Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 75
***
Pictures of 2500 Indian Stamps continued……………………
I have got 25,000 stamps with beautiful designs.
London Swaminathan has been collecting stamps for 65 years continuously.
***
More Mini Stamp Sheets issued by India
Netaji, Port Blair, Prithivraj, Whales, Pigeons, House Martins, Environment day, Gita Govinda, Astrological Signs, Zodiac, Dance Swami Vivekananda, Nicholas tesla , Serbia, Philippines, Spices of India, Fashion stamps, dress, Deenadayal Upadyaya, Ramanujan, Kumaraguruparar, Shivayogi, Horses of India, Nicola, Armenia, Antartica, Nature Stamps, Terracota Temples, Queen’s Baton rela mini sheets
***
DO YOU COLLECT INDIAN STAMPS?
I HAVE GOT 100 MINI SHEETS.
I HAVE GOT SPARE STAMPS.
–subham—
Tags- Indian stamps, MINI STAMPS, 25,000, PART 75, BAD STAMPS, FASHION, ZODIAC, SPICES, GITA GOVINDA, NETAJI, penguin, polar bear, nicolas tesla, armenia, Horse of India
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சூரியனுக்கு ஒரு சக்கர தேர் உண்டு அதை ஏழு குதிரைகள் இழுக்கும் என்பதை வேதம் முதல் சங்கத்தமிழ் நூல்கள் வரை காண்கிறோம்
இதோ பரிபாடல், பதிற்றுப் பத்து வரிகள்
மாசில் ஆயிரம்கதிர் ஞாயிறு தொகூஉம் – பரி.3-22;
உலகிருள் அகற்றிய பதின்மரும் இருவரும் – பரி.8-4;
ஞாயிறு பழகிய மாயமொடு சுடர்திகழ் -பதிற்றுப் பத்து 62-6
நிலம்பொறை பெயரா அநீர் ஞாமறவந் தீண்டி
……………….
ஞாயிறு பட்ட அகன்றவாறு கூட்டத்து பதிற்று -பதிற்றுப் பத்து.72-9
சூரியனுடன் எண் 12 – தொடர்புப்படுத்தும் சொற்கள், 12 மாதங்கள் 12 ராசிகளை ஆகியவற்றை அறிந்து புலவர்கள் பாடியிருப்பதைக் காட்டுகிறது; இது வேதத்திலேயே உள்ளது.
***
ஞாயிற்றின் ஒற்றைச் சக்கர தேர், குதிரை
ஒருகால் ஊர்தி பருதியஞ்செல்வன்
குட வயின் மாமலை மறைய -அகம் 360;
நிரைசெலல் இவுளி விரைவுடன் கடை இ
அகலிரு விசும்பில் பகல்செலச் சென்று – அகம். 363
காயசினத்தகதிர்ச் செல்வன்
தேர்பூண்ட மா போல
வைக்கள்தோறும் அசைவின்றி -பட்டினப்பாலை 122-124;
****
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை . . . .(5)
–திருமுருகாற்றுப்படை
****
ஞாயிறு என்ற சொல்லும் அதன் உதயமும் சுமார் பத்து இடங்களில் வருகிறது இதில் சூரியனை மன்னரின் ஆண்மைக்கு ஒப்பிடுவது குறிப்பிடத்தக்கது . இதை ரகுவமத்திலும் கண்டோம்.
-lam 1 A circular orb, globe, wheel, ring, circumference, anything round or circular; न्यग्रोधं च सुमण्डलम् (nyagrodhaṃ ca sumaṇḍalam) Mahābhārata (Bombay) 12.169. 12; करालफणमण्डलम् (karālaphaṇamaṇḍalam) R.12.98; आदर्शमण्डलनिभानि समुल्लसन्ति (ādarśamaṇḍalanibhāni samullasanti) Ki. 5.41; स्फुरत्प्रभामण्डलया चकाशे (sphuratprabhāmaṇḍalayā cakāśe) Kumārasambhava 1.24; so रेणुमण्डल, छाया- मण्डल, चापमण्डल, मुखमण्डल, स्तनमण्डल (reṇumaṇḍala, chāyā- maṇḍala, cāpamaṇḍala, mukhamaṇḍala, stanamaṇḍala) &c.
2) The charmed circle (drawn by a conjurer); मण्डले पन्नगो रुद्धो मन्त्रैरिव महाविषः (maṇḍale pannago ruddho mantrairiva mahāviṣaḥ) Rām.2.12.5; जानन्ति तन्त्रयुक्तिं यथास्थितं मण्डलमभि- लिखन्ति (jānanti tantrayuktiṃ yathāsthitaṃ maṇḍalamabhi- likhanti) Mu.2.1.
3) A disc, especially of the sun or moon; तेनातपत्रामलमण्डलेन (tenātapatrāmalamaṇḍalena) R.16.27; अपर्वणिग्रहकलुषेन्दुमण्डला (aparvaṇi grahakaluṣendumaṇḍalā) (vibhāvarī) M.4.15; दिनमणिमण्डलमण्डनभवखण्डनए (dinamaṇimaṇḍalamaṇḍana bhavakhaṇḍana e) Gītagovinda 1.
FROM WISDOMLIB.ORG
****
SUN GOD SURYA IN DELHI AIRPORT
சாகுந்தலத்திலும் குமார சம்பவ நூலிலும் சவிதா, ரவி, பானு , ஹரி , சப்தசப்தி முதலிய சொற்களை காளிதாசன் பயன்படுத்துகிறான் அவனுடைய பச்சைக் குதிரைகளையும் ரகுவம்ச காவியத்தில் சொல்கிறான்.
சப்த =ஏழு , சப்தி=குதிரை (சாகுந்தலம் 6-30;
குமார சம்பவத்தில் ஆறு, ஏழு பாடல்களில் சூரிய அஸ்தமனக் காட்சியைக் காளிதாசன் வருணிக்கிறார் 8-40 to 8-54
***
முதல் பகுதியில் சூரியனுக்குள்ள இருபது தமிழ்ப் பெயர்களைக் கண்டோம்; இதோ சம்ஸ்க்ருதத்திலுள்ள 37 பெயர்கள்:
சூரியனுக்கு 37 பெயர்கள்!
அமரகோசம் என்ற சம்ஸ்கிருத அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகராதி; .அமரகோசத்தின் ஆசிரியர் அமரசிம்மன் சூரியனுக்கு 37 பெயர்களைச் சொல்லியிருக்கிறார். அவையாவன:–
(சம்ஸ்கிருத உச்சரிப்பு: சம்ஸ்கிருதத்தில் சொல்லுக்குப் பின்னே இரண்டு புள்ளிகள் ( : ) விசர்கம் இருந்தால் அதற்கு முந்திய உயிரெழுத்தைப் போல உச்சரிக்கவும்; எடுத்துக் காட்டு:– பாஸ்கர: = பாஸ்கரஹ, க்ரஹபதி: = க்ரஹபதிஹி, சித்ரபானு:= சித்ரபானுஹு)
அர்யமா = பித்ரு தேவதா, சூரியனின் பக்தர்கள்
ஆதித்ய: = அதிதி வம்சத்தில் வந்தவர்
த்வாதசாத்மா = 12 உருவங்களை உடையவன்
திவாகர: = நாள் என்பதை உருவாக்குபவன்
பாஸ்கர: = ஒளியூட்டுபவன் (பாஸ்பரஸ் என்ற மூலகத்தின் பெயரும் இதே பொருளுடைத்து)
அஹஸ்கர: = நாள் என்பதை உருவாக்குபவன்
ப்ரத்ன:= இருட்டை ஒழிப்பவன்
ப்ரபாகர: = ஒளியூட்டுபவன்
விபாகர: = ஒளியூட்டுபவன்
பாஸ்வான்= ப்ளியுடையவன்
விவஸ்வான் = பலவித ஆடைகளை உடையவன்
சப்தாஸ்வ = ஏழு குதிரைகளை உடையவன் (வானவில்லின் வண்ணங்கள்)
ஹரிதஸ்வ = பச்சைக் குதிரை உடையவன்
உஷ்ணரஸ்மி: = வெப்பமான கதிர் உடையவன் (பல பெண்களுக்கு ரஸ்மி என்று பெயர்; அதாவது கிரணம், கதிர் ஒளி)
சுர: = பார்க்கக்கூடிய அனைத்தையும் தூண்டுபவன் (விழித்தெழச் செய்வான்)
சூர்ய: = சுர: என்பதைக் காணவும்.
****
SUN AND NAVA GRAHAS IN OXFORD MUSEUM
தமிழ்நாட்டில் தினமணி, தினகரன் போன்ற பத்திரிக்கைகள், ஆங்கிலத்தில் ‘சன்’ SUN போன்ற பத்திரிக்கைகள் சூரியன் பெயரைத் தாங்கி வருகின்றன. உலகிலுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் சூரியன் பெயரில் நாளேடுகள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரத்திலுள்ள 12 மந்திரங்களும் மீண்டும் பிரபலமாகி வருகின்றன.
தினமும் சூரிய நமஸ்காரம் செய்வோருக்கு மித்ர, ரவி, சூர்ய, பானு, கக, பூஷண, ஹிரண்யகர்ப்ப, மரீசி, ஆதித்ய, சவித்ர, அர்க்க, பாஸ்கர என்ற பன்னிரெண்டு நாமமங்களும் நன்றாகத் தெரியும். பிராமணர்கள் மூன்று வேளைகளிலும் சூரியனை நோக்கிச் சொல்லும் மந்திரங்களும் சூரியனை நண்பகலில் கைவிரல் இடுக்கில் காண்பதும் அறிந்ததே
***
வியப்பான விஷயம் என்ன வென்றால் ரிக்வேத காலத்திலிருந்து சுமார் 5000 ஆண்டுகளாகத் தினமும் சூரிய வழிபாடு நடப்பது இந்தியாவில் மட்டுமே. அதுமட்டுமல்ல கோவில் கட்டிய சிற்பிகள் நூற்றுக் கணக்கான கோவில்களில் குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி புகுந்து (சுவாமி) விக்கிரகத்தின் மேல் விழச்செய்யும் என்ஜினீயரிங் அற்புதத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது . இதனால் ஆதிசங்கரர் ஆறு சமயம் நிறுவிய பொழுது சூரியன் வழிபாட்டினை செளரம் என்று அறிமுகப்படுத்தினார்
குப்தர் கால கல்வெட்டுகளில் சூரியன் கோவில் செப்பனிடப்பட்ட செய்தி உளது. மேலும் மூல்டான் நகரிலிருந்த புகழ்பெற்ற சூரியன் கோவிலை சீன யாத்ரீகர்கள் குறிப்பிடுகின்றனர்; அதை ஒளரங்க சீப் அழித்த செய்தியையும் பிற்கால யாத்ரீகர்கள் எழுதி வைத்தனர் அந்தக்கோவிலில் பல அற்புதங்கள் இருந்தததையும் எழுதி வைத்துள்ளனர் ; குஷான மன்னர்கள் தங்களுக்கே உரித்தான ஆடைகள், காலணிகளுடன் சூரிய பகவானைச் சித்தரித்துள்ளனர் . தமிழ்நாட்டின் கும்பகோணம் ,தாராசுரம் போன்ற இடங்களில் சூரியன் ரத வடிவில் மண்டபங்கள் உள்ளன .
அதிசயத்திலும் அதிசயம் திருஞான சம்பந்தர் கோளறுபதிகத்தில் முதல் பாடலில் ஞாயிறு -திங்கள் -செவ்வாய்- என்று வரிசைப்படுத்தி 9 விண்வெளி பிரகாசங்களைக் கூறுகிறார் இன்று உலகம் முழுதும் சண்டே- மண்டே- SUNDAY -MONDAY …. என்று அதே வரிசையில் காலண்டரை வெளியிடுகின்றனர்; சம்பந்தர் இப்படிப் பாடியதற்கு காரணம் அவர் பிராமணர் என்பதால்தான் ஏனெனில் பிராமணர்கள் இன்றும் தினமும் மூன்று வேளைகளில் ஆதித்யம் தர்ப்பயாமி என்று துவங்கி அதே வரிசையில் ராகு கேது வரை நீரை விட்டு வணங்குகின்றனர் இதையே சம்பந்தர் பாடினார் அதையே இன்று நாம் ஆங்கிலத்தில் சொல்லி வருகிறோம் அதில் சூரியனுக்கே முதலிடம்- ‘சண்டே’!
பல ஆண்கள், பெண்களின் பெயர்களும் சூரியன் பெயரிலிருந்தும், ஒளி என்பதிலிருந்தும் வந்தவை. பிரபாகரன், அருணன், ரவி, ரஸ்மி , மித்ரா, ஜோதி சூர்யா, பானு ஆதித்தனார் சவிதா முதலியன
சூரியனுக்கு ‘இனன்’ என்று ஒரு பெயர் உண்டு; அதிருந்து வந்ததே இன்கா நாகரீகம் என்று முன்பே எழுதியிருக்கிறேன்.
அம்சுமாலி (நீர்நிலைகளின் தலைவன்), பஹ: ( ஐஸ்வர்யம்) முதலிய வேறு 17 பெயர்களையும் அமர கோச உரைகாரர்கள் விளம்புவர்)
சூரியனுக்கு அருகாமையில் உள்ள மாடர, பிங்கள:, தண்ட: பற்றியும் அமரம் பேசும்; இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
MaduraiV.Santanam, Freedom Fighter and News Editor Dinamani News paper, passed away on the Independence Day 15-8-1998, after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.
புதிய தொடர்!
அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! –8
ச. நாகராஜன்
9
சந்தானம் இல்லத்திற்கு ஸ்வாமி சாந்தானந்தா விஜயம்!
தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஆசிரமங்களுள் ஒன்று சேலத்தில் உடையாப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஸ்கந்தாசிரமம். இதை ஆரம்பித்தவர் ஸ்வாமி சாந்தானந்தா. (அவதாரம் 1921 சமாதி:27-5-2002) இவரே புதுக்கோட்டையில் புவனேஸ்வரிக்கு ஆஸ்தான பீடமும் சிலாவடிவமும் அமைத்து புவனேஸ்வரி கோவிலை பிரசித்தமாக்கினார்.
1921ம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள அழகாபுரி என்ற சிற்றூரில் ராமசாமி என்ற அந்தணருக்கு பத்தாவது குழந்தையாக இவர் அவதரித்தார். இவர் இளமைப் பெயர் சுப்ரமண்யம். இளமையிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையும் சென்றார். பின்னர் தவ வாழ்க்கையில் ஈடுபட்டு பழனி மலை, கொல்லி மலை, வெள்ளியங்கிரி உள்ளிட்ட இடங்களில் தவம் புரிந்தார். குஜராத்தில் கிர்நார் மலையில் உள்ள தத்தாத்திரேயர் ஆலயம் சென்ற போது அங்கு ஒரு யோகி இவரிடம், ‘உன் குரு உனக்காக சேந்தமங்கலத்தில் காத்திருக்கிறார்’ என்று சொல்லவே அவர் சேலம் அருகில் உள்ள சேந்தமங்கலம் வந்தார்.
ஜட்ஜ் ஸ்வாமிகளின் சீடராக இருந்த ஶ்ரீமத் ஸ்வயம்பிரகாச ப்ரம்மேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை அவர் சந்தித்தார். அவரே இவருக்கு தத்த சம்பிரதாயப்படி உபதேசம் செய்து சாந்தானந்தா என்ற திருநாமத்தையும் தந்தார்.
புதுக்கோட்டையில் பெரும் ஆன்மீகப் பணியில் இவர் ஈடுபடலானார். முதலில் சதசண்டி யாகம் புதுக்கோட்டையில் நடத்தப்பட்டது. இவர் சம்பந்தமான செய்திகளை தினமணியில் எனது தந்தையார் பிரசுரிக்க ஆரம்பித்தார்.
கூடவே இவர் தரிசனமும் நிகழ்ந்தது. எனது தந்தையார் பால் அன்பு மிகக் கொண்டார் ஸ்வாமி சாந்தானந்தார.
ஒரு நாள் திடீரென்று செய்தி கிடைத்தது. ஸ்வாமிகள் சந்தானத்தின் இல்லத்தில் பிக்ஷை ஏற்க வரப் போகிறார் என்று. உடனே என் தாயார் விதவிதமாக உணவு வகைகளைத் தயாரித்து இவருக்கு உணவு பரிமாறத் தயாராக ஆனார்.
ஸ்வாமிகள் காலையில் வந்தார். இலை போடத் தயாராக இருந்த எங்களைப் பார்த்து அதெல்லாம் வேண்டாம் என்றார்.
எங்கள் வீட்டு சமையல் அறை மிக விஸ்தாரமானது. கூடத்தைப் போல நீளமும் அகலமும் இருக்கும். அங்கு வந்தவர் நின்று கொண்டார். எதிரே என் தாயார். அருகில் நாங்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தோம்.
“பவதி பிக்ஷாந்தேஹி” என்றார் அவர்.
அனைத்து உணவு வகைகளையும் ஒன்றாகக் கலக்குமாறு கூறினார்.
நாங்கள் திகைத்தோம். தாயாரோ மலைத்தார். மூன்று கவளங்கள் மட்டுமே உணவுக் கலவையை தன் இரு கைகளிலும் ஏந்தி அருந்தினார் ஸ்வாமிகள்.
இது தான் அவர் உணவை ஏற்கும் விதம்.
நீண்ட நெடிய உருவம் படைத்தவர். மேனி செக்கச் செவேலென சிவந்து இருக்கும். ஆஜானுபாகுவான இவரது உருவத்தில் பின்னாலிருந்து தொங்கும் சடை கால் வரை நீளும். அப்படிப்பட்ட ஆகிருதியைக் கொண்ட இவர் தந்தையாரின் மீது மிகவும் அன்பு பாராட்டினார்; எங்கள் அனைவரையும் நன்கு ஆசீர்வதித்தார்.
சஹஸ்ர சண்டி யாகத்திற்குப் பெரும் பொருள் செலவாகும். அதற்காக நிறைய நிதி திரட்ட வேண்டி இருந்தது.
மதுரையில் உள்ள ஆடி வீதியில் இதற்கென கதாகாலக்ஷேப நிகழ்ச்சிகள் ஏற்பாடாயின்.
வடக்கு ஆடி வீதியும் மேல ஆடி வீதியும் சந்திக்கும் முனையில் திருப்புகழ் மண்டபம் அமைந்திருந்தது. அங்கு சேங்காலிபுரம் பிரம்ம ஶ்ரீ அனந்தராமதீக்ஷிதரின் உபந்யாசம் ஏற்பாடாயிற்று.
இரு ஆடி வீதிகளையும் அடைத்தவாறு ஆயிரக்கணக்கானோர் திரண்ட கூட்டம். இரு புறங்களிலும் மக்கள் திரள் அமர்ந்திருக்க நடுவில் நடைபாதை ஒன்று உண்டு. மேல ஆடி வீதி நோக்கி அமர்ந்து பிரசங்கம் செய்து கொண்டிருந்த அனந்தராம தீக்ஷிதர் திடீரென்று எதிரே கையைக் காட்டி, “இதோ தர்ம தேவதையே நடந்து வருகிறது” என்று உரக்க முழங்கினார். அனைவரும் அவர் கையைக் காட்டிய திசையை நோக்கிப் பார்வையைச் செலுத்தினர். அந்த வழியே அப்போது தான் நடந்து வந்த என் தந்தையாரும் திரும்பிப் பார்த்தார்.
“சந்தானம் அவர்களே வருக” என்று தீக்ஷிதர் தொடர்ந்த போது தான் தன்னைத் தான் தர்ம தேவதை என்று அவர் குறிப்பிடுகிறார் என்று என் தந்தையே உணர்ந்தார். நாங்கள் அனைவரும் தர்மதேவதை யார் என்று தெரிந்து கொண்டோம்.
சாஸ்திர தர்மங்களை விரிவாக தினமணியில் வெளியிட்டு ஆன்மீகத்தைப் பரப்பிய என் தந்தையை தீக்ஷிதர் தர்மதேவதையாகக் கண்டதில் அதிசயமில்லை தான்.
அங்கு மேடையில் அமர்ந்திருந்த ஸ்வாமி சாந்தானந்தாவும் அருளாசி தந்தார்.
சஹஸ்ர சண்டி யாகம் மிகவும் பிரமாதமாக நடந்தது.
ஸ்வாமிகளது தவத்தைப் பற்றி அவ்வளவாக வெளி உலகம் அறிந்திருக்கவில்லை.
ஒரு முறை இவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்வாமிஜி கிருஷ்ணாஜியைப் பற்றி குறிப்பிட நேர்ந்தது.
“தெரியுமே! காட்டில் அவரைப் புலியுடன் பார்த்திருக்கிறேனே” என்றார் ஸ்வாமிகள்.
அனைவரும் திகைத்துப் போனோம். காட்டில் இவர் தவம் செய்ததையும் அதே காட்டில் அவரும் இருந்ததையும் அறிய முடிந்தது. எந்தக் காட்டில் எப்போது புலியைப் பார்த்தார், அது யாருடையது, இவருடையதா, ஸ்வாமிஜியினுடையதா, அல்லது யார் வளர்த்தது போன்ற தகவல்கள் தெரியவில்லை. அவர் குறிப்பிட்ட சில சொற்களுடன் அது நின்று விட்டது.
இருவரது தவத்தின் மகிமையைப் பற்றி உதவ அந்தச் சொற்கள் உதவின.
.
புதுக்கோட்டை புவனேஸ்வரி கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பும் இவரால் கிடைத்தது!
இவரது அருளாசி எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கிடைத்தது.
புவனேஸ்வரியின் சேவையில் தளராமல் ஈடுபட்டார் சந்தானம். ஸ்வாமி சாந்தானந்தாவின் அருளாசியையும் நிறையவே பெற்றார் அவர்.
அடுத்து மிகப் பெரும் அவதாரபுருஷரான் ஶ்ரீ சத்யசாயிபாபாவினுடனான எனது தந்தையாரின் தொடர்பைப் பார்ப்போமா?
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சங்க இலக்கியத்தில், காளிதாசன் நூல்களில் சூரியன் வழிபாடு-1 (Post.14,864)
அமரகோசம் என்னும் முதல் நிகண்டினைப் பின்பற்றி தமிழர்களின் முதல் நிகண்டு என கருதப்படும் திவாகரம் தொகுக்கப்பட்டது. அதில் இந்திரன், தண்ணீர், சூரியன் போன்ற தலைப்பில் சொல்லப்படும் பெயர்கள் பெரும்பாலும் சம்ஸ்க்ருத அமர கோசத்தில் உள்ள சொற்களே ; இதை தமிழ் நிகண்டு என்று சொல்வதைவிட சம்ஸ்க்ருத நிகண்டின் மொழிபெயர்ப்பு அல்லது தழுவல் என்றே சொல்ல வேண்டும்; .இதோ சூரியனுக்குள்ள 20 தமிழ் பெயர்கள் :-
20 தமிழ்ச் சொற்களை மட்டும் தடித்த எழுத்தில் காட்டியுள்ளேன்; கதிர், பகல், ஒளி என்ற சொற்களில் பிறந்தவற்றை ஒன்றாகக் கொள்ளவேண்டும்.
***
“நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர் கனலி வெம்மை தாங்கிக்
கால் உணவாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருள கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீ இத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்”
—புறம் 43 தாமப் பல் கண்ணனார்
“செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு
வண்புகழ் இறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள்
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியத்
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை”
——திருமுருகாற்றுப்படை 106-109
“சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்
அடல் வலி எயினர் நின் அடிதொடு கடனிது”
—-சிலப்பதிகாரம் (வேட்டுவ வரி 15.அவிப் பலி)
“வசை தவிர் ககன சரசிவ கரண
மகாவ்ருத சீல சால வரமுனி சித்தரை
அஞ்சல் என்று வாழ்வித்து நின்றன”
—அருணகிரிநாதர் (புயவகுப்பு)
வாலகியர்கள் எனப்படும் 60,000 குள்ள முனிவர்கள் பற்றி ரிக் வேதமும் தமிழ் நூல்களும் சுவையான பல செய்திகளைத் தருகின்றன. ரிக் வேதத்தின் எட்டாவது மண்டலத்தில் பிற்சேர்க்கையாக 11 பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவைகளைப் பிற்சேர்க்கை என்பதால் வேதத்துக்கு உரை எழுதிய சாயணர் இந்தப் பகுதிக்கு உரை எழுதவில்லை. ஆனால் ராமாயணம், மஹாபாரதம் மற்றும் புராணங்களில் இவர்களுடைய வரலாறு உள்ளது. இவர்களுடைய வரலாற்றில் பல வியப்பூட்டும் விஷயங்கள் இருக்கின்றன.
ஆங்கிலத்தில் ஜோனதன் ஸ்விப்ட்(Gulliver’s Travels by Jonathan Swift) என்பவர் கல்லிவரின் பயணம் என்ற ஒரு நாவலைப் படைத்தார். கல்லிவர் தனது பயணத்தில் லில்லிபுட் என்ற நாட்டுக்குப் போனபோது எல்லோரும் விரல் அளவுக்கே இருந்ததால் அந்த இடத்தில் கல்லிவர் என்ன என்ன சாஹசங்கள் செய்தார் என்று கதை மிக சுவையாகப் போகும். அந்தக் கதைக்கான கருத்தை ஜோனதன் ஸ்விப்ட் நமது வேதத்திலிருந்தும் இதிஹாச ங்களி லிருந்தும் எடுத்தார் என்றே தோன்றுகிறது. அந்தக் காலத்தில் இந்தியாவைப் பற்றி ஆங்கில நாளேடுகள் நிறைய செய்திகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சுவையான விஷயம் பூமியிலுள்ள மக்களைக் கதிரவனின் கடுமையான கதிர்களிலிருந்து காப்பது இந்த முனிவர்கள்தான் என்று படிக்கும்போது சில அறிவியல் உண்மைகள் தெரியவருகின்றது. சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் மனிதன் மீது அதிகமாகப் பட்டால் தோலில் புற்று நோய் உள்பட பல நோய்கள் ஏற்படும். ஆக சூரிய வெம்மை மனிதன் மீது அதிகம் படக்கூடாது என்பதை அவர்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதியதே வியப்பான விஷயம்தான். அத்தோடு நிற்காமல் இந்த முனிவர்கள் 60,000 பேர் வெம்மையை தாங்களே வாங்கிக் கொண்டு நம்மைக் காப்பதற்காக தினமும் சூரியனுடன் சுற்றிவருவதாக எழுதியிருப்பது இன்னும் அதிசயமாக இருக்கிறது. இவர்களை நம்மை புற ஊதாக் (ultra violet rays) கதிர்களிலிருந்து பாதுகாக்கும் ஓசோன் வளையத்துக்கு (ozone layer) ஒப்பிட்டால் அது மிகையாகாது!
வடமொழி நூல்களில் சுவையான புராணக் கதைகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் தமிழில் சில பாட்டுகளுக்கு உரை எழுதியோர் அறிவியல் உண்மைகளை மிகத் தெளிவாக எழுதியுள்ளனர்.
யார் இந்தக் குள்ளர்கள்?
இவர்கள் க்ரது என்பவருக்குப் பிறந்தவர்கள். தாயின் பெயர் கிரியை.; பிரம்மாவின் மானச புத்திரர்கள் என்றும் அழைக்கப் படுவர். இவர்கள் கட்டை விரல் உயரம் தான் இருப்பார்கள். ஆனால் தேஜோ (ஒளி) மயமானவர்கள். முற்றும் துறந்த இவர்கள் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டே தவம் செய்வார்கள். 60,000 எண்ணிக்கையுடைய இவர்கள் சூரியனுக்கு முன் அவனுடன் பயணம் செய்வார்கள்.
ஒரு முறை காச்யப முனிவர் தனது 2 மனைவிகளுக்கு குழந்தைப் பேறு கிடைக்க ஒரு யாகம் ஏற்பாடு செய்தார். அதில் இந்திரன் உள்பட அனைத்து தேவர்களும் முனிவர்களும் உதவிக்கு அழைக்கப் பட்டனர். இந்திரன் முதலானோர் வேகம் வேகமாக பெரிய விறகுகளை யாகத் தீக்கு கொண்டுவந்தனர். ஆனால் குட்டை வாலகில்யர்களோ ஒவ்வொரு இலை இலையாகக் கொண்டுவந்தனர். அத்தோடு சிறு சிறு குழிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் விழுந்தும் புரண்டும் வந்தனர். இதைப் பார்த்த இந்திரனுக்கு சிரிப்பு தாங்கவில்லை. சத்தம் போட்டு சிரித்து விட்டான்.
(இதுபோன்ற நகைச்சுவைக் கருப்பொருளை ‘காப்பி’ அடித்துதான் ஒரு கற்பனை நாவலை எழுதிவிட்டார் ஜோனதன் ஸ்விப்ட்).
வாலகீல்யர்களுக்கு பயங்கரக் கோபம் வந்தது. நாம் ஒரு புதிய இந்திரனைப் படைப்போம் என்று முடிவு எடுத்தனர். இந்திரன் நடு நடுங்கிப் போய் விட்டான். ஓடிப்போய் காஸ்யபரிடம் நடந்த அனைத்தையும் கூறினான். “வாலகீல்யர்கள் சக்தி வாய்ந்த தவசீலர்கள் அவர்கள். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது. ஆனால் ஏதேனும் சமாதானம் செய்து மாற்று வழி கண்டுபிடிக்கிறேன்“ என்று காஸ்யபர் பதில் சொன்னார். பின்னர் வாலகீல்யர்களிடம் போய் இந்திரன் பயந்து நடுங்குகிறான் என்று கூறி புது இந்திரனைப் படைக்காதீர்கள் என்றும் நீங்கள் பறவைகளுக்கு இந்திரனான கருடனைப் படையுங்கள் என்றும் மன்றாடினார். வேறு ஒரு நேரத்தில் இந்திரனைத் தோற்கடிக்க வகை செய்வதாகவும் சொல்லி சமாதானப் படுத்தினார். வாலகில்யர்கள் தனியாக யாகம் செய்தனர்.
இந்த சமாதான உடன்படிக்கையின்படி காஸ்யபரின் ஒரு மனைவீக்கு வாலகீல்யர்களின் யாகப் பிரசாதம் கொடுக்கப்பட்டது. அதைச் சாப்பிட்ட வினதை என்னும் மனைவி அருணனையும் கருடனையும் பெற்றெடுத்தாள். மற்றொரு மனைவியான கத்ரு வேறு ஒரு யாகப் பிரசாதத்தை சாப்பிட்டு நாகர்களைப் பெற்றெடுத்தாள். மற்றொரு தருணத்தில் கருடன் இந்திரனைத் தோற்கடித்து அமிர்தத்தைக் கொண்டுவந்து பழி தீர்த்துக் கொண்டான்.
திருமுருகாற்றுப் படைக்கு உரை எழுதிய கி.வா.ஜகந்நாதன் அவர்கள் வேறு ஒரு விஷயத்தையும் கூறுகிறார். மந்தோகருணர் என்று அழைக்கப்படும் அசுரர்கள் சூரியனுக்கு தினமும் தீங்கு செய்வதாகவும் அந்தணர்கள் நாள்தோரும் மூன்று வேளைச் சந்தியாவந்தனத்தில் கொடுக்கும் அர்க்யம் (நீர்) இந்த அசுரர்களை வீழ்த்த சூரியனுக்குத் துணைசெய்கிறது என்றும் கூறுகிறார். இந்த மந்தோகருண அசுரர்கள் சூரியன் வீசும் புற ஊதாக் கதிர்களா (ultra violet rays) அல்லது காந்த அலைகளா (magnetic storms and solar flares) என்பதை மேலும் ஆராயவேண்டும்.
மேற்கோள் காட்டிய பாடல்களின் பொருள்:
சூரியனுக்கு உதவும் வாலகில்யர்களுக்கு முருகப் பெருமான் ஒரு கையால் அருள் புரிகிறார் என்று திருமுருகாற்றுப் படை கூறுகிறது.
புறநானூற்றில் வேறு ஒரு கதை: சோழன் நலங்கிள்ளியின் தம்பியாகிய மாவளத்தானை தாமப் பல் கண்ணனார் பாடுகையில் சோழர்களின் முன்னோனாகிய சிபிச் சக்கரவர்த்தி ஒரு புறாவுக்காக எப்படி தன்னையே தந்தார் என்று கூறிவிட்டு சிபியின் பெருமையைச் சுடரொடு திரிதரும் வாலகில்ய முனிவர்களோடு ஒப்பிடுகிறார்.அந்த முனிவர்களுக்குக் காற்றுதான் உணவு என்றும் புறநானூறு கூறுகிறது.
சிலப்பதிகாரதில் வேடர்கள் பாடுகையில் வானிலே திரிபவரான முனிவரரும் அமரரும் இடர்கெடுமாறு அருளுகின்ற நின்பாதங்களைத் தொழுதோம் என்று எயினர்கள் துர்க்கா தேவியின் (கொற்றவை) புகழ் பாடுகின்றனர். இது அடியார்க்கு நல்லார் எழுதிய உரையாகும். அருணகிரிநாதரும் இம் முனிவர்களைப் பாடிப் பரவுகின்றார்.
ஆக அடியார்க்கு நல்லாரும் நச்சினார்க்கினியரும் கூறும் புதிய விஷயங்கள் வேத, இதிஹாச, புராணக் குறிப்புகளுக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளன என்று சொல்லலாம்
இப்பொழுது அதர்வண வேதத்தைப் படித்தபொழுது புதிய தகவல் கிடைத்திருக்கிறது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இது தமிழர்களுக்கும் தெரியும் என்பது சங்க இலக்கியக் குறிப்புகளால் தெளிவாத் தெரிகிறது. அதர்வண வேதத்தின் ( அ. வே) கடைசி காண்டங்கள் – அதாவது பத்தொன்பதாவது, இருபதாவது காண்டங்கள் — ரிக் வேத செய்யுட்களை மீண்டும் கூறுகின்றன. அதாவது உலகிலேயே பழைய நூலான ரிக்வேதத்தின் மறு பதிப்பு !
அதில் உள்ள முக்கிய வரிகளைக் குறிப்பிட்ட பின்னர் எனது வியாக்கியானத்தைத் தருகிறேன்:–
இரண்டும் நம்மை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாள் நமக்குக் கழிந்தால், யமனுடைய வீட்டுக்குப் போக தயார் ஆகிறோம் என்று பொருள்.
அதர்வண வேதத்தில் ( அ. வே) சூரியனுடன் சவாரி செய்யும் முனிவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது . வியாக்கியனக்காரர்கள் அங்கு வாலகில்யர் என்னும் குள்ள முனிவர்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் புறநானூற்று வரி அப்படியே உள்ளது.
“சுடரொடு திரிதரும் முனிவரும்” என்பது சிலப்பதிகார வரி. “சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும்” என்பது புறநானூற்று வரி . (பாடல் 43) இதை எழுதியவர் பெயர் நரசிம்மன். அதாவது தாமப்பல் கண்ணன்
ஓம் வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நரசிம்ஹ ப்ரசோதயாத் — என்பது நரசிம்ம காயத்ரி மந்திரம்
இதில் தீக்ஷ்ண தம்ஷ்ட்ர என்பதன் தமிழ் ஆக்கமே “தாமப்பல் “. கண்ணன் என்பது அவர் பெயர் அல்லது குடும்பப் பெயர் என்றும் கொள்ளலாம் .
அ .வே. முதல் துதி சூரியனை போற்றுகிறது. இதில் சூரிய ஒளியில் காணப்படும் 7 வண்ணங்கள் 7 குதிரைகளாக வருணிக்கப்படுகின்றன. இதை நாம் வானவில் ஏற்படுகையில் காண்கிறோம். சூரிய ஒளியை PRISM பிரிஸம் என்னும் முப்பட்டைக் கண்ணாடி வழியே பாய்ச்சினாலும் தெரியும் .
“முதல் துதியின் முதல் மந்திரத்தில் அறிஞர்களான கவிகள் அவனில் ஏறுகிறார்கள் ; எல்லா புவனங்களும் அவனுடைய சக்கரங்கள் “– என்ற வரிகள் வருகின்றன. ஏனைய ஒன்பது மந்திரங்களில் இன்னும் பல அறிவியல் தகவல்கள் உள்ளன..
அ .வே. மந்திரங்களை இந்திய விஞ்ஞானிகள் உட்கார்ந்து ஆராய்ந்தால் அமெரிக்க, ரஷ்ய விஞ்ஞானிகள் சொல்லுவதற்கு முன்னரே நாம் பல உண்மைகளை சொல்ல முடியும்.
கூடத்தில் நடுநாயகமாக அமர்ந்தார் ஶ்ரீ அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள். எல்லோருக்கும் ஆசீர்வாதம், அனுக்ரஹம். அனைவரும் மலர்ந்தனர். எப்படியோ செய்தியை அறிந்து நண்பர்கள் வந்து சேர்ந்தனர். கூட்டமான கூட்டம். கூடம் நிரம்பி வழிந்தது.
நெடுநேரம் இல்லத்தில் இருந்து எங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவர் கடைசியில் என் தந்தையாரின் முகத்தை நோக்கினார்.
“என்ன வேணும்?” என்ற பாவனை அவர் முகத்தில் தொனித்தது.
உடனே எனது தந்தையார் மிகவும் பணிவுடன், “ என்னுடைய பையன்கள் (ஐந்து மகன்கள்,, ஒரு மகள்) எல்லோரும் ஹிந்து மதத்தைப் பரப்பும் பணியில் ஈடுபடவேண்டும். இது தான் எனது ஆசை. பிரார்த்தனை”” என்றார்.
ஒரு கணம் அமைதி நிலவியது.
பிறகு ஸ்வாமிகள் பலத்த சிரிப்புடன் கைகளைத் தட்டினார். அனைவரையும், “வாருங்கள்” என்று தம் அருகே அழைத்தார்.
“சந்தானம் சொன்னதைக் கேட்டீர்களா? பிள்ளைகள் எல்லோரும் ஹிந்து மதத்தை நன்கு பரப்ப வேண்டுமாம்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
எங்கள் அனைவரையும் ஒவ்வொருவராக தன் முன் வரச் சொன்னார்.
என் அண்ணன் சீனிவாசனில் ஆரம்பித்து அனைவரும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தோம். ஒவ்வொருவருக்கும் ஒரு பழத்தைக் கையில் கொடுத்து அனுக்ரஹித்தார்.
அதன் பலனாகவே அனைவரும் ஹிந்து மத சேவையில் தொடர்ந்து ஈடுபடலானோம்.
ஒரு உதாரணத்திற்கு லண்டன் சுவாமிநாதன் நடத்தும் இந்த tamilandvedas.com ப்ளாக்கையே எடுத்துக் கொள்வோம்.
11-8-2025 அன்று வரை 14859 கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்துப் பயனடைந்தாரின் எண்ணிக்கை ஒரு கோடியே ஐம்பத்தேழு லட்சத்து அறுபத்தேழாயிரத்து எண்ணூற்றிப் பதினான்கு – 11-8-25 வரை!
ஸ்வாமிகளின் உரைகளைப் படித்து மகிழ்வதோடு நிற்பதில்லை பக்தர்கள்!
லொள்ளு பக்தர்களும் உண்டல்லவா! அவர்களில் ஒருவர் மதுரையில் பெரிய வக்கீல்!
அவர் காஞ்சி மடம், சிருங்கேரி மடம் செய்திகள் வெளியானவுடன் காலையில் ஏழு மணிக்கு எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்.
எனது தந்தையாரின் மிக முக்கியமான அலுவல் நேரம் சுமார் ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை தான்.
நாங்கள் இருந்த வடக்குமாசி வீதிக்கு அடுத்த தெரு நாயக்கர் புதுத் தெரு. அதில் தான் ராய்ட்டர் ஆபீஸ் இருந்தது. பின்னால் இது Press Trust India ஆபீஸாக மாறியது. இரவு முழுவது வரும் செய்திகளை ரோல் ரோலாக எடுத்து காலை ஆறு மணிக்கு இந்த அலுவலகம் எனது வீட்டிற்கு அனுப்பி விடும். அலுவலகம் இருக்கும் இடம் சுமார் ஒரே ஒரு கிலோமீட்டர் தான்!
வந்த ரோல்கட்டுகளைப் பிரித்து, தொடர்ந்து நிமிடம் தோறும் வரும் செய்திகளைப் படித்து, வடிகட்டி, செய்தி செய்தியாகப் பிரித்து அதை எந்த சப்-எடிட்டர் எழுத வேண்டும் என்று அவர் பெயரை குறித்து செய்தித் தொகுப்பை மடிப்பது அவர் வழக்கம்.
இந்த நேரத்தில் யாரும் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது.
இது இல்லத்திற்கு வரும் அனைவருக்கும் தெரியும்.
ஆகவே வக்கீலும் எதிரில் சும்மா அமர்ந்திருப்பார். எங்களின் காபி உபசாரமெல்லாம் உண்டு.
கடையில் கட்டை முடித்து வைத்து வெற்றிலைப் பெட்டியை எடுத்து “என்ன விஷயம்?” என்று வக்கீலைப் பார்ப்பார் என் தந்தை.
ஆபீஸிலிருந்து ஒரு ஆபீஸ்- பாய் வந்து அந்தக் கட்டை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு அருகே இருக்கும் தினமணி அலுவலத்திற்கு எடுத்துச் செல்வார். உடனே அங்கு காலை ஷிபிடிற்கான சப்-எடிட்டர்கள் வர, அன்றாட வேலை ஆரம்பிக்கும்.
“ஒன்றுமில்லை, சிருங்கேரி நியூஸ் வந்திருக்கிறது. ரொம்ப தேங்க்ஸ். ஆனால்…” என்று இழுப்பார் அவர்.
“என்ன?” – என் தந்தை.
“ஒன்றுமில்லை. இது இரண்டாம் பக்கத்தில் கீழே சிங்கிள் காலத்தில் வந்திருக்கிறது. ஆனால் காஞ்சி ஸ்வாமிகளின் நியூஸ் நேற்று முதல் பக்கத்தில் டபிள் காலம் (Double Column) ஹெட்டிங்கில் பெரிதாக இரண்டு காலம் வந்திருக்கிறது. இது சரியா?
வக்கீலின் கேள்விக்கு என்ன பதில்?
என் தந்தை பொறுமையாக செய்தியின் முக்கியத்துவம், அது போய்ச் சேர வேண்டியவகளின் எண்ணிக்கை, அது கிடைத்த நேரம், அனுப்பியவர் யார் என்பதைச் சொல்வார். பிறகு மெதுவாகக் கேட்பார்
அது சரி போனவாரம் சிருங்கேரி ஸ்வாமிகளின் உரை முதல் பக்கத்தில் மூன்று காலம் வந்ததே, காஞ்சி மடத்தின் நியூஸ் மூன்றாவது பக்கத்தில் சிங்கிள் காலமாக வந்ததே, அப்போது ஏன் நீங்கள் இங்கு வரவில்லை?” என்று கேட்பார்.
வந்தவர் அசடு வழிய நமஸ்காரம் சொல்லி விட்டுப் போவார்.
இது அந்த லொள்ளு பக்தரின் வழக்கம்.
செய்திகளைப் பொறுத்த மட்டில் பாரபட்சமே கிடையாது – எனது தந்தையாரிடம். வேண்டியவர் வேண்டாதவர் என்று எவரும் கிடையாது.
சிருங்கேரி ஸ்வாமிகளின் அத்யந்த பக்தர்களுக்கு எனது தந்தையாரைப் பற்றி நன்கு தெரியும். அதை விட மஹாஸ்வாமிகளுக்கு இன்னும் நன்றாகத் தெரியும்.
சங்கர ஐயர் என்று ஒரு பெரிய செல்வந்தர். (இவர் இன்னொரு சங்கர ஐயர், இந்தியன் பேங்க் ஏஜண்ட் அல்ல!) பெரிய காருடன் வந்து, வீட்டு வாசலில் இருந்து, உரக்கக் கத்துவார் – போகலாமா என்று.
தந்தையார் அவரைப் பார்த்து எங்கே என்று கேட்டால் சிருங்கேரிக்கு என்று பதில் வரும்.
அத்தனை வேலையிலும் உடனடியாக அலுவலகத்தில் செய்ய வேண்டியவற்றை குறிப்பிட்டவர்களுக்குச் சொல்லி விட்டு கையில் கிடைத்த வேஷ்டி சட்டையுடன் அவருடன் கிளம்பிச் செல்வார் தந்தையார்.
ஸ்வாமிகளுக்கும் சந்தோஷம்; எங்கள் குடும்பத்தினருக்கும் அவரது ஆசீர்வாதத்தினால் சந்தோஷம்.
இப்படிப்பட்ட திடீர் பயணங்கள் கடவுளின் ஆசி எப்போதும் உண்டு, எப்படியாவது வரும் என்பதை உணர்த்தி வந்தன!
அடுத்ததாக ஸ்வாமி சாந்தானந்தாவினுடனான என் தந்தையின் தொடர்பைப் பார்ப்போமா?
A Scientist Says He’s Solved the Bermuda Triangle, Just Like That
Pretty simple, actually. FROM POPULAR MECHANICS
POSTED BY LONDON SWAMINATHAN ON 12 -8-2025
Here’s what you’ll learn when you read this story:
An Australian scientist says probabilities are the leading cause of the Bermuda Triangle disappearances. And he’s not the only one.
Add in suspect weather, and iffy plane and boat piloting, and Karl Kruszelnicki believes there’s no reason to believe in the Bermuda Triangle phenomenon.
While the conspiracy of the Bermuda Triangle has existed for decades, the National Oceanic and Atmospheric Association and Lloyd’s of London has long championed the same ideas.
Pick any one of the more than 50 ships or 20 planes that have disappeared in the Bermuda Triangle in the last century. Each one has a story without an ending, leading to a litany of conspiracy theories about the disappearances in the area, marked roughly by Florida, Bermuda, and the Greater Antilles.
Australian scientist Karl Kruszelnicki doesn’t subscribe to the Bermuda Triangle’s supernatural reputation. Neither does the United States’ own National Oceanic and Atmospheric Association (NOAA). Both have been saying for years that there’s really no Bermuda Triangle mystery. In fact, the loss and disappearance of ships and planes is a mere fact of probabilities.
“There is no evidence that mysterious disappearances occur with any greater frequency in the Bermuda Triangle than in any other large, well-traveled area of the ocean,” NOAA wrote in 2010.
And since 2017, Kruszelnicki has been saying the same thing. He toldThe Independent that the sheer volume of traffic—in a tricky area to navigate, no less—shows “the number [of ships and planes] that go missing in the Bermuda Triangle is the same as anywhere in the world on a percentage basis.” He says that both Lloyd’s of London and the U.S. Coast Guard support that idea. In fact, as The Independentnotes, Lloyd’s of London has had this same theory since the 1970s.
NOAA says environmental considerations can explain away most of the Bermuda Triangle disappearances, highlighting the Gulf Stream’s tendency towards violent changes in weather, the number of islands in the Caribbean Sea offering a complicated navigation adventure, and evidence that suggests the Bermuda Triangle may cause a magnetic compass to point to true north instead of magnetic north, causing for confusion in wayfinding.
“The U.S. Navy and U.S. Coast Guard contend that there are no supernatural explanations for disasters at sea,” NOAA says. “Their experience suggests that the combined forces of nature and human fallibility outdo even the most incredulous science fiction.”
Kruszelnicki has routinely garnered public attention for espousing these very thoughts on the Bermuda Triangle, first in 2017 and then again in 2022 before resurfacing once more in 2023. Throughout it all, he’s stuck to the same idea: the numbers don’t lie.
Even with some high-profile disappearances—such as Flight 19, a group of five U.S. Navy TBM Avenger torpedo bombers lost in 1945—pushing the theory into popular culture, Kruszelnicki points out that every instance contains a degree of poor weather or likely human error (or both, as in the case of Flight 19) as the true culprit.
But culture clings to Bermuda Triangle conspiracy theories. The concepts of sea monsters, aliens, and even the entirety of Atlantis dropping to the ocean floor—those are fodder for books, television, and movies. It sure does sound more exciting than poor weather and mathematical probabilities, anyway, even if the “boring” story holds more water.
பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!
FROM JANAM TV NEWS
உலகின் மர்மம் நிறைந்த பகுதியாகப் பெர்முடா முக்கோணம் விளங்கி வருகிறது. அந்த குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களுக்கான காரணம் என்ன என்பது குறித்து விஞ்ஞானிகள் தற்போது புதிய விளக்கங்களை அளித்துள்ளனர். அது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
உலகில் பல விஷயங்கள் இதுவரை விடை காணப்படாத மர்மமாகவே நீடித்து வருகின்றன. 2014ஆம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் என்ன ஆனது? யாருக்கும் தெரியாது.
பெரு பாலைவனத்தில் காணப்படும் பெரிய அளவிலான வடிவங்களை (Nazca Lines) யார் வரைந்தது?. இதுவரை பதிலில்லை. அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் கொள்ளையில் ஈடுபட்ட D.B.Cooper எப்படித் தப்பித்தார்? இன்னும் ஆய்வு நடைபெற்று வருகிறது.
இப்படி நீளும் மர்மங்களின் பட்டியலில் எப்போதும் முதன்மை இடம் பிடிப்பது, பெர்முடா முக்கோணம். பெர்முடா முக்கோணம் என்பது, அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா தீவு, கரீபிய கடலில் உள்ள போர்ட்டோ ரிக்கோ தீவு மற்றும் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை இணைக்கிறது. இந்த குறிப்பிட்ட பகுதியில் எந்த கப்பல் சென்றாலும் காணாமல் போய்விடும். இப்பகுதிக்கு மேலே விமானங்கள் பறந்தால், அவையும் மாயமாகிவிடும். எனவே, மிகவும் மர்மம் நிறைந்த பகுதியாகவே பெர்முடா முக்கோணம் இன்று வரை இருந்து வருகிறது.அங்குத் தீய சக்திகள் உள்ளதாக ஒரு தரப்பினரும், வேற்றுகிரகவாசிகள் ஆதிக்கம் செலுத்துவதாக ஒரு தரப்பினரும், இல்லை இல்லை இதெல்லாம் கடற்கொள்ளையர்களின் கைவண்ணம் என மற்றொரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், உண்மை என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில்தான், ஆஸ்திரேலிய விஞ்ஞானியான கார்ல் க்ருஸ்ஸெல்னிக்கி (Karl Kruszelnicki) இது குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
எழுத்தாளராகவும், அறிவியல் ஆய்வாளராகவும் விளங்கும் இவர், கணிதம், இயற்பியல், உயிரி மருத்துவ பொறியியல் உள்ளிட்டவற்றில் பட்டம் பெற்றுள்ளார். வான் இயற்பியல், கணினி அறிவியல், தத்துவம் உள்ளிட்டவற்றையும் பயின்றுள்ளார். எனவே இவரது கருத்துகள் ஆய்வுலகில் எப்போதும் மதிப்பு மிக்க ஒன்றாக இருந்து வருகின்றன.தற்போது, பெர்முடா முக்கோணம் குறித்து கருத்து பகிர்ந்துள்ள Kruszelnicki, அந்த குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட சம்பவங்கள் எதுவுமே இயற்கைக்கு முரணானவையல்ல எனக் கூறியுள்ளார்.
மனித தவறுகள், தவறான வழியில் செல்லுதல், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் பெர்முடா முக்கோண பகுதியில் விபத்துகள் நேரிடுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், பெர்முடா முக்கோண பகுதியில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பெர்முடா முக்கோணம் அதிக கடல் திட்டுகளையும், shallow area எனப்படும் குறைந்த ஆழம் கொண்ட பகுதிகளையும் கொண்டுள்ளதாகக் கூறும் Kruszelnicki, இதன் காரணமாகவும் விபத்துகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கிறார். ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை ஏற்படும் புயல்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளதாகத் தெரிவிக்கும் அவர், மனித தவறுகளையும் சுட்டிக் காட்டுகிறார்.கடல் பயணத்தின்போது இடர் ஏற்பட்டால் செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பலர் பின்பற்றுவதில்லை எனவும், அதனால் பல அசம்பாவிதங்கள் நேரிடுவதாகவும் தெரிவிக்கிறார்.
உண்மை நிலைமை இப்படி இருந்தாலும், அமானுஷ்யம், மர்மம் போன்ற விஷயங்களில் பெரும்பாலான மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அது குறித்த கதைகளை அதிகம் கேட்க அவர்கள் விரும்புகின்றனர். இதனால்தான், பெர்முடா முக்கோணம் குறித்த அமானுஷ்ய கதைகள் இன்றுவரை உயிர்ப்புடன் இருந்து வருவதாக Kruszelnicki கூறுகிறார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 74
***
Pictures of 2500 Indian Stamps continued……………………
I have got 25,000 stamps with beautiful designs.
London Swaminathan has been collecting stamps for 65 years continuously.
In my London, stamp dealers would not touch Indian stamps because they are very dirty; but I would not blame India for it. If u collect stamps in India, it would be spoiled quickly because of the weather conditions. The same stamps can be preserved better in Britain because it is a cold place. But producing bad designed stamps is inexcusable.
***
VERY BAD STAMPS ON MAHABHARATA, FASHION.
THESE MINI SHEETS SHOW PEOPLE IN THE INDIAN POSTAL DEPARTMENT DON’T KNOW HISTORY, RELIGION, MAHABHARATA OR STAMP COLLECTING.
MAHABAHARATA STAMPS WOULD NOT BE UNDERSTOOD BY ANYONE BECAUSE EACH STAMP DON’T SAY WHAT IT IS.
MY MADURAI SETUPATI HIGH SCHIOOL TEACHER PSK USED TO CRITICISE BAD ,ILEGIBLE, DIRTY WRITING AS BEGGAR’S VOMIT.
MAHABHARATA STAMPS BELONG TO THAT CATEGORY.
THEY LOOK LIKE BEGGAR’S VOMIT.
FAHION STAMPS HAS NOTHING TO DO WITH INDIAN CULTURE. THE MINI SHEET iS SO BIG IT WOULD NOT FIT INTO ANY STAMP ALBUM IN THE WORLD. SOME MAD MAN MIGHT HAVE DESIGNED IT WHEN HE IS DRUNK.
IT SHOWS THE PEOPLE IN THE P & T HAVE NO KNOWLEDGE OF STAMP COLLECTING.
PUNISH THEM; TELL THE WORLD HOW MUCH YOU SPENT TO DESIGN THESE STAMPS.
***
DO YOU COLLECT INDIAN STAMPS?
I HAVE GOT 100 MINI SHEETS.
I HAVE GOT SPARE STAMPS .
–subham—
Tags- Indian stamps, MINI STAMPS, 25,000, PART 74, MAHABHARATA, VERY BAD STAMPS, FASHION, PERFUME