கந்தபுராண அரங்கேற்ற மண்டபம் என்ற பெயரில் வெளிப்புற மண்டபமாக இன்றும் கோவில் வளாகத்தில் இருந்து வருகிறது. அங்கு இப்போதும் கூட மயில்கள் குவிந்து தோகை விரித்து நடனம் ஆடுவதைக் காணலாம்.

எந்தப் பொருளும் கந்த புராணத்தில் என்பது பழமொழி.

ஆகவே இதன் பெருமையையும் அருமையையும் முற்றிலுமாக உரைத்தல் என்பது முடியாது.

சில முக்கியமான விஷயங்களை இங்கு காண்போம்.

தேவர்களுக்கு முருகப்பெருமான் தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அருளினார்.

அதை விளக்கும் பாடல் இது:

எண்திசையும் ஈரெழு திறத்து உலகம் எண் கிரியும் ஏழு கடலும்

தெண்டிரையும் நேமி வரையும் பிறவும் வேறு திரிபாகி உளசீர்

அண்ட நிரையானவும் அனைத்துயிரும் எப்பொருளுமாகி அயனும்

விண்டும் அரனும் செறிய ஓருருவும் கொண்டனன் விறற் குமரன்

இதன் பொருள்:

எட்டுத் திசைகளும் பதினான்கு வகையான உலகங்களும் எட்டு மலைகளும், ஏழு கடல்களும் இவை போன்ற பிற பொருட்களும் மாறுபட்ட தோற்றங்களை உடைய அண்டங்களின் வரிசையாகவும் அனைத்து உயிர்களாகவும் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமானும் தன்னுள் அடங்கிய ஒப்பற்ற வடிவாக குமரன் தோன்றினார்.

மேல் ஏழு உலகங்களாவன: பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், தபோலோகம், சனலோகம், மகர்லோகம், சத்தியலோகம்

கீழ் ஏழு உலகங்களாவன : அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாளம்.

எட்டு மலைகளாவன: இமயம், ஏமகூடம், கந்தமாதனம், கயிலை, நிடதம், நீலகிரி, மந்தரம், விந்தம்

ஏழு கடல்களாவன: உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய்,, கருப்பஞ்சாறு, தேன்

முருகப்பெருமானின் பேருருவத்தில் மண்ணுலகம் முதல் பாதாளம் முடிய உள்ளவை காலாகவும். திசைகளின் எல்லைகள் பெரிய தொள்களாகவும், விண்ணுலகம் முழுவதும் தலையாகவும், ஒளிதரும் சுடர்கள் அனைத்தும் கண்களாகவும், விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட பகுதி உடலாகவும், இசை பொருந்திய வேதங்கள் வாயாகவும், அறிவு முழுவதும் செவிகளாகவும்,பிரம்மாவும் திருமாலும் வலம் இடம் என இரு பக்கங்களாகவும் உமையம்மை மனதில் எழும் எண்ணமாகவும் , ஐந்தொழில் புரியும் சிவபெருமானே உயிராகவும் ஆகி காட்சி அளித்தார்.

சிவபிரானுக்கு எட்டு விரதங்களும், அம்பிகை, விநாயகர், முருகன், பைரவர் ஆகியோர் ஒவ்வொருவருக்கும் மூன்று முக்கிய விரதங்களையும் அனுஷ்டிக்குமாறு நமது அற நூல்கள் கூறுகின்றன.

கந்த புராணத்தில் முருகப்பெருமானுக்குரிய சுக்கிர வார விரதம், கிருத்திகை விரதம், ஸ்கந்த ஷஷ்டி விரதம் ஆகியவை விரிவாகவும் விளக்கமாகவும் கூறப்படுகின்றன.

சரி கந்தபுராணத்தை ஓதுவதால் என்ன பயன்?

பெறுதற்கரிய முக்திப் பேறு கிடைக்கும் என்பதே பயனாகும்.

வற்றா அருள் சேர் குமரேசன் வண்காதை தன்னைச்

சொற்றாரும் ஆராய்ந்திடுவாரும் துகள் உறாமே

கற்றாரும் கற்பான் முயல்வாரும் கசிந்து கேட்கல்

உற்றாரும் வீடு நெறிப்பாலின் உறுவர் அன்றே;

கச்சியப்ப சிவாசாரியாரது காலம் பனிரெண்டாம் நூற்றாண்டு என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

ஒப்பறு சூர் முதல் உடலங் கீறிய

மெய்ப்படு வேற்படை வீரன் மாக்கதை

தப்பறு தமிழினால் தந்த சீர்க்கச்சி

யப்ப சற்குரு பதம் அகத்துள் போற்றுவாம்

என்று கூறி கூறி விடைபெறுகிறேன்.

அனைவருக்கும் நன்றி வணக்கம்.

***