BECAUSE THIS INFORMATION IS VALID FOR ALL TIMES AND IF YOU LOOK FOR THE SAME INFORMATION VIA GOOGLE ETC, THEY WILL ASK YOU TO ACCEPT COOKIES; THEY WILL POST YOU ADVT.S .
MY BLOG IS FREE FROM SUCH NONSENSE.
1. Baga Beach – Known for its nightlife and water sports.
2. Calangute Beach – Popular for its vibrant ambiance and beach shacks.
3. Candolim Beach – Ideal for a more relaxed atmosphere.
4. Anjuna Beach – Famous for its flea market and trance parties.
5. Vagator Beach – Offers picturesque views and great for sunsets.
6. Arambol Beach – A peaceful spot, popular among foreigners.
7. Mandrem Beach – Perfect for a quiet and romantic escape.
8. Morjim Beach – Known for Olive Ridley turtle nesting.
9. Chapora Beach – Close to Chapora Fort, offering stunning views.
10. Palolem Beach – Famous for its crescent shape and silent discos.
11. Agonda Beach – A serene beach ideal for solitude seekers.
12. Butterfly Beach – Accessible by boat or trek, known for its beauty.
13. Colva Beach – A bustling beach with shacks and water sports.
14 Cavelossim Beach – Known for its clean sand and calm waters.
15. Mobor Beach – Great for water sports and luxury stays.
16. Betul Beach – A quaint and romantic beach at the Sal River mouth.
17. Majorda Beach – Known for its peaceful environment and food shacks.
18. SinQ Beach (Candolim) – Features vibrant nightlife.
19. Cansaulim Beach – A clean and quiet stretch, good for family outings.
20. Dona Paula Beach – Offers water sports and scenic views
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில்( தி.வி. பு.) நிறைய உவமைகளைக் கையாளுகிறார் மேலும் அவர் உருவகப் பிரியர் என்று தெரிகிறது தலங்களை விவரிக்கும்போது பாரத நாட்டினை அல்லது பாண்டிய நாட்டினை மனிதனாக உருவகப்படுத்திப் பாடுகிறார். அதை முன்னொரு கட்டுரையில் கண்டோம்.
மதுரைத் திருநகரம் கண்ட படலத்தில் வரும் உருவகம் – நமச் சிவாயக் கப்பல் !!
தெய்வத் தன்மையான திருநீறே பாய் மரமாகவும்,ஐந்தெழுத்தே கப்பலாகவும் கொண்டு வெப்பத்துடைய அழுக்கான இருவினை உடைய தேகத்தை எடுத்து உழலுகின்ற பிறவிக்கடல் ஏழையும் கடந்து பரமேச்வரனுடைய பாத கமலங்களாகிய கரையைச் சேருகின்ற சைவ மாந்தர்கள் இருக்கும் மடங்களுடைய ஒப்பில்லாத வீதி வளத்தை இனிச் சொல்லக்கடவோம்
****.
PICTURE- கூன் பாண்டியனும் மனைவி மங்கையற்கரசியும் மந்திரி குலச்சிறையாரும் .
அவருடைய இலக்கியப் புதுமைகளை அறிய இதோ சில எடுத்துக் காட்டுகள் :-
ஆறாம் எண்ணை வைத்துச் சொல் விளையாட்டு
அறுகாற் பீடத்துயர் மாவழி கடைந்தமுதையரங்கேற்றுமா போல்
அறுகாற்பேடிஸை பாடும் கூடன்மான்மியத்தை யருந்தமிழாற் பாடி
அரிதாகிய தமிழினாற் பாடி அறுகினால் பெருமையோங்கிய திருமு டியுடைய சொக்கநாத சுவாமி சந்நிதியில் தேவர்கள் சூழ்ந்திருக்கும் அறுகாற்பீடத்தில் இருந்து பரஞ்சோதி முனிவர் அரங்கேற்றினார் .
(ஆறு = சிவனின் தலையில் உள்ள அறுகு; வண்டின் கால்கள் ஆறு ; அரங்கேற்றிய இடம் மீனாட்சி கோவிலில் உள்ள ஆறு கால் மணடபம்)
இது பாயிரப்பகுதியில் உள்ளது; முதற் சில பாடல்களில் தான் கந்த புராணத்திலுள்ள சங்கர சங்கிதையிலுருந்து பெரியோர்கள் சொன்னதால் தமிழில் மொழிபெயர்த்ததாகவும் கூறிவிட்டு அன்னப்பட்சியானது நீரை விட்டுப் பாலை மட்டும் அருந்துவது போல குற்றம் குறைகளை நீக்கிவிட்டு நூலை ஏற்கவேண்டும் என்கிறார்.
முனிவர் வேதங்களிலும் வல்லவர் என்பது பல இடங்களில் வருகிறது. இது இல்லை, இது இல்லை – நேதி, நேதி— என்ற உபநிஷத வாக்கியத்தை ,
அல்லைஈதல்லை ஈதென்ன மறைகளுமன்மைச் சொல்லினாற் துதித்து இளைக்கும் — என்ற வரிகளாற் காட்டுகிறார்.
****
PICTURE- அருச்சனைப் படலம்
திருமுகம் / லெட்டர் கொடுத்த படலத்தில் பாணபத்திரன் கனவில் சித்தர் வடிவில் சிவன் சொல்கிறார் :-
அப்பா, பத்திரா! உனக்காக யாம் பாண்டியன் பொன்னறைக்குள்ளிருந்த பொருள்களை பெறுநுளம்பு உண்ட கனிபோல் கொடுத்தோம். இனிமேல் அப்படிச் செய்தால் பாண்டியன் காவலாளிகளைத் தண்டிப்பான் . ஆதலால் உன்போலவே என்னிடத்தில் அன்புள்ளவனான சேராமானுக்கு லெட்டர்/ திருமுகம் தருகிறோம் .
இதை யானை உண்ட விளங்கனி என்ற பழமொழியுடன் ஒப்பிடலாம்.
வரகுண பாண்டியனின் குதிரையின் காலடிபட்டு ஒரு பிராமணன் இறந்து விடுகிறான்[ அவனை பிரம்மஹத்திப் பாவம் தொற்றிக்கொள்கிறது .அதைத்தீர்க்க திருவிடை மருதூர் செல்ல சிவபிரான் சொல்கிறார்
பிரம்மஹத்தி என்பது பிராமணர்களைக் கொல்வதால் வரும் பாபம்; இது தொற்றியவுடன் வரகுணன் (இவன் மாணிக்கவாசகருக்கு முந்திய வரகுணன்) அழுக்கடைந்த மாணிக்கம் போலவும் , பாம்பு விழுங்கின சந்திரன் போலவும் ஒளி மழுங்கி, யானை உண்ட விளங்கனி போல உள்ளறிவு இன்றித் துன்புற்றான்.
****
மாணிக்கவாசக கால மன்னன் அரிமர்த்தனன் . அவனுக்கு முந்திய பாண்டியமன்னன் காலத்தில் இடைக்காட்டுச் சித்தர்
பிணக்கு தீர்த்தப் படலம் வருகிறது. அதில் இடைக்காட்டுச் சித்தருக்கு பாண்டிய மன்னர் செய்த உபசாரம் வருகிறது ; அது பினவருமாறு:
பின்பு பாண்டியன் விதிப்படி வாழை- கமுகு- சாமரம் -மேற்கட்டி- விளக்கு- பூமாலை – நிறைகுடம் (பூர்ணகும்பம்), துகிற்கொடி ஆகிய இவைகளால் அலங்காரமாக ரத்தினகஜிதமான சங்க மண்டப செம்பொன் ஆசனத்தின் மீது மாப்பிள்ளை கோலமாக இடைக்காட்டுசித்தரை அலஙகரித்து, புலவர்கள் சூழ இருக்கச் செய்து , தானும் சிங்காசனத்தில் மேலிருந்து மல்லிகை ,முல்லை முதலிய வெள்ளை மலர்களால் செய்த மாலையும் வெள்ளை வஸ்திரமும் , வெண்முத்துமாலையும் அணிந்து கொண்டு, மங்கள வாத்தியங்கள் முழங்கவும், வேத பிராமணர்கள் ஆசீர்வதிக்கவும், மாங்கிலியப் பெண்கள் பல்லாண்டு சொல்லவும் , தமிழ்ப் பாடலைக்கேட்டு இடைக்காட்டுச் சித்தருக்கும் சங்கப்புலவர்களுக்கும் வரிசைப்படி, வஸ்திர பூஷணாபரணங்கள் பணிப்பெண்கள், மிகுந்த திரவியங்கள், யானை, குதிரை ,விளைநிலங்கள் முதலியவற்றை நிரம்பக் கொடுத்து ஏழடி தூரம் பின்னே காலாலேகடந்து சென்று , சங்கத் புலவர்களே நான் இந்த இடைக்காட்டுச் சித்தருக்கு செய்த குற்றங்களை பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று பாண்டிய மன்னன் சொன்னான்.இதில் ஏழடி நடந்து என்ற வழக்கத்தையும், மன்னரே புலவர்களிடத்தில் மன்னிப்புக் கேட்கும் பெருந்தன்மையையும் , இடைக்காடருக்கு மாப்பிள்ளை போல உபசாரம் நடந்ததையும் கவனித்து ரசிக்க வேண்டும். அக்காலத்தில் எல்லோருக்கும் பணிப்பெண்களை பரிசாகக் கொடுத்தது பல நூல்களில் காணக்கிடக்கிறது; வரிசை அறிதல் என்பது புற நானூற்றிலும் வருகிறது; அதாவது தகுதிவாரியாகப் பரிசில்களைக்கொடுக்க வேண்டும்.
****
அருச்சனைப் படலம்
கடைசி படலம் அருச்சனைப் படலம். இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய் ,தக்கோலம் என்னும் ஐந்து வகை வாசங் கலந்தபாக்கு வெற்றிலை நிவேதித்து — என்ற வரிகள் அக்காலத்தில் கடவுளுக்கு பீடா நைவேத்தியம் செய்ததைக் காட்டுகிறது
தக்கோலம் என்பது வெற்றிலை, பாக்குக்குப் பொதுப்பெயராக வந்த போதும் இது ஒரு வாசனைப்பொருள் என்றே நம்பவேண்டியிருக்கிறது ஏனெனில் தமிழ் அகராதிகள் சொல்லும் சிறுநாவல் பூ, வால் மிளகு , நாவல், திப்பலி என்ற பொருள்கள் பொருந்துவதாயில்லை ; மேலும் வெற்றிலை பாக்கிலிருந்து ஐந்து பொருட்களைத் தனியாக பரஞ்சோதி குறிப்பிடுகிறார்
தக்கோலந் தின்று(நாலடி, 43)– என்று நாலடியாரில் வருகிறது. தமிழர்களுக்கு இப்போது தக்கோலம் என்றால் தக்கோலத்தில் நடந்த போர்தான் நினைவுக்கு வரும்.
TO BE CONTINUED………………………
–SUBHAM—
TAGS- தி.வி.பு. , உவமைகள், உருவகங்கள் ,பரஞ்சோதி முனிவர் ,திருவிளையாடல் புராணம், தக்கோலம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 66
Stamps posted today include YEAR 2005, 2006, STAMPS,
Pictures of 2500 Indian Stamps,
FOUR ENDANGERED BIRDS, FOUR HIMALAYAN LAKES, PHD CHAMBER OF COMMERCE, INS UDAYAGIRI, JHADAVPUR UNIVERSITY, INTEGRAL COACH FACTORY, CALCUTTA POLICE COMMISSIONER OFFICE, BHARAT RATNA MS SUBBULAKSHMI, ANNAMACHARYA, CHILDREN BOOK SOCIETY, YEAR OF PHYSICS, EINSTEIN,16 SQUADRON AIRFORCE, NEWBORN HEALTH, STOP CHILD LABOUR FOUR STAMPS, WORLD AIDS DAY, BISWANATH ROY, PANNALAL BARULAL, FIELD POST OFFICE FOUR STAMPS, ANCIENT ART- HORSE
–subham—
Tags– Stamps posted today include YEAR 2005, 2006, STAMPS,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Let us continue with Proverbs on Proverb….
Nothing tells us more of the spirit of a people than its proverbs.
Patch grief with proverbs (Much ado about nothing- Shakespeare)
Short sentences into which as in rules, the ancients have compressed life (Johann agricola, 1558)
Proverbs were anterior to books, and formed the wisdom of the vulgar, and in the earliest ags were the unwritten laws of morality-Isaac Disraeli
Grounding their fat faiths upon old country proverbs- Beaumont and Fletcher, 1639
I said that I loved the wise proverb
Brief, simple and deep;
For it I would exchange the great poem
That sends us to sleep.
I would part with the talk of a neighbour
That wearies the brain,
Like the rondo that reaches the end,
And beginneth again- Byran Waller Proctor
The genius, wit, and spirit of a nation are discovered in its proverbs- Francis Bacon
The Peope’s voice and Voice of God we call; and what are proverbs but the people’s voice? Coined first and current made by common choice. Then sure they must have weight and truth withal (Preface to collection of Proverbs, Howell)
The Proverb is something musty (Hamlet, Shakespeare)
The Proverbs of a nation are the great book which it is easy to read its character-Paxton Hood
The wit of one man; the wisdom of many- Lord John Russel.
There is often more true spiritual force in a Proverb than in a philosophical system- Thomas Calyle.
Hang’ em
They said they were an hungry signed forth Proverbs;
That, hung er broke stone walls;
That, dogs must eat;
That, meat was made for mouths;
That, the gods sent not corn for the rich man only;- with theses shreds they vented their complainings (Coriolanus, Shakespeare)
But then their saving pennies proverb becomes-Porter, 1599.
The guiding oracles which man has found out for himself in that great business of ours, of learning how to be, to do, to do without, and to depart (Mr Morley’s Definition of Proverbs)
It is wise and sooth fast saw
Half roasted never will be raw,
No dough is baked again to meal
No crock re-shapen at the wheel;
And having tasted stolen honey
You cant but innocence for money -Sir Arthur Pinero.
The wise make proverbs and the fools repeat them- Issac Disraeli.
A man of fashion never has recourse to proverbs and vulgar aphorisms- Lord Chesterfield
English language quotes finished; next Irish
To be continued…………..
Tags- Forty Thousand, Proverb Treasure, of Hindus!, Part 2
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பழம் என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் (POINTS) சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் (IT MUST MATCH OUR SELECTION GIVEN BELOW ) ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் . ஒவ்வொன்றுக்கும் பத்து மார்க்குகள். அல்லது என்று இருந்தால் ஏதேனும் ஒன்றினைக் கூறினாலும் பத்து மார்க்குகள் உண்டு!
****
SAMPLE ANSWER –Ten Marks
விடைகள்— 1. இனிக்கும் அல்லது புளிக்கும் — பத்து மார்க்குகள்.
7.சில பழமொழிகள்– பழம் நழுவி, பாலில் விழுந்தது போல ; பழமும் தின்னு கொட்டையும் போட்டவன், ஊரின் நடுவிலுள்ள பழமரம் போல–பத்து மார்க்குகள்.
8.சில கதைகள் – பழனி (முருகன்- பிள்ளையார் போட்டி) அல்லது ஈசாப் கதை – சீ சீ இந்தப் பழம் புளிக்கும்–பத்து மார்க்குகள்.
9.ஆப்பிள் கன்னம், மாம்பழ வாய், கொவ்வைப் பழம் போல வாய்/ உதடு, ஞானப்பழம்
வருணனைகளில் ஏதாவது ஒன்று. –பத்து மார்க்குகள்.
10. அவ்வைக்கு முருகன் போட்ட புதிர்- பாட்டி சுட்ட பழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? அல்லது ராமனுக்கு சபரி என்ற கிழவி கடித்துச் சுவைத்து பழம் கொடுத்தது–பத்து மார்க்குகள்.
–subham—
Tags- பழம் , பத்து விஷயங்கள் , 100 மார்க், –பத்து மார்க்குகள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவிளையாடல் புராணத்தில் (தி.வி.பு) மேலும் சில அதிசயச் செய்திகளைக் காண்போம் .
பெரிய புராணத்தையும் தி. வி.புராணத்தையும் பக்திக் கண்ணோட்டத்தில் பார்ப்பதால் அதிலுள்ள அற்புதமான விஷயங்கள், செய்திகள் தெரியாமல் போகின்றன
பரஞ்சோதி முனிவர் எழுதிய தி.வி.பு.வில் 15 +7+22 மன்னர்கள் பெயர்களைச் சொல்லி, அக்காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியையும் குறிப்பிடவில்லை . பாண்டிய நாட்டில் ஒரே நேரத்தில் ஐந்து பாண்டியர்கள் வெவ்வேறு பகுதிகளை ஆண்டதாகவும் ஒரு பொதுக் கருத்து உண்டு; அப்படிப்பார்த்தால் எட்டு பாண்டியர்களை அவர் ஒதுக்கிவிட்டார் என்று தோன்றுகிறது இதனால், காலத்தைக் கணக்கிடுகையில் அவர்களுக்கும் சுமார் 25 ஆண்டுகள் வீதம் ஒதுக்க வேண்டும். உலக வரலாற்றில் ஒரு மன்னருக்கு சராசரியாக ஒதுக்கப்பட்ட ஆண்டு 20 என்றாலும் இந்திய மன்னர்கள் முன் காலத்தில் சராசரி முப்பது ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளதை குப்தர் கால வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது.
picture-இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்
****
12 ஆண்டுக்கால வறட்சி
பரஞ்சோதி முனிவர் காசியிலிருந்து பிராமணர்களை மதுரைக்கு வரவழைத்த செய்தியைக் கூறுகிறார்; வறட்சி காரணமாக பிராமணர்கள் வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்ததையும் சொல்கிறார் . இவையெல்லாம் அக்கால குடியேற்றத்தைக் குறிக்கிறது மேலும் 12 ஆண்டுக்கால வறட்சி என்பது பல தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் திரும்பத் திரும்ப வருகிறது; அதாவது குரு JUPITER என்னும் வியாழன் கிரகம் சூரியனைச் சுற்றி வர 12 ஆண்டுகள் பிடிக்கும்; இதனால் வருடம்தோறும் நாம் குருப்பெயர்ச்சி பலன்களை பத்திரிக்கைகளில் படிக்கிறோம் குரு கிரகம் ஒரு குறிப்பிட்ட ராசியில் சஞ்சரிக்கும்போது வறட்சி ஏற்படும் என்பது நம்பிக்கை. இதனை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் பல குடியேற்ற உண்மைகள வெளியாகும்.
****
ஏழு அடி தூரம்
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை, நாம் மன்னர் பதவியில் இருந்தாலும், ஏழு அடி தூரம் நடந்து வழி அனுப்பவேண்டும் . இதை கரிகாலன் செய்ததை சங்க இலக்கியம் செப்புகிறது இது ரிக் வேதத்திலும் ராமாயணத்திலும் உள்ளது பரஞ்சோதி முனிவரும் குறைந்தது அவர்ஜ்கள் ஏழு அடி அடைந்து வழி அனுப்பினார்கள் என்று எழுதுகிறார் . பிராமணர் கால்யாணங்களில் கணவனும் மனைவியும், அதாவது மணப்பெண்ணும் மண மகனும் தீயை வலம் வந்து ஏழு அடி நடக்கும்போது மந்திரங்களை சொல்லி பிணைப்பினை உறுதிப்படுத்துவர் ; அப்போதுதான் கல்யாணம் பூர்த்தியானதாக கணக்கு இந்த 7 அடி விஷயம் சுவையானது.
****
மதுரையில் செட்டி தெரு
மதுரையில் செட்டி தெரு என்று பெரியதொரு வருணனையை மதுரைத் திரு நகர படலத்தில் பரஞ்சோதி சொல்கிறார் . மதுரைக்கு வருவோர் தெற்கு ஆவணி மூலவீதிக்குச் சென்றால் நூற்றுக்கணக்காக செட்டியார் நககைக்கடைகளை கணடு ஆச்சரியப்படுவார்கள்; குறிப்பாக இரவு நேரத்தில் சென்றால் ஜகஜ்ஜோதியாக இருக்கும்; கடைகளின் போர்டுகளில் செட்டியார் என்ற பெயர்களைக் காணலாம் . இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்களும் நகை வியாபாரத்தில் நுழைந்துவிட்டார்கள்; அக்காலத்தில் நான் மதுரையில் வாழ்ந்த 1986-ம் ஆண்டு வரை செட்டியார் நகைக்கடை போர்டுகளை மட்டுமே கண்டுள்ளேன். மேலும் மதுரையிலுள்ள நாளங்காடி, அல்லங்காடி (DAY TIME SHOPS, NIGHT TIME SHOPS ) பற்றி சங்க இலக்கியத்திலே காண்கிறோம்; கோவலன் வந்த போது இந்தத் தெரு வழியாகத்தான் போயிருக்க வேண்டும். மதுரையில் தி வி பு வை அரங்கேற்றிய பரஞ்சோதி இதைக் கண்டு வியப்புற்றதால் செட்டி தெரு என்ற தலைப்பில் வருணனை செய்துள்ளார். அங்கு தங்கம், வெள்ளி ரத்தினங்கள் ஜொலிப்பதைக் காணலாம். உலகில் இப்படி ஒரு வீதி முழுவதும் செட்டியார் நகைக்கடைகள் இருந்தது வேறு எங்கும் இல்லை என்றே சொல்லலாம்.
பட்ட மங்கை , உத்தர கோசமங்கை, வரகுணமங்கை
மங்கை என்ற பெயரை அகராதியில் தேடிப் பார்த்தால் பெண்கள் பற்றித்தான் உள்ளது ;உண்மையில் இது மங்கலம் என்பதன் திரிபு. பாண்டிய நாட்டில் மட்டும் மங்கலத்தை, மங்கை என்று சுருக்கியதை தி.வி.பு, திருவாசகம், நம்மாழ்வார் பாசுரம் மூலம் அறிகிறோம்; இது தவிர ராதாபுரம் கல்வெட்டில் வரகுண ஈஸ்வரம் குறிக்கப்படுகிறது ; பட்டமங்ககையில் ஆறு கார்த்திகைப் பெண்களும் பாறைகள் ஆனதாக பரஞ்சோதி எழுதுகிறார். இப்போது இந்த ஊரை நாம் பட்டமங்கலம் என்கிறோம் ; நம்மாழ்வார் பாடிய வரகுண மங்கையில் சிவன் கோவிலே இலை. ஆகையால் நாம் அறிந்த “சிவ பக்த வரகுணன்களுக்கு” முன்னால் வேறு வரகுணன்களும் இருந்தது தெரிகிறது.
மங்கலம் என்றால் பிராமணர்கள் வசிக்கும் இடம் என்று பொருள்; பெரும்பாலும் பிரமதேயமாக அரசர்கள் கொடுத்த தெருக்கள் வீடுகள் உள்ள இடம் இது. இந்த ஊர்களின் வரலாற்றினை ஆராய வேண்டும் .
அருணாகிரி பாடிய தி.வி.பு.
திருப்புகழில் அருணகிரிநாதர் குறைந்தது 12 பாடல்களில் தி வி பு லீலைகளைக் குறிப்பிடுகிறார் கல்லாடத்தில் முப்பதுக்கும் மேலான தி வி பு லீலைகளைக் காண்கிறோம் ; இவர்களுக்கெல்லாம் முந்திய சம்ஸ்க்ருத நூல்களின் மொழிபெயர்ப்பே நம்பி, பரஞ்சோதி முனிவர்கள் எழுதியவை; ஆகையால் இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வைத்து ஆராய ஆதீனங்கள் மடாதிபதிகள் ஆகியோர் மகாநாடு கூட்ட வேண்டும் . அத்தோடு வேள்விக்குடி தளவாய்புரம் செப்பேடுகளை வைத்து ஒப்பிட வேண்டும் ‘பாண்டியர் செப்பேடுகள் பத்து’ என்ற நூலில் பல அரிய செய்திகள் உள்ளன.
picture- நான்மாடக்கூடல் ஆன படலம்
****
இறுதியாக ஒரு விஷயம்
சங்க இலக்கியத்தில் மதுரைப் பேராலவாயார் , இடைக்காடர் , வெள்ளியம்பலத்தில் துஞ்சிய பாண்டிய மன்னன் பற்றிக் காண்கிறோம். இவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தையும் ஒருங்கே வைத்து அவர்களால் பாடப்பட்ட மன்னர்களைக் (CHRONOLOGICA ORDER கால வரிசைப்படுத்தினால் தி வி பு சொல்லும் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் யாருக்குப் பொருந்தும் என்பதையும் கண்டுபிடித்துவிடலாம் ; இதுவரை நான் கண்டது அபிஷேக பாண்டியன்= இளம் வயதில் பட்டம் ஏற்ற நெடுஞ்செழியன் , உக்கிரப்பெருவழுதி= முது குடுமிப் பெருவழுதி , ராஜசேகர பாண்டியன் = கரிகாலன் காலம் , கடல் சுவற வேல் விட்ட பாண்டியன்= வடிவலம்ப பாண்டியன் ஒப்பீடுகள் ஆகும் . இவைகளை மேலும் ஆராய வேண்டும் .
முற்றும்.
–சுபம்—
Tags- திருவிளையாடல் புராணம், அதிசயச் செய்திகள்- PART 5 , பட்டமங்கை, செட்டி தெரு, அருணாகிரி, ஏழு அடி தூரம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
25-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
சமாதியிலிருந்து மீண்டு வருவது எப்படி? பைராகி சிஷ்யனுக்கு குழந்தையானந்த ஸ்வாமிகள் காட்டி அருளிய ரகசியம்!
ச. நாகராஜன்
நான்கு முறை சமாதி அடைந்த மிக அதிசயமான மகான் ஶ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்.
இவரது நான்காவது சமாதி 1932ம் ஆண்டு மதுரையில் நடந்தது.
ஆங்கீரஸ வருஷம், புரட்டாசி மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை தசமி திதி திருவோண நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில் நான்காவது சமாதியை இவர் அடைந்தார்.
இவரது முந்தைய மூன்று சமாதிகளின் சரித்திரம் மிகவும் அற்புதமானவை.
சுமார் 410 ஆண்டுகளுக்கு முன்னர் நாயக்கர் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் இவர் மதுரையை அடுத்த சமயநல்லூரிலே அவதரித்தார்.
அவர் வாழ்வில் நடந்த ஏராளமான அதிசய சம்பவங்களுள் இதுவும் ஒன்று.
மதுரையில் ஸ்வாமிகள் ஜீவ சமாதி அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பைராகி கோஷ்டி 40 பேர்களுடன் ராமேஸ்வர யாத்திரையை முடித்துக் கொண்டு மதுரைக்கு வந்து சேர்ந்தது. அங்கு ஹனுமார் கோவில் முன் முகாம் செய்தது.
பைராகி கோஷ்டியின் தலைவருக்கு சமாதி நிலை எய்தத் தெரியும். ஆனால் அதிலிருந்து மீண்டும் விடுபட்டு வரத் தெரியாது.
குறிப்பிட்ட நேரம் சமாதியில் இருந்த பின் சிஷ்யர்கள் விசிறி விட்டு சுவாசத்தை வரச் செய்வார்கள். இதைக் காண்பதற்கு பெரிய கூட்டம் கூடி இருக்கும்.
குழந்தையானந்த ஸ்வாமிகளின் அணுக்க தொண்டரான ராமலிங்க ஐயர் என்பவர் ஸ்வாமிகளுக்கு பணிவிடை செய்து கொண்டு வந்தவர்.
அவரை ஒரு நாள் ஸ்வாமிகள் ஒரு காரியமாக வெளியே அனுப்பி இருந்தார். அவர் பைராகியின் சமாதி நிலை அனுபவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் திரும்ப வர சிறிது நேரம் தாமதமாகி விட்டது.
நேரம் கழித்து வந்ததற்காக ராமலிங்க ஐயரை ஸ்வாமிகள் கடிந்து கொண்டார். அவர் தான் பைராகியின் சமாதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் தாமதமாகி விட்டது என்றார்.
உடனே ஸ்வாமிகள், “அட,போடா! அவன் அரைகுறையாய் செத்து விடப் போகிறான். அவனை உடனே வரச் சொல்” என்றார்.
ராமலிங்கய்யர் உடனே பைராகியைப் பார்த்து விஷயத்தைச் சொல்ல மொத்த கோஷ்டியும் ஸ்வாமிகள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது.
பைராகி கோஷ்டியின் தலைவரும் ஸ்வாமிகளும் ஹிந்தியில் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஸ்வாமிகள் உடனே சமாதி நிலையில் ஆழ்ந்து சற்று நேரம் இருந்த பின், பைராகி சாதுவின் கையைப் பிடித்துத் தமது விலாப்புறத்தில் வைத்து , சமாதி நிலையிலிருந்து விடுபடுவதற்கான மர்ம ஸ்தானத்தைக் காட்டினார். சாது விஷயம் தெரிந்தவராதலால் சட்டென அதைப் புரிந்து கொண்டார்.
தமது ,மனோரதம் பூர்த்தியாயிற்று என்று அவர் ஆனந்தக் கூத்தாடினார். எல்லோருமாக ஸ்வாமிகளை பிரதக்ஷிணம் செய்தனர்.
சாது கோஷ்டியின் தலைவர் தெண்டனிட்டு ஸ்வாமிகளின் திருப்பாதத்தை தனது சிரசில் வைத்துக் கொண்டார்.
அப்போது அவர் ஸ்வாமிகளின் பாதத்தில் சங்கு சக்ர ரேகைகளைக் கண்டு மெய்சிலிர்த்துப் போய் பரவசமடைந்து, “ஆஹா1 என்னை ஏமாற்றி விட்டு இங்கேயா வந்திருக்கிறீர்கள்? நான் தங்களை எங்கேயெல்லாம் தேடுவது?” என்று ஆர்ப்பரித்தார். “இனி உங்களை விட மாட்டேன்” என்றார் பைராகி சாது.
ஸ்வாமிகள் சிஷ்யனை சமாதானப்படுத்தி சீக்கிரம் சந்திக்கலாம் என்று உறுதி கூறி அங்கிருந்த பர்மா ஷெல் சேட்டிடம் அவர்கள் அனைவருக்கும் கோதாவரி மேளா செல்வதற்கு ரயில் டிக்கட் வாங்கித் தரச் சொன்னார்
1932ல் ஸ்வாமிகள் சமாதி எய்தியவுடன் மறுநாள் காலையில் ராமலிங்க ஐயர், அவர் மனைவி, தாயார் மூவருக்கும் ஒரே சமயத்தில் ஒரே மாதிரியான தரிசனம் கிடைத்தது. அவர்கள் கண்ட இமயமலைக் காட்சியில் ஸ்வாமிகள் மோன நிலையில் வீற்றிருக்கிறார். முன்னர் பார்த்த பைராகி கோஷ்டி ஸ்வாமிகளைச் சுற்றி ஆனந்த நடனம் ஆடிக் கொண்டிருந்தது.
கனவில் கண்ட இந்த அபூர்வ தரிசனத்தை மூவரும் சொல்லிக் கொண்டு பேரானந்தம் அடைந்தனர்.
ஸ்வாமிகளின் சமாதி மதுரையில் அரசரடி காளவாசல் சந்திப்பில் இருக்கிறது.
இங்கு ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திரளாக பக்தர்கள் கூடுவது வழக்கம். இங்கு சமாதியில் ஶ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Hindus are very lucky to have 40,000 proverbs in Sanskrit and Tamil. About 100 years ago three foreigners compiled Tamil proverbs and translated them into English. Sanskrit has 20,000 Subhashitas, they are verses that convey wise sayings, moral instructions, and philosophical truths.
The interesting thing about those proverbs is that they are praised high by proverbs themselves!
Here are some good sayings:
It may be true what some men say;
It must be true what all men say,
Xxx
Old sayings contain no lies,
Old words are wise words.– Basque
Xxx
A good maxim is never out of reason.
All the good sense of the world runs into proverbs.
Proverbs are the children of experience.
Proverbs are the wisdom of the streets.
Proverbs lie on the lips of fools.
Infinite riches in a little room- Marlowe
A proverb is a half way house to a thought –Geo.Meredith
There is hardly a mistake which in the course of our lives we have committed, but some proverb, had we known and attended to its lesson, might have saved us from it- Archbishop Trench
With a little hoard of maxims, preaching down a daughter’s heart- Locksley Hall, Tennyson
A good saying is a good thing, and a proverb sometimes fits into a fancy better than a foot into a shoe- Marie Corelly
A frequent review of proverbs should enter into our reading- Issac Disraeli
A proverb is much matter decocted into few word- Thomas Fuller.
Centuries have not worm eaten the solidity of this ancient furniture of mind- Issac Disraeli
For I am proverbed with a grandsire phrase- Romeo and Juliet- Shakespeare
கடல் நடுவே அமைந்திருக்கும் பழமையான விவேகானந்தர் மண்டபத்தையும், 133 அடி உயரத்தில் விண்னை முட்டி நிற்கும் திருவள்ளுவர் சிலையையும் இணைக்கிறது இந்தப் பாலம். 77 மீ. நீளம், 10 மீ. அகலம் கொண்ட இந்தப் பாலம் ரூ.37 கோடியில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் கடல் நடுவே அமைக்கப்பட்ட முதல் கண்ணாடி பாலம் என்ற பெருமிதத்துடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி திறந்து வைத்தார்.
எதற்காக இந்தப் பாலம்?
கன்னியாகுமரியில் கடந்த 2000-வது ஆண்டில் ஜனவரி 1-ம் தேதி 133 அடி திருவள்ளுவர் சிலையை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். அதுவரை படகு மூலமாக விவேகானந்தர் மண்டபம் மட்டுமே சென்று வந்த சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கும் சென்று திரும்புவது வழக்கமானது. ஆனால், கடல் சீற்றம் அதிகமான நாட்களில் திருவள்ளுவர் சிலைக்கு படகுகளை இயக்க முடியவில்லை.விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்த்துவிட்டு சுற்றுலாப் பயணிகள் திரும்பும் சூழல் ஏற்பட்டது. எனவே, இதை தவிர்க்க இயற்கை சீற்றத்தால் பாதிக்காத அளவில் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு நடை பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அந்தப் பாலத்தை சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் விதமாக கண்ணாடி பாலமாக அமைத்து இருக்கிறது. தற்போது, இந்தப் பாலத்தை ரசிப்பதற்காகவே விவேகானந்தர் மண்டபத்திற்கும் திருவள்ளுவர் சிலைக்கும் வருகிற பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
எப்படி செல்ல வேண்டும்? செலவு எவ்வளவு?
குமரி கடற்கரையில் இருந்து விவேகானந்தர் மண்டபம் செல்ல காலம் காலமாக படகு சேவை நடந்து வருகிறது. தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலமாக இந்த சேவையை நடத்துகிறார்கள். படகில் ஏறி விவேகானந்தர் மண்டபம் அடைந்தால்போதும். விவேகானந்தர் மண்டபம் அமைந்திருக்கும் பாறையையும் திருவள்ளுவர் சிலை அமைந்திருக்கும் பாறையையும் கடல் நடுவே இணைக்கும் விதமாகத் தான் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது.
கண்ணாடி பாலத்தில் செல்ல இதுவரை தனியாக கட்டணம் எதையும் தமிழக அரசு வசூலிக்கவில்லை. அதே சமயம், விவேகானந்தர் மண்டபம் செல்லும் படகு பயணத்திற்கு இருவித கட்டணங்கள் உண்டு. சாதாரண வரிசையில் சென்றால் நபருக்கு ரூ.100 கட்டணம். சிறப்பு வரிசையில் சென்றால் ரூ.300 கட்டணம். சாதாரண வரிசையில் சென்றால் 2 முதல் 3 மணி நேரம் வரை காத்திருக்க நேரலாம். சிறப்பு வரிசையில் ஒரு மணி நேரத்திற்குள் படகு பயணத்திற்கான டிக்கெட் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதுவே இந்த 2 வித கட்டணங்கள் இடையிலான வேறுபாடு.விவேகானந்தர் மண்டபத்தில் கட்டணம் எவ்வளவு?
படகு பயணத்தில் இருக்கைக்கு தகுந்த எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளை ஏற்றுகிறார்கள். ஒவ்வொரு பயணிக்கும் பாதுகாப்புக்காக லைஃப் ஜாக்கெட் வழங்கப்படுகிறது. கடற்கரையில் இருந்து புறப்பட்டால் 3 நிமிடங்களில் அந்தப் படகு விவேகானந்தர் மண்டபத்தை சென்று அடைந்து விடும். அங்கு விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விவேகானந்தர் மண்டபத்தில் அமைந்துள்ள அவரது பிரம்மாண்ட சிலை, தியான அறை ஆகியவற்றை தரிசித்து விட்டு கண்ணாடி பாலம் செல்லலாம்.
10 மீட்டர் அகலம் கொண்ட கண்ணாடி பாலத்தில் நடுவே 2 மீட்டர் அகலம் மட்டுமே கண்ணாடியால் அமைக்கப்பட்டது. இருபுறமும் கிரானைட் கற்களால் நடைபாதை இருக்கிறது. பாலத்தின் நடுவே கண்ணாடி பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பரவசத்துடன் நடந்து அடுத்த முனையை நோக்கி நகர்கிறார்கள். அப்போது, கால்களுக்கு கீழே தவழும் கடல் அலைகளை கண்டு ரசிக்க முடிகிறது. பலரும் அந்த இடத்தில் நின்று கடல் அலை காட்சிகண்ணாடி பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்வதில் பிரச்னை இல்லை. ஆனால், அதில் குதிக்கவும் ஓடவும் கூடாது என கண்டிப்பாக அறிவுரை எழுதி போடப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் 750 பேர் வரை இந்த கண்ணாடி பாலத்தில் நிற்கும் அளவுக்கு அதன் தாங்கும் தன்மை இருப்பதாக அண்மையில் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ வேலு தெரிவித்தார். எனினும், பயணிகள் சிலர் அந்த கண்ணாடி பாலத்தில் திக் திக் மனதோடு திகிலுடன் மெதுவாக நடந்து செல்வதை பார்க்க முடிகிறது. இந்த கண்ணாடி பாலத்திலிருந்து கீழே கடலை பார்ப்பதும், கரையில் கன்னியாகுமரி ஊரின் அழகை பார்ப்பதும் தனி ரசனைதான்.
கண்ணாடி பாலத்தின் அடுத்த முனையை அடைந்து விட்டால் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் பாதத்தை போய் சேரலாம். அங்கிருந்து சிலையின் உள்ளாக அமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகள் வழியாக மேலே போக முடியும். திருவள்ளுவர் சிலையில் இருந்தும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்தும் கண்ணாடி பாலத்தை மக்கள் படம் எடுத்து மகிழ்கிறார்கள். கண்ணாடி பாலம் அமைந்த பிறகு இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை சராசரியாக 2 மடங்கு ஆகியிருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது.
குமரி என்றாலே சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், விவேகானந்தர் மண்டபம், காந்தி மண்டபம் ஆகியவைதான் சுற்றுலா பயணிகளின் பார்வை அம்சங்கள். அதன் பிறகு கடந்த 25 ஆண்டுகளில் திருவள்ளுவர் சிலை, காமராஜர் மணி மண்டபம், சூரிய அஸ்தமனத்தை காணும் காட்சி கோபுரம் என அடுத்தடுத்து அமைந்த புதிய ஈர்ப்பு சக்திகள் குமரிக்கு மெருகூட்டின. இப்போது, அவை அனைத்துக்கும் மகுடம் வைத்ததுபோல இந்த கண்ணாடி நடைபாலம் புதிய ஈர்ப்பை கொடுத்திருக்கிறது.
படகு பயணத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுதான் இங்கு இருக்கும் குறை. தற்போது குமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு ஒரு படகும் விவேகானந்தர் மண்டபத்திற்கு 2 படகுகளும் இயக்கப்படுகின்றன.
–SUBHAM—
TAGS-
கன்னியாகுமரி, கண்ணாடி பாலம். விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை