Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பத்திரிக்கை தேதி — 11-9-2023
சிலர் இந்தியத் தமிழைவிட இலங்கைத் தமிழ் சிறந்தது என்று சொல்லுவார்கள்; எனக்கு வெடிச் சிரிப்பு வரும். காரணம் இல்லாமல் இல்லை ; பொழுது போகாத நேரத்தில் எல்லாம் இந்திய, இலங்கை, மலேசிய தமிழ்ப் பத்திரிக்கைகளில் எவ்வளவு ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கிறது என்று ஹைலைட்டர் பேனா வைத்து வண்ணம் இடுவேன்.
ஏறத்தாழ ஒரே அளவுதான் இருக்கின்றன. அதில் தவறே இல்லை; உலகில் எந்த மொழியும் தனித்து வாழ முடியாது; ஏனெனில் நாம் வாழும் உலகு அப்படிப்பட்டது. விமான நிலையத்துக்குச் சென்று கடவைச் சீட்டு, பயணச் சீட்டு, வானூர்தி புறப்படும் நேரம், விமான/ வானூர்தி இருக்கை எண், இருக்கையில் கச்சை BELT அணியவேண்டும் என்று சொன்னால் சிரிப்பார்கள் .
மொழி என்பது தகவலைப் பரிமாறிக்கொள்ளத்தான். ஆனால் பிற மொழிக் கலப்புக்கும் ஒரு எல்லை உண்டு; மணிப்பிரவாளம் வேண்டாம்.
திருக்குறளில் அறு நூறு குறள் வரை ஸம்ஸ்க்ருதச் சொற்கள் உள்ளன; அதற்காகக் குப்பைத் தொட்டியில் போட முடியுமா ? சிலப்பதிகாரத்தில் ஹைலைட்டர் பேனா வைத்து ஸம்ஸ்க்ருதச் சொற்களை அடிக்கோடு இட்டால் புஸ்தம்காமே கலர் மாறிவிடும்! ;அதற்காகக் குப்பைத் தொட்டியில் போட முடியுமா ?
இலங்கை சென்றபோது வீரகேசரி வாங்கினேன்; அத்தோடு இலவச இணைப் பாக தினத்தந்தியும் கொடுத்தார்கள் ;
வெறும் தலைப்புகளில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்களை மட்டும் அடிக்கோடு இட்டேன் அல்லது வட்டமிட்டேன் ; இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஸம்ஸ்க்ருதத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்; இத்துடன் உள்ள இணைப்புகளைக் காண்க ; பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதில் தவறே இல்லை; அளவோடு இருக்க வேண்டும் ; அவ்வளவுதான்!
தமிழ் மொழியில் வெளிவரும் எல்லாப் பத்திரிக்கைகளின் பெயர்களும் சம்ஸ்க்ருதச் சொற்களுடன் உள்ளன ; ஏன் மாற்றவில்லை?!
–சுபம்—
Tags- ஸம்ஸ்க்ருதம், அழிக்க முடியாது, நாளேடுகள், இந்தியத் தமிழ்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
12-5-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான சிறுகதை!!
மூவரில் சிறந்தவர் யார்?
ச. நாகராஜன்
தெனாலியில் உள்ள தெனாலிராமன் சிலை
கிருஷ்ணதேவராயர் அரசவையில் நாட்டிலேயே சிறந்த அறிஞர்கள் இருந்தனர்.
இதனால் அவருக்கு கர்வம் நிறையவே உண்டு.
ஒரு நாள் அரசவைக்கு ஒரு சிற்பி மூன்று சிலைகளுடன் வந்தார்.
அவர் கிருஷ்ணதேவராயரைப் பார்த்து, “நீங்கள் உங்கள் அரசவையில் தான் சிறந்த அறிஞர்கள் இருக்கிறார்கள் என்று பெருமைப் படுகிறீர்கள்.
இதோ நான் மூன்று சிலைகள் கொண்டு வந்துள்ளேன். இதில் சிறந்த சிலை எது என்று காரணத்துடன் சொல்ல வேண்டும்.
சொன்னால் அந்த அறிஞருக்கும் உங்களுக்கும் நான் அடிமை. அப்படி யாராலும் சரியாகச் சொல்ல முடியவில்லை எனில் அந்த அறிஞர் எனக்கு அடிமை. அத்துடன் இனிமேல் அறிஞர் நிறைந்த சபை என்ற கர்வத்தை நீங்கள் விட்டு விட வேண்டும்” என்றார்.
இதைக் கேட்டு அனைவரும் திடுக்கிட்டனர்.
சிலர் கோபத்துடன் அந்த சிற்பி மீது பாய்ந்தனர்.
ஆனால் கிருஷ்ணதேவராயரோ அவர்களைத் தடுத்தார்.
“கேவலம் மூன்று சிலைகளைக் கொண்டு வந்துள்ளார் இந்தச் சிற்பி. இதில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்க முடியாதா, என்ன? இந்தக் கேள்வியை ஏற்றுக் கொண்டு நல்ல விடையைத் தருவோம்” என்றார் மன்னர்.
யார் வேண்டுமானாலும் சிலை அருகே வரலாம் என்றார் சிற்பி.
அறிஞர்கள் ஒவ்வொருவராக சிலை அருகே வந்து அதை நன்கு உற்றுப் பார்த்தனர். தூக்கிப் பார்த்தனர்.
ஒரே எடை. ஒரே அமைப்பு. ஒரே வர்ண அமைப்பு. எந்த வித வித்தியாசமும் எள்ளளவும் இல்லை.
அனைவரும் திகைத்தனர்.
அறிஞர்கள் பலருக்கும் தெனாலிராமன் மீது பொறாமை உண்டு.
இந்த சந்தர்ப்பத்தில் தெனாலிராமனை மட்டம் தட்டலாம் என்று எண்ணிய அவர்கள், “அரசே! தெனாலிராமன் தான் சிறந்த அறிஞன் என்று அடிக்கடி சொல்வீர்களே! தெனாலிராமனே இதற்கு பதில் கூறட்டும்” என்றனர்.
அவர்களின் உள்நோக்கத்தை மன்னர் புரிந்து கொண்டார்.
தெனாலிராமனைப் பார்த்தார். தெனாலிராமன் அவர் பார்வையில் இருந்த அர்த்தத்தை உணர்ந்து, “இதோ நான் பார்க்கிறேன் அரசே!” என்று சொல்லி விட்டு சிலைகளின் அருகே வந்தான்.
எல்லோரும் தெனாலிராமன் வசமாக மாட்டிக் கொண்டான் என்று நினைத்தனர்.
தெனாலிராமன் மூன்று சிலைகளையும் சற்று நேரம் ஆராய்ந்தான்.
எந்த வித வித்தியாசமும் தெரியாத நிலையில் கண்ணை மூடிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.
பிறகு கண்ணை விழித்துக் கொண்டு, “அரசே! எனக்கு இரண்டு அடி நீளமுள்ள பொடிக் கம்பி வேண்டும்” என்றான்.
சிலைக்கும் கம்பிக்கும் என்ன சம்பந்தம்? அனைவரும் சிரித்தனர்.
கம்பி வந்தது. அந்தக் கம்பியை முதல் சிலையின் காது வழியே செலுத்தினான் தெனாலிராமன்.
என்ன ஆச்சரியம். அது நேராகச் சென்று அடுத்த காதின் வழியே வந்தது.
அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
தெனாலிராமனின் முகம் மலர்ந்தது.
“இன்னொரு கம்பி வேண்டும் மன்னா!” என்றான் தெனாலிரானம்
அடுத்த கம்பி வந்தது. அதை அடுத்த சிலையின் காதில் நுழைத்தான் தெனாலிராமமன்.
அதன் முனை வாயின் வழியே வெளிவந்தது.
இன்னொரு கம்பி வேண்டும் என்று தெனாலிராமன் கேட்க மூன்றாவது கம்பி வந்தது.
அதை மூன்றாவது சிலையின் காதில் தெனாலிராமன் நுழைத்தான்.
அதன் முனை வெளியே வரவே இல்லை. சிலைக்குள் சென்று பதிந்து விட்டது.
“அரசே! இதோ இந்த மூன்றாவது சிலை தான் சிறந்தது. என்ன சிற்பியாரே? இதை ஒத்துக் கொள்கிறீர்களா?” என்றான் தெனாலிராமன்.
சிற்பியார், “ஆஹா! இவரே அறிஞர்! நான் தோற்றேன். அரசே!! உங்கள் நாடே அறிஞர்கள் நிறைந்த நாடு. இந்தச் சிலைகளை தெனாலிராமன் அவர்களுக்கே அளிக்கிறேன்.உங்களுக்கு நான் அடிமை. இதை கையொப்பம் இட்டுத் தருகிறேன். நீங்கள் விடை கொடுத்தால் மட்டுமே நான் இங்கிருந்து போவேன்” என்றார் சிற்பி.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
கிருஷ்ணதேவராயர், “ராமா! கொஞ்சம் விளக்கிச் சொல்லேன்” என்றார்.
“மன்னா! முதல் கம்பி அடுத்த காதின் வழியே வந்தது அல்லவா? இந்த மனிதன் ஒரு காது வழியே எதைக் கேட்டாலும் அதை அடுத்த காதின் வழியே விட்டு விடுவான். இவன் ஒரு முட்டாள்.
அடுத்த கம்பி இரண்டாவது சிலையின் வாயின் வழியே வந்தது அல்லவா? அவன் எதைக் கேட்டாலும் வாய் வழியே விட்டு விடுவான். அவன் ஒரு உளறுவாயன்.
மூன்றாவது சிலையில் கம்பி வரவே இல்லை. அது ஆழ்ந்து அவன் இதயத்தில் சென்று நின்று விட்டது இப்படிப்பட்டவர்கள் எதைக் கேட்டாலும் ஆழ்ந்து சிந்திப்பவர்கள். . சிந்தித்த பின்னரேயே இவர்கள் பேசுவார்கள். இவர்களே சிறந்த சிந்தனையாளர்கள்.முவரில் சிறந்தவர் இவரே!” என்று கூறி முடித்தான்.
அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர். மன்னர் தெனாலிராமனுக்கு விசேஷ பரிசுகளை அளித்து கௌரவித்தார்! சிற்பியையும் விடுவித்தார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சங்க கால மலைபடு கடாம் முதல், காரைக்கால் அம்மையார், கம்பன், பரஞ்சோதி முனிவர் வரை சுமார் 1800 ஆண்டுகளுக்கு நமது தமிழ் நூல்களில் பாடப்பெற்ற இசைக்கருவிகளை ஒப்பிட்டுப் பார்ப்பது இன்பம் பயக்கும். இன்று நமக்குத் தெரிந்தவை மிகச்சிலவே ; அந்தக் காலத்திலோ இருபது, முப்பது கருவிகளைக் குறிப்பிடுகின்றனர் காளிதாசனும் சங்கப் புலவர்களும் காட்டில் கேட்ட இன்னிசையையும் பாடியுள்ளனர்; காடுகளில்ORCHESTRA ஆர்கெஸ்டரா போல ஒரே நேரத்தில் பல இசைக் கருவிகள் முழக்கம் கேட்டனவாம் !
****
திருவிளையாடல் புராணம் (தி.வி.பு.) வேங்கடசாமி நாட்டார் உரை
இந்தக் காலத்தில் உரைகள் மூலம்தான் இவை இசைக்கருவிகளின் பெயர்கள் என்றே தெரிகிறது; சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கூட பரஞ்சோதி முனிவர் இவைகளை பாடியுள்ளார் !
1).காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திரு க்கிறார்:
“ துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்
உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்
சச்சரி கொக்கரை தக்கை யோடு
தகுணிதம் துந்துபி டாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்து
அத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்பன் இடம்திரு வாலங் காடே”
இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.
சச்சரி,கொக்கரை,தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.
2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:
இசைக் கருவிகளை தமிழர்கள் தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).
3). இப்போது கிடைக்காமல் போன பல இசை நூல்களை உரைகாரர்கள் மேற்கோள் காட்டுவர். அவற்றின் பட்டியல் இதோ:
இறையனார் களவியல் உரை:– முதுநாரை, முது குருகு.
அடியார்க்கு நல்லார் உரை:– இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம்
அரும்பத உரை ஆசிரியர்: –பதினாறு படலம்
யாப்பருங்கல விருத்தி உரை: –வாய்ப்பியம், குலோத்துங்கன் இசை நூல்
4). சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் பேரி யாழ், மகர யாழ் சகோட யாழ் செங்கோட்டு யாழ் ஆகிய பல வகை யாழ்களைக் குறிக்கிறார். இவை முறையே 21, 19, 14, 7 நரம்புகளை உடையன.
5.)மலைச் சாரல் பகுதியில் தினைப் பயிரைத் திண்ண ஒரு காட்டு யானை வந்தது.; அங்குள்ள குறத்தி அழகான குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள். அதைக் கேட்டு மெய் மறந்து நின்ற யானை பயிரைச் சாப்பிட மறந்து போனதாம்:
ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி
பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென
மறம்புகல் மழகளிறு உறங்கும் (அகம்.102)
6).பாலை நிலத்தில் வாழும் கள்வர்கள் அவ்வழியாகச் செல்வோரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்வர். அப்பேர்ப்பட்ட கல் நெஞ்சுடையோரும் பாலைப் பண்ணைக் கேட்டுக் கொலைத் தொழிலை மறந்தனராம்:
ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறு தலை பெயர்க்கும் மறுவின் பாலை (பொருந. 21-22)
7). புண் பட்ட போர் வீரர்களை பேய்களிடம் இருந்து காப்பாற்ற காஞ்சிப் பண்ணையும், நரியை விரட்ட விளரிப் பண்ணையும் பாடியதாக புறநானூறு கூறுகிறது (பாடல் 281- 291)
8).தமிழ் மொழியை இசை, இயல், நாடகத் தமிழ் என்று பிரித்து முத்தமிழ் எனப் பெயரிட்டனர். யாழ், பறை, யாழ் பற்றிய நூல் ஆகியவற்றை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியர் காலத்தில் துவங்கிய தமிழ் இசை அருணகிரிநாதர் காலத்தில் சிறப்போடுத் திகழ்ந்தது. இதோ திருப்புகழில் இசை:
தகுட தகுதகு தாதக தந்தத்
திகுட திகுதிகு தீதக தொந்தத்
தடுடு டுடுடுடு டாடக டிங்குட்டியல் தாளம்
தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
கரடி தமருகம் வீணைகள் பொங்கத்
தடிய ழனவுக மாருதச் சண்டச் சமரேறி………
என்று சிதம்பரத்தில் பாடியது ஆடல்வல்லானை மனதிற்கொண்டுதான் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.
9). வயலூரில் பாடிய திருப்புகழில் நீண்ட தாளத்துக்குப் பின்
பேரி திமிலை கரடிகை பதலை சலரிதவில்
தமர முரசுகள் குடமுழவொடு துடி
சத்தக் கணப் பறைகள் மெத்தத் தொனித்து அதிர
என்று பாடி இசைக் கருவிகளின் ஒலியை எழுப்புகிறார். இன்னும் பல பாடல்களில் இதே போல தாள ஒலிகளுக்குப் பின்னர் அருமையான பொருள் பொதிந்த வரிகளைச் சேர்த்திருக்கிறார்.
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருணகிரி காலத்தில் நிலவிய வாத்தியச் சொற்கள் கூட இன்று வழக்கொழிந்துவிட்டன.
10) பரிபாடல்-12 வையை நதி பற்றிய பாடல்.
ஒத்த குழலின் ஒலி எழ முழவிமிழ்
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்தளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்
என்ற வரிகளில் மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, முழவு ஆகிய வாத்தியங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
11) கொங்கு நாட்டில் ஈரோடு—காங்கயம் பாதையில் அரச்சலூர் என்னும் இடத்தில் மூன்று பழைய கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் எழுத்தமைதியைக் கொண்டு இவை இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று மதிப்பிடுகின்றனர். இதை எழுதியவன் தேவன் சாத்தன் என்று மூன்றாம் கல்வெட்டில் பெயர் உள்ளது. இது ஒரு இசைக் கல்வெட்டு. முதல் இரண்டு கல்வெட்டுகளில் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் காணலாம். இதோ முதல் கல்வெட்டு:
த தை தா தை த
தை தா தே தா தை
தா தே தை தே தா
தை தா தே தா தை
த தை தா தை த
முத்தமிழ் வாழ்க! தமிழ் இசை வெல்க!!
ஒரே பாட்டில் 22+5 தமிழ் இசைக் கருவிகள்: கம்பன் திறமை! (Post No.5223)
STONE MUSICAL PILLARS IN HINDU TEMPLES OF TAMIL NADU AND ANDHRA PRADESH.
கம்பன் பாட வந்தது இந்திரஜித்- இலக்குமணன் யுத்தம்; பாடல் வருவதோ யுத்த காண்டம், பிரம்மாஸ்திரப் படலம்! அங்கும் கம்பன் தன் தமிழ் கலைக் களஞ்சியத்தைக் காட்டத் தவறவில்லை. சான்ஸ் chance கிடைத்த போதெல்லாம் தமிழர்களின் கலாச்சாரத்தைக் காட்டுகிறான். ஒரே பாடலில் 22 இசைக் கருவிகளை அடுக்குகிறான்.
பம்பை தார் முரசம் சங்கம் பாண்டில் போர்ப் பணவம் தூரி
கம்பலி உறுமை தக்கை கரடிகை துடிவேய் கண்டை
அம்பலி கணுவை ஊமை சகடையோடு ஆர்த்த அன்றே
பொருள்:-
கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, பெரிய பேரிகை, முழக்கும் பம்பை, மாலை அணிந்த முரசு, சங்கு, பாண்டில், போருக்குரிய பணவம், தூரியம், கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, உடுக்கை, புல்லாங்குழல், கணுவை, அம்பலி, கண்டை, ஊமை, சகடை என்னும் இசைக்கருவிகள் முழங்கின.
இந்தப் பாட்டில் 22 கருவிகளை அடுக்கி விட்டு, அடுத்த இரண்டு பாடல்களில் யானையின் மீதான பறை கீழே தொங்கவிடப்பட்ட மணி, ஊது கொம்பு, ஆகுளிப் பறை, பீலி என்னும் துளைக் கருவி, இவ்வாறு மொத்தம் 27 கருவிகளின் பெயர்களைச் சொல்லுகிறான்.
கம்பன் ராமாயணக் கதை மட்டும் சொல்லவில்லை. தமிழர் நாகரீகத்தையும் பாடல்களில் பாடிவிட்டான்.
****
தமிழ் இசைக் கருவிகள்
FROM INDONESIA
எகிப்து நாட்டு சிற்பங்கள், கிரேக்க நாட்டு சிற்பங்கள் ஆகியவற்றில் இசைக் கருவிகளைக் கண்டபோதிலும், அந்த தெய்வங்கள் மறைந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதற்கும் முன் சாமவேதத்தில் தோன்றிய இசையை இந்துக் கடவுள் கைகளில் உள்ள இசைக் கருவிகள் இன்றும் இசைத்துக் கொண்டிருக்கின்றன. ஆயுத பூஜை அன்று அத்தனை இசைக் கருவிகளையும் இறைவன் முன்னிலையில் சந்தனம் குங்குமம் இட்டுப் பூப்போட்டு பூஜை செய்யும் வழக்கம் உலகில் வேறு எங்கும் இல்லை!!
சரஸ்வதி கையில் வீணை சிவன் கையில் உடுக்கை விஷ்ணு கையில் சங்கு கண்ணன் கையில் புல்லாங்குழல் நந்தி கையில் மிருதங்கம் தட்சிணாமூர்த்தி வீணை
நாரதர் கையில் வீணை
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பிருங்கி, தும்புரு….. என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
நடராஜர் ஆடும் போது யார் யார் என்ன வாத்தியங்கள் இசைத்தனர் என்பதை சில ஸ்லோகங்களில் படித்தால் தேவலோக ‘ஆர்க்கெஸ்ட்ரா’ பற்றி நன்கு விளங்கும்..
குப்தர் கால சிற்பம் ஒன்றில் அழகான யாழ் உள்ளது ; தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள இந்து, பெளத்த சிற்பங்களில் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு ஆடுவோரைக் காணலாம்
தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்த பாடல்களிலும் சங்கீதக் குறிப்புகள் ராகங்களின் பெயர்கள் உள்ளன ; நமது காலத்தில் பாரதியார் கூட தான் இயற்றிய ஒவ்வொரு பாடலுக்கும் இசை அமைத்துப் பாடியுள்ளார் .
கோவில்களில் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பண்ணை இசைக்கவேண்டும் என்று நடை முறையும் உள்ளது .
பதினெட்டு அடி நீள மலைப் பாம்பு இங்கிலாந்தில் லின்கன் ஸைர் வட்டாரத்தில் ஒரு சர்ச்சுக்கு வெளியே காணப்பட்டது . பாம்புகளை மீட்கும் ஏஜென்சிக்குப் பொது மக்கள் போன் செய்தவுடன் அவர்கள் வந்த போது மேலும் மூன்று மலைப்பாம்புகள் மீட்கப்பட்டன.
இவை தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் வகை ; விஷம் கிடையாது ஆனால் யானை முதல் மனிதர் வரை எவரையும் நசுக்கி எலும்புகளை நொறுக்கிக்கொல்லும் அசுர பலம் கொண்டவை.
சங்க இலக்கியத்தில் மலைப்பாம்பு கொன்ற யானை வருணனைகள் உள்ளன. இது பற்றி எனது கட்டுரைகள் இதே பிளாக்கில் உள்ளன
மேலை நாடுகளில் விஷ ஜந்துக்களை வளர்த்து வேண்டாதபோது தெருக்களில் விடும் அயோக்கியர்கள் அதிகம் . ஓநாய் போன்ற நாய்களும் மலைப்பாம்புகளும் மனிதர்களைக்கொல்லும் செய்திகள் மேலை நாடுகளில் அதிகம்.
நேற்றுவரை வளர்த்துக் கொஞ்சிய கோழிகளையும் ஆடுகளையும் மாடுகளையும் வெட்டிக்கொன்று சாப்பிடுபவோரை வள்ளுவரும் கண்டிக்கிறார் ; இதுகள் மேலை நாடுகளில் மிக மிக அதிகம் . நாய்களையும் பூனைகளையும் வளர்த்துவிட்டு அவைகளைக் கருணைக்கொலை செய்யும் ஈவு இரக்கமற்ற படு பாவிகள் மேலை நாடுகளில் அதிகம் .
BULLET POINTS
AN 18 FEET LONG PYTHON WAS FOUND LEFT IN ENGLAND IN BRITAIN.
IT FOUND WITH TWO OTHER PYTHONS.
14 FT, AND 11 FT.
ONE MORE WAS FOUNND AT A DISTANCE. THE 18 FT PYTHON WAS FOUND OUT SIDE A CHURCH. PUBLIC INFORMED ANIMAL WELFARE AGENCIES
THEY ARE RETICULATED PYTHONS FOUND IN SOUTH EAST ASIA.
IN WESTERN COUNTRIES BAD AND IRRESPONSIBLE PEOPLE RAISE VARIOUS DANGEROUS AND POISONOUS ANIMALS AND ABANDON THEM WHEN THEY DONT WANT THEM.
THEY KILL DOGS AND CATS ALSO WHICH WERE PETS UNTIL THE DAY BEFORE.
PYTHONS ARE NOT POISONOUS, BUT THEY SQUEEZE AND KILL HUMAN BEINGS AND ANIMALS AS AS BIG AS ELEPHANTS. IT IS REPORTED IN 2000 YEAR OLD SANGAM TAMIL LITERATURE.
—SUBHAM–
#TAGS- FOUR PYTHONS, RESCUED, LINCOLNSHIRE, ENGLAND, மலைப் பாம்பு
கடலுக்கடியில் பிரம்மாண்டமான கணவாய்கள் வசிக்கின்றன இவைகளை ஆங்கிலத்தில் ஸ்க்குவிட் என்று சொல்லுவார்கள் முதல் தடவையாக ஒரு குட்டி கணவாயைப் படம் பிடித்துள்ளனர்; இது கண்ணாடி போல இருக்கும் ; உடனினுள்ளே உள்ள உறுப்புகளைக் காணாலாம்; தென் அட்லான்டிக் கடலில் இதைக் கண்டுபிடித்தனர் இது 23 அடி நீளத்துக்கு வளரும்
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நத்தை இனம் ஒன்றுக்கு மாடர்ன் ஆர்ட் ஓவியர் பாப்லோ பிக்காஸோவின் பெயர் சூட்டப்பட்டது இதன் அங்க அமைப்பு, உறுப்புகள் பாலாவின் ஓவியம் போல சிக்கலால் இருப்பதால் இந்தப் பெயர் அவுசான் பிக்காஸோ என்பது புதிய நத்தை இனத்தின் பெயர் ஆகும்.
POSTED ON 19-6-25 BY LONDON SWAMINATHAN
தாய்லந்தின் தேசீய பூங்கவில் இது கண்டு பிடிக்கப்பட்டாது
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அய்யர் – ஐயங்கார் மோதல்; நால்வரும் பாடிய ஒரே திருவிளையாடல் !
திருவிளையாடல் புராணத்தில் உள்ள 64 திருவிளையாடல்களில் , சிவ பெருமானின் ஒரே ஒரு லீலையை மட்டுமே, நால்வரும் பாடியுள்ளனர். அதாவது அப்பர் ,சுந்தரர்,, சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தேவார, திருவாசகத்தில் பாடியுள்ளனர்.
SOURCE BOOK:
MADURAI TEMPLE COMPLEX, A V JEYACHANDRUN, MADURAI KAMARAJ UNIVERSITY, 1985
மதுரைப் பல்ககலைக்கழக வெளியீட்டில் ஏ வி ஜெயச்சந்திரன் கொடுத்த பட்டியல் சரியென்றால் , மாணிக்க வாசகர், தேவாரம் பாடிய மூவருக்கும் முன்னால் வாழ்ந்தது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும்; மேலும் வரகுணன், பாணபத்திரன் ஆகியோரும் சம்பந்தருக்கு முன்னால் வாழ்ந்தது தெளிவாகும் ;
ஏனெனில் திருமுகம் என்னும் சிபாரிசுக் கடிதத்தை பாணனுக்கு சிவ பெருமான் கொடுத்தது, நரியைப் பரியாக்கியது முதலிய சம்பவங்களை அப்பர் அல்லது ஞான சம்பந்தர் பாடியதாக ஜெயச்சந்திரன் பட்டியல் காட்டுகிறது .
இதில் என்ன அதிசயம் என்றால் நால்வரும் பாடிய சமபவங்கள் இருபது, முப்பது திருவிளையாடல்களுக்குள் அடங்கி விடுகிறது; ஆனால் விருத்த குமாரன் பாலனாகிய நிகழ்ச்சியை மட்டும் நால்வரும் பாடியுள்ளனர். அப்படியானால் அது சுமார் 1500 அல்லது 1600 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கவேண்டும். ஏனெனில் அப்பர்- சம்பந்தர் காலம் கி பி 600 CE என்பது உறுதியாகிவிட்டது.
ஒரு நிகழ்ச்சி பாடுவதற்குரிய அதிசயமாக மாறுவதற்கு 200 அல்லது 300 ஆண்டுகள் தேவை. மேலும் தருமி என்ற ஏழைப் பிராமணனுக்கு சிவ பெருமான் எழுதிக்கொடுத்த கவிதையை நக்கீரன் என்ற பார்ப்பனப் புலவன் ஆட்சேபிக்கவே சிவ பெருமானே நேரில் வந்ததையும் அப்பர் பாடியள்ளார் ;ஆக இவை எல்லாம் சங்க காலத்தில் நடந்ததையும் மதுரையில் சங்கம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் ஒரு அமைப்பு இருந்ததும் உறுதியாகிறது.
தொல்காப்பியர் ச என்னும் எழுத்தில் எந்தச் சொல்லும் துவங்கக்கூடாதென்று தடை போட்டதைத் தமிழர்கள் காற்றில் பறக்கவிட்டுவிட்டதையும் அறியமுடிகிறது .
விக்ரம பாண்டியர் ஆட்சியில் விரூபாக்ஷர் – சுபவிரதை தம்பதியினர் மதுரையில் வாழ்ந்தார்கள். அவர்கள் அந்தணர் குலத்தவர். இத்தம்பதிகளுக்கு இறைவன் அருளால் கெளரி என்ற பெண் குழந்தை பிறந்தது. சைவ சமயத்தில் பற்றுடன் இருந்த குழந்தை திருமண வயதிற்கு வந்தாள்.
அடியார்களுக்கு அன்னமிடுவதை வழக்கமாக கொண்டிருந்த குடும்பத்தினர் என்பதால், ஒரு நாள் வைணவ இளைஞன் ஒருவன் விரூபாக்ஷர் இல்லத்திற்கு வந்து உணவு அருந்தினான். அவன் வைணவன் என்றாலும் விரூபாக்ஷர் அவனிடம் அன்பு கொண்டு மகளை திருமணம் செய்து கொடுத்தார்.வைணவ இளைஞனின் குடும்பத்தினர் சைவ பெண்ணான கெளரியை ஏற்க வில்லை. கெளரி இள வயதிலேயே முக்தியை வேண்டி சிவபெருமானை வணங்கினார்.
கெளரியின் புகுந்த வீட்டினர், அவளை தனியறையில் அடைத்து வெளியே சென்ற நேரத்தில் அப்பூட்டுகளை உடைத்து அடியாராக வந்தார் சிவபெருமான். அவருக்கு மனதார உணவுகளைப் படைத்து அளித்தாள் கெளரி . அதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் தானே குழந்தையாக மாறினார். கெளரி யின் புகுந்த வீட்டினர் அடைக்கப்பட்டிருந்த கதவுகள் திறந்து கிடைப்பதையும், கெளரி குழந்தையோடு இருப்பதையும் கண்டு கோபம் கொண்டனர்.
குழந்தை சிவபெருமானாக காட்சியளித்து கெளரி க்கு முக்தி அளித்தார்.
****
இதை தமிழ் அறிஞர் கி.வா. ஜகந்நாதனின் அற்புதமான விளக்கத்துடன் காண்போம்.
கெளரி என்னும் பெண் ஒரு வைணவனை மணந்து கொள்கிறாள். அவள் சைவக் குடும்பத்தில் பிறந்தவள். சிவபெருமானை பூசை செய்கிறாள். அவள் சிவனை பூசை செய்கிறாள் என்பதனால் புக்ககத்தார் பல இடையூறு செய்கிறார்கள் . அவள் இறைவனுடைய திவ்ய தரிசனத்தைப் பெறுகிறாள். இந்தக் கதை சைவத்துக்கும் வைணவத்துக்குள் உள்ள முரண்பாட்டைக் காட்டுவதாக முதலில் தோன்றும். ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால் பழங்காலத்தில் இருந்த ஒற்றுமை நன்கு விளங்கும் . இப்படி நான் சொல்வது நேர் விரோதமாகத் தோன்றலாம் . ஆனால் சற்று விளக்கினால் இந்த உண்மை புலனாகும். திருமணம் செய்வது என்பது அக்காலத்தில், இந்தக் காலத்தைப் போல திடீரென்று நினைத்துச் செய்வது அன்று. நன்றாகக் குலம் கோத்திரம் விசாரித்து, பழகின இடத்தில் பெண்ணைக் கொள்ளவோ , பெண்ணுக்குப் பிள்ளையைக் கொடுக்கவோ செய்வார்கள். கெளரியையும் அப்படித்தான் அந்த வைணவ குடும்பத்தில் கொடுத்தார்கள். மாப்பிள்ளை வைணவன் என்று தெரிந்தும் சைவ குடும்பத்தினர் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்திருக்கினார்கள் . இதனால் அக்கால மக்கள் சைவ வைணவ பேதமின்றி இணைந்து வாழ்ந்து வந்தார்கள் என்பதும் சமய பேதம் திருமணத்துக்குத் தொடர்புக்குத் தடையாக இருக்கவில்லை என்பதும் தெரிகின்றது அல்லவா ?
வைணவர்கள் சிவ பூசையைச் செய்துவந்த கெளரியத் துன்புறுத்திநார்கள் என்பது சமயம் காரணமாக அமைந்தது அன்று. அது அவர்களாவது கொடிய இயல்பு காரணமாக அமைந்தது அதற்கு ஒரு வியாஜ்யம் சிவ பூசை. அவர்கள் திடீரென்று வைணவர்கள் ஆகவில்லை முன்பே வைணவர்களாக இருந்தவர்களே . அது தெரிந்தே திருமணம் செய்து கொடுத்திருக்க வேண்டும் . அந்தக் காலத்தில் வேறுபாடு இல்லாமல் சைவர்களும் வைணவர்களும் திருமணம் புரிந்து கொண்டார்கள் என்பதை இந்த வரலாறு காட்டுகிறது. இவற்றைத் தெரிந்து கொள்ள தல புராணங்கள் உதவி செய்கின்றன.
****
என் கருத்து
முதலில் ஏறத்தாழ சங்க காலத்தில் இருந்த பெயர்களைக் கவனியுங்கள் ; எல்லாம் சம்ஸ்க்ருதம் ! பிராமணர் குடும்பத்தில் இப்படி என்று எவரும் சொல்ல முடியாது சிலப்பதிகார கதா நாயகன் பெயர் கோபாலன் ( ப= வ மாற்றம் உலகெங்கிலும் உண்டு ; சங்க காலச் சொற்களிலும் இது உண்டு ; சபை= அவை ; பாண்டில்= வண்டி). கண்ணகி கோபாலன் அப்பா அம்மா பெயர் நமக்குத் தெரியாது மஹா நாயகன், மஹா சார்த்தன் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர்களை மட்டுமே நமக்கு இளங்கோ விட்டுச் சென்றுள்ளார் ; பிள்ளைமார் ஜாதியில், செட்டியார் ஜாதியில் திலகவதி, புனித வதி, பரமதத்தன் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் இருந்ததையும் தேவாரம் நமக்கு காட்டுகிறது.
இன்னும் ஒரு அதிசயம்
உலகில் விருந்தோம்பல் என்பதை ஒரு பண்பாகக் கருதியது இந்தியாவில் மட்டுமே; இது அதிசயத்திலும் அதிசயம் ; தமிழ், சம்ஸ்க்ருத நூல்கள் இதற்கு ஒரு அத்தியாயம் ஒதுக்கி பல ஸ்லோககங்ளை அல்லது வெண்பாக்களை அல்லது குறள்களைக் கொடுத்துள்ளது ; சீதையும் கண்ணகியும் இப்படி விருந்து படைக்கும் வாய்ப்பு இல்லாமற் போனதே என்று வருத்தப்படும் பாடலகளை கம்பனும் இளங்கோவும் பாடியுள்ளார்கள்; மேலும் பஞ்ச யக்ஞம் – தினமும் செய்யும் ஐவேள்வி –என்பது இந்து மத சடங்கு! உலகில் வேறு எந்த மதத்திலும் எந்த கலாசாரத்திலும் இது இல்லை; இந்துக்கள் மட்டுமே செய்த சடங்கு. ஏனைய மதத் தலைவர்கள் கதையில் கருணை என்ற தலைப்பில் சில விஷயங்கள் இருந்த போதிலும் அவர்கள் அதைத் தினசரிக் கடமையாகச் செய்ததாக எழுதவில்லை .
இன்னும் ஒரு அதிசயம்
யார், யாருக்கு விருந்து படைத்தார்கள் என்பதைக் கதை காட்டுகிறது வந்தவன் வைணவன் என்பது அவன் போட்டிருந்த பட்டை நாமத்தில் தெரிந்திருக்கும். அப்படியும் சைவ பிராமணன் வீடு அவருக்குச் சோறு படைத்தது . வேண்டாம் என்று நினைத்திருந்தால் இன்றைய உணவு முடிந்துவிட்டது என்று சொல்லி கழித்துக்கட்டி இருக்கலாம் .
மேலும் இதற்கு மனு நீதி நூலில் ஒரு சான்றும் உள்ளது ; மூன்று ஜாதிக்காரர்கள் குருகுலத்தில் படிக்க வந்தபோது தினமும் பிச்சை எடுத்து உண்ண வேண்டும் ; வாத்தியார் வீட்டுக்கும் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் எந்த எந்த ஜாதி பவதி பிக்ஷாம் தேஹி என்பதை எப்படிச் சொல்லவேண்டும் என்ற பெர்முடேஷன் காம்பினேஷனையும் permutation combination மனு ஸ்ம்ருதி கொடுத்துள்ளது . பவதி பிக்ஷாம் தேஹி = தாயே பிச்சை போடுங்கள்! பிக்ஷாம் தேஹி பவதி; பிக்ஷாம் பவதி தேஹி
****
இன்னும் ஒரு செய்தி
விக்ரம பாண்டியன் என்பவன் அப்பருக்கும் முன்னால் வாழ்ந்த பாண்டியன் . அபிஷேக பாண்டியனின் மகன். அபிஷேக பாண்டியனை நான் நெடுஞ்செழியன் என்று கண்டுபிடித்தேன்; விக்ர ம பாண்டியனின் மகன் ராஜ சேகரன் ஆண்டபோது கரிகாலன் குறிப்பு வருகிறது ஆக இவர்களனைவரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர்கள் . ஏனெனில் மாங்குளம் கல்வெட்டு குறிப்பிடும் மதுரை நெடுஞ்செழியன் 2200 ஆண்டுகளுக்கு முன்னிருந்தவன்; கரிகாலனும் ஏறத்தாழ அதே காலத்தில் இருந்தவன் . ஆகவே விருத்த குமாரன் கதையும் அதே காலத்தைச் சேர்ந்ததே ; இதை நால்வரும் பாடியதில் வியப்பில்லை.
*****
வரகுணன் , மன்னர் பெயர் அல்ல அது இந்திரன் போல பட்டப் பெயர்
வரகுணன் கல்வெட்டுகளை ஆராய்ந்து கட்டுரை எழுதிய அனைவரும் அவனது தமிழ்ப் பெயர்களையும் தளவாய்புரம் செப்பேட்டுக் கட்டுரைகளில் எழுதியுள்ளனர் . இதிலிருந்து நல்ல குணமுள்ள எல்லா மன்னர்களையும் வரகுணன் என்று குறிப்பிட்டது தெரிகிறது . மேலும் எல்லா வரகுணன்களும் சிவ பக்தர் இல்லை என்பதை நம்மாழ்வார் பாசுரம் காட்டுகிறது. அவர் வரகுணமங்கை என்று பெயர் சொல்லிப் பாடிய பாசுரத்தில் விஷ்ணுவே வருகிறார்; அந்த ஊரிலும் விஷ்ணு கோவில் மட்டுமே உள்ளது ஆகவே மாணிக்க வாசகரின் திருக்கோவையாரில் வரும் வரகுணன் நமக்குத் தெரியாத , அதாவது வரலாற்றில் அறியாத வரகுணன் ஆவான்; இதை அப்பர் சம்பந்தர் பாடிய தேவாரத்தாலும் அறிகிறோம் . சுந்தரர் குறிப்பிடும் மூர்த்தி நாயனார் போல இவரூம் வரலாறு அறியாத பாண்டிய மன்னனே!
(மகாபாரதத்திலும் பாகவதத்தில் இது போல ஜாதி விட்டு ஜாதி மாறி கல்யாணம் நடந்த செய்திகளும் உள்ளன )
ஒரு குடம் மிகவும் குறைந்த அளவு தண்ணீரையே தன்னிடத்தில் கொள்கிறது. ஆனால் குடத்தில் பிறந்த முனிவரோ என்றால் (அகத்தியரோவெனில்) ஒரு கடலையே குடித்து விட்டார்.
ஒரு நல்ல புத்திரனானவன் சில சமயம் தனது தகப்பனாரையே தனது செயல்களால் விஞ்சி விடுகிறான்.
வெள்ள நீருக்கும் யுவதிக்குமான சிலேடை!
குரு கம்பீராஸ்யதாம் கல்லோலௌர்ஜனய லோகவிப்ராந்திம் |
தீத பயோதர லக்ஷ்மீ: கஸ்ய ந சரணைர்விலங்கஸ்யாமி |\
இது வெள்ள நீருக்கும் ஒரு யுவதிக்குமான சிலேடை பாடலாக அமைகிறது.
வெள்ள நீர் : நீ நீரில் மிகுந்த ஆழத்தைக் கொண்டிருக்கலாம். உனது அலைகளால் மக்களை நடுங்கச் செய்யலாம். ஆனால் ஒன்றைக் குறித்துக் கொள் – எப்போது மேகக்கூட்டத்திலிருந்து நீர்ச் செல்வமானது வற்றுகிறதோ அப்போது நீ வறண்டு போகிறாய். அப்போது யாருடைய காலடிகளால் நி துகைக்கப்படாமல் இருக்கப் போகிறாயோ?
கர்வம் பிடித்த அழகி : நீ உனது அழகு அலைகளால் மக்களை ஏமாற்ற பெரிய நம்பிக்கையைக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒன்றைக் குறித்துக் கொள் : உனது நிமிர்ந்து நிற்கும் மார்பகங்களின் அழகு தேயும் போது யாருடைய காலடிகள் தான் உன் மீது தூக்கப்பட்டு நீ இகழப்படாமல் இருக்கப் போகிறாய்?
வார்த்தைகள் அதே தான். ஆனால் அது வெள்ள நீருக்கும் யுவதிக்கும் பொருத்தமாக இந்த சிலேடைப் பாடலில் அமைந்துள்ளது!
ஒழுக்கம் கெட்ட பெண் அழிவையே நாடுவாள்!
குலபதனம் ஜனகர்ஹா பந்தனமபி ஜீவிதவ்யசந்தேஹம் |
அங்கீகரோதி குலடா சததம் பரபுருஷசம்சக்தா: ||
தன் கணவனை விட மற்ற ஆண்களிடம் ஈடுபாடு கொண்டிருக்கும் ஒரு பெண்ணானவள் நிரந்தரமாகத் தன் குடும்பத்தின் அழிவையும் மற்றவர்களால் நிந்திக்கப்படுவதையும், சிறை வைக்கப்படுதையும் ஏன், அவள் உயிரோடு இருப்பதே சந்தேகமாவதையும் வரவேற்கிறாள்.