—SUBHAM—-
TAGS – TIRUKKURAL GEM, YEAR 1915, OCTOBER
Posted by Tamil and Vedas on October 7, 2025
https://tamilandvedas.com/2025/10/07/jaffna-womans-tirukkural-book-year-1915/
Written by London Swaminathan
Post No. 15,064
Date uploaded in London – 7 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
116.
Guide to Decipher Harappan Script! Strange names in Tamil Sangam Literature! (Post No.15,064)
Names of Sangam Tamil poets reveal many secrets to us. For some strange reason they used EYE in 64 names out of 470++ names.
We may use it in deciphering Indus Script. Many scholars said Fish symbol in Harappan script represent Star. But I would like to apply it for EYE. In the same way if we identify the prefixes mentioned below, we may decipher Indus Script one day.
We have got Tamil names of at least 470 poets from Sangam Literature My research shows some similarities with Sanskrit and some peculiarities as well.
***
117.
EYE names
The strangest thing about Tamil names in Sangam period is an obsession with EYE!
Over 60 poets have EYE in their names. It is KAN in Tamil.
In Sanskrit we have several words for EYE used in naming children :
Visaalaakshi
Kaamaakshi
Meenaakshi
Neelaayathaakshi
Nayanatara
Trayambaka
Sulochana
Pundareekaakshan
Meena lochani
Nayana, Nethra, Lochana, Akshi etc are words for eye in Sanskrit.
In Tamil KAN only used for Eye in 64 names
***
118.
PREFIX like Sanskrit
In Sanskrit names, we have more prefix in names; SU means Good; in Tamil Nal, Nar, Nap (=Su) are used in 32 names.
In the same way Senior (Jyeshta=Muuththa or Muthu) and Junior (Kanishta= Ilam) are fixed as prefix. This is also in Sanskrit
Jeshta = senior, Elder; Kanishta – Junior.
In Western countries they use it at the end; George Bush Sr
George Bush Jr.
In Tamil,and Sanskrit iit s always prefix!
***
119.
Colours also used in both languages as Prefix.
Rudra Aksha – Red Eyed in Skt.
Seng Kannan – Red Eyed in Tam.
In short Tamil and Sanskrit follow the same pattern. But Tamil has more EYEs in their names in Sangam period.
Now Kannan means Lord Krishna; but in Sangam period it meant Eye man; Kanni means Eye woman.
****
120.
சங்கப்புலவர் பெயர்கள் Names of Sangam Tamil Poets
மதுரை – Madurai city used as prefix for 44 poets; City name.
உறையூர் – Uraiyur used for 9 poets ;City name.
கரு – Karur in 12 names ; it was called Vanji ;City name. .
நல்- Nal, Nap, Nak, Nar all Su in Sanskrit- Good in Tamil; Su in Skt.
In Sanskrit we have Su/mathi, Su/lochana, Su/gandhi, Su/keerti, Su/kanya etc
If one reads Vande Mataram of Bankim Chandra Chatterji or Lalita Sahsranama , one can find more SU/good in them
Tamils also followed Sanskrit speakers by using it in 32 names!
நற் -Nar-good
நப் -Nap- Good
கண் – Kan EYE used in 64 names
செங் – Seng Red; only for names have Red colour
தலை – Thalai- Head in at least Nine names
இள – Junior, Young in 34names
கீர – Keera 27 names
பூத –Bhuuta or Pootha 25 names ; it is in Tamil and Sanskrit.
காரி = Kaari- black 2cplaces
முட – Muda – lame- few places.
தத்த- Dutt or Datta – 10 times
in short Tamil and Sanskrit speakers used Young and Old, Colours, Town names , Good etc as Prefix. This may help us to decipher Harappan script!
More research is needed. Tamil list must be compared with 450 names of Rig Vedic seers and over 100 names in Prakrit work Gatha Sapta Sati1
Gundukal Paliyathan has written poems in both Prakrit and Tamil.
–Subham—
Sangam Tamil Poets, names, prefix, Sanskrit, Harappan Script, colours Ancient Tamil Encyclopaedia- Part 18, One Thousand Interesting Facts! – Part 18
Posted by Tamil and Vedas on October 7, 2025
https://tamilandvedas.com/2025/10/07/ancient-tamil-encyclopaedia-part-18-one-thousand-interesting-facts-part-18-post-15064/
Post No. 15,063
Date uploaded in London – 7 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சங்கத் தமிழ் புலவர்களின் 470+++ பெயர்களில் ஒரு அதிசய விஷயம் உள்ளது அறுபதுக்கும் மேலான புலவர்களின் பெயர்களில் “கண்” உள்ளது ; ஸம்ஸ்க்ருதப் புலவர்களின் பெயர்களில் இவ்வளவு கண் இல்லை ; ஆனால் பெண்களின் பெயர்களில் கண் உள்ளது ; ஹரப்பா நாகரிக குறியீடுகளில் கண் என்ற உறுப்பினைக் கண்டுபிடித்துவிட்டால் அவற்றின் பொருளை உணரலாம்
சங்கத் தமிழ்ப் புலவர்களின் பெயர்களில் நீண்ட ஆராய்ச்சி தேவை . பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் தண்ணீரின் மூலம் உடலின் உறுப்புகளைத் தொட்டு 12 மந்திரங்களை சொல்வார்கள் அதில் உள்ள முதல் மந்திரமான கேசவன் என்பதும் கடைசி மந்திரமான தாமோதரனும் சங்கத் தமிழ் புலவர் பெயர்களில் உள்ளன!
சம்ஸ்க்ருதத்தில்
விசாலாக்ஷி – நெடுங்கண்ணி
காமாக்ஷி – காமக்கண்ணி
நீலாயதாக்ஷி – நீலக்கண்ணி
மீனாக்ஷி – மீன் கண்ணி
மீனலோசனி- மீன் கண்ணி
நயனதாரா – நட்சத்திரக் கண்ணி, மின்மினி
கமலாக்ஷி- தாமரைக் கண்ணி
த்ரிநேத்ரன் – முக்கண்ணன், அம்மூவன்
த்ரயம்பகன் – முக்கண்ணன், அம்மூவன்
உருத்திரன் கண்ணனானர் – மிஸ்டர் ருத்திராக்ஷன்
புண்டரீகாக்ஷன் – தாமரைக் கண்ணன்
உலோச்சனார் – கண்ணன்
இவ்வாறு ஆண்கள் பெயர்களிலும் பெண்கள் பெயர்களிலும் நிறைய ‘கண்’கள் உண்டு
ஹரப்பா நாகரிக எழுத்துக்கள் பட எழுத்துக்கள் PICTOGRAPHS ஆகவே கண் படத்தைப் போட்டால் அதை நாம் நேத்ர, த்ரயம்பக , அக்ஷி ,நயன, கண்ணி, தாமரை போன்ற —என்று பல வகைகளில் படிக்கலாம்
ஆகவே என்னுடைய யோஜனை,
ஹரப்பா எழுத்துக்களில் உள்ள மீன் முத்திரையை கண் என்று படிக்க வேண்டும் என்பதே
இதுவரை ஆராய்ந்த நிபுணர்கள் அதை மீன் என்றும் அது நட்சத்திரத்தைக் குறிக்கும் சொல் என்றும் ஆறு கோடுகளுடன் மீன் படம் இருந்தால் அது அறுமீன்கள் என்றும் சொல்லிக் கட்டுரை எழுதினார்கள் இப்படி அகப்பட்டுக்கொண்டதால் அவர்களால் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியவில்லை ஆகையால் நடையை மாற்ற வேண்டும் ; அதாவது மாற்றுச் Break the shell and come out of it
சிந்திக்க வேண்டும்.
மீன் என்பதை தேவர்களுடனும் ஒப்பிடலாம் ஏனெனில் இருவரும் இமைப்பதில்லை ; எடுத்துக் காட்டாக ஆறு கோடுகளுடன் மீன் படம் உள்ள முத்திரையை முருகன் எனலாம்; பன்னிரு கோடுகளுடன் மீன் இருந்தால் அதை சூரியன், ராசி மண்டலம், துவாதச– என்றெல்லாம் படிக்கலாம் ; ஆகவே புது வகையில் சிந்திக்க வேண்டும் Break the shell and come out of it !
அதற்கு சங்கப் புலவர்களின் பெயர்ப் பட்டியல், ரிக் வேத ரிஷிகளின் பெயர்ப் பட்டியல் உதவும் . இதே போல பிராகிருத நூலான காதா சப்த சாதியிலும் நீண்ட புலவர் பட்டியல் உள்ளது அதிலுள்ள குண்டுக்கல் பாலியாதன் சங்கத் தமிழிலும் பாடியுள்ளார்.
ஆகவே ஒரு கண் முத்திரையை மட்டும் சிந்துவெளியில் அடையாளம் கண்டுவிட்டால் பிறகு படிப்பது எளிதாகலாம்
மேலும் சம்ஸ்க்ருதம் போலவே தமிழிலும் PREFIXES முன்னொட்டுகளாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. சம்ஸ்க்ருதத்தில் நல்ல என்பதை சு என்ற முன்னொட்டுகளாகச் சேர்ப்பார்கள்;
சு+ மதி; சு+ லபா; சு +கந்தி; சு +கீர்த்தி– என்று நூற்றுக்கணக்கான பெயர்கள் உண்டு
சங்கத் தமிழ் இலக்கியப் பெயர்களிலும் முன்னொட்டுகள்தான் அதிகம்; நற், நப், நக், இளம் (ஜூயூனியர் ) முது (சீனியர்) இவையெல்லாம் சம்ஸ்க்ருதம் பின்பற்றும் உத்திகள். மஹா என்பதை தமிழ்ப்புலவர்கள் பெரும் என்ற முன்னொட்டுடன் பயன்படுத்தியுள்ளனர் . ஹரப்பாவில் பெயர்களை ஆராய்ந்து ஒரு பெயரைக் கண்டுபிடித்தாலும் புதிய பாதை திறக்கப்படும்!
****
சங்கப்புலவர் பெயர்கள்
மதுரை – 44 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது;
உறையூர் – 9 முறை;
கரு – 12 முறை;
நல்- 32 முறை ; Nal, Nap, Nak, Nar all Su in Sanskrit- Good in Tamil
In Sanskrit we have Sumathi, Sulochana, Sugandhi, Sukeerti, Sukanya etc
Tamils also followed Sanskrit speakers by using it in 32 names;
நற் -Nar-good;
நப் -Nap Good;
கண் – 64 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது!!!
செங்கண்ணன் காரிக்கண்ணன் வெண்கண்ணன்; .
மருத்துவத்தில் வெள்ளைக் கண் என்றால் நோயுள்ள ரத்த சோகை உள்ளவன் என்று பொருள்; ஆனால் மிகவும் வியப்பான விஷயம் சங்கத் தமிழர்களில் சிவப்பு, கருப்பு கலர்களை விட இதைத்தான் அதிகம் பெயர்களில் வைத்துள்ளனர் ! ஏன்? ஏன்? ஏன்?
செங் – – நாலைந்து இடங்களில் மட்டுமே;
தலை – 9 முறை;
இள – 34 முறை;
கீர – 27 முறை;
பூத -25 முறை;
காரி = 2;
முட – 10;
தத்த- 10 முறை;
சு என்ற சம்ஸ்க்ருத முன்னொட்டு பெரும்பலான பெண்கள் பெயர்களில் வருவதைக் கவனிக்கவும் பசலை என்பது பத்ரா நப்பசலை என்பது சுபத்ரா ; இதே போல சுகன்யா/ சுலோச்சனா என்பது நக்கண்ணையாக இருக்கலாம் எப்படியாகிலும் ஸம்ஸ்க்ருதப் பெயர்வைப்பு முறையை அப்படியே தமிழர்கள் பின்பற்றியுள்ளனர்; பாணினி சொன்னபடியே பெண்பாற் பெயர்கள் உள்ளன ; பெண்களின் பெயர்கள் இ அல்லது ஆ வில் முடிய வெந்ததும் தமிழில் ஆ என்பது ஐ என்று முடியும் ; சீதா= சீதை, கீதா= கீதை . ஆர்யா- ஐயை
சிவா- ஷிவானி, பவா- பவானி , வருண= வருணானி;
தமிழில் குறவன் – குறத்தி; ஒருவன்- ஒருத்தி
இது பாணினி சூத்திரப்படி அமைந்த பெயர்கள்
மிஸ்டர் நாகராஜன் என்பதை புற நானூறு – முடி நாக ராயர் என்று எழுதுகிறது அதுவும் ஸம்ஸ்க்ருதப்பெயரே!
–subham—
Tags- லண்டன் சுவாமிநாதன் கைடு, சிந்து சமவெளி, ஹரப்பா எழுத்து, படிப்பது எப்படி ? சங்கத் தமிழ் , புலவர் , பட்டியல் கண் , நயன நேத்ர அக்ஷி
Posted by Tamil and Vedas on October 7, 2025
https://tamilandvedas.com/2025/10/07/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%9f%e0%af%81/
Post No. 15,062
Date uploaded in London – 7 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
106.
Castes of Sangam Tamil Poets in Akananuru
புலவர்களின் ஜாதிகள்
Brahmin Poets and their Gotras in Akananuru: Ten poets from Gautama, Vatulya, Kausika, Kaundinya Gotras
அகநானூற்றில் அந்தணப்புலவர்கள்
ஆமுர்க் கெளதமன் சாதேவனார்;
கட்டியலூர் உருத்திரங்கண்ணனார் ;
கொடிமங்கலம் வாத்துளி நற்சேந்தனார்;
செலூர்க் கோசிகன் கண்ணனார், ;
பரணர் ;
நக்கீரனார், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்;
மதுரை இளங்கெளசிகானார்; ,
மாமூலனார் ;
மதுரைக் கெளணியன் தத்தனார்;
***
107
Kshatriya Caste Poets Sixteen poets from Kshatriya Caste
அரச ஜாதி புலவர்கள்
அண்டர்மகன் குறுவழுதி யார்
அதியன் விண்ணத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
சேரமான் இளங்குட்டுவன்
பாண்டியன் அறிவுடை நமபி ம்
பாண்டியன் உக்கிர பெரு வழுதி
பாலை பாடிய பெருங்கடுங்கோ
மருதம் பாடிய இளங் கடுங்கோ
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
வீரை வெளியந்தித்தனார்
***
Poets from Yadav /Cowherd Caste- Four Poets only.
108
இடையர் குலப்புலவர்கள்
இடைக்காடனார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்
***
எயினர் Poets from Hunter caste
எயினந்தை மகன் இளங்கீரனார்
விர்ருஉற்ரு மூதெயினனார்
***
109
கூத்தர் Poets from Dancer caste
உறையுயிர் முது கூத்தனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைத்தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார்
மதுரைத்தமிழ்க் கூத்தன் நாகன் தேவனார்
Maduraik Koothan may even mean Lord Nataraja (Shiva)
***
109.
தட்டார் Poets from Goldsmith caste
தங்கர் பொற்கொல்லனார்
மதுரைப் பொன்செய்கொள்ளான் வெண்ணாகனார்
***
110.
மந்திரத் தலைவர் Ministry
ஏனாதி நெடுங் கண்ணனார்
***
111.
வண்ணக்கர் Tester of Coins; Treasurer Community
வடம வண்ணக்கன் பெரிசாத்தனார்
***
112.
வணிகர் Poets from Vanika /Merchant
காவிரி பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
மதுரை அறுவை வாணிகன் இள விட்டனர்
மதுரை கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
மதுரைபணட பண் வாணிகன் இளந்தேவனார்
It is to be noted that the Sanskrit word Vanik ais used throughout Tamil literature.
***
113.
வேளாளர் குலப் புலவர்கள் .Poes from Farmer Caste; At least Sixteen poets
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்
ஆவூர் மூலங்கிழார்
ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்
குமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்
கோடியூர்க் கிழார் மகனார் நெய்தற்றானார்
செல்லூர்க் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்
நல்லா வூர்க் கிழார்
நெய்தற் சாய்த்துய்த ஆவூர்க் கிழார்
நொச்சி நியமங் கிழார்
பெருங்குன்றூர்க் கிழார்
பொதும்பில் கிழார் வெண் கண்ணனார்
மதுரைக்கு காஞ்சிப் புலவர்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார்
மருங்க்கூர்க் கிழார் பெருங் கண்ணனார்
மாற்றுர்க் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்
வடமோதங்கிழார்
***
114
அருந்தொடரார் பெயர் பெற்றோர்கள் Anonymous poets who are named after the significant phrases they used in their poems
அந்தி இளங்கீரனார்
இம்மெங்கீரனார்
ஊட்டியார்
நோய்பாடியார்
வண்ணப்புரங்கன்தரத்தனார்
***
115.
பெண்பாற் புலவர்கள் Women Poets in Akananuru
அஞ்சில் ஆந்தை மகள் நாகையார் , நள்ளூர் நன்முல்லையார் , ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார் கழார் கீரன் எயிற்றியார், குமிழி ஞாழார் நப்பசலையார் , நக்கண்ணையார் , போந்தைப் பசலையார், மதுரை நல்வெள்ளியார் முள்ளிய ர்ப் பூதியார், வெள்ளி வீ தியார் வெறிபாடிய காமக்கண்ணியார்;
இவர்களில் காமக்கண்ணி என்பவர் காமாக்ஷி என்பதை , தமிழ்த் தாத்தா உ.வே.சா, வும் காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
To be continued…………………………………
Tags- Ancient Tamil Encyclopaedia- Part 17; One Thousand Interesting Facts! – Part 17
Posted by Tamil and Vedas on October 7, 2025
https://tamilandvedas.com/2025/10/07/ancient-tamil-encyclopaedia-part-17-one-thousand-interesting-facts-part-17-post-15062/

Post No. 15,061
Date uploaded in London – – 7 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சந்திர சிந்தனை! 10-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
சந்திரனுக்கு என்ன நிறம்?
ச.நாகராஜன்
வாரோயோ வெண்ணிலாவே என்று பாடி விட்டு சந்திரனின் நிறம் என்ன என்று கேட்டால் சிரிப்பு தான் வரும் இல்லையா?
அது தான் வெண்ணிலவு என்று பாடி ஆயிற்றே, அப்போது வெண்மை தானே நிறம், இது தெரியவில்லையா என்று கேட்போம்.
ஆனால் சந்திரனுக்கு நிஜமான நிறம் எது?
ப்ளூ மூன், ஹனி மூன், ப்ளட் மூன் என்று பலவேறு விதமாகச் சொல்லி மகிழ்கிறோம் இல்லையா, அந்த சந்திரனின் நிறம் தான் என்ன?
உண்மையில் சொல்லப்போனால் சந்திரன் தானாக எந்த ஒளியையும் உருவாக்குவதில்லை. பதிலாக சந்திரன் சூரியனிடமிருந்து வரும் வெண்மை ஒளியைப் பிரதிபலிக்கிறது, அவ்வளவு தான்!
அப்படியானால் பூமியிலிருந்து பார்க்கும் போது ஏன் பல நிறங்களில் சந்திரன் காட்சி தருகிறான்?
அறிவியல் அறிஞர்கள் சந்திரனிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து ஆராய்ந்தார்கள்.
குறிப்பாக ல்யூனார் அண்ட் ப்ளானிடரி இன்ஸ்டிடியூட்டில் அறிவியல் எங்கேஜ்மெண்ட் மானேஜராகப் பணிபுரியும் பெண்மணி கிறிஸ்டைன் ஷுப்லா (Christine Shubla) தனது ஆய்வின் முடிவில் கூறுவது இது: சந்திரனில் உள்ள அனார்தோஸைட் (anorthosite) என்னும் சாம்பல் நிறக் கல்லே இதற்குக் காரணம். அது ஒளியை உறிஞ்சி எடுத்துக் கொண்டு வெண்மை நிற ஒளியை பூமிக்குப் பிரதிபலித்து அனுப்புகிறது,. ஆகவே சந்திரன் இளஞ்சாம்பல் நிறத்தில் காட்சி அளிக்கிறது.
என்றாலும் பல்வேறு வளிமண்டலச் சூழல்களும் வானியல் நிகழ்வுகளும் சந்திரனுக்கு வெவ்வேறு நிறத்தைப் பூமியிலிருந்து பார்க்கும் போது காட்டுகின்றன.

பூமியிலிருந்து பல்வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் இருந்து பார்த்தால் சந்திரன் வெவ்வேறு நிறத்தோடு காட்சி தருவான்.
பூமியின் வளி மண்டலத்தில் பட்டு ஒளி சிதறும் போது சந்திரனின் நிறம் செக்கச் செவேலென சிவப்பாக இருக்கும் இதையே ரத்த சந்திரன் (Blood Moon) அல்லது சிவப்பு நிலவு என்கிறோம்.
ப்ளட் மூன் டே (Blood Moon Day):
பூமியில் பூரண சந்திர கிரகணம் ஏற்படும் போது பூமி நேர்பட சூரிய ஒளி விழாது தடுக்கவே சந்திரன் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள அதன் பிரதிபலிப்பு ஒளியையே வெளி விடுகிறது. இது ரத்தச் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இந்த தினம் தான் இரத்தச் சிவப்பு சந்திர தினமாகும்.(இந்தியாவில் 2025 மார்ச் 14ம் தேதி ப்ளட் மூன் டே வந்தது)
ஒரே வருடத்தில் ஆறு பௌர்ணமியும் நான்கு சிவப்பு நிலவும் வந்தால் பூமி நிச்சயம் அழிந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இதையொட்டி ஜான் சார்லஸ் ஹேஜி என்ற ஒரு பாதிரியார் எழுதிய புத்தகம் சென்ற 2015ஆம் ஆண்டு உலகையே பரபரப்புக்குள்ளாக்கியது. 2014 தொடங்கி 2015 செப்டம்பர் முடிய இந்த மாதிரி நிகழ்வுகள் வந்து விட்டன என்றார் அவர். நல்ல வேளை, இரத்த சந்திரனால் உலகம் அழியவில்லை!
ப்ளூ மூன் (Blue Moon) : ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி வந்தால் அது ப்ளூ மூன் ஆகும். இப்படிப்பட்ட நிகழ்வு அரிதாகவே தான் நிகழும். வளிமண்டலத்தில் உள்ள பெரிய துகள்கள் சந்திரனுக்கு லேசான ஒரு நீல நிறத்தைத் தரும்.
பிங்க் மூன் (Pink Moon): ஏப்ரலில் வரும் முதல் பௌர்ணமியை இளஞ்சிவப்பு சந்திரன் என்று கூறுவது வழக்கம். வட அமெரிக்காவில் மலரும் ஒரு வகை இளஞ்சிவப்பு பாசியை அடிப்படையாகக் கொண்டு இந்த பிங்க் மூன் என்று சந்திரனை அழைக்கும் பழக்கம் வழக்கத்தில் வந்தது.
மஞ்சள் நிலா : வழக்கமாக இரவில் மஞ்சள் நிறமாக காட்சி தருகிறது சந்திரன். இதுவே தான் தங்க நிலா என்று புகழப்படுகிறது!
பகல் நேரத்தில் வானத்தின் அடியில் சந்திரன் ஆரஞ்சு நிறத்திலோ அல்லது சிவப்பாகவோ காட்சி தருகிறது.
இன்னும் வயலட், ஆழ்ந்த சிவப்பு என பல வர்ண ஜாலங்களையும் சந்திரன் நமக்கு அளிக்கிறது.
தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்ற ஏராளாமான நிலாப் பாடல்களில் வண்ண நிலவே, வண்ண நிலவே என்று ஆரம்பித்து மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் (கண்ணதாசன், முதல் இரவு படம்) வெள்ளி நிலா முற்றத்திலே (கண்ணதாசன் வேட்டைக்காரன் படம்), தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது (கண்ணதாசன், ரத்தத் திலகம் படம்) என தொகுத்துக் கொண்டே போகலாம்.
அட நிலாவுக்கு இவ்வளவு நிறமா சார்? இது நிஜமா சார்?
***
Posted by Tamil and Vedas on October 7, 2025
https://tamilandvedas.com/2025/10/07/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-post-n/
Post No. 15,060
Date uploaded in London – 6 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

Part Five
கிராம தேவதைகள் Village Gods (English version posted yesterday)
இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் உள்ளன ; ஆயிரக் கணக்கில் நகரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தெய்வம் உண்டு. வால்மீகி ராமாயணத்திலும், சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அந்தந்த நகர தேவதைகளை பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆகையால் கிராம தேவதைகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா . மூன்று முக்கிய விஷயங்களை உலகப் புகழ்பெற்ற வரலாற்று, தொல் பொருட் துறை நிபுணர் டாக்டர் இரா. நாகா சாமியும் , நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் தெளிவு படுத்தியுள்ளனர்.
கிராமதேவதைகள் என்பவர்களின் பெயர்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களின் சுருக்கமே !:
காத்யாயனி- காத்தாயி
மூகாம்பிகை – மூக்காயி
மஹா மாயா – மகமாயி
ராகா தேவி – ராக்காயி
இரண்டாவது விஷயம், கிராம தேவதைகளையும் நடு கல் வழிபாட்டையும் பிரித்துப் பார்ப்பது கடினம் ; ஏனெனில் ஊரைக் காத்த ஆண்களையும் பெண்களையும் மக்கள் தெய்வமாக வழிப்பட்டனர்; பல இடங்களில் நடு கல் இருந்த இடங்களில் புகழ்பெற்ற அம்மன் கோவில்கள் உருவாகிவிட்டன .
மூன்றாவது விஷயம், இறந்த கணவநின் சிதையில் தீப்பாய்ந்து உயிர் நீத்தபெண்களும் தெய்வமாகக் கொண்டாடப்பட்டனர் ; அவர்ளையும் கிராம தேவதைகளாக வழிபடுகிறோம் .
இவை தவிர வேறு சில விஷயங்களும் உள்ளன . கிராமக் கோ வில்களில் பிராமணர் அல்லாதோர் பூஜை செய்வதும் கிராமக் கோவில்களில் மிருகங்களைப் பலியியிட்டு வழிபடுவதையும் காண்கிறோம் இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை பீடி , சுருட்டு , கள், சாராயம் ஆகியவற்றையும் நைவேத்தியம் செய்கின்றனர் இது கிராம மக்களின் அன்றாட உணவு ஆகையால் அவற்றை இறைவனுக்குப் படைத்தனர்
இன்னுமொரு முக்கிய விஷயம் ஏராளமான பிராமண குடும்பங்களுக்கு இந்த கிராம தேவதைகள் குல தெய்வம் ஆகும். கல்யாணம், கார்த்திகை என்று வந்தால் அவர்கள் குடும்பத்தோடு சென்று கிராம தேவதைகளுக்கு படையல் வைக்கின்றனர்; கிறிஸ்தவ பிரச்சாரத்துக்காக வந்த வெளிநாட்டினரும் திராவிடர்களும் மார்க்சீய பேர்வழிகளும் இந்த உண்மைகளை மறைத்துப் பொய்யுரை பரப்பினர் .
எல்லா இடங்களிலும் கிராம தேவதைகளின் பெயர்கள் சம்ஸ்க்ருதத்தில் இருக்கும்; அல்லது புராண இதிஹாச புருஷர்களுடன் தொடர்பு இருக்கும். எண்ணற்ற திரவுபதி அம்மன் கோவில்கள், ரேணுகா தேவி கோவில்கள் இவைகளுக்குச் சான்று
இமயம் முதல் குமரி வரை இந்த தெய்வங்கள் இருக்கின்றன. கண்ணகி போன்ற புதிய பத்தினி தெய்வங்களையும் இந்துக்கள் உருவாக்கினார்கள. ஐயப்பன், அய்யனார் சாஸ்தா என்பன ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் ஆர்யா ஏன்பது அஜ்ஜ என்று பிராக்ருதமாக மருவி அய்யன் , அய்யனார் என்று ஆகியது ஆரியங்காவு என்ற கேரளா தலம் ஐயப்பன் கோவில் !ஆர்யை, சிலப்பதிகாரத்தில் ஐயை என்ற கதா பாத்திரமாக வருகிறாள்.
திருக்குறளில் தெய்வங்கள் யார் என்று வள்ளுவர் கூறுகிறார். யார் யார் எல்லாம் தார்மீக வாழ்வு வாழ்ந்தனரோ அவர்கள் எல்லோரும் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார் இதைக் கடவுள் வாழ்த்தில் சொல்லவில்லை; துறவற இயலில் சொல்லவில்லை இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் சொல்வதால் கிரஹஸ்தர்களும் கடவுள் ஆகலாம் என்கிறார்; ராமர், கிருஷ்ணர், கண்ணகி வாழ்க்கையில் இதைக் காண்கிறோம்
இதோ வள்ளுவன் குறள்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்— குறள் 50:
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
மேலும் இதே அதிகாரத்தில் மனு ஸ்ம்ருதி சொல்லும் பஞ்ச யக்ஞம் என்னும் ஐந்து வேள்விகளையும் சொல்கிறார் இதுவும் இல்லறத்தார் தினமும் செய்வது.
கிராம தேவதைகள் வழிபாடு ஊருக்கு ஊர் வேறுபடும்; இருந்த போதிலும் சில பொதுவான அம்சங்களைக் காணலாம் :
தீ மிதித்தல்; பூக்குழி இறங்கல்;
குடை எடுத்தல் ;
கஞ்சி, கூழ் வார்த்தல்;
பல இடங்களில் வேப்ப இலையை அணிந்து வழிபடுதல்;
சில இடங்களில் ஆண்களும் பெண் வேடம் தரித்தல்;
சாமி ஆடுதல்;
முடி இறக்கல் ;
ஊர் வழக்குகளை நீதி மன்றத்துக்குச் செல்லாமல் சாமி முன் நின்று தலையில் அடித்து சத்தியம் செய்தல் மூலம் தீர்த்துக் கொள்ளல்.
இந்த பூக்குழி இறங்குதல் சதி என்னும் பார்வதி தேவி, கணவனின் பெருமையைக் காக்க தந்தை வளர்த்த யாக குண்டத்தில் பாய்ந்து உயிர் நீத்ததைக் குறிக்கும் வழக்கம் ஆகும்
டாக்டர் நாகசாமி எழுதிய கிராம தேவதை கட்டுரையில் இன்றும் கூட பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் மதுரைச் சித்திரத் திருவிழாவில் பழங்கால பாணியில் உடை அணிந்து வருவதைக் காணலாம் என்கிறார் இந்த உடைகளையும் தண்ணீர் பீச்சும் குழாய்ப் பைகளையும் அவர்கள் காலம் காலமாகக் காத்து வருகின்றனர்
இது போல ஒவ்வொரு ஊரிலும் பல வினோத வழக்கங்கள் உண்டு.
மேலும் பெரிய கோவில்களின் நுழை வாயிலில் அல்லது எதிர்ப்புறத்தில் ஊர்த்தெய்வங்கள் இருப்பதைக் காணலாம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கருப்பணசாமி, மாளிகை புரத்து அம்மன் கோவில், மதுரையில் மீனாட்சி கோவிலில் மதுரைவீரன்,மொட்டைக்கோபுர முனி, அழகர் கோவிலில்18 படி கருப்பண சாமி என்று நீண்ட பட்டியல் உள்ளது
அந்தந்தப் பேட்டை மக்கள் கூடி, தெரு மூலையில் உள்ள காளியம்மனுக்கும், மாரி அம்மனுக்கும் ஆண்டுதோறும் திருவிழா வைத்து கஞ்சி வார்ப்பார்கள்
மதுரையில் வசித்த நான் பேச்சி அம்மன் கோவில், சிட்டுக்குருவி காளி ஆத்தா கோவில், செல்லத்தம்மன் கோவில் புகழ் பெற்ற மாரி அம்மன் கோவிலுக்குச் செல்வது வழக்கம் ; மாரி அம்மனுக்கு ஆண்டுதோறும் மாவிளக்கு வைப்பது என் தாயாரின் வழக்கம்; மேலும் அம்மை நோய் வராமல் இருக்க உடலின் பாகங்களை வெள்ளியால் செய்து உண்டியலில் காணிக்கையாகப் போடுவதும் வழக்கம்; இந்த மாதிரி உடலின்பாகங்களை செய்து இறைவனுக்கு காணிக்கை செலுத்துவது உலகின் பல பகுதிகளில் இருந்தாலும் இன்று நாடு முழுதும் உள்ள ஒரே நாடு இந்தியாதான்!
டாக்ட்டர் இரா நாகசாமி எழுதிய இன்னுமொரு கட்டுரை, சுவையான விசயத்தைத் தருகிறது ஆகம சாஸ்திரத்தில் நடுகல் எடுத்தல் பற்றிய தகவல் அது; ரௌத்திர ஆகமத்தில் விவரங்கள் உள்ளன!
புனித இமய மலையில் கல் எடுத்து அதை புனித கங்கை நதியில் குளிப்பாட்டி சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு சிலை எழுப்பியது இந்து மத வழிபாடு!
இந்துக்களில் வைஷ்ணவப் பெரியார்கள் சமாதி அடைந்தால் துளசிச் செடி பிருந்தாவனங்களையும் சைவப் பெரியார்கள் இறந்தால் சிவலிங்கத்தை எழுப்பி அதி ட்டானங்களையும் கட்டுவார்கள்; இப்போதும் காஞ்சி மடத்த்துக்குச் சென்றால் இரண்டு பெரியார்ககளின் அதிஷ்டானங்களைக் காணலாம். இப்படி ஊருக்கு ஊர் பெரியோரின் சமாதிகள் உண்டு மகாராஷ்டிரத்தில் சமாதி ஆன மஹான்களின் சமாதிகளிலிருந்து மிகப்பெரிய ஊர்வலங்கள் புறப்பட்டு பண்டரி புரத்துக்குக் கால்நடையாகச் செல்கின்றனர்
கிராம தேவதைளைப் பற்றி வெளிநாட்டுக்காரர்கள் எழுதியதை புறக்கணித்து ஆழமாகப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள விழாக்கள் பற்றி பலர் எழுதிய போதிலும் நாடு தழுவிய அளவில் இந்த கிராம தேவதைகளைப் பற்றி யாரும் இதுவரை எழுதவில்லை .
நேற்று டாக்டர் நாகசாமியின் ஆங்கிலக் கட்டுரையை வெளியிட்டேன் இன்று மேலும் இரண்டு கட்டுரைகளை இணைத்துள்ளேன். டாக்டர் நாகசாமியும் தொல்பொருட் துறை அறிஞர் எச் சாஸ்திரியும் எழுதிய கட்டுரைகள் அவை .
நாடு முழுதும் இந்துக்களை பின்பற்றி முஸ்லீம்களும் கூட புனித மகான்களுக்கு தர்கா எழுப்பி வழிபாடு செய்கின்றனர்.
To be continued…………………….
Tags- Hinduism through 500 Pictures in Tamil and English – படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-5 , கிராம தேவதைகள், Village Gods
Posted by Tamil and Vedas on October 6, 2025
https://tamilandvedas.com/2025/10/06/hinduism-through-500-pictures-in-tamil-and-english-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/
Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .
London Time 1 PM (British Summer Time)
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.
****
Prayer -MRS JAYANTHI SUNDAR TEAM – Akash Ramesh
***
NEWS BULLETIN
VAISHNAVI ANAND from London presents World Hindu News in Tamil
****
MRS Brhannayaki Sathyanarayanan from Bengaluru speaks on
ANBIL SATHYAVAGEESWARAR TEMPLE
****
SPECIAL EVENT-
INTERVIEW WITH ARTIST
KALAIMAMANI V JEEVA ANANTHAN, COIMBATURE.
Interviewed by London Swaminathan
V Jeeva nantha, the elder son of N.Velayutham, a famous artist and the proprietor of Cine Arts established in 1954.
Education:
Government Arts College, Coimbatore -Degree in Political Science
Presidency College, Chennai – Postgraduation in Political Science
President – CHITHRAKALA ACADEMY, An association of Artists, Coimbatore.
Been exhibiting his paintings since 1979 in all Chithrakala Academy Annual Art Exhibitions at Coimbatore, Chennai and Bangalore.
Collections all over the world and at Valluvar Kottam, Chennai.
Selected as one of the 133 painters all over India to paint KuraLoviyams exhibited since 2000, with the unweiling of Valluvar Statue at Kanyakumari.
Been a Cinema Banner Artist and painted thousands of giant banners, now an extinct art.
During 1980s wrote cinema reviews in the famous magazine ‘Kalki’ as a student writer.
A student Artist in ‘Dhisaigal’ a youth magazine edited by ‘Maalan’ during 80s.
Illustrator in literary magazines and Cover designer for novels .
Nominated as one of theWorld’s best 100 caricaturists by Romanian Cartoonists Association- 2007 and again in 2011 . In 2016 awarded as the second best caricaturist in the world by them too.
Author of ‘Thiraiseelai’, a collection of Essays on world cinema, ‘Oru Beediyundo Sakhave’ another collection of cinema essays , ‘Neengal eppadi oviyar aaneergal’ a collection of interviews with 17 eminent artists and ‘Maayamaan ulavum Vanam’ a collection of essays on Cinema.
His Book ‘Thiraicheelai’ has won the Special mention award in the ‘Best Book on Cinema’ category in the National film Awards 2011, and after 29 years a Book in Thamizh has won this award.
Received the Award from the hands of the President at New Delhi on 9-9-2011.
‘Oru Beediyundo Sakhave’ bagged the best ‘katturai thoguppu’ award from Vasagasalai, Chennai.
Kalaimamani Award now announced by the govt of TamilNadu for the year 2021
******
ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 5 October 2025
நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .
***
இறைவணக்கம் — திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர் – Akash Ramesh
உலக இந்துமத செய்தி மடல்-
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்
வழங்கும் செய்தி செய்தி மடல்.
***
ஆலயம் அறிவோம் —திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன்
சொற்பொழிவு– தலைப்பு– அன்பில் சத்ய வாகீஸ்வரர் கோவில்
****
இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:
ஓவியர் கலைமாமணி V.ஜீவானந்தம் அவர்களுடன் பேட்டி
Interviewed by London Swaminathan
கோவை சித்ர கலா அகாடமியின் தலைவர் , புகழ்மிகு ஓவியர் என் .வேலாயுதம் அவர்களின் புதல்வர், பல நகரங்களில் ஓவியக் கண் காட்சி நடத்தி வருபவர் , வள்ளுவர் கோட்டம் முதலிய இடங்களில் அவரது குறள் ஓவியங்களைக் காணலாம் ; நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசின் கலை மாமணி விருது பெற்றவர் ; திரைச் சீலை என்ற நூலின் ஆசிரியர்; எண்ணற்ற பத்திரிகைகளு ஓவியம், கார்ட்டூன், படங்களை வரைந்து கொடுத்து உதவி வருகிறார் ; அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். உலகின் தலை சிறந்த நூறு ஓவியர்களின் பட்டியலில் இடம்பெற்றவர்.
A-arivom
News
Artist interview
Prayer
—subham—
Tags-Gnanamayam Broadcast, 5-10- 2025, programme, Summary
Posted by Tamil and Vedas on October 6, 2025
https://tamilandvedas.com/2025/10/06/gnanamayam-5th-october-2025-broadcast-programme-summary/
Post No. 15,059
Date uploaded in London – 6 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்.
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் மாதம் 5 -ம் தேதி 2025-ம் ஆண்டு
****
ராமர் உருவ பொம்மை எரிப்பு: 4 பேர் கைது; சிறையில் அடைப்பு
ராமர் உருவ பொம்மையை எரித்து, அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்ட விவகாரத்தில் திருச்சி போலீஸார் 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவெறும்பூர் அருகே குண்டூர் அயன்புத்தூர் கிராமத்தில் ஐந்தாம் தமிழ்சங்கம் சார்பில் நடந்த விழாவில் ராமர் உருவப்படத்தை எரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, இந்து மக்களின் உணர்வை புண்படுத்தும் விதமாகவும், ராமபிரானை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட நபர்கள்மீது நடவடிக்கை எடுக்ககோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் குண்டூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ராமரின் படத்தை எரித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மதஉணர்வை தூண்டும் திமுக அரசையும், இந்து விரோத அமைப்புகளை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் பாலாஜி அளித்த பேட்டியில்,


தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற விழா ஒன்றில் வைரமுத்து ராமரை அவமரியாதையாக பேசினார். அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரசித்து கேட்கின்றார். அதேபோல் வி.சி.க வின் நிர்வாகி வன்னி அரசு ராமபிரானை ஆணவ படுகொலைகாரர் என விமர்சித்துள்ளார். இவர்களுக்கெல்லாம் ராமரைபற்றி பேச தகுதி இல்லை. இவர்கள் மீது விஸ்வந்த் பரிஷத் புகார் அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராமன் படத்தை எரித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை இல்லாவிட்டால் தமிழக மட்டுமல்லாது தேசிய அளவில் இந்த சம்பவத்தை எடுத்துச் சென்று உச்ச நீதிமன்றத்தை நாடி அதன் வழியாக நடவடிக்கை எடுக்க எடுக்கப் போவதாக பாலாஜி தெரிவித்தார்.
கடவுள் ஸ்ரீ ராமரை அவமதித்த 5ம் தமிழ் சங்க அமைப்பைத் தடை செய்ய வேண்டும் எனவும், அந்த அமைப்பு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்
***
முதல்வர் ஸ்டாலினின் பகுத்தறிவு சர்ச் செல்வதை தடுக்கவில்லையா? ஹிந்து முன்னணி கேள்வி
”முதல்வர் ஸ்டாலின், மதச்சார்பற்றவராக இல்லை” என்று ஹிந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
சிவகங்கை, அடைக் காட்டூர் இருதய ஆண்டவர் சர்ச்சில், அரசு நிதியில் நடக்கும் புனரமைப்பு பணிகளை, முதல்வர் ஸ்டாலின், நேரில் ஆய்வு செய்துள்ளார்.
இது அப்பட்டமான மதவாத அரசியல். தேர்தலில், தி.மு.க., பெற்ற வெற்றியை, கிறிஸ்துவர்கள் போட்ட பிச்சை என்று பாதிரியார் ஒருவர் பகிரங்கமாக கூறினார்.
தற்போது, மக்கள் வரிப்பணத்தை நிதியாக வழங்கி, சர்ச்சுகளில் புனரமைப்பு பணிகள், அரசு சார்பில் நடத்தப்படுகிறது. அதில் ஒரு பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்
அந்த பணியை கூட, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்ததில்லை. அன்னிய மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதோடு, நேரடியாக அந்த பண்டிகைகளில் பங்கேற்று மகிழும் ஸ்டாலினை, சர்ச்சுக்கு செல்வதும் மத நம்பிக்கை தான் என அவரது பகுத்தறிவு தடுக்கவில்லை.
ஹிந்து பண்டிகை, ஹிந்து கோவில்கள் என்றால் மட்டும், அவருக்கு பகுத்தறிவு குறுக்கே வந்து தடுக்கிறது. இஸ்லாமிய மாணவர்கள், பத்து பேர் வெளிநாடு சென்று பயில, 3.60 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை ஸ்டாலின் வழங்கினார்.
இது போன்ற அவரது நடவடிக்கைகள், அவர் மதச் சார்பற்றவராக இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. முதல்வர் ஸ்டாலின் நடுநிலையோடு நடப்பார் என எதிர்பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
ஹிந்துக்கள் 85 சதவீதத்துக்கு மேல் இருந்தும் மரியாதை இல்லை. ஆனால், 15 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள சிறுபான்மையினரின் ஓட்டுக்காக, அவர்களின் ஏவலாளாக தி.மு.க., செயல்படுகிறது.
ஹிந்துக்கள் ஒன்றிணைந்து, ஹிந்துக்களை மதிப்பவருக்கு மட்டுமே ஓட்டளிக்க வேண்டும். அது தான் வருங்காலத்தில் நமக்கு பாதுகாப்பு. இவ்வாறு, காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.
****
மைசூரில் கண்கவர் யானைகள் அணிவகுப்பு
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவில் கடைசி நாளான தசரா நாளில் கண் கவர் யானைகள் அணிவகுப்பு நடைபெற்றது. கஜப் படைகள் அணிவகுத்து சென்றன. 750 கிலோ தங்க அம்பாரியில் அமர்ந்து ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் அருள் பாலித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குவிந்து இந்த கண்கொள்ளா காட்சியை கண்டனர். பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
கஜப் படைகளுக்கு தலைமை தாங்கி வழிநடத்தி செல்லும் அபிமன்யு மீது தங்க அம்பாரியில் அமர்ந்து அம்மன் அருள் பாலித்தார்.
மைசூர் அரண்மனையில் இருந்து தொடங்கிய ஊர்வலம், மைசூரின் முக்கிய சாலைகள் வழியாக அணிவகுத்துச் சென்று மாலையில் வன்னி மண்டபத்தில் முடிந்தது.
****
மகாநவமி நவராத்திரி உற்சவம் : 15 யானைகள் அணிவகுப்பு
பாலக்காடு, கொடுந்திரபுள்ளி அக்ரஹாரம் ஆதிகே சவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், மகாநவமி நவராத்திரி உற்சவம் விமர்சையாக நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காட்டில் கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஆதிகேசவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் மகாநதி நவராத்திரி உற்சவம் நடக்கிறது.
அயிலூர் அனந்தநாராயணன் மாராரின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சவாத்தியம் முழங்க, ஆடை ஆபரணங்கள் அணிந்து, முத்துமணி குடை சூடிய யானைகள் அணிவகுப்பில் ‘காழ்ச்ச சீவேலி’ நடந்தது.
அதன்பின், 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற ‘பஞ்சாரிமேளம்’ என்ற செண்டைமேளம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை, 4:30 மணிக்கு பஞ்சவாத்தியம், சிங்காரி மேளம், பூக்காவடி, நாதஸ்வரம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்த, 15 யானைகளின் அணிவகுப்பில் முத்து மணி வண்ண குடை மாற்றம் நிகழ்ச்சி நடந்தது.
****
ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி புகழாரம்

100 ஆண்டுகளுக்கு முன் ஆர். எஸ். எஸ் அமைப்பு உருவானது தற்செயல் நிகழ்வு அல்ல என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு பாரம்பரியத்தின் மறுமலர்ச்சி எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் என்றால் தீமையை வென்றது என்ற பொருளைக் கொண்டது எனக் கூறினார். நாட்டிற்காக ஆர்எஸ்எஸ் பல சேவைகளைச் செய்துள்ளதாகக் கூறிய அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாதனைகளைப் பட்டியலிட்டு பேசினார். இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியை குறிக்கும் பண்டிகை விஜயதசமி எனக்கூறிய அவர், 100 ஆண்டுகளுக்கு முன்பு விஜயதசமி நாளில்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு நிறுவப்பட்டது எனத் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் எனத் தெரிவித்த பிரதமர் மோடி, தேசிய நலனே முதன்மையானது என்ற கொள்கையுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், உயர்ந்த குறிக்கோளைப் பின்பற்றி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தேசத்தை கட்டியெழுப்பும் எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக இந்திய மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றம் நாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது,” எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக இந்திய மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றம் நாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த சவாலை எதிர்கொள்ள, நாடு துடிப்புடன் இருக்க வேண்டும். என்று பிரதமர் மோடி கூறினார்.
சிறப்பு தபால்தலையையும் நூறு ரூபாய் நாணயத்தையும் பிரதமர் நரேந்திர மோடி, வெளியிட்டார் ; அதில் ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் படங்கள் உள்ளன.
*******

வாழும் தெய்வமாக 2 வயது சிறுமி தேர்வு
நேபாளத்தில் வாழும் தெய்வமாக ஆர்யதாரா ஷக்யா என்ற 2 வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், சிறுமியரை அம்மனின் அவதாரமாகக் கருதி வழிபடும் பாரம்பரிய வழக்கம் நடைமுறையில் உள்ளது. நேபாளத்தின் குமாரி என்று அழைக்கப்படும் சிறுமியை, பல கட்ட சோதனைகளுக்குப் பின் தேர்ந்தெடுக்கின்றனர்.
சிறுமியின் உடல், மன வலிமையை சோதித்து அவர் கன்னி தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹிந்துக்கள், புத்த மதத்தினரால் வழிபடப்படுகிறார். பருவம் எய்தும் வரை அச்சிறுமியை கன்னி தெய்வமாக கருதி பூஜிக்கின்றனர்.
அந்த வகையில், 2017ல் தேர்வான குமாரி த்ரிஷ்ணா ஷக்யாவுக்கு தற்போது 11 வயதானதால் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், நேபாளத்தின் புதிய வாழும் தெய்வமாக ஆர்யதாரா ஷக்யா என்ற சிறுமி தேர்வு செய்யப்பட்டார். அவர் பல்லக்கில் சுமந்து செல்லப்பட்டு, அங்குள்ள மன்னர் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டார். குமாரியாக தேர்ந்தெடுக்கப்படும் சிறுமியர், தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்கின்றனர். பண்டிகைகளுக்காக ஆண்டில் சில முறை மட்டுமே வெளியே அனுப்பப்படுவர்.
அந்நாட்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, குமாரிகள் இப்போது அரண்மனைக்குள் கல்வி கற்கவும், டிவி பார்க்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ஓய்வு பெற்ற குமாரிகளுக்கு அரசு ஒரு சிறிய மாதாந்திர ஓய்வூதியத்தையும் வழங்குகிறது.
***
திருப்பதியில் தங்க ரத தேரோட்டம்
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் தங்க ரதம் 28 டன் எடையில், 32 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது . ஆண்டுக்கு 3 முறை மட்டுமே பக்தர்கள் இதனைக் காண இயலும்.
திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பாக ஆண்டாண்டு காலமாக தேர்த் திருவிழாவை வெகு சிறப்பாக நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு பிரம்மோற்சவத்திலும் தேர்த்திருவிழா 8-ம் நாள் காலை பிரம்மாண்டமான முறையில் மாட வீதிகளில் உலா வரும்.அதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் பக்தர்களுக்கு அருள் புரிவது வழக்கம்., இத்துடன் ஒரு வெள்ளி தேரையும் திருப்பதி தேவஸ்தானத்தின் உருவாக்கினர். அந்தத் தேரில் பிரம்மோற்சவ நாட்களில் உற்சவ மூர்த்திகள் 6-ம் நாள் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
ஆனால், அந்த வெள்ளித் தேரில் அடிக்கடி மராமத்து பணிகள் நடைபெற்றதால், அதனை மாற்ற வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தீர்மானித்தனர்.
வெள்ளித் தேருக்கு பதிலாக தங்கத் தேரை ஏற்பாடு செய்யவும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, தங்க ரதத்தை செய்ய தமிழக கைவினை தயாரிப்பு சங்கத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் 18 கைவினை கலைஞர்கள் திருமலைக்கு வந்து, அங்கேயே தங்கி இருந்து தங்கத்தேரை தயாரித்தனர்.
28 டன் எடை கொண்ட இந்த தங்கத் தேர் 32 அடி உயரம் உள்ளதாகும். இதில் 2,900 கிலோ செப்பு தகடுக்கு 74 கிலோ எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்டது. இதில் 25,000 கிலோ மரம், 18 அங்குலம் செப்பு தகடுகள் 9 அடுக்குகளாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை தயாரிக்க அப்போது ரூ.24.34கோடி செலவானது என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
12 ஆண்டுகள் நிறைவு
2013-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ம் தேதி இந்த தங்க ரதத்தின் முதல் தேரோட்டம் நடந்தது.
செப்டம்பர் மாதம் 30-ம் தேதி யன்று , இந்த தங்க ரதம் உருவாக்கப்பட்டு சரியாக 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆண்டுதோறும் இந்த தங்க ரதம் பிரம்மோற்சவம், ரத சப்தமி, ஆனிவார ஆஸ்தானம் ஆகிய 3 நாட்களில் மட்டுமே கோயிலில் வலம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
****


இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு அக்டோபர் மாதம் 12 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags – World Hindu News, 5-10-2025, Gnanamayam, Broadcast, Vaishnavi
Posted by Tamil and Vedas on October 6, 2025
https://tamilandvedas.com/2025/10/06/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d-23/

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 15,058
Date uploaded in London – 6 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-10-25 அன்று ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பப்பட்ட உரை!
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும்
உறவு எலாம் சிந்தித்து உன்னி உகவாதே
அறவன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
மறவாதே தொழுதி ஏத்தி வணங்குமே
திருநாவுக்கரசர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் லால்குடி வட்டத்தில் அமைந்துள்ள திரு அன்பிலாலந்துறை என்னும் திருத்தலம் ஆகும்.
இத்தலம் அன்பிலாலந்துறை, கீழன்பில், ஆலந்துறை போன்ற புராணப்பெயர்களை உடையது. தேவாரத் தலங்களில். காவிரியின் வடகரையில் உள்ள தலங்களில் 57வது தலமாக இது அமைகிறது.
இறைவன் திருநாமம் : பிரம்மபுரீஸ்வரர்,
சத்தியவாகீஸ்வரர், ஆலந்துறையார் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
இறைவி : சௌந்தர நாயகி
தல விருக்ஷம் : ஆலமரம்.
தீர்த்தம் : காயத்ரி தீர்த்தம் சந்திர தீர்த்தம்
இறைவன் இங்கு ஸ்வயம்புவாகவே உருவானவர். கிழக்கு நோக்கி இருந்து அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் பிரம்மா தன் சாபம் நீங்குவதற்காகச் சிவனை வழிபட்டதால் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார்.
சத்திய லோகத்து பிரமனும் வாகீசரும் இங்கு பூஜித்த காரணத்தால் இறைவன் சத்தியவாகீஸ்வரார் என்ற பெயரைப் பெற்றார்.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆகவே அவரால் கோவிலுக்குச் செல்ல முடியாமல் போனது. அப்போது அவர் தூரத்திலிருந்தே பாடலைப் பாட,, விநாயகர் அவருக்குச் செவி சாய்த்துக் கேட்டார். ஆகவே விநாயகர், செவிசாய்த்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அவர் அமர்ந்து ரசிக்கும் ஒரு காட்சியை சிற்பி ஒரு சிற்பமாக வடித்தார். அந்தச் சிற்பத்தை இங்கு காணலாம்.
காதில் குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அவர்களின் குறை தீரும் என்பது ஐதீகம்.
முன் மண்டபத் தூணில் ஒரு பாம்பின் வால் ஒரு புறமும் அதன் தலை மறுபுறமுமாகக் கல்லினுள் நுழைந்து வந்திருப்பது போல ஒரு அழகிய சிற்பம் உள்ளது. இன்னொரு தூணில் இரு பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்க, அவற்றின் மத்தியில் சிவலிங்கம் இருக்கும் சிற்பம் உள்ளது. முருகபிரான் சிவலிங்கத்தை வழிபடும் இன்னொரு சிற்பமும் இங்கு அழகுற அமைந்துள்ளது/
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது இக்கோவில்.
கோவிலின் உள்ளே சப்தமாதர், பிட்சாடனர், விஸ்வநாதர், விசாலாட்சி, பைரவர், முருகன் ஆகியோரது சந்நிதிகள் உள்ளன. காசிக்குச் சமமான தலமாக இரு கருதப்படுகிறது. மாடக்கோயிலாக இருந்த இக்கோவிலை பராந்தக சோழன் விரிவுபடுத்திக் கட்டினான்.
இத்தலத்தில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஒவ்வொரு பதிகம் பாடி அருளியுள்ளனர்.
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத் தணையரங்கம் பேரன்பில் – நாகத்
தணைப்பாற் கடல் கிடக்கு மாதி நெடுமால்
அணைப்பார் கருத்தனா வான்
– திருமழிசை ஆழ்வார் திருவடி போற்றி
திரு அன்பில் 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகும்.
மூலவர் : வடிவழகிய நம்பி, கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
உற்சவர் : சுந்தர ராஜன்
தாயார் : அழகியவல்லி நாச்சியார்
தீர்த்தம்: மண்டூக தீர்த்தம் – கொள்ளிடம்
விமானம் : தாரக விமானம்
காட்சி கண்டவர்கள் : சிவன், பிரம்மா, ஊர்வசி
மூன்றடுக்கு ராஜகோபுரத்தை இக்கோவில் கொண்டுள்ளது. ஆதிசேஷன் மீது சாய்ந்தவாக்கில் சுந்தராஜப் பெருமாள் காட்சி அளிக்கிறார். ஏழே ஏழு தலங்களில் தான் இப்படி சாய்ந்தவாக்கில் தரிசனம் தரும் காட்சி உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.
மஹரிஷி சுதாபர் என்பவர் நீரினுள் அமிழ்ந்து தவம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் துர்வாச முனிவர் இவரைக் காண வந்தார். நெடுநேரம் காத்திருந்தும் நீரிலிருந்து ரிஷி வெளியில் வரவில்லை. தன்னை அவர் அலட்சியப்படுத்தி விட்டார் என்று கோபம் கொண்ட துர்வாசர் அவரை ஒரு மண்டூகமாக ஆகுமாறு சாபம் கொடுத்தார். மண்டூகம் என்றாள் தவளை என்று பொருள். அந்த ரிஷியும் ஒரு தவளையாக மாறி மண்டூக மஹரிஷி என்ற பெயரைப் பெற்றார். அங்கேயே மஹாவிஷ்ணுவை நோக்கித் தவம் புரிந்து வந்தார்.
அவரது தவத்தை மெச்சிய விஷ்ணு அவருக்குக் காட்சி தந்து அவரது சாபத்தை நீக்கினார். ஆகவே இந்தத் தலத்திற்கு மண்டூகபுரி என்ற ஒரு பெயரும் உண்டு.
சோழ சரித்திர வரலாற்றின் படி சுந்தர சோழன் எதிரிகளை வெல்ல போருக்குப் புறப்படும் முன்னர் இங்கு வந்து தன் உடைவாளை பெருமாளுக்கு முன் வைத்து வணங்கிச் சென்றான் என்றும் போரில் வெற்றி பெற்றான் என்றும் குறிப்புகள் குறிப்பிடுகின்றன. ஆகவே தனது நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் ஏராளமான நிலங்களை இறையிலி நிலமாக இக்கோவிலுக்கு அவன் அளித்தான் என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரரும் சௌந்தரநாயகி அம்மனும், வடிவழகிய நம்பியும், அழகியவல்லி நாச்சியாரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
நன்றி, வணக்கம்.
Posted by Tamil and Vedas on October 6, 2025
https://tamilandvedas.com/2025/10/06/%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a8/

WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,057
Date uploaded in London – – 6 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
11-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
உலகின் அதிசய இடங்கள்!
லஸ் மரீஸ்மாஸ் (Las Marismas)– பறவைகளின் புகலிடமான ஒரு சதுப்புநிலம்!
ச. நாகராஜன்
2500 ஆண்டுகளுக்கு முன்னர் போனீஷியன் போர் ஆரம்பித்தது. அது ஸ்பெயினில் தென்மேற்கில் உள்ள க்வாடல்குவீர் (Guadalquivir) நதி வரை பரவியது. 1200 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த விரிகுடாவானது சதுப்பு நிலமாக மாறியது. அப்போது அங்கு ஒரே உப்பு மயமான ஒரு ஏரி உருவானது. அருகிலிருந்த கடல் மண்ணானது அங்கு அவ்வப்பொழுது கொண்டு வந்து தள்ளப்படவே ஒரு நிலப்பகுதியும் உருவானது.
ஸ்பெயினில் உள்ள பெரிய மலைத்தொடரான சியாரா மோரீனா (Sierra Morena)விலிருந்தும் அருகில் உள்ள மலைகளிலிருந்தும் வண்டலும் சகதியும் கீழே வரவே கடற்கரை ஓரமாக ஒரு ஆழமில்லாத நிலப்பகுதி உருவானது.
1980களில் இது 45 மைல் நீளமுள்ளதாக இருந்தது. மணல்குன்றுகள் மட்டும் 8 மைல் நீளத்திற்கு பரவியிருந்தது.
இது தான் லஸ் மரீஸ்மாஸ்!

லஸ் மரீஸ்மாஸ் என்ற ஸ்பானிய சொல்லுக்கான அர்த்தம் சதுப்பு நிலம் என்பதாகும்.
இது காலப்போக்கில் அரச வம்சத்தினருக்கு மட்டுமே உரித்தான வேட்டையாடும் பகுதியாக ஆனது. நான்காம் சாஞ்சோ என்ற மன்னன் 1298ம் ஆண்டு இந்தப் பகுதியை ஜிப்ரால்டர் அருகிலிருந்த டாரிஃபா என்ற நகரை மூர்களின் படையெடுப்பிலிருந்து காத்த வீரனான அலொன்ஸோ பெரிஸ் டீ குஸ்மான் என்ற வீரனுக்கு நன்கொடையாகக் கொடுத்தான்.
அதே சமயம் அவனுக்கு டியூக் ஆஃப் மெடினா-சிண்டோனியா என்ற பட்டமும் அளிக்கப்பட்டது.
இதே வம்சத்தில் வந்த ஏழாம் டியூக் மன்னன் தன் ராணிக் டோனா ஆனாவுக்காக ஒரு அழகிய மாளிகையை நிர்மாணித்தான்.
இந்தப் பகுதியில் இருந்த ஒரே தங்குமிடம் இது தான்.
ஆயிரத்திதொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ஏராளமான உணவு விடுதிகள் இங்கு தோன்ற ஆரம்பித்தன. அது அற்புதமான இந்த இயற்கைச் சூழலை வெகுவாகப் பாதித்தது. இதனால் கவலை அடைந்த ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானியான டாக்டர் ஜோஸ் வெல்வர்டே ஐரோப்பிய உயிரியல் வல்லுநர்களுடன் இணைந்து உலக விலங்குப் பாதுகாப்பு நிதியின் உதவியுடன் இதைப் பாதுகாப்பு பகுதியாக அறிவித்தார்.1
964ல் 16055 ஏக்கராக இருந்த இது 1969ல் 86450 ஏக்கர் பகுதியைக் கொண்ட பெரும் பகுதியாக ஆக்கப்பட்டு தேசீய பூங்கா என்ற அந்தஸ்தைப் பெற்றது.
கோடோ டொனானா தேசீயப் பூங்கா என்ற பெயரைக் கொண்ட இந்தப் பூங்காவானது அருகி வரும் ஏராளமான ஐரோப்பிய பறவை இனத்திற்கு ஒரு புகலிடமாக ஆனது.
ஸ்பானிய இம்பீரியல் கழுகு, இங்கு வளர ஆரம்பித்தது. 1977 வாக்கில் 60 ஜோடிகள் இங்கு வாழ்ந்தன.
லஸ் மரீஸ்மாஸ் பருவ நிலைக்குத் தகுந்தபடி வேகமாக மாறும் பகுதியாகும்.
க்வாடல்குவீர் நதியில் எப்போதெல்லாம் சியரா நெவேடாவிலிருந்து நீர் வருகிறதோ அப்போதெல்லாம் அது லஸ் மரீஸ்மாஸை வெள்ளக்காடாக்கும். இந்த நீர்ப்பரப்பு இரண்டு அடி ஆழம் கொண்டதாக இருக்கும். ஆகவே அழகிய அன்னப் பறவைகளுக்கும் இதர பறவைகளுக்கும் இது வாழ்விடமாக ஆனது; கூடவே அவற்றின் இனப்பெருக்கத்திற்கும் உதவியது.
வசந்த காலம் வந்தால் கேட்கவே வேண்டாம். ஆண்-பெண் பறவைகள் ஒன்றுக்கொன்று அறைகூவல் விடுத்து மகிழ்ந்திருக்கும் ஒலியால் இந்த பிரதேசமே குதூகல பிரதேசமாக ஆகி விடும்.
173 விதமான அரிய பறவை இனத்தை இங்கு காண முடியும். கறுப்பு பருந்து உள்ளிட்டவை இங்கு தங்கள் கூடுகளை அமைத்துக் கொள்ளும்.
கோடைகாலத்திலோ சூரிய ஒளி அதிகமாகவே நீர் வறண்டு நிலப் பகுதி தோன்ற ஆரம்பிக்கும். அப்போது மான் இனங்கள் உள்ளிட்டவை ஏராளமாக இங்கு வர அரம்பிக்கும்.
இதைப் பார்க்க வனப் படகுகள் தமது சேவையைத் தொடங்கும். பயணிகள் கூட்டமும் அதிகமாகும்!
மொத்தத்தில் உலகில் பார்ப்பதற்கு மிக மிக அரிதான பறவைகளின் சரணாலயம் இது என்றே சொல்லலாம்!
**
Posted by Tamil and Vedas on October 6, 2025
https://tamilandvedas.com/2025/10/06/%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%80%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-las-marismas-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/